Leaderboard
Popular Content
Showing content with the highest reputation on 10/03/24 in all areas
-
The Sun/Son shines - சுப.சோமசுந்தரம்
6 pointsThe Sun/Son shines - சுப.சோமசுந்தரம் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டின் துணை முதல்வராகப் பொறுப்பேற்றது தொடர்பாக எனது எண்ணவோட்டத்தைப் பதிவு செய்ய விழைவு. தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தமட்டில் இது எப்போதோ எதிர்பார்த்த நிகழ்வோ, என்னவோ ! எனவே பெரிய அளவில் எவ்விதச் சலசலப்பும் பொதுவெளியில் நிகழவில்லை எனலாம் - ஏதோ ஒன்றிரண்டு எதிர்க்கட்சியினர் வாரிசு அரசியலுக்கு எதிர்ப்பு என்ற பெயரில் தமது வயிற்றெரிச்சலைக் கொட்டியது தவிர. அதுவும் இந்திய அரசியலில் வாரிசு அரசியல் என்பது ஏதோ இதற்கு முன் நிகழாத புதுமை போல. திராவிட முன்னேற்றக் கழகத்தை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. பொதுவாக வாரிசு அரசியலில் எனக்கும் உடன்பாடு இல்லைதான். அது ஒரு முதிர்ச்சியற்ற ஜனநாயகம் என்பதையே பிரதிபலிப்பதாக எண்ணுபவன் நான். அந்த முதிர்ச்சியின்மை அரசியல்வாதிகள் சார்ந்தது என்பதை விட மக்கள் சார்ந்தது என்பதுவே சாலப் பொருத்தம். ஒரு மருத்துவரின் மகனோ மகளோ மருத்துவர் ஆவதில் எனக்கு மாறுபாடு இல்லை. அதே போலவே ஒரு ஆசிரியருக்கும் இன்ன பிற தொழில் முனைவோருக்கும். இவ்வளவு ஏன், அரசியல்வாதிகளின் பிள்ளைகள் தீவிர அரசியலில் இறங்குவதும் இயற்கையான ஒன்றே. ஆனால் ஒரு தலைமை மருத்துவரின் மகன் அல்லது மகள் மருத்துவரான கையோடு எடுத்த எடுப்பில் தலைமை மருத்துவர் ஆக்கப்படுவது எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றோ, அவ்வாறே ஒரு ஆட்சியாளரின் மகன் அல்லது மகள் எத்தனையோ காலம் கொள்கை பிடிப்புடன் அக்கட்சியில் அல்லது ஆட்சியில் பணியாற்றியோரை ஓரங்கட்டி ஆட்சி பீடத்தில் அமர வைக்கப்படுவது ஏற்புடையதன்று. இவை எல்லாம் ஒரு முதிர்ந்த ஜனநாயகத்தில், அரசியல் முதிர்ச்சி பெற்ற மக்கள் சமூகத்தில், கொள்கைப் பிடிப்புடன் முதிர்ச்சி பெற்ற அரசியல்வாதிகளைக் கொண்ட ஒரு கட்சிக்குப் பொருந்தி வருவது. இன்றைய அரசியல் சூழலில் நான் முன்னர் குறிப்பிட்ட பண்பட்ட அரசியல் பொருந்தி வருமா என்பது ஐயப்பாடே ! திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் மாறி மாறி தமிழகத்தின் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டினை அநேகமாக அத்துணைத் துறைகளிலும் முன்னேற்றிக் காட்டியது தமிழ் நிலத்திற்கான பேறு. திராவிட கட்சிகளின் ஆட்சியில் ஊழல் பெருகியதாகவும், மாநிலம் சீர்கேடு அடைந்ததாகவும் மாற்றார் கூக்குரலிடலாம். பூமிதானில் யாங்கணும் துலங்கிய ஊழல் இந்தியத் துணைக்கண்டத்தில் பல்கிப் பெருகியமை உள்ளங்கை நெல்லிக்கனி. இதனால் எல்லாம் ஊழலை எவ்வகையிலும் நியாயப்படுத்த இயலாது என்பது ஒரு புறம். மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு சீரழிந்ததாகச் சொல்வதெல்லாம் முழுப் பொய் அன்றி வேறென்ன ? தந்தை பெரியார், அறிஞர் அண்ணா இவ்விருவரையும் சிறந்த வழிகாட்டிகளாக எண்ணும் நான் பெரிய அளவில் திமுக வின் ஆதரவாளன் என்று சொல்வதற்கில்லை. எக்காலத்திலும் அதிமுகவின் ஆதரவாளனாய் இருக்க எள்ளளவும் வாய்ப்பில்லை. இருப்பினும் கலைஞர் கருணாநிதி, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அம்மையார், தளபதி ஸ்டாலின் ஆகியோருக்கு ஒரு வகையில் நன்றிக் கடன் பட்டுள்ளேன். சுமார் ஐம்பத்தைந்து வருடங்களாகத் தேசியக் கட்சி எதுவும் தமிழ் நிலத்தின் ஆட்சிக் கட்டிலில் அமர்வதைக் கனவிலும் நினைக்க முடியாமல் செய்தார்களே ! தேசியக் கட்சிகள் இங்கு ஆட்சி செய்வதில் அப்படி என்ன பிரச்சினை என்று நீங்கள் கேட்கலாம். அவர்கள் வந்தால் நான் தேசியம் எனும் நீரோட்டத்தில் கரைய வேண்டி இருக்குமே ! தேசிய நீரோட்டத்தில் நீந்துவது ஏற்புடைத்து. கரைவதை எங்ஙனம் ஏற்பது ? நான் ஏன் எனது மொழி, பண்பாட்டு அடையாளங்களை இழந்து இந்தியன் எனும் ஒற்றைத் தன்மையில் நிற்க வேண்டும் ? உலக அரங்கில் பன்மைத்துவம்தானே இந்தியத் திருநாட்டின் தனித்துவமாக இருக்க முடியும் ? 'ஒற்றுமை உன்னதம், ஓர்மை பாசிசம்' (Unity is noble, Uniformity is fascist) என்பதே இந்திய அரசியலமைப்பு நமக்குச் சொல்லித் தருவது; உலகுக்கும் சொல்வது. வேற்றுமையிலேயே ஒற்றுமையை நிலை நாட்டுவதில் திமுகவும் அதிமுகவும் தம் பங்கினை நெடுங்காலம் செவ்வனே நிறைவேற்றின. ஆனால் அம்மையார் ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவின் அனைத்து அணியினரும் தங்கள் சுயநலம் சார்ந்து ஒரு பாசிச அரசிடம் தம்மையும் நம்மையும் அடகு வைப்பதிலேயே குறியாய் இருப்பதாய்த் தெரிகிறது (அம்மையார் சுயநலம் அற்றவர் என்று சொல்ல வரவில்லை; தம்மையும் நம்மையும் அடகு வைக்க அவரது தன்மானம் இடம் கொடுப்பதில்லை). இத்தகைய சூழலில் மதவாத, வகுப்புவாத பாசிசத்திடமிருந்து நம்மைக் காக்க மக்கள் ஆதரவுடன் உள்ள ஒரே கட்சி - நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் - திமுக என்றே தோன்றுகிறது. எனவே திமுக மேலும் உரம் பெற்றுத் திகழ்வது - அச்சங்கிலித் தொடர் தற்போது பாதகமின்றித் தொடர்வது - தமிழினத்தைப் பொறுத்தமட்டில் காலத்தின் கட்டாயமாகிறது. அதனைத் தொடர திமுகவில் வேறு தலைவர்கள் இல்லையா என்ற கேள்விக்கு, மக்கள் ஆதரவு பெற்றோர் வேறு இல்லை என்று ஆணித்தரமாய்ச் சொல்வதைத் தவிர வேறு வழி, ஒளி தெரியவில்லையே ! தோழமைக் கட்சிகளில் திறமையானோர், நேர்மைத் திறமுடையோர் உண்டு. இடதுசாரிகளில் உண்டு; தமிழர் தலைவர் தொல். திருமாவளவன் உண்டு. ஆனால் அவர்களும் பெரும்பான்மை மக்களின் ஆதரவு என்ற ஒற்றைப் புள்ளியில் அடிபட்டுப் போகிறார்களே ! சாதி பேதம் இன்றி அனைத்து சமூகத்தினருக்கான தலைவர் தொல்.திருமா என்றே சொல்லலாம். அவரையெல்லாம் 'வையத் தலைமை கொள்' என்று அழைப்பதற்குத் தமிழ் மக்கள் தம் தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றே தோன்றுகிறது. இந்த நிதர்சனங்களைப் புரிந்து, மற்றுப்பற்று இல்லாத மக்கட் பற்றாளராய் தொல்.திருமாவளவன் மற்றும் இடதுசாரித் தோழர்கள் தமிழ் அரசியலில் வலம் வருவது நமக்கான பேறு. திமுக அரசியலில் இன்று முன்னணியில் உள்ள ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி இம்மூன்று கலைஞர் கருணாநிதி குடும்ப வாரிசுகளின் அரசியல் முகங்களும் பண்பட்டதாகவே தோன்றுகின்றன. உதயநிதி ஸ்டாலினிடம் அரசியல் முதிர்ச்சி இல்லை என்று சமீபத்தில் சங்கிகள் ஓலமிட்டது பெரும் நகைப்பானது. அவர் சநாதனம் பற்றிப் பேசியது ஒரு முதிர்ந்த திராவிட அரசியலே ? வெள்ள நிவாரணம் தொடர்பாகப் பேசிய ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், "மத்திய அரசு என்ன ஏடிஎம் மெஷினா, கேட்டவுடன் பணம் கொடுக்க ?" என்று தரம் தாழ்ந்து கூறியதற்குப் பதிலடியாக உதயநிதி, "அவங்க அப்பன் வீட்டு காசையா கேட்கிறோம் ? தமிழ் மக்கள் கொடுத்த வரிப்பணத்தைத்தானே கேட்கிறோம் ?" என்று கேட்டது கூட ஒரு அனுபவம் பெற்ற அரசியல்வாதியின் பதிலாகவே வெளிப்படுகிறது. எனவே சூழல்களைக் கருத்தில் கொண்டு மாற்றார்தம் தாக்குதல்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள, எத்தனை குறை கொண்டிருந்தாலும் இன்றைக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் திராவிட முன்னேற்றக் கழகமே ! நம் நம்பிக்கை வானில் உள்ள ஒளிக்கீற்று உதயநிதி ஸ்டாலின் மட்டுமே ! போகிற வரை போகட்டும்; ஆகிற வரை ஆகட்டும். இதனை எழுதி முடித்து மீண்டும் ஒருமுறை வாசிக்கையில் எனக்கே நான் ஒரு திமுக காரனாகத் தோன்றுகிறேன். அதற்கு நான் என்ன செய்து தொலைக்க ?6 points
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
பழகுவதற்கு இனிமையனவர்கள் அது வேறு ஐலன்ட். நான் கடந்த மாதம் முழுவதும் பாணந்துறையில் 100% சிங்களவர்கள் வசிக்கும் ஒரு கிரமத்தில்தான் ஒரு ஆடிட் கணக்கியல் பகுப்பாய்வு வேலைக்காக சென்றிருந்தேன். மிகவும் அழகிய ரம்மியமான சூழ்நிலையில் இந்த தொழில்சாலை அமைந்திருந்தது. பாண், பருப்பு எல்லாம் வைத்த்து சாப்பிட தருவர்கள், போதுமா மாத்தியா?, போதுமா மாத்தியா? என்று கேட்டு கேட்டு தட்டில் போடுவார்கள். ஆனால் இலங்கையில் அதிகாரப்பகிர்வை பற்றி கொஞ்சம் கதைத்து பாருங்கள் இலங்கை சிங்கள பொளத்த நாடு, தமிழர்களுக்கு எவ்வாறு அதிகார பகிர்வு கொடுப்பது என்று கூச்சல் போடுவார்கள். சும்மா சுற்றுலா சென்று வந்து ஒரிருவரின் நல்ல பண்புக்களை அவதனிப்பதனால் அவர்களிடம் இனவாதம் இல்லை என கூற முடியாது. நான் இவர்கள் மத்தியில் பல தசாப்தங்களாக வாழ்கின்றவன் எனக்கு நன்கு தெரியும் இவர்களது மனப்பாங்கு. "எல்லா இனத்திலும் இனவாதிகள் இருக்கிறார்கள்" ஆம் இது உண்மை.4 points
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
நான் இந்தத் தொடரை எழுதுவதன் காரணத்தைத் தெளிவாகக் கூறிய பின்னரும் இதனை நிறுத்துவதை ஒரே நோக்கமாகக் கொண்டு சிலர் எனது பதிவுகளைச் சிறுமைப்படுத்தும் விதமாக தொடர்ச்சியாகப் பிந்தொடர்ந்து எழுதிவருகிறார்கள். இங்கே நான் பதியும் விடயங்கள் என்னால் உருவாக்கப்பட்டவை அல்ல, மாறாக சரித்திரத்தில் பதியப்பட்டவை, எம் கண்முன்னாலேயே நடந்தவை. ஆகவே நீங்கள் தடுக்க நினைப்பது ரஞ்சித் எனும் தனி மனிதனின் சொந்தக் கருத்துக்களையல்ல, மாறாக எமது இனத்தின் மீது குறிப்பிட்ட ஒரு இனத்தால், அதனை பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு கட்சியால், அக்கட்சியில் முக்கிய உறுப்பினராக விளங்கும் ஒருவரால் கடந்த காலங்களில் புரியப்பட்ட விடயங்களைத்தான். நான் எழுதுபவை உண்மையானவை என்பது உங்களுக்கு நன்றாகவே தெரிகிறது. அதனால்த்தான் அப்பதிவுகளைப் பற்றி கேள்வி எழுப்பாமல் என்னைப்பற்றியும், எனது நோக்கங்கள் எப்படிப்பட்டவை என்பது பற்றியும் தனிப்பட்ட ரீதியில் மிகவும் கீழ்த்தரமாக உங்களால் எழுதவேண்டி ஏற்படுகிறது. ஏதாவதொரு சிங்களத் தலைவர் அவ்வப்போது புதிதாக ஆட்சிக்கு வரும்போது அவர் பேசும் விடயங்களை அப்படியே வேத வாக்கென்று நம்பி, அவரது கட்சியும், அவரும் கடந்த காலங்களில் செய்த எம்மீதான செயற்பாடுகளை, எம்மினத்தின் இருப்பு மீதான திருப்பமுடியாத சேதங்களை இலகுவாக மறந்து அவர் பின்னால் ஓடுவதென்பது ஈழத்தமிழருக்குப் புதியது அல்ல. 1994 இல் சந்திரிக்கா, 2002 இல் ரணில், 2010 இல் சரத் பொன்சேக்கா, 2015 இல் மைத்திரிபால சிறிசேன, 2019 இல் சஜித் பிரேமதாச என்று ஒவ்வொரு தலைவரும் வரும்போது நாம் அவர்களைத் தூக்கிக் கொண்டாடினோம். ஆனால் தேர்தல்கள் முடிந்தபின்னர் அவர்கள் ஒவ்வொருவரும் எவ்வாறான முகங்களை எமக்குக் காட்டினார்கள் என்பது எம் எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். அந்த வரிசையில்த்தான் அநுரவும் இப்போது வருகிறார். அவர் புதியவர் (எம்மில்ப் பலரைப் பொறுத்தவரை), அவர் பேசும் பேச்சு வசீகரமாக இருக்கிறது, மக்களுடன் மக்களாக மிகவும் எளிமையாக அவர் வலம் வருகிறார், தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து மிகுந்த அக்கறையுடன் அவர் பேசவும், செயற்படவும் போகிறார் என்று நாம் நம்புகிறோம். கடந்த 50 வருடகால தமிழ் அரசியலை அவதானிப்பவர்களுக்கு நடந்தவை பற்றிய பூரண அறிவு இருக்கிறது. பலருக்கு அவை இருந்தும் அதுபற்றிப் பேச விருப்பமிருப்பதில்லை. சிலருக்கு அவை குறித்துப் பேசுவதே வெறுப்பாக இருக்கிறது. அவ்வாறு பேசுவதால் தாம் கண்ணை மூடிக்கொண்டு ஆதரவு தரத் துடிக்கும் அநுரவுக்கான தளம் பலவீனமாகிப் போய்விடும் என்கிற நியாயமான கவலை அவர்களுக்கு. எந்தவினமும் தனது சரித்திரத்தை, குறிப்பாக தன்மீது நடத்தப்பட்ட அக்கிரமங்களை பதிவுசெய்து வைக்கத் தவறுவதில்லை, ஈழத் தமிழினத்தைத் தவிர. எம்மீது நடத்தப்பட்ட ஆக்கிரமங்களை நாம் எங்கும் பதிந்துவிடக் கூடாது என்று நினைப்பவர்கள் எம்மிடையேதான் இருக்கிறார்கள். 2009 இற்குப் பின்னரான தமிழ் மக்களின் அரசியல் வேண்டுமென்றே தேசிய நீக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய பங்காற்றியவர்கள் சம்பந்தன், சுமந்திரன், மாவை போன்றவர்கள். ஆரம்பத்தில் புலிநீக்கம் என்று ஆரம்பித்து, இப்போது தமிழ்த் தேசிய நீக்கம் என்று உருமாறி, இனிவரும் காலத்தில் சிங்களப் பெருந்தேசியத்திற்குள் உள்வாங்கப்படும் விருப்பினை பலரின் நோக்கம் கொண்டிருக்கிறது. இக்காலப்பகுதியில் தாயகத்தில் வளர்ந்துவரும் தலைமுறைக்கு எமது போராட்டத்தின் அவசியம் குறித்தோ, எம்மீது நடத்தப்பட்ட இனவழிப்புக் குறித்தோ, இந்த இனவழிப்பில் பங்குகொண்ட பல்வேறுபட்ட சிங்களத் தேசியவாதக் கட்சிகள் குறித்தோ எந்த அறிவும் ஊடப்படவில்லை. இது வேண்டுமென்றே தமிழரை 2009 இல் இருந்து பிரதிநிதித்துவம் செய்த அரசியல்வாதிகளால் செய்யப்பட்டவை. அதனாலேயே அநுரவின் வசீகரமான பேச்சினைக் கேட்கும்போது தமிழ் இளைஞர்கள் அதன் பால் கவரப்பட்டு பின்னால் ஓடுகிறார்கள், இதற்கு தமிழ் யுடியூப் வியாபாரிகளும் விதிவிலக்கல்ல. இன்னும் கூறப்போனால் தமிழ் இளைஞர்கள் அநுர எனும் சிங்கள அரசியல்வாதி மீது வைத்திருக்கும் கண்மூடித்தனாமான விசுவாசத்திற்கு இவர்களும் பெரும் காரணமாகி இருக்கிறார்கள். ஆகவேதான் அநுர எனும் மனிதர் தனிப்பட்ட ரீதியிலும், மக்கள் விடுதலை முன்னணி எனும் கட்சியின் உறுப்பினராக இதுவரை செய்துவந்த விடயங்களை இங்கே பதிகிறேன். தேவையானவர்கள் இவற்றைப் படித்துப் பார்ப்பதன் ஊடாக சரித்திரத்தை அறிந்து சரியானதைச் செய்யலாம், அல்லது கடந்து போகலாம். தமிழ்த் தேசியத்தை மட்டுமே முன்னிறுத்துவோம் என்று ஆரம்பித்த யாழ் இணையம் இன்று தேசிய நீக்கம் செய்யும் நபர்களுக்கு தாராளமாகக் களம் அமைத்துக் கொடுக்கிறது. இதில் புலிநீக்கம் செய்யவேண்டும் என்று விரும்புபவர்களும் தாராளமாகக் கடை விரித்து வருகிறார்கள். ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றத்திற்கும், விவாதத்திற்கும் இந்த எதிர்மறையான கருத்துக்கள் பகிரப்படுவது அவசியம் என்று காரணம் சொல்லப்படுகிறது. நல்லது. நான் எழுதுவதை எப்படியாவது தடுத்து நிறுத்திவிடவேண்டும், இதனைப் படிப்போரின் எண்ணங்களைச் சிதறடிக்க வேண்டும் என்று எண்ணி தொடர்ச்சியாக எழுதி வருவோருக்கு சிறிய வேண்டுகோள். நீங்கள் உண்மையாகவே எனது பதிவு அநுர எனும் மகத்தான மனிதரின் வெற்றி வாய்ப்பைப் பாதித்துவிடும் என்று நம்பினால், புதிதாக ஒரு திரியைத் திறந்து (யாழ்க்களத்தில் புதிதாக அனுமதிக்கப்பட்டிருக்கும் தேசியத்திற்கெதிரான, தேசிய நீக்கத்திற்கு ஆதரவான கருத்துக்களுக்கும் இடமளித்தல் எனும் கோட்பாட்டிற்கு அமைய), அத்திரியில் அநுர எனும் மனிதருள் மாணிக்கத்தின், அவர் பிரதிநிதித்துவம் செய்யும் மக்கள் விடுதலை முன்னணி எனும் மாபெரும் இயக்கத்தின் செயற்பாடுகளை, அவர்கள் தமிழ் மக்களுக்காகச் செய்த தியாகங்களை பட்டியலிட்டு தனியே ஒரு நாட்குறிப்பாக எழுதினால் நான் எழுதுபவை குறித்து நீங்கள் பயப்படத் தேவையில்லை என்று நினைக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் அநுரவின் வெற்றிக்காக யாழ் களத்தின் அனுமதியுடன் இங்கேயே ஒரு பிரச்சாரத் திரியைத் திறக்கலாம். எனது எழுத்துக்களால் ஏற்படப்போகும் பாதிப்புக்கள் என்று நீங்கள் கருதுபவற்றை உங்களின் பிரச்சாரத் திரியினால் நீங்கள் சரிசெய்து கொள்ளலாம். அதுதான் படித்த மக்களுக்கு அழகு. அதைவிடுத்து அற்பத்தனமாக என்னைத் தொடர்ந்துவந்து தனிமனித தாக்குதல் நடத்தத் தேவையில்லை. உங்களின் அருவருக்கத்தக்க எழுத்துக்களால் நான் இத்தொடரை நிறுத்தப்போவதில்லை. நிச்சயமாக தொடர்ந்து எழுதுவேன். உங்களின் பொன்னான நேரத்தை இங்கே வீணடிக்காமல், அநுரவுக்கென்று தனியே திரி திறந்து அங்கே உங்களின் பிரச்சாரங்களை முன்வைய்யுங்கள். இன்றைய இளைய தலைமுறைக்கு அது பெரும் உதவியாக இருக்கும். நன்றி.4 points
-
ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவுடன் பங்கேற்கமாட்டோம்; பிரிட்டன், பிரான்ஸ் அறிவிப்பு
எல்லா முன்னேற்றங்களாலும் அழிவுகள் இருந்தன, இருக்கப் போகின்றனதானே, நொச்சி. பலநாடுகள் தங்கள் பலங்களால், நுட்ப வளர்ச்சிகளால் அழிவுகளை உலகெங்கும் நடத்திக் கொண்டும் இருக்கிறதுதானே. போன வருடம் அக்டோபர் 7ம் திகதி ஆரம்பித்த சண்டையே இன்றுவரை தொடர்கின்றது. இப்போது வேறு சில களமுனைகளுக்கும் இது பரவியுள்ளது. அது அமெரிக்காவால் ஆரம்பிக்கப்பட்ட சண்டை இல்லை. ஹமாஸ் புதிய ஆபிரகாம் ஒப்பந்தத்திற்கு எதிராக எடுத்த ஒரு அதிரடி நடவடிக்கை அது. அன்றும் பலர் இஸ்ரேல் முடிந்தது என்றனர், இஸ்ரேல் வாங்கிக் கட்டுகின்றது என்றனர், ஹமாஸின் பலம் பற்றியும் மிகைப்படுத்தப்பட்ட தகவல்களை பரப்பினர். ஆனால் அந்த ஒரு நிகழ்வே அமெரிக்காவிற்கு போதுமானதாக இருந்தது. எல்லா நாடுகளுமே தங்கள் சுய ஆதாயத்தைத் தான் உலகெங்கும் தேடுகின்றனர். பலம் இருக்கும் நாடுகள் பாய்ந்து பாய்ந்து தேடுகின்றன. இந்தியா போன்ற நாடுகள் பதுங்கி பதுங்கித் தேடுகின்றன. உள்ளே வந்த ஊர்ப்பிடாரி வெளியே இலேசில் போகமாட்டார். அவரை உள்ளே வர விடாமல் பார்ப்பதே உத்தமம். ஈரான் எதற்காக ஹிஸ்புல்லாவையும், ஹமாஸையும் மற்றும் மேற்குக் கரையில் இன்னும் பல சின்ன குழுக்களையும் கட்டி வளர்க்கின்றது........... உலகில் சமாதானம் வர வேண்டும் என்பதற்காகவா....... இல்லை தானே, தங்களை அந்தப் பிரதேசத்தில் ஒரு வல்லரசு என்று காட்டுவதற்காகவே இந்த துணைப்படைகள். ஈரானும் அயலவர்களுக்கு அடிக்கும், அவர்களைக் கொல்லும், இலங்கை போன்ற நாடுகள் தங்கள் சொந்த மக்களையே கொன்றொழிக்க உதவும். இலங்கை அரசுக்கு இஸ்ரேல் மட்டுமா ஆலோசனைகளும், ஆயுதங்களும், சேவைகளும் வழங்கியது....... அமெரிக்கா வழங்கியது, இந்தியா வழங்கியது, ரஷ்யா வழங்கியது, உக்ரேன் வழங்கியது, பாகிஸ்தான் வழங்கியது.......... இது இன்றைய உலகில் ஒரு மிக இலாபகரமான விற்பனை. இதில் தர்மம், நெறி எல்லாம் எவரும் பார்ப்பது கிடையாது. மேலே சொன்ன எதுவுமே எந்த ஒரு நாட்டையும், அதன் நடவடிக்கைகளையும் நியாயப்படுத்துவதற்கு அல்ல. பலமானவர்கள் செய்வது ஒரு சாராருக்கு மிக அநியாயமாகவே முடிந்து கொண்டிருக்கின்றது என்ற நிஜத்தை தான் நான் சொல்ல முயன்றிருக்கின்றேன்.3 points
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
நாங்கள் ‘தமிழ்..தமிழ்’ என்று உயிரைக் கொடுக்கிறோம். அதுபோல்தான் மற்ற மொழி பேசுபவர்களும் இருப்பார்கள். சிங்களவர்கள், “நடந்தது எல்லாம் துன்பியல் சம்பவங்கள்’ என்றால் நாங்கள் ஒத்துக் கொள்வோமா? இன்று மூச்சு விட அவகாசம் கிடைத்திருக்கிறது. ஜனாதிபதியையே விமர்சிக்கும் அளவுக்கு நிலமை வந்திருக்கிறது. யேர்மனியில் கிழக்கு மாநிலங்களுக்குப் போக இப்பொழுது சற்று பயமாக இருக்கிறது. அந்தளவிற்கு யேர்மனியில் இனவெறி வளர்ந்து கொண்டிருக்கிறது. நாட்டில் அப்படியானதொரு நிலமை இன்றில்லை. மாவீரர் தினத்துக்கு நாட்டுக்குப் போய் படங்கள் எடுத்து வந்து யாழில் பதியக் கூடியளவுக்கு மாற்றம் வந்திருக்கிறது. கொஞ்சம் யதார்த்தத்தைக் கதைத்தால், தேசியவாதிகளுக்குக் கோபம் வருகிறது. நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வட,கிழக்கில் மக்கள் அளித்த தீர்ப்பு அங்குள்ளவர்களின் மனநிலையை பிரதிபலிக்கிறது. அவர்களுக்கு பக்க பலமாக ஏதாவது செய்ய முடிந்தால் செய்யலாம். தேசியம் மட்டும் பேசிக் கொண்டிருந்தால் ஒரு பலனும் கிடைக்கப் போவதில்லை.3 points
-
பல்கலைக்கழக மாணவியை கர்ப்பமாகி தலைமறைவான கனடா வாழ் தமிழ் குடும்பஸ்தர்!
