Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலக்கணாவத்தை!!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் வணக்கமெங்க!

என்னங்க பெயரை பார்த்தவுடனேயே மூளையைப்போட்டு குழப்புறீங்க? சத்தியமா சொல்றேனெங்க உதுதானெங்க நான் பிறந்த ஊர் இலக்கணாவத்தை.

தமிழீழத்தின் வடபகுதியான யாழ்ப்பாணத்தில் வடமராட்சி பகுதியிலை சமரபாகு என்ற குறிச்சியிலை ஒரு சின்ன கிராமம் பாருங்கோ. தென்மேற்குத்திசையாக 1.25 மைல் தொலைவில் உடுப்பிட்டி என்ற ஊரும், வடமேற்குப்பக்கமாக 1.5(ஒன்றரை) மைல் தொலைவில் வல்வெட்டித்துறையும் தென் கிழக்குத்திசையாக 1.5 (ஒன்றரை) மைல் தொலைவில் நவிண்டில்,நெல்லியடி, கரவெட்டி போன்ற ஊர்களும், வடகிழக்குத்திசையாக 2,3 மைல் தொலைவில் பொலிகண்டி போன்ற ஊர்களினால் சூழ்ந்திருக்கும் ஒரு சிறு ஊர்தான் பாருங்கோ நான் பிறந்தவூர் இலக்கணாவத்தை.

அதாவது பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பல இலக்கணங்களை படைத்ததாலை தான் இந்தவூருக்கு இலக்கணாவத்தை என்ற பெயர் வந்ததாக முதியோர் கூறுகின்றனர்.

இலக்கணாவத்தையிலை பாருங்கோ நான் புலம்பெயர்ந்த காலத்திலை ஏறக்குறைய ஒரு முப்பது குடும்பம் தான் இருந்திருக்கும், இப்போ கணக்கு நிறைய வித்தியாசம், கனடாவிலையே நாற்பது(40) குடும்பத்திற்கு மேலாக இருக்கிறம், அதற்காக எண்ணுக் கணக்கில்லாது இன அபிவிருத்தி செய்யும் ஊர் என்று தப்பாக விளங்கிக் கொள்ளாதையுங்கோ.

ஏனென்றால் நான் புலம்பெயர்ந்து முப்பத்தியிரண்டு(32) வருடமாகிட்டதெல்லோ, அப்போ என்னுடைய கணக்கிலை சந்தேகம் இருக்காது தானே.

24818113011291265618222.jpg

எங்களது ஊருக்கென்று ஒரு பிள்ளையார்கோயில், சனசமூகநிலையம் போன்றன பிரத்தியேகமாக உள்ளது.

இதைவிட இலக்கணாவத்தையின் நினைவுச்சின்னமாக பெரிய ஆலமரம் ஒன்று ஊரின் நுளைவாசலில் அதாவது பிள்ளையார் கோயிலின் பின்வாசலில் அடர்ந்து, படர்ந்து ஊருக்குள் வருவோரை வரவேற்பது போன்ற தோற்றத்தில் உள்ளது.

நாங்கள் ஒருத்தருக்கொருவர் சந்திப்பதோ, கூட்டங்கள் கூடுவதோ, பொழுதுபோக்குவதோ இந்த ஆலமரத்தின் கீழ் தான்.

23864101501202221100727.jpg

இலக்கணாவத்தை மக்கள் எதை மறந்தாலும் இந்த ஆலமரத்தை மறப்பதிற்கு தயாரில்லை.

நாங்கள் வல்வெட்டித்துறை, உடுப்பிட்டி போன்ற ஊர்களைத்தான் முகவரியாக பாவிக்கின்றோம் அதாவது இரண்டிலொரு ஊரைப்போட்டால் கடிதம் எங்கவூருக்கு வந்து சேரும் பாருங்கோ.

2004ம் ஆண்டு யுத்தநிறுத்த காலத்திலை தான் எங்கவூர்(இலக்கணாவத்தை கற்பகவிநாயர்) ஆலயம் புதிப்பித்து பெரிசாக கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

14048005.jpg

வடமாகாணத்தில் பிரபல்யமான பாடசாலைகளில் பெயர் குறிப்பிடக்கூடிய உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி, உடுப்பிட்டி மகளிர் கல்லூரி போன்றவை தான் இலக்கணாவத்தைக்கு அருகாமையில் உள்ள பாடசாலைகளாகும்.

