Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    19122
    Posts
  2. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    31968
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    87990
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    8
    Points
    46783
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/15/25 in all areas

  1. பொங்கல் என்பது….. Wait for it…..: தனியே தமிழருக்கு மட்டும் உரிய ஒன்றல்ல…. வடகிழக்கு பருவ மழையால் பயிர் செய்து பயன் பெறும் அனைத்து இந்திய துணைக்கண்டத்தின் மக்களும் கொண்டாடும் பண்டிகை. இதை பற்றி யாழில் முன்பே எழுதியுள்ளேன். ஜனவரி 13-16 க்கு இடையில் இந்திய துணை கண்டத்தின் கிழக்கு கரையில் இருப்போர் கொண்டாடும் பண்டிகை. அதில் மிகவும் ஸ்பெசலாக கொண்டாடும் கூட்டம் நாம். அவ்வளவுதான். அதில் கூட தமிழ் நாட்டில் பொங்கல் நான்கு நாள் கொண்டாட்டம். எமக்கு ஒருநாள். மாடு வைத்கிருப்போருக்கு 2 நாள். https://www.holidify.com/collections/harvest-festivals-in-india ———— பொங்கல் இயற்கையை வழிபட்டு நன்றி சொல்லும் நாள். சைவம், கிறிஸ்தவம், இஸ்லாம் இந்த புதிய பைத்தியங்கள் எம்மை பீடிக்க முதல் நாம் இயற்கை வணங்கிகள். கடவுளாக அன்றி எம்மை பாலிக்கும் சக்தியாக இயற்கையை வணக்கிய தத்துவ மார்க்கத்தினர். அணங்குகளும், பேய்களும், சூரனும், நில தெய்வங்களுமே எமது இறை. அதன் தொடர்சியே பொங்கல். இப்படி தனியே தமிழர் திருவிழாவும் இல்லாத, சைவத்துக்கு சம்பந்தமே இல்லாத பொங்கலை - தமிழ்-சைவர் கொண்டாட்டம் என நீங்கள் சுவீகாரம் செய்ய முனைவது அபத்தமானது. ————- எனக்கு தெரிய கிறிஸ்தவர்கள் என் அயலில் கொண்டாடியதில்லை. ஆனால் இங்கே பலர் தம் சொந்த அனுபவத்தை எழுதும் போது அதை நான் எப்படி மறுதலிக்க முடியும்? சில இடங்களில் முன்பே கொண்டாடி இருக்கலாம். சில இடங்களில் புதிதாக கொண்டாட தொடங்கி இருக்கலாம். இதெல்லாம் ஒரு பொருட்டா? எது முக்கியம்? நாம் எல்லோரும் தமிழராக உணர்ந்து கொண்டாடும் ஒரு போக்கு வலுப்பெறுகிறது. இன ஒற்றுமைக்கு இது மிக நன்மையானது. இதை வரவேற்கவேண்டியது மட்டுமே நம் கடமை. பெளத்த-சிங்களவன் ஏனைய சிங்களவரை இப்படித்தான் உள்வாங்குவான். என்ன செய்வது வட்டத்தை குறுக்கி, குறுக்கி அழிந்துபோவது இந்த இனத்தின் சாபக்கேடு.
  2. தைப்பொங்கல் வரலாறு தைப்பொங்கல் - ஒரு வரலாற்று நோக்கு நீண்ட வரலாற்றையும் காலவோட்டத்தோடு நெருங்கிப் பிணைந்த தனித்துவமான பண்பாட்டு நீட்சியையும் கொண்ட தமிழர், காலந்தோறும் பல்வேறு விழாக்களைக் கொண்டாடி வந்துள்ளனர். அவற்றை வழிபாட்டு விழாக்கள், குடும்ப விழாக்கள், தொழில் விழாக்கள் என பருமட்டாகச் சில பகுப்புகளுக்குள் அடக்கலாம். ஓரினம் கொண்டாடிவருகின்ற அனைத்து விழாக்களுமே காலத்தின் வழியே நின்று நிலைத்து விடுவதில்லை. சில விழாக்கள் மறைந்துவிடக் கூடியவை, வேறு சில காலத்தை வென்று நிலைத்து நின்றுவிட வல்லவை. இன்றைய காலத்தில் தமிழர் கொண்டாடி வருகின்ற தைப்பொங்கல் பன்னூறு ஆண்டுகளாகத் தமிழர் வாழ்வோடு நிலைத்து நிகழ்கின்ற விழாவாகச் சிறப்புற்றிருக்கின்றது. கதிரவனுக்கு நன்றியறிவித்து, உழவுத்தொழிலைச் சிறப்பிக்கும் விழாவாக மட்டுமன்றி, ஓரினத்தின் பண்பாட்டுக் கூறுகளையும் மரபுகளையும் மானுட விழுமியங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது தைப்பொங்கல் விழா. மானுடத்தின் வரலாற்றையும் வாழ்வையும் வடிவமைப்பதில் நிலவமைவு முதன்மை இடம் பெறுகின்றது. 2000 ஆண்டுகளுக்கு முன்பே நிலவமைப்பின் அடிப்படையில் தமது வாழ்வை நான்காக வகுத்து, ஒவ்வொன்றுக்குமான சிறப்புகளை வரையறுத்து அதற்கமைய வாழ்ந்தோர் தமிழர். இவ்வாறான நிலவகைப்பட்ட வாழ்விலிருந்தே தேவைக்கேற்ப, விழாக்களும் தோற்றம் கொள்கின்றன. நான்கு நிலத்து மக்களும் தமது அமைவுகளுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப, வேறுபட்ட விழாக்களையே கொண்டாடி வந்திருக்கின்றனர். பழந்தமிழர் வாழ்வு கொண்டாட்டங்களால் நிறைந்தது. ஆடுவோரும் பாடுவோரும் வாழ்வை அழகுமிக்கதாக்கினர். கூத்தர், பாணர், விறலியர் போன்ற இலக்கிய மாந்தரே இந்தக் கொண்டாடங்களுக்குச் சான்றாவர். ஒவ்வொரு நிலத்தவரும் பல்வகைப்பட்ட கூத்துகளை ஆடியுள்ளனர். நிலவமைவில் பொருளியல் வேறுபாடு: மேற்குறித்த நில அமைவியல் வழி நின்றே தமிழரின் நிலவுடைமைச் சமூக வரலாறு தோற்றம் பெறுகின்றது. நிலவமைவைப் பொறுத்தே ஒரு சமூகத்தின் உறவுகள் வடிவமைக்கப்படுகின்றன வலிமை பெறுகின்றன. சமூக இருப்பின் தளமான பொருளாதார ஆக்கத்தையும் நிலவமைவே வடிவமைக்கின்றது. "ஒரு சமூகத்தின் மேற்கட்டுமானத்தில் காணப்படும் பண்பாடு என்பது அடிக்கட்டுமானமான பொருளாதார உற்பத்தியைச் சார்ந்தே அமைகின்றது" என்கிறார் கார்ஸ் மார்க்ஸ். நால்வகை நிலத்தினுடைய பண்பாட்டு வேறுபாடுகளும் பொருளாதார வளர்ச்சியின் போக்குகளையே அடிப்படையாகக் கொண்டுள்ளன. மலைகளைக் கொண்ட நிலவமைவான குறிஞ்சியும் மலைகளின் சாரல்களான காடுகளைக் கொண்ட முல்லை நிலமும் வேட்டை சமூக வாழ்வின் கூறுகளைக் கொண்டவையாக இருந்தன. அதேவேளை நிலவுடைமைச் சமூகத்தின் தொடக்கக் களங்களைக் கொண்டவையாகவும் இருந்தன. நெய்தல் நில மக்களின் பொருளாதார இருப்பு நிலத்தைச் சார்ந்திராது கடலைச் சார்ந்திருந்தது. இதுவே மாறுபட்ட பண்பாட்டு அடையாளங்களுக்குக் காரணமாயிற்று. இந்நிலவமைவுகளில் மருதநிலமே வலிமையான நிலவுடைமைச் சமூகம் வேகமாக உருவாகவல்ல தளமாக இருந்தது. வரட்சியால் பெரிதும் அழிவுறும் நிலமாக இல்லாமலும் பரந்த விவசாய வயல்வெளிகளைக் கொண்ட தளமாகவும் இது அமைந்தது. நேர்த்தியான குடும்பக் கட்டமைப்பும் தலைமைத்துவத் தோற்றமும் இங்குதான் தோன்றியது என்பர். மக்கள் பாதுகாப்பாக வாழ வல்லதாகவும் தேவைகளை எளிதில் நிறைவேற்றக் கூடிய இடமாகவும் மருதம் அமைந்திருந்தது. மக்களின் வாழ்க்கை முறைரய மேலாண்மையை நோக்கி நகர்த்திய சமூகமாகவே மருதச் சமூகம் அடையாளம் காணப்படுகின்றது. இந்த நகர்வுகளின் வழியே நகர், நகரம், நகரியம் நாகரிகம் என்ற சொற்கள் தோன்றியதாகக் கூறுவர். ஒவ்வொரு நிலத்திலும் உற்பத்திகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. உற்பத்திகள் வழியே அறுவடை முடிந்து, விளைந்த பொருட்கள் வீடு வரும் நாட்களை மகிழ்வோடு கொண்டாடியிருக்கின்றனர். ஏனைய மூன்று நிலத்தோருக்கும் தலைமை நிலமாகவே மருதம் திகழ்ந்தது. தமிழ் நிலத்தின் பெரும் பரப்பு மருதநிலமாகவே இருந்தது. விவசாயம் சார்ந்த உற்பத்தி முறைக்கு அமைவாகவும் இருந்தது. இதன்வழியே தமிழ்ச் சமூகம் வேளாண்மை சார்ந்த நிலவுடைமைச் சமூகமாக உருப்பெற்றது. விவசாய நிலங்களின் பண்பாடு மற்ற திணைக்குரிய சிறுபான்மை நிலப்பகுதிகளிலும் தாக்கம் செலுத்தியது. எனவே மருதத்திணையில் அறுவடைக்காலக் கொண்டாட்டங்கள் மற்ற திணை சார்ந்த மக்களிடம் பரவியது. இதனால் மருதநில மக்களின் அறுவடைக் கொண்டாட்டமான பொங்கல் விழா காலவோட்டத்தில் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பண்பாட்டின் அடையாளமாக மாறியது. இப்பொங்கல் விழாவுடன் தொடர்புடைய பண்பாட்டுக் கூறுகள் தமிழர்களின் அடையாளங்களாக நிலைபெற்றன. பொங்கல் விழாவின் தோற்றம்: உழவு: வேட்டைச் சமூக வாழ்வின் முடிவாகவும் வேளாண்மைச் சமூக வாழ்வின் தொடக்கமாகவும் அமைந்த காலமே மானுடத்தை வாழ்வியல் மேன்மையை நோக்கி நகர்த்திய காலமாகும். நீர்நிலையருகே நிரந்தரமாகத் தங்கி, உழவுத் தொழிலில் ஈடுபடத் தொடங்கிய மாந்தர் இயற்கை இடர், பிறவுயிரிகள் ஏற்படுத்திய தடைகளைக் கடந்தே விளைவுகளைப் பெற்றனர். நீண்டதும் கடுமையானதுமான உழைப்புக்குப் பின்னர் உழவின் பயனை வீட்டுக்கு எடுத்துவரும் வேளையில் மகிழ்ச்சி இயல்பாகவே ஏற்படும். அந்த மகிழ்ச்சி கொண்டாட்டத்துக்கு வித்திடும். பொங்கல் என்ற அறுவடைத் திருநாளுக்கு இந்த மகிழ்வே வித்தாக இருந்திருக்க வேண்டும். உழவுத்தொழில் சிறு பயிர் உற்பத்தியிலிருந்து வளர்ச்சி பெற்று, மாரிகால மழையை நம்பிய பெரும்பயிர்ச்செய்கையாக மாற்றம் கண்ட காலத்தில் நெல் பயிரிடல் முதன்மைத் தொழிலாக வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆவணியில் விதைத்த விதை பயிராகி தைமாதத்தில் அறுவடைக்காகக் காத்திருக்கும். தன்னிறைவுக்கு அப்பால் பிறருக்கும் வழங்கும் வணிகத்தன்மையோடு உழவுத் தொழில் மேன்மை பெறத் தொடங்கிய காலத்தில் உழவைப் போற்றும் விழா மற்றுமொரு வடிவத்தைக் கொண்டிருக்க வாய்ப்பு உண்டு. உற்பத்திப் பொருட்களை வணிகம் செய்வதன் வாயிலாகப் பிற தேவைகளையும் நிறைவேற்றி மகிழும் காலமும் இதுவே என்பதால் இந்த அறுவடைக்காலம் கொண்டாட்ட காலமாகவே இருந்திருக்க வேண்டும். ஆனால் அறுவடைக்காலத்தில் புத்தரிசி இட்டு மக்கள் பொங்கல் கொண்டாடினர் என்பதற்குச் சங்க இலக்கியத்தில் எவ்வகைச் சான்றுகளும் இல்லை. அறுவடை