Leaderboard
-
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்15Points87990Posts -
putthan
கருத்துக்கள உறவுகள்8Points14676Posts -
satan
கருத்துக்கள உறவுகள்7Points10100Posts -
ரஞ்சித்
கருத்துக்கள உறவுகள்7Points8907Posts
Popular Content
Showing content with the highest reputation on 10/19/24 in all areas
-
வடக்கு - கிழக்கில் 15ஆசனங்கள் உறுதி- சுமந்திரன் தெரிவிப்பு!
எங்களின் தேசியத்துக்கெதிரான கருத்துக்களை ஒரு பக்கம் எடுத்து வைத்துவிட்டு இதனைப் பார்க்கலாமே. சுமந்திரன் கூறுவதுபோல 15 ஆசனங்களை அவரது கட்சி கைப்பற்றுமாக இருந்தால் நல்லது என்பதே எனது எண்ணம். தெற்கைச் சாராத, தமிழர் தாயகத்தை தளமாகக் கொண்ட எந்தக் கட்சியாக இருந்தாலும் பெரும்பான்மை ஆசனங்களை வெல்வது தமிழரைப் பொறுத்தவர் நல்ல விடயமே. அதனால் எவர் தாயகத்தை அடிப்படையாக வைத்து தேர்தலில் போட்டியிட்டு வென்றாலும் எனது ஆதரவு அவர்களுக்கே. ஆனால், அவர்கள் தமிழ் மக்கள் தொடர்பான தமது செயற்பாடுகளை மாற்றிக்கொள்ள வேண்டும். எமது தாயகப்பகுதிகள் தொடர்பான அபிவிருத்தியில் அவர்கள் ஈடுபட வேண்டும். தமிழர்களின் அரசியல் நலன் தொடர்பாக உண்மையான அக்கறையும், அதுகுறித்து செயற்படும் துணிவும் இருந்தால் சுமந்திரனுக்கு வாக்களிக்கலாம். அதைச் சுமந்திரன் உறுதிப்படுத்த வேண்டும். செய்வாரா? என்னைப்பொறுத்தவரை சிங்கள இனவாதிகளான மக்கள் விடுதலை முன்னணி நமது தாயகத்தில் காலூன்றுவதைக் காட்டிலும் சுமந்திரனோ அல்லது தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவான வேறு எவருமோ தேர்தலில் வெல்வது மேலானது. பொதுவேட்பாளர் விடயத்தில் நான் இதே நோக்கத்திற்காகத்தான் அவர்களை ஆதரித்தேன், எமது தாயகத்தில் அவருக்கு பெரும்பாலான வாக்குகள் கிடைக்கவேண்டும் என்பதற்காக. ஆனால் அந்த முயற்சியை எல்லோருமாகச் சேர்ந்து இன்று கேலிக்கூத்தாக்கி விட்டார்கள் என்பது வேறு கதை. வாழ்த்துக்கள் சுமந்திரன், முயன்று பாருங்கள்.5 points
-
இந்தியாவை எதிர்த்து விட்டு எதனையும் செய்ய முடியாது: செல்வம் அடைக்கலநாதன் எச்சரிக்கை
உங்களுக்கு இந்தியாவை புறந்தள்ளி நகர்வது கடினமாக இருக்கலாம் ஆனால் சிங்கள அரசியல்/கொள்கை வகுப்பாளர்கள் நன்றாகவே புறந்தள்ளி நடப்பார்கள்...நடக்க தெரியும்...காரணம் இந்தியாவுக்கு முதுகெழும்பு இல்லை ....என்பதை சிங்களவர்கள நன்றாகவே உணர்ந்துள்ளனர்4 points
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
பின்வரும் வேட்பாளர்கள் தேர்தலில் தேசிய பட்டியல் மூலமாக அல்லாது நேரடியாக வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவார்களா ( ஆம் / இல்லை என்று பதில் அளிக்கவும். ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும்). கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)ஆம் 2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)இல்லை 3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி)இல்லை 4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி)இல்லை 5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி)ஆம் 6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)இல்லை 7)சுமந்திரன்( தமிழரசு கட்சி)ஆம் 😎அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி)இல்லை 9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி) இல்லை 10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14)இல்லை 11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி)இல்லை 12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)ஆம் 13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14)இல்லை 14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 ) ஆம் 15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)ஆம் 16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி)இல்லை 17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)இல்லை 18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17)ஆம் 19) ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி)இல்லை 20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்)ஆம் 21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு)ஆம் 22) விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா- மட்டக்களப்பு, தேசிய ஜனநாயக முன்னணி)இல்லை 23)சிவனேசதுரை சந்திரகாந்தன் ( மட்டக்களப்பு, தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி)இல்லை 24) சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு)ஆம் 25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி)ஆம் 26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்) ஆம் வினா 27 - 34 வரை பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்) எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்) யாழ் மாவட்டம் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி 3 28) வன்னி ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி 3 29) மட்டக்களப்பு) தமிழரசு கட்சி3 30)திருமலை ஐக்கிய மக்கள் சக்தி 2 31)அம்பாறை தேசிய மக்கள் சக்தி 2 32)நுவரெலியா தேசிய மக்கள் சக்தி 4 33)அம்பாந்தோட்டை தேசிய மக்கள் சக்தி 4 34)கொழும்பு தேசிய மக்கள் சக்தி 13 35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 1 36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 1 யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்) வைத்தியர் அர்ச்சுனா வினா 38 - 48 வரை பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? (தலா 2 புள்ளிகள்) மானிப்பாய் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி 39) உடுப்பிட்டி தமிழரசு கட்சி 40) ஊர்காவற்றுறை ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி 41) கிளிநொச்சி தமிழரசு கட்சி 42) மன்னர் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி 43) முல்லைத்தீவு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி 44) வவுனியா ஐக்கிய மக்கள் சக்தி 45) மட்டக்களப்பு தமிழரசு கட்சி 46) பட்டிருப்பு ஐக்கிய மக்கள் சக்தி 47) திருகோணமலை ஐக்கிய மக்கள் சக்தி 48) அம்பாறை தேசிய மக்கள் சக்தி எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) தேசிய மக்கள் சக்தி எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) ஐக்கிய மக்கள் சக்தி 51 - 52 வரை வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி) ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 4 52) தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி) 2 53 - 60 வரை பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? ( 53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள். 57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள் 1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும். 53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி 1 54)தமிழரசு கட்சி 5 55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 8 56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி) 0 57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி ) 6 58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 48 59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி) 149 60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி) 8 போட்டி விதிகள் 1)சிட்னி நேரம் நவம்பர் 13 ம் திகதி இரவு 11.59க்கு முன்பு பதில் அளிக்கவேண்டும். 2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். 3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள் 4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார் Edited 14 hours ago by கந்தப்பு4 points
-
வடக்கு - கிழக்கில் 15ஆசனங்கள் உறுதி- சுமந்திரன் தெரிவிப்பு!
