Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழத் தேசியத் தலைவரின் வாழ்த்துகளுடன் செந்தமிழன் சீமானின் திருமணம்! முதல் பத்திரிகை தலைவரிற்கு!!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

thalaivarannaaseeman%201.jpgதீவிர தமிழீழ ஆதரவாளரும் தமிழினப் பற்றாளரும் திரைப்பட இயக்குனரும் நாம் தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளருமான செந்தமிழன் சீமான் அவர்களிற்கு வரும் எட்டாம் நாள் சென்னையில் திருமணம் நடைபெற உள்ளது.

திருமணத்திற்கான நாள் மிக நெருக்கமாக அண்மித்துள்ள நிலையில் திருமண ஏற்பாடுகளில் பரபரத்து காணப்படுகின்றது இருவீடும். திருமண ஏற்பாடுகள் ஒருபக்கம் அரசியல் பணி மறுபக்கமாக பரபரப்பாக இருந்த சீமான் அவர்களை சந்தித்தோம்.
 
உலகத் தமிழர்களிடம் உங்கள் வீட்டுப் பிள்ளையாக அறிமுகமாகி நெருக்கமான நம்பிக்கையான ஒருவராகிவிட்ட செந்தமிழன் சீமான் ஈழதேசம் இணையம் ஊடாக உலகத் தமிழர்களிற்கு தனது திருமண அழைப்பிதழை வழங்கியுள்ளார்.
 
அன்பின் அழைப்பு!
 
பெருமதிப்பிற்கும், பேரன்பிற்குமுரிய தங்களுக்கு…
செந்தமிழன் - அன்னம்மாள் இணையரின் மகன் 
சீமானாகிய நான்
போற்றுதலுக்கும், வணக்கத்திற்குமுரிய பெருமகன் தமிழக முன்னாள் அமைச்சர், சட்டப்பேரவைத் தலைவர் கா.காளிமுத்து – மனோகரி இணையரின் இளைய மகள்
கயல்விழி அவர்களை
தமிழ்ப் பேரினத்தின் உயிராகவும், உணர்வாகவும், மானமாகவும், வீரமாகவும், பெருமைமிகு அடையாளமாகவும் இருக்கின்ற 
தேசியத் தலைவர், எங்கள் அண்ணன் மேதகு வே.பிரபாகரன்
பெருமதிப்பிற்குரிய அண்ணியார் மதிவதனி ஆகியோரின் வாழ்த்துகளுடன்,
பெருமதிப்பிற்குரிய பெருமகன் அய்யா நல்லக்கண்ணு அவர்கள் முன்னிலையில்
எம் இனத்தின் பெருமைக்குரிய தலைவர் பெருமகன் எங்கள் அய்யா பழ.நெடுமாறன் அவர்கள் தலைமையில், என் வாழ்வின் உயிர்த் துணையாக ஏற்க இருக்கின்றேன்.
 
நாள்: திருவள்ளுவர் ஆண்டு 2044, மடங்கல் 23 ஆம் நாள் (செப்டம்பர் 08,2013) ஞாயிற்றுக் கிழமை.
 
நேரம்: காலை 9.00 மணி
 
இடம்: சென்னை, நந்தனம் (ஒய்.எம்.சி.ஏ) விளையாட்டுத் திடல்.
 
தங்கள் மேலான வருகையையும், வாழ்த்துகளையும் விரும்பி…
அன்பின் நெகிழ்ச்சியோடு
உங்கள்
சீமான்.
 
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் மதிவதனி அண்ணி ஆகியோரின் வாழ்த்துகளுடன் நடைபெற இருக்கும் திருமண விழாவிற்கான முதல் பத்திரிகை தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களிற்கு வைத்த பின்னரே ஏனையோரிற்கு வழங்கிவருகின்றார்.

 
செந்தமிழன் சீமான் அவர்களின் வீட்டில் வைக்கப்பட்டுள்ள தேசியத் தலைவரின் படத்திற்கு முன்பாக தலைவரிற்கான பத்திரிகை அவரிற்கான பெயரிட்டு வைக்கப்பட்டுள்ளது.
 
இந்த திருமண விழா அழைப்பிதழை உலகத்தில் உள்ள அத்தனை தமிழர்களும் உங்களிற்கான நேரடியான அழைப்பிதழாக ஏற்று நேரில் செல்லக் கூடியவர்கள் நேரில் சென்றும் கடல் கடந்து வேறு தேசங்களில் இருந்தாலும் மனமகிழ்வுடன் உங்கள் வாழ்த்துகளையும் நல்லாசிகளையும் வழங்குமாறு ஈழதேசம் இணையம் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கின்றது.
 thalaivarannaaseeman%202.jpg
ஈழதேசம் இணையம்.

 

http://eeladhesam.com/index.php/news/special-news/22891-2013-08-16-10-36-26

 

  • Replies 80
  • Views 6.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
http://www.youtube.com/watch?v=FwxtJ4YJ1Ec
  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பாடலை ஒட்டுக்குழுக்கள் கொழும்பில் சிங்களத்தோடு இருந்து கொண்டும்.. உண்மையான போராளிகள் தாயகத்தில் இருந்து கொண்டும்.. ஒலிபரப்பக் கேட்டிருக்கிறேன்..!

 

ஒட்டுக்குழுக்கள் ஒலி பரப்பும் போது.. தங்களை தாங்களே அப்படி கேட்டிக்கிறாங்களோ என்று நினைத்துக் கொள்வதுண்டு..!

