Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் படகொன்று கடலில் மூழ்கியுள்ளது- சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகுகளை கடற்படை கைப்பற்ற முயன்றவேளை சம்பவம் Digital News Team 2021-01-19T15:34:08 நெடுந்தீவு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் இந்திய படகொன்றை கைப்பற்ற முயன்றவேளை படகு கவிழ்ந்து நீரில்மூழ்கியுள்ளது. இலங்கை கடற்படை இதனைதெரிவித்துள்ளது. 50க்கும் மேற்பட்ட இந்திய டிரோலர் படகுகள் இலங்கை கடல் எல்லையை கடந்து உள்ளே நுழைந்தன என இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இந்த படகுகளை கைப்பற்ற முயன்றவேளை அதிலிருந்து தப்பமுயன்ற படகொன்று இலங்கை கடற்படையின் படகுடன் மோதி கடலில் மூழ்கியது என இலங்கை கடற்படை அதிகாரிகள் தெரிவி…

    • 17 replies
    • 1k views
  2. ஈழத்தமிழர்கள் புலிகளோடு தொடர்புவைத்தாலும் பிரச்சனை - அரசோடு தொடர்புவைத்தாலும் பிரச்சனைதான்! - பிரான்ஸ் தமிழரது குடியுரிமை ரத்து! [sunday, 2014-01-12 09:09:29] News Service இலங்கை அரசாங்கத்துடன் நிர்வாக ரீதியாக தொடர்பு வைத்துக் கொண்டதற்காக, ஈழத்தமிழர் ஒருவருக்கு வழங்கப்பட்ட அகதி தகுதி நிலையை பிரான்ஸ் மீளப்பெற்றுக்கொண்டுள்ளது. 2007 ம் ஆண்டு பிரான்சுக்கு வந்த அந்த ஈழத்தமிழர் 2008ம் ஆண்டு அகதியாக அங்கீகரிக்கப்பட்ட பின்னர் தனது மனைவியை பிரான்சுக்கு அழைத்துள்ளார். அவரது மனைவிக்கு தற்காலிக வதிவிட அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளன.இந்த குழந்தைகளுக்கு கடவுச் சீட்டு எடுப்பதற்காக அவர் பாரிசிலுள்ள இலங்கை தூதரகத்துக்கு மூன்று தடவைகளுக்கு மேல்…

  3. 2009ம் ஆண்டை 'படையினரின் வெற்றி ஆண்டு' என்று அறிவித்துள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் சிறைப்பிடித்து வைக்கப்பட்டுள்ள அப்பாவித் தமிழ் மக்களை விடுதலைப் புலிகள் விடுவிக்க வேண்டும் என்றும் அவ்வாறு செய்யாவிடின் புலிகளைத் தடைசெய்வதுடன் மட்டும் நின்றுவிடாது, வரலாற்றுப் புத்தகத்திலிருந்து அவர்களை துடைந்தெறிவதற்கும் நான் பின்நிற்க மாட்டேன் என்றும் எச்சரித்துள்ளார். சிறிலங்கா ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற ஓர் கொடியின் கீழ் இலங்கை இனத்தினரை திரட்டல் என்ற வேலைத்திட்டத்தின் கீழ் சர்வமத தலைவர்கள், அரசியல் தலைவர்கள், அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள், கலைஞர்கள், வர்த்தகர்கள், மற்றும் பல்கலைகழக பேராசிரியர்கள் மத்தியில் உரையாற்றும் போதே மகி…

  4. யாழில் பதற்றம்; வெடித்தது வன்முறை: பொலிஸாரின் கட்டுப்பாட்டில் 75 பேர்! யாழ்ப்பாணம், வடமராட்சி பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பருத்தித்துறை சக்கோட்டைப் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்தப் பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபட்ட சுமார் 75 க்கும் மேற்பட்டவர்களை பொலிஸார் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். எனினும் மோதல் சம்பவத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. https://www.ibctamil.com/srilanka/80/105893?ref=imp-news

  5. [size=4]கொழும்பு – 07 வாட் பிளேஸிலுள்ள பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்னால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பங்களாதேஷில் விகாரைகள் தாக்கப்பட்டமைக்கு ஏதிராக விகாரமகா தேவி பூங்காவிற்கு முன்னால் இன்று வியாழக்கிழமை நண்பகல் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊர்வலமாகச் சென்று பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்தின் மீது தண்ணீர் போத்தல்களையும் வீசியுள்ளனர். இதன் காரணமாக உயர்ஸ்தானிகராலயத்தின் ஜன்னல்கள் சேதமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.[/size] http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-09-21-10-46-55/49876-2012-10-04-10-51-10.html

