Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. தனிக்குழுக்களாய் செயற்பட்டு தமிழீழ தாயக விடுதலை வேள்வியில் தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களின் விபரம். தனிக்குழு மாவீரர் சிவகுமாரன் பொன்னுத்துரை சிவகுமாரன் சிவகுமாரன் வீதி, உரும்பிராய், யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.06.1974 தனிக்குழு மாவீரர் பெஞ்சமின் பெஞ்சமின் மட்டக்களப்பு வீரச்சாவு: 01.01.1981 தனிக்குழு மாவீரர் தங்கத்துரை நடராசா தங்கவேல் தொண்டமானாறு, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.07.1983 தனிக்குழு மாவீரர் குட்டிமணி செல்வராசா யோகச்சந்திரன் வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.07.1983 தனிக்குழு மாவீரர் ஜெகன் கணேசானந்தன் ஜெகநாதன் தொண்டமனாறு, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.07.1983 தனிக்குழு மாவீரர் செனட்டர் (நடேசதாசன்) வைத்தியலிங்கம் நடேசதாசன் வல்…

    • 10 replies
    • 1.8k views
  2. ... ஈழத்தமிழினம் வறலாற்றில் மறக்க முடியாத ரணங்களாகிப்போன மே18 முடிந்து, ஓரிரு வாரங்களில், வார இறுதி நாட்களில் நடைபெறும் மேற்கு லண்டனிலுள்ள ஓர் தமிழ்ப்பாடசாலையில், சில பெற்றோர்கள் தம் உறவுகளுக்கு ஏற்பட்ட அழிவுகளின் தாக்கங்களை எடை போட்டுக் கொண்டிருக்க, அப்பாடசாலையின் தலைவர் ... அமைதியான/படித்த மனிதன் ... உரையாடிக் கொண்டிருந்தவர்களை நோக்கி, இனி இங்கு அரசியல் பேசாதீர்கள்!? பட்டது போதும்!!?? அழிவுகள் போதும்!!!??? ... எல்லாவற்றையும் அழித்துப் போட்டான் அந்தப் பிரபாகரன்!!!!!!!!???????? .... ... அவரின் வாய்களிலிருந்து வார்த்தைகள் வரவில்லை மாறாக விரக்தி/கோபங்களின் உச்சத்தில் அனல் பறந்தது!!! ... கதைத்துக் கொண்டிருந்தவர்களும் நிறுத்தி விட்டனர்!! ... ஏனெனில், அங்கு நின்றிருந்த அன…

  3. ஈரோஸ் அமைப்பு விடுதலைப் புலிகள் அமைப்புடன் இணைa முன்னர் அந்த அமைப்பின் சார்பில் விடுதலைப் போரில் தம்மை ஆகுதியாக்கிக் கொண்ட மாவீரர்களின் விபரம். விபரங்கள் அனைத்தும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் பணிமனையினால் உருவாக்கப்பட்ட மாவீரர் விபரக்கோவை ஒன்றிலிருந்து பெறப்பட்டவை. கீழுள்ள இணைப்பை அழுத்தி விபரங்களைப் பார்வையிடலாம். http://veeravengaikal.com/maaveerar/index.php/eros

    • 17 replies
    • 2.9k views
  4. ஏன் இரணைமடுக்குளத்தின் நீர் ஓர் அரசியல் மேடைக்குரிய விடயமாக மாறியுள்ளது? இரணைமடுக்குளத்திலிருந்து யாழ்குடாநாட்டிற்கு குடிநீரினை வழங்குவதற்கான திட்டம் புதிய முயற்சியா அல்லது முன்னைய முயற்சியின் தொடர்ச்சியா? ஏன் இவ்விடயம் பலரின் அக்கறைக்குரிய விடயமாக மாறியுள்ளது? புதினப்பலகைக்காக ம.செல்வின் இரணைமடுக்குளத்திலிருந்து யாழ்குடாநாட்டின் சில பகுதிகளுக்குக் குடிநீரை வழங்கும் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் பலமட்டங்களில் நடைபெற்றதாகப் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. இத்தகைய கலந்துரையாடல்களில் சில மாவட்டத்தின் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரின் முன்முயற்சியில் மாவட்ட விவசாயிகள் மாகாண அமைச்சர்கள் அங்கத்தவர்கள் திணைக்களக் தலைவர்களை உள்ளடக்கியத…

