Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    25
    Points
    87990
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    20
    Points
    46783
    Posts
  3. vasee

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    3314
    Posts
  4. uthayakumar

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    616
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/06/24 in all areas

  1. தமிழ் யூடியூப் தம்பிமாரே- பா.உதயன் தமிழ் யூடியூப் சில தம்பிமாருக்கு லொத்தர் சீட்டிலுப்பு விழுந்தது போல் சோக்காய் தான் வாச்சுப்போச்சு இலங்கை தேர்தல் திருவிழாவாச்சு சுத்தி அடிச்சு கதை பேசி சும்மா எல்லாம் உசுப்பேத்தி நாளுக்கு ஒரு கதை சொல்லி ஆளுக்கு ஒரு அரசியல் ஆய்வாளர் போல காலை ஒரு காணொளி மாலை ஒரு காணொளியாய் கனக்கவெல்லோ வருகுதிப்போ புலத்திலும் தான் நிலத்திலும் தான் சிங்கம் தனியா சிங்குலா வருகுது கோட்டைக்கு என்று வட்டுகோட்டைக்கு வழி கேட்டால் கொட்டை பாக்குக்கு விலை சொல்லி அரசியல் வகுப்பு எடுக்கினம் யாருக்கும் ஒன்றும் தெரியாது போலவே கனக்க எல்லாம் புழுகியடிச்சு பணத்தை மட்டும் பார்கிறார்கள் சொந்த இனத்தை எண்ணி கவலை இல்லை இவர்களோடு கூட நின்று மேடை போட்டு முழங்கியது போலவே அருச்சுனன் பீமன் சகாதேவன் நகுலன் என்று நல்லாத் தான் நடிக்கிறார்கள் அந்தப் பாராளுமன்ற கதிரைக்காக ஆளுக்கு ஒரு சின்னத்தோட வீட்டுக்கு ஒரு வேட்பாளர் போல சிலர் சமத்துவமே வந்தது போல் தமிழர் பிரச்சினையே தீர்ந்தது போல் கனக்க வந்து காணொளியில் புழுகிறார்கள் நினைக்கவே கவலையாய் இருக்கு சமூக ஊடகங்கள் பொறுப்பாய் இல்லை ஏதோ ஒரு அலை எல்லோரையும் மயக்கத்தில தள்ளுது தமிழ் யூடியூப் தம்பிமாரே எல்லோரையும் சொல்லவில்லை நல்லோரும் உண்டு லைக்கை மட்டும் பார்க்காமல் கைக்கு வரும் காசை மட்டும் நினைக்காமல் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்காமல் பொறுப்பாய் கொஞ்சம் பேசுங்கள் அறிவாய் எதையும் அணுகுங்கள். பா.உதயன்✍️
  2. வெளியில் எளிமையாக திரிகின்றார்கள். தேர்தலில் அமோக வெற்றி பெறுவார்கள் என நினைக்கின்றேன். மற்றும் படி தமிழ் வேட்பாளர்களை மக்கள் கணக்கெடுப்பதாக தெரியவில்லை. இதை எனக்கு சொன்னது வேட்பாளராக நிற்கும் என் உறவினர்.🙂 எனது சொந்தங்களில் 7 பேர் வேட்பாளராக நிற்கின்றார்கள்.
  3. நிச்சயமாக இது நடக்காது, இந்த போரில் உக்கிரேன் வெறும் அம்பு மட்டுமே, அதிபர் தேர்தலில் வேட்பாளர்கள் தொழில்முனைவர்கள், சமூக ஆர்வலர்களினை குறிவைத்து சமாதானம் எனும் தொணிபட பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தாலும், இரண்டு அதிகாரங்களுக்கிடையான போரில் அமெரிக்கா தனது நிலையினை தக்க வைக்க செய்யும் பிரயத்தனமே இந்த போர், ஆனால் இனி வரும் காலங்களில் அமெரிக்காவினது போரிற்காக ஐரோப்பா அதன் செலவினை ஏற்றுக்கொள்ளவேண்டிய நிலை ஏற்படும் அவ்வளவுதான் வித்தியாசம் போர் தொடரும் நிலையே காணப்படும் (அந்த செலவினை அமெரிக்கா ஐரோப்பாவிடமிருந்து பெற்றுக்கொள்ளும்.). உக்கிரேன், இரஸ்சியா போரினால் அழிவடையும் நிலை தொடரும், உலகம் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்கும் நிலையும் தொடரும்.
  4. ட்ரம்ப், புரின் லவ்வர்ஸ் மகிழ்ச்சிக் களிப்பில் இருக்கிறார்களெனத் தெரிகிறது😎. யாரோ இங்கே சுட்டியது போல போலந்து வீழந்தால், இவையள் அனேகமாக நான் முன்னரே ஒரு தடவை குறிப்பிட்டது போல Ramstein Airbase இற்கு ஷொப்பிங் பையோடு போனால் C-17 விமானத்தில் அத்திலாந்திக்கைத் தாண்டி வட அமெரிக்கா வந்து விடலாம். பிறகு இங்கால இருந்து "சீ..இதெல்லாம் ஒரு நாடோ?" என்று புதிதாக ஆரம்பிப்பினம் என நம்புகிறேன்😂. சீரியசாகப் பார்த்தால்: KFC க்கு வாக்குப் போட்ட கோழிகள் நிலை தான். ட்ரம்பும், வான்சும் அன்றாடம் போட்டுத் தாக்கிய இனக்குழுக்கள் பல்வேறு காரணங்கள் சொல்லி ஒன்று வாக்களிக்காமல் விட்டிருக்கிறார்கள், அல்லது டரம்புக்கே வாக்களித்திருக்கிறார்கள். உதாரணமாக, 20 வருடங்களாக முழு நீலமாக இருந்த என் மாநிலம் (கமலா வென்றாலும்) பெருவாரியாக ட்ரம்புக்கு வாக்களித்திருக்கிறது. வாக்களித்தது யார் என்று பார்த்தால் ஸ்பானிய அடி அமெரிக்கக் குடிகள். அனேகமாக, மெக்சிக்கரையும், ஏனைய ஸ்பானிய குடியேறிகளையும் ட்ரம்ப் அள்ளு கொள்ளையாக நாடுக் கடத்தும் போது இவையள் மகிழ்வினம் என நம்புகிறேன். அதே போல, கறுப்பின மக்களில் ஆண்கள் கமலாவுக்கு அவ்வளவு வாக்களிக்கவில்லை. ஏன்? "பெண் எங்களை ஆள்வதா?" என்ற மேலாதிக்க மனநிலை. அத்தோடு "சட்ட விரோதக் குடியேறிகள் உங்கள் தொழில்களைப் பறிக்கீனம்" என்று ட்ரம்ப் சொல்ல நம்பி விட்டார்கள். பகிடி என்னவென்றால் இதை நம்பிய பலர் வேலை வாய்ப்புகள் இருந்தும் வேலைக்குப் போய் உழைக்காமல் தெருமுனையில் நின்று ஈயோட்டிய "குடி மக்கள்"😎. அடுத்த பகிடி: அரபு அமெரிக்கர்கள். "ட்ரம்ப் சமாதானம் தருவார்" என்று நம்பியதாக வெளியே சொல்லிக் கொண்டு தான் இவர்கள் ட்ரம்பை நோக்கிச் சாய்ந்தார்கள். ஆனால், இவர்களின் உண்மையான காரணம், பெண் வெறுப்பு வாதம், ஒரு பால் உறவு, இடைப்பாலினர் மீதான வெறுப்பு என்பதாக இருக்கிறது. மோடி வாலா இந்திய அமெரிக்கர்களும், பலஸ்தீன/அரபு அமெரிக்கர்களும் ட்ரம்போடு ஒரே கட்டிலில்: The strangest bedfellows! தென்னிந்திய/சிறிலங்கா வழி அமெரிக்கர்களின் இலக்கோ பங்கு மார்க்கெட்டில் இப்போது வருவதை விட இன்னும் இலாபம் வர வேண்டும், அதை வைத்துக் கொண்டு ஊர் சுற்றுலா, ரெஸ்லா, மான்ஷன் வீடு என்று ஜாலியாக இருக்க வேண்டும் என்பதாக எனக்குப் புரிகிறது. வீட்டில் இருக்கும் பெண் பிள்ளைகள், மனைவி, தங்களுடைய மண்ணிறத் தோல் கொண்ட வம்சாவழியினருக்கு, தாம் இறந்த பிறகும் நீடித்திருக்கும் ஆப்பை உருவாக்கியிருக்கிறோம் என்பது புரியாமலே ட்ரம்பை ஆதரித்திருக்கிறார்கள்.