சிறப்பாக நடைபெற்று, தாம் விரும்பியவை நிறைவேற வேண்டும் என பெண்கள் தை மாதத்தில் நோன்பு இருந்தார்கள் எனச் சங்க இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. "தைஇத் திங்கள் தண்கயம் படியும்” என்று நற்றிணையும் “தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” என்று குறுந்தொகையும் “தைஇத் திங்கள் தண்கயம் போல்” என்று புறநானூறும் “தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என்று கலித்தொகையும் கூறுகின்றன. வானவியல்: ஆங்கில நாட்காட்டிக்கு அமைய ஜனவரி 14ம் நாள் தமிழ் நாட்காட்டியின்படி தை முதல்நாள் ஆகும். கதிரவனைச் சுற்றும் பூமின் நீள்வட்டப் பாதையில் கதிரவன் வடக்கு நோக்கி நகரத் தொடங்குவதைப் போன்ற நிலையில் பூமி தன் சுற்றுவட்டத்துக்குள் நகர்கின்றது. இதனை சூரியத் தோற்ற நகர்ச்சி என்பர். தை முதல் ஏற்படும் தோற்ற நகர்ச்சி ஆனி மாதம் வரை இருக்கும் இதை வட செலவு என்பர். வடமொழி உத்தர அயனம் எனப்படும். ஆடி மாதம் முதல் மார்கழி வரை தென்படும் தோற்ற நகர்ச்சியைத் தென் செலவு (தக்கண அயனம்) என்பர். தென் செலவில் இருந்து கதிரவத் தோற்ற நகர்ச்சி வட செலவுக்குள் நுழையும் நாளே தமிழர் நாட்காட்டிக்கமைய தை முதல் நாளாகும். இரவும் பகலும் எப்போதும் ஒத்த நேரங்களைக் கொண்டிருப்பதில்லை. ஆண்டில் இரு நாட்கள் மட்டும் இரவும் பகலும் ஒத்த நேரத்தைக் கொண்டிருக்கும். இதைத் தமிழர் ஒக்க நாட்கள் என அழைக்கின்றனர். மார்ச் 22 இல் இரவும் பகலும் 12 மணி நேரத்தைக் கொண்டிருப்பதைப் போல, செப்டெம்பர் 22ம் நாளும் கொண்டிருக்கும். மார்ச் 23 வசந்தகாலத்தில் தொடக்கமாக ( Spring equinox) அமைகின்றது. செம்ரெம்பர் 23 இலையுதிர்காலத்தின் தொடக்கமாக அமைகின்றது. இதைப் போன்றே ஓராண்டில் அதிக நீளமான இரவைக் கொண்ட நாள் ஒன்றும், அதிக நீனமான பகலைக் கொண்ட நாள் ஒன்றும் உள்ளன. டிசம்பர் 22 நீளமான இரவைக் கொண்ட நாளாகவும் ஆனி 22 மிக நீளமான பகலைக் கொண்ட நாளாகவும் உள்ளன. பனிகாலத்தைக் கொண்ட நீண்ட இரவு குறைத் தொடங்குவதால் இதைப் தமிழர் பனி முடங்கல் என்பர். கடும் வெய்யிலைக் கொண்ட வேனில் காலத்தின் பகல் நேரம் குறையத் தொடங்குவதால் ஆனி 23ம் நாளை வேனில் முடங்கல் என்பர். மேற்குறித்த இந்த நான்கு நாட்களுமே நான்கு காலத்தினதும் தொடக்கங்களாக இருக்கின்றன. அத்தோடு பலவினத்தவரின் ஆண்டுத் தொடக்கங்களாகவும் இவை இருக்கின்றன. பூமி தன் உருட்டம் (self-rotation) வலயம் (revolution) என்ற இரு இயக்கங்கள் போக, கிறுவாட்டம் (gyration) என்ற இயக்கத்தையும் கொண்டிருக்கின்றது. இந்த இயக்கங்கள் நீள்வட்டப்பாதையில் சுற்றும் பூமியை என்றும் ஒரே மாதிரியாக இயங்க விடுவதில்லை. நீண்டகால ஒழுங்கில் மேற்கூறிய நான்கு நாட்களிலும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இந்த இயக்கங்களை அடிப்படையாக் கொண்டு கணிக்கும் முறைக்கு சக அயன முறை (Sayana method) என இந்தியர் பெயர் வைத்திருக்கின்றனர். இந்த முற்செலவத்தைப் பொருட்படுத்தாமல் காலம் கணிக்கும் முறைக்கு, நில்லாயன அயன முறை (Nirayana method) என்று பெயர். மேலை நாட்டவர் சக அயன முறையைப் (Sayana method) பின்பற்றியே காலத்தைக் கணிக்கின்றனர். இந்த முறைக்கமைய எப்போதுமே நீண்ட இரவு டிசம்பர் 22ம் நாளில் இருந்ததும் இல்லை. நீண்டகாலத்தின் பின் இருக்கப் போவதும் இல்லை. பல நூறு அல்லது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வேறு நாட்களில் இருந்திருக்கும் என்கிறது அறிவியல். சில ஆய்வாளர்களின் கருத்துக்கு அமைய, பனி முடங்கல் என அழைக்கப்படும் இரவு கூடிய இறுதிநாள் ஜனவரி 14 அல்லது 15 நாளிலே முன்பு நடைபெற்றிருக்க வேண்டும் என்கின்றனர் சிலர். குளிர் தரும் இரவுப்பொழுது குறையத் தொடங்குகின்ற, பனி முடங்கல் எனப்படும் அந்த நாளை, தமிழர் பொங்கலாகக் கொண்டாடத் தொடங்கியிருப்பர் என்கின்றது இந்த ஆய்வு. தெற்கு நோக்கிச் சென்று குளிர் தந்த கதிரவன் இனி வடக்கு நோக்கிச் சென்று வெய்யில் தரப் போகின்றான், அவனுக்கு நன்றி கூறுவோம் எனத் தோன்றியதே தைப்பொங்கல் என மேலும் கூறுகின்றது இந்த ஆய்வு. இதுவே பண்டைத் தமிழரின் ஆண்டுத் தொடக்கமாகும் என்பதையும் இது குறிப்பிடத் தவறவில்லை. பொங்கலின் தோற்றமும் ஊரக ஒருமைப்பாடும் தைப்பொங்கல் விழாவின் தோற்றம் குறித்து பல்வகைக் கருத்துகள் கூறப்பட்டாலும் வேறு பெயர்களிலும் வடிவங்களிலும் இந்த விழா நீண்டகாலமாகவே கொண்டாடப்பட்டு வந்திருக்கின்றது எனக் கருத இடமுண்டு. சமூகப் பொருண்மை மிக்க விழாக்களின் வேர்கள் பாமரர்களை அதிகமாகக் கொண்ட ஊரக வாழ்க்கைமுறைகளிலிருந்தே தோற்றம் கொள்கின்றன. ஊரும் உறவுமாய் நெருங்கி வாழும் கிராமத்தோர், சமூக ஒருமைப்பாட்டையும் ஒருமித்த இலக்குகளையும் கொண்டதாக விழாக்களை உருவாக்கினர். இவர்களே குடும்ப விழாக்களைக் கூட ஊர் கூடி நடத்தும் விழாக்களாகக் கொண்டாடியோர் ஆவர். விழைவுற்று நிகழ்த்துவது விழா என வேர்ச்சொல் ஆய்வாளர் கூறுவர். கிராமத்தார் எப்போதுமே விழைவுகளால் உந்தப்பட்டவர்கள் என்பதை நாட்டுப்புற இலக்கியங்கள் கூறுகின்றன. பொங்கல் விழாவும் ஊரக வாழ்வியலின் பொதுமைச் சிறப்புகளைக் கொண்டதாக அவர்களாலேயே வடிவமைக்கப்பட்டதாக இருக்க வேண்டும். வேதகால வழிபாட்டு நெறிகளை அறிந்திராத பாமர மக்கள், குழுக்களாக வழிபடும் கிராமியத் தெய்வ வழிபாடுகளை விடுத்து, அனைவருக்கும் பொதுவான கதிரவனுக்கு நன்றி செலுத்துவதைப் பொதுப் பண்பாகக் கொண்டிருக்க வாய்ப்புகள் உண்டு. பொங்கல் விழா வெளிப்படுத்தும் உயர் கூறுகள் ஊரக வாழ்வியலுக்கே உரியவை. நகர மாந்தரால் வகுக்கப்பட முடியாத தனித்துவங்கள் பொங்கல் விழாவிலே உண்டு. சங்க இலக்கியங்கள் உட்பட பல பெரும்பாலான ஏட்டு இலக்கியங்கள், நாட்டுப்புற வாழ்வியலை பெரிதும் பிரதிபலிக்கவில்லை என்பது உண்மையே. வேந்தரையும் கடவுளரையும் பாடுபொருளாகக் கொண்ட இலக்கியங்கள் பாரம மக்களின் வாழ்வைப் பதிவு செய்யத் தவறியிருக்கின்றன என்ற குற்றச்சாட்டு தமிழ் இலக்கியங்களுக்கு உண்டு. ஆனால் உழவுத்தொழில் குறித்துப் பல குறிப்புகளைச் சங்க இலக்கியங்கள் தருகின்றன. ஏறு தழுவுதல் குறித்தும் பல செய்திகள் சங்க இலக்கியங்களில் உள்ளன. இவ்வகையில் பாமர மக்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த பொங்கல் போன்ற பல ஊரக மக்களின் விழாக்களை ஏட்டு இலக்கியங்கள் கண்டுகொள்ளவில்லை. அவ்வாறே ஊரக அளவில் நடைபெற்று வந்த பொங்கல்விழாவும் இலக்கியங்களில் வேறு பதிவுகளிலும் இடம் பெறாது போயிருக்கலாம். பொங்கல் பற்றிய வரலாற்றுச் சான்றுகள்: பழங்காலப் பெண்கள் தைமாதத்தில் நோன்பிருந்த செய்திகளை சங்க இலக்கியங்கள் சில குறிப்பிட்டிருக்கின்றன என்பதை முன்னர் பார்த்தோம். தைமாத்தில் நோன்பிருந்து, வையை ஆற்றில் நீராடி, சிறந்த கணவர் வாய்க்ப்பபெற வேண்டும் என பெண்கள் வேண்டியதாகப் பரிபாடல் (பாடல் 11) கூறுகின்றது. ‘வையை நினைக்கு மடை வாய்த்தன்று மையாடல் ஆடன் மழப்புலவர் மாறெழுந்து பொய்யாடலாடும் புணர்ப்பி ரைவர் தீயெரிப் பாலுஞ் செறிந்த முன் பூற்றியோ தாயருகா நின்று தவத் தைந்நீராடல் நீயுரைத்தி வையை நதி’ பண்டைக்காலத்தில் நெற்பயிர்ச்செய்கை செழித்துச் சிறந்திருந்ததைப் பல இலக்கியங்கள் அழகாக எடுத்துக் கூறுகின்றன. உழவுத் தொழிலின் அனைத்துப் படிநிலைகளையும் சங்கப் பாடல்களில் காணலாம். சேற்றில் நாற்றை அழுத்தி நடுவதை, 'நீர்உறு செறுவின் நாறுமுடி அழுத்த நடுநரொடு சேறி ஆயின்..." என நற்றிணை கூறுகின்றது. 'பைதுஅற விளைந்த பெருஞ்செந் நெல்லின் தூம்புடைத் திரள்தான் துமிந்த வினைஞர்" என அறுவடை செய்யும் உழவரைப் பற்றிப் பெரும்பாணாற்றுப்படை கூறுகின்றது. இவ்வாறு உழவைப் போற்றிய பண்டைத் தமிழர் அறுவடைவிழாவைக் கொண்டாடியிருப்பர் என்பதை உறுதியாக நம்பலாம். புறநானூறு என்ற சங்க இலக்கியத்தின் 22வது பாடலில், குறுங்கோழியூர்க் கிழார் என்ற புலவர், 'அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல.." எனக் குறிப்பிடுகின்றார். அதாவது 'நெல்லோடு வேயப்பட்ட நெல்லந்தாள் கூரை வீடும், கருப்பஞ்சருகு வேய்ந்த கூரை வீடுகளும் தனித்தனியே விழாக் கொண்டாடப்பட்ட களம் போலப் பொலிவுடன் காட்சி தருகின்றன' என்று கூறுகின்றார். அறுவடைக்களங்களில் விழாக்கள் கொண்டாப்பட்டிருக்கின்றன என்ற செய்தி இதன் வாயிலாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாற்சோறு செய்யும் வழக்கம் பழந்தமிழர் காலம் தொட்டே இருந்து வந்திருக்கின்றது. அதை புழுக்கல் என்றே இலக்கியங்கள் குறிப்பிட்டுள்ளன. சிலப்பதிகாரத்தில் வரும் இந்திர விழாவின் துவக்கத்தில், காவல்பூதத்திற்கு, புழுக்கலும் நோடையும் விழுக்குடை மடையும் பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து வழிபட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. இதில் புழுக்கல் என்பதுதான் பொங்கல். சம்பந்தர், தன் மயிலாப்பூர் பதிகத்தில், 'நெய்பூசும் ஒண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடும் தைப்பூசம்' எனச் சுட்டுகிறார். சங்ககாலத்திலும் பக்தி இயக்க காலத்திலும் புழுக்கல் என்பது தான், பொங்கலாகக் கருதப்பட்டு வந்திருக்கிறது. அடுத்து, கிட்டத்தட்ட கி.