Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    15
    Points
    87990
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    11
    Points
    46783
    Posts
  3. satan

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    10100
    Posts
  4. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    19122
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/14/24 in all areas

  1. முன்னர் திண்ணையில் பாய் விரித்து படுத்த ஒருவர் என்றால் அது நீங்களாய்த்தான் இருக்கும்....அடுத்தது நாதமுனி..😂திண்ணை இல்லாததின் பின் அவரும் இல்லை. நாதமுனி நல்ல மனிதர். அவரை பல தடவைகள் சந்தித்திருக்கின்றேன். கருத்துக்களம் இருக்க திண்ணையில் பிரயோசனமான உரையாடல்களை ஏன் நிர்வாகம் விரும்புகின்றது என தெரியவில்லை. பல தடவைகள் என்னையும் திண்ணையில் தடை செய்திருந்தார்கள். அது போல் மட்டுறுத்தப்பட்ட உறவுகளை திண்ணை தடையுடன் திண்ணையை ஏனைய உறவுகளுக்கு திறந்து விடலாம் என்பது என் கருத்து. இது நாதமுனிக்காக.....😂🙂
  2. ஊழல் பெருச்சாளிகளுக்கும், சோம்பேறி அதிகாரிகளுக்கும், திறமை அறிவற்ற உத்தியோகத்தர்களுக்கும் வேர்க்கும், தங்களை யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்கிற துணிவில் அப்பாவி மக்கள் மேல் காட்டுக்கத்தல் கத்தி விரட்டிவிட்டு அரட்டை அடித்தவர்களுக்கு வேர்க்கும், கேள்வியின் கடுமையை உணர்ந்து கத்துகிறார்கள். அவர்களின் அடிவயிற்றில் புளி கரைக்குது. அவர்கள் எப்படி யாரால் பணிக்கமர்த்தப்பட்டார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். ஆனாலும் ஒன்று, ஊழல்வாதிகளுக்கெதிராக மக்கள் தங்கள் இயலாமையின் வெளிப்பாடே அர்ச்சுனாவின் வெற்றி. தங்கள் குறைகளை அவர் தீர்த்து வைப்பார் தங்கள் துயரங்களுக்கு விடிவு பெற்றுத்தருவார் என்று நம்பியே மக்கள் இவரை தெரிவு செய்தனர். சம்பந்தப்பட்டோரின் ஊழல்களை சாட்சியங்கள் ஆதாரங்களோடு சேகரித்து உரிய முறையில் அழைத்து விளக்கம் கோரி நடவடிக்கை எடுப்பதுதான் சரியானது. அல்லது அந்த துறை சார்ந்தவர்களை தன்னுடன் இணைத்து அனுமதி பெற்று செல்வதுதான் முறையானது. அதைவிட்டு இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று போய் தனக்கும் தான் சேர்ந்த மக்களுக்கும் அவமானத்தை ஏற்படுத்தி, அவர்களை நட்டாற்றில் விட்டுச்செல்வது சரியானதல்ல. அதோடு குற்றவாளிகள் தப்பித்துக்கொள்ளவும் வழியமைக்கிறது. சத்திய மூர்த்தி ஒன்றும் வைத்தியரல்ல, தாத்தாபோன்று செயற்படுகிறார் என்று, அர்ச்சுனா வடக்கிற்கு வருமுன்பே குற்றச்சாட்டுக்கள் இருந்துகொண்டே வந்திருக்கின்றன. வைத்திய தருமத்திற்கு அப்பால் செயற்பட்டு வருகிறார், ஊழியர்கள் சண்டியர்கள் போல் நோயாளிகளையும் பார்வையாளர்களையும் தாக்குகின்றனர் என்றெல்லாம் அப்பப்போ குற்றச்சாட்டுக்கள் வந்துகொண்டே இருந்தன. இவற்றை கவனியாமல் சத்தியமூர்த்திக்கு அப்படி என்ன வேலை இருந்தது? தனக்கு எதிரானவர்களை ஓரங்கட்டுவதும் பழிவாங்குவதும் பொய்யான அறிக்கைகள் தயாரிப்பதிலுமே நேரத்தை கடத்தியிருக்கிறார். நமது அரசியற் தலைவர்களுக்கு அவற்றை கண்காணிக்க கேள்வி கேட்க தெரியவில்லை, நேரமுமில்லை. சோர்ந்துபோன மக்கள் அர்ச்சுனனை தலைவனாக ஏற்றுக்கொண்டு, தமது பிரச்சனைகளுக்கு தீர்வு பெற்றுத்தருவார் என நினைத்தனர். அர்ச்சுனா அதிகம் பேசாமல், அவசரப்படாமல் செயலில் காட்ட வேண்டும். மக்களுக்கு தீர்வை நிரந்தரமாக பெற்றுக்கொடுக்க வேண்டும். அதுவே அவர், தன்னை தேர்ந்தெடுத்த மக்களுக்கு செய்யும் நன்றிக்கடனாகவுமிருக்கும். எடுத்தவுடன் நிஞாயம், சட்டம், நீதி தெரியாத போலீசாரிடம் ஓடுவதை இருபகுதியும் தவிர்க்க வேண்டும். போலீசார் இருபகுதியையும் ஏவிவிட்டு கூத்து பார்ப்பார்கள், இறுதியில் அநிஞாயத்தின் பக்கமே சாய்வார்கள்.