  6. இந்தியா ஒரு பயங்கரவாத நாடா? இல்லை அங்குள்ள கிரிக்கெட் வீரர்கள் புலிப் பயங்கரவாதிகளா? ஐ.நா.பிரதிநிதியின் கூற்று அரசியல் நாகரிகமற்ற ஒன்றாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா கண்டித்துள்ளார். மல்லாகத்தில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். விளையாட்டு அரங்குகளின் மூலம்தான் நல்லிணக்கம் ஏற்படும் என்ற சித்தாந்தத்தையே சிதைத்து விட்டார் ஐ.நாவின் பிரதிநிதியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா கிரிக்கெட் போட்டியில் இந்தியாவைத் தோற்கடித்து விட்டால் அது பயங்காரவாதத்தை வெற்றி கொண்டதற்கு ஒப்பாகும். இந்த வெற்றியை இராணுவத்தினருக்கு கௌரவமளித்து சமர்ப்பணம் செய்வோம் என யுத்த வெ…

  7. (லியோ நிரோஷ தர்ஷன்) மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சர்வஜன வாக்கெடுப்புடன் இலங்கையின் புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவதுடன், தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கப்பட்டுள்ள உறுதிமொழிகளும் நிறைவேற்றப்படும் என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார். குறிப்பாக ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் புதிய அரசியலமைப்பு, ஜனநாயகத்தை வலுப்படுத்துதல், நாட்டு மக்களின் உரிமைகள் சார்ந்த விடயங்கள் மற்றும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழித்தல் போன்ற வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன. இவை அனைத்தும் நிறைவேற்றப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும…

  8. எதற்காக அடிக்கடி வன்னிக்குப் போனீர்கள்..? நீங்கள் கல்வி கற்பதற்கு புலிகள் பணம் வழங்கினார்களா..? புலிகளுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டீர்களா? உங்கள் குடும்பத்திற்கும் புலிகளுக்கும் எந்த வகையான தொடர்புகள் இருந்தன..? இது சிறீலங்கா இராணுவப் புலனாய்வாளர்களின் அடுக்கடுக்கான கேள்விகள். வன்னியிலிருந்து வருகை தந்து யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வெளியேறிய மாணவர்களை நோக்கியே இந்தக் கேள்விக் கணைகள் தொடுக்கப்பட்டுள்ளன. கடந்த 2005, 2006, 2007, 2008 மற்றும் யுத்தம் முடிவடைந்த 2009ம் ஆண்டு ஆகிய காலப்பகுதிகளில் யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வெளியேறிய மாணவர்களை இலக்குவைத்து சிறீலங்கா இராணுவ புலனாய்வுக் குழுவொன்று களமிறக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வன்னியிலிருந்து வருகை தந…

    • 17 replies
    • 1.9k views
  9. செவ்வாய்க்கிழமை, 06 சனவரி 2009, 10:34.25 AM GMT +05:30 ] கிளிநொச்சியை ஆக்கிரமித்துள்ள சிறிலங்காப் படையினர் அங்குள்ள மாவீரர் துயிலும் இல்லத்தை இராணுவ கவசவாகனங்கள் மூலம் இடித்தழித்துள்ளனர். சர்வதேச போரியல் விதிமுறைகளுக்கு முரணாக சிறிலங்காப் படையினர் இவ்வாறான அநாகரீகமான நடவடிக்கைகளில் கடந்த காலங்களிலும் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் தற்போது மாவீரர் துயிலுமில்லத்தை கனரக வானங்கள் மூலம் இடித்து அழித்து தமது இனவெறியை அரங்கேற்றி வருவதாக தெரியவருகின்றது. ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------…

  10. 2021 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின By T YUWARAJ 28 AUG, 2022 | 04:59 PM 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. அந்த வகையில் குறித்த பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையதளத்திற்குள் பிரவேசித்து பெறுபேறுகளை பார்வையிட முடியுமென பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/134565

  11. சாவகச்சேரி கச்சாய் பகுதியிலுள்ள ஆலயம் ஒன்றில் நஞ்சருந்திய நிலையில் இருவர் மீட்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் பாலாவி தெற்கைச் சேர்ந்த அழகரத்தினம் நித்தியமலர் (வயது-23) என்ற யுவதியும்,கெற்பேலியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான செல்லையா தெய்வேந்திரன் (வயது -45 )என்பவரையும் ஆபத்தான நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போது குறித்த யுவதி உயிரிழந்துள்ளார். மேலும் இச் சம்பவம் தொடர்பில் தெரிய வருவது, இவர்கள் இருவரும் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் காணாமற் போயிருந்த நிலையில் இன்று கச்சாய்ப் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் இவர்களைக் கண்ட பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து குறித்த ஆலய…