இப்படியான செய்திகள் வெளியே கொண்டுவரப்படாது என்பவர்களின் மனநிலையை என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது.😁3 points
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
இது ஒரளவு உண்மை. சிங்களவர்களுக்கு racism vs patriotisms வித்தியாசம் தெரியாது. சிறுவயதில் இருந்தே இவர்களுக்கு பொளத்த சிங்கள மேலான்மைதனம் விதைக்கப்டுகின்றது. பாடசாலையில் கல்வி கற்கும் நாட்களிலேயே இது இவர்களுக்கு போதிக்கப்ப்டுகின்றது. சிங்களவர்களே இந்த நாட்டின் குடிமக்கள், இவர்களே பூமி புத்திரர். புத்தர் இந்த நாட்டை சிங்கள பொளத்தர்களுக்கே கையளித்துள்ளார். இவர்களே இந்த நாட்டை அரசாள வேண்டும் என்று பாடசாலை நாட்களெலேயே போதிக்கப்படும். என் பாடசாலை நண்பன் சிங்கள பெண்ணை திருமணம் செய்து கண்டியில் வாழ்கின்றான். இவன் இப்பொழுது சிங்களவன் போல பெயரை மாற்றியுள்ளான். ஒரு மகன் ஆமதுரு, எல்லோரும் வளர்ந்த பிள்ளைகள். இப்பொழுது பன்சலையில் செயலாலராக இருக்கின்றான். ஆனந்த கல்லூரி, நாலந்த கல்லூரி, பெண்கள் படாசாலைகளான பொளத்த மகளிர் கல்லூரி, தேவி பாலிக, விசாக போன்ற எல்லாவற்றிலும் இப்படித்தான். படிக்கும் காலத்திலேயே இந்த இனவாதம் விதைக்கப்பாடும். அனனகரிக தர்மபால காலத்திலிருந்தே இது இப்படித்தான். மனிதனுக்கு இயல்பாக இருக்கும் "தான் எலலாவற்றிலும் சிறந்தவன்" என்ற இயல்புதான் பின்பு இனவாதமாக தோற்றமெடுக்கின்றது. முஸ்லீமகளள் மதவாதிகள் இவர்கள் சாதரணா கிறிக்கட் விளையாட்டிலும் கூட பாக்கிஸ்தானையே ஆதரிப்பார்கள்3 points
-
பல்கலைக்கழக மாணவியை கர்ப்பமாகி தலைமறைவான கனடா வாழ் தமிழ் குடும்பஸ்தர்!
இது ஒரு சமூகச் சீரழிவை வெளிக்கொண்டுவரும் மஞ்சள் பத்திரிகைச் செய்தி. புலம்பெயர் நாடுகளில் இருந்து தாயகத்திற்கு விடுமுறையில் போகும் ஒரு சிலர் தமது பகட்டாலும், பணத்தை வீசிச் செலவழித்தும் இவ்வாறு நடப்பது தொடர் செய்திகளாக வருகின்றது. அடுத்த சம்மர் சீஸனிலும் இன்னும் அதிகரிக்கும்!3 points
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
அரசியலில் பழைய பகைமைகளை மறந்து, மாற்றங்களை ஏற்றுக்கொள்வது ஒரு முக்கியமான நடவடிக்கை. இதன் மூலம் பலவகையான பலன்களை பெறலாம். ஒருவரின் பழைய எதிர்ப்புகளைப் பற்றிக் குறுகிய பார்வை கொண்டிருக்கும் போது, சமூக வளர்ச்சியும், முன்னேற்றமும் பாதிக்கப்படும். அதே நேரத்தில், பழைய பகைமைகளைப் புறக்கணித்து, மாற்றங்களை வரவேற்பது, சமூகத்தில் சமாதானத்தையும் ஒற்றுமையையும் உருவாக்குவதொடு பகைமை, பரஸ்பர சந்தேகம் காரணமாக காரணமாக ஏற்பட்ட பல பிரச்சனகளுக்கு தீர்வு காண்பதற்கான சூழ்நிலையை உருவாக்கும். இனக்குரோதம், சமூகத்தின் பல்வேறு குழுக்களிடையே விரோதத்தை உருவாக்கி, அவற்றின் ஒற்றுமையை நசுக்கக் கூடியது. இதனால், மாற்றங்களை ஏற்றுக்கொள்வது முக்கியமாக மாறுகிறது, ஏனெனில் மாற்றங்களே நமது மொத்த சமூகத்தில் புதிய வாய்ப்புகளை உருவாக்குகின்றன. அரசியல் தலைவர்கள் பழைய பகைமைகளை மறந்து, இனத்துவேஷத்துக்கு தீர்வுகளை கண்டுபிடிக்க வேண்டும், இது சமுதாயத்தில் பொது நலனையும், நீண்டகால முன்னேற்றத்தையும் உறுதி செய்யும். இதுவே நாகரீகம் அடைந்த மனிதர்கள் செய்வது. இனக்குரோதத்தை வளர்ககும் அற்ப மனிதர்கள் தொடர்பாக மக்கள் அவதானமாக இருத்தல் வேண்டும்.3 points
-
ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவுடன் பங்கேற்கமாட்டோம்; பிரிட்டன், பிரான்ஸ் அறிவிப்பு
👍............. ஈரான் விழுந்த அந்த பழைய ஹெலிகாப்டருக்கு அமெரிக்காவின் பொருளாதாரத் தடையே காரணம் என்றும் சொல்லியிருந்தார்கள். இவ்வளவு தானா இவர்கள் என்று நினைக்க வைத்தனர் அன்று. பின்னர் இரவில் இருட்டில் தேட முடியாது என்றனர். உலகில் ட்ரோன் தொழில்நுட்பத்தில் மிகச் சிறந்தவர்கள் ஈரானியர்கள் என்றும் சொல்லியிருந்தனர், ஆனால் விழுந்ததை கண்டுபிடித்தது துருக்கியின் ட்ரோன்களே, ஈரானின் ட்ரோன்கள் அல்ல. எவரும் அயன் டோமை சில தடவைகள் தர்க்கமுடியும். ஹமாஸ் கூட தற்போதைய சண்டையின் முதலாவது நாளில் - அக்டோபர் 07, 2023 அன்று - அயன் டோமை மீறி இஸ்ரேலிற்குள் ஏவுகணைகளை விழுத்தியது. அயன் டோமியின் சக்தியை மீறி அதிக ஏவுகணைகளை மிகக் குறுகிய நேரத்திற்குள் செலுத்தினால், அயன் டோமால் வரும் எல்லா ஏவுகணைகளையும் தடுக்கமுடியாது. ஆனால் அவ்வாறு ஏவுகணைகளை தொடராகச் செலுத்துவதற்கு எவரினதும், எந்த நாட்டினதும் பொருளாதாரமும் வளங்களும் இடம் கொடுக்காது. அத்துடன் அயன் டோமின் வலுவையும் இஸ்ரேலும் அதிகரிக்கும், எதிர் ஏவுகணைகளின் எண்ணிக்கையக் கூட்டுவதன் மூலம். அமெரிக்கா தான் அதிக எதிர் ஏவுகணைகளை கொடுக்க வேண்டும், அவர்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இப்படியே இரண்டு பக்கமும் 'போதும்..... கணக்கு சரி.....' என்று ஒதுங்குவது தான் உலகிற்கும் அவர்களுக்கும் நல்லது.2 points
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
அநுரவின் வெளிவிவகார அமைச்சரான விஜித்த ஹேரத்தின் பின்னணி பல ஈழத்தமிழர்களின் இன்றைய கதாநாயகனாக பவணி வரும் இலங்கையின் ஜனாதிபதியான அநுர குமார திசாநாயக்கவின் வலது கரமும் நெருங்கிய சகாவுமான விஜித்த ஹேரத் இலங்கையின் வெளிவிவகார அமைச்சராக பதவியேற்றிருக்கிறார். தமிழர் மீதான இனக்கொலை அரச மயப்படுத்தப்பட்டதிலிருந்து இலங்கையின் வெளிவிவகார அமைச்சர்களாகப் பணியாற்றிய எல்லோருக்கும் கொடுக்கப்பட்ட வேலை ஒன்றுதான், அதுதான் தமிழ் மக்களின் போராட்டத்தைப் பயங்கரவாதம் என்று சர்வதேசத்தில் சித்தரித்து, தமிழ் மக்கள் மீதான படுகொலைகளை உலகெங்கும் சென்று நியாயப்படுத்துவது. ஹமீது, ரஞ்சன் விஜேரத்ன, ஹரல்ட் ஹேரத், டிரோன் பெர்ணான்டோ, லக்ஷ்மன் கதிர்காமர், அநுர பண்டாரநாயக்க, மங்கள சமரவீர, ரோகித போகொல்லாகம, ஜி எல் பீரிஸ், ரவி கருணநாயக்க, திலக் மாறப்பன என்று 1983 ஆம் ஆண்டிலிருந்து 2024 வரை இருந்த எல்லோருமே செய்த அதே பணியினை ஆற்ற தற்போதைய அமைச்சர் விஜித்த ஹேரத்தும் வந்திருக்கிறார். அவர் வெளிவிவகார அமைச்சராக ஆற்றிய முதலாவது பணி ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை அவையில் தமிழ் மக்கள் மீதான படுகொலைகள் ஈடுபட்ட இராணுவப் போர்க்குற்றவாளிகளுக்கெதிரான சர்வதேச விசாரணைப்பொறிமுறையினை எதிர்த்து வாக்களித்து வருவதற்காக சவுதி அரேபியாவிற்கு வாழ்த்துக் கூறியமை என்பதும் குறிப்பிடத் தக்கது. தற்போதைய ஜனாதிபதியை, அவரது அமைச்சரவையினை தமிழர்களின் காவல் தெய்வங்கள் என்று வழிபட ஆரம்பித்திருக்கும் தமிழ் அபிமானிகளுக்கு அநுரவின் சகாவான விஜித்த ஹேரத்தின் பின்னணி பற்றி விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம். விஜித்த ஹேரத், ஒரு தீவிர சிங்கள தேசியவாதியும் ஜனதா விமுக்தி பெரமுன எனும் தீவிரவாத சிங்கள இடதுசாரிக் கட்சியின் மிக மூத்த உறுப்பினருமாவார். இவர் அநுர குமாரவினால் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர், சமய விவகாரங்களுக்கான அமைச்சர், தொழிநுட்ப ஊடகத்துறை, சுற்றுப்புறச் சூழல், நீர் வழங்கல், தோட்டத்துறை, சமூகவியல், வீடமைப்பு மற்றும் போக்குவரத்து போன்ற அமைச்சுக்களுக்குப் பொறுப்பானவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். நாம் இவரது கடந்தகால செயற்பாடுகளைப் பார்க்கலாம். மக்கள் விடுதலை முன்னணிக்கு அவர் காட்டிவரும் அசைக்கமுடியாத விசுவாசமே அவரை அநுரகுமாரவின் நெருங்கிய சகாவெனும் நிலைமைக்கு உயர்த்தியது. விஜித்த ஹேரத் மக்கள் விடுதலை முன்னணியின் நீண்டகால உறுப்பினர். மாணவராக இருந்த காலத்தில் 1986 ஆம் ஆண்டு அவர் அமைப்பில் இணைந்தார். இவர் அமைப்பில் இணைந்த சில மாதங்களின் பின்னர் மக்கள் விடுதலை முன்னணி இலங்கை அரசிற்கெதிரான இரத்தக்களறி மிகுந்த ஆயுதக் கிளர்ச்சியை ஆரம்பித்தது. 1999 ஆம் ஆண்டு மாகாணசபைத் தேர்தல்களிலேயே அவர் முதன்முதலாக தேர்தலில் இறங்கினார். அத்தேர்தலில் கம்பகா மாவட்டத்தில் போட்டியிட்டு வெறும் 605 வாக்குகளையே அவர் பெற்றார். 2000 ஆண்டு பாராளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு 8,000 வாக்குகளுடன் வெற்றிபெற்ற அவர் அதன் பின்னர் அத்தொகுதியைத் தொடர்ச்சியாகத் தக்கவைத்து வருகிறார். பாராளுமன்ற கோப்புக்களைப் பார்க்கின்றபோது விஜித ஹேரத் எப்போதுமே பொது நிதித்துறை, மீன்வளத்துறை, பொதுப்பணித்துறை, மற்றும் விவசாயம் சார்ந்த பாராளுமன்றக் கமிஷன்களில் அங்கம் வகித்திருப்பது தெரிகிறது. பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பல சட்டங்களின்போது ஹேரத் சார்பாக வாக்களித்த போதிலும், அவரால் இதுவரை எச்சட்டமும் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. இலங்கை சுதந்திரக் கட்சியுடன் 2004 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணி இணைந்து ஆட்சியமைத்தபொழுது விஜித்த ஹேரத் அந்த அரசாங்கத்தின் கலாசார அமைச்சராகவும், தேசிய பாரம்பரிய அமைச்சராகவும் பதவி வகித்திருக்கிறார். பாராளுமன்றத்தில் அதிகம் பிரபலமாகாத ஒரு உறுப்பினராக ஹேரத் இருந்த போதிலும் அநுரவின் மிக நெருங்கிய சகாக்களில் ஒருவராக அவர் வலம் வந்தார். விஜித்த ஹேரத்தின் போரிற்கான ஆதரவும், நீதிவழங்கலுக்கு எதிரான அவரது நிலைப்பாடும் 2008 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியினால் கொழும்பு ஐ நா அலுவலகத்திற்கு முன்னால் ஒழுங்குசெய்யப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொள்ளும் விஜித ஹேரத் அரச அடக்குமுறைக்கெதிரான தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டக் காலம் முழுவதும் மக்கள் விடுதலை மார்க்ஸிஸச் சிந்தனைகளை முன்வைத்து தமிழ் மக்கள் மீதான இராணுவ அடக்குமுறையினை நியாயப்படுத்தியே வந்தது. ஏனைய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்களைப் போலவே விஜித்த ஹேரத்தும் தமிழர்களுடனான சமாதானப் பேச்சுக்களுக்கு மிகக் கடும் எதிர்ப்பினைத் தொடர்ச்சியாக காட்டி வந்திருந்தார். 2004 பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சியாக ஆட்சியில் அமர்ந்த மக்கள் விடுதலை முன்னணி, புலிகளுடனான பேச்சுக்களுக்கு தொடர்ச்சியான எதிர்ப்பினைக் காட்டி வந்தது. மேலும், 2004 சுனாமிப் பேரிடரின் பின்னரான இணைந்த சுனாமி நிவாரணக் கட்டமைப்பிற்குக் கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்து அதனைத் தோற்கடித்ததுடன், பேச்சுக்களை இரத்துச் செய்தால் மகிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கவும் தயார் என்று பகிரங்கமாக அறிவித்தது. 2006 ஆம் ஆண்டி ஆரம்பத்தில் மக்கள் விடுதலை முன்னணி வெளிப்படையாகவே இராணுவத் தீர்விற்கான தனது ஆணையினை அப்போதிருந்த மகிந்த அரசிற்கு வழங்கியதுடன் முள்ளிவாய்க்கால் இனக்கொலைக்கும் உறுதுணை வழங்கியது. 2007 ஆம் ஆண்டு கொழும்பில் அமைந்திருக்கும் இங்கிலாந்து தூதரகத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் விடுதலை முன்னணியினர், கூடவே விஜித்த ஹேரத் இறுதி யுத்த காலத்தின்போது இலங்கை இராணுவத்தினர் பரந்தளவில் மனிதவுரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று மேற்குலக நாட்டு இராஜதந்திரிகள் அறிவித்து வந்த நிலையில் விஜித்த ஹேரத் தனது அமைப்புடன் இணைந்து இங்கிலாந்து தூதரகத்திற்கு முன்பாகவும் ஐ நா அமைப்பின் அலுவலகம் முன்பாகவும் அன்றைய மனிதவுரிமைக் கவுன்சில் ஆணையாளர் லுயிஸ் ஆர்பருக்கெதிராகவும் ஆர்ப்பாட்டம் செய்திருந்தார். 