  5. நாங்கள் வழிபடுவதே பாலியல் சின்னம்தானே. கோயில் கோபுரங்கள் முழுதும் பாலியல் சிலைகள்தானே. மதங்கள் மனிதர்களை நல் வழிப்படுத்தவே இருக்க வேண்டும். அர்த்தநாதீஸ்வரர் இருப்பது இந்து மதத்தில்தனே ஆனாலும் பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதில் ஆண்கள்தானே முடிவெடுக்கிறார்கள். விழாக்களில் கூட ஆண்கள் ‘சூட்’ அணிந்திருப்பார்கள். பெண்கள் சேலை அணிந்து வருவார்கள். அன்று கணவன் இறந்தால் மனைவி உடன்கட்டை ஏறினாள். இன்று நிலமை அப்படி அல்ல. எந்த மதமானாலும் நல்லதை ஏற்க வேண்டும். அல்லதை களைய வேண்டும்
  6. இரண்டு தினங்களுக்கு முதல் ஒர் வீடியோ பார்த்தேன் அறூஸ் என்ற அரசியல் ஆய்வாளர் சொல்லியிருந்த்தார் சுவிஸ்லாந்து போல ஓர் அரசியல் கட்டமைப்பு இருந்தால் "புலம்பெயர்ஸ்"முதலீடுகளை செய்ய முன்வருவார்கள் என கூறியிருந்தார்...அதுதான் சும்மா நக்கலுக்கு அப்படி எழுதினேன்,,
  7. அப்படியே இந்த தவகரனுக்கு மட்டும் தனியே ஒரு கவிதை எழுதுங்கோ அண்ணை, கிளிநொச்சி சந்தைக்குள்ள புகுந்து சனத்தட்ட அநுரவுக்குத்தான் வாக்கு போடுங்கோ என்பதை அவர்கள் வாய்க்குள்ளாலயே புடுங்கி எடுக்க என்னமா படாத பாடு படுகிறார். தேர்தல் முறைமைப்படி பொதுமக்களிடம் தனிப்பட்ட ரீதியில் யாருக்கு வாக்களிக்க போகிறீர்கள் என்று கருத்து கணிப்புக்கள் நடத்துவதே தவறு என்று நினைக்கிறேன், இதெல்லாம் எப்படி அனுமதியோ தெரியல,
  8. ஆர் வெண்டாலும்... உங்களுக்கு ஒரு "பார் பெர்மிட்" எடுத்து தர வேணும் என்று, இப்பவே சொல்லி வையுங்கோ குமாரசாமி அண்ணை. 😂
  9. ஐந்து மொழியில் அரைகுறை வித்தகம் உடையவருக்கும், அவரின் சக body களுக்கும், 1. உக்ரேனுக்கான, செலன்ஸிக்கான ஆதரவில் மாற்றம் இல்லை. அது ஒரு சுய நிர்ணயத்துக்காக போராடும் தேசிய இனத்தவனாக அதே நிலையில் இருக்கும் இன்னொரு தேசிய இனத்துக்கான ஆதரவு. 2. உக்ரேன் பற்றிய அத்தனை திரிகளிலும் - டிரம் 2025 இல் வந்தால் உக்ரேன்/செலன்ஸ்கி கதை ஓவர் எண்டே எழுதியுள்ளேன். அப்போ எழுதியதை கிரகிக்க மூளையில் திசுக்கள் இல்லாதவருக்கு, இப்போ இதை நான் புதிதாக எழுதுவது போல் தெரியலாம். அதுக்கு நான் பொறுப்பல்ல. அடுத்த 4 வருசம் புட்டின் காட்டில் மழைதான். ஈயூவில் யூகே சேர்ந்தாலும், சேராவிட்டாலும் ஒன்றும் செய்ய முடியாது. புலத்திலும், நிலத்திலும் தன் இனத்தின் எதிர்காலத்தை சிந்திப்பவரின் நிலைப்பாடு இப்படித்தான் இருக்கும். ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு. 2009 ஐ இட்டு மேற்கின் மீது உங்களுக்கு இல்லாத கோவம் இங்கே வேறு எவருக்கும் இல்லை. ஆனாலும் இது உங்கள் கண்ணை மறைக்கவில்லை. புலிகளை - இனத்துக்கா நேசித்தவர்களுக்கும், புலிகளை “ஸ்கோர்” கேட்டு இன்பம் அடை, நேசித்த விசிலடிச்சான் குஞ்சுகளுக்கும் இதுதான் வித்தியாசம்.
  10. சாத்தான்.... இதில் குறை கூறும் பலர், புலிகளின் போராட்ட காலத்திலேயே... சிங்களத்துக்கும், ஓட்டுக்கு குழுக்களுக்கும் முட்டுக் கொடுத்துக் கொண்டு இருந்த ஆட்கள் என்பதால்.... இவர்களின் கருத்தை மினைக்கெட்டு வாசித்து உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். இவர்களை பொருட்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. "மூக்கு இருக்கும் மட்டும்... சளியும் இருக்கும் என்பது போல்", இவர்களை, சகித்துக் கொண்டு இருக்க வேண்டியதுதான். 😂 🤣
  11. கமலாவின் தெரிவின் போதே டிரம்ப் தான் வெல்வார் என்பது தெரிந்ததே. ஆனால் நான் டிரம்ப் ஆதரவாளர் இல்லை. அவர் ஒரு இனவாதி மரத்தில் இருந்தபடி மரத்தை தறிக்கும் வேலையை நான் ஒரு போதும் செய்வதில்லை. இவருடைய வெற்றி விரைவில் வேகமாக நாம் வாழும் நாடுகளுக்கும் பரவும்.