பி 9ஆம் நூற்றாண்டுகளில் எழுந்த சீவக சிந்தாமணி என்னும் காப்பியத்திலும் பொங்கல் பற்றிய குறிப்பு இடம்பெறுகின்றது. ‘மதுக்குலாம் அலங்கல் மாலை மங்கையர் வளர்த்த செந்தீப் புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்’ என கூறுவதன் வாயிலாகப் பொங்கல் என்ற சொல்லை முதல் தடவையாக இலக்கியத்தில் பதிவு செய்கின்றது. சோழர்காலத்தில் 'புதியேடு' பண்டிகை என்ற என்ற பெயரில் புதிய அரிசியிட்டுப் பொங்கும் விழா நடைபெற்றதாகத் திருவொற்றியூர் செப்பேடுகள் தெரிவிக்கின்றன. முதல் ராஜேந்திரனின் காளஹஸ்தி கல்வெட்டில் மகர சங்கராந்தி அன்று பெரும் திருவமுது படைக்கப்பட்ட தகவலைத் தொல்லியல் அறிஞர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ளார். தை முதல்நாளைக் கதிரவனின் வடசெலவு தொடங்கும் மகர சங்கராந்தி என்றே வட இந்தியர்கள் குறிப்பிடுகின்றனர். இங்கு படைக்கப்பட்ட திருவமுதை நாம் பொங்கலாகக் கொள்ளலாம். கண்டெடுக்கப்பட்ட மற்றுமொரு கல்வெட்டு கீழ்க்காணும் தகவலைத் தருகின்றது. சோழர் காலத்தில் உத்தம சோழனுடைய இறுதி ஆட்சியாண்டில் அவனுடைய மனைவியருள் பட்டத்தரசியாக விளங்கியவவள் 'உரட்டை சரஅபயன்" எனப்படும் திரிபுவன மாதேவி கைலாசமுடைய மாகாதேவர் கற்கோவிலுக்கு ஒரு நிவந்தம் அளித்துள்ளாள். சங்கராந்தி நன்னாளில், கைலாசமுடைய மகாதேவருக்குத் திருமுழுக்கு (அபிஷேகம்) ஆட்டுவதற்கும், நந்தாவிளக்கு எரிப்பதற்கும், நூறு பிராமணர்களுக்குப் பொங்கல் சோறு அளிப்பதற்கும் தேவையான வருவாயை அளிக்கத் தக்க வகையில் நன்செய் நிலத்தை அக்கோயிலுக்கு அவ்வரசி தானமாகக் கொடுத்து இருக்கிறாள். இக்கல்வெட்டின் வாசகத்தில் 'உத்தராயண சங்கராந்தி" எனும் தொடரும், 'பொங்கல் சோறு" எனும் தொடரும் நம் கருத்தைக் கவருகின்றன. சமயப் போர்வையில் 'பொங்கல் விழா" கோயில்களில் கொண்டாடப்பட்டதற்கு இக்கல்வெட்டு சான்று பகருகிறது. கி.பி. பதினாறாம் நூற்றாண்டில் அப்போ டூபாய் எனும் போத்துகல் நாட்டைச் சேர்ந்த பயணி இந்தியாவிற்கு வந்தார். அவர் தென்னிந்தியா முழுவதையும் சுற்றிப் பார்த்தார். இந்து மக்களிடையே அவர் கண்டவற்றையும் கேட்டவற்றையும் “இந்துக்களின் பழக்க வழக்கங்களும் வாழ்க்கை முறையும்" (Manners and Customs of the Indus ) எனும் நூலை எழுதியுள்ளார். உழவர்களுடைய அறுவடைத் திருநாளாகவும் சங்கராந்திப் பண்டிகையாகவும் ஊர்கள் தோறும் எவ்வாறு அது கொண்டாடப்பட்டது என்பதை அவர் விரிவாக எடுத்துரைத்துள்ளார். பொங்கல் விழா தொடங்குவதற்குப் பல நாட்களுக்கு முன்னரே அதற்குரிய ஏற்பாடுகள் ஆர்வத்தோடும் ஆரவாரத்தோடும் மக்கள் செய்ததாகவும் வீடுகளைப் பழுது பார்த்தல் குடிசைகளில் புதிய கூரை வேய்தல், வெள்ளையடித்தல், வண்ணம் தீட்டுதல், அலங்கரித்தல் போன்ற பணிகளில் மக்கள் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார். பொங்கல் நாளன்று சூரியனுக்குச் செய்யப்படும் வழிபாட்டையும், பொங்கல் படையலையும் அவர் பாராட்டியுள்ளார். மறுநாள் மாடுகளுக்குச் செய்யப்பட்ட அலங்காரங்களையும், ஊர்ப் பொது இடத்தை மக்கள் கூடி, அவற்றிற்கு வழிபாடு செய்ததையும் கூடக் குறிப்பிட்டிருக்கின்றார். மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்த மக்கள் காளையாட்டுப் போட்டிகளிலும் 'மஞ்சு விரட்டு" போன்ற வீர விளையாட்டுகளிலும் பேரார்வத்தோடு ஈடுபட்டதை அவர் பதிவு செய்துள்ளார். இருபதாம் நூற்றாண்டில் தைப்பொங்கல்: விஜயநகரப் பேரரசு காலத்திலும் ஐரோப்பியர் காலத்திலும் தைப்பொங்கல் பற்றிய செய்திகள் பரவலாக எங்கும் காணப்படவில்லை. எனினும் தொடர்ச்சியாக நாட்டார் வாழ்வியல் அழுத்தமானதோர் விழாவாக பொங்கல் நடைபெற்று வந்திருக்கின்றது. தமிழகக் கிராமங்களில் கொண்டாடப்படுகின்ற பொங்கல் விழாக்களை உற்று நோக்கினால் அதன் ஆழமான நீண்ட தொடர்ச்சியையும் செழுமையையும் உணர முடியும். தமிழினத்தவரிடையே இருபதாம் நூற்றாண்டில் தைப்பொங்கல் பெற்ற எழுச்சி அதற்கு முன்னான காலங்களில் இருக்கவில்லை என்பது உண்மையே. பொங்கல் பற்றிய பிந்திய இலக்கியப் பதிவாக நமக்குக் கிடைப்பது பாரதிதாசன் பாடல்களே. தைம்மதி பிறக்கும் நாள்; தமிழர்தங்கள் செம்மை வாழ்வின் சிறப்புநாள்; வீடெலாம் பாலும் வெல்லப் பாகும் பருப்பு நெய் ஏலமும் புதுநெருப் பேறி, அரிசியைப் பண்ணிலே பொங்கப் பண்ணித் தமிழர் எண்ணிலே மகிழ்ச்சி ஏற்றும் இன்பநாள்! தலைமுறை தலைமுறை தவழ்ந்து வரும் நாள்! என்கிறார் பாரதிதாசன். இக்காலத்தின் தோன்றிய திராவிட அமைப்புகளும் தமிழ்த்தேசிய உணர்வாளர்களும் ஊரக வாழ்வியலின் எல்லைகளுக்குள் மட்டுப்பட்டிருந்த பொங்கல்விழாவைத் தமிழ்த் தேசியத்தின் அடையாளமாக வெளிக்கொணர்ந்தனர். பொங்கல் விழாவினூடே விரவிக் கிடந்த தமிழரின் பண்பாட்டுக் கூறுகளை வெளிப்படுத்தி விழாவின் சிறப்பை உலகறிச் செய்தனர். அதுவே தமிழரின் புத்தாண்டு எனவும் அறிவித்தனர். இன்றைய நாட்களில் உலகத் தமிழர் அனைவரும் பொங்கல் திருநாளைத் தமது தனித்துவமான பண்பாட்டு விழாவாகவே கருதத் தலைப்பட்டுவிட்டனர். மெய்யியற் சமய வழிபாடுகளுக்கப்பால் பழந்தமிழர் வழிபாட்டு முறையான இயற்கை வழிபாட்டின் எச்சமாகவே பொங்கல்விழா திகழ்கின்றது. இவ்விஉண்மையும் உணர்வும் மிக்கதாக இருக்கின்றது. பொங்கல் விழா வெளிப்படுத்தும் நுட்பமும் ஆழமும் மிக்க பண்பாட்டுக் கூறுகள் குறித்து மற்றுமொரு கட்டுரையில் காண்போம். https://paniveli.blogspot.com/2019/01/blog-post.html
  3. ஒவ்வொரு ஊருக்கும், பிரதேசத்திற்கும் என்று சில சிறப்புகள் இருக்கும். சிறு வயதுகளில் இருந்தே ஊருடன் அல்லது பிரதேசத்துடன் சேர்ந்து தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்பவர்கள் ஒரு மீன் குஞ்சு நீந்துவது போல அங்கிருப்பவற்றில் தேர்ந்தவர்கள் ஆகின்றனர். வல்வையில் கடல் நீச்சல், உதைபந்தாட்டம், பட்டம் கட்டுதல், புகைக்குண்டு செய்தல் போன்றன அந்த ஊரின் சிறப்புகள். நான் பதின்ம வயதுகளில் அங்கு இருக்கும் போது, 80ம் ஆண்டுகளில், ஊரில் பெரிய பெரிய படலங்களை கட்டுவது, படலங்களை ஒன்றன் பின் ஒன்றாக தொடுத்து விடுவது, 'லைட் படலம்' ஏற்றுவது என்பன தான் பெரிய முயற்சிகள். இன்று இந்த இளைஞர்கள், அவர்கள் கட்டி ஏற்றும் பட்டங்கள் போன்றே, வேறு ஒரு உயரத்திற்குப் போய்விட்டார்கள்............................❤️. சில பழைய நினைவுகள். என் வீட்டுக்கு பக்கத்து ஒழுங்கையில், தெணியம்பை ஒழுங்கை, இருந்த ஒரு குடும்பம் 25 பட்டங்களை தொடுத்துவிடுவார்கள். முதலில் ஏறும் பட்டம் மிகக் குட்டியாக இருக்கும். அடுத்தது கொஞ்சம் பெரிதாக இருக்கும். இப்படியே 25 பட்டங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வானத்தில் வரிசையாக நிற்கும். இன்னும் அது கண்களை விட்டு மறையவில்லை. கடைசியாக ஏறும் பட்டம் கயிறு போன்ற ஒரு நூலில் தான் ஏற்றப்படும். அதுவே நைலோனாக இருந்தால், கொஞ்சம் அசந்தாலே கையை துண்டாக்கி விட்டுவிடும். குர்லோன் வகை என்றால் கையை வெட்டாது, ஆனாலும் ஒருவராலோ அல்லது இருவராலோ 25 பட்டங்களையும் இழுத்து வைத்துக்கொள்ள முடியாது. அது ஆட்களை இழுத்துக் கொண்டு போய் அடுத்த அடுத்த ஊர்களில் போட்டுவிடும். கப்பி கட்டி, அதனூடு நூலை/கயிற்றை விட்டு, பட்டங்களை பிடிப்பதும் உண்டு. நான் ஒருமுறை எட்டுப் படலங்களை தொடுத்து விட்டுவிட்டு, வீட்டுக் கூரையின் வளை ஒன்றில் துணிகளை சுற்றிவிட்டு, பட்டங்களைக் கட்டி வைத்திருந்தேன். மிகவும் தடித்த நைலோன் நூல். திடீரென்று மேல் காற்று குழம்ப, பட்டங்கள் அதிகமாக அசைய, வீட்டு வளை தூக்கப்பட்டது. அப்படியே பல ஓடுகள் பொலபொலவென்று விழுந்தன. விழுந்த ஓடுகளை விட முதுகில் விழுந்த அடிகள் கூட. மாரிகாலம் வேற. முன்னோடிகளுக்கு முதுகில் அடி விழும் என்பதை அனுபவமாக அறிந்துகொண்ட தருணம் அது. பெரிய பட்டங்களை கமுகம் சலாகையில் கட்டுவோம். ஓரளவான பட்டங்களை மூங்கிலில் கட்டுவோம். ஆகச் சிறியவற்றை ஈர்க்கிலில் கட்டுவோம். மூங்கிலில் கல் மூங்கில், தோல் மூங்கில் என்று இரண்டு வகைகள் அந்த நாட்களில் இருந்தன. ஊரில் வளர்வது கல் மூங்கில். தோல் மூங்கில் கடலில் மிதந்து வந்து கொண்டிருந்தது. அதன் விலை அதிகம். விடிய முன்னரே கடற்கரைக்கு ஓடிப் போய் ஏதாவது மூங்கில் மிதந்து வருகின்றதா என்று கடலில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை துலாவிய நாட்களும் உண்டு. இதை எழுத ஆரம்பித்தால் எழுதி முடியாது போலிருக்கின்றது..................❤️.