2009 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் கூட்டுப் படுகொலைகளுக்குப் பின்னர் சர்வதேசத்தில் உருவாகி வந்த சுதந்திரமான போர்க்குற்ற விசாரணைகளுக்கான கோரல்களை விஜித்த ஹேரத் தொடர்ந்தும் எதிர்த்து வந்தார். "போரில் நடந்ததாகக் கூறப்படும் மனிதவுரிமை மீறல்களை விசாரிப்பது அவசியம் என்றால், அது உள்நாட்டுப் பொறிமுறை ஒன்றின் ஊடாக மட்டுமே விசாரிக்கப்பட முடியும். இலங்கையினை விமர்சிக்கின்ற மேற்குநாடுகள் இன் கோரிக்கைக்கு அமைவாக விசாரணைகளை நாம் நடத்தப் போவதில்லை" என்று 2015 ஆம் ஆண்டு விஜித்த ஹேரத் கூறியிருந்தார். இதுபற்றி மேலும் வாசிப்பதற்கு கீழுள்ள இணைப்பை அழுத்துங்கள். https://www.tamilguardian.com/content/sri-lankan-ministers-reject-un-investigation-mass-atrocities புதிய வெளிநாட்டு அமைச்சர் விஜித்த ஹேரத்தின் முதலாவது பணி ஐ நா மனிதவுரிமை சபையில் கொண்டுவரப்பட்ட போர்க்குற்ற விசாரணைக்கான சர்வதேசப் பொறிமுறையினை எதிர்த்து வாக்களித்த சவுதி அரேபியாவிற்கு நன்றி கூறியதே. கடந்த வாரம் வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்ற சில மணித்துளிகளுக்குப் பின்னர் சவுதி அரேபிய நாள் நிகழ்வில் உரையாற்றிய ஹேரத் ஐ நா மனிதவுரிமைச் சபையில் இலங்கை ராணுவப் போர்க்குற்றவாளிகளுக்கான சர்வதேச விசாரணைப் பொறிமுறையினை எதிர்த்து வாக்களித்த சவுதி அரேபியாவிற்கு அவர் நன்றி தெரிவித்திருந்தார். மக்கள் விடுதலை முன்னணியினருடனான ஹேரத்தின் ஆரம்ப காலம் 1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தினூடாக தமிழர்களின் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களைப் பகிர்ந்து கொடுக்கலாம் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால் தீவிர சிங்களத் தேசியவாதியான விஜித்த ஹேரத் தமிழ் மக்களுடன் அதிகாரப் பகிர்வென்பதே கிடையாதென்று தொடர்ந்து வாதாடி வந்தார். விஜித்த ஹேரத் போன்ற மக்கள் விடுதலை முன்னணியினரின் தலைவர்களிடம் மேலோங்கி நின்ற சிந்தனையான தமிழர்களுடன் அதிகாரத்தைப் பகிரக் கூடாதெனும் நிலைப்பாட்டினால் அவ்வமைப்பு தெற்கின் கிராமப்புறச் சிங்கள இளைஞர்களிடையே பிரபல்யம் அடையத் தொடங்கியது. மக்கள் விடுதலை முன்னணியின் ஸ்த்தாபகரான ரோகண விஜேவீர "தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையென்பது அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளின் தூண்டுதலின்பேரில் உருவாக்கப்பட்டது" என்று பிரச்சாரம் செய்யத் தொடங்கினார். ரோகண விஜேவீரவின் இந்த பிரச்சாரமே தமிழ் மக்களுக்கெதிரான இவ்வமைப்பின் நீண்டநாள் காழ்ப்புணர்விற்குக் காரணமாக அமைந்தது என்றால் அது மிகையில்லை. இலங்கை அரசாங்கங்களுக்கெதிராக இரு முறை ஆயுதப் போராட்டங்களில் மக்கள் விடுதலை முன்னணி ஈடுபட்டு பல்லாயிரக்கணக்கான சிங்கள இளைஞர்களின் மரணங்களுக்குக் காரணமாக இருந்தபோதிலும் கூட, அதே காலப்பகுதியில் உரிமைக்காகப் போராடி வந்த ஈழத்தமிழர் சார்பாக கிஞ்சித்தும் அவ்வமைப்பு இரக்கமோ அக்கறையோ காட்டவில்லை. மாறாக இக்கட்சியிலிருந்தே இலங்கை சந்தித்த அதிதீவிர சிங்கள இனவாதிகள் உருப்பெற்று வெளிக்கொணரப்பட்டார்கள் . மக்கள் விடுதலை முன்னணியினுடனான தனது ஆரம்ப காலம் குறித்தும் 1987 ஆம் ஆண்டு ஆயுதக் கிளர்ச்சி குறித்தும்விஜித்த ஹேரத் பின்வருமாறு நினைவுகூர்ந்தார். "அன்றைய காலகட்டத்தில் நாட்டில் சிவில் யுத்தம் ஒன்று நடந்து வந்தது. நாம் இந்திய இராணுவத்திற்கெதிராகப் போராடினோம். அக்காலத்தில்தான் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இலங்கை ஜனாதிபதி ஜெயவர்த்தனவிற்கும் இடையே ஒப்பந்தம் ஒன்றும் செய்யப்பட்டது" . "அவ்வொப்பந்தம் இலங்கை மக்களை வெகுவாகப் பாதித்திருந்தது. ஒப்பந்தத்தின் ஊடாக எமது திருகோணமலையில் அமைந்திருந்த எண்ணெய்க் குதங்களை இந்திய அரசாங்கத்திற்கும் இந்திய நிறுவனம் ஒன்றிற்கும் கொடுக்கவேண்டி ஏற்பட்டது. அவ்வாறே எமது நாட்டின் உளவீட்டு விவகாரங்களில் இந்தியா மூக்கை நுழைக்கத் தொடங்கியது. இந்தத் தலையீட்டினை எதிர்த்தே நான் ஆயுதம் ஏந்திப் போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டது". "நான் அப்போது மக்கள் விடுதலை முன்னணியின் ஒரு உறுப்பினராக இருந்தேன். நாம் பல்வேறான ஆர்ப்பாட்டப் பேரணிகளை நடத்தினோம். இந்திய ஆக்கிரமிப்பிற்கெதிரான ஜனநாயகவழி ஆர்ப்பாட்டங்கள் பலவற்றை நாம் முன்னெடுத்தோம்". தமிழருடனான அதிகாரப் பகிர்விற்கெதிரான உறுதியான விஜித்த ஹேரத்தின் நிலைப்பாடு பொலீஸ் அதிகாரங்களோ காணி அதிகாரங்களோ மாகாணசபைகளுக்குக் கொடுக்க அனுமதிக்கப்போவதில்லை தேர்தலுக்கு 72 மணிநேரமே இருக்க மீண்டும் உறுதிப்படுத்திய மக்கள் விடுதலை முன்னணி 2021 ஆம் ஆண்டு விஜித்த ஹேரத் வழங்கிய செவ்வியொன்றில், "எமது நாட்டில் நாம் பிரிவினையினை முற்றாக எதிர்க்கிறோம். ஏனென்றால் இந்த நாட்டில் இருப்பதாகக் கூறப்படும் இனப்பிரச்சினைக்கு பிரிவினை ஒரு தீர்வாக அமையாது என்று நாம் உறுதியாக நம்புகிறோம்" என்று கூறினார். அவர் தொடர்ந்து பேசும்போது, "மக்கள் விடுதலை முன்னணியினால் வெளியிடப்பட்ட புத்தகம் ஒன்றில், "பிரிவினை எப்படி இலங்கையில் இருக்கும் இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமைய மாட்டாது, அவ்வாறே சமஷ்ட்டி அடிப்படையிலான தீர்வும் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது" என்று கூறினார். "இனப்பிரச்சினைக்கான தீர்வு எவ்வாறானதாக அமையவேண்டுமெனில், இலங்கை மக்கள் அனைவருக்கும் இன, மத, அல்லது வேறு எந்த அடிப்படையிலோ அல்லாமல் ஒரேவகையான உரிமைகளை வழங்குவதனூடாக மட்டும்தான்" என்று அவர் கூறினார். "நாம் புலிகள் இயக்கத்திற்கெதிராகப் போராடினோம். ஏனென்றால் அது எமது மக்களைப் பிரிக்க முயன்றது. அவ்வியக்கத்திற்கெதிராக இன்னும் பல்வேறு வகையான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்தோம். இறுதியில் எமக்குத் தேவையான வெற்றியை நாம் அடைந்துகொண்டோம். நாம் புலிகள் இயக்கத்தை தத்துவாந்த ரீதியில் மட்டுமல்லாமல் எல்லாவழிகளிலும் தோற்கடித்து அழித்தோம்". 13 ஆவது திருத்தத்தினூடாக மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட ரீதியில் வடக்குக் கிழக்கிற்கான அதிகாரங்கள் பகிரப்படலாம் என்று அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், அதனையும் கடுமையாக எதிர்த்து வந்தார் விஜித்த ஹேரத். 2005 இல் அவர் பேசும்போது வடக்கையும் கிழக்கையும் இணைத்து ஒரு மாகாணமாக உருவாக்குவதை தாம் எதிர்ப்பதாகக் கூறினார். 2015 இல் சிங்கள இனவாதிகளின் ஆங்கில நாளேடான தி ஐலணட்டில் பேட்டியளித்த ஜேரத் "மக்கள் விடுதலை முன்னணி சமஷ்ட்டி அடிப்படையிலான தீர்வை முற்றாக எதிர்க்கிறது" என்று கூறினார்." தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அவலங்கள் குறித்து அக்கறை காட்டினாலும் கூட சமஷ்ட்டி அடிப்படையிலான தீர்வு இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையாது என்று உறுதியாக நாம் நம்புகிறோம்" என்று கூறினார். மேலும், இந்திய இலங்கை ஒப்பந்தத்தின்படி குறிப்பிடப்பட்டிருக்கும் வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைப்பது என்பதை அவர் தீவிரமாக எதிர்த்தார். "இலங்கை இந்திய ஒப்பந்தத்தினூடாக தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்த வடக்குக் கிழக்கு மாகாணங்களை நீதிமன்றத்தினூடாக பிரித்துப்போட்டது எமது கட்சியான மக்கள் விடுதலை முன்னணியே. இந்த மாகாணங்கள் இரண்டும் தனித்தனியாக, சுதந்திரமாக இயங்க வேண்டும்" என்று அவர் கூறினார். இந்திய இலங்கை ஒப்பந்தப்படி 1987 ஆம் ஆண்டிலிருந்து இவ்விரு மாகாணங்களும் தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்தன. ஆனால் 2005 இல் மக்கள் விடுதலை முன்னணி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் 2006 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், வடக்குக் கிழக்கு இணைப்பு நிரந்தரமாக பிரிக்கப்படுவதாகவும், இம்மாகாணங்கள் இணைந்திருப்பது சட்டத்திற்கு முரணானது என்றும் தீர்ப்பு வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. மக்கள் விடுதலை முன்னணியும், தீவிர இனவாத அமைப்பான ஜாதிக ஹெல உறுமயவும் வடக்குக் கிழக்கு மாகாண்ங்களின் இணைப்பிற்கெதிராகத் தொடர்ச்சியாக எதிர்ப்புத் தெரிவித்து வந்ததுடன் நீதிமன்றத்திற்கு அதனை இழுத்துச் சென்று, மாகாணங்கள் பிரிக்கப்பட்டபோது வீதிகளில் கொண்டாடி ஆர்ப்பரித்தனர். 2019 ஆம் ஆண்டு பத்திரிக்கையாளர் மாநாடொன்றில் பேசிய விஜித்த ஹேரத், "வடக்குக் கிழக்கு மாகாணங்களை இணைத்து வைத்திருப்பதனூடாக சர்வதேசத்திற்கு இந்த இணைந்த மாகாணத்தில் தமிழ் மக்களே பெரும்பான்மையாக வாழ்கிறார்கள் என்று காண்பித்து, ஆகவே இம்மாகாணங்களுக்கு தனியான அதிகாரம் தேவையென்று கோருவதே தமிழ்ப் பிரிவினைவாதிகளின் நோக்கமாகும்" என்று விஜித்த ஹேரத் கூறினார். "இதே கோரிக்கையினைத்தான் தமிழ்க் கட்சிகள் ஒவ்வொரு தேர்தலிலும் முன்வைத்து வருகின்றனர். ஆனால் நாம் இந்தக் கோரிக்கையினை எப்போதுமே நிராகரித்தே வந்திருக்கிறோம்" என்றும் அவர் கூறினார். இவ்வருடம் மாசி மாதத்தில் அநுர குமாரவுடன் தில்லிக்குப் பயணமாகிய விஜித்த ஹேரத், இலங்கையின் ஒருமைப்பாட்டையும், இறையாண்மையினையும், பூகோள ஒருமைப்பாட்டையும் உறுதிப்படுத்தும் விதமாக அரசியலில் ஈடுபடும் என்று உறுதிப்படுத்தியிருந்தார். 1987 ஆம் ஆண்டில் தமது அமைப்பு நடத்திய ஆயுதக் கிளர்ச்சி குறித்துப் பேசும்போது, " நாம் மிகவும் தீவிரமாக இந்திய இலங்கை ஒப்பந்தத்தினை பல ஆண்டுகளுக்கு முன்னர் எதிர்த்தோம். எமது செயற்பாடுகளை இலங்கையின் ஒருமைப்பாட்டையும், இறையாண்மையினையும் காக்கப் பாவிக்கிறோம். அதற்காகப் பல உயிர்த்தியாகங்களை நாம் புரிந்திருக்கிறோம்" என்று கூறினார். "இதுகுறித்த எமது நிலைப்பாடு என்றுமே மாறப்போவதில்லை" என்றும் அவர் மேலும் கூறினார். 2024 ஆம் ஆண்டு புரட்டாதி மாதத்தின் இறுதிப்பகுதியில், தேர்தலுக்குச் சற்று முன்னரான நாட்களில் பேசிய விஜித்த ஹேரத், "மகாணசபை அமைப்பு முறை இலங்கையின் இனப்பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வாகாது. இந்த நாட்டின் தேசியப் பாதுகாப்பையும், ஒற்றையாட்சியையும், ஒருமைப்பாட்டினையும் பாதுகாக்க நாம் மிகப்பெரிய தியாகங்களைச் செய்திருக்கிறோம். நேற்றும், இன்றும், நாளையும் இதுதொடர்பான எமது நிலைப்பாடு மாறப்போவதில்லை. இந்த நாட்டின் ஒருமைப்பாட்டினை எவ்விலை கொடுத்தாவது பாதுகாப்பது எமது கட்சியின் தலையாய கடமையாகும்" என்று அவர் பிரகடணம் செய்தார். அகில இலங்கை பெளத்த காங்கிரஸின் மாநாடு ஒன்றில் பேசிய விஜித்த ஹேரத், "பெளத்த மதத்திற்கான முன்னுரிமையினைக் கொடுப்பதில் தமது கட்சி எப்போதும் உறுதியாக நிற்கும்" என்று கூறினார். "நாம் அன்றே இதுகுறித்து உறுதிப்படுத்திவிட்டோம். அதையே நாம் இப்போதும் நினைவுபடுத்துகிறோம். இந்த நாட்டின் இனப்பிரச்சினைக்கு மாகாணசபை அமைப்பு முறை தீர்வாகாது. எமது அரசியலமிப்பின் 9 ஆவது அத்தியாயம் எக்காரணம் கொண்டும் மாற்றப்பட மாட்டாது என்று என்னால் உறுதிபடக் கூறமுடியும்" என்று அவர் கூறினார். இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தில் 9 ஆம் அத்தியாயம் என்பது பின்வருமாறு கூறுகிறது, "இலங்கைக் குடியரசு பெளத்த மதத்திற்கு எல்லாவற்றைக் காட்டிலும் முன்னுரிமையும், உயர்ந்த இடமும் வழங்குகிறது. ஆகவே பெளத்த மத்தத்தைப் போற்றிப் பாதுகாத்து வளர்ப்பதென்பது ஒவ்வொரு அரசினதும் தலையாய கடமையாகும். ஏனைய மதங்களுக்கான இடம் அத்தியாயம் 10 மற்றும் 14 இல் குறிப்பிடப்பட்டுள்ளதற்கமைய வழங்கப்படும்" என்று கூறப்பட்டிருக்கிறது. "முன்னைய அரசாங்கங்கள் பெளத்த மதத்திற்கு வழங்கிய அதே முன்னுரிமையினையும், உயர்ஸ்த்தானத்தையும் மக்கள் விடுதலை முன்னணியின் அரசும் வழங்கும்" என்று விஜித்த ஹேரத் அங்கு உறுதி வழங்கினார். https://www.tamilguardian.com/content/who-sri-lankas-foreign-minister-vijitha-herath2 points
-
பல்கலைக்கழக மாணவியை கர்ப்பமாகி தலைமறைவான கனடா வாழ் தமிழ் குடும்பஸ்தர்!
நீங்கள் தான குசா சொன்ன ஆள்?2 points
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
ரஞ்சித் இங்கே எழுதுவதன் ரத்தின சுருக்கம் இது தான். புரிந்தால் அனைவருக்கும் நன்று புலிகளை மட்டுமே சுயபரிசோதனை செய்ய விரும்புகிறார்கள். புகப்புத்தகத்திலும் அப்பப்ப புலிகளால் கொல்லப்பட்டவரின் நினைவுதினம் என்று சிலபடங்களுடன் போடுவார்கள். மற்றைய இயக்கங்களும் சரிக்குசரி செய்தது தானே அவர்களின் தலைவர்கள் இப்போதும் இருக்கிறார்கள் தானே போய் விசாரிக்கலாமே. பழைய ஜேவிபியைப் பற்றி பலருக்கும் தெரியாது.ரஞ்சித் எழுதுவதால் அறிந்து கொள்ள முடிகிறது. தொடர்ந்தும் எழுதுங்கள் ரஞ்சித்.2 points
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
இதைப் பார்க்கையில் உங்களுக்கு யாழ் விதிகள், நடைமுறைகள் தெரியவில்லையா அல்லது உலக நடைமுறையே தெரியவில்லையா என்ற யோசனை வருகிறது. கருத்துக் களத்தில் எழுதுகிறீர்கள், ஆனால் ஏனையோர் "சாமரம் வீசும்" கருத்துக்களை மட்டுமே வைக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்போடு இருக்கிறீர்கள். இதே முறைப்பாட்டை, உங்கள் ஏனைய தேசிய நாட்காட்டிகளிலும் கேட்ட நினைவு. "அனுரவை தமிழ் மக்கள் நல்ல ஒளியில் பார்த்து விடக் கூடாது" என்கிற நோக்கத்திற்காக எழுதுகிறீர்கள் - எல்லோரும் புரிந்து கொண்டிருக்கிறார்கள். இதற்காக நீங்கள் பயன்படுத்தும் மூலங்கள் தமிழ்நெற்றும், சங்கம் தளமும் - இவை இரண்டினதும் வடிகட்டியெடுத்து செய்தி/ஆய்வுகள் போடும் "நடுநிலை" 😎எல்லோரும் அறிந்ததே! நான் நினைக்கிறேன், தமிழ் வேட்பாளர் தோல்வியின் பலனாக ஒரு துன்ப grieving அனுபவத்தில் இருக்கிறீர்களென. முதலில் denial. பின்னர் கோபம். இப்போது "தோல்வியின் காரணம் வேறு யாரோ" எனும் blaming. "சும், சம், மாவை தான் இன்று ஒரு சிங்களவர் பக்கம் தமிழ் இளையோர் சாயக் காரணம்" என்ற உங்கள் கருத்தில் இந்த blaming தான் தெரிகிறது. உங்கள் போன்றோரின் தீவிர தேசிய நிலைப்பாடுகளும், சகிப்புத் தன்மையின்மையும் இறுதி வரை உங்களுக்கு ஒரு மறைக்காரணியாகத் தெரியப் போவதேயில்லை! நான் பல இடங்களில் சுட்டிக் காட்டியிருப்பது போல தீவிர தமிழ் தேசிய நிலைப்பாடும், ஒரு அமைப்பைத் தூக்கித் தலையில் சுமக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பும், மேலுல் தமிழர்களை உங்களிடமிருந்து அன்னியப் படுத்தும்.2 points
-
இரசித்த.... புகைப்படங்கள்.
2 points2 points
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் - சம்பந்தன் இறந்தும் கையளிக்கப்படாத உத்தியோகபூர்வ வீடு!