  5. தூத்துக்குடி--வரலாறு ,, தூத்துக்குடி எனும் பெயர் இந்நகருக்கு வந்ததற்கான வரலாற்றுக் குறிப்புகள் சில உள்ளன.கி.மு.123ல் தாலமி என்ற கிரேக்க பயணி தனது பயண நூலில் "சோஷிக் குரி'(சிறு குடி)சோதிக்குரை என்ற முத்துக்குளித்துரை நகரம் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிடும் சோதிக்குரை நகரம்தான் தூத்துக்குடி என்று வரலாற்று அறிஞர்கள் இனம் கண்டுள்ளனர்.அகஸ்டஸ் சீசரின் பியூட்டிஸ்கர் அட்டவணை ரோமானியரின் வர்த்தகம் நடைபெற்ற இடம் என்று தூத்துக்குடியைக் குறிப்பிடுகின்றது. "சோல்சியம் இண்டோரம்' என்ற பெயரில் குறிப்பிடப்படுவது தூத்துக்குடியாகும்.கிபி.80ல் ஒரு அறிமுகமற்ற அடுக்கியந்திரியின், கிரேக்கர்கள் எரித்திரிரேயன் கடல் பெரிப்லஸ், என்ற நூலில் தூத்துக்குடி என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.மார்…

    • 25 replies
    • 32.1k views
  6. கிட்டத்தட்ட 11 மாதங்களுக்கு முதல் எதுவரை இணையத்தில் மின்னஞ்சல் மூலம் ஒரு ஊடகவியலாளர் கேள்விகளை அனுப்பி அதற்கான பதில்களையும் பெற்றுக் கொண்டார். அந்தக் கேள்விகளில் முஸ்லீம் மலையக தமிழர்கள் அரசியல் பற்றியும் கேள்விகள் கேட்டிருந்தார். ஆனால் முஸ்லீம்கள் பற்றிய கேள்விகளுக்கான எனது பதில்கள் தவிர்க்கப்பட்டே பிரசுரிக்கப்பட்டது. அப்போது குறித்த நண்பர் சொன்ன காரணம் :- முஸ்லீம்கள் பற்றிய எனது கருத்தானது என் மீதான எண்ணங்களில் சரிவுகளை ஏற்படுத்தலாம் எனச் சொல்லியிருந்தார்.ஆயினும் எனது கருத்தை நீங்கள் வெளியிடுங்கள் அவைபற்றி விவாதித்து தெளிவோம் என மடலிட்டிருந்தேன். எனினும் பின்னர் முஸ்லீம்கள் பற்றிய பதில்கள் வெளியிடப்படவில்லை. ஆனால் முஸ்லீம்கள் பற்றிய விடயத்தில் விவாதங்கள் பழிசுமத்த…

  7. அளவெட்டி அபிவிருத்தி மன்றம் காலத்திற்கேற்ப மறுசீரமைப்பு செய்யப்பட்டிருப்பதுடன் அதற்கான புதியதொரு நிர்வாகக்குழுவும் தெரிவு செய்யப்பட்டுள்ளது என அபிவிருத்தி மன்றத்தின் தலைவர் திரு.இ.இராஜகோபாலன் அவர்கள் எமது இணையத்திற்கு கருத்துத்தெரிவித்தார். அபிவிருத்தி மன்றத்தின் செயற்பாடுகளை நெறிப்படுத்துவதற்காக ஐந்துபேர் கொண்ட ஆட்சிக்குழு ஒன்று நிறுவப்பட்டிருப்பதுடன் மன்றத்தின் சர்வதேச இணைப்பாளராக திரு.மா.சந்திரகாந்தன் அவர்கள் தொடர்ந்தும் சேவையாற்றுவார் எனவும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று (03.11.2013இல்) நடைபெற்ற மன்றத்தின் பொதுக்கூட்டத்தில் இத்தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதுடன் புதிய நிர்வாக சபையும் தெரிவு செய்யப்பட்டது. அபிவிருத்தி மன்றத்தின் புதிய தலைவராக வடமாகாண சபைய…

