வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5812 topics in this forum
-
பிரியங்கா-நளினி சந்திப்புக்கு பின்னரே இலங்கையில் போர் தீவிரம்: சரத்குமார் பிரியங்கா-நளினி சந்திப்புக்குப் பின்னரே இலங்கையில் போர் தீவிரமடைந்துள்ளதாக, அகில இந்திய சமத்துவ மக்கள் க்டசித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கை சென்ற மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இலங்கை அதிபரிடம் என்ன பேசினார் என்ற விவரம் தெரியவில்லை. நளினியை பிரியங்கா சந்தித்துப் பேசிய விவரமும் வெளியிடப்படவில்லை. அவர்களின் சந்திப்புக்குப் பின்னர்தான் இலங்கைப் போர் தீவிரமடைந்திருப்பதாக மக்கள் எண்ணுகிறார்கள். எனவே அவர்கள் பேசியது குறித்து வெளியிட வேண்டும் என்றார்.
-
- 1 reply
- 3.9k views
-
-
போராட்ட படங்களை காண http://vinavu.wordpress.com/2009/02/13/eelam23/ ஈழத்தில் இறுதி தாக்குதல் என்ற பெயரில் தமிழ் மக்களின் மீது சிங்கள இனவெறி இராணுவம் தொடுத்திருக்கும் போரில் அன்றாடம் பல பத்து மக்கள் கொல்லப்படுகின்றனர். இந்தப் போரில் இந்தியா ஈடுபட்டிருக்கிறது என்பதற்கான ஆதாரங்களும் தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. தமிழக மாணவர்களிடம் ஈழம் தொடர்பாக ஒரு விழிப்புணர்வு வந்திருப்பதை தடை செய்ய நினைத்த அரசு காலவரையற்ற விடுமுறை அறிவித்து 12.02.09 அன்று திறப்பதாக அறிவித்து செயல்படுத்தியது. திறந்த அன்றே திருச்சி நகரின் எல்லாக் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களை அணிதிரட்டிய புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி திருச்சி மத்திய பேருந்து அருகே உள்ள 117ஆவது பிரேதச இராணுவப்படை தலைமை அலுவல…
-
- 0 replies
- 3.9k views
-
-
என் இந்தியப் பயணம் பற்றி சுவாரசியமாக ஒரு பதிவை எழுதவேண்டும் என்று நானும் ஒரு வாரமாக முயல்கிறேன். எங்கே இந்தியாவில் கடையில் சாப்பிடுவதில்லை என்னும் கொள்கையை பிரபாகரன் என்பவர் உடைத்தார். இவர் தமிழரின் தோற்றுவாய் சுமேரியமா குமரிக்கண்டமா என்னும் நூலை எழுதியவர். நான் லண்டனில் இருந்து வந்துள்ளேன் என்றதும் மிக உயர்ந்த உணவகம் ஒன்றுக்கு என்னை அழைத்தார். எனக்கும் யோசினைதான். இருந்தாலும் நல்ல உணவகம் என்று என் மாமியும் சிபார்சு செய்ய அங்கு போய் அவர் ஓடர் பண்ணியதெல்லாம் ஒன்றும் விடாமல் காலியாக்கிவிட்டு பயந்து பயந்துதான் வீட்டுக்கு வந்தது. மாமி வீட்டில் தங்கியிருந்த எனக்கு ஒருவாரமாக மரக்கறி உணவே தஞ்சமாக இருந்ததால் ஒரு மனத் திருப்தியோடு வீடு வந்தால் வயிறு குளம்புகிறதோ என்று நெஞ்…
-
- 38 replies
- 3.9k views
-
-
Jaffna Hindu College Association Canada Annual Gala Dinner - 2014 will be held on Saturday, April 26th, 2014, at 5.30 pm at Chandni Grand Banquet 3895 McNicoll Ave., Scarborough, ON, M1X 1E7 (Near Markham Road & McNicoll Ave / Tapscott Rd) Agni Singers – Live music and dance All old students, staff and well wishers are kindly invited to attend this event with their families.
