Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. கந்தப்பு

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    12678
    Posts
  2. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    2954
    Posts
  3. nunavilan

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    53011
    Posts
  4. Justin

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    7051
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 07/05/24 in all areas

  1. அப்படியா? அப்போ மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழர் கூட்டணியின் தலைவரின் பூத உடலை கூட தூக்க 4 பேர் கூடவா இல்லை? இப்போதும் மக்கள் விழித்து கொண்டார்கள் எனலாமா?? மக்கள் எச்சரிக்கை அடைந்து விட்டார்கள் என நான் சொல்கிறேன் நீங்கள் எப்படி?? "டேய் கள்ளா "என்பது பொய்யா??😁 இல்லை. நீங்கள் புலிகளை நாசுக்காகவும் ,நேரடியாகவும் தாக்கும் ஒருவர் என நான் அடையாளம் காண்கிறேன். எனது நீண்ட கால அவதானிப்பு இது. இது பற்றிய உங்களின் நேர்மையான பதில் தேவை.
  2. விசுகர், அது சிலரின் ரத்தத்தில் ஊறியுள்ள விஷம். ஆனால் கூர்ந்து கவனித்தீர்களானால் அந்த நால்வருக்கும் ஒரு ஒற்றுமை இருப்பதை காணலாம்!!
  3. என் நேர்மையான பதில் இது: புலிகளை நான் நேரடியாகவும், நாசூக்காகவும் தாக்குவதில்லை. ஆனால், புலிகள் செய்த தவறுகள் என்று நான் கருதுபவற்றை நான் நேரடியாகவே எழுதி "இது முட்டாள் தனம், இது தூர நோக்கில்லாத செயல், இது தவறு" என்று எழுதியிருக்கிறேன். இதை, சில வருடங்கள் முன்பு வரை உரிய திரிகளில் எழுதி வந்திருக்கிறேன். யாழ் நிர்வாகம் பகிரங்கமாக "புலிகளை குறை சொல்வது தேசியத்தை நலிவுறச் செய்யும்" என்று இதற்கு மறைமுகத் தடை விதித்த பின்னர் - அந்தக் கருத்தோடு உடன்பாடில்லா விட்டாலும் - தீவிரமாக புலிகளின் செயல்களை பற்றி நானாக எதுவும் எழுதவில்லை. ஆனால், புலிகள் பற்றி எழுத வேண்டிய தேவையை தமிழ் மக்களின் தற்போதைய நிலைக்கு காரணமாக 196 நாடுகளையும், சம்பந்தரையும் இன்ன பிற தரப்புகளையும் மட்டும் குற்றம் சாட்டும் "மடை மாற்றும்" உறவுகள் ஏற்படுத்துகிறார்கள். நேர்மை பற்றிப் பேசுகிறீர்கள், இதே நேர்மையை அந்த மடை மாற்றும் கள உறவுகளிடமும் எதிர்பாருங்கள், விளக்கம் கேளுங்கள். உதாரணமாக, இங்கே சம்பந்தன் செய்தது (இந்தியாவில் போய் நின்றது) வன்னி மக்களின் உயிரைப் பறித்ததா அல்லது தடுத்து வைக்கப் பட்டதும், அவர்கள் மேல் சிங்களவன் குண்டு போட்டதும் உயிரைப் பறித்ததா? இது ஒரு எளிமையான காரண காரியக் கேள்வி. இதற்கு நேரடியாகப் பதில் சொல்ல முடியாமல் , "சம்பந்தன் ஆயுதங்களை விட அழிவு செய்தார்"என்று எழுதும் விசுகரிடம், இதே நேர்மையான பதிலை எதிர்பாருங்கள். கிடைக்கிறதா என்று பாருங்கள். என்னுடைய அபிப்பிராயம்: புலிகளின் legacy இனை அடுத்த சந்ததிக்கு அப்படியே கடத்த வேண்டியதில்லை. அப்படிச் செய்வது முட்டாள் தனம். புலிகளின் தியாகம், நிர்வாகம், போர் ஓர்மம் எல்லாம் கடத்தப் பட வேண்டிய நல்ல விடயங்கள். தூர நோக்க அரசியல் உணர்வின்மை, ஒரு பிரச்சினைக்கு ஒற்றைப் படைத் தன்மையான தீர்வை மட்டும் நாடல், ஆகிய விடயங்கள் கடத்தப் படக் கூடாது. பி.கு: இந்தப் பதில் நீங்களும் ஏனைய சில புலிகளின் பக்தியாளர்களும் விரும்பிய மாதிரி இல்லாமல் இருந்தால் மன்னியுங்கள். ஏனெனில், அவர்களைப் பொறுத்த வரை "முன்னாள் மாற்று இயக்கக் காரர், புலிகளிடம் தண்டனை பெற்றவர்கள், இந்திய/சிறிலங்கன் தரப்பிடம் கூலி வாங்குவோர்" ஆக நான் இருந்தால் அவர்களுக்கு திருப்தியாக இருக்கும்😎.
  4. தெல்லிப்பளையில் இருக்கும் தெரிந்தவர்களுடன் உரையாடும் போது உதயன் பத்திரிகைக்கு சொந்தமான நிலத்தினை அதன் உரிமையாளர் சிவபூமி அறக்கட்டளைக்கு எழுதி வைக்கப்பட்டதினால் தனிப்பட்ட பிரச்சனை காரணமாக ஆறுதிருமுருகனை நோக்கி காழ்ப்புணர்ச்சி கருத்துக்கள் உதயன் பத்திரிகையில் வைக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
  5. ஒரே ஒரு மன்னிப்பு ------------------------------ அவர் எனக்கு ஒரு ஒன்று விட்ட தாத்தா முறை. மூன்று அல்லது நான்கு தலைமுறைகள் பின்னோக்கி போய்ப் பார்த்தால், ஒரு குடும்பத்தில் இருந்து நாங்கள் இன்று பல கிளைகளாக, பல குடும்பங்களாக வந்தது தெளிவாகவே தெரிந்தது. அவரின் பதிவுப் பெயர் எனக்கும், ஊரில் பலருக்கும் தெரியாது. எல்லோரும் அவரை கூப்பிடும் பெயர் கொஞ்சம் விநோதமானது. ஒரு காலத்தில் நீண்ட தலைமுடி வைத்து, அதை சிலுப்பிக் கொண்டு ஊருக்குள்ளே சுற்றித் திரிந்திருக்கின்றார் போல. அதனால் அப்படியே அந்தப் பட்டப் பெயர் அவருடன் ஒட்டிவிட்டது. ஊரில் அநேகமாக எல்லோருக்கும் பட்டப் பெயர்கள் இருந்தன, பெரும்பாலும் அந்தப் பெயர்களே பாவனைகளிலும் இருந்தன. ஒன்று விட்ட தாத்தாவின் விநோதமான பெயரைப் போலவே அவரின் வீடும் கொஞ்சம் விநோதமானது. இரண்டு ஒழுங்கைகள் முடிகின்ற, அல்லது அவை தொடங்குகின்ற இடத்தில் அவரின் வீடு இருந்தது. இரண்டு பக்கங்களிலும் கதவுகள் இருந்தன. ஊரவர்கள் அவரின் வீட்டு வளவினூடு மிகச் சாதாரணமாகப் போய் வருவார்கள். ஒன்று விட்ட தாத்தாவின் மனைவியான அந்த அப்பாச்சி மிகவும் அன்பானவர். அந்த அன்பே ஊரவர்களை அந்த வீட்டை பாதையின் ஒரு பகுதியாக பயமின்றி நினைக்க வைத்துக் கொண்டிருந்தது. அவர் வீட்டில் ஒரு பெரிய கொய்யா மரம் நின்றது. எல்லோரும் காய்களும், பழங்களும் பிடுங்குவார்கள். அப்பாச்சி பார்த்தால் சிரித்துக் கொண்டு போய்விடுவார். ஒன்று விட்ட தாத்தா வெளியே வந்தால் எவரென்றாலும் ஓடிவிடுவார்கள். ஒரு சமயம் ஒன்று விட்ட தாத்தா சில நாட்கள் எங்கள் வீட்டில் தங்க வேண்டி வந்தது. அவர்களின் குடும்பத்தில், தாத்தாவின் இளைய மகனுக்கு, தமிழ்நாட்டில் திருமணம் நடப்பதாக முடிவாகியிருந்தது. அந்த மகன் இலங்கைக்கு வர முடியாத சூழ்நிலையால், திருமணச் சடங்கை தமிழ்நாட்டில் வைப்பதாக முடிவெடுத்திருந்தார்கள். அந்த நேரத்தில் ஒன்று விட்ட தாத்தாவால் பயணம் போக முடியாது என்று அவரை எங்கள் வீட்டில் விட்டுப் போயிருந்தனர் அப்பாச்சியும், அவரின் குடும்பமும். ஒன்று விட்ட தாத்தா வந்த நாளிலிருந்தே ஆரம்பித்துவிட்டார். வீட்டில் இருப்பவர்களுக்கு அவருடன் காலம் தள்ளும் ஒவ்வொரு பொழுதும் போதும் போதும் என்றாகியது. என் தந்தை வீட்டிலே நிற்கும் நேரம் வெகு குறைவு. அவருக்கு இப்படி ஒரு விடயம் வீட்டில் நடந்து கொண்டிருக்கின்றது என்பதே தெரியாது. தெரிந்திருந்தாலும், அவர் பிரச்சனையை தீர்த்து வைத்திருப்பார் என்றும் இல்லை. முக்கியமாக இந்தப் பிரச்சனைக்கு தீர்வு என்று ஒன்றும் இல்லை. என்ன ஆனாலும் ஒன்று விட்ட தாத்தாவின் குடும்பம் திரும்பி வரும் வரை அவர் எங்கள் வீட்டில் இருந்து தான் ஆகவேண்டும். இரண்டு வாரங்கள் ஓடியது. அம்மாதான் மிகவும் கஷ்டப்பட்டு போனார். விருப்புகளையும், வெறுப்புகளையும் அடக்கி அடக்கி வெளிக் காட்டாமல் வாழும் அன்றிருந்த எல்லா குடும்ப தலைவிகளையும் போன்றவர் தான் அவரும். ஒன்று விட்ட தாத்தாவின் வீட்டார்கள் இந்தியாவிலிருந்து திரும்பி வந்து, அப்பாச்சியும் அவரின் மூத்த மகனும் ஒன்று விட்ட தாத்தாவை கூட்டிப் போவதற்கு எங்கள் வீட்டிற்கு வந்திருந்தனர். வாசல் வரை போன ஒன்று விட்ட தாத்தா, நாங்களும் ஒரு இடைவெளி விட்டு பின்னால் போய்க் கொண்டிருந்தோம், திடீரென்று நின்று அம்மாவை கையெடுத்துக் கும்பிட்டார். 'நான் ஏதும் பிழைகள் செய்திருந்தால் என்னை மன்னித்து விடு, பிள்ளை............' என்று கலங்கி நின்றார். அம்மா அழுதேவிட்டார். ' என்ன இப்படி சொல்லிறியள், நீங்க எனக்கு அப்பா மாதிரி......... எப்ப வேணுமென்றாலும் வாங்கோ.........' என்று வழிந்த கண்ணீரை துடைத்தார் அம்மா. ஒன்று விட்ட தாத்தாவின் எந்த ஒரு சொல் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றியது என்ற கேள்வி பல நாட்களாக என்னுள்ளே வந்து வந்து போனது.
  6. ஈழத்தில் எதிரியாக இருந்தாலும்,அனாதையாக இருந்தாலும் ஒரு மரண நிகழ்வு நடந்தால் பாரபட்சம் பார்க்காமல் எல்லோரும் கூடி நின்று மரண நிகழ்வை நடத்துவர். ஆனால் ஒரு பழம்பெரும் எமது அரசியல்வாதி இறந்த பின் நடக்கும் கொடுமைகளையும் , பல இணைய தளங்களில் வரும் கருத்தோட்டங்களை பார்க்கும் போது.......இப்போதிருக்கும் தலைவர்கள் சுதாகரித்து கொள்வார்களாக.....