  4. முதல் வரியில் இருப்பதை மானசீகமாக எழுதியிருந்தால் இரண்டாவது கேள்வி வந்திருக்காதே😂? தேவாலயத்திற்குள் தமிழர்கள் இருப்பதால், பொங்கல் தேவாலயத்தினுள்ளும் செல்ல முடியும். கிறிஸ்தவர்கள் தமிழர்களாக இருப்பதால் வேறென்ன எல்லாம் தேவாலயத்தினுள் எடுத்து செல்லப் பட்டன என்று தேடிப் பார்த்தால், இப்படியான முக்கியத்துவமற்ற கேள்விகள் எழாது: வண.சிங்கராயர், வண.இம்மானுவேல், இன்னும் பல கத்தோலிக்க, கிறிஸ்தவ தலைவர்களால் தமிழர்களுக்கெதிரான அநீதிகள் பற்றிய கதையாடலும் தேவாலயத்தினுள் நுழைந்தது. மறு பக்கம், சைவ சித்தாந்தத்தில் கலாநிதிப் பட்டம் பெற்று, அதை யாழ் பல்கலையில் முக்கிய துறையாக உருவாக்கிய வண. மரியசேவியர் அவர்களால், சைவம் பற்றிய அறிவூட்டல் கூட தேவாலயத்தினுள் நுழைந்தது (திருமறைக்கலா மன்றத்தில், அவர் நடத்திய சைவ சித்தாந்த வகுப்புகளுக்குச் சென்றோருக்கு இது புரியும்!). எனவே, மீண்டுமொருமுறை: தரவுகள், தகவல்களை நல்ல நோக்கத்திற்கும் பயன்படுத்தலாம், தீய நோக்கத்திற்கும் பயன்படுத்தலாம்!
  5. Published By: DIGITAL DESK 2 14 JAN, 2025 | 07:39 PM (நமது நிருபர்) இழுவைமடிப்படகு , சுருக்குவலை உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைமைகளை தமிழக அரசாங்கமும் தடைசெய்வதற்கு உடனடியாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கோரிக்கை விடுப்பதாக தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற அயகத்தமிழர் மாநாட்டில் பங்கேற்பதற்காகச் சென்றிருந்த அவர் தமிழகத் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய செவ்வியின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழக முதல்வர், இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு கடிதம் மூலம் தமிழக மீனவர்கள் இலங்கையின் கடற்படையால் கைது செய்யப்படுகின்றார்கள் என்று கடிதம் மூலம் அறிவித்துள்ளார். ஆனால் அவர்கள் ஏன் கைது செய்யப்படுகின்றார்கள் என்பதை கூறுவதற்கு அவர் மறுதலித்துவிட்டார். எந்தவொரு பிரஜையும் வெளிநாட்டுக்குச் செல்கின்றபோது காரணம் இல்லாது கைது செய்யப்படுவதில்லை. உண்மையில் இந்திய மீனவர்கள் இலங்கையின் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபடுவதாலும், சுருக்குவலை, இழுவைமடிப்படகு ஆகிய சட்டவிரோத முறைமைகளை பின்பற்றுவதாலும் தான் கைது செய்யப்படுகின்றார்கள். இவ்வாறு அத்துமீறி சட்டவிரோத மீன்பிடி முறைமைகள் மூலமாக நாளைய தலைமுறைக்குச் சொந்தமான வளங்கள் நிறைந்த கடற்பரப்பினையே நாசமாக்கிக் கொண்டுவருகின்றார்கள். இந்தச் செயற்பாட்டுக்கு பெருமளவான தமிழக மீனவர்களே எதிர்ப்பு வெளியிடுகின்றார்கள். ஆனால் குறிப்பிட்ட சிலர் தான் அவ்விதமாகச் செயற்படுகின்றார்கள். அவ்வாறு குறிப்பிட்ட சிலர் வளங்கள் நிறைந்த கடற்பரப்பினை நாசமாக்குவதால் பாதிக்கப்படுவது யாரென்று பார்த்தீர்கள் என்றால் வடக்கில் உள்ள தமிழர்கள் தான். அவர்கள் மூன்று தசாப்தமாக போருக்கு முகங்கொடுத்து உயிர்கள், உடைமைகள் என்று அனைத்தையும் இழந்து நின்றவர்கள் தற்போது தான் தங்களுடைய வாழ்க்கையை பொருளாதார ரீதியாக மீளக் கட்டியெழுப்புவதற்கு முயற்சித்துக்கொண்டிருக்கின்றார்கள். வடக்கு தமிழ் மீனவர்கள் என்னிடத்தில் நேரடியாகவே பல சந்தர்ப்பங்களில், இழுவை மடிப்படகுகள் உட்பட சட்டவிரோதமான மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தி அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுபவர்களை தடுத்து நிறுத்துங்கள் இல்லையென்றால் நாங்கள் கடலில் வீழ்ந்து தான் மரணிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள். ஆகவே இந்தவிடயம் சம்பந்தமாக நாம் இந்திய உயர்ஸ்தானிகரிடத்தில் எடுத்துரைத்துள்ளோம். தமிழக முதல்வரிடத்திலும் ஒருவிடயத்தினை நாம் கோரிக்கையாக முன்வைக்கின்றோம். அதாவது சட்டவிரேதமான மீன்பிடி முறைமைகளை தடைசெய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். மேலும் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபவர்கள் தான் கைது செய்யப்படுகின்றாhகள் என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன். தமிழக மீனவர்கள் இந்தியாவின் ஏனைய மாநிலங்களான ஆந்திராவுக்குள்ளோ, குஜராத்துக்குள்ளோ, கேரளாவுக்குள்ளோ செல்லமுடியுமா? இந்திய மீனவர்கள் பாகிஸ்தான் கடற்பரப்பிற்குள்ளோ, சீனக் கடற்பரப்பிற்குள்ளோ செல்ல முடியுமா? இல்லை. ஆனால் இலங்கைக் கடற்பரப்பினையே தான்தோன்றித்தனமாக பயன்படுத்தும் செயற்பாடு எதேச்சதிகாரமாக முன்னெடுக்கப்படுகின்றது. அந்தச் செயற்பாட்டையே நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். சட்டவிரோத மீன்பிடி முறைமைகளான சுருக்குவலை மற்றும் இழுவைமடிப்படகு ஆகியவற்றை தடைசெய்யும் தீர்மானத்தினை இந்திய மத்திய அரசாங்கம் எடுத்துள்ள நிலையில் தமிழக அரசாங்கமும் அத்தீர்மானத்தினை எடுப்பதோடு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம். அதில் காணப்படுகின்ற தாமதங்களால் தான் கைதுகள் தொடருகின்றன என்றார். https://www.virakesari.lk/article/203812
  6. தமிழர்கள் மட்டுமல்ல உலகில் தற்போதய மதங்கள் உருவாவதற்கு முன்னரே இயற்கை தெய்வ வழிபாடு இருந்துள்ளது, பயத்தினடிப்படையிலேயே இந்த வழிபாடு நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால் பொங்கல் நிகழ்வு ஒன்றும் சாமி கண்ணை குத்தும் என்று பாமரர்களை ஏமாற்றும் ஒரு மத நிகழ்வல்ல மாறாக கோசான் கூறுவது போல உலக மக்கள் கொண்டாடும் அறுவடை தின கொண்டாட்டம். அறுவடைக்கு உதவிய இயற்கைக்கு நன்றி சொல்லும் நிகழ்வாக அது பின்னாளில் மாறியிருக்கலாம், அதனை மத உரிமை கொண்டாடும் பரிதாப நிலையில் தற்போது பொங்கல் உள்ளது. பொங்கலுக்கு மத சாயம் பூச விளைவது இல்லாத ஒன்றை உருவகிக்கும் ஒரு முயற்சி.
  7. எங்களில் மறவன்புலவு சச்சிதானந்தன் இருப்பது போல் எல்லா இனங்களிலு எல்லா மதங்களிலும் இப்படியான லூசுக் கூட்டங்கள் இருக்கின்றன. இதே போன்று அல்லா தான் ராமன் (இராமர்) என்று சொல்லும் இஸ்லாமிய மதவெறியர்களும் இந்தியாவிலும் இலங்கையிலும் உள்ளனர். தம் குறுகிய நலங்களை அடைவதற்காக ஒற்றுமையாக இருக்கும் சமூகங்களிற்கிடையில் பிரிவினைகளை தோற்றுவிக்க முயல்கின்ற அயோக்கியர்கள் இல்லாத இனமோ மதமோ கிடையாது. மாட்டிறைச்சி உண்டதுக்காக முஸ்லிம்களை வெட்டி கொன்ற இந்து சமய வெறியர்களும் இருப்பதும் இந்தியாவில் தான். ஆனால் இப்படியானவர்களை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு இனத்தையோ தேசத்தையோ எடை போட முடியாது. அவ்வாறு எடை போடுவதும் இவர்களை வைத்துக் கொண்டு இனவாத / மதவாத ரீதியில் நாம் சிந்திப்பதும் இப்படியானவர்களின் செயல்பாட்டை ஊக்குவிப்பதாகவே அமையும்.