-
- 32 replies
- 3.9k views
-
-
அமெரிக்கா. இல்லினோயிஸ் இருந்துவெளிவரும் Promotionworld எனும் நிறுவனம், சர்வதேச அளவில்இயங்கிவரும் இலத்திரனியல் வணிகம் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் தொடர்பான நிறுவனங்களையும் அதன்சிறப்புதேர்ச்சி, வளர்ச்சி,நன்மதிப்பு தொளின்முறமை, மற்றும் வாடிக்கையாளர் திருப்தி ,பயன்படுத்தும் நுட்பங்கலினை அடிப்படையாகவைத்து மிகசிறந்த இலத்திரனியல் சந்தைபடுத்தல் நிறுவனங்களினை தேர்வு செய்து அதற்கான அங்கீகாரவிருதினை கடந்த8 வருடங்களாக வழங்கிவருகின்றது. வவுனியா, வடபகுதியில் இயங்கிவரும் இலத்திரனியல் வணிகம்மற்றும் இலத்திரனியல் சந்தைப்படுத்தல் துறையில் சர்வதேச மற்றும் பல தேசிய விருதுகளினை பெற்ற Extreme SEO Internet Solutions தனியார்நிறுவனம்Promotionworld நிறுவனத்தினால்The Readers Choi…
-
- 39 replies
- 3.9k views
-
-
மகாத்மா ஒரு 'மாயை'பிரிட்டிஷாரின் வரலாற்று அறிவு திங்கள்கிழமை, பிப்ரவரி 4, 2008 லண்டன்: மகாத்மா காந்தி ஒரு மாயை. வின்ஸ்டன் சர்ச்சில் என்று ஒருவர் இருந்ததே இல்லை....இது தான் பல இங்கிலாந்து நாட்டில் பலரது வரலாற்று அறிவாக உள்ளதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு டிவி நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில்தான் இது தெரிய வந்துள்ளது. 3,000 பேர் இதில் கலந்து கொண்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள்தான் இப்படித்தான் கூறியுள்ளனராம். மகாத்மா காந்தி, வின்ஸ்டன் சர்ச்சில், கிளியோபாட்ரா, புளோரன்ஸ் நைட்டிங்கேல் ஆகியோர் ஒருபோதும் இருந்ததில்லை. அவர்கள் எல்லாம் வெறும் மாயை, கற்பனையான கதாபாத்திரங்கள் என்று பெரும்பாலானவர்கள் கூறியுள்ளனராம். இங்…
-
- 16 replies
- 3.8k views
-
-
புலம்பெயர்த்து வாழும் நாங்கள் தூயதமிழ் எங்கள் பிள்ளைகளுக்கு பெயர் வைக்கிறோமா எம்மில் எத்தினை பேர் அப்படி வைத்து இருக்குறோம் சொல்லுங்கள் சும்மா ஒரு கணிப்புக்கு கேட்கிறேன் . பெயருக்கு ஆனா விளக்கம் வேணும் முக்கியம் .!
-
- 20 replies
- 3.8k views
-
-
தமிழர்களுக்கு மொழிவெறி உண்டா இல்லையா என்பதைப் போல நண்பர் சுரேஷ் வெங்கடாத்ரி ஒரு பதிவு எழுதி இருந்தார். அதன் எதிர்நிலையில் இருக்கும் இன்னொரு முகமாக இந்தப் பதிவை வாசிக்கலாம். நான் தற்போது வசிப்பது பெங்களூரு ரூரல் பகுதியில். முழுக்க கன்னடம் மட்டுமே சார்ந்து இயங்கக்கூடிய ஒரு கிராமப்பகுதி. இங்கு நகுலனுக்கு விளையாட்டுத் தோழர்கள் என ஓரிருவர் மட்டுமே இருக்க மற்றவர்கள் பெரும்பாலும் தோழிகளே (அது குறித்த விசாரணையைப் பின்னர் வைத்துக் கொள்வோம்.) அவர்களில் ஒரு பெண்ணுக்கு பத்து அல்லது பனிரெண்டு வயது இருக்கலாம். ஒரு நாள் மாலை சாலையில் விளையாடிக் கொண்டிருக்கும்போது திடீரென்று என்னிடம் வந்து பேசியவள் சொன்ன வார்த்தைகள் இவை: “அங்கிளுக்கு ஒரு விசயம் தெரியுமா? கூகிளில் உலகின் …
-
- 31 replies
- 3.8k views
- 1 follower
-
-
