Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிகளை நோக்கி இடம்பெற்று வருகின்ற ராணுவ நடவடிக்கைகள் முக்கியமானதோர் பரிணாமம் மிக்க கட்டத்தை எய்தியிருப்பதாக படைத்தரப்புடன் தொடர்புடைய அதிகாரிகள் மூலம் தெரிய வருகின்றது. இலங்கை ராணுவத்தின் யாழ்ப்பாணத்திலிருந்து சுண்டிக்குளம் ஊடாக சாலை வரை முன்னேறியுள்ள 55 வது படையணிகள் மீது விடுதலைப் புலிகள் நேற்று நள்ளிரவு முதல் பாரிய தாக்குதல்களை ஆரம்பித்திருப்பதாக இந்த ராணுவ அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. இதன்போது சாலை பகுதியில் அதிகளவு ஆய்தங்களை விடுதலைப்புலிகள் கைப்ப்பற்றியுள்ளதாகவும்.மேல

  2. அமெரிக்காவும், இந்தியாவும் தன்னை ஏமாற்றி விட்டது சம்பந்தன் வெளிப்படையாக கூறினார் என மூத்த பத்திரிகையாளரும், அரசியல் ஆய்வாளருமான நிக்சன் தெரிவித்துள்ளார். ஊடறுப்பு நிகழ்ச்சியல் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் கூறுகையில், சம்பந்தனை பொறுத்தவரை இப்போது ஓய்வுபெற வேண்டிய அல்லது ஓய்வு பெறக்கூடிய தேவை இருக்கிறது என்பது உண்மை. அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அவர் ஓய்வுபெற வேண்டும் என அறிவிக்கக்கூடிய காலம் இதுவல்ல. அது முன்னரே செய்திருக்க வேண்டிய ஒன்று. ஆனால் இப்போது ஏன் அந்த தேவை வருகிறது என்றால் அடுத்த ஆண்டு தேர்தல். நாடாளுமன்றத் தேர்தல் சிலவேளைகளில் ஒத்திவைக்கப்பட்டாலும் ஜனாதிபதி தேர்தல் வரப்போகிறது. அதற்கு …

  3. புளொட் அமைப்பின் உறுப்பினருக்கு மரணதண்டனை : நீதிபதி இளஞ்செழியன் அதிரடித்தீர்ப்பு! வவுனியாவில் வைத்தியர் ஒருவரை சுட்டுப்படுகொலை செய்த சம்பவத்துடன் தொர்புடைய நபர் ஒருவருக்கு வவுனியா மேல்நீதிமன்றம் மரணதண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது. வவுனியாவில் கடந்த 2009 ஆம் ஆண்டு 4 ஆம் மாதம் 20 ஆம் திகதி கற்குழியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் கடமையில் இருந்த வைத்தியர் முகைதீன் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தார். இது தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட எதிரிக்கு எதிராக வழக்கு விசாரணை இடம்பெற்றுவந்த நிலையில் சட்டமா அதிபரினால் வவுனியா மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. …

  4. இந்தியா ஏமாற்றிவிட்டது - அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளிற்கு நன்றி – சம்பந்தன்:- இந்தியா ஏமாற்றிவிட்டது. அமெரிக்கா கொண்டுவந்த பிரேணைக்கு ஆதரவாக வாக்களிக்காது நடுநிலையாக செயற்பட்டதன்மூலம் இந்தியா தமிழர்களை ஏமாற்றிவிட்டதாகத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளிற்கு நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். பிரேரணை மீதான வாக்கெடுப்பு முடிவடைந்த நிலையில் இந்திய தொலைக்காட்சிக்கு ஒன்றிற்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். பிரேரணை நிறைவேற்றப்பட்ட நிலையில் பிரேரணை விரைவாக அமுல்படுத்தப்படும் என தாம் நம்புவதாகவும். அதற்கு சகல நாடுகளும் ஒத்துளைக்க …