ரத்தன் ராரா ( Ratan Tata) என்றொரு இந்திய பெரும் செல்வந்தர் போனவாரம் காலமானார், அவரது பொன்மொழி, "உங்களை நோக்கி யாராவது கல் வீசினால் அவற்றை ஏந்தி நினைவாலயங்கள் எழுப்புங்கள்." என்றாராம். நல்ல விமர்சனங்களை ஏற்று, ஆய்வு செய்து உங்களை திருத்திக்கொள்ளுங்கள். பொறாமையால் எழும் தப்பான, பொய்யான விமர்சனங்களை புன்முறுவலுடன் கடந்து செல்லுங்கள், அதற்காக காலத்தை வீணாக்காதீர்கள். எதிரி எமக்கு போடும் முட்டுக்கட்டை, உளவியல் ரீதியாக நம்மை பின்னடையச்செய்யும் ஒரு உத்தி இது.3 points
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
பின்வரும் வேட்பாளர்கள் தேர்தலில் தேசிய பட்டியல் மூலமாக அல்லாது நேரடியாக வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவார்களா ( ஆம் / இல்லை என்று பதில் அளிக்கவும். ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும்). 1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) 2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) 3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி) 4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி) 5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி) 6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) 7)சுமந்திரன்( தமிழரசு கட்சி) 8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி) 9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி) 10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14) 11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி) 12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) 13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14) 14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 ) 15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) 16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி) 17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) 18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17) 19) ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி) 20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்) 21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு) 22) விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா- மட்டக்களப்பு, தேசிய ஜனநாயக முன்னணி) 23)சிவனேசதுரை சந்திரகாந்தன் ( மட்டக்களப்பு, தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி) 24) சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு) 25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி) 26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்) வினா 27 - 34 வரை பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்) எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்) 27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும் தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது) 28) வன்னி 29) மட்டக்களப்பு) 30)திருமலை 31)அம்பாறை 32)நுவரெலியா 33)அம்பாந்தோட்டை 34)கொழும்பு 35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்) வினா 38 - 48 வரை பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? (தலா 2 புள்ளிகள்) 38) மானிப்பாய் 39) உடுப்பிட்டி 40) ஊர்காவற்றுறை 41) கிளிநொச்சி 42) மன்னர் 43) முல்லைத்தீவு 44) வவுனியா 45) மட்டக்களப்பு 46) பட்டிருப்பு 47) திருகோணமலை 48) அம்பாறை 49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) 50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) 51 - 52 வரை வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி) 51) ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 52) தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி) 53 - 60 வரை பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? ( 53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள். 57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள் 1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும். 53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி 54)தமிழரசு கட்சி 55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி) 57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி ) 58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி) 60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி) போட்டி விதிகள் 1)சிட்னி நேரம் நவம்பர் 13 ம் திகதி இரவு 11.59க்கு முன்பு பதில் அளிக்கவேண்டும். 2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். 3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள் 4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார்2 points
-
வாய்ச் சொல்லில் வீரரடி
2 pointsஐந்தாண்டுக்கு ஒருமுறை அரங்கேறும் திருவிழா அயல் வீடு அறியாதார்.. அத்தனை வீட்டுக்கும் அஞ்சலில் வருவார் சிரித்தமுகம்.. கூப்பிய கரம்... வண்ணங்களில் அச்சிட்ட வாக்குறுதிகள்... ஆம், கெளரவ யாசகர்கள். பழையன கழிதலும் புதியன புகுதலும்... சொல்லப்படும் நியதி பழையனவே மீண்டும் புகுதல் இங்கு பழகிவிட்ட பண்பாடு.. இனி.. புகுந்தவரின் புழுகலும் புலம்பலும் சட்டமாகும். அவர் உறவுகளின் பெயர்ப்பலகை அலங்கரிக்கும் உயர் நாற்காலிகள் புள்ளடி இட்டவரின் கட்டைவிரல் மை ஈரம் காயும் முன் மறந்துவிடும் அவர் வாய் வீரங்கள் என் சொல்வது ?. சுதந்திர சேலை சூடிய தேசத்திரௌபதி தன் துகிலுரியக் காத்திருக்கும் துச்சாதனர்கள் ஜனனாயக களத்தின் களையாய் வேர்விடும் சமுதாயச் சகுநிகள் தன் காலிக் குவளையோ! மக்கள் விடமோ.. அமிர்தமோ.. அவரவர் விருப்பங்களை நிரப்பிடவும் தேவைக்கு அருந்தி . உடைத்துச் செல்லவும்...2 points
-
இலங்கையில் 50 ஆண்டுக்கு முன் திருடிய 37 ரூபாயை பன்மடங்காக திருப்பிக் கொடுத்த கோவை தொழிலதிபர்
2 pointsலண்டன் தமிழ் பிபிசி சமயம் பரப்பும் வேலையிலும் இறங்கி விட்டது . கடந்த நவராத்திரி விழாவை குறிப்பிட்ட இடத்தில் கொண்டாட கூடாது என்று 1௦௦௦ பேர்க்கு மேல் பெட்டிசம் போட்டு விட்டார்கள் என்று கரோ கவுன்சில் அனுமதி கொடுக்கவில்லை என்கிறார்கள் .2 points
-
ரணில் மற்றும் மஹிந்தவின் வாகனங்களை கோரும் அரசாங்கம்
உண்மையில் சனாதிபதியின் பயிற்சிப்பட்டறை அப்படி. எப்படி எதிரிகளைச் சாய்த்து ஓரங்கட்டுவது என்பதற்கான வியூகங்கள் வியக்க வைக்கிறது. எல்லாம் 14ஆம் திகதிவரை மட்டுமே. அதன்பின்னர் அரசியலில் இதெல்லாம் சாதாரணமென்று போட்டுவிடுவார். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி2 points
-
இளையோரை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப தமிழ் மக்கள் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் - மணிவண்ணன்
திட்டமிட்டு சில யூடியூப் காரரை களமிருக்கியிருக்கின்றனர் என்பது என்றால் உண்மை போல தான் தெரிகின்றது அதில் சிலருக்கு அரசியல் சுத்தம் ஆனால் அணுரா புராணம் நன்றாக சொல்லி கொடுத்துள்ளனர் ....தேசிய ஆதரவாக பேசிய ஒர் யூ டியுப்பரை புலனாய்வாலர்கள் எச்சரித்த சம்பவம் நடந்துள்ளது...2 points
-
இந்தியாவை எதிர்த்து விட்டு எதனையும் செய்ய முடியாது: செல்வம் அடைக்கலநாதன் எச்சரிக்கை
இவர் என்ன வழி விடுகிறது. 😃 இந்தத் தேர்தலுடன், கழுத்தை பிடித்து வெளியே தள்ளப் படுவார். 😂 எல்லாம்... பட்டுத்தான் தெளிய வேண்டும் என்று விதி இருந்தால், நாம் ஒன்றும் செய்ய முடியாது. 🤣2 points
-
தென்னிலங்கைத் தரப்புக்களை தமிழ் அரசியலிற்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலைக்குச் சமமாகுமம் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
தேர்தலில் பொதுமக்கள் யாருக்கு வாக்களிப்பது| பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்ட... திரியோடு தொடர்புடைய காணொளி என்பதால் இணைத்துள்ளேன். நன்றி - யூரூப் நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி2 points
-
இந்தியாவை எதிர்த்து விட்டு எதனையும் செய்ய முடியாது: செல்வம் அடைக்கலநாதன் எச்சரிக்கை
2 points
- வடக்கு - கிழக்கில் 15ஆசனங்கள் உறுதி- சுமந்திரன் தெரிவிப்பு!