2 pointsஉன் இனத்தின் சார்பாக போனவன் பதவியை இழந்த பின்பும், விதியை மீறி, எதிரி சலுகை கொடுக்கின்றான் என்றால்… உன் இனத்தை காட்டிக் கொடுத்துக் கொண்டு இருக்கின்றான் என்று அர்த்தம். தமிழரசு கட்சியில் உள்ளதுகள், அதைத்தான் செய்து கொண்டு இருக்கின்றார்கள். டக்ளஸ் வெளிப்படையாக செய்வதை… இவர்கள், பின் கதவால் செய்கிறார்கள்.2 points- அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
ரஞ்சித் இங்கே எழுதுவதன் ரத்தின சுருக்கம் இது தான். புரிந்தால் அனைவருக்கும் நன்று.2 points- மதுபான நிலைய அனுமதிப்பத்திர விவகாரத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகளின் பெயர்களை அரசாங்கம் வெளியிடவேண்டும் - சுமந்திரன்
ஆம்… அனைவரின் பெயர்களையும் வெளியிட வேண்டும். அத்துடன்…. கேரள கஞ்சா, ஆப்கானிஸ்தான் அபின், பாகிஸ்தான் பான்பராக்…. போன்ற போதை வஸ்துக்களை கடத்தி காவல் துறையிடம் பிடிபடும் சமூக விரோதிகள் சார்பில்…. நீதிமன்றம் சென்று வாதடி, அவர்களை வெளியே எடுத்துவிடும் வக்கீல்களின் பெயர்களையும் அரசாங்கம் வெளியிட வேண்டும். 😂 🤣 முதலில்…. உங்கள் முதுகில் உள்ள ஊத்தையையும் கழுவுங்கள். மல்லாக்கப் படுத்திருந்து துப்பினால்.. அந்த அசிங்கம் உங்கள் முகத்தில் தான் விழும்? 🧐 தான்… அவசரப் பட்டு அறிக்கை விட்டு… தன்னை சுற்றவாளி என காட்ட அந்தரப் படுகிறார்…. லோயர். 🤣 கூட்டத்தில்…. குசு விட்டவன், முதலில் மற்றவர்களை நோக்கித்தான், கை காட்டுவானாம். 😂 😁2 points- அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
கடந்த காலங்களை பற்றி பேசுவதில் பயனில்லை. அப்படி பார்த்தால் எந்த ஒரு இயக்கமும் தூய்மையானதல்ல. புலிகள் கூட ஆரம்ப காலத்தில் வங்கியை கொள்ளயடித்தார்கள் தானே? அப்பாவிகளை மத்திய வங்கி குண்டு வெடிப்பின் மூலம் கொன்றார்கள். ஒரு சிறிய நிலபரப்பிற்குள் 20க்கு மேற்பட்ட இயக்கங்களை உருவாக்கி அடிபட்டு சின்னபின்னபட்டு எல்லாம் இழந்து போய் இருக்கும் எம்மை சிறிது எங்களை ஆசுவாசப்ப்டுத்தி கொள்ள விடுங்களேன். எத்தியோப்பியனது நிறத்தை மாற்ற முடியுமா? சிங்களவனது இன துவேசத்தை மாற்ற முடியுமா? ஒரு 6 மாதம் பொறுத்திருந்துதான் பார்ப்போம்.2 points- ஓரிரவு
1 pointஓரிரவு ஞானசேகர் மணி ஏழாகிவிட்டிருந்தது. எனது டீம் லீட் சியோக் வீ அன்று மதியம் என்னிடம் ஒரு வேலையை அளித்திருந்தாள். என்னவென்று கண்டறிய முடியாத ஒரு தவறு காரணமாக அதன் மொத்த செயல்பாட்டையே நான் வேறு மாதிரி மாற்றி எழுத வேண்டும். ஏற்கனவே அது ஒருவனிடம் கொடுத்து அவனால் அந்தத் தவறைக் கண்டறியமுடியாமல் பின் அவளும் முயற்சி செய்து பார்த்துவிட்டு இறுதியில் என்னிடம் மொத்தத்தையும் மாற்றி எழுதக் கேட்டிருந்தாள். மூன்று நாட்கள் அவகாசம் கேட்டிருந்தேன். ஆனால் அதனை சோதிக்க ஆரம்பித்த இரண்டு மணி நேரத்திலேயே என்ன தவறு என்பதைக் கண்டுபிடித்துவிட்டேன். ஒரு சிறிய கவனக்குறைவான ‘கோட்’ பிழை. புதிய கண்களுக்கு எளிதில் அகப்பட்டு விடும் பிழைதான். எப்படியோ தவறவிட்டிருக்கிறார்கள். இரண்டு மணி நேரத்தில் அதை நிவர்த்தி செய்து விடலாம். அதைத் திருத்தி எழுதிக் கொண்டிருந்தேன். அதனால் தான் தாமதமாயிற்று. திங்கள் காலை வந்ததும் அவளிடம் அந்தப் பிரச்சனையை சரி செய்துவிட்டேன் என்று சொல்லி அவளுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம். அவளிடம் இருந்து ஒரு பாராட்டு. அவள் மகிழ்ச்சி அடையும் போது கண்ணாடிக்குள் கண்ணைச் சுருக்கி, கன்னத்தில் குழி விழ சிரிப்பது அவ்வளவு அழகாக இருக்கும். அது மட்டும் அல்லாமல் எங்களது வேலையை மதிப்பிட்டு அவள் தான் எங்கள் நிறுவனத்தில் தெரிவிக்கவேண்டும். எங்களுக்கு இந்த கிளைண்ட் நிறுவனத்தில் இரு வருடம் ஒப்பந்த வேலை. அவள் இங்கு முழுநேர வேலை பார்ப்பவள். எங்களது வேலை நன்றாக இருக்கும் பட்சத்தில் எங்களது ஒப்பந்தத்தை நீட்டிப்பார்கள். பிடிக்கவில்லையென்றால் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றிவிடுவார்கள். பின் எங்கள் நிறுவனம் எங்களை இடமுள்ள வேறு கிளைண்ட் நிறுவனத்தில் போடுவார்கள். எங்கும் இடம் இல்லையெனில் இரண்டு மூன்று மாதம் பொறுத்துப் பார்த்துவிட்டு வேலையை விட்டு தூக்கிவிடுவார்கள். விசாவையும் ரத்து செய்து விடுவார்கள். பின் இந்தியாவுக்குதான் திரும்பப் போக வேண்டும். அதனால் தான் ஐந்து மணிக்கு ஹரிஸ் கிளம்பும் போது கூப்பிட்டும் போகவில்லை. ‘விரைவில் வரவும். காத்திருக்கிறேன்’ என்ற செய்தியோடு ஹரிஸ் இரண்டு மதுபாட்டில்கள் இருக்கும் படத்தை எனக்கு மொபைலில் அனுப்பி இருந்தார். எனது அலுவலகத்தில் இருந்து தமன்ஜெயா எல்ஆர்டி ஸ்டேஷன் செல்ல பதினைந்து நிமிடம் நடக்கவேண்டும். ஓட்டமும் நடையுமாக சென்று சேர்ந்தேன். அங்கிருந்து ரயில் பிடித்து மஸ்ஜித் ஜமக் ஸ்டேஷன் வந்து பின் ஜலன் இப்போவுக்கு பஸ் பிடித்தேன். சாதாரணமாக பதினைந்து நிமிட பஸ் பயணம் என்றாலும் வெள்ளிக்கிழமை இந்த நேரத்தின் வாகன நெரிசலில் சென்று சேர அரைமணி நேரத்திற்கும் மேல் ஆகும். இரவில் திரும்பி வரும்போது கடந்த ஆறுமாதமாக பேருந்தில் சாலையின் இடதுபுறத்தை பார்த்தவாறு ஜன்னல் ஓரத்தில் அமர்வது என் வழக்கம். அன்றும் அப்படித்தான். பேருந்து மெல்ல மெல்ல ஊர்ந்து கொண்டிருந்தது. சௌகிட்டை தாண்டி விட்டால் இந்த வாகன நெரிசல் இருக்காது. வண்டி வேகம் எடுத்துவிடும். அப்போது நிறுத்தங்களில் கூட நிறுத்தாமல் சென்று விடுவார்கள். நாம் நிறுத்தம் வருமுன்னே மணியை அழுத்திவிட வேண்டும்.சௌகிட் சிக்னலைத் தாண்டி சில நிமிடங்கள் ஆன பின் ஒன்றை அடுத்து ஒன்று மூன்று டைல்ஸ் கடைகள் வந்த பிறகு செட்டியார் மண்டபத்திற்கு முன்னதாக அந்த சாலையில் சில தூரங்கள் இரவில் எந்த மின்விளக்குகளும், ஆள் அரவமும் இருக்காது. பேருந்து அந்த இடத்தை நெருங்கும்போதே எனது மனம் படபடக்க ஆரம்பித்துவிடும். அவள் இருக்கக்கூடாது அவள் இருக்கக்கூடாது என்று மனதில் வேண்டிக்கொள்வேன். பகல்நேரங்களில் அந்த இடத்தின் சாலையோரத்தில் இருக்கும் கட்டிடங்களைப் பார்த்திருக்கிறேன். அவற்றின் பழைய சுவர்களில் சுண்ணாம்பு பெயர்ந்து ஆங்காங்கே கருமை படிந்து காணப்படும். கீழ்தளத்தில் மெக்கானிக் கடையோ அல்லது சீனப்பண்டங்களை விற்கும் சிறிய பலசரக்குக் கடையோ இருக்கும். மேல் தளத்தில் கைவிடப்பட்ட பழைய வீடுகள். சிலவற்றின் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்திருக்கும். சில செய்தித்தாள்கள் ஒட்டப்பட்டு மறைக்கப்பட்டிருக்கும் ஆனால் சூரியன் மறைந்த பிறகு கீழே அந்தக் கடைகள் இருந்ததற்கான சான்றே இல்லாமல் அந்த இடமே வெறுமையாக இருக்கும். செய்தித்தாள்கள் ஒட்டப்பட்டு மூடியிருக்கும் கண்ணாடி ஜன்னல்களில் உள்ளே மங்கலான விளக்கு எரிவது தெரியும். அந்நேரத்தில் அந்த சாலையின் ஓரத்தில் குறைவான வெளிச்சம் இருக்கும் ஏதேனும் ஒரு பகுதியில் அந்தப் பெண் நின்றுகொண்டிருப்பாள். ஒரு அவலட்சணமான விபச்சாரி. மஞ்சள் இனப்பெண். மஞ்சள் இனப்பெண்களின் வயதை எனக்கு தோராயமாகக் கூட கணிக்க இயலாது. நான் ஆரம்பத்தில் சியோக் வீயின் வயதை இருபத்தியேழாக இருக்கும் என்று தான் கணித்து வைத்திருந்தேன். ஆனால் அவளுக்கு முப்பத்தாறு வயது. திருமணம் ஆகி ஒரு குழந்தை இருந்தது. இவளைப் பார்த்தால் எப்படியும் வயது நாற்பதுக்கு அருகில் இருக்கலாம் என்று தோன்றியது. நன்றாக மெலிந்த உருவம். முகவாய் கொஞ்சம் முன்னோக்கி நீண்டு, தோள்பட்டை பகுதி துருத்தி மேல்நோக்கி இருந்தது. மார்புப் பகுதியோ பிட்டம் பகுதியோ இருப்பதற்கான எந்தத் தடயமும் இல்லை. அக்குளில் ஆரம்பித்து தொடை வரை மட்டுமே இருக்கும் உடம்புக்கு கொஞ்சமும் பொருந்தாத ஒரு வெள்ளை நிற உடை அணிந்திருந்தாள். அந்த உடை, அவள் அணிந்திருந்த செருப்பு இவையெல்லாம் பளபளப்பாக இருந்தாலும் சுத்தமாக அவளுக்குப் பொருந்தவில்லை. வாடிக்கையாளர்களை கவர்வதற்காக செய்திருந்த ஒப்பனை, பளிச்சென்று பூசியிருந்த உதட்டுச்சாயம் அவளை இன்னும் பரிதாபமாகவேக் காட்டின. கடந்து போகும் ஆண்களைப் பார்த்து அவள் செய்யும் அந்த குலைவான செயற்கை சிரிப்பு எந்த விதத்திலும் உதவிகரமாக இல்லை. பேருந்தினுள் இருந்த என்னால் அவள் மேல் என்ன மாதிரியான மலிவான வாசனை திரவியத்தின் மணம் வீசும் என்பதைக் கூட உணரமுடிந்தது. ஆறு மாத காலமாக இவளை இந்த நேரத்தில் பேருந்தில் திரும்பிவரும் போது இங்கு அவ்வப்போது பார்க்கிறேன். ஏன் இந்த இடத்தில் நின்று கொண்டிருக்கிறாள். அந்த சாலையில் யாருமே நடந்து செல்ல மாட்டார்கள். வாகனங்கள் மட்டுமே சென்று கொண்டிருக்கும். புக்கிட் பின்டாங்க் போய் நின்றால் கூடப் பரவாயில்லை. அங்கு அது போன்ற பெண்கள் நிறைய இருப்பார்கள். அதுக்கென்றே ஆண்கள் வருவார்கள். யாரேனும் ஒருவர் கூட்டிச்செல்ல வாய்ப்பு இருக்கலாம். அல்லது குறைந்த பட்சம் இன்னும் மூன்று நிறுத்தங்கள் தள்ளி சௌகிட் மார்கெட் அருகே சென்று நிற்கலாம். அங்கும் இது போன்ற பெண்கள் இருப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு வேளை வேறு பெண் என்று இன்னொரு வாய்ப்பு இருந்தால் இவளை எப்படியும் தேர்ந்தெடுக்க மாட்டார்கள் என்றா இங்கு தனியாக நின்றுகொண்டிருக்கிறாள். எங்கள் பேருந்து அவளைக் கடந்து சென்றது. அவள் நின்றிருந்த இடத்திலிருந்து இரண்டாவது நிறுத்தம் என்னுடையது. எனது அப்பார்ட்மெண்டின் தரைத்தளத்தில் இருக்கும் இந்திய மதுபானங்கள் விற்கும் கடையில் ஒரு பீர் வாங்கிக்கொண்டேன். ’உங்காளு வந்து வாங்கிட்டு போய்ட்டாரே’ என்றான் கடையிலிருந்தவன் சிரித்தவாறே. ‘நமக்கு அது பத்தாது’ என்று கூறிவிட்டு அந்தக்கடையின் பின்புறம் வழியாக சென்று எங்கள் அப்பார்ட்மெண்டின் நுழைவாயிலை அடைந்தேன். பத்தாவது மாடியில் எனது அறைக்குச் சென்று உடையை மாற்றி இரவு நேர பேண்ட்டும் டீஷர்ட்டும் அணிந்து கொண்டேன். அறையில் இருந்தவர்கள் அவர்களது லேப்டாப்பில் மும்முரமாக ஏதோ பார்த்துக்கொண்டிருந்தார்கள். நான் என் பீரை எடுத்துக்கொண்டு கீழிறங்கி எங்கள் அப்பார்ட்மெண்டை விட்டு வெளியே வந்து இடப்புறத்தில் ஓடையைக் கடந்து செல்லும் பாலத்தின் வழியாக ஹரீஸின் அப்பார்ட்மெண்டிற்குச் சென்றேன். என்னிடம் அதன் வாயிலை திறக்கும் அட்டை இல்லையாதலால் போன் செய்த பின்பு ஹரீஸே கீழே வந்து பதினெட்டாவது மாடியில் இருக்கும் அவர் ஃப்ளாட்டுக்கு என்னைக் கூட்டிச் சென்றார். அவர் திருமணத்திற்கு முன் வரை எங்களது ஃபளாட்டில் தான் இருந்தார். எங்கள் கம்பெனி வெளியே சாஃப்ட்வேர் கம்பெனி என்று சொல்லிக்கொண்டாலும் அது ஒரு அவுட்சோர்சிங் கம்பெனி. பெங்களூரில் ஒரளவுக்கு நல்ல திறமையுடைய தேவைப்படும் கணினிமொழியில் இரண்டு அல்லது மூன்று வருட அனுபவம் உள்ளவர்களை வேலைக்கெடுத்து அவர்களை கோலாலம்பூருக்கு அனுப்பிவிடுவார்கள். இங்குள்ள அவர்களின் க்ளைன்ட் கம்பெனிகளில் நாங்கள் வேலை செய்யவேண்டும். தோராயமாக எப்போதும் ஒரு முப்பது பேர் இருப்போம். எல்லோரும் இந்தியர்கள். எல்லோரையும் அந்த அப்பார்ட்மெண்டில் ஃபளாட்டுக்கு நான்கு அல்லது ஐந்து பேர் என குடியமர்த்தியிருந்தார்கள். எல்லா வசதியும் கொண்ட நல்ல சௌகரியமான ஃப்ளாட்கள். நாங்கள் வாங்கும் சம்பளம் மலேசியர்களோடு ஒப்பிடும் போது குறைவு தான் என்றாலும் இந்திய மதிப்பில் நல்ல பணம்தான். அவர் டேபிளில் இரண்டு குவாட்டர் ப்லென்ட்ர்ஸ் ப்ரைட்டு விஸ்கியும் சிக்கனும் கடலைப்பருப்பும் தயாராக வைக்கப்பட்டிருந்தன. நான் வாங்கி வந்திருந்த எனது ஒரு பியர் கேனையும் அதனுடன் வைத்தேன். அவர் ஃப்ரிட்ஜில் இருந்து ஐஸ்குயூப்களை எடுத்து வந்து வைத்துபின்பு எங்களது ஆபீஸ் விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டே இருவரும் மதுவருந்த ஆரம்பித்தோம். ஒரு மணி நேரத்தில் இருவரும் எங்கள் குவார்டர்களைக் காலி செய்திருந்தோம். நான் அடுத்து எனது பியரை திறந்தபோது அவர் ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டார். ‘பாபி எப்ப வராங்க’ என்று ஆங்கிலத்தில் ஆரம்பித்தேன். ‘வருகிற பதினைந்தாம் தேதி. இன்னும் இரண்டு வாரங்களில்’ ‘அப்ப கடைசியா ஒருமுறை இப்போ புகிட் பின்டாங்க் போலாமா?’ என்றேன் நமட்டுச் சிரிப்புடன். ‘முடியவே முடியாது. கிருஷ்ணராய் இருந்த அந்த நேரம் முடிந்துவிட்டது. இப்போது இது நான் ராமராய் இருக்க வேண்டிய நேரம்’ என்றார் புன்னகையுடன். ‘குறைந்தபட்சம் மசாஜாவது’ ‘ம்ஹும். அது மசாஜோட மட்டும் நிக்காதுனு எனக்குத் தெரியும்’ ‘போய் அந்த பாகிஸ்தானி கடைல சாப்பிட்டுட்டு மட்டும் வந்திடலாம்’ அவர் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த பார்சல் உணவைக் காண்பித்து ‘அதான் நான் ஏற்கனவே வாங்கி வச்சிட்டேன். இனி புக்கிட் பின்டாங்க் போகணும்னா வைஃப் வந்ததுக்கப்புறம் அவளோடதான் போகணும். மனச கட்டுப்படுத்தி வச்சிருக்கேன். நீ வேணா போய்ட்டு வா.’ ‘தனியா போகணுமே’ ‘உனக்கு போகணும்னா பனிரெண்டாவது மாடியில் இருக்கிற மஞ்சுநாத்த கூப்பிடு. அவன் எப்பவும் தயாரா இருப்பான்.’ ‘மஞ்சுநாத்? எனக்கு யாருன்னே தெரியாது.’ ‘ஃஜுரிச் க்ளைண்ட்ல இருக்கான்ல. டாட் நெட் டெவெலப்பர். கன்னடிஹா’ ‘ம்ஹும்.’ ‘நல்ல ஆளுதான் போ நீ. ஒரு வருஷமா இங்க இருக்குற, யாரச்சொன்னாலும் தெரியாதுங்கிற’ ‘எனக்கு நம்ம ஃப்ளாட்ல இருக்கிறவங்க அப்புறம் 108ல இருக்கிறவங்க மட்டும் தான் தெரியும். வேற யாரையும் தெரியாது. அவனுகதான் கீழ ரெஸ்டாரண்டுக்காச்சும் வருவாங்க. மத்த யாரும் ரூம விட்டே வெளிய வரமாட்டானுக’ ‘நீ தான் இப்பல்லாம் புகிட் பிண்டாங் போனாலும் ஒண்ணும் பண்றதில்லய. பீர் அடிச்சுட்டு இருப்ப. அப்புறம் ஏன் போகணும்னு சொல்ற. வேணும்னா கீழ போய் பீர் வாங்கிட்டு வா. நான் உனக்கு கம்பெனி கொடுக்கேன்’ ‘வேணாம். வேணாம். சும்மாதான் கேட்டேன். ஒரு நல்ல ஹஸ்பண்டா இருக்கீங்களானு டெஸ்ட் பண்ணிப் பார்த்தேன். டெஸ்ட்ல பாஸ் பண்ணிட்டிங்க’ என்று சிரித்தேன். அவர் தனது சாப்பாட்டை முடிப்பதற்கும் நான் எனது பியரை முடிப்பதற்கும் சரியாக இருந்தது. அவர் மீண்டும் ஒரு சிகரெட்டைப் பற்றவைத்து விட்டு தனது கணினியில் பழைய கசல் பாடல்களை ஒலிக்கவிட்டார். நானும் அவரிடம் இருந்து ஒரு சிகரெட்டை வாங்கி பற்ற வைத்துக்கொண்டு அவர் வீட்டின் பால்கனியில் வந்து நின்று கொண்டேன். அந்த பதினெட்டாவது மாடியில் இருந்து கீழே பார்க்கும் போது இங்கிருந்து விழுந்தால் என்னவாகும் என்று தோன்றியவுடன் அதன் கம்பித்தடுப்பை இறுகப் பற்றிக்கொண்டேன். தூரத்தில் அந்த இரட்டைக்கோபுரம் அதன் மின் விளக்குகளோடு சிறியதாய் தெரிந்தது. அதன் அருகே தான் புகிட் பின்டாங்க் இருக்கிறது. மணி பத்தாகிறது. இப்போது அங்கு நல்ல கொண்டாட்டமாக இருக்கும். தரமான உணவகங்கள், மால்கள், இசையுடன் கூடிய பார்கள், மசாஜ் பார்லர்கள், தெருவில் நின்று ஹேப்பி எண்டிங் மசாஜுக்கு அழைக்கும் சீன முகப் பெண்கள், ஆங்காங்கே வாடிக்கையாளர்களை ரகசியமாக அழைத்து வர நிற்கும் பிம்ப்கள், அவர்கள் அழைத்துப் போகும் ஹோட்டல்கள் என்று உற்சாகம் நிரம்பி வழியும். முன்பெல்லாம் வெள்ளிக்கிழமை வந்தால் இந்நேரத்தில் ஹரீஸும் நானும் கிளம்பி இருப்போம். அவருக்குத்தான் இடங்கள் அத்துப்படி. நல்ல பெரிய ஹோட்டல்களில் உள்ள பார்லர்களுக்கு அழைத்துச் செல்வார். ரிசப்ஷனிலேயே வாக்கிடாக்கியுடன் ஒருவர் வந்து அழைத்துச் சென்று ஒரு தனிஅறையில் சென்று நம்மை உட்காரவைத்து அருந்த குளிர்பானம் கொடுப்பார்கள். அந்த அறையின் மணமும் அதன் அரையிருளான ஒளியமைப்புமே நம்மை பரவசமடையச் செய்யும். பின் வாக்கிடாக்கியில் அழைத்ததும் எல்லாப் பெண்களும் சிறந்த உடை ஒப்பனை நளினத்தோடு மயக்கும் பார்வையில் நம்முன் வந்து நிற்பார்கள். அவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்ததும் அவளே நம்மை ஒரு அறைக்கு அழைத்துச்சொல்வாள். அவளே நம்மைக் குளிப்பாட்டி கட்டிலுக்கு அழைத்துச்சென்று காண்டம் அணிவித்து வழிநடத்துவாள். ஆரம்பத்தில் இருந்தே உங்களை உச்சத்திற்கு கொண்டுபோய் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இதை முடித்துவிட எல்லா முஸ்தீபுகளையும் செய்வாள். ஆனால் சில செய்யக்கூடாதவைகள் உண்டு. முகம், உதட்டில் முத்தம் கொடுக்க கூடாது என்பது போன்றவை. எனக்கு முதல் சில தடவைகள் அவை பிரச்சனையாக இல்லை எனினும் பின் அந்த செக்ஸ் அவ்வளவு உல்லாசமாய் இல்லை. மேலும் ஒவ்வொரு முறையும் முடிந்தவுடன் சிலநிமிடங்கள் இருக்கும் குற்றவுணர்வு வேறு. ஆனாலும் இத்தனை பெண்களுடன் உறவு கொண்டுள்ளேன் என்ற எண்ணிக்கைக்காக சில சமயம் சென்று வந்த பின் தவிர்த்துவிட்டேன். அதன்பிறகெல்லாம் ஹரீஸுடன் சென்றால் அவர் வருவது வரை நான் ஏதேனும் பாரில் சென்று பியர் வாங்கி அருந்திக் கொண்டிருப்பேன். அறை உள்ளேயிருந்து வந்த அந்த கசல் பாடல் பால்கனியில் லேசாகக் கேட்டுக்கொண்டிருந்தது. அதனுடன் சேர்ந்து கோலாலம்பூரின் இரவின் சப்தமும். காற்று மெலிதாக முகத்தை வருடிக்கொண்டிருந்தாலும் எனது நெற்றிப்பகுதி வியர்த்திருந்தது. மலைமேல் இருந்த கென்டிங் ஹைலேண்டின் விளக்கொளிகள் தூரத்தில் ஏதோ சிறிய நட்சத்திர கூட்டங்கள் போலத் தெரிந்தன. அந்த நட்சத்திரக் கூட்டத்திலிருந்து விலகி ஒரே ஒரு மங்கலான நட்சத்திரம் தனித்திருந்தது. அது அந்த மலைமேல் புதிதாக கட்டப்பட்டு யாருமே குடிபோகாமல் கைவிடப்பட்ட பிரசித்தியான ‘ஆம்பெர் கோர்ட்’ அப்பார்மெண்ட்டாக இருக்கலாம். அத்தனைப் பெண்கள் வரிசையில் வந்து நின்றால் கண்டிப்பாக அவளை யாரும் தேர்ந்தெடுக்கமாட்டார்கள் என்ற எண்ணம் வந்து திடுக்கிடவைத்தது. மதுவின் ஆரம்பநேர ஆசுவாசத்திற்குப் பிறகு அது உள்ளிருந்து கசடுகள், கழிவிரக்கங்கள், வீண் எண்ணங்கள் என்று எல்லாவிதமான எதிர் உணர்ச்சிகளையும் கொண்டு வர ஆரம்பித்து விட்டிருக்கிறது. அவள் நின்றுகொண்டிருந்த அந்த திசையை நோக்கிப் பார்த்தேன். கட்டிடங்களும் மரங்களும் மறைத்திருந்தன. அவள் இன்னும் அங்கு தான் நின்று கொண்டிருப்பாளா? ஹரீஸும் சிகரெட்டை ஊதியவாறு பாடலை பாடிக்கொண்டே பால்கனிக்கு வந்து என் அருகில் நின்றார். ‘ஹரீஸ் அந்த மெயின்ரோட்டுல பெட்ரோல் பங்க் பக்கத்துல ஒரு பொம்பளை நிக்கும். அதை நோட் பண்ணிருக்கீங்களா’ என்றேன். பாட்டுப் பாடுவதை நிறுத்திவிட்டு முகத்தைச் சுருக்கி என்னைப் பார்த்து ‘பாத்திருக்கேன். அவ்வளவு அவசரமா? அந்த மாதிரி ரோடு சைடுல இருக்கிற பொம்பளைக் கிட்டலாம் போகாத. அது சேப் கிடையாது’ என்று சிரித்தார். ‘இல்ல இல்ல. அதுக்கில்ல. இன்னைக்கு வரும்போது பாத்தேன். பாக்க ரொம்ப கஷ்டமா இருந்திச்சு. அங்க யாரு வருவாங்கனு அங்க நின்னுகிட்டிருக்கு’ ‘ஆமா பாவம்தான். பொதுவா இங்க ப்ராத்தல் பண்ற சீனப் பொண்ணுங்க எல்லாம் மலேசியாகாரங்க இல்ல. எல்லாம் சீனாவுல இருந்து வர்ரவங்க. இல்ல வியட்னாம், மியான்மர். அனேகமா அது மியான்மரா இருக்கும்னு நினைக்கேன். வேலைக்குன்னு கூட்டிட்டு வந்து இங்க இந்த வேலைக்கு தள்ளி விட்டுருவாங்க. இல்ல அவங்களே பணத்துக்காக மாறிருவாங்க. நிறைய பேருக்கு விசா வேலிட்டா இருக்காது. மாட்டிகிட்டா பிரச்சனைதான். கொஞ்சம் நல்லா இருக்கிற பொண்ணுங்க பார்லர்ல போய் சேர்ந்துகிடுவாங்க. கிடைக்கிற காசுல போலீசையும் கவனிச்சுகிடலாம். இத யார் சேத்துப்பாங்க. நீ போவியா? அதான் போலீசுக்கு பயந்து இங்க மறைவா வந்து நிக்கும் போல.’ அவள் சிறு பெண்ணாய் இருந்து இப்போது இப்படி ஆவது வரை அவள் கடந்து வந்திருக்க சாத்தியமான பல விதமான வாழ்க்கை முறைகள் என் கண்ணில் ஓடி மறைந்தன. அடக்கிவைக்க முயன்ற கோபமோ அழுகையோ தலையை கனக்கச் செய்தது. இருவரும் சிகரெட்டை புகைத்து முடித்தபின் ஹரிஸ் ‘இங்கயே படுத்துக்கிறியா’ என்று கேட்டார். ‘இல்ல எனக்கு இன்னொரு பீர் வேணும் போல தெரியுது. நான் வாங்கிட்டு அப்படியே ரூமுக்கு போறேன்’ என்றேன். ‘சரி. இது நான் என் மனைவியிடம் பேச வேண்டிய நேரம்’ என்று மீண்டும் கணினி அருகே சென்று உட்கார்ந்து கொண்டார். போதை மிதமாக ஏறி இருந்தது. அவரிடம் விடைபெற்று கீழே வந்தேன். அங்கிருந்த திறந்தவெளி உணவகங்களில் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. எனது அப்பார்ட்மெண்ட் நோக்கி நடந்தேன். பாலத்தைக் கடக்கும் போது அந்த ஓடையின் சத்தம் தெளிவாகக் கேட்டுக்கொண்டிருந்தது. சென்று பாலத்தின் கீழ் எட்டிப் பார்த்து நின்றேன். சிறிது நேரத்தில் ஒடையின் சத்தமும் மறைந்து ஒரே நிசப்தம். ஏனோ அந்த நிசப்தம் மனதை தொந்தரவு செய்தது. ஓடை தனியாக ஓடி இருட்டில் கலந்து மறைந்தது. அவள் இன்னும் அங்கு நிற்கிறாளா என்று சென்று பார்த்துவிடலாம் என்று தோன்றியது. எனது அப்பார்ட்மெண்ட்டை தாண்டி அந்த சாலையை அடைந்து வலப்புறம் திரும்பி சாலையின் மறுபக்கத்தில் நடக்க ஆரம்பித்தேன். ஒரு பத்து நிமிடம் நடந்திருப்பேன். ஒரு சிறிய உணவகம் ஆளில்லாமல் அரை இருளில் திறந்திருந்தது. அதுதவிர அந்த இடத்தில் எந்த ஆள் நடமாட்டம் இல்லை, ஒருசில வாகனங்கள் இருமருங்கிலும் சென்று கொண்டிருந்தன. அவள் இன்னும் அங்கு இருக்கக்கூடாது என்று வேண்டிக்கொண்டேன். பெட்ரோல் பங்க்கை தாண்டிய போது அவளைக் அங்கிருந்து காணமுடிந்தது. இன்னும் அந்த இடத்தில் இரு கைகளையும் இடுப்பில் வைத்துக் கொண்டு ஏதோ யோசனையில் நின்று கொண்டிருந்தாள். பேருந்திலிருந்து பார்த்தபோது எப்படி இருந்தாளோ அப்படியே இருந்தாள். முகம் சோர்ந்திருந்தது. நான் அவளுக்கு நேரெதிரெ சாலையின் எதிர்புறத்தில் நின்று கொண்டிருந்தேன். இருட்டில் இருந்தது அவளுக்குத் தெரிய வாய்ப்பில்லை. சிறிது நேரம் நின்று அவளைக் கவனித்துக்கொண்டிருந்தேன். அங்கேயே முன்னும் பின்னும் எதையோ முனகியபடி நடந்து கொண்டிருப்பாள். ஏதேனும் இருசக்கரவாகனம் கடக்கும் போது ‘ஹே’ என்று சொல்லி சிரிப்பாள். பின் மீண்டும் நடை. பின் கைப்பைக்குள் இருந்து ஒரு கையடக்கமுள்ள ஒரு கண்ணாடியை எடுத்து தனது ஒப்பனையை சரிபார்த்துக் கொள்வாள். என்ன நினைத்துக் கொண்டிருப்பாள். தான் அவலட்சணமாக இருக்கிறோம் என்பது அவளுக்கு தெரிந்திருக்கும் அல்லவா? மனம் மேலும் கனமானது. யாருமே வரவில்லை என்றால் அவள் இதை விட்டுத்தொலைத்திருப்பாள் இல்லையா? ஆறு மாதங்களாக இங்கு இருக்கிறாள் என்றால் யாரேனும் இவளை அழைத்துச் செல்கிறார்கள் என்று தானே அர்த்தம் என்று என்னை நானே சமாதானப்படுத்திக்கொள்ள முயன்றேன். இருபது நிமிடங்கள் அவளைக் கவனித்திருப்பேன். திடீரென்று அந்த எண்ணம் தோன்றியது. எனது பேண்ட் பைக்குள் துழாவிப் பார்த்தேன். நூறு ரிங்கெட் இருந்தது. சாலையைக் கடந்து அவளை நோக்கி நடந்தேன். திடீரென்று அங்கு முளைத்து தன்னை நோக்கி வந்த உருவத்தைக் கூர்மையாக நோக்கினாள். பின் வெளிச்சத்தில் என்னைக் கண்டதும் ஒருவேளை சாலையைக் கடக்கிறான் என்று நினைத்துக்கொண்டாள் போல அவள் முகத்தில் எந்த சலனமும் இல்லை. அவளை நெருங்கும் போது நான் அவளையே பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து ‘ஹே’ என்று உடலை அசைத்தவாறு சிரித்தாள். நான் எனது பதற்றத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் ‘ஹாய் ஹௌ மச்’ என்றேன். அவளுக்கு புரியவில்லை. அவளைக் காட்டி ‘மசாஜ், ரிங்கிட்ஸ்’ என்று கூறி எவ்வளவு என்பது போல் கையைக் காட்டினேன். அவள் மலாயில் ஏதோ சொன்னாள். பின் எனக்கு புரியவில்லை என்றவுடன் ‘மசாஜ்’ என்று சொல்லிவிட்டு இல்லை என்பது போல் தலையை ஆட்டி பையிலிருந்து அவள் மொபைலை எடுத்து அதில் 80 என்று டைப் செய்து காண்பித்து ‘செக்ஸ்’ என்றாள். எண்பது ரிங்கிட்ஸ் அவளுக்கு அதிகம் தான் என்று மனதில் தோன்றி மறைந்தது. ‘காண்டம்’ என்று கேட்டதும் அவள் தனது கைப்பையைக் காட்டினாள். நான் பாக்கெட்டில் இருந்து நூறு ரிங்கட்டை எடுத்து அவளிடம் நீட்டினேன். சிரிப்புடன் அதை வாங்கி பையில் போட்டுக்கொண்டு என்னை வா என்று செய்கை செய்துவிட்டு முன்னால் நடந்தாள். போதை இன்னும் கொஞ்சம் வடிந்திருந்தது. அந்த சாலையில் இருந்து அவளுக்கு பின்புறம் ஒரு குறுகலான தெரு சென்றது. அதை நான் இவ்வளவு நாட்களாக கவனித்ததில்லை. அதில் நுழைந்து இடப்புறம் திரும்பினாள். அது இன்னும் கொஞ்சம் குறுகலான தெரு. அந்த தெருவிலும் ஓரிரு தெருவிளக்கைத்தவிர எந்த வெளிச்சமும் இல்லை. அதிலிருந்த இரண்டாவது கட்டிடத்தின் ஒரு ஆள் மட்டுமே செல்லக்கூடிய மேல்நோக்கி செல்லும் படிக்கட்டுகளில் ஏறினாள். அது ஒரு பழைய கட்டிடம். வெளியே சுண்ணாம்பு போய் கருப்படித்திருந்தது. சுவரின் இடைவெளியில் ஆங்காங்கே செடிகள் முளைத்துநின்றன. தெருவிளக்கின் மீதமுள்ள வெளிச்சம் தவிர முழுக்கட்டிடமே இருண்டு இருந்தது. நான் எதுவும் பேசாமல் அவளைப் பின்தொடந்து சென்றேன். முதல் மாடியில் சென்று ஒரு அறையின் முன் நின்று அதன் கதவைத் திறந்தாள். அது தாழ்மட்டுமே போடப்பட்டிருந்தது. பூட்டிடப்படவில்லை. அந்த சமயத்தில் சுற்றி நோட்டமிட்டேன். அதே போல் நிறைய அறைகள் இருந்தன. சில அறைகளின் கதவின் இடைவெளியில் இருந்து மஞ்சள் விளக்கின் வெளிச்சமும் முணுமுணுப்புகளும் கசிந்து வந்து கொண்டிருந்தன. அறையின் உள்ளே நுழைந்ததும் மின்விசிறியை ஆன் செய்துவிட்டு கதவை தாழ்ப்பாள் போட்டாள். ஒரு சிறிய அறை ஒரு வாஷ்ரூம். அவ்வளவு தான். அந்த அறையையே ஒரே ஒரு பழைய படுக்கை நிறைத்திருந்தது. அதன் அருகே ஒரு சிறிய மேஜை. மேஜை மேல் ஒரு விளக்கு. கீழே குப்பைக்கூடை. படுக்கைக்கு பின்னேமூடி இருக்கும் கண்ணாடி ஜன்னல். அதன்மேல் செய்திதாள்கள் ஒட்டப்பட்டிருந்தன. அந்தப் படுக்கையை தவிர்த்து இரண்டு ஆட்கள் மட்டுமே நிற்க அங்கு இடம் இருந்தது. அந்த அறையை இதற்கு மட்டும் தான் பயன்படுத்துகிறாள் போலும். லேசான மஞ்சள் வெளிச்சம் அந்த மேஜை மேல் இருந்த விளக்கிலிருந்து வந்து கொண்டிருந்தது. அந்தக் குறைந்த வெளிச்சத்திலும் மூட்டைபூச்சியின் ரத்ததடங்கள் சுவர் முழுக்க தெரிந்தன. மின்விசிறி ஓடிக்கொண்டிருந்தாலும் அந்த அறையில் புழுக்கம் நிறைந்திருந்தது. அவள் தனது பையில் இருந்து ஒரு காண்டம் பாக்கெட்டை எடுத்து என்னிடம் கொடுத்து அவள் உடையை கழற்றிவிட்டு படுக்கையில் மல்லாந்து படுத்துக்கொண்டாள். அவள் உடம்பில் எந்த கவர்ச்சியும் இல்லை. நானும் எனது உடையை கழற்றிவிட்டேன். ஆனால் காண்டத்தை மாட்டும் அளவுக்கு இன்னும் உணர்ச்சி வரவில்லை. அதை கையிலேயே வைத்துக்கொண்டு அவள் உடல் மேல் சென்று படுத்து என் முகத்தை அவள் முகத்தில் இருந்து விலக்கி தலையணையை பார்த்தவாறு வைத்து கண்களை மூடி அவள் உடலை என்னுடைய உடலோடு தேய்த்தவாறு அவளது உடலை ஒவ்வொரு நடிகைகளின் உடலாக கற்பனை செய்யத்தொடங்கினேன். ஆனால் எந்தப் பிரயோஜனமும் இல்லை. பின் அந்த உடலை சியோக் வீயின் உடலாக கற்பனை செய்த போது உடம்பு முழுக்க வெப்பம் அதிகரித்து விரைப்பு உண்டானது. அவசரமாக எழுந்து காண்டத்தை மாட்டிவிட்டு அதே நிலையில் சியோக் வீயை நினைத்து அவள் மீது வேகமாக இயங்கினேன். அவள் கைகள் என் முதுகின் மீது அலைபாய்ந்தது. அவளிடமிருந்து வந்த முனகல் சீரான இடைவெளியில் மிக செயற்கையாக இருந்தது. பத்து நிமிட இயக்கத்திற்கு பின் உச்சம் வெளிவரும் வேளையில் அவளிடமிருந்து விலகி எழுந்து விட்டேன். அப்போதுதான் பார்த்தேன். காண்டம் முழுவதுமாகவே கிழிந்திருந்தது. அதைப் பார்த்ததும் உடலில் கணநேரத்தில் வெப்பம் அதிகரித்து வியர்த்துக் கொட்டத்தொடங்கியது. இதயதுடிப்பின் வேகம் அதிகரித்து என் காதுகளால் தெளிவாக கேட்கமுடிந்தது. கொஞ்சநஞ்ச போதையும் மொத்தமாக வடிந்திருந்தது. எனது எண்ணங்கள் எல்லாம் சூன்யமாக ஆனது. கால்கள் தள்ளாடியது. அவள் படுக்கையில் இருந்து எழுந்து உட்கார்ந்து பேயறைந்தது போல் இருந்த எனது முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அனிச்சையாக காண்டத்தை கழற்றி குப்பைக்கூடையில் போட்டுவிட்டு விறுவிறுவென்று எனது உடையை மாட்டிக்கொண்டேன். இன்னும் இதயம் வேகமாகத்தான் அடித்துக் கொண்டிருந்தது. மூச்சு விட கடினமாயிருந்தது. உடலில் நடுக்கம் குறைந்தபாடில்லை. தொண்டை வறண்டுவிட்டிருந்தது. படுக்கையில் தளர்ந்து உட்கார்ந்தேன். அவள் எழுந்து வாஷ்ரூமிற்குச் சென்று வந்து மேஜை அருகே இருந்த ஹேங்கரில் இருந்து தனது உடையை எடுத்தாள். நான் சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு அவளைப் பாராமல் ‘எய்ட்ஸ்?’ என்று கேட்டேன். அவளிடம் இருந்து பதில் வரவில்லை. பின் அவளை நோக்கி முகத்தைத் திரும்பி அவளைக் காண்பித்து நடுங்கும் குரலில் மீண்டும் ‘எய்ட்ஸ்?’ என்று கேட்டேன். அவள் அதைப் புரிந்து கொண்டு தலையைக் குனிந்து என்னைப் பார்த்து லேசாக சிரித்துவிட்டு ‘இல்லை’ என்று தலையாட்டினாள். உட்கார்ந்திருந்தவாறே கண்களை மூடி என்னை ஒருங்கிணைக்க முயன்றேன். எனது உடல் கொஞ்சம் ஆசுவாசமடைந்திருந்தது போல் தோன்றியது. திடீரென்று அவளின் அந்தப் பார்வை நினைவுக்கு வர அது ஒரு காயம்பட்ட ஆட்டுக்குட்டியின் பார்வையை ஒத்திருந்ததை உணர்ந்து திடுக்கிட்டு விழித்தேன். அங்கிருந்து உடனே போகவேண்டும் போல் தோன்றியது. நான் அவளிடம் மேற்கொண்டு எதுவும் பேசாமல் வேகமாக எழுந்து சென்று அறைக்கதவை திறக்க முயன்றேன். குறைவான வெளிச்சத்தில் அதன் தாழ்தட்டுப்படவில்லை. மீண்டும் அந்தப் பார்வையை எனது பிடரியில் உணர்ந்தபோது வெறிகொண்டு கதவைத் தள்ள முயன்றேன். அது திறக்கவில்லை. அவள் நிர்வாண உடலுடன் மெதுவாக நடந்து வந்து கதவின் மேலேயிருந்த தாழை விலக்கிவிட்டாள். நான் அவளை ஏறெடுத்தும் பார்க்காமல் தலைகுனிந்து மௌனமாக கதவைத்திறந்து வேகமாக வெளியேறினேன். திங்களன்று சியோக் வீயிடம் அந்த வேலையை முடித்து விட்டதைக் கூறியதும் அவள் கண்கள் சுருங்கச் சிரித்தாள். ஏனோ அந்த சிரிப்பை என்னால் எதிர்கொள்ள முடியவில்லை. அந்த இரவுக்குப்பின் இப்போதெல்லாம் நான் வேலை முடிந்து வரும்போது பேருந்தில் இடப்புற ஜன்னல் இருக்கையில் அமர்வது இல்லை. அந்தப் பெண் அதே இடத்தில் நின்றுகொண்டிருக்கிறாளா என்பதும் தெரியவில்லை. ஆனால் அவ்வப்போது அவளது பார்வையை எனது பிடரியில் உணருகிறேன். https://solvanam.com/2024/05/26/ஓரிரவு/1 point- பல்கலைக்கழக மாணவியை கர்ப்பமாகி தலைமறைவான கனடா வாழ் தமிழ் குடும்பஸ்தர்!