  7. புலிகளது சமாதான காலத்தில் அப்போதைய கூட்டமைப்பினது நாடாளுமன்ற உறுப்பினர்களில் அனேகமாணோர் ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்தவர்கள். அந்தக் காலத்தில் சம்பந்தன் ஐயா அவர்கள் பின்லாந்துக்குச் சக உறுப்பினர்களுடன் வந்திருந்தார். அசாத்திய நினைவாற்றல் உதாரணமாக எந்தவிதக் குறிப்புகள் இல்லாமல் அனைவரது தொலைபேசி இலக்கங்களையும் சொல்லுவார். நாங்கள்தான் அவர்கூறும் தொலைபேசி இலக்கங்களை அழுத்திக்கொடுப்பது. அந்தவேளை சுமந்திரன் அவருடன் தாயகத்தில் பணியாற்றியிருந்தார் என நினைக்கிறேன். அதாவது சட்டத்தரணியாக. சம்பந்தன் ஐயா அடிக்கடி சுமந்திரனுடன் தொலைபேசி அழைப்பை எடுத்துக் கதைப்பார் அந்த வேளையில் இலகுவான வாட் அப்போ வைபரோ இருப்பதில்லை நேரடி அழைப்புத்தான் அனைத்தையும் புலிகளது கிளைதான் ஏற்பாடு செய்திருந்தது. அவர் பலமுறை சுமந்திரனுடன் பேசும்போது உடனிருந்திருக்கிறேன் மரியாதை கருதி அவர் என்ன பேசுகிறார் என்பதைக் கூர்ந்து கவனிப்பதில்லை. ஆனால் அவர் சுமந்திரனை விளிக்கும்போது முழுப்பெயரும் சொல்லி அழைப்பதில்லை சமன் சுமன் என ஒரு குழந்தைப்பிள்ளையை கூப்பிடும் பாசத்துடன் அழைப்பார். ஏதோ கடிதங்கள் மற்றும் வழக்குகள் சம்பந்தமாகக் கதைக்கிறர் என நான் நினைப்பதுண்டு. பிற்காலத்தில் அந்தாளது புகழுக்குக் கொள்ளிவைக்கும் ஒரு ஆளாகக் கட்சிக்குள் சுமந்திரன் என்பவர் நுளைவார் என்பதை யார் கண்டது. சம்பந்தன் ஐயாவது பிற்காலத்தில் அவரது அனைத்துச் செயல்களுக்கும் பின்னாடி நின்றது சுமந்திரந்தான் அறிக்கை விடுவதிலிருந்து அரசியல் முடிவுகள் எடுப்பதுவரை தன்ர எண்ணத்துக்கு அவரது பெயரைச்சொல்லி அந்தாளை நாசமாக்கிப்போட்டார். சம்பந்தன் ஐயா ஒரு அரசியல்வாதியாக இருந்து தமிழர்கள் விடுதலைக்காக இறுதிவரை நேர்மையாகச் செயல்பட்டிருந்தால் அவரது பூதவுடலை பொகழுடலாகத் தமிழினம் தாங்கியிருக்கும். தந்தை செல்வா எனும் ஒரு நேர்மையாளனால் தோற்றுவிக்கப்பட்ட தமிழரசுக்கட்சியின் நேற்றுவரை உயிருடன் இருந்த மூத்த தலைவர் எனும் மிகப்பெரிய பெருமை சம்பந்தன் ஐயாவுக்கு இருக்கு, ஆனால் அதை எல்லாம் அவர் பெருமைப்படும்விதத்தில் தமிழர் மனங்களில் விதைக்காது வெறுப்பினை விதைத்துவிட்டார். ஆனால் இனிவரும் காலங்களில் மூன்று சந்ததிகள் கண்ட ஒரு அரசியல்வாதியைக் காண்பது அரிது. சுமந்திரனுக்கும் சாவு வரும் அது இதைவிடக்கேவலமானதாக இருக்கும் என்பதை இன்று அவர் உணர்ந்திருப்பார். ஆனால் அவர் திருந்தமாட்டார். சம்பந்தன் ஐயா யாழ் களத்தின் உறுப்பினர்கள் உங்களைப்பற்றி அவதூறாகப் பதிவிடுவது வேதனையின் வெளிப்பாடே ஒரு அங்கலாய்ப்பே. இனிமேலாவது உங்களைப்போன்ற தலைவர்கள் தமிழர் உரிமை, தமிழர் விடுதலை, தமிழர்களது கண்ணியம் இவைக்காகப் பாடுபடவேண்டும் எனும் போரவாவினாலேயே, அதை விடுத்து எங்களுக்கு உங்கள் மீது தனிப்பட்ட வெறுப்புகள் எதுவும் இல்லை. நாம் ஒரு நேர்மை மிக்க தலைவனை எமது வாழும் காலத்தில் கண்டுள்ளோம் சரி பிழைகளைத் தவிர்த்துவிட்டுப்பார்த்தால் தனை தவறுகளையும் ஏற்றுத்தான் அத்தலைவன் தனக்குத் தானே தீர்ப்பை எழுதிக்கொண்டான். அதில் ஒருவிகித உண்மையாவது எம்முடன் அரசியல் செய்வோரிடம் நாம் எகிர்பார்ப்பது தவறில்லையே. சம்பந்தன் ஐயா உங்களுக்கு எங்கள் "இறுதி வணக்கங்கள்"
  8. இது கருத்துக்களம். இங்கு பல்வேறு விடயங்கள் பற்றி கருத்துக்களை பகிர்கின்றோம். சம்பந்தனை நையாண்டி செய்து ஒரு கருத்தை நானும் நீங்களும் வைத்துவிட்டு செல்லவில்லை. இல்லாவிட்டால் இரண்டு பக்கங்களில் இந்த உரையாடல் மற்றைய செய்திகளினுள் காணாமல் போயிருக்கும். சம்பந்தர் போனால் என்ன இனி துவம்சம் செய்யப்படுவதற்கு சுமந்திரன் உள்ளார். சுமந்திரனை தூற்றுவதுடன் இன்னும் பத்து பதினைந்து வருடங்கள் போய்விடும்.
  9. "தன்னம்பிக்கை" யாழ் வைத்தீஸ்வர வித்தியாலயம் அல்லது வைத்தீஸ்வராக் கல்லூரி எனப்படும் என் பழைய பாடசாலை 1913 ஆம் ஆண்டில் நாகமுத்து இடைக்காடர் என்னும் சமூகப் பற்றாளர் ஒருவரால் வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் சொந்தமான கட்டிடமொன்றில் ஆரம்பிக்கப்பட்டது என வரலாறு கூறுகிறது. உண்மையில் அங்கு முதலில் இரண்டு பாடசாலைகள் ஆரம்பிக்கப் பட்டன. தமிழ் மொழி பாடசாலையாக விவேகானந்தா வித்தியாலயமும், ஆங்கில மொழி பாடசாலையாக வைத்தீஸ்வர வித்தியாலயமும் ஆகும். பின் 1918 இரண்டும் இணைக்கப்பட்டு வைத்தீஸ்வர வித்தியாலயமாக இராமகிருஷ்ணா மிஷனிடம் அன்று கையளிக்கப் பட்டது. இங்கு முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரும் கடமையாற்றனார் என்பதும் குறிப்பிடத் தக்கது. மேலும் இது முதலாம் தர பாடசாலையாக, 01/01/1952 அன்று, அன்றைய அதிபர் s அம்பிகைபாகனின் விடாமுயற்சியால் தரம் உயர்த்தப் பட்டதும் குறிப்பிடத்தக்கது. நாகமுத்து என் அம்மம்மா திருமதி பார்வதி முருகேசுவின் ஒரு அண்ணா ஆகும், மற்ற அண்ணா சரவணமுத்து இடைக்காடர் ஆகும். எது எப்படியாகினும் இன்று என் அப்பா கணபதிப்பிள்ளை கந்தையா ஒரு சுருட்டு தொழிலாளியாகும். என் அம்மா கனகம்மா தன் எட்டு பிள்ளைகளையும், அந்த வருமானத்துக்குள் எப்படியோ நல்ல படிப்பு கொடுத்து, தன்னம்பிக்கையுடன் வளர்த்துக்கொண்டு இருந்தார். நான் என் பெற்றோருக்கு ஏழாவது குழந்தையாகும். நான் ஐந்தாம் வகுப்புவரை யாழ் ஆனைப்பந்தி மெதடிஸ்ற் மிஷன் வித்தியாலத்தில் கல்வி கற்றுவிட்டு, ஆறாம் வகுப்புக்கு வைத்தீஸ்வர வித்தியாலயத்தில் என் பெற்றோரால் சேர்க்கப் பட்டேன். முதல் நாள் பாடசாலைக்கு போகும் பொழுது என் அம்மா சொல்லி அனுப்பியது, "எந்த சந்தர்ப்பத்திலும், இது எம் முன்னைய குடும்பத்தாரின் கல்வித் தொண்டால் உருவானது என்பதை சொல்லக்கூடாது, அந்தக் குடும்பத்தின் இன்றைய ஒரு உறுப்பினரான நாம் கொஞ்சம் உழைப்பில் கீழே இறங்கிவிட்டோம். ஆனால் எமக்கு தன்நம்பிக்கை உண்டு, நீங்கள் ஒவ்வொரு வரும் கல்வியில் உயர்வீர்கள். அது தான் எமது பெருமை! பழையதை, எம் முன்னைய கும்பத்தின் பெருமையை சொல்லித்திரிவது அல்ல" . அது இன்னும் என் மனதில் ஆழமாக பதிந்து உள்ளது. மரத்தை வெட்டிக் கொள்ளும் தச்சர்கள் பெற்ற சிறுவர்கள் தம் மழுவோடு காட்டிற்குச் சென்றால் அங்குள்ள மரங்கள் எப்படி அவர்களுக்கு உடனே வேண்டுமாறு பயன்படுமோ அப்படி "எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே" என வாயிற் காப்போனிடம் ஔவையார் கூறியது தான் எனக்கு ஞாபகம் வந்தது. அந்த துணிவு, தன்னம்பிக்கை தான் எம் அம்மா எமக்கு தந்தது! இலங்கை தமிழ் நாவல்களை எடுத்துக்கொண்டால், முதல் நாவல் என்று கருதப்படும் "பிரதாப முதலியார் சரித்திரம்" தொடக்கம் இன்று வரை அறவியல் நோக்கில் எழுதப்பட்டவை அனேகம். அத் தகையோரில் ஒருவரே 'இடைக் காடர்' என்னும் புனைபெயரில் நவீனங்களும் வேறு சில நூல்களும் எழுதிய ஆசிரியர் த. நாகமுத்து [1868 - 1932] அவர்கள் ஆகும். இவர் இடைக்காடு, அச்சுவேலி என்னும் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டிருந்தமையாலும், அவருடைய முன்னேர் ஒருவர் அப் பெயரைக் கொண்டிருந்தமையாலும் நூல்கள் வெளியிட முற்பட்ட வேளையில், இடைக்காடர் என்ற புனைபெயரில் 'நீலகண்டன்", சித்தகுமாரன்", *வினுேதக்கதைகள்" ஆகிய புனை கதைகளையும் அம்பலவாண பிள்ளை என்பவருடன் இணையாசிரியராக "இலகுசாதகம்" என்னும் சோதிட சாஸ்திர நூலையும் வெளியிட்டார் என்பதும் குறிப்பிடத் தக்கது. எனினும் இந்நூல்களை வெளியிட்டமையால் பெற்ற கீர்த்தியிலும் பார்க்க 'யாழ்ப்பாணம் வண்ணுர்பண்ணை வைத்தீஸ்வர வித்தியாலயத்தை' நிறுவியமையால் அவர் ஈட்டிய புகழே இன்று வரை நிலைத்திருக்கிறது! இது ஏறத்தாழ அன்று 500 மாணவர்களை கொண்ட முதலாம் வகுப்பில் இருந்து உயர் வகுப்பு மட்டும் உள்ள ஒரு கலவன் பாடசாலை ஆகும். ஆகவே முதல் நாள் நான் அங்கு போகும் பொழுது, பெரும்பாலான மாணவர்கள் அங்கு ஏற்கனவே கற்றுக்கொண்டு இருபவர்களாகவே இருந்தனர். நான் என் குடும்ப நிலையின் காரணமாக, காலில் சப்பாத்து ஒன்றும் இல்லாமல், வெறும் காலுடன் மற்றும் கட்டை காக்கி காற்சட்டையுடன் போய் இருந்தேன். என்னை பார்த்த சில சக மாணவ மாணவிகள் கேலி சிரிப்பு செய்தனர். ஏன் முதல் நாள் என் வகுப்பு ஆசிரியை ஒருவர் கூட என்னைக் கடைசி வாங்கில் இருக்கும் படி பணித்தார். எனக்கு என் அம்மா என்றும் தரும் தைரியம் என் இரத்தத்தில் ஓடுவதால், இதை பார்த்து நான் துவண்டு போகவில்லை. எனக்கு பாரதிதாசன் கவிதைதான் நினைவில் நின்றது. "விழுவது இயல்பு வெட்கப் படாதே வீறுடன் நின்றிடுவாய்! அழுபவன் கோழை அச்சத் தியல்பு தாழ்வை அகற்றிடுவாய்!" ஆனால் நான் அங்கு எல்லோரையும் அப்படி குறிப்பிடவில்லை. இதை கவனித்த இன்னும் ஒரு ஆசிரியை என்னை கூப்பிட்டு, “ கிண்டல் செய்யும் பொழுது, நீ தன்னம்ம்பிக்கையை