மனிதத்தை நேசிக்கும் எவரும் அதையே செய்ய முனைவர். ஆனால், எம்மவர்கள் சிலருக்கு அதுகூட உறுத்தலாகவல்லவா இருக்கிறது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி2 points- இந்தியாவை எதிர்த்து விட்டு எதனையும் செய்ய முடியாது: செல்வம் அடைக்கலநாதன் எச்சரிக்கை
இவர்களுக்கு இந்தியா நல்ல கொழுத்த சம்பளம் கொடுத்து வைத்திருக்குது போலை. அதுதான்... இந்தியாவின் சீலைத்தலைப்பில் தொங்கிக் கொண்டு இருக்கின்றார்கள். இந்தியாவோடு இவர்கள் மினக்கெடுகின்ற நேரம், சீனாக்காரனுடன் சேர்ந்து அரசியல் செய்து இருந்தாலும்... பிரயோசனமாக இருந்திருக்கும்.2 points- தென்னிலங்கைத் தரப்புக்களை தமிழ் அரசியலிற்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலைக்குச் சமமாகுமம் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
போருக்குப் பின்.... தமிழ் அரசியல் கட்சிகள் விட்ட பிழைகளால் தானே... மக்கள் தென்னிலங்கை அரசியலை நாட வேண்டி வந்தது. மக்கள் அதனை விரும்பி ஏற்கவில்லை, மாறாக…. தென்னிலங்கை அரசியலை நோக்கி தள்ளப் பட்டார்கள் என்பதே உண்மை. நிலைமை கட்டுமீறி போனபின்பும்... தம்மை சுய பரிசோதனை செய்யத் தயார் இல்லாத தமிழ் அரசியல் தலைமைகளை என்ன வென்று சொல்வது. தாமாக திருந்த மாட்டார்கள் எனும் போது... முதலில் பதவி ஆசை, கதிரை ஆசை பிடித்த சுயநல கும்பல்களை துடைத்து எறிய வேண்டும்.2 points- இளையோரை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப தமிழ் மக்கள் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் - மணிவண்ணன்
இதுதான் அங்குள்ள உண்மையான நிலைமை... ஒருமாயை அங்கு உருவாக்கப் படுகிறது...அதற்கு உதவியாக அலைந்து திரியும் யூ டியூப் காரர் களமிறக்கப் பட்டிருக்கினம்...அவையும் ஆகா ஓகோ என்று புழுகினம்...வடக்கில் எதற்கும் துணிந்த விடுகாலி அரசியல்வாதிகள் இருப்பதை மறந்து...ஒரு சிலரைத்தவிர மக்கள் பெரிதாக இதை அலட்டிக் கொள்வதில்லை..என் அனுபவம்..2 points- வடக்கு - கிழக்கில் 15ஆசனங்கள் உறுதி- சுமந்திரன் தெரிவிப்பு!
அதாலதான் நான் இவருக்கு இப்படி ஒரு பதாதை உருவாக்கினேன் இப்படியாச்சும் இந்த ஈழத்து கருணாநிதி எங்கையெண்டாலும் ஓடி போகட்டுமெண்டு2 points- தந்தை செல்வாவின் பேரன்... தமிழரசு கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுகின்றார்.
என்னதான் குத்தி முறிங்சாலும் தமிழ்த்தேசியக் 4ட்டமைப்பை உடைத்து தமிழரசுக்கட்சியையும் உடைத்து விட்ட சுமத்திரனுக்கு சொம்பு தூக்க நாலுபேர் இருக்கினம் .இந்தத் தேர்தல் அவர்களுக்கு நல்ல பதில் சொல்லும். பார்சிறியை கையோடை வைச்சிருக்கிறது க்கும் காரணம் இருக்கு.2 points- இத்தாலிக்குள் வரும் புகலிடக் கோரிக்கையாளர்களை அல்பேனியாவில் வைத்து பராமரிப்பு
அல்பேனியா ஐரோப்பிய யூனியனுக்குள் நுழைவதற்காக நல்ல பெயர் எடுக்க இந்த நடவடிக்கையாகவும் இருக்கலாம்.2 points- யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
போட்டியை நடத்தும் கந்தப்புவுக்கு நன்றி பல🙏🏽 தமிழ்நாட்டு அரசியலைப் பற்றி உள்ள அறிவும், தரவும் இலங்கை அரசியலைப் பற்றி இல்லை! அதிலும் குறிப்பாக மக்களின் நாடிப்பிடிப்பை உணர்த்தும் நம்பகமான கருத்துக்கணிப்பு இல்லை. ஆனாலும் போட்டியில் கட்டாயம் கலந்துகொள்வேன்😀 யாழ் களப் போட்டியில் நான் வெல்வது சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் வெல்வது மாதிரித்தான் இருக்கும்😆2 points- படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 24வது நினைவேந்தல்
யாழில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 24வது நினைவேந்தல் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபி அருகில் இன்று சனிக்கிழமை (19) நடைபெற்றது. மட்டக்களப்பு ஊடக மையத்தின் தலைவர் வ.கிருஷ்ணகுமார் தலைமையில் இந்த நினைவேந்தல் நடைபெற்றது. இதன்போது மயில்வாகனம் நிமலராஜனின் உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டதையடுத்து மௌன இறைவணக்கம் இடம்பெற்றது. இந்த நினைவஞ்சலி நிகழ்வில் மாவட்டத்தின் ஊடகவியலாளர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர். புதிய அரசாங்கத்தின் ஜனாதிபதி கடந்த கால ஆட்சியில் இடம்பெற்ற படுகொலை சம்பந்தமாக விசாரணைகள் நடத்தப்படவுள்ளமையை வரவேற்பதாக இதன்போது தெரிவிக்கப்பட்டதுடன் விசாரணைகளை துரிதப்படுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/1966481 point- அனுதாபிகள்
1 pointஅனுதாபிகள் --------------------- ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதன் அனுதாபம் என்றார் இன்னொரு மனிதனும் அதையே சொன்னார் இப்படியே இன்னொன்று இன்னொன்று என அனுதாபங்கள் இலையுதிர் கால பழுத்த இலைகள் போல இடைவெளி இல்லாமல் விழுந்து கொண்டிருந்தன சலித்துப் போன அந்த ஒரு மனிதன் ஒளித்துக் கொள்ள இடம் தேடினான் இன்னும் ஒளித்துக் கொள்ள தேவை வராதவர்கள் இன்னொரு இடம் தேடினர் அவர்களின் அனுதாபங்களை சொல்ல அனுதாபங்கள் உயிர்ப்புடன் வைத்திருக்கின்றது அதைச் சொல்லும் மனிதர்களை.1 point- அலைகளின் நடுவே இலங்கை அரசியல்
1 pointஅலைகளின் நடுவே sudumanal இலங்கை அரசியல் ஜீன் சீக்லர் (Jean Ziegler) அவர்கள் சுவிஸ் இல் ஓர் அறியப்பட்ட இடதுசாரியாவார். பிடல் கஸ்ரோ மரணித்தபோது சுவிஸ் வானொலி அவருடன் ஒரு நேர்காணல் நடத்தியது. அதில் “பிடல் இறந்துவிட்டார். இந்த உலகின் கடைசி புரட்சியாளர் பிடல் என சொல்லலாமா” என கேட்கப்பட்டது. “புரட்சியாளர்கள் ஒவ்வொரு 5 வருடத்துக்கும் பிறப்பதில்லை. பல ஆண்டுகள், சிலவேளை நூற்றாண்டுகள் கூட ஆகலாம்” என்றார். பிடல் கடைசி புரட்சியாளராக இருக்க முடியாது என்றார். அவர் சொன்ன அந்த 5 வருடம் என்பது தேர்தலில் புரட்சியாளர்கள் பிறப்பதில்லை என்பதை சுட்டிக் காட்டவே ஆகும். 2019 இல் 3 வீத வாக்குகளை பெற்ற ஜேவிபியின் தலைவர் அநுர 2024 இல் 42 வீத வாக்குளை எடுத்து ஜனாதிபதியாக வருகிறார். இந்த 5 வருடத்தில் அரசியலில் ஜேவிபியோ அநுரவோ அப்படி என்னத்தைத்தான் புரட்டிப் போட்டார்கள், இந்த அலையை உருவாக்க என்றால் பதில் ஏதுமில்லை. 