    • 17 replies
    • 1.2k views
  12. 'முழு நாடுமே ஒன்றாக - தேசிய செயற்பாடு' - 971 சந்தேக நபர்கள் கைது Oct 31, 2025 - 03:20 PM - 'முழு நாடுமே ஒன்றாக' என்ற தேசிய செயற்திட்டத்தின் கீழ், பொலிஸார் நாடு முழுவதும் மேற்கொண்ட போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் கீழ், நேற்றைய தினம் 987 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தச் சுற்றிவளைப்புகளின்போது, போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் 371 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை மூலம், மொத்தமாக 971 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 22 பேருக்கு எதிராகத் தடுப்புக் காவல் உத்தரவுகள் பெறப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் அறிவித்துள்ளது. அத்துடன், கைது செய்யப்பட்ட நப…

  13. கொடுமையான இலங்கை அரசிற்கு சர்வதேச் உதவி கிடைத்தது சிங்கள அரசியலாளர்களின்தொடாச்சியான் இராஜதந்திரமே இலங்கையானது ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து விடுபட்டபின் (சுதந்திரம் என்ற வார்த்தை பாவிக்கமுடியாது. ஏனெனில் எல்லா மக்களும் சுதந்திரத்துடன் வாழவில்லை) சிங்கள மக்களின் மேலாண்மை அதிகாரத்தால் தமிழ்பேசும் மக்களிள் அடிப்படை உரிமைகள் சிறிது சிறிதாகப் பறிக்கப்பட்டது. அரசியலமைப்பு அதிகாரத்தில் தமிழர்களின் உரிமைகள் உதாசீனப்படுத்தப்பட்டன. பண்டாரநாயக்கவினால் சிங்களம் மட்டும் அரசமொழி என்ற சட்டம் அமூல்படுத்தப்பட்டது. 1957 களில் தமிழ் அரசியலாளர்கள் இதை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தபோது தாக்கப்பட்டும், அவர்கள் வாய்களில் சிறுநீர் கழித்தும், பின்னர் கொழும்பு வாழ் தமிழர்கள் அடித்தும் நொருக்க…

    • 17 replies
    • 1.5k views
  14. லண்டனில் நடக்கும் பனிப்போர்: நேற்றும் சிங்களவர் மீது தாக்குதல் ! லண்டனில் நேற்று இரவு கொலின்டேல் பகுதியில் வைத்து சிங்கள இளைஞர்கள் மீது சிலர் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். லண்டன் ஓவல் மைதானத்தில் தமிழர்கள் மீது வசைபாடிய கனிஷ்க பெரேரா என்பவரின் நண்பர்கள் சிலர் நேற்று கொலின்டேல் பகுதியில் உள்ள மது அருந்தும்சாலை(பப்) முன்னால் கறுப்பு நிற BMW வாகனத்தில் நின்றுள்ளார்கள். இவர்களை அடையாளம் கண்ட நபர் ஒருவர், தமது நண்கபர்களுக்கு தொலைபேசியூடாக தகவலைத் தெரிவித்துள்ளார். இருப்பினும் குறிப்பிட்ட இச் சிங்களக் கும்பல் பிறிதொருவிடையமாக அங்கே ஒரு தமிழரைக் காணவே வந்திருந்தார்கள் என்பது பின்னர் தெரியவந்துள்ளது. இருப்பினும் அதற்கு முன்னதாகவே இச் சிங்களக் கும்பல் மீது இனந்தெடியாத நபர…

    • 17 replies
    • 1.4k views
  15. அரசினால் தனது பாதுகாப்புக்கு என அனுப்பப்பட்டுள்ள படையினர் தன்னைக் கொலை செய்ய முயற்சிக்கலாம் எனக் குற்றஞ்சாட்டி உள்ளார் இலங்கை ராணுவ படைகளின் முன்னாள் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா. கொழும்பில் வெளியாகும் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் இந்தக் குற்றச்சாட்டை பொன்சேகா முன்வைத்துள்ளார். முதலில் எனது பாதுகாப்புக்கான படையினர் எண்ணிக்கையை அவர்கள் (பாதுகாப்பு அமைச்சு மற்றும் அதன் செயலாளர்) 25ஆகக் குறைத்தார்கள். நான் எதிர்த்தேன். பின்னர் அதனை 60 காலாட்படையினராக அதிகரித்தார்கள். அதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தேன். இப்போது மேலும் 12 சிறப்புப் படையினரை ஒதுக்கி இருக்கிறார்கள். அவர்கள் என் கைகளால் பொறுக்கி எடுக்கப்பட்டவர்கள் கிடையாது. அனைவரும் புதியவர்கள். அவர்கள் படுகொலை ச…