75140031.jpg

இவை உடுப்பிட்டி முக்கிய அதாவது பிரதான சந்தியில் ஒன்றை ஒன்று பார்த்தவண்ணம் அமைந்துள்ளன. நான் படித்த காலத்திலையே இந்த இரு பாடசாலைகளிலும் முறையே கிட்டத்தட்ட 1500 மாணவர்கள் கல்வி கற்றுக்கொண்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அதிகளவான புத்தகங்கள், பேப்பர்கள் இலகுவாக கிடைப்பதினால் வல்வெட்டித்துறைச் சந்தியிலை இருக்கிற சனசமூக நிலையத்தை தான் அதிகளவிலை நாடுவோம்.

அந்தக்காலத்திலை அதாவது ஊர்ப்பிரச்சினை, எல்லைப்பிரச்சினைகள் ஏற்படும் காலத்திலை பாருங்கோ எங்கவூர் இலக்கணாவத்தை தான் எல்லா ஊர் மக்களுடனும் நட்புடனும் பிரச்சினையில்லாமலும் இருந்துள்ளது.

வடமராட்சியிலை கட்டிடங்கள், வாகனங்கள் போன்றவற்றிற்கு வர்ணம் பூசுவதிலை இலக்கணாவத்தை தான் மிகவும் பிரபல்யம் ஆகும்.

இலக்கணாவத்தை சிறிதாக இருந்தாலும் கலைஞர்களுக்கு பஞ்சமில்லை, எழுபதுகளில் வடமராட்சியில் இடம்பெறும் நாடகப்போட்டிகளில் பங்குபற்றி பலதடவை முதல்பரிசான தங்கப்பதக்கம் பெற்ற கலைஞரான உடுப்பிட்டியூர் யோகன் என்பவர் பிறந்த ஊரும் இலக்கணாவத்தை ஆகும். இவர் தயாரித்து நடித்த நாடகங்களில் அணையாத தீபங்கள், கறைபடிந்த கண்ணீர் போன்றவை எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவையாகும். இதைவிட தொண்டமானாறு செல்வச்சந்நிதியிலை இவரது வில்லிசையை பார்க்கவென்றே பல்லாயிரக்கணக்கான மக்கள் குவிவது வழமை. இவரது இறுதிக்காலங்களில் தாயக சம்பந்தமாக தனது கலைப்பயணத்தை தொடர்ந்துள்ளார்.

இதைவிட பெயர்கள் குறிப்பிட முடியாதளவிற்கு விடுதலைப்போராளிகள், ஊடகவியலாளர்கள், பல பட்டதாரிகள் போன்றவர்களையும் இலக்கணாவத்தை தன்வசமாக கொண்டுள்ளதும் குறிப்பிட்டாகவேண்டும்.

இலக்கணாவத்தையிலை தான் நான் பிறந்தேன் என்பதிலை அதாவது நான் பிறந்த ஊர் இலக்கணாவத்தை தான் என்பதிலை பெருமைப்படுகிறேன்.

Edited by வல்வை லிங்கம்

  • Replies 59
  • Views 8.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்களும் ஒரு கெட்டிக்காரன் தான் :lol:

வாழ்த்துக்கள் :lol:

வல்வை அண்ணை, உங்க ஊர் பற்றிய குறிப்பு அருமை. பேஸ்புக்கிலை நீங்கள் போட்ட காணொளியையும் ஏற்கனவே பார்த்து இருந்தன். ஆலமரத்தை பார்க்கவே ஆசையாய் இருக்கிது. மிச்ச ஆக்களும் உங்க ஊர்கள பற்றி வசதிப்படும்போது எழுதினால் அறிஞ்சு கொள்ளலாம்.

நீங்களும் ஒரு கெட்டிக்காரன் தான் :lol:

வாழ்த்துக்கள் :lol:

நானும் பச்சை குத்தி ஆமோதிக்கின்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்களும் ஒரு கெட்டிக்காரன் தான் :lol:

வாழ்த்துக்கள் :lol:

வணக்கம் சகோதரம் நலமா? எதை வைத்து நான் கெட்டிக்காரன் என்று பொய்சொல்கிறீர்கள்?

நான் பல விடயங்களை பகிர்ந்து கொள்ளவேண்டும் என்பதிற்காக எனது முகத்திரையை கிழித்துவிட்டேன் என்பதை எனது பெயர் மாற்றத்தில் இருந்து புரிந்திருப்பீர்கள் தானே?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வல்வை அண்ணை, உங்க ஊர் பற்றிய குறிப்பு அருமை. பேஸ்புக்கிலை நீங்கள் போட்ட காணொளியையும் ஏற்கனவே பார்த்து இருந்தன். ஆலமரத்தை பார்க்கவே ஆசையாய் இருக்கிது. மிச்ச ஆக்களும் உங்க ஊர்கள பற்றி வசதிப்படும்போது எழுதினால் அறிஞ்சு கொள்ளலாம்.

