Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    87990
    Posts
  2. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    3054
    Posts
  3. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    7
    Points
    15791
    Posts
  4. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    20012
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 08/14/24 in all areas

  1. வேலுப்பிள்ளைமார் ------------------------------- காலையிலேயே வந்து விடுங்கள் என்று அவன் சொல்லியிருந்தான். இரண்டு தடவைகள் தொலைபேசியில் கூப்பிட்டு ஞாபகப்படுத்தினான். காலை 10 மணிக்கு முன்னரே அங்கே நிற்க வேண்டும், அப்புறம் அங்கிருந்து திரும்பி வர பின்னேரம் ஆகி விடும், அன்றைய பொழுது முழுவதும் இப்படியே போய்விடப் போகின்றது என்று தெரிந்தது. ஒரு ஞாயிற்றுக்கிழமை இப்படியாகிப் போவதில் இஷ்டமில்லை தான், ஆனாலும் அவனை மறுக்க முடியவில்லை. நீங்கள் இருவரும் வந்து பாப்பாவை ஆசீர்வாதம் செய்ய வேண்டும் என்று சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தான். இவர்கள் நேர ஒழுங்கில் மிக மோசமானவர்கள். உலகில் இந்தளவிற்கு நேரத்தை துஷ்பிரயோகம் செய்யும் வேறு எவரையும் என் அனுபவத்தில் நான் கண்டதில்லை. இலங்கையர்களும் மோசம் தான், ஆனாலும் இந்தியர்கள் மிக மிக மோசம். நானும் மனைவியும் ஒன்பதரைக்கு அங்கே போய் விட்டோம். அவனின் சொந்தபந்தங்கள் பலர் சில நாட்கள் முன்னரேயே வேறு நாடுகள், வேறு ஊர்களிலிருந்து வந்து நிற்பதாகச் சொல்லியிருந்தான். எல்லோரும் வந்து போகக் கூடிய நல்ல ஒரு கோடைக்கால நாட்கள் இவை. அவர்களே வீட்டையும், வளவையும் நிறைத்துக் கொண்டிருந்தனர். இந்தியாவில் இருந்து வர வேண்டிய சிலருக்கு கடைசி நேரத்தில் விசா கிடைக்கவில்லை என்று சொன்னான். அவர்கள் எல்லோரும் ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். ஆனாலும் அவனும், அவனின் மனைவியும் எங்களிருவரையும் விழுந்து விழுந்து கவனித்துக் கொண்டனர். ' இல்லை........ வேண்டாம் அப்பா, நீ போய் ஆக வேண்டியதைப் பார்.........' என்று சொன்னாலும், அவன் கேட்பதாயில்லை. மஞ்சள் நீராட்டு விழா என்று தான் அவர்கள் சொன்னார்கள். இதையே நாங்கள் பூப்புனித நீராட்டு விழா என்றோ அல்லது சாமத்தியச் சடங்கு என்றோ சொல்லிக் கொள்வோம். இதற்கு பாக்கு நீரிணைக்கு இரண்டு பக்கங்களிலும் என்ன பெயர்கள் சொன்னாலும், இதற்கெல்லாமா நீங்கள் விழா எடுப்பீர்கள் என்று வேறு பல நாட்டு நண்பர்கள் சிரித்திருக்கின்றார்கள். விழாக்கள் என்பது ஒரு குடும்ப ஒன்றுகூடலிற்கான தருணம், ஒரு கட்டாயத்திலாவது பலரும் வந்து ஒன்றாகச் சேர்வார்கள் என்ற வகையில் கொண்டாடப்படலாம், முக்கியமாக குடும்பங்களே தனித்தனியாக உலகெங்கும் சிதறிக் கிடக்கும் இந்தக் காலத்தில். ஆனால், அதற்காக உலங்கு வானூர்தியில் இருந்து குதிப்பதோ அல்லது பல்லக்கில் ஏறுவதோ போன்ற சேட்டைகள் இந்த விழாக்களின் நோக்கத்தையே காலப் போக்கில் அழித்துவிடக்கூடும். அவனின் நண்பன் என்று ஒருவரைக் கூட்டி வந்து அறிமுகப்படுத்தினான். இருவரும் ஒன்றாக அங்கே ஒரே கல்லூரியில் படித்ததாகச் சொன்னான். சொல்லி விட்டு பெரிதாகச் சிரித்தான். அவனின் கல்லூரி பற்றியும், கல்லூரி நாட்கள் பற்றியும் பல கதைகளை முன்னர் சொல்லியிருக்கின்றான். எல்லாமே வேடிக்கையான கதைகள். அவன் பிளஸ் டூ சோதனையில் அவ்வளவு நல்ல புள்ளிகள் எடுக்காததால், இந்தக் கல்லூரியில் போய்ச் சேர வேண்டியதாகப் போய் விட்டது என்பான். நாங்கள் இருவரும் பதினொரு வருடங்கள் ஒன்றாக வேலை செய்திருக்கின்றோம். அவன் மிகவும் கெட்டிக்காரன். ஆனால் பிளஸ் டூ படிக்கும் காலத்தில், கவனம் முற்றாகச் சிதறும் அளவிற்கு, என்ன செய்து கொண்டிருந்தானோ தெரியவில்லை. அவனின் நண்பன் என்னுடனேயே இருந்தார். எங்கே என் பிள்ளைகள் என்று கேட்டார் அவர். அவர்கள் வரவில்லை, இங்கு அவர்களின் வயதுகளில் எவரும் இல்லை, அதனால் வரவில்லை என்றேன். அப்படி விடக் கூடாது, இழுத்து கூட்டிக் கொண்டு வர வேண்டும் என்றார் அவர். எங்களின் கலாச்சாரமும், பண்பாடும் எங்களை விட்டுப் போகவே கூடாது என்றார். உங்களின் பிள்ளைகள்......... என்று நான் கேட்டேன். அங்கே ஓடித் திரிந்து கொண்டிருந்த இரு சிறுவர்களைக் காட்டினார். அவர்களின் வயது ஒன்பது, ஆறு என்றார். இன்னும் பதினெட்டு வருடங்களின் பின் நான் இவரைச் சந்திக்க வேண்டும், அப்ப நிலைமை என்னவென்று கேட்க வேண்டும். தமிழ்நாட்டில் அவருடைய மாவட்டத்தின் பெயர் சொல்லி, அந்த மாவட்டம் எனக்குத் தெரியுமா என்று கேட்டார். தெரியும் என்றேன். தன் ஊர் பெயரைச் சொல்லி, அந்த ஊரைத் தெரியுமா என்று கேட்டார். அவர் சொன்ன ஊரும் எனக்குத் தெரிந்திருந்தது. அங்கே பத்து குடும்பங்கள் இலங்கையிலிருந்து அகதிகளாக 90ம் ஆண்டுகளில் வந்து குடியேறி இருப்பதாகச் சொன்னார். தன்னுடைய குடும்பம் அவர்களுக்கு எல்லா உதவிகளையும் செய்ததாகச் சொன்னார். இன்னமும் அவர்கள் அங்கேயே இருக்கின்றார்களாம். பின்னர், மிக அருகில் வந்து, காதருகே, 'நாங்களும் பிள்ளைமார்கள் தான்.......' என்றார். பிள்ளைமார்கள்...........?? நாங்கள் எப்போதிலிருந்து பிள்ளைமார்கள் ஆனோம் என்று யோசிக்க, வேலுப்பிள்ளை என்ற பெயர் எங்கிருந்தோ நினைவுக்கு வந்தது. பத்து குடும்பங்கள் நன்றாக இருக்கின்றார்கள் தானே என்று, அதனால் மேலும் பிள்ளைமார்கள் பற்றிக் கதைக்காமல், 'இந்தியன் - 2' பற்றி அவருடன் கதைக்க ஆரம்பித்தேன்.