அதிகமாக இழக்கலாம், எனவே தான் அவர்கள் மீண்டும் சிரிக்க தொடங்குகிறார்கள். எனவே நம்பிக்கையுடன் அவர்களுக்கு துணிந்து பதில் சொன்னால், அவர்கள் கேலி செய்வதை நிறுத்தி விடுவார்கள். நீ அவர்களுக்கு “நான் இப்படித்தான் வருவேன், நீ யார் கேட்க ? அது என் இஷ்டம்” என்று சொல்லு என உற்சாகப் படுத்தினார், என்றாலும் எனக்கு கடைசி வாங்குதான் நிரந்தரமாக இருந்தது விட்டது! "ஓர் இல் நெய்தல் கறங்க, ஓர் இல் ஈர்ந் தண் முழவின் பாணி ததும்ப, புணர்ந்தோர் பூ அணி அணிய, பிரிந்தோர் பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப, படைத்தோன் மன்ற, அப் பண்பிலாளன்! இன்னாது அம்ம, இவ் உலகம்; இனிய காண்க, இதன் இயல்பு உணர்ந்தோரே" எனக்கு பக்குடுக்கை நன்கணியார் பாடல் மனதை தொட்டது. ஒரு சிலர் துன்பம் தந்து என்னைக் கவலை படுத்த, வேறு சிலர் தைரியம் தந்து மகிழ்ச்சி படுத்த, இப்படியான ஒரு வாழ்வை வகுத்துத் தந்த படைப்புக் கடவுள் பண்பு இல்லாதவன் என்றுதான் அப்பொழுது எனக்குத் தோன்றியது. எனினும் இதன் இப்படியான இயல்பினை உணர்ந்தவர்கள் இதிலும் இனிமையைக் காணக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவரின் இறுதி வார்த்தை தன்னம்பிக்கையை மேலும் கூட்டியது! இரண்டு மூன்று மாதத்தில் தவணைப் பரீட்சை வந்தது. என் எண்ணம் எல்லாம் இதில் நான் யார் என்று கட்டவேண்டும். ஒருவனின் அறிவுக்கும் உடைக்கு ஒரு தொடர்பும் இல்லை என்பதை அந்த சிலருக்கு தெரியப்படுத்த வேண்டும். என்னைப் பார்த்து சிரித்தவர்கள் தலை குனிந்து போகவேண்டும். எனக்கு என் அம்மா, அந்த ஆசிரியை, தமிழ் இலக்கியம் தந்த தன்னம்பிக்கை இப்ப நிறைய உண்டு, அதைவிட எனக்கு என்னில் கூடுதலான நம்பிக்கை உண்டு! “இளம்பிறையே! உனது ஏழைமையை நினைத்து வருந்தாதே! ஏனென்றால் உன்னுள்ளேதான் பூர்ணசந்திரன் புதைந்து கிடக்கிறான்” என்று யாரோ சொன்னது ஞாபகம் வந்தது! ஆமாம் நான் புது மாணவன் தான் ஆனால் விரைவில் என் முழுமை வெளியே வரும். எனக்குள் ஒரு சிரிப்பும் வந்தது! சோதனை நடந்து ஒரு கிழமையால், பரீட்சை பெறுபேறுகள் அறிவிக்கப்பட்டன. சக மாணவ மாணவிகளின் ஆச்சரியத்துக்கு இடையில் பெரும் புள்ளிகளுடன் நான் முதல் இடத்தில் நின்றேன், ஆனால் அது எனக்கு மகிழ்வு தரவில்லை, அது எனக்கு முதலே தெரியும், ஆனால் மகிழ்வு தந்தது அந்த சிலர் வாயடைத்து நின்றதும், என்னுடன் நண்பராக முந்தி வந்ததுமே! இதில் என்ன வேடிக்கை என்றால், என்னை கடைசி வாங்குக்கு அனுப்பிய அந்த ஆசிரியை என்னை முதல் வாங்கில் அமர கூப்பிட்டதுவே! என்றாலும் நான் அதை ஏற்கவில்லை, மிக பணிவாக 'பின் வாங்கில் ஒரு பிரச்சனையும் இல்லை டீச்சர், இரண்டும் ஒரே வாங்குதான், பார்க்கும் பார்வைகள் தான் வித்தியாசம்' என்று கூறி பின் வாங்கிலேயே அமர்ந்து விட்டேன்! அதன் பிறகு தொடர்ந்து முதலாம் இடத்தில் இருந்ததுடன், எல்லோரும் என்னுடன் அன்பாக நட்பாக பழகினார்கள். அதுமட்டும் அல்ல அந்த ஆசிரியை உட்பட அந்த சில சக மாணவர்களும் என்னை மதிக்க தொடங்கினார்கள். இப்ப அவர்களுக்கு உடை பெரிதாக தெரியவில்லை. இன்னும் நான் வெறும் காலுடன் கட்டை காக்கி காற்சட்டையுடன் தான் பாடசாலை போகிறேன், பின் வாங்கில் தான் இருக்கிறேன், அதில் எந்த மாற்றமும் இல்லை! ஆனால் இப்ப நான் வேண்டும் என்றே அப்படி போகிறேன், அப்படி இருக்கிறேன். அது தான் வித்தியாசம்!! அது நான் பல்கலைக்கழகம் போகும் மட்டும் தொடர்ந்தது. ஆனால் நான் யாழ் மத்திய கல்லூரிக்கு போய்விட்டேன். இப்ப நினைத்தால் எனக்கு கொஞ்சம் வருத்தம் தான்! கொஞ்சம் நானும் விட்டுக்கொடுத்து போய் இருக்கலாம் என்றே எண்ணுகிறேன், ஆனால், மனதில் முதல் நாள் ஏற்பட்ட அந்த கோபம் வைராக்கியம் உண்மையாக மாற பல ஆண்டுகள் எடுத்துவிட்டது! "குழந்தை பருவம் சுமாராய் போச்சு வாலிப பருவம் முரடாய் போச்சு படிப்பு கொஞ்சம் திமிராய் போச்சு பழக்க வழக்கம் கரடாய் போச்சு" என்பதே உண்மையாக போச்சு!! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  10. வயது போயிட்டுது. 😄. காலை முரசுக்கு பதிலாக காலைக்கதிர் என்று எழுதிவிட்டேன்
  11. 9 பக்கம் வரை நீன்ட இந்த திரியில் உள்ள விடையங்கள் பற்றி தாயக மக்கள் எந்தவிதமான பிரதிபலிப்புகளையும் வெளிப்படுத்த வில்லை.அவர்களின் பிரச்சனைகள் அவர்களுக்கு.
  12. வரலாறு படைத்துள்ள உமா குமாரன் 19,145 வாக்கு பெற்ற முதல் பிரித்தானிய தமிழ் MP
  13. கதை கட்ட ஒருவன் பிறந்துவிட்டால் கண்ணகி வாழ்விலும் கலங்கம் உண்டு யாருக்கு பொருந்திதோ இல்லையோ ஆறு திருமுருகன் ஐயா விடயத்தில் பொருந்தும் தேசியத்தில் உறுதியா நிற்பவர்களைம் சைவ தொண்டு ஆற்றுபவர்களையும் எல்லாவற்றையும் காசாக்க நினைப்பவர்களுக்கு இடையூறா இருக்கும் தொண்டாற்றுபவர்களையும் வடக்கு ஆளுநர் கிறிஸ்தவ பெண்மணி அம்மையார் திருமதி சார்ள்ஸ் அவர்களை வைத்து முடக்க நினைக்கிறார்கள் எல்லாவற்றையும் வென்று அந்த துர்கை அம்மன் துணையுடன் மீண்டெழுவார் ஐயா ஆறு திருமுருகன்
  14. தாயக உண்மை நிலை இது தான் ஆனால் இங்கே நீங்கள் யாராவது தாயக அரசியல்வாதிகளை விமர்சித்தால் அது எவராக இருந்தாலும் நாங்கள் புலிகளின் தவறுகளை இங்கே விதைப்போம் புலிகளை இழுத்து உங்களை அடிப்போம் என்று ஒரு தியரி இருக்கிறது. அது எந்த விதத்தில் தாயக மக்களின் அபிலாசைகளுடன் ஒத்துப்போகும் என்பது தான் ஆச்சரியமாக இருக்கிறது. எவ்வளவு வஞ்சம் தீர்க்கும் உணர்வு இது??
  15. யேர்மனியில் நான் வசிக்கும் மாநிலத்தின் தலைநகரில் இரண்டு பிள்ளையார் கோவில்களும் ஒரு முருகன் கோவிலும் இருக்கின்றன. முத்தி விநாயகரோ? சித்தி விநாயகரோ? பிள்ளையார் கோவில்களுக்கு என்ன என்ன பெயர் வைத்தார்கள் என்று யாருமே பெரிதாகக் கவனிப்பதில்லை. ஒன்றை புலிப் பிள்ளையார் கோவில், மற்றையதை புளொட் பிள்ளையார் கோவில் என்றால் போதும். அடையாளம் கண்டுவிடலாம். மழை பெய்து, வெள்ளம் வந்து கிணற்று நீரோடு கலப்பது போல, 2009க்குப் பின்னர் நாட்டில் இருந்து யேர்மனிக்குப் புலம் பெயர்ந்து வந்த சிலரோடு, ஏற்கனவே பொறுப்பாளர்களுடன் முரண்பட்டுக் கொண்டிருந்த சில அதிருப்தியாளர்களும் கலந்து கொள்ளப் பிறந்ததுதான் ஶ்ரீ பால முருகன் கோவில். 2023 இல் உருவான முருகனுக்கு இந்த வருடம் யூனில் திருவிழா நடந்து முடிந்திருக்கிறது. தேர் இல்லாமல் திருவிழா ஏது? முருகன் கோவில் நிர்வாகிகள் அலசி ஆராய்ந்து ஒரு பழைய ‘காய்’யைப் போய்ப் பார்த்தார்கள். அவருடன் என்ன பேசிக் கொண்டார்கள் என்று தெரியவில்லை. தேர் செய்வதற்கு அவர் 20,000 யூரோக்களை தூக்கிக் கொடுத்து விட்டார். தேரும் செய்தாயிற்று. திருவிழாவும் தொடங்கியாயிற்று. தேர்த்திருவிழாவுக்கு முதல்நாள், தேர் செய்ய உதவிய அன்பருக்கு நன்றி செலுத்த நிர்வாகிகள் முடிவெடுத்தார்கள். சாமியை விட சாமி அமரத் தேர் தந்த வள்ளல் பெரியவர் அல்லவா? அவர் இல்லாவிட்டால் சாமி வலம் வரத் தேரேது? சாமிக்கு முந்தி அவரைத் தேரில் அமர்த்தி வெள்ளோட்டம் செய்தார்கள். ஆள் கூடி அவரைத் தேரில் வைத்து இழுத்து மகிழ்ந்தார்கள். திருவிழா முடிந்ததா? இப்பொழுது விமர்சனங்கள் வர ஆரம்பித்து விட்டன. “சாமி இருக்கிற தேரிலை மனுசனை வைச்சு இழுக்கலாமோ, அதுவும் சாமிக்கு முந்தி?” “அவங்களுக்கு அறிவில்லாமல் இருக்கலாம், தேரிலை ஏறி இருக்கிறவனுக்கு அறிவில்லையோ?” “20,000 குடுத்து வருசத்துக்கு ஒரு தடவை மட்டும் இழுக்கிறதுக்கு தேரைச் செய்யிறாங்களே, இவங்களை என்ன சொல்ல?” “இந்தக் காசை நாட்டிலை கஷ்டப் பட்டுக் கொண்டிருக்கிற யாருக்காவது குடுத்திருக்கலாம்” “இந்தக் காசுக்கு நல்ல கார் ஒன்றை செக்கன் ஹாண்டா வாங்கி வருசக் கணக்காக ஓடி இருக்கலாம்” “சந்தனம் மிஞ்சினால் எங்கெல்லாம் பூசுவாங்களோ?” “இப்பத்தான் கிட்டடியிலை வந்தவங்கள். எங்களை விட அவையளுக்கெல்லோ நாட்டு நிலமைகள் நல்லாத் தெரியோணும்” இப்படி இன்னும் பல வந்து கொண்டிருக்கின்றன. பொறுங்கோ, நான் கடைசியா போட்ட படத்திலை யாரோ தெரிஞ்சவர் ஒருவர் நிக்கிறார். எல்லாரும் வெறும் மேனியோடை நிற்க அவர் மட்டும் சேட்டுப் போட்டுக் கொண்டு.. அவர் போலை கிடக்கு… அட அவரேதான்..
  16. யாழ்ப்பாண வைத்தியர்களின் தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்திய வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன். (03.07.2024) வைத்தியர்கள் சிலரால் சீரழிக்கப்படும் மருத்துவத்துறை
  17. 10வ‌ருட‌த்துக்கு முத‌ல் இருந்த‌ ஜேர்ம‌ன் அணி இரும்பு அணி வெற்றி மேல் வெற்றி 2014உல‌க‌ கோப்பைக்கு பிற‌க்கு அந்த‌ அணிக்கு என்ன‌ ஆச்சு என்று தெரிய‌ வில்லை தொட‌ர் தோல்விக‌ளை ச‌ந்திக்கின‌ம்.................... ப‌ழைய‌ ஜேர்ம‌ன் அணியா 2026 உல‌க‌ கோப்பையில் பார்க‌லாம் என்று ந‌ம்புகிறேன் தாத்தா...............................
