ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143584 topics in this forum
-
இலங்கையின் வடக்கிற்கான தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசனை படையினரும் புலனாய்வாரள்;களும் தேடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று மதிய வேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் அலுவலகத்திற்கு சென்ற பொலிசார் ராதிகா சிற்சபேசன் இருக்கிறாரா என்ற விசாரனையை நடத்தி உள்ளதாக அங்கிருந்து குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 3 சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பெண் பொலிசார்கள் உள்ளிட்டவர்கள் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். அவர்களில் றணவீர என்ற பொலிஸ் அதிகாரி ராதிகாவினுடைய இலங்கைப் பயணம் குறித்த கேள்விகளை சிறீதரனிடம் கேட்டதாகவும் அது குறித்து எதுவும் தமக்கு தமக…
-
- 7 replies
- 789 views
-
-
காணாமல் ஆக்கப்பட்ட, உறவுகளின்... தொடர் போராட்டத்திற்கு, இன்றுடன் 2000 நாட்கள்- கிளிநொச்சியில், மாபெரும் போராட்டமும் முன்னெடுப்பு! வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தொடர் போராட்டம் 2000 நாட்களை எட்டியுள்ள நிலையில், இன்றைய தினம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று நடைபெறவுள்ளது. வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினாலேயே இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தில் அனைவரும் பங்கேற்கவேண்டும் என்று வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். இந்தக் கவனயீர்ப்புப்போராட்டமானது பேரணியாகச்சென்று டிப்போ சந்தியில் நிறைவட…
-
- 7 replies
- 682 views
-
-
அரச புலிகளின் குழு இன்று ஒஸ்லோ பயணம் கடைசி செய்தியை சொல்லவே செல்கிறோம் என்கிறார் புலித்தேவன் சர்வதேசத்திற்கு கடைசி செய்தியை எடுத்துச் செல்வதற்காகவே தமிழீழ விடுதலைப் புலிகள் ஒஸ்லோவுக்கு செல்கின்றனர் என தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்துடன் ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியும் அப்பேச்சுக்களில் ஏற்றுக் கொண்ட உறுதிமொழிகள் எதனையும் அரசு நிறைவேற்றவில்லை. நிறைவேற்றுவதற்கான மனநிலையும் அதற்கு இல்லை. இதனை கடைசியாக சர்வதேச சமூகத்திற்கு சொல்வதற்காகவே ஒஸ்லோவுக்கு செல்கிறோம் என்றும் புலித்தேவன் மேலும் தெரிவித்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒஸ்லோ பயணம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: …
-
- 7 replies
- 2k views
-
-
கொல்பிட்டியில் கருணா குழு அலுவலகம் விடுதலைப் புலிகளின் பின்ணணி உதவியுடனே திறக்கபட்டதாக அரச புலனாய்வுத்துறை எச்சரிக்கை கொல்பிட்டியில் கருணா குழுவினரின் அலுவலகம் திறக்கப்பட்டமைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இரகசியத் தொடர்பு வைத்திருக்கும் ஒரு கருணா குழு முக்கியஸ்தருக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக இலங்கையரச புலனாய்வுப் பிரிவு எச்சரித்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் இலங்கை அரசு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவருக்குத் தெரிவித்துள்ளதாவதுஇ கருணா குழுவிற்குள் விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவினர் பலமாக ஊடுருவியுள்ளனர். கருணா குழவிற்குள் தீவிரமாக செயற்படும் ஒருவர் விடுதலைப் புலிகளின் புலனாய்வு முக்கியஸ்தர் என்று தற்போது தெரிய வந்துள்ளது. அவருக்கும் …
-
- 7 replies
- 2.3k views
-
-