  2. 1987 ஆம் ஆண்டு இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே செய்யப்பட்ட இந்த ஒப்பந்தம் பற்றி பலர் கிலாகித்து எழுதுகின்றனர். தமிழர்களின் உரிமைகளைக் காத்துக்கொள்ள இந்தியா முன்னின்று செய்த அளப்பரிய சேவை என்றும் இதனைக் கருதுகின்றனர். ஆனால், உண்மை அதுவல்ல. இவ்வொப்பந்தம் செய்யப்பட்டதே இலங்கையின் ஒருமைப்பாட்டினைப் பாதுகாத்துக்கொள்வதற்காகவும், இந்தியாவின் பிராந்தியப் பாதுகாப்பினை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவும் தான். இதைத்தவிர இந்த ஒப்பந்தத்தில் ஈழத்தமிழருக்குச் சார்பாகவென்று எவையுமே இருக்கவில்லை. 1. எந்த தமிழினத்தின் சார்பாக இவ்வொப்பந்தத்தினைச் செய்வதாக இந்தியா கூறிக்கொண்டு வந்ததோ, அந்தத் தமிழினத்தின் உரிமைகளை பெற்றுக்கொடுக்கத் தேவையான குறைந்தபட்ச முயற்சியினைக் கூட அது எடுக்கவில்லை. 2. ஏற்கனவே பலவீனப்பட்டுப் போயிருந்த தமிழரின் அரசியல் உரிமைகளை மேலும் பலவீனப்படுத்தும் சிங்களத்தின் முயற்சிகளைத் தடுக்கும் எந்த ஏற்பாடும் ஒப்பந்தத்தில் இருக்கவில்லை. 3. ஆனால், தமிழர்களின் நிலையினை மேலும் பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளே ஒப்பந்தம் முழுதும் பரவிக்கிடந்தன, உதாரணத்திற்கு வடக்கும் கிழக்கும் இணைந்திருக்க வேண்டுமா இல்லையா என்பதைத் தீர்மானிக்க தமிழர் தாயகத்தில் சில பகுதிகளில் மட்டுமே நடத்தும் சர்வஜன வாக்கெடுப்பு சமாதான ஒப்பந்தம் என்கிற பெயரில் கைச்சாத்திடப்பட்டு, சிங்கள அரசின் அகம்பாவத்தைக் கட்டுப்படுத்தும் வழிகளின்றி, தமிழர் மீதான அடக்குமுறையினை வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்ற இந்தியாவினால் சமாதானத்தைக் கொண்டுவரமுடியாது போனமையே ஒப்பந்தம் தோற்கடிக்கப்பட்டதன் காரணம். எந்தத் தமிழரின் நலன்காக்க ஒப்பந்தம் செய்வதாகக் கூறிக்கொண்டு இந்தியா வந்ததோ, அதே தமிழரின் நலன்களை விற்று தனது நலனை மட்டுமே அது காத்துக்கொள்ளப்போகிறது என்கிற உண்மை தெரியவந்தபோது ஒப்பந்தம் தோல்வியடைவதை எவராலும் தடுக்க முடியாது போய்விட்டது. இதற்குப் புலிகள் பொறுப்பல்ல, முழுப்பொறுப்பும் இந்தியாவையே சாரும். இந்தியாவினதும், இலங்கையினதும் கூலிகளாகச் செயற்பட்ட ஏனைய இயக்கங்கள் புலிகளை அழிக்கத் துணைபோனபோது, புலிகளளும் அவர்களை அழித்தது சரிதான். புலிகளுடந்தான் உங்களின் முரண்பாடென்றால், அரசியலையும், போராட்டத்தையும் விட்டு விட்டு ஒதுங்கியிருக்கலாம். எதிரியுடன் போய்ச் சேரவேண்டிய தேவை என்ன? எந்த மக்களுக்காகப் போராடுகிறோம் என்று கிளம்பினீர்களோ, அதே மக்களை இந்தியாவோடும், இலங்கையோடு சேந்து அழித்தபோது, உங்களை அழிப்பதைத் தவிர வேறு என்ன தெரிவினை புலிகளுக்கு விட்டுவைத்தீர்கள்? இலங்கையில் இந்திய அமைதிப்படை செய்த அட்டூழியங்களுக்குப் பின்னர், இலங்கக்யில் இந்தியா இருப்பதே தனது சொந்த நலன்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காகத்தான் என்று வெளிச்சமாகிய பின்னர், தமிழர்களின் போராட்டத்தை அழித்தேனும் தனது நலனைப் பாதுகாத்துக்கொள்ள இந்தியா உறுதிபூண்டிருப்பது தெரிந்த பின்னர், அவர்களை வெளியேற்ற எவருடன் சேர்ந்தால்த்தான் என்ன?
  3. அமெரிக்காவுக்கு அதே இயலுமை கிடைத்தும் விளைவு பயங்கரமாகத்தான் இருந்தது.. ஏற்றுக்கொள்ளமுடியாத அளவுக்கு ஒரு தேசத்தின் ஏதுமறியா அப்பாவி மக்கள் கூட்டம் கண்ணை மூடித்திறப்பதற்குள் கூட்டம் கூட்டமாக சுருண்டு விழுந்து இறந்தனர்.. நாசிக்கள் குண்டு போட்டு ஆங்கிலேயர் இறந்தாலென்ன ஆங்கிலேயர் குண்டு போட்டு ஆசியர்கள் இறந்தாலென்ன..நாசிக்கள் யூதர்களுக்கு எதிராக செய்ததைப்போல மன்னிக்க முடியாத மனிதப்படுகொலை அமெரிக்கா செய்தது.. ஒன்றைமட்டும் ஊதிப்பெருப்பித்து இன்னொன்றை சமப்படுத்துவது நமக்கு பிடித்தற்கு முட்டுக்குடுப்பது.. முன்னர் மற்றவர் என்ன செய்தார்கள் என்ற கதை எல்லோரிடமும் இருக்கும்.. நாசிக்களிடம் யூதர்களுக்கு இருக்கும்.. சிங்களவர்களிடம் தமிழர்களுக்கு இருக்கும்.. தமிழர்களிடம் சிங்களவர்களுக்கு இருக்கும்.. இஸ்ரேலிடம் பாலஸ்தீனர்களுக்கு இருக்கும்.. பாலஸ்தீனர்களிடம் இஸ்ரேலுக்கு இருக்கும்.. ஆனால் இவை எவற்றையும் சொல்லி மனிதப்பேரவலத்தை கூண்டோடு குண்டுவீசி ஒண்டுமறிய பாலகர்களுடன் சேர்த்து அப்பாவி மக்களை இன அழிப்பு செய்ததை/செய்வதை யாரும் ஒருபோதும் சமப்படுத்த முடியாது..