2022 இல் நடந்த அரகலய போராட்டத்தின் காலப்புரட்சியை ஒரு அமைப்பு வடிவம் பெற்றிருந்த ஜேவிபி தன்வசமாக்கியததான் நடந்தது. இந்த அரகலய போராட்டத்தை முன்னின்று நடத்திய சமவுரிமைக் கட்சியும் வெவ்வேறான இடதுசாரிய சிந்தனைக் குழுக்களும் உதிரிகளும் இந்த அமைப்பு வடிவத்தை கொண்டிராததால் அரகலயவில் பங்குபற்றிய ஜேவிபி இந்த தன்வயமாக்கலை நடத்தியது. அதன் வெற்றிதான் அநுரவின் வெற்றி. எனவே அநுர வென்றார் என்பதைவிட, அநுரவை அரகலய ஒரு முன்பாய்ச்சலான வரலாற்றுக் கட்டத்தில் தலைவராக நிறுத்தியிருக்கிறது என்பதே பொருத்தமாக இருக்கும். அரகலய எதிர்த்துப் போராடிய ஊழல் அமைப்புமுறைக்கும் இனவாதத்துக்கும் இடமளிக்க அனுமதிக்கப்படாத வரலாற்றுக் கட்டம்தான் அது. இந்த வரலாற்று நிலைமையை உருவாக்கியது நாட்டை திவாலாக்கிய பொருளாதார நெருக்கடிதான். இந்தக் காரணிகளின் ஒட்டுமொத்தக் குரலாக “முறைமை மாற்றம்” system change என்பதை அரகலய தனது முழக்கமாக முன்வைத்தது. என்பிபி யின் தேர்தல் பிரச்சாரம் இவற்றை மையங்கொண்டிருந்தது, இருக்கிறது, இருக்கிறது. இதே ஊழல் அரசாங்கத்தில் பாராளுமன்றத்திலும் குறுகியகால அமைச்சர் பதவியிலும் பங்குகொண்டவர்கள் ஜேவிபியினர். போரில் பங்குகொண்டவர்கள் அல்லது போரை ஆதரித்தவர்கள். நாட்டுக்குள் இனவழிப்பைச் செய்து வெற்றிகொண்ட போரை பாற்சோறு காய்ச்சி கொண்டாடியவர்களில் இவர்களும் அடக்கம். இந்தப் போர் அதிகாரவர்க்கம் கட்டற்ற ஊழலை செய்யவும் அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்யவும் பொருளாதார வீழ்ச்சியை துரிதமாக்கவும் இனவாத சிந்தனையை கூர்மைப்படுத்தவும் செய்தது. இவையெல்லாம் நாட்டை பேரழிவுக்குத் தள்ளியது என இப்போ சொல்ல முடிகிற நிலையை அவர்கள் (JVP) அன்று எதிர்த்து நின்று காட்டியவர்கள் அல்ல. அதை அரகலயதான் காட்டியது. எனவேதான் இந்த அரசாங்கத்தை அரகலய ஒரு வரலாற்றுக் கட்டத்தில் நிறுத்தியிருக்கிறது என்கிறேன். இன்று அவர்கள் சொல்லுகிற மாற்றம் என்பதை நிகழ்த்த பாராளுமன்றத்திலும் பெரும்பான்மை ஆசனங்களை அவர்கள் பெற வேண்டும் என்பது தர்க்க நியாயமான ஒன்று. அவர்கள் பெறுவார்கள் என்பது என் கணிப்பு. சிறுபான்மை இனங்கள் 2019 இல் ஜேவிபி க்கு அளித்த வாக்குகளை விட பலமடங்கு அதிகமாக அநுராவுக்கு கொடுத்தார்கள் என்பது புள்ளிவிபரம் காட்டும் விடயம். அதை அநுரவே சொல்லியுமிருக்கிறார். எந்த மாகாணங்களில் எந்தக் கட்சி கூடுதலான வாக்குகளைப் பெற்றது என்ற பருமட்டான வர்ண அடையாளமிட்ட வரைபடத்தை வைத்துக் கொண்டு சிங்கள மக்கள் மாற்றத்துக்குத் தயாராகிவிட்டனர். சிறுபான்மை இனங்கள் மாற்றத்தை விரும்பவில்லை என முடிவுக்கு வருவது பருண்மையானது. தவறானது. மாற்றத்தை விரும்பாத சாமான்ய அல்லது விளிம்புநிலை மனிதரை எங்காவது காண முடியுமா என்ன. மாற்றத்துக்காக அரகலயவை நடத்தியவர்களில் குமார் குணரட்ணம் தலைமை தாங்கும் சமவுரிமைக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஜேவிபியிலிருந்து தள்ளி நிற்பதையும் இன்னொரு பகுதியினர் நுவான் போகபே அவர்களை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தி வாக்களித்தார்கள் என்பதையும்கூட வசதியாக மறந்து அல்லது மறைத்து எழுதும் ஆய்வுக்கு என்ன அர்த்தம் இருக்க முடியும். அவர்களும் மாற்றத்தை விரும்பாதவர்களா என்ன. அதிகாரத்தை சுகிப்பவர்களும் ஊழலில் திளைப்பவர்களும் என வாழ்க்கை நடத்தும் அதிகார சக்திகள் -அவர்கள் எந்த இன, மத, மொழியைச் சேர்ந்தவர்களாயினும்- மட்டுமே மாற்றத்தை விரும்பாதவர்களாக, அதை எதிர்ப்பவர்களாக இருப்பர் என்ற வர்க்க குணாம்சத்தைக்கூட புரியாமல் ஆய்பவர்களுக்கு வரப்போகும் பாராளுமன்றத் தேர்தல் முகத்திலறைந்து ஒரு செய்தியைச் சொல்லத்தான் போகிறது. சிறுபான்மையின மக்களின் வாக்குகளை பெற சிறுபான்மையின கட்சிகளே நாங்கள் அநுரவின் “மாற்றம்” க்கு ஆதரவாக இருப்போம் என வாக்குக் கேட்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். இது சிறுபான்மையின மக்களின் வாக்குகள் என்பிபி க்கு திரும்பத் தொடங்கியிருக்கிறதின் அறிகுறி. அப்படி அவர்கள் பெரும்பான்மையாக என்பிபி க்கு வாக்களிக்கிற நிலை வருகிறபோது, ‘திருந்திவிட்டார்கள்’ என்ற ஒற்றைச் சுட்டலானது -சாத்தியப்பாடுகளை முன்வைத்து எழுதவேண்டிய ஆய்வுகளுக்கு ஈடாக- எந்த அரசியல் அர்த்தத்தையும் வழங்காது. மாற்றம் என்பது மாறிவிடலை மட்டும் குறிப்பதில்லை. மாற்றத்தை நோக்கிய வளர்ச்சியையும் குறிப்பது. சிறுபான்மை இனங்கள் மத்தியில் ஜேவிபி க்கான அந்த வாக்கு வளர்ச்சியை புறக்கணித்து மாற்றத்தை விரும்பாதவர்கள் என முத்திரை குத்துவது ஒருவகை அறிவுச் சோம்பேறித்தனம் மிக்கது. தமிழ் மக்களின் வரலாறு குறிப்பாக 30 வருட போர் என்பது அழிவுகளின் வரலாறு. அது ஏற்படுத்திய தாக்கத்தை, தனித்த தேசியக் கட்சிகளுக்கு வாக்களிப்பதன் மீதான தயக்கத்தை புறக்கணித்து, ஆதரவு-எதிர்ப்பு என்ற இருமை சிந்தனையோடு அணுக முடியாது. இந்த தயக்கத்தினதும் தாக்கத்தினதும் உளவியல் எல்லா தமிழ்க் கட்சிகளினதும் வாக்குவங்கியை வங்குரோத்தாக விடாமல் வைத்திருக்கிறது. உருப்படியாக எதையுமே செய்யாமல் தமிழ்த் தேசியம் என்ற மந்திரத்தை ஓதி ஓதியே அரசியல் நடத்த அது வசதியாகவும் போய்விட்டது. அது தனியான ஒரு விடயதானம். இப்போ அதிக பெரும்பான்மையை என்.பி.பி எடுக்கிற பட்சத்தில், அது மாற்றத்தை நிகழ்த்துகிற படிமுறைகளில் முன்னேற வேண்டும். ஏனெனில் மக்கள் ஆணை வாக்குகளினால் கொடுக்கப்பட்டுவிடும். அதை அவர்கள் நிகழ்த்துவதில் அரச (state) வடிவக் கட்டமைப்பு எந்தத் தூரம் வரை அரசாங்கத்துடன் (government) பயணிக்கும் என்ற கேள்வி புறக்கணிக்க முடியாதது. 