  3. குறையே நிறையோ ! - சுப.சோமசுந்தரம் எழுத்துப் பழக்கம் ஏற்படும் முன்பே அடியேனுக்கு மேடைப் பழக்கம் ஏற்பட்டிருந்தது. எழுத்திற்காக எனக்குக் கொம்பு சீவி விட்டவள் என் மகள் சோம.அழகு என்றால், மேடை நோக்கி என்னை ஏவி விட்டவர்கள் எனது MUTA தொழிற்சங்கத் தோழர்கள். எனது எழுத்திற்கு நானே வாசகனாய் மனநிறைவு கொள்வதுண்டு. மேடையைப் பொறுத்தவரை பெரும்பான்மை மேடைப் பேச்சாளர்களின் வரையறையில் நான் நிற்பதில்லை என்பதே என்னைப் பற்றிய எனது கணிப்பு (அவர்கள் அப்படி ஏதோ வரையறை வைத்திருக்கிறார்கள் என்பது எனது கற்பனையாகவும் இருக்கலாம்). மேடையின் கீழே நின்றுகொண்டு நான்கைந்து பேர் கொண்ட நண்பர் குழாமில் எப்படிப் பேசுவேனோ அப்படித்தான் மேடையிலும் எனக்கு வருகிறது. பேசும்போதே யோசித்துக் கொண்டு, சொல்ல வந்தது பாதி வாக்கியத்திலேயே தெளிவானால் அடுத்த வாக்கியத்திற்குத் தாவி விடுவது, பேச்சில் முன்னும் பின்னும் செல்வது இவையெல்லாம் நீங்களும் நானும் அன்றாட உரையாடலில் அவை பற்றிய உணர்வே இல்லாமல் நடைமுறைப் படுத்துவது. மேடையிலும் இது அனிச்சைச் செயலாக வருவதே என் மேடைப் பேச்சு. இது குறையா நிறையா என்று நான் ஆய்வு செய்யும் முன்பே, அந்த என் பேச்சு இயல்பாக இருப்பதாக எனது நட்பு வட்டம் எனக்கு முறுக்கேற்றி விட்டது. அதனால்தானே அது நட்பு வட்டம் ! குறிப்பாக என் குருநாதர் பேரா.தொ.பரமசிவன் அவர்கள் அந்த என் பாணியை மாற்ற முயல வேண்டாம் என அறிவுரைத்து, அது மேடையில் வேறாகத் தெரிவதே ரசனைக்குரியது என்று குறித்தது நான் எதிர்பாராத ஒன்று. மாற்ற முயன்றாலும் என்னால் இயலுமா என்பது வேறு. என்னுள் ஏற்பட்ட இந்த சிந்தனையை உங்கள் முன் சிதறி விட்டேன். எடுத்துக்காட்டாக எனது சமீபத்திய சிற்றுரைகளுக்கான இணைப்புகளைக் கீழே தந்துள்ளேன். ஒன்று, நண்பரின் புத்தக வெளியீட்டில்; மற்றொன்று, ஜமாஅத்துல் உலமா சபையினர் நடத்திய சமய நல்லிணக்க மாநாட்டில். புதிதாக மேடையேற நினைக்கும் இளையோருக்கு, அவர்கள் எடுக்கவும் விடுக்கவும் இங்கு சில விடயங்கள் அமையலாம். (1) (2) https://drive.google.com/file/d/1VezZulqg8lUh9rqkM8XRPDGUA92w2cqk/view?usp=drivesdk இக்காணொளிகள் எனது சமீபத்திய கட்டுரைகளிலும் இணைக்கப்பட்டுள்ளன. வாசிக்க நேரமில்லாதோர் கேட்கலாம்.
  4. உங்கள் கருத்தை கவனித்தில் எடுக்கிறேன். எனக்கு அருச்சுனா மீது காழ்புணர்ச்சி ஏதும் இல்லை. ஆனால் ஆஸ்பத்திரி தமிழ் செக்கூரிட்டியை சி ஐ டி யிடம் பிடித்து கொடுப்பேன் என அவர் மிரட்டிய வீடியோ பார்த்தேன். அதில் அகங்காரத்தை தவிர வேறு எதையும் என்னால் காண முடியவில்லை.
  5. திண்ணையில் ஒரு நாளைக்கு பத்து கருக்கு மட்டைக்கு மேல் வைக்க முடியாது என்ற கட்டுப்பாடுடன் திண்ணையை துறப்பதில் எந்த ஆட்சேபமும் இல்லை 😄
  6. அது சரி தெரியாமல் கேக்கிறன்.....😎 சிலோன் வரலாற்றிலை எப்ப கூப்பன்மாவிலையும்,கூப்பன் அரிசியிலையும் வண்டு,புழுக்கள் இல்லாமல் இருந்தது? 🤣 பாணிலை கூட வண்டு இருந்தால் அப்பிடியே நுள்ளி அங்காலை எறிஞ்சு போட்டு ஒண்டு தெரியாதமாதிரி சம்பலோட ஒரே அமுக்காய் அமுக்கிற ஆக்கள் எல்லோ நாங்கள்....
  7. மாவை இராஜினாமாசெய்வதாக அறிவித்தது அவருக்கு தேர்தலில் போட்டியிட சுமத்திரன் தரப்பப பெரும்பான்யைhகக் கொண்ட தேர்தல்நியமனக்குழு அனுமதியளிக்காத கடுப்பில். அ(.அவருக்கு மட்டுமல்ல சிறிதரனுக்கும் அனுமதி மநறுக்கப்பட்ட பொழுது நான் போட்டியிடக்கூடாதென்றால் சுமத்திரனும் போட்டியிடக்கூடாது என்று வாதாடியமையால் வேறு வழியின்றி சம்மதித்தனர்).வரது ராஜினமாக்கடிதம் தனக்கு கிடைக்க வில்லை என்று செயலாளர் சத்தியலிங்கம் அறிவித்திருந்தது.குறிப்பிடத்தக்கது.அப்படியாயின் சட்டப்படி அவரே தொடர்ந்து லைவராக இருக்க முடியும். கட்சித்தலமை சுமத்திரன்கைக்குப் போகக் கூடாது என்றே மாவை இந்த தள்ளாத வயதிலுத் தான்தான் தலைவர் என்று அடம்பிடிக்கிறார். சுமத்தரன்கையில்தலைமை இருப்பதிலும்பார்க்க அறளை பேந்த மாவையின் கையில் தலைமை இருப்பது நல்லது.
  8. 'நான் அறிந்தது, நான் தெரிந்தது..................' என்று எதையாவது உங்கள் இஷ்டப்படி சொல்லலாமா........................ இவை என்ன வகையான ஆதாரங்கள்.............. அன்று எங்கள் சந்தியிலும் ஒரு கூட்டம் வைத்தார்கள். கிட்டண்ணா வந்திருந்தார். அவர் பிக்அப் ட்ரக்கின் மேலே ஏறி இருந்தார். ஊரில் இருந்த சில முன்னாள் டெலோ முக்கியஸ்தர்களை பிடித்திருந்தனர். அவர்களின் குடும்பங்கள் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருந்தனர். முழு ஊருமே எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருந்தது. சில பெண்கள் மண் அள்ளி எறிந்தார்கள். கிட்டண்ணாவால் பேசவே முடியவில்லை. ஆனால் அந்தக் குடும்பங்களை அவர்கள் எதுவும் செய்யவில்லை, எவரையும் சிறையில் அடைக்கவும் இல்லை, நாடு கடத்தவும் இல்லை................. அதற்காக ஒன்றுமே நடக்கவில்லை என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் இலட்சக்கணக்கான சொந்த மக்கள் மீதே இரசாயன ஆயுதங்களை பயன்படுத்திய, குண்டுகளை வீசிய, கொன்றொழித்த ஒரு குடும்பத்தின் நடவடிக்கைகளை நியாயப்படுத்த இவர்களையும், அவர்களையும் ஒப்பிடலாமா...........
