Leaderboard
-
ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்16Points20018Posts -
பகிடி
கருத்துக்கள உறவுகள்13Points597Posts -
suvy
கருத்துக்கள உறவுகள்9Points33600Posts -
குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்8Points46783Posts
Popular Content
Showing content with the highest reputation on 04/23/24 in all areas
-
புலத்தில் இருந்துகொண்டு ஊரில் வாங்கிய காணியை பெயர் மாற்றம் செய்வது எப்படி?
நன்றி 5 பரப்புக் காணி ( அம்மம்மாவின் தாயாரின் காணி ) 20 வருசத்துக்கு முன் வெறும் 30 லட்ஷத்துக்கு வந்தது, நான் வெளிநாட்டில் படித்துக்கொண்டு இருந்ததால் அம்மாவால் அதை வாங்க முடியவில்லை. பின்னர் போன வருடம் பரப்பு 27 லட்ஷம் படி கிட்டத்தட்ட மொத்தம் ஒண்டரை கோடி என்று விலைக்கு திடீர் என்று வந்தது. இங்கு எனக்கு படிப்பு, exam வேலை என்று பல நெருக்கடிகளுக்கு இடையில் இருக்கிற காசை எல்லாம் போட்டு அதை வாங்கினேன். வாங்கினதும் அம்மம்மா சந்தோசமாக என்னுடன் அந்தக் காணியில் தான் வாழ்ந்த அனுபவங்களைப் பகிர்ந்து மூத்த பேரன் அதை வாங்கிய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அடுத்த கிழமை தனது 94 ம் வயதில் இறந்தும் போனார். அவர் இறந்த அதே நாள் எனக்கு மகனும் பிறந்தான்.10 points
-
அப்பா உடனே வாங்கோ.
6 pointsபேரனுக்கு ஆர்நவ் (Arnaav)என்று பெயர் வைத்துள்ளார்கள். வாழ்த்திய நல்லுள்ளங்களுக்கு மிக்க நன்றி.6 points
-
அமெரிக்காவில் இந்திய மாணவிகள் இருவர் கைது.
கனடா மற்றும் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது அமெரிக்காவின் சட்ட திட்டங்கள் மிகவும் கடுமையானவை. நான் 2001 ஆம் ஆண்டு நியூசிலாந்தில் இருந்து அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்தபோது இங்குள்ள சட்டதிட்டங்கள் மிகவும் கடினமானவையாக தெரிந்தது. என்ன செய்தாலும் களவு களவுதான். பிழை பிழைதான். எனது மகனின் பாடசாலை அதிபர்இ மிகவும் பணக்காரி. Best Buy (Opelika) என்னும் கடையில் பெறுமதியான வயரை எடுத்து CCTV இல் பார்த்ததோடு Security Guard உம் பிடித்து விட்டான். உடனே போலீஸ் வந்து கைது விட்டார்கள். பத்திரிகை இணையதளம் எல்லாம் கைது செய்த படத்தை (Mugshot) போட்டுவிட்டார்கள். வேலையும் இல்லாமல் போயிவிட்டது. ஆனால் அவ வெள்ளைக்காரி. அத்துடன் மிகவும் செல்வாக்கு உள்ள குடும்பம். அதனால் எதோ ஒரு விதமாக மன்னிப்பு கிடைத்து இப்ப அதே ஊரில் நான் படித்த யுனிவர்சிட்டியில் இல் வேலை செய்கிறா. அமெரிக்காவின் சட்ட திட்டங்கள் கடுமையானவை என்றாலும்இ இப்படியான சலுகைகளும் பணக்கார மற்றும் செல்வாக்கு உள்ள ஆக்களுக்கு வேறுவிதமான சலுகைகள் கிடைக்கும். சில வருடங்களுக்கு முன்பு கனடாவில் ஒரு தமிழ் போலீஸ் ஒரு கறுப்பின இளைஞன் நேர்முகத்தேர்வுக்கு போவதற்காக உடுப்பு திருடியதை மன்னித்து அதற்கான பணத்தை அவரே செலுத்தி இளைஞனை கைது செய்யாமல் விட்டார். அப்போதுதான் எனக்கு தெரியும் போலீஸ் காரர்களுக்கு இப்படி செய்ய அதிகாரம் இருக்கு என்று.6 points
-
புலத்தில் இருந்துகொண்டு ஊரில் வாங்கிய காணியை பெயர் மாற்றம் செய்வது எப்படி?
1) காணி உங்கள் பெற்றோரின் பெயரில் இருப்பதால் அவர்கள் சார்பாக இலங்கையில் ஒருவருக்கு Power of Attorney கொடுக்கப்பட வேண்டும். (அந்த Power of At. காணியை உங்கள் பெயருக்கு மாற்றம் செய்வதற்காக மட்டுமே என கொடுக்கப்பட வேண்டும் என்பது முக்கியம் 😉) 2) உங்கள் சார்பாக அங்கே செயற்படுவதற்கு நீங்களும் அங்கே ஒருவருக்கு Power of Attorney கொடுக்க வேண்டும். (கொடுக்கப்படும் Power of At. எதற்காக என்பதில் அதிக கவனம் எடுக்கவும்)😎 3) அங்கே ஒரு சட்டத்தரணியை தெரிவு செய்து அவரது ஆலோசனையுடன் அவரைக் கொண்டே Power of Attorney ஐ ஆயத்தம் செய்து உங்களிடம் அனுப்பி வைக்க கூறுங்கள். அதில் சரி பிழை பார்த்தபின்னர், இறுதி document ல் அண்மையில் உள்ள ஒரு Lawyer இடம் கொண்டு சென்று அவர் முன்னிலையில் Power of Attorney யில் கையொப்பம் இடவும். (இரு சாட்சிகள் தேவை. அவர்களது அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களைக் கொண்டுசெல்ல வேண்டும் )🥷 4) Scan செய்யப்பட்ட ஒரு பிரதியை email மூலம் உங்கள் பிரதிநிதிக்கு அனுப்பவும்.✈️ 5) Original மூலப்பிரதியை கூரியர் மூலம் அனுப்பவும் . இதையடுத்து, உங்கள் லாயர் 😩 அதைப் காணிக் கந்தோரில் பதிவு செய்வார். அதன் பின்னர் உறுதி உங்கள் பெயருக்கு மாற்றி எழுதும் செயற்பாடு இடம்பெறும். 👏 6) முத்திரை வரி; இலங்கைப் பிரசைக்கு காணியின் பெறுமதியில் 4% 👌 வெளிநாட்டுப் பிரசைக்கு; 100% 🥶 7) எழுத்துக் கூலி ; சராசரியாக காணியின் பெறுமதியில் 1% 😳 குறிப்பு: காணியின் பெறுமதியைக் மிகவும் அதிகமாகக் குறைத்துக் காட்டினால் உங்கள் பிரதேச காணிக் கந்தோரால் உங்கள் காணியின் பெறுமதியை மீண்டும் Appraisal செய்து தண்டனையுடன்(10%) கூடிய வரிவிதிப்பு வரும் சந்தர்பம் அதிகம் உண்டு. 😁 Power of Attorney ஐ கொடுக்கும்போது குறிப்பிட்ட நோக்கத்திற்காக மட்டும் (Limited) கொடுப்பது பாதுகாப்பானது. 🤣 எழுத்து வேலையெல்லாம் செய்து காணியின் புதிய உறுதி வருவதற்கு 1-2 மாதங்கள் வரை ஆகலாம். 😴 காணிக்கந்தோர்களிடையே ஒரு சீரான நடைமுறை இன்னும் கடைப்பிடிக்கப்படவில்லை. இடத்திற்கு இடம் சில வேறுபாடுகள் உண்டு. 🤨 (Power of At. எழுதுவதற்கு Rs. 25000 வரை அறவிடுகிறார்கள். 🤦🏼♂️) அம்புட்டுதே. 😁4 points
-
"சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"
"சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்" 50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது. தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது. முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது. சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள். துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது. இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்? இங்கே தரப்பட்ட துளையிட்ட பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு 2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும். ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது. அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]3 points
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
தோழரே.. அடிக்குற ஆற்றுமணல் காசில் .. 40% கொமிசன் காசில் .. துண்டு சீட்டு பிரச்சாரம் எந்த மூலை.? 1) 8% - 12% மேல் 2) மூன்றாவது பெரிய கட்சி 3) சின்னத்தை தக்க வைத்தல் 4) 1 கோடி வாக்குகள் - இலக்கு நமக்கு தனிபட்ட விருப்பம் என்று இருந்தாலும் .. கள யதார்த்தம் வேறு அல்லவா.? இந்த நான்கில் ஒன்று வந்தாலும் மகிழ்ச்சியே.3 points
-
வடக்கில் போதைப்பொருள் பாவனைகள் அதிகரிப்பு : மூலச்சக்திகள் யார்?
முன்பு ஒரு திரியில் எழுதியது, யாழில் சில தமிழ் அரசியல்வதிகள், வாள் வெட்டுக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் வியாபாரம் ஆகிய மூன்றும் ஒரு முக்கோணத் தொடர்புடையவை. போதைப்பொருள் பாவனையின் மூல சக்தி பற்றிப் பத்திரிகையில் நேரடியாக எழுத முடியது.3 points
-
இரசித்த.... புகைப்படங்கள்.
3 points3 points
- புலத்தில் இருந்துகொண்டு ஊரில் வாங்கிய காணியை பெயர் மாற்றம் செய்வது எப்படி?
மிக்க நன்றி @Kapithanஅவர்களே. நான் முதலில் இலங்கைப் பிராஜா உரிமைக்கு விண்ணப்பித்து அதைப் பெற்று விட்டு அப்பா அம்மாவோடு இலங்கை சென்று வேலையை முடிப்பதே இலக்குவான விடயம் என்று நினைக்கிறன். தகவல்களை தந்ததற்கும் அதற்காக நீங்கள் எடுத்துக்கொண்ட பொன்னான நேரத்துக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி3 points- புலத்தில் இருந்துகொண்டு ஊரில் வாங்கிய காணியை பெயர் மாற்றம் செய்வது எப்படி?
காணியின் சந்தை மதிப்பின் 100% கட்ட வேண்டும். சந்தை மதிப்பும் நீங்கள் வேண்டிய காணியின் வரி மதிப்பீட்டு விலையும் ஒன்றல்ல. பொதுவாக வரி மதிப்பீட்டு விலை நிர்ணயம் கொள்வனவு விலையைவிட குறைவாகவே இருக்கு. நீங்கள் உங்கள் முதுசம் வேறொருவர் கைக்குள் போகக்கூடாது என்பதற்காக அதிக விலை கொடுத்து வாங்கியிருக்கலாம். அல்லது உங்கள் உறவினர்கள் அதை உங்களுக்கு உறவு என்கிற வகையில் குறைந்த விலையில் கொடுத்திருக்கலாம். ஆனால் (உ+ம்) வட மாகாண சபையின் காணி மதிப்பீடே காணியின் ஊண்மையான (வரி) மதிப்பாகும். அதற்குத்தான் நீங்கள் முத்திரை வரி கட்டுவீர்கள். நீங்கள் இரட்டைக் குடியுரிமைக்கு விண்ணப்பித்து அதைப் பெற்றுக்கொண்டபின்னர் (அதைப் பெற ஏறக்குறைய 1 வருடமாகும்) காணியை உங்கள் பெயருக்கு மாற்றினால் Dual citizenship இரட்டைக் குடிவைத்திருப்பவர்களுக்கு 4% மட்டுமே . கொசுறு; இரட்டைக் குடியுரிமை $2 000 US Dollars. (பிரதான விண்ணப்பதாரிக்கு, மேலதிக குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு $500(Each person) ஒருவரது விண்ணப்பக் கட்டணம் 40 Canadian dollars. மேலதிக செலவு ஏறக்குறைய $ 500-600 (ஒருவருக்கு ) உங்கள் பரம்பரைக் காணியைப் பெற்றுக்கொண்டதற்கு வாழ்த்துக்கள் 🙏 அதன் மகிழ்ச்சி அழவில்லாதது. 😃3 points- அப்பா உடனே வாங்கோ.
