ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143578 topics in this forum
-
14/05/2009, 02:26 [சுடர்நிலா] தென் கொறியா தூதுக்குழு யாழ்ப்பாணம் விஜயம் 5 அங்கத்துவர்களைக் கொண்ட தூதுக்குகுழுவொன்று, தென் கொரியா குடியிருப்பு பிரதிநிதி சோங் மின் கேயோன் அவர்களின் தலைமையில், யாழ்ப்பாண தொழில் நுட்பக் கல்லூரிக்கு, செவ்வாய்க்கிழமை விஜயம் செய்துள்ளது. அங்கே தென் கொரியா அரசின் செலவில் பெரிய கட்டிட வளாகம் ஒன்ற கட்டப்பட்டுக் கொண்டிருப்பதாக யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கார்த்திகை 2008இல் தென் கொரியா அரசால் அனுப்பப்பட்டு இதுவரை திறக்கப்படாமல் இருந்த கொள்கலன்கள் பல அங்கு விஜயம் செய்த தூதுக்குழு, கல்லூரியின் அதிபர் மற்றும் சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் முன்பு திறக்கப்பட்டதாகத் தெரியவருகிறது. சிறிலங்கா இராணுவமானது இக் கொள்கலன்களைப் பாதுகாத்து…
-
- 7 replies
- 1.2k views
-
-
மாவை சேனாதிராஜா முதலமைச்சராவதை ஏன் இந்தியா விரும்பவில்லை: ஏசியன் ரிபியூன் இலங்கையின் வடக்கு மாகாண சபைக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராஜாவின் பெயர் பரிசீலிக்கப்படுவதை இந்தியா விரும்பவில்லை என்று ஆசியன் ரிபியூன் இணைத்தளம் தெரிவித்துள்ளது.இணையத்தளத்தின் ஆசிரியர், தமது ஆசிரியர் தலையங்கத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இந்திய உளவு நிறுவனமான ரோ, மாவை சேனாதிராஜாவின் மீது குற்றச்சாட்டை சுமத்தி இந்திய அரசாங்கத்துக்கு அறிக்கை ஒன்றை அளித்துள்ளது.இதன்படி, 2004ம் ஆண்டில் மிதவாத தமிழ் தலைவர்களை மாவை சேனாதிராஜாவே விடுதலைப் புலிகளுடன் தொடர்புபடுத்திவிட்டார். இந்தியா எச்சரித்தபோதும் மாவை சேனாதிராஜா, இந்த விடயத்தில் மும்முரமாக இருந்ததாக ரோ குறிப…
-
- 7 replies
- 964 views
-
-
புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு இராணுவத் தளபதி அழைப்பு வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அபிவிருத்திக்காக முதலீடு செய்ய முன்வருமாறு புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க நேற்று(07) அழைப்பு விடுத்தார். இராணுவம் தொடர்பில் தமிழர்களிடையே நிலவும் சந்தேகத்தை தெளிவுபடுத்துவதற்காக 2009 இல் யுத்தம் முடிவடைந்தது முதல் வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்களுடன் இலங்கை இராணுவம் மிக நெருக்கத்துடன் செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.…
-
- 7 replies
- 1.4k views
-
-
தமிழ்த் தேசியக் கட்சிகளை மீண்டும் ஒன்றுபடுத்த முயற்சி: சிவகரன் அறிவிப்பு எதிர்வரும் நாள்களில் தமிழ்த் தேசியக் கட்சிகளை ஐக்கியப்படுத்தும் முயற்சியில் ஈடுபட இருப்பதாகத் தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கம் அறிவித்திருக்கின்றது. இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் வி.எஸ். சிவகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தமது உத்தேச முயற்சி பற்றிக் குறிப்பிட்டிருக்கின்றார். அதில் கூறப்பட்டுள்ளவை வருமாறு:- "தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயம். கடந்த எழுபது ஆண்டு கால அரசியல் உரிமைக்கான ஜனநாயக மற்றும் ஆயுதப் போராட்டங்களை எதிர்கொண்ட தமிழினம் பல்வேறு விதமான இழப்புகளையும், நெருக்கடிகளையும், வலிகளையும், வாழ்வியல் சுமைகளையும் எதிர்கொண்டு வருகின்றது.…