  18. அவ்வளவு தான் விசுகு இனி உங்களுடனும் பேசமாட்டார் உறவே. 😂
  19. நியாயத்துக்கும் விசுவாசத்துக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் ஒருவன் இறுதியில் எதைத் தேர்வு செய்கிறான் என்பது ‘கருடன்’ படத்தின் ஒன்லைன். தேனியில் உள்ள கோம்பை அம்மன் கோயில் நிலத்தை அபகரிக்கத் துடிக்கிறார் அமைச்சர் தங்கபாண்டி (ஆர்.வி.உதயகுமார்). இதற்கான பட்டா கோயிலுக்குச் சொந்தமான வங்கி லாக்கரில் உள்ளது. அதனை எப்படியாவது எடுத்தாக வேண்டும் என்பதில் அமைச்சர் முனைப்புக் காட்ட, அதனை பராமரித்து வருகிறது செல்லாயி (வடிவுக்கரசி) குடும்பம். அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆதி (சசிகுமார்), கர்ணா (உன்னி முகுந்தன்). இணை பிரியாத் தோழர்கள். இதில் சிறுவயதில் தனக்கு அன்னமிட்டு அடைக்கலம் கொடுத்த ஆதிக்கு தீவிர விசுவாசியாக இருக்கிறார் சொக்கன் (சூரி). இவர்களைத் தாண்டிதான் நிலத்தின் பட்டாவை எடுக்க வேண்டும். அதற்காக ஆதி - கர்ணா நட்பில் விரிசலை ஏற்படுத்த முயற்சிக்கும் அமைச்சர் அதில் வெற்றி கண்டாரா, இல்லையா? நியாயமா, விசுவாசமா என வரும்போது சொக்கன் எந்தப் பக்கம் நின்றார் என்பது படத்தின் திரைக்கதை. வெற்றிமாறன் கதையை திரைக்கதையாக்கி இயக்கியிருக்கிறார் துரை செந்தில்குமார். மூன்று முக்கிய கதாபாத்திரங்கள், அவர்களுக்குள் இருக்கும் ஆழமான பிணைப்பு, சூரியின் விசுவாசத்துக்கான காரணம், நடுவே இழையோடும் காதல், கதைப்போக்கில் வந்துபோகும் காமெடி, துரோகம், திருப்பங்கள் என தெளிந்த நீரோடை போல எங்கும் நிற்காமல் ஓடுகிறது படம். விறுவிறுப்பை மூலதனமாக கொண்டு நகரும் திரைக்கதையில் அடுத்து என்ன என்பது சுவாரஸ்யம். எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடும் இடைவேளைக் காட்சி இந்த ஆண்டின் சிறந்த திரையரங்க அனுபவத்துக்கு உத்தரவாதம். சிங்கிள் ஷாட்டில் சூரி கேப் விடாமல் கொட்டித் தீர்க்கும் வசனங்கள் ரசிக்க வைக்கின்றன. கத்திக் குத்து, கழுத்தறுப்பு, கையை வெட்டுவது என அதீத வன்முறையும், தெறிக்கும் ரத்தமும் ஓவர் டோஸ். “நம்ம ஆசைப்பட்ட ஒரு விஷயத்துக்காக தப்பான வழியில போனா, கடவுளோ, இயற்கையோ அத சரியான வழியில முடிச்சு வைக்கும். ஏன்னா அது நம்ம தலைக்கு மேல கருடனா சுத்திட்டு இருக்கு”, “கடைசியில நாயா இருந்த என்னைய உன்ன மாதிரி மனுசனா மாத்திட்டியே” போன்ற வசனங்கள் கவனிக்க வைக்கின்றன. அதேநேரம் ‘ஆம்பளன்னு நிரூபிக்க வைக்கில்ல” போன்ற வசனங்கள் அபத்தம். சண்டைக் காட்சி ஒன்றில் சசிகுமார் குழந்தையை கொண்டு செல்ல வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுகிறது. கர்ணா கதாபாத்திரத்தின் மனமாற்றங்களில் அழுத்தமில்லாமல் கடக்கிறது. எல்லா பிரச்சினைகளுக்கும் ‘மண், பெண், பொன்’ தான் காரணம் என்கிறது வாய்ஸ் ஓவர். பெண்ணை குற்றப்படுத்தும் வசனத்துக்கும் கதைக்கும் என்ன சம்பந்தம்? கோயில் திருவிழாவில் வெறித்தனமான ஆட்டத்தை ஆடுவது, விசுவாசத்தில் உருகுவது, குற்றவுணர்வு, நியாயத்துக்கும் - உறவுக்கும் இடையில் சிக்கி தவிப்பது, சிங்கிள் ஷாட் வசனங்கள், கதறி அழும் காட்சி, ஆக்‌ஷன் பரிணாமம் என மொத்த திரையையும் ஆக்கிரமித்து நடிப்பில் அழுத்தம் கூட்டுகிறார் சூரி. சசிகுமாருக்கு கிட்டதட்ட ‘சுந்தரபாண்டியன்’ ரக கதாபாத்திரம். அதை நேர்த்தியாக கையாள்கிறார். கட்டுமஸ்தான் உடம்புடன் க்ளைமாக்ஸில் கூடுதலாக ஸ்கோர் செய்கிறார் உன்னி முகுந்தன். நன்றாகவே எழுதப்பட்ட கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுக்கிறார் சசிகுமாரின் மனைவியாக வரும் ஷிவதா. அனுபவ நடிப்பில் மிளிர்கிறார் வடிவுக்கரசி. ரோஷினி ஹரிபிரியன், ரேவதி ஷர்மா, பிரகிடா தேவையான பங்களிப்பை செலுத்துகின்றனர். சமுத்திரகனி, மைம் கோபி, ஆர்.வி.உதயகுமார் தேர்ந்த நடிப்பு. இடைவேளைக்காட்சியில் சிலிர்ப்பனுபவத்தை கொடுத்து சூரியுடன் சேர்ந்து தாண்டவமாடுகிறது யுவனின் பின்னணி இசை. உமா தேவி வரிகளில் ‘கண்ணில் கோடி’ பாடல் கவனிக்க வைக்கிறது. க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி படமாக்கப்பட்ட விதம், ஆர்தர் ஏ.வில்சனின் நேர்த்தியான ஒளிப்பதிவுக்கு சான்று. கலர் டோன் தனித்து தெரிகிறது. பிரதீப் ராகவின் நெருடலில்லாத ‘கட்ஸ்’ சிறப்பு. கணிக்க கூடிய கதைதான் என்றாலும், அதை அயற்சியில்லாத திரைக்கதையில் சுவாரஸ்யமாக சொல்ல முயன்றிருக்கிறது ‘கருடன்’. குறிப்பாக சூரியின் திரை வாழ்வில் முக்கியமான படமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. கருடன் Review: சூரியின் ஆக்‌ஷன் அவதாரமும், உணர்வுபூர்வ அனுபவமும்! | Soori, sasikumar starrer Garudan movie review - hindutamil.in
  20. உண்மையிலேயே இது நடந்து தான் இருக்கிறது. ஒரு கட்டத்தில் யாரோ அமெரிக்க அதிகாரியிடம் (றொபர்ட் பிளேக் அல்லது தென்னாசிய வெளியுறவு இணைச் செயலாளராக இருக்கலாம்) "யுத்தத்தை நிறுத்த இலங்கைக்கு அழுத்தம் கொடுங்கள்" என்று ஒரு தமிழ் பிரதிநிதிகள் சந்திப்பில் கேட்ட போது "புலிகளை மக்களை வெளியேற அனுமதிக்க நீங்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும்" எனப் பதில் கூறப் பட்டிருக்கிறது. அதற்கு "நீங்கள் எங்களுக்கு Hobson's choice தந்திருக்கிறீர்கள்" என்று அந்த தமிழ் பிரதிநிதிகள் கூறியதாக நினைவில் இருக்கிறது. Hobson's choice: ஒரேயொரு தெரிவு மட்டும் இருக்கும் போது பல தெரிவுகள் இருப்பது போல தெரியும் மாய நிலை - an illusion of choices.
  21. பிடியாணை அப்படியே இருக்கின்றது. சட்டங்கள் எல்லாம் ஏழை, பாளைகளுக்கே. அரசியல்வாதிகளுக்கு அல்ல.
  22. நல்லதொரு பரம்பரையிலிருந்து வந்திருக்கிறீர்கள்.
  23. கட்சிக் காரருக்கு "ஜூலை 4 ஆம் திகதிக்கு முன்பாக மூடும் உத்தரவு கிடைக்கவில்லை" என்கிறார். வடமாகாண சபை தளத்தில் ஜூலை 4 ஆம் திகதிக்குரிய செய்தியில் மூடும் உத்தரவு பற்றிய செய்தி இருக்கிறது. அதையே ஒரு பத்திரிகை பிரசுரிக்கலாம். ஆணை புறாவின் காலில் கட்டி கட்சிக் காரருக்கு கிடைக்கும் வரை பொறுத்திருக்க வேண்டிய சட்டத் தேவை இல்லை. அனேகமாக இது நீதிமன்றம் போய் இழுபடும் கேஸாக தெரிகிறது. இனி கொடுக்கும் நன்கொடையில் ஒரு பகுதி சட்டத்தரணிகளிடம் போய்ச் சேருமென நினைக்கிறேன்.
  24. நானும் வாட்ஸப்பில் இப்போது பார்த்தேன்.. கட்டடத்தை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் சரவணபவான், அதைத் கேட்ட ஆறு திருமுகன் மேல் சேறு பூச உதயனில் செய்தி போட்டிருக்கின்றார் என்கின்றார்கள். ஊடக அடியாட்களின் வேலையா என்பதைத் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்
  25. உரிய விளக்கம் கோரல்... நியூ உதயன்‌ பப்ளிக்கேசன்‌ பிறைவேட்‌ லிமிடெட்‌, ஈஸ்வரபாதம்‌ சரவணபவன்‌, பணிப்பாளர்‌, நியூ உதயன்‌ பப்ளிக்கேசன்‌ பிறைவேட்‌ லிமிடெட்‌ யசோதை சரவணபவன்‌, பணிப்பாளர்‌, நியூ உதயன்‌ பப்ளிக்கேசன்‌ பிறைவேட்‌ லிமிடெட்‌, லக்ஷ்மி சரவணபவன்‌, பணிப்பாளர்‌, நியூ உதயன்‌ பப்ளிக்கேசன்‌ பிறைவேட்‌ லிமிடெட்‌ நால்வரும்‌ 361, கஸ்தூரியார்‌ வீதி, யாழ்ப்பாணம்‌ கேள்விக்‌ கடிதம்‌ தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்காதேவி அம்மன்‌ ஆலய முகாமைத்துவ சபையின்‌ தலைவர்‌ கலாநிதி ஆறு. திருமுருகன்‌ அவர்களின்‌ அறிவுறுத்தலில்‌ எழுதும்‌ கேள்விக்‌ கடிதமாவது, 04.07.2024 அன்று தங்களது நிறுவனத்தினால்‌ பிரசுரிக்கப்படும்‌ உதயன்‌ நாளிதழின்‌ முன்பக்கத்தில்‌ “மாணவிகள்‌ குளிக்கும்‌ வீடியோக்கள்‌ பதிவு! ஆறு.திருமுருகனால்‌ நடத்தப்படும்‌ சிறுவர்‌ இல்லம்‌ இழுத்துமூடல்‌ எனும்‌ தலைப்பில்‌ செய்தியொன்று தலைப்புச்‌ செய்தியாக பிரசுரிக்கப்பட்டிருந்தது. குறித்த செய்தி பிரசுரிக்கப்பட்ட 04.07.2024 இற்கு முன்பதாக அவ்வாறான எந்தவொரு உத்தரவும்‌ வடமாகாண கெளரவ ஆளுனரினால்‌ வழங்கப்பட்டிருக்கவில்லை. மேலும்‌ மாணவிகள்‌ குளிக்கும்‌ வீடியோக்கள்‌ பதிவு எனும்‌ முற்றிலும்‌ பொய்யான விடயம்‌ குறித்த செய்தியில்‌ உள்ளடக்கப்பட்டுள்ளது. மேற்படி முகவரியில்‌ தங்கள்‌ நிறுவனம்‌ அமைந்துள்ள ஆதனமானது எனது கட்சிக்காரர்‌ தலைவராக கடமையாற்றும்‌ சிவபூமி அறக்கட்டளைக்கு நன்கொடையளிக்கப்பட்டு விட்டது என்பதாலும்‌ குறித்த ஆதனத்திலிருந்து தங்களை வெளியேற்ற எனது கட்சிக்காரர்‌ நடவடிக்கை எடுத்து வருகின்றார்‌ என்பதனாலும்‌ அவர்‌ மீதுள்ள குரோதத்தின்‌ காரணமாக குறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளதென எனது கட்சிக்காரர்‌ கருதுகின்றார்‌. எனது கட்சிக்காரர்‌ கடந்த இரு தசாப்த காலத்தில்‌ தனது நாவன்மையின்‌ மூலம்‌ சேகரித்த நிதியைக்‌ கொண்டு பல்வேறு சமய சமூகப்‌ பணிகளை செய்து வருவதோடு ஈழ சைவ சமயிகளினுடைய குறிப்பிடத்தக்க தலைவராகவும்‌ இருந்து வருகின்றார்‌. தங்களது பத்திரிகையில்‌ வெளியிடப்பட்ட முற்றிலும்‌ பொய்யான செய்தியானது பொதுப்பணிகளில்‌ ஈடுபட்டு வரும்‌ எனது கட்சிக்காரரை இழிவுபடுத்தும்‌ தன்மையானது என்பதோடு அவரது நற்பெயருக்கு இழுக்கேற்படுத்தும்‌ தீய நோக்கம்‌ கொண்டதுமாகும்‌. எனவே இக் கடிதம் கிடைத்து 48 மணத்தியாலங்களிற்குள் தங்ளால் பிரசுரிக்கப்படும் உதயன் நாளிதழில் 04.07.2024ம் திகதி வெளி வந்த செய்திக்கு நிகரான வடிவத்தில் எனது கட்சிக்காரரிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்பதுடன், இக் கடிதம் கிடைத்து 14 நாட்களுக்குள் ரூபா 300 மில்லியன் நட்ட ஈடாக வழங்க வேண்டும் என எனது கட்சிக்காரர் சார்பில் கேட்டுக் கொள்கின்றேன். மேற்குறித்த விடையங்களை உரிய காலத்துள் செய்ய தவறுமிடத்து தங்களுக்கு எதிராக பொருத்தமான நீதிம்றில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்பதை இத்தால் தங்களிற்கு அறியத்தருகின்றேன். கலாநிதி குமாரவடிவேல் குருபரன் LL.B (Hons) (Colombo) B.C.L (Oxford) Ph.D (London) Attomey-at-Law (Sri Lanka) Notary Public and Commissioner for Oaths.