    • 17 replies
    • 1.7k views
  16. பிரான்சில் BNP PARIBAS ஆதரவில் நடைபெற்றுவரும் கைத்தொலைபேசியால் எடுக்கப்படும் ஒரு நிமிட குறும்படப்போட்டியில், இயக்குனர் சதாபிரணவன் இயக்கிய GOD is DEAD சிறந்த படங்களுள் ஒன்றாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. வாக்கெடுப்பின் மூலம் இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது. எனவே எமது அனைத்துக்கலைஞர்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ள உரலி ஊடாக உங்கள் வாக்கை பதிவுசெய்வதோடு, உங்கள் நண்பர்களையும் வாக்களிக்கவைக்குமாறு ஈழத்தமிழர் திரைப்படச் சங்கம் கேட்டுக்கொள்கிறது. அதேவேளை எமது சங்க உறுப்பினர்களின் இந்த வெற்றியானது எமது திரைப்படச் சங்கத்தை பெருமை கொள்ள வைக்கிறது. இவர்கள் அனைவருக்கும் ஈழத்தமிழர் திரைப்படச்சங்கம் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது. http://fr.mobilefilmfestival.com/video/god-is-de…

  17. Published By: DIGITAL DESK 2 10 MAY, 2025 | 04:47 PM (எம்.மனோசித்ரா) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அரசியலமைப்பிற்கூடாக வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கமைய வெசாக் பண்டிகையை முன்னிட்டு 388 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில் 4 பெண் சிறைக்கைதிகளும், 384 ஆண் சிறைக்கைதிகளும் உள்ளடங்குகின்றனர். வெசாக் பௌர்னமி தினத்தன்று இவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளனர். வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து 40 கைதிகளும், வாரியப்பொல சிறைச்சாலையிலிருந்து 38 கைதிகளும், அநுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து 36 கைதிகளும், மஹர சிறைச்சாலையிலிருந்து 30 கைதிகளும் உள்ளடங்களாக 388 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர். …

  18. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட 11 பேர், 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டனர்… May 17, 2020 தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், செயலாளர் உட்பட பதினொரு பேரை எதிர்வரும் 14 நாட்களுக்கு வீடுகளில் தனிமைப்படுத்தி 14 நாட்களின் பின்னர் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஐந்து பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ. பீற்றர் போல் கட்டளையிட்டுள்ளார். யாழில்.கடந்த தினங்களில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார், செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட 11 பேரினது பெயர்களை நீதிமன்றில் சமர்ப்பித்த யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர…

  19. கிழக்கில் மு.கா.வுடன் இணைந்து ஆட்சி: அரசாங்கம் அறிவிப்பு By Leo Niroshan 2012-09-11 17:26:40 கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸ் உடன் இணைந்து ஆளும் கட்சி ஆட்சி அமைக்கும். முதலமைச்சர் யார் என்பதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாற இறுதியில் அறிவிப்பார் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. மகாவலி கேந்திர நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. இது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன கூறுகையில், தனித்துப் போட்டியிட்டாலும் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்தே கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அமைக்கவுள்ளது. இது குறித்த பேச்சுவார்த்தையை அரசாங்கத்தின் பங்கா…

  20. விடுதலைப் புலிகளால் யாழ் குடாவை மீட்க முடியுமா? கடந்த 18.12.2007 அன்று விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்து ஒரு அறிக்கை வெளியாகி இருந்து. மனித உரிமைகள் விவகாரங்களுக்கான பேச்சாளர் செல்வி அந்த அறிக்கையை தயாரித்திருந்தார். சர்வதேச சமூகத்தைக் குறிவைத்து வரையப்பட்டிருந்த அந்த அறிக்கையில், யாழ் குடாவில் தமிழ் மக்களை சிங்கள அரசாங்கம் அடைத்து கொடுமைப்படுத்தி வருவது பற்றி விரிவாக எழுதப்பட்டிருந்தது. யாழ்ப்பாணத்தில் உள்ள 5 லட்சம் மக்களை உலகத்தின் பிற்பகுதிகளோடு இணைக்கக் கூடிய ஏ-9 பாதையை சிறிலங்கா அரசாங்கம் மூடிவைத்துள்ளதானது, அனைத்துலகச் சட்டங்களை மீறும் ஒரு செயல் என்று அந்த அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. யாழ் குடாவில் உள்ள மக்களின் மோசமான மனிதாபிமான …

