ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143509 topics in this forum
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் த.தே.ம.மு க்கும் இடையே மூர்க்கத்தனமான போட்டிப் பிரச்சாரங்கள் நிகழத் தொடங்கியுள்ளன. இப் பிரச்சாரங்களில் த.தே.ம.மு சார்பில் பெரும்பாலும் இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் அதிகமாக ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களில் ஒரு பகுதியினர், அதன் நிர்வாக மட்டத்தில் உள்ளவர்களில் ஒரு பகுதியினர், பல்கலைக் கழக ஆசிரியர்களில் ஒரு பகுதியினர், பாடசாலை ஆசிரியர்கள் சிலர், சமூக ஆர்வலர்கள், சிவில் சமூகத்தில் உள்ள சிலர் எனப் பலதரப்பட்டவர்கள் இத்தகைய பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுடைய நோக்கம் முழுவதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இல்லாது செய்ய வேண்டும் என்பதாக இருக்கிறது. அதன் பின் நடக்க வேண்டியது தானாக நடக்கும…
-
- 13 replies
- 947 views
-
-
தமிழர்களுக்கு சோறு, பிரியாணி கொடுப்பாரே தவிர உரிமைகள் எதனையும் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கொடுக்க மாட்டார் என்று சிங்கள இனத்தைச் சேர்ந்த மனித உரிமைகள் செயற்பாட்டாளர் நிமல்கா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் 'குமுதம்' குழுமத்தின் வாரம் இருமுறை வெளிவரும் 'குமுதம் றிப்போட்டர்' ஏட்டுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் மேலும் தெரிவித்துள்ளதாவது: இலங்கையின் இன்றைய உண்மை நிலை என்ன? "இலங்கையில் இன்று அசாதாரண சூழ்நிலைதான் நிலவுகிறது. போர் முடிந்து விட்டதாக அரசு அறிவித்தாலும் கூட உண்மையில் என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. ஊடகங்கள் உண்மைச் செய்திகளை வெளியிட முடியாத அளவிற்கு கட்டுப்பாடு இருக்கிறது. 'சண்டே லீடர்' என்…
-
- 13 replies
- 1.2k views
-
-
ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையை பாதுகாப்புச் சபையின் நான்கு நாடுகள் எதிர்த்துள்ளன. இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கைக்கெதிராக பாதுகாப்புச் சபையின் நான்கு நாடுகள் கருத்து வெளியிட்டுள்ளன. அவற்றில் வீட்டோ அதிகாரமுள்ள ரஸ்யா, சீனா ஆகிய நாடுகளும், தற்காலிக உறுப்புரிமை கொண்ட இந்தியா, போர்த்துக்கல் ஆகிய நாடுகளும், இலங்கைக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளன. பாதுகாப்புச் சபையின் மொத்த உறுப்பினர் நாடுகளான பதினைந்து நாடுகளில் ஐந்து நாடுகள் வீட்டோ அதிகாரம் கொண்டவையாகவும், மேலும் பத்து நாடுகள் இரண்டு வருட உறுப்புரிமை அடிப்படையில் தற்காலிகமாக சுழற்சி முறையில் இணைத்துக் கொள்ளப்படும் நாடுகளாகவும் உள்ளன. இதற்கிடையில், ஐக்கிய நாடுகளின் நிபுண…
-
- 13 replies
- 1.2k views
- 1 follower
-
-
சு. கவின் காரைதீவு அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி ஆவேசம் வடக்கு, கிழக்கு இணைப்பு குறித்து பேசுகின்ற அருகதையை சுமந்திரன் உள்ளிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் அனைவரும் இழந்து நிற்கின்றனர் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் காரைதீவு பிரதேச அமைப்பாளரும், காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் பிரதி தவிசாளருமான வீரகத்தி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். இவரின் காரைதீவு இல்லத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து அரசியல் நடப்புகள் தொடர்பாக பேசியபோதே இவர் இவ்வாறு தெரிவித்தார். இவர் இங்கு தெரிவித்தவை வருமாறு:- தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை மாற்றான் தாய் மனப்பான்மையுடனேயே கிழக்கு மாகாணத்தை எப்போதும் அணுகி வருகின்றது. கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற தமிழ் மக்கள் குறித்து இவர்கள் கிஞ்சித…
-
- 13 replies
- 1.4k views
-
-