கவனித்தேன். ஒரு விடயத்தை காரணம் சொல்லி தவறு என்றால், காரணத்தைப் பார்க்காமல் "செய்தியை வேஸ்ற் என்றவன் இந்த வேலைகள் செய்ய விரும்புவன்" என்று நாசூக்காக எழுதுகிறார்! இந்த நாசூக்காக எழுதும் அளவுக்கு இயலுமை இல்லாததால் நேற்று ஒருவர் வெளிப்படையாக எழுதிய கருத்தை நீக்கினார்கள், விசுகரின் கருத்து நீக்கப் படாது! தலைகளாக இருப்பவர்கள் எல்லோரும் இப்படித் தான் இருப்பார்கள் போல😂!1 point- பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ள கருணா அம்மான்
ஏற்கெனவே தமிழர்கள் கண்ணை மூடிக் கொண்டுஅநுர குமார திசாநாயகவுக்கு புள்ளிகளை அள்ளி வழங்கி ஜனாதிபதி மாளிகை புள்ளிகளால் நிரம்பி வழிந்துகொண்டிருக்கின்றது. மேலதிகமாக இரண்டு புள்ளிகள் வைப்பதற்கு அங்கே இடமே இல்லை😳1 point- ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவுடன் பங்கேற்கமாட்டோம்; பிரிட்டன், பிரான்ஸ் அறிவிப்பு
நான் வாசித்த பிரெஞ்சுச் செய்த்திகளிலும் இப்படித்தான் இருந்தது. ஈரானை வன்மையாகக் கண்டிப்பதோடு இஸ்ரெயிலின் பக்கம் நிற்பதாகப் பிரான்ஸ் தெரிவித்திருந்தது.1 point- ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவுடன் பங்கேற்கமாட்டோம்; பிரிட்டன், பிரான்ஸ் அறிவிப்பு
அப்படி எந்த அறிவிப்பும் வரவில்லை. பிரிட்டனும், பிரான்சும் அமெரிக்காவோடு சேர்ந்து ஈரானின் இஸ்ரேல் மீதான தாக்குதலைக் கண்டித்தன என்பது தான் இந்த விடயத்தில் வந்த கடைசித் தகவல்.1 point- பல்கலைக்கழக மாணவியை கர்ப்பமாகி தலைமறைவான கனடா வாழ் தமிழ் குடும்பஸ்தர்!
கம்பஸ் பிள்ளை கனடா மாமாவை விரும்பியிட்டுது. மாமாவுடன் குடும்பம் நடாத்துது. குட்டி பபாவும் அவைக்கு கிடைக்கப்போகுது. இங்க கருத்து எழுதின ஆட்கள் எல்லாரும் ஆளுக்கு ஒரு ஐயாயிரம் ரூபா குழந்தைக்கு துடக்கு கழிக்கும்போது மொய் எழுதிபோட்டுவிடுங்கோ.1 point- The Sun/Son shines - சுப.சோமசுந்தரம்
🤣.............. உங்களுக்கு மட்டும் இல்லை, இதை வாசித்து முடித்தவுடன் எனக்கும் தோழரும் திமுக அபிமானியோ என்றே தோன்றியது.............🤣 திராவிடக் கட்சிகள் தமிழ்நாட்டை, மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், முன்னே எடுத்துச் சென்றார்கள் என்பதில் மாற்றுக் கருத்து எனக்கும் கிடையாது. பெரியார் எங்கள் எல்லோருக்கும் பெரியாரே. உதயநிதிதான் அடுத்து வரப் போகின்றார் என்பது முன்னரே தெரிந்ததே. இன்னும் சில வருடங்கள் பொறுத்து இருந்திருக்கலாம் என்பதே என்னுடையதும், பலரினதும் அபிப்பிராயம் என்றே நினைக்கின்றேன். உதயநிதி முன்னருக்கு இப்பொழுது பேச்சில் முதிர்ச்சி அடைந்து கொண்டு வருகின்றார். ஆனாலும், இதை விட நாகரீகமான அரசியலை இவரால் கொண்டு வரமுடியும், கொண்டு வரவேண்டும் என்பது ஒரு அவா......1 point- பல்கலைக்கழக மாணவியை கர்ப்பமாகி தலைமறைவான கனடா வாழ் தமிழ் குடும்பஸ்தர்!
இங்கே நாங்கள் பேசுவது தனி நபர் பற்றியது அல்ல. அவர்களது சொந்த ஊர் பெயர் மற்றும் விபரங்களை இங்கே யாரும் பேசவில்லை கோரவில்லை. ஒரு பாடசாலை நட்பை கொச்சைப்படுத்திதை புலம்பெயர் தேசங்களில் இருந்து சென்று நலிந்த மக்களை இவ்வாறு சீரழிப்பதை மட்டுமே பேசுகிறோம்.1 point- ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவுடன் பங்கேற்கமாட்டோம்; பிரிட்டன், பிரான்ஸ் அறிவிப்பு
பிரிட்டன் மற்றும் பிரான்சின் இந்த முடிவுகள் புரிந்துகொள்ளக்கூடியவை தான். இருவருக்கும் உள்நாட்டில் பலஸ்தீனாவுக்கு ஆதரவான குடியேறிகள் அதிகம். இது உள்நாட்டிற்குள் தேவையில்லாத கலகங்களை கொண்டுவரும். ஏற்கனவே 1008 பிரச்சனை. இதுக்குள்ள எதுக்கு இந்த தேவையில்லாத பிரச்சனை என்று விலகியிருப்பார்கள். இந்த முடிவு தான் ஜெர்மனியும் எடுக்கும் என்று நம்பலாம்.1 point- பல்கலைக்கழக மாணவியை கர்ப்பமாகி தலைமறைவான கனடா வாழ் தமிழ் குடும்பஸ்தர்!
நலிந்த ஒரு இனத்தின் பலவீனங்களை அதே இனத்தின் சுயநலக்கூட்டங்கள் கொஞ்சம் பணத்தை வைத்துக் கொண்டு ஆசை காட்டி மோசம் செய்வது உங்களுக்கு குடும்ப வரலாறா???1 point- பல்கலைக்கழக மாணவியை கர்ப்பமாகி தலைமறைவான கனடா வாழ் தமிழ் குடும்பஸ்தர்!
இப்படிப்பட்டவர்கள் எமது சமுதாயத்தை சீரழிக்கும் போது, உங்களின் கருத்து புல்லரிக்கின்றது அடக்கி வாசியுங்களென்று; இப்படி இன்னும் பல புலம் பெயர் பண கெழுப்பெடுத்த கிழடுகள் வருவார்கள், அவர்கள் இளவயதில் இருக்கும் பெண்களை பணத்தையும் காட்டி என்னவும் செய்யலாம் ஊடகங்களே அடக்கி வாசியுங்கள் என்று சொல்ல வருகின்றீர்களா, முக்கியமான செய்திகளும் ஊர்புதினத்தில் இருப்பதும் உங்களுக்கு நன்றாக தெரியமென நினைக்கின்றேன்1 point- பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ள கருணா அம்மான்
தமிழர் சார்ந்த ஊடகங்கள் கருணா அம்மான் என்று விழிப்பதை தவிர்க்கணும். ஒருகாலத்தில் இயக்கத்தில் போற்றுதலுக்குரியவர்களை சகபோராளிகளால் அம்மான் என்று அழைப்பது வழமை. அதனால் அம்மான் என்ற அடைமொழி அவருக்கு சொந்தமானதல்ல ,1 point- அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
******************************************************************************************************************************************ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் அவையில் இலங்கைக்கு ஆதரவளித்து, போர்க்குற்றங்களுக்கான சர்வதேச விசாரணைப் பொறிமுறைக்கெதிராக வாக்களித்தமைக்காக சவுதி அரேபியாவிற்கு நன்றி தெரிவித்த இலங்கையின் புதிய வெளிநாட்டமைச்சர் விஜித்த ஹேரத் ******************************************************************************************************************** 26, பபுரட்டாதி 2024 https://www.tamilguardian.com/content/new-sri-lankan-foreign-ministers-first-remarks-thank-saudi-arabia-combatting-un-resolutions இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் முக்கியஸ்த்தர் விஜித ஹேரத் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் சபையில் இலங்கைக்கு ஆதரவளித்து, தமிழ் மக்கள் மீது இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளுக்கான சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையினை எதிர்த்து வாக்களித்து வருகின்றமைக்காக சவுதி அரேபியாவிற்கு தனது அரசாங்கம் சார்பாக நன்றி தெரிவித்ததன் ஊடாக வெளிவிவகார அமைச்சராக தனது முதலாவது கடைமையினை ஆற்றியிருக்கிறார். மக்கள் விடுதலை முன்னணியின் மிக முக்கிய உறுப்பினராகக் கருதப்படும் விஜித்த ஹேரத், தான் வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்ற சற்று நேரத்தின் பின்னர், கொழும்பில் இடம்பெற்ற சவுதி அரேபியாவின் தேசிய நாள் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இந்த நன்றியைத் தெரிவித்திருந்தார். "ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் சபையில் இலங்கைக்கு ஆதரவாகச் செயற்பட்டு வரும் சவுதி அரேபியாவிற்கு நன்றி கூற இத்தருணத்தை நான் பாவிக்க விரும்புகின்றேன்" என்று அவர் கூறினார். தற்போதைய ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை சபையின் அமர்வுகள் இப்போது நடைபெற்று வருகின்றன. அங்கு இலங்கைக்கெதிரான புதிய தீர்மானம் ஒன்று முன்வைக்கப்படவிருப்பதாக அறியவருகின்றது. இதுவரை இலங்கைக்கெதிராக முன்வைக்கப்பட்ட மனிதவுரிமைச் சபைத் தீர்மானங்களில் சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றை ஏற்றுக்கொண்டு, சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறை ஒன்றினூடாக போர்க்குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தவேண்டும் என்று தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்த போதிலும், கடந்தகால அரசாங்கங்கள் இவற்றில் எதுவித அக்கறையும் கொள்ளாது நிராகரித்தே வந்திருக்கின்றன. இந்த நிகழ்வில் கலந்துகொண்டவர்களில் மிக முக்கியமானவர் முன்னள் இராணுவத் தளபதியும், இறுதிப் போரின்போது ஆயிரக்கணக்கான தமிழர்களைப் படுகொலை செய்ததில் நேரடியாகப் பங்குகொண்டிருந்தவரும், இதனாலேயே அமெரிக்காவிற்குள் செல்லத் தடைவிதிக்கப்பட்டிருப்பவருமான சவேந்திர சில்வா என்பது குறிப்பிடத் தக்கது. அமெரிக்கா இவரது பயணத்தடை குறித்து அறிவிக்கும்போது, "இறுதி யுத்தத்தில் நடத்தப்பட்ட கூட்டுப் படுகொலைகள் மற்றும் பாரிய மனிதவுரிமை மீறல்களில் கட்டளைத் தளபதி என்கிற ரீதியில் சவேந்திர சில்வா நேரடியாகப் பங்கெடுத்திருக்கிறார் என்பதை நம்பத்தகுந்த ஆதாரங்கள் ஊடாக உறுதிப்படுத்தியிருப்பதால் இவரை எமது நாட்டிற்குள் வர நாம் தடை விதிக்கிறோம்" என்று குறிப்பிட்டிருந்தது. தமிழ் மக்கள் மீதான மிகக்கொடூரமான இலங்கை அரசாங்கத்தின் இறுதி யுத்தத்தின்போது படுகொலைகளுக்குப் பெயர்பெற்ற 58 ஆவது படைப்பிரிவிற்கு சவேந்திர சில்வா கட்டளைத் தளபதியாக இருந்தார். 2009 ஆம் ஆண்டின் தமிழ் இனக்கொலையில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் படுகொலைகளில் இவரது படைப்பிரிவும் நேரடியான பங்களிப்பைச் செலுத்தியிருந்தது. இவரும் இவரைப்போன்ற ஏனைய சிங்கள இராணுவத் தளபதிகளும் வைத்தியசாலைகள் மீதான இலக்குவைத்த தாக்குதல்கள், பரந்த கூட்டுப் பாலியல் வன்புணர்வுகள், சித்திரவதைகள், சரணடைந்தவர்களை சகட்டுமேனிக்குச் சுட்டுப் படுகொலை செய்தல் போன்ற பாரிய மனிதவுரிமை மீறல்களுக்கு தலைமை தாங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சிறு குறிப்பு : நாட்காட்டி, திகதியின் பிரகாரம் பதிவிடப்படுகின்றபோதிலும் அவ்வப்போது தற்போது நடந்துவரும் விடயங்களை ஆங்காங்கே இணைப்பதனால் வாசகர்கள் இதனைப் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன். நன்றி!1 point- பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ள கருணா அம்மான்
அப்படி சேர்க்காவிடில் அனுராவுக்கு இரண்டு புள்ளிகள் அதிகமாக கொடுக்கலாம்1 point- அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
உங்கள் பார்வை நூறு வருடங்களுக்கு முன்னரானது. அதை தமிழர்கள் செய்து ஏமாற்றப்பட்டு அடக்கப்பட்டு இனி இரு இனமும் ஒட்டாது என்ற வருத்தமான முடிவுக்கு வந்தாச்சு. இதற்கு தமிழர்கள் காரணம் இல்லை. மேலும் மேலும் தமிழர்களே காலில் விழுவதும் விழச்சொல்வதும் அநியாயம். அக்கிரமத்துக்கு துணை போகுதலே.1 point- உண்மைக் கதை: "நிழலாக ஆடும் நினைவுகள்" [எங்கள் சிறிய மருமகளின் பிறந்தநாள் நினைவு இன்று, 03 அக்டோபர்]
1 pointமனது கனத்துப் போனது.1 point- இஸ்ரேல் மீது எந்தவேளையிலும் ஈரான் ஏவுகணை தாக்குதலை மேற்கொள்ளலாம் - அமெரிக்கா
நான் உவப்பானவற்றுக்கு சில சமயங்களில் ஆதரவு அளிக்கின்றேன். ஆனால், உவப்பானவை எல்லாம் உண்மை என நம்புவது இல்லை. உண்மைகள் பல கசக்கவே செய்யும். நீங்கள் ஈரான் ஏவிய ஏவுகணைகள் போயிங்க் விமானத்தை விட வேகம் குறைவானது என எப்படி கணித்தீர்கள் என அறியத்தாருங்கள். அதன் உண்மை தன்மையை பார்ப்போம். உங்களுக்கு உவப்பாக இருக்கவேணும் என்பதற்காக உண்மைக்கு புறம்பாக நீங்கள் வேகத்தை குறைத்து மதிப்பிட்டீர்களா என பார்ப்போம்.1 point- அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
அனுரவை எதிர்பதால் என்ன லாபம்? சில விடயங்களுக்கு நாங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நடக்கும். சர்வதெசம் என்று ஒருநடவடிகையும் எடுக்கப் போவதில்லை. எமக்கு கடந்த காலத்தில் வாழ்வது பிடித்த விடயம்.1 point- பொதுத் தேர்தலுக்குப் பின்னர் NNPஐ ஆதரிக்க ஈபிடிபி தயார்
1 point- அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
தமிழர்கள் சுய நிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மலையளவு, ஆனால் நான் இதனைச் சொல்வதால் மக்கள் விடுதலை முன்னணியும், சிகல உறுமயவினரும் என்னைக் கொன்றுவிடப்போகின்றன - மகாகல்கடவெல புண்ணியசார தேரர் 21 ஐப்பசி, 2001 அரச ஆதரவு துணை இராணுவக் குழுவினால் படுகொலை செய்யப்பட்ட பத்திரிக்கையாளர் நிமலராஜனின் நினைவுப் பேருரை மட்டக்களப்பில் நடைபெற்றது. கிழக்கிலங்கைப் பத்திரிக்கையாளர் அமைப்பினால் இந்த நினவுப் பேருரை நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் பேராசிரியர் வி டி தமிழ்மாறன் மற்றும் குருநாகலை மகாகல்கடவெல புண்ணியசார தேரர் ஆகியோர் உரையாற்றினர். "சுதந்திரத்திற்காகப் போரிடும் ஒரு இனம், அப்போரில் அடக்குமுறையாளனிடம் தோற்கும்போது, சர்வதேச சமூகம் அவ்வினத்திற்கான சுயநிர்ணய உரிமையினை மறுத்துவிடுகிறது. இது உண்மையிலேயே மிகவும் கவலைதரும் விடயமாகும். நைஜீரியாவிலிருந்து பிரிந்துசென்று தனியான நாடு கோரிப் போரிட்ட BAFTA மக்கள் போரில் தோற்றதன் பின்னர் அவர்களுக்கான சுய நிர்ணய உரிமையினை சர்வதேச சமூகம் நிராகரித்தது" என்று தமிழ்மாறன் கூறினார். மகாகல்கடவெல புண்ணியசார தேரர் பேசும்போது, "இலங்கையில் இருப்பது தமிழ்ப்பிரச்சினையல்ல, ஆனால் பயங்கரவாதப் பிரச்சினையே என்று கூறிவரும் சில பெளத்த பிக்குகளை என்னுடன் நேரடியான விவாதத்திற்கு வருமாறு அறைகூவல் விடுக்கிறேன். என்னிடம் யாராவது தமிழருக்கென்று ஒரு பிரச்சினை இருக்கிறதா என்று வினவினால், ஒரு பிரச்சினையல்ல, மலையளவு பிரச்சினைகள் இருக்கின்றன என்று நான் கூறுவேன். நான் இப்படிக் கூறுவதால் மக்கள் விடுதலை முன்னணியோ அல்லது சிகல உறுமயவினரோ என்னைக் கொன்று போடலாம். அந்தச் சிங்கள இனவாதிகளைப் பொறுத்தவரையில் இங்கிருப்பது ஒற்றைச் சிங்கள தேசம்தான், ஒற்றைச் சிங்கள பெளத்த நாடுதான்". "ஆனால் சிங்களவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? இலங்கையை ஆண்ட முன்னாள் அரசர்களில் பலர் தமிழர்களே. பல அரசர்கள் தென்னிந்தியத் தமிழப் பெண்களையே மணம் முடித்தனர். புராதன காலத்து இலங்கையின் போர்வீரர்களும் தளபதிகளும் தென்னிந்தியாவில் இருந்து வந்தவர்களே. அதுமட்டுமல்லாமல் சிங்கள அரசர்களின் பெருமைமிகு மெய்ப்பாதுகாவலர்கள் கூடத் தென்னிந்தியத் தமிழர்களே. இவர்கள் எவருமே தென்னிந்தியாவிற்குத் திரும்பிச் செல்லவில்லை. இங்கேயே மணம் முடித்து, இலங்கையின் பல பாகங்களிலும் அவர்கள் குடியேறினார்கள். ஆகவே இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழர்கள் எமது சகோதரகள், எமது உறவினர்கள். நாங்கள் எலோரும் ஒரே வம்சாவளியில் இருந்தே வந்தவர்கள். இங்கே தனிச் சிங்களவர்கள் என்று ஒரு இனம் இல்லை" என்று அவர் மேலும் கூறினார். "சுதந்திரத்திற்குப் பின்னரான காலத்தில் இரு அதிகாரம் மிக்க சிங்களக் குடும்பங்கள் இலங்கையை ஆண்டன. கொழும்பில் இருந்து ஆண்டுகொண்டு முழு இலங்கைக்கும் அவர்கள் தீமூட்டினர். அவர்கள் தமிழர்களின் பிரச்சினையினை ஒருபோதுமே தீர்க்கப்போவதில்லை" என்று அவர் முடித்தார்..1 point- மக்கள் விருப்பப்படி பொதுத்தேர்தலில் தமிழ் அரசுக் கட்சி ஆற்றல் மிக்க புதுமுகங்களைக் களமிறக்கவேண்டும் - சுமந்திரன்
பதினைந்து வருடமாக மட்டும் அல்ல அதற்கு முன்பும் மக்கள் அரசியல் மயப்படுத்தப்படவில்லை. வாக்கு அரசியலை தொடங்கி வைத்த தமிழரசுக்கட்சி இனப்பிரச்சனையை தீர்ககும் அரசியலை விட மக்களை உசுப்பேற்றி உணர்சிவசப்படுத்தி பதவிகளை பெறுவதை மட்டுமே செய்தது. அதன் விளைவான ஆயிதப்போரட்டம். ஆயுதப்போரளிகளும் மக்களை அரசியல் மயப்படுத்தவில்லை . உணர்சிவசப்படுத்தி தாயகத்தில் ஆட்சேர்ப்பதும் புலம் பெயர் நாடுகளில் நிதி சேர்ப்பதுமே அரசியல் என்றே தமது ஆயுதப் போரை தொடர்ந்தனர். முன்னைய இரண்டு பகுதியினரின் அரசியல் அறிவற்ற தவறுகளின் விளைவே தற்போதைய சுயநல அரசியல். தற்போதும் பழைய தவறான அரசியலின் தொடர்ச்சியே நடக்கிறது. அதை மாற்றாதவரை இப்படி ஆளையாள் திட்டும் அரசியலே தொடரும். 75 வருட அரசியல் சூனியநிலைமை தொடர்கிறது. உண்மையில் இந்தியாவை எமது மக்களோ அரசியல்வாதிகளோ நம்பவில்லை. இந்தியாவைக் கையாள தெரியாமல் தடுமாறுகிறார்கள் என்பதே உண்மை. ஶ்ரீலங்கா அரசு மிகச் சிறப்பாக கையாளுகிறது என்பதை மறுக்க முடியாது. மூர்ககமாக எதிர்ப்பது அல்லது அப்படியே அவர்கள் சொன்னதை கேட்பது தான் எம்மவரின் தற்கொலை அரசியல். இரண்டுமே எம்மை அழித்தது.1 point- பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை - முன்னாள் எம்.பி வினோ அதிரடி அறிவிப்பு
இம்முறை மாவைக்கும் பார் சிறீதரனுக்கும் தமிழரசுக் கட்சி சார்பில் சீட்டு கிடைக்காது. மத்திய குழு கட்சி முடிவை மீறி சங்கூதியவர்களை இடைநிறுத்தப் போவதாகவும் ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்ட்டு தோல்வியுற்றவர்களுக்கும் இடம்கிடைக்காது என உறுதியாக நம்பலாம். அது தான் பார் சிறீதரன் டக்கெண்டு அநுரவை பார்க்க ஓடினவர். அநுர கொடுப்புக்குள்ள சிரித்திருப்பார்!😂1 point- தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் அநுர அரசாங்கத்தின் நிலைப்பாடு
சனாதிபதிக்குரிய நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி இவர்களை இலகுவாக விடுதலை செய்ய முடியும். அல்லது பொது மன்னிப்பினூடாகவும் விடுதலை செய்ய முடியும், பார்ப்பம், பாராளுமன்றத் தேர்தலிற்கு முன்பாக இவர்களை அனுர விடுதலை செய்கின்றாரா என. தமிழ் கட்சிகள் மனசுக்குள் இவர்களை விடுவிக்க கூடாது என்று மன்றாடும் என நினைக்கின்றேண். அப்படி விடுதலை செய்து விட்டால், அவர்களை வைத்து இனி அரசியல் செய்ய முடியாத நிலை அவர்களுக்கு வரும்.1 point- முல்லை மக்கள் என்பிபியை நோக்கி படையெடுப்பு.