  4. மீண்டும் இவ்வருடம் பிரம்மாண்டமாகவும் பல்வேறு சுவாரசியமான நிகழ்வுகளுடனும் யாழ் ஐடி ஹப்(Yarl IT Hub) இன் YGC புத்தாக்க திருவிழாவாக நடைபெற உள்ளது ! ஆகஸ்ட் மாதம் 2, 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் புத்தாக்கம், தொழில்நுட்பம் மற்றும் முயற்சியாண்மை என அனைத்தும் ஒரே இடத்தில் சந்திக்கும் ஒரு மிகப்பெரிய கொண்டாட்டம் - YGC புத்தாக்க திருவிழா. YGC புத்தாக்க திருவிழாவில் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம் Pitching போட்டி, ரோபோட்டிக் போட்டி (Robotic Competition), வலையமைப்பு நிகழ்வுகள் (networking events), மாஸ்டர் கிளாஸ்கள் (master classes), கண்காட்சிகள் (mini expo), சந்திப்புகள் (ecosystem meetups), பாடசாலை மாணவர்களின் கண்காட்சி (YGC juniors alumni expo), அனுபவ கற்கை நெறிகள் (Experiential Learning), புத்தொழில் கண்காட்சி, செயற்கை நுண் அறிவு, கைத்தறி, களிமண், ஓலை போன்றவற்றின் செயன்முறைகள், Fun Activities மற்றும் பல. இத் திருவிழாவில் பங்கு பெறுவதன் மூலம் நீங்களும் முயற்சியாண்மை, புத்தாக்கம் என்பவற்றை முயற்சித்து அதில் வெற்றி பெற்ற பலரை நேரடியாக சந்தித்து அவர்களின் அனுபவங்களைப் பெற முடியும். நீங்கள் ஒரு தொழில்முனைவோராகவோ, சிறுவர்களாகவோ, மாணவர்களாகவோ, பல்கலைக்கழக மாணவர்களாகவோ, கல்வி ஆர்வலராகவோ அல்லது புதிய விடயங்களில் ஆர்வமுடையவர்களாக இருந்தாலும் உங்களுக்கு ஏற்ற நிகழ்வுகள் இப் புத்தாக்க திருவிழாவில் காணப்படும் . ஒன்றிணைவோம், ஊக்குவிப்போம், புதுமைப்படுத்துவோம்! https://www.facebook.com/yarlithub
  5. அடிமை வாழ்வில் ஒரு சுகம் இருக்கிறது. இது சம்பந்தர் காலத் தமிழினம் அனுபவிக்கும் நிகழ்வல்ல. நாங்கள் உலகாண்ட தமிழர் என்று பெருமைப்படும் சோழர் காலத்திலிருந்தே அனுபவித்துவரும் சுகம். எங்கள் கடவுள்களையே எமது தாய்மொழியால் அழைத்து வணங்காமல், வடவரின் மொழிக்கு அடிமைப்பட்டு அதன் அதிகாரத்தில் பணிந்து வணங்கிவரும் இனம். தமிழினத்திற்கு ஒரு தமிழன் தலைவனாக வந்தால் தாங்கமாட்டோம். வேற்று இனத்தவன் ஒருவன் தலைவனாக வந்தால் அவனுக்கு அடிமைப்பட்டு வாழ்ந்து, வந்தது, வருவதுதான் எங்கள் வரலாறு.😩
  6. மனம் என்னும் மேடையின் மேலே முகம் ஒன்று ஆடுது .......! 😍
  7. ஆம் பிறந்த மண்ணில் இருந்து கலைக்கப்பட்டாச்சு இருக்கும் இடத்தையாவது பகைவர்களிடமிருந்து காக்கணும். இது சுயநலம் என்றால் அதில் பொதுநலனும் சேர்ந்தே இருக்கிறது.
  8. புதிதாக வந்தவர்கள் -------------------------------- அந்த வீட்டின் முன்னால் அவ்வளவு ஆட்கள் இதுவரை கூடினதே இல்லை. இருபது வருடங்களுக்கு மேலாக இதே தெருவிலேயே, ஒரே வீட்டிலேயே நான் இருக்கின்றேன். அந்த வீடும், அங்கு இருப்பவர்களும் அதைவிட இன்னும் அதிக காலமாக அங்கே இருக்கின்றார்கள். அங்கு இருப்பவர்கள் இருவரும் வயதான கணவன் மனைவி. நாங்கள் இங்கு குடிவரும் போதே அவர்கள் வயதானவர்களாக இருந்தார்கள். சில வருடங்களில், வருடம் முழுவதும் கூட, அவர்களின் வீட்டிற்கு எவரும் வருவதில்லை. ஆட்கள் வந்த வருடங்களில் கூட ஓரிருவரே இதுவரை வந்து போயிருக்கின்றனர். ஆரம்பத்தில் அவர் என்னுடன் அவ்வளவாகப் பழகவில்லை. பிள்ளைகளும், நானும் ஒருநாள் தெருவில் பந்து விளையாடிக் கொண்டிருந்தோம். பந்து அவர்களின் வீட்டு யன்னலில் பட்டால் என்ன நடக்கும் என்று கேட்டார். யன்னல் உடைந்து போய்விடும் என்று சொன்னேன். போலீஸைக் கூப்பிடப் போகின்றேன் என்று போனார். ஆனால் போலீஸ் வரவில்லை. அவரின் மனைவி அவரை அன்று தடுத்திருக்கக்கூடும். ஆனாலும் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக பழக ஆரம்பித்தார். அவசரங்களுக்கு என்னை அழைப்பதை விட, அவருக்கு வேறு தெரிவுகளும் இருக்கவில்லை. வயதானால் பல அவசரங்கள் திடீர் திடீரென்று வந்து சேர்ந்தும் விடுகின்றன. இரண்டு பிள்ளைகள் என்றார். இந்த ஊரில் இருக்கும் மிகவும் நல்ல பாடசாலை ஒன்றில் படித்து, மிகவும் சிறந்த பல்கலைகளுக்கு போய், இப்பொழுது மிகப்பெரிய உத்தியோகங்களில் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் குடும்பங்களாக இருக்கின்றார்கள் என்றார். பல படங்களையும் காட்டினார். பிள்ளைகள் வாங்கிய விருதுகளையும் பார்க்கக் கொடுத்தார். என்னுடைய பிள்ளைகளையும் நான் அப்படியே ஆக்க வேண்டும் என்றும் சொன்னார். அவரின் வீட்டின் யன்னல் இன்னும் ஒரு தடவை கூட உடைக்கப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்க. அவரின் வீட்டின் முன் கூட்டம் கூடிய