  8. 15/01/2025: "83வது பிறந்தநாள் வாழ்த்துக்கள், அன்பு அண்ணா" / "Happy 83rd Birthday, dear elder brother" 83வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பு அண்ணா! கலாநிதி கந்தையா சுந்தரலிங்கமே! ஒளிரும் விண்மீனே! எங்கள் நேசத்துக்குரிய அத்தியடியின் வாரிசே புகழ் சூழ பெருமையுடன் வாழ்ந்தவரே! யாழ் மத்திய கல்லூரியில் வேர்கள் நாட்டப்பட்டு கொழும்பு பல்கலைக்கழகத்தில் வளர்ந்து மலர்ந்து டர்ஹாம் பல்கலைக்கழகத்தில் ஞானப் பழமாகி அறிஞன் வாழ்க்கை ஒளிர்ந்து வீசியதே! இயற்பியல் விரிவுரையாளராக கனிந்த பழமாகி சரியான இடத்திற்கு மாணவர்களை வழிநடத்தி மெல்போர்னில் பெருமையுடன் ஓய்வு பெற்றவரே ஞானம் நிறைந்த வாழ்க்கை ஆசீர்வதிக்கப்பட்டதே! உங்கள் இரக்கமும் நகைச்சுவையும் ஆறுதல் தர எங்கள் இதயங்களில் பிரகாசமாக இருப்பவரே எண்பத்து மூன்று ஆண்டு அன்பும் மகிழ்ச்சியும் நேர்மையான ஆன்மாவின் நலமான வாழ்வே! உவகை மலர மகிழ்வு பெறுக கொண்டாடுகிறோம் ஒரு சகோதரர், ஒரு வழிகாட்டி, ஒரு கலங்கரை விளக்கை! ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் என்றென்றும் இருக்கட்டும் அன்புள்ள அண்ணா அகவை திருநாள் வாழ்த்துக்கள்! அன்புடன் தம்பி 'கந்தையா தில்லைவிநாயகலிங்கம்' Happy 83rd Birthday, dear brother of mine, Dr. Kandiah Sundarlingam, a star that shines. Born in Athiady, our cherished hometown, Your journey through life brings you renown. From Jaffna Central, your roots were laid, At Colombo’s halls, your brilliance displayed. Durham’s towers saw your wisdom grow, A scholar’s path, a radiant glow. A Physics lecturer of honor and grace, Guiding students to a brighter place. In Melbourne now, your well-earned rest, A life of wisdom, truly blessed. Your kindness and humor, a comforting light, In our family’s hearts, forever bright. Eighty-three years of love and cheer, A life well-lived, a soul sincere. So today we celebrate, with joy and delight, A brother, a mentor, a guiding light. May health and happiness forever stay, Happy Birthday, dear Anna, on this special day! With love and admiration, Thampi 'Kandiah Thillaivinayagalingam'
  9. சர்வதேச பட்டத் திருவிழா யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் வினோத விசித்திர சர்வதேச பட்டத் திருவிழா நேற்று (14) மிகச் சிறப்பான விழாவாக இடம்பெற்றது. கொட்டும் மழைக்கும் மத்தியிலும் பட்டத் திருவிழா இடம்பெற்றது. இதனைக் கண்டுகழிக்க பல்லாயிரக் கணக்கான பார்வையாளர்கள் திரண்டிருந்தனர். குறிப்பாக வெளிநாட்டவர்களும் பட்டத் திருவிழாவை பார்வையிட வந்திருந்தனர். இதன் போது இலங்கை அரசின் Clean Srilanka என்ற பெயரைப் பொறித்து இலங்கை ஜனாதிபதி மற்றும் இளைய தளபதி விஜய் அவர்களது உருவப் படம் பொறித்த ஒரு நூலில் இரட்டைப் பட்டங்கள் மூன்றாமிடத்தைப் பிடித்துக் கொண்டது. வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் இடம்பெற்ற பட்டத்திருவிழாவில் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டிருந்தார். -யாழ். நிருபர் பிரதீபன்- https://tamil.adaderana.lk/news.php?nid=198790
  10. Published By: DIGITAL DESK 3 15 JAN, 2025 | 10:39 AM தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு, "வல்வை பட்டத் திருவிழா - 2025" வல்வை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் நேற்று செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்றது. வல்வை விக்னேஸ்வரா சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் விமலதாஸ் கவிச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனும், சிறப்பு விருந்தினராக வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் சிவபாதசுந்தரம் சத்தியசீலனும் கௌரவ விருந்தினராக வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற செயலாளர் சத்தியநாதன் கிசோக்குமாரும் கலந்து கொண்டிருந்தனர். குறித்த பட்ட போட்டியில் சுமார் 130 பட்டங்களை அதனை வடிவமைத்தவர்கள் விண்ணில் பறக்க விட்டிருந்தனர். அவற்றில் "உயிர்த்தெழும் ராகன்" பட்டம் முதலாமிடத்தையும், "மின் பிறப்பாக்கி பட்டம்" இரண்டாம் இடத்தினையும் , "ஹெலிகாப்டர் மூலம் தூக்கி செல்லும் திரையரங்கு" பட்டம் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது. அத்துடன் இந்த நிகழ்வில் கல்விச் சாதனையாளர்களையும் ஆளுநர் கௌரவித்தார். இங்கு பிரதம விருந்தினர் உரையாற்றிய ஆளுநர், யாழ். மாவட்டச் செயலராக 2018ஆம் ஆண்டு இருந்தபோது இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டதை நினைவுகூர்ந்ததுடன் இந்த நிகழ்வு தொடர்ச்சியாக சிறப்பாக இடம்பெறுவதாகவும் குறிப்பிட்டார். எமது மண்ணின் பெருமைகளை பறைசாற்றும் வகையில் இந்தப் போட்டிகள் அமைந்துள்ளதாகத் தெரிவித்த ஆளுநர், இது பாராட்டப்படவேண்டிய விடயம் எனவும் குறிப்பிட்டார். ஒவ்வொருவரதும் தனித்துவமான திறமைகளை வெளிக்கொணர்வதற்கான சந்தர்ப்பமாக இந்தப் பட்டப்போட்டி அமைந்துள்ளதுடன், ஒவ்வொரு ஆண்டும் புதிது புதிதாக சிந்தித்து பட்டங்களை உருவாக்குவது சிறப்பானது என்றும் ஆளுநர் சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/203835
  11. ஆனால் பாருங்கோ அவையள் இளைய தளபதியை பெரிய தியட்டரிலயும் ,தோழரை சின்ன தியட்டரிலயும் ஓட விட்டிருக்கினம் .(என்க்கு மீசையில் மண் படவில்லை ) ..ஒரு காலத்தில் தோழரின்ட அப்பா ,தாத்தாமார் கடற்படையில் கடமை செய்யும் பொழுது உழைப்பு காட்டிய கிராம‌ம் அல்லவோ ...
  12. மாற்குவியம் – சி.ஜெயசங்கர். adminJanuary 8, 2025 நவீன காலத்து ஈழத்து ஓவிய உலகின் ஆச்சரியந்தரும் ஓவியப் படைப்பாளி அ.மாற்கு அவர்கள். ஓவிய உலகின் உருவாக்கமான ஓவியர் அ.மாற்கு அவர்கள் நவீன ஓவிய உலகின் தராதரங்களாலும்;; வரன்முறைகளாலும் கட்டுப்படுத்தமுடியாத ஓவிய ஆளுமையாகத் திகழ்ந்திருப்பதை அவரது வாழ்க்கைக் காலப் படைப்புகள், செயற்பாடுகள் வெளிப்படுத்தி நிற்கின்றன. அ.மாற்கு அவர்கள் தான் வாழ்ந்த சூழலையும், சூழ்நிலைமைகளையும் தனது கைக்கெட்டும் சாதனங்களை வைத்து சாதித்திருப்பதை அவரது படைப்புகள் வெளிப்படுத்தி நிற்கின்றன. அவர் தனது படைப்பாக்கங்களுக்கான சாதனங்களுக்காகக் காத்திருந்ததில்லை, அங்கலாய்ந்திருந்ததில்லை. இந்தத் திறந்த, பரந்த, துணிந்த தன்மை கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான வடபுல ஈழத்தமிழர்களது வாழ்வின் சவால்களைப் பார்வைக்கும், பகிர்விற்கும் அதன்வழியான பொது உரையாடலுக்குமான கலை ஊடகங்களாகவும், அடையாளங்களாகவும் பதிவாக்கியிருக்கின்றன. காலங்கடந்த வாழ்விற்குரியதான உணர்வுபூர்வமானதும், அறிவுபூர்வமானதுமான விடயப்பரப்பாக ஆக்கப்பட்டிருக்கின்றன. அசாதராரணமான ஓவியங்களை எவரும் எதிர்பாராத வகையிலான வெகு சாதரணமான சாதனங்களில் படைத்துக் கொண்டே இருந்தமை ஓவியர் மார்க்குவின் வாழ்க்கையாக இருந்தது. காலம் அவரது கைக்கு கிடைக்கச் செய்த எதனிலும் படைப்பை நிகழ்த்திச் சென்றிருக்கிறார். உயிரை வாங்க விழுந்து வெடித்த செல் சிதைவுகளில் இருந்து சிற்பங்களை உருவாக்குவதும் அவரது இயல்பாக இருந்தது. தராதரமான நீண்ட ஆயட்காலம் கொண்ட ஊடகங்களுக்காக அவர் அங்கலாய்த்துக் கிடக்கவில்லை. அனர்த்த காலத்தை எதிர்த்து கணந்தோறும் எதிர்வினையாற்றிய ஓவியக் கலைஞர் அவர். ஓவியர் அ.மாற்கு அவர்களின் இந்தத் திறந்த பரந்த துணிந்த தன்மை பெரிதும் கவனத்திற்படாததும், நுண்ணிதானதுமான விடயங்களைப் பரந்து விரிந்த தளங்களில் உரத்துப் பேச வைத்திருக்கின்றன. அன்றாட வாழ்வின் இடையறாத தொழிற்பாடாகவும்; புதிய புதிய ஆக்கமுறைகள் உத்திமுறைகளின் எதிர்பாராத சாதனப் பயன்பாடு என்பவற்றின் ஆற்றல் வெளிப்பாட்டுக் களங்களாக ஓவியர் அ.மாற்கு அவர்களது ஓவிய இயக்கம் அமைந்திருப்பதைக் காணமுடியும். ஓவியர் அ.மாற்கு அவர்களது ஓவியப் பயணம் தனிமனிதன் சார்ந்ததாக இருந்ததில்லை. அது ஓவியர் குழாமின் இணைந்த இயக்கமாக அவரது மாணவர்களுடன் இணைந்து ஏனைய ஓவியக் கலைஞர்களை இணைத்து மற்றும் பல்துறை அறிஞர், கலைஞர், இளைஞருடன் சேர்ந்து இயங்கியதாக இருக்கிறது. ஓவியர் அ.மாற்கு அவர்கள் வாழ்ந்த இடங்களில் எல்லாம், விபத்தின் பின் சக்கர நாற்காலியில் நகர்ந்த நிலையிலும் அவரது ஓவிய உருவாக்கமும், மாணவர் உருவாக்;கமும் ஓயாது நிகழ்ந்து வந்திருப்பதைக் காணமுடியும். ஓவியர் அ.மாற்கு அவர்களின் வரன்முறை கடந்த ஓவிய ஆக்கமுறைகளும், அணுகுமுறைகளும் நிகழ்காலத்தின் யதார்த்தத்தை உணர்ந்து இயங்கிய, வாழ்ந்த மனிதரின் பெரும் சிறப்பியல்பாகும். இத்தகைய சிறப்பியல்பு கொண்ட மனிதரின் இயக்கமானது போர், இடப்பெயர்வு, முற்றுகை வாழ்வு, பொருளாதாரத்தடை என்பவற்றைப் பொருட்படுத்தாத ஒன்றாக அமைந்தது. அத்தகைய நிலைமையின் நெருக்குவாரத்துள் வாழ்ந்துகொண்டு ஈழத்தமிழ் கூறும் நல்லுலகெல்லாம் அவர்களது மாணவர் பரம்பரையின் ஓவியச் செயற்பாடுகள் மூலம் ஈழத்திலும், புலம்பெயர் நாடுகளிலும், ஈழத்திலும் புலம்பெயர் நாடுகளது சமூக அரசியல் பண்பாட்டு இயக்கங்களின் ஓவிய அதிர்வுகள் வலுவாக ஏற்பட்டுக் கொண்டிருப்பதற்கான மூலச்சக்தி ஓவியர் அ.மாற்கு அவர்கள் திகழ்ந்தார். யாழ்ப்பாணத்திலுள்ள குருநகரில் அமைந்துள்ள வீட்டின் சிறியதொரு வீட்டு முன்றலில் இருந்தும் பின்நாட்களில் வன்னியிலும், நிறைவாக மன்னாரிலும் பலரையும் இணைத்த தனிமனித ஓவியப் பயணத்தின் உலகந்தழுவிப் பரந்து விரிந்து செல்லும் எதனையும் எதிர்கொள்ளும் எதிலும் தங்கியிராத இயக்கந்தான் ஓவியர் அ.மாற்கு அவர்களுடையது. மாற்குவின் ஓவியப் பயணம் அவராலும் அவருடன் இணைந்த மாணவர்களாலும் ஆர்வலர்களாலும் திட்டமிடப்பட்டு தீர்மானிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டவை. முற்றுமுழுதாக கலைஞர் மைய பயணமாக அமைந்ததன் காரணமாக அதன் கலை வெளிப்பாடுகளான ஓவியங்களும் அந்தக் கலைஞர்கள் நோக்கிலானதாக அமைந்திருப்பது முக்கிய படிப்பினைக்குரியது. இதையொத்த சமாந்தரக் கலைப்பயணத்தை குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்களது மூப்பிலான ஈழத்து நாடக அரங்க இயக்கத்திலும் காணமுடியும். எங்கள் வளத்தில் எங்கள் பலத்தில் எங்கள் தளத்தில் எங்கள் நோக்கில் நாங்கள் நின்றோம், முன்சென்றோம் என்ற வகையிலான படிப்பினைக்குரிய பயணம் இது. அ.மாற்கு அவர்களது வியக்க வைக்கும் பயணம் குவியப்படுத்தப்பட வேண்டியது. அவரது படைப்பின் பொருள் மட்டுமல்ல படைப்பின் ஊடகங்களும்;; படைப்பாக்க முறைமைகளும் வியம்பப்படுத்தப்பட வேண்டியது. அ.மாற்கு அவர்களே வியம்பத்தக்க செய்தியாகி நிலைநிற்கின்றார். மாற்குவியம் என்பது இதுதான். சி.ஜெயசங்கர் https://globaltamilnews.net/2025/210054/
  13. பட்டங்கள் செய்வதிலும் அவற்றைப் பறக்க விடுவதிலும் வல்வெட்டித்துறை தேசத்தின் ஒரு பொக்கிஷம் என்றுதான் சொல்லவேண்டும் . ....... அனைவருக்கும் பாராட்டுக்கள் . .......! 👍
  14. இது திடீர் குற்றச்சாட்டு அல்ல திட்டமிட்ட குற்றசாட்டாகத்தான் பார்க்கிறேன். எஜமான் சொன்னால் பொட்டு அம்மானை கேவலமாக பேசியது போல் இயக்கத்தையும் பேசுவார். வாயை வாடகை விடுபவருக்கு அதிலிருந்து வரும் சொற்களுக்கு பொறுப்பில்லை, வாடகைக்கு எடுத்தவருக்கே பொறுப்பு. என்ன வேணாலும் பேசிக்கட்டும் ஆனா பேசிட்டு இயக்கத்திற்கு பின்னால் ஒளிந்து கொள்வது வெட்கக்கேடு.