கனடாவில் ஏற்பட்டுள்ள தொழிலாளர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக தகுதியான இளைஞர்களை அந்நாட்டுக்கு அனுப்ப தீர்மானித்துள்ளதாக இலங்கை வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது இதுதொடர்பில் கனடா அரசாங்கத்துடன் கலந்துரையாடியுள்ளதாகவும் பணியகம் தெரிவித்துள்ளது. கனடாவில் சுகாதாரம் கட்டத்துறை, பேக்கரி போன்றவற்றுக்கு ஆட்பற்றாக்குறை நிலவுவதால் இலங்கையர்களை அந்த தொழிலுக்காக இணைப்பத்கு அந்நாட்டு அரசாங்கம் சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் கனடா தொழிலுக்காக விரைவில் விண்ணப்பங்களை கோர நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது. http://isoorya.blogspot.com/
-
- 13 replies
- 3.1k views
-
-
விக்னேஸ்வரன் தலைமையில் விசேட குழுவொன்று ஐ.நா. கூட்டத்தொடரில் பங்கேற்க வேண்டும் – அனந்தி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில், வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் தலைமையில் விசேட குழு ஒன்று பங்குகொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாழ் ஊடக அமையத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த முன்னாள் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், தமது வழிகாட்டலின் கீழ் இயங்கும் குழு ஒன்றை உருவாக்கி ஐ.நா.வுக்கு அனுப்பி வைக்கவேண்டும். அவர்கள் தாயக தமிழர்கள், புலம்பெயர் தமிழர்கள் மற்றும், தமிழக தமிழர்க…
-
- 13 replies
- 1.4k views
-
-
-
- 13 replies
- 4.4k views
-
-
சிறீலங்காவின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான பெயர்களுடைய அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பிட்ட ஓர் இன சமூகத்தையோ அல்லது வேறு நாட்டை பிளவுபடுத்தக் கூடிய வகையிலான பெயர்களைக் கொண்டிருக்கும் கட்சிகளுக்கு தடைவிதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, குறித்த கட்சிகளின் தற்போதைய மற்றும் கடந்தகால செயற்பாடுகள் குறித்து ஆராயப்படவுள்ளது. செயற்படாத அரசியல் கட்சிகளை ரத்து செய்யவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நாட்டில் சுமார் 40 க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் இருந்த போதிலும் 10 அரசியல் கட்சிகளே செயற்பாட்டு அரசியலில் ஈடுபட்டு வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. புதிய சட்டத்தின் பி…
-
- 13 replies
- 1.5k views
-
-
டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ.| படம்: மீட்டா அஹல்வத். டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ. இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஜந்தர் மந்தரில் மதிமுக பொதுச்செயலர் வைகோ கருப்புக்கொடி போராட்டம் நடத்தினார். தடையை மீறி போராட்டம் நடத்தியதற்காக வைகோவையும், மதிமுக தொண்டர்களையும் டெல்லி போலீசார் கைது செய்தனர். முன்னதாக போராட்டத்தின் போது பேசிய வைகோ: "மோடி பதவியேற்பு விழாவில், ராஜபக்சே கலந்து கொள்வதால் அந்த நிகழ்ச்சியின் புனிதத் தன்மை கெட்டுவிடும்" என்றார். மேலும், ராஜபக்சேவை மட்டுமே எதிர்ப்பதாகவும், தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்க்கவில்லை என்றும் கூறினார். நரேந்திர மோடிக்கு நல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும் க…
-
- 13 replies
- 979 views
-
-
ஐக்கியதேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஆவணமெதிலும் கைச்சாத்திடவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஐக்கியதேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் இலங்கை தமிழரசுக்கட்சி- தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவராகிய நானும் இணைந்து கைசாத்திட்டதாக தெரிவிக்கும் ஆவணமொன்று வெளியாகியுள்ளது. ஐக்கியதேசிய கட்சி தலைவருடன் இணைந்து நான் அவ்வாறான ஆவணம் எதிலும் கைச்சாத்திடவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன் அவ்வாறான ஆவணம் போலியானது என்பதையும் நான் தெரிவிக்க விரும்புகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டார். http://www.virakesari.lk/article/46324