நாளுக்கு முதல் நாள் எங்களிடம் சொல்லி விட்டே போயிருந்தார். சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனைக்கு அருகிலேயே ஒரு இடத்தில் ஒரு வாரம் தங்கப் போகின்றோம் என்று சொல்லியிருந்தார். தினமும் மருத்துவமனைக்கு போய் வருவதில் இருக்கும் சிரமங்களைச் சொன்னார். தாங்கள் திரும்பி வரும் வரை அவர்களின் வீட்டைக் கவனித்துக் கொள்ள சொல்லியிருந்தார். கூட்டத்தில் போய் என்னவென்று விசாரித்தேன். அந்த வீட்டை விற்கப் போட்டிருப்பதாகச் சொன்னார்கள். அவர்களை நான் அதன் பின்னர் காணவேயில்லை. மகன்களில் ஒருவர் அந்த வீட்டை விற்றார் என்றார்கள். தாயையும், தந்தையையும் மருத்துவமனையில் இருந்து தன்னுடனேயே கூட்டிச் சென்று விட்டதாகவும் சொன்னார்கள். வீட்டில் இருந்த பொருட்களை சிலர் வந்து தங்களிடையே பிரித்து எடுத்துக் கொண்டு போனார்கள். மூன்று நாட்களில் அந்த வீடு விற்கப்பட்டது என்றனர். பலத்த போட்டிகளுக்கு இடையில் ஒரு இளம் தம்பதிகள் வாங்கியிருந்தனர். என் பிள்ளைகள் இருவரும் பல்கலை, பின்னர் வேலை என்று வெளியில் போய்விட்டனர். நாங்கள் இருவர் ஆகினோம். புதிதாக வந்த முன் வீட்டில் முதலில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. கடகடவென்று வளர்ந்து, இரண்டு வயதிலேயே 'குட் மார்னிங்' என்று சொல்ல ஆரம்பித்தது அந்தக் குழந்தை. அப்படியே அந்த வருடமே ஒரு தம்பி பாப்பாவும் அங்கே புதிதாக வந்தார். ஒரு நாள் வீட்டின் முன் வேலை செய்து கொண்டிருந்த போது, அந்த இளம் தம்பதிகள் வந்தனர். இந்தப் பகுதியில் எந்த முன்பள்ளி நல்லது, என்னுடைய பிள்ளைகள் எந்த முன்பள்ளிக்கு போனார்கள் என்று விசாரித்தனர். அவ்வளவு தான் வாழ்க்கை.
  9. அரங்கம் செய்திகள் தளத்தில் எழுதிக்கொண்டு இருப்பவர்கள் புலி எதிர்ப்புக் காச்சாலால் மீகவும் பீடிக்கப்பட்டு இருக்கின்றனர் போலுள்ளது. புலிகளி பாசிச வாதிகளாக மீண்டும் மீண்டும் நிறுவ முற்படுகின்றவர்களின் கூடாரமாக இந்த தளம் உள்ளது போல. ஆயுதம் தரிக்காத அரசியல்வாதிகளை கொன்றது மிகவும் தவறான விடயம் என்பதை மறுப்பதற்கில்லை (முப்படைகளின் தளபதியாக இருந்த சனாதிபதிகள் மீதான தாக்குதல் இந்த வகையில் வராது). அதே நேரம், இவ்வாறானவை இடம்பெற்றிராத, புலிகள் களத்தில் நீக்கப்பட்ட இந்த 15 வருடங்களில், தமக்கு (தமிழர்களுக்கு) அரசியல் ரீதியிலான, நியாயமான தீர்வு அவசியமே இல்லை எனும் அளவுக்கு தமிழர்களாலே மனதளவில் ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு மிழ் தேசிய பிரச்சனை மழுங்கடிக்கப்பட்டு விட்டது என்பதை இந்த காச்சலால் பீடிக்கப்பட்டவர்கள் கண்டும் காணாமல் உள்ளனர். தமிழர்களுக்கு சிங்கள அரசு கொடுப்பதாக இருந்த அனைத்து தீர்வுகளும் தமிழர் இருப்பை கேள்விக்கு உள்ளாக்குபனவையாகவே இருந்தன. அத்துடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளும், யுத்த நிறுத்தங்களும் சிங்கள அரசு தன்னை பலப்படுத்த எடுத்த கால அவகாசங்களே ஆகும். இதற்கு சமாந்தரமாக புலிகளும் தம்மை பலப்படுத்தவே இவற்றினை பயன்படுத்தி இருந்தனர். எனவே இருதரப்புமே நேர்மையாக இதில் நடந்து கொள்ளாத போது, வெறுமனே தலைவரையும், புலிகளையும் மட்டும் குற்றம் சாட்டி நிற்கின்றது இந்த கட்டுரை. உலகில் புலிகளையும் தலைவரையும் தவிர, சிங்கள அரசின் கபடத்தை முற்றாக புரிந்து வைத்திருந்த ஒரு அமைப்போ தலைமையோ உலகில் இல்லை. இந்திய பார்ப்பனிய அரசு ஒவ்வொரு முறையும் மூக்குடைபடும் இடமும் இதுதான். புலி நீக்க அரசியல் என்பது சரணாகதி அரசியல். ஒற்றை அரசை ஏற்று, போடும் பிச்சையை வரமாக நினைத்து வழிபடும் அரசியல். நீண்ட காலத்தில் தமிழர்கள் தம் அனைத்து அடையாளங்களையும் துறக்க வைக்கும் அரசியல். இதை வலியுறுத்தும் எந்த தரப்பும், எந்த கட்டுரையும் தமிழர்களின் நியாயமான இருப்பையும், அவர்களுக்கான தீர்வையும் நிராகரிக்கும் தரப்பை சார்ந்தவை. பி.கு: நான் சிகப்பு புள்ளியை குத்தியது, கிருபன் இதனை இங்கு இணைத்தமைக்கு அல்ல. மாறாக, கட்டுரை சொல்லும் அரசியலுக்கு எதிராக
  10. உதப் பார்த்தவுடன சிறியரைத் தேடிப்பிடித்து மொங்கு மொங்கென்று மொத்த வேணும் போல கை பரபரக்கிது,.....🤣
  11. தலைப்பைப் பார்த்துவிட்டு பதறிப் போனேன். நீங்க ஊரில் இருந்தாலும் சரி வெளிநாடுகளில் இருந்தாலும் சரி படிக்கிற வயதிலிருந்து இப்போது வரை ஒரே அழைப்பிதழ்கள் வந்த வண்ணமே உள்ளன. பூப்புனித விழா திரியொன்று இன்னமும் சக்கைபோடு போடுது கவனிக்கலையோ?