  15. யாக்கோபு சைமன் செபஸ்டியன் என்பவர் சீமான் ஆகலாம் என்றால், தெட்சணாமூர்த்தி என்பவர் கருணாநிதி ஆகலாம் என்றால் சிவாஜி ராவ் கெய்க்வாட் என்பவர் ரஜினிகாந்த் என்றாவது ஒன்றும் தப்பில்லையே!😂
  16. மார்க் மாஸ்ரர் எங்காவது செல்ல நேரிட்டால் தனது அறைத் திறப்பை சிவபாதம் கடையில் கொடுத்து விட்டுச் செல்வார். மாலையில் நான் ஓவியம் பயிலச் செல்லும் முன் சிவபாதம் கடைக்கு ஒரு தடவை சென்று விட்டுத்தான் மார்க் மாஸ்ரரின் அறைக்குப் போவேன். திறப்பு சிவபாதம் கடையில் இருந்தால் மார்க் மாஸ்ரர் எத்தனை மணிக்கு தனது அறைக்கு வருவார் என்ற தகவலும் அங்கிருக்கும். மார்க் மாஸ்ரரிடம், ஓவியம் சம்பந்தமாக எத்தனை கேள்விகளைக் கேட்டாலும் ஆசையாகச் சொல்லித் தருவார். எத்தனையோ நுட்பங்களைக் காட்டியும் தருவார். எல்லாவற்றுக்கும் மேலாக நான் college of fine arts இல் பயில வேண்டும் என்பதில் அவர் முனைப்பாக இருந்தார். இந்த வேளையில்தான் எனது பாடசாலையில் பயிலும் சகமாணவனான சேகரும் ஓவியம் பயில விருப்பம் தெரிவித்ததால் மார்க் மாஸ்ரரிடம் அறிமுகம் செய்து வைத்தேன். எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் அவனையும் என்னுடன் சேர்ந்து வந்து தன்னிடம் ஓவியம் பயில ஒப்புதல் தந்தார். சிலவேளைகளில் எனக்கு நேரம் போதாதிருந்தால் சேகரே சிவபாதம் கடைக்குப் போய் மார்க் மாஸ்ரரின் அறைத் திறப்பை வாங்கி வருவான். ஒருநாள் என்று மில்லாதவாறு மார்க் மாஸ்ரரின் முகத்தில் சந்தோசத்தைக் காணமுடியவில்லை. சந்தேகமோ, சலிப்போ அவரது முகத்தில் நிறைந்திருந்தது. நானும் சேகரும் வரைதலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தோம். மார்க் மாஸ்ரர் சிவபாதத்துடன் கதைத்துக் கொண்டிருந்தார். திடீரென மார்க் மாஸ்ரர் என்னைக் கூப்பிட்டார். "இதிலையிருந்த ரண்டு புத்தகங்களைக் காணயில்லை. எடுத்தனீரோ?" எடுத்தனீரோ என்ற வார்த்தைகள் எனக்கு அறவே பிடிக்கவில்லை. "நானெடுக்கேல்லை.. நானெடுக்கிறதெண்டால் உங்களிட்டை சொல்லிப் போட்டுத்தானே கொண்டு போவன்..." "அப்ப.. இதிலையிருந்த ரண்டு புத்தகங்களும் எங்கை? " "எனக்குத் தெரியாது.." "உமக்குத் தெரியோணும்.. நீர்தான் இதுக்குப் பொறுப்பு... நானில்லையெண்டால் சிவபாதத்திட்டை போய் திறப்பு வாங்கி வந்து ரூமை கவனிக்கிறது நீர்தானே..? நீர்தான் இதுக்குப் பதில் சொல்லோணும்." நான் சேகரைப் பார்த்தேன். எந்தவித குழப்பமுமில்லாமல் படத்தைக் கீறிக் கொண்டிருந்தான். "அந்தப் புத்தகங்கள் சுலபமாகக் கிடைக்காது.. நான் கனபேரிட்டை சொல்லித்தான் அதை வாங்கி வைச்சிருந்தனான்.. எப்பிடியோ அந்தப் புத்தகங்கள் இஞ்சை திரும்பி வரவேணும்.." மார்க் மாஸ்ரர் சொல்லிக் கொண்டேயிருந்தார். எனக்குள் நான் சிறுமையாகப் போனது போன்ற உணர்வு. எனது தன்மானத்தை தட்டிவிட்டது போன்ற பிரமை. அன்று பயின்று முடிந்து புறப்படும் போது ஏதோ ஒப்புக்குத்தான் சொன்னேன். "போட்டு வாறன்." "அடுத்த முறை வரக்கை புத்தகங்களையும் கொண்டு வாரும் " மார்க் மாஸ்ரர் சொல்வது காதில் கேட்டது. அதன் பின்னர் நான் அந்தப் பக்கம் செல்லவேயில்லை. ஒன்று, அந்தப் புத்தகங்களை யார் எடுத்தது அது இப்போ எங்கே இருக்கிறது என்பது பற்றி எதுவுமே எனக்குத் தெரியாது. மற்றது, என்னை சந்தேகித்தது என்னிடம் அதைப்பற்றி அவர் கேட்டமுறை எனக்குப் பிடிக்கவில்லை. நீண்ட நாட்களின் பின்னர் நகரத்தில் நண்பர்களுடன் கதைத்துக் கொண்டிருந்தேன். எனக்கு பின்புறமாக இருந்து ஒரு கை எனது தோளில் விழுந்தது. முன்னால் நின்ற நண்பர்களின் கண்களில் மரியாதை தெரிந்தது. அவசரமாகத் திரும்பிப் பார்த்தேன். மார்க் மாஸ்ரர். வார்த்தைகள் வர மறுத்தன. அவரே எனக்காவும் பேசினார் போல் இருந்தது. "எப்பிடி இருக்கிறீர்..? அந்தப் பக்கம் பிறகு ஆளையே காணேல்லை..." நண்பர்கள் விடைபெற்றுக் கொண்டார்கள். "வாரும் பஸ் ஸ்ரான்ட்டுக்குத்தான் போறன். அதுமட்டும் கதைச்சுக் கொண்டு போவம். அலுவல் ஒண்டு இருந்ததாலைதான் பள்ளிக் கூடத்துக்கு வந்தனான்.. இப்ப நான் இங்கை படிப்பிக்கிறேல்லை.. மாறி அங்கை போட்டன்.." "தெரியும்..." "தெரிஞ்சு கொண்டும் என்னை வழியனுப்ப நீர் வரேல்லை? ம்.. கோவம் எல்லாருக்கும் வாறதுதான்.. ஆனால் இந்த வயசிலை உமக்கு இவ்வளவு கோவம் கூடாது... நான் அப்பிடித்தான் கேக்கவேணும்.. சேகரை எனக்குத் தெரியாது.. நீர்தான் கூட்டிக்கொண்டு வந்து விட்டனீர்.. நீர்தானே அதுக்குப் பொறுப்பு.. அதுசரி அந்தப் புத்தகங்கள் எங்கேயிருக்குது எண்டாவது தெரியுமே?" குனிந்து பார்த்தபடியே தலையசைத்து "தெரியாது" என்று பதில் சொன்னேன். "மோகன் ஆர்ட்ஸ் கடையிலை இருக்குது. சேகர்தான் கொண்டே குடுத்திருக்கிறான். சேகரும் அவனும் நல்ல சிநேகிதம்.. அங்கை புத்தகங்கள் இருந்ததை சிவபாதம் பாத்திட்டு வந்து என்னட்டை சொன்னாப் போலைதான் எனக்கு புத்தகங்கள் காணாமல் போன விசயமே தெரியும். வீணா ஏன் படிக்கிறவனை குழப்புவான் எண்டிட்டுதான் உம்மட்டை உரிமையோடை கேட்டன். அவனும் திருப்பிக் கொண்டுவந்து புத்தகங்களை வைப்பான் எண்டு பாத்தன். நீர் கோவிச்சுக் கொண்டு போனதுதான் மிச்சம்." என்னால் எதுவுமே பேச முடியவில்லை. "புதுவீடு கட்டியிருக்கிறன். குடிபோகக்கை ஓரு அறைக்கு உம்முடைய பெயின்றிங் இருக்கோணும் என்று ஆசைப்பட்டன்.. நீர் வரவேயில்லை........... கதையோடை கதையா எனக்கு ஒரு மகன் பிறந்திருக்கிறான்.." "வாழ்த்துக்கள் மாஸ்ரர் " "அவனுக்கு என்ன பெயர் தெரியுமோ?" கேட்டுவிட்டு வாஞ்சையுடன் என்னைப் பார்த்தார். நானும் நிமிர்ந்து அவரைப் பார்த்தேன். "அவனுக்கு உம்முடைய பெயரைத்தான் வைச்சிருக்கிறன். " சொல்லிவிட்டு புறப்படத் தயாராக இருந்த பஸ்ஸில் ஏறி அமர்ந்து கொண்டு யன்னலூடாகக் கையசைத்தார். மார்க் மாஸ்ரரை நான் கடைசியாகப் பார்த்தது அப்பொழுதுதான். நான் புலம் பெயர்ந்து வந்த போது மார்க் மாஸ்ரரும் இடம் பெயர்ந்து மன்னாருக்குப் போய்விட்டதாகத் தகவல் கிடைத்தது. 2002 இல் நான் தாயகம் போன போது “மன்னாருக்குச் செல்ல ஏற்பாடு செய்ய முடியுமா?” என அரசியல்துறையிடம் காரணத்தையும் சொல்லிக் கேட்டேன். “செய்யலாம்” என்றார்கள். அடுத்தநாள் நேரில் வந்து செய்தி சொன்னார்கள், “மார்க் மாஸ்ரர் இப்பொழுது உயிருடன் இல்லை. அவர் 2000ம் ஆண்டில் காலமாகிவிட்டார்” என்று. 1973ம் ஆண்டு பிறந்த மார்க் மாஸ்ரரின் செல்வகுமாரனுக்கு இப்பொழுது 51 வயதாக இருக்கும். இன்னும் நான் அவரைப் பார்க்கவில்லை. “நான் எனது மாணவர்களால் நினைவு கூரப்படுவேன்” மார்க் மாஸ்ரர் சொன்னது நினைவில் இருக்கிறது.
  17. அதான் திருவள்ளுவர கொண்டத்து கொழுவி ஷேப் பண்ணி இருக்கிறன் 🤣
  18. சட்டம் தன் கடமையை செய்யும் (பக்க சார்பாக)
  19. பொறுங்க இப்பதானே வாகன இறக்குமதி என்ற புலி வாலை பிடித்து இருக்கினம் ஒரு கட்டத்தில் சீட்டு கட்டு சரிவதை போல் சரியும் மீண்டும் அரிசிக்கு வரிசை தென்னிலன்கையில் தொடங்கி விட்டது .
