Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    23
    Points
    39346
    Posts
  2. nilmini

    கருத்துக்கள உறவுகள்
    15
    Points
    929
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    33811
    Posts
  4. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    3127
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 06/19/24 in Posts

  1. தாவடியை சேர்ந்த எனது அப்பப்பா ராஜலிங்கமும் சிறியின் அப்பம்மா தையல்முத்துவும் சகோதரர்கள். அவர்களது தகப்பன் தாவை வாணன் அம்பலவாணர் நாவலர்(ஆறுமுக நாவலரின் மாணவர்). எனது அப்பம்மாவின் பூட்டன் தம்பு உடையார், அறுமுகநாவலரின் மூத்த சகோதரன். சிறியின் அப்பம்மாவையும், எனது அப்பாப்பாவையும் தவிர மற்றைய நான்கு சகோதரர்களும் 1880 அளவில் கப்பல் மூலம் மலேஷியா சென்றுள்ளார்கள். அதில் ஒருவர் மட்டும் அங்கேயே தங்கிவிட மற்ற மூன்று சகோதரர்களும் பணம் மற்றும் பொருள்களுடன் கப்பலில் யாழ்ப்பாணம் திரும்பும்போது கடல் கொள்ளையர்களால் கொல்லப்பட்டு விட்டார்கள். மலேசியாவில் தங்கிவிட்ட சகோதரனின் வம்சம் தற்போது அங்கு வாழ்கிறார்கள். சிறியின் குடும்பம் பெரும்பாலும் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தாலும், எனது குடும்பம் மாத்தளை, நுவெரேலியா மற்றும் கொழும்பில் வாழ்ந்தததாலும் எனது அப்பாவின் சொந்தங்களுடன் கொண்டாட எனக்கு சந்தர்ப்பம் குறைவாகவே இருந்து. நீண்ட காலத்துக்கு பிறகு யாழ் களத்தில் சிறியுடன் மீண்டும்சொந்தம் கொண்டாட சந்தர்ப்பம் கிடைத்தது. அவர் குடும்பத்துடன் ஜேர்மனியில் இருப்பது தெரியும் என்றாலும் தொடர்பு இருக்கவில்லை. சிறியின் சகோதரியுடனும் எப்படியாவது மீண்டும் பழகவேணும் என்றும் ஆர்வமாக இருந்தேன். எல்லாவற்றுக்கும் உதவும் விதமாக சிறியின் மகளின் கலியாணம் அமைந்தது. சிறியின் சகோதரி ஒருநாள் மெசேஜ் ஒன்று அனுப்பி இருந்தார். அதில், சிறியின் மகளின் கலியாணம் நடக்க இருப்பதாகவும் அப்பாவின் குடும்ப உறவினர் அனைவரும் ஜெர்மனி செல்வதாகவும் நான் வந்தால் எனது விருப்பத்தின்படி எல்லாரையும் சந்திக்க நல்ல சந்தர்ப்பம் என்றும் எழுதியிருந்தார். அத்துடன் சிறி யிற்கு எனக்கு அழைப்பு விடுக்க விருப்பம் இருந்தாலும் சிரமமாக இருக்குமோ என்று யோசிப்பார் என்றும் சொல்லியிருந்தார். மெஸேஜை வாசித்த கணமே, கல்யாணத்துக்கு போவது என்று தீர்மானித்தது விட்டேன். நான் இருக்கும் மெம்பிஸ் இலிருந்து தம்பி வீட்டுக்கு வெர்ஜினியா சென்று, அங்கு தங்கி விட்டு, வாஷிங்க்டன் மற்றும் போஸ்டன் வழியாக பிரான்க்பெர்ட் சென்றடைந்தேன். கல்யாண வேலைகளில் மத்தியிலும், சிறியின் மகன் (எனது மருமகன்) விமான நிலையத்தில் என்னை வரவேற்க வந்திருந்தார். ஜெர்மனியிலேயே பிறந்து வளர்ந்து, மிகச்சிறிய வயதில் எலும்பு முறிவு அதிலும் முதுகெலும்பு சத்திரசிகிச்சை மருத்துவராக பணியாற்றுவது எனக்கு மிகவும் பெருமையாக இருந்து. அதைவிட ரெட்டிப்பு சந்தோசம் அவரது பணிவையும், சுத்தமான யாழ்பாணத்தமிழையும் கேட்டு. ஜெர்மனியில் இறங்கிய முதல் மணி நேரத்தில் இருந்தே எனது சந்தோஷமும், பிரமிப்பும், ஈர்ப்பும் தொடங்கிவிட்டது . உறவினர்கள் அநேகமானோர் ஒரே ஹோட்டலில் தான் தங்கினோம். எல்லோரும் பக்கத்த்து பக்க அறைகள். ஒன்றாக சாப்பிட்டு, வெளியில் சுற்றிப்பார்த்து மிகவும் சந்தோசமான நாலு நாட்கள். பாஞ் அண்ணாவையும் குசா அண்ணாவையும் சந்தித்து ஒரு யாழ்கள Gettogether வைப்பம் என்று பிளான் போட்டிருந்தேன். குசா அண்ணாவால் வேலை நிமித்தம் வரமுடியவில்லை. பாஞ் அண்ணாவை சந்தித்தது மிகுந்த. சந்தோசம். படத்தையும் இணைத்துள்ளேன். நீட்டுக்கு எழுதினால் வாசிக்க களைப்பாக இருக்கும், மிகுதி அடுத்த முறை தொடரும்.
  2. இன்றைய சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி குயின்ரன் டிகொக்கின் அதிரடியான 74 ஓட்டங்களுடன் 4 விக்கெட் இழப்பிற்கு 194 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஐக்கிய அமெரிக்கா அணி விக்கெட்டுகளை இழந்தபோதிலும், அண்ட்ரியஸ் கவுஸின் ஆட்டமிழக்காமல் 80 ஓட்டங்களுடன் வெற்றியை அண்மித்தாலும், ஹார்மிற் சிங்கின் விக்கெட் போனபின்னர் இறுதி இரண்டு ஓவர்களில் தென்னாபிரிக்கப் பந்துவீச்சாளர்களின் இறுக்கமான பந்துவீச்சால் அடித்தாட முடியாமல் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ஓட்டங்களை மட்டுமே எடுக்கமுடிந்தது. முடிவு: தென்னாபிரிக்கா அணி 18 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்த 12 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. மற்றையோருக்குப் புள்ளிகள் கிடையாது. 41வது போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா USA 93 2 ரசோதரன் 93 3 சுவி 86 4 ஈழப்பிரியன் 85 5 நந்தன் 85 6 கோஷான் சே 85 7 கந்தப்பு 83 8 கிருபன் 80 9 எப்போதும் தமிழன் 80 10 நீர்வேலியான் 79 11 குமாரசாமி 78 12 தமிழ் சிறி 78 13 வாத்தியார் 78 14 P.S.பிரபா 77 15 ஏராளன் 77 16 அஹஸ்தியன் 77 17 வாதவூரான் 76 18 நிலாமதி 75 19 வீரப் பையன்26 74 20 தியா 74 21 புலவர் 72 22 கல்யாணி 71 23 நுணாவிலான் 70 @suvy ஐயா மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார் என்பதுதான் இன்றைய விஷேசம்
  3. யாழ்கள தமிழக நாடாளுமன்றப் போட்டியில் முதலாவதாக வென்றால் பரிசு தருவேன் என்ற சொல்லை காக்கவேண்டும் என்பதற்காக @வீரப் பையன்26 எனக்குப் பரிசுத் தொகையை அனுப்பவேண்டும் வேண்டும் என்று ஒற்றைக்காலில் விடாப்பிடியாய நின்றார். லொட்டரி ரிக்கற் எடுக்காமல் இருப்பதையே ஒரு கொள்கையாக கொண்டுள்ள எனக்கு பரிசுத்தொகையைப் பெறமுடியாது என்று நயமாகச் சொல்லி, விரும்பினால் ஒரு சமூகத் தொண்டுக்கு உதவுமாறு சொன்னேன். இலண்டனில் ஏ லெவல் படிக்கும்போது அறிமுகமாகி விரைவிலேயே எனது buddy ஆகிய நண்பனின் மகள் சஹானா இரண்டு வருடங்களுக்கு முன்னர் புற்றுநோயால் 14 வயதிலேயே மரணித்திருந்தார். அவரின் நினைவாக Sahana Foundation என்னும் அறக்கட்டளை அமைப்பை நிறுவி சாவகச்சேரிப் பகுதியில், தீராத நோய்களால் மரணத்தினை நெருங்கிய நோயாளிகளை கவனிக்கும் ஒரு இல்லத்தை, Palliative Care hospice, பல தொண்டு அமைப்புக்களுடன் சேர்ந்து அமைக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். இந்த இல்லத்திற்கு ஒரு அம்புலன்ஸ் வாங்குவதற்கான £75oo பவுண்ட்ஸ் பணம் சேர்க்க எனது இன்னொரு நண்பர் சூரி North of Wales Cotswold Way Challenge எனும் 50km கடினமான நடைபயணம் ஒன்றை அடுத்த ஞாயிறு (22 ஜூன்) மேற்கொள்கின்றார். தாராள மனம்கொண்ட @வீரப் பையன்26 £1oo பவுண்ட்ஸைக் கொடுத்ததோடு கமிஸனாக £15 பவுண்ட்ஸையும் கொடுத்துள்ளார். அம்புலன்ஸ் வாங்கும் நிதி சேர்ப்புக்கு பங்களித்த பையனுக்கு நன்றி பல. கள உறுப்பினர்கள் யாராவது பங்களிக்க விரும்பினால் பின்வரும் இணைப்பில் சென்று பங்களிக்கமுடியும். ஆனால் பையனைப் போல £15 கமிஸனைக் கொடுக்காமல் அதனை ஒரு பவுண்ட்ஸ் அல்லது அதற்கும் கீழாக மாற்றினால் நல்லது, https://www.justgiving.com/crowdfunding/Soori?utm_source=whatsapp&utm_medium=socpledgemobile&utm_content=Soori&utm_campaign=post-pledge-mobile&utm_term=r4yXppEQw
  4. பிரித்தானிய நேரப்படி நாளை வியாழன் (20 ஜூன்) இரண்டு சுப்பர் 8 சுற்றுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. முதல் சுற்றுப் குழுப் போட்டிகளில் முன்னணியில் வரும் அணிகளின் வரிசைப்படி அல்லாது ஏற்கனவே குறிக்கப்பட்ட நிலைகளின்படி போட்டிகள் நடாத்தப்படுவதால் யாழ்களப் போட்டியாளர்கள் சிலரது கணிப்புக்கள், குறிப்பாக குழு B மற்றும் குழு C, குழம்பியுள்ளன. எனவே புள்ளிகள் பின்வருமாறு வழங்கப்படும். போட்டியில் வெற்றிபெறும் அணியைச் சரியாகக் கணித்திருந்தால் இரண்டு புள்ளிகள் வழங்கப்படும் போட்டிகளுக்கான அணிகள் குழம்பியதன்மூலம், கணிப்புக்கள் தவறாக அமைந்தாலும் இரண்டு புள்ளிகள் வழங்கப்படும் போட்டியில் ஈடுபடும் அணிகளைச் சரியாகக் கணித்திருந்தும், வெல்லும் எனக் கணித்த அணி தோற்றால் புள்ளிகள் கிடைக்காது சுப்பர் 8 சுற்றுப் போட்டிகளுக்கு தகுதியடையாத அணிகளை வெல்லும் எனக் கணித்திருந்தால் புள்ளிகள் கிடையாது போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 54) சுப்பர் 8: குழு 2: வியாழன் ஜூன் 20: 1:30 AM, செயின்ற் லூஷியா, இங்கிலாந்து (B1) எதிர் மேற்கிந்தியத் தீவுகள் (C2) ENG எதிர் WI 10 பேர் போட்டியில் உள்ள இங்கிலாந்து அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். @வாத்தியார்மாத்திரம் போட்டியில் உள்ள மேற்கிந்தியத் தீவுகள் வெல்லும் எனக் கணித்துள்ளார். சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத நியூஸிலாந்து அணியைத் தெரிவு செய்த @kalyaniக்குப் புள்ளிகள் கிடையாது. முதல் சுற்றில் குழு B இல் அவுஸ்திரேலியா முதலாவதாக வரும் எனச் சரியாகக் கணித்தமையால், போட்டிகளுக்கான அணிகள் குழம்பியமையால் இப்போட்டியில் அவுஸ்திரேலியா வெல்லும் எனக் கணித்த 11 பேருக்கு, போட்டி கைவிடப்படாவிட்டால் தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும்! போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது. போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் ENG வீரப் பையன்26 ENG சுவி AUS நிலாமதி ENG குமாரசாமி ENG தியா ENG தமிழ் சிறி ENG புலவர் AUS P.S.பிரபா AUS நுணாவிலான் AUS பிரபா USA AUS வாதவூரான் AUS ஏராளன் AUS கிருபன் ENG ரசோதரன் AUS அஹஸ்தியன் ENG கந்தப்பு AUS வாத்தியார் WI எப்போதும் தமிழன் ENG நந்தன் AUS நீர்வேலியான் AUS கல்யாணி NZ கோஷான் சே ENG இப் போட்டியில் புள்ளிகளை யார் எடுப்பார்கள்? 55) சுப்பர் 8: குழு 1: வியாழன் ஜூன் 20: 3:30 PM, பார்படோஸ், ஆப்கானிஸ்தான் (C1) எதிர் இந்தியா (A1) AFG எதிர் IND 16 பேர் போட்டியில் உள்ள இந்திய அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். ஒருவரும் போட்டியில் உள்ள ஆப்கானிஸ்தால் அணி வெல்லும் எனக் கணிக்கவில்லை. சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத பாகிஸ்தான் அணியைத் தெரிவு செய்த நால்வருக்குப் புள்ளிகள் கிடையாது. முதல் சுற்றில் குழு C இல் மேற்கிந்தியத் தீவுகள் முதலாவதாக வரும் எனச் சரியாகக் கணித்தமையால், போட்டிகளுக்கான அணிகள் குழம்பியமையால் இப்போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வெல்லும் எனக் கணித்த 03 பேருக்கு, போட்டி கைவிடப்படாவிட்டால் தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும்! போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது. போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் WI வீரப் பையன்26 IND சுவி IND நிலாமதி IND குமாரசாமி IND தியா WI தமிழ் சிறி IND புலவர் PAK P.S.பிரபா IND நுணாவிலான் PAK பிரபா USA IND வாதவூரான் IND ஏராளன் PAK கிருபன் IND ரசோதரன் WI அஹஸ்தியன் IND கந்தப்பு IND வாத்தியார் IND எப்போதும் தமிழன் IND நந்தன் PAK நீர்வேலியான் IND கல்யாணி IND கோஷான் சே IND இப் போட்டியில் புள்ளிகளை யார் எடுப்பார்கள்?