நீண்ட காலங்களாக எம்மக்கள் மீதான சிங்கள இனவெறி அரசின் கொடுமைகளைப் பாராமுகமாக இருந்த பிரித்தானிய ஊடகங்கள், சிலரது அயராத முயற்சிகளை அடுத்து கண் விளிக்கத் தொடங்கியிருக்கிறது. நேற்று இரவு 7.35 மணியளவில் "Channel4" தொலைக்காட்சியானது "Unreported World", இலங்கையில் சிங்கள இனவெறி அரசினால் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டிருக்கும் கொலைக்கும்பல்கள், காணாமல் போவோர், கடத்தப்படுவோர், ஒட்டுக்கும்பல்களின் படுகொலைகள் என பல பக்கங்களை பிரித்தானிய மக்களுக்கு எடுத்துக் காட்டியது. குறிப்பாக வட கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் வாழ்வியல், சிங்களப் படைகளினால் எவ்வாறு நாசம் செய்யப்படுவதை வெளிச்சம் போட்டுக் காட்டியது. கிழக்கில் கருணா ஒட்டுக்கும்பலின் கோர முகங்கள், கிழக்கு மக்களின் குர…
-
- 14 replies
- 3.8k views
-
-
சும்மா இலங்கை பொருட்களை புறக்கணியுங்கள் புறக்கணியுங்கள் என்று சொன்னால் எங்கட சனம் ஒரு மாதிரி முறைத்து பார்க்குது....யானை சோடாவுக்கும், மலிபன் பிஸ்கெட்டுக்கும், அங்கர் பால்மாவுக்கும் பதிலாக என்னத்தை use பண்ணுவது என்று கேள்வி கேட்குது உண்மையில் இவற்றிற்கு மாற்றீடான பொருட்களை நாம் அறிமுகப்படுத்தும் வரை இவற்றின் நீண்டகால தாக்கம் குறைவாக இருக்கும் என்று நம்புகின்றேன். கொல்லப்படும் மக்களின் அவலங்களை பார்த்து இலங்கை சாமான்களை வாங்காமல் விடும் சனம் கூட நீண்ட காலத்தில் அதனை தொடர முடியாமல் விடலாம்....எனவே அதற்கான மாற்று பொருட்களை அதன் பெயர்களை பரிந்துரைத்தால் (Suggest) என்ன? என் முதல் வரிசை (list) 1. Anchor Milk powder (அங்கர் பால் மா) 2. Necto soda (Elephant ma…
-
- 42 replies
- 3.8k views
-
-
தமிழ் பேசும் அங்கத்தவர் லோகன் கணபதியின் சிபார்சை ஏற்று தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும் மீண்டும் கௌரவம்.. தை மாதத்தை தமிழர் மரபுரிமை மாதமாக அங்கீகரித்ததன் முலம் தமிழ் மக்களுக்கு உரிய கௌரவத்தை வழங்கிய மார்க்கம் நகரசபை மீண்டும் ஒரு தடவை உலகத்தமிழர்களின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் தனது நிர்வாகத்தின் கீழ் வரும் முக்கிய வீதி ஒன்றுக்கு "வன்னி வீதி" என்று பெயர் சூட்டுவதற்கு தீர்மானித்துள்ளது. மார்க்கம் நகரசபையின் 7ம் வட்டார அங்கத்தவரான திரு லோகன் கணபதியின் சிபார்சினை ஏற்று சபை அங்கத்தவர்கள் அனைவரதும் ஏகோபித்த ஆதரவோடு இந்து வன்னி வீதி என பெயர் சூட்டும் அவரது முயற்சிக்கு பலன் கிட்டியுள்ள்து. மார்க்கம் நகர சபையின் தமிழ் பேசும் அங்கத்தவராகத் திகழும் திரு லோகன் கணபதி அவர…
-
- 41 replies
- 3.8k views
-
-