  20. அடி மடியிலையே கை வைக்கிறீங்களே.....அதன் சொகம் உங்களுக்கு தெரியுமா 😂 தென்றல் வந்து தீண்டும் போது.. என்ன வண்ணமோ மனசுல.. திங்கள் வந்து காயும் போது.. என்ன வண்ணமோ நினைப்புல.. வந்து வந்து போகுதம்மா.. எண்ணமெல்லாம் வண்ணமம்மா.. எண்ணங்களுக்கேத்தபடி.. வண்ணமெல்லாம் மாறுமம்மா.. உண்மையம்மா உள்ளதை நானும் சொன்னேன்.. பொன்னம்மா சின்னக் கண்ணே.. தென்றல் வந்து தீண்டும் போது. என்ன வண்ணமோ மனசுல.. திங்கள் வந்து காயும் போது.. என்ன வண்ணமோ நினைப்புல...
  21. பருத்தித்துறையிலையும் இப்பிடித்தான், ஆனாலும் வல்வெட்டித்துறையை அடிக்க முடியாது. தொடுத்து விடுறதிலை வேற லெவல். வடமராட்சியிலை பொதுவாவே பட்டப் பைத்தியங்கள் தான் 😁.
  22. பாருங்கள் தமிழ் மக்களை எப்படி ஏமாற்றுகிறார்கள் என்று ! Shanakiyan Rajaputhiran Rasamanickam pSortosdnehflyfl55i1mu:6080r u0u53aa627 al 3n868uihtJ1a1961a · சென்னையில் இடம்பெறும் 2025 ஆம் ஆண்டுக்கான உலகத் தமிழ் புலம்பெயர்ந்தோர் தினத்தின் இறுதித் தினமான இன்றைய தினம் தென்னிந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்ட கண்காட்சியில் தமிழகத்தில் வாழும் புலம்பெயர் இலங்கை அகதிகளின் விற்பணையகங்களும் இடம்பெற்றிருந்தது. அவர்களின் தொழில்துறை ஊக்கமானது மிகுந்த மனமகிழ்வை உண்டாக்கியது. இவ் நிகழ்வில் பல காலமாக அகதிகளாக வாழும் எம்மவர்களை மற்றும் நீண்டகால நண்பர்களை சந்தித்ததுடன் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இவ் விழாவிற்கு வருகை தந்திருந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததுடன் தொலைபேசியில் செல்பி எடுத்துக் கொண்டார். இவ் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அ. அடைக்கலநாதன் அவர்களும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் M.A. சுமந்திரன் அவர்களும் என்னுடன் கலந்து கொண்டிருந்தார்கள். #Shanakiyan #MP #ITAK #TNA #Tamil #Parliament #lka #Batticaloa https://www.facebook.com/shanakiyan.rasamanickam?locale=en_GB See translation சாணக்கியன் - சுமந்திரனை சந்தித்த ஸ்டாலின் தொடர்பில் வெளியான உண்மைகள். இந்தியா - தமிழகத்தில் கடந்த 11ஆம் திகதி, 2025ஆம் ஆண்டுக்கான அயலகத்தமிழர் தின நிகழ்வு தமிழ்நாட்டு அரசின் ஏற்பாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இடம்பெற்றது. குறித்த நிகழ்விற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் கடல் வள துறை அமைச்சர் சந்திரசேகர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர். அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன் மற்றும் எம். ஏ சுமந்திரன் ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். மேலும், நிகழ்வின் முடிவின் பின்னர் சாணக்கியன் மற்றும் சுமந்திரன் இருவரும் ஸ்டாலினுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தொடர்பில் பல்வேறு முரண்பட்ட கருத்துக்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில், இது தொடர்பில் விளக்கமளிக்கின்றார், அந்நிகழ்வில் பங்கேற்ற அரசியல் பத்தி எழுத்தாளர் ஐ.வி மகாசேனன்..... https://tamilwin.com/article/ayalaga-tamilar-shanakiyan-sumanthiran-udaruppu-1736950358 All react
  23. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஒவ்வொரு அகராவும், அதன் உச்சத் தலைவரான ஒரு மகாமண்டலேஷ்வரால் நிர்வகிக்கப்படுகிறது கட்டுரை தகவல் எழுதியவர், ஜெய்தீப் வசந்த் பதவி, பிபிசி குஜராத்தி பிரமாண்டமான ரதங்கள், யானைகள், ஒட்டகங்கள், குதிரைகள், எஸ்யூவி வாகனங்கள், வாள்கள், திரிசூலங்கள் மற்றும் சில நேரங்களில் கைகளில் துப்பாக்கிகள் மற்றும் பிரத்யேக உடற்பயிற்சிகளின் அரங்கேற்றம்… இவை கும்பமேளாவின்போது தென்பட்ட காட்சிகள். பொதுவாக, வட இந்தியாவில் 'அகரா' (Akhara) என்ற வார்த்தையைக் கேட்கும்போது, மல்யுத்தம் அல்லது மல்யுத்த மைதானம் மற்றும் அதற்கான பயிற்சிகள் குறித்தே நினைவுக்கு வரும். ஆனால் கும்பமேளாவின்போது, அகரா என்பது சாது-துறவிகளின் பாரம்பரியத்துடன் தொடர்புடையது. உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் திரிவேணி நதி சங்கமிக்கும் இடத்திலும், உத்தராகண்டில் உள்ள ஹரித்வாரிலும், மகாராஷ்டிராவில் நாசிக்கில் கோதாவரி ஆற்றின் கரையிலும், மத்திய பிரதேசத்தில் உஜ்ஜயினில் ஷிப்ரா நதிக்கரையிலும் கும்பமேளா நடைபெறுகிறது. இந்த நிகழ்வின்போது, புதிய துறவிகளை அகராவில் சேர்த்துக்கொள்ளும் வைபவமும் நடத்தப்படுகிறது. உலகின் சாமானிய வாழ்க்கையைத் துறப்பவர்கள் 15 வெவ்வேறு அகராக்களில் ஏதேனும் ஒன்றில் இணைகிறார்கள். இருப்பினும், இதற்கு முன் அவர்கள் கடினமான சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள். அவர்கள் இந்த 'அகரா' உலகில் சேர்க்கப்படுவதற்கு முன்பு சில முக்கியமான சடங்குகளையும் செய்ய வேண்டும். கும்பமேளா: திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவது ஏன்? பிரயாக்ராஜ் நகரின் சிறப்பு, முக்கிய நிகழ்வுகள் பற்றிய விவரம் மனித மாமிசம், பிணம் எரிக்கும் இடத்தில் உடலுறவு - அகோரிகளின் ரகசிய வாழ்க்கை எப்படி இருக்கும் ? சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்களின் எதிர்ப்பை மீறி கனக சபை மீது ஏறி வழிபட்ட பக்தர்கள் மதுரையில் காவி கட்டி, பூணூல் அணிந்து மதமாற்ற பணி செய்த பாதிரியார் - கிறிஸ்தவ மிஷனரிகள் என்ன செய்தன? ஒரு நாகா துறவிக்கு அகராக்கள் எவ்வாறு தீட்சை அளிக்கின்றன? அகராக்கள் ஒரு வகையில் இந்து மதத்தின் மடங்கள். ஆதி சங்கராச்சாரியார், பௌத்தம் பரவுவதைத் தடுக்க அகராக்களை நிறுவியதாக நம்பப்படுகிறது. பிபிசியிடம் பேசிய மகாநிர்வாணி அகராவின் செயலாளரான மஹந்த் ரவீந்திரபுரி, "வேதங்களில் நம்பிக்கை இல்லாதவர்கள் ஆயுதங்களால் இணங்க வைக்கப்பட்டனர். அகராக்கள் இந்து மதத்தை உயிர்ப்பித்தன" என்று கூறினார். முன்பு நான்கு அகராக்கள் மட்டுமே இருந்தன, ஆனால் கருத்தியல் வேறுபாடுகளால் அவை பிரிந்தன. தற்போது 15 முக்கிய அகராக்கள் உள்ளன. இதில் சமீபத்தில் சேர்க்கப்பட்ட பெண்களுக்கான பரி அகரா, கின்னர் அகரா ஆகியவையும் அடங்கும். கும்பத்தின் மையத்தில் சாதுக்கள் மற்றும் நாகா துறவிகள் உள்ளனர். இந்தக் காலகட்டத்தில் ஆன்மீக மற்றும் மத கருத்துகளின் பரஸ்பர பரிமாற்றம் மற்றும் புனித நூல்களின் ஆய்வும் நடைபெறுகிறது. ஒவ்வொரு அகராவும் அதன் சொந்த பாரம்பரியத்தின்படி சீடர்களுக்கு தீட்சை அளிக்கிறது மற்றும் ஏற்கெனவே உள்ள சாதுக்களுக்கு பட்டங்களை வழங்குகிறது. இந்தியாவில் அந்தப்புர பெண்ணுக்காக நடந்த கொலையால் 'மகுடம் இழந்த மன்னர்' யார் தெரியுமா?7 மணி நேரங்களுக்கு முன்னர் பொங்கல் பண்டிகை வரலாறு: எப்போது தொடங்கியது? பழந்தமிழர் எவ்வாறு கொண்டாடினர்?14 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிரயாக்ராஜில் நடைபெற்ற கும்பமேளாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் நீராடினர். ஆரம்பக்கால அகராக்களில், சைவ சமயத்தவர்கள் (சிவனை வணங்குபவர்கள்) மற்றும் வைணவர்கள் (விஷ்ணுவை வணங்கும் துறவிகள்) முக்கியமானவர்களாக இருந்தனர். இப்போது அவர்களில் உதாசி மற்றும் சீக்கிய அகராக்களும் அடங்கும். இங்குள்ள சாதுக்களின் மொத்த எண்ணிக்கை சுமார் ஐந்து லட்சம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஒரு துறவி எந்த பிரிவைச் சேர்ந்தவரோ அந்தப் பிரிவின் பெயரும் குடும்பப் பெயரும் அவருடன் இணைக்கப்பட்டுள்ளன. சந்நியாசி ஆன பிறகு, குடும்ப உறவுகளையும் பின்னணியையும் துறக்கிறார். தந்தையின் பெயரைப் போலவே குருவின் பெயரும் அவரது பெயருடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒரு துறவி எந்தப் பிரிவைச் சேர்ந்தவராக இருக்கிறாரோ, அந்தப் பிரிவின் பெயரும் பட்டப் பெயரும் அவரின் பெயருடன் இணைக்கப்படும். அவர்கள் சந்நியாசிகளான பிறகு குடும்ப உறவுகளையும் அதன் பின்னணியையும் துறக்கிறார்கள். தந்தையின் பெயரைப் போலவே குருவின் பெயர், அவரது பெயருடன் இணைக்கப்படும். லாஸ் ஏஞ்சலிஸ் காட்டுத்தீ வேகமாகப் பரவியது எப்படி? எளிதாக விளக்கும் ஐந்து புகைப்படங்கள்2 மணி நேரங்களுக்கு முன்னர் அழியும் ஆபத்தில் மேற்குத்தொடர்ச்சி மலைவாழ் நன்னீர் மீன்கள்: தமிழ்நாட்டு மீன்கள் எவை - விளைவுகள் என்ன?13 ஜனவரி 2025 ஒருவர் நாகா துறவி ஆவது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கும்பமேளா இந்தியாவில் நான்கு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, இது ஆயிரக்கணக்கான துறவிகளை ஈர்க்கிறது. வரலாற்று பேராசிரியர், முனைவர் அசோக் திரிபாதி, பிரயாக்ராஜை மையமாகக் கொண்டு 'நாகா சந்நியாசிகளின் வரலாறு' என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். அதன் மூன்றாவது அத்தியாயத்தில் பல்வேறு பிரிவுகளின் பெரும்பாலான விதிகளை அவர் தொகுத்துள்ளார். அதன்படி, அகராவில் சேர அல்லது நாகா துறவியாக மாற, எந்தவொரு நபரும் ஒரு நாகா துறவியின் சீடராகத் தன்னை அர்பணித்துக்கொள்ள வேண்டும். அந்த நபருக்கு எந்த உடல் குறைபாடும் இருக்கக்கூடாது. வழக்கமாக, 16 முதல் 20 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் தீட்சை பெறுவார்கள். தீட்சையின் ஆரம்பத்தில், அவர்களின் தலைமுடி மொட்டையடிக்கப்பட்டு, அவர்களுக்கு 'மகாபுருஷ்' அல்லது 'வஸ்திரதாரி' என்ற பட்டம் வழங்கப்படுகிறது. மூத்த நாகா துறவி ஒருவரின் மேற்பார்வையில் அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தக் கட்டத்தில், ஒருவருக்கு தனிப்பட்ட குரு இருப்பதில்லை. ஆனால் அகராவின் மூலவர், உண்மையான குருவாகக் கருதப்படுவார். காலப்போக்கில் அந்த நபர் ஒரு மூத்த துறவியுடன் சேர்வார். அவரே அவரது ஆன்மீக வழிகாட்டியாகவும் மாறுவார். காவி அங்கி அணிந்து துறவிகளுடன் உலாவுவார். சுத்தம் செய்தல், சமைத்தல், புல்லாங்குழல் வாசித்தல், ஆயுதங்களில் பயிற்சி பெறுதல் போன்ற தனக்கு ஒதுக்கப்பட்ட எந்த வேலையையும் அந்த புதிய நபர் செய்ய வேண்டும். இதற்குப் பிறகு, மூத்த நாகா துறவிகள் புதியவரின் செயல்திறனில் மகிழ்ச்சி அடைந்தால், அவர் நாகா திகம்பராக தீட்சை பெறுகிறார். இந்த நேரத்தில், அந்தப் புதியவர் 'டாங்தோட் சன்ஸ்கார்'-க்கு உட்படுத்தப்படுகிறார். அதன் பிறகு அவர் வீடு திரும்ப முடியாது. அகராவின் 'மஹந்த்' அவரை உறுதிமொழி எடுக்கச் செய்வார். 