  21. அனைவருக்கும் வீடு – வேலைத்திட்டம் யாழில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. September 6, 2020 அனைவருக்கும் வீடு என்ற செயற்றிட்டத்திற்கு கீழ் யாழ்ப்பாணத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடமைப்புக்கான உதவிகளை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 113 குடும்பங்களுக்கு, 0.6 மில்லியன் ரூபாய் பெறுமதியான வீடுளை நிர்மாணிப்பதற்கான முதலாம் தவணை கொடுப்பனவு பயனாளிகளுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டது. நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும், யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் இதற்கான நிகழ்வுகள் யாழ் மாவட்ட செயலகத்தில் (06) காலை இடம்பெற்றது. இதன்போது, 113 குடும்பங்களுக்குமான முதலா…

  22. இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான இரு கிபீர் விமானங்கள் விபத்தில்: இன்று காலையில் சம்பவம் [Tuesday, 2011-03-01 04:25:00] இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான இரு கிபீர் விமானங்கள் இன்று காலையில் கம்பஹா மாவட்டத்தின் வீரக்கொலப் பிரதேசத்தில் விபத்துக்குள்ளானதாக விமானப்படைத் தலைமை அலுவலகம் சற்று நேரத்துக்கு முன்னர் அறிவித்துள்ளது. குறிப்பிட்ட இந்த இரு விமானங்களும் கீழே விழுந்து நொருங்கியதனையடுத்துத் தீப்பற்றி முற்றாக எரிந்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இரு விமானங்களையும் செலுத்திய இரு விமானிகளும் உயிர் தப்பிய உள்ள நிலையில் அவர்களை பாதுகாப்பாக மீட்கும் முயற்சிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன (இலங்கை நேரப்படி காலை 10.21) இலங்கை விமானப்படையின் 60ஆவது …

    • 17 replies
    • 2.2k views
  23. இம் மகாநாட்டினை உலகத்தமிழர் பேரவையின் அவுஸ்திரெலியா அமைப்பான அவுஸ்திரெலியா தமிழ் காங்கிரசு அமைப்பு நாடாத்துகின்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகவியாளளர்கள். தமிழ், சிங்கள ,முஸ்லிம் பிரதிநிதிகளும் கலந்து கொள்கிறார்கள். he Australian Tamil Congress and the Global Tamil Forum invite you to an event that comes at an important phase in the struggle for truth, justice and accountability in Sri Lanka. This international conference scheduled to take place in Sydney, Australia on Thursday 20 October 2011 will explore issues of human rights, equality and accountability in Sri Lanka. The Commonwealth Heads of Government Meeting (CHOGM)…

  24. இந்தியாவை மிரட்டும் சீனாவின் போர் ஒத்திகை இந்திய எல்லையை ஒட்டியுள்ள திபெத் மலைப்பிரதேசத்தில் சீன விமானப் படையினர் குண்டுகளை வீசி போர் ஒத்திகை நடத்தி வருகிறார்கள். இந்த ஒத்திகையில் சீனாவின் ஜெ-10 ரக குண்டு வீச்சு விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டன. திபெத்தில் 3,500 அடி உயரமுள்ள பீடபூமியில் இந்த ஒத்திகை நடைபெறுவதாகவும், இது போன்ற ஒத்திகை நடைபெறுவது இதுவே முதல் தடவை என்று அதிகாரிகள் தெரிவித்ததாக சீன செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இரவு பகலாக நடைபெற்ற இந்த ஒத்திகையின் போது லேசர் துணையுடன் கூடிய குண்டுகளை குறிப்பிட்ட இலக்கில் வீசி வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த ரக போர் விமானங்கள் உயரமான மலைப்பகுதியில்(ஆக்சிஷன் …

  25. கந்தளாயில் ஆயுதக்களஞ்சியம் பற்றி எரிகிறது கந்தளாய்க்கு அருகேயுள்ள அல்லைப்பகுதியில் அமைந்திருக்கும் சிங்களப் படையினருக்குச் சொந்தமான ஆயுதக்களஞ்சியம் ஒன்று வெடித்துச்சிதறி தற்போதுவரை எரிந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆயுதக்களஞ்சியத்தில் ஏற்பட்ட வெடிப்பையடுத்து அங்கு வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் தொடர்ச்சியாக வெடித்துச்சிதறி பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. தமது ஆயுதக்களஞ்சியம் வெடித்துச் சிதறிக் கொண்டிருப்பதை சிறீலங்கா படைத்தரப்பு உறுதிப் படுத்தியுள்ளது. இது குறித்த மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

    • 17 replies
    • 3.8k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.