    • 45 replies
    • 3.7k views
  8. நினைவில் மட்டும் ஒரு நிழல்க்கரும்புலி 1994 ம் ஆண்டின் முன்பகுதி காலம்... அண்று இருட்டி விட்டது நாங்கள் எங்களின் பணிகளுக்கு செல்ல ஆயத்தமாகிக்கொண்டு இருக்கிறோம். அப்போது ஒரு வாகனம் எமது முகாமில் வந்து நிக்கிறது. வழமையாக யாராவது தளபதிகள் அறிவுறுத்தல்களை வழங்க வருவது வளமை.. அப்படித்தான் எண்று நாங்களும் நிக்க.. நான் முன்னர் பார்த்து இருக்காத ஒரு தளபதியும் எங்களது தளபதியும் இறங்குகிறார்கள்... அவர்களுடன் இன்னும் ஒரு இளைஞன்.. ஆள் கொஞ்சம் மெலிதாக ஒரு ஐந்தர அடி உயரம் இருக்கும் துரு துரு எண்று அலைபாய்ந்து எல்லாவற்றையும் ஆர்வமாக பார்க்கும் கண்கள் விளக்கு வெளிச்சத்தில் பளிச்சிடுகிறது... தளபதி எங்களது அணியை அழைத்து இவர் கொஞ்சக்காலத்துக்கு உங்களுடந்தான் நிற்பார் கவனமாக கூ…

    • 5 replies
    • 1.7k views
  9. போர் உலா, விடுதலைப்புலிகளின் போர் இலக்கியம், விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்து நின்ற ஒரு போராளியின் நேர்த்தியான அனுபவப்பகிர்வு. போரியல் வரலாற்றின் ஒரு அங்கமான அந்தப் படைப்பின் கர்த்தா – கப்டன் மலரவன். 1992 கார்த்திகை 24ம் நாள், பலாலி – வளலாயில் 150 காவலரண்களை தாக்கியழித்து பாரிய வெற்றியைப் பெற்ற தாக்குதலில் அந்த விடுதலைப் படைப்பாளி வித்தானான். கப்டன் மலரவனை விடுதலைப்போராட்டம் இழந்து பத்தொன்பது வருடங்கள் கடந்துவிட்டதன் நினைவுநாள் இன்று. கப்டன் மலரவன் ஒரு பன்முக ஆற்றலுள்ள போராளி. விடுதலைப்போராட்டத்தில் அவரது ஆளுமையும் பங்களிப்பும் காத்திரத்தன்மையும் நீண்டகாலத்திற்கு நிலைத்திருக்கும் என எண்ணியிருந்த போதும் குறுக்கிட்ட வீரமரணம் அது நிறைவேறத் தடையாகிவிட்டது. காலம் குற…

  10. ஈழத் தமிழர்கள் புவியியல், சமூகவியல், அரசியல், பொருளாதாரக் காரணங்களினால் உந்தப்பட்டுத் தாம் தொன்று தொட்டு வழிவழியாக வாழ்ந்த பாரம்பரிய மண்ணை விட்டு; முற்றிலும் வேறுப்பட்டப் பிறிதொருப் பிரதேசத்தில் வாழத்தலைப்படுவதைப் புலப்பெயர்வு என்றுக் கூறலாம். ‘புலம்’ என்ற சொல்லுக்குத் தமிழ் லெக்ஸிக்கன் அகராதியில் ‘திக்கு’1 எனப் பொருள் விளக்கம் தரப்பட்டுள்ள அதேவேளையில், ‘பெயர்தல்’ என்பதற்கு ‘இருப்பிடம் விட்டுப் பெயர்தல்’2 எனப் பொருள் விளக்கம் தரப்பட்டுள்ளது. சிலப்பதிகாரத்தில் வரும் “கலந்தரு திருவின் புலம்பெயர்மாக்கள்”3 என்ற அடியும் இங்கு நோக்குதற்குரியது. புலியூர்க்கேசிகன் தனது உரையில்; “மரக்கலம் மூலம் வருகின்ற செல்வங்களுக்காகத் தம் நாடுவிட்டு நாடு செல்லும் கடலோடிகள் பற்ப்பல நாட்டினருமாக …