1,60,000 ஆண்டுகளுக்கு பிறகு வானில் தோன்றிய அரிய வால் நட்சத்திரம் - வெறுங்கண்களால் எங்கே, எப்படி பார்ப்பது?14 ஜனவரி 2025 யாரை பழிவாங்க இவர்கள் இரவு 2 மணி வரை கண் விழிக்கிறார்கள்? ஆண், பெண்ணில் என்ன மாற்றம் நிகழும்?8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கும்பமேளாவில் பங்கேற்பதற்காக பல்லாயிரக்கணக்கான துறவிகள் பிரயாக்ராஜ் நகருக்கு வந்துள்ளனர் இதுதவிர, நாகா துறவி ஆவதற்கான பிற விதிகள் உள்ளன, அவற்றை தீட்சை பெற்றவர்கள் பின்பற்ற வேண்டும். கும்பமேளாவின்போது, அவர் மூன்று நாள் விரதத்தைக் கடைபிடித்து 'பிரேஷ் மந்திரத்தை' உச்சரிக்க வேண்டும். தனக்கென சிரத்தையையும், 21 தலைமுறை பிண்ட தானங்களையும் தனது கைகளாலேயே செய்து உலக பந்தங்களை அறுத்துக்கொள்ள வேண்டும். அவர் தனது உலக வாழ்க்கையின் அடையாளமான முடியையும் அகற்றுகிறார். அதிகாலையில், கும்பமேளா நடைபெறும் ஆற்றில் நீராடி, இடுப்புத் துணி மட்டும் அணிந்து, ஒரு துறவியாக 'மறுபிறவி' எடுக்கிறார். நாகா துறவிகள் பபூதத்தையும் (புனித சாம்பல்) சாம்பலையும் தங்கள் உடலில் பூசிக்கொள்கிறார்கள். பயிற்சி காலத்தில், தீட்சை பெற விரும்பும் நபருக்கு மீண்டும் உலக வாழ்க்கைக்குத் திரும்பப் போதுமான வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஒரு சாதாரண மனிதனுக்கு, நாகா துறவியாக மாற இரண்டு முதல் 12 ஆண்டுகள் வரை ஆகலாம், இதற்கு எல்லையே இல்லை. இருப்பினும், பெண் நாகா துறவிகள் முழு நிர்வாணமாக இருக்கவும், காவி ஆடைகளை அணியவும் அனுமதிக்கப்படுவதில்லை. கடந்த முறை பிரயாக்ராஜில் நடந்த கும்பமேளாவின்போது, மகிளா அகராவுக்கு அங்கீகாரம் கிடைத்தது. 'மாய் அகரா' என்ற பெயர் 'சந்நியாசினி அகரா' என மாற்றப்பட்டது. பெண்களும் தங்கள் மத ஒழுங்குகளை நிறுவ அனுமதிக்கப்பட்டனர். கோவை: மஞ்சளாக மாறிய நிலத்தடி நீர், துரத்தியடிக்கும் துர்நாற்றம் – வெள்ளலூர் குப்பைக் கிடங்கின் பாதிப்புகள்12 ஜனவரி 2025 பங்குச்சந்தையில் சில நிமிடங்களில் பல கோடிகளை குவித்த 'கேதன் பரேக்' சிக்கியது எப்படி?13 ஜனவரி 2025 நாகா துறவிகள் எங்கு வாழ்கிறார்கள்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நாகா துறவிகள் தங்களுக்கான அகராவில் வாழ்கின்றனர். பல துறவிகள் ஆயுதப் பயிற்சியும் பெற்றுள்ளனர் ஒவ்வொரு அகராவும், அதன் உச்சத் தலைவரான மகாமண்டலேஷ்வரால் (Mahamandaleshwar) நிர்வகிக்கப்படுகிறது. மகாமண்டலேஷ்வர் முன்பு 'பரமஹம்ஸர்' என்று அழைக்கப்பட்டதாக ஜாதுநாத் சர்க்கார், தனது 'தசநாமிகளின் வரலாறு' என்ற புத்தகத்தில் (பக்கம் எண் 92) தெரிவித்துள்ளார். ஒரு அகராவில் 8 அறைகள் மற்றும் 52 மடாலயங்கள் உள்ளன. இதன் கட்டுப்பாட்டில் மண்டலாஷ்வர் உள்ளது. அகராவின் அளவைப் பொறுத்து, உறுப்பினர்களின் எண்ணிக்கை இருக்கலாம். ஒவ்வொரு மையத்திலும் ஒரு மஹந்த் தலைமையில் மத நடவடிக்கைகள் நடத்தப்படுகின்றன. ஆரம்ப நூற்றாண்டுகளில், இந்த மஹந்த்களின் பிரதேசங்கள் இந்து அரசர்களுக்கு உட்பட்டிருந்தன. எந்த அரசரும் இந்தத் துறவிகளைக் கௌரவித்து அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வார். பதிலுக்கு, நாகா துறவிகளும் ராணுவ ஆதரவை வழங்குவார்கள். "அகராவின் பாரம்பரியம் அலெக்சாண்டரின் படையெடுப்பு காலத்தில் இருந்தே தொடங்கியதாக நம்பப்படுகிறது" என்று அலகாபாத் பல்கலைக் கழகத்தின் வரலாற்று பேராசிரியர் ஹேரம்பா சதுர்வேதி கூறுகிறார். "சர் ஜாதுநாத் சர்க்கார் தனது 'தசநாமி நாக சந்நியாசிகளின் வரலாறு' என்ற புத்தகத்தில் இது தொடர்பான பல விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளார்" என்கிறார் அவர். அக்பரின் ஆட்சிக் காலத்தில், இந்து துறவிகளுக்கு ஆயுதம் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதற்குப் பிறகு, ஔரங்கசீப் காலத்தில் துறவிகளுக்கும் முகலாயர்களுக்கும் ஆயுத மோதல்கள் நடந்ததாக வரலாற்றுப் பதிவுகள் உள்ளன. இந்தியாவில் ஆங்கிலேய அரசு உருவான பிறகு ஆயுதங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இது தவிர, இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் நிர்வாணமாக சுற்றுவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கிரீன்விச்சை அடிப்படையாகக் கொண்டு உலகின் நேர மண்டலம் உருவானது எப்படி தெரியுமா?12 ஜனவரி 2025 சென்னை: செயற்கை கடல் அலைகளை உருவாக்கி சுனாமி, புயல், கள்ளக்கடல் பாதிப்புகளை தடுப்பது பற்றி ஆய்வு12 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மஹா கும்பமேளாவின்போது யானைகள், ஒட்டகங்கள் மற்றும் குதிரைகள் மீது துறவிகள் சுற்றித் திரிவார்கள் சமீபத்திய ஆண்டுகளில், கும்பமேளா, மஹா கும்பமேளா அல்லது சிவராத்திரி திருவிழா போன்ற பண்டிகைகளின் போது மட்டுமே நாகா துறவிகள் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றனர். அவை தவிர்த்து, அவர்களின் நடவடிக்கைகள் பெரும்பாலும் அவர்களின் அகராக்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டுமே காணப்படுகின்றன. துறவிகள் அகராவுக்குள் எளிதில் நுழைய முடியாது. அதற்காக, அவர்கள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஒருவர் அரங்கில் நுழைந்தவுடன், அவர் சாதி, வர்க்க வேறுபாடுகளைக் கடந்து, தனது தனிப்பட்ட செல்வத்தையும் உலக ஆசைகளையும் துறக்கிறார். துறவிகளை அகராவில் நுழைய அனுமதிக்க வெவ்வேறு ஏற்பாடுகள் உள்ளன. தசநாமியின் நான்கு முக்கிய மையங்கள் கோவர்தன் பீடம், சாரதா பீடம், சிருங்கேரி மடம் மற்றும் ஜோர்திம் மடம், முறையே பூரி (கிழக்கில் ஒடிசா), துவாரகா (மேற்கில் குஜராத்), சிருங்கேரி (தெற்கில் கர்நாடகா) மற்றும் ஜோஷிமத் (வடக்கில் உத்தராகண்ட்) ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. கோவர்தன் பீடம், சாரதா பீடம், சிருங்கேரி மடம், ஜோஷிமத் ஆகியவை முறையே பிரகாஷ், ஸ்வரூப், சேத்தன் மற்றும் ஆனந்த் (அல்லது நந்தா) என்று தீட்சை பெறுபவர்களால் அறியப்படுகிறது. இவற்றின் மூலவர்கள் முறையே ஜகந்நாதர், சித்தேஷ்வர், ஆதி வராஹா மற்றும் நாராயணா ஆவர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cx2pvq8dywgo
  24. தில்லை ஐயா, உங்கள் அண்ணாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
  25. உங்களுடன் சேர்ந்து நாங்களும் அண்ணனின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறோம். அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  26. ஆள் ஆளுக்கு க‌ற்ப‌னையில் அடிச்சு விடுங்கோ........................
  27. கயவன், ஊழல் மன்னன், கருணாநிதி வைகோ விடயத்தில் தன் மகனுக்காக செய்தது மாதிரி…. பிகு நான் தலைவர் என ஏற்கும் தகுதி இந்த உலகில் ஒருவருக்கு மட்டுமே உண்டு. அது யார் என்று யாழுக்கு தெரியும். பெயிண்ட் வாளியை இறக்கி வைக்கவும்🤣.
  28. அதே தான் செம்மறி மனப்பாங்கு கூட்டம் ஒன்று தற்போது பொங்கல் கொண்டாட ஆரம்பித்துள்ளது.
  29. நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் ........! 😍
  30. வணக்கம் வாத்தியார் . .........! எருக்கம் செடி ஓரம் இறுக்கி பிடிச்ச என் மாமா உருகும் நெய்ய போல உருகி தவிச்சேனே ஆமா நாளென்ன போழுதென்ன நான் பாடத்தான் வேறென்ன வேறென்ன நான் ஆடத்தான் ஏனோ என் மனம் தானா நினைச்சு வீனா துடிக்குது ஆத்தோரம் வீடு கட்டி மேடை கட்டி பாட்டெடுத்தேன் செத்தொரம் தாமரையை சேர்த்தெடுத்து நான் தொடுத்தேன் அக்கக்கோ குயிலு ஒன்னு யாரை எண்ணி பாடுதடி அத்தை மக நான் இருக்க யாரை இங்கு தேடுதடி என் மாமா என்ன கோவம் சொல்லு என்ன பிடிக்கலையா வானவில்லில் நூலெடுத்து சேலை ஒன்னு நான் கொடுப்பேன் வானவரின் தேர் எடுத்து வாசல் வலி நான் வருவேன் அம்மாடி சின்ன பொண்ணு உன்னை எண்ணி வாடுறேன்டி ஆத்தாடி கோவம் இல்லை அத்த மகன் பாடுறேன்டி என் மானே என்ன கோபம சொல்லு என்ன பிடிக்கலையா எருக்கம் செடி ஓரