Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. இலங்கையின் பொருளாதார சவால்களை 2023ல் வெற்றிக் கொள்ள முடியுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES 7 மணி நேரங்களுக்கு முன்னர் சர்வதேச நாணய நிதியத்தின் கடன், சீனாவுடனான கடன் மறுசீரமைப்பு, வரி வருமானத்தை அதிகரித்தல், வாழ்க்கை செலவை கட்டுப்படுத்தல், வர்த்தக நடவடிக்கைகள் முடங்குவதை தவிர்த்தல், மின்சார பிரச்னை, மனித உரிமையை பாதுகாத்தல், தேர்தல் நடத்துதல், எதிர்ப்புக்களை கட்டுப்படுத்தல் உள்ளிட்ட புவிசார் அரசியல் ஆகிய பிரச்னைகளை இலங்கை அரசாங்கம் எதிர்நோக்கியுள்ளது. கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள இலங்கை, தீர்க்கப்படாத பல்வேறு பிரச்னைகளுடன் 2023ம் ஆண்டிற்குள் பிரவேசித்துள்ளது. இந்த பிரச்னைக…

  2. மருதங்கேணியில் நடந்ததும் அதன் விளைவும் -நிலாந்தன் written by adminJune 11, 2023 புலனாய்வுத்துறை தமிழ்மக்களின் அரசியல்நடவடிக்கைகளைக் கண்காணிப்பது என்பது கடந்த பல தசாப்தகால யதார்த்தம். குறிப்பாக கடந்த 14 ஆண்டுகளாக தமிழ்க்கட்சிகள் மற்றும் செயற்பாட்டாளர்களின் எல்லா நடவடிக்கைகளையும் புலனாய்வுத்துறை கண்காணித்து வருகின்றது. அதை அவர்கள் நேரடியாகவும் செய்கிறார்கள்; மறைமுகமாகவும் செய்கின்றார்கள். அச்சுறுத்தலாகவும் செய்கின்றார்கள்; நாகரீகமாகவும்செய்கின்றார்கள். எதுவாயினும் , தமிழ்மக்களைக் கண்காணிக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் நிகழ்ச்சிநிரலில் மாற்றம் இல்லை. ஆயுதமோதல்கள் முடிவுக்கு வந்தபின்னரும் நிலைமை அப்படித்தான் இருக்கிறது. தமிழ்மக்களை தொடர்ச்சியாகக் கண்காணிப்புக்குள…

  3. தமிழ்த்தேசியச் சபைக் கனவு நனவாகுமா? இலங்கேஸ்வரன் கடந்த 11ம் திகதி தமிழ் சிவில் சமூகத்தின் ஏற்பாட்டில் தமிழ்க் கட்சிகளுக்கிடையே கலந்துரையாடல் ஒன்று மன்னாரில் இடம்பெற்றது. மன்னார் ஆயர் இராயப்பு ஜோசேப் இதற்கு தலைமை வகித்தார். கலந்துரையாடல் இரண்டு அமர்வுகளாக இடம்பெற்றது. முதலாவது அமர்வு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் பதிவுசெய்வது தொடர்பான விடயத்தையும், வடமாகாணசபைத் தேர்தலில் ஒருமித்துப் போட்டியிடுவது என்பதையும் பற்றியது. இரண்டாவது அமர்வு கட்சிகளுக்கிடையே ஓர் இணக்கப்பாட்டை உருவாக்கி பொதுவேலைத் திட்டம், பொது அமைப்பு என்பவற்றை உருவாக்கும் நோக்கத்தையும் கொண்டிருந்தது. ஆனாலும் முதலாவது அமர்வில் முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை என்றே தகவல்கள் வருகின்றன. சம்பந்தன் ஜனவரி மாத…