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம் அஸ்ஸலாமு அலைக்கும்” இன்ஷாஅல்லாஹ் எதிர் வரும் ஒக்டோபர் மாதம் 30ம் திகதியுடன் இலங்கை வடமாகணத்திலிருந்து இனச்சுத்திகரிப்பு செய்யப்படு குறுகிய கால அவகாசத்தில் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் 27 வருடங்கள் பூர்த்தியாவதை நினைவு கூர்வதுடன் இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் சமகாலத்தில் எதிர் கொள்ளக்கூடிய பிரச்சினைகள் மற்றும் அவர்களின் எதிர்கால வளமான வாழ்கைக்கான வாழிகாட்டுதலையும் அதே போல்*இலங்கை மக்களின் உரிமையை பாதுகாத்தல் *இலங்கை சிறுபான்மை இனமான நாம் ஏனைய சக இன சமூகத்துடன் நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் ஏற்படுத்தல் சமூகங்களுடன் எவ்வாறு சகோதரத்துவமாக வாழ வேண்டும் எம் சமூகத்திற்கு ஏதிராக கட்டவிழ்தப்படும் சதிகளை எவ்வாறு கையாள வேண்டும் என்றும் *முஸ்லிம் சமூகம் …
-
- 48 replies
- 3.8k views
- 1 follower
-
-
சிட்னியில் கம்பன் கழகத்தினர் குற்றவாளி கூண்டில் இராமன் என்ற தலைப்புடன் தங்களது கழகத்தை தொடங்கி உள்ளனர் அவுஸ்ரெலியாவில்.மண்டபம் நிறைந்த மக்கள் கூட்டம் கம்பன் கழகதிற்கு ஒரு வெற்றி என்று தான் நினைக்கிறேன்.சிட்னி டமிழ்சிற்கு சனி,ஞாயிறு என்றால் இப்படி பொழுதுபோக்கு தேவை தானே கொஞ்ச புராண கதைகளுடன் பக்தி கதைகள் சம்பந்தமான விடயங்கள் என்றால் சனம் காஞ்சிபுரசேலை,பட்டுவேட்டியு
-
- 18 replies
- 3.8k views
-
-
ஏறத்தாள எழுபதுகளின் இறுதிப்பகுதிவரை ஈழத்தில் அரச காவல் துறை தொடர்பில் மக்களிற்கு ஒரு பயம் இருந்ததாம். காவல் துறை உத்தியோகத்தர்கள் தமிழ் கடைகளில் காசுகொடுக்காது சோடா குடிப்பது தொடக்கம், மோட்டார் வண்டியில் அரச காவல்துறை செல்வதைப் பார்த்து சிறுபிள்ளைகள் கூடப் பயந்தது வரை அங்கு நடந்ததாம். இன்று யாழ் களத்தின் அங்கத்தவர்களிற் பெரும்பான்மையானோர் முப்பதுகளில் அல்லது அதற்குக் குறைந்த வயதுகளில் உள்ளவர்கள். எங்களிற்கு மேற்படி செய்தி ஒரு செய்தி மட்டுமே. ஏனெனில் நாங்கள் அரச காவல் துறைக்குப் பயந்த அனுபவம் எங்களிற்கு நேரடியாக ஈழத்தில் இருக்கவில்லை. எங்கள் காலம் இராணுவத்துடன் தான் ஆரம்பமாகியது. இதைப் பற்றி இப்போது இங்கு எதனால் எழுதவேண்டி வருகிறது என்றால், மேற்படி சிறு மாற்றம் எங்களின் உள…
-
- 43 replies
- 3.8k views
-
-
கெட்ட வார்த்தையில் திட்டிய அயலவரைக் கொன்ற கனேடிய இலங்கையருக்கு ஆயுள் தண்டனை கனடாவில், கெட்ட வார்த்தைகளால் திட்டிய அயலவரைக் கொலை செய்த வழக்கில், இலங்கையைச் சேர்ந்த அமலன் தண்டபாணி தேசிகர் என்பவரை கனேடிய நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்தது. மொன்றியலைச் சேர்ந்த அமலன், அவரது அயலவரான ஜெயராசன் மாணிக்கராஜா என்பவரை 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் திகதி கத்தியால் குத்திக் கொன்றார். அமலனைக் கைது செய்த பொலிஸார் அவர் மீது வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில், முதற்றர குற்றவாளியாகக் கருதப்பட்ட அமலன், நேற்று திங்கட்கிழமை பன்னிரண்டு ஜூரிகள் அடங்கிய அமர்வு முன் நடைபெற்ற விசாரணையின்போது, முதற்றரக் குற்றவாளியாக அடையாளம் காணப்பட போதிய முகாந்திரம் இல்லா…
-
- 43 replies
- 3.8k views
- 1 follower
-
-
கடந்த மூன்று ஆண்டுகளாக என் வீட்டில் வளரும் வாழை இந்த ஆண்டு குலை போட்டுள்ளது.