 

அண்ணன் சீமான் என்ன சொன்னாலும்.. இப்ப ஒட்டுக்குழுக்கள் பாடல் போட்ட கணக்கா இருக்குது நம்ம ஜீவாக்கு..! :lol::D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தப் பாடலை ஒட்டுக்குழுக்கள் கொழும்பில் சிங்களத்தோடு இருந்து கொண்டும்.. உண்மையான போராளிகள் தாயகத்தில் இருந்து கொண்டும்.. ஒலிபரப்பக் கேட்டிருக்கிறேன்..!

 

ஒட்டுக்குழுக்கள் ஒலி பரப்பும் போது.. தங்களை தாங்களே அப்படி கேட்டிக்கிறாங்களோ என்று நினைத்துக் கொள்வதுண்டு..!

 

அண்ணன் சீமான் என்ன சொன்னாலும்.. இப்ப ஒட்டுக்குழுக்கள் பாடல் போட்ட கணக்கா இருக்குது நம்ம ஜீவாக்கு..! :lol::D

 

இந்த சிச்சுவேசனுக்கு இதைவிடப் பொருத்தமான கருத்தை எழுதிவிட முடியுமா நெடுக்ஸ் அண்ணா? :D:icon_idea:

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊதுகுழல் ஈழதேசம் இணையமும் சீமானும் கூறுவதுபோல தமிழீழத் தேசியத் தலைவர் சீமானின் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்திருந்தால்... ???? நிர்க்கதியான ஈழமக்களுக்கும் பாதிப்படைந்த போராளிகளுக்கும் ஏமாந்து நிற்கும் பங்களிப்பாளருக்கும் ஒரு வார்த்தை கூறாதவரை இனி நான் தலைவரென்றே கூற மாட்டேன்!!! /// அதுமட்டுமல்ல.. ஊரைத்தான் விடுங்கள்.. தேசத்தைத்தான் விடுங்கள்.. அந்தச் சின்னஞ்சிறு பாலகன் பாலச்சந்திரனையும் தவிக்கவிட்டுவிட்டு தேசியத்தலைவரும் துணைவியார் மதிவதனியாரும் தப்பிச் சென்று... இவருக்கு வாழ்த்து தெரிவிக்கிறார்களாம்.. என்ன ஒரு வக்கிரம் பிடித்த சின்னத்தனமான ஏமாற்றுவேலை... இவர்கள் தேசியத் தலைவருக்கு மரியாதை கொடுக்கிறார்களா அல்லது அவரது மரியாதையை சிதைக்க முயற்சிக்கிறார்களா?!

 

இது எனது கருத்தல்ல, ஈழத்தை நேசிக்கும் உறவு ஒருவரின் கருத்து.

 

இந்த நிலை மாற்றம் உருவாகும் அளவிற்குக் கொண்டுவந்து விட்ட பெருமை இப்படி ஈனப்பிழைப்பு நடத்துவோருக்கும், அவர்களுக்கு செம்பு தூக்குவோருக்குமே போய்ச் சேரும். தேசியத்தலைவரையும், மாவீரர்களையும், போராளிகளையும், ஈழத்தையும், கேவலப்படுத்த ஒட்டுக்குளுக்கள், ஓணான் குழுக்கள் யாருமே தேவையில்லை, இவர்களே போதும். :icon_idea:

Edited by ஜீவா

 

ஊதுகுழல் ஈழதேசம் இணையமும் சீமானும் கூறுவதுபோல தமிழீழத் தேசியத் தலைவர் சீமானின் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்திருந்தால்... ???? நிர்க்கதியான ஈழமக்களுக்கும் பாதிப்படைந்த போராளிகளுக்கும் ஏமாந்து நிற்கும் பங்களிப்பாளருக்கும் ஒரு வார்த்தை கூறாதவரை இனி நான் தலைவரென்றே கூற மாட்டேன்!!! /// அதுமட்டுமல்ல.. ஊரைத்தான் விடுங்கள்.. தேசத்தைத்தான் விடுங்கள்.. அந்தச் சின்னஞ்சிறு பாலகன் பாலச்சந்திரனையும் தவிக்கவிட்டுவிட்டு தேசியத்தலைவரும் துணைவியார் மதிவதனியாரும் தப்பிச் சென்று... இவருக்கு வாழ்த்து தெரிவிக்கிறார்களாம்.. என்ன ஒரு வக்கிரம் பிடித்த சின்னத்தனமான ஏமாற்றுவேலை... இவர்கள் தேசியத் தலைவருக்கு மரியாதை கொடுக்கிறார்களா அல்லது அவரது மரியாதையை சிதைக்க முயற்சிக்கிறார்களா?!

 

இது எனது கருத்தல்ல, ஈழத்தை நேசிக்கும் உறவு ஒருவரின் கருத்து

 

கருணாநிதி ரேஞ்சிலை தலைவர் இருக்க வேணும் எண்டு  எதிர்ப்பாக்கிறார் போல உங்களின் தமிழீழத்தை நேசிக்கும் உறவு... 

 

எங்களின் தலைவர்  அரசியல்வாதி  கிடையாது  அவர் போராளி... !  

 

தமிழீழத்தை நேசிக்கும் எவருக்கும் ஈழத்தமிழரது ஆசி  எப்போதும் இருக்கும்  அந்த வகையில் சீமான் சொன்னதில் எந்த தவறும் கிடையாது....  