  5. நானே நானா யாரோதானா மெல்ல மெல்ல மாறினேனா தன்னைத் தானே மறந்தேனே என்னை நானே கேட்கிறேன்.......! 😂
  6. ஓரினச் சேர்க்கையில் எங்கே "திரு" வருகிறது? "திரு" வே இல்லாதபோது "திருமணம்" மட்டும் எங்கேயிருந்து வரும்?
  7. வணக்கம், உங்களது கருத்துகளுக்கு மிக்க நன்றி. ஒரு திருமண உடன்படிக்கையினால் வரும் சட்டரீதியான அனுகூலங்களையும் பிற அனுகூலங்களையும் இந்த same sex couples அடையும் வேண்டும் என்றால் அதற்கு அவர்களது திருமணத்தையும் சட்டரீதியாக்கவேண்டும், [இதற்குள் குழந்தைகளை தத்து எடுப்பது தொடங்கி surogacy, egg/sperm donors மூலம் பெறுவது ( இந்த முறைகளை தனியே same sex couples மட்டும் நாடுவதில்லை என்பதையும் நடைமுறையில் பார்த்து வருகிறோம்) முதல் எல்லா வகையான அனுகூலங்களும் வரும்]. இந்த விடயம் இலகுவில் முடிவுக்கு வரும் விடயமோ ஒரே நாளில் மாறும் விடயமோ இல்லை. இங்கே பலரும் தங்களது எண்ணங்களை எழுதியிருந்தார்கள். ஆகையால் இதற்கு மேல் எழுத ஒன்றும் இல்லை என்றாலும் கூட எனது கருத்திற்கு விளக்கம் கேட்டிருந்தீர்கள். என்னைப் பொறுத்த வரை சட்டரீதியாக திருமணம் செய்து வாழும் எனது பெற்றோரின் மூலம் என்ன நன்மைகளை சட்டரீதியாகவும் குடும்ப வாழ்க்கை என்றதற்குள் நான் பெற்றேனோ அதனை இந்த same sex couplesன் பிள்ளைகளும் பெறவேண்டும். De facto relationship கூட எல்லா உரிமைகளும் அனுகூலங்களும் இல்லை. ஆகவே திருமண உடன்படிக்கையை தவிர வேறு முறைகள் சரிவரமாட்டாது. நன்றி வணக்கம் அவுஸ்ரேலியாவில் 2017ல்தான் தனபாலினத்தவர்களின் திருமணத்தை சட்டரீதியானதாக மாற்றினர்கள் அப்படியென்றால் அதற்கு முன் நடந்த காட்டுத்தீ தொடங்கி வெள்ளப்பெருக்குகள் வரைக்கும் காரணம் இந்த தமிழ் கிறிஸ்தவர்களாமா?
  8. ஏன் தோல்வி அடைய வேண்டும் ?? மூன்று சிங்கள வேட்பாளர்களும். கிட்டத்தட்ட சம பலமுடையவர்கள். எனவே சிங்களவர்களின். வாக்குகள். மூன்றாக பிரியும்” ....தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாகவும். நீங்கள் குறிப்பிட்டது போல் சிங்களவரும். வாக்கு போட்டால் தழிழர். ஐனதிபதி ஆக. முடியும் இல்லையா??
  9. @குமாரசாமி உங்க‌ளுக்கு ஏறுமுக‌ம் தாத்தா என‌க்கு இற‌ங்கு முக‌ம்.........................என‌க்கு இனி பெரிசா புள்ளிக‌ள் கிடைக்க‌ வாய்ப்பில்லை உங்க‌ளுக்கு புள்ளிக‌ள் இன்னும் இருக்கு ..........................என்டாலும் எங்க‌ட‌ ப‌ர‌ம‌ எதிரி க‌ட்ட‌த்துரைய‌ இந்த‌ முறை முந்த‌ முடியாம‌ல் போய் விட்ட‌து🫤...........................................
  10. இலங்கைக்கு அடுத்தவருடம் உந்த பிரச்சனை இல்லை. அடுத்துவருடம் 2025 இல்பாகிஸ்தானில் நடக்கவுள்ள சாம்பியன் கிண்ணத்தில் (2029 இல் இந்தியாவில் நடைபெறும்) விளையாட இலங்கை தெரிவு செய்யப்படவில்லை. சென்ற வருடம் நடைபெற்ற உலகக்கிண்ண்ப்போட்டியில் முதல் 8 இடத்தினை பிடித்த ஆஸ்திரேலியா, இந்தியா , நியூசிலாந்து , இங்கிலாந்து , தென்னாபிரிக்கா, வங்காளதேசம் , ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் விளையாடவுள்ளது. பிப்ரவரி மாதத்தில் நடக்கவுள்ள போட்டியில் இலங்கை தெரிவு செய்யப்படாததினால் , இலங்கையில் அவைக்கு வரவேற்பு கிடைக்குமா இல்லையா என்று அடுத்த வருடம் பிரச்சனை இல்லை.
  11. இது கோலார் தங்க வயலில் பிறந்து வளர்ந்த தமிழரான பெஜவாடா வில்சன் அவர்களின் பேட்டி. 'அருஞ்சொல்' இதழிற்காக ரா. செந்திகுமார் வில்சனை பேட்டி எடுத்திருந்தார். கைகளால் மலம் அள்ளும் துப்புரவுத் தொழிலாள குடும்பம் ஒன்றில் பிறந்த மதிப்புக்குரிய வில்சன் அவர்களுடனான இந்த உரையாடல் அறியாத பல வேதனையான நிகழ்வுகளையும், சமூகக் கொடுமைகளையும் வெளிச்சத்திற்கு எடுத்து வருகின்றது. பேட்டியில் இருக்கும் ஒரு பகுதி: "மனிதர்களுடைய மலத்தை இன்னொரு சக மனிதன் கையால் எடுப்பதும், சுமப்பதும் என்ன மாதிரியான வேலை என்று ஆத்திரமும், அழுகையும் வந்தது. ஆனால், எங்கள் துப்புரவுக் குடியிருப்பில் இருந்தவர்கள் எல்லாம் மகிழ்ச்சியாகவே இருக்கிறார்கள். காலை 6.00 மணிக்கு வேலையைத் தொடங்கி பகல் 10.30 மணி அளவில் மலம் அள்ளி முடித்துவிட்டு வீட்டுக்கு வந்துவிடுவார்கள். காலை காட்சிக்கு திரைப்படம் பார்க்கப் போவார்கள். பிற்பகலில் குடிப்பார்கள். இப்படி இவர்கள் சோம்பேறிகளாக, குடிகார்களாக இருப்பதனால்தான் இந்த வேலையை சமூகம் செய்ய சொல்லிக் கொடுத்திருக்கிறது என்று ஆரம்பத்தில் அவர்களிடம் வெறுப்புதான் வந்தது. சுற்றத்தாரிடம் எரிந்து விழுவேன். ‘இதெல்லாம் ஒரு பொழப்பா?’ என்று திட்டுவேன். பிறகு, பாபாசாகேப் அம்பேத்காரைப் படித்தபோதுதான், அவர்கள் மீது பிரியம் வந்தது. இது அவர்களுடைய பிழையல்ல என்பது புரிந்தது. அவர்கள் செய்யும் தொழில், அவர்களுடைய தேர்வல்ல. அவர்கள் மீது சாதியின் பேரால் இது திணிக்கப்பட்டது என்பதும் புரிந்தது. அதற்குப் பிறகுதான் உண்மையான நேசத்துடன் துப்புரவுத் தொழிலாளர்களிடம் பழகத் தொடங்கினேன்." ******************************************************************************** சந்திராயன் சரி; சாக்கடை சுத்தத்துக்கு இயந்திரம் இல்லையே! பெஜவாடா வில்சன் பேட்டி ரா.செந்தில்குமார் ஜப்பானிலுள்ள துப்புரவுத் தொழிலாளர் சங்கத்தினருடனான சந்திப்பிற்காக ஜப்பான் வந்திருந்தார் பெஜவாடா வில்சன். அவரை அழைக்க விமான நிலையம் சென்றிருந்தோம். பழைய காக்கி நிறத்தில் ஒரு குர்தா அணிந்து, காலில் சாதாரண செருப்புடன், தோளில் ஒரு சிறிய பையுமாக வெளியே வந்தார் பெஜவாடா வில்சன். ஜப்பானிலிருந்த மூன்று நாட்களுமே இதேபோன்ற எளிய உடைதான் அணிந்திருந்தார். பர்ஸ், காசு என எதுவும் கையில் வைத்துக்கொள்வதில்லை. ‘இந்தியாவில் இருக்கும்போது, கூட இருப்பவர்கள் செலவுசெய்வார்கள், எனவே பர்ஸ் வைத்துக்கொள்ளும் பழக்கம் இல்லை’ என்று சிரிக்கிறார். எந்தச் சமயத்திலும் உரையாடுவதற்குத் தயாராக இருக்கிறார். பேச்சில் சிறிய கிண்டல் கலந்த நகைச்சுவை எப்போதும் இருக்கிறது. ரமோன் மகசேசே விருதுபெற்ற மதிப்பிற்குரிய பெஜவாடா வில்சன் உடனான பேட்டியை ‘அருஞ்சொல்’ தன் வாசகர்களுக்காக இங்கே தருகிறது. உங்கள் குழந்தைப் பருவம் பற்றிச் சொல்லுங்கள்! கோலார் தங்க வயலில்தான் என்னுடைய பெற்றோர்கள் வேலைப் பார்த்தனர். எனக்கு இரண்டு அண்ணன்கள் மற்றும் ஒரு அக்கா இருந்தனர். நான்தான் வீட்டில் கடைசி பிள்ளை. ஐந்தாம் வகுப்புவரை எங்கள் குடியிருப்புப் பகுதியில் இருந்த தோட்டி ஸ்கூல் என்று அழைக்கப்பட்ட துப்புரவுத் தொழிலாளர் பிள்ளைகளுக்கான ஆரம்பப் பள்ளியிலேயே படித்தேன். அந்த வயதில் என்னுடைய சுற்றத்தினர் அனைவருமே ஒரே மாதிரியான ஏழ்மையான வாழ்க்கை சூழலைத்தான் கொண்டிருந்தனர். எனவே, ஆரம்பத்தில் சமூகப் பிரிவினைகள் குறித்தும், பாகுபாடுகள் குறித்தும் நான் பெரிய புரிதல்களைக் கொண்டிருக்கவில்லை. கோலார் தங்க வயலில் என்ன மாதிரியான வாழ்க்கைச் சூழல் நிலவியது? அங்கு வேலைப் பார்த்தவர்களின் சமூகப் பின்னணி எப்படி இருந்தது? அங்கிருந்த தங்கச் சுரங்கத்தில் முழுக்க முழுக்க தமிழர்கள்தான் வேலைப் பார்த்தனர். அதிலும் தலித் மக்கள்தான் அதிகம். எனவே, கர்நாடகா அரசியல் குறித்தெல்லாம் யாருக்கும் அங்கு ஆர்வம் இருந்ததில்லை. ‘தினத்தந்தி’, ‘மாலை மலர்’, ‘தினகரன்’ போன்ற பத்திரிகைகள்தான் டீக்கடைகள் எங்கும் கிடைக்கும். தமிழ்நாட்டுச் செய்திகளைத்தான் அனைவரும் விரும்பிப் படிப்பார்கள். தமிழ் சினிமாக்கள்தான் தியேட்டரில் வரும். ஓய்வு நேரங்களில் டீக்கடையில் அமர்ந்துக்கொண்டு பள்ளி மாணவனான என்னைக் கூப்பிட்டு செய்திதாளைப் படிக்கச் சொல்லிக் கேட்பார்கள். அப்படிக் கேட்கும் ஆள்களுக்கு என்ன மாதிரியான செய்திகள் படித்தால் பிடிக்கும் என எடை போட்டு அவற்றை மட்டும் படிப்பேன். தங்கச் சுரங்கத்தில் என்ன மாதிரியான வேலைச் சூழல் இருந்தது? மிகக் கடினமான வேலை அது. மண்ணுக்கு அடியில் பத்தாயிரம் அடி ஆழம் வரை கீழே சென்று பார்க்க வேண்டிய வேலை. அவ்வளவு ஆழத்தில், மிக வெக்கையாக இருக்கும். ஆக்ஸிஜன் மேலிருந்துதான் செலுத்தப்படும். இரண்டு மணி நேரத்துக்கு மேல் அங்கு தொடர்ந்து வேலை பார்க்க முடியாது. இரண்டு மணி நேரம் வேலை, பிறகு ஒரு மணி நேரம் ஒரு மூலையில் உட்கார்ந்து அரட்டை, பிறகு மீண்டும் வேலை என அது