2009ஆம் ஆண்டு இரத்த ஆறு ஓடி முடிந்து அதன் வாடை கூட விட்டு விலகாதிருந்த நிலையில் எஞ்சியிருந்த இரத்தத்தையும் உரிஞ்சிக் குடிக்கும் நோக்கத்துடன் வங்கிகள், நுண்கடன் வழங்கும் நிறுவனங்கள் இலங்கையின் வடக்கு கிழக்கில் காலடி எடுத்துவைத்திருந்தமை அனைவருக்கும் நினைவிருக்கும். ஏ9 ஊடாகப் பயணம் செய்தவர்கள் பாதையின் இரு மருங்கிலும் மிகப்பெரிய பதாகைகளை கண்டிருக்க தவறியிருக்கமாட்டார்கள். இந்நிறுவனங்கள் அனைத்தும் 30 வருடகாலமாக போரினால் பாதிப்புக்குள்ளான மக்களின் தொழில் முயற்சிகளை ஊக்குவிப்பதற்காகவும், பொருளாதார நிலைமையை மேம்படுத்துவதற்காகவுமே இங்கு வருவதாகக் கூறினார்கள். மக்களும் விவசாயத்தை மீள ஆரம்பிப்பதற்கு, அடமானம் வைத்த பொருட்களை மீட்பதற்கு, சுயதொழில்களை ஆரம்பிப்பதற்கு, வீடுகளைத் த…
-
- 7 replies
- 1.5k views
-
-
'குடுமி' இப்போது பான் கீ மூனின் கையில் இலங்கையில் போர் முடிவுக்கு வந்து இரண்டு ஆண்டுகளாகப் போகின்ற நிலையில் - போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனிதஉரிமை மீறல்கள் பெரும் நெருக்கடியாக உருவெடுத்துள்ளது. ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்த நிபுணர்கள் குழுவின் அறிக்கை எந்தநேரமும் வெளியாகலாம் என்ற நிலையே தற்போதுள்ளது. நிபுணர்கள் குழுவின் அறிக்கை வெளியாக முன்னரே, அது இலங்கை அரசாங்கத்துக்கு நெருக்கடி கொடுக்கும் ஒன்றாகத் தான் இருக்கும் என்று, பலர் கருதுகின்றனர். மேற்குலக நாட்டு இராஜதந்திரிகள் இந்த அறிக்கை இலங்கைக்கு கடுமையானதொன்றாக அமையலாம் என்றே கருதுகின்றனர். அத்துடன் அரசாங்கத் தரப்பும் இது சாதகமற்றதாக அமையும் என்றே கருதுகிறது. சித்திரைப் புத்த…
-
- 7 replies
- 5.8k views
- 1 follower
-
-
சிங்கள இனவாதம் முப்பது ஆண்டுகளின் முன் நடந்திய மிகப்பெரும் படுகொலையாக... நூலகம் 1981 இல் எரிக்கப்படும் முன்னர் இருந்த தோற்றம் யாழ் பொது நூலகம் மே 31, 1981 எரியூட்டப்பட்ட பின்னரான தோற்றம் 31.மே.1981 அரைநூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருந்த தமிழர்தம் அறிவுச்சுரங்கமான யாழ்நூலகமானது சிங்களக்காடைத்தன அரசால் திட்டுமிட்டு நடாத்தப்பட்ட இனக்கருவறுப்பு நாசவேலையாகும். 30 ஆண்டுகளின் முன் இதே நாளில் எத்தனைபேர் இந்த நூலகத்தை தமது அறிவுத்தேடலுக்காகத் தழுவியிருப்பீர்கள். ஆசிய வட்டகையில் சிறந்ததொரு நூலகமாக இருந்த எமது பொக்கிசத்தைப் பொசுக்கியவர்கள் அதற்காக வருந்தியதே கிடையாது. தமிழினம் தனது வரல…
-
- 7 replies
- 2.8k views
- 1 follower
-
-
வவுனியா மாவட்டத்தில் 600 சிறார் போராளிகள் வரை காணாமல் போயுள்ளனர். இவர்கள் இறுதிப்போரில் வவுனியா முகாம்களுக்குள் வந்துள்ளதாக பெற்றோர்கள் கூறுகின்றனர். ஆனால் பின்னர் காணாமல் போயுள்ளனர். . பெற்றோர்கள் தமது பிள்ளைகளை கண்டுபிடித்து தருமாறு தினமும் வவுனியா கச்சேரி, மனித உரிமை ஆணைக்குழு, யுனிசெவ் போன்ற அமைப்புக்களின் காரியாலயங்களுக்கு செல்கின்றவர். . காணாமல் போனவர்களில் சிலர் போரில் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் அதே வேளை முகாமில் வைத்து கடத்தப்ப்பட்டவர்கள் தொடர்பில் தாம் விசாரித்து வருவதாக யுனிசெவ் வவுனியா அலுவலகத்தில் பணியாற்றும் சஜித் தோமஸ் என்பவர் கூறியுள்ளார். முகாம்களில் சிறார் போராளிகளின் காணாமல் போதல்களிற்கு அரசாங்கத்தின் பின் புலம் இருப்பதாகவும் யுனிசெவ் கூறுகின்…
-
- 7 replies
- 1.1k views
-
-