    • 36 replies
    • 3.3k views
  5. (எம்.எப்.எம்.பஸீர்) இலங்கையில் தற்போது முஸ்லிம்களுக்கு எதிராகவே இனவாத பிரசாரங்கள் இடம்பெறுவதாகவும் அது குறித்து சமூக வலைத்தளத்தில் தெரிவித்த கருத்தினை அடிப்படையாகக் கொண்டு சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டு ( ஐ.சி.சி.பி.ஆர்.)சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ரம்ஸி ராஸிக் தொடர்ந்தும் இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு எதிராக குரல் கொடுத்த ஒருவர் என்று ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் இன்று கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் வெளிப்படுத்தினார். பிரபல சமூக வலைத்தள எழுத்தாளராக கருதப்படும் ரம்ஸி ராஸிக், சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்த வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் லங்கா…

    • 36 replies
    • 2.3k views
  6. யாழ். மாவட்ட வேட்பாளர் சுமந்திரனை நாடாளுமன்றம் அனுப்புவது தமிழர்களின் கடமை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பருத்தித்துறை நகரசபைத் தலைவர் சபா ரவீந்திரன் தலைமையில் பருத்தித்துறை நடராஜா கலையரங்கில் ஞாயிற்றுக்கிழமை (26) மாலை நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், அடுத்து அமையவிருக்கின்ற நாடாளுமன்றம் ஒரு ஸ்திரமான நாடாளுமன்றமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்கான தீர்க்கமான சந்தர்ப்பம் உருவாகும் என்று நாங்கள் நம்புகின்றோம். அந்தச் சந்தர்ப்பத்தில் நாடாளுமன்றத்தில் சுமந்…

  7. ஈழவிடுதலைப் போராட்டத்தினை எதிர்காலக் கணிப்போடு விடுதலைப்புலிகள் நடக்காததால் பல உயிர்கள் பலியாகின. 2005ல் கிடைத்த ஜனநாயக வாய்ப்பினைப் பிரபாகரன் எட்டி உதைத்துவிட்டார் என தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி கூறியள்ளதாகத் தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக அறிய வருகிறது. இது குறித்து மேலும் அறிகையில், வி.புலிகள் எதிர்கால கணிப்போடு போர் தந்திரத்தை செயற்படுத்தாததால் பல உயிர்கள் இழந்ததார்கள். விடுதலைப் புலிகள் இயக்கம் திட்டமிட்டு நடவடிக்கை மேற்கொள்ள தவறியதால் தமிழ் மக்கள் உயிரிழக்க நேரிட்டதாகவும் , சகோதர யுத்தம் காரணமாக தமிழர்களின் உயர்வுக்காக பாடுபட வேண்டியவர்களும் அர்ப்ப நாளில் உயிரிழக்க நேரிட்டதாகவும் …

  8. யாழ்ப்பாணத்தில் புதிதாக இரண்டு புத்தர்சிலைகள்! - அஸ்கிரிய பீடாதிபதி திறந்து வைத்தார். [Thursday, 2014-02-27 07:53:19] யாழ்ப்பாணம், ஆரியகுளம் சந்தியில் உள்ள நாகவிகாரையில் மேலும் ஒரு புத்தர்சிலை நேற்று கண்டி அஸ்கிரிய பீடாதிபதி உடுகம புத்தரகித்த மகாநாயக்க தேரரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மதங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் அஸ்கிரிய பீடாதிபதி, நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு இந்துமத குரு முதல்வரை சந்தித்து கலந்துரையாடினார். அதனையடுத்து நாகவிகாரைக்குச் சென்று புத்தர் சிலை ஒன்றைத் திறந்து வைத்து பிரித்ஓதி வழிபாட்டில் ஈடுபட்டார். மேலும் குருநகரில் உள்ள இராணுவ முகாம் ஒன்றிலும் புத்தர் சிலை ஒன்று திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. …