340 கோடி ஊழல் செய்த அர்ஜுன் அலோசியஸ் க்கு (மென்டிஸ் நிறுவனம்) வரி ஏய்ப்புக்காக அரச(state) கட்டுமானத்திற்கள் இயங்கும்- நீதிமன்றம் ஆறே ஆறு மாத கால சிறைத்தண்டனையை வழங்கியிருக்கிறது. இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்பதுபோல் புதிய அரசாங்கத்தைப் பார்த்து கேட்கத் தோன்றுகிறது. ஊழல் செய்வதற்கு எதிரான மனநிலையை அல்லது அச்சத்தை வழங்குவதற்குப் பதிலாக ஊழல் செய்வதற்கு தயங்காத ஒரு மனநிலையை இந்தத் தீர்ப்பு வழங்கக்கூடிய அபாயத்தைக் கொண்டுள்ளது. பௌத்த மேலாதிக்க பெரும்பான்மைவாதத்தை அடித்தளமாகக் கொண்ட அரச கட்டமைப்பின் கருத்தியல் அகற்றப்படும் வரை “முறைமை மாற்றம்” என்பது ஒரு ஏமாற்று. சமத்துவம் என்பது ஒரு ஏமாற்று. எனவே அரசாங்கம் ஒரு சமூகநல அரசு என்ற வடிவத்தை நிர்மாணிப்பது முடியுமானதாகலாம். நிர்வாகத்துள் மாற்றம், செயற்திறன், ஊழலின்மை போன்றவற்றை அது சாதிக்கலாம். ஓர் அதிகாரப் பரவலாக்கல் முறைமையை பரீட்சிக்கலாம். முக்கியமாக பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்களை செயற்படுத்துவதில் அதிக கரிசனம் செலுத்தலாம். நடைமுறையில் வீரியமாக செயற்படலாம். முறைமை மாற்றம் என்பது அரகலயவின் முழக்கம். அதைச் சொல்லியே பாராளுமன்றத் தேர்தலிலும் வென்றபின், எல்லா புழுதிகளும் அடங்கியபின், வரலாறு என்பிபி யை கொணர்ந்து விட்டிருக்கிற இடத்திலிருந்து முன்னோக்கி பயணித்தாலே இந்த முழக்கத்தை தம்மோடு வைத்திருக்க முடியும். இது நடவாதபோது அல்லது முடியாதபோது அந்த தேக்கத்தை வரலாறு உடைக்கவே செய்யும். அந்த முழக்கம் திரும்பவும் மக்களிடமே வந்து சேரும். அரசு கட்டமைப்பையும் அதன் வன்முறை இயந்திரமான இராணுவத்தையும் திருப்திசெய்ய வேண்டிய நிலையின் அறிகுறி ஏற்கனவே தென்பட்ட ஒன்று. போர்க்குற்றத்தை உள்ளக விசாரணை செய்து உண்மையை கண்டறியலாம். ஆனால் சம்பந்தப்பட்ட இராணுவத்தினரை தண்டிக்க மாட்டோம் என்பதை அநுர தெளிவாகவே சொல்லிவிட்டார். ஈஸ்ரர் படுகொலையின் சூத்திரதாரிகள் அரசியல்வாதிகள் என்பதைத் தாண்டி இராணுவ உளவுப்படையினரும் சம்பந்தப்பட்டதாகவோ அல்லது வெளிச் சதியாகவோ சிக்கல் அவிழுமாக இருந்தால் என்ன நடக்கும். இயலாமைகள் அல்லது மாற்றத்திற்குக் குறுக்கே எழும் தடைகளை தாண்ட முடியாத நிலையில் என்ன நிகழும். அதிகாரம் பண்புமாற்றத்தை என்பிபி அரசாங்கத்திடம் ஏற்படுத்திவிடக் கூடுமா, இன்னொரு அரகலய மேலெழும்புமா? அப்படி ஏற்படும் பட்சத்தில் அதை அரச அதிகார நிலையில் நின்று என்பிபி எப்படி கையாளும் என பல கேள்விகளுக்கான விடையை எதிர்காலம்தான் வைத்திருக்கிறது. இந்த 70 வருடகால அரசியல் பாரம்பரியத்துக்கு வெளியே, அரகலய மக்கள் போராட்டம் முன்வைத்த மாற்றம் என்ற புதிய எழுச்சி ஏற்படுத்திய புது நம்பிக்கையை என்பிபி சுமந்து நிற்கிறது. இதில் ஏமாற்றம் நிகழுமாயின் அதன் தாக்கம் மக்களின் உளவியலில் பலமானதாகவே இருக்கும். என்பிபி இதில் வெற்றிபெற வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக இருக்கிறது. நமதும்! பிரதமர் ஹரிணி அவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வை வழங்குவது என்பதைவிட அது அவர்களின் உரிமை என்று சொல்வதே சரியானது என்று தெளிவாக சொன்ன சொற்கள் முளைவிட்டு நிமிர்வதற்குமுன், என்பிபி யின் பொதுச்செயலாளர் சில்வா அவர்கள் “வடக்குக்கு 13ம் சட்டத் திருத்தமும் தேவையில்லை. அதிகாரப் பகிர்வும் தேவையில்லை. பொருளாதார வளர்ச்சியே தேவை” என சொன்னதாக செய்திகள் வந்திருக்கின்றன. அதிகாரப் பகிர்வு என்பது ஜனநாயக முறைமையின் ஒரு செழுமையான அம்சம் என்பதற்கு சுவிற்சர்லாந்து ஓர் அசல் உதாரணம். அது ஒருபுறம் இருக்க, எல்லா முரண்பாடுகளையும் பொருளாதார பிரச்சினைக்குள் உட்படுத்துவதை மார்க்சிய வழித்தோன்றல்களாக தம்மை காட்டிக் கொண்ட ஜேவிபி கூறுவதை ஏற்க முடியவில்லை. இலங்கையை இந்த நிலைமைக்குள் தள்ளிய இனப் பிரச்சினையின் தனித்தன்மையை மற்றைய பிரச்சினைகளுடன் ஒரே சிமிளினுள் அடைத்து முன்பு வர்க்கப் பிரச்சினை மட்டும்தான் என்றார்கள். இப்போ பொருளாதாரப் பிரச்சினை மட்டும்தான் என்கிறார்கள். பொருளாதார நெருக்கடி முதன்மை முரண்பாடாக தோன்றி இனவாதத்தை இரண்டாம் நிலைக்கு தள்ளியிருக்கிறதே யொழிய நீண்ட வரலாறும், செயற்பாடும், பொது உளவியலும் கொண்ட இனவாதத்தை ஒரு தேர்தலால் அடித்து வீழ்த்த முடியும் என்பது 5 வருடங்களுக்கு ஒருமுறை புரட்சியாளர் தோன்றுவர் என எதிர்பார்ப்பதற்கு ஒப்பானது. * 19102024 ravindran pa https://sudumanal.com/2024/10/19/அலைகளின்-நடுவே/#more-65661 point- வீட்டு வளவுக்குள் இருக்கும் பற்றைக்குள் செல்லாதவர்கள் எல்லாம் இப்ப வன்னிக்காடுகள் பற்றி விமர்சிக்கிறார்கள். -கவிஞர் வீரா
அவரே தான்1 point- இளையோரை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப தமிழ் மக்கள் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் - மணிவண்ணன்
இதுதான் உண்மை...இன்னும் பலர் களமிறக்கப்படுவர்....1 point- கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது இந்தியக் கடற்படை கப்பல்
ஏன் இப்படி யோசிக்கிறீர்கள்?? உங்கள் வீட்டை பஞ்ச் வந்தார் பிறகு மின்மினி வந்தார் அடுத்து குமாரசாமி வந்தார் மேலும் விசுகரும். வருவதாக சொன்னார் இதேபோல் இலங்கைக்கு நண்பர்கள் சொந்தங்கள் இருக்கும் தானே ?? 🤣🤣🙏1 point- யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
10, 13 வது கேள்விகள் இந்தக்கட்சியை பற்றித்தான் கேட்டிருந்தேன். அவர்கள் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் சுயேட்சை குழு 14 இல் போட்டியிடுகிறார்கள். தவராஜா போல கடைசி நிமிடத்தில் உமாகரன் ராசையா, ஆனந்தி எழிழன், கஜதீபன் , லோஜன் ( கொழும்பு) போன்றவர்களை சேர்க்க நினைத்து இருந்தும் தவறுதலாக மறந்துவிட்டேன்1 point- யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
போட்டியில் கலந்து கொண்டுள்ளேன் ......ஒரு பிழையுடன் பிழையை சுட்டி காட்டினால் திருத்தப்படும் 🤣🤣1 point- கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது இந்தியக் கடற்படை கப்பல்
எப்படியும் அடுத்த வாரம் சீன போர்க் கப்பலும், அதற்கு அடுத்த வாரம் அமெரிக்க போர்க் கப்பலும் வரும்.1 point- இந்தியாவை எதிர்த்து விட்டு எதனையும் செய்ய முடியாது: செல்வம் அடைக்கலநாதன் எச்சரிக்கை
இவரை பார்க்க, பேரப் பிள்ளை உள்ள தாத்தா மாதிரி இருக்கு. இன்னும் இவரின் பிள்ளைகள் பள்ளிக்கூடம் போவது ஆச்சரியம் தான். 😂1 point- வடக்கு - கிழக்கில் 15ஆசனங்கள் உறுதி- சுமந்திரன் தெரிவிப்பு!
நீங்கள் கேட்ட காணொளி இந்தத் திரியிலே உள்ளதா? நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி1 point- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
1 point- இளையோரை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப தமிழ் மக்கள் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் - மணிவண்ணன்
யாழ்மாவட்டத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு ஆசனந்தான் வரும் போல் உள்ளது. இதனால் கட்சித்தலைமைகள் 2பேர் பழைய ஆட்களாக வைச்சுக்கொண்டு மிச்ச ஆட்களை இளைஙர்களைப் போட்டு எங்கள் அணியில் இளைஞர்களுக்கு இடம் கொடுத்துள்ளோம் என்று மக்களைப் பேய்க்காட்டுகிறார்கள். அவர்களை வைத்து ப் பெறப்படும் வாக்குகளை வைத்து தேசியப்பட்டியல் மூலமாகப் பழையபடி பழையவர்கள் பாராளுமன்றத்தற்கு செல்வதே அவர்களின் திட்டம். இளைஙர்களுக்கும் இது தெரிந்தும் மாகாணசபை>உள்ளூராட்சபைத் தேர்தல்களில் நிற்க இடம் கிடைக்கும் என்று நம்புகிறார்கள். இப்பொழதெல்லாம் இந்த உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்கெல்லாம் சம்பளம் கொடுக்கிறார்கள். முன்பெல்லாம் கிராமசபைகள் இருந்த காத்தில் அங்கத்தவர்களுக்கு ஊதியம்வழங்கப்hடுவதில்லை.1 point- கருத்துப்படம் 19.10.2024
1 point- ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் 'கொல்லப்பட்டாரா என சரிபார்த்து வருகிறோம்’: இஸ்ரேல் ராணுவம்
மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி தூயவன். இஸ்ரேலியரின் வேதாகமத்தில் இன்று போர்நடக்கும் பலபகுதிகள் அன்று அவர்களின் தாயகம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. 1000 வருடங்களுக்கு (அண்ணளவாகத்தான்) முன்னர் அரேபியப் படையெடுப்புக்களால் இஸ்ரேலியர்கள் இங்கிருந்து விரட்டப்பட பலஸ்த்தீனர்கள் அங்கு குடியேறிவிட்டார்கள். 1948 இற்குப் பின்னரே இஸ்ரேலியர்கள் அங்கு மீளவும் குடியேறினார்கள். தமது வேதாகமத்தின்படி பலஸ்த்தீனர்கள் தற்போது வாழும் , தமது முந்தைய தாயகத்தை மீட்டு, மீள உருவாக்க முயல்கிறார்கள். அப்படியானால் அங்குவாழும் பலஸ்த்தீனர்கள் எங்கு செல்வது? கடந்த 1000 வருடங்களாக அவர்களும் அங்குதானே வாழ்கிறார்கள்? யூதரும், பலஸ்த்தீனியர்களும் இருக்கும் தாயகத்தை பகிர்ந்து வாழ்வதே சரியாக இருக்கும் என்பது எனது நிலைப்பாடு.1 point- வடக்கு - கிழக்கில் 15ஆசனங்கள் உறுதி- சுமந்திரன் தெரிவிப்பு!
ஒருதடவை, பொதுமக்கள் சுமந்திரன் சந்திப்பு கூட்டம் ஒன்று நடைபெற்றது. கூட்டம் நேர்த்தியாக போய்க்கொண்டிருந்தது சுமந்திரன் பேசும்வரை. அதன் பின், ஒரு பொதுமகன் எழும்பி சுமந்திரனிடம் கேள்வி கேட்டார் பாருங்கள், வந்ததே வந்தது சுமந்திரனுக்கு கெட்ட கோபம்., உடனே, "இங்கே இருப்பதென்றால்; வாயை மூடிக்கொண்டு இருக்கவும், இல்லையேல்; வெளியேற்றப்படுவீர்கள்." என்று எச்சரித்தார். இராணுவமோ புலனாய்வோ என்னவோ ஒன்று இதற்காகத்தான் இவர் பின்னால் திரிகிறதோ என்னவோ? "ஊமையர் சபையில் உளறுவாயன் மகா பிரசங்கி."1 point- யாழ் பல்கலைகழக மாணவர்களின் குரல்
1 point- வடக்கு - கிழக்கில் 15ஆசனங்கள் உறுதி- சுமந்திரன் தெரிவிப்பு!
சுட்டுப்போட்டாலும் நம்ம அரசியவாதிகளுக்கு அது எட்டாப்பொருத்தம். அவர்கள் அதைப்பற்றி சிந்தித்திருந்தால்; வடக்கில் இவ்வளவு கட்சிகள் போட்டியிட வாய்ப்பில்லையே. நாளைக்கு சீனன் போட்டியிட்டாலும்வியப்பில்லை. அபிவிருத்தியில் ஈடுபடுகிறார்கள் ஆனால் அது மக்களுக்கானதல்ல. அதனாலேயே மக்களிடம் வரும்போது சிலருக்கு சிங்கள புலனாய்வு பாதுகாப்பளிக்கிறது. தேவைப்படுகிறது.1 point- வடக்கு - கிழக்கில் 15ஆசனங்கள் உறுதி- சுமந்திரன் தெரிவிப்பு!
நீங்கள் விரட்டினாலும் அவருக்கு இருக்கவே இருக்கிறது வீடு, ஓடிப்போய் பாதுகாப்பாக ஒழிப்பதற்கு.1 point- ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் 'கொல்லப்பட்டாரா என சரிபார்த்து வருகிறோம்’: இஸ்ரேல் ராணுவம்
இல்லை அண்ணை, இதெல்லாமே நடந்தது. இதில் மறுப்பதற்கு எதுவுமில்லை. ஈஸ்ரேல் நடத்துவது ஆக்கிரமிப்பு யுத்தம்தான். ஈழத்தமிழர் மீது அவ்வாறான ஆக்கிரமிப்பொன்றினை நடத்தலாம் என்று ஜெயவர்த்தனா, காமிணிக்குச் சொல்லிக் கொடுத்ததே இஸ்ரேலிய மொஸாட்டுக்கள் தான். காஸாவிலும் மேற்குக் கரையிலும் பலஸ்த்தீனர்களை விரட்டியடித்துவிட்டு இஸ்ரேலியர்களைக் குடியேற்றி ஆயுதமயப்படுத்தியதைத்தான் இலங்கையிலும் தமிழர் தாயகத்தில் மொஸாட்டுக்கள் செய்வித்தார்கள். ஆக, ஈழத்தமிழரின் அவலங்கள் ஆரம்பிக்கப்படு முன்னமே பலஸ்த்தீனர்களின் அவலங்கள் ஆரம்பித்து விட்டன. நான் சொல்ல வந்தது ஹமாஸும் புலிகளும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கப்பட முடியாதவர்கள் என்பதைத்தான். இவ்விரு அமைப்புக்கள் மீதான சர்வதேசத் தடை என்பது தடை விதிக்கும் நாடுகளின் நலன்களைப் பொறுத்தே அமைந்திருக்கின்றன. மாறாக இவ்வமைப்புக்களின் நடவடிக்கைகள் சரியானவையா தவறானவையா எனும் அடிப்படையில் அல்ல.1 point- அருச்சுனா இராமநாதன் தலைமையிலான சுயேட்சை குழுவின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு
நம்ம ஆட்கள் எத்தனை பேர் போகப் போகிறார்கள் பார்ப்போம்.1 point- ஓய்வை அறிவித்தார் ரஃபேல் நடால்
1 pointசரியான நேரத்தில் எடுத்த சிறந்த முடிவு . ........சகல விளையாட்டுகளிலும் இப்போது வரும் இளம் வீரர்கள் அசுரத்தனமாக விளையாடுகின்றார்கள் . ........! 👍1 point- வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?