  26. இதுவரை நீங்கள் பிரச்சனை தொடவில்லை கருத்துகள் எழுதவில்லை ஆனால் சும்மா போற வறவனைப் பற்றி நிறையவே எழுதுகிறீர்கள்
  27. இன்றுதான் பார்த்தேன் சூரியின் நடிப்பு அபாரம்👍
  28. இந்த குளிக்கும் இடம் கட்டத்துக்கு உள்ளே இருக்கிறதா.??? அல்லது வெளியில் தெருக்கோடியில்,....கரையில். இருக்கிறதா?? மற்றும் ஏன். எங்கள் பெண்களை இழுத்தீர்கள். ......?? அவர்களுக்கும் இந்த திரிக்கும். என்ன சம்பந்தம்.??? எனது மண்டை மர மண்டை என்று ஆராய்ந்து கண்டு பிடித்த உங்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் ..இயற்கையான மண்டை ஒரு தடவை தான் பாவிக்கலாம். மர மண்டை மீண்டும் மீண்டும் புதியன பாவிக்கலாம்.....அது பெறுமதி மிக்கது இங்கு நான் மதத்தை பார்க்கவில்லை கோவில்களுக்கும் போவதில்லை விரதமும். இருப்பதில்லை வெள்ளிக்கிழமையிலும். மச்சம். தான் எனவே… மதத்தை இழுக்காதீங்கள். . காணி பிரச்சனை இருக்க??அல்லது இல்லையா?? இதற்க்கு பதில் தந்துவிட்டு மேற்கொண்டு எழுதவும்
  29. இதை கண்டிக்கிறேன். காரணம் இங்கு கதைப்பது சுட்டலைப் பற்றி இல்லை அவர் படித்திருக்கலாம். அல்லது பள்ளிகூடம் போகமாலும். இருந்திருக்கலாம். இங்கே ஆறுதிருமுருகன். சரபணபவன். [உதயன் பத்திரிகை உரிமையாளர் ] அரச அதிபர் சிறுவர்கள் இல்லம் அங்கு வாழும் பிள்ளைகள் ... ...பற்றி தான் கதைக்கிறோம். முடிந்ததால் உதயன் பத்திரிகை உரிமையாருக்கும். ஆறுதிருமுருகனுக்கும் தனிப்பட்ட பிரச்சனை,.காணிப்பிரச்சனை இல்லை என்று நிறுவுங்கள் இல்லை தம்பி. 🤣🤣 சுண்டல். என்ற. யாழ் கள உறுப்பினர் பற்றி இங்கு கருததாடவில்லை. என்பதையும் தலைப்பையும். கவனத்தில் கொள்ளுங்கள் 🙏
  30. உமா குமரன் வெற்றி பெற்றுள்ளார் Counting complete Change compared with 2019 Labour,Uma Kumaran Votes 19,145 Share 44.1% Share change -26.3 Green,Joe Hudson-Small Votes 7,511 Share 17.3% Share change +13.6 Workers Party of Britain,Halima Khan Votes 3,274 Share 7.5% Share change +7.5 Conservative,Kane Blackwell Votes 3,114 Share 7.2% Share change -7.3 Independent,Nizam Ali Votes 2,380
  31. https://postimages.org/ மேலுள்ள இணைப்பில் சென்று அப்லோட் செய்தபின் Direct Link இங்கே இணையுங்கள்.
  32. ஊடகத்திற்கு ஊடக தர்மம் அவசியல் இல்லையா? எந்தவொரு ஊடகத்திற்கும் ஊடக தர்மம் என்ற ஒன்று முக்கியம். தனி நபரின் பெயரை செய்தியில் போடுவது முறையன்று. ஒரு குற்றவாளியாக இருந்தாலும் குற்றம் நிரூபிக்கப்படும் வரை அவரது பெயரை வெளியிடாமல் இருப்பது ஊடக தர்மம். ஏன் யாழ்ப்பாணத் தமிழ்ப் பத்திரிகைகள் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களின் பெயர்களைக்கூட வெளியிட்தாக இல்லை. நிலமை இவ்வாறிருக்க, தமிழர்கள் மத்தில் சிறந்த ஆன்மீகவாதியாக, தமிழர்களின் மரபுரிமைகளையும், தமிழ்த் தேசியத்தையும் பாதுகாக்கின்ற ஒருவராக இருக்கக்கூடிய ஆறு திருமுருகன் ஐயா அவர்களின் அற நிலையம் ஒன்றை எந்தவித விசாரணையும் இன்றி மூடுவதற்கு ஆளுநர் எடுத்துள்ள நடவடிக்கை பொருத்தமானதல்ல. அந்தச் செய்தியை பிரதான தலைப்புச் செய்தியாக, தனி ஒருவரது பெயரை பிரதான தலைப்பில் போடுவது ஊடகத்திற்கு இழுக்கு. ஈ.பி.டி.பி ஸ்ரீதர் தியேட்டரை அபகரிக்க அதை ஆக்கிரமித்திருப்பதைப் போன்று யாழ்.உதயன் பத்திரிகையும் தனி ஒருவரின் காணியை அபகரிக்க அதை ஆக்கிரமித்திருக்கின்றது. உதயன் பத்திரிகை நிறுவனம் இயங்கும் காணியை காணி உரிமையாளர் சிவபூமி அறக்கட்டளைக்கு அன்பளிப்பாக வழங்கி அதற்கான எழுத்துமூல உடன்பாட்டையும் ஆறு.திருமுருகன் ஐயாவிற்கு வழங்கியுள்ளார் என அறியவருகின்றது. இது உதயன் தலைவர் சரவணபவனுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கின்றது. காணியை ஆக்கிரிமிக்க கனவு கண்டவருக்கு இந்த காணி அன்பளிப்பாக வழங்கப்பட்டமை பொறுக்க முடியாது உள்ளது. இதனால் தனது ஊடக பலத்தைப் பயன்படுத்தி, ஊடக தர்மத்தை மீறி ஆறு.திருமுருகன் ஐயாவைத் தாக்கத் தொடங்கியிருக்கின்றனர். இச்செய்திக்கு எதிராக ஆறு.திருமுருகன் ஐயா மானநஸ்ட வழக்கு தாக்கல் செய்ய முடியும். அதை செய்யவேண்டும். போரில் பாதிக்கப்பட்டுள்ள அநாதைப் பிள்ளைகளுக்கு ஆறுதல் அளிக்கும் உயர்ந்த எண்ணம் கொண்ட மனிதரை இவ்வாறு பாதிக்கப்பட வைப்பதும் அவரது செயற்பாட்டைக் குழப்புவதற்கு முனைவதும் மிகக் கேவலமான செயல் ஆகும். வட்சப்பில் வந்தது.
  33. எம்ஜிஆர், அதிமுக தொடங்கிய காலம், “இலங்கையில் தமிழ் மக்கள் சிங்களவர்களால் தாக்கப்படுகிறார்களே, இது பற்றி உங்கள் கருத்து என்ன?” என்ற ஒரு நிருபரின் கேள்விக்கு எம்ஜிஆர் சொன்ன பதில், “எனக்கு இலங்கையில் தமிழ் இரசிகர்கள் மட்டுமல்ல சிங்கள இரசிகர்களும் இருக்கிறார்கள்” என்பதே. கருணாநிதி சும்மா இருப்பாரா? ‘மலையாளி’ என எம்ஜிஆரை வறுத்தெடுக்க ஆரம்பித்து விட்டார். ஆட்சிக்கு வந்த பின்னர் மெது மெதுவாக நகர்ந்து தமிழ் விடுதலை இயக்கத்தை தேடி வரவழைத்து பேசி புகைப்படம் எடுத்து, தமிழீழப் போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு நாலு கோடி கொடுக்கிறது என அறிவித்தார். “யோவ், இருக்கிற பிரச்சினைகள் காணாது என்று நீ வேறை.. இது வெளிநாட்டு விவகாரம். மத்திய அரசின் வேலை. மானில அரசின் வேலையை மட்டும் நீ பார் என” மத்திய அரசு கோபத்துடன் எச்சரிக்க, தனது கட்சிப் பணத்தில் நாலு கோடியை எடுத்துக் கொடுத்து, “இது புனர் வாழ்வுக்கு, போராட்டத்துக்கு அல்ல” என்று சொல்லி தனது அறியாமையைகளை மறைத்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டார். இப்பொழுது தளபதி, ‘நீட்’ விவகாரம் ‘ஒன்றிய அரசு’ என மேடையில் அவிழ்த்து விட வைச்சுக் காய்ச்சிக் கொண்டிருக்கிறாங்கள். நடிகர்கள் அரசியலுக்கு வரக் கூடாது என்றில்லை, குறைந்த பட்சம் அரசியல் பற்றி ‘அனா, ஆவண்ணா’ ஆவது தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டாமா? “ஸ்ஸபா இப்பவே கண்ணைக் கட்டுதே” என்ற நிலைதான் தளபதிக்கு இப்ப வந்திருக்கும். இன்னும் நிறைய வரும். பார்ப்போம். ஊழலை தமிழ்நாட்டில் இருந்து பிரிக்க முடியாது. செந்தமிழன் வந்தாலும் சரி, தளபதி வந்தாலும் சரி இதுதான் நிலமை. நீங்கள் சொன்னது போல் ‘சிறு பிள்ளைகளின் மண்சோறு விளையாட்டு’
  34. Parliament results Counting under way. After 435 of 650 seats declared. Change compared with 2019 Labour Total seats 307 Change +139 Total votes 6,932,826 Share 36.5% Share change +1.4 Conservative Total seats 65 Change -154 Total votes 4,216,871 Share 22.2% Share change -19.4
  35. இன்று 5ஆம்திகதி யாழ்ப்பாணத்தில் வெளியான காலைக்கதிர் பத்திரிகையிலும் ‘உதயன் பத்திரிகையில் வெளியான செய்திபற்றி உதயன் பத்திரிகையின் ஊடக அறத்தினை பற்றி இரகசியம் பரகசியம்’ என்ற தலைப்பில் கேள்வி எழுப்பி உள்ளது’. PDF வடிவில் உள்ளதினால் இணைக்க முடியவில்லை
  36. 2009 இன் பின் மக்கள் பல விடயங்களில் விழித்து விட்டார்கள். விடுதலை புலிகள் அமைப்பினை பாவித்து தங்கள் சொந்த லாபங்களை காண்பவர்கள் பற்றி இப்போது அதிக எச்சரிக்கை உள்ளது. 2009இன் பின் முன்பு போல் மக்கள் நிகழ்வுகளுக்கு ஒன்று கூடுவது இல்லை. காரணம் நிஜம் எது நிழல் எது என மக்கள் மட்டுக்கட்ட தொடங்கிவிட்டார்கள். கட்டுக்கோப்பாக இயங்கிய அமைப்பு, தலைவரையே பேக்காட்டலாம், சுத்தலாம் என்றால் இப்படிப்பட்ட வேலை பார்த்தவர்களின் நிகழ்ச்சி நிரல்களுக்கு பின்னால் ஆட்கள் அணி திரளுவது என்பது கடினமே. நீங்கள் குறிப்பிடும்படியாக புலிகளை தூற்றியவர்கள் புலிகளுடன் சம்பந்தப்படாதவர்கள் என்று கூட அனுமானிக்க தேவை இல்லை. அவர்கள் தில்லாலங்கடிகளை உணர்ந்து எச்சரிக்கை அடைந்தவர்களாக காணப்படலாம்.
  37. காலா காலமாக வாக்களித்தவர்கள் கூட அஞ்சலி செய்ய வரவில்லை போலிருக்கின்றது. உண்மையில் 2009க்கு பின்னர் மக்கள் வாக்களித்து தான் இவர்கள் பாராளுமன்றம் சென்றார்களா என்ற சந்தேகம் வருகின்றது.
  38. நம் பிரார்த்தனைகள் எல்லாம் போய்ச் சேருமிடம் என்று ஒன்று இருக்குதா என்று கூட தெரியவில்லை. ஆனாலும், பல நேரங்களில் வேறு வழி எதுவும் இருப்பதில்லை......... இந்தக் கட்டுரையில் சொல்லியிருப்பது போலவே.
  39. இந்த பராமரிப்பு இல்லங்களை உடனடியாக இழுத்து மூடினால் அங்கு தங்கவைக்கப்பட்டிருக்கும் சிறார்களின் கதி என்ன ?. அவர்களுக்கு தகுந்த தங்குவசதிகள் செய்துகொடுக்காமல் பராமரிப்பு இல்லங்களை பூட்டினால் சிறுவர்களின் பாதுகாப்பிற்கு அரசு உத்தரவாதம் வழங்குமா?இதுபோன்ற சிறுவர் இல்லங்களை தொடர்ச்சியான மேர்பார்வைக்குட்படுத்தி நிர்வாக சீர்கேடு ஏற்படாமல் தடுப்பது அரசின் கடமை.