  9. விளிம்பில் கறுப்பாக தெரிவது கருக்கு என்று சொல்வோம் அண்ணை.
  10. அர்ச்சனா உண்மையில் கோமாளியா அல்லது யாழ்பாண/புலன்பெயர் தலைமுறையின் மனோநிலையை நன்கு Stady பண்ணிய மனோதத்துவவியலாளரா? பிரச்சனைகளை தீர்ப்பதை விட பிரச்சனைக்கு காரணமானவராக தம்மால் கற்பிதம் செய்தவர்களை நடுசந்தியில் நாக்கை புடுங்கிற மாதிரி கேள்வி கேட்டாலே ஆர்கஸம் அடையும் மனோநிலை கொண்ட ஒரு கூட்டத்தை திறமையாக புரிந்து கொண்டு செயற்படுகிறார். இவரது செயற்பாடுகள் வெறும் பேஸ்புக், யுருயூப் விசிலடிப்புகளுக்காக மட்டுமே. தொண்டர் உதவியாளர்கள் என்ற பிரச்சனை 2002 ம் ஆண்டில் இருந்து உள்ள பிரச்சனை. அதை பற்றி அர்சனாவுக்கும் நீண்ட காலமாக தெரியும். இதனை சுகாதார அமைச்சுன் கவனத்துக்கு வருவதற்கான போராட்டங்கள் ஏற்கனவே நடைபெற்று அந்த விடயம் ஒரளவு அது முன்னேற்ற மான நிலையிலும் உள்ள நிலையில் அதனை மென்மேலும் வலுப்படுத்தக்கூட வகையில் சுகாதார அமைச்சுடன் நேரடியாக பேசக்கூடிய இயலுமை பாராளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் அர்ச்சனாவுக்கு உண்டு. இருப்பினும் அதை விடுத்து சத்தியமூர்த்தி அவர்களின் அலுவலக்கதுக்குள் அத்து மீறி நுளைந்தது அவரோடு இவருக்கு இருக்கும் தனிபட்ட ஈகோவுக்காகவும் இவரது சமூகவலைதள விசுலடிச்சான் குஞ்சுகளுக்காகவுமே. மேலும் தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்ததில் இருந்து நாடு முழுவதும் ஊழல் ஒழிப்பை முக்கிய பிரச்சனையாக கையிலெடுத்தி ருக்கக்கூடிய நிலையை புரிந்து கொண்டு இவ்வாறு தடாலடியாக இவர் நடந்து கொள்வதும் ஒரு தந்திரம் தான். தானாக கனியும் கனிகளை தான் புகைபோட்டு தான் கனிந்தது என்ற பிம்பத்தை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேடுவதும் நோக்கம். ஏற்கனவே மருத்துவர்களைக்கெதிராக இவரது குற்றச்சாட்டுகள் இவரால் ஊதிப் பெருப்பிக்கப்பட்டு மக்களுக்கு காட்டப்பட்டது. எதற்கும் இவரிடம் ஆதாரம் இல்லை. ஆதாரம் இல்லாத, அவதூறுகளை கண்ணை மூடிக் கொண்டு நம்பும் ஒரு மக்கட் கூட்டதை நன்கு புரிந்து செயற்படுகிறார். பொதுத் துறை ஊழலை ஒழிக்க உண்மையாக மனப்பூர்வமாக இவர் விரும்பினால் ஆதாரங்களை திரட்டி அதை அரசிடம் கையளிக்கலாம். பாராளுமன்றத்தில் ஆதாரங்களை முறைப்படி வெளியிடலாம்.
  11. நான் அர்ச்சனா ஆதரவாள்ன் ..இல்லை...செய்வது தவறாக இருக்கலாம்...நான் ஊரில் நின்றநேரம் சில அலுவல்களுக்காக் அலுவலகங்கள் சென்றபோது..கண்டவை ...அலுவலர் திமிர்த்தனம்.. அலட்சியம்..ஊழல்...பொதுநலநோக்கு கிடையவே கிடையாது..சுயநலம் ...எத்தனையோ திட்டங்கள் இவர்களின் அசமந்தப் போக்கால் ..அரைகுறையாக கிடக்கின்றன...போட்டிமனப்பான்மை கிடைக்கின்ற காசுகளும் திரும்பிவிடுகின்றன.. இப்படி பலவற்றை கண்டேன்...என்னைப் பொறுத்தவரை அர்ச்சனாவின் ..இந்த நேரடிக் கேள்விகள் ..வடகிழக்கில் உண்மையான அபிவிருத்தி நடைபெற உதவலாம்..ஆனால் அர்ச்சனா சபை நாகரீகம் பேணவேண்டும் என்பதே எனது விருப்பம்
  12. ஆமா ....முன்பு சுமந்திரனும் காலதாமதமாக வந்துள்ளார். இருக்கட்டும்.... என்ன காரணம் என்று கேட்டால் குறைந்தா போய்விடுவார்கள்? ஒருவேளை அவருக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்திருந்தால் என்ன ஆவது? இவ்வாறு சக உறுப்பினர் மீது கரிசனை இல்லாதவர்கள் மக்களை எப்படி அணுகுவார்கள்? நல்லவேளை, சிவநேசதுரை சந்திரகாந்தன் கைதுசெய்யப்படுவார் என்கிற செய்தி வந்ததும், விசாரணைக்கு அழைத்துச் சென்றதும் சாணக்கியன் தப்பித்துக்கொண்டார். இல்லையென்றால் முந்திய வரலாற்றை மறந்திருக்க மாட்டார் என நினைக்கிறன். அர்ச்சுனனையும் அனுராவையும் மக்கள் தெரிந்தெடுக்க யார் காரணம் என்பது உங்களுக்கு தெரியாமல் இருந்திருக்கலாம், ஆனால் மக்களுக்கு தெரியும். மக்கள் அல்லல் படும்போது அதை தடுக்க திராணியில்லை, கட்சிக்குள் குடைச்சல், மக்கள் தமக்கு உதவக்கூடியவர்களை தெரிந்தெடுத்தார்கள். சும்மா இருப்பதற்கு மக்கள் ஏன் வாக்குபோடவேண்டும்? அதிகாரம் செலுத்தவும் மக்களை குறை சொல்லவுமா?