-
-
- 7 replies
- 433 views
- 1 follower
-
-
போரை நிறுத்த வேண்டும் என ஜரோப்பிய ஒன்றியம் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் விடுத்த வேண்டுகோளை நிராகரிப்பதாக அந்நாட்டின் அனர்த்த நிவாரண சேவைகள் மற்றும் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே வைக்கலாம். ஆனால், அரசாங்கத்துடன் பேச்சுக்கு வரவேண்டிய அவசியம் எதுவும் இல்லை என்றும் அமைச்சர் மகிந்த சமரசிங்க கூறினார். அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் போரை நிறுத்த வேண்டும் என ஜரோப்பிய ஒன்றியம் விடுத்த வேண்டுகோள் தொடர்பாக ஊடகங்களுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை கருத்துக்கூறிய போதே அமைச்சர் மகிந்த சமரசிங்க இவ்வாறு தெரிவித்தார். போரில் படையினர் வெற்றி பெற்றுள்ளனர். போரின் இறுதி கட்டம…
-
- 7 replies
- 950 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் ஓர் சுதந்திர மனிதர் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. சுதந்திரமாக எந்தவொரு இடத்திற்கும் அவர் செல்ல முடியும் என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. குமரன் பத்மநாதன் அரசாங்க வீடொன்றில் தங்கவில்லை எனவும் அவர் கிளிநொச்சி, மதவாச்சி உள்ளிட்ட பல இடங்களுக்கு சுதந்திரமாக செல்வதாகவும் ஆளும் கட்சியின் பிரதம கொறடா தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இதேவேளை, குமரன் பத்மநாதன் போன்றவர்களை அரசாங்கம் மன்னரைப் போன்று நடாத்தும் அதேவேளை, சாதாரண புலி உறுப்பினர்களை கடுமையாக நடாத்துவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல குற்றம் சுமத்தியுள்ளார். குமரன் பத்மநாதனுடன் பிரச்சினையிருந்தால் அ…
-
- 7 replies
- 781 views
-
-
அடுத்துவரும் வடக்கு மாகாணசபை நிர்வாகமானது செயலூக்கம் கொண்டதாக அமைய வேண்டும் அடுத்துவரும் வடக்கு மாகாணசபை நிர்வாகமானது செயலூக்கம் கொண்டதாக அமைய வேண்டும் உள்ளூராட்சித் தேர்தல் ஒருவாறு நடந்து முடிந்து ஆட்சியை அமைக்கின்ற வேலைகளும் பூர்த்தி யடைந்து விட்டன. தமிழர் பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அநேகமான உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வா கத்தைப் பொறுப்பேற்றுள்ளது. வடக்கு மாகாண சபைய…
-
- 7 replies
- 845 views
-
-
“குற்றச் செயல்களில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் அதிகாரிகள் தண்டிக்கப்படாமையே என் சகோதரர் தேர்தலில் தோல்வியைத் தழுவக் காரணம்” சொந்த வீடு ஒன்று கூட தமக்குக் கிடையாது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் பாரியளவில் சொத்துக்களை திரட்டியதாக வெளியான தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். தங்கியிருப்பதற்கு இதுவரையில் தமக்கு ஒர் சொந்த வீடு கூட கிடையாது என அவர் தெரிவித்துள்ளார். வீடு ஒன்றை கொள்வனவு செய்வதற்கு போதியளவு பொருளாதார இயலுமை கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். மனைவியின் தயாராது வீட்டிலேயே தற்போது வாழ்ந்து வருவதாகவும், அவர் கடந்த 40 ஆண்டுகளாக அமெரிக்காவில் வாழ்ந்த…
-
- 7 replies