2 pointsசித்திரை 27 இல் மகனுக்கு ஒரு மகன் பிறப்பதாக இருந்தது.ஏற்கனவே திகதிகள் தெரிந்தபடியால் 13ம் திகதி வட கரோலினா போவதற்கு விமான சீட்டுகளும் எடுத்து வைத்திருந்தோம். அதற்கிடையில் மனைவியும் நானும் பார்க்க வேண்டிய வைத்தியர்களையும் பார்த்துக் கொண்டிருந்தோம். 10ம் திகதி Cardiologist இடம் பகல் 10;30 க்கு பார்க்க வேண்டும்.(6 மாதத்துக்கொரு தடவை வழமையாக பார்ப்பது தான்). 10 மணி போல வைத்தியரைப் பார்க்க போய்க் கொண்டிருந்த போது மகனிடமிருந்து தொலைபேசி அலறுகிறது.மணிக்கூட்டைப் பார்க்க மகன் தான் எடுக்கிறான் என்று தெரிகிறது.சட்டைப் பையில் இருந்து உடனடியாக எடுக்க முடியவில்லை. வண்டியை ஓரம்கட்டி விட்டு என்னடா வேலைக்கு போகலையா? வீட்டிலிருந்து வேலையா? என்றேன். இல்லை இல்லை ஆஸ்பத்திரியில் நிற்கிறேன்.இன்றிரவு அல்லது காலை பிள்ளை பிறக்க போகுது.உடனடியாக ரிக்கற்றை போட்டுட்டு வாங்கோ. ஏனடா ஏதாவது பிரச்சனையோ? ஒன்றுமில்லை.இப்ப டாக்ரரைப் பார்க்க வேண்டாம் கான்சல் பண்ணிப் போட்டு போய் வாற அலுவலைப் பாருங்கோ.பிற்பகல் 4-4;30க்கு மற்றவங்கள் பாடசாலையால் வர முதல் இங்கே நிற்க வேண்டும்.இப்ப டாக்ரர்மாரை 24 மணிநேரத்துக்கு முன் கான்சல் பண்ணலை என்றால் 50 டாலர்கள் தண்டம்.சரி சரி நாங்கள் வாறம் பிரச்சனை இல்லை. உடனே மனைவிக்கு விடயத்தைச் சொல்லி நான் டாக்ரரைப் பார்த்துவிட்டு வருகிறேன் உடுப்புகளை அடுக்கி போற அலுவலை பார்.டாக்ரரின் அலுவலகத்தில் சிறிய பிரச்சனை அவசரம் போக வேண்டும் கனநேரம் செல்லுமா என இல்லை அடுத்தது நீ தான். அன்று எனது நல்லகாலம் வழமையை விட நேரத்துக்கே முடித்து வீடு வந்து விமான பயணத்துக்கு ஆராய தொடங்கினேன்.உடனே போவதென்றால் பல மடங்கு கூடுதலாக கொடுக்க வேண்டும்.சில விமானங்கள் குறைவாக இருந்தாலும் புத்தக பையைத் தவிர வேறு எது கொண்டு போனாலும் கூடுதாக பணம் செலுத்த வேண்டும். பிற்பகல் மூன்று மணிக்கே விமானம்.திடீரென்று புறப்படுவதால் எதைஎதை எப்படி செய்வதென்றில்லாமல் செய்து முடிந்து வீட்டிலிருந்து புறப்படும் போது மணி 2 ஆகிவிட்டது.3;10 க்கு விமானம். விமானநிலையம் போய்ச் சேர 2;20 ஆகிவிட்டது.வடகரோலினாவில் இருந்து சன்பிரான்சிஸ்கோ போவதால் ஒரு பெரிய பெட்டியும் கொண்டுவந்தோம்.சரி நீ போய் வரிசையில் நில் வெளியே உள்ள மெசினில் பெட்டியைப் போடுவதற்கு துண்டுகளை எடுத்துக் கொண்டு வாறன் என்று அதையும் ஓடிஓடி முடித்தோம். அடிக்கடி விமான பயணங்களை மேற்கொள்வதால் குளோபல் என்ரி எடுத்து வைத்திருக்கிறோம்.அதனால் வழமையான பாதையால் போகாமல் விசேடமாக பாஸ் வைத்திருப்பவர்களுக்கான பாதையால் போய் கையில் கொண்டு போன சிறிய பொதிகளையும் சோதனை முடிந்து எமது கதவுக்கு போனால் எல்லோரும் விமானத்தில் ஏறிவிட்டார்கள்.கடைசி ஓரிருவர் நின்றார்கள்.அப்பாடா என்று ஒரு நிம்மதி பெரு மூச்சுடன் விமானத்தில் ஏறினோம். ஆனாலும் 5 மணிக்கு வந்து பெட்டிகளை எடுத்துக் கொண்டு வீடு போய் சேர 6 மணியாகிவிடும்.மகனுக்கு விடயத்தை சொன்னேன்.பிரச்சனை இல்லை நண்பர் குடும்பம் ஒன்றை ஒழுங்கு பண்ணியுள்ளேன்.நீங்கள் வரும்வரை அவர்கள் வீட்டில் நின்று பார்ப்பார்கள். மகனின் வீடுவந்து சேர 6;15 ஆகிவிட்டது.பிள்ளைகளுக்கு ஒரே சந்தோசம்.நின்றவர்களுக்கு நன்றி சொல்விட்டு பிள்ளைகளின் அலுவல் களைப் பார்த்து உறங்கிவிட்டோம். காலை பிள்ளைகளை பாடசாலை அனுப்புவதற்காக ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்த போது 8 மணிபோல மகன் கதைத்தான். காலை 7;33க்கு மகன் சுகமாக பிறந்துள்ளான்.அனேகமாக நாளைக்குத் தான் விடுவார்கள்.மனதுக்கு பெரியதொரு நிம்மதியாக இருந்தது.2 points- அதிக வட்டி வருமானத்திற்கு அறவிடப்படும் வரி! கேவலமான செயலென கொதித்தெழும் பொருளாதார நிபுணர்
1. இலண்டனிலும் ஏனைய புலம்பெயர் தேசங்களிலும் காசை கள்ள வழிகளில் உழைத்துவிட்டு, அதை இந்த அடைக்கலம் தந்த நாடுகளில் declare பண்ணாமல், மேலதிகமாக அடைக்கலம் தந்த நாட்டில் முதலிட்டால் அல்லது வைப்பில் இட்டால் வரி கட்ட வேண்டி வரும் என்பதால் - இலங்கையில் வைப்பில் இட்ட வரி ஏய்பாளருக்கு ஆப்பாமா? சந்தோசம் 🤣. உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்தால் இப்படித்தான் நடக்கும். 2. ஓய்வூதியத்துக்கு, அல்லது ஓய்வூதியகாலத்தில் வரும் வருமானத்துக்கு வரி என்பது அப்படி ஒன்றும் கொடுமையான விடயமோ அல்லது புதிய் விடயமோ அல்ல. எல்லா நாடுகளிலும் வரி கட்ட கீழ் வரம்பு என்று உள்ளது. இதற்கு மேல் வரும் வருமானத்துக்கு வரி கட்டுவது இயல்பானதே. உதாரணமாக யூகேயில் பென்சன்+ஏனைய முதலீடுகள் தரும் ஆண்டு வருமானம் > வரிகட்டும் கீழ் வரம்பு எனில், வரம்புக்கு அதிகமாக வரும் வருமானத்திற்கு வரி அறவிடப்படும். https://www.unbiased.co.uk/discover/pensions-retirement/managing-a-pension/tax-on-pensions#:~:text=Do you pay tax on,tax of 40% kicks in. இலங்கை வங்குரோத்தானதுக்கு இப்படியான வரி ஏய்பும் ஒரு காரணம். இலங்கை இப்போ ஐ எம் எவ் கேட்டு கொண்டதன்படி தனது வரி விதிப்பில் உள்ள குறைகளை நீக்கி, வரி ஏய்ப்புக்கான வழிகளை அடைக்கிறது. வந்த நாள் முதல் கள்ள மட்டை போடுவது, கள்ள பியர் ஏத்துவது, கொவிட் உதவி பணத்தை கொள்ளை அடிப்பது. வருமானத்தை குறைத்து காட்டி வரி ஏற்பது என பணம் சேர்த்து, அதை இங்கே போட்டால் கேள்வி வரும் என்பதால் - இலங்கையில் பல மடங்கு கூடிய வட்டிக்கு ஆசைபட்டு - இப்போ குய்யோ, முறையோ என கத்துகிறார்கள் சிலர். # கொள்ளை அடித்ததாம் பெருமாளு, அதை புடிங்கி தின்னுதாம் அனுமாரு🤣2 points- புலத்தில் இருந்துகொண்டு ஊரில் வாங்கிய காணியை பெயர் மாற்றம் செய்வது எப்படி?
@Kapithan எனது காணி வீடு வயல் போன்ற சொத்துக்கள் அம்மா பெயரில் இருந்தது.அம்மா அதை அக்காவின் பெயருக்கு மாற்றி விட்டு போய் சேர்ந்து விட்டார். இதெல்லாம் ஆக பழைய கதை. புதுக்கதை என்னவென்றால் அந்த காணி சொத்துக்களை என் பெயருக்கு மாற்றுவதென்றால் ஊருக்கு வரும்படி அழைக்கின்றார்கள். ஆனால் அதை என் பிள்ளைகளுக்கு எப்படி மாற்றி விடலாம் என யோசிக்கின்றேன். அதை விட இன்னுமொரு பெரிய யோசனை என்னவென்றால் சொத்துக்களை மாற்றிய பின்.... அதை அயலவர் மற்றும் கள்ளர்,காடையர்களிடமிருந்து எப்படி பாதுகாத்துக்கொள்வது எப்படி என்பதுதான்? 😂2 points- யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
முதல் 35 கேள்விகளுக்கு தலா 2 புள்ளிகள் கேள்வி இலக்கம் 1 - 23 பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் எத்தனையாம் இடம் பிடிப்பார்கள்? 1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) மூன்றாம் இடம் 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) நான்காம் இடம் 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) மூன்றாம் இடம் 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன் முதலாம் இடம் 5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) இரண்டாம் இடம் 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) இரண்டாம் இடம் 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) மூன்றாம் இடம் 8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) முதலாம் இடம் 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) முதலாம் இடம் 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் கட்சி) இரண்டாம் இடம் 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) முதலாம் இடம் 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) நான்காம் இடம் 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) முதலாம் இடம் 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) மூன்றாம் இடம் 15) தயாநிதிமாறன் திமுக முதலாம் இடம் 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) முதலாம் இடம் 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) இரண்டாம் இடம் 18)ரி ஆர் பாலு ( திமுக) முதலாம் இடம் 19)எல் முருகன் (பிஜேபி) மூன்றாம் இடம் 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) முதலாம் இடம் 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக விஜயகாந்தின் மகன்) இரண்டாம் இடம் 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) முதலாம் இடம் 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) இரண்டாம் இடம் 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்? 1) 5% க்கு குறைய 2) 5% - 6% 3) 6% - 7% 4) 7% - 8% 5) 8% க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? கூட 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? பூச்சியம் 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? இரண்டு 28)இந்திய கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? இரண்டு 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? இரண்டு 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? பூச்சியம் 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? பூச்சியம் 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? பூச்சியம் 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? பூச்சியம் 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்? பூச்சியம் 35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? பூச்சியம் 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) பூச்சியம் 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) பூச்சியம் 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 39 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 22 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள். 3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) பூச்சியம் 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள். 3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) பத்து (புதுச்சேரி அடங்கலாக). தமிழ்நாட்டில் ஒன்பது தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் கை சின்னத்தில் போட்டியிடுகின்றது. 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) பூச்சியம் 43) 23 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) பூச்சியம்2 points- அமெரிக்காவில் இந்திய மாணவிகள் இருவர் கைது.