  12. இது உண்மைக்கு புறம்பான செய்தி ஆர் ஆட்சியில் அமர்த்தினார்களே அவர்களே அடித்தும். ஓட ஓட. விரட்டியடிச்சிட்டார்கள். இப்போது புலிகள் இல்லை புலம்பெயர் நாடுகளில் புலிகள் இல்லை இருப்பது எல்லாம் டுப்பிலிக்கேட். போலி புலிகள் மட்டுமே உண்மை புலிகள் 2009 இல். அழிக்கப்பட்டு விட்டார்கள் நீங்கள் திறமையான ஆட்சி வழங்கியிருந்தால் நாட்டை விட்டுட்டு ஒட வேண்டிய தேவை இருந்து இருக்காது 🙏
  13. உக்ரைன் போரில்…. பைடன் அரசு காட்டிய அதீத ஆர்வமும், ஆயுதம் வழங்கலும்தான் கமலாவின் தோல்விக்கு முதன்மையான காரணமாக இருக்க முடியும்.
  14. பொய்யான அரசியல் என்றுமே நிலைப்பதில்லை என்பதற்கு இந்த அமெரிக்க தேர்தல் நல்ல உதாரணம். இது போல் இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் மாற்றங்கள் வரும் என நம்பலாம். கேடு கெட்ட உக்ரேன் ஊத்தை அரசியல் இனியும் இந்த உலகிற்கு வேண்டவே வேண்டாம்.
  15. காணொளியை முழுமையாகப் பார்த்தேன். இவர் எம்மைப்போல் ஒரு சாமான்யன் அல்ல. நீண்ட காலம் இவ்வாறான அரசியல் ஆய்வுகளை செய்பவர். புலம் பெயர் அரசியல் அமைப்புகளுடன் நீண்டகாலமாக தொடர்சசியான தொடர்புகளை பேணுபவர். ஆகவே இவர் கூறியவற்றை நடைமுறைப்படுத்துவதானால் இவரும், இவரது புலம் பெயர் அமைப்புக்களும் கூட்டாக தாயகம் சென்று, இதை மக்களுக்கு புரியவைத்து மக்கள் பிரதிநிதியாக பாராளுமன்றம் சென்று இவர் இப்போது கூறியவற்றை நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும். அதற்கான குறைந்த பட்ச முயற்சிகளையாவது எடுத்திருக்க வேண்டும். புலம் பெயர் தமிழ் அரசியல் அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருப்பவராதலால் இதற்குத்தேவையான நிதிவளத்தையும் கொண்டவராகவே இருப்பார். ஒரு மாதத்திற்கு முன்பு இவருக்கு இந்த ஞானோதயம் வந்திருந்தாலும் தாயகம் சென்று வேட்பு மனுத்தாக்கல் செய்து மக்களைச்சந்தித்து இக் காணொளியில் கூறிய விடயங்களை மக்களுக்கு கூறி இவர் குறை கூறும் அரசியல்வாதிகளை தோற்கடித்து பாராளுமன்றம் சென்று இதை நடைமுறைப்படுத்த முயற்சிதிருக்கலாம். அதை விடுத்து எங்கோ ஒரு மூலையில் இருந்து கற்பனை குதிரையில் ஏறி போகமுடியாத ஊருக்கு வழி சொல்லி பொழுது போக்குவதில் அர்ததம் இல்லை. தாயக அரசியல்வாதிகள் மோசமானவர்கள் தான். ஆனால், அவர்களை குறை சொல்ல இந்த கற்பனாவாதிக்கு எந்த அருகதையும் இல்லை. சுமந்திரனாவது இப்போதைய அரசியலமைப்பை விட மேம்பட்ட ஒரு அரசியலமைப்பை உருவாக்க பல முயற்சிகளை செய்துள்ளார். இவர் எதையும் செய்யாது வெறும் இவ்வாறான அலசல்கள் மட்டும் தான். இப்போதைய ground reality என்ன என்பதைப்பற்றி எந்த அக்கறையுமற்று மாய உலகில் வாழ்பவர்களுக்கு வெறும் வாயை மெல்லும் இவர் சொல்வது இனிக்கலாம்.
  16. உங்களின் வரிகள் அருமை. நிகழ்கால நிஷங்களையும் படம்பிடித்து காட்டியுள்ளது. பாடல்கேட்டு கருத்துப் பரிமாறியதற்கு உளமார்ந்த நன்ரிகள்.goshan அவர்களே. நெஞ்சார்ந்த நன்றிகள்🙏
  17. இந்தக்காலத்தில் இப்படியொரு பாடலா...அருமை .மிகப் பிரமாதம்..
  18. அது நடந்தது 2018 இல், இந்தியா எப்போதும் இலங்கையின் கரிசனையினை பெற விரும்புவது வாடிக்கையான விடயம், ஆனால் இலங்கைதான் இந்தியாவினை கண்டுகொள்வதில்லை.
  19. ஜேர்மனிய ஊடக நம்பகத்தன்மையில் இதும் ஒன்று. ஒரு காலத்தில் நம்பகத்தன்மையாக இருந்த ஊடகங்கள் இன்றில்லை. உக்ரேன் போர்முனை செய்திகளை திரித்து வெளிடுவதில் இவர்கள் முதன்மையாகிவிட்டார்கள். ரம்ப் அவர்களின் வெற்றி பொய்யான ஜேர்மனிய ஊடகங்களுக்கு பேரிடி.
  20. எல்லாம் நல்லாத்தான் போகுது…டக்கெண்டு டோன் மாறி சட்டையை பிச்சுக்கிறார்…அதுதான் யோசிக்க வேண்டி கிடக்கு.
  21. அருமையான பாடல் கோபி. தேனிசை செல்லப்பா ஐயாவின் குரல் அன்று போல் இன்றும் இருப்பது ஒரு அதிசயம்தான். அவர் மகனும் அதே டிரேட்மார்க் மெட்டில் இசையமைப்பதும் இனிமை. பொருத்தமான மாதத்தில் பொருத்தமான பாடல். உங்கள் அனுகமதியோடு, என் பங்குக்கு ஒரு சில வரிகள். எதிரிகள் எம்மை சாய்தாலும்…. காலிகள் எம்மை மாய்த்தாலும்… போலிகள் எம்மை ஏய்த்தாலும்…. உயிர்த் தமிழே நீ வாழ்வாய்.
  22. பசுவூர்க்கோபி…. நீங்கள் இயற்றிய பாடல் வரிகளுக்கு, தேனிசை செல்லப்பா கணீர் குரலில் பாடியமை மிக இனிமையாக இருந்தது. இளங்கோவின் இசையமைப்பும் பிரமாதம்.