  4. முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு அரசியலும், இடிப்பு அரசியலும் ஷண்முகசுந்தரம் ஒருமுறை ஐயா நல்லக்கண்ணுவுடன் முள்ளி வாய்க்கால் நினைவுமுற்றம் செதுக்க ஆரம்பிக்கப் பட்ட ஆரம்ப நாட்களில் அதனைப் பார்வையிடச் சென்றிருந்தேன். தமிழ்ப்பாவை சிலைக்கு நீளமான ஒற்றைக்கல் வந்தநேரம் அது. மற்ற சிற்பங்களுக்கும் கூட பொருத்தமான கற்கள் வந்து கொண்டிருந்தன. அக்கற்களைத்தேடி நீண்ட தொலைவு சென்று வந்தது பற்றியும், கற்களின் தன்மையைப் பற்றியும், அது எப்படி கொண்டுவரப்பட்டது என்பது பற்றியும் அங்கு பணிபுரிந்து வந்த தோழர்கள் சொல்லக்கேட்டு பிரமித்து நின்றோம். அவ்விடத்தில் ஏராளமான தேர்ந்த சிற்பிகள் வேலை செய்து கொண்டிருந்தார்கள். உளிச்சத்தம் தொடர்ச்சியாகக் கேட்டுக் கொண்டே இருந்தன. மகேந்திரவர்மப் பல…

    • 1 reply
    • 3.4k views
  5. கடலுணவுகளைக் கொள்வனவு செய்ய நிதி ஒதுக்கீடு உள்ளூர் கடற்றொழிலாளர்களால் பிடிக்கப்படும் கடலுணவுகளை, கடற்றொழில் கூட்டுத்தாபனத்தினூடாகக் கொள்வனவு செய்வதற்கான அனுமதியை, அமைச்சரவை வழங்கியுள்ளதாக கடற்றொழில், நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஊரடங்குச் சட்டத்தால் கடற்றொழிலாளர்கள் தாம் பிடிக்கும் கடலுணவுகளை சந்தைப்படுத்துவதில் பல்வேறு இடர்களுக்கு முகங்கொடுத்து வருவதைக் கருத்திற்கொண்டு, இது குறித்த அமைச்சரவைப் பத்திரத்தை, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவையில், இன்று(25) தாக்கல் செய்தார். க…

  6. ரிஷாட்டும் அரசாங்கமும் -எம்.எஸ்.எம். ஐயூப் முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஸ் பதியுதீன், கடந்த வருடம் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தியவர்களுடன் தொடர்பு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, கடந்த வாரம் விடுதலை செய்யப்பட்டார். அது, தென்னிலங்கை அரசியலில், பெரும் குழப்ப நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதமே, ரியாஸ் பதியுதீன் கைது செய்யப்பட்டார். “குண்டுத் தாக்குதல் நடத்தியவர்களுடன், அவர் நடத்திய தொலைபேசி உரையாடல்களைப் பற்றிய உறுதி செய்யப்பட்ட தகவல்கள் பொலிஸாரிடம் இருக்கின்றன” என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர…

  7. இலங்கை நெருக்கடி: கோட்டாபய சிங்கப்பூருக்கு சென்றது ஏன்? அவரை நீக்க சபாநாயகரால் முடியுமா? 14 ஜூலை 2022, 10:06 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AFP VIA GETTY IMAGES படக்குறிப்பு, கோட்டாபய ராஜபக்ஷ,அவரது மனைவி, இரண்டு பாதுகாவலர்களுடன் மாலே சர்வதேச விமான நிலையத்தில இருந்து சிங்கப்பூர் நோக்கிச் செல்லும் விமானம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கையை விட்டு மாலத்தீவுக்கும் பிறகு சிங்கப்பூருக்கும் சென்றுள்ள நிலையில், இதுவரை அவர் தமது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு அனுப்பவில்லை. முன்னதாக, இந்த மாதம் 13ஆம் தேதி பதவி விலகுவதாக ஜனாதிபதி கோட்டாப…