சிறிய வயது பெட்டைகள் இந்தா பார் செய்து காட்டுகிறேன் என்று சவால் விட்டுட்டுப் போயிருப்பார்கள். மூட்டை மூட்டையாக தூக்கிக் கொண்டு போறதை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை மட்டும் மடக்கி பிடித்திருக்கிறார்கள். கட்டாருடன் கதைத்து 7 பேரை விடுதலை செய்த மாதிரி ஜெய்சங்கர் வந்து கதைத்து இவர்களையும் விடுவிக்க வேண்டும்.2 points- அமெரிக்காவில் இந்திய மாணவிகள் இருவர் கைது.
பொதுவாக கேட்டேன். முந்தைய கம்யூனிச கிழக்கு ஜேர்மனிக்கு இலங்கையில் இருந்து வீசா இல்லாமல் வரலாம். அப்படி கம்யூனிச கிழக்கு ஜேர்மன் வந்த தமிழரில் பெருவாரியானோர், உயிராபத்தை எதிர் கொண்டு, முதாளிதுவ மேற்கு ஜேர்மனுக்கு”போர்டர் பாய்ந்து” வந்தார்கள். சரிதானே நான் சொல்லும் தரவு? ஏன் சமதர்ம நாட்டை விட்டு முதலாளிதுவ நாட்டுக்கு உயிர் ஆபத்தையும் எதிர் கொண்டு வந்தார்கள்?1 point- யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து இருப்பவர்கள் அந்த நம்பிக்கையை இழந்தால் அது கடசியில் எங்கை போய் முடியும் இந்திய நாட்டை ஆளும் மோடியால் பஞ்சாப் மானிலத்துக்குள் போக முடிய வில்லை எதற்காக........................ நீங்கள் இப்படி கேட்க்கிறீங்கள் பொது வெளியில் ஊடகங்கள் மக்கள் கேட்டுக்கும் கேள்விக்கு தேர்தல் ஆணையம் பதில் அளிக்குமா சின்ன ஒரு எடுத்து காட்டு விவசாயி சின்னம் பறிச்சாச்சு மைக் சின்னத்துக்கு பதில் வேறு சின்னம் கேட்க்க தங்களுக்கு மேல் இடத்தில் இருந்து அழுத்தம் வருதாம் வேறு சின்னம் கொடுக்க கூடாது என்று இது ஜனநாயக நாடு தானே நாங்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து நீங்கள் எப்படி இப்படி சொல்லலாம் என்று அண்ணன் சீமான் தேர்தல் ஆணையத்தை பார்த்து கேட்க்க உங்களின் ஆதங்கம் புரியுது என்று சமாளித்து அனுப்பி விட்டார்கள் தேர்தல் ஆணையம் இந்திய தேர்தல் ஆணையம் அவர்கள் சுதந்திரமாய் இயங்க அவர்களுக்கு முழு சுதந்திரம் உண்டு எந்த கட்சியின் உள் சாயம் இருக்க கூடாது இப்ப இருக்கும் தேர்தல் ஆணையம் அதை கடை பிடிக்குதான்னு கேட்டால் விடை இல்லை என்று தான் வரும்......................... விவசாயி சின்னத்தில் போட்டியிட்ட கட்சி தமிழ் நாட்டில் எங்கையாவது ஒரு தொகுதியில் பிரச்சாரம் செய்து இருக்கா அப்படி செய்து இருந்தால் புகைபட ஆதாரத்தை காட்டுங்கோ....................இதில் இருந்து தெரிவது என்ன முதல் வருபவர்களுக்கு கொடுக்கப் படும் என்றது வெறும் வெட்டி பேச்சு எப்படியாவது அந்த சின்னத்தை பறித்து விட்டால் ஓட்டு சத வீதத்தை குறைத்து விடலாம் என்ற மாயை உருவாக்க பார்த்தார்கள் ஆனால் மைக் சின்ன்னம் ஓட்டு போடுவதுக்கு முதலே விஜேய் மூலம் பலரை சென்று அடைந்து விட்டது விவசாயி சின்னத்தை விட மைக் சின்னத்துக்கு கிடைச்ச ஓட்டு பல மடங்கு அதிகம்....................யூன்4 மக்கள் தீர்ப்பை தேர்தல் ஆணையம் குளறு படி செய்யாம வெளியிட்டால் மகிழ்ச்சி🙏..................................................................................................................................................................................... நீங்கள் போட்டியில் கலந்து கொள்ள வில்லையா அல்லது என்னை மாதிரி வேடிக்கை பார்க்க போறிங்களா😁............................................1 point- அப்பா உடனே வாங்கோ.
1 point- வீட்டுத்திட்டம், காணி தருவதாக யாராவது பணம் பெற்றால் முறைப்பாடு செய்யுங்கள் - இராஜாங்க அமைச்சர் மஸ்தான்
கூட்டத்திலை குசு விட்டவன் தான் முந்திரிக்கொட்டை மாதிரி ஆரோ விட்டுட்டான் எண்டு கத்துவானாம் 😋1 point- யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
நீங்கள் விரும்பிய நான்கும் நடக்கும். ஆனி 4ம் திகதிவரை பொறுத்திருங்கள் தோழரே.1 point- "சாதனைகள் தூரத்திலில்லை"
1 point"சாதனைகள் தூரத்திலில்லை" இன்று நவராத்திரி விழாவின் முதல் நாள். நான் எங்கள் சிறு குடிசையின் தூணை பிடித்துக்கொண்டு 'செல்வம், கல்வி, வீரம்' பற்றி என் அறிவுக்கு எட்டியவரை யோசித்தேன். நான் இப்ப சாதாரண வகுப்பு மாணவன். என் அப்பாவும் அம்மாவும் பாலர் பாடசாலையுடன் தங்கள் படிப்பை நிற்பாட்டி விட்டார்கள். அப்பா ஒரு நாட்கூலி தொழிலாளி, கிடைக்கிற எந்த வேலையும் செய்வார். இல்லா விட்டால் குடும்பத்தை நடத்த முடியாது. அம்மா அப்பாவின் அந்த அந்த நாள் கூலியின் படி வாழ்க்கையை ஓட்டுவார், அதில் எப்படியும் ஒரு சிறு தொகை உண்டியலில், ஒரு அவசர தேவைக்கு என்று சேகரித்தும் வைப்பார். நவராத்திரியில் துர்க்காதேவி மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் செய்து ஒன்பதாம் நாள் போரின்போது மகிஷாசுரனை வதம் செய்தாள் என்றும் மறுநாள் தேவர்கள் வெற்றியை ஆயுத பூசை செய்து கொண்டாடினர் எனவும் துர்க்காதேவியின் அந்த சாதனைகள் தூரத்திலில்லாமல் ஒரே ஒரு ஒன்பது நாளிலேயே முடிந்து விட்டது எனவும் அம்மா எனக்கு ஒரு முறை கூறியது அப்பொழுது ஞாபகம் வந்தது. நான் அடுத்தநாள், பாடசாலை போனதும் என் சமய ஆசிரியர் இடம் எப்படி பராசத்தி ஒன்பது நாளில் சூரனை வென்றார் என பணிவாக கேட்டேன். அவர் என்னை ஒரு மாதிரி பார்த்தார். உங்களை எல்லாம் பாடசாலையில், இந்த ஆடைக் கோலத்தில் படிக்க விட்டதே போதாது, இப்ப கேள்வி ஒரு பக்கம் என என்னை உற்றுப் பார்த்தார். என் வகுப்பில் எல்லோரும் முழு நீள காற்சட்டை, சட்டை , கழுத்துப் பட்டி [tie], தோல் பட்டை [belt], சப்பாத்து என்று இருக்க, நான் அரைக் காற்சட்டை, சட்டை , வெறும் காலுடன் நிற்பது அவருக்கு ஒரு அருவருப்பு கொடுத்தது போல, விலகி நின்று பார்த்து விட்டு, மறுமொழியே தராமல் போய்விட்டார். இத்தனைக்கும் அவர் சமய ஆசிரியர்.! கடவுளின் முன் எல்லோரும் சமம் என்று போதிக்கும் ஆசிரியர்!! இவரை சொல்லி ஒரு குற்றமும் இல்லை, கூலி வேலை செய்து பிழைக்கும் திருநாளைப் போவார் நாயனார் என்ற நந்தனார், ஒரு நாள் சிதம்பரம் போனார். அவர் தாழ்த்தப்பட்ட குலத்தவர் என்பதால், அவரை சிலர் கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதிக்க வில்லை. ஒரு வேளை என் சமய ஆசிரியர் போல் இருப்பார்கள் என்று எண்ணுகிறேன். ஆகையால் கோவில் வாசலில் இருந்தபடியே, எட்டி எட்டி உள்ளே பார்த்தார். இறைவனின் உருவம் தெரியவில்லை. கருவறைக்கு முன்பாக இருந்த பெரிய நந்தி, மூலவரை மறைத்துக் கொண்டிருந்தது. எனவே மனவருத்தத்துடன் இறைவனை மனமுருகி பாடினார். ஆனால் அந்த இறைவன் கூட உள்ளே வா என்று கூப்பிடவில்லை, என்றாலும் நந்தியை, சற்றே விலகி இருக்கும்படி பணித்து, வெளியில் இருந்த தன்னை பார்த்து வழிபட வழி செய்தார் என்று ஒரு புராணம் கூறுவது எனக்கு ஞாபகம் வந்தது. அப்படி என்றால் இவரைக் குறை சொல்லி என்ன பயன்? "நந்தியை விலத்தி-ஒரு அருள் காட்டியவனை-எனக்குப் புரியவில்லை? மந்தியின் துணைக்காக-ஒரு வாலியை கொன்றவனை-எனக்குப் புரியவில்லை?" "வருணத்தை காப்பாற்ற-ஒரு பக்தனை நீ அழைக்காதது-எரிச்சலை ஊட்டுகிறது! கருணைக்கு அகலிகை-ஒரு சீதைக்கு நீ தீக்குளிப்பு-எரிச்சலை ஊட்டுகிறது!" பாடசாலை விட நேரடியாக, நான் யாழ் நூலகத்துக்கு போய், அங்கு உள்ள புத்தகங்களை பிரட்டி காரணம் அறிந்தேன். அப்ப தான் எனக்கு முயற்சியும் நம்பிக்கையும், உடலில் வலிமையையும் இருந்தால் நாம் எதையும் சாதிக்கலாம் என்ற துணிவு பிறந்தது! அது மட்டும் அல்ல பராசத்தி ஒன்பது நாளில் வென்றதுக்கு முக்கிய காரணம் பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூவரும் தங்களுடைய சக்திகளை எல்லாவற்றையும் ஒன்று திரட்டி அன்னைக்கு அளித்துவிட்டு, சிலை ஆனார்கள் என்று அறிந்தேன். எனக்கு அப்படி கைகொடுக்க இந்த சமூகத்தில் அப்படி மூவர் இருப்பார்கள் என்று எனக்குத் தெரியா? ஆனால் இந்த நவராத்திரி சொல்லும் செல்வம், கல்வி, வீரம் , இவற்றில் குறைந்தது ஒன்றாவது இருந்தால் என் சாதனைகள் வெகு தூரத்தில் இருக்காது என்பதை உணர்ந்தேன்! இன்றில் இருந்து நவ [ஒன்பது] ஆண்டில், நான் அதை செய்யவேண்டும் என நான் சபதம் எடுத்தேன் சில