  13. மத்திய கிழக்கு முழுவதுமே ஓரளவுக்குமேல் நாகரீகமடையாத மக்கள் கூட்டத்தைக் கொண்டது. இந்த வகையான ஆட்சிக்குத்தான் அது பழக்கப்பட்டது. அங்குள்ள மக்களின் நாளாந்த வாழ்க்கை முறைகளை உற்றுக் கவனித்திருந்தீர்களென்றால் அது ஏன் என்று புரியும். குர்ரானைக் கட்டிப்பிடித்து வரிக்குவரி அதனைக் கடைப்பிடிக்க முயற்சித்தால் இது அப்படியே தொடரும்.
  14. கருக்குமட்டை எல்லாம் வேண்டாம் பெருமாள் ........கருத்துக்கள் வைத்தால் போதும் . ........எனக்கும் திண்ணை இருப்பது விருப்பம் . ...... எதாவது ஒரு விரைவில் பெற்றுக் கொள்ளலாம் . ...... அதேநேரத்தில் தங்களின் பல வேலைகளுக்கு இடையில் மட்டுறுத்தினர் இங்கு வருகிறார்கள் . .....அவர்களின் நிலைமைகளையும் புரிந்து நயமான கருத்துக்களை நாங்கள்தான் பொறுப்போடு இட வேண்டும் . ........! 😁 ஏதாவது ஒரு தகவல்கள் . ......!
  15. இந்து முறைப்படி… ஈமச்சடங்கு செய்துள்ளார்கள் போலுள்ளது. 🥸
  16. முதலில் இந்த படத்தில் இருக்கும் கண்ணாடி போட்ட குரங்கை யும் சீனாவுக்கு அனுப்பும் குரங்குகள் உடன் அனுப்பி வைக்கவும் தமிழரசு கட்சி உருப்படும் இந்த குரங்கின் வேலைதான் இவ்வழவு கலவரமும் .
  17. உஷ்….உப்பிடி எல்லாம் கதையாதேங்கோ…. அப்புறம் அனுர தெய்யோ கண்ணை குத்தி போடும்…. வேணும் எண்டால் - அனுரவின் கீழும் இனவாத நடவடிக்கை அப்படியே தொடர்கிறது என்பதை மறைக்க சாணக்கியன் போன்ற சோப்பிளாங்கிகளை போட்டு வறுக்கலாம்🤣
  18. தமிழ் பிரதேசத்தில்(பெளத்த சிலைகள் ,விகாரைகள்,சிங்கள குடியேற்றங்களை) இவற்றை செய்தால் தான் ஒன்றிணைந்த இலங்கையை உருவாக்க முடியும் என 75 வருடங்களாக சிங்கள புத்திஜீவீகள் போராடுகிரார்கள் ...நாங்கள் அதை புரிந்தும் புரியாதது போல நடிக்கின்றோம்... அவர் இப்ப அரிசியில் வண்டுகளை மீட்கின்றார் ..எல்லாத்தையும் அவரின்ட தலையில் கட்டி விடவேண்டாம் வடமாகாண தோழர்களே உங்களது தலமைக்கு கை கொடுங்கள் ... அபிவிருத்தி கூட்டத்தில் முப்படையினருக்கு என்ன வேலை ...வட மாகாணத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஜெ.வி.பி தோழர்கள் அவர்களுக்கும் வணக்கம் செலுத்தி காலில் விழாத குறையாக தங்கள் அடிமை விசுவாசத்தை செய்கின்றனர் ...
  19. இதை தான் ரணில் அனுபவ ரீதியாக சொன்னவர் ...எல் போர்ட் அரசு எண்டு... அதுசரி.. இதையெல்லாம் தோழர் அனுரா சுங்க திணைக்களத்துக்கு போய் பார்வையிட ஏலாது .. இது என்ன சினிமாவா மூன்று மணித்தியாலத்தில் தோழர்கள் நினைத்த சோசலிஸ்ட் ரட்டையை உருவாக்குவதற்கு ..30 வருடங்களுக்கு மேல் செல்லும் அதுவரை தாக்கு பிடிக்க வேணும்...புயல்,காற்று ,ஊழல்,இனவாதம்,பூலோக அரசியல் ....இப்படி பல பூதங்கள் இவரை சுற்றி வலம் வரும்... பாகிஸ்தானில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய பிளான் போடுதோ ஒரு குறூப்
  20. Valavan எழுதியதற்குப் பதில் எழுதியிருக்கிறேன். அதில் உங்களுக்கு என்ன பிரச்சனை? விடுதலைப் போராட்டத்திற்கு தாங்கள் உழைத்தவர் என்று நீங்கள் கூறுகின்ற காரணத்தினாலேயே உங்களைக் கனம் பண்ணுகிறேன். அதற்காக விபு க்களுக்கு சொந்தம் கொண்டாட நினைப்பது மாகா தப்பு,.... நினைவில் வைத்திருங்கள். 😏
  21. Some people are going to leave a mark on this world while others will leave a stain. Fleonor Bookerell சிலர் வரலாற்றில் தம் முத்திரையை பதித்துச் செல்வார்கள். இன்னும் சிலர் வரலாற்றில் ஒரு அழுக்காக படிந்துவிடுவார்கள்.
  22. அடேங்கப்பா… படத்தை பார்க்க பகீரென்று இருக்குது. மன்னர் ஆட்சியில் நடப்பது போல், மக்களின் வரிப் பணத்தில் ராஜ வாழ்க்கை நடத்தி உள்ளார்கள். மகிந்தவுக்கு பல வாகனங்கள், இரண்டு நோயாளர் வண்டி என்றும் வைத்திருந்தவர். அங்காலை ரணிலுக்கு… 16 சமையல்காரர் தேவையாம். நாடு இருக்கும் நிலையில் அதனைப் பார்த்தாவது திருந்தி இருக்க வேண்டாமோ… இதற்குள்…. மக்களின் சேவகர்கள் என்று, அந்த மக்களின் தலையிலேயே சம்பல் அரைத்திருக்கின்றார்கள்.