- 754 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமிழ் மக்கள் அமைதியான வாழ்வை விரும்பாவிடின் மீண்டும்இராணுவத்தினரும் , காவல்துறையினரும் வீதிகளில் சோதனை சாவடிகளை அமைத்து சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். வட்டுக்கோட்டை பகுதியில் இராணுவத்தினரால் புனரமைக்கப்பட்ட குளத்தினை பொது மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் தெரிவிக்கையில் , சிங்கள மக்களுக்கும் சரி இராணுவத்திற்கும் சரி தமிழ் மக்களுடன் நல்…
-
- 7 replies
- 1.4k views
-
-
யாழில் குடிநீர் பிரச்சனை காரணமாக கருத்தரிக்கும் வீதம் குறைகின்றது March 27, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழில் உள்ள குடிநீர் பிரச்சனை காரணமாக பெண்கள் கருத்தரிக்கும் வீதம் குறைவடைந்து செல்வதாக வடமாகாண ஆளூநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். தனது அலுவலகத்தில் நேற்றைய தினம் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , யாழில் குடிநீர் பிரச்சனை பெரும் பிரச்சனையாக இருக்கின்றது. அதனாலே நான் ஆளுனராக இருக்கும் இக்கால பகுதிக்குள் அதற்கு ஒரு தீர்வினை பெற வேண்டும் என முழு வீச்சாக நடவடிக்கைகளில் இறங்கியுள்ளேன். யாழில் பெண்களின் கருத்தரிப்பு வீதம் குறைவடைந்து வருகின்றது. இங்கிருந்து பலர் கருத்தரிப்புக்காக…
-
- 7 replies
- 1.1k views
-
-
யாழ்ப்பாணம், மயிலிட்டியை 12 ஆம் திகதிக்குள் விடுவிக்காவிடின் மக்கள் போராட்டம் வெடிக்கும் என கூறிய யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதியுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இன்றைய தினம் யாழ் விஜயம் செய்த ஜனாதிபதி மயிலிட்டி, வலிவடக்கு மீள்குடியேற்றம் என்பன தொடர்பில் எந்தவொரு சாதக பதிலையும் வழங்காத நிலையில் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்தநிலையில், கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் அவர்களின் மகளின் பிறந்த நாளில் ஜனாதிபதி கலந்து கொண்டுள்ளார். http://www.tamilwin.com/events/01/108139
-
- 7 replies
- 793 views
-
-
யாழ்.நகரில் பொசன் அலங்காரப் பந்தல் குடாநாட்டில் 30 வருடங்களின் பின் னர் மாபெரும் பொசன் அலங்காரப் பந்தல் நாளைமுதல் யாழ். நாகவிகாரையில் காட் சிப்படுத்தப்படுகிறது. யாழ்ப்பாணம், ஜூன் 24 குடாநாட்டில் 30 வருடங்களின் பின் னர் மாபெரும் பொசன் அலங்காரப் பந்தல் நாளைமுதல் யாழ். நாகவிகாரையில் காட் சிப்படுத்தப்படுகிறது. இது தொடர்பாக படைத்தரப்பு வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளவை வருமாறு : மூன்று தசாப்தகால கொடூர யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு இயல்பு வாழ்வை உறுதி செய்யும் முகமாக முப்பது வருடங்களுக்குப் பின்னர் முதல் முறை யாக யாழ். பிரதேசத்தில் சகோதர தமிழ் மக்கள் கண்டுகளிப்பதற்காக யாழ்ப்பாணம் ஸ்ரீ நாகவிகாரையின் விகாராதிபதி…
-
- 7 replies
- 1.1k views
-
-
தனிநாட்டுக் கோரிக்கையை சுமப்பதில் பயனேதுமில்லை! தனிநாட்டுக் கோரிக்கையை சுமப்பதில் பயனேதுமில்லை! ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டவுடன் தனிநாட்டுக் கோரிக்கையும் அத்துடன் மௌனிக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த எண்ணத்தைச் சிலர் இன்னமும் தம் உள்ளங்களில் சுமந்து கொண்டிருக்கின்றார்கள். அதனால் நாட்டு மக்களிடையே சுமுக உறவு ஏற்பட முடியாது. இவ்வாறு தெரிவித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். வடக்கு முதலமைச்சர் நேற்று அனுப்பியுள்ள கேள்வி – பதி…
-
- 7 replies
- 567 views
-
-