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி ரேஞ்சிலை தலைவர் இருக்க வேணும் எண்டு  எதிர்ப்பாக்கிறார் போல உங்களின் தமிழீழத்தை நேசிக்கும் உறவு... 

 

எங்களின் தலைவர்  அரசியல்வாதி  கிடையாது  அவர் போராளி... !  

 

தமிழீழத்தை நேசிக்கும் எவருக்கும் ஈழத்தமிழரது ஆசி  எப்போதும் இருக்கும்  அந்த வகையில் சீமான் சொன்னதில் எந்த தவறும் கிடையாது....  

 

 

அது அவருக்கும் தெரியும்

ஆனால் இப்ப முகநூல் கூட ஒரு ஆதாரமா  அவருக்கு தேவைப்படுகிறது

அந்தளவுக்கு அவர் மாறி இருக்கிறார்

தலைவரல்ல...........

அவரது ஆசி தமிழன்  எல்லோருக்கும்  உண்டு

அது   வேற  விடயம்

  • கருத்துக்கள உறவுகள்

 

ஊதுகுழல் ஈழதேசம் இணையமும் சீமானும் கூறுவதுபோல தமிழீழத் தேசியத் தலைவர் சீமானின் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்திருந்தால்... ???? நிர்க்கதியான ஈழமக்களுக்கும் பாதிப்படைந்த போராளிகளுக்கும் ஏமாந்து நிற்கும் பங்களிப்பாளருக்கும் ஒரு வார்த்தை கூறாதவரை இனி நான் தலைவரென்றே கூற மாட்டேன்!!! /// அதுமட்டுமல்ல.. ஊரைத்தான் விடுங்கள்.. தேசத்தைத்தான் விடுங்கள்.. அந்தச் சின்னஞ்சிறு பாலகன் பாலச்சந்திரனையும் தவிக்கவிட்டுவிட்டு தேசியத்தலைவரும் துணைவியார் மதிவதனியாரும் தப்பிச் சென்று... இவருக்கு வாழ்த்து தெரிவிக்கிறார்களாம்.. என்ன ஒரு வக்கிரம் பிடித்த சின்னத்தனமான ஏமாற்றுவேலை... இவர்கள் தேசியத் தலைவருக்கு மரியாதை கொடுக்கிறார்களா அல்லது அவரது மரியாதையை சிதைக்க முயற்சிக்கிறார்களா?!

 

இது எனது கருத்தல்ல, ஈழத்தை நேசிக்கும் உறவு ஒருவரின் கருத்து.

 

இந்த நிலை மாற்றம் உருவாகும் அளவிற்குக் கொண்டுவந்து விட்ட பெருமை இப்படி ஈனப்பிழைப்பு நடத்துவோருக்கும், அவர்களுக்கு செம்பு தூக்குவோருக்குமே போய்ச் சேரும். தேசியத்தலைவரையும், மாவீரர்களையும், போராளிகளையும், ஈழத்தையும், கேவலப்படுத்த ஒட்டுக்குளுக்கள், ஓணான் குழுக்கள் யாருமே தேவையில்லை, இவர்களே போதும். :icon_idea:

 

 

 தலைவர் இருக்கிறாரோ.. இல்லையோ என்பதற்கு அப்பால்.. தலைவர் தனது குடும்பத்தை முன்னிலைப்படுத்தி வாழ்ந்த ஒருவர் அல்ல.

 

இதனை நாங்கள் 1987 இந்தியப் படைகளுடனான சண்டையின் போது நேரடியாக அனுபவித்தவர்கள். தேசிய தலைவரின் பிள்ளைகள்.. மாமனார்.. மாமியார் எல்லோரும்.. மக்களோடு அகதிகளாக யாழ் நகருக்கு அருகில் தான்... இந்தியப் படைகள் கோப்பாதைத் தாண்டி.. சண்டை இடும் நிலையிலும் இருந்தனர்..! அவர்களுக்கு விசேட சலுகைகளோ.. வசதிகளோ இருக்கவில்லை. எல்லா மக்களைப் போலவுமே அவர்களும் வாழ்ந்தார்கள்..! நாங்கள் என்ன உணவு உண்டமோ அதையே தான் அவர்களும் உண்டார்கள்..! தலைவர் எல்லோரையும் தன்னோடு கூட்டிக்கொண்டு திரிவதில்லை..!

 

எனவே தலைவர்.. தன்ர குடும்பத்தைக் கவனிக்கல்ல.. அதற்கு கருத்துச் சொல்லேல்ல சீமானுக்கு சொல்லிட்டார் என்பது ஒரு குற்றச்சாட்டாக முடியாது. சீமானை ஒரு போராளியாகக் கருதினால் தலைவர் அதனைச் செய்வார்..! அதற்காக அவரை குறைத்து மதிப்பிட முடியாது. எத்தனையோ மாவீரர்கள் உருவான நிலையிலும்.. போராளிகள் திருமணம் செய்ய விரும்பிய போது மாவீரர்களைக் காட்டி தலைவர் அவர்களை குடும்ப வாழ்வில் இணைய அனுமதி மறுத்தாரா..???! இல்லையே. அவர் சாதாரண மனித உணர்வுகளை மதிக்கின்ற ஒருவர்.