  23. இலங்கையை பொறுத்தவரை அப்படித்தான் சிங்கள ஆக்கிரமிப்பாளர்கள் மாற்றி வைத்துள்ளார்கள். பிரச்சினைகளின் தீவிரத்தை உணராதவர்கள்தான் ... அது வேறு, இது வேறு என்று "பொய்ச் சமாதானம்" சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். காகம் எல்லாம்... கறுப்பு என்ற மாதிரித்தான், இலங்கையின் புத்தர் சிலையும்.
  24. சாணக்கியனின் காதலி... சிங்கள இனத்தை சேர்ந்தவர் என்று சொல்கிறார்கள். இப்ப.. புத்த சிலையை பற்றி கதைத்தால், "காதலில்... விரிசல்" ஏற்படுமே. 💔 🤣
  25. இருக்கும் இருக்கும். சில கொள்ளையர் குழுவாகவும் செய்கிறார்கள், ஆகையால் சங்கமமைத்து அதற்கு நேர, இட, அட்டவணை போட்டு செய்வார்கள், பிறகு பங்கு பிரிப்பதில் சண்ட பிடிக்கவும் கூடும், அதன் பின் பிரிந்து சுயமாக தம் தொழிலை தொடர்வர். டக்கிளஸ் கூட ஓய்வுபெற்ற பின் என்று பிடித்தாராமே சம்பளத்திலிருந்து. அரசாங்க உத்தியோகத்தருக்கு தானாகவே ஓய்வூதியத்துக்கென ஒதுக்குகிறார்கள் அவர்கள் சம்பளத்திலிருந்து. அதில இவர் வேற பிடிக்கிறேனென கூறி ஏப்பம் விட்டிட்டார்.
  26. அட😊 தேர்தலில் வென்ற பின் சாணக்கியன் கதைக்க வெளிக்கிட்டார்
  27. அரசுக்கு வரி கட்ட தேவையில்லை ஒரு சந்தேகம் இவர்களுக்கும் தொழிற்சங்கம் இருக்குமோ
  28. நான், அவரின் ரசிகை இல்லை ...ஆனால்,தங்களை யாரும் கேள்வி கேட்க முடியாது என்று அதிகார வெறியில் ஆடுபவர்களுக்கு இவரை போல கேள்வி கேட்பவர்கள் அவசியம். முறையான அனுமதி இல்லாமல் அங்கு போக முடியாது என்று அவருக்குத் தெரியும்...போனது அவர்களுக்கு பயம் காட்டுவதற்கு யாழ்ப்பாணத்தில் இருப்பவர்கள் இவர் செய்தது சரி என்று தான் சொல்கிறார்கள் ....ஏதோ ஒரு தேவைக்காய் அன்றாடம் வைத்தியசாலைக்கு போய் வருபவர்களுக்கு தான் அங்கு காவலிருப்பவர்கள் செய்யும் அநியாயம் தெரியும்.இந்த வைத்தியசாலை காவலில் இருக்கும் கொம்பனி யாருடையது என்பதும் , அந்த காவலில் இருப்பவர்கள் எத்தனை பேரை காலால் எட்டி உதைத்து அடித்து இருக்கிறார்கள் என்பதும் உங்களுக்கு தெரியாமல் இருக்கும். அல்லது தெரிந்திருந்தாலும்,அங்கு இருக்கும் மக்களுக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை இங்கு அர்ஜுனாவை எதிர்ப்பது தானே முக்கியம் என்று எழுதி கொண்டு இருக்கிறீர்கள். நீங்களும்,மற்றவர்கள் மாதிரி ஒருவரை பிடிக்கவில்லை என்பதற்காய் அவர் செய்யும் எல்லா செயல்களையும் எதிர்ப்பது ஆச்சரியமளிக்கிறது .
  29. நன்றி ஐயா. போற்றப்பட வேண்டியவர்கள்.🙏
  30. பாவம் அந்த தாதியர், அவர் உங்களின் உறவினராகவும் உண்மையை பேசியதாலும் சத்திய மூர்த்தியின் உளவுத்துறையால் பின்தொடரப்பட்டு பழிவாங்கப்படும் சாத்தியமுண்டு.
  31. பேச்சு நன்றாக இருந்தது ஐயா
  32. அந்த கூட்டம் தொடர்பான காணொலி ============ வடக்கில் நீங்கள் பெரிய வசந்தம் கொண்டு வராவிட்டாலும் பரவாயில்லை, நீர் வடிகாலமைப்பு, கிராமிய அளவில் வேலை வாய்ப்பு, எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் பற்றி கரிசனை,விவசாயிகளின் தன்னிறைவு உற்பத்திக்கான ஊக்குவிப்பு போன்ற விடயங்களில் அக்கறை எடுத்தாலே போதும் அங்குள்ள மக்கள் தமது வசந்தத்தை தாமே ஏற்படுத்திக்கொள்வார்கள். ஏனென்றால் எந்த அரசாங்கமும் தமிழர்களை பெரும்பான்மையாக கொண்ட வடக்கிலோ கிழக்கிலோ பாலாறும் தேனாறும் ஓட வைக்கும் என்பதில் எப்போதுமே நம்பிக்கை கொண்டதில்லை. எந்த ஒரு நாட்டிலும் போர் முடிவுக்கு வந்தால் நிவாரணம், மீள் கட்டமைப்பு, அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கத்தான் முண்டியடித்து வருவார்கள். ஆனால் யாழ்ப்பாணத்தில் முற்றுமுழுதான சிங்கள ஆக்கிரமிப்பின் பின்னரும், யுத்த முடிவின் பின்னரும் முதலில் ஓடி வந்தது சிங்கள வங்கிகளும், நிதி நிறுவனங்களும், தனியார் வியாபார நிறுவனங்களுமே.. நடைபாதையில் மயங்கி வீழ்ந்து கிடப்பவனின் பொக்கற்றுக்குள் கையைவிட்டு இருப்பதையும் புடுங்கும் அரசுகளை கடந்து வந்த எமக்கு இனி நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். நீங்கள் நல்லது செய்துவிட்டால் ஆச்சரியம், நல்லது செய்யாவிட்டால் அதிர்ச்சியில்லை, வழமையானதுதான்.