சடா முடியுடன் மீட்கப்பட்ட முன்னாள் போராளி தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளில் ஒருவர், நடு காட்டில் இருந்து சடா முடியுடன் மீடக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பளைப் பிரதேசத்துக்கு உட்பட்ட தாந்தாமலைக் காட்டுப் பகுயிலிருந்து முன்னாள் போராளி ஒருவர் புதன்கிழமை (08.03.2023) மீட்கப்பட்டு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கடந்த 4 வருடங்களாக குடும்பத்தினரால் கைவிடப்பட்ட, முன்னாள் போராளியான மனநலம் குன்றிய பாலா என்பவர் தாந்தாமலைப் பகுதியில் அமைந்துள்ள றெட்பாணா எனும் கிராமத்திற்கு அப்பாலுள்ள காட்டுப்பகுதியில் தூர்ந்துபோன கொட்டகை ஒன்றில் வசித்து வந்துள்ளார். இச்சம்பவம் தொடர்யில் தற்போ…
-
- 7 replies
- 1.2k views
- 1 follower
-
-
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு பேச்சு மூலம் ஒரு நியாயமான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாமல் தமிழர்களுக்கு குறைந்தளவு உரிமைகள் தீர்வுகள் வழங்கப்படுமாயின் அதற்கு நான் ஒருபோதும் ஒத்துழைக்கமாட்டேன். தமிழ் மக்களுக்கு நீதியான ஒரு தீர்வு கிடைக்கப் பிரதமர் என்ற வகையில் மட்டுமல்லாது அதற்கு அப்பாலும் பாடுபடுவேன் என பிரதமர் டி.எம்.ஜயரட்ன தெரிவித்துள்ளார். நேற்று யாழ்ப்பாணத்துக்கு சென்ற பிரதமர் டி.எம். ஜயரட்ன யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் காலை இடம் பெற்ற இந்து ஆலயங்களுக்கு நிதிவழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு பேச்சு மூலம் தீர்வு காணப்பட வேண்டும். ஒரு நியாயமான அரசியல் தீர்வு எ…
-
- 7 replies
- 1.6k views
-
-
முள்ளிவாய்க்காலோடு எம் தேசத்தின் மூச்சடங்கிப் போகவில்லை என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு எம் இனத்தின் மீது சுமத்தப்பட்டுள்ளதால், வரலாற்று முக்கியத்துவம் மிக்க இத்தருணத்தில் 'அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை' ஆகிய நாம் உங்கள் வாசல் தேடி வருகிறோம். தமிழின அழிப்பில் சிங்கள தேசம் இராணுவரீதியாக வெற்றியீட்டிய போதும், திம்புக் கோட்பாட்டின் அடிநாதமாக திகழ்கின்ற தாயகம், தேசியம், சுயநிர்ணயஉரிமை ஆகிய எமது அடிப்படை அரசியல் கோட்பாடுகள் தோற்கடிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த, அக்கொள்கைகளை நேர்மையுடன் கொன்டு செல்லும் அகில இலங்கை தமிழ் கொங்கிரஸ் என்ற பெயருக்கு கீழ் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு வாக்களிக்குமாறு தமிழர் தாயகத்தில் வாழும் எமது உறவுகளை அன…
-
- 7 replies
- 605 views
-
-
15.12.1995 அன்று ஈழத்தமிழர்களுக்காக தமிழ்நாடு திருச்சியில் தன்னையெரித்து ஈகைச்சாவடைந்த அப்துல் ரவூப் அவர்களின் 16ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 1995ம் ஆண்டு சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தின் போது யாழ். குடா நாடு மீதான பெரும் படையெடுப்பின்போது பல இலட்சக்கணக்கான மக்களின் இடப்பெயர்வினால் துயருற்ற அப்துல் ரவூப் அவர்கள் ஈழத்தமிழர்கள் மீதான சிறிலங்கா அரச பயங்கரவாதத்தை எதிர்த்து தமிழ்நாட்டின் திருச்சியில் தீக்குளித்து ஈகைச்சாவடைந்தார். ஈழத்தமிழர்களிற்காக தீக்குளித்து சாவடைந்த முதல் தமிழக உறவு அப்துல் ரவூப் என்பது குறிப்பிடத்தக்கது. தன் இனத்தின் துயர் துடைக்க தன்னைத் தீயில் ஆகுதியாக்கிய இந்த ஈகைத்தமிழனுக்கு இன்றைய நாளில் நினைவு வணக்கம் செலுத்துகிறோம்.