  23. நிச்சயம் அப்படி ஒரு காலம் வந்தே தீரும். இந்த பூவுலகில் வீழாத சாராஜ்யம் என்று எதுவுமே இருந்ததில்லை, இருக்கப்போவதும் இல்லை. அமெரிக்காவும் ஒரு நாள் வீழும். பொதுவாக ஒரு சாம்ராஜ்யம் வீழ முன் அதனுள் ஒழுங்கான தலமையில்லை, உள்பிளவுகள் தலைதூக்கும். அமெரிக்காவில் இப்போ நிகழ்வதை வீழசியின் ஆரம்பம் என கருதுவோர் உளர். ஆனால் எனது வாழ்நாளில் வீழும் என நான் நினைக்கவில்லை.
  24. இன்றிலிருந்து நான் உங்களின் இணைபிரியா நண்பன். அண்ணையை பிடித்து நானும் உண்ணு எடுக்கலாமென்று யோசிக்கிறன். நானும் பென்சன்காரன் தான். அனுரா தேர்தலில் நுhறு வென்றால் 113 க்கு யாரையாவது சேர்க்கத்தானே வேணும்.
  25. நாலு வரியிலை சொல்லும் விடயத்தை நீட்டி முழக்கி பார்க்கிறவனின் நேரத்தை விரயமாக்குகிறார்கள் .
  26. சரியான நிலைப்பாடு. ஆனால் சிலர் நினைப்பதுபோல தேசிய மக்கள் சக்திக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்காது. ஒரு 127 இடங்கள் கிடைக்கலாம்.
  27. ஒரே கட்சியிலை நிண்டு கூத்தடிக்க அவையளுக்கு என்ன விசரே? எல்லாரும் பரவலாய் நிக்கினம். அதில அஞ்சு பேர் பென்சன்காரர்.😎
  28. ஓம்...நானும் பாத்தன்....பாத்தன். உவையளை ஊருக்கு கூட்டிக்கொண்டு போய் மண்வெட்டிய குடுத்து தோட்டம் கொத்த விடவேணும். 🤣
  29. டொனால்ட் ரம்ப் அவர்கள் தேர்தல் முடிவுகள் வந்து தனது வெற்றியை தன் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய போது எரிசக்கி அரசியலையும் உலக சண்டைகளை தீர்க்கப்போவதாக அறிவித்துள்ளார். இன்றைய உலகிற்கு இவை இரண்டும் தான் முக்கிய தேவையாக இருக்கின்றது. அது நல்லபடியாக நடந்தால் அனைவருக்கும் சந்தோசமே.
  30. அந்த அநியாயங்களை எப்பிடி எழுதுறது? ஜேர்மனி ஊடகங்கள் ஒரு கிழமைக்கு முதல் கருத்துக்கணிப்புகள் நடத்தி கமலா அக்காவ அமெரிக்க ஜனாதிபதியாக்கி அழகு பார்த்தார்கள். ஆனால் இன்றோ பம்மி பம்மி ரம்பின் வெற்றிச்செய்தியை வாசிக்கின்றார்கள். 😂
  31. 47 வது அமெரிக்க ஜனாதிபதியாக வெற்றிவாகை சூடிய டொனால்ட் ரம்புக்கு வாழ்த்துக்கள். கமலா கரீசின் தோல்விக்கு பைடனும் குடிவரவில் திடமான திட்டமில்லாததாலும் பெண்ணாக இருந்ததாலும் தோல்வியைத் தழுவிக் கொண்டார். மிகப்பெரிய வெற்றி செனட்சபையும் காங்கிரஸ்சபையும் ரம்பின் கைக்குள். அடுத்த 4 வருடங்களுக்கு ஐனநாயககட்சி பல்லு புடுங்கிய பாம்பு. பல வழக்குகளில் குற்றவாளியாக காணப்பட்ட ரம் ஜனாதிபதியாக வந்திருக்காவிட்டால் சிச்சயம் உள்ளக்கு போயிருப்பார். கமலா வந்தால் ஒரு பழைய ஜனாதிபதியை சிறையில் போட விரும்பாமல் மன்னிப்புக் கொடுக்கலாம் என்றும் ஒரு கருத்து நிலவியது. அடுத்த 4 வருடத்துக்கு பிரச்சனை இல்லை என்றாலும் அது முடிய பிரச்சனை வரலாம். அதற்காக தனக்கு தானே மன்னிப்புக் கொடுக்க முடியுமா தெரியவில்லை? அப்படி முடியாதென்றால் 4வது வருட கடைசியில் ராஜினாமா செய்து விட்டு உபதலைவர் ஜனாதிபதியாக வந்து அவர் மூலமாக மன்னிப்பு பெறலாம். இங்கு ரம்புக்கு தொடர்ந்தும் ஆதரவளித்து வந்த @வாலி, @குமாரசாமி போன்றவர்களுக்கும் பாராட்டுக்கள். இந்தத் தடவை Fox news தவிர மற்றைய ஊடகங்கள் கடைசிவரை சரியான கணிப்பை சொல்ல முடியாமலே இருந்தன.
  32. பல அதிரடி மாற்றங்கள் செய்து கொண்டு இருக்கின்றார்கள். 1) லஞ்சம் வாங்கிய நான்கு சுங்க அதிகாரிகளுக்கு 35 வருட கடூழிய சிறை. 2) "இராஜதந்திர பதவிக்கு நியமிக்கப்பட்ட அனைத்து அரசியல்வாதிகளின் குடும்பத்தினரும் திருப்பி அழைப்பு" என்று நினைத்துப் பார்த்திருக்க முடியாத செயல்களை செய்வது வரவேற்கத் தக்கது.