  8. மனிதன் ஒரு சமூகப்பிராணி. தேசியம் சமூகம் வாழ்வில் ஒரு பிரதான கட்டமைப்பும் ஒரு பிரதான வாழ்நிலை வடிவமுமாகும். வாழ்நிலை முன்னேற்றத்திற்கு தேசிய அரசியல், தேசிய கலாச்சாரம் தேசிய சிந்தனை என்பன பிரதான அம்சங்களாகும். மனிதனின் குழுநிலைக் கலாச்சார குறுவட்ட மனப்பாங்கிற்குப் பதிலாக பரந்த தேசிய கலாச்சாரத்தையும் தேசிய மனப்பாங்கையும் கட்டி எழுப்புவது தேசியவாதத்தின் தலையாக பொறுப்புக்களுள் ஒன்றாகும். தமிழீழத் தேசியமானது ஒரே வேளையில் முப்பரிமானங்களைக் கருத்தில் எடுக்கவேண்டியதாய் உள்ளது. ஒன்று அகரீதியான அர்த்தத்தில் தமிழீழ மக்களுக்கு உள்ளேயான தேசிய வளர்ச்சி என்பது; இரண்டாவதாக தமிழீழ மக்கள் நேரடியாகப் பொருதும் சிங்கள மேலாதிக்கத்திற்கு எதிரானதும், சுயாதிபத்தியத்திற்குமான நிலை என்பது; ம…

  9. சர்வதேச அரசியலில் பூகோள அரசியல் சார்ந்து அதிகாரம் மிக்க நாடுகள் இராஜதந்திர ரீதியாக தமது சுய நலன் சார்ந்தோ அல்லது அவர்கள் மூலோபாயம் சார்ந்தோ சர்வதேச அரசியலில் பொய் சொல்லி வருவதை பார்க்கிறோம். Selfish lies and strategic lies அரசுகள் கூறும் இப்படியான பொய்கள் அவர்களுக்கு நன்மையாகவும் முடிகின்றன அதே வேளையில் தோல்வியாகவும் முடிகின்றன. அரசுகளுக்கு இடையிலான யுத்தங்களுக்கும் குறிப்பாக சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பனிப் போர் காலத்தில் அமெரிக்காவால் சொல்லப்பட்ட அனைத்து பொய்களும் இறுதியில் அவர்களுக்கு வெற்றியை கொடுத்தது. ஆனால் எல்லா நேரத்திலும் அது வெற்றி அளிக்காததற்கான பல காரணங்களும் உண்டு. அதிகாரம் கொண்ட இந்த அரசுகளின் பொய்கள் குறித்து அரசியல் வெளியுறவு ஆய்வாளர்…

  10. தமிழ் மக்கள் தங்களைத் திரட்டாமல் உலக சமூகத்தைத் திரட்ட முடியாது -நிலாந்தன் பொது வேட்பாளர் என்ற கருத்துருவத்தை முதலில் முன்வைத்த மு.திருநாவுக்கரசு தமிழகத்தில் தங்கியிருப்பதனால், அவர் இந்தியாவின் ஆள் என்ற சந்தேகம். அதனால், பொது வேட்பாளரை இந்தியாவின் ப்ரொஜக்ட் என்று சந்தேகித்தார்கள். அவருக்கு நெருக்கமாக இருந்தவர்கள் பொது வேட்பாளர் என்ற கருத்துருவத்தை தொடர்ந்து வளர்த்துச் சென்றபடியால் அதுவும் இந்தியாவின் வேலையாக இருக்கலாம் என்ற சந்தேகம். இம்முறை தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே சுரேஷ் பிரேமச்சந்திரன் அந்த விடயத்தை கையில் எடுத்தார். அதனால் அது இந்தியாவினுடைய வேலையாகத்தான் இருக்கலாம் என்ற சந்தேகத்தை முன்வைத்தவர்கள் மேலும் உஷாரானார்கள். அதன்பின் யாழ்ப்பாணத்த…