ஆசிரியர்களின் போக்கு சரி இல்லை என்றாலும் , அங்கு நல்ல , எல்லோரையும் சமமாக மதிக்கும் சில ஆசிரியர்களும் இருந்தது எனக்கு ஒரு பலத்தையும் ஊக்கத்தையும் கொடுத்தது, அதில் ஒருவர் தான் எமது வகுப்பு முதன்மை ஆசிரியரும் , உயிரியல் பாட ஆசிரியருமான 'சிவசேகரம்' ஆவார். அவர் என் நிலையை உணர்ந்து, பாடசாலை விட்டபின் பிரத்தியேக வகுப்பு என்னுடன் சேர்த்து சிலருக்கு இலவசமாக நடத்தினார், அவர் தனிய பாடங்களை மட்டும் இல்லாமல், அதனுடன் சேர்த்து மானிடமும் சொல்லித் தந்தார்! அது மட்டும் அல்ல 'சாதனைகள் எல்லா மனிதராலும் முடியும். அது உங்கள் கையிலேயே இருக்குது. நம்புங்கள்! நம்புங்கள்!! நம்புங்கள்!!! . உங்களை புரியுங்கள் முதலில், உங்களை தடுப்பவர்கள் உங்களை தாழ்த்துபவர்கள் எல்லோரும் ஒரு பயத்தில் தான், நீங்கள் வளர்ந்தால், சாதனை புரிந்தால் தங்கள் வண்டவாளம் வெளியே வரும், தாங்கள் இதுவரை சுரண்டி வாழ்ந்ததுக்கு முற்றுப் புள்ளி வரும். அந்தப் பயமே' என்று அடித்துக் கூறினார் . அது தான் என்னை உண்மையான மனிதனாக வளர்த்தது என்று சொன்னால் மிகையாகாது!! "மரத்தில் ஏறாதவன் பெருமை பேசுவான் மரத்தில் இருந்து விழவில்லை என்று! பறவைகள் எல்லாம் மழைக்கு ஒதுங்குது பருந்துவோ மேகத்துக்கு மேலே பறக்குது!" "பிரச்சனைகள் எப்பவும் பொதுவானது தான் சிந்தனையும் செயலும் வித்தியாசம் காட்டும்! தலைவருக்காக நீ காத்து இருக்காதே கண்ணாடியைப் பாரு நீயே தலைவன்!" நான் சாதாரண வகுப்பில் என் பாடசாலையில் மட்டும் அல்ல, என் மாகாணத்திலே முதலாவதாக வந்தேன், அது தான் என் முதல் சாதனை! எனக்காக பாடசாலை பரிசளிப்பு விழாவில் பல பரிசுகள் காத்திருந்தன, எனினும் பரிசளிப்பு விழாக்கு, மாணவர்கள் வரவேண்டிய உடை கட்டுப்பாடால், நான் அதற்குப் போகவில்லை, பரிசும் வாங்கவில்லை, அது எனக்கு ஒரு பொருட்டும் இல்லை. என் நோக்கம் எல்லாம் சாதனை! சாதனை!! சாதனை!!! உயர் வகுப்பில் மீண்டும் நானே முதலாவதாக வந்து, மீண்டும் பரிசளிப்பு விழாவையும் , முதல்வர் உட்பட சில ஆசிரியர்களையும் புறக்கணித்து, அவர்களுக்கு என் நன்றி ஒன்றையும் சொல்லாமல், பல்கலைக்கழகம் சென்றேன் . அப்ப தான் முதல் முதல் காக்கி துணியில் நீள் காற்சட்டை, சப்பாத்து எல்லாம் போட்டேன். என்னை பொல்லாதவன், முரடன் என்று நீங்கள் நினைக்கவேண்டாம். கல்வியை, பண்பாட்டை மதிக்கத் தெரியாதவர்களையே புறக்கணித்தேன், ஆனால் அவர்கள் உலகத்துக்கு / பாடசாலைக்கு சரஸ்வதி பூசையை முன்னின்று நடத்தி, கல்வியின் பெருமையை இடித்து கூறுபவர்கள். அது தான் வேடிக்கை! நான் மீண்டும் பல்கலைக்கழகத்தில் முதலாவதாக வந்து, அங்கேயே விரிவுரையாளராகவும் வந்து விட்டேன்! சாதனைகள் தூரத்தில் இல்லை! எல்லாம் அருகருகே ஒன்றின் பின் ஒன்றாக வந்து கொண்டு இருந்தன. பல்கலைக்கழக வட்டாரத்திலும் என் மதிப்பு கூடிக் கொண்டே போனது. இன்று நான் சபதம் இட்டு நவ ஆண்டு. நான் படித்த பாடசாலை அதிபர் என்னை சந்திக்க வெளியில் காத்து நிற்கிறார். அவரின் வேண்டுகோள் பரிசளிப்பு விழாவுக்கு தலைமை தங்க வேண்டும் என்பதே என அறிந்தேன். நான் அவரை சந்திக்க, அல்லது நான் யார் என்பதை காட்டிட விரும்பவில்லை. என்றாலும் அவருக்கு ஒரு செய்தியை என் துணை விரிவுரையாளர் மூலம் அனுப்பினேன். 'பாடசாலை பரிசளிப்பு விழாவுக்கு ஒரு சீருடையுடன் மாணவர்களை அழைப்பதில் தவறு இல்லை, ஆனால் அந்த வசதி இல்லாத, ஆனால் திறமையாக சித்தி அடைந்து பரிசு பெறுபவர்களுக்கு, பாடசாலை தங்கள் நிதியில் இருந்து, சீருடை முழுமையாக கொடுத்து கௌரவப் படுத்தவேண்டும். சரஸ்வதி பூசைக்கு செலவழிக்க எப்படி பணம் சேர்த்தீர்களோ அப்படியே இதற்கும் சேர்க்கலாம்' என்று எழுதி இருந்தேன்! எந்த பரிசளிப்பு விழா , என்னை உடை காரணமாக நிராகரித்ததோ, அதே பரிசளிப்பு விழாவில் இன்று எனக்கு கம்பளி வரவேற்பு! உலகம் வேடிக்கையானது , அதில் மனிதர்கள் பாவம் நடிகர்களே !!. இதை விட எனக்கு இனி ஒரு சாதனை வேண்டுமா ?, அந்த, என் கடவுள் 'சிவசேகரத்தை' தேடினேன், ஆனால் அவர் எம்மை விட்டு பிரிந்து விட்டார் என்ற செய்திதான் வந்தது. நான் முதல் பிள்ளையாரையோ சரஸ்வதியையோ வணங்காமல், சிவசேகரத்தை அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம் என்று என் பேச்சை தொடங்க, அப்ப தான் அந்த முதல்வருக்கும், சமய ஆசிரியருக்கும் 'நான் யார்' என்று தெரிந்தது. அவர்கள் நடிகர்கள் தானே. மௌனமாக எழும்பி அவர்களும் அந்த வணக்கத்தில் பங்கு பற்றினார்கள்! சாதனைகள் தூரத்திலில்லை! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]1 point- அமெரிக்காவில் இந்திய மாணவிகள் இருவர் கைது.
பணக்காரர் திருடினால். இரண்டு மடங்குகள் தண்டனை” வழங்கவும்’ ஏழைகள் [என் போன்றோர் ]🤣🤣 திருடாலம் என்றும் உலகளவில் சட்டம் கொண்டு வரவேண்டும் .....எப்படி யோசனை??? உலகில் ஏழை பணக்காரர் என்ற வேறுபாடுகள் இருக்காது1 point- தற்போதைய தமிழர் தரப்பு அரசியலிலிருந்து ‘புலி நீக்கம்’ அவசியம் (சொல்லித்தான் ஆகவேண்டும்!)
அரங்கம் செய்திகள் தளத்தில் எழுதிக்கொண்டு இருப்பவர்கள் புலி எதிர்ப்புக் காச்சாலால் மீகவும் பீடிக்கப்பட்டு இருக்கின்றனர் போலுள்ளது. புலிகளி பாசிச வாதிகளாக மீண்டும் மீண்டும் நிறுவ முற்படுகின்றவர்களின் கூடாரமாக இந்த தளம் உள்ளது போல. ஆயுதம் தரிக்காத அரசியல்வாதிகளை கொன்றது மிகவும் தவறான விடயம் என்பதை மறுப்பதற்கில்லை (முப்படைகளின் தளபதியாக இருந்த சனாதிபதிகள் மீதான தாக்குதல் இந்த வகையில் வராது). அதே நேரம், இவ்வாறானவை இடம்பெற்றிராத, புலிகள் களத்தில் நீக்கப்பட்ட இந்த 15 வருடங்களில், தமக்கு (தமிழர்களுக்கு) அரசியல் ரீதியிலான, நியாயமான தீர்வு அவசியமே இல்லை எனும் அளவுக்கு தமிழர்களாலே மனதளவில் ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு மிழ் தேசிய பிரச்சனை மழுங்கடிக்கப்பட்டு விட்டது என்பதை இந்த காச்சலால் பீடிக்கப்பட்டவர்கள் கண்டும் காணாமல் உள்ளனர். தமிழர்களுக்கு சிங்கள அரசு கொடுப்பதாக இருந்த அனைத்து தீர்வுகளும் தமிழர் இருப்பை கேள்விக்கு உள்ளாக்குபனவையாகவே இருந்தன. அத்துடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளும், யுத்த நிறுத்தங்களும் சிங்கள அரசு தன்னை பலப்படுத்த எடுத்த கால அவகாசங்களே ஆகும். இதற்கு சமாந்தரமாக புலிகளும் தம்மை பலப்படுத்தவே இவற்றினை பயன்படுத்தி இருந்தனர். எனவே இருதரப்புமே நேர்மையாக இதில் நடந்து கொள்ளாத போது, வெறுமனே தலைவரையும், புலிகளையும் மட்டும் குற்றம் சாட்டி நிற்கின்றது இந்த கட்டுரை. உலகில் புலிகளையும் தலைவரையும் தவிர, சிங்கள அரசின் கபடத்தை முற்றாக புரிந்து வைத்திருந்த ஒரு அமைப்போ தலைமையோ உலகில் இல்லை. இந்திய பார்ப்பனிய அரசு ஒவ்வொரு முறையும் மூக்குடைபடும் இடமும் இதுதான். புலி நீக்க அரசியல் என்பது சரணாகதி அரசியல். ஒற்றை அரசை ஏற்று, போடும் பிச்சையை வரமாக நினைத்து வழிபடும் அரசியல். நீண்ட காலத்தில் தமிழர்கள் தம் அனைத்து அடையாளங்களையும் துறக்க வைக்கும் அரசியல். இதை வலியுறுத்தும் எந்த தரப்பும், எந்த கட்டுரையும் தமிழர்களின் நியாயமான இருப்பையும், அவர்களுக்கான தீர்வையும் நிராகரிக்கும் தரப்பை சார்ந்தவை. பி.கு: நான் சிகப்பு புள்ளியை குத்தியது, கிருபன் இதனை இங்கு இணைத்தமைக்கு அல்ல. மாறாக, கட்டுரை சொல்லும் அரசியலுக்கு எதிராக1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இன்று புத்தக தினமாம். எனக்கு பிடித்த புத்தகம் Facebook.. 🤣 உங்களுக்கு பிடித்த புத்தகம் ஏதும் இருந்தால் சொல்லுங்கோ 😎1 point- அதிக வட்டி வருமானத்திற்கு அறவிடப்படும் வரி! கேவலமான செயலென கொதித்தெழும் பொருளாதார நிபுணர்
பிரான்சிலும் பென்சன் மற்றும் வருமானம் தரும் சொத்துக்கள் வைப்புகளுக்கு எந்த வயதானாலும் வரி உண்டு. வருடத்திற்கு இருபதாயிரம் உழைப்பவன் வரி கட்ட வருடத்திற்கு நாற்பதாயிரம் பென்சன் மற்றும் வருமானம் பெறுபவர் ஒதுங்கி இருப்பது சரியன்று தானே.1 point- புலத்தில் இருந்துகொண்டு ஊரில் வாங்கிய காணியை பெயர் மாற்றம் செய்வது எப்படி?