    • 0 replies
    • 1.7k views
  11. [size=4]இலங்கைத் தீவின் புராதன நகரங்களில் ஒன்றான அனுராதபுரத்தை சிங்கள இனத்தவர்கள் தங்களது வரலாற்று நகரமாகவும் தங்களுக்கு மட்டுமே உரித்தான பௌத்த புண்ணிய பூமியாகவும் சொந்தம் கொண்டாடி வருகின்றனர். இதற்கு ஆதரமாக அங்குள்ள பௌத்த விகாரைகள் புனித வெள்ளரசு மரம் மற்றும் புராதன கட்டிடங்களை காட்டுகின்றனர். கிறீஸ்த்துவுக்கு முன்னர் 6ம் நூற்றாண்டில் கௌதம புத்தர் பிறப்பதற்கு முன்னர் உருவாகிய அனுராதபுர நகரத்தின் வரலாற்றை 1200 ஆண்டுகளுக்கு பின்னர் கிபி 6ம் நூற்றாண்டின் வாழ்ந்த(சிலர் அவர் கிபி4ம் நூற்றாண்டில் வாழந்ததாகவும் கூறுவர்)மகாநாபர் என்ற தேரவாத பிக்கு எழுதிய மாகாவம்சம் என்ற சார்புநிலை நூலை வைத்துக்கொண்டு அது தங்களுக்கு மட்டுமே உரித்தான வரலாற்றுத் தலைநகரம் என்று சிங்களம் பெருமை ப…

    • 3 replies
    • 2.7k views
  12. முழுப்பெயர் குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியன். பெரிய மெய்யனார், கயலா வன்னியன் என்று இரண்டு சகோதரர்கள் அவனுக்கு இருந்தனர். யாழ்ப்பாண வைபவ மாலைப் பதிவுகளின்படி சோழப் பேரரசின் காலத்தில் இலங்கையை ஆட்சிபுரிய அனுப்பப்பட்ட வட தமிழகத்து வன்னியகுல தளபதியர்களின் வழி வந்தவன். வன்னியர் என்பதற்கு வலிமையுடையோர் எனப் பொருள் கொள்ளலாம். 1621-ம் ஆண்டு போர்த்துக்கீசியர்கள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போதும்கூட வன்னிப் பகுதிக்குள் கால்பதிக்க முடியவில்லை. கடைசிவரை வன்னிக்குள் காலூன்ற முடியாமலேயே இலங்கையில் போர்த்துக்கீசிய அதிகாரம் முடிவுக்கு வந்தது. உண்மையில் வன்னி வணங்கா மண்தான், வன்னியர்கள் வீர மறவர்கள்தான். வன்னிக்குள் முதலில் வெற்றிகரமாக நுழைந்தவர்கள் டச்சுக்காரர்கள் என நா…

    • 1 reply
    • 3.1k views
  13. மிக அழகாக புலம் பெயர் குப்பிழான் மக்களால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அவர்களோ அவர்களது பிள்ளைகளோ வந்து படிப்பதற்காக அல்ல உங்கள் பிள்ளைகள் படிப்பதற்காகவே. ஆரம்ப கல்வியையாதல் உங்கள் பிள்ளைகள் இங்கு படிப்பதற்கு அனுமதியுங்கள். கலியாணம் தொடக்கம் எல்லாம் வெளியூர் என்றால் இந்த ஊர் எதற்கு. இப்படிக்கு பாடசாலை ஒரு காலத்தில் எவ்வளவு பேர் வந்து தங்கி வெளிநாடு எல்லாம் சென்றீர்கள். ஊத்தைப் பாயென்றோ அல்லது வருடக்கணக்கில் தோய்க்காத தலைகணியென்றோ பார்க்கவில்லை, உயிர் தப்பினால் போதும் என்று இது தான் சொர்க்கம் என்று படுத்து எழும்பினீர்கள். நானும் கோடீஸ்வரன் ஆனேன். சண்டையும் நின்று விட்டது. இன்று ஒரு தரும் இங்கு வாறங்கள் இல்லை. புலம் பெயர் தமிழர்கள் அண்ணன் மீண்டும் வருவான் என்கிறர்…