    • 36 replies
    • 2.2k views
  9. போட்டி மாவீரர் தினத்தைக் கைவிடும்படி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வேண்டுகோள்! அன்பான புலம்பெயர் தமிழ் மக்களே! நாங்கள் இப்போது எங்களது வரலாற்றுத் திருப்பு முனையின் முக்கிய பங்குதாரராக இருக்கின்றோம். விடுதலை வேண்டி நிற்கும் எங்கள் தேசம் எங்களது தொடர் போராட்டங்களை யாசித்து நிற்கின்றது. சிங்களப் படைகளால் பேச்சு, மூச்சிழந்து தவிக்கும் தமிழீழ மக்களது உணர்வுகளைப் பிரதிபலிக்கவும், அவர்களுக்காகப் பேசவும், அவர்களுக்காகப் போராடவும் வேண்டிய தருணத்தில் நாம் இருக்கின்றோம். அந்நிய மண்ணில் வாழ்ந்தாலும், எங்கள் நேசிப்பும், எங்கள் சுவாசிப்பும் தமிழீழ மண்ணை நோக்கியே இருக்கின்றது. தமிழீழ மக்களது விடுதலையே எங்களையும் அனைத்துத் தளங்களிலும், அனைத்துத் தளைகளிலிருந்து…

  10. யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் முச்சக்கரவண்டி, பஸ் வண்டி ஆகியவற்றின் கண்ணாடிகளை உயர்தர மாணவர்கள் அடித்து நொருக்கியுள்ளதாக அதிபர் ஐயம்பிள்ளை தயானந்தராசா, செவ்வாய்க்கிழமை (10) முறைப்பாடு செய்துள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் கூறினர். ஆசிரியர் ஒருவருடன் முரண்பட்டுக்கொண்ட மாணவர்கள், இவ்வாறு கண்ணாடிகளை அடித்து நொருக்கியுள்ளனர். உடைந்த கண்ணாடிகள் 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியுடையவை என அதிபர் முறைப்பாட்டில் கூறியுள்ளதாகவும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் நுழைவாயிலுக்கு பெயின் ஊற்றிய சம்பவம் அண்மையில் இடம்பெற்றிருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை (10) கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன. http://www.tamilmirror.lk/139510#s…

  11. மாணவர்களிற்கு இருக்கும் உணர்வு எனக்குமுண்டு; தூபியை மீள அமைக்க தயார்: துணை வேந்தர் January 10, 2021 முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டது எனக்கும் கவலைதான். அது மேலிடத்தின் உத்தரவிலேய இடிக்கப்பட்டது. அதற்காக ஆதாரமுள்ளது. இடிக்கப்பட்ட தூபியை மீள கட்டுவேன் என யாழ்ப்பாண பல்கலைகழக துணைவேந்தர் என்னிடம் தெரிவித்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார். உடைக்கப்பட்ட தூபியை மீள கட்ட வேண்டுமென வலியுறுத்தி பல்கலைகழக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்ட களத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோர் போராட்டக்களத்திற்கு செ…

    • 36 replies
    • 3.3k views
  12. 317 இலங்கை அகதிகளை ஏற்றிய கப்பல் நடுக்கடலில் தத்தளிப்பு..! 317 இலங்கை அகதிகளை ஏற்றிய கப்பல் நடுக்கடலில் தத்தளிப்பு இலங்கையில் இருந்து சென்றதாக கூறப்படும் 317 அகதிகளை ஏற்றிய கப்பல் ஒன்று பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் பழுதடைந்த நிலையில் நடுக்கடலில் தத்தளிப்பதாக தெரியவந்துள்ளது. குறித்த கப்பலில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட 317 பேர் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. கப்பல் தொடர்ந்து பயணிக்க முடியாதா நிலையில் பழுதடைந்ததால் கப்பலை செலுத்திய கப்பல் ஓட்டி தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிலிப்பைன்ஸ் நாட்டு கடல் படையினருக்கு தகவல் இதேவேளை கப்பலை மீட்கும் பணியில் புலம் பெயர் சமூகத்தில் உள்ள சிலர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற…