-
- 13 replies
- 1.7k views
- 1 follower
-
-
கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பிரதான சந்திகளின் வீதி விளக்குகளுக்கு அருகில் காத்திருந்து யாசகம் பெறுவோருக்கு பணம் கொடுப்பவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த பொலிஸார் தீர்மானித்துள்ளனர். அதன்படி, யாசகர்களுக்கு பணம் கொடுத்தால் அபராதம் விதிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர். இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கடமையில் இருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களும் சிவில் உடையில் பொலிஸ் குழுக்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. https://www.madawalaenews.com/2024/04/i_894.html யாசகர்களால் இலங்கைக்கு வந்த சோதனை! பெரும் வாய்ப்பை இழந்த சோகம் 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்த SMMT சர்வதேச வாகன உச்சி …
-
-
- 13 replies
- 894 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் "நிதர்சனம்" நிறுவனத்தின் மூத்த போராளியும் முதன்மைப் படப்பிடிப்பாளருமான லெப். கேணல் தவம் என்று அழைக்கப்படும் தவா நேற்று ஞாயிற்றுக்கிழமை வீரச்சாவடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 13 replies
- 4.3k views
-
-
ஆனையிறவை நோக்கிய நடவடிக்கை களநிலைமையின்படி மேற்கொள்ளப்படும்: யாழ். கட்டளைத் தளபதி [வியாழக்கிழமை, 17 யூலை 2008, 06:46 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] களநிலைமைகளை பொறுத்துத்தான் ஆனையிறவை நோக்கிய தமது அடுத்து நடவடிக்கை அமையும் என்று சிறிலங்கா இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறி தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் தென்பகுதியிலிருந்து சென்று சிங்கள ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது: ஆனையிறவை நோக்கிய எமது அடுத்த நடவடிக்கை களநிலைமைகளை கருத்திற்கொண்டே இடம்பெறும். கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் எமக்கு பின்னடைவுகளை தரவில்லை. எதிரிக்கு பாரிய இழப்ப…
-
- 13 replies
- 2.2k views
- 1 follower
-
-
பதவியா, பாலமோட்டை மற்றும் மல்லாவிப் பகுதிகளில் கடந்த சில தினங்களில் நடந்த சண்டைகளில் வீரச்சாவடைந்த 20 போராளிகளின் உடலங்களை இராணுவம் இன்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் புலிகளிடம் கையளித்துள்ளது. அதேவேளை 19 இராணுவத்தின் உடலங்களும் புலிகளால் செஞ்சிலுவைச் சங்கத்தினூடு இராணுவத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மனிதாபிமான அடிப்படையில் வன்னி மக்கள் பாதுகாப்பாக இடம்பெயர்ந்து அரச கட்டுப்பாட்டுக்குள் போவதற்கு உதவி செய்ய ஐநா முன் வந்துள்ளது. வன்னியிலேயே மக்களுக்கு ஒரு பாதுகாப்பு வலயத்தை அமைக்க அரசு சம்மதிக்க மறுத்துவிட்டது. இதே ஐநா சபை 2000 ஓயாத அலைகள் நடவடிக்கையின் போது யாழ்ப்பாண மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர இராணுவம் அனுமதிக்காத போது.. …
-
- 13 replies
- 5.3k views
-
-
பிரான்ஸ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பாரிஸ் தமிழ் அமைப்புக்களைச் சேர்ந்த 17 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி எதிர்வரும் திங்கட்கிழமை பாரிய எதிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்க ஏற்பாடாகியுள்ளது. இவ் எதிர்ப்புப் போராட்டத்திற்கு பாரிஸ் காவல்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். இவ் போராட்டதிற்கு பிரான்ஸ் இளையோர் அமைப்பு, தமிழ்ப் பெண்கள் அமைப்பு, தமிழ் வர்த்தக சங்கம், விளையாட்டுக் கழகங்கள் என பல தமிழ் அமைப்புக்களின் ஏற்பாட்டு இவ் போராட்டம் இடம்பெறுகின்றது. ரொக்கட்றரோ (Tரொcஅடெரொ) சதுக்கத்தில் 3 மணி முதல் 5 மணி வரை எதிர்ப்புப் போராட்டம் இடம்பெறவுள்ளது. இவ் ஆர்ப்பாட்டத்தில் அனைத்து பிரான்ஸ் தமிழ் மக்களையும் கலந்துகொள்ளுமாறு அனைத்து தமிழ் அமைப்புக்களும…