 

சீமான் தலைவரிடம் ஆசி பெற்ற குடும்ப வாழ்வை பெற விரும்பின்... நிச்சயம் தலைவர் அதனை மறுக்கமாட்டார். மேலும்.. சீமானுக்கு அதற்கான தகுதி உண்டு..!

 

இது தலைவரின் இருப்புப் பற்றிய விவாதம் அல்ல. அவரின் பண்பு பற்றிய கருத்து..! தலைவரின் பண்புகளை சீமானைக் காட்டி தீர்மானிப்பது தான் எங்களின் பலவீனம்..! அது எங்கள் தவறே தவிர தலைவரதோ சீமானதோ அல்ல. :icon_idea:

--ஒரு கள உறவின் பெயரை அவரது சம்மதம் இல்லாமல் வெளியிட வேண்டாம் : நிழலி

Edited by நிழலி
--ஒரு கள உறவின் பெயரை அவரது சம்மதம் இல்லாமல் வெளியிட வேண்டாம் : நிழலி

எதுவும் அளவோடு இருந்தால் நல்லது!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருணாநிதி ரேஞ்சிலை தலைவர் இருக்க வேணும் எண்டு  எதிர்ப்பாக்கிறார் போல உங்களின் தமிழீழத்தை நேசிக்கும் உறவு... 

 

எங்களின் தலைவர்  அரசியல்வாதி  கிடையாது  அவர் போராளி... !  

 

தமிழீழத்தை நேசிக்கும் எவருக்கும் ஈழத்தமிழரது ஆசி  எப்போதும் இருக்கும்  அந்த வகையில் சீமான் சொன்னதில் எந்த தவறும் கிடையாது....  

 

இங்கு தலைவரல்ல பிரச்சனை தயா அண்ணா,

சீமானது கல்யாணத்துக்கு வாழ்த்துச் சொன்ன தலைவர் தான் வளர்த்த போராளிகளின் இன்றைய நிலைக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும், போராட்டத்தின் உயிர்நாடியாக இருந்த மக்களுக்கும் எந்தப் பதிலும் சொல்லாமல் சீமானது திருமணத்திற்கு வாழ்த்துச் சொன்னார் என்ற புலுடா தான் ஏன் என்பதே கேள்வி? மற்றும் படிக்கு சீமானுக்கும் கருணாநிதிக்கும் ஆறு வித்தியாசம் விடை கண்டுபிடியுங்கள் என்று தான் போட்டி வைக்க வேண்டும். மற்றும் படிக்கு

சீமானை எல்லாம் தேசியத்தலைவருக்கு நிகராகப் பார்க்க சில தேசியம் பேசும் பிழைப்புவாதிகளால் மட்டும் தான் முடிகிறது, ஆனால் கூத்தாடிகளை எல்லாம் அப்படிப் பார்க்கும் மனநிலை சாதாரணமானவர்களுக்கு இல்லை என்பதே நிதர்சனம். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் மதிவதனி அண்ணி ஆகியோரின் வாழ்த்துகளுடன் நடைபெற இருக்கும் திருமண விழாவிற்கான முதல் பத்திரிகை தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களிற்கு வைத்த பின்னரே ஏனையோரிற்கு வழங்கிவருகின்றார்.
 

 

இந்தவரிகள்  தான்  சிலருக்கு உறுத்துகிறது போலும்

இந்த வரிகளை  எவரும் போடமுடியும்

அவரது ஆசி  எப்பொழுதும் எமக்கு உண்டு என்று  நம்புபவர்கள்.

அப்படித்தான் நான்  பார்க்கின்றேன்

இந்த  வரிகளில் தலைவர் நேரே  வாழ்த்தினார்  என்று இருக்கிறது என்று நம்புவர்களுக்கு  நாம்  என்ன  சொல்லமுடியும்.

அவர்கள்  சீமானையும்  தெரியவில்லை

தலைவரையும் தெரியவில்லை

அப்படி  தெரியாதவர்கள்

சீமானிடம் எப்படி  தலைவரின் ஆசி  பெற்றீர்கள்  என கேள்வி கேட்டு தெரிந்துவிட்டு அதன்பின்னர்  தமது உணர்வுகளைக்கொட்டுவதே சரி.

(இதைவிடுத்து பாலச்சந்திரனை  விட்டு விட்டு ஓடியவர்  எனக்கு தலைவராகமுடியாது என்பதெல்லாம்..............?? :( )

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் கந்தனின் நல்லாசியுடன் என்று அச்சடித்தால் முருகன் வந்து வாழ்த்தினார் என்று அர்த்தமா? :unsure::rolleyes::D

  • கருத்துக்கள உறவுகள்

ஊதுகுழல் ஈழதேசம் இணையமும் சீமானும் கூறுவதுபோல தமிழீழத் தேசியத் தலைவர் சீமானின் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்திருந்தால்... ???? நிர்க்கதியான ஈழமக்களுக்கும் பாதிப்படைந்த போராளிகளுக்கும் ஏமாந்து நிற்கும் பங்களிப்பாளருக்கும் ஒரு வார்த்தை கூறாதவரை இனி நான் தலைவரென்றே கூற மாட்டேன்!!! /// அதுமட்டுமல்ல.. ஊரைத்தான் விடுங்கள்.. தேசத்தைத்தான் விடுங்கள்.. அந்தச் சின்னஞ்சிறு பாலகன் பாலச்சந்திரனையும் தவிக்கவிட்டுவிட்டு தேசியத்தலைவரும் துணைவியார் மதிவதனியாரும் தப்பிச் சென்று... இவருக்கு வாழ்த்து தெரிவிக்கிறார்களாம்.. என்ன ஒரு வக்கிரம் பிடித்த சின்னத்தனமான ஏமாற்றுவேலை... இவர்கள் தேசியத் தலைவருக்கு மரியாதை கொடுக்கிறார்களா அல்லது அவரது மரியாதையை சிதைக்க முயற்சிக்கிறார்களா?!