  33. நான் எங்கும் அசாத்திற்கு வெள்ளை அடிக்கவில்லை என்பதை இங்கு உறுதியாக கூறுகின்றேன். நான் மேற்குலகின் நடவடிக்கைகளுக்கு எதிராக எழுதினால் ஏன் இவர் ரஷ்யாவில் தஞ்சம் கோரவில்லை என எழுதுகின்றார்கள். எனக்கு எதிராக எழுதுபவர்கள் ஒன்றும் இலங்கையில் இருந்து எழுதுபவர்களல்ல. எனவே தாம் வாழும் புலம்பெயர் நாடுகளில் ஆட்சியில் இருக்கும் அரசை விட மாற்றுக்கருத்து கட்சிகள் இல்லையா என யாராவது பதில் சொல்ல முடியுமா? தற்போது ஆட்சியில் இருக்கும் அரசு செய்யும் நடவடிக்கைகளை மட்டும் ஆதரிப்பீர்களா? நீங்கள் ஆதரிக்கும் இந்த மேற்குலகுதானே முள்ளிவாய்க்கால் நிகழ்வை வேடிக்கை பார்த்தது. 👈 அப்போது வராத உணர்ச்சிகளும் வார்த்தைகளும் உக்ரேன்,சிரியா ,காஸா போன்ற நாடுகளின் கலவரங்களில் மேற்குலகு சார்பான கருத்துக்கள் வருகின்றனவே அது ஏன்? எப்படி? விடுதலைப்புலிகள் செய்தவை மாறானவை என்பதையே உங்கள் அன்றைய மௌனம் சொல்லி நிற்கின்றது. மேற்குலகால் நடத்தப்படும் உக்ரேன் அழிவிற்கும் காசா அழிவிற்கும் சிரியா வீழ்சிக்கும் சந்தோசமாக ஆர்ப்பரிப்பவர்கள் ஏன் முள்ளிவாய்க்கால் அழிப்பை ஆர்ப்பரிக்கவில்லை? அண்மைய மேற்குலகின் அழிவுகள் எல்லாம் நான், என் மண், என் தேசம், என்பவர்களை தான் தேடி அழித்தொழித்துக்கொண்டிருக்கின்றது. எல்லா மனிதர்களுடனும் எல்லா கருத்துக்களுடனும் ஒருமித்து நிற்க முடியாது.
  34. அடே, இதுவும் நல்ல தொழிலா இருக்கே! சத்தமில்லாமல், எதிர்ப்பில்லாமல், வந்தோமா போனோமா என்று கைநிறைய பணம். எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள், திட்டம் போடுகிறார்கள், கூட்டு சேர்கிறர்கள், இடம் தெரிகிறார்கள், அபாரமாய் உழைக்கிறார்கள், உல்லாசமாய் வாழ்கிறார்கள். திருமண உறவாய்,, தொழில் சிநேகித இருக்குமோ இருவருக்கும்?
  35. 👍.................... பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமே சென்னை தான். முழு ஆதரவும் கொடுத்து, எப்போதும் தூக்கிச் சீராட்டியதும் தமிழ்நாடு அரசு தான்............... சந்திரபாபு நாயுடுவும், பவன் கல்யாணும் திடீரென தூக்கத்தில் இருந்து எழும்பி இருக்கின்றார்கள்................ இவர்களால் தான் சீமானுக்கு வேலை வருகின்றது................🤣 தெலுங்கு வழியாக வந்த தமிழர்கள் கோடிக் கணக்கில் இருக்கின்றார்கள் தமிழ்நாட்டில். கருணாநிதியின் குடும்பத்தையும் இப்படித் தானே சொல்கின்றனர். உதயநிதியும் 'தெலுங்கு பாய்' தான் இவர்களின் கணக்குப்படி.................. இதைத் தானே கஸ்தூரி சொல்ல ஆரம்பித்து, பின்னர் அவரைத் தேடிப் பிடித்தார்கள்.......😜.
  36. ஏற்கனவே விஸ்வநாதன் ஆனந்த் - கார்ல்சன் மோதி கையிலிருந்து போன பட்டம்.. இன்று குகேஷ் மூலம் மீண்டும் தமிழ்நாட்டுக்கு வருது.. இரண்டரை மில்லியன் டாலர் பரிசுத்தொகையோடு.. கிட்டத்தட்ட இந்திய ரூபாய் மதிப்பில் இருபது கோடி ரூபாய் இருக்கலாம்.. பணம் இரண்டாம்பட்சம்.. ஒரு தமிழராக நாமும்.. இந்தியராக மொத்த நாடும் கொண்டாடித்தீர்க்க வேண்டிய விஷயம்... அறிவு மற்றும் கணித்தலின் பெரும் அளவுகோலாக கருதப்படும் சதுரங்க விளையாட்டில் வெற்றிகளை குவிப்பதின் மூலம் ஆனந்த், மற்றும் குகேஷ் போன்ற வீரர்கள் தமிழர்களையும் இந்தியர்களையும் பிறர் தலைநிமிர்ந்து பார்க்க வைக்கின்றனர்.. இச் சாதனையை பெற்ற உலகின் 18 வயதே நிரம்பிய இளம் வீரர் என்கிற சாதனையையும் நிகழ்த்திய தம்பிக்கு இதயம் கனிந்த பாராட்டு. Suyambu Lingam
  37. ஆமோதிக்கிறேன்.
  38. ChessMood · Suivre 17 h · The updated list of the World Chess Champions The reigning World Champion: Gukesh Dommaraju பாராட்டுக்கள் + வாழ்த்துக்கள் . .......! 💐
  39. அனுர காலமல்ல ஜேஆர் காலத்திற்கு முன்பாக இருந்தே சிங்கள கட்சிகளுக்கு தமிழர் பிரதேசங்களில் கணிசமான வாக்குகளும் ஆதரவுகளும் இருந்துள்ளதை மறக்க/ மறைக்க முடியாத துர்ப்பாக்கய வரலாறு தமிழர்களுக்கு உண்டு.