தொடரும். ஆண்கள் மட்டுமே அங்கே வேலைப் பார்த்தனர். வெக்கை கொடுமையானதாக இருக்கும் என்பதால் உள்ளே சென்ற பிறகு ஆடை எதுவும் அணியமாட்டார்கள். இப்படி ஒரு காலக்கட்டத்தில் ஏறக்குறைய எழுபதாயிரம் பேர் வரை அங்கு பணிபுரிந்தனர். அதில் மூவாயிரம் பேர் வரை துப்புரவுத் தொழிலாளர்கள். சுரங்கத்துக்குள் தோண்டியபடி உள்ளே செல்லும்போது, திடீரென்று பின்பகுதியில் மண் இடிந்து விழுந்துவிட்டால், முன்பக்கம் வேலைசெய்துகொண்டிருந்தவர்களை மறந்துவிட வேண்டியதுதான். மண்ணை முழுவதுமாக எடுத்து வழி ஏற்படுத்த எப்படியும் 10 நாட்கள் ஆகும். அதற்குள் மாட்டிக்கொண்டவர்கள் இறந்திருப்பார்கள். இப்படி ஒவ்வொரு வருடமும் அங்கு உயிரழப்புகள் ஏற்படும். லிப்ட் போன்ற அமைப்பில்தான் சுரங்கத் தொழிலாளிகள் எல்லாம் உள்ளே செல்ல வேண்டும். வெளியே வரும்போது அனைவரையும் கடுமையான சோதனை செய்துதான் வெளியே அனுப்புவார்கள். துப்புரவுத் தொழிலாளர்கள் பெருமையாகச் சொல்லிக்கொள்வார்கள், ‘சுரங்கத்தின் நிர்வாக இயக்குநருக்கும், எங்களுக்கும் மட்டும்தான் தனி லிப்டு’ என்று. ஆம், மலம் அள்ளிய வாளியுடன் அவர்கள் மட்டும் தனியாக லிப்டில் வெளியேற முடியும்? ஒரு டன் மண் வெட்டியெடுத்து அதில் இரண்டு கிராம் தங்கம் எடுக்க முடிந்தால் அது லாபகரமானச் சுரங்கம் என்பார்கள். கோலார் தங்க வயல் லாபகரமானச் சுரங்கமாக பல வருடங்கள் இயங்கியது. ஆனால், அந்தத் தங்கத்தை எடுப்பதற்குத் தொழிலாளர்கள் படும் துன்பங்களை நேரில் கண்டால் தங்கத்தின் மீதான ஆசையே போய்விடும். எந்த வயதில் சமூகப் பாகுபாடுகள் குறித்தெல்லாம் அறிந்துகொண்டீர்கள்? ஐந்தாம் வகுப்பு முடிந்து ஆறாம் வகுப்புக்காக, ஆந்திர பகுதியிலுள்ள குப்பம் என்னும் ஊரிலிருந்த சமூகப் பள்ளியில் நான் சேர்ந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக இந்தப் பாகுபாடுகள் குறித்தெல்லாம் அறிந்துகொள்ள ஆரம்பித்தேன். விடுமுறைக்குக் கோலார் தங்க வயல் வரும்போது, அக்கம்பக்கத்தினர் என்ன வேலை செய்கின்றனர் போன்றவற்றை அறிந்துகொள்ள முயன்றேன். அனைவருமே கோலார் தங்க வயலில் வேலை பார்ப்பதாக கூறினாலும், என்ன மாதிரியான வேலை என்பதைப் பொதுவாக சொல்ல மாட்டார்கள். அப்படி ஒருநாள் ஊருக்கு வந்திருந்தபோது, விளையாட்டில் சண்டை வந்து ஒரு நண்பன் என்னை, ‘தோட்டிப் பயலே’ என்று திட்டிவிட்டான். அழுதுகொண்டே வீட்டிற்கு வந்து அம்மாவிடம் “ஏன் நம்மை தோட்டி என்று திட்டுகிறார்கள்?” என்று கேட்டேன். “அது ஒண்ணுமில்லைப்பா, நம்பவூட்டாண்டே குப்பைத் தொட்டி ஒண்ணு இருக்குலே, அதான் தொட்டினு சொல்றாங்க நீ போய் விளையாடு” என்று சொல்லிவிட்டார். எல்லாப் பெற்றோர்களும் குழந்தைகளிடம் இந்த விஷயங்களைப் பேசாமல் முடிந்தவரை தள்ளிபோடுகிறார்கள் என்றே நினைக்கிறேன். குழந்தைமையை அப்படி எல்லாம் தற்காத்துக்கொள்ள சமூகம் விடுவதில்லையே. உங்களுடைய பெற்றோர்கள் துப்புரவுத் தொழிலாளர்கள் என்று எப்போது தெரியவந்தது? என்னுடைய அப்பா மட்டுமல்ல, சகோதரரும் மலம் அள்ளும் தொழிலைத்தான் செய்துகொண்டிருந்தனர். அண்ணன் என்னைவிட இருபது வயது மூத்தவர். எங்களுடைய சொந்த ஊரில் போய் திருமணம்செய்துகொண்டுவந்தார். பெரும்பாலும் அப்படி திருமணம்செய்யும்போது கேஜிஎஃபில் வேலைசெய்கிறேன் என்று சொல்வார்கள். ஆனால், என்ன வேலை என்று சொல்ல மாட்டார்கள். அண்ணி திருமணம் ஆகிவந்த பின்பு, அண்ணனின் உடைகளைத் துவைக்கும்போது ஒருவித துர்நாற்றம் வருவதை உணர்ந்தார். ஏன் இப்படி நாற்றம் வருகிறது என்று அவர் கேட்டபோது அண்ணன், ‘குப்பை லாரி ஓட்டுவதால் அப்படி இருக்கலாம்’ என்று கூறிவிட்டார். இது மாதிரியான சூழலில்தான், எனது அப்பா என்ன வேலை செய்கிறார் என்று அறிந்துகொள்ள விரும்பினேன். அவரிடம் கேட்டால் அழைத்துச் செல்லமாட்டார் என்பதால் அவருடைய சக தொழிலாளர்களிடம் கேட்டு, அவர்கள் வேலைப் பார்க்கும் இடத்திற்கு நேரில் சென்றேன். அவர்கள் வாளிவாளியாக மலம் அள்ளிக்கொண்டிருந்தனர். எடுப்புக் கக்கூஸில் இருந்து மலம் அள்ளி டேங்கரில் கொட்டிக்கொண்டிருந்தனர். இந்த வேலையைத்தான் எனது பெற்றொர்களும் செய்கிறார்கள் என்பது உரைக்க, உரத்த குரலில் அழுதேன். “என்ன செய்கிறீர்கள்? நிறுத்துங்கள்” என்று அவர்களிடம் சொன்னேன். “எங்க வேலையை கெடுக்காதே, அந்தாண்ட போ” என்று அதட்டி அனுப்பினார்கள். நம்ப முடியாமல் அழுதுகொண்டே நின்றேன். அங்கிருந்த ஒரு அம்மா விளக்குமாறை கீழே போட்டுவிட்டு என் அருகே வந்து, “நீ என்கிட்டே சொல்லு ராசா நான் கேட்குறேன்” என்று சொன்னார். அந்த அம்மாவைக் கட்டிக்கொண்டு அழுதேன். உங்கள் 16, 17 வயதில் அந்த நிகழ்ச்சி மாபெரும் அதிர்ச்சியைத் தந்திருக்கும் என்பதை ஊகிக்க முடிகிறது. அது என்ன மாதிரியான மனநிலையை உண்டாக்கியது? மிகச் சிறிய வயதில் ஒருமுறை அம்மா என்னிடம் ‘ஒருபோதும் நீ விளக்குமாறை கையில் எடுக்கக் கூடாது’ என்று என்னிடம் சத்தியம் செய்து தரச் சொன்னார். அதன் அர்த்தம் அவர்கள் செய்யும் வேலையை நேரில் கண்டபோதுதான் புரிந்தது. கோலார் தங்க வயலில் எங்கள் வீட்டருகே ஒரு குறுங்காடு இருந்தது. யூக்கலிப்டஸ் மரங்கள் சூழந்த அந்த இடத்தில், மனதிற்குக் கஷ்டமான நேரங்களில் போய் தனியாக அமர்ந்திருப்பேன். தனியாக பேசியபடி, அழுதபடி பல மணி நேரம் அங்கே உட்கார்ந்திருக்கிறேன். மனிதர்களுடைய மலத்தை இன்னொரு சக மனிதன் கையால் எடுப்பதும், சுமப்பதும் என்ன மாதிரியான வேலை என்று ஆத்திரமும், அழுகையும் வந்தது. ஆனால், எங்கள் துப்புரவுக் குடியிருப்பில் இருந்தவர்கள் எல்லாம் மகிழ்ச்சியாகவே இருக்கிறார்கள். காலை 6.00 மணிக்கு வேலையைத் தொடங்கி பகல் 10.30 மணி அளவில் மலம் அள்ளி முடித்துவிட்டு வீட்டுக்கு வந்துவிடுவார்கள். காலை காட்சிக்கு திரைப்படம் பார்க்கப் போவார்கள். பிற்பகலில் குடிப்பார்கள். இப்படி இவர்கள் சோம்பேறிகளாக, குடிகார்களாக இருப்பதனால்தான் இந்த வேலையை சமூகம் செய்ய சொல்லிக் கொடுத்திருக்கிறது என்று ஆரம்பத்தில் அவர்களிடம் வெறுப்புதான் வந்தது. சுற்றத்தாரிடம் எரிந்து விழுவேன். ‘இதெல்லாம் ஒரு பொழப்பா?’ என்று திட்டுவேன். பிறகு, பாபாசாகேப் அம்பேத்காரைப் படித்தபோதுதான், அவர்கள் மீது பிரியம் வந்தது. இது அவர்களுடைய பிழையல்ல என்பது புரிந்தது. அவர்கள் செய்யும் தொழில், அவர்களுடைய தேர்வல்ல. அவர்கள் மீது சாதியின் பேரால் இது திணிக்கப்பட்டது என்பதும் புரிந்தது. அதற்குப் பிறகுதான் உண்மையான நேசத்துடன் துப்புரவுத் தொழிலாளர்களிடம் பழகத் தொடங்கினேன். இப்படி ஒரு தொழில் திணிக்கப்பட்டதில் மதத்தின் பங்கு என்னவாக இருக்கிறது? மூவாயிரம் வருடங்களுக்கு மேலாக எங்கள் மக்கள் வஞ்சிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் மதத்தின் பேரால் இந்தச் சுரண்டலைப் புனிதப்படுத்தும் முயற்சிகள்தான் நிகழ்ந்தன. மகாத்மா காந்தி, ‘நாம் குழந்தையாக இருக்கும்போது நம்முடைய அன்னைதான் மலத்தைத் துடைத்துச் சுத்தம் செய்கிறார். எனவே, மலம் அள்ளும் பெண்கள் எல்லாம் நமது அன்னை போன்றவர்கள்’ என்றார். இவையெல்லாம் எந்த மாறுதலையும் எங்கள் சமூகத்தில் கொண்டுவரவில்லை. ஹரிஜனம் என்பதும், வால்மீகி என்பதும் எந்தவிதக் கேள்வியுமின்றி அதே தொழிலை தொடரவே எங்களது மக்களைத் தூண்டின. ஆனால், பாபாசாகேப் அம்பேத்கார்தான் யாரையும் இந்தத் தொழிலில் ஈடுபடும்படி கட்டாயப்படுத்த முடியாது என்று கொந்தளித்தார். அதுவே எங்களை இதிலிருந்து விடுதலையடைய தூண்டியது. இந்தியாவை விடுங்கள். நாடு பிரிவினையின்போது, முகமது அலி ஜின்னா நேருவிற்கு கடிதம் எழுதினார். பாகிஸ்தானிலிருந்து மற்ற இந்துக்களை அனுப்பிவிடுகிறோம். ஆனால் துப்புரவு தொழிலில் ஈடுப்பட்டுள்ள தலித் இந்துக்களை அனுப்ப இயலாது. அனுப்பினால் எங்கள் நாட்டில் துப்புரவுசெய்ய ஆள் இல்லாமல் போய்விடும் என்று எழுதியிருந்தார். கல்வி எந்தளவுக்கு இந்தச் சமூகச் சூழலிலிருந்து விடுபட உதவுகிறது? நான் பத்தாம் வகுப்பு முடித்தவுடன் எனது அண்ணனை அழைத்துக்கொண்டு அருகிலிருந்த வேலைவாய்ப்பு அலுவகத்திற்குச் சென்று விண்ணப்பம் பெற்று தகவல்களை எழுதிக் கொடுத்தேன். அவரோ செய்ய விரும்பும் தொழில் என்னும் கேள்விக்கு, ‘தோட்டி’ என்று அவராகவே எழுதினார். அதை வாங்கிக் கிழித்துப் போட்டுவிட்டு திரும்பிவிட்டேன். பிறகு பள்ளியில் படிப்பைத் தொடரவில்லை. உங்களுடைய போராட்டம் எப்படி ஆரம்பமானது? நான் சொன்னேன் அல்லவா, உண்மையான அன்புடன் என்னுடைய மக்களிடம் நான் நெருங்கியபோது அவர்களும் அதே விதமான உணர்வுடன் என்னிடம் நெருங்கிவந்தார்கள். மனிதனின் கழிவை மனிதனே அகற்றுவதை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்று முடிவுசெய்துகொண்டேன். நாடு முழுவதும் உள்ள எடுப்புக் கக்கூஸ் (Drylatrine) முறையை முதலில் ஒழிக்க வேண்டும் என்பதற்காகச் சட்டப் போராட்டம் தொடங்கினேன். அப்படிதான் 1993ஆம் ஆண்டு எடுப்புக் கக்கூஸ் முறையைச் சட்டரீதியாக தடைசெய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பிறகு நாங்கள் ஒரு இயக்கமாக நாடு முழுவதும் உள்ள எடுப்புக் கக்கூஸ்களுக்கு எதிராகப் போராடத் தொடங்கினோம். சட்டம் இயற்றிய பின்பு எடுப்புக் கக்கூஸ் முறையை ஒழிக்க முடிந்ததா? இது 1993ஆம் ஆண்டு சட்டம் இயற்றிய பின்பும் பெரிதாக நிலைமை மாறவில்லை. எனவே, 2003ஆம் ஆண்டு, 7 துப்புரவுத் தொழிலாளர்களை வழக்குதார்களாகக் கொண்டு இந்திய ஒன்றிய அரசு மற்றும் அனைத்து மாநிலங்களின் அரசுகளை எதிர்த்து உடனடியாகச் சட்டத்தை அமல்படுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். வழக்கறிஞர் முரளிதரன் எங்களுக்காக வாதாடினார். கூடவே, களத்தில் நேரடியாகச் சென்று, இப்படி எடுப்புக் கக்கூஸ்கள் உங்கள் ஊரில் இருக்கிறதா என்று உள்ளூர் நிர்வாகத்திடம் கேட்போம். பெரும்பாலும் இல்லையென்றுதான் சொல்வார்கள். பிறகு, நாங்களே அப்படி உள்ள கக்கூஸ்களைக் கண்டுபிடிப்போம். ஒருநாள் கூட்டமாகக் கூடிச் சென்று அதை இடித்துத் தள்ளத் தொடங்கினோம். உடனடியாக காவல் துறையுடன் அரசு அதிகாரிகள் ஓடிவந்தார்கள். ‘இப்படிக் கக்கூஸ்களை இடிப்பது தவறு’ என்றார்கள். ‘நீங்கள்தான் எடுப்புக் கக்கூஸ்களே இல்லையென்றீர்களே? இல்லாத கக்கூஸ்களை நாங்கள்எப்படி இடிக்க முடியும்’ என்று கேட்டோம். தொடர்ந்து இதைச் செய்தது மூலம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தோம். அதன் மூலம் ஓரளவுக்கு இந்த முறையை ஒழிக்க முடிந்தது. ஆனால், இன்னமும் உத்தர பிரதேசம், பிஹார் உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்த முறை நீடித்துக்கொண்டுதான் இருக்கிறது. அரசு நினைத்தால் ஒரே நாளில் ஐநூறு ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று சொல்லி அதை நிறைவேற்ற முடிகிறது. ஆனால், 1993ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தடைச் சட்டத்தை இன்றளவும் முழுவதுமாக நிறைவேற்ற முடியவில்லை என்றால், அதை எப்படிப் புரிந்துகொள்வது? சாஃபய் கரம்சாரி அந்தோலன் (Safai Karamachari Andolan) எப்படித் தொடங்கப்பட்டது? எடுப்புக் கக்கூஸ் மட்டுமல்ல பிரச்சினை. செப்டிக் டேங்க் அடைத்துக்கொண்டால் அதைச் சுத்தம் செய்யவும் மனிதர்களை அழைக்கிறார்கள். அவர்கள் எந்தப் பாதுகாப்பும் இல்லாது அந்தக் குழிக்குள் இறங்கி சுத்தம் செய்கிறார்கள். அப்படிச் செய்யும்போது விஷவாயு தாக்கி இறக்கிறார்கள். பாதாள சாக்கடைகள் அடைத்துக்கொண்டால் இதே துப்புரவுத் தொழிலாளர்கள் அதனுள் இறங்கி மாண்டுபோகிறார்கள். உலகிலேயே மிகப் பெரிய ரயில்வே போக்குவரத்தை நமது நாடு கொண்டிருக்கிறது. ஆனால், ரயிலில் கக்கூஸ் போனால், அப்படியே மலம் வெளியே வந்து தண்டவாளத்தில் விழுகிறது. இதையும் துப்புரவுத் தொழிலாளர்களே சுத்தம் செய்கிறார்கள். இதற்கெல்லாம் ஒரு இயக்கமாக இருந்தால்தான் போராட முடியும் என்பதற்காகவே சாஃபய் கரம்சாரி அந்தோலன் அமைப்பை சில நல்ல மனிதர்களின் துணையுடன் தொடங்கினேன். நாடு முழுவதும் தொடர்ந்து போராடிவருகிறோம். 1993 எடுப்புக் கக்கூஸ் தடைச் சட்டம் போலவே 2014ஆம் ஆண்டு நீங்கள் போராடி பெற்றுத் தந்த நஷ்டஈடு தொகைக்கான சட்டமும் மிக முக்கியமானது, அதைப் பற்றிச் சொல்லுங்கள்! 2013ஆம் ஆண்டு, சாக்கடையைச் சுத்தம் செய்யவும், செப்டிக் டேங்க் சுத்தம் செய்யவும் என்று அதில் இறங்கி விஷவாயு தாக்கி இறந்துபோகும் தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் உதவித் தொகை தர வேண்டும், அப்படி ஆபத்தான தொழிலில் ஈடுபடுத்திய வீட்டு முதலாளிகளுக்கு தண்டனை தர வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தோம். 2014ஆம் ஆண்டு நீதிபதி சதாசிவம் இதற்கான தீர்ப்பை வழங்கினார். உடனடியாக 1993ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை இப்படி இறந்துபோன தொழிலாளர்களின் விவரம்கேட்டு அரசை நாடினோம். ஆச்சரியமாக அவர்களிடம் எந்தத் தகவலும் இல்லை. ‘எத்தனை பேர் இறந்தார்கள் என்று கணக்கெடுப்பது எங்களது வேலை அல்ல’ என்று சென்ஸஸ் அமைப்பு சொல்லிவிட்டது. எனவே, அவர்களுக்கு இந்த உதவித் தொகையைப் பெற்றுத் தருவதில் சிக்கல் நீடிக்கிறது. நாங்களே பிறகு இந்தக் கணக்கெடுப்பைச் செய்கிறோம். மொத்தம் 2378 பேர் இப்படிச் சாக்கடைகளில் இறங்கி இதுவரை இறந்திருக்கிறார்கள். ஒரு பெரிய போரில்கூட இத்தனை பேர் சாக மாட்டார்கள். உண்மையில் அவர்கள் சாகவில்லை. நாம்தான் கொன்றிருக்கிறோம். சாதிய கொடுமைகள் நிறைந்த இந்தச் சமூகத்தில் வாழ்ந்துதான் என்ன ஆகிவிடப்போகிறது என்று ஏறக்குறைய தற்கொலை மனநிலையில்தான் அந்தத் தொழிலாளர்கள் செப்டிக் டேங்கிலும், சாக்கடைகளிலும் சுத்தம் செய்ய இறங்குகிறார்கள். இனியாவது உயிர்கள் போகாமல் காக்க வேண்டும் என்று போராடுகிறோம். ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய 6,500 தன்னார்வலர்கள் நாடு முழுவதும் 28 மாநிலங்களில் அலுவலகங்களை ஏற்படுத்தி நாங்களே இத்தகைய பணியில் ஈடுபட்டுவருகிறோம். தமிழ்நாட்டில் நிலைமை எப்படி உள்ளது? தமிழ்நாடு பொதுவாகவே விழிப்புணர்வு பெற்ற மாநிலமாக இருக்கிறது. குறிப்பாக ஊடகத் துறை அங்கு பலமாக இருக்கிறது. சாக்கடை மரணங்கள் நேர்ந்தால், உடனடியாக ஒரு பெரிய செய்தியாக அது அங்கு மாறுகிறது. இது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. தந்தை பெரியார் போன்றவர்கள் ஏற்படுத்திய தாக்கம் அது. இந்தியாவில் சில மாநிலங்களில் துப்புரவுத் தொழிலாளர்கள் இறந்தால் அது செய்தியாகக்கூட வருவதில்லை. தமிழ்நாட்டிலும், நகரங்களில் பாதாள சாக்கடை முழுவதுமாக நிர்மாணிக்கபடவில்லை. இது உடனடியாக அரசு செய்ய வேண்டிய பணி. ஜப்பானில் நீங்கள் பார்த்தவரை துப்புரவுத் தொழிலாளர்களின் நிலைமை எப்படியிருக்கிறது? ஜப்பானில் எத்தனையோ முன்னேறியிக்கிறார்கள். நாடு முழுவதும் பாதாள சாக்கடைகள் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றைச் சுத்தம் செய்யும்முறை முழுவதும் இயந்திரமயமாக்கப்பட்டிருக்கிறது. முன்பிருந்த ஒரு குறிப்பிட்ட புரோக்குமின் சாதியினர் மட்டும் துப்புரவுத் தொழிலில் ஈடுபடும் முறையும் இப்போது பெரும்பாலும் இல்லை. யார் வேண்டுமானாலும் அவர்களுடைய விருப்பத்தின் பேரில் செய்யக்கூடிய தொழிலாக மாறிவருகிறது. இங்கிருக்கும் இயந்திரமுறை சுத்திகரிப்பை இந்தியாவில் காட்டி, இதைச் செய்யுங்கள் என்று கோரிக்கை வைக்கதான் நான் ஜப்பான் வந்தேன். என்னுடைய நண்பர் பேராசிரியர் ராம்மகாலிங்கம் ஜப்பானிலுள்ள துப்புரவுத் தொழிலாளர்களுடனான சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தார். எங்கள் கஷ்டங்களைப் புரிந்துவைத்திருக்கும் ஜப்பான் நாட்டுத் துப்புரவுத் தொழிலாளர் சங்கத்தினர் எங்களுக்கு உதவுதாகக் கூறியிருக்கிறார்கள். சந்திராயன் ராக்கெட்டை நிலவுக்கு விடுகிறீர்களே, சாக்கடை சுத்தம் செய்யும் தொழில்நுட்பம் இல்லையா என்று என்னிடம் ஜப்பானியர்கள் கேட்கிறார்கள். அவர்களுக்கு என்ன பதில் சொல்வது? இந்திய அரசு நினைத்தால் இயந்திரங்களையும், தொழில்நுட்பங்களையும் இதற்கென கண்டுபிடிக்க முடியாதா என்ன? அவர்களுக்கு துப்புரவுத் தொழிலாளர்கள் படும் துன்பம் அவ்வளவு முக்கியமான ஒன்றாக தோன்றவில்லை. அவ்வளவுதான். https://www.arunchol.com/bezwada-wilson-interview-by-r-senthil-kumar
  12. நகலும் எடுக்க தேவை இல்லை. ஆயுதத்துக்கு செலவு செய்யும் பணத்தில் சிறு பகுதியை செலவு செய்து இறக்குமதி செய்து விடலாம். எப்படி இயக்குவது என அவர்களே வந்து காட்டி தருவார்கள். மோதி அரசுக்கு மனம் இருந்தால் இடமுண்டு. பிச்சைக்காரரை மறைக்க மதில் கட்டிய மோதி இதனை செய்வாரா என்பது கேள்விக்குறி.