  11. கூட்டமைப்பு என்ன செய்யப்போகிறது? செல்வரட்னம் சிறிதரன்:- 01 மார்ச் 2014 இரணைமடு குளத்து நீர் தொடர்பாகவும், ஜனாதிபதி ஆணக்குழு தொடர்பாகவும் இரண்டு முக்கிய தீர்மானங்களைத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு யாழ்ப்பாணத்தில் கூடி நிறைவேற்றியிருக்கின்றது. இரண்டுமே மிகவும் முக்கியமான தீர்மானங்கள். கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தலைமையில் இரண்டு தீர்மானங்களும் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றன. இந்த கூட்டத்தில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண முதலமைச்சர், மாகாண அமைச்சர்கள், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு இரணைமடு குளத்து நீர் தொடர்பாக விரிவாக விவாதித்திருக்கின்றார்கள். மூன்றரை மணித்தியாலங்களுக்கு மேலாக வாதிட்டதன் பின்னர், ஏகம…

  12. சிறிலங்கா மீதான ஐ.நா விசாரணையானது வலுமிக்கதாக இருக்காது. ஐ.நா தனது விசாரணையின் இறுதியில் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றிடம் தீர்வெட்டுமாறு கோரும் போது இந்த விசாரணையை ரஸ்யா மற்றும் சீனா மறுக்கும் என்பது நிச்சயமானதாகும். இவ்வாறு THE HUFFINGTON POST UK என்னும் இணையத்தில் பிபிசி முன்னாள் செய்தியாளர் Frances Harrison* எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. 2009ல் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட சிறிலங்காவின் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற பல்வேறு யுத்த மீறல்கள் தொடர்பாக சுயாதீன அனைத்துலக விசாரணை ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என சிறிலங்காவைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்…

  13. -பீஷ்மர்- * யுத்தக் கண்காணிப்புக்குழு பற்றிய பேச்சு; சமாதானம் பற்றிய கண்காணிப்பாக மாறிய கதை சென்ற வியாழன் அன்று நோர்வேயில் தமிழ்ச்செல்வன் எடுத்த நிலைப்பாடு சர்வதேச மட்டத்தில் இலங்கை பற்றி சிரத்தை காட்டுபவர்களிடையே மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில் அத்தீர்மானத்தின் எதிர்பாராத்தன்மை நோர்வேயின் எதிர்பார்ப்புகள் பலவற்றை சிதறடித்துவிட்டது என்பது நன்கு புலனாகின்றது. இக்குறிப்பு எழுதப்படும் வரை ஐரோப்பிய நாடுகள் எதுவுமோ அல்லது ஜப்பானோ அந்த சம்பவம் பற்றிப் பேசாமல் இருப்பது தமிழ்ச்செல்வனின் நிலைப்பாடு வழியாக வந்த தீர்மானத்தின் அரசியல் உள் அர்த்தங்கள் சற்றும் எதிர்பாராத திசைகளுக்கு இலங்கை இனக்குழுமப் பிரச்சினையை இட்டுச் செல்லலாம் என்ற அச்சத்தை முதல் நிலைப்…

  14. [ செவ்வாய்க்கிழமை, 23 ஓகஸ்ட் 2011, 07:43 GMT ] [ நித்தியபாரதி ] சிறிலங்கா அரசாங்கமானது தன் மீது சுமத்தப்பட்டுள்ள யுத்தக் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை ஏற்றுக்கொள்ளாதவிடத்து அனைத்துலக விசாரணைக்கான ஆதரவு என்பது மேலும் அதிகரித்துக் கொண்டே செல்லும் என அவதானிப்பாளர்கள் கருதுகிறார்கள். இவ்வாறு IPS இணையத்தளத்தில் Amantha Perera எழுதியுள்ள செய்தி ஆய்வில் தெரிவித்துள்ளார். அதனை 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. 2009 இல் சிறிலங்கா இராணுவத்தால் தமிழ்ப் பிரிவினைவாதிகள் தோற்கடிக்கப்பட்ட போது இடம்பெற்ற பல்வேறு யுத்தக் குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணை ஒன்றிற்கு சிறிலங்கா அரசாங்கம் முகங்கொடுக்க வேண்டும் என…