 

இது எனது கருத்தல்ல, ஈழத்தை நேசிக்கும் உறவு ஒருவரின் கருத்து.

 

இந்த நிலை மாற்றம் உருவாகும் அளவிற்குக் கொண்டுவந்து விட்ட பெருமை இப்படி ஈனப்பிழைப்பு நடத்துவோருக்கும், அவர்களுக்கு செம்பு தூக்குவோருக்குமே போய்ச் சேரும். தேசியத்தலைவரையும், மாவீரர்களையும், போராளிகளையும், ஈழத்தையும், கேவலப்படுத்த ஒட்டுக்குளுக்கள், ஓணான் குழுக்கள் யாருமே தேவையில்லை, இவர்களே போதும். :icon_idea:

 

 

தேசியத் தலைவரை மக்களில் பலர் வீரனாக, தலைவனாக, நண்பனாக, அண்ணணாக ஏன் கடவுளாகக்கூட காண்கிறார்கள். இருக்கிறார் என்றும், இல்லை என்றும் கூறுகிறார்கள் அது அவரவர் விருப்பம். நீங்கள் அவரை தலைவரென்று கூறமாட்டேன் என்று சொல்வது உங்கள் விருப்பம், உரிமை அதில் யாரும் தலையிட முடியாது. ஆனாலும் செந்தமிழன் சீமான் அவர்களின் வீட்டில் வைக்கப்பட்டுள்ள தேசியத் தலைவரின் படத்திற்கு முன்பாகவே தலைவருக்கான பத்திரிகை அவருக்கான பெயரிட்டு வைக்கப்பட்டுள்ளதாகவே செய்தியுள்ளது.

 

நிர்க்கதியான ஈழமக்களுக்கும் பாதிப்படைந்த போராளிகளுக்கும் ஏமாந்து நிற்கும் பங்களிப்பாளருக்கும் ஒரு வார்த்தையைத்தானும் படம் கூறுமா என்பதையும் எண்ணிப்பார்க்கவும். அத்துடன் சீமான் அவர்களை ஒட்டுக்குழுக்கள், ஓணான் குழுக்களுடன் ஒப்பிட்டுப் பேசுமளவிற்கு அவரால் தமிழீழ விடுதலைப்போராட்டம் எப்படிப் பாதிப்படைந்தது என்பதையும் அறியத்தந்தால் எச்சரிக்கையாக இருப்போம்.

எனக்கு சீமானின் அரசியலில் பிடிப்பும் இல்லை நம்பிக்கையும் இல்லை.

 

ஆனால் அவர் இந்த அழைப்பிதழில் தலைவர் நேரடியாகவே வாழ்த்தினார் என்றோ அல்லது தலைவருக்கு அழைப்பிதழ் கொடுத்தார் என்றோ எழுதியுள்ளார் என்று பிரச்சாரம் செய்ய முனைந்தால் கண்டிப்பாக அவர்களின் செயலில் எந்தவிதமான நேர்மையும் இல்லை என்றே நம்புவேன். கடவுள் படம் முன் வைத்து ஆசிர்வாதம் வாங்கும் செயலைப் போன்று, அப்பா அம்மாவின் படம் முன் வீழ்ந்து ஆசிர்வாதமும் வாழ்த்தும் பெறும் பண்பாட்டைப் போன்றுதான் இதுவும். என் பண்பாட்டின் வழி இத்தகைய நம்பிக்கைகளும் அதையொட்டிய பழக்கவழக்கங்களும் நிறைந்து கிடக்கின்றன.

 

முட்டையில் முடியைத் தேடுவது போன்று சீமானின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் நுணுக்குக் காட்டி வைத்து பார்த்துவிட்டு அதனை பூதக் கண்ணாடி கொண்டு பெருப்பித்து, பொய்யாக குறை காணும் இப்படியான செயல்களை சீமானின் அரசியல் மீதான எதிர்வினையாக கொள்ள முடியாது. மாறாக, நேரடியாக அவரது அரசியலை ஆரோக்கியமான விமர்சனங்களினூடாக கேள்வி கேட்பதற்கும் அருகதையும் அறிவும் அற்றவர்களின் வெறுமனே காழ்ப்புணர்வுடனான விமர்சனமாகவே கொள்ள முடியும். இத்தகைய போக்கு எந்தவிதமான நல்ல பின் விளைவுகளையும் தரபோவதில்லை.

 

சீமான் தவறு செய்தால் கண்டியுங்கள், விமர்சியுங்கள், அதனூடாக அவரது அரசியலை கேள்விக்குட்படுத்துங்கள். ஆனால், மிகவும் சாதாரணமாக புரிந்து கொள்ளக்கூடிய ஒன்றை கண்ணும் காதும் வைத்து பெருப்பித்து அதனூடாக உங்கள் அரசியலை நியாயப்படுத்த முனைந்தால், மக்களால் முற்றாக நிராகரிக்கப்படுவீர்கள். இதன் மூலம் ஒன்று மட்டும் புரிகின்றது.