நானும் பச்சை குத்தி ஆமோதிக்கின்றேன்.

முரளி பல விடயங்கள் உங்களிடம் இருந்து கற்றவை என்பதை இந்த சந்தர்ப்பத்தில் கூறுவதில் மகிழ்ச்சி!

எங்கவூர் சார்பாக facebook இல் ஒரு group தொடங்கியுள்ளேன், இதில் ஆச்சரியம் என்னவென்றால் மிகச்சிறிய குழந்தைகள் என்ன அழகாக தமிழில் பதிவு செய்யுதுகள் தெரியுமோ.

  • கருத்துக்கள உறவுகள்

அருமை வல்வை லிங்கம்.வல்வெட்டி வரை வந்துள்ளேன்.கரவெட்டி ,நெல்லியடி அத்துப்படி. மயிர்கூச்செறிகிறது உங்கள் சிறு கிராமத்தை பார்க்கும் போது.இணைப்புக்கு நன்றி. :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அருமை வல்வை லிங்கம்.வல்வெட்டி வரை வந்துள்ளேன்.கரவெட்டி ,நெல்லியடி அத்துப்படி. மயிர்கூச்செறிகிறது உங்கள் சிறு கிராமத்தை பார்க்கும் போது.இணைப்புக்கு நன்றி. :lol:

நன்றி நுனாவிலான்!

வல்வெட்டி, நெல்லியடி வரை வந்துள்ளீர்கள் அதிலை இருந்து ஒரு குரல் கொடுத்திருந்தாலே கேட்டிருக்கும். அடுத்தமுறை வரும்போது அந்த தவறை செய்யாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நுனாவிலான்!

வல்வெட்டி, நெல்லியடி வரை வந்துள்ளீர்கள் அதிலை இருந்து ஒரு குரல் கொடுத்திருந்தாலே கேட்டிருக்கும். அடுத்தமுறை வரும்போது அந்த தவறை செய்யாதீர்கள்.

குரலென்ன பூஞ்செட்டே கொண்டு வருகிறேன்.

எனது தந்தையார் கரவெட்டியை சேர்ந்தவர் என்பதால், வடமராட்சி, குறிப்பாக கரவெட்டி ,நெல்லியடி வதிரி,வல்வெட்டி.உடுப்பிட்டி ,தும்பளை. கரணவாய் என பல இடங்கள் இலங்கை இராணுவம் தொடக்கம் இந்திய இராணுவம் வரை ஓடியது இன்றும் பசுமரத்து ஆணியாக உள்ளது.

மேலும் இலங்கையில் தமிழர் பகுதியில் போகாத இடம் நயினாதீவு மட்டகளப்பு.அம்பாறை மிக அண்மையில் பார்த்த இடம். என்னால் மறக்க முடியாத இடம் பதுளை மாவட்டம் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வல்வை

பெயர் மாறியவுடன் எழுத்துக்களிலும் வித்தியாசம் தெரிகின்றது.

கிராம வாழக்கையை மறக்க முடியுமா?

ஊரைப் பற்றி ஊர்ப் பேச்சுவழக்கிலேயே எழுதியது வாசிக்க இனிமையைத் தருகின்றது

நல்லதொரு பதிவு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குரலென்ன பூஞ்செட்டே கொண்டு வருகிறேன்.

எனது தந்தையார் கரவெட்டியை சேர்ந்தவர் என்பதால், வடமராட்சி, குறிப்பாக கரவெட்டி ,நெல்லியடி வதிரி,வல்வெட்டி.உடுப்பிட்டி ,தும்பளை. கரணவாய் என பல இடங்கள் இலங்கை இராணுவம் தொடக்கம் இந்திய இராணுவம் வரை ஓடியது இன்றும் பசுமரத்து ஆணியாக உள்ளது.

மேலும் இலங்கையில் தமிழர் பகுதியில் போகாத இடம் நயினாதீவு மட்டகளப்பு.அம்பாறை மிக அண்மையில் பார்த்த இடம். என்னால் மறக்க முடியாத இடம் பதுளை மாவட்டம் தான்.