என்னது விஜயத்தை என்னிடம் விடுங்கோவா? கடவுளே கடவுளே இந்தக் கொடுமையைக் கேட்க ஆளே இல்லையா?1 point- அமெரிக்காவில் இந்திய மாணவிகள் இருவர் கைது.
அவர்களுக்கு தானே கொடுக்கப்படவேண்டும். அது தானே தர்மமும் அன்னதானத்தின் நோக்கமும் சகோ.1 point- "திருமணத்திற்கு பத்துப் பொருத்தங்கள்"
"திருமணத்திற்கு பத்துப் பொருத்தங்கள்" திருமணப் பேச்சை ஒரு வீட்டில் ஆரம்பித்து விட்டால் முதலில் பார்ப்பது ஜாதகத்தை தான். அதிலும், 10 பொருத்தத்தில் எத்தனை பொருத்தம் இருக்கிறது என்று தான் முதலில் பார்ப்பார்கள். ஜோதிடர் இருவரது ஜாதகத்தை கணித்து உத்தமம் என்று சொன்னால் தான் மேற் கொண்டு பேசுவார்கள். இல்லை யென்றால், அடுத்த ஜாதகத்திற்கு தாவி விடுவார்கள். சோதிடம் சொல்லும் பத்துப் பொருத்தம் இவை - தினப் பொருத்தம் , கணப் பொருத்தம், மகேந் திரப் பொருத்தம், ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம், யோனிப் பொருத்தம், ராசிப் பொருத்தம், ராசி அதிபதி பொருத்தம், வசிய பொருத்தம், ரஜ்ஜூப் பொருத்தம், வேதைப் பொருத்தம் ஆகும். இவற்றை எங்கோ இருந்து ஈர்ப்பு விசையால் சுற்றிக் கொண்டிருக்கும் இயற்கை நிகழ்வான கோள்களை வைத்துப் பார்க்கிறான். யாரை வைத்துப் பார்க்க வேண்டுமோ அதை மறந்து விடுகிறான். அந்த ஆண் - பெண் இருவருக்கும் இருக்க வேண்டிய மனப் பொருத்தத்தையோ, அவர்கள் சமூகத்துடன் இணைந்து வாழ வேண்டிய பொருத்தங்களையோ அவர்கள் ஒன்றாக வாழ்க்கை நடத்த உதவும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, சகிப்புத்தன்மை, ஒருவரை ஒருவர் மதித்தல் மற்றும் சொந்த பந்தம் போன்றவற்றை மதிக்கும் இயல்புகளையோ பொதுவாக பார்ப்பதில்லை. மூல நட்சத்திரம், கேட்டை, ஆயில்யம், விசாகம் ஆகிய இந்நான்கு நட்சத்திரத்தில் பிறந்த பெண்களைத் திருமணம் செய்யப் பலர் தயக்கம் காட்டுகின்றனர். மூலநட்சத்திரத்தில் பிறந்த பெண்ணைத் திருமணம் செய்தால் திருமணம் செய்யும் பையனின் தந்தைக்குக் கேடு. ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணைத் திருமணம் செய்தால் பையனின் தாயாருக்குக் கேடு. இப்படி பல கூறுகின்றனர். எனினும் ஒரு குறிப்பிட்ட தினத்தில் அதாவது நட்சத்திரத்தன்று பிறந்த பெண்ணைத் திருமணம் செய்தால் குறை ஏற்படும் என்பதற்கு எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை. பண்டைய சங்க காலத்தில் இப்படியாக பொருத்தங்கள் பார்த்ததாக எந்த குறிப்பும் இல்லை. ஆண் - பெண் இருவர் சேருவதை திருமணம் என்கிறது தமிழ். கல்யாணம் என்றும் சிலர் குறிப்பிடுவர். உதாரணமாக, நாலடியார் பாடல் 86 இல், "பல்லாரறியப் பறையறைந்து நாள்கேட்டுக் கல்யாணஞ் செய்து கடிப்புக்க.... " என்கிறது. ஆசாரக் கோவை பாடல் 48 இல், கலியாணம், தேவர், பிதிர், விழா, வேள்வி, என்று... கூறி, கலியாணம் [வடமொழி] என்கிறது. குறிஞ்சிப் பாட்டு (232: "நேர் இறை முன் கை பற்றி நுமர் தர நாடு அறி நன் மணம் அயர்கம் சில் நாள்... ") மணம் என்கிறது. அய்ங்குறுநூறு வதுவை (61: ".. நல்லோர் நல்லோர் நாடி வதுவை அயர விரும்புதி நீயே." ) என்கிறது. தொல்காப்பியம் மன்றல் என்பதோடு கடி, வரைவு, வதுவை என்றும் குறிப்பிடுகிறது. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்காப்பியரும் பத்து பொருத்தங்களைப் பற்றி கூறியுள்ளார். ஆனால் அவர் கூறும் பொருத்தங்கள் அறிவு பூர்வமானவை. "பிறப்பே, குடிமை, ஆண்மை, ஆண்டொடு உருவு, நிறுத்த, காம வாயில் நிறையே, அருளே, உணர்வொடு திருவென முறையுறக் கிளத்த ஒப்பினது வகையே" என்று பத்துப் பொருத்தங்களைத் தொல்காப்பியப் பொருள் அதிகாரம் பாடல் 273 பட்டியலிடுகிறது. ஒத்த பிறப்பும் [ஒத்த குடியில் பிறத்தல்], ஒத்த குடி ஒழுக்கமும், ஒத்த ஆண்மையும் [ஆண்மை என்பது இங்கு ஆண் தன்மையைக் குறிக்காது. ஆளும் தன்மையைக் குறிக்கும். குடியாண்மை எனப்படும். இது பெண்களுக்கும் உரிய பண்பே], ஒத்த வயதும் [வயது ஒற்றுமை], ஒத்த உருவும் [உருவழகு], ஒத்த அன்பும் [இல்லற சுகத்தை நுகர்வதற்குரிய சக்தியும் உணர்வும் இருவரிடமும் சமமாக இருத்தல் வேண்டும்], ஒத்த நிறையும் [கட்டுப்பாடு], ஒத்த அருளும், ஒத்த அறிவும், ஒத்த செல்வமும் என்ற பத்துப் பண்புகளிலும் ஒத்தவர்களாக இருக்க வேண்டுமென்பது இதன் பொருள். அதாவது, குடிப் பெருமை, குடி ஒழுக்கம் வழுவாமை, ஊக்கம், ஆணின் வயது கூடியிருத்தல், உருவப் பொருத்தம், இன்ப நுகர்ச்சி உணர்வு சமமாக அமைந்திருத்தல், குடும்பச் செய்தி காத்தல், அருளும், உணர்வும் ஒத்திருத்தல், செல்வச் சமநிலை ஆகிய பத்தைக் குறிக்கின்றது. அதே போல இல்வாழ்க்கைக்குப் பொருந்தாத பத்துத் தன்மைகளையும் தொல்காப்பியம் மேலும் கூறுகிறது. "நிம்புரி, கொடுமை வியப்பொடு புறமொழி வன்சொல், பொச்சாப்பு மடிமையொடு குடிமை இன்புறல் ஏழைமை மறப்போடொப்புமை என்றிவை இன்மை என்மனார் புலவர்." தற்பெருமை, கொடுமை, (தன்னை) வியத்தல் புறங் கூறாமை, வன்சொல், உறுதியிலிருந்து பின் வாங்குதல், குடிப்பிறப்பை உயர்த்திப் பேசுதல், வறுமை குறித்து வாடக்கூடாது, மறதி, ஒருவரையொருவர் ஒப்பிட்டுப் பார்த்தல், பேசுதல் ஆகிய பத்துத் தன்மைகளும் இருக்கக் கூடாதவை என்கிறது. ஒத்த அன்பு, ஒன்றிய உள்ளங்களின் உயர் நோக்கு ஆகியவை இங்கு காணக் கிடைக்கிறது குறிப்பிடத்தக்கது. திருமணம் என்று சொல்லப் படுவதெல்லாம் ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து ஒருவர்க் கொருவர் கட்டுப்பட்டு அவர்களது வாழ்க்கையைக் கூட்டுப் பொறுப்பில் நடத்துவதற்குப் பலர் அறியச் செய்து கொள்ளும் சடங்கே ஆகும். ஆகவே அதற்கு சாட்சி கட்டாயம் கிரகங்களாக இருக்காது. எல்லா திசையிலும் அவர்களை சுற்றி வாழும் வயதில் முதிர்ந்த உறவினரும் நண்பர்களுமே ஆகும். அது தான் அவர்களை ஒன்றாக முறியாமல் வைத்திருக்க உதவும். அவர்களுக்கு ஒரு பொது நம்பிக்கை வேண்டும். அது எழுமலையானகாவோ அல்லது வேறு ஒன்றாகவோ இருக்கலாம். நிலம், நீர், தீ, வளி, ஆகாயம் என்ற இயற்கையை ஐம்பெரும் பூதம் என்கின்றனர் முன்னோர் . ஆகவே இது உலகின் முன்னிலையில் என நாம் கருதலாம். மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம் அல்லது தர்மத்தின் வழி நின்று பொருள் தேடி முறையாக இன்பம் அல்லது காமம் துய்த்து வீடு பேறடைதல் என கொள்ளலாம். திருமணத்திற்கான சாட்சியாக மூன்று முடிச்சோ அல்லது மோதிரமோ இருக்கலாம். ஆனால் உண்மையில் தேவைப்படுவது இரு மனங்கள் ஒன்று சேருவதே. உண்மையான அன்பிற்கு ஏது எல்லை. எல்லை கடந்த அன்பின் ஆழத்தில் தானே காதல் இன்பமும் இருக்கின்றது. இதை குறுந் தொகைப் பாடல் ஒன்று "நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று,நீரினும் ஆர்அள வின்றே - சாரல் கருங்கோல் குறிஞ்சிப் பூக்கொண்டு,பெருந்தேன் இளைக்கும் நாடெனொடு நட்பே" என்கிறது. அன்பு வயப்பட்ட காதலர்கள் இருவரும் இதயத்தால் ஒன்று படுகின்றனர். இந்த இதயப்பிணைப்பு எப்படி இருக்கிறது தெரியுமா? 'செம்புலப் பெயல் நீர்போல' இருக்கிறதாம் இன்னும் ஒரு குறுந்தொகைப் பாடல். "யாயும் ஞாயும் யார் ஆகியரோ? எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்? யானும் நீயும் எவ் வழி அறிதும்? செம் புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே." அன்பால் இணைந்த காதலர்கள் திருமணம் புரிந்து இல்லறத்திற்குள் நுழைகின்றனர். திருமணம் முடிந்ததும் கணவனுக்குப் பிடித்தமான மோர்க் குழம்பு வைக்கிறாள் தலைவி. தன் காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களால் கட்டித்தயிரை மெதுவாகப் பிசைகின்றாள். அப்போது கட்டியிருந்த பட்டாடை சட்டென்று நழுவு கின்றது. மற்றொரு கையாலே சரிசெய்து கொண்டு தாளிக்கின்றாள். தாளிக்கும் போது உண்டான புகை, 'கயல்' போன்ற அவளது விழிகளை கலங்க வைக்கின்றது. எனவே துடைத்துக் கொள்கிறாள். இப்படி ஆசையோடு சமைத்து முடிப்பதற்குள்ளேயே வெளியில் சென்ற கணவன் வந்து விட்டான். முகத்திலும், ஆடை யிலும் அழுக்கு அப்பியிருக்கின்றது. உணவைப் பரி மாறுகிறாள். அவனும் அவளது புறத்தோற்றத்தைக் கண்டு வெறுக்காமல் அகத்தின் அன்பினை நினைத்து இனிது, இனிது என்று பாராட்டிக் கொண்டே சாப்பிடுகிறான். அந்தப் பாராட்டைப் பெற வேண்டும் என்று தானே அவள் இப்படி விரும்பிச் சமைத்தாள். இந்த இனிய இல்லறக் காட்சியினை தருகிறது இன்னும் ஒரு சங்க பாடல் : 'முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல் கழுவுறு கலிங்கம் கழாஅது உடிஇக் குவளை உண்கண் குய்ப்புகை கமழத் தான் துழந்து இட்ட தீம்புளிப்பாகர் இனிது எனக் கணவன் உண்டலின் நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே!' இன்று திருமணம் முடிக்கும் மணமக்களுக்கு இதைவிட அறிவுரை சொல்ல வேறு ஏதேனும் இருக்கமுடியுமா. இப்படி அமையாத திருமணங்கள் விவாகரத்திலும், கள்ள தொடர்பிலும் தொங்கி நிற்பதில் வியப்பில்லை. மேலே கூறியவாறு தனிச்சிறப்பு கொண்ட தமிழர், பிற் காலத்தில் ஏற்பட்ட கெட்ட விளைவால் பத்து வகைப் பொருத்தங்கள் - தினம், கணம், மகேந்திரம், பெண் தீர்க்கப் பொருத்தம், யோனி, ராசி, வசியம், ரஜ்ஜூ, வேதை, நாடிப் பொருத்தம் என மாறியது. கணித்துக் கூறுபவன் ஜோசியன். ஜாதகக் கட்டங்களைப் போட்டு கூறி விடுவான். பத்தில் ஒன்பது பொருத்தங்கள் நன்றாக அமைந்திருக்கின்றன என்பான் அவன். கல்யாணம் நடந்த பின்னர் தான் தெரியும் பொய்களும் புரட்டுகளும்!! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]1 point- ஐ.பி.எல் 2024 - செய்திகள்