1 point- அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
ரஞ்சித், உங்கள் கருத்துக்களுக்கு எதிர் கருத்து வைத்தால் உங்களை ஒன்றும் செய்யாது என்று சொல்லும் நீங்கள் ஆதரவு தந்தால் புளகாங்கிதம் அடைகிறீர்கள். இதில் சொல்வதற்கு என்னிடம் எதுவும் இல்லை. இது ஒரு சாதாரண மனித இயல்புதான். “யாழ் இணையம் என்னைத் தடை செய்யும் வரையில் எழுதுவேன்” என்கிறீர்கள். உங்கள் கருத்திலும், அவை சொல்லப்படும் தன்மையிலும், கண்ணியம் காப்பதிலும் நீங்கள் கவனம் வைத்தால்,அவர்கள் ஏன் உங்களைத் தடை செய்யப் போகிறார்கள்? நீங்கள் சரியாகத்தான் போய்க் கொண்டிருக்கிறீர்கள். உங்களிடம் ஏன் இப்படி ஒரு எண்ணம் வந்தது என்று புரியவில்லை. இனவாதியென்று என்னை அடையாளம் கண்டுகொண்ட இன்னும் சிலருக்கும் எனது நன்றிகள் என்கிறீர்கள். இனவாதியை இனவாதி என்றுதானே சொல்ல வேண்டும். உங்களுக்கு அது தெரியாததால் சொல்லியிருக்கிறோம். தமிழில் சொல்வார்களே,‘அவனவன் வியர்வை நாற்றம் அவனவனுக்குத் தெரியாது’ என்று. அதே நிலைதான் இங்கும். சரித்திரத்தில் இருந்து நாம் எதையும் கற்றுக்கொள்ளவில்லையென்றால், சிங்கள இனவாதிகளிடம் மீண்டும் ஒருமுறை ஏமாற்றப்படப்போகிறோம் சரித்திரத்தில் இருந்து நாங்கள் கற்றுக் கொண்ட அந்தப் புரிதலில்தான் நாங்கள் வித்தியாசப் படுகின்றோம். சுதந்திரம் பெற்றதன் பின்னர் எல்லாத்துறையிலும் நாங்கள்தான் கோலோச்சிக் கொண்டு இருந்தோம். ‘மாத்தையா’ என்ற தகுதியோடு வாழ்ந்தோம். பண்டா, சில்வாக்களை வீட்டு வேலைக்கு வைத்துக் கொண்டோம். ஒரு கட்டத்தில் அவர்கள் சிந்திக்க ஆரம்பித்தார்கள். அவர்களது அந்தச் சிந்தனை, எங்களை அடக்குமுறைக்குள் கொண்டு வந்து விட்டு விட்டது. அப்பொழுதுதான் நாங்கள் சிறுபான்மையினர் என்பது எங்களுக்குப் புரிய ஆரம்பித்தது. பிறகு சுதாகரித்துக் கொண்டு, சகோதரர்களாக இருப்போம் என்று முயற்சி செய்தோம். அவர்கள் நம்பத் தயாரக இல்லை. பேசிப் பார்த்தோம் எதுவுமே நடக்கவில்லை. சாத்வீகத்தில் நின்றோம், ஆயுதங்களைக் கையில் எடுத்தோம். எல்லாவற்றிலும் எங்களால் அவர்களை வெல்ல முடியவில்லை. எங்களின் போராட்டம் 75 வருடங்களாகத் தொடர்கிறது என்று சொல்கிறார்கள். அந்தப் போராட்டத்தின் வடிவங்கள் வெவ்வேறு வடிவங்களில் இருக்கின்றன. அத்தனை வடிவங்களையும் உருவாக்கியவர்கள் அரசியல்வாதிகள்தான். மக்கள் அல்ல. அந்த அரசியல்வாதிகள் சொல்வதை ஏற்று மக்களும் அந்த வழியில் நின்றார்கள். ஆங்காங்கே சில அரசியல்வாதிகள் கொல்லப்பட்டாலும், மக்கள்தான் பெரும் இழப்புகளுக்கு எப்பொழுதும் ஆளானார்கள். இறுதியான போராட்ட வடிவத்தில் பலர் நாட்டை விட்டே ஓடி விட்டார்கள். பாதி இளைஞர்கள் போரில் இறந்து விட்டார்கள். பலர் ஊனமாகிப் போனார்கள். இன்னும் சிலர் காணாமல் போய்விட்டார்கள். இன்றும் தாய்மார்கள் அவர்களைத் தேடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆக கடந்த 75 வருடங்களாக பல இழப்புகளைக் கண்ட மக்களுக்கு ஆசுவாசமாக மூச்சை விடுவதற்கு இப்பொழுது ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. அது எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை விடுத்து அவர்கள் ஒரு நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் என்பது சிறிது மகிழ்ச்சியைத் தருகிறது. அந்த மகிழ்ச்சி நீடிக்க வேண்டும். அதற்கான வழி வகைகள் என்ன என்பதுதான் இன்றைய கேள்வி. ‘நாங்கள் மீண்டும் ஏமாறப் போகிறோம். அவர்கள் ஏமாற்றப் போகிறார்கள்’ என்று சொல்லிக் கொண்டேயிருந்தால், நாங்கள் யாரிடம் இருந்து எங்களுக்கான தீர்வைப் பெறப் போகிறோம் என்ற கேள்வி இருக்கிறது. சர்வதேசம் தீர்க்கப் போகிறதா? இல்லை இந்தியாதான் உதவுமா? ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள் தமிழகத்தில் ஒரு ஆளுனர்தான் இருக்கிறார். எங்களுக்கு மாகாணத்துக்கான அதிகாரம் வந்தாலும் கூட அப்பொழுது ஒரு ஆளுனர் மட்டுமல்ல ஏற்கனவே வந்து பாய் போட்டு படுத்திருக்கும் இந்தியத் துணைத் தூதுவரும் ஆளுனர் போலவே நடந்துகொள்வார். ஜேவிபியின் போராட்டத்திலும் பல இளைஞர்கள் கொல்லப்பட்டனர். அவர்களுக்கும் நீதி கிடைக்கவில்லை. எங்களுக்குக் கிடைத்தால் மகிழ்ச்சி. பொருளாதாரப் பிரச்சினையில் இலங்கை அமிழ்ந்து போய் இருக்கிறது. பாதிக்கப் படுவது ஓட்டு மொத்தமான மக்களும்தான். கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களையும் பயன் படுத்துவதும் சாதுரியமாகச் செயல்படுவதும்தான் சிறப்பு. பதறிய காரியங்கள் எல்லாம் சிதறிப் போகும். பிரபாகரன் கூடச் சொன்னார் ‘போராடுவதற்கு முதலில் ஒரு தளம் இருக்க வேண்டும்’ என்று பேசுவதற்கும் அது பொருந்தும். இப்பொழுது அது கிடைத்திருக்கிறது. அதைக் குழப்பாமல் பயன்படுத்துவோம். மேற்கு நாடுகள் கூட, ‘இலங்கையில் முதன் முதலாக இடதுசாரி ஆட்சி’ என்று ஆச்சரியப்பட்டுப் பார்க்கிறார்கள். அடுத்து என்ன நடக்கப் போகிறது, ஆட்சியின் அணுகுமுறை எப்படி இருக்கப் போகிறது என்று அமைதியாக இருந்து அவதானிக்கிறார்கள். ‘ஒருநாளிலேயே மாற்றம் கொண்டுவர நானொன்றும் மந்திரவாதி இல்லை’ என்று அனுராவே சொல்லியும் இருக்கிறார். நாங்களும் அமைதி காப்போம். எள்ளி நகையாடுங்கள், இந்திய விசுவாசி என்று அடையாளம் காணுங்கள், இந்துவெறியன் என்று அழையுங்கள்......எதுவுமே என்னை கலக்கமடையச் செய்யப்போவதில்லை. என்று எழுதியிருந்தீர்கள் கோயிலில் பக்தர்கள் பக்தியில் மூழ்கி இருக்கிறார்கள். அந்த இடத்தில் போய் நின்று கொண்டு, “கோயில் பிழை. கடவுள் இல்லை. கோயிலை இடி” என்று நான் கத்தினால், இடி கோயிலுக்கு விழாது. எனக்குத்தான் விழும். அதுதானே உண்மை. இறுதியாக, புதிய ஜனாதிபதிக்கு மேல் ‘இனவாதி’ என்று உமிழ்ந்து விடாமல் அவருக்கான சந்தர்ப்பத்தைக் கொடுத்துப் பார்க்கலாம். எதற்குமே சந்தர்ப்பம் கொடுக்காமல் பழசையே கிண்டிக் கொண்டிருப்பதால் எந்த இலாபமும் கிடைக்கப் போவதில்லை. நீங்கள் இப்பொழுது அவசரமாக ஓடிவந்து, அனுராவை கரித்துக் கொட்டுவதெல்லாம் பலரது இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளுவதற்காகத்தானோ என்ற எண்ணம் கூட எனக்கு வருகிறது. கஜினி பலமுறை (17) தோற்றும் இறுதியில் வென்றான் என்பதும் சரித்திரத்தில் இருந்து கற்றதுதான்.1 point- அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
என்னை இங்கு வந்து தனிப்பட்ட ரீதியில் தாக்கியும், என் மீது வசை மாறி பொழிந்தும் இன்புற்றவர்களுக்கு முதற்கண் எனது நன்றிகள். எனென்றால், உங்களின் எதிர்ப்பே என்னை இத்தொடரை இறுதிவரை இழுத்துச் சென்று முற்றாகப் பதியும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. உங்களின் வசைகளும், "நாசமாய்ப் போவாய்" என்கிற "ஆசீர்வாதங்களும்" என்னை ஒன்றும் செய்யப்போவதில்லை. எனது கருத்துக்களுக்கு மதிப்பளித்து, ஊக்கமும் ஆதரவும் தரும் ஈழப்பிரியன் அண்ணா, நுணாவிலான், பெருமாள் ஆகியோரிற்கு எனது இருகரம் குவிந்த நன்றிகள். எழுதுவதற்கான எனது உரிமையை ஏற்றுக்கொண்டபோதிலும், இனவாதியென்று என்னை அடையாளம் கண்டுகொண்ட இன்னும் சிலருக்கும் எனது நன்றிகள். யாழ் இணையம் என்னைத் தடை செய்யும் வரையில் எழுதுவேன். நான் எழுதுவது நடந்த சரித்திரத்தை. சரித்திரத்தில் இருந்து நாம் எதையும் கற்றுக்கொள்ளவில்லையென்றால், சிங்கள இனவாதிகளிடம் மீண்டும் ஒருமுறை ஏமாற்றப்படப்போகிறோம் என்கிற ஆதங்கத்தில்த்தான். அதை இங்கே செய்யவேண்டாம் என்றாலும் கவலைப்படப்போவதில்லை. எனது கருத்துக்களை வெளிக்கொணர வேறு மார்க்கங்களும் இருக்கின்றன. எனது இனம் மீது இன்றுவரை நடத்தப்படுகின்ற திட்டமிட்ட இனக்கொலை, எனது தாயகம் மீது ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள பெளத்த இராணுவம், நாள்தோறும் கபளீகரம் செய்யப்பட்டு, சிங்களமயமாகும் எனது தாயகம், கொல்லப்பட்ட எனது மக்களுக்கும், மாவீரர்களுக்குமான நீதி, அரசியல்கைதிகளுக்கான விடுதலை, காணாமலாக்கப்பட்டவர்களுக்கான நீதி...இவை அனைத்திற்குமான நேர்மையான பதில்களும், தீர்வுகளும் எந்தவொரு சிங்களத் தலைவனிடமிருந்து உண்மையாக வருகின்றதோ, அன்றைக்கு நான் எழுதுவதை நிறுத்திவிடுகிறேன். என்னை இனவாதி என்று அழையுங்கள், சாதியில் குறைந்தவன் என்று முகத்தில் உமிழுங்கள், ஆங்கிலமும் தமிழும் தெரியாதவன் என்று எள்ளி நகையாடுங்கள், இந்திய விசுவாசி என்று அடையாளம் காணுங்கள், இந்துவெறியன் என்று அழையுங்கள்......எதுவுமே என்னை கலக்கமடையச் செய்யப்போவதில்லை. எனது பணி தொடரும். முடிந்தால் யாழில், இல்லாவிட்டால் எனக்கு எங்கெல்லாம் எழுதமுடியுமோ, அங்கெல்லாம். எல்லோருக்கும் நன்றி. இடதுசாரி எனும் போர்வைக்குள் ஒளிந்து நின்றுகொண்டு தனது தீவிர சிங்கள இனவாத முகத்தை மறைக்க எத்தனிக்கும் அநுரவுக்கெதிரான எனது கருத்துக்கள் மறுபடியும் இன்றிரவில் (சிட்னி நேரப்படி 8 மணி) இருந்து தொடரும். மறவாமல் உங்களின் வசைவுகளையும் அடிக்கடி இணையுங்கள், எழுத்துத்துணைக்கும் எனக்கு ஆள்த் தேவைப்படுகிறது.1 point- அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
புலிகளின் நடவடிக்கைகளை விமர்சனத்துக்கு உட்படுத்த வேணும் என்று சொல்லி புலிகளை வசைபாடுவது உங்க ஸ்டைல் இங்கு அனுரா வின் கடந்த கால நடவடிக்கைககள் அவர் கட்சி சார்ந்த தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைககள் போன்றவற்றை ரஞ்சித் எமது பார்வைக்கு நினைவு படுத்துகிறார் உங்களால் அவர் எழுதிய விடயங்களில் பிழை கண்டு பிடிக்க முடியவில்லை ஏனென்றால் அவர் எழுதுவது அனைத்தும் நடந்த விடயங்களே .பொது வேட்பாளர் அவர் உண்மையிலே யார் என்று தெரியாத போதிலும் தமிழ் தேசியத்தை கரித்து கொட்டுவதுதான் யாழில் உங்களின் 24 மணி நேர சேவை . நல்ல கருத்துக்கள் வரவேணும் அதற்காக எப்ப பார்த்தாலும் பழம் சீல கிழிந்தது போல் தமிழ் தேசியத்தை கரித்து கொட்டிக்கொண்டு புலம்பெயர் தமிழரையும் திட்டிக்கொண்டு எழுதுவதை எல்லாம் நீங்கள் கருத்து என்று எடுத்து கொண்டது உங்கள் சிறுமைத்தனத்தை வெளிச்சம் போட்டு காண்பிக்குது . அநேகமா இனி அனுரா திருந்தியும் இருக்கலாம் இரு இனமும் ஒன்று பட்டால் தான் அந்த தீவில் நல் வாழ்வு என்று அதற்கு முதல் ....................அறுத்து ஆடுகிரியல் உங்க வழக்கமான விளயாட்ட ?1 point- புலம்பெயர் தமிழர்கள் vs புலம்பெயர் சிங்களவர்கள்
"இனவாதிகள் இனி இலங்கையை ஆள முடியாது" என்று அனுரா பேசியதாக ஒரு youtube தலைப்பு பார்த்தேன். அவருடைய பின்புலமே ஒரு இனவாத பின்புலம் தான். அது இருக்கட்டும். இனவாதம் ஒன்று அவ்வளவு பொல்லாத நிலைப்பாடு இல்லை. அதை சரியான முறையில் கையாண்டால் அதுவும் நல்லது தான். அனுரா தெரிவுசெய்யப்பட்டதே ஒரு இனவாத தேர்தல் முறையில் தானே. 5௦% வாக்குகளை ஒருவர் பெறவில்லையென்றால் அவர் வென்றதாக அறிவிக்கமுடியாது. ஒரு தமிழருக்கு 5௦% வாக்குகள் கிடைப்பது இலங்கையில் சாத்தியமா? அப்படியே ஒரு தமிழர் 49% வாக்குகள் பெறுகிறார் என்று வைத்துக்கொள்ளவோம். அடுத்தக்கட்ட விருப்பு வாக்குகள் சிங்களவர்கள் யாருக்கு போடுவார்கள் என்று நினைக்கிறீர்கள்? தமிழருக்கா? எண்ணிக்கையளவில் பல மடங்கு அதிகமாக உள்ள சிங்களவர்களின் விருப்பு வாக்கு ஒரு சிங்களவருக்கு தான் விழும். இந்த முறை ஒரு இனவாதம் இல்லையா? அனுரா இதை புரியாதவர் ஒன்றும் இல்லை. இலங்கையின் இந்த ஆட்சி மாற்ற முறை தென்னமெரிக்க நாடுகள் பலவற்றில் நடந்திருக்கிறது. அரபு புரட்சியையும் மறந்துவிடுவதற்கில்லை. ஊழல், பொருளாதார நெருக்கடி என்று பேசி முன்னர் இருந்த அரசை வீழ்த்தி ஒருவர் வருவார். பின்னர் அதே காரணத்தை கூறி அவரை வீழ்த்துவதற்கு இன்னொருவர் வருவார். இந்த நாடுகளில் IMF, அமெரிக்கா எதிர்ப்பு தலைதூக்கியிருக்கும். எனவே இப்படி நடைபெறும் ஆட்சி மாற்றங்களை அமெரிக்கா ஒருபோதும் விரும்பாது. IMF ஒன்றும் ஆட்சியில் இருப்பவர்களுக்கு கடன் கொடுப்பதில்லை. அது ஒரு அரசாங்கத்திற்கு தான் கொடுக்கிறது. எனவே ஏற்கனவே இருந்தவர்கள் வாங்கிய கடனில் இருந்து அனுரா தப்ப முடியாத வரை அவர் வெளித்தோற்றத்திற்கு IMFயை எதிர்ப்பது போல் பாசாங்கு செய்யலாம். உள்ளே அவரும் IMF கைப்பாவையாக செயல்படத்தான் வேண்டும். எந்த அமெரிக்கா நிறுவனங்களிலும் அவர் கை வைக்க முடியாது. அனுரா அமெரிக்காவையும் எதிர்க்கிறார். IMFயையும் எதிர்க்கிறார். ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்களையும் எதிர்க்கிறார். இந்த மூன்றையும் எதிர்த்து அவர் நீண்ட நாட்கள் ஆட்சியில் நிலைப்பது சாத்தியமில்லை. அவர் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தி, தமிழர்களுக்கு சிறிதளவேனும் நன்மை செய்ய தொடங்குகிறார் என்றால், இப்பொழுது வெளிநாட்டிற்கு தப்பிச்சென்ற முன்னாள் ஜனாதிபதிகளின் பிள்ளைகளை சிங்கள மக்களே மீண்டும் நாட்டுக்குள் கொண்டு வந்து ஆட்சியில் அமரவைப்பார்கள். புரட்சியின் மூலம் ஆட்சி மாற்றம் வந்த நாடுகளில் இதுவும் நடந்து தான் இருக்கிறது. இலங்கையில் புரட்சியாளன், சிவப்பு புரட்சி வென்றது என்று புலம்பெயர் தமிழர்கள் சில்லறைகளை சிதறவிடுவதை கொஞ்சம் தள்ளி போடுவது நல்லது. தமிழர்களிற்கு இலங்கை அரசியலில் எப்பொழுதுமே "சங்கு" தான். எல்லோருக்குமே ஒரு மாற்றம் தேவைபட்டது. மற்றும்படி இதில் சிங்கள டயஸ்போராக்களின் புத்திசாலித்தன்மை என்று ஒன்றையும் நான் காணவில்லை.1 point- புலம்பெயர் தமிழர்கள் vs புலம்பெயர் சிங்களவர்கள்
தேவைக்கு ஏற்ற பதிவு நிழலி. நாங்கள் இன்னமும் தமிழர்களின் சங்ககாலத்து வீரம், ஆளுமை போன்ற பழைய காலத்துப் பெருமைகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றோமே தவிர, இப்பொழுது எந்த நிலையில் இருக்கின்றோம் அடுத்து என்ன செய்யப் போகின்றோம் என்பதைப் பற்றி நாங்கள் நினைத்துப் பார்ப்பதில்லை. மற்றைய நாடுகளைப் பற்றி எனக்குத் தெரியவில்லை. ஆனால் யேர்மனியைப் பற்றி என்னால் ஓரளவு சொல்ல முடியும். யேர்மனியில், தாயகத்துக்காக, தமிழர்களின் மீட்சிக்காக செயற்படும் அமைப்புகளைக் காண முடிவதில்லை. தமிழ் அமைப்புகள் என்று தொடங்கப்படும் பல அமைப்புகள் நீண்ட காலங்களுக்குச் செயற்படுவதும் இல்லை. ஒரு காலத்துக்குப் பின் அவை முடங்கிப் போய்விடுகின்றன. ஓரளவுக்கு நீண்ட காலங்களாகச் செயற்படும் அமைப்பு என்றால், விடுதலைப் புலிகளினால் ஆரம்பிக்கப்பட்டு உலகத் தமிழர் இயக்கமாக மாறி இன்று தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற ஒன்றைத்தான் சொல்ல முடியும். இவர்களின் இருப்புக்குக் காரணமே யேர்மனியில் உள்ள தமிழ் பாடசாலைகள்தான். தமிழர் ஒருங்கிணைப்பானது விடுதலைப் புலிகளின் சகல நிகழ்வுகளைகளையும் மேடை ஏற்றுகிறது. அதில் உள்ளவர்கள் கோட் சூட், கறுப்பு- வெள்ளை, மஞ்சள்-சிவப்பு ஆடைகளை அணிந்து வந்து நிகழ்ச்சிகளை அலங்கரிக்கிறார்கள். கோயில்களை நிர்வகிக்கிறார்கள். தமிழ் பாடசாலைகள் நடத்துகிறார்கள். இதில் இவர்கள் நடத்தும் பாடசாலையில் கல்விப் பாடப் புத்தகங்கள் சரியானதில்லை, தமிழர்களது வரலாற்றைக் கொச்சைப் படுத்துகிறது என சில அதிருப்தியாளர்கள் சேர்ந்து வேறு ஒரு அமைப்பைத் தனியாகத் தொடங்கி பாடசாலைகளை நடாத்துகிறார்கள். போட்டிக்கு கோயில்களை உருவாக்குகிறார்கள். இங்கே கவனிக்க வேண்டியது புலிகள் அமைப்பே தங்களுக்குள் பிரிந்து நிற்கிறார்கள் என்பதே. இவர்களிடம் ‘புலிகள் புராணம்’ பாடுவதைத் தவிர வேறு பொது நோக்கு என்று எதுவுமே இல்லை என்பது வருத்தத்துக்குரியது. தமிழர் ஒருங்கிணைப்பில் இருப்பவர்களிடம் தமிழ் உணர்வு இருக்கும் அளவுக்கு அரசியல் பற்றிய பெரிய அறிவுகள் கிடையாது என நினைக்கின்றேன்.ஆனால் தங்கள் பதவிகளைத் தக்க வைத்துக் கொள்வதில் மிகத் தீவிரமாக இருக்கிறார்கள் என்பதைக் கவனித்திருக்கின்றேன். இப்பொழுது நொச்சியை நான் கருத்துக்கள் தர அழைக்கிறேன்1 point- புலம்பெயர் தமிழர்கள் vs புலம்பெயர் சிங்களவர்கள்