என்னெங்க உடுப்பிட்டி, வல்வெட்டி வரை வந்திட்டு இலக்கணாவத்தை மட்டும் வராமல் போகுமளவிற்கு அப்படி என்னதான் கோபமோ?

Edited by வல்வை லிங்கம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வல்வை

பெயர் மாறியவுடன் எழுத்துக்களிலும் வித்தியாசம் தெரிகின்றது.

கிராம வாழக்கையை மறக்க முடியுமா?

உண்மைதானெங்க, அதாவது சில சட்ட பிரச்சினைகள் நிமிர்த்தமும், அரசியலில் அதிக ஆர்வம் இருந்தபடியினாலும் முகமூடி போடவேண்டிய கட்டாயம் இருந்தது.

இனிமேல் அரசியல் கலப்படமில்லாது வாழ்க்கையை போக்கி பார்ப்போமென்ற ஒரு நட்பாசை தான் இந்த மாற்றமெல்லாத்திற்கும் காரனம் பாருங்கோ.

உங்க கருத்துக்கு நன்றியெங்க!

ஊரைப் பற்றி ஊர்ப் பேச்சுவழக்கிலேயே எழுதியது வாசிக்க இனிமையைத் தருகின்றது

நல்லதொரு பதிவு

நன்றி நிழலி!

நாங்கள் எத்தனை பக்கங்களை எழுதி கிழித்தாலும், நாம் பிறந்த ஊர், வாழ்ந்த ஊர், படித்த பாடசாலை போன்றவற்றைப்பற்றி எழுதுவதிலும், கருத்தாடல் செய்வதிலும் உள்ள சந்தோஷம் வார்த்தையால் விபரிக்கமுடியாதுங்க.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி உங்கள் ஊரைப்பற்றி அறியத்தந்தமைக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

தமது அடையாளததையே தொலைத்து விட்டு வாழும் மக்களுக்கு ......ஊர் பற்றுடன் , பதிவெழுதும் பதிவருக்கு நன்றி. இன்னும் விபரமாக் நீண்ட பதிவைக் எழுதுவது சிறந்தது .பின் வரும் சந்ததிக்கு உதவும். மேலும் தொடருங்கள் .

அசத்திட்டீங்க மருமகன்.

கிட்டத்தட்ட காட்சியும் கானமும் மாதிரியுள்ளது, நிஷமாக ஒரு கிராமத்திலை கொண்டுபோய் நிறுத்திட்டீங்கள், எப்படி திரும்பி வாறதென்றுதான் யோசனை, அதையும் கொஞ்சம் விபரமாக சொல்லுங்களேன்.

பாராட்டுக்கள் மருமகன்.

இலக்கணாவத்தை .... ஆரம்பத்தில் ரஞ்சனாவில் கள்ளப்படங்களுக்காக சைக்கிள் ஓடத்தொடங்கி .... 84ல் சிங்களவன் பள்ளிக்கூடத்தை கொழுத்தி விட்டான், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதப்போராட்டங்கள் என இப்பகுதிகளுக்கு வரத்தொடங்கி ... இதே ஆலமரத்தின் கீழ் விண்ணுலகம் சென்று விட்ட மறக்கமுடியாத எனது நண்பர்களுடனான சந்திப்பு ..... இனிமையான காலங்கள், இனி வருமா??????? ..... நன்றிகள் இணைப்பிற்கு!!

உங்கள் பதிவின் மூலம் தான் இலக்கணாவத்தை என்ற ஊர் இருப்பதைபற்றி அறிந்தேன். உங்களை போன்று இயலுமானவர்கள் தங்கள் ஊரைப்பற்றி அறியத்தந்தால் வருங்கால சந்ததிக்கு ஈழத்தின் அருமை தெரிவதற்கும் மற்றும் என்னைப்போன்று பல ஊர்களை அறியாதவர்களுக்கு அவற்றை பற்றி அறிந்துகொள்ளவும் நல்ல வாய்ப்பாக அமையும்.

தங்கள் பதிவுக்கு நன்றி வல்வை அண்ணா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி உங்கள் ஊரைப்பற்றி அறியத்தந்தமைக்கு.

உங்க ஆதரவிற்கு நன்றியெங்க!!!

தமது அடையாளததையே தொலைத்து விட்டு வாழும் மக்களுக்கு ......ஊர் பற்றுடன் , பதிவெழுதும் பதிவருக்கு நன்றி. இன்னும் விபரமாக் நீண்ட பதிவைக் எழுதுவது சிறந்தது .பின் வரும் சந்ததிக்கு உதவும். மேலும் தொடருங்கள் .