  40. அல்லாரும்... ஒண்ணுக்க ஒண்ணா இருந்தா... ஒலகத்தில சண்டை ஏது, சச்சரவு ஏது. 😂 🤣
  41. கள்ளச் சாராயத்தை மட்டும் செந்தமிழன் அண்ணாவின் கண்ணிலை காட்டீடாதேயுங்கோ அப்புறம் அதையும் அடிச்சுப்போட்டு சகலை எண்டுடுவாப்பில!😂
  42. அடுத்த வாரமே தன்னைப் பிரபாகரனின் பேரன் என்பார். இந்த உறவு முறை எல்லாம் அண்ணன் அன்றைக்கு அடிக்கிற (B)பிராண்டை பொறுத்து மாறுபடலாம். 😂
  43. ஐயா.. சாரே.. Gentleman..!🙏 திண்ணை இல்லாதது களையிழந்து போச்சுது.. கொஞ்சம் கருணை காட்டி திண்ணையை கொண்டு வாருங்கள்..🪹 யாரையும் நலம் விசாரிக்கக் கூட முடியவில்லை..!😢
  44. உடல் துர்நாற்றம் ஏற்படுவது ஏன்? வயதிற்கு ஏற்றார் போல் உடலின் நாற்றம் மாறுபடுமா? 7 டிசம்பர் 2024 Getty Images 'உடல் நாற்றம்' என்பது சுத்தத்தோடு தொடர்புடையது மட்டுமல்ல உடல் நாற்றம் (Body odour) என்று சொன்னவுடன், பலரும் அதை உடலின் சுத்தத்துடன் மட்டுமே தொடர்புப்படுத்தி பார்ப்பார்கள். அதிகமாக வியர்த்தால் உடலில் அதிக நாற்றம் வரும் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். நமது தோலில் இருந்து ஆவியாகும் ஒவ்வொரு துளி வியர்வையும் நமது உடல் வெப்பநிலையைக் குறைக்க உதவுகிறது. ஆனால், உடல் துர்நாற்றம் என்ற பிரச்னையின் காரணமாக சிலர் உடலின் இந்த அத்தியாவசிய செயலை வெறுக்கிறார்கள் அல்லது அதை குறைக்க நினைக்கிறார்கள். ஆனால் வியர்வை என்பதே எந்தவொரு நாற்றமோ அல்லது மணமோ இல்லாத ஒரு திரவம்தான். சருமத்தில் உள்ள பாக்டீரியாக்கள், வியர்வையை 'மணமுள்ள சேர்மங்களாக' பிரிக்கும்போது உடல் துர்நாற்றம் ஏற்படுகிறது. 'உடல் நாற்றம்' என்பது சுத்தத்தோடு தொடர்புடையது மட்டுமல்ல, உணவுமுறை, ஹார்மோன் மாற்றங்கள், மரபியல், சில மருந்துகள், நீரிழிவு அல்லது கல்லீரல் நோய் போன்ற மருத்துவ நிலைமைகள் கூட அதற்கு காரணமாக இருக்கலாம் என ஆய்வுகளும் நிபுணர்களும் கூறுகிறார்கள். இதைவிட ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், ஒருவரின் வயதிற்கு ஏற்ப உடலின் நாற்றம் மாறும் என ஓர் ஆய்வு கூறுகிறது. Getty Images தினமும் இருமுறை குளிக்கும் நபருக்கு கூட 'உடல் துர்நாற்றம்' என்பது ஒரு பிரச்னையாக இருக்கலாம் உடலின் துர்நாற்றம் ஏன் ஏற்படுகிறது? தோலில் உள்ள இரு வகைச் சுரப்பிகளால் வியர்வை உருவாகிறது. உடற்பயிற்சி செய்யும்போது உடலெங்கும் சுரக்கும் வியர்வை எக்ரின் (Eccrine) என்ற சுரப்பி மூலம் உருவாகிறது. இந்த வியர்வை உடலை குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது. முடி நிறைந்த தோல் பகுதி, அக்குளிலும், பிறப்பு உறுப்பு பகுதிகளிலும் சுரக்கும் வியர்வை அபோக்ரின் (Apocrine) என்ற சுரப்பி மூலம் உருவாகிறது. இவ்வியர்வையில் புரதம் உள்ளிட்ட சிக்கல் நிறைந்த பல மூலக்கூறுகள் உள்ளன. பாக்டீரியாக்கள் இவற்றை துர்நாற்றம் கொண்டதாக மாற்றுகின்றன. மனித உடலில் இருந்து நூற்றுக்கணக்கான ஆவியாகும் கரிம சேர்மங்கள் (Volatile organic compounds- விஓசி) வெளியேற்றப்படுகின்றன என்றும், பொதுவாக அவற்றின் கூறுகள் ஒரு நபரின் வளர்சிதை மாற்ற நிலையை பிரதிபலிக்கின்றன என்றும் 'தி ஜர்னல் ஆப் பயோகெமிஸ்ட்ரி' எனும் அறிவியல் ஆய்வு இதழில் வெளியான ஒரு ஆய்வுக் கட்டுரை தெரிவிக்கிறது. இந்த ஆய்விதழ், 1922ஆம் ஆண்டு முதல் புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தால் வெளியிடப்படுகிறது. இந்த ஆவியாகும் கரிம சேர்மங்கள் தான் உடலின் நாற்றங்களுக்கு காரணமாக இருக்கிறது என்று அந்த ஆய்வு கூறுகிறது. சுவாசம், வியர்வை, தோல், சிறுநீர், மலம் ஆகியவை இந்த சேர்மங்களின் முக்கிய ஆதாரங்கள். உடல் துர்நாற்றங்களுக்கு ரத்தமும் ஒரு முக்கிய காரணமாகும், ஏனெனில் வளர்சிதை மாற்றத்தில் உற்பத்தி செய்யப்படும் சில விஓசி சேர்மங்கள் ரத்தத்தில் சுரந்து, பிறகு சுவாசம் மற்றும் அல்லது வியர்வை வழியாக வெளிப்புறச் சூழலுக்கு உமிழப்படுகின்றன. அதே சமயம், இந்த ஆவியாகும் கரிம சேர்மங்களில் மணமற்றவையும் உள்ளன. மனித உடலின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வெளிப்படும் இந்த சேர்மங்கள் வயது, உணவு, பாலினம், உடலியல் நிலை மற்றும் மரபணு பின்னணி ஆகியவற்றைப் பொறுத்து வேறுபடுகின்றன. Getty Images நமது வயதிற்கு ஏற்றார் போல, உடலின் இயற்கையான நாற்றத்திலும் பல