  13. சாதி கெட்ட 'சாதி' - சுப.சோமசுந்தரம் தலைப்பில் முதலில் வரும் சாதி, ஒழுக்கம் எனப் பொருள்படும் தமிழ்ச் சொல்; பின்னர் வரும் 'சாதி', ஜாதி எனும் பிரிவினையின் தமிழ் வடிவம். ஒரு கணித ஆசிரியர் என்ற முறையில், மும்பையில் கணித மாணாக்கர்க்காக அகில இந்திய அளவில் நடைபெற்ற ஒரு தொடர் நிகழ்வில் பங்கேற்ற பின் ஞாயிறன்று (16 ஜூன் 2024) ஊர் திரும்பியதும் நேற்று (17 ஜூன்) ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தோழர் பேரா.வ.பொன்னுராஜ் அவர்களுடன் கலந்து கொள்ளும் நல்வாய்ப்பு அமைந்தது. அந்தப் பக்கம் செல்லும்போது கணித உலகின் நட்பு வட்டம் "Back in the saddle" என்று நினைக்க வைப்பதும், இந்தப் பக்கம் வரும்போது தோழர்கள் அதே உணர்வைத் தருவதும் (இல்லாத) இறைவன் எனக்கு அளிக்கும் வரம் போலும் ! நண்பர்கள் மற்றும் தோழர்கள் துணையால் "Back to the pavilion" எனும் நிலையே இல்லாமல் போனது வாழ்வின் பேரானந்தம். நிற்க. அது ஒரு கண்டனக் கூட்டம். எதற்காக ? ஒரு தலைவனும் தலைவியும் சுமார் ஆறு வருடங்கள் காதலித்தனர். கல் தோன்றி மண் தோன்றாக் காலந்தொட்டுத் தமிழ் நிலத்தின் நடைமுறைதானே ! தொல்காப்பியன் கூற்றுப்படி, இடையில் தமிழ்ச் சமூகத்தில் புகுந்த பொய்யும் வழுவும் பெற்றோரையும் உற்றோரையும் திருமணத்தை அங்கீகரித்து மணமுறையினை வகுப்பவர்களாக மாற்றியது. "பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப" - தொல்காப்பியம், பொருளதிகாரம், பாடல் 145. (ஐயர் - மூத்தோர் - பெற்றோர், உற்றோர்; யாத்தனர் - இயற்றினர், அமைத்தனர்; கரணம் - மணமுறைகள்) தொல்காப்பியன் காலத்திலேயே பொய்யும் வழுவும் உள்ளே புகுந்து விட்டது என்பது தெரிகிறது. வருணாசிரமம் எனும் அபத்தமெல்லாம் அந்த 'வழு'வில் அடக்கம்ணே ! சரி, கதையை விட்ட இடத்தில் தொடருவோம். மணமகள் 'இல்லத்துப் பிள்ளைமார்' என்று சற்று உயர்ந்த ரகமாம் (அவாளின் வர்ணாசிரமப் பகுப்பின்படி எல்லாம் சூத்திர இழவுதான்). மணமகன் அருந்ததியர் எனும் குறைந்த ரகமாம். இரத்த வகைகள், இழவெடுத்த சாதி வகைப்படியே அமையும் என்று எவனோ அறிவியல் பூர்வமாக நிறுவி நோபல் பரிசு வாங்கியிருப்பான் போல ! பெண் வீட்டார் சம்மதிக்க மாட்டார் எனத் தெரிந்து இக்காதல் இணையர் CPI(M) கட்சியின் நெல்லைக் கிளையில் தஞ்சம் புகுந்தனர். இரு மனமொத்த அத்திருமணத்தைப் பதிவு செய்ய கட்சித் தோழர்கள் ஆவன செய்தனர். வெகுண்டெழுந்த பெண் வீட்டார் அடியாட்கள் துணையுடன் CPI(M) கட்சி அலுவலகத்தை அடைந்து நாற்காலிகளையும் கண்ணாடிக் கதவுகளையும் அடித்து உடைத்தனர். அதனைத் தடுத்த பெண் வழக்கறிஞரும் தோழருமான பழனி அவர்களும், அலுவலகத் தோழர் சிலரும் தாக்கப்பட்டனர். காவலர் இருவர் கண்முன்னேயே இத்தாக்குதல் நடைபெற்றது. ஏற்கெனவே தோழர்கள் காவல் நிலையத்திற்குக் கொடுத்த தகவலால் அங்கு வந்த காவலர்களே அவர்கள் எனக் கேள்வியுறுகிறோம். கூடவே பெண் வீட்டார்க்கும் தகவல் கொடுத்தவர்கள் யாராக இருக்கும் ? அதன் பின் ரவுடிகளுக்குத் தகவல் தந்தோர் யார் ? முன்னெச்சரிக்கையாக காதலர் இருவரும் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பப்பட்டதால், அவர்களைக் கட்சி அலுவலகத்தில் எதிர்பார்த்து வந்தோர் அடைந்த ஏமாற்றத்தின் விளைவு தாக்குதலாக வெளிப்பட்டதோ ! தோழர் பழனியுடன் தொலைபேசியில் பேசிய ஒருவர் (தம்மை அக்காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலராய்/அதிகாரியாய் அறிமுகம் செய்து கொண்டவர்), ஸ்டேஷனில் ஒப்படைக்க வேண்டாம் என்றும், அக்காதலர் பாதுகாப்புக் கருதித் தங்களிடம் தனிப்பட்ட முறையில் ஒப்படைக்குமாறு கூறியதாகவும் கேள்வியுறுகிறோம். அவ்வாறு ஒப்படைக்கப் பட்டிருந்தால் கட்டப் பஞ்சாயத்தின் மூலம் அப்பெண் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் அருந்ததியரான அம்மணமகன் நிலை என்னவாகி இருக்கும் ? தமிழ்நாட்டில் இதுவரை நடந்த ஆவணக் கொலைகளின் டைரிக் குறிப்புகள் தெளிவாக உள்ளனவே ! காதல் ஜோடி காவல் நிலையம் செல்லாமல் கம்யூனிஸ்டுகளிடம் தஞ்சம் அடைந்தது சரியான முடிவு என்று தெரிகிறதே ! பெற்றோர் வந்து பேசினால் பொறுப்புணர்ச்சியுடன் இரு சாராரிடமும் பக்குவமாகப் பேச வல்லவர்தாமே நம் தோழர்கள் ! அவ்வாறிருக்க எடுத்த எடுப்பில் கொலைவெறித் தாக்குதல் நடத்தும் அவசியம் என்ன ? மேற்கண்ட விவரங்கள் அனைத்தும் நேற்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பதிவானவை. அலுவலகம் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து உடனே CPI(M) ன் நெல்லைக் கிளையின் சார்பாக கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் ஸ்ரீராம், "சாதி மறுப்புத் திருமணங்களுக்கு இனி எங்கள் அலுவலகம் திறந்தே இருக்கும்" என்று அறிவித்ததும், நேற்று நடந்த கூட்டத்தில் மாநிலச் செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் அதையே மாநிலம் முழுமைக்கும் வழிமொழிந்ததும் சமூக நன்மைக்கான நமது போர்க்குணம். போராளிகள் அப்படித்தானே இயங்க முடியும் ! பொதுவுடைமைக் கட்சிகளும் திராவிட இயக்கங்களும் சமூக நீதிக்கானவை. ஆதிக்க சாதியினரின் வாக்கு வங்கியை மனதில் கொள்ளாமல் அறத்தை நிலைநாட்டும் கடமை ஆளுங்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உண்டு. தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு சாதிய வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தாக்குதலில் ஈடுபட்ட அடியாட்களில் சிலர் ஏற்கெனவே கொலைக்குற்றம் முதலிய வழக்குகளில் சிக்கியவர்கள் எனக் கேள்வியுறுகிறோம். அத்தகையோர் மீது 'குண்டாஸ்' சட்டம் பாய வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளே சாதியப் பிற்போக்குவாதிகளுக்கான எச்சரிக்கையாய் அமையும். நாங்குநேரி சாதிவெறித் தாக்குதலைத் தொடர்ந்து மாணாக்கரிடையே சாதிவெறி எனும் கொடுமை களைய முன்னாள் நீதியரசர் சந்துரு தலைமையில் தமிழ்நாடு அரசு அமைத்த ஆலோசனைக் குழு தற்செயலாகத் தனது அறிக்கையைச் சமர்ப்பித்த நேரமிது. வரும் தலைமுறையாவது சாதியற்ற சமூகம் எனும் விடியலை நோக்கி முன்னேற அரசு துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். சாதி அடையாளம் நமக்கான அவமானம் என்று சமூகம் உணர வேண்டும். மார்க்ஸும் அம்பேத்கரும் பெரியாரும் ஒவ்வொரு தலைமுறைக்கும் கடத்தப்பட வேண்டும். "சாத்திரம் பல பேசும் சழக்கர்காள், கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்" என்று நாவுக்கரசர் எழுப்பும் வினா கோயில்களில் கூட ஒலிக்க வேண்டும். https://www.facebook.com/share/p/TCRhdvoaKxBZZmfz/?mibextid=oFDknk
  14. 👍......... ஓரிரு வருடங்களின் முன் சென்னை ஐஐடி பல்கலையின் ஒரு பேராசிரியரும், சில மாணவர்களும் சேர்ந்து இதற்கு ஒரு இயந்திரத்தை கண்டுபிடித்து, மாதிரிச் செய்கை ஒன்றையும் காட்டியிருந்தனர். இது செய்திகளில் வந்திருந்தது. இப்படி செய்திகளில் காட்டுவதோடு இது போய் விடுமோ என்ற நினைப்பு அன்று வந்தது.........அப்படியே நடந்தும் விட்டது. புதிதாக ஒன்றும் செய்யவே தேவையில்லை. சுவி ஐயா சொல்லியிருப்பது போல வளர்ந்த நாடுகள் பலவற்றில் இதற்கான இயந்திரங்கள் ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கின்றன. 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்..........' என்று சொல்லிக் கொண்டே இருந்தால் போதும் என்ற மனநிலை. காந்தியடிகள் மற்றும் அம்பேத்கார் இருவருக்கும் இருக்கும் வித்தியாசம், மிகச் சுருக்கமாகவே சொல்லப்பட்டிருந்தாலும், மனதை தைத்தது......😔.
  15. இன்றைய இலங்கை நிலையை துல்லியமாக சொல்லும் தலைப்பு. சிங்களவர்கள்: சிங்களதேச வேட்பாளருக்கு வாக்களிக்கப் போட்டி! தமிழ்ப் பொதுவேட்பாளரை தோற்கடிக்க சூளுரை! தமிழர்கள்: சிங்களதேச வேட்பாளருக்கு வாக்களிக்கப் போட்டி! தமிழ்ப் பொதுவேட்பாளரை தோற்கடிக்க சூளுரை! இது தான் இதுவரை சிங்களம் வெல்ல காரணம்.