  12. அபிவிருத்தி என்றால் என்ன? எம்.பி யாகி அமைச்சுப் பதவி பெறுவதன் மூலம் அபிவிருத்தி அடைய முடியுமென்றால் இன்று மிகவும் அபிவிருத்தி அடைந்த பிரதேசங்களாக சிங்களப்பிரதேசங்கள் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் சிங்கள பிரதிநிதிகளே அதிகளவு அமைச்சு பதவிகளை இதுவரை கொண்டிருக்கிறார்கள். இனியும் கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்கள் பிரதேசம் அபிவிருத்தி அடையவில்லை என்பதே உண்மை. உண்மை இவ்வாறு இருக்கும்போது அமைச்சு பதவி பெறுவதால் எப்படி தமிழ் பிரதேசம் அபிவிருத்தி அடைய முடியும் என சிலர் நம்புகிறார்கள்? றோட்டு போடுவது, சிலருக்கு வேலை வாய்ப்பு பெறுவதுதான் அபிவிருத்தி என்றால் ஆங்கிலேயர் ஆட்சியிலேயே இவை எல்லாம் கிடைத்தனவே. பேசாமல் அவர்களின் கீழ் அடிமையாக இருந்திருக்கலாமே? அபிவிருத்தி முக்கியமே. ஆனால் அதைச் செய்வதற்கு அதிகாரம் வேண்டும். எனவே அதிகாரப் பரவலாக்கம் செய்யாதவரை தமிழ் பிரதேசம் ஒருபோதும் உண்மையான அபிவிருத்தியை அடைய முடியாது. 1948வரை ஆங்கிலேயர் மட்டுமே எம்மை ஆக்கிரமித்து சுரண்டினார்கள். இப்போது வடக்கு கிழக்கில் இந்தியா சுரண்டுகிறது. தெற்கில் சீனா சுரண்டுகிறது. இதற்கிடையில் தன்னுடன் ஒப்பந்தம் செய் என்று அமெரிக்கா மிரட்டுகிறது. கடன் சுமையோ வருடா வருடம் அதிகரிக்கிறது. பெற்ற கடனுக்குரிய வட்டியைக் கட்டுவதற்கே கடன் வாங்க வேண்டிய நிலையில் இலங்கை அரசு இருக்கிறது. இந்த நிலையில் இலங்கை அரசுடன் சேர்ந்தால் அபிவிருத்தி அடைய முடியும் என பதவி வெறி பிடித்த சுயநலவாதிகளைவிட வேறு யார் நினைப்பார்கள்? தோழர் பாலன்
  13. காணி அதிகாரம் தந்தால்… தொல் பொருள் திணைக்களத்தை வைத்து, எப்படி புது விகாரைகளை கட்டுவது. கட்டிய விகாரையை பாதுகாக்க பொலிஸ் அதிகாரம் அவர்களுக்கு வேண்டும்.
  14. நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். சிறுமியாக விளையாடிக் கொண்டு திரிந்தவள் இப்பொழுது குமரியாகிவிட்டாள். அவளை ஊராரும் சேர்ந்துதான் பாதுக்காக்க வேண்டும் என்ற அறிவிப்பாகவும், என் வீட்டில் குமரி இருக்கிறாள் என்ற விளம்பரமுமாக அது இருந்திருக்கலாம். அதை வைத்துப் பார்த்தால் இன்றைய காலகட்டத்துக்கு இந்தச் சடங்கு தேவையில்லை. ‘பண்டாரக வன்னியன்’ என்று கலைஞர் ஒரு புத்தகம் எழுதி உரிமை கொண்டாடி விட்டார்
  15. “Hindu Tamil“ நல்லாய் இரு நாட்டு தமிழ் மீனவர்களையும் கோத்து விடுகின்றது. எல்லை தாண்டி வரும் மீனவர்களை கண்காணிக்க இலங்கை கடற்படை உள்ள போது.. இலங்கை தமிழ் மீனவர்களை, வேண்டும் என்றே இதற்குள் இழுப்பது போலுள்ளது. முதலில்… “ஹிண்டு தமிழ்” எல்லை தாண்டி மீன் பிடிப்பது குற்றம் என்று ஒரு கட்டுரை எழுதி… அங்குள்ள மீனவர் கண்களுக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும்.
  16. ஆக்கிரமித்த பகுதிகளிலிருந்து பொதுமக்களை வெளியேற்றுவதற்கு இரண்டு வழிகளைத் திறக்கப் போவதாக உக்ரெய்ன் அறிவித்துள்ளது. ஒன்று ரஷ்யாவை நோக்கியது மற்றையது உக்ரெய்னை நோக்கியது. ரஷ்ய அகதிகளை உக்ரெயின் உள்வாங்கப் போகிறது. 😃 ஏற்கனவே ரஷ்ய அரசியல் அகதிகளுக்கு ஐரோப்பிய நடுகள் புகலிடம் கொடுத்துள்ளன. எந்த நாடென்று பாரபட்சம் பாராமல் அகதிகளாக வந்தவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கியது போலவே ரஷ்ய அகதிகளுக்கும் வழங்கப்படும்.
  17. அரசியலமைப்பில் திருத்தம் செய்வது என்றால்... மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ரணில் வெற்றி பெற வேண்டும் என்பது, சுமந்திரனுக்கு தெரியாமல் இருப்பது, ஆச்சரியமாக உள்ளது. 😂 இல்லாவிடில்... தெரிந்து செய்யும் சுத்துமாத்தில் இதுவும் ஒன்றா... 🤣
  18. 🤣............ இந்தச் சடங்கை ஒரு விளம்பரமாக ஒரு பழைய காலத்தில் பயன்படுத்தினார்கள் என்று சொல்வார்கள். இன்றும் ஒரு விளம்பரம் ஆகவும் இது இருக்கின்றது போல....... ஆனால் இரண்டும் வெவ்வேறு விளம்பரங்கள்.......... என்னுடைய பெயரில் பிள்ளை இல்லை. ஆனால் இவர்கள் எல்லோருக்கும் 'வேலுப்பிள்ளை பிரபாகரன்' என்னும் பெயர் நன்றாகவே தெரிந்திருக்கின்றது. அங்கிருந்தே ஆரம்பிக்கின்றார்கள் என்று நினைக்கின்றேன். வன்னி என்னும் எங்களின் நிலப்பரப்பை வைத்து நாங்கள் வன்னியர்களா என்று என்னைக் கேட்ட ஒருவரும் இருக்கின்றார்..............🤣. பண்டார வன்னியனுக்கு வேலூர், தர்மபுரி பக்கங்களில் ஒரு சிலை வைத்தாலும் வைத்து விடுவார்கள்............🤣.