    • 6 replies
    • 4.2k views
  14. தமிழ்க்கிழவன் புறுபுறுப்பு-3 --------------------------- பூசாரி கோயிலுக்குள்ள ஏதோ செய்தால் குற்றமில்லையாம்! நாங்கள் செய்தால் குற்றமாம்! வினா வாக்கு பிச்சை எடுக்க "பிரபாகரன் மாவீரன்..." "மாவீரர் துயிலும் இல்லங்கள் மீள புனரமைக்கப்படும்" எண்டு சொல்லுவாராம்! அப்ப எல்லாம் சிறிலங்கா புல(நா)ய்யு பேசாமல் இருக்குமாம். கிளிநொச்சி கரைச்சி பிரதேசசபை சொன்னால் கைது செய்து மிரட்டுவாங்களாம்! பக்கா பிளான் விக்கி ! நல்லா வருவாய் நீ! பொதுநலவாய நாடுகள் மாகாநாடு நடக்க உனக்கு போடும் எலும்பு துண்டுகளை நீயும் சனாவும் சுனாவும் வேணுமெண்டால் தின்னுங்கோ! 13 அமைச்சு பதவி அவசர அவசரமா விக்கியிட்ட குடுக்கினமாம்! போங்கடா நீங்களும் உங்கட அமைச்சும்! விக்கியின்ர மச்சானுக்கும்,சானாவின்ர அத்தானுக்கு…

  15. தமிழ்க்கிழவன் புறுபுறுப்பு-2 --------------------------- தமிழனனை தமிழனால் மட்டும் தான் ஏமாற்றவும் முதுகில் குத்தவும் ஏலும் பாருங்கோ! 2 நண்டுகளை ஒரு போத்தலுக்குள்ள போட்டால் ,அதில ஒண்டு மேல ஏற இன்னொண்டு அதுகின்ர கால இழுத்து கீழவிழுத்துமாம்! பிறகு மற்றது ஏற இது கீழ இழுத்து விழுத்துமாம்! கடைசியில ஒண்டும் தப்பாமல் செத்துபோகுமாம். இதுகள் தான் " தமிழ் நண்டுகள்"...!! இப்பிடித்தான் எங்கட இனம் அழிஞ்சு போகுது! பொதுநலவாய நாடுகள் மாகாநாடு சிறிலங்காவில் நடக்கவே கூடாது! இதுக்கு இரண்டாம் பேச்சுக்கே இடமில்லை.ஆனால் சர்வதேச சமூகம் என்ற ஒரு கோதாரி விழுந்த சமூகம் மீண்டும் தமிழர்களை கிள்ளு கீரையாக நினைக்குது! ஏனெண்டால் ஈழத்தமிழன் யாருமில்லாத அநாதைகள்! கேள்வி கேட்க யாருமில…

    • 1 reply
    • 1.4k views
  16. டில்லிராணியும் அலறும் அப்பாவிப் பெண்களும் .... வன்னியில் அரங்கேறும் அவலங்கள் - 1 – 18 அக்டோபர் 2013 குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக சுதர்ஸினி பெனான்டோ விடை தெரியாத பல கேள்விகளுடன் உங்களிடம் விடை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து உங்களை நான் சந்திக்க இருக்கிறேன்;..... தேர்தலில் மிகப்பலமான வெற்றியை பெற்று விட்டோம் என்ற வீரப்பிரதாபங்கள்; இன்னும் ஓயவில்லை. அவலங்களை சுமந்து அனாதரவாய் வாழும் எம்மக்கள் துரும்பாய் தந்த வாக்குகள் இன்று அரசியல் கழுத்தறுப்புகளுக்கும், பந்தாக்களுக்கும், கதிரைகளைப் பற்றிப் பிடிப்பதற்கும் பயன்பட்டுக்கொண்டு இருக்கின்றன. இத்தகைய அபத்தமான சூழலில் என் மனதில் எம் சமூகம் தொடர்பாக எழுகின்ற கவலையுடன் கூடிய விடை தெரியாத பல பிரச்சினைகள் கண்களி…