  13. சுதந்திர தினத்தன்று தமிழில் தேசிய கீதம் பாடப்படமாட்டாது? இலங்கையின் 72ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தில் தேசிய கீதம் சிங்களத்தில் மட்டுமே பாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி கொழும்பின் சுதந்திர சதுக்கத்தில் இலங்கையின் 72ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் மிகப் பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சுதந்திரதின நிகழ்வு குறித்து முன்னேற்பாட்டு கூட்டம் நேற்று (திங்கட்கிழமை) அனர்த்த முகாமைத்துவம், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சில் நடைபெற்றது. இதன்போதே, சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதம் பாட முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில், அனைத்து அமைச்…

  14. புலிச்சின்னம் வரைந்து பிரபாகரனின் பிரியத்துக்குரிய அண்ணாவான ஓவியர் நடராசா "தம்பிக்கும் எனக்கும் உள்ள தோழமையை உலகறியச் செய்து விட்டது நக்கீரன்' என்று தனது பேட்டி வெளியான இதழை தலைமாட்டில் வைத்துக் கொண்டு, அதில் உள்ள பிரபாகரன் படத்தைத் தடவித் தடவிப் பார்க்கிறார். ""இந்த உடல்ல ஒட்டிக்கிட்டிருக்குற உயிரால யாருக்கு என்ன பிரயோஜனம்? அது இந்த உலகத் துல எங்கோ ஒரு கண்காணாத இடத்துல தமிழீழங்குற ஒரே லட்சியத்துக்காக மூச்சு விட்டுக்கிட்டிருக்குற தம்பிக்கிட்ட போய்ச் சேரட்டும். அது அடுத்து அவரு எடுத்து வைக்கப் போற ஒவ்வொரு அடிக்கும் வலு சேர்க்கட்டும்'' என்று முனகியபடியே இருக்கிறார். ""இன்னும் ஏதோ சொல்ல நினைக்கிறார்'' என்று அவர் வீட்டிலிருந்து நமக்குத் தகவல் கிடைக்க விருதுநகர் அருகிலுள்ள மல்…

  15. [size=3][size=4]சேலம்: இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இந்திய வருகையைக் கண்டித்து நேற்று சேலத்தில் தீக்குளித்த ஆட்டோ ஓட்டுநர் விஜய்ராஜ் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.[/size][/size] [size=3][size=4]சேலத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் விஜய்ராஜ் தமிழின உணர்வாளர். தமிழ் இயக்கங்கள் நடத்துகின்ற அனைத்து கூட்டங்களுக்கும் தவறாமல் சென்று கலந்து கொள்வார். இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு தமிழர்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவிக்க வலியுறுத்தி நேற்று அதிகாலை தீக்குளித்தார். பின்னர் தீக்காயங்களுடன் அவர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் அவர் உயிரிழந்தார். தீக்குளித்த நிலையில் மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேச…

  16. “விளக்கேற்ற அழைத்த சிறிதரன் திருப்பி அனுப்பி விட்டார்” - மூன்று மாவீரர்களின் தாயார் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், என்னை விளக்கேற்ற வருமாறு அழைத்துவிட்டு திருப்பி அனுப்பி விட்டார் என மூன்று மாவீரர்களின் தாயொருவர் கண்ணீருடன் கவலைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “கடந்த செவ்வாய்க்கிழமை (26) மாலை 6.55 மணியளவில் தொலைபேசியூடாக தொடர்பு கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் , நீங்கள் மூன்று மாவீரர்களின் தாயா? என வினவினார் எனது மூன்று பிள்ளைகளின் விபரங்களை கேட்டு அறிந்து கொண்ட பின்னர், புதன்கிழமை (27) அன்று கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் நீங்கள் பொதுச் சுடரேற்ற வேண்டும் வருகை தாருங்கள் என்றார். நானும் சம்மதம் தெரிவித்தேன் மாவீ…