  19. ஆஹா... இது, புது பழமொழியாய் இருக்கு. வேறு ஒரு காட்டு விலங்கின் பெயரைத்தான் சொல்வார்கள். 😂 ஓஹோ.... உங்களுக்கு, அந்தக் காட்டு விலங்கின் பெயரை, இவருடன் ஒப்பிட விருப்பம் இல்லை, என்னும் நல்ல மனதை புரிந்து கொள்கின்றேன். 🤣
  20. 🤦🏼‍♂️ ""உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல தேவையில்லை. ஏனெனில் அவை யதார்த்தத்தை விடுத்து பழி வாங்கும் நோக்கம் கொண்டவை மட்டுமே. "" உங்கள் கற்பிதம் தவறு. Rational thinking இல்லை என்பதுதான் மேலே நீங்கள் கூறுவது காட்டுகிறது. 1) உங்களைப் பழிவாங்க எனக்கு ஒரு காரணமும் இல்லை. 2) அதில் எனக்குச் சந்தேகம் இல்லை. மகிழ்ச்சியே. 3) ✅ 4) உங்களை எப்போது சிங்களத்தைக் கனம் பண்ணும்படி கோரினேன்? 5) அதற்கான தேவை எனக்கு இல்லை. உங்கள் சிந்தனைகள் நடைமுறைச் சாத்தியம் அற்றவை. ஒன்றுக்கொன்று முரணானவை என்று சுட்டிக் காட்டுவதுதான் எனது நோக்கம். மற்றும்படி உங்கள் தேசியம் மீதான பற்றில் எனக்கு எந்தச் சந்தேகமும் எனக்கு இல்லை. மேற்குலகு NATO முழுவது சேர்ந்து அடித்தும் தங்கள் நோக்கம் நிறைவேறவில்லை என்கிற கவலை சில பலருக்கு,.🤣
  21. நாய்வாலைப் பிடித்தால் எப்படி விடமுடியும்?
  22. எலான் மஸ்குக்கு... இருக்கின்ற தொழில் காணாது என்று, இங்கையும் வந்து, மற்றவனின் பிழைப்பில் மண் அள்ளிப் போடப் பார்க்கிறா(ன்)ர். 😂
  23. யார்யார் நேர்காணல் செய்வதென்ற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது.
  24. உக்கிரேன். யுத்தத்தை ஆரம்பிக்கவில்லை ரஷ்யா தான் ஆரம்பித்தது,......சரியா??? இப்ப காலம் மாறியுள்ளது,........பெற்றோர்களையோ சொந்த பிள்ளைகள் பார்ப்பதில்லை..இதுக்கே இலவசமாக கல்வி மருத்துவம்,. .....அவர்களின் சொந்த பணத்தில் உழைப்பில் தந்தாங்களே??? மக்களின் வரிப்பணத்தில். தான் அரசாங்கம் இயங்கிக்கொண்டிருக்கும் அந்த வரி பணத்தினால் தான் இலவசமாக கல்வி மருத்துவம் கிடைக்கிறது எங்கள் தலைகளில். குண்டுகள் போட்டவர்களுக்கு எதுவும் செய்ய தேவையில்லை
  25. சாதகமோ, பாதகமோ உக்ரைன் தன் நலன்களுக்கு ஏற்புடையதைத் தான் செய்ய முடியும். "உக்ரைன் சுருண்டு விடாமல் ரஷ்யாவை எதிர்த்து போர் தொடங்கியதால், லண்டனில் நான் சலாட்டிற்குப் போடும் மரக்கறியின் விலை ஏறி விட்டது!" 😎என்று முறைப்பாடு செய்யும் உக்ரைனியர் அல்லாத நோக்கர்களின் நலன்களுக்காக உக்ரைன் முடிவுகளை எடுக்க வேண்டியதில்லை. நான் ஊகிப்பது, உக்ரைன் குறுகிய காலப் போக்கில் கிழக்கில் இருக்கும் இராணுவ அழுத்தத்தை சிறிது தளர்த்த முயன்றிருக்கிறது. நீண்ட காலப் போக்கில் "தற்கால ரஷ்யா, 40 களில் இருந்த சோவியத் இராணுவ வல்லமையைக் கூட கொண்டிருக்கவில்லை" என்ற விம்பம் ஏற்பட்டிருக்கிறது. இது ரஷ்ய ஆதரவாளர்களுக்கே உறைத்திருக்கும் போது, யாழ் களத்தில் இருக்கும் ஓரிரு "புரினின் புருஷன்மாருக்கு" (நீங்கள் அல்ல) உறைக்காமல் விடுமா😂?
  26. நிச்சயமாக உங்கள் கருத்துடன் உடன்படமாட்டேன். அரவணைத்து உயிர் தந்தவரை உயிர் உள்ளவரை மறவேன். நான் எனது சந்ததி வாழப்போகும் நாடுகள் இவை தான்..
  27. நேட்டோ ரஷ்யாவுக்குள் புகுந்து அடித்தது என்ற கதைகளை எங்களுடனே வைத்து கொள்வோம் 😄 இது கவனத்தில் கொள்ள வேண்டிய புள்ளி 🖕
  28. இவர்கள் எல்லோருக்குமே ஆசான் M .S .விஸ்வநாதன்.
  29. இதுவும் பெண்கள் மீதான ஒரு அடக்குமுறைதான். இப்படியான விழாக்களில் நான் பங்கு கொள்வதில்லை. உங்கள் பெயரில் ‘பிள்ளை’ ஒட்டியிருக்கலாம். அதனாலும் அழைத்திருக்கலாம். இப்பொழுது எல்லாம் பிள்ளை என்ற சொல் இறுதியில் வரும் வகையில் யாரும் பெயர் வைப்பதாகத் தெரியவில்லை. சடங்கும் இல்லாது போகவேண்டும். சாதியும் அழியவேண்டும் ஓரளவு உங்கள் பிள்ளைகள் வயதைக் கணிக்க முடிகிறது.😁
  30. கடவுள் மனிதனை படைத்தான், மனிதன் மதத்தை படைத்தான் என்பார்கள் ஆனால் இந்த சாதி, சமயம் எல்லாம் மனிதரால் படைக்கப்பட்டதுதான், எவ்வாறு 200 வருடங்களுக்கு முன்னால் (தற்போதய சாதி முறைமை) எமது சமூகத்தில் இறக்குமதி செய்த்து கலக்கப்பட்டு ஒரு பிரிவினர் தம்மை தாமே முதன்மையாக காட்டி கொள்ள முயன்றதனை போல இதுவும் ஒரு சமகால முயற்சிதான்😁. அடிப்படையில் எல்லாம் பித்தலாட்டங்கள்தான், ஆனால் இதனை மிக நயமாகக்கூறியுள்ளீர்கள், ஆனால் இந்த கதைக்கு பெரிய வரவேற்பு கிடைக்காது என கருதுகிறேன்.