  40. இதைத்தானே கால காலமாய் சொல்கிரம் ஆனால் இங்கு என்ன நடக்குது என்றால் பெருமாள் சம்பந்தனை புகழ்ந்து எழுதினாலும் உடனே அதுக்கு எதிர்கருத்து போடுகிறேன் என்று கருத்தை படிக்காமல் எதிர்கருத்து போடுகிரம் எனும் போர்வையில் குப்பைகளை எழுதி கொட்டுவது வழமையானது . மற்றது இவ்வாளவு வயதாகியும் பதவியை வீட்டுகொடுக்காமல் இருந்தது அவர்களின் ஆதரவாளர்களின் உசுபேத்தல் சம்பந்தன் ஐயாவை விட்டால் திருகோனமலையில் வேறு யாரும் கிடையாது எனும் உசுப்பேத்தல் இனி யாருக்கு குத்துவார்கள் ? அதே போலத்தான் சுமத்திரன் விசுவாசிகளும் அவர் பிழை விடுகிறார் என்று தெரிந்தும் அவருக்கு ஆலவட்டம் பிடிப்பது . உண்மையில் எங்களின் உண்மையான அரசியல் பின்னடைவுக்கு முழுகாரணம் இந்த சம்பந்தன் சுமத்திரன் போன்ற அரசியல்வாதிகளுக்கு விசுவாசாமான கூட்டம் தான் . இந்த திரியிலும் ஏன் அனுதாபம் தெரிவிக்கவில்லை என்று ஒருவர் கோதாவில் இறங்கியதுதான் பிரச்சனை தமிழ் மக்களுக்கு தீர்வு பெற்று தருகிறேன் என்று சொல்லி தான் பாரளுமன்றம் செல்கிறார்கள் சென்றபின் வழமை போல் சிங்கள அரசுக்கு சேவகம் செய்கிறார்கள் இதை சுட்டிகாட்டினால் உடனே அவர்களின் அடிவருடிகளுக்கு கோபம் பொத்து கொண்டு வருகிறது அதற்க்கு பதிலாக தேசிய தலைவர் மேல் பாய்வதும் புலிகளை இல்லாத பொல்லாத செயல்களை செய்ததாக மீண்டும் மீண்டும் இதே யாழில் எழுதுவது . முதலில் புலிகள் இல்லா விட்டால் தீர்வு கிடைக்கும் சொன்னவர்களை தேடிபிடித்து நாலு கேள்வி கேட்க தெரியாத வக்கற்ற ஜடம்கள் புலிகளை பற்றி விமர்சிக்கினமாம். இல்லை உங்கள் அரசியல் தலைவர்கள் சொன்னபடி நடக்கவில்லை ஏன் கேளுங்கள் மற்றபடி இந்த திரி 1௦௦ பக்கம் தாண்டினாலும் யானை யானை தான் முயலுக்கு மூன்று கால்தான்.
  41. துர்க்க துரந்தரி தங்கம்மா அப்பாக்குட்டி காலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கான பராமரிப்பு இல்லம் ஆரம்பிக்கப்பட்டது என நினைக்கின்றேன். அந்த காலத்தில் இயக்கமும் இயங்கியது. சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி தனது முயற்சி, மற்றும் அவருக்கு ஒத்தாசை வழங்கியவர்கள், நன்கொடை வழங்கியவர்கள் ஆதரவில் சிறப்பாக கோயிலையும், இதர நிர்வாகத்தையும் நீண்டகாலம் கொண்டு சென்றார். இங்கு செய்தியின் உண்மைத்தன்மை, விரிவான பின்புலம் தெரியாமல் ஆறு திருமுகனை நோக்கியதாக காழ்ப்புணர்வில் கருத்துக்கள் வைக்கப்பட்டு உள்ளன. துர்க்காபுரமோ, அதன்பாற்பட்ட செயற்பாடுகளோ ஆறு திருமுகன் மட்டும் சம்மந்தப்பட்டது இல்லை. கால ஓட்டத்தில் அவர் கட்டுப்பாட்டுக்குள் துர்க்காபுரம் சென்றுள்ளது. ஆனால், கோயில், அதன்பாற்பட்ட விடயங்களில் பலருக்கும் பங்கு, அக்கறை உள்ளது. தமது சமய நம்பிக்கைகளுக்கு அப்பால் யாழ்கருத்துக்களத்தில் சிலருக்கு சைவம், கோயில், கோயில் சம்மந்தப்பட்ட விடயங்கள் என்றாலே அடி வயித்தில் புளிக்காய்ச்சல் வருவதுகும் வேறுபட்ட விடயங்களை அதற்குள் இழுத்துக்கொண்டு வருவதுகும் கருத்துக்களத்தில் வழமையாக நடைபெறும் விடயங்கள். இது ஏற்கனவே ஒரு சிலரினால் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. பெண்கள் விடுதிக்கு பொறுப்பாக அனுபவம் வாய்ந்த பெண் ஒருவர் பொறுப்பெடுத்து சிவத்தமிழ்செல்வியின் பணியை சிறப்பாக தொடர வேண்டும்.
  42. ஐயையோ என் புருஷன் இல்லையா...சாரி.. 😂
  43. இது அப்படியொன்றும் பெரிய பாரமில்லை.........! 😂
  44. வேறு ஒரு திரியில் ஐலண்ட் சுட்டிக்காட்டிய அதே விடயத்தின் பெரும்பான்மை இனத்தவரின் பார்வையில், இது கூகிள் மொழி பெயர்ப்பில் உருவானது. நாம் மீண்டும் பழைய பாதையிலேயே பயணிக்கத்தொடங்குகிறோம் என்பதற்கான அறிகுறிகள் மீண்டும் தெரிகிறது. https://www.colombotelegraph.com/index.php/jaffna-low-castes-stoned-arumuka-navalar-godfather-of-vellahlaism/ வெள்ளாளர் ஆதிக்கத்தின் அடக்குமுறைகளால் ஏற்படுத்தப்பட்ட அவமானங்கள் மற்றும் துன்பங்களை அனுபவித்த பிறகு, "குறைந்த எண்ணிக்கையிலான தமிழர்கள்" (தீண்டாமையர்கள்) 1968 ஆம் ஆண்டு மாவிட்டிபுரம் கோவிலில் தங்கள் முதல் ஒழுங்குபடுத்தப்பட்ட கிளர்ச்சியை ஏற்படுத்தினர். அதற்கு முந்தைய முயற்சிகள் வெள்ளாளர் ஒடுக்கிகளால் கடுமையாக அடக்கப்பட்டன. பல்வேறு பகுதிகளில் நடந்த தனிப்பட்ட சம்பவங்கள் தீண்டாமையர்களுக்கு கடுமையான தண்டனைகளுக்கு வழிவகுத்தது. மாவிட்டிபுரம் கோவிலில் நுழைய முயற்சித்தது, கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவோடு நடந்தது, வெள்ளாளர் ஆதிக்கத்திற்கு எதிராக நடந்த முதல் ஒழுங்குபடுத்தப்பட்ட இயக்கமாக இருந்தது. அறுபதுகளில், ஆங்கிலக் கல்வியறிந்த சைவ வெள்ளாளர் (ESJVs) தீண்டாமையர்களின் (தலித்) முழு கோபத்தை எதிர்கொண்டனர். மாவிட்டபுரம் கோவிலில் தாழ்நிலைச் சாதியினரின் ஒழுங்குபடுத்தப்பட்ட கிளர்ச்சி அவர்களின் அதிகாரம் மற்றும் மதிப்புக்கு பெரிய சவாலாக இருந்தது. இது வெள்ளாளர் ஆதிக்கத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. தீண்டாமையர்களின் கிளர்ச்சி சிங்கள-புத்தசமயத்தின் தமிழ் ஒடுக்குமுறைக்கான வெள்ளாளர் பிரச்சாரத்துக்கு எதிராக இருந்தது. வெள்ளாளர்கள் தங்கள் சொந்த மக்களை அடக்குவதில் காட்டிய கொடூரம் வெளிப்படுத்தப்படுவது, அவர்கள் சிங்கள அரசின் இரையாக இருப்பதாக கூறிய பிரச்சாரத்திற்கு எதிராக இருந்தது. மாவிட்டபுரம் கிளர்ச்சிக்கு வெள்ளாளர்களின் உடனடி எதிர்வினை அவர்களின் தெய்வீகக் கடவுளான ஆறுமுக நாவலர் (1822 - 1879) மீது விழுந்தது. வேளாளர்கள் ஜாதிப் படிநிலையில் தங்களின் உயர்ந்த அந்தஸ்துக்கு நாவலருக்குக் கடமைப்பட்டுள்ளனர். அவர்தான் வெள்ளாள சூத்திரர்களை (இந்தியாவின் சாதி அமைப்பில் மிகக் குறைந்தவர்கள்) யாழ்ப்பாணத்தில் மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்த இந்து சைவ சித்தாந்தத்தை தனித்தனியாக மறுசீரமைத்தார். எனவே தாழ்த்தப்பட்ட சாதியினர் தங்களின் ஒழுங்கமைக்கப்பட்ட கிளர்ச்சியைத் தொடங்கியபோது, வெள்ளாள சாதிவெறியின் பிதாமகனான நாவலர் மீதான நம்பிக்கையின் பொது வெளிப்பாட்டை ஏற்பாடு செய்வதன் மூலம் வெள்ளாளர்கள் பதிலளித்தனர். அவரது உருவத்தை ஊர்வலமாக எடுத்துச் சென்று நாவலரிசத்தை உயிர்ப்பிக்க முடிவு செய்தனர். ஜூன் 1969 இல், மாவிட்டிபுரம் கிளர்ச்சியின் ஒரு வருடத்திற்குப் பிறகு, வெள்ளாள உயரதிகாரிகள் ஆறுமுக நாவலர் சிலையை ஊர்வலமாக எடுத்துக்கொண்டு உடுப்பிட்டியில் இருந்து யாழ்ப்பாணம் வரை நடைபயணம் மேற்கொண்டனர். இது ஒரு சைவ சமய ஊர்வலமாக இருக்க வேண்டும், ஆனால் அது தாழ்த்தப்பட்ட சாதியினர் மீது அதன் மேலாதிக்கத்தை மீண்டும் நிலைநிறுத்துவதற்கான அவநம்பிக்கையான முயற்சியை மேற்கொண்ட வெள்ளாள அரசியலின் அனைத்து அடிக்குறிப்புகளையும் கொண்டிருந்தது. இது வெள்ளாளர்களிடையே அச்சுறுத்தலுக்கு உள்ளான அரசியல் தளத்தை வலுப்படுத்தவும், புத்துயிர் பெறவும் ஒரு நடவடிக்கையாக இருந்தது, மேலும் தீண்டத்தகாதவர்களுக்கு வெள்ளாழிசம் உயிருடன் இருக்கிறது என்ற தெளிவான செய்தியை வழங்குவதற்கும் இது ஒரு நடவடிக்கையாகும். நல்லூரில் நாவலர் சிலை திறப்பு விழா ஜூன் 30ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெற இருந்தது. சுமார் 500 தேர்ந்தெடுக்கப்பட்ட அழைப்பாளர்கள் மட்டுமே விழாவில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எல்லாமே வெள்ளாள வழியில் நடக்கவில்லை. யாழ்ப்பாண வீதிகள் பதற்றமானவை. சிவப்பு சட்டை அணிந்த தமிழ் இளைஞர்கள் நாவலர்க்கு எதிரான துண்டு பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்தனர். ஆறுமுக நாவலர் சபையை கண்டித்து கையேடுகளும் விநியோகிக்கப்பட்டன. நாவலர் எதிர்ப்பு இயக்கத்தின் பின்னணியில் கம்யூனிஸ்ட் கட்சியின் பீக்கிங் பிரிவுத் தலைவர் என்.சண்முகதாசன் இருந்தார். யாழ்ப்பாணத்தின் சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அவர் ஒரு சாதி மறுமலர்ச்சியாளர் என்பதற்காக நாவலர் சிலையை வெடிக்கச் செய்யுங்கள்!” என்று ஒரு கத்தும் போஸ்டர் கோரப்பட்டது. மற்றொருவர் அழுதார்: “நாவலர் ஒரு சாதியைச் சார்ந்தவர். இப்படிப்பட்ட ஒரு பிற்போக்குத்தனத்திற்கு ஏன் சிலைகள் அமைக்க வேண்டும்? இந்தச் சிலை உடுப்பிட்டியிலிருந்து சாவகச்சேரி ஊடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துள்ளது. சில இடங்களில் சிலை மீது கல் வீசப்பட்டது. நாவலர் உருவம் தாங்கிய ஊர்வலத்திற்கு கூட்டமைப்பு கட்சியின் தீக்குச்சி வி.