  15. வடகிழக்கு மாகாணங்களில் தமிழரும் முஸ்லிம்களும் விறகு பொறுக்கினாலே கைது செய்ய ஓடி வரும் வனத்துறையும் பொலிசாரும் எங்கே போனார்கள்?, எம்முன்னோர் பாதுகாத்து எமக்கு அளித்த தேசிய வனபொக்கிசங்கள் பல ஏற்கனவே அழிந்துவிட்டது. அழிப்பவர்கள் ஆயுதப் படைகளோடு தொடர்புள்ள சிங்கள உல்லாசப் பயணிகள் என்பதால் காவல்துறை கண்டுகொள்வதில்லை. . நெடுந்தீவில் மட்டுமே அருமருந்தும் அழியும் ஆபத்தை நோக்கியுள்ள தாவரமுமான செங்கற்றாளைகள் நிறைய இருந்தது. ஆனால் சிங்கள பயணிகள் -அவர்களுட் பலர் சிங்கள படையினரதோ கடல் படையினரதோ பொலிசாரதோ உறவுகள்- வேரோடு பறித்து சென்றுவிட்டதால் இன்று நெடுந்தீவில் செங்கற்றாளை இனமே அழிந்துவிட்டது. அவற்றைவிட இயங்கு கீழாநெல்லி போன்ற பல அரிய மூலிகைகள் வேரோடு பறித்துச் செல்லபட்டு …

  16. ஐயரின் ஈழப்போராட்டத்தில்எனதுபதிவுகள் – ஆய்விற்கான அவசியம் – பகுதி ஒன்று! தத்துவம்… கோட்பாடு… திட்டமிடுதல்… செயற்பாடு…… ஈழப் விடுதலைப் போராட்டம் தொடர்பான அனுபவங்களின் பதிவுகளாக, நினைவுக் குறிப்புகளாக, புனைவுகளாக, சுயசரிதைகளாக, ஆய்வுகளாக சில நூல்களே வெளிவந்திருக்கின்றன. இவ்வாறு வெளிவந்தவற்றில் பலவற்றை சசீவன் தனது வலைப்பதிவில் குறிப்பிட்டிருக்கின்றார். அவையாவன, அருளரின் லங்காராணி, கோவிந்தனின் புதியதோர்உலகம், சி. புஸ்பராஜாவின் ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம், செழியனின் ஒரு மனிதனின் நாட்குறிப்பிலிருந்து, அடேல் பாலசிங்கம் சுதந்திர வேட்கை, நேசனின் புளொட்டில் இருந்து தீப்பொறி வரையான எனது பதிவுகள், சீலனின் புளொட்டில்நான், அன்னபூரணாவின் தேசிய விடுதலைப்போராட்டம் மீளாய்வை நோ…

    • 1 reply
    • 946 views
  17. Published By: RAJEEBAN 18 JUN, 2025 | 12:23 PM By Jeevan Ravindran இலங்கையின் வடபகுதியின் தலைநகரமான யாழ்ப்பாணத்தில் மிகவும் மும்முரமான வீதியிலிருந்து 100 மீற்றர் தொலைவில் இரண்டு பொலிஸார் சுடலையின் இரண்டு துருப்பிடித்துப்போன நிறத்தில் உள்ள கேட்களின் பின்னால் நின்று அவதானித்தவண்ணமுள்ளனர். இலங்கையில் மிகச்சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிக்கு பாதுகாப்பளிக்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். இந்த புதைகுழியிலிருந்து இதுவரை 3 குழந்தைகள் உட்பட 19 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பாரிய மனித புதைகுழிகள் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை இலங்கை தமிழர்களின் காயங்களை மீள கிளறியுள்ளது.இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழர்களிற்கு தனிநாடு கோரிய பிரிவினைவாத தமிழீழ விடுதலை…