  31. எங்கள் அன்புக்குரிய குழந்தைகளை இப்போர் சிதைத்துள்ளது கேள்விகள் ஏதுமின்றி பிசாசுகள் அப்பாவிக் குழந்தைகளை இப் போரில் சுட்டுக் கொன்றனர் நேசிப்புக்குரிய குழந்தை தன் தாயின் கண்ணெதிரே புதைக்கப்பட்டது இதயங்கள் உடைந்து நொறுங்கி ஊமைக் காயங்கள் நிலைபெற்றன மாணவர்கள் எங்கும் இல்லை பறவைகள் அற்ற வனாந்தரமாய் தாயில்லாப் பிள்ளைகள் போல் தனிமையில் கிடந்தன பாடசாலைகள் காகிதப் பறவைகள் காற்றில் சிறகு விரித்துப் பறந்தன தூசி படிந்த பள்ளி மணி அடிப்பாரற்று அநாதையாயிருந்தது பள்ளிகளைப் போர் சூழ்ந்த பின்னொரு நாளில் வகுப்பறை நாற்காலிகளை கண்ணீர் பூக்கள் நிறைத்தன கரும்பலகைகள் மழையில் நனைந்தன மற்றும் மணிகள் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருந்தன தியா - காண்டீபன் #நீ_கொன்ற_எதிரி_நான்தான்_தோழா
  32. சிங்களம் விரைவில் விடுதலைப்புலிகளைக் கொண்டாடும் நிலை வரும்.
  33. அன்றைய கிழித்தெறியும் சேட்டைகள் இனிவரும் காலங்களில் நடைபெற சந்தர்ப்பங்கள் இல்லை என்றே நினைக்கின்றேன். இனவாத சிங்களமும் கத்தி கூர்முனையின் மேலேதான் நடக்கின்றார்கள் என நினைக்கின்றேன். கரணம் தப்பினால் மரணம் என்ற நிலைதான் அவர்களுக்கு... ஆனால் எமது தமிழ் அரசியல்வாதிகள் கடந்த 10 வருடங்களாக இருக்கும் சந்தர்ப்பங்களை வரிசை வரிசையாக தவறவிட்டுக்கொண்டிருக்கின்றாகள் என்பதுதான் நிதர்சனம். இனியும் சும்மா புத்த பிக்குகளை சாட்டிக்கொண்டிருந்தால்......? 😁
  34. நீங்கள் சொல்வது போல் எழுத்து மூலம் கிடைத்தால் ஓரளவுக்கேனும் கெளரவத்துடன் விலகலாம். இன்றிருக்கும் நிலையில் இவ்வாறு எழுத்து மூலம் கொடுத்தால் "ஐயோ தமிழர்களுக்கு நாட்டை பிரித்து கொடுக்க போகிறார்" என்று இனவாதம் பேசி வாக்கு கேட்கும் நிலையில் எந்த முன்னணி வேட்பாளர்களும் இல்லை. இந்த தேர்தலில் இருக்கும் ஒரே ஒரு வித்தியாசம், இனவாதம் பேசி வாக்கு கேட்கும் நிலையில் முன்னணி வேட்பாளர்கள் இல்லை என்பது தான். இதன் அர்த்தம் இவர்கள் இனவாதிகள் அல்ல என்பது அல்ல. இன்றைய வங்குரோத்து நிலையில் பொருளாதாரம், வாழ்க்கை செலவு என்பனதான் முக்கிய விடயங்களாக உள்ளன.
  35. சமஸ்டி முறையில் தீர்வு என்பது ரணிலால் முடியாத காரியம் என்பது தெரிந்தது. மீண்டும் ஏமாறாமல் அவர் கட்சியின் அனுமதியோடு எழுத்து மூலம் தான் ஜனாதிபதியானால் என்ன தீர்மானங்களை நிறைவேற்றுவார் என்று எழுதி வாங்கலாம். உதாரணமாக அரசியல் கைதிகளின் விடுதலை, இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள காணிகளை விடுவித்தல் அபிவிருத்தித் திட்டங்கள் போன்ற சாத்தியமாகக் கூடியவற்றைக் கேட்கலாம். எழுத்த்து மூலம் தந்தால் அதைப் பார்த்து சிங்களவர்கள் ரணிலை எதிர்க்கலாம். ஆகவே ரணில் எழுத்து மூலம் தர மறுத்தால் ஆதரவு கிடையாது என்று பேரம் பேசலாம் அல்லவா ?
  36. பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளமாக 1700 ரூபாவை வழங்கும் தீர்மானம், சம்பள நிர்ணய சபையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
  37. எமக்கும் வந்த புதிதில் பிள்ளைகளை எங்கே படிப்பிப்பது என்று பெரும் போராட்டமே.அந்த காலங்களில் திருமணமானவர்களே மிகவும் குறைவு. திருமணமான ஓரிரு குடும்பத்துக்கும் எமது பிள்ளைகளை விட வயதில் குறைந்தவர்கள். உயர்தர படிப்புக்கு எங்கே விடுவது?நல்ல பாடசாலைகளை எப்படி தெரிவு செய்வது?பல்கலைக்கு விண்ணப்பிப்பது?பல்கலைக்கான பணம் திரட்டுவது என்று மிகவும் கஸ்டப்பட்டோம். பின்னாள்களில் எம்மை கேட்டுகேட்டு எத்தனையே பேர் வழிநடத்தினார்கள். நாங்களும் எமக்கு தெரிந்த தெரியாத எல்லாமே நேரகாலம் பார்க்காமல் சொல்லிக் கொடுத்தோம்.