1 point- வடக்கு - கிழக்கில் 15ஆசனங்கள் உறுதி- சுமந்திரன் தெரிவிப்பு!
1 point- கட்டபொம்மன் ஒரு தெலுங்கர், கொள்ளைக்காரர் என்கிற வாதங்கள் சரியா? வரலாற்று திரிபுகளும் உண்மைகளும்
1 pointஎன்னது? "நாங்கள் மலையாளிகளா?" தொலைந்தீர்கள் நீங்கள்😂! அமுக்க வெடியில் (pressure mine) கால் வைத்து விட்டீர்கள், இனி காலை எடுக்காமல் அப்படியே அசையாமல் நில்லுங்கள்!1 point- வடக்கு - கிழக்கில் 15ஆசனங்கள் உறுதி- சுமந்திரன் தெரிவிப்பு!
விசுகர், கனவு காண்பதற்கும் ஒரு நியாயம் வேண்டாமோ.... சுமந்திரன் பாரளுமன்றம் போறதுக்கே பெரிய இழுபறியாய் கிடக்கு, இதுக்குள்ளை... 15 விளக்குமாத்தையும் காவிக் கொண்டு போற பிளான் இருக்குதாம்.1 point- வடக்கு - கிழக்கில் 15ஆசனங்கள் உறுதி- சுமந்திரன் தெரிவிப்பு!
ஒபாமா செய்தது போல முழுநீள பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தைக் காட்டினாலும் நம்ப மாட்டியளோ? 😂1 point- இலங்கை - இந்திய மீனவர் மோதலும் அநுரவின் நிலைப்பாடும்
ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான 8 மாதக் காலப்பகுதிக்குள் இலங்கையினால் மீன் இறக்குமதிக்காக மாத்திரம் 24 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கரின் ‘வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய விவகாரங்கள் தொடர்பில் மனிதாபிமான அடிப்படையிலான அணுகுமுறையை கையாளுங்கள் என்ற பரிந்துரையை அநுரகுமார அரசாங்கம் ஏற்றுக்கொள்ளுமா? ஜனவரி முதல் செப்டெம்பர் வரையிலான 9 மாத காலப்பகுதியில் 55 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் 413 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். (நிவேதா அரிச்சந்திரன்) இலங்கை தீவைச் சூழ அமைந்துள்ள கடற்பரப்பு நாட்டுக்கு கிடைத்துள்ள அருங்கொடையாக பார்க்கப்படுகிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக பல ஆண்டுகளாக இலங்கைக்கு நெருக்கடி நிலைமையை தோற்றுவித்துள்ள இலங்கை - இந்திய மீனவர் விவகாரத்துக்கு இதுவரை தீர்வு பெற்றுக்கொடுக்கப்படாமல் உள்ளது. கடந்த வருடம் கச்சதீவு விவகாரம் பேசுபொருளாக மாறியிருந்த நிலையில் அதனோடு இணைந்ததாக தற்போது மீண்டும் இந்த மீன்பிடி விவகாரமும் தலைதூக்கியுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இலங்கையில் ஆட்சியமைத்துள்ளது. இந்நிலையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் கடந்த வாரம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இந்த சந்திப்பில் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் தொடர்பில் கவலை வெளியிட்டிருந்தார். குறிப்பாக இந்திய மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விரைவில் விடுதலை செய்ய வேண்டுமென தெரிவித்திருந்த அவர், இந்திய மீனவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அதிகூடிய அபராதம் தொடர்பில் மீள்பரிசீலனை செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்திருந்தார். அதேநேரம் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய விவகாரங்கள் குறித்த மனிதாபிமான அடிப்படையிலான அணுகுமுறையானது இந்த விவகாரத்தை தீர்த்து வைப்பதற்கான சிறந்த உத்தியாக அமையும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். மீன்பிடித்துறை, மீனவர் சங்கங்கள் குறித்த கூட்டுப்பணிக் குழுக்கூட்டம் உரிய காலத்தில் நடத்தப்படும் என உறுதியளித்த இந்திய வெளிவிவகார அமைச்சர், கடந்த 4ஆம் திகதி 50 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டமைக்கு நன்றியும் தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துடனான சந்திப்பில் அயலுறவுக்கு முதலிடம் மற்றும் சாகர் கோட்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் இருதரப்பு ஒத்துழைப்பு நிலைநிறுத்தப்படும் எனவும் தெரிவித்திருந்தார். அதேநேரம் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் பணித்திட்டங்கள் ஊடாக இலங்கைக்கு இந்தியா வழங்கி வருகின்ற அபிவிருத்தி சார் உதவிகள் தொடரும் எனவும் உறுதியளித்திருந்தமையானது இலங்கை மீதான இந்தியாவின் கண்ணோட்டத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இதன் ஊடாக இலங்கையில் எந்த அரசாங்கம் ஆட்சியமைத்தாலும் இந்தியாவின் ஒத்துழைப்பு தொடரும் என்பது உறுதியாகிறது. அதற்கு இலங்கையின் அமைவிடமே முக்கிய காரணியாக அமைந்திருப்பதாக துறைசார் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தைப் பொறுத்தமட்டில் நாட்டின் தேசிய வளங்களைப் பாதுகாப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்த விடயத்தில் கடந்த கால அரசாங்கங்களையும் கடுமையாக விமர்சித்திருந்தது. இந்நிலையில் மீன்பிடி விவகாரத்தில் இந்த அரசாங்கத்தின் நகர்வு எப்படி அமையும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது. இலங்கை ஆரம்பகாலம் முதல் கடந்த 2002 மற்றும் 2022 ஆகிய காலப்பகுதிகளில் முகங்கொடுத்த பொருளாதார நெருக்கடிகளின்போது இந்தியாவே நாட்டுக்கு கைகொடுத்து உதவியது. இந்நிலையில் மூன்று தசாப்த கால யுத்தத்துக்கு பின்னர் இலங்கையின் வடபகுதியில் தென்னிந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுகின்றமை இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவுக்கு மிகப் பெரிய சவாலாக அமைந்துள்ளது. ஆனால், இந்த விடயத்தை இரு நாடுகளுமே மெளனமாக கடந்து செல்கின்ற விதமானது இரு நாட்டு நட்புறவை தக்கவைத்துக்கொள்வதற்கான காய்நகர்த்தலாகவே பார்க்க வேண்டியுள்ளது. இலங்கையின் நிலப்பரப்பை விட 8 மடங்கு மிகப்பெரிய கடற்பரப்பும் மீன்வளமும் கொண்ட இலங்கைத் தீவின் கடற்பரப்பு இந்திய மீனவர்களால் ஆக்கிரமிக்கப்படுவதாக தெரிவிக்கப்படும் விவகாரத்தில் இரு நாட்டு மீனவ சமூகங்களும் வாழ்வாதார ரீதியில் மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டுள்ளன. குறிப்பாக இலங்கை கடற்படையினரின் துப்பாக்கி பிரயோகங்களால் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதோடு இந்திய, இலங்கை மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. அதேநேரம் இலங்கை கடந்த காலங்களில் பொருளாதார ரீதியில் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்திருந்தது. இதன்போது பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு தேவையான டொலர் உள்வருகையை அதிகரிப்பது தொடர்பில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளில் இலங்கையின் மீன் வளம் மிக முக்கியமானது என துறைசார் நிபுணர்களால் சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால், இந்த விடயத்தில் இதுவரை ஆட்சியிலிருந்த அரசாங்கங்கள் இந்திய