 

சீமானின் அரசியலை விமர்சிக்கும் தகுதி உங்களுக்கு அறவே இல்லை என்பதுதான் அது.

 

 

 

 

 

நல்லூர் கந்தனின் நல்லாசியுடன் என்று அச்சடித்தால் முருகன் வந்து வாழ்த்தினார் என்று அர்த்தமா? :unsure::rolleyes::D

 

விஜேயின் அடுத்த படத்துக்கு நீங்கள் தான் பஞ்சு டைலொக் எழுத வேணும்!!!!! சூப்பர் அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்

விஜேயின் அடுத்த படத்துக்கு நீங்கள் தான் பஞ்சு டைலொக் எழுத வேணும்!!!!! சூப்பர் அண்ணா

 

இது நல்லவிதமா சொன்னதா....?  என்ன மாதிரி? :rolleyes: விஜயை வைத்து சொன்னதால் ஒரு சின்ன டவுட்டு.. :D

  • கருத்துக்கள உறவுகள்

--ஒரு கள உறவின் பெயரை அவரது சம்மதம் இல்லாமல் வெளியிட வேண்டாம் : நிழலி

 

 

இப்படிச் சொல்லி இருக்கிறீர்கள். ஆனால் மேலே சோழியன் அண்ணாவின் பெயர் போட்ட அவரின் முகநூல் நிலைப்பாடு (status) பதியப்பட்டுள்ளதே. அதற்கு அனுமதி பெறப்பட்டதா..??! அதனை மேற்கோள் காட்டி எழுதும் போது.. யாழ் கள உறவாக உறவாடிய அவரின் நிலைப்பாடுகளை அறிந்தவர்கள் என்ற வகையில்.. ஒரு கருத்தைச் சொல்வதில்... யாழ் கள நிர்வாகத்திற்கு உடன்பாடில்லாமல் போகிறது.

 

இதில் உள்ள முரண்களை நிழலி விளங்கிக் கொண்டிருக்கிறாரா..???! :rolleyes::lol::icon_idea:

தயவுசெய்து முடிந்தால் விளக்கம் தரவும். எதிர்காலத்தில் இவற்றைத் தவிர்க்க உதவும். :icon_idea:

விளக்கு மட்டுமே பிடிக்க இல்லை அதையும் தலைவர் பிடிப்பார் எண்டு சொன்னாலும் சொல்லுவார் சீமான்

பிழைக்க ஆயிரம் வழி இருக்கு இவன் பண்ணுற அக்கப்போர் முடில கதை கதையா சொல்லுறான் :icon_mrgreen:

 

  • கருத்துக்கள உறவுகள்

சீமானின் நம்பிக்கை..... அவருக்குத் தேசியத் தலைவரின் வாழ்த்துகளும் ஆசிகளும் கிடைக்கும்.
நம்பிக்கை இல்லாதவர்கள் வக்கிரம் பேசுகின்றார்கள். சிலர் யார் மீதோ இருக்கும் கோபத்தைச் சீமானின் திருமண விடயத்தில் காட்ட முயற்சிக்கின்றனர். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படிச் சொல்லி இருக்கிறீர்கள். ஆனால் மேலே சோழியன் அண்ணாவின் பெயர் போட்ட அவரின் முகநூல் நிலைப்பாடு (status) பதியப்பட்டுள்ளதே. அதற்கு அனுமதி பெறப்பட்டதா..??! அதனை மேற்கோள் காட்டி எழுதும் போது.. யாழ் கள உறவாக உறவாடிய அவரின் நிலைப்பாடுகளை அறிந்தவர்கள் என்ற வகையில்.. ஒரு கருத்தைச் சொல்வதில்... யாழ் கள நிர்வாகத்திற்கு உடன்பாடில்லாமல் போகிறது.

 

இதில் உள்ள முரண்களை நிழலி விளங்கிக் கொண்டிருக்கிறாரா..???! :rolleyes::lol::icon_idea:

தயவுசெய்து முடிந்தால் விளக்கம் தரவும். எதிர்காலத்தில் இவற்றைத் தவிர்க்க உதவும். :icon_idea:

 

நிச்சயமாக அவரின் அனுமதியுடனே தான் நான் பதிந்தேன் நெடுக்ஸ் அண்ணா.

அதே statusச் இல் தற்போது நீங்களும் எழுதியுள்ளீர்கள். :icon_idea:

எனக்கு சீமானின் அரசியலில் பிடிப்பும் இல்லை நம்பிக்கையும் இல்லை.

 

ஆனால் அவர் இந்த அழைப்பிதழில் தலைவர் நேரடியாகவே வாழ்த்தினார் என்றோ அல்லது தலைவருக்கு அழைப்பிதழ் கொடுத்தார் என்றோ எழுதியுள்ளார் என்று பிரச்சாரம் செய்ய முனைந்தால் கண்டிப்பாக அவர்களின் செயலில் எந்தவிதமான நேர்மையும் இல்லை என்றே நம்புவேன். கடவுள் படம் முன் வைத்து ஆசிர்வாதம் வாங்கும் செயலைப் போன்று, அப்பா அம்மாவின் படம் முன் வீழ்ந்து ஆசிர்வாதமும் வாழ்த்தும் பெறும் பண்பாட்டைப் போன்றுதான் இதுவும். என் பண்பாட்டின் வழி இத்தகைய நம்பிக்கைகளும் அதையொட்டிய பழக்கவழக்கங்களும் நிறைந்து கிடக்கின்றன.