  33. நூல் அறிமுகம் : கி.இளம்பிறை அவர்களின் 'வழித்துணை நினைவுகள்' - சுப.சோமசுந்தரம் 03-11-2024 அன்று எழுத்தாளர் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர் பாசத்திற்குரிய திருமதி கி.இளம்பிறை என்ற பிரபா அவர்கள் எழுதிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா நெல்லை தியாகராஜநகரில் அமைந்திருக்கும் மின் ஊழியர் சிஐடியு சங்கக் கட்டிடத்தில் இனிதே நடைபெற்றது. 'வழித்துணை நினைவுகள்' மற்றும் 'திருவாசகம் - ஒரு தேடல்' என்பன அந்நூல்கள். இவற்றுள் 'வழித்துணை நினைவுகள்' எனும் கவிதை நூல் மீது பேசுமாறு இளம்பிறை அம்மா அவர்கள் முன்னரே எனக்கு அன்புக் கட்டளையிட்டிருந்தார்கள். புத்தகத்தை மின்னஞ்சலில் எனக்கு அனுப்பியும் தந்திருந்தார்கள். நான் பேசியது நன்றாக அமைந்ததாக விழாவிற்கு வருகை தந்த நண்பர்கள் பாராட்டியதோடு, வர இயலாத நண்பர் ஒருவர் முகநூலில் எழுதிடுமாறு கூறினார். அவர் முகநூல் நண்பர் மட்டுமல்லாது எனது முகநூல் பதிவுகளைத் தவறாமல் வாசித்துப் பின்னூட்டம் அளிப்பவர்; அன்ன மாட்சியர்தாமே முகநூலில் நம்மை உயிரோட்டமாய் வைத்திருப்போர் ! உடனே எழுதினால்தான் நான் மனதளவில் தயாரிப்புடன் பேசியவை கோர்வையாய் வந்து விழும் எனும் முனைப்புடன் இறங்கினேன். ஒரு கவிதை நூலை அறிமுகம் செய்வதில் எனது முதல் அனுபவம் என்பதாலும் உடனே பதிவிட விழைந்தேன். பேச நினைத்து அங்கே பேசாமல் விட்டதையும் இங்கு எழுத்தில் சேர்க்கும் உரிமை எனக்கானது. எனவே நூலுக்கு எழுத்து வடிவில் ஓர் அறிமுகமாய் இதனைக் கொள்ளலாம். இதனை எழுதும் எனக்கு மரபிலக்கியங்களின் (Classic literature) மீது தனித்த ஈர்ப்பு உண்டு. எனவே எந்தவொரு புதுக்கவிதையினை வாசிக்கும் போதும் எனக்குத் தெரிந்த மரபுவழிப் பாடல்களின் தாக்கம் ஏதும் தென்படுமானால் அதனை மகிழ்வோடு குறிக்கத் தவறுவதில்லை. அது அப்புதுக்கவிதையினை இயற்றிய கவிஞரின் முன்னோர் மொழி பொன்னே போல் போற்றும் திறமாக இருக்கலாம்; அல்லது கவிஞரே கவனிக்கத் தவறிய உவப்பான தற்செயல் நிகழ்வாக இருக்கலாம். மரபு வழிப் பாடல்களில் எத்துணையோ சிறப்புகள் இருப்பினும் அவற்றிற்கு இல்லாத ஒரு தனிச்சிறப்பு புதுக்கவிதையில் உண்டு. வாசகர் ஒவ்வொருவரும் தமக்கே உரிய கண்ணோட்டத்துடன் விளக்கம் தரலாம் - ஒரு புத்தியல் ஓவியத்திற்கு (Modern art) ஒவ்வொருவரும் ஒரு விளக்கம் தருவதைப் போல. அப்புதுக்கவிதை எனும் வானூர்தியில் ஏறி கவிஞரே காணாத உலகையும் வாசகன் காணலாம். மரபு இலக்கியம் நமது காலத்தைச் சாராததால், அக்காலகட்டத்தில் தோன்றிய சான்றோர் தந்த விளக்கங்களே அறிவுலகத்தில் ஏற்கப்படும், ஏற்கப்பட வேண்டும் - சிறு விலகல்களைத் தவிர. அச்சிறு விலகல்களைத் தீர்மானிப்பதற்கும் அத்துறை சார்ந்த சான்றாண்மை இன்றியமையாததாகிறது. 'வழித்துணை நினைவுகள்' எனும் தலைப்பைப் பார்த்ததும் இளம்பிறை அம்மா அவர்கள் தமது வழித் துணையின் (இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த வாழ்க்கைத் துணைவரின்) நினைவுகளில் மூழ்கி எடுத்த முத்துகளைப் பதிவிட்டு இருப்பார் எனும் எண்ணம் மேலோங்கியது. வாசிக்க ஆரம்பித்ததும் தெரிந்தது - வாழ்க்கைத் துணைவரின் மறைவுக்குப் பின்னர், நினைவுகளை வழித்துணையாகக் கொண்டதன் பதிவு என்று. வாசிப்பதற்கு முன் என்னுள் தோன்றிய ஊகத்திற்குக் காரணம் இல்லாமல் இல்லை. இலக்கியக் கூட்டமானாலும் போராட்டக் களமானாலும் எழுத்தாளர் இளம்பிறை அவர்களும் அவரது இணையரான உயர்திரு இரா.கிருஷ்ணன் அவர்களும் இணைந்து பங்கெடுத்து 'இணையர்' என்னும் சொல்லுக்கு இலக்கணம் வகுப்பர். இறப்புக்குப் பின் தம் பூத உடல்களை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரிக்கு எழுதி வைத்த முற்போக்காளர்கள் என்பது கூடுதல் செய்தி. திரு. கிருஷ்ணன் அவர்கள் மறைந்த போது மதச் சடங்குகளின்றி அதனை நிறைவேற்றியவர் திருமதி கி.இளம்பிறை. இவை கட்டுரையில் இருந்து சற்றே விலகிய செய்திகளாகத் தோன்றலாம். சொல்லும் செயலும் ஒன்றாய்க் கொண்ட ஒருவரின் எழுத்தைப் (நூலை) பேச வருகிறேன் என்பதை முன்மொழியவே இச்செய்திகள். மேலும் நூல் அறிமுகத்தில் நூலாக்கியோர் அறிமுகமும் மரபுதானே ! இக்கவிதை நூலில் என்னைக் கவர்ந்த இரண்டு பொருள்களைக் கையிலெடுத்துப் பேசுவது எனது வாசிப்புக்குப் பொருத்தமாய் அமைவது. ஒன்று, கவிஞர் அறம் பாடுவது; மற்றொன்று, என் மனதிற்கு நெருக்கமான மரபிலக்கியங்களுக்கு என்னை இழுத்துச் செல்வது. இந்த இரண்டில் ஒவ்வொரு பொருளுக்கும் சில மேற்கோள்களைக் காட்ட எண்ணம். அறம் சொல்ல வந்தவர், "தூவுவது அன்பாக இருப்பின் விலகுவது வம்பாக இருக்கும்" என்று (பக்கம் 18) நச்செனக் குறிப்பது நினைவில் கொள்ளத்தக்கது. "எவரும் புத்தன் இல்லை ஏனெனில் புத்தன் என்று ஒருவன் இல்லவே இல்லை" என்று (பக்கம் 20) குறிப்பது உடனே கடந்து செல்ல