  16. அதுவும் இன்னும் 10 ,15 வருடங்களுக்குதான் .....எங்கன்ட தலைமுறையினரின் பணம் அனுப்பும் படலம் முடிவடைந்த பின்பு வேறு மத நிறுவனங்களின் பணம் அதிகமாக கிடைக்க பெற்றால்...மக்கள் அங்கே தஞ்சமடைவார்கள்
  17. கேள்விகள் 44) இலிருந்து 46) வரைக்கான புள்ளிகள்: 44) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) அனைவரும் சரியான பதில்களைத் தந்துள்ளனர்! ENG AUS NAM SCOT OMA போட்டியாளர் ஈழப்பிரியன் ENG AUS வீரப் பையன்26 ENG AUS சுவி ENG AUS நிலாமதி ENG AUS குமாரசாமி ENG AUS தியா ENG AUS தமிழ் சிறி ENG AUS புலவர் ENG AUS P.S.பிரபா ENG AUS நுணாவிலான் ENG AUS பிரபா USA ENG AUS வாதவூரான் ENG AUS ஏராளன் ENG AUS கிருபன் ENG AUS ரசோதரன் ENG AUS அஹஸ்தியன் ENG AUS கந்தப்பு ENG AUS வாத்தியார் ENG AUS எப்போதும் தமிழன் ENG AUS நந்தன் ENG AUS நீர்வேலியான் ENG AUS கல்யாணி ENG AUS கோஷான் சே ENG AUS 45) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) 12 பேர் மாத்திரமே சரியான வரிசையைக் கணித்துள்ளனர்! போட்டியாளர் #B1 - ? (2 புள்ளிகள்) #B2 - ? (1 புள்ளிகள்) ஈழப்பிரியன் ENG AUS வீரப் பையன்26 ENG AUS சுவி AUS ENG நிலாமதி ENG AUS குமாரசாமி ENG AUS தியா ENG AUS தமிழ் சிறி ENG AUS புலவர் AUS ENG P.S.பிரபா AUS ENG நுணாவிலான் AUS ENG பிரபா USA AUS ENG வாதவூரான் AUS ENG ஏராளன் AUS ENG கிருபன் ENG AUS ரசோதரன் AUS ENG அஹஸ்தியன் AUS ENG கந்தப்பு AUS ENG வாத்தியார் ENG AUS எப்போதும் தமிழன் ENG AUS நந்தன் AUS ENG நீர்வேலியான் AUS ENG கல்யாணி ENG AUS கோஷான் சே ENG AUS 46) முதல் சுற்று குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! @theeya ஐத் தவிர எல்லோருக் சரியாகக் கணித்துள்ளனர்! போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் OMA வீரப் பையன்26 OMA சுவி OMA நிலாமதி OMA குமாரசாமி OMA தியா NAM தமிழ் சிறி OMA புலவர் OMA P.S.பிரபா OMA நுணாவிலான் OMA பிரபா USA OMA வாதவூரான் OMA ஏராளன் OMA கிருபன் OMA ரசோதரன் OMA அஹஸ்தியன் OMA கந்தப்பு OMA வாத்தியார் OMA எப்போதும் தமிழன் OMA நந்தன் OMA நீர்வேலியான் OMA கல்யாணி OMA கோஷான் சே OMA 46 கேள்விகளுக்குப் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா USA 78 2 ரசோதரன் 78 3 நந்தன் 74 4 ஈழப்பிரியன் 73 5 கோஷான் சே 73 6 சுவி 72 7 கந்தப்பு 72 8 நீர்வேலியான் 72 9 வாதவூரான் 70 10 அஹஸ்தியன் 70 11 கிருபன் 69 12 வாத்தியார் 69 13 எப்போதும் தமிழன் 69 14 P.S.பிரபா 68 15 ஏராளன் 68 16 வீரப் பையன்26 67 17 நிலாமதி 67 18 குமாரசாமி 67 19 தமிழ் சிறி 67 20 கல்யாணி 65 21 தியா 64 22 புலவர் 64 23 நுணாவிலான் 62
  18. உடலுறவை மட்டுமே அடிப்படையாக வைத்து இந்தவிடயம் ஆராயப்படுவதால் வரும் மயக்கமேயன்றி வேறில்லை இது. இயற்கையாக ஆணும் பெண்ணும் மட்டுமே ஒரு குழந்தையை உருவாக்கமுடியும் என்கிற நியதி இருப்பது உண்மைதான். ஆனால், இரு பெண்கள் இணைந்தும் குழந்தையை உருவாக்க முடியும் என்றும், ஆண்களும் கருத்தரிக்கலாம் என்று நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. இவை இயற்கைக்கு முரணானவையா? ஆம், ஏனென்றால் இயற்கையாக இவை நடக்கச் சாத்தியமில்லை இப்போதுவரைக்கும். ஆனால், இருவர் உறவில் இணைவதற்கு உடலுறவு மட்டுமே இருந்தால்ப் போதுமானதா? இதைத்தவிரவும் வேறு என்ன விடயங்கள் இருவர் இணையும் உறவில் இருக்கின்றன? புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு, பிடித்தவிடயங்களில் ஈடுபாடு, ஆறுதல், துணை....இப்படிப் பல விடயங்கள் இருக்கின்றனவே? ஆணும் பெண்ணும் இருக்கும் உறவில் இப்பிரச்சினைகள் எவ்வளவு தூரத்திற்குத் தீர்க்கப்பட்டிருக்கின்றன? எத்தனை ஆண்கள் அல்லது பெண்கள் தமது எதிர்ப்பால் துணையினைக் கைவிட்டு விட்டு ஓரினத் துணையினைத் தேடியிருக்கின்றனர்? ஒருவர் தன்னை ஆணாகவோ பெண்ணாகவோ நினைப்பதற்கு உணர்வதற்கு அவரில் காணப்படும் ஹோர்மோன்களே காரணமாவதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். எவருமே வேண்டுமென்று தமது பிறப்பில் இருந்த பாலினை விட்டு எதிர்ப்பாலிற்கு மாறுவதில்லை என்று நினைக்கிறேன். அது இயற்கையாக அவர்களில் நடக்கும் உளவியல், ஹோர்மோன் மாற்றங்களால் ஏற்படுகின்றது என்றுதான் தான் நினைக்கிறேன். பாப்பாணடவர் ஓரினச் சேர்க்கையாளர் குறித்து அவதூறாகப் பேசுவதற்குக் காரணம் இருக்கிறது. தனது சபையில் இவர்கள் சேர்ந்துவிட்டால், தாம் இற்றைவரை போதித்துவரும் ஓரினச் சேர்க்கைக்கெதிரான பிரச்சாரத்தை அது பாதித்துவிடும் என்று அவர் பயந்திருக்கலாம். ஆனால், ஓரினச் சேர்க்கையென்பது கிறிஸ்த்துவிற்கு முன்னைய காலத்திலிருந்து இருப்பதாக வேதாகமத்தில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. அதைவிட, கத்தோலிக்க மதகுருக்களில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம், ஓரினச் சேர்க்கை போன்றவை பல நூற்றாண்டுகளாக பழக்கத்தில் இருப்பவை. அவைகுறித்துப் பேசுவதைத் தவிர்த்து ஓரினச் சேர்க்கையாளர்கள் குறித்து பாப்பாணடவர் பேசுவது தவறு. முதலில் உள்ளுக்குள் இருக்கும் பிரச்சினைகள் குறித்து அவர் வெளிப்படையாகப் பேசட்டும். பின்னர் ஓரினச் சேர்க்கையாளர்கள் குறித்து கருத்துக் கூறலாம். ஒருவர் தன்னை ஆணாகவோ, பெண்ணாகவோ அல்லது இவை இரண்டிற்கு இடையில் இன்னொரு இனமாகவோ நினைப்பதும், உணர்வதும், அதற்கேற்றாற்போல் நடந்துகொள்வதும் அவரது விருப்பம். இதில் மற்றையவர்கள் கருத்துக் கூறவோ, கட்டுப்பாடுகள் விதிக்கவோ முடியாது.
  19. ஈழப்பிரியன் WI தியா WI ரசோதரன் WI மேற்கிந்திய தீவுகளை பதிந்த மூவரும் அமெரிக்காவைச் சார்ந்தவர்கள். தம்பி ஆடறுக்க முதல் ………… துள்ளிக் குதிக்கக் கூடாது.
  20. எனது மகனும் ஒரு வைத்தியர்தான். வேலை துவங்கி ஒருவருடமாகுது. லீவில வந்து நிற்கும் பொழுது தம்பி இந்த மெடிக்கல் றிப்போட்டைப்பாரடா என்றால் எல்லாம் பைன் என்று சொல்லுறான். தமிழ் சிறி குடுத்து வைத்தவர்.
  21. ஒரு சதம் என்றாலும் உழைத்துக் கூலி வாங்கவேண்டும் என்ற கொள்கைதான்!
  22. அதென்னமோ தெரியல்ல, "அமைதிப்படை" சத்யராஜ்தான் நினைவில் வந்து போறார்......! 😂
  23. புத்தரின்...கால் ,கை துண்டுகள்... அரசமரத்தடி ...சந்தணம் அரைச்ச கல்லு வராமல் பார்த்துக்கொண்டால் சரி...
  24. தொடருங்கள் ......தொடர்ந்து வருகின்றோம்.......! இந்த ஜெர்மனியில் எவ்வளவு அதிசயங்கள் நடக்குது..வாசிக்க வாசிக்க சந்தோசமாக இருக்குது...நாவலர் பரம்பரை என்றபடியால்..தமிழ் எழுதவும் பயமா இருக்கு....என்னங்க பலகாரக் கடத்தல் நடைபெறவில்லையோ..
  25. உங்களை நம்பி google sheets நிரப்பினவைக்கெல்லாம் ஏறுமுகம்தானே 🤭🤭🤭.... அவர்கள் கொஞ்சப் பேருக்கு உதவின புண்ணியம் உங்களுக்கு வந்து சேரும்.. எல்லாம் நன்மைக்கே
  26. 1 point
    "மாயா" செப்டம்பர் 22, 1995 , என்னால் மறக்க முடியாத ஒருநாளாக இன்னும் என் மனதை வருத்திக்கொண்டு இருக்கிறது. அன்று தான் என் அன்பு சிநேகிதி இறந்த தினம். அவர் சாதாரணமாக இறக்கவில்லை, அந்த கொடுமையை நினைத்தால் எவருமே கதிகலங்குவார்கள். அவளும் அவளின் மாணவிகளும் புத்தரின் தர்ம போதனைக்கும் உலக நீதிக்கும் எதிராக துண்டு துண்டாக உடல்கள் சிதறி நாகர்கோவில் மகாவித்தியாலத்தில் பிற்பகல் 12.50 மணியளவில் விமானப் படையினரின் குண்டுத் தாக்குதலில் 21 - 26 மாணவர்கள் உட்பட கொல்லப் பட்ட தினம் ஆகும். அது தான் நான் இன்று, இந்த கார்த்திகை தினத்தில் நேரத்துடன் துயிலில் இருந்து எழும்பி யன்னல் வழியாக ஆகாயத்தை வெறுத்து பார்த்துக்கொண்டு இருக்கிறேன். அரசியல், யுத்தம், சமதானம் என்பவற்றைப் பற்றிப் புத்தர் தெளிவான கருத்துடையவராயிருந்தார். அஹிம்சையும் சமாதானமுமே பௌத்தம் உலகுக்கு விடுக்கும் செய்தி. இது எல்லாராலும் நன்கு அறியப்பட்டதொரு விஷயம். எந்தவிதமான பலாத்காரத்தையும் அது ஏற்றுக்கொள்வதில்லை. கொல்லாமையே அதன் மூலாதாரமான கொள்கை. 'நீதியான யுத்தம்' என்று சொல்லக் கூடியது ஒன்றுமில்லை. இது ஒரு போலிப் பெயர். துவேஷம், கொடுமை, இம்சை, கொலை என்பவை நேர்மையானவையெனக் காட்டும் நோக்கமாக ஆக்கப்பட்டதொரு அர்த்தமற்ற வார்த்தை. பௌத்த மதத்தின்படி 'நீதியான யுத்தம்' என்று ஒன்றுமில்லை. 'இது நீதி, இது அநீதி' என்று தீர்மானிப்பது யார்? நாங்கள் துவங்கும் யுத்தம் எப்பொழுதும் நீதியானது. மற்றவர்கள் துவங்கும் யுத்தம் அநீதியானது. பௌத்தம் இந்தக் கொள்கையை ஏற்றுக் கொள்வதில்லை. ரோஹினி ஆற்று நீர்ப் பிரச்சினை சம்பந்தமாகச் சாக்கியரும், கோலியரும் பிணங்கிக் கொண்டு சண்டை செய்ய முற்பட்டபோது பகவான் யுத்தகளத்துக்குப் போய் பிணக்கைத் தீர்த்துச் சண்டையை நிறுத்தினார். அஹிம்சையை அவர் போதித்தது மாத்திரமன்றி, சமாதானத்தை நிலை நாட்டக் காரிய பூர்வமான நடவடிக்கையை எடுத்தார். பகவானுடைய அறிவுரையைக் கேட்டு அஜாதசத்து என்ற மன்னன் வஜ்ஜிராச்சியத்தோடு உண்டான சண்டையை நிறுத்தினான். நான் சைவ மதத்தவன் என்றாலும் புத்த பெருமானை நேசிக்கிறேன் அவரின் இந்த கொள்கைக்காக! ஆனால் இன்று அவரின் புதல்வர்கள் என்று கூறும் பலர், இதை பின்பற்றுவதாக எனக்குத் தெரியவில்லை. அது தான் அந்த குண்டுகள் பொழிந்த ஆகாயத்தை பார்த்தபடி என் சினேகிதியை இந்த கார்த்திகை நாளில் நினைவு கூறுகிறேன்! என் சினேகிதியை தற்செயலாக தற்காலிக இடமாற்றத்தை அடுத்து வேலையை பாரம் எடுக்க பருத்தித்துறைக்கு சென்ற பொழுது, பருத்தித்துறை பேரூந்து நிலையத்தில் சந்தித்தேன். அவர் ஒரு இளம் ஆரம்ப பள்ளி ஆசிரியை. அவர் தான் என் புது அலுவலகத்துக்கான பாதைக்கு வழி காட்டியதுடன், தன் வீடும் அதற்கு அருகில் என்று, கூடவே கதைத்து கொண்டும் வந்தார். ஒரு சில நிமிடங்களில் பரிமாறி கொண்ட கவர்ச்சிகரமான அப்பாவித்தனமான பார்வைகள் அவளின் குறும்புத்தனம் மிக்க இனிய குரல்கள், பெண்மையின் வளைவு நெளிவுகளை வெளிப்படுத்தும் அவளின் அழகிய கோலமும் குனிந்த நடையும் வாரம் நகர்ந்தும் என்னால் மறக்க முடியவில்லை. அவளின் பெயர் மாயாதேவி , நாகர்கோவில் மகாவித்தியால ஆசிரியை, இவ்வளவும் தான் எனக்குத் தெரியும். ஒரு சில நிமிடங்கள் தானே அவளுடன் பழக்கம். அவளை முழுமையாக அறிய அன்று ஆவல் இருந்தாலும், எடுத்தவுடன் அதுகளை கேட்டு குழப்பக்கூடாது என்று பேசாமல் இருந்துவிட்டேன். முதிர்ச்சியற்ற காதல் இப்படிச் சொல்லும்: `நான் உன்னைக் காதலிக்கிறேன். ஏனென்றால் நீ எனக்கு வேண்டும்.’ முதிர்ச்சியடைந்த காதல் இப்படிச் சொல்லும்: `எனக்கு நீ வேண்டும். ஏனென்றால், நான் உன்னைக் காதலிக்கிறேன்.’ ‘ - இதைச் சொன்னவர் அமெரிக்க சமூக உளவியலாளர் எரிக் ஃப்ரோம் (Erich Fromm). காதலுக்குத் தேவையான அடிப்படையான மனப்பக்குவம் இதுதான். அப்படித்தான் நானும் இருந்தேன். அவள் விண்ணில் இருந்து வந்த தேவதையின் உடல் எடுத்து வந்தது போல் இருந்தாள். அவளை சுற்றி ஒரு பிரகாச சூழ்நிலை நிலவிக்கொண்டு இருப்பதாய் அன்று அவதானித்தேன். அந்த அழகு எப்படி வர்ணிப்பது என்று எனக்கு தெரியவில்லை. அவளின் படைப்பில் வெறுக்கிற மாதிரி ஒரு அம்சம் கூட இல்லை. நான் சும்மா சொல்லவில்லை. அவள் மலர்ந்துகொண்டு இருக்கும் ஒரு பன்னீர் மலர்! 'பன்னீர் மலர் சொரியும் மேகங்களே எங்கள் பரந்தாமன் மெய் அழகை பாடுங்களே!' என்று ஒரு பாடல் கேட்ட ஞாபகம். உண்மையில் 'பன்னீர் மலர் சொரியும் மேகங்களே என் நண்பியின் மெய் அழகை பாடுங்களே!' என்று தான் என் உள்ளம் அசை போடுகிறது!. எப்படியும் அவளை சந்திக்கவேண்டும் என்று அன்று ஒரு நாள், அவள் பாடசாலை முடிய வரும் பேருந்துக்காக, நேரத்துடன் வேலையில் இருந்து புறப்பட்டு காத்திருந்தேன். 'இளந்தளிரைப் போன்று மென்மையாகவும் தாமரைக்கொடியைப் போன்ற மெதுமெதுவென்று இருக்கும் கரங்கள் என்னைத் தழுவவேண்டும். அவளின் வசீகரமான புன்முறுவல் என் மார்பில் சாய்ந்து கொட்டிடவேண்டும். அப்பொழுது உணர்ச்சிக் கொந்தளிப்புக்கள் இன்பத்தை பொழியவேண்டும்' இப்படி என் மனம் மகிழ்ந்து கொண்டு, நான் என்னையே மறந்து கனவில் மிதந்த அந்த தருவாயில், 'ஹாய்' என்ற அந்த அவளின் இனிய குரல் என்னை மீண்டும் பூமிக்கு வர வைத்தது. 'ம்ம்ம் என்ன இன்று நேரத்துடன் வேலை முடிந்ததா ?' அவள் தான் தொடர்ந்தாள், நான் என்னை சமாளித்துக்கொண்டு, இல்லை ஒரு தனிப்பட்ட விடயமாக கொஞ்சம் வெளியே வந்தேன், இனி திரும்பவும் வேலைக்கு போகப் போகிறேன் என என் கதையை மாற்றினேன். அப்ப தான் அவளுடன் ஒன்றாய் நடக்க முடியும்! கொஞ்சம் எனக்கு பசி, வாங்க தேநீரும் வடையும் சாப்பிட்டுவிட்டு போவோம் என கூப்பிட, அவள் கொஞ்சம் தயங்கினாலும், பின் ஓகே என்று வந்தாள். அது தான் என் முதல் வெற்றி! கொஞ்சம் கொஞ்சமாக அவளை அறியத் தொடங்கியதுடன் என்னைப்பற்றியும் சொன்னேன். அவள் தொடக்கத்தில் கொஞ்சம் அச்சம் நாணம் கொண்டாலும், போகப் போக அன்னியோன்னியமாக பழகத் தொடங்கினாள். அது என் இரண்டாவது வெற்றி! அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல் நிச்சமும் பெண்பாற் குரிய என்ப." என்றார் தொல்காப்பியர். இது களவியலுக்கு மட்டும் தான்! ஒரு காதல் சுவைக்கு மட்டும் தான் என்ற உண்மையை அவளிடம் கண்டேன்! இப்ப நான் மட்டும் அல்ல அவளும் எனக்காக காத்திருக்கிறாள். இப்ப நான் மோட்டார் சைக்கிளில் வர ஆரம்பித்ததால், நான் காலை நேரத்துடன் வந்து அவளை பாடசாலையில் இறக்கிவிட தொடங்கினேன். அவள் என்னை கட்டிப்பிடித்துக்கொண்டு செல்லக் கதைகளும் பேச தொடங்கிவிட்டாள். அந்த சிலநிமிட பயணம், சொர்க்கம் என்று ஒன்று இருந்ததால் அங்கே போனமாதிரி இருந்தது! ஒரு சில மாதம் கழிய, செப்டம்பர் 22, 1995 , அவளுக்கு என் காதலின் அடையாளமாக ஒரு அழகிய மோதிரம் எம் இருவரின் படத்துடன், அன்று அவளை, பாடசாலையில் இறக்கிவிடும் பொழுது, திடீரென ஒரு முத்தம் கொடுத்துவிட்டு, அவளின் விரலில் நானே போட்டுவிட்டேன். அவள் அப்படியே திகைத்து நின்றாள், ஒன்றுமே பேசவில்லை, ஆனந்த கண்ணீர் சொட்டு சொட்டாக அவள் கன்னத்தை நனைத்தன. அது தான் நான் கொடுத்த முதல் முத்தம் கூட. திரும்பி, சுற்றி பார்த்தாள், நாம் ஒரு மரத்தின் அடியில் நின்றதால், எம்மைக் காணக்கூடியதாக ஒருவரும் தெரியவில்லை. திடீரென அவசரம் அவசரமாக என்னை இழுத்து, வாயுடன் வாய்சேர்த்து முத்தம் தந்துவிட்டு, சட்டென அந்த மோதிர விரலை பார்த்தபடியே பாடசாலைக்குள் ஓடி விட்டாள். வழமையாக சொல்லும் 'போயிட்டு வருகிறேன்' கூட சொல்லவில்லை ? அவள் இன்று ஒன்றும் சொல்லாமல் பாடசாலைக்குள் போனது எனோ எனக்கு ஒரு மாதிரி இருக்க, என் மதிய இடைவெளியில், சாப்பிடுவதை தவிர்த்து, அவளை ஒருக்கா பார்க்க வேண்டும் என்ற அவா உந்த, மோட்டார் சைக்கிளில் அவளிடம் போனேன். போகும் பொழுது, பாடசாலைக்கு கொஞ்சம் அருகில் இருந்த கடை ஒன்றில் அவளுக்கு, அவள் மிகவும் விரும்பும் இருதய அமைப்பில் அமைந்த ஆல்கஹால் பிரீ டார்க் சாக்லேட் [alcohol free dark chocolate] பெட்டி ஒன்றை வாங்கி, மீண்டும் மோட்டார் சைக்கிளில் எற, பெரும் குண்டுகள் வெடிக்கும் சத்தம் பாடசாலை பக்கம் இருந்து கேட்டது. போர்விமானமும் கூவிக்கொண்டு பறந்தன, கடைக்கார முதலாளி கடையை உடனடியாக மூடிக்கொண்டு, தம்பி, ஒரு இடமும் போகவேண்டாம் என்று என்னையும் பதுங்கு குழிக்குள் இழுத்து சென்றார். நான் ரசித்த உடல் துண்டு துண்டாக அன்று மாலை என்னால் போய் பார்க்க முடிந்தது. அவளின் மற்றும் மாணவர்களின் பெற்றோரின் அழுகுரல் ஒரே சோகமயமாக அங்கு காட்சி அளித்தது. நான் அவளின் கையை, நான் போட்டுவிட்ட மோதிரம் மூலம் அடையாளம் கண்டேன். "அழகான என் செல்ல நண்பியே அன்பான ஒரே நம்பிக்கை நட்சத்திரமே அளப்பெரும் துயரில் என்னைத் தள்ளி அமைதியாய் சொல்லாமல் மறைந்தது ஏனோ ?" "வாய் மூடி தலை குனிந்து வான் உயர துள்ளி குதித்து வாழ்க்கை காண கனவு கண்டவளே வாட்டம் தந்து மௌனமாகியது எனோ?" "என் அழகான காதல் செல்லமே என்னை விட்டு போக வேண்டாம்? என் குறும்பு இளவரசி இல்லாமல் எனக்கு இனி மகிழ்ச்சி எனோ?" "பள்ளி அறையில் புத்தகங்களுக்கு இடையில் பகுதி பகுதியாக உன்னை கண்டுஎடுத்தேன் பரவி இருந்த இரத்த சொட்டுக்குள் பச்சை சேலை சிவந்தது எனோ?" "மச்சம் கொண்ட உன் இளம்கால் மல்லாந்து என்னைப் பார்ப்பதைக் கண்டேன் மயான அமைதியில் உற்று நோக்கினேன் மடிந்தவிரலில் மோதிரம் என்னை அழைப்பதுஎனோ?" நேரம் இப்ப அதிகாலை இரண்டு மணி, இன்னும் நல்ல இருட்டு, பனி எங்கும் பொழிந்து கொண்டு இருந்தது. நான் இப்ப வெளிநாட்டில், மனைவி பிள்ளைகளுடன் வாழ்கிறேன். அது உலக வாழ்க்கை. ஆனால் என் மனம் இன்னும் அவளையே நினைக்கிறது. அவளுக்காக ஒரு தீபம் ஏற்ற இப்பவே இந்த கார்த்திகை தினத்தில் எழும்பிவிட்டேன். என் மனைவி இன்னும் சரியான தூக்கத்தில், பிள்ளைகள் தங்கள் தங்கள் அறையில். யன்னலுக்கு வெளியே, இது கிராமப்புறம் என்பதால் சிறு மரப்பத்தைகள் [woods]. வானம் அமைதியாக இருந்தது. நான் கொஞ்சம் என் பார்வையை கிழே இறக்கி மரப்பத்தையை பார்த்தேன். கழுத்தில் இருந்து கால்வரை வெள்ளை நிற முழு அங்கியுடன், தனது முகத்தை நீண்ட கரும் கூந்தலால் மறைத்துக்கொண்டு, என்னை நோக்கி என் மாயாவின் உடல் அமைப்பிலேயே ஒரு பெண் உருவம் வருவதைக் கண்டேன்! அருகில் அருகில் வர, தன் முடியை, தன் வலது கையால் வாரி முதுகுப் பின்னல் போட்டாள். நான் போட்டுவிட்ட அந்த மோதிரம் இன்னும் அந்த விரலில் இருப்பதைக் கண்டேன். அது ஒளிர்ந்து கொண்டு இருந்தது. அதே புன்முறுவல், அதே நாணம், அதே நடை! என்னால் நம்பவே முடியவில்லை!. 'ம்ம் வாங்க, உங்க மாயா கூப்பிடுகிறாள், நான் தான் உங்க மனைவி, உதறித்த தள்ளுங்கள் அவளை, கட்டிலில் படுத்திருப்பவளை' இரண்டு கைகளையும் நீட்டி என்னை அழைத்தபடி நெருங்கி வந்து கொண்டு இருந்தது. என்னை அறியாமலே நான் யன்னலூடாக குதித்து வெளியே போக, யன்னலை அகல துறந்து, அதில் எற, ஒரு காலை தூக்கி வைத்தும் விட்டேன். மற்ற காலை தூக்க முயலும் பொழுது தான் , யாரோ என் காலை பிடித்து இழுப்பது தெரிந்தது. நான் திரும்பி பார்க்கவே இல்லை, என் மாயாவையே, அந்த அழகு தேவதையே பார்த்துக் கொண்டு ' மாயா, என் செல்லமே, நான் வாரெனடா கண்ணு' என்று சத்தம் போட்டு அலறியே விட்டேன். பிள்ளைகளும் சத்தம் கேட்டு ஓடிவந்து அப்பா, அப்பா என , மனைவியுடன் சேர்ந்து என்னை யன்னலால் குதிக்க விடாமல் உள்ளுக்குள் இழுத்துவிடார்கள். மனைவி என்னை கட்டிப்பிடித்து, உங்கள் மாயா எனக்கும் சகோதரி தான், எனக்கும் நண்பி தான். காலை நாம் குடும்பமாக இந்த , இனிவரும் ஒவ்வொரு கார்த்திகை தினத்திலும் விளக்கேற்றுவோம். இப்ப வந்து படுங்க, என பிள்ளைகளும் சேர்ந்து என்னை மீண்டும் கட்டிலில் படுக்க வைத்தனர். நான் அவர்களுக்காக கண்மூடி விடியும் மட்டும் இருந்தாலும், அந்த உருவம், என் மாயா என் மனதில் இருந்து அகலவே இல்லை ! "இறந்த அவளின் சூக்கும உடல் இளமுறுவலுடன் என் முன் வந்தது இலக்குமி போல அழகாய் தோன்றி இதழ் குவித்து முத்தம் தந்து" "பழைய மெல்லிசை முணுமுணுத்து பதுங்கி என் கண்கள் பார்த்து பதுமையாக என் முன் நின்று பணிந்து அழைத்து வா என்றது" "என் அழகிய குட்டி கண்மணியே எதற்காக உன் உயிரை மாய்த்தாய்? எழுச்சி தந்து நம்பிக்கை விதைத்து என்னை விட்டு விலகியது எனோ?" "இறந்ததாக நான் உன்னை நம்பவில்லை இன்றும் உனக்காக நான் காத்திருக்கிறேன் இளந் தென்றல் தொடும் அடிவானத்தில் இரவும்பகலும் உன்னைத் தேடி அலைகிறேன் ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  27. இதுதான் சிங்களத்தின் பிரித்தாளும் சூழ்ச்சிகள் வெல்லக் காரணம்.........! 😴
  28. 1 point
    முதற்காதல் முதல் முத்தம் என்றுமே மறக்க முடியாதது........பின்பு பல காதல் பல முத்தங்கள் கிடைத்தால் கற்பனைகள் கனவிலும் வராது.........மனமானது கையில் இருப்பதை ராசிக்காது இல்லாததை நினைத்துத்தான் ஏங்கிக் கொண்டிருக்கும்......அதுதான் படைத்தவன் குடுத்த விதி......! நன்றி ஐயா இணைப்புக்கு........!
  29. அவளைப் படிக்க நான் அவளிடம் என்ன இரவல் வாங்கலாம்? அனுபவத்திலை இருந்து ஒன்று இரண்டு அவிட்டு விட்டால் நானும் ஏதாவது செய்து பார்க்கலாம்😀
  30. பார்சல் கட்டத்தான் அனுமதியில்லை, சட்டியோட கொண்டுபோனால்....? என்ன.... வாகனம் ஒன்று பெரிசா வேணும் அவ்வளவுதானே.. ஒன்பது வடை போன பானைக்கு இது எம்மாத்திரம்? இதுக்கெல்லாம் மினைக்கெடுவது சுத்த வேஸ்ரூ மூவருக்கும்!