 

முட்டையில் முடியைத் தேடுவது போன்று சீமானின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் நுணுக்குக் காட்டி வைத்து பார்த்துவிட்டு அதனை பூதக் கண்ணாடி கொண்டு பெருப்பித்து, பொய்யாக குறை காணும் இப்படியான செயல்களை சீமானின் அரசியல் மீதான எதிர்வினையாக கொள்ள முடியாது. மாறாக, நேரடியாக அவரது அரசியலை ஆரோக்கியமான விமர்சனங்களினூடாக கேள்வி கேட்பதற்கும் அருகதையும் அறிவும் அற்றவர்களின் வெறுமனே காழ்ப்புணர்வுடனான விமர்சனமாகவே கொள்ள முடியும். இத்தகைய போக்கு எந்தவிதமான நல்ல பின் விளைவுகளையும் தரபோவதில்லை.

 

சீமான் தவறு செய்தால் கண்டியுங்கள், விமர்சியுங்கள், அதனூடாக அவரது அரசியலை கேள்விக்குட்படுத்துங்கள். ஆனால், மிகவும் சாதாரணமாக புரிந்து கொள்ளக்கூடிய ஒன்றை கண்ணும் காதும் வைத்து பெருப்பித்து அதனூடாக உங்கள் அரசியலை நியாயப்படுத்த முனைந்தால், மக்களால் முற்றாக நிராகரிக்கப்படுவீர்கள். இதன் மூலம் ஒன்று மட்டும் புரிகின்றது.

 

சீமானின் அரசியலை விமர்சிக்கும் தகுதி உங்களுக்கு அறவே இல்லை என்பதுதான் அது.

 

என்னைப் பொறுத்தளவில் சீமான் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்த தமிழ்நாட்டு அரசியல்வாதி.. ஒருசில மணித்துளிகள் தேசியத் தலைவரைச் சந்தித்தவர்.. அவரைப்போல ஒருவர் தமிழகத்துக்கு தேவைப்படலாம்.. அதனால் எங்களுக்கும் ஏதாவது அனுசரணைகள் கிடைத்தால் நன்மையே.. ஆனால் அதற்காக எங்கள் மறவர்களது மக்களது தியாகங்களில் தோன்றியவைகளை அவர் தன்னிச்சையாக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியுமா? அதுமட்டுமல்ல... கனடாவில் மூன்றாவது அணியாக முள்ளிவாய்க்கால் நினைவை முன்னெடுத்தது நாம் தமிழர்.. இந்தக் கூறுபோடல் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதா?
இன்றைய அதிமுக ஆட்சியின் வெற்றிக்கு சீமானது பிரச்சாரமும் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.. அப்படியான சீமான் அந்தத் தகுதியை முன்னிறுத்தி தமிழ் நாட்டில் ஒரு சிறப்பு முகாமையாவது விடுதலை முகாமாக மாற்ற முயற்சித்தாரா? தமிழ்நாட்டிலேயே ஈழத்தமிழருக்காக எதையும் செய்யும் தகுதியை வெளிக்காட்டாத சீமான்.. கனடாவில் எதற்காக 3வது அணியை உருவாக்குகிறார்? இது ஈழத் தமிழர்களை மேலும் கூறுபோடும் அநீதி அல்லவா?

 

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்தளவில் சீமான் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்த தமிழ்நாட்டு அரசியல்வாதி.. ஒருசில மணித்துளிகள் தேசியத் தலைவரைச் சந்தித்தவர்.. அவரைப்போல ஒருவர் தமிழகத்துக்கு தேவைப்படலாம்.. அதனால் எங்களுக்கும் ஏதாவது அனுசரணைகள் கிடைத்தால் நன்மையே.. ஆனால் அதற்காக எங்கள் மறவர்களது மக்களது தியாகங்களில் தோன்றியவைகளை அவர் தன்னிச்சையாக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியுமா? அதுமட்டுமல்ல... கனடாவில் மூன்றாவது அணியாக முள்ளிவாய்க்கால் நினைவை முன்னெடுத்தது நாம் தமிழர்.. இந்தக் கூறுபோடல் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதா?

இன்றைய அதிமுக ஆட்சியின் வெற்றிக்கு சீமானது பிரச்சாரமும் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.. அப்படியான சீமான் அந்தத் தகுதியை முன்னிறுத்தி தமிழ் நாட்டில் ஒரு சிறப்பு முகாமையாவது விடுதலை முகாமாக மாற்ற முயற்சித்தாரா? தமிழ்நாட்டிலேயே ஈழத்தமிழருக்காக எதையும் செய்யும் தகுதியை வெளிக்காட்டாத சீமான்.. கனடாவில் எதற்காக 3வது அணியை உருவாக்குகிறார்? இது ஈழத் தமிழர்களை மேலும் கூறுபோடும் அநீதி அல்லவா?

சோழியன் அண்ணா உங்களை களத்தில் மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி.

:D

மூன்றாவதாக ஒரு அணியை சீமான் உருவாக்கவில்லை. கனடாவில் வாழும் இந்திய உறவுகளால்..  ஈழத் தேசியத்தின்பால் அக்கறை கொண்ட தொப்புள்க்கொடி உறவுகளினால்... நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளர்களால்.. உருவாக்கப்பட்ட ஒரு கிளை அமைப்பு

 

அந்தக் கிளை அமைப்பை உள்வாங்க முடியாதது

ஏற்கனவே இருக்கும் இரண்டு அணிகளதும் தவறு.