உங்கள் கருத்துக்கு நன்றி அக்கா!

எனக்கு இதை தொடரும் எண்ணம் இருக்கிறது.

அசத்திட்டீங்க மருமகன்.

கிட்டத்தட்ட காட்சியும் கானமும் மாதிரியுள்ளது, நிஷமாக ஒரு கிராமத்திலை கொண்டுபோய் நிறுத்திட்டீங்கள், எப்படி திரும்பி வாறதென்றுதான் யோசனை, அதையும் கொஞ்சம் விபரமாக சொல்லுங்களேன்.பாராட்டுக்கள் மருமகன்.

நன்றியெங்க!

உங்களைப்போன்றோரின் பாராட்டுக்கள் தான் எங்களை ஊக்குவிக்கின்றன, உங்கள் கருத்தின் மூலம் நான் தவறவிட்ட விடயங்கள் நினைவூட்டுகின்றன, கவனத்தில் எடுக்கின்றேன்.

இலக்கணாவத்தை .... ஆரம்பத்தில் ரஞ்சனாவில் கள்ளப்படங்களுக்காக சைக்கிள் ஓடத்தொடங்கி .... 84ல் சிங்களவன் பள்ளிக்கூடத்தை கொழுத்தி விட்டான், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதப்போராட்டங்கள் என இப்பகுதிகளுக்கு வரத்தொடங்கி ... இதே ஆலமரத்தின் கீழ் விண்ணுலகம் சென்று விட்ட மறக்கமுடியாத எனது நண்பர்களுடனான சந்திப்பு ..... இனிமையான காலங்கள், இனி வருமா??????? ..... நன்றிகள் இணைப்பிற்கு!!

ஓ, நீங்களும் அந்த ஆலமரத்தின் சுகத்தை அனுபவித்தீர்களோ, அந்த ஞாபகம் மனதில் ரொம்ப தொல்லை தருமே?

உங்களது கருத்துக்கு நன்றியெங்க.

Edited by வல்வை லிங்கம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பதிவின் மூலம் தான் இலக்கணாவத்தை என்ற ஊர் இருப்பதைபற்றி அறிந்தேன். உங்களை போன்று இயலுமானவர்கள் தங்கள் ஊரைப்பற்றி அறியத்தந்தால் வருங்கால சந்ததிக்கு ஈழத்தின் அருமை தெரிவதற்கும் மற்றும் என்னைப்போன்று பல ஊர்களை அறியாதவர்களுக்கு அவற்றை பற்றி அறிந்துகொள்ளவும் நல்ல வாய்ப்பாக அமையும்.

தங்கள் பதிவுக்கு நன்றி வல்வை அண்ணா.

ஜயோ! உந்த வத்தை என்ற சொல்லைப்போல எங்கவூரைச்சுற்றி நிறைய வித்தியாசமான ஊர்கள் இருக்கெங்கோ, கொற்றாவத்தை, இமையாணன், கெருடாவில், கல்லுவம், கம்பர்மலை, கொம்மந்தரை, மயிலியதனை, இலந்தைக்காடு, நாவலடி,திருவானி இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் பாருங்கோ.

உங்கள் கருத்துக்கு நன்றி சகோதரி ஈழமகள்!

ஜயோ! உந்த வத்தை என்ற சொல்லைப்போல எங்கவூரைச்சுற்றி நிறைய வித்தியாசமான ஊர்கள் இருக்கெங்கோ, கொற்றாவத்தை, இமையாணன், கெருடாவில், கல்லுவம், கம்பர்மலை, கொம்மந்தரை, மயிலியதனை, இலந்தைக்காடு, நாவலடி,திருவானி இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் பாருங்கோ.

உங்கள் கருத்துக்கு நன்றி சகோதரி ஈழமகள்!

இதில் இருக்கும் ஒரு ஊர் கூட எனக்குத்தெரியவில்லை... :)

வல்வை அண்ணா உங்கள் ஊர் பற்றி தெரிய தந்தமைக்கு நன்றி... இப்படி ஒரு ஊர் இருப்பது உங்கள் பதிவு மூலம்தான் எனக்கு தெரிய வந்தது...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதில் இருக்கும் ஒரு ஊர் கூட எனக்குத்தெரியவில்லை... :)

வல்வை அண்ணா உங்கள் ஊர் பற்றி தெரிய தந்தமைக்கு நன்றி... இப்படி ஒரு ஊர் இருப்பது உங்கள் பதிவு மூலம்தான் எனக்கு தெரிய வந்தது...