கொழும்பில் தமிழ் வர்த்தகரைக் கடத்திச் சென்ற ஆயுதக்குழுவினர் அவரது குடும்பத்தினரிடம் 100 மில்லியன் ரூபா கப்பம் கோரியுள்ளனர். வெள்ளவத்தை கனல் வீதியில் உள்ள தனது வீட்டின் முன்பாக கடந்த சனிக்கிழமை மாலை 42 வயதான பிரபல வர்த்தகர் ராமசாமி பிரபாகரன் அடையாளம் தெரியாத ஆயுதக்குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டிருந்தார். வெள்ளை வானில் துப்பாக்கிகளுடன் வந்த ஏழு பேர் கொண்ட குழுவொன்று அவரது மனைவி மற்றும் மகள் முன்பாகவே வர்த்தகரைக் கடத்திச் சென்றது. வர்த்தகரைக் கடத்திச் சென்றவர்கள் அவரது மனைவியிடம் சனிக்கிழமை இரவு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு 100 மில்லியன் ரூபா பணம் தந்தால் அவரை விடுவிப்பதாக கூறியுள்ளனர். கடத்தப்பட்ட வர்த்தகர் விடுதலைப் புலிகளின் தற்கொலைக் குண்டுதாரிக்கு உதவியதாக குற்…
-
- 7 replies
- 1.3k views
-
-
13 தொடர்பில் அனுர ஜெய்சங்கரிடம் என்ன கூறினார்? மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவில் நடத்துவது அரசமைப்பின் 13ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த உதவும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார். நேற்றையதினம் இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்துப் பேசினார். இது தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள செய்திக் குறிப்பில், “இலங்கையின் ஐக்கியம், ஆள்புல ஒருமைப்பாடு, இறைமை ஆகியவற்றைப் பேணும் அதேவேளை, தமிழர்கள் உட்பட அனைத்து சமூகத்தினரினதும் சமத்துவம் – நீதி – கௌரவம் – சமாதானம் ஆகி…
-
-
- 7 replies
- 650 views
-
-
இந்திய அரசாங்கத்தின் இரட்டை வேடத்தினை தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்தி தாக்குதல் அம்பலப்படுத்தியுள்ளது என்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: வவுனியாவில் உள்ள சிங்கள இராணுவத் தலைமையகத்தின் மீது வான் புலிகளும் கரும்புலிகளும் நடத்திய தாக்குதல்களின் விளைவாக இந்தியா வழங்கியிருந்த ராடர் கருவி முற்றிலுமாக அழிக்கப்பட்டதுடன் அதனை இயக்கிய இந்திய இராணுவ அதிகாரிகள் இருவர் காயமடைந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி இந்திய அரசின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்திவிட்டது. சிங்கள அரசுக்கு ஆயுத உதவி மட்டுமல்ல ஆள் உதவியையும்…
-
- 7 replies
- 2.6k views
-
-
அக்கரையான்குளத்தைப் பிடித்து விட்டோம் - இலங்கை ராணுவம் வியாழக்கிழமை, நவம்பர் 6, 2008 கொழும்பு: கிளிநொச்சியில் உள்ள முக்கிய நகரான அக்கரையான்குளத்தைப் பிடித்து விட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. அக்கரையான்குளம் முழுமையும் ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதாக ராணுவம் கூறுகிறது. கிளிநொச்சியைப் பிடிக்க ராணுவம் தீவிரமாக முயன்று வருகிறது. இதில் கிளிநொச்சியைச் சுற்றிலும் உள்ள முக்கிய பகுதிகள் பல, படிப்படியாக தங்கள் வசம் வந்து கொண்டிருப்பதாக ராணுவம் கூறி வருகிது. இந்த நிலையில், மிக மிக முக்கியமான பகுதியாக கருதப்படும் அக்கரையான்குளத்தை முழுமையாக மீட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. 3 நாள் சண்டைக்குப் பின்னர் அக்கரையான்குளம் வீழ்ந்துள்ளதாகவு…
-
- 7 replies
- 2.7k views
-
-