விடாத ஒன்று. அகவைக்கு ஏற்ப உணர்வுகள் இருக்கும் எனும் உலகியல் நடைமுறை சொல்ல வந்தவர், "புத்தன் என்று ஒருவன் இல்லவே இல்லை" என்றது கூட "எவரும் புத்தன் இல்லை" என்பதை மீண்டும் வலியுறுத்தவே எனப் புரிய சற்று நேரமும் பக்குவமும் அவசியமாகிறது. "பிறந்தது ஆண் குழந்தை எனில் அன்று மட்டும் மகிழ்ச்சி பிறந்தது பெண் குழந்தை எனில் வாழும் வரை மகிழ்ச்சி" என்று (பக்கம் 50) பெண்ணியம் பேசுமிடத்துச் சற்று சிந்திக்க வைக்கிறார். "அன்று மட்டும் மகிழ்ச்சி", "வாழும் வரை மகிழ்ச்சி" எனச் சொல்வதெல்லாம் ஓசை நயம் கருதி ஒரு கவிஞருக்கான உரிமம் என்பதும், பாடலின் மெய்ப்பொருள் "ஆண் என்றால் மகிழ்ச்சி, பெண் என்றால் பெரு மகிழ்ச்சி" என்பதும் கவிஞர் சொல்லாமல் சொல்லி நிற்பது. "ஆணென்ன பெண்ணென்ன ?" எனும் சமநோக்கு எத்துணை அவசியமோ, ஆணாதிக்கச் சமூகமாய் இருக்கும் வரை பெண் என்பது உயரிய நிலைதான் என முழங்குவதும் அவசியமாகிறது. இது தொடர்பில், "ஆண் மகவு பெற்றோர் இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டோர்; பெண்ணைப் பெற்றோர் அந்த இறைவனையே பெற்றோர்" என்று எங்கோ வாசித்த நினைவு. இனி என்னைக் கவர்ந்த பகுதிகளில் இரண்டாவதுக்கு வருவோம். சில இடங்களில் நமக்குத் தோன்றும் பண்டைய இலக்கியங்களின் தாக்கம் இயற்கையானதே என்பதற்குக் கவிஞர் இளம்பிறை அவர்களே சான்று தருகிறார். எடுத்துக்காட்டாக, "எத்தனை எத்தனை முறை படித்தாலும் புதுப்புது சிந்தனை தோன்றும்" என்று (பக்கம் 31) அவர்கள் சொல்லுமிடத்து, "படிக்கப் படிக்கப் புதுமை" என்பதும், அதற்கு இணையாக "அறிதோறும் அறியாமை" எனும் குறளொலியும் நம் செவிப்புலனில் கேட்கின்றன. அவ்வொலி இயற்கையான ஒன்றே என்று அறிவிப்பது போல் பாடலின் அடுத்த வரியிலேயே "அறிதோறு அறியாமை கண்டற்றால்" எனும் குறளை இணைக்கிறார் கவிஞர். திருக்குறள் பிரபா என்று நட்பு வட்டத்தில் அறியப்படும் கி.இளம்பிறை அவர்கள் மேலும் சில இடங்களில் திருக்குறளை எடுத்தாள்கிறார். உதாரணமாக பக்கம் 11 ல் ஊடலில் தோற்றவர் வெல்லும் மாண்பு குறிக்கப்படுகிறது; பக்கம் 20 ல் தேரான் தெளிவும் தெளிந்தான் கண் ஐயுறலும் சுட்டப் பெறுகின்றன. ஏற்கெனவே குறிப்பிட்டது போல் பழந்தமிழ் இலக்கியங்களின் தாக்கத்தைக் குறிக்க நமக்குக் கவிஞரே வழங்கிய உரிமத்தின் படி ஒன்றிரண்டு இடங்களைக் காணலாமே ! "என்னைத் தேடினால் நான் இல்லை ஒன்றாகவும் பலவாகும் எனை ஏற்ற தோழர்கள் ஊடே ஊடுறுவி விட்டேன்" என்று பக்கம் 28 ல் நட்பில் கரைந்து போகிறார். "என்னைத் தேடாதே உன்னுள் நான் வாழ்கிறேன்" என்று பக்கம் 36 ல் தலைவனும் தலைவியும் ஒருவர் மற்றவரிடம் தொலைந்து போதலைப் பேசுகிறார். இவ்விரண்டு இடங்களும், "வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்" "ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந் தானே" எனும் திருமந்திர வரிகளை மனக்கண்ணில் நிறுத்துதல் இயல்பான ஒன்று. பக்கம் 31 ல் அன்புடையார் அனைவரும் தம் நெஞ்சகத்தில் குடி கொண்டதால் தம் நெஞ்சம் கனப்பதைப் பாங்குடன் சொல்லிச் செல்கிறார் கவிஞர் இளம்பிறை. உணர்வுபூர்வமான பொருளான நெஞ்சம் இலக்கிய நயத்துடன் ஒரு உடற்கூறாக ஆளப்படுவது இலக்கிய உலகில் அரிதன்று. நம் நினைவுக்கு உடனே வரும் குறள் "நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல் அஞ்சுதும் வேபாக் கறிந்து" (குறள் 1128; அதிகாரம்: காதற் சிறப்புரைத்தல்). அஃதாவது, காதலர் தன் நெஞ்சத்தில் உறைவதால் அவருக்குச் சுடுமே என அஞ்சி வெம்மையான பொருளைத் தான் உண்பதில்லை என்று தலைவியின் கூற்றாகக் குறளில் வருகிறது. இது தொடர்பில், "கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும் எழுதேம் கரப்பாக்கு அறிந்து" (குறள் 1127; அதிகாரம்: காதற் சிறப்புரைத்தல்) எனும் குறள் நினைவுக்கு வருவது தவிர்க்க இயலாத ஒன்று. இவ்வாறு சங்கிலித் தொடராக நினைவலைகளை எழுப்பும் 'வழித்துணை நினைவுகள்' காற்றினிலே வரும் கீதம் என்பது மிகையில்லை. பக்கம் 52 ல் "பற்றியது பற்றிய பின் பற்றைத் தவிர வேறு எதுவும் இல்லை .................................................... ..................................................... ஈவது தாளாண்மை என்று பின் சென்றாள் அப்பேதை" எனும் பாடலைக் கொள்ளலாம். முதல் இரண்டு வரிகள் மனக்கண்ணில் நிறுத்துவது, "பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு" (குறள் 350; அதிகாரம்: துறவு) என்ற பொய்யாமொழியை. குறளில் இறைப்பற்று வலியுறுத்தப்படுவது போல இங்கு மானிடப்பற்றை வலியுறுத்துவது கவிஞரின் பகுத்தறிவு. இவர் வலியுறுத்துவது மானிடப்பற்றே என்பது பாடலின் கடைசி வரிகளில் தெளிவு. அங்கு "பின் சென்றாள் அப்பேதை" என்று உடன்போக்கு மேற்கொண்டு தலைவன் பின் செல்லும் தலைவியைக் குறிக்கிறார். உடன்போக்கு