-
- 43 replies
- 3.8k views
-
-
உறவுகள் அனைவரிற்கும் வணக்கம்.இதுவரை காலமும் பலரோடு நானும் சேர்ந்து தொடக்கி இயக்கிய நேசக்கரம் அமைப்பிலிருந்து விலகுவதாக முடிவெடுத்துள்ளேன். காரணம் நான் தனிப்பட்ட முறையில் எழுதும் கட்டுரைகள் மற்றும் ஆக்கங்கள் பற்றிபலர் கருத்தாடி விமர்சனங்களை முன்வைக்கும் பொழுது . அவர்கள் நேசக்கரம் அமைப்பையும் அதனுள் இழுத்து விமர்சிக்கின்றனர். நேசகச்கரம் அமைப்பு என்பது தனியாக சாத்திரி சாந்தி ஆகிய இருவரால் மட்டும் இயக்கப்படும் அமைப்பு அல்ல அதற்கென்றொரு குழு உள்ளது அதில் உள்ள மற்றையவர்களாலும்தான் அது இயக்கப்படுகின்றது எனவே என்னை விமர்சிப்பதாக நினைத்து நேசக்கரத்தின் நோக்கங்களையும் அதன் செயற்பாடுகளையும் தேவையில்லாமல் விமர்சிப்பதாலும் எவ்வித ஆதாரங்களும் இன்றி குற்றச் சாட்டுக்களை வை…
-
- 46 replies
- 3.8k views
-
-
இறந்தவர்களது இறுதி நிகழ்வு ஒவ்வொரு மதங்களிலும் மாறுபட்டிருக்கின்றது. ஆனாலும் கால ஓட்டத்தில் சடங்குகளில் ஆங்காங்கே மாற்றங்கள் நிகழ்கின்றன. சைவர்களைப் பொறுத்தளவில் எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்த வழிமுறைகள் ஏனென்ற விளக்கங்கள் இல்லாமல் இன்றும் தொடர்வதுதான் புரியவில்லை. கொஞ்சம் உற்றுப் பார்த்தால் புலம்பெயர் நாடுகளில் அது ஒரு வியாபாரமாகவே தென்படுகின்றது. சமீபத்தில் உறவினர் ஒருவரது இறுதி நிகழ்வுக்குச் சென்றிருந்தேன். இறந்தவரை தூய்மையாக்கி, அழகுபடுத்தி, நல்ல உடை அணிவித்து மரப்பெட்டிக்குள் வைத்திருந்தார்கள். தூரத்தில் இருந்து மட்டுமல்ல அருகில் சென்று பார்க்கும் போது கூட அவர் அமைதியாக உறங்குவது போன்ற தோற்றமே தெரிந்தது. இறந்து விட்டார் என்ற எண்ணமே தோன்றாத வகையில…
-
- 22 replies
- 3.8k views
- 1 follower
-
-
அது திசை மாறி போவதுதான் புதுமை அல்லவா ...? ஒவ்வரு நாளும் உலகில் உள்ள ஓவரு மனிதரும் வாழ்விற்காக எதோ ஒருவகையில் போராடி கொண்டுதான் இருக்கிறோம். வாழ்க்கை என்பது எல்லோருக்கும் பிடித்தமாக அமைவதில்லை என்று பலரும் சொல்ல கேள்வி பட்டு இருக்கிறோம். பிடித்தமாக ..? என்றால் என்ன ..? வாழ்க்கை பிடிக்காவிட்டால் தற்கொலை செய்து இறந்துபோகும் வசதி எல்லோருக்கும் இருக்கும் என்றுதான் நம்புகிறேன். ஆக தற்கொலை செய்யாது எல்லோரும் வாழ்வதால் ... எல்லோருக்கும் வாழ்க்கை பிடித்திருக்கிறது என்று கொள்ளலாமா ? இப்போதைய காலகட்டம் பிடிக்காது போனாலும் ..... எதிர்கால நாட்களை எமக்கு பிடித்ததாக அமைக்க வேண்டும் என்று எல்லோரும் ஒரு போராட்டமாக வாழ்கையை கொண்டிருக்கிறோம். வசதியான வாழ்வு அமைப்பது என்பதற்காக பலரும் …
-
- 6 replies
- 3.8k views
-
-
நான் பணம் கொடுத்து டிவிடி 1 பாட்டு சிடி 1 புத்தகம் 1 வேண்டினான் ஆனால் எனக்கு என் டிவிடி கிடைக்கவில்லை. இமெய்ல் 2 தடவை அனுப்பியும் பதில் வரவில்லை. என்னுடைய 10.99 நட்டத்தில் போய்ட்டுது. நீங்களும் ஏமார்ந்து விடாதீர்கள்
-
- 16 replies
- 3.8k views
-
-