நவரத்தினம் தலைமை தாங்கினார். பதட்டங்கள் அதிகரித்ததால், "சிங்கள அரசாங்கம்" அமைதியைக் காக்கவும், வெல்லலா நிலையை மீட்டெடுக்கவும் வலுவூட்டல்களை விரைந்து செய்ய வேண்டியிருந்தது. (பார்க்க தி டைம்ஸ் ஆஃப் சிலோன் – ஜூன் 28, 1969). மாவிட்டிபுரமும் நாவலர் எதிர்ப்புப் போராட்டங்களும் சைவ யாழ்ப்பாண வெள்ளாள சாதிவெறியின் அடித்தளத்தையே அசைத்தன. இந்த நிகழ்வுகள் பல நூற்றாண்டுகளாக மிருகத்தனமான சக்தியால் அடக்கப்பட்ட நிலத்தடி சக்திகளின் வெளிப்புற வெளிப்பாடுகள். ஒடுக்கப்பட்ட தாழ்ந்த சாதியினரின் முழுக் கோபம் 60களில் யாழ்ப்பாணத்தை துண்டாக்கும் அச்சுறுத்தலாக இருந்தது. வெள்ளாளர்கள் தற்காப்புடன் பதிலளித்தனர். யாழ்ப்பாணத்தில் தங்கள் பிடியைத் தக்கவைத்துக் கொள்ள நிலப்பிரபுத்துவ மிருகத்தனமான சக்தியை அவர்கள் நம்பியிருக்க முடியாது. யாழ்ப்பாணத்தில் நிலப்பிரபுத்துவ மற்றும் காலனித்துவ காலங்களில், தாழ்த்தப்பட்ட சாதியினரின் மனிதனாக வாழ்வதற்கான உரிமையை நிலைநாட்டுவதற்கான அனைத்து நகர்வுகளையும் வலுக்கட்டாயமாக அடக்கியதன் மூலம் வெள்ளாளர்கள் தங்கள் மேலாதிக்கத்தை தக்க வைத்துக் கொண்டனர். வெல்லலா பாசிசத்தின் வன்முறை அரசியலை சுருக்கமாக பேராசிரியர். பிரையன் ஃபாஃபென்பெர்கர் எழுதினார்: "காலனித்துவ தோட்டப் பொருளாதாரத்தின் ஒரு கலைப்பொருள், யாழ்ப்பாணத்தின் சாதிய அமைப்பை பலத்தால் மட்டுமே பராமரிக்க முடியும் - மற்றும் பலம் உண்மையில் பயன்படுத்தப்பட்டது ... இந்த (சாதி) கட்டுப்பாடுகள் வலிமையைக் கொண்டிருந்தன. டச்சு மற்றும் ஆரம்பகால பிரிட்டிஷ் ஆட்சிகள் மற்றும் 1960 களில் கூட சட்டம். 1940கள் மற்றும் 1950களில் யாழ்ப்பாணத்தில், சிறுபான்மைத் தமிழர்கள் (அதாவது ஒடுக்கப்பட்ட சாதியினர்) கோயில்களுக்குள் நுழையவோ அல்லது வாழவோ தடை விதிக்கப்பட்டது; உயர் சாதிக் குடும்பங்களின் கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுப்பது, சலவைக் கூடங்கள், முடிதிருத்தும் கடைகள், கஃபேக்கள் அல்லது டாக்சிகளுக்குள் நுழைந்து பெண்களைத் தனிமையில் வைத்திருக்கவும், வீட்டுச் சடங்குகளைச் செய்வதன் மூலம் அவர்களைப் பாதுகாக்கவும்; (தடை) காலணிகள் அணிய; பேருந்து இருக்கைகளில் உட்கார வேண்டும்; சமூக நலன்களைப் பெறுவதற்கு அவர்களின் பெயர்களை முறையாகப் பதிவு செய்தல்; பள்ளிகளில் சேர; உடலின் மேல் பகுதியை மறைக்க; தங்க காதணிகளை அணிய வேண்டும்; ஆணாக இருந்தால், தலைமுடியை வெட்ட, குடைகளைப் பயன்படுத்த; மிதிவண்டிகள் அல்லது கார்கள் சொந்தமாக; இறந்தவர்களை தகனம் செய்ய; அல்லது கிறிஸ்தவம் அல்லது புத்த மதத்திற்கு மாற வேண்டும். "இந்தக் கட்டுப்பாடுகளை கூடுதல் சட்டப்பூர்வமாக அமல்படுத்த, வெள்ளாளர்கள், மேல்நோக்கி நடமாடும் பள்ளர்கள் மற்றும் நளவர்களைத் தண்டிக்க குண்டர் கும்பல்களை களமிறக்கியுள்ளனர். இந்த கும்பல்கள் தீண்டத்தகாத கிணறுகளை இறந்த நாய்கள், மலம் அல்லது குப்பைகளால் மாசுபடுத்துகின்றன, தீண்டத்தகாத வேலிகள் அல்லது வீடுகளை எரிக்கின்றன; சிறுபான்மைத் தமிழர்களை உடல்ரீதியாகத் தாக்குவதும், அடிப்பதும், சில சமயங்களில் கொல்லப்படுவதும். மாவிட்டபுரம் நெருக்கடிக்கு முன்னர் சிறுபான்மைத் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு பல முரண்பாடுகள் இருந்தன. (The Journal of Asia Studies, 49, No. 1 (பிப்ரவரி 1990)). யாழ்ப்பாணத்தின் தமிழ் வெள்ளாள சாதியினர் தாழ்த்தப்பட்ட சாதியினரை துன்புறுத்தியதைப் போல இலங்கையில் எந்த ஒரு சமூகத்திலும் ஆளும் உயரடுக்கு தங்கள் சொந்த மக்களை ஒடுக்கியது மற்றும் மோசமாக நடத்தியது இல்லை, அவர்கள் "தூய்மை" மற்றும் மேலாதிக்கத்தை மீறத் துணிந்தால், தாழ்த்தப்பட்ட சாதியினர். தாழ்ந்த சாதியினரை கருப்பை முதல் கல்லறை வரை அவமானப்படுத்தினர். பேராசிரியர் Pfaffenberger கீழ் சாதியினர் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட இருத்தலியல் நிலைமைகளை ஆவணப்படுத்தினார். ஜேன் ரஸ்ஸல் தனது முன்னோடி புத்தகமான, 1931 - 1947, டோனமோர் அரசியலமைப்பின் கீழ் வகுப்புவாத அரசியல், (திசரா பிரஸ், 1982) இல் வெள்ளாள ஆதிக்கம் மற்றும் ஒடுக்குமுறையின் இரும்புக்கரம் பற்றி கிராபிக்ஸ் விரிவாக வெளிப்படுத்தினார். இன்று வெடித்து நாளை அடங்கிப்போகும் சிங்கள வெறிபிடித்த விளிம்புநிலையின் வன்முறையின் ஃபிஜ் போல் இல்லை. இந்து சைவ மதத்தின் ஆசீர்வாதத்துடன், பல நூற்றாண்டுகளாக, ஒடுக்கப்பட்ட தமிழர்களை அவமானப்படுத்திய மற்றும் சுரண்டிய ஒரு முறையான வாழ்க்கை முறை. வெள்ளாள பாசிசம் யாழ்ப்பாணத்தை தாழ்த்தப்பட்ட மக்களின் குலாக்காக மாற்றியது, அதில் இருந்து கல்லறையில் மட்டுமே தப்பிக்க முடியும். யாழ்ப்பாணத் தமிழர்கள் தங்கள் வரலாற்றின் இந்த வெட்கக்கேடான மற்றும் இருண்ட அத்தியாயத்தைப் பற்றி பேசுவதை வெறுக்கிறார்கள், ஏனெனில் இது பூமியின் மிகப்பெரிய கலாச்சாரத்தின் தூய்மையில் பிரத்தியேகமாக வாழும் உயர்ந்த தார்மீக காந்தியவாதிகள் என்ற மாயைகளால் நிரப்பப்பட்ட அவர்களின் அகங்காரத்தை குத்துகிறது. தவிர, தீய யாழ்ப்பாணத்தின் இருண்ட அடிவயிற்றை அம்பலப்படுத்துவது, "சிங்கள அரசாங்கங்களின்" "பாகுபாட்டிற்கு" பலியாகிவிட்டதாக அவர்கள் கூறுவதை குறைமதிப்பிற்கு உட்படுத்தும். தமிழர்கள் தமிழர்களை மனிதாபிமானமற்ற முறையில் நடத்துவது, "சிங்கள அரசாங்கங்கள்" என்று அழைக்கப்படுபவர்களின் "பாரபட்சம்" குற்றச்சாட்டுகளை கேலிக்கூத்தாக்குகிறது. நாகரீக உலகத்தின் கண்டனம் மற்றும் அதன் விளைவாக அரசியல் மைலேஜ் இழப்புக்கு பயந்து, அவர்கள் தங்கள் வரலாற்றின் இருண்ட பக்கத்தை மறைக்க வானத்தையும் பூமியையும் நகர்த்துகிறார்கள், முதலில், மற்ற அனைத்து சமூகங்களையும் விட உயர்ந்த ஒழுக்க தூய்மைவாதிகளாக காட்டிக்கொண்டு, இரண்டாவதாக, அவர்களின் கவனத்தை திசை திருப்புகிறார்கள். "மற்றவர்களால்" "பாகுபாடு" பிரச்சினைகளுக்கு மறைக்கப்பட்ட கொடுமைகள், அதாவது அவர்களின் பீட் நோயர் "சிங்கள அரசாங்கங்கள்". ஆகவே, யாழ்ப்பாணத் தமிழர்கள் தங்கள் சொந்த மக்களைத் துன்புறுத்திய, ஒடுக்கப்பட்ட குற்றவாளிகள் என்று அம்பலப்படும் போதெல்லாம் மனிதாபிமானமற்ற பூச்சிகள் வெள்ளாளாவின் காலடியில் நசுக்கப்படுவதற்கு மட்டுமே பொருத்தமானது என்று ஆக்ரோஷமாக நடந்துகொள்வது ஆச்சரியமல்ல. நிச்சயமாக, நடைமுறையில் அனைத்து சமூகங்களின் அனைத்து வரலாறுகளும் அவற்றின் சொந்த கரும்புள்ளிகளைக் கொண்டுள்ளன, ஆனால் யாழ்ப்பாணத்தின் வெள்ளாழத் தமிழர்களின் பதிவு அமெரிக்க தெற்கின் பைபிள் பெல்ட், எஸ். ஆபிரிக்காவில் நிறவெறி மற்றும் காட்டுமிராண்டித்தனமான போகோவில் பிரிவினையின் கொடூரங்களுக்கு அப்பாற்பட்டது. தங்கள் குழந்தைகளையே கடத்திச் சென்ற ஹராம்கள். முரண்பாடாக, 1948 - சுதந்திர ஆண்டு முதல் "சிங்கள அரசாங்கங்கள்" தமக்கு எதிராக "பாரபட்சம்" காட்டுகின்றன என்று உலகிற்கு உரத்த குரலில் அழுதது இந்தத் தலைமைதான். தமிழர்கள் தமிழர்களை துன்புறுத்தி கொல்லும் முறையான கொடுமையைத்தான் தமிழர்கள் தங்கள் பாயின் கீழ் துடைக்க விரும்புகிறார்கள். தாழ்த்தப்பட்ட தமிழர்களால் பாதிக்கப்பட்டவர்கள், "சிங்கள அரசாங்கங்களின்" பாதிக்கப்பட்டவர்களாக நடத்தப்பட்டதன் பெருமையில் மூழ்குவதை விரும்புகிறார்கள். மனித மாண்புகளையும் உரிமைகளையும் போதித்த தமிழ் திருச்சபையினர், இந்த அடக்குமுறை சாதிய ஒழுங்குடன் செல்வதில் எந்தக் கவலையும் இல்லை. "சிங்கள அரசாங்கங்களின்" பலவீனங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் தமிழர்களின் உருவத்தை தூய்மையாக்குவதற்கு கிறிஸ்தவ ஒழுக்கம் அரசியலாக்கப்பட்டது. தமிழ் திருச்சபையினர் மற்றவர்களின் கண்களில் உள்ள மோட்டை விமர்சிக்கும் முன் முதலில் தங்கள் கண்களில் உள்ள ஒளிக்கற்றையைப் பார்க்க வேண்டும் என்ற பைபிள் கட்டளையை மத ரீதியாக ஒதுக்கித் தள்ளினார்கள். மாவிட்டிபுரத்தையும் நாவலர் எதிர்ப்புப் போராட்டத்தையும் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளாக மாற்றுவது தமிழர்கள் தமிழர்களைத் துன்புறுத்தும் அமைப்புமுறையான கொடூரங்கள்தான். இந்த நிகழ்வுகள் வெள்ளாளர்களுக்கு தாங்கள் பிழைத்து வளர்த்த பாசிச சாதிவெறி நாளுக்கு நாள் அதன் பயன்பாட்டினை கடந்து வந்ததை நிரூபித்தது. தாழ்த்தப்பட்ட சாதிகளின் வரிசையில் இருந்து எழும் உள் பிளவு சக்திகளின் வெப்பத்தை வெள்ளாளர்களும் உணரத் தொடங்கினர். பழைய நிலப்பிரபுத்துவ ஆட்சியின் சாதிவெறியை நடைமுறைப்படுத்த பாசிச வன்முறையைப் பயன்படுத்தும் நிலையில் அவர்கள் இல்லை. அறுபதுகளில் வெள்ளாளர்கள் மந்தமான நிலையில் இருந்தனர். பழைய வாழ்க்கை முறை முடிந்துவிட்டது என்று தெரிந்தும் சமூகப் படிநிலையில் தங்கள் பதவி மற்றும் அந்தஸ்தில் தொங்கவிடப் போராடிக் கொண்டிருந்தார்கள். காருக்கு பெட்ரோலா இருந்ததோ அதுவே வெள்ளாளர்களுக்கு ஜாதி. இது வெள்ளாளர்களுக்கு இன்றியமையாததாக இருந்தது, ஏனெனில் சாதிய படிநிலையை அகற்றுவதற்கான எந்தவொரு முயற்சியும் வெள்ளாளர்களின் அதிகாரத்தையும் சலுகைகளையும் பறிக்கும். அதே சமயம், எழுச்சி பெறும் கீழ்ஜாதிச் சக்திகளுக்கு ஆறுமுக நாவலரிடம் திரும்பிச் செல்வது இல்லை என்பது அவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்தது. வேளாளர்களை சாதிப் படிநிலையின் உச்சத்திற்கு உயர்த்த நாவலர் வழங்கிய சமயப் போர்வை 