  31. யாரோ ச‌தி மூல‌ம் யாழ்க‌ள‌ EVM மிசின‌ காக் செய்த‌தால் ஒரு புள்ளி காணாம‌ல் போய் விட்ட‌து ஓட்டு போட்ட‌ நிருவ‌ர் விழிப்புண‌ர்வுட‌ன் இருந்த‌ ப‌டியால் மீண்டும் புதிய‌ ஓட்டு ப‌திவாகி உள்ள‌து ஹா ஹா...............................
  32. +1 ............ 🤣.... நான் சொல்லல்ல.......பல கொலம்பஸ்ஸூகள் இந்தக் கூட்டத்தில் இருக்கின்றார்கள் என்று........
  33. பனங்காட்டான் சொல்வது சரியாகத்தான் இருக்கின்றது. எந்தவிதமான தீர்வையும் முன்வைக்காமல் சகட்டுமேனிக்கு அதைத் தருவேன் இதைத் தருவேன் என்று தேர்தல் காலம் மட்டும் வடக்கு கிழக்கிற்கு வரும் சிங்களத்த தலைவர்களை புறக்கணித்து, தமிழனின் வாக்கு கிடைத்திருந்தால் நான் வென்றிருப்பேன் ஏன் எனக்கு கிடைக்கவில்லை என தோல்வியைத் தழுவும் சிங்கள தலைமைகள் யோசிக்க வேண்டும் . அல்லது அவர்களை அப்படி யோசிக்க வைக்க வேண்டும் . சும்மா சுமந்திரன் ஊதும் குழலை நம்பி மோசம் போனால் சிங்கள அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல சுமந்திரன் போன்ற அரசியல்வாதிகளுக்கும் தான் நன்மை . தமிழன் என்றும்போல் ஒன்றுமே கிடைக்கப்போவதில்லை
  34. உண்மைதான், இவங்கள் மூன்றுபெரும், சக நாட்டுக்காரனான என்னை கையைவிட்டுவிட்டு, மேலே இருந்துகொண்டு ஞாயம் பிளந்துகொண்டு இருக்கிறார்கள். இனி வரப்போகும் போட்டிகளுக்கான எனது தெரிவுகளை பார்த்தால் எனக்கு ரத்த ஆறு ஓடப்போவது தெரிகிறது. இதைப்பார்த்தால் எனக்கு கண்ணீர் வருகிறது
  35. 🙏.......... கையறு நிலையில் கம்யூனிஸ்டுகள் மட்டுமே எங்களிற்காக போராட வருவார்கள் என்பது தமிழ்நாட்டில் மீண்டும் மீண்டும் நடந்து கொண்டிருக்கும் நிஜம். சமூக நீதியும், தேசியமும், ஒருமைப்பாடும் பேசும் மற்றவர்கள் வாக்குகளின் கணக்கைப் பார்த்தே என்ன நடவடிக்கை என்று தீர்மானிக்கின்றனர்....
  36. கந்தையர் உங்களுக்கு இப்போதைய ட்ரெண்டிங்கே தெரியவில்லை ......... பாரிசில் "சின்னவீடு" என்று ஒரு உணவகம் உள்ளது.......சிறு சிறு கொண்டாட்டங்களை அங்கு வைத்து செய்வது வழக்கம் ...... அதில் என்ன விசேஷம் என்றால் ஒரு நீளமான மேசையில் நீளத்துக்கு வாழையிலை விரித்து பின் சீமெந்து குழைக்கும் வண்டிலில் அந்தப் பெரிய கரண்டியால் உணவுகள் சகலதும் ஒன்றாய் போட்டு குழைத்து (கடல் உணவு, மாமிச, மரக்கறி எல்லாம்) அவற்றை அந்தக் கரண்டியால் வாழையிலை மீது பரப்பி பரிமாறுகிறார்கள்.....எல்லோரும் நீளத்துக்கு அமர்ந்திருந்து விரும்பியதை எடுத்து சாப்பிட வேண்டியதுதான் .........! கூகுளில் (chinna veedu le bourget ) என்று தேடித் பாருங்கள் விவரங்கள் கிடைக்கும்......அவசரப்பட்டு வேறு ஏதாகிலும் நினைத்துக் கொண்டு போகக் கூடாது ........உணவு மட்டும்தான் ........! அதாவது இப்போது எல்லாவிதமானவைகளும் வந்து விட்டன......நீங்கள் வேண்டியளவு துட்டை தட்டில் வைத்து நீட்டினால் போதும்........! 😂
  37. கேள்விகள் 41) இலிருந்து 43) வரைக்கான புள்ளிகள்: 41) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) ஒருவரும் ஐக்கிய அமெரிக்கா அணியைத் தெரிவு செய்யவில்லை! IND PAK CAN IRL USA போட்டியாளர் ஈழப்பிரியன் IND PAK வீரப் பையன்26 IND PAK சுவி IND IRL நிலாமதி IND PAK குமாரசாமி IND PAK தியா IND PAK தமிழ் சிறி IND PAK புலவர் IND PAK P.S.பிரபா IND PAK நுணாவிலான் IND PAK பிரபா USA IND PAK வாதவூரான் IND PAK ஏராளன் IND PAK கிருபன் IND PAK ரசோதரன் IND PAK அஹஸ்தியன் IND PAK கந்தப்பு IND PAK வாத்தியார் IND PAK எப்போதும் தமிழன் IND PAK நந்தன் IND PAK நீர்வேலியான் IND PAK கல்யாணி IND PAK கோஷான் சே IND PAK 42) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 41) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) போட்டியாளர் #A1 - ? (2 புள்ளிகள்) #A2 - ? (1 புள்ளிகள்) ஈழப்பிரியன் IND PAK வீரப் பையன்26 IND PAK சுவி IND IRL நிலாமதி IND PAK குமாரசாமி IND PAK தியா PAK IND தமிழ் சிறி PAK IND புலவர் PAK IND P.S.பிரபா IND PAK நுணாவிலான் PAK IND பிரபா USA IND PAK வாதவூரான் IND PAK ஏராளன் PAK IND கிருபன் IND PAK ரசோதரன் IND PAK அஹஸ்தியன் IND PAK கந்தப்பு IND PAK வாத்தியார் IND PAK எப்போதும் தமிழன் IND PAK நந்தன் PAK IND நீர்வேலியான் IND PAK கல்யாணி IND PAK கோஷான் சே IND PAK 43) முதல் சுற்று குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! ஒருவரும் அயர்லாந்து அணியைத் தெரிவு செய்யவில்லை! போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் CAN வீரப் பையன்26 CAN சுவி USA நிலாமதி CAN குமாரசாமி CAN தியா CAN தமிழ் சிறி CAN புலவர் USA P.S.பிரபா USA நுணாவிலான் CAN பிரபா USA CAN வாதவூரான் CAN ஏராளன் USA கிருபன் CAN ரசோதரன் CAN அஹஸ்தியன் CAN கந்தப்பு CAN வாத்தியார் USA எப்போதும் தமிழன் CAN நந்தன் CAN நீர்வேலியான் CAN கல்யாணி CAN கோஷான் சே CAN 43 கேள்விகளுக்குப் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா USA 70 2 ரசோதரன் 70 3 ஈழப்பிரியன் 68 4 கோஷான் சே 68 5 நந்தன் 66 6 சுவி 64 7 கிருபன் 64 8 கந்தப்பு 64 9 வாத்தியார் 64 10 எப்போதும் தமிழன் 64 11 நீர்வேலியான் 64 12 வீரப் பையன்26 62 13 நிலாமதி 62 14 குமாரசாமி 62 15 தமிழ் சிறி 62 16 வாதவூரான் 62 17 அஹஸ்தியன் 62 18 தியா 60 19 P.S.பிரபா 60 20 ஏராளன் 60 21 கல்யாணி 60 22 புலவர் 56 23 நுணாவிலான் 54
  38. முதல் சுற்றின் இறுதிப் போட்டியாகிய 40வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி நிக்கொலஸ் பூரனின் அதிரடியான 98 ஓட்டங்களுடன் 5 விக்கெட் இழப்பிற்கு 218 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து 16.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 114 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: மேற்கிந்தியத் தீவுகள் அணி 104 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனக் கணித்த 18 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த ஐவருக்குப் புள்ளிகள் கிடையாது. முதல் சுற்றுப் போட்டிகளின் முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா USA 66 2 ரசோதரன் 66 3 ஈழப்பிரியன் 64 4 நந்தன் 64 5 கோஷான் சே 64 6 சுவி 60 7 தமிழ் சிறி 60 8 கிருபன் 60 9 கந்தப்பு 60 10 வாத்தியார் 60 11 எப்போதும் தமிழன் 60 12 நீர்வேலியான் 60 13 வீரப் பையன்26 58 14 நிலாமதி 58 15 குமாரசாமி 58 16 தியா 58 17 வாதவூரான் 58 18 ஏராளன் 58 19 அஹஸ்தியன் 58 20 P.S.பிரபா 56 21 கல்யாணி 56 22 புலவர் 54 23 நுணாவிலான் 52 முதல் மூன்று நிலைகளும் அமெரிக்கர்கள் வசம் போயுள்ளது!
  39. புனித திருமணம் என்று சொல்லபடுகின்ற மதகுரு வந்து கழுத்தில் செயின் கட்டி தமிழ் ஆண் v பெண் செய்த திருமணத்திலேயே அவர்களுக்கு பிறந்த பிள்ளைகள் 20 வயதில் அவர்களை வேண்டாம் என்று விட்டு தனியா சென்று வசிப்பவர்கள் பலர் உள்ளார்கள்.
  40. இங்கு கலிபோர்னியாவில் இரண்டில் ஒரு திருமணம் விவாகரத்தில் முடிகின்றது என்று சொல்கின்றனர். அதை விட விவாகரத்து என்று சட்டப்படி போகாமலேயே 'ஒரு பெற்றோர்' தலைமையில் இருக்கும் குடும்பங்களும் மிக அதிகம். இவை இரண்டும் சேர்ந்தால், அது இங்குள்ள ஒரு பால் பெற்றோர்களை விட பல மடங்குகள் அதிகம். இதை வைத்துப் பார்த்தால், இரு பால் திருமணத்தால் குழந்தைகளுக்கு ஒரு பாதுகாப்பான, முழு உலகமும் அறிந்து கொள்ளக் கூடிய சூழல் அமைகின்றது என்று எப்படிச் சொல்ல முடியும்? கோவில் கட்டுவதற்கு என்று ஆகம விதிகள் இருக்கின்றன. அன்றிலிருந்தே இருக்கின்றன. கோவில் என்றால் என்ன, ஏன் கோவில் வேண்டும் என்றும் எழுதப்பட்டு இருக்கின்றன. இந்த என்றோ எழுதப்பட்ட விதிகளை மீறி யாரோ சிலர் அவர்களின் சுய விருப்பத்தில் ஒன்றைக் கட்டி, ஒரு கடவுளை உருவாக்கி வழிபடுகின்றனர் என்று வைப்போம். அதை அவர்கள் தங்கள் கோவில் என்றும் சொல்கின்றனர். 'நீங்கள் உங்கள் சுய விருப்பில் செய்வதற்கு இங்கு தடையில்லை, ஆனால் இதை நீங்கள் கோவில் என்று சொல்லக் கூடாது, கோவில் என்றால் விதிகள் வேறு, வழிகள் வேறு. வேணும் என்றால் உங்களின் இடத்தை 'கும்பிடும் இடம்' என்று சொல்லிக் கொள்ளுங்கள்' என்று மற்றயோர் சொல்வது சரியா?
  41. கோதுமை ரவா உப்புமா.......! 👍
  42. சிலரது கருத்துக்களைப் பார்த்தால் தன்பாலீர்ப்பு, இருபாலீர்ப்பு பற்றிய அடிப்படைப் புரிதல்கள் இல்லை என்று தெரிகின்றது. பாலியல்வரட்சியால் சிறுபையன்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்பவர்களையும், தன்பாலீர்ப்பாளர்களையும் குழப்பிக்கொள்கின்றார்கள் போலிருக்கின்றது. குழந்தைகளையும், சிறுவர்களையும், மனவளர்ச்சி குன்றியவர்களையும், பிறவகையில் பாதுகாப்பாற்றவர்களையும் துஷ்பிரயோகம் செய்வது பாரிய குற்றங்கள். இப்படியானவர்களை ஓரினச் சேர்க்கையாளர்கள், தன்பாலீர்ப்பாளர்கள் என்று குழப்பக்கூடாது.
  43. கந்தையா அண்ணை, எனக்கு இரண்டு பிள்ளைகள், இங்கிருக்கும் ஓணாண்டி, விசுகு மற்றும் பலருக்கு தெரியும் நான் அவர்களுடன் போடும் கும்மாளம். ஆனால் என் மகிழ்ச்சிக்குரிய விடயங்கள் மட்டுமே எல்லாருக்கும் மகிழ்ச்சியை தரும் என நான் நம்பவில்லை. ஓரினச்சேர்க்கையாளர்கள் அவரவருக்கு தெரிந்த முறையில் மகிழ்வாக வாழ்கின்றனர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.