  17. யுக்ரேனின் லீயம் நகரை மீண்டும் தன்வசமாக்கியுள்ளது அந்நாட்டு ராணுவம். அங்கு ரஷ்ய ராணுவம் ஆக்கிரமித்திருந்தபோது பதிவான பல வகை கொடுமைகள் குறித்த குற்றச்சாட்டுகள் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன. அதில் குறிப்பாக, இலங்கையர்கள் குழுவொன்று மாதக்கணக்கில் சிறைப்பிடிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அந்த மக்களின் கதை இங்கே. நாங்கள் இங்கிருந்து உயிரோடு வெளியேறுவோம் என்றே நினைக்கவில்லை என்கிறார் திலூஜன் பத்தினஜகன். கடந்த மே மாதம் ரஷ்ய ராணுவத்திடம் சிக்கிய ஏழு பேரில் இவரும் ஒருவர். ரஷ்யா, யுக்ரேன் இடையே மோதல் தீவிரம் அடைந்தபோது, யுக்ரேனின் வடகிழக்கில் உள்ள குப்யான்ஸ்க் நகரிலிருந்து 120 கி.மீ தூரத்தில் உள்ள கார்கிவ் நகரம் பாதுகாப்பாக இருக்கலாம் என்…

  18. மட்டக்களப்பு, இருதயபுரத்தில் வைத்து சுமனரத்தின தேரர் தெரிவித்த கருத்துக்களை தமிழ் தேசிய இளைஞர் பேரவை வன்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசிய இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளர் ச.கீதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : மட்டக்களப்பு, இருதயபுரத்தில் சிலருடன் வருகை தந்த சுமனரத்தின தேரர், 'மீண்டும் யுத்தம் வரும்; தமிழர்களையும் தமிழ் அரசியல்வாதிகளையும் வெட்டுவேன்' என்று கூறியுள்ளார். இவருடைய கருத்தை தமிழ் தேசிய இளைஞர் பேரவை வன்மையாக கண்டிக்கிறது. மிகப்பெரும் யுத்தம் இடம்பெற்று, மிகப்பெரும் அழிவுகளை சந்தித்த நாடு, தற்போது நிலையான அமைதியையும், இனப் பிரச்சினைக்கான நிலையான தீர்வையும் நோக்கி பயணி…

  19. ஈழத்தமிழர்களுக்கு தமிழீழத்தை உருவாக்கி விட்டுத்தான் உயிர்துறப்பேன் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். வடசென்னை தி.மு.க சார்பில் நேற்றிரவு நடைபெற்ற தமது கட்சி பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். ”அண்ணா,காந்தி வழியில் அறப்போராட்டம் நடத்தி தமிழீழம் கிடைக்க போராடுவேன். தனி ஈழம் அமைப்பதற்கு 1980 களில் உருவாக்கப்பட்ட டெசோ எனப்படும் தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பை மீண்டும் தொடங்க வேண்டும்.அந்த இயக்கம் தி.மு.க.வின் துணை இணக்கமாக செயலாற்றி தமிழீழம் உருவாக்கப்படும். தந்தை செல்வாவின் வழியில் வன்முறையற்ற வழியில் அமைதிப்போராட்டம் அங்கு புதிய வடிவம் பெறும்.இலங்கை ஜனாதிபதி இதனை நிராகரிக்கலாம்.ஆனால், இதுதான் என் எஞ்சிய வாழி நாளின் இலட்…

    • 35 replies
    • 2.1k views
  20. வெடிமருந்துகள் அடங்கிய விடுதலைப் புலிகளின் படகை பிடித்து துறைமுகத்துக்கு கொண்டு வந்த விவகாரம், கடலோர காவல்படைக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. வெடிமருந்துகளை கண்டுபிடிக்கும் நிபுணர்கள் குழுவை கலந்து ஆலோசிக்காமல், துறைமுகத்தில் புலிகளின் படகை எட்டு நாட்கள் நிறுத்தி வைத்தது குறித்து கடலோர காவல் படையினரிடம் விசாரணை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இந்திய, இலங்கை கடல் பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த "ஸ்ரீ ராமஜெயம்' என்ற படகை, இந்திய கடலோர காவல்படையினர் பிடித்தனர். அப்படகு விடுதலைப் புலிகள் அமைப்பின் கடற்புலிகள் பிரிவுக்கு சொந்தமானது. அப்படகில் ஏராளமான சமையல் பொருட்களுடன், ஏ.கே.56 ரக துப்பாக்கியும் அதற்கான குண்டுகளும் இருந்தன. இதுதவிர கையெறி குண்டுகள், மனி…