அரசாங்கங்களுடன் சுமுகமான ஓர் உடன்பாட்டுக்கு வருவதற்குரிய காய்நகர்த்தல்களை மேற்கொள்ளவில்லை. குறிப்பாக இந்த விவகாரத்தில் இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைவதால் இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள இழப்பு மதிப்பீட்டு கணிப்பீடுகள் இதுவரை எமது அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படாமல் உள்ளது. இலங்கையின் கடல்வளத்தை ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் உரியவாறு பயன்படுத்தியிருந்தால் இலங்கையின் பொருளாதாரத்துக்கு இந்தத் துறை மிகப் பெரிய பங்களிப்பை வழங்கியிருக்கும் என்பதே பொருளாதார நிபுணர்களின் கருத்தாக அமைந்துள்ளது. இழுவை மடிப்படகுகள் இலங்கையில் முற்றாக தடை செய்யப்பட்டுள்ள போதிலும் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்கள் இவற்றை பயன்படுத்துவதால் மீன்களின் இருப்பும் கேள்விக்குறியாகியுள்ளது. இது தொடர்பில் ஊடகங்களாலும் சமூக ஆய்வாளர்களாலும் கல்விமான்களாலும் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டப்பட்டு வருகின்ற போதிலும் இது தொடர்பில் இலங்கையின் கடந்த அரசாங்கங்கள் மெளனம் காத்து வந்துள்ளன. அவ்வப்போது இந்த விடயத்துக்கு எதிராக மக்கள் குரல் எழுப்பும் வேளைகளில் இந்திய மீனவர் கைது சம்பவங்களும் இழுவைப்படகுகள் பறிமுதல் செய்யும் சம்பவங்களும் மாத்திரம் நடந்தேறுகின்றன. இலங்கையில் நடந்தேறிய மூன்று தசாப்த கால யுத்தம் காரணமாக வடக்கு, கிழக்கு கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மாத்திரமன்றி இலங்கை மீனவர்களுக்கும் மீன்பிடிக்க முடியாமல்போனமையானது குறித்த பகுதிகளில் மீன்வளம் பெருக்கமடைய வழிகோலியது. இதனால் யுத்தம் நிறைவடைந்த கையோடு தென்னிந்திய மீனவர்கள் இலங்கையின் கடற்பரப்புக்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட ஆரம்பித்துவிட்டனர். ஆனால் இந்த விடயத்தில் அப்போது அதிகாரத்திலிருந்த அரசாங்கம் அறிந்தும் அறியாததைப்போன்று நடந்துகொண்டதன் விளைவாகவே இன்று இந்த மீனவர் விவகாரம் தலைதூக்கியுள்ளது என துறைசார் நிபுணர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். மீன் இறக்குமதியில் ஆர்வம் காட்டும் இலங்கை மிகப்பெரிய கடல்வளத்தைக் கொண்டுள்ள இலங்கை வெளிநாடுகளிலிருந்தே மீன்களை இறக்குமதி செய்கிறது. ஆனால் இதற்குப் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கங்கள் இதுவரை காலமும் மெளனம் சாதித்து வருகின்றன. இந்த வருடத்தின் ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான 8 மாத காலப்பகுதிக்குள் இலங்கையினால் 39 பில்லியன் மெட்ரிக் தொன் மீன் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கடற்றொழில் அமைச்சின் தரவுகளுக்கு அமைய மீன் இறக்குமதிக்காக மாத்திரம் 24 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. அதன் டொலர் பெறுமதி 80 மில்லியனாக பதிவாகியுள்ளது. அதனடிப்படையில் வருடாந்தம் இலங்கை 900 பில்லியன் ரூபாய் பெறுமதியான மீன்வளத்தை இந்தியா சூறையாடுவதாக வடமாகாண கடற்றொழில் இணையம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்திய மீனவர்களின் அத்துமீறல் இந்திய மீனவர்களது அத்துமீறலால் கடற்றொழிலை நம்பி வாழ்ந்துவரும் உள்நாட்டு மீனவக் குடும்பங்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் கடந்த காலங்களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளால் மிகவும் பாதிக்கப்பட்ட ஒருதரப்பாக இந்த மீனவ சமூகம் காணப்படுகிறது. இது தொடர்பில் கடந்த காலங்களில் இந்த விவகாரம் சூடுபிடித்தபோது இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் நடுக்கடலில் பேச்சுவார்த்தை என்றார்கள், இந்திய நாட்டு மீனவப் படகுகளுக்கு நிபந்தனை அடிப்படையில் அனுமதி வழங்கப்போவதாக தெரிவித்தனர். ஆனால் இவை அனைத்தும் பெயரளவிலேயே நடந்தேறின. இந்திய மீனவர்களின் அத்துமீறலால் நாட்டின் மீன் வளம் மாத்திரமன்றி மீனவர்களின் மீன்பிடி உபகரணங்கள் மற்றும் வலைகளையும் அறுத்துச் செல்கின்றனர். அதேநேரம் இழுவை மடிப்படகுகளால் மீன்களின் இனப்பெருக்கம் படிப்படியாக அழிக்கப்படுகிறது. இதன் விளைவாக இலங்கையின் கடல்வளம் அழிக்கப்படும் அபாயம் நிலவுவதாக துறைசார் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இருநாட்டு மீனவர்களையும் நடுக்கடலில் மோதவிட்டு இலங்கை அரசாங்கம் வேடிக்கை பார்ப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர். காலத்துக்குக் காலம் கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் விவகாரம் தொடர்ந்தும் நடந்தேறுவதுடன் பரிதாப உயிரிழப்புக்களும் பதிவாகின்றன. காங்கேசன்துறை கடற்பரப்பில் அண்மையில் இழுவை மடிப்படகு மோதியதில் காயமடைந்த கடற்படை வீரர் அண்மையில் உயிரிழந்த சம்பவமும் பதிவாகியிருந்தது. அதேநேரம் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் செப்டெம்பர் 29ஆம் திகதி வரையிலான 9 மாத காலப்பகுதியில் 55 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் 413 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 4 வருடங்களுக்குள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் 1143 இந்திய மீனவர்களும் 157 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் வேடிக்கை என்னவெனில், இந்திய மீனவர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள அழிவுகள் தொடர்பில் எவ்விதமான மதிப்பீடுகளையும் மேற்கொள்வதற்கு இதுவரை ஆட்சியிலிருந்த இலங்கை அரசாங்கங்கள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பதுதான். அதேநேரம் இலங்கையின் கடல்வள பயன்பாட்டுக்கு வரவு – செலவுத் திட்டத்தில் போதிய நிதி கூட ஒதுக்கப்படுவதில்லை எனவும் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த கடல் வளத்தை இலங்கை சரியாக பயன்படுத்தியிருந்தால் இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பியிருக்க முடியும் என்பதே துறைசார் நிபுணர்களின் பரிந்துரையாகவுள்ளது. https://www.virakesari.lk/article/1962551 point- தந்தை செல்வாவின் பேரன்... தமிழரசு கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுகின்றார்.
இந்திய றோ மற்றும் RSS வழி நடத்தலில் கோமிய கூட்டில் பக்கா தாயக தமிழ் தேசிய வியாபாரி சுமந்திரன் என்பது தெளிவாக தெரிந்து விட்டது…1 point- அருச்சுனா இராமநாதன் தலைமையிலான சுயேட்சை குழுவின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு
- வடக்கு - கிழக்கில் 15ஆசனங்கள் உறுதி- சுமந்திரன் தெரிவிப்பு!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.