  18. சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சகோதரி ரிசானாவுக்கு முதலில் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இலங்கையிலிருந்து பணிப்பெண்ணாகச் சென்ற ஒரு ஏழைப் பெண்பிள்ளைக்கு மரண தண்டனை விதித்து அதனை நிறைவேற்றிய கொடுஞ்செயல் கேட்டு உலகம் முழுவதும் நெக் குருகிப் போயுள்ளது. ரிசானாவின் மரணதண்டனையை நிறை வேற்ற வேண்டாம் என சவூதி அரசிடம் பலரும் கருணை மனுக்களை அனுப்பியிருந்த நேரத்தில், ரிசானா மூதுரில் உள்ள தனது வீட்டுக்கு விரைவில் திரும்புவார் என்று நம்பியிருந்த வேளையில், கழுத்துவெட்டி அவருக்கான மரண தண் டனை நிறைவேற்றப்பட்ட செய்தி கேட்டு கண்ணீர் வடிக்காத உள்ளங்கள் இருக்க முடியாது. என்ன செய்வது! ரிசானா ஒரு ஏழை பிள்ளை. தன் வறுமையை போக்குவதற்காக தன் குறைந்த வயதிலும் வீட்டுப் பணிப்பெண்…

  19. போராட்டத்தின் அவசியம் அர­சியல் உரிமை சார்ந்த பிரச்­சி­னைகள் கார­ண­மா­கவே, இந்த நாட்டில் தமிழ் மக்கள் போரா­டு­வ­தற்கு நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டார்கள். போராட்டம் என்­பது அவர்கள் விரும்பி ஏற்­றுக்­கொண்ட ஒரு விட­ய­மல்ல. நாட்டில் உள்ள சக இனத்­த­வர்­க­ளுடன் சம­நி­லை­யி­லான உரி­மை­க­ளோடு, ஐக்­கி­ய­மா­கவும், நல்­லி­ணக்­கத்­து­டனும் வாழ வேண்டும் என்­பதே அவர்­க­ளு­டைய ஆழ் மன விருப்­ப­மாகும். அர­சியல் உரிமை சார்ந்த பிரச்­சி­னை­க­ளா­யி­னும்­சரி, அத­னை­யொட்டி கிளை பரப்­பி­யுள்ள அடிப்­படை உரி­மைகள், அர­சியல் பிரச்­சி­னைகள், அன்­றாடப் பிரச்­சி­னை­க­ளா­யி­னும்­சரி, தமிழ் மக்கள் முகம் கொடுத்­துள்ள பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணப்­ப­ட­வில்லை என்­பதே இந்த நாட்ட…

  20. `பாலா' சொல்ல முற்பட்டது என்ன? -கலாநிதி எஸ்.ஐ.கீதபொன்கலன்- * இந்தியத் தொலைக்காட்சிப் பேட்டி ஏற்படுத்தியுள்ள அதிர்வலைகள்.... நாட்டில் சொல்லிக் கொள்ளத்தக்க நம்பிக்கையூட்டும் அபிவிருத்திகள் எதுவும் ஏற்பட்டிராதபோதும் அரசியலும் அதைச் சுற்றியுள்ள ஏனைய மூலக்கூறுகளும் விரைவாகவே நகரத் தொடங்கியுள்ளன. அதன் காரணமாக இந்த நாடகத்தின் காட்சிகள் வேகமாக மாறத் தொடங்கியுள்ளன. ஒரு காட்சியின் முக்கியத்துவம் மனதில் பதியுமுன் மறுகாட்சி வந்து போவதால் எல்லாம் மறைக்கப்பட்டு விடலாம். உடனடி நிலையில் மாபெரும் காட்சிபோல் தோற்றமளித்த பாரமி குலதுங்கவின் மரணம் கூட ஒரு வாரத்திற்கு மேல் நினைவிலிருக்குமா என்பது சந்தேகமே. இந்த வேகம் எங்கு போய் நிற்குமோ என்பது சுவாரஸியமானது மட்டுமல்ல இச்சமூகத…