என்னும் துறை தழுவிய எத்தனையோ அகப்பாடல்கள் இருப்பினும், இளம்பிறை அம்மாவின் சொல்லாட்சியானது நாவுக்கரசரின் திருத்தாண்டகத்தில் "முன்னம் அவனது நாமங் கேட்டாள்" எனத் தொடங்கும் பாடலை நம்முன் இழுத்து வந்து நிறுத்துகிறது. நாவுக்கரசர் பாடலில் 'பிச்சி' ("பெயர்த்தும் அவனுக்கே பிச்சியானாள்") என்பது நமது கவிஞரின் பாடலில் 'பேதை' என்றானது; "தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே" என்று திருத்தாண்டகத்தில் ஒலித்தது, "பின் சென்றாள்" என்று வழித்துணை நினைவானது. இதுகாறும் குறித்த இரண்டு பொருள்கள் தவிர ஒன்றிரண்டு குறிப்புகளும் உண்டு. மானிடக் காதல் சிற்றின்பம் என்றும், இறைப்பற்று பேரின்பம் என்றும் வகைப்படுத்தல் உலகியலில் உண்டு. இரண்டும் பேரின்பமே என்பது எனது தனிப்பட்ட கருத்து. எனது கருத்துக்கான அடிப்படை என்னவெனில், தன்னை இழத்தல் பேரின்பம்; அது இரண்டிலும் உண்டு - அவ்வளவே ! திருநாவுக்கரசரின் திருத்தாண்டகமும் மாணிக்கவாசகரின் திருக்கோவையாரும் நமக்கு உணர்த்தும் பொருள் இதுவே. இரண்டும் அகம் சார்ந்த பக்தி இலக்கியங்கள். இரண்டிலும் இறைவன் தலைவனாகவும் பக்தன் தலைவியாகவும் உருவகிக்கப்படுகின்றனர். பக்தனாகிய தலைவி இறைவனாகிய தலைவனை அடைவது பாடல் பெற்றது. இப்போது நாம் கையில் எடுத்துள்ள கவிதை நூலிலும் கவிஞர் இக்கருத்தைச் சிறிய மாறுதலுடன், "சிற்றின்பம் தவிர்த்து எவரும் பேரின்பம் அனுபவிக்க இயலாது" என்று பக்கம் 42 ல் பதிவிடுகிறார். பக்கம் 33 ல் "உணவில் கலப்பு உயிர்க் குற்றம்; மொழியில் கலப்பு கொலைக் குற்றம்" என்ற கருத்து முன் வைக்கப்பட்டுள்ளது. நூலுக்கான அணிந்துரை அளித்த பேரா. வ.ஹரிஹரன் அவர்கள் இக்கருத்தில் மாறுபட்டுள்ளது அனைவரும் புரிந்து கொள்ளக்கூடிய நியாயம்தான். என்னைப் பொறுத்தமட்டில், எனக்குக் கவிஞரின் கருத்தில் முழு உடன்பாடு இல்லை; முழுமையான மாறுபாடும் இல்லை எனச் சொல்லியே ஆக வேண்டும். மொழிக் கலப்பினால் மொழி வளரும் என்பது வளரும் மொழிக்குச் சரிதான்; தமிழ் போன்ற வளர்ந்த மொழிக்கு எங்ஙனம் பொருந்தும் எனும் எண்ணம் தோன்றுவதால் கவிஞரின் கருத்தில் உடன்பாடு. பேருந்தில் இருந்து இறங்கியதும் ஆட்டோ ஓட்டுநரிடம், "சந்தைக்குத் தானி வருமா ?" என்பது செயற்கையாகவும், "சந்தைக்கு ஆட்டோ வருமா ?" என்பது இயற்கையாகவும் தோன்றுகிறது; ஆட்டோ வெளியிலிருந்து இந்நிலத்திற்கு வந்த பொருள்தானே எனும் எண்ணம் முன்வர கவிஞரின் கருத்தில் எனக்கு மாறுபாடு. இவை போல் இன்னும் எத்தனையோ ! அத்தனையும் பேச முனைந்தால், நூலைப்போல் இரு மடங்காவது நான் எழுத வேண்டி வரும். எனவே இவ்விடத்தில் இக்கட்டுரைக்கு நிறைவுத் திரையிடல் பொருந்தி வரும். எழுத்தாளர் இளம்பிறை அவர்களின் கவிதைப் பெட்டகத்தில் உறையும் மேலும் பலவற்றை வெளிக் கொணர்வது வாசகர்தம் வாசிப்பில் கை கூடுவது. நூலாசிரியர் மற்றும் பதிப்பக விவரங்கள் பின் வரும் முகநூல் இணைப்பில் உள்ள புத்தக அட்டையில் : https://www.facebook.com/share/p/17dPe1MQr4/
  34. ட்ரம்ப் ஐயா அவர்கள், ஜனாதிபதியாக பதவியேற்ற உடன்... வெள்ளை மாளிகையில் முதல் சந்திப்பு... புட்டினுடன் இருக்க வேண்டும். அந்தப் படத்தை பார்த்து... செலன்ஸ்கிக்கு வயிறு பத்தி எரிய வேணும். 💪 😂
  35. Uk இப்பவே யூரோப்பில் மறுபடி சேர துண்டைப்போடுது..😂😂
  36. சித்திரம் பேசுதடி ........! 😍
  37. Presidential results From ⁦The Associated Press (AP)⁩ · Learn more 214 Harris 248 Trump 270 to win பென்சிலவேனியாவும் அலெஸ்காவும் வர டிரம்ப் தான் ஜனாதிபதி !!👍
  38. மதங்கள் என்று வரும்போது பெரும்பாலும் கேள்விகிடமின்றி ஒரு விடயத்தினை பின்பற்றுவதாகவே உளது, ஆரம்பத்தில் இயற்கை வழிபாடு இருந்ததாக கூறுகிறார்கள், இயற்கை அனர்த்தங்கள் ஏற்படாமல் இருக்க இயற்கை அனர்த்தம் ஏற்படுத்தும் விடய்ங்களை வழிபட்டனர் (பயத்தின் காரணமாக). இந்த பயபக்தி அனைத்து மதங்களிலும் காணப்படுகிறது, ஆரம்பகால உடைகளாக எம்மவர்கள் மேலாடை அணிவதில்லை என நினைக்கிறேன், அதே போல் மத்திய கிழக்கில் உள்ளவர்கள் தூசி புயலை சமாளிப்பதற்காக முகத்தினை மூடிய ஆடை அணிந்திருக்கலாம், அதனையே மரபு என தற்காலத்திலும் பின்பற்றும் நிலை காணப்படுகிறது, அதனை கலாச்சாரம் என கூறுவதற்கு மதம் ஒரு கருவியாக பயன்படுத்தப்படுகிறது என நினைக்கிறேன். நாங்களும் இதே மாதிரியான முட நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டு பிற மதங்களினை இலகுவாக கேள்விக்குள்ளாக்க முடிவதற்கான காரணம், நாம் நம்பும் மதம் என்றால் பயபக்தி இருக்கும் அதனை கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுவோம் ஆனால் மற்ற மதங்கள் தொடர்பில் எந்த வித பயமும் இல்லாதனால் எனது மதம் சிறந்தது மற்ற மதங்கள் மோசமானவை எனும் பொதுவான நிலைப்பாடாகவே இருக்கும்.