  17. விடுதலைப்புலிகள் செய்த நல்லவை + கெட்டவை பற்றி, ஆங்கிலம் பேசக்கூடிய ஒரு ஃபிரெஞ்சுக்கார நண்பனிடம் சில மாதங்களுக்கு முன்னர் விவாதித்துக்கொண்டிருந்தேன்! அரசியல் பேசக்கூடிய அளவுக்கு அப்போது ஃபிரெஞ்சு தெரிந்திருக்கவில்லை! “ பிரபாகரன் செய்த தவறுகள்” பற்றி அவர் என்னிடம் கேள்வி எழுப்பினார்! அந்த உரையாடலில் இடையிலே, நான் பின்வருமாறு அவருக்கு சொன்னேன்! “ நாங்கள் பிரபாகரனை மறந்துவிட்டு, அமைதியாக வாழ தயாராக இருக்கிறோம்! ஆனால் உங்கள் நாடு, எங்களுக்குப் பிரபாகரனை மறுபடியும் மறுபடியும் நினைவூட்டுகிறது” என்று! இவர்கள் அந்நியர்கள் இல்லை! எம்மவர்கள்! இவர்கள் மீது தூசு பட்டாலும் துடிப்போம்! இதனைக்கேட்ட நண்பருக்கு அதிர்ச்சி! “ என்னது ஃபிரான்ஸ் நாடு, பிரபாகரனை…

  18. தமிழ்க்கிழவன் புறுபுறுப்பு- 1 --------------------------- என்ர மண்டலாய்ப்பிள்ளையாரே!!! இவங்களின்ர கோமாளிக்கூத்துகளை பாக்க வயித்தப்பத்தி எரியுது. கொஞ்ச நாளுக்கு முன்னம் சத்தியப்பிரமாணம் செய்யுறதெண்டா எல்லாரும் ஒற்றுமையா 1.எங்கட மக்களுக்கு முன்னால் 2.முள்ளிவாய்க்கால் மண்ணில் 3.தந்தை செல்வாவின் நினைவு சமாதியின் முன் செய்யுங்கோ எண்டு புலம்பியிருந்தம்! இந்த கோதாரி விழுந்த மர மண்டைகளுக்கு ஒண்டும் விளங்கயில்லை! இந்த சின்ன விசயம் கூட விளங்கயில்லை எண்டா உவங்கள் மாகாண சபையில என்னத்தை புடுங்கபோறாங்கள்?? ஒருத்தன் மகிந்தவுக்கு முன்னாலையும் இன்னும் கொஞ்சம் தந்தை செல்வாவின் நினைவு சமாதி முன்னாலையும் இப்ப இன்னும் கொஞ்சம் முள்ளிவாய்க்கால் மண்ணிலும் சத்தியப்பிரமாணம் …

  19. Started by jdlivi,

    கடலுக்குள் மூழ்கிய தமிழனின் குமரிக்கண்டம் : மறைக்கப்பட்ட வரலாறு இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருடத்திற்கும் பழமைவாய்ந்த உலகின் முதல் இனம் நம் தமிழினம் என்று பெருமையுடன் கூறுவோம். நம் வரலாற்றைத் தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துச் செல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள். இங்குதான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்குதான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்குதான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தாய்த் தமிழ் பிறந்தது. இங்குதான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன. ஆம…

  20. மகிந்தவின் ஐ.நா பேச்சு (2013)

    • 0 replies
    • 1.2k views
  21. 1941 ஆண்டு யூன் 22ம் திகதி ஜேர்மனியின் நாசி இராணுவம் ரஷ்யாவிற்குள் ஊடுருவியது. இராணும், SS எனப்படும் சிறப்புப் பாதுகாப்பு மற்றும் உளவுப்படையினர், காவற்துறையினர் என அனைத்து ரக ஜேர்மனியின் நாசிப்படைகளும் கிழக்கு நோக்கி பாரிய படுகொலைகளைச் செய்தபடி முன்னேறிக் கொண்டிருந்தது. இது 1941 ஓகஸ்ட் மாதத்தில் பிரித்தானியாவின் போர்க்காலப் பிரதமரான வின்ஸ்டன் சேர்ச்சிலை ‘நாம் ஒரு பெயரிடப்படாத குற்றம் (Crime without a name) நடக்கும் காலத்திற்குள் நிற்கின்றோம்’ எனக் கூறவைத்தது. இதுவே 1941 இல் அமெரிக்கா தனது நேசநாடுகளுடன் இணைந்து ஜேர்மனியின் நாசிப் படைகளுக்கு எதிராக இரண்டாம் உலக யுத்தத்தை ஆரம்பித்தது. இதே காலப்பகுதியில் போலந்தில் இருந்து 1941ம் ஆண்டு அமெரிக்காவில் அகதியாகத் தஞ்சம் பு…