  21. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உத்தியோக பூர்வமான விஜயத்தினை மேற்கொண்டு எதிர்வரும் 24ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவிருக்கின்றார். தற்போது வரையில் அவரது பயண ஒழுங்கிலோ, அல்லது நிகழ்ச்சி நிரலிலோ எந்தவிதமான மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை என்று இலங்கை வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் குறிப்பிடுகின்றன. அதேபோன்று, ஈரான் ஜனாதிபதியின் வருகைக்கு முன்னதாக, முன்னாயத்த நடவடிக்கைகளுக்காக அதிகாரிகள் மட்டக்குழுவினர் இலங்கையை வந்தடைந்துள்ளதாக இராஜதந்திரத் தரப்பினர் தெரிவிக்கின்றார்கள். குறிப்பாக, பாதுகாப்பு உள்ளிட்ட இதர ஏற்பாடுகளுக்காக இந்தக் குழுவினர் கொழும்பில் முகாமிட்டிருப்பதாகவும், ஈரான் ஜனாதிபதி விஜயம் செய்யவுள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் அவர்கள் பிரசன்னமாகியிருப்பதாகவும் கூற…

  22. கடற்றொழில் அமைச்சருக்கு வடக்கில் காத்திருக்கும் நெருக்கடிகள் கலாநிதி சூசை ஆனந்தன் இலங்கையின் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்களின் அமைச்சராக ராமலிங்கம் சந்திரசேகர் புதிதாக பதவியேற்றிருக்கின்றார். வட பகுதியில் மீனவர்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கி வருகின்ற பல நெருக்கடிகளுக்கு சுமுகமான தீர்வினை வழங்குவதில் உறுதியாக உள்ளதாக அமைச்சர் யாழில் தெரிவித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. ஆயினும் இது அவருக்கு இலகுவாவானதாக இருக்கப் போவதில்லை. இந்திய மீனவர் விவகாரம் இந்தியாவுடன் தொடர்பானது, தென்பகுதி மீனவர் விவகாரம் சிறிலங்கா அரசுடன் தொடர்பானது. அமைச்சரோ தமிழர். கடந்த கால அமைச்சரும் தமிழராகவே இருந்துள்ளார். இருவரும் கடற்றொழிலுடன் சம்பந்தப்பட்டவர்களாக இருந்ததில்லை. இரு…

  23. பிறக்கப் போகும் அடுத்த ஆண்டில், மிக முக்கியமானதொரு எதிர்பார்ப்புக்குரிய விடயமாக மாறியிருப்பது ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 22வது கூட்டத்தொடர் தான். வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தொடரில், தமிழர்களின் அவலநிலையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னிலைப்படுத்தப் போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமசந்திரன் தெரிவித்துள்ளார். அரசியல்கட்சிகளால் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், எதையும் சமர்ப்பிக்க முடியாது என்ற போதும், வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் அவலநிலையை வெளிக்கொண்டு வருவதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என்றும் அவர் கூறியுள்ளார். இதற்காக கிடைக்கின்ற வாய்ப்புகளை அதிகபட்சம் பயன்படுத்திக் கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். ஏற்கனவே, ஐ.நா மனித…

  24. 13 ஆவது திருத்தத்தில் இருந்து இரண்டாவது வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு? நிலாந்தன்! August 8, 2021 இரண்டாம் வட்டுக் கோட்டைத் தீர்மானம் என்ற தலைப்பில் ஒரு மெய்நிகர் மாநாடு கடந்த முதலாம் திகதி இடம்பெற்றது. இரண்டாம் வட்டுக்கோட்டை தீர்மானக் குழு என்ற அமைப்பைச் சேர்ந்த கவிஞர் காசிஆனந்தன் அதன் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர். “ஈழத்தமிழர் புவிசார் அரசியலில் இந்திய அரசின் உடனடித்தலையீடு காலத்தின் கட்டாயம்” என்பதே அம்மாநாட்டின் பேசுபொருளாகும். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஈழ ஆதரவு பிரமுகர்கள் இதில் பங்கேற்றுப் பேசியிருக்கிறார்கள். நாம் தமிழர் கட்சியும் கொங்கிரஸ் கட்சியும் இதில் பங்கேற்கவில்லை. தாயகத்திலுள்ள தமிழ் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட 3 கட்சிகளுக…

    • 1 reply
    • 494 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.