-
- 13 replies
- 2.5k views
-
-
சம்மந்தனின் ஒரு முகமூடியே உலக தமிழர் பேரவை! adminDecember 18, 2023 உலக தமிழ் பேரவையின் ஒரு முகமூடி சுமந்திரன், சம்மந்தன் இவர்கள் ஒற்றையாட்சியை பலப்படுத்தி அதற்குள் தமிழர்களை கொண்டு சென்று புதைத்து எதிர்காலத்தை இல்லாமல் செய்வதும் 13 ஆவது திருத்த சட்டத்தை நடை முறைப்படுத்த கோருவதும் இலங்கை அரசை ஒரு நியாயமான அரசாக காட்டுவது மட்டும் தான் இவர்களது நோக்கம் எனவே தமிழ் மக்கள் ஏமாந்து விடக்கூடாது என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசய மக்கள் முன்னணி கட்சி செயலாளருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். கடந்த ஒரு வாரமாக ஊடகங்களில் பரபரப்பாக போய்கோண்டிருக்கும் விடையம் இந்த உலகத்தமிழர்களுடைய நாடகம் இந்திய மேற்கு நாடுகளின் கூட்டாக இயக்குநர்களாக இருந்து தமிழ் தேசிய கூட்ட…
-
- 13 replies
- 1.3k views
-
-
தீபாவளித் திருநாள் நரகாசுரனை ஆரியன் அழித்த நாளை உலகத் தமிழர் எல்லாருமே போற்றி கொண்டாடும் ஒரு பெருநாள். தமிழர் போராட்டத்தை அழித்ததாக சிங்களம் கொக்கரித்து நிற்கும் வேளை இந்த வருடத்து தமிழர் தீபத்திருநாளை சிங்கத்தின் குகைக்குள்ளேயே புகுந்து கொண்டாடி விடுவதென புலம் பெயர் நாடுகளில் சில தன்மானத் தமிழர்கள் முடிவெடுத்திருந்தனர். அதன்படி யெர்மனியிலும் இங்கிலாந்திலும் இந்த நிகழ்வானது பெருவெற்றியாக முடிந்திருக்கின்றது. இங்கிலாந்தில் இலங்கைத் தூதரகத்தில் நடந்த விழாவிற்கு தீரத் தமிழர்கள் என்னதான் செய்கிறார்கள் பார்க்கலாமென நானும் புகுந்திருந்தேன். வாசலில் வரவேற்றது கோலம். அது மாக் கோலமா பூக்கோலமா என அடையாளமே தெரியாதளவிற்கு மிகப்பெரும் அலங்கோலம் ஒன்றினை …
-
- 13 replies
- 3.1k views
-
-
29 SEP, 2024 | 10:03 AM தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து இணையுமாறு தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் பாராளுமன்றத் தேர்தலில் வடகிழக்குக்கு வெளியில் போட்டியிடுவது தொடர்பிலும் பரிசீலிக்கப்பட்டுள்ளது. தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நேற்று சனிக்கிழமை (28) வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதியில் நடைபெற்றது. அதன் பின்னர், நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட கட்சியின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரனால் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், …
-
-
- 13 replies
- 874 views
- 1 follower
-
-
அமெரிக்காவிடமிருந்து சிறிலங்கா கடற்படைக்குத் தேவையான நவீன ஆயுதத் தளபாடங்களை கொள்வனவு செய்வது குறித்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும், கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் வசந்த கரன்னகொடவும் அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய கடற்படை கட்டளைத் தளபதி அட்மிரல் ரொபேட் எவ்.வில்லாட்டுடன் நேற்று தனித்தனியாக பேச்சு நடத்தியிருக்கின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 13 replies
- 2.5k views
-
-
பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக்கடிதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அலரிமாளிகையில் வைத்து வழங்கப்பட்டது. அரசியலமைப்பு விவகாரம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்கான அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராகவே அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். நன்றி தமிழ்வின்
-
- 13 replies
- 2k views
-
-