தமிழ்மக்கள் மட்டுமல்ல சிங்கள மக்களும் ஒரு தலைவனைத் தேடிக் கொண்டிருந்தார்கள். நாட்டில் ஏற்பட்ட குழப்பநிலை கஸ்டம் என்று எல்லாமே சேர்ந்து தற்போதைய அரசியல்வாதிகளை ஒதுக்கவிட்டது. புலம் பெயர்ந்த சிங்கள மக்கள் தாங்களாகவே இருக்கிறார்கள். ஆனால் தமிழர்களை தாங்களாகவே இருக்க இந்தியாவோ இலங்கையோ விடுவதில்லை. கோத்தபையனுக்கும் இதே புலர்பெயர்ந்த சிங்கள மக்கள் வாக்கு போடவென்றே பல லட்சம் செலவு செய்து வாக்குகளைப் போட்டு அழகு பார்த்தார்கள். அந்தநேரம் கொள்ளைக்காரரை கண்ணுக்குத் தெரியவில்லையோ? ஜேவிபியை கண்ணுக்குத் தெரியலையோ? இப்போதும் ரணிலின் பேராசையால்த் தான் அனுரா ஜனாதிபதியாகியிருக்கிறார். எத்தனை வருடம் நீடிப்பார்?அடுத்தடுத்து வருவாரா? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.1 point- குழந்தை வளர்ப்பில் இளம் தாய்மார்களை வாட்டும் குற்ற உணர்ச்சி
'தனியறையில் உடைந்து அழுதிருக்கிறேன்' - குழந்தை வளர்ப்பில் இளம் தாய்மார்களை வாட்டும் குற்ற உணர்ச்சி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தனது குழந்தையைச் சரிவர கவனித்துக் கொள்ள முடியவில்லை என்ற குற்ற உணர்வு தன்னை வாட்டுவதாகக் கூறுகிறார் கனிமொழி. (சித்தரிப்புப் படம்) கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 9 மணி நேரங்களுக்கு முன்னர் “பலமுறை தனியறையில் உடைந்து அழுதிருக்கிறேன்.” “நிதானமின்றி மற்றவர்கள் முன்பு கத்தியிருக்கிறேன்.” இது சென்னையைச் சேர்ந்த, 33 வயதான கனிமொழியின் குரல். தனது நான்கு மாத ஆண் குழந்தைக்கு ஏதாவது உடல்நலப் பிரச்னை ஏற்பட்டால், அதற்குத் தன்னையே நொந்துகொள்ளும் அவர், இதிலிருந்து வெளியே வர முடியாமல் திணறுகிறார். குழந்தையின் பொருட்டு தன்னைத் தானே குறை சொல்லி, ‘குற்ற உணர்வு’க்குள் மூழ்குவதற்கு அவரிடம் பல காரணங்கள் உள்ளன. குழந்தையைச் சரியான நேரத்திற்குள் குளிக்க வைக்க முடியாதது முதல் குழந்தைக்கு வரும் காய்ச்சல் வரை அவரது குற்ற உணர்வுக்கான பட்டியல் நீள்கிறது. சுயாதீன (ஃப்ரீலான்ஸ்) கிராஃபிக்ஸ் டிசைனரான கனிமொழி, தனது குழந்தையைக் கவனித்துக்கொண்டே வீடு மற்றும் அலுவல்ரீதியான பணிகளைக் கவனித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. தற்சமயம், அவர் வீட்டிலிருந்து வேலை செய்து வருகிறார். “என் வேலையைப் பொறுத்தவரை, குறிப்பிட்ட நேரத்திற்குள் ஏதேனும் ஒரு பணியை முடித்துக் கொடுக்க வேண்டியிருக்கும். இதனால் குழந்தை அழும்போது உடனே பால் கொடுக்க முடியாத சூழல் ஏற்படும். குழந்தை அழுத களைப்பிலேயே உறங்கிவிடும். இதனால் குழந்தையின் வயிறு ஒட்டிப் போயிருக்கும். அப்போது, என்னால்தானே குழந்தைக்கு இந்த நிலை என்று எனக்குத் தோன்றும்” என்கிறார் கனிமொழி. கனிமொழி காதல் திருமணம் செய்துகொண்டதால், இரு வீட்டாரின் துணையுமின்றி குழந்தையைக் கவனித்துக்கொள்ள வேண்டியுள்ளது. ஒருசமயம், நள்ளிரவு 12 மணியையும் கடந்து வேலை பார்க்க வேண்டிய நிலையில், அசதியில் அவர் தூங்கிவிட்டதால், குழந்தைக்கு ஒரு மணிக்குக் கொடுக்க வேண்டிய மருந்தைக் கொடுக்க முடியாமல் போயுள்ளது. அதனால், குழந்தைக்குக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. “கொஞ்சம் விழித்திருந்து நான் மருந்தைக் கொடுத்திருக்க வேண்டும். என்னால்தானே குழந்தைக்குக் காய்ச்சல் ஏற்பட்டது. இரவு நேரத்தில் முழுமையாக நான்தான் குழந்தையைக் கவனிக்க வேண்டும் என்பதால், இதற்கு என் கனவரும் என்னைக் கடிந்துகொண்டார்” எனக் கூறும் கனிமொழி, ஏழு ஆண்டு காத்திருப்பிற்குப் பின் பிறந்த குழந்தையை நன்றாகப் பார்த்துக்கொள்ள முடியாமல் கஷ்டப்படுத்துகிறோமோ என்ற “குற்ற உணர்வில்” சிக்கி உழல்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய சமூகத்தில் குழந்தையைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு பெரும்பாலும் பெண்களிடமே இருக்கிறது. (சித்தரிப்புப் படம்) குழந்தைக்கு ஒழுங்காக தாய்ப்பால் கொடுக்கவில்லை, சரிவர குளிப்பாட்டாத காரணத்தால் குழந்தைக்கு மூக்கு, தலை போன்றவற்றின் வடிவம் சரியாக இல்லை என்று பெரியவர்கள் கூறும் ‘குறைகளும்’ அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. “என்னால் ஒழுங்காகப் பார்த்துக்கொள்ள முடியாததால், குழந்தை என்னிடம் நெருக்கமாக இல்லையோ என்றுகூட எனக்குத் தோன்றும். என் கணவரை கண்டால் குழந்தை ‘குஷி’யாகிவிடும். என்னிடம் ஒட்டாது.” 'வேலையை விட்டுவிடலாமா?' இந்தக் குற்ற உணர்வு கனிமொழிக்கு மட்டுமல்ல; குழந்தையைச் சரியாகக் கவனிக்கவில்லையோ என்ற வருத்தத்தில் வேலையைக்கூட விட்டுவிடலாமா என்ற எண்ணம் தனக்கு அடிக்கடி தோன்றுவதாகக் கூறுகிறார், சென்னையில் ரெப்கோ வங்கியில் பணிபுரியும் கார்த்திகா. வங்கிப் பணி என்பதால், வீட்டிலிருந்து வேலை செய்யும் சௌகரியம் தனக்கு இல்லை எனக் கூறும் அவரது குழந்தைக்கு நான்கரை வயதாகிறது. “இப்போதுகூட எனது மகனுக்கு ஐந்து நாட்களாக உடல்நிலை சரியில்லை. இந்த நேரத்தில் அவனுடன் இல்லாதபோது, ‘நாம் எதற்காக வேலை செய்யவேண்டும்’, ‘வேலையை விட்டுவிடலாமா’ என்றுகூடத் தோன்றும். ஆனால், பொருளாதாரச் சூழல் காரணமாக வேலைக்குச் சென்றுதான் ஆக வேண்டும்” என்கிறார் கார்த்திகா. “நான் இருந்தால்தான் சாப்பிடுவேன், மருந்து குடிப்பேன் என்று என் மகன் அடம்பிடிப்பான். அதனாலேயே அவனுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போய்விடும். அவனுக்குப் பள்ளி விடுமுறை என்றால், எனக்கும் விடுமுறை என நினைத்து ஏமாந்து போவான்.” இது தனிப்பட்ட கார்த்திகா, கனிமொழியின் கதைகள் மட்டுமல்ல. தம் குழந்தைகளுக்கு நேரும் எல்லா பிரச்னைகளுக்கும் தாங்கள்தான் காரணம், வேலைக்குச் செல்வதுதான் காரணம் என நினைக்கும் பெண்கள் ஏராளமானோர் உள்ளனர். பணிச் சந்தையிலிருந்து வெளியேறும் பெண்கள் தாய்மார்களுக்கு ஏற்படும் இத்தகைய ‘குற்ற உணர்வு’ உலகம் முழுவதிலும் பரவலாகக் காணப்படுகின்றது. குறிப்பாக, இந்திய சமூகத்தில் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு பெரும்பாலும் பெண்களிடத்திலேயே உள்ளது. இதனால், குழந்தை வளர்ப்பு - வேலை என்ற இரண்டு விஷயங்களுக்கு இடையே பெண்கள் சிக்கிக் கொள்கின்றனர். இது இந்திய புள்ளியியல் துறை அமைச்சகம் வெளியிட்ட 2022-23ஆம் ஆண்டுக்கான காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பிலும் (Periodic Labour Force Survey) பிரதிபலித்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வீட்டிலிருந்து வேலை அல்லது அலுவலகத்திற்குச் சென்று வேலை என்றாலும் இத்தகைய குற்ற உணர்வு இளம் தாய்மார்களுக்கு ஏற்படுகிறது. (சித்தரிப்புப் படம்) குழந்தை வளர்ப்பு பொறுப்பு காரணமாகப் பணிச் சந்தையில் பங்குகொள்ள முடியவில்லை என 43.4% இந்திய பெண்கள் தெரிவித்துள்ளனர். மேலும், குழந்தை வளர்ப்பு மற்றும் குடும்பத்தில் தனிப்பட்ட பொறுப்புகள் காரணமாக, பணிச் சந்தையில் இருந்து வெளியேறியதாகச் சுமார் 90% பெண்கள் தெரிவித்துள்ளனர். திரைப் பிரபலங்கள்கூட தாங்கள் இத்தகைய குற்ற உணர்வில் சிக்கியதாக வெளிப்படையாகத் தெரிவித்துள்ளனர். நடிகைகள் காஜல் அகர்வால், சோனம் கபூர், நேஹா தூபியா எனப் பலரும் இதுகுறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளனர். பட மூலாதாரம்,KAJALAGGARWALOFFICIAL/INSTAGRAM படக்குறிப்பு, குழந்தை பிறந்த ஆரம்பக் காலத்தில் தன்னை 'குற்ற உணர்வு' ஆட்கொண்டதாக நடிகை காஜல் அகர்வால் தெரிவித்திருந்தார். இக்கட்டுரைக்காக சில இளம் தாய்மார்களிடம் நான் பேசியபோது, சில பதின்பருவ பிள்ளைகளின் அம்மாக்களும் இத்தகைய ‘குற்ற உணர்வில்’ சிக்கியிருப்பதை அறிய முடிந்தது. குழந்தைகளின் வயது வித்தியாசமின்றி இத்தகைய குற்ற உணர்வு பெரும்பாலான தாய்மார்களைத் தாக்கும் என்பதை அவர்கள் பேசியதிலிருந்து உணர முடிந்தது. முன்னணி ஆங்கில ஊடகமொன்றில் பணிபுரியும் 40 வயதைத் தாண்டிய பத்திரிகையாளர் ஒருவர், “எனது மகனுக்கு 18 வயதாகிறது. அவன் பள்ளியில் படிக்கும்போது பொதுத் தேர்வில் அவன் கல்வி முன்னேற்றத்திற்காக நேரம் செலவழிக்க முடியாதது, என்னை இன்னும் குற்ற உணர்வில் ஆழ்த்துகிறது. இளம் தாய்மார்களோ அல்லது வளர்ந்த பிள்ளைகளின் அம்மாக்களோ இந்தக் குற்ற உணர்வு எப்போதும் மறையாது” என்று அவர் தெரிவித்தார். குழந்தைகளின் உடல்நிலை, கல்வி, நடத்தை எனப் பலவற்றுக்கும் அம்மாக்கள் மீதே பெரும்பான்மையான நேரங்களில் குற்றம் சாட்டப்படுகிறது. அம்மாக்களும் தங்கள் மீதே குற்றம் சாட்டிக் கொள்கின்றனர் என்பதை அவர்களிடம் பேசியதிலிருந்து அறிய முடிகிறது. குற்ற உணர்வின் தீவிரம் கடந்த ஏப்ரல் மாதம் சென்னை திருமுல்லைவாயல் பகுதியில் ரம்யா - வெங்கடேஷ் என்ற தம்பதியின் ஒன்பது மாத கைக்குழந்தை எதிர்பாராதவிதமாக நான்காவது மாடியின் பால்கனியில் இருந்து தவறி கீழ் தளத்திலிருந்த ‘சன் ஷேடில்’ விழுந்தது. அந்தக் குழந்தையை அக்கம்பக்கத்தினர் காப்பாற்றினர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் அதிவேகமாக வைரலானது. அதற்கு அடுத்த மாதமே, அக்குழந்தையின் தாய் ரம்யா தற்கொலை செய்துகொண்டார். குழந்தை விழுந்ததற்கு அதன் “தாயைக் குற்றம் சாட்டி வெறுப்புக் கருத்துகள் பரப்பப்பட்டதே அவருடைய தற்கொலைக்குக் காரணம்” எனக் கூறப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES ரம்யாவின் தற்கொலைக்கான காரணங்களை அறிய அந்த நேரத்தில் பிபிசி தமிழ் முயன்றது. அப்போது, ரம்யா மகப்பேறுக்குப் பிந்தைய மனச்சோர்வு (Postpartum Depression), இணையவழித் தொல்லை (Cyber Bullying) மற்றும் குழந்தை கீழே விழுந்த நிகழ்வுக்குப் பிந்தைய மனச்சோர்வு (Post Traumatic Depression) போன்ற பாதிப்புகளால் மனமுடைந்து தற்கொலை செய்தது தெரிய வந்தது. ‘‘எனது மகள் ரம்யா இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு மன அழுத்தம் ஏற்பட்டு, வாழ்க்கையில் விரக்தி அடைந்தவர் போல் இருந்தார். யாரிடமும் பேசாமல் விரக்தியில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு இருந்துள்ளார்,” என்று ரம்யாவின் தந்தையே கூறியிருந்தார். ஏன் பெண்களுக்கு மட்டும்? குழந்தைகளுடைய நலனின்பால் தாய்க்கு மட்டும் அதீத குற்ற உணர்வு ஏற்படுவது ஏன்? “குழந்தைகளை வளர்ப்பதற்கென ஒரு குறிப்பிட்ட தத்துவமோ அல்லது யோசனையோ (thumb rule) இல்லை. குறிப்பாக, இந்திய சமூகத்தில் காலம் காலமாக ஒரு பெண் தன் குழந்தையுடன் அவரது அம்மா வீட்டில்தான் முதல் முக்கியமான சில மாதங்களைக் கழிக்கிறார். தன் அம்மா எப்படி வளர்க்கிறார் என்பதைப் பார்த்துதான் குழந்தையை வளர்க்கிறார். தாய்ப்பால் ஊட்டுதல் உள்ளிட்ட இயற்கை காரணங்களுக்காக குழந்தை வளர்ப்பின் பெரும்பாலான பொறுப்புகள் பெண்களைச் சார்ந்தே இருக்கின்றன” என்கிறார், மனநல ஆலோசகர் சில்வினா மேரி. அதிலும், முந்தைய தலைமுறையினர் குழந்தை வளர்ப்பில் தந்தை பெரும் பொறுப்பை எடுத்துக் கொள்ளாததை ஒரு ‘கலாசாரமாகவே’ பின்பற்றி வருகின்றனர், அதனால் பெரும் அழுத்தம் இளம் தாய்மார்களுக்கு ஏற்படுகிறது என்கிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,"இளம்தாய்மார்கள் தங்களுக்கெனச் சிறிது நேரம் ஒதுக்க வேண்டும்" என்கிறார் மனநல ஆலோசகர் மேரி. “குழந்தை வளர்ப்பு என்பது தாய்-தந்தை இருவரின் பொறுப்பும்தான். ஏதேனும் தவறு நடந்தால் அதற்கு தாயைக் குறை சொல்வது கூடாது. பரிச்சார்த்த முயற்சியில்தான் குழந்தை வளர்ப்பு என்பது சிறிது சிறிதாகத் தெரிய ஆரம்பிக்கும்” என்கிறார் மேரி. குழந்தை வளர்ப்பில் ஆண்கள் பங்கெடுப்பதைப் பொறுத்தவரை, இந்த டிஜிட்டல் யுகத்தில் ஒரு சிறிய மாற்றம் தென்படத் தொடங்கியிருப்பதாக மேரி குறிப்பிடுகிறார். “குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகி, இந்தப் பெரும் பொறுப்புகள் நம்மை விட்டு விலகும் வரைகூட இந்தக் குற்ற உணர்வு சிலருக்கு நீடிக்கலாம்” என்கிறார் அவர். தங்கள் பிள்ளைகள் சொந்தமாக வாழ்வது அல்லது உயர்கல்வி பெறுவது என, வீட்டைவிட்டு வெளியேறும்போதுகூட ‘தனிமையின் உணர்வை’ அதிகமாக அம்மாக்கள் உணர்வார்கள் என்கிறார் மேரி. இதை மருத்துவ மொழியில் “எம்ப்டி நெஸ்ட் சிண்ட்ரோம்’ என்கின்றனர். என்ன செய்ய வேண்டும்? இத்தகைய குற்ற உணர்விலிருந்து வெளியே வருவதற்கான சில ஆலோசனைகளையும் அவர் வழங்கினார். இளம் தாய்மார்கள் தங்களுக்காக 15-20 நிமிடங்களை நிச்சயம் ஒதுக்க வேண்டும். உடல்நலனில் அக்கறை செலுத்தி, தங்களின் தனிப்பட்ட நலன்களுக்காக நேரம் ஒதுக்கி சிலவற்றை மேற்கொள்ள வேண்டும். தினமும் சிறிது நேரமாவது வெளியே சென்றுவர வேண்டும். எங்காவது அவர் வெளியே சென்றால், வீட்டில் இருப்பவர்கள் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதற்கு முன்வர வேண்டும். குழந்தை அழுதால் எல்லா நேரத்திலும் அம்மாதான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதில்லை. குழந்தை அழுதால் அம்மாவை குறை சொல்லக்கூடாது, தான் சரியாகக் கவனிக்காததால்தான் குழந்தை அழுவதாக அம்மாக்களும் நினைக்கக்கூடாது. குழந்தைகளுடன் சேர்ந்து அம்மாக்களும் கற்றுக்கொள்கின்றனர் என்பதை உடன் இருப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். மற்ற குழந்தைகளின் குணநலன்களுடன் ஒப்பிட்டுத் தன்மீது குறை சுமத்திக் கொள்ளக்கூடாது. எப்போது மனநல ஆலோசகரை அணுக வேண்டும்? பட மூலாதாரம்,GETTY IMAGES “இதனால் மிகவும் மனச்சோர்வு, மன அழுத்தம் ஏற்படும்போது குடும்பத்தினரின் உதவியை முதலில் நாடுங்கள்" என்றும், அப்போது, "எல்லோருக்கும் இது சகஜம்தான்” என குடும்பத்தினர் புறம்தள்ளக் கூடாது என்றும் மேரி வலியுறுத்துகிறார். அடுத்தகட்டமாக இது சரியாகவில்லை என்றால் அவர்கள் ஏற்கெனவே ஆலோசித்து வரும் மகளிரியல் மருத்துவர் அல்லது குழந்தைநல மருத்துவரிடம் பேசலாம். அவர்கள் "சில எதார்த்தமான ஆலோசனைகளை வழங்குவார்கள். அப்போதும் இதில் முன்னேற்றம் ஏற்படாமல், தூக்கம், பசி ஆகியவை பாதிக்கும்போது மனநல ஆலோசகரை நிச்சயம் அணுக வேண்டும்,” என்றார் மனநல ஆலோசகர் மேரி. முக்கியக் குறிப்பு மனநல பிரச்னைகளை மருந்து மற்றும் சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். இதற்காக நீங்கள் ஒரு மனநல மருத்துவரின் உதவியைப் பெற வேண்டும். மேலும் இந்த உதவி எண்களையும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம். சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணிநேர சேவை) மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணிநேர சேவை) சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் உதவி எண் – 1800-599-0019 (13 மொழிகளில் சேவைகள் கிடைக்கின்றன) மனித நடத்தை மற்றும் அது சார்ந்த அறிவியல் நிறுவனம் - 9868396824, 9868396841, 011-22574820 தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் – 080 – 26995000 https://www.bbc.com/tamil/articles/cpd93rlzmp7o1 point - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் - சம்பந்தன் இறந்தும் கையளிக்கப்படாத உத்தியோகபூர்வ வீடு!
Important Information
By using this site, you agree to our Terms of Use.