  21. விக்னேஸ்வரனின் பக்கச்சார்பின்மை! எழுப்பும் கேள்விகள் பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னமும், இரண்டு வாரங்களே இருக்கின்ற நிலையில், எல்லாக் கட்சிகளுமே தம்மால் இயன்றளவுக்கு மக்களின் ஆதரவைத் திரட்டிக் கொள்வதற்கான பிரசார உத்திகளைக் கையாண்டு வருகின்றன. வடக்கு தேர்தல் களத்திலும், பிரசாரங்கள் சூடுபிடித்திருக்கின்றன. தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்பதை இதுவரையான தேர்தலில் நிரூபித்து வந்திருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இப்போது வாக்குகளைப் பங்கு போடுவதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயகப் போராளிகள் கட்சி போன்ற கட்சிகளும் களமிறங்கியிருக்கின்றன. எப்போதுமே, கொழும்புடன் இணக்க அரசியல் நடத்தி வந்த ஈ.பி.டி.பி.யும், அங்குமிங்குமாக நின்ற தமிழர் விடுதலைக் கூட்டணியும் இம்முறை தனி…

  22. படத்தின் காப்புரிமை BIRDS 3 Satellite Project இலங்கையை சேர்ந்த இருவரால் வடிவமைக்கப்பட்ட செயற்கைக்கோளான 'இராவணா 1", சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இன்று வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இலங்கை நேரப்படி இன்று மாலை 3.45 அளவில் இராவணா 1 வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து 400 கிலோமீட்டர் தூரத்தில் 'இராவணா 1" செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இலங்கை வரலாற்றில் முதன் முறையாக இல…

  23. மஹியங்கனையில் முஸ்லிம் வர்த்தகரின் வியாபார நிலையம் தீக்கிரை மஹியங்கனை பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான வியாபார நிலையம் ஒன் நேற்றிரவு தீக்கிரையாகியுள்ளது. காத்தான்குடியைச் சேர்ந்த தாஜுதீன் என்பவருக்குச் சொந்தமான “ரிச் சூ பலஸ்” எனும் வர்த்தக நிலையமே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது. தீயை அணைக்க பொலிஸாரும், பொது மக்களும் முயற்சித்த போது தீயினால் வர்த்தக நிலையம் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. தீ விபத்துக்கான காரணம் இதுவரை சரியாக கண்டறியப்படவில்லை என்பதுடன், சேத விபரங்களும் சரியாக கண்டறியப்படவில்லை, இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://www.…

    • 35 replies
    • 1.8k views
  24. கூடுதலான மொழியறிவு எம்மை மேம்படுத்த உதவும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். சூரிய நிறுவகத்தின் ஏற்பாட்டில், இரண்டாம் மொழி சிங்கள கற்கைநெறியை பூர்த்தி செய்த யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அத்துடன், இன ஐக்கியத்துக்காகவும், தேசிய ஒருமைப்பாட்டுக்காகவும், சிங்கள மக்கள் தமிழ் மொழியையும், தமிழ் மக்கள் சிங்கள மொழியையும் கற்கும் வகையில் இலவசமாக வகுப்புக்களை நடத்திவரும் சூரிய நிறுவகத்தையும், அதன் நிறுவுனர் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவையும் ஆளுநர் பாராட்டியுள்ளார். இரண்டாம் மொழி இங்கு சிங்கள மொழியை இரண்டாம் மொழியாக கற்பது இந்த …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.