வேதியியல் மாற்றங்கள் நிகழ்கின்றன 'வயதிற்கு ஏற்றார் போல மாறும் உடல் நாற்றம்' ஸ்வீடனின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள கரோலின்ஸ்கா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜோஹன் லுண்ட்ஸ்த்ரோம், உடல் துர்நாற்றம் குறித்தும் உடல் வாசனைகள் குறித்தும் ஒரு விரிவான ஆராய்ச்சியை மேற்கொண்டார். அவரது குழு வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில், "நமது வயதிற்கு ஏற்றார் போல, உடலின் இயற்கையான நாற்றத்திலும் பல வேதியியல் மாற்றங்கள் நிகழ்கின்றன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்காக, இளம் வயது நபர்கள் (20–30 வயது), நடுத்தர வயது நபர்கள் (45–55), மற்றும் முதியோர்கள் (75–95) ஆகிய மூன்று பிரிவுகளைச் சேர்ந்த 41 தன்னார்வலர்களிடமிருந்து உடல் நாற்றத்தை ஆய்வு செய்வதற்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அதில் இளம் மற்றும் நடுத்தர வயது நபர்களுடன் ஒப்பிடுகையில், முதியோர்களின் உடல் நாற்றம் என்பது குறைவான தீவிரம் கொண்டதாகவும், அதிக துர்நாற்றம் இல்லாததாக இருந்ததாகவும் தெரிய வந்தது. இதற்கு காரணம், முதுமை வளர்சிதை மாற்றத்தை பாதிக்கிறது. இது வேறுபட்ட 'ஆவியாகும் கரிம சேர்மங்களின்' (விஓசி) உற்பத்திக்கு வழிவகுக்கிறது. உதாரணமாக, முதியோர்களின் உடலில் அதிக அளவு 2-நோனீனல் (2-nonenal) எனும் சேர்மம் உற்பத்தியாகிறது. இதனால் முதியோர்களிடத்தில் மட்டுமே இருக்கும் ஒரு பிரத்யேக உடல் மணம் (old person smell) உருவாகிறது என்று அந்த ஆய்வு கூறுகிறது. Getty Images முதுமையின் மணத்திற்கும் (old person smell), சுகாதாரத்துக்கும் எந்தத் சம்பந்தமும் இல்லை முதியோர்களின் இந்த பிரத்யேக உடல் மணம் சிலருக்கு விரும்பத்தகாததாக இருந்தாலும், பெரும்பாலானோர் அந்த மணத்தை தங்களது தாத்தா, பாட்டி மற்றும் வயதான பெற்றோர்கள் குறித்த அன்பான நினைவுகளுடன் தொடர்புப்படுத்திக் கொள்கிறார்கள். அதேசமயம் இந்த முதுமையின் மணத்திற்கும், சுகாதாரத்துக்கும் எந்தத் சம்பந்தமும் இல்லை. இந்த 2-நோனீனல் சேர்மம் தண்ணீரில் கரையாது. எனவே குளிப்பதன் மூலமோ அல்லது துணிகளை துவைப்பதன் மூலமோ அதை எளிதில் அகற்ற முடியாது. உடல் துர்நாற்றத்தைக் குறைப்பது எப்படி? இயற்கையான உடல் வாசனையை நாம் வெறுக்கக் கூடாது என்கிறார் தோல் மருத்துவர் மித்ரா வசந்த் இதுகுறித்து பிபிசியிடம் பேசிய தோல் மருத்துவர் மித்ரா வசந்த், "ஒவ்வொருவருக்கும் என தனித்துவமான, இயற்கையான உடல் வாசனை இருக்கும். அதிக வியர்வையால் அந்த வாசனை, நாற்றமாக மாறும்போது அது அவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும். அதற்கு என்று பல வழிகள் உள்ளன. சுலபமான வழி என்றால் டியோடொரன்ட் அல்லது வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்தலாம்" என்கிறார். ஆனால் அதுபோன்ற டியோடொரன்ட் அல்லது வாசனைத் திரவியங்களை நேரடியாக தோல் மீது அல்லாமல், உடுத்தும் ஆடைகள் மீது பயன்படுத்துவது சிறந்தது என்று கூறுகிறார். "அதுமட்டுமல்லாது, இருமுறை குளிப்பது, பருத்தி ஆடைகளை அணிவது, துர்நாற்றத்துடன் வியர்வை அதிகம் சுரக்கும் பகுதிகளில் இருக்கும் முடிகளை அகற்றுவது, போன்றவை உடல் நாற்றத்தைக் குறைக்க உதவும். மற்றபடி வியர்வை என்பது உடலுக்கு மிகவும் அவசியமான ஒன்று." "வியர்வையை தவிர்த்தால் உடல் நாற்றத்தை தவிர்க்கலாம் என்ற எண்ணம் நல்லதல்ல. உங்கள் அன்றாட வாழ்க்கையை உடல் துர்நாற்றம் பாதிக்கிறது என்றால், அதற்கு மேற்கூறிய வழிகளைப் பின்பற்றலாம். இல்லையென்றால் அடுத்த கட்ட சிகிச்சைகளும் உள்ளன" என்றும் கூறுகிறார். அளவுக்கு அதிகமான வியர்வையால், உடல் துர்நாற்றம் ஏற்படுகிறது என்றால், முறையாக ஒரு தோல் மருத்துவரைப் பார்த்து ஆலோசனை பெற வேண்டுமென மருத்துவர் மித்ரா அறிவுறுத்துகிறார். "அதீத வியர்வைக்கு என பிரத்யேக மருந்துகள், சிகிச்சைகள் உள்ளன. ஆனால் இதையெல்லாம் தாண்டி உடல் நாற்றம் எப்போதுமே மோசமான விஷயம் அல்ல. இயற்கையான உடல் வாசனையை நாம் வெறுக்கக் கூடாது. அது மிகவும் இயல்பான ஒன்று தான் என்பதை அனைவரும் உணர வேண்டும்." என்று கூறுகிறார் மருத்துவர் மித்ரா. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0j18jv02exo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.