1 pointமும்பை அணியின் தோல்விக்கு யார் காரணம்? ஹர்திக் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 6 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த 7 போட்டிகளாக 121 ரன்கள், ஒரு அரைசதம், சதம் கூட இல்லை, அதிகபட்சமாக 39 ரன்கள் என இந்த சீசன் தொடங்கியதில் இருந்து ஃபார்மின்றி ஜெய்ஸ்வால் திணறிக்கொண்டிருந்தார். திறமையான தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் மீது தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வைத்திருந்த நம்பிக்கையை நேற்றை ஆட்டத்தில் சதம் அடித்து நிரூபித்தார். அது மட்டுமல்லாமல் காயத்தால் பல போட்டிகளாக பந்துவீசாமல் இருந்த டெத் ஓவர் பந்துவீச்சாளர் சந்தீப் சர்மா நேற்றைய ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பை அணியின் ஒட்டுமொத்த சரிவுக்கும் காரணமாகினார். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் டி20 கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் எனும் சாதனையை யஜுவேந்திர சஹல் நேற்று பெற்றார். டி20 போட்டிகளிலேயே 200 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் இங்கிலாந்தின் டேனி பிரிக்ஸ், சமித் படேலுக்கு அடுத்தார்போல் சஹல் இடம் பெற்றார். இதுபோன்ற பல இனிமையான நினைவுகளுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, மும்பை அணியை எளிதாகவே வீழ்த்திவிட்டது. ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 38-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. பட மூலாதாரம்,GETTY IMAGES முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் சேர்த்தது. 180 ரன்கள் இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 பந்துகள் மீதமிருக்கையில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 183 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 போட்டிகளில் 7 வெற்றி, ஒரு தோல்வி என 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. ஆனால், நிகர ரன் ரேட் அடிப்படையில் 2வது இடத்தில் 10 புள்ளிகளுடன் இருக்கும் கொல்கத்தா(1.206) அணியைவிட, ராஜஸ்தான் குறைவாகவே 0.698 என்ற அளவிலேயே இருக்கிறது. அதேசமயம், மும்பை இந்தியன்ஸ் அணி 8 போட்டிகளில் 5 தோல்விகள், 3 வெற்றி என 6 புள்ளிகளுடன் 7-வது இடத்துக்குச் சரிந்துள்ளது. நிகர ரன்ரேட் மைனஸ் 0.227 என்ற அளவில் இருக்கிறது. குஜராத் டைட்டன்ஸ் அணி மும்பை அணியைவிட நிகர ரன்ரட்டில் குறைவாக இருந்தாலும், புள்ளிக்கணக்கில் அதிகமாக இருப்பதால் 6வது இடத்துக்கு நகர்ந்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES மும்பையைச் சாய்த்த சந்தீப் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியின் சரிவுக்கு முக்கியக் காரணமாக இருந்தது சந்தீப் சர்மா, டிரன்ட் போல்ட் இருவரும்தான். இதில் டிரன்ட் போல்ட் ஏற்கெனவே மும்பை வான்ஹடே மைதானத்தில் உள்ள ரசிகர்களை தனது பந்துவீச்சால் நிசப்தமாக்கி அதிர்ச்சியளித்தார். அதேபோல ஜெய்ப்பூர் மைதானத்திலும் மும்பை அணியின் ரசிகர்களையும் மவுனமாக்கினார். காயத்திலிருந்து மீண்டுவந்து பந்துவீசிய சந்தீப் சர்மா அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். இதற்கு முன் டெத் ஓவர்களில் மட்டுமே பந்துவீசி வந்த சந்தீப் சர்மா பவர்ப்ளேயில் பந்துவீசினார். ஆடுகளத்தின் தன்மையைப் புரிந்து கொண்டு வீசிய சந்தீப் சர்மா, பவர்ப்ளேயில் 2 முக்கிய விக்கெட்டுகளை சாய்த்து மும்பைக்கு அதிர்ச்சி அளித்தார். கடைசி ஓவரில் மட்டும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி டெத் ஓவரில் மும்பை அணிக்கு சிம்ம சொப்னமாகத் திகழ்ந்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஃபார்முக்கு வந்த ஜெய்ஸ்வால் இந்த ஆட்டத்தில் 31 பந்துகளில் அரைசதம் அடித்தபின், ஜெய்ஸ்வால் பேட்டிலிருந்து பந்துகள் சிக்ஸர், பவுண்டரி என பறந்தன, அடுத்த 28 பந்துகளில் 50 ரன்களுடன் சதத்தை நிறைவு செய்து 60 பந்துகளில் 104 ரன்களுடன் (7 சிக்ஸர், 9பவுண்டரிகள்) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கடந்த சீசனிலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சதம் அடித்திருந்த ஜெய்ஸ்வால், இந்த சீசனிலும் சதம் அடித்துள்ளார். ஒற்றை பேட்டராக இருந்து ராஜஸ்தான் அணியை ஜெய்ஸ்வால் கரை சேர்த்துள்ளார். கடந்த போட்டியில் ஒற்றை பேட்டராக இருந்து வெற்றி தேடித்தந்த ஜாஸ் பட்லர் இந்த போட்டியில் 35 ரன்களில் பியூஷ் சாவ்லா பந்துவீச்சில் க்ளீன் போல்டாகினார். முதல் விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வால் பட்லர் கூட்டணி 74 ரன்கள் சேர்த்தனர். 2வது விக்கெட்டுக்கு கேப்டன் சாம்ஸன், ஜெய்ஸ்வாலுக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்து ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து 38 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 2வது விக்கெட்டுக்கு சாம்ஸன்-ஜெய்ஸ்வால் கூட்டணி 109 ரன்கள் சேர்த்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES மும்பையின் தொடக்க வரிசையை உடைத்த போல்ட், சந்தீப் மும்பை அணியின் தொடக்க வரிசை பேட்டிங்கை டிரன்ட் போல்ட், சந்தீப் சர்மா இருவரும் சேர்ந்து நிலைகுலையச் செய்தனர். ஆடுகளத்தின் தன்மை, பனிப்பொழிவு, காற்று ஆகியவற்றை சாதகமாகப் பயன்படுத்தி, துல்லியமான லைன் லென்த்தில் வீசி பேட்டர்களை திணறடித்தனர். பவர்ப்ளே ஓவருக்குள் மும்பை அணியின் முதுகெலும்பு பேட்டிங் வரிசை சுக்குநூறாக இருவரும் சேர்ந்து உடைத்துவிட்டனர். மூன்று வாரங்களுக்கு முன் மும்பை வான்ஹடே மைதானத்தில் மும்பை அணி ரசிகர்களை தனது பந்துவீச்சால் ரோஹித் சர்மா விக்கெட்டை வீழ்த்தி டிரன்ட் போல்ட் அரங்கையே நிசப்தமாக்கினார். அதேபோன்று நேற்றும் தனது பந்துவீச்சால் முதல் ஓவரிலேயே ரோஹித் சர்மா(6) விக்கெட்டை வீழ்த்தி ரசிகர்களுக்கு ஷாக் அளித்தார். ஐபிஎல் தொடரில் டிரன்ட் போல்ட் முதல் ஓவரில் விக்கெட் வீழ்த்துவது இது 26-வது முறையாகும். இந்த சீசனில் மட்டும் போல்ட் 5-ஆவதுமுறையாக முதல் ஓவரில் விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். சந்தீப் சர்மா தான் வீசிய முதல் ஓவரிலேயே இஷான் கிஷனை அவுட் ஸ்விங் மூலம் சாம்ஸனிடம் கேட்ச் கொடுக்கவைத்து டக்அவுட்டில் வெளியேற்றினார். அடுத்துவந்த 360 டிகிரி பேட்டர் சூர்யகுமாரும், தனக்குரிய ரிதம் கிடைக்காமல் பேட்டிங்கில் தடுமாறினார். அவர் தனது இயல்பான பேட்டிங்கிற்கு திரும்பவிடாமல், போல்ட், சந்தீப் இருவரும் துல்லியமாகப் பந்துவீசினர். ஒரு கட்டத்தில் சந்தீப் வீசிய ஸ்லோ-பாலோ தூக்கி அடிக்க ரோவ்மன் பாவலிடம் கேட்சானது. சூர்யகுமார் 10 ரன்னில் வெளியேறியது, மும்பையின் பெரிய நம்பிக்கையே உடைந்தது. அடுந்து வந்த முகமது நபி, அதிரடியாக ஆவேஷ் கான் ஓவரில் கேமியோ ஆடி 18 ரன்கள் சேர்த்து, சஹல் வீசிய முதல் ஓவரிலேயே அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பவர்ப்ளே ஓவரில் மும்பை அணி 3 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் சேர்த்தும், 52 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் இழந்து தடுமாறியது. 