  38. உலக யானைகள் தினம் இன்று! 12 AUG, 2024 | 01:44 PM காட்டு யானைகளை பாதுகாக்கும் நோக்கில் இன்று திங்கட்கிழமை (12) உலக யானைகள் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. கடந்த 2011 ஆம் ஆண்டு யானைகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இலங்கையில் யானைகளின் எண்ணிக்கை 6000 என பதிவாகியுள்ளது. இதில் 55.09 சதவீதம் வயது கூடிய யானைகள் என பதிவாகியுள்ளது. மேலும் 25. 3 சதவீத யானைகள் இள வயது யானைகள் எனவும் 12. 4 சதவீத யானைகள் குட்டி யானைகள் எனவும் பதிவாகியுள்ளது. அத்துடன், யானைகள் தினத்தை முன்னிட்டு சீகிரியாவில் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/190886
  39. அடடடா இந்த சுமாவின் கதையை அவரின் பெண்சாதியே நம்புறதில்லயாம் .....இது வேறயா
  40. முதலில் சிரிப்பு பட்டனை அமத்தவா எண்டு யோசிச்சன், ஆனால் குமாரசாமியண்ணை எழுதியது வெளிநாட்டுக்கு அகதியாய் வந்தவர்கள் அனைவரும் எதிர்கொள்ளூம் ஒன்று என்பதால் யாதர்த்தத்தைபதிவு செய்கிறார் அதனால் இது சிரிப்பல்ல சீரியஸ் ம் சீரியசுக்கு எப்படி சிரிப்பது என்றாச்சு. மேலே உள்ள வரிகளை சுட்டி காட்டியதன் நோக்கம் வெளிநாட்டுக்கு அகதியா வருபவர்களில் எம்மவர்தான் நீண்டகாலம் ஒரு நாட்டிலிருந்தும் ஒரு மொழியை 60% வீதமாவது கற்றுக்கொள்ளாமல் இன்றும் ஒரு அலுவலுக்கு அடுத்தவர் உதவியை நாடுவதும் , வெள்ளைக்காரனுடன் பேசும்போது தகிட தகிட ததிமி தகிட ததிமி தந்தானா என்று பக்கத்தில நிக்கும் வேற்று நாட்டுக்காரன் எம்மை பார்த்து பரிதாபபடும் நிலையில் உள்ளவர்கள் , எனது அலுவல்களுக்கு மொழி விஷயத்தில் அடுத்தவர் உதவியை பெரிதாக நாடாவிடிலும் நானும் பூரண மொழி ஆற்றலில் மேற்குறிப்பிட்டவர்களின் அதே ரகம்தான். எமக்கு முதல் நிலையில் உள்ளவர்கள் சீனர்கள். எம்மவர்கள் பிற இனங்களுடன் ஒப்பிடும்போது மொழி ஆற்றலில் பின் தங்கியதற்கு இரண்டு காரணங்கள் ,,,வந்த காசு கட்டவேணுமென்று வந்து அடுத்தவாரமே ஓயாமல் வேலை வேலை என்று காலம் முழுக்க ஓடுவது இரண்டு தாயகத்தில் தாய் மொழியை தவிர பிறமொழியை அறியும் ஆற்றல் இல்லாதது, தாயகத்தில் சுத்த தமிழ் பேசுவதற்கு மொழி பற்று முதலாவது காரணமில்லை, இங்கிலீசு தெரியாததும் ஒரு காரணம், உண்மைய சொல்வதானால் தமிழக தமிழ் பேட்டிகள் , டிவி நிகழ்ச்சிகள், உரையாடல்களை நம்மவர்கள் முழுதா புரிவதென்றாலே ஓரளவு ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் இப்போது தாயகத்திலும் , கைஸ், வாவ், வேற லெவல், அதைவிட பல ஆங்கில கலப்பு சொற்கள் யாழ்ப்பாண தமிழில் கலந்துவிட்டன. குமாரசாமியண்ணை கருத்தை பதிவிடுகிறேன் என்று கண்ணாடியை பதிவேற்றிவிட்டார் ஒவ்வொரு அகதியின் முகமும் அதில் தெரியுது.
  41. ஏற்கனவே எழுத்து மூலமாக 13 வது திருத்தசட்டம் சட்டமாக்கப்பட்டு பாராளுமன்றிலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையானவர்களால் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி கிடப்பில் போட்டுள்ளார்களே. இதற்கு முன்னரும் எழுதாத ஒப்பந்தங்களா? ஒப்பந்தங்கள் எழுத ஆட்கள் இருப்பது போல் கிழித்தெறியவும் ஆட்கள் இருக்கிறார்கள். தமிழருக்கு வேறு வழியும் இல்லை.
  42. அதுக்கு... இவங்கள் சரிப்பட்டு வரமாட்டாங்கள். 😂
  43. உங்கள் கரிசனை மெச்சத்தக்கது. ஆனாலும், முஸ்லிம்கள் உலகின் எந்த வகையான அளவுகோல்களுக்கும் அப்பாற்பட்டவர்கள். மதம் என்று வந்தவுடன் அவர்கள் எல்லோரும் ஒரே மட்டை ஒரே குட்டை. இது அனுபவம்.
  44. பத்மநாபாவின் கூலிப்படையான ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பே வடக்குக் கிழக்கில் இந்திய ஆக்கிரமிப்புப் படையுடன் இணைந்து தமிழர்களுக்கெதிரான அட்டூழியங்களில் ஈடுபட்டு வந்தது. தனது பொம்மையான வரதராஜப் பெருமாளையும், சுரேஷ் பிரேமச்சந்திரனையும் கொண்டு அவர் தமிழர் தாயகத்தில் செய்தது அக்கிரமங்களேயன்றி வேறில்லை. இந்திய ரோவின் பூரணப் பாதுகாப்பில் இருந்துகொண்டு, தான் எந்த மக்களுக்காகப் போராடக் கிளம்பினாரோ அதே மக்களை அடிமைகளாக, அந்நியப் படையொன்றின் உதவியுடன் ஆண்டபோது , தமிழ் மக்களின் விடுதலை வீரன் எனும் தகமையினை இழந்து பலநாளாயிற்று. கொல்லப்பட்டபோது அவர் அந்நிய ஆக்கிரமிப்பு அரசொன்றின் கைக்கூலிதான். ரஜீவினல் தமிழர் அடைந்த நலன் என்று எதுவும் இல்லை. அவர் செய்த ஒப்பந்தம் இந்தியாவின் நலன்களுக்கானது மட்டுமே. அவரைக் கொன்றதால் புலிகள் அடைந்ததும் ஒன்றுமில்லை. கொல்லப்பட்டிருக்கத் தேவையில்லை. புலிநீக்க அரசியல் தேவையா இல்லையா என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும், அந்நிய சக்திகளின் கைக்கூலிகள் அதுகுறித்துப் பேசத் தேவையில்லை. இதனைச் சொல்வதன் மூலம் ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் அராஜக ஆட்சியை நியாயப்படுத்துவதோடு, இந்திய நலன்காக்க உருவாக்கப்பட்ட ஒப்பந்தத்தையும் இவர் நியாயப்படுத்துகிறார். ஆக, இவர் வருவதும் பதம்நாபா, வரதர் முகாமிலிருந்துதான் என்பதை உறுதிப்படுத்துகிறது.
  45. ஒரு Electricity Board Office, வெளில ஒரு வாழைப் பழக்காரா், வாழைப்பழம் வித்து கொண்டு இருக்கிறார், அவரிடம்… EB ஆபிஸர் :: வாழைபழம் என்னபா விலை..? வியாபாரி :: சார் , இத எதுக்கு நீங்க வாங்குரீங்கனு தெரிஞ்சா தான் சார் விலை செல்ல முடியும்…? EB ஆபிஸர் :: என்னபா சொல்ற, நான் எதுக்கு வாங்குனா உனக்கு என்ன..?? வியாபாரி :: இல்ல சார் , நீங்க இந்த வாழபழத்த கோயிலுக்குனு வாங்குனா விலை 10 ரூபா ஒரு பழம். குழந்தைகளுக்குனு வாங்கினா Rs ஒரு பழம் 20 ரூபா. தெரிஞ்சவங்க வீட்டுக்கு வாங்குனா விலை 25 ரூபா. நீங்க சாப்பிட வாங்கினா ஒரு பழம் 30 ரூபா சார்….. EB ஆபிஸர் :: யோவ், யார ஏமாத்துற ஒரே பழம் எப்படியா different different விலைக்கு வரும்…?? வியாபாரி :: This is my tariff plan. ஏன்டா கொய்யாலே….நீங்க மட்டும் ஒரே கரண்ட், ஒரே transmission சிஸ்டம் வச்சிகிட்டு…..வீட்டுக்கு தனி, கடைக்கு தனி, பேக்டரிக்கு தனி விலைனு விப்பீங்க….கேட்ட tariffனு சொல்லூவீங்க… Banana vendor rocked and EB officer shocked.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.