-
- 7 replies
- 2.3k views
-
-
குற்றச்சாட்டுகள் குறித்து காலவரையறைக்குட்பட்ட சுதந்திரமான விசாரணையைக் கோருகிறது இந்தியா [ வியாழக்கிழமை, 22 மார்ச் 2012, 00:08 GMT ] [ தா.அருணாசலம் ] நல்லிணக்க ஆணைக்குழுவினால் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ள மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, காலவரையறைக்குட்பட்ட, சுதந்திரமான - நம்பகமான விசாரணப் பொறிமுறை ஒன்றை உருவாக்கி, விசாரிக்க வேண்டும் என்று சிறிலங்கா அரசிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது. ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்த நிபுணர்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும் கொழும்பு விசாரிக்க வேண்டும் என்றும் இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது. இந்திய நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, நேற்று …
-
- 7 replies
- 1.7k views
-
-
சிலாபம், முன்னேஸ்வரம் காளி கோயிலில் வருடாந்தம் இடம்பெறும் மிருகபலிப் பூஜைக்கு எதிர்ப்பு தெரிவித்து பௌத்த பிக்குகளால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டமொன்று கோயிலுக்கு முன்னால் இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் இடம்பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பெருமளவாள புத்தபிக்குகள் ஈடுபட்டுள்ளோர். மிருகபலிக்கு எதிராக புத்தபிக்குகளின் காரூண்யம் பாராட்டப்பட வேண்டியது. ஆனால் இதே பிக்குகள்தான் தமிழர்களை கொல்ல வேண்டும் என போர்க்கொடி பிடித்திருக்கிறார்கள். http://thaaitamil.com/?p=30139
-
- 7 replies
- 1.1k views
-
-
கூகுள் இணைய தளத்தில் பாலியல் தொடர்பான தேடலில் அதிகம் ஈடுபடுவோர் இலங்கையர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. கூகுள் இணைய தேடு தளத்தில் 'செக்ஸ்' (Sex) என்ற பதத்தை அதிகளவில் தேடிய நாடுகளின் வரிசையில் இலங்கை முதனிலை வகிப்பதாக 2012ம் ஆண்டின் கூகுல் புள்ளி விபரத் தரவுகளின் அடிப்படையில் இந்தத்த கவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் படி இந்தியா இரண்டாம் நிலை வகிப்பதுடன், பபுவா நியு கினியா மூன்றாம் இடத்தை வகிக்கின்றது. எதியோப்பியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் முறையே நான்காம் ஐந்தாம் இடங்களை வகிக்கின்றன. http://onlineuthayan.com/News_More.php?id=221811730027361969
-
- 7 replies
- 1.5k views
-
-
இது யாழ்ப்பாணம் அல்ல ராமநாதபுரம்...! இது முல்லைத்தீவு அல்ல நாகப்பட்டினம்! 'தரை மேல் பிறக்க வைத்தான் எங்களைத் தண்ணீரில் பிழைக்க வைத்தான்...' என்று எம்.ஜி.ஆர். பாடிய காலத்தில்கூட மீனவனுக்கு இத்தனை கஷ்டங்கள் இருந்ததில்லை. ஆனால், இப்போது அவர்களது வாழ்க்கையே கண்ணீரால் குளிப்பாட்டப்படுகிறது. நாட்டுக்கு ஓரமாகக் கடல் இருப்பதால், தங்கள் கஷ்ட நஷ்டங்கள் எதுவும் ஊருக்குத் தெரியாமல் வாழ்ந்து வந்த மீனவர்களின் கதறல்தான் இன்று நாட்டுக்குள் அதிகம் கேட்கிறது. சிங்களக் கடற்படையால் தொடர்ந்து தாக்கப்பட்டு வந்த சோகத் தொடர்கதையில் இதுவரை 450 இந்திய மீனவர்கள் இறந்துபோய் இருக்கிறார்கள். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உறுப்புகளை இழந்து வாழ வழியில்லாமல் நிற்கிறார்கள். சிங்களக் கடற் படையால் பாதிக்…
-
- 7 replies