5-ஆவது விக்கெட்டுக்கு நேஹல் வதேரா, திலக் வர்மா ஜோடி அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். நிதானமாகவும், மோசமான பந்துகளை மட்டும் பவுண்டரி, சிக்ஸர் அடித்து ஆடிய திலக் வர்மா 38 பந்துகளில் அரைசதம் அடித்தார். மிகக் குறைந்த வயதில் 21 வயது 166 நாட்களில் ஐபிஎல் தொடரில் 1000 ரன்களை எட்டிய வீரர் எனும் பெருமையை திலக் பெற்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த சீசனில் முதல் ஆட்டத்தில் பங்கேற்ற நேஹல் வதேரா அதிரடியாக பேட் செய்து 24 பந்துகளில் 49 ரன்கள்(4சிக்ஸர், 3பவுண்டரி) சேர்த்து போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இருவரும் 5-வது விக்கெட்டுக்கு 99 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். இவர்கள் இருவரும் சேர்த்ததுதான் அணியில் பெரிய ஸ்கோராகும். இருவரும் பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்காமல் இருந்தால், மும்பை அணி 140 ரன்களுக்குள் சுருண்டிருக்கும். அதன்பின் வந்த பேட்டர்களான கேப்டன் ஹர்திக் பாண்டியா(10), டிம் டேவிட்(3), கோட்ஸி(0) எனவரிசையாக ஆட்டமிழந்தனர். திலக் வர்மா 65 ரன்களில் சந்தீப் சர்மா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 18 ஓவர்களில் மும்பை அணி 170 ரன்களை எட்டியநிலையில் கடைசி இரு ஓவர்களில் அதிரடியாக ஆடி 200 ரன்களை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி இரு ஓவர்களில் மும்பை அணி 9 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதிலும் சந்தீப் சர்மா வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் திலக் வர்மா, 2வது பந்தில் கோட்ஸீ, 5வது பந்தில் டிம் டேவிட் என 3 விக்கெட்டுகளை மும்பை இழந்தது. அதாவது ஒரு ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை மும்பை இழந்தது. கடைசி 28 ரன்களுக்குள் மும்பை அணி 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. என்ன சொல்கிறார் பாண்டியா? மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில் “ தொடக்கத்தில் இருந்தே நாங்கள் சிக்கல்களைச் சந்தித்தோம். ஆனால், திலக், வதேரா ஆடியவிதம் அருமை.அதேபோல ஃபினிஷிங்கிலும் சிறப்பாகச் செயல்படவில்லை. நாங்கள் எதிர்பார்த்ததைவிட 15 ரன்கள் குறைவாகச் சேர்த்துவிட்டோம். அதேபோல பந்துவீச்சிலும், பீல்டிங்கிலும் எங்களுக்கு சிறந்தநாளாக அமையவில்லை. பவர்ப்ளே ஓவர்களில் ரன்கள் சேர்க்க முடியாத பிரச்னை தொடர்கிறது.” “ஒவ்வொரு வீரரும் தங்களுக்குரிய பணியை, பொறுப்பை உணர்வார்கள். தவறுகளை திருத்துவது அவசியம், மீண்டும் தவறுகள் வராமல் பார்க்கவேண்டும். தனிப்பட்ட முறையில் ஏற்படும் தவறுகள், பணியையும் ஏற்க வேண்டும். சரியாக விளையாடாத வீரர்களை உடனே நீக்குபவன் நான் அல்ல, வீரர்களுக்கு போதுமான வாய்ப்புத் தருவேன். நல்ல கிரிக்கெட்தான் என்னுடைய நோக்கம், எங்கள் திட்டங்களை நோக்கிச் செல்வோம்”எ னத் தெரிவித்தார்” பட மூலாதாரம்,SPORTZPICS மும்பை அணியின் தோல்விக்கான காரணங்கள் மும்பை அணியின் பந்துவீச்சு, பீல்டிங், கேட்ச் பிடிக்கும் திறன் ஆகியவை நேற்று சுமாராகவே இருந்தது. ஜெய்ஸ்வாலுக்கு மட்டும் நேற்று இரு கேட்சுகளை டிம் டேவிட், வதேரா இருவரும் தவறவிட்டனர். இருவரும் கேட்சுகளை பிடித்திருந்தால் ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கக்கூடும். அதேபோல பவுண்டரிகளை தடுக்கும் பீல்டிங்கிலும் மும்பை வீரர்கள் பெரிதாக முயற்சி எடுக்காமல் பீல்டிங்கில் கோட்டைவிட்டனர். கேப்டன் ஹர்திக் பாண்டியா மட்டும் 2 பவுண்டரிகளை விட்டார்.. பந்துவீச்சிலும் 7 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியும் சராசரியாக ஓவருக்கு 9 ரன்களுக்கு குறைவில்லாமல் வாரி வழங்கினர். ஹர்திக் பாண்டியா 2 ஓவர்கள்வீசி 21 ரன்களை வாரிக் கொடுத்தார். உலகக் கோப்பை நெருங்கும் நேரத்தில் ஐபிஎல் தொடரில் இதுவரை ஹர்திக் பாண்டியா பேட்டிங், பந்துவீச்சு இரு பிரிவுகளிலும் பெரிதாக ஜொலிக்கவில்லை. இது நிச்சயமாக உலகக் கோப்பைக்கான அணியில் எதிரொலிக்கும் கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். சிறப்பாகப் பந்துவீசக்கூடிய பும்ரா 4 ஓவர்கள் வீசி 37 ரன்களை வழங்கினார். முகமது நபி, துஷாரா பந்துவீச்சும் எடுபடவில்லை. ராஜஸ்தான் பேட்டர்கள் குறிப்பாக ஜெய்ஸ்வாலைக் கட்டுப்படுத்தக்கூடிய பந்துவீச்சு நேற்று மும்பையிடம் இல்லாததே தோல்விக்கு முக்கியக் காரணமாகும். பட மூலாதாரம்,SPORTZPICS சஹலின் சாதனைகள் யஜுவேந்திர சஹல் நேற்று முகமது நபி விக்கெட்டை வீழ்த்தியபோது, ஐபிஎல் தொடரில் 200-வது விக்கெட்டை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் எனும் பெருமையைப் பெற்றார். டி20 கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது பந்துவீச்சாளராகவும் சஹல் இடம் பெற்றார். இதற்கு முன் டேனி பிரிக்ஸ்(219), சமித் படேல்(208) வீழ்த்தியுள்ளனர். சஹல் தனது 200 விக்கெட்டுகளில் 158 விக்கெட்டுகளை 125 போட்டிகளில் இந்திய மண்ணில் விளையாடி எடுத்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் 42 விக்கெட்டுகளை சஹல் வீழ்த்தியுள்ளார். உள்நாட்டு மைதானத்தில் அதிக விக்கெட்டுகளை புவனேஷ்வர் குமார்(160) வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். ஐபிஎல் தொடரில் 7 முறை 4 விக்கெட்டுகளை சஹல் வீழ்த்தி மலங்காவுக்கு அடுத்தார்போல் இடம்பெ ற்றுள்ளார். 20 முறை 3 அல்லது அதற்கு மேல் அதிகமான விக்கெட்டுகளை சஹல் கைப்பற்றியுள்ளார். இரு அணி நிர்வாகங்களுக்கு 50 விக்கெட்டுகளை4 பந்துவீச்சாளர்கள் இதுவரை வீழ்த்தியுள்ளனர். இதில் சஹல் ஆர்சிபி அணிக்கும், ராஜஸ்தானுக்கும் 50 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திக் கொடுத்துள்ளார். இதில் ஆர்சிபி அணிக்காக மட்டுமே சஹல் 100 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்துக் கொடுத்துள்ளார். ராஜஸ்தான் அணிக்கு வந்தபின் 61 விக்கெட்டுகளுக்கும் அதிகமாக சஹல் கைப்பற்றியுள்ளார். அதிலும் பெங்களூரு சின்னசாமி அரங்கில் மட்டும் சஹல் 52 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். நடுப்பகுதி ஓவர்களில் சஹல் சிறப்பாகப் பந்துவீசக் கூடியவர். சஹல் எடுத்த 200 விக்கெட்டுகளில் 152 விக்கெட்டுகள் 7 முதல் 16-வது ஓவர்களுக்குள் எடுக்கப்பட்டவையாகும். https://www.bbc.com/tamil/articles/ckr530mxp1ko1 point- நிலவே நிலவே கதை கேளு!
1 pointஎனது கவிதைக்கு கருத்துப் பரிமாறி ஊக்கம் தந்த அனைத்து கலைஇலக்கிய நல் உள்ளங்களுக்கும் நன்றிகள். அன்புடன் -பசுவூர்க்கோபி.1 point- "திருமணத்திற்கு பத்துப் பொருத்தங்கள்"
இப்போ, வரன் தேடுபவர்கள் பணம், அழகு, சண்டித்தனம், போலிக்கௌரவம் இத்யாதிகளையே தேடுகின்றனர். அறிவு, பண்பு, நேர்மை, சகிப்புத்தன்மை, சிக்கனம், உதவும் மன்னிக்கும் மனப்பான்மை இவையெல்லாம் வேண்டாதவை. அவை இப்போ பிள்ளைகளுக்கு போதிக்கப்படுவதுமில்லை.1 point- யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
41 வது கேள்வியில் 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் என்று கேட்டிருந்தேன். உண்மையில் 9 தொகுதியில் தமிழகத்தில் போட்டியிடுகிறார்கள் . தவறுதலாக புதுச்சேரியையும் இணைத்து சேர்த்து 10 என்று கேட்டிருந்தேன். கிருபன் எழுதிய விடைகளை பார்க்கும் போது தவறை உணர்ந்தேன். நன்றி கிருபன். இதனால் 41 வது கேள்விக்கு 10 என்று பதில் அளித்த கிருபன் , புரட்சிகர தமிழ்தேசிகன் , நிழலியின் விடைக்கு 9 என்று ஏற்று கொள்கிறேன். goshan_che குமரி, விருதுநகர், திருநெல்வேலியில் தோல்வி என்று பதில் அளித்தினால் 41 வது கேள்விக்கான இவர்களின் பதில் 6 ஆக ஏற்கிறேன் பாலபத்ர ஓணாண்டி - நீங்கள் இக்கேள்விக்கு 3 என விடை அளித்திருக்கிறீர்கள் . உங்கள் விடை 3 ? அல்லது 2? சுவி நீங்கள் 8 என பதில் அளித்திருக்கிறீர்கள். உங்களது விடை 8 ? அல்லது 7?1 point- நிலவே நிலவே கதை கேளு!
1 pointகவிதை அருமை கோபியர்! நிலாச்சோறும்,ஔவைபாட்டி நிலாவில் இருந்த கதையெல்லாம் கேட்ட காலம் வரைக்கும் நாம் எல்லோரும் நிம்மதியாக நோய் நொடியில்லாமல் வாழ்ந்தோம்.1 point- யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
1 point- அப்பா உடனே வாங்கோ.
1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- 'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளையும் வரலாற்று சான்றுகளையும் அறிவோமா?