  39. உக்ரைன் போருக்கு… பணம் கொடுத்த எந்த ஐரோப்பிய நாட்டையும் மக்கள் ஆதரிக்கவில்லை. இந்தப் போரால்… விலைவாசிகள் அதிகரித்து, சாதாரண வாழ்க்கை நடத்தும் சாமானியர்களே மிகவும் பாதிக்கப் பட்டார்கள். இதன் விளைவுகளை… ஐரோப்பிய நாடுகளில் தேர்தல் நடக்கும் போது, அந்தந்த நாட்டு அரசுகளுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
  40. செலன்ஸ்கிக்கு…. இப்ப, உச்சா… போக ஆரம்பித்து இருக்கும். 😂
  41. லண்டனில் கல்யாணவீட்டில் செருப்பை திருடுறவங்கள்போல திரிஞ்சதுக்கு இப்போ இலங்கையில் இருக்குற பாதுகாப்புக்கு என்ன குறைச்சல? நாங்கள் உங்களை தேடி தேடி கொல்ல, மொக்குத்தனமான மதவாத போராட்டம் நடத்துகிறவர்கள் போல் இனம் அல்ல, ஆயுதபோராட்டம் என்பது ஒரு போராட்ட வடிவமாக இருந்தது முயன்று பார்த்தோம் முடியவில்லை, அவரவர் வேலையை பார்க்க அடுத்த கட்டத்துக்கு போய்விட்டோம். ஆனால் ஆயுதபோராட்ட காலத்தில் நீங்கள் செய்த மகா பாதகங்கள் உங்கள் மனசை உறுத்துது அதனால் இன்றும் பயத்தில் மேலதிக பாதுகாப்பு கேக்குது. ஆயுத போராட்ட காலத்தின்ன் பின்னர் தமிழர்களின் அமோக ஆதரவுடன் பதவிக்கு வந்த ஒரே ஜனாதிபதி அம்மையார் அவர்கள், வந்தவுடன் தமிழர்களுக்கு செலுத்திய புகழ்மிக்க நன்றிக்கடன்கள்: நவாலி தேவாலயம் படுகொலை நாகர்கோயில் பள்ளி மாணவர்கள் படுகொலை செம்மணி புதைகுழி படுகொலைகள் ஜெயசிக்குறு நடவடிக்கை படுகொலைகள் குமார் பொன்னம்பலம் படுகொலை மிருசுவில் படுகொலைகள் கிழக்கில் விஷேட அதிரடிப்படை மற்றும் முஸ்லீம் ஊர்காவல் படையின் தமிழர்மீதான படுகொலைகள் அப்படி அடுக்கிக்கொண்டே போகலாம், இப்படி ஆயிரக்கணக்கானவர்களை சிரித்துக்கொண்டே கொன்றவர்களுக்கு தமது ஒத்தை உயிரென்றால் எவ்வளவு உயிர்பயம் வருது. நம்மில் சிலரிடையே இன்றும் தேர்தலை புலிகள் புறக்கணித்ததால்தான் மஹிந்த ஆட்சிக்கு வந்து எல்லாமே அழிந்து போனது என்று, சரி தேர்தலை புறக்கணிக்காமல் சந்திரிக்காவை தமிழர்கள் ஆதரித்ததால் மட்டும் என்ன நடந்தது? அக்காலகட்டத்தில் தங்கு தடையின்றி இழுவை மல்டி பரல்கள் , மோட்டர் குண்டுகள்,ஆயுதங்கள் முல்லைவரை எமது அமைப்பினால் கொண்டுவந்து இறக்கப்பட்டதால்தான் ஜெயசிக்குறு நடவடிக்கை முறியடிக்கப்பட்டது. இல்லையென்றால் அன்றைக்கே ஒரு முள்ளிவாய்க்கால் போன்ற ஒரு முடிவு சந்திரிக்காவால் ஏற்படுத்தப்பட்டிருக்கும்.
  42. விளங்க நினைப்பவன் , நான் எங்கே எழுதி இருக்கேன் சுமந்திரன் அமைச்சர் பதவியை பெறபோகிறார் என்று? நான் அர்த்தப்படுத்தியது பதவியென்று முன்னைய ஆட்சியிலிருந்ததுபோல் ஜனாதிபதி சட்டத்தரணி, அது,இது , மானே தேனே, பொன்மானே என்று எதாச்சும்... நிராகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு அமைச்சர் பதவியென்று நான் அர்த்தப்படுத்தியது டக்ளசை, அவரும் ஓடோடி போய் அநுரவ சந்திச்சார் இல்லையா அதனால. நானும் பாக்கிறன் விளங்க நினைப்பவனின் அலசல்கள் இப்போலாம் கொஞ்சம் ஓவராதான் போய்க்கிட்டிருக்கு 😉
  43. வயசுக் கவர்ச்சி அதே கதிதானா..ஈழப்பிரியன் சார்...எடுத்த எடுப்பிலை நம்ம ரம்பு..வேகமாகப் போகிறாரே...சுமந்திரன் சார் அமெரிக்காவுக்கு பிரச்சாரத்துக்கு வந்தாரா?
  44. வெற்றி பெறப்போகும் டொனால்ட் ட்ரம்ப் அவர்களுக்கு எனது நல்வாழ்த்து உரித்தாகுக!
  45. அரசியல்வாதிகள் வருவார்கள் போவார்கள் ...அரச அதிகாரிகள் தொடர்ந்து கட்ம்னையில் இருப்பவர்கள் ..இவர்கள் ஊழல் செய்வதை தடுக்க வேண்டும் ....இது நல்ல ஒர் செயல் ...
  46. இதன் பின்னணியில் இருப்பது இந்திய அரச பயங்கரவாதிகள்தான். நிஜ்ஜார் கொலையில் இந்தியா அம்பிட்டுவிட்டது. இப்ப கனடாவுக்கு சேறுபூச முனைகின்றது. காலிஸ்தான் ஆதரவாளர்கள் என்ற போர்வையில் குழப்பம் செய்தவர்களை ஏற்பாடு செய்தது இந்தியாதான். காலிஸ்தானோ இந்துஸ்தானோ எல்லா இந்தியனுகளையும் நாடுகடத்துவது உறுதி!
  47. எத்தியோப்பியா வளம் நிறைந்த நாடுதான். இருந்தாலும் சிறிலங்கா எந்த விதத்தில் வளம் குறைந்த நாடு? தண்ணீர் வளம் இல்லையா? சூரிய வளம் இல்லையா? அல்லது மனித வளம் இல்லையா? சூரிய வளமும் தண்ணீர் வளமும் இருந்தாலே வளமுடன் வாழலாம். இதில் தண்ணீர் வளம் இல்லாமல் தான் பல மூன்றாம் உலகநாடுகள் சிக்கித்தவிக்கின்றது. ஆனால் சிங்களம் தண்ணீரை அரசியல் நோக்கத்துடன் கடலில் கலக்க விடுகின்றது.
  48. புலம்பெயர் தமிழர் என்று ஒரு இனம் இல்லாதிருந்தால் சிறிலங்கா கிட்டத்தட்ட எத்தியோப்பியா போன்ற நாடுகள் போல் பஞ்ச நிலைக்கு வந்திருக்கும்.
  49. முதலில் தமிழர் முன் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள். அதற்காக பொய்யன் சுமந்திரனை தமிழர் பிரச்சனை குறித்து பேச அழைக்காதீர்கள்.👈

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.