கிளிநொச்சி மாவீரா் துயிலுமில்லத்தில் பொது நினைவு சமாதி அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது : கிளிநொச்சி கனகபுரம் மாவீரா் துயிலுமில்லத்தில் பொது நினைவுச் சமாதி அமைக்கும் பணி இன்று வியாழக்கிழமை 05-01-2017 ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று முற்பகல் மாவீரர் துயிலுமில்லத்தில் ஒன்று கூடிய மாவீரா்களின் உறவினா்கள் மற்றும் முன்னாள் போராளிகள் சிலா் இந்தப் பணியை ஆரம்பித்துள்ளனா். யுத்தம் முடிவுக்கு வந்தப் பின்னா் கடந்த வருடம் மாவீரா் நாள் கொண்டாடுவதற்கு அனுமதியளிக்கப்பட்ட போதும் அப்போது வெறும் தரையில் சிதைக்கப்பட்ட கல்லறை மற்றும் நினைவுக் கற்களின் எச்சங்களை குவித்து அதன் முன் விளக்கேற்றி நினைவு கூரப்பட்டது. இந்தநிலையில் துயிலும…
-
- 7 replies
- 1.2k views
-
-
அரசியல் யாப்பு வழிநடாத்தல் சபையின் இடைக்கால அறிக்கை என்பது தமிழ் மக்களுக்கு ஓரளவு வெற்றியாகவும் முஸ்லிம்களுக்கும், சிங்களவருக்கும் எந்த நன்மையையும் அளிக்காமல் பாரிய பாதகங்களை ஏற்படுத்துவதாகவுமே அனைந்துள்ளது என்பதே முஸ்லிம் உலமா கட்சியின் நிலைப்பாடாகும் என அக்கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். கல்முனையில் உள்ள கட்சி காரியாலயத்தில் நடைபெற்ற கட்சி ஆதரவாளர் சந்திப்பின் போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, இடைக்கால அறிக்கையில் வடக்கும் கிழக்கும் ஒரே அலகாக கருதப்படும் என்று எழுதப்பட்டுள்ளதானது கிழக்கு முஸ்லிம்களை தமிழர் ஆதிக்கத்துக்கு அடிமைப்படுத்தும் கருத்தாக…
-
- 7 replies
- 1k views
-
-
மஹிந்தரின் அமெரிக்க விஜயத்துக்கு புதிய காரணம்! ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஒரு வகையான நோயால் பீடிக்கப்பட்டு உள்ளார் என்று லங்கா ஈ நியூஸ் இணையத்தளம் அதற்கு கிடைத்த ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு செய்தி பிரசுரித்து உள்ளது. நோயின் கொடுமையை தாங்க முடியாத நிலையில் சிகிச்சை பெறுகின்றமைக்காகதான் அமெரிக்காவுக்கு தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டு சென்று உள்ளார் என்றும் இச்செய்தி கூறுகின்றது. அங்கு புற்று நோய் வைத்தியசாலை ஒன்றில் இவர் சிகிச்சை பெற்று வருகின்றார் என்றும் இச்செய்தி தெரிவிக்கின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நாட்டில் கடந்த இரு மாதங்களாக வைத்தியர்களின் மருத்துவ ஆலோசனைப் பெற்று வந்திருக்கின்றார் என்றும் கூறப்படுகின்றது. ஜனாதிபதியின் உடல் நிலை மோசமாக இல்ல…
-
- 7 replies
- 1.7k views
-
-
[ செவ்வாய்க்கிழமை, 18 ஒக்ரோபர் 2011, 02:28 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] போர்க்குற்ற விசாரணை நெருக்கடிகளை அனைத்துலக அளவில் சந்திக்க ஆரம்பித்துள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவைக் காப்பாற்ற, நோபல் பரிசுக் குழுவை பயன்படுத்த சிறிலங்கா அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்துலக அளவில் சரிந்து வரும் சிறிலங்கா அதிபரின் செல்வாக்கை தூக்கி நிறுத்தி, போர்க்குற்றச்சாட்டுகளை முறியடிப்பதற்கு, அவருக்கு நோபல் சமாதானப் பரிசு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இணையத்தளம் மூலம் முன்வைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிறிலங்காவில் தீவிரவாதத்தை முற்றாக அகற்றியது, அமைதியை ஏற்படுத்தி மூன்றாண்டுகளாக நிம்மதியான வாழ்வை மக்களுக்கு ஏற்படுத்திக்…
-
- 7 replies
- 1.1k views
-
-