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 04 ஹென்றி பார்க்கர் [Henry Parker], தனது 1909 இல் எழுதிய பண்டைய இலங்கை [Ancient Ceylon], என்ற புத்தகத்தில், பக்கம் 490 இல், இலங்கையில், அனுராதபுர காலத்தை சேர்ந்த, பிராந்திய எழுத்து வடிவத்தில் ஓம் முத்திரை பொறிக்கப்பட்ட, முதல் நூற்றாண்டிற்கும் நான்காம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட கால நாணயம் கண்டு எடுக்கப் பட்டதாக குறிப்பிடுகிறார் [That the oblong type of coin continued to be issued up to the third or fourth century A.D. is clearly proved by the form of the ' Aum' monogram on the coin nuipbered 47, the m of which is of a type which is found in some inscriptions of that period. I met with a similar letter cut on the faces of two stones inside the valve-pit or ' bisdkotuwa' of a sluice at Hurulla, a tank constructed by King Maha-Sena (277-304 A.D). Large coins of a circular shape made their appearance at about this time, having a similar ' Aum * monogram on them, and it may be assumed that the issue of the oblong money then either ceased or was of less importance than before]. அது மட்டும் அல்ல, மகா சேன மன்னனுடைய ஆட்சிக் காலத்தில் (கி பி 277-304), அவனால் கட்டப்பட்ட குளத்தின் அடைப்பான் குழிக்குள் [valve-pit] இரண்டு கற்களில் ஓம் எழுத்து பொறிக்கப் பட்டு இருந்ததாகவும் கூறுகிறார். இது அங்கு முன்பு இந்து [சைவ] சமயம் இருந்ததையும் அதனின் தாக்கம் புத்த சமயம் பரப்ப பட்ட பின்பும் தொடர்ந்ததையும் தெளிவாகக் காட்டுகிறது. எனவே சுருக்கமாக ஆதார பூர்வமாக சொல்வ தென்றால், விஜயன் என்று ஒரு புராண கதாநாயகன் நாடு கடத்தப்பட்டு வந்தேறு குடியாக 700 தோழர்களுடன் இலங்கைத் தீவிற்கு வரும் முன்பே, சிவ வழிபாடும் தமிழும் அங்கு இருந்துள்ளது. விஜயன் வந்து 250 ~ 300 ஆண்டுகளின் பின்பு தான் புத்த மதம் இலங்கைக்கு வந்தது, மேலும் விஜயன் வந்து 1000 ஆண்டுகளிற்கு பின்பு தான் சிங்களம் என்ற இனமோ அல்லது மொழியோ ஒரு கட்டுக் கோப்பிற்குள் உருவாகத் தொடங்கின. அது மட்டும் அல்ல, மகாவம்சம் / விஜயனின் பட்டாபிஷேகம் [CHAPTER VII /THE CONSECRATING OF VIJAYA] 46 - 50 இல். அங்கு பல குடியிருப்புகளை ஏற்படுத்திய பிறகு விஜயனுடைய மந்திரிகள் அவனிடம் ஒன்றாக வந்து ‘ஐயனே ! தாங்கள் முடி சூட்டிக் கொள்ள இசைய வேண்டும்" என்கிறார்கள். ஆனால், அவர்கள் வேண்டியும் அவன் மறுத்தான். 'உயர் குல மங்கை ஒருத்தியை', அதே சமயத்தில் அவளை ராணியாகக் கொண்ட பிறகே, பட்டாபிஷேகம் செய்து கொள்ள முடியும்’ என்று கூறி வேண்டு கோளை ஏற்க மறுத்தான். தங்கள் எஜமானனுக்குப் பட்டாபிஷேகம் செய்வதில் ஆர்வம் கொண்டவர்களாக, மந்திரிகள் அதற்கு வழிசெய்வது கஷ்டமாக இருந்த போதிலும், அவ்வகையில் ஏற்பட்ட பயத்தை ஒழித்தவர்களாக, விலையுயர்ந்த பரிசுப் பொருள்கள், ஆபரணங்கள், முத்துக்களுடன் சிலரை தென்னிந்தியாவிலுள்ள மதுரை மாநகருக்கு அனுப்பி வைத்தனர்' என்கிறது. [When they had founded settlements in the land the ministers all came together and spoke thus to the prince : Sire, consent to be consecrated as king But, in spite of their demand, the prince refused the consecration, unless a maiden of a noble house were consecrated as queen (at the same time). But the ministers, whose minds were eagerly bent upon the consecrating of their lord, and who, although the means were difficult, had overcome all anxious fears about the matter, sent people, entrusted with many precious gifts, jewels, pearls, and so forth, to the city of Madhurai in southern (India), to woo the daughter of the Pandu king for their lord,]. இது அன்று, அதாவது கி மு 6ஆம், 5ஆம் நூறாண்டில், தமிழருக்கு உள்ள மதிப்பை பறைசாற்றுகிறது, சிங்கள இனத்தின் முதல் மூதாதையான விஜயன் வாயினூடாகவே 'உயர் குல மங்கை' என மதுரை தமிழ் இளவரசியை கூற வைத்ததிற்கு, நாம் மகாவம்ச கதையின் நூலாசிரியருக்கு கட்டாயம் நன்றி செலுத்த வேண்டும். அதே நேரத்தில் நாம் இன்னும் ஒன்றையும் கவனத்தில் எடுக்கவேண்டும். அதாவது தென் இந்தியா தமிழருக்கும், இலங்கை மக்களுக்கும் விஜயன் காலத்திலும், அதற்கு முதலும் நேரடி தொடர்பு நன்றாக இருந்து உள்ளது என்பதும், மற்றும் வட இந்தியாவுடன் பெரிதாக நேரடி தொடர்பு இல்லை என்பதும் ஆகும். அப்படி இருந்து இருந்தால், கட்டாயம் விஜயன் தனது நாட்டில் இருந்து தான் மணம் முடிப்பதற்கான பெண்களை எடுத்து இருப்பான்? பிராமண குருக்கள் இலங்கையில் விஜயன் காலத்திலும், அதற்கு முதலும் இருந்தது என்பது உண்மையே, உதாரணமாக, ஒரு வரலாற்று கதையில், ரிஷிகள் என்று அழைக்கப்பட்ட, இரு கல்விமான்கள் வட இந்தியாவில் இருந்து, தென் திசை நோக்கி புறப்பட்டு இலங்கையை வந்து அடைந்தார்கள் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இவர்கள் அகஸ்தியர் [அகத்தியர்], புலஸ்தியர் ஆகும். புலஸ்தியர் அகத்தியரின் மாணவராகும். இதில் அகத்தியரே அகத்தியம் எனும் முதல் தமிழிலக்கண நூலை எழுதியவர் என்றும் கருதப்படுகிறது. முச்சங்கம் பற்றிய வரலாற்றில் தலைச்சங்கப் புலவராக விளங்கியவர் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இவை எல்லாம் புராணத்திலும் இதிகாசத்திலும் மட்டுமே கூறப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது. இன்னும் ஒன்றை நான் கட்டாயம் சொல்லவேண்டும், முதலில் எழுதப்பட்ட தீபவம்சத்தில், விஜயன் திருமணம் செய்யவில்லை என்று கூறும் அதே நேரத்தில், மகாவம்சம் மற்றும் இராசாவலிய அவன் இருமுறை திருமணம் செய்ததாகவும், அவன் பாண்டிய இளவரிசியை மணப்பதற்காக, தனது முதல் மனைவி குவேனியையும், குவேனி மூலம் பெற்ற இரு குழந்தைகளையும் துரத்தியதாகவும் கூறுகிறது. எனவே கட்டாயம் விஜயனும் குவேணியும் [குவண்ணவும்] கட்டாயம் மனிதர்களாக இருக்கவேண்டும். இருவரும் வெவ்வேறு உயிரியல் இனமாக இருந்தால், அவர்கள் இணைந்து ஏதேனும் சந்ததி பெறமுடியாது. மேலும் விஜயனும் அவனின் நண்பர்களும், நாடு கடத்த முன்பே திருமணம் செய்திருக்க வேண்டும். ஏன் என்றால், மகாவம்சத்தில், பிள்ளைகளை வேறாக ஒரு கப்பலிலும், மனைவிகளை வேறாக இன்னும் ஒரு கப்பலிலும் நாடு கடத்தியதாக கூறுகிறது. எனவே விஜயன் மூன்று தரம் திருமணம் செய்திருக்க வேண்டும் என்பது உறுதியாகிறது. மேலும் துரத்தப் பட்ட குவேனி, அவளின் உறவினர்களாலேயே கொல்லப் பட்டதாகவும் அவளின் மகனும் மகளும் மலை நாடு ஒன்றுக்கு தப்பி ஓடி, அங்கே இருவரும் ஒருவரை ஒருவர் திருமணம் செய்தார்கள் என்கிறது. இதேபோல, முறையற்ற சகோதரர்களுக்கு இடையான திருமணம் மூலம் தான் விஜயன் பிறந்ததும் குறிப்பிடத் தக்கது. இலங்கையில் வியாஜனுக்கு பிறந்த அந்த இரு பிள்ளைகளும் அதன் பின் கதையில் இல்லாமலே போய்விடுகிறார்கள். அது ஏன் என்று புரியவில்லை ? விஜயனுக்கு பாண்டிய இளவரசி மூலம் பிள்ளைகள் இல்லாத சந்தர்ப்பத்திலும், தனக்கு அடுத்ததாக ஆட்சி பொறுப்பை ஏற்க, குவேனி மூலம் அல்லது இன்றைய மேற்கு வங்காளம் பகுதியில் அமைந்த லாலா நாட்டில் முறையான திருமணத்தின் பொழுது தனக்கு பிறந்த பிள்ளை ஒன்றை கூப்பிடாதது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது? [Picture 04: மாங்குளம் கல்வெட்டு என்பது தமிழ்நாட்டின் மாங்குளம் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட கிமு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு தமிழ் பிராமிக் கல்வெட்டு ஆகும்.] [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 05 தொடரும்1 point- நிலவே நிலவே கதை கேளு!
1 pointஅதுக்காக ஆம்ஸ்ரோம் என்ன அப்பர் சுவாமிகளா கால் படாமல் தலையால் நடந்து போக......! 😂1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
Best bowling பும்ரா என்று போட்ட எல்லோருக்கும் சந்தீப் சர்மா இன்று ஆப்படித்துவிட்டார்😂🤣1 point- அதிக வட்டி வருமானத்திற்கு அறவிடப்படும் வரி! கேவலமான செயலென கொதித்தெழும் பொருளாதார நிபுணர்
இலங்கைக்கு பணம் அனுப்புவதில் புலம் பெயர் தமிழர்களின் திடீர் முடிவு #udaruppu1 point- அப்பா உடனே வாங்கோ.
1 point- அப்பா உடனே வாங்கோ.
1 point- நிலவே நிலவே கதை கேளு!
1 pointஎப்படியெல்லாம நாம் பார்த்த நிலவில் முதன்முதல் காலடி வைத்த போது வந்ததே எனக்கு கோபம் எமது கடவுளின் தலையிலா கால் வைத்தீர்களா பாவிகளா.1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- ஐ.பி.எல் 2024 - செய்திகள்
1 pointஅந்த 1 வெற்றியும் தினேஸ் கார்த்திக்கால் கிடைச்ச வெற்றி ஆர்சிவி அணியில் நல்ல பந்து வீச்சாளர்கள் இல்லை அண்ணா.....................அடுத்த வருடம் நல்ல திறமையான பந்து வீச்சாளர்களை வேண்டனும் இங்லாந் உள்ளூர் கிலப்பில் நிறைய நல்ல பந்து வீச்சாளர்கள் இருக்குனம் அவர்களின் சிலரை வேண்டலாம்.....................இங்லாந் அணியில் இடம் பிடிக்காத பல திறமையான வீரர்கள் 18கிலப்பிலும் விளையாடுகினம்.................................................1 point- யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
கேள்வி இலக்கம் 1 - 23 பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் எத்தனையாம் இடம் பிடிப்பார்கள்? 1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) -2 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) -3 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி)-2 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன் - 1 5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி)- 2 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்)- 2 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்)-2 8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை)-1 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்)-1 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி)-2 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்)-1 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் )-3 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்)-2 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி)-2 15) தயாநிதிமாறன் திமுக)-1 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை)-1 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி)-3 18)ரி ஆர் பாலு ( திமுக)-1 19)எல் முருகன் (பிஜேபி)-4 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக)-2 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக விஜயகாந்தின் மகன்)-1 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்)-1 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி)-3 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்? 5) 8% க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? ஆம் 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? ஒன்றும் இல்லை 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? இரண்டு 28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 0 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? ஒன்று 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 0 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 1 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 0 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? தெரியாது 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்? குறைந்தது மூன்று 35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? ஒன்றும் இல்லை 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? பத்து 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( 0 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 25 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்? 15 40) 9 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்? 3 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்? 0 43) 23 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்? 01 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 pointNischay Koushal · Suivre Zoom sur la roue et l'essieu de la pierre Chariot de Hampi Inde1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- கோட்டாவின் அதிசொகுசு வாகனம் தொடர்பில் சர்ச்சை!
1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- புலத்தில் இருந்துகொண்டு ஊரில் வாங்கிய காணியை பெயர் மாற்றம் செய்வது எப்படி?
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.