நன்றி சகோதரி!

உங்கள் பின்னூட்டல்கள் தான் என்னை தொடர்ந்து எழுத தூண்டுகின்றன, முயற்சிக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

.

படங்கள் , ஒளிப்பதிவுகள் மூலம் ஒரு அழகிய ஊரை எமக்கு அறியத்தந்தமைக்கு நன்றி வல்வை.

உங்கள் ஊர் ஆலமரத்தின் சூழல் எனக்கும் பிடித்துள்ளது.

.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

.

படங்கள் , ஒளிப்பதிவுகள் மூலம் ஒரு அழகிய ஊரை எமக்கு அறியத்தந்தமைக்கு நன்றி வல்வை.

உங்கள் ஊர் ஆலமரத்தின் சூழல் எனக்கும் பிடித்துள்ளது.

.

உங்கள் கருத்துக்கு நன்றி தமிழ் சிறி!

இன்னும் பலவிடயங்களை உள்ளடக்கியிருக்கலாம் ஆனால் அதற்குரிய நேரம் இதுவல்ல.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அசத்திட்டீங்க மருமகன்.

கிட்டத்தட்ட காட்சியும் கானமும் மாதிரியுள்ளது, நிஷமாக ஒரு கிராமத்திலை கொண்டுபோய் நிறுத்திட்டீங்கள், எப்படி திரும்பி வாறதென்றுதான் யோசனை, அதையும் கொஞ்சம் விபரமாக சொல்லுங்களேன்.

பாராட்டுக்கள் மருமகன்.

ஜயோ பெரிய மாமி மன்னித்திடுங்கோ!

கொஞ்சம் வேலைப்பளுவிலை உங்களுக்கு உதவி பண்ணமுடியாமல் போச்சுது, அதாவது இலக்கணாவத்தையில் இருந்து எப்படி வெளியிலை வாறதெண்டு. உள்ளே போனீங்க கொஞ்சக்காலம் உங்கேயே இருந்துட்டு வாறது தானே? சரி உங்கே வரவேற்பு, உபசரிப்பு எல்லாம் எப்படியிருந்திச்சுது?

உண்மையைச் சொல்றன் பாருங்கோ உந்த உபசரிப்பு என்றால் என்ன என்று அறிய வேண்டுமென்றால் ஒருக்கால் இலக்கணாவத்தைக்கு வாருங்க அப்பதான் புரியும். எங்கவூருக்கை கால் வைத்தாலே போதும் போற வாறவன் எல்லாம் வலிய வந்து அண்ணை ஊருக்குப்புதிசுமாதிரி இருக்கு எங்கே போகவேணும் சொல்லுங்கோ கொண்டுபோய் விடுறன் என்பாங்க.

அதுமட்டுமல்லங்க போறவரை நீங்க சந்திக்காட்டியும் பறவாயில்லை உங்களை சந்திக்கிறவங்க யாராக இருந்தாலும் உங்களை சாப்பிடப்பண்ணாமல் வெளியிலை போகவே விடமாட்டாங்க பாருங்க, அதாவது நீங்க யாரிட்டை வந்தனிங்க என்று பார்க்கமாட்டாங்க தங்க ஊருக்கு வந்தனிங்க என்ற உரிமையிலை தான் பாருங்க உங்களை கவனிப்பாங்க.

இலக்கணாவத்தைக்கு நீங்க யாழ்பாணத்திலை இருந்து போறதாக இருந்தால் பருத்தித்துறைக்கு போகிற 751 இலக்கமுடைய

imagesbus.jpg

பேரூந்து எடுக்கவேணுமெங்க, நீங்க இலக்கணாவத்தை என்று சொன்னாலே கொண்டக்டர் அண்ணைக்கு உடனே புரிந்திடும் பாருங்க. உதுக்கு பலகாரனம் இருக்கெங்க, அதிலை முக்கியமாக நம்ம ஊரவங்க பலபேர் பேருந்து சாரதியாகவும், கொண்டக்டராகவும் தானெங்க வேலை செய்தாங்க

images2ls.jpg

இதிலை இன்னுமொரு வேடிக்கை என்னவென்றால் என்னுடைய அப்பாவும் கொண்டக்ரர் தானேங்க.

Edited by வல்வை லிங்கம்

  • கருத்துக்கள உறவுகள்

இலக்கணாவத்தைக்கு வந்த ஞாபகம் இருக்கின்றது. ஆனால் ஆலமரம் மறந்துவிட்டது. நினைவூட்டியதுக்கு நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.