 

முதலில் முதல் இரண்டுஅணிகளும் ஒருமைப்பாட்டுக்குள் வரவேண்டும்

அந்த ஒற்றுமையின் பலத்துடன் மூன்றாவது அணியையும் நாம் உள்வாங்கலாம்

 

சீமானின் அரசியல் அவருக்கானதல்ல

ஈழத்தமிழர்களுக்கும் இந்தியத் தமிழர்களுக்குமானது. அவர் நேரான பாதையில் செல்லும்போது மக்கள் அவரின் பின்னால் அணிதிரள்கின்றனர்.

 

விமர்சனம் என்பது எப்போதும் ஒரு அரசியல்வாதியைப் புடம் போட உதவும்.

சீமானை தமிழ்நாட்டில் தெலுங்கன்,கன்னடன்,மலையாளி,கிந்தியன்,தி.மு.க ,அ.தி.முக ,காங்கிரஸ் போன்றவர்கள் அரசியல் செய்ய விடுவார்களோ இல்லைய்யாவ் நாங்க விடமாட்டோம் அவ்வளவுதான் சொல்லிட்டேன் . :lol:

எப்ப பார்த்தாலும் தலைவர் பிரபாகரன்,விடுதலைப் புலிகள்,ஈழம் ,தமிழன் என்று அரசியல் பண்ண சீமான் யாரு?

வந்தேறி கருணாநிதி,ஜெயலலிதா,இனத் துரோகிகள் டக்லஸ் கேபி  போறோர் அரசியல் செய்யலாம் ஒரு தமிழன் சீமான் எப்பிடி? நாங்களே இந்த புலி,அண்ணன் பிரபா, ஈழம் .போன்ற சொற்களை மறந்து ஸ்ரீலங்கா,ஒற்றையாட்சி,கேபி,டக்லஸ் ,மகிந்த என்று உச்சரித்து வாழுவோம் என்று நினைத்தால் இந்த சீமான் விட மாட்டார் போல  ^_^


எனக்கு சீமானின் அரசியலில் பிடிப்பும் இல்லை நம்பிக்கையும் இல்லை.

 

ஆனால் அவர் இந்த அழைப்பிதழில் தலைவர் நேரடியாகவே வாழ்த்தினார் என்றோ அல்லது தலைவருக்கு அழைப்பிதழ் கொடுத்தார் என்றோ எழுதியுள்ளார் என்று பிரச்சாரம் செய்ய முனைந்தால் கண்டிப்பாக அவர்களின் செயலில் எந்தவிதமான நேர்மையும் இல்லை என்றே நம்புவேன். கடவுள் படம் முன் வைத்து ஆசிர்வாதம் வாங்கும் செயலைப் போன்று, அப்பா அம்மாவின் படம் முன் வீழ்ந்து ஆசிர்வாதமும் வாழ்த்தும் பெறும் பண்பாட்டைப் போன்றுதான் இதுவும். என் பண்பாட்டின் வழி இத்தகைய நம்பிக்கைகளும் அதையொட்டிய பழக்கவழக்கங்களும் நிறைந்து கிடக்கின்றன.

 

முட்டையில் முடியைத் தேடுவது போன்று சீமானின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் நுணுக்குக் காட்டி வைத்து பார்த்துவிட்டு அதனை பூதக் கண்ணாடி கொண்டு பெருப்பித்து, பொய்யாக குறை காணும் இப்படியான செயல்களை சீமானின் அரசியல் மீதான எதிர்வினையாக கொள்ள முடியாது. மாறாக, நேரடியாக அவரது அரசியலை ஆரோக்கியமான விமர்சனங்களினூடாக கேள்வி கேட்பதற்கும் அருகதையும் அறிவும் அற்றவர்களின் வெறுமனே காழ்ப்புணர்வுடனான விமர்சனமாகவே கொள்ள முடியும். இத்தகைய போக்கு எந்தவிதமான நல்ல பின் விளைவுகளையும் தரபோவதில்லை.

 

சீமான் தவறு செய்தால் கண்டியுங்கள், விமர்சியுங்கள், அதனூடாக அவரது அரசியலை கேள்விக்குட்படுத்துங்கள். ஆனால், மிகவும் சாதாரணமாக புரிந்து கொள்ளக்கூடிய ஒன்றை கண்ணும் காதும் வைத்து பெருப்பித்து அதனூடாக உங்கள் அரசியலை நியாயப்படுத்த முனைந்தால், மக்களால் முற்றாக நிராகரிக்கப்படுவீர்கள். இதன் மூலம் ஒன்று மட்டும் புரிகின்றது.

 

சீமானின் அரசியலை விமர்சிக்கும் தகுதி உங்களுக்கு அறவே இல்லை என்பதுதான் அது.

தானும் ,தன் குடும்பமும் தான் என்று வாழ்ந்துகொண்டிருக்கும் எம் தமிழர்கள் மத்தியில் எமக்காக குரல்கொடுத்துவரும் மதிப்புக்குரிய சீமான் அவர்களுடைய திருமணம் இனிதே நிறைவுபெற வாழ்த்துகிறேன் ...நன்றிமறவாத ஈழத்தமிழனாக ...........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.