- 1.5k views
-
-
[TamilNet, Saturday, 27 November 2010, 19:14 GMT] Around 50,000 Eezham Tamils congregated on Saturday in London to pay homage to the Maaveerar (heroes) who laid down their lives in fighting for the liberation of Tamil Eelam. Similar gatherings proportionate to the population of Eezham Tamil diaspora were noticed in the other European capitals. 9,000 congregated in one of 8 localities in France and 7,000 at Fribourg in Switzerland, where local organisers noticed a new vigour of uprising. Meanwhile, the BBC in London cut a pathetic figure by featuring a report of a BBC Tamil Service staff, reporting: “Why Sri Lankan Tamils won’t remember war dead this year”. The BBC Tamil…
-
- 7 replies
- 2.1k views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- “இந்த நாட்டின் ஒரு பிரஜையை கூட சர்வதேச சக்திகள்துன்புறுத்துவதற்கோ அல்லது தொடுவதற்கோ நான்அனுமதிக்கமாட்டேன்” பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டநடவடிக்கைகளின் அடிப்படையில் இந்த நாட்டின் ஒருபிரஜையை கூட சர்வதேச சக்திகள் துன்புறுத்துவதற்கோஅல்லது தொடுவதற்கோ நான் அனுமதிக்கமாட்டேன் எனஎதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தனதுதேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டு;ள்ளார் தமிழ்மக்களின் இனப்பிரச்சினை தொடர்பாக எதனையும் தனதுதேர்தல் விஞ்ஞாபனத்தில் அவர் குறிப்பிடாததும்குறிப்பிடத்தக்கது. அவர் 100 நாட்களுக்குள் புதிய தேசம் திட்டத்தில்குறிப்பிட்டுள்ள சில விடயங்கள் வருமாறு 1994 இலிருந்து நிறைவேற்ற அதிகார ஜனாதிபதி ம…
-
- 7 replies
- 509 views
-
-
186347 புலிகள் பலி - புலிகளிற்கே சிறீலங்கா சொந்தம் என்கிறார் சிங்கள ஆய்வாளர். ஜ ஞாயிற்றுக்கிழமைஇ 30 செப்ரெம்பர் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ கடந்த 1983ம் ஆண்டு காலத்தில் இருந்து இன்றுவரை சிறிலங்கா அரச தரப்பு செய்திகள் சிங்கள ஊடகங்கள் லங்க புவத், அரச பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் , இராணுவ பேச்சாளர்கள், பாராளுமன்ற பதிவேடு, என்பவற்றினை தினசரி பதிவிற்கு உட்படுத்திவரும் தென் இலங்கை பந்தி ஆய்வாளரின் கணக்கெடுப்பின்படி நேற்றய இராணுவ பேச்சாளர் உதய நாணயக்காரவின் பத்திரிகையாளருக்கு கொடுத்த செய்தியுடன் இதுவரை தனது தொகுப்பை கணக்கிட்டபோது சிறிலங்கா அரசால் இதுவரை 186347 புலிகள் கொல்லபட்டுள்ளனர். இந்த கணிப்பின்படி தற்கரீதியாக தமிழர்களே சிறீலங்கா நாட்டின் சனத்தொகையில் பெரும்பாண்மையான…
-
- 7 replies
- 2.4k views
-
-
ஹிக்கடுவை கடலில் மூழ்கி ஜெர்மன் பிரஜை பலி! ஹிக்கடுவ கடலில் நீராடிக் கொண்டிருந்த வெளிநாட்டு பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நேற்று (21) மாலை வேளையில் நீரில் மூழ்கிய குறித்த வெளிநாட்டவர் மீட்கப்பட்டு கராபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் 72 வயதுடைய ஜெர்மன் நாட்டுப் பிரஜை என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஹிக்கடுவை பிரதேச சுற்றுலா விடுதி ஒன்றில் இவர் தங்கியிருந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.saritham.com/?p=48330
-
- 7 replies
- 1k views
-