20ஆம் நூற்றாண்டிலும் ஏற்கத்தக்கதாகவோ, சாத்தியமாகவோ இல்லை. வேளாளர்களுக்கு நாவலரிசத்திற்கு மாற்றாக தேவை இருந்தது. "தமிழர்களின் இதயப் பகுதியான" அவர்களின் முதன்மையான அரசியல் தளமான யாழ்ப்பாணத்தில் - வெள்ளாளர்களின் பிடியைத் தக்கவைத்துக் கொள்ள புதிய சித்தாந்தத்துடன் கூடிய புதிய பகுத்தறிவு தேவைப்பட்டது. மாவிட்டிபுரம் மற்றும் நாவலர் எதிர்ப்பு நிகழ்வுகள் வெள்ளாளர்களை நவீனத்துவத்திற்கு தள்ளியது, அதை அவர்கள் மிகவும் தயக்கத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. யாழ்ப்பாணம் இரண்டு உலகங்களுக்கிடையில் நுட்பமாகத் தயாராக இருந்தது - ஒன்று இறக்கும் மற்றொன்று பிறக்க போராடுகிறது. வெள்ளாளர்களின் பின்னடைவைக் கண்டு பயந்து, வெள்ளாளர் அல்லாதவர்களை விடுவிப்பதற்கான அர்த்தமுள்ள அல்லது செயலூக்கமான நடவடிக்கைகளை எடுக்க யாழ் வெள்ளாளர் தலைமை மௌனமாக இருந்தது. ஆனால் அதே நேரத்தில் எதிரிகள் அதன் பண்டைய ஆட்சியின் நலிந்த அரண்களை இடித்துத் தள்ளுவதாக அச்சுறுத்துவதை அது அறிந்திருந்தது. கம்யூனிஸ்ட் கட்சியின் பீக்கிங் பிரிவைத் தவிர, பௌத்த பிக்குகள் மற்றும் பௌத்த ஆர்வலர்களும் வெள்ளாள மேலாதிக்கவாதிகளுக்கு மாற்றாக யாழ்ப்பாணத்திற்கு விரைந்தனர். இந்தியாவில் தீண்டத்தகாதவர்களை வெகுஜன அளவில் பௌத்த மதத்திற்கு மாற்றிய அம்பேத்கரை செய்ய அவர்கள் எதிர்பார்த்தனர். ஒடுக்கப்பட்ட தலித்துகளை பிராமணர்களின் கொடுங்கோன்மையிலிருந்து விடுவிக்க அம்பேத்கர் இந்து விரோத சாதிய பௌத்தத்தைப் பயன்படுத்தினார். அவரது இயக்கம் உலகளாவிய அங்கீகாரத்தையும் அங்கீகாரத்தையும் பெற்றது. ஆனால் பௌத்தமோ அல்லது மார்க்சிசமோ வெல்லலாயத்திற்கு சாத்தியமான மாற்றீட்டை வழங்குவதில் வெற்றிபெறவில்லை. யாழ்ப்பாணம் தனது வரலாற்றின் சிறந்த காலப்பகுதியில் சாதிவெறி மற்றும் இனவெறி என்ற இரண்டு "இசங்களால்" மட்டுமே வாழ்ந்தது. சாதிவெறி மற்றும் இனவெறியால் வாழ்ந்தவர்கள் இந்த இரண்டு சுய அழிவு மற்றும் மனிதாபிமானமற்ற சக்திகளின் கசப்பான விளைவுகளை சந்திக்க நேரிடும். தெற்கில் உள்ள திறந்த சமூகத்தைப் போலல்லாமல், எந்தவொரு தாராளவாத "இஸத்திற்கும்" கதவுகளை மூடியிருந்தது. சைவ வேளாளவாதத்தால் இறுக்கமாக கட்டுப்படுத்தப்பட்ட ஒரு மூடிய சமூகமாக, யாழ்ப்பாண அரசியல் கலாச்சாரத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் ஆதிக்கம் செலுத்தும் வகையில் ஜாதிவெறியும் இனவாதமும் மட்டுமே மாறக்கூடிய இயக்கவியலாக இருந்தது. யாழ்பாணத்தின் அரசியலை வடிவமைக்கவும் தீர்மானிக்கவும் இரண்டும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த பிரிக்க முடியாத இழைகள். சாதிவெறி, குறிப்பாக, ஒரு பிடிவாதமான மற்றும் தவிர்க்க முடியாத நம்பிக்கை அமைப்பாகும், அதை அவர்கள் ஒரு வாழ்க்கை முறையாக உள்வாங்கினர். ஆங்கிலேயர் காலத்தில் யாழ்ப்பாணச் சமூகத்தின் சித்தாந்தப் பாதுகாவலரும் முன்னணி ஊதுகுழலுமான தி ஹிந்து ஆர்கன், இந்தக் கோட்பாட்டின் சாரத்தை வெளிப்படுத்தியது: “இந்து சமூகத்தின் அடையாளமாக விளங்கும் சாதி அமைப்பு இந்துக்களாகிய நமக்கு இன்றியமையாதது. ஒரு கார்ப்பரேட் அமைப்பாக உள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளின் சிறப்புகளை ஒப்பிட்டு, மெரிடித் டவுன்சென்ட் தனது ஆசியா மற்றும் ஐரோப்பா என்ற போற்றத்தக்க புத்தகத்தில் கூறுகிறார்: "சாதி ஒரு அற்புதமான கண்டுபிடிப்பு என்று நான் உறுதியாக நம்புகிறேன், இது காலங்காலமாக இந்து சமுதாயத்தை அராஜகத்திலிருந்தும் மோசமான தீமைகளிலிருந்தும் பாதுகாத்து வந்த சோசலிசத்தின் ஒரு வடிவம். தொழில்துறை போட்டி வாழ்க்கை. இது ஒரு தன்னியக்க மோசமான சட்டமாகும், இது அறியப்பட்ட தொழிற்சங்கத்திற்கு மிகவும் வலுவானது! எப்போதாவது எங்கள் விமர்சகர்கள் எங்கள் நிறுவனங்கள் தொடர்பான விஷயங்களைத் தீர்ப்பளித்தால், அவர்கள் அதை மனிதர்கள் மற்றும் விஷயங்களைப் பற்றிய மேலோட்டமான அறிவில் இருந்து செய்கிறார்கள் அல்லது மதப் பிரச்சாரத்தை விளம்பரப்படுத்துவதற்கான ஆழமற்ற ஆர்வத்தால் கண்மூடித்தனமாக இருக்கிறார்கள். (தி இந்து ஆர்கன் – ஜூலை 18, 1918). சாதியின் இன்றியமையாமை மிகவும் ஆழமாக உணரப்பட்டது, தமிழ் அரசியலின் ஒளிரும் நட்சத்திரமான பொன்னம்பலம் இராமநாதன், அதை சட்டப்பூர்வமாக்க வேண்டியதன் அவசியத்தை பிரிட்டிஷ் காலனி எஜமானர்களுக்கு உணர்த்துவதற்காக லண்டனுக்கு ஒரு சிறப்புப் பணியை மேற்கொண்டார். வெள்ளாள சாதிவெறியும் இனவெறியும் ஒன்றுக்கொன்று ஊட்டிக்கொண்டிருந்த பிரிக்க முடியாத இரட்டையர்கள். இவ்விரு சக்திகளுக்கிடையிலான கூட்டுறவு யாழ்ப்பாணத்தின் அரசியல் கலாச்சாரத்தை மிகைப்படுத்தியது. ஒருவர் மற்றவரின் கைக்கூலியாக இருந்தார். இவ்விரு சக்திகளின் ஊடாடலுக்குப் புறம்பாக யாழ்ப்பாணத்தில் குறிப்பிடத்தக்க எதுவும் நடைபெறவில்லை. அதன் வரலாற்றில் ஓடிய வெறித்தனமான இனவெறியின் தொடர், டச்சு காலனித்துவ எஜமானர்களின் வேண்டுகோளின் பேரில் எழுதப்பட்ட யல்பால வைப்பா மாலையில் முதலில் ஆவணப்படுத்தப்பட்டது. தமிழர்கள் முஸ்லிம்களையும் சிங்களவர்களையும் இனச்சுத்திகரிப்பு செய்ததை பதிவு செய்கிறது. காலனித்துவ மற்றும் பிந்தைய காலனித்துவ காலங்களில் தமிழ் இனவாதம் பல்வேறு வடிவங்களில் சாதிவெறியுடன் வெளிப்பட்டது. உதாரணமாக, தி ஹிந்து ஆர்கன் (ஏப்ரல் 4, 1918), "மரக்காயரிசத்தை" தாக்கி ஒரு கடிதத்தை வெளியிட்டது. பூர்வீக வேட்டியை அவமதிக்கும் வகையில் முஸ்லிம் சரோங்கை அறிமுகப்படுத்தியதற்கு நிருபர் எதிர்ப்பு தெரிவித்தார். நிருபர் எழுதினார்: "நாங்கள் சுயமாகத் திணித்த தற்கொலைக் கொள்கையான தேசியமயமாக்கலுக்கு சமீபத்திய, கடைசி ஆதாரம் இல்லை, எங்கள் ஆடையின் களங்களில் "மரக்காயரிசம்" அறிமுகப்படுத்தப்பட்டது. முகமதிய சரோங்கில் பிறந்த தமிழனைப் பார்ப்பதை விட தேசியவாதிக்கு வேறு ஏதாவது குழப்பம் இருக்க முகொச்சையான தமிழ் இனவாதத்தின் சிதைவுகள் சமகாலத்திலும் குறையவில்லை. இது மிக உயர்ந்த ஆதாரங்களில் இருந்து வருகிறது. டி.எஸ்.சேனநாயக்கா முதல் கீழ்நோக்கி ஒட்டுமொத்த சிங்களத் தலைமைகளையும் "இனப்படுகொலை" தலைவர்கள் என்று திட்டித் தீர்த்து வடமாகாணசபையில் தீர்மானங்களை வரைந்து நிறைவேற்றிய முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியின் வடிவமே சிறந்த உதாரணம்! இந்த அல்சைமர் பாதையில் செல்லும் போது, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், சங்கிலி முதல் பிரபாகரன் வரையிலான தமிழ்த் தலைவர்களின் வரலாற்றை வசதியாக மறந்துவிட்டார் - தமிழர்களின் படுகொலை செய்யப்பட்ட இரத்தம் தோய்ந்த எலும்புகளை உள்ளடக்கிய தமிழ் வரலாற்றின் ஒரே உச்சத்தில் நிற்கும் இரண்டு தமிழ் அரசியல் இரட்டையர்கள். தமிழர்களால். இலங்கையில் குடியேறியவர்களுடைய வரலாற்றைக் காட்டிலும் நீண்ட வரலாற்றைக் கூறிவிட்டு, விக்னேஸ்வரன் தமிழர் கடந்த காலத்தின் எழுச்சியூட்டும் அடையாளங்களாக வேறு யாரைப் பார்க்க முடியும்? கிடைக்கக்கூடிய கணக்குகளின்படி, அவர் இதுவரை பிரபாகரனை மட்டுமே உரிமை கோரியுள்ளார் - மற்ற அனைவரையும் விட அதிகமான தமிழர்களை கொன்ற தமிழ் போல் பாட். தமிழர்கள் தமிழர்களைக் கொன்று குவிப்பது, அல்லது ஒட்டுமொத்த தமிழ்த் தலைமைகளை அழிப்பது, அல்லது ஒரு தலைமுறை இளம் பெண்களையும் சிறுவர்களையும் வீண் போரில் இழுத்துச் செல்வது, அல்லது போர்க்களத்தில் இருந்து தப்பி ஓடும் தங்கள் அழிந்த தலைவர்களின் முதுகைப் பாதுகாக்க சக தமிழர்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்துவது. துரதிர்ஷ்டவசமாக, தமிழ் அரசியல் கலாச்சாரத்தின் உயர் புள்ளிகள்.டியுமா? …… தமிழ் திருச்சபையினர், அரசு சாரா பண்டிதர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்கள் கொண்டாடும் மரபு இது. தமிழர்கள் தம் வரலாறு நெடுகிலும் சக தமிழர்களுக்கு இழைத்த வலிகளும் வேதனைகளும் தமிழ்த் தலைமைகளை மீட்படைய முடியாத குற்றவாளிகளாகக் கருதி, இறந்த தமிழர்களுக்காக கண்ணீர் சிந்திய (அது முதலைகள்!) கண்ணீரால் பெறப்பட்டதை விட அதிக அரசியல் ஆதாயம் கிடைக்கும் என்று நம்புகிறார்கள். "பிண அரசியலில்" இருந்து இதுவரை. ICES அல்லது CPA போன்ற தமிழ் மேலாதிக்க அரசு சாரா நிறுவனங்கள் ஆண்டுதோறும் "1983" ஐ நினைவுகூரும், "மீண்டும் இல்லை" என்று! அது பாராட்டுக்குரியது. ஆனால் எப்போது - ஓ, எப்போது! - தமிழ் ஆதிக்கம் செலுத்தும் இந்த அரச சார்பற்ற நிறுவனங்கள் காத்தான்குடி மற்றும் அறந்தலாவைக்கு சமமான முக்கியத்துவம் கொடுத்து தமிழர் வன்முறையால் பாதிக்கப்பட்ட அப்பாவிகளை நினைவுகூருமா?
  45. https://www.facebook.com/CapitalNewsTeam/posts/pfbid02HQPK9Rcw32KVErAjk7TBjN9vLJEsvg2mXGRBeQbFCNvzcHbB3jmRZZr2Cw12qbwfl பெண்களிடம் ஒரு மாதிரி ஆண்களிடம் ஒரு மாதிரி. அது என்ன மாதிரி என்றதை மேலே உள்ள சுட்டியை அழுத்தி பாருங்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.