  22. எறியப்பட்ட எல்லாக் கற்களும் பூமியை நோக்கியே வருகின்றன. அவ்வாறே, விடப்படும் எல்லா அரசியற் தவறுகளும் மக்களின் மேலேயே வீழ்கின்றன…’ என்று ஒரு கவியுரைப்புண்டு. ஈழத்தமிழர்களுடைய அரசியற் போராட்டத்தின் அத்தனை தவறுகளும் சிந்தனைக் குறைபாடுகளும் இன்று மக்களின் மீதே சுமையாக இறங்கியிருக்கின்றன. இந்தத் தவறுகள் மக்களை மிகக் கொடுமையான வரலாற்றுத் துயரத்திற் தள்ளியிருக்கின்றன. ஒவ்வொரு காலகட்டத்தின் ஒவ்வொரு தவறுகளுக்கும் தொடரும் சிந்தனைக் குறைபாடுகளுக்கும் மக்களே விலை கொடுத்திருக்கிறார்கள், மக்களே பலியாடுகளாகியிருக்கின்றனர். இந்தத் தவறுகளை இழைத்ததில் கடந்த காலத்தில் இருந்த எந்தத் தமிழ்த் தலைமையும் விதிவிலக்கல்ல. வேண்டுமானால் விகித வேறுபாடுகள் இவற்றுக்கிடையில் இருக்கலாம். ஆனா…

  23. 1987 அக்டோபர் 5ம் திகதி.அந்த நாளையும் அதன் கொடும் துரோகத்தையும்எமது மனங்களில் ஆழப்படிந்துவிட்ட துயரத்தையும் மறந்து கடந்து செல்லவோ தவிர்த்துவிட்டு சிந்திக்கவோ எங்களால் முடியாமலிருக்கின்றது. அதற்குப் பின்னரும் எத்தனையோ பச்சைத்துரோகங்களை அப்பட்டமான நயவஞ்சகங்களை இந்தத் தேசியஇனம் கண்டிருந்தாலும் அந்த அக்டோபர் 5ம் திகதி 1987ம் ஆண்டின் சதிப்பின்னலும் அதன் விளைவாக லெப்.கேணல் குமரப்பா லெப் கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரண்டு வீடுதலைப்புலிகள் சயனைட் அருந்தி வீரமரணத்தை தழுவிக்கொண்டதும் ஒரு பெரிய வடுவாகவே எமதுசிந்தனைகளில் படிந்துவிட்டது. விடுதலைப்புலிகள் அமைப்பும் அதன் ஒப்பற்ற தலைவரும் தமிழீழ தேசத்தின் விடுதலையை மட்டுமே ஆழமாக நேசிப்பவர்களாகவும் அந்த இலட்சியத்தை வென்றெடுப்பதற்க…

  24. இருபது நாட்கள் இலங்கையில் களித்து கனடா மீண்டதும் இந்தப் பதிவு. முதலில் ஒரு Flashback -- சில வருடங்களிற்கு முன்னர்... ஈழத்தை விட்டு விலகி 23 வருடங்கள் நகர்ந்து விட்டன. இந்தப் பயணத்திற்கு முன்னர் சமாதான காலத்தில் இருவாரம் ஊரிற்குச் சென்றிருந்தேன். விமான நிலையத்தில் இருந்து வெளிவந்து அவர்கள் அனுப்பிய வாகனத்தில் ஏறியது முதல் மீண்டும் விமான நிலையத்திற்கு அவர்கள் அனுப்பிவைத்த வாகனத்தில் வந்திறங்கும் வரை, அவர்களுடன் மட்டுமே அப்பயணத்தில் நின்றிருந்தேன். எனது சொந்த ஊரிற்குக் கூடச் செல்லவில்லை, முழவதும் அவர்களுடனேயே களிந்தது. புளியந்தோப்பை அடுத்த 'தமிமீழம் வரவேற்கிறது' தொடங்கி முகமாலை முன்னரண் வரையான பிரதேசத்திற்குள் எங்கெல்லாமோ அவர்களுடன் திரிந்தேன். அவர்களின் ஏகப்பட்ட பாத்திர…

    • 88 replies
    • 13.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.