சிறிலங்காவின் உள்விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிட முடியாது: பாகிஸ்தான் [செவ்வாய்க்கிழமை, 26 யூன் 2007, 13:26 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்காவின் உள்விவகாரங்களுக்குத் தீர்வு காண வெளிநாடுகள் தலையிட முடியாது என்று சிறிலங்காவுக்கான பாகிஸ்தான் தூதுவர் சகாத் ஏ சௌத்ரி தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்களுக்காக நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: உள்நாட்டு பிரச்சினையை சிறிலங்காவே தீர்ப்பதற்கு நாம் அனுமதிக்க வேண்டும். பாகிஸ்தான், இந்தியா, நோர்வே போன்ற நாடுகள் என்றாலும் அவர்களின் உள்விவகாரங்களில் வெளியார் தலையிடக்கூடாது. தற்போது சிறிலங்காவுக்கு உலகில் முழு உரிமைகளும் வழங்கப்படவில்லை போன்ற தோற்றப்பாட்டையே நாம் அவதானித்துள்ளோம். நடைபெற்று …
-
- 13 replies
- 2.3k views
-
-
தேர்தல் பின்னடைவுக்கு கல்முனை விவகாரமும் ஒருகாரணம்: கல்முனை நேர்காணலில் த.தே.கூ.பேச்சாளர் சுமந்திரன் எம்.பி. DicksithSeptember 30, 2020 இருபதாவது திருத்தம் என்பது ஜனநாயகத்திலிருந்து விலகி எதிர்த்திசையில் அதாவது சர்வாதிகாரப்போக்கில் பயணிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தும். அது நாட்டிற்கு நல்லதல்ல. எனவே அதனை நாம் முற்றுமுழுதாக எதிர்க்கிறோம். அதற்காக நீதிமன்றில் ஆஜராகி வாதாடுவேன்.இவ்வாறு கூறுகிறார் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எம்.எ.சுமந்திரன்.திரு சுமந்திரன் நேற்றுமுன்தினம் கல்முனைக்கு விஜயம்செய்தபோது கல்முனைநெற் இணையத்தள ஏற்பாட்டில் நேர்காணலை மேற்கொள்ளமுடிந்தது. அந் நேர்காணலில் அவர் தெரிவித்த கருத்துக்களை இங…
-
- 13 replies
- 999 views
-
-
தமிழீழத் தாயகம் நோக்கிய நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறவுப்பாலம் தனது முதலாது ஒலிபரப்பினைத் தொடங்கியது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தும் மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளான இன்று இலங்கையின் வான்பரப்புக்குள் நாதம் வானோசை உள்நுழைந்தது. http://naathamnews.com/?p=5791 இச்சேவையினைத் தடுப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் கடும் முயற்ச்சிகளை மேற்கொண்டிருந்த போதும் சீரான முறையில் நாதம் வானோசை ஒலித்தது. இலங்கை நேரம் இரவு 8:30 மணிக்கு சிற்றலையூடாக அலைவரிசை (short-wave) 12 250 mhz ல் ஒலித்துள்ளது. இந்த ஒலிபரப்பு தமிழகம் மலேசியா சிங்கப்பூர் உட்பட ஆசிய பிராந்தியத்தில் இதனைக் கேட்ககூடியதாக இருந்தது. தாயகம் – தேசியம் – தன்னாட்சியுரிமை எனும் ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாச…
-
- 13 replies
- 3.1k views
- 1 follower
-
-
இன்று நள்ளிரவு முதல் அவசரகாலச் சட்டம் - ஆணையை பிறப்பித்தார் ஜனாதிபதி நாட்டில் இன்று நள்ளிரவு முதல் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆணையை பிறப்பித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு பகுதிகளிலும் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறித்த அவசரகால சட்டத்தை அமுல்படுத்தியுள்ளார். ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர் தற்போது அவசரகால சட்டத்தை அமுல்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/127053
-
- 13 replies
- 837 views
-
-
பொதுநலவாய நாடுகளின் நிதிக்கு கனேடிய அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிதி இடைநிறுத்தப்படுவதான தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் கனேடிய பிரதமர் ஸ்டீபன் காப்பருக்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மேன்மைதங்கிய ஸ்ரீபன் காப்பர், கனடிய பிரதம அமைச்சர், ஒற்றாவா, கனடா. மேதகு பிரதம அமைச்சர் அவர்களே! பொதுநலவாய நிதிக்கு வழங்கப்படும் நன்கொடை இடைநிறுத்தம் பொதுநலவாய நாடுகளில் ஒன்றாகிய இலங்கையின் ஓர் மூத்த தமிழ்பிரஜை என்ற வகையில் பொதுநலவாய நாடுகளின் நிதிக்கு உங்கள் அரசால் வழங்கும் பணத்தை இடைநிறுத்துவதாக தங்கள் அரசு எடுத்த முடிவை மீள்பரிசீலிக்க…
-
- 13 replies
- 1.1k views
-