இராணுவ சேவையிலிருந்து 8000 வீரர்கள் தலைமறைவு! 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 2024 ஆம் ஆண்டு வரை ஆயுதப்படையின் 197 அதிகாரிகள் உட்பட எண்ணாயிரத்து நூற்று நாற்பத்தாறு பேர் இராணுவ சேவையிலிருந்து தப்பிச் சென்றுள்ளனர் என தெரியவந்துள்ளது. அதன்படி மார்ச் மாதத்தில் மட்டும், ஆயுதப்படைகளின் ஒன்பது அதிகாரிகளுடன் நானூற்று நாற்பத்திரண்டு பேர் ஆயுதப்படையை விட்டு வெளியேறியுள்ளனர் மேலும் கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் இராணுவ சேவையை விட்டு வெளியேறியவர்களில் 137 இராணுவ அதிகாரிகள், 18 கடற்படை அதிகாரிகள் மற்றும் 19 விமானப்படை அதிகாரிகள் இராணுவ சேவையை விட்டு வெளியேறியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பொருளாதார பிரச்சனைகள் மற்றும் நிர்வாக பிரச்…
-
-
- 7 replies
- 960 views
- 1 follower
-
-
முள்ளிவாய்கால் கொடூர நிகழ்வின்போது அதில் சிக்கி தப்பித்து வாழ்பவர்களின் உண்மைக் கதைகளை 'சமூக சிற்பிகள்' அமைப்பினர் [The Social Architects -TSA]* சாட்சியமான மக்களிடம் கேட்டு தங்கள் வலைப்பதிவில் ஆங்கில மொழியில் பதிவேற்றம் செய்துள்ளனர். March 12 முதல் March 19 வரையில் வெளியான அக்கதைகளின் முக்கியத்துவம் கருதி 'புதினப்பலகை' மொழிமாற்றம் செய்து இங்கே வெளியிடுகின்றது. 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. [விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினரான 30வயதான சாமந்தி என்பவர் மூன்று பிள்ளைகளுக்கு தாயாவார். 1990ல் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்ட இவர் 2004 ல் புலிகள் அமைப்பைச் சேர்ந்த பொறுப்பாளர் ஒருவரைத் திருமணம் முடித்த பின்னர் அந்த அமைப்பிலிருந்து விலகிக் கொண…
-
- 7 replies
- 1.7k views
-
-
[size=4]சென்னை விஜய் ரிவி நிறுவனம் நடத்திவரும் தற்போதைய சுப்பர் சிங்கர்ஸ் யூனியர் இசைப் போட்டியில் கனடாவிலிருந்து சென்று கலந்து கொண்ட சின்னக் குயில் மகிசா நேற்று முன்தினம் புதன் கிழமை கனடா திரும்பினார்.[/size] [size=4]புல போட்டியாளர்களோடு சேர்ந்து தனது திறமையை நன்கு காட்டி வந்த மகிசா சுமார் எட்டு மாதங்கள் சென்னை மாநகரில் தங்கியிருந்து தனது இசைப் பயணத்தை தொடர்ந்தார். தனது திறமையை மகிசா காட்டிய போது நடுவர்களாக பணியாற்றிய பாடகர் மனோ மற்றும் பாடகி சித்திரா போன்றவர்களின் அபாரமான வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் பெற்று மகிசா கனடாவிற்கு திரும்பியுள்ளார்.[/size] [size=4]மகிசாவை விமான நிலையத்தில் வரவேற்கச் சென்ற பலருள் ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகளும் அடங…
-
- 7 replies
- 2k views
-
-
பெண் அரச ஊழியர் மீது தாக்குதல்-முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு கருணா கோரிக்கை பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை கமநல சேவைகள் திணைக்களத்தில் பணிபுரியும் பெண் உத்தியோகத்தர் தாக்கப்பட்டமை தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சம்மாந்துறை கமநல சேவை திணைக்களத்தில் பணிபுரியும் பெண் அரச உத்தியோகத்தரை அதே திணைக்களத்தில் விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தராக பணியாற்றும் நபர் புதிய வருடத்தில் அரச உத்தியோகத்தர்கள் கடமை பொறுப்பேற்கும் நிகழ்வின்போது தாக்கியுள்ளார். இவ்வாறு தாக்கப்பட்டு காயமடைந்த குறித்த பெண் உத்தியோகத்தர் தற்போது 3 நாட்களாக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று …
-
- 7 replies
- 1.2k views
-
-
தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுக்கும் அரசுக்கு எதிராக வட,கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும் நிலையில், அம்பாறை மாவட்டத்தில் மாத்திரம் ஆதரவு வழங்காத மக்கள் தமது அன்றாட செயற்பாடுகள் வழமை போன்று முன்னெடுத்துள்ளனர். இதன்படி கல்முனை, சவளக்கடை, சம்மாந்துறை, மத்தியமுகாம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உணவகங்கள், புடவைக்கடைகள் மற்றும் வீதியோர வியாபாரங்கள் வழமை போன்று இயங்கியது. இதன்போது பொதுமக்கள் வழமை போன்று பொருட் கொள்வனவில் ஈடுபட்டு வந்தததை அவதானிக்க முடிந்தது. இம்மாவட்டத்தின் பெரிய நீலாவணை, ஓந்தாச்சிமடம், காரைதீவு, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, நிந்தவூர், அட்டப்பளம், சம்மாந்துறை மாவடிப்பள்ளி, சவளக்கடை, மத்திய முகாம் ஆகிய பிரதேசங்களில் மக்களின் நடமாட்டம் வழமை…
-
- 7 replies
- 1.2k views
-
-
மன்னார் எழுத்தூர் தரவன் கோட்டை பகுதியில் காணப்பட்ட 'புனித மிக்கேல் சம்மனசு திருச்சொரூபம்' இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் பங்குத்தந்தை ஊடாக இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். மன்னார் எழுத்தூர் தரவன் கோட்டை பகுதியில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்ட நிலையில் 'புனித மிக்கேல் சம்மனசு திருச் சொரூபம்' காணப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த மன்னார் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். …
-
- 7 replies
- 767 views
-
-
தமிழ்த்தேசியத்துக்கு ஆதரவு தாருங்கள்: தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி திகதி: 28.02.2010 // தமிழீழம் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியும் பொது அமைப்புக்களின் பிரதி நிதிகளும் இணைந்து உருவாக்கியுள்ள தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி என்ற புதிய கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியானது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகின்றது. தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் மகாநாடு இன்று மாலை 5.30 மணியளவில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் யாழ்ப்பாண் அலுவலகத்தில் நடைபெற்றது. இம் மகாநாடு தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட தலைமை வேட்பாளர் சின்னத்துரை வரதராஐன் அவர்களது தலைமையி…
-
- 7 replies
- 845 views
-
-
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை பொலிசாரால் ஒரு தொகுதி கஞ்சா இன்று(08) திங்கள்கிழமை அதிகாலையில் மீட்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்கவிற்க்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து வல்லிபுர ஆழ்வார் சமுத்திர தீர்த்தம் இடம் பெறும் கடற்கரையில் நீருக்கு அடியில் பதுக்கிவைத்திருந்த நிலையிலேயே குறித்த கஞ்சா மீட்டெடுக்கப்பட்டுள்ளது. https://newuthayan.com/article/பருத்தித்துறை_பொலிஸாரால்_ஒரு_தொகுதி_கஞ்சா_மீட்பு!
-
- 7 replies
- 863 views
-
-
முருங்கைக்காய் விலையில் வீழ்ச்சி! விவசாயிகள் பாதிப்பு. கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச விவசாயிகள், தமது வாழ்வாதாரத்திற்காக முருங்கைக்காய் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது சந்தையில் முருங்கைக்காயின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு, மயில்வானபுரம் பகுதியில் நூற்றுக்கும் அதிகமான விவசாயிகள் தமது வாழ்வாதாரத் தேவைக்காக முருங்கை பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த காலங்களில் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட முருங்கைக்காய் தற்பொழுது 40 ரூபாய் 50 ரூபாய்க்கும் என மொத்த விலையில் கொள்வனவு செய்யப்படுகிறது. இந்த நிலையில், …
-
-
- 7 replies
- 559 views
- 1 follower
-