கொடிய சிறிலங்கா நாட்டில் இருந்து உயிர் தப்புவதற்காக படகுகளில் சென்று 3 வாரங்களாக எதுவித முடிவுகளும் கிடைக்காது அவதியுறும் அகதிகளை இந்தோனேசியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என அவுஸ்திரெலியா அரசு சொல்கிறது. ஆனால் இந்தோனேசியா அரசு அகதிகளை ஏற்பது என்ற ஐ.நா வின் அறிக்கையில் கையோப்பமிடவில்லை. இவ்வகதிகளுக்கு நியூசிலாந்து அரசாங்கம் அகதித்தஞ்சம் அளிக்க வேண்டி நீங்கள் 'YES' என்பதற்கு வாக்களியுங்கள். http://nz.news.yahoo.com/polls/popup/-/poll_id/49825/ இதுவரை கிடைக்கப்பெற்ற வாக்குகளின் படி Should NZ take some of the Sri Lankan boatpeople seeking asylum? total vote 24970 votes Yes, it's our duty to help them 50% 12519 votes No, our resources a…
-
- 3 replies
- 3.7k views
-
-
இத்தாலியில் பல இடங்களில் 28 தமிழ் புலிகள் என சந்தேகிகப்படுபவர்களை கைது செய்துள்ளதாக பயங்கரவாத தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். Italian police arrest 28 suspected Tamil Tigers NAPLES, Italy (Reuters) - Twenty-eight suspected members of Sri Lanka's Tamil Tigers rebel group have been arrested in Italy, anti-terrorist police said on Tuesday. A police statement said the 28, all from Sri Lanka, were detained in several cities. The Liberation Tigers of Tamil Eelam (LTTE) rebel movement is fighting for an independent state in the north and east of Sri Lanka. More details of the operation, which involved about 200 police agents, were expected…
-
- 23 replies
- 3.7k views
-
-
அவலம் நாடகமாக வந்துவிட்டது நீங்களும் கேக்க இங்கை கிளிக் பண்ணுங்கோ www.tamilwebradio.com
-
- 22 replies
- 3.7k views
-
-
திரு ஹ. ஆனந்தசங்கரி அவர்கள் எதிர்வரும் கனடிய பாராளுமன்றத் தேர்தலில் லிபரல் கட்சியின் வேட்பாளர் நியமனத்திற்கு போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக இன்று அறிவித்துள்ளார். கடந்த செப்ரெம்பர் மாத இறுதியில் கனடியத் தேர்தல் ஆணையத்தினால் புதிய தேர்தல் தொகுதிகளின் எல்லைகள் வெளியிடப்பட்டது பலரும் அறிந்ததே. அப்புதிய எல்லைகளின் படி, ஆனந்தசங்கரி அவர்கள் நீண்ட காலமாக வாழ்ந்து வந்த தொகுதியான ஸ்காபேரா ரூஜ் றிவர் (Scarborough-Rouge River) தொகுதி தற்போது ஸ்காபேரா நோர்த் (Scarborough North) மற்றும் ஸ்காபேரா ரூஜ் பார்க் (Scarborough Rouge Park) என இரண்டு தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது, இதில் எந்தத் தொகுதியில் ஹரி போட்டியிடவுள்ளார் என்பதை எதிர்வரும் நாட்களில் அறிவிக்கவுள்ளார். இப் …
-
- 36 replies
- 3.7k views
-
-
தமிழர்களை நாகரிகமற்றவர்களாக , கோமாளிகளாக சிங்கள ஹிந்தி திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களில் அதிகம் காணலாம் , இது அவர்கள் தமிழர்கள் மீது வைத்திருக்கும் கசப்புணர்வே காரணம் , ஆனால் கீழ் உள்ள விளம்பரம் தமிழ் தொலைக்காட்சியில்(gtv ,தீபம்) அடிக்கடி விளம்பரம் செய்யப்படுகின்றது; இந்த விளம்பரம் தமிழர்களை இழிவுபடுத்தவில்லையா ? இப்படியாக சித்தரிக்கப்படும் போது இளைய தலைமுறை பிள்ளைகள் தன் இனத்தை பெருமையாக நினைப்பார்களா ? இதன் விளைவுகள் தான் தமிழன் என்று சொல்ல வெட்கப்படுவதும் , தமிழில் பேச வெட்கப்படுவதும் , தமிழில் பெயர் வைக்க வெட்கப்படுவதும் இதுவும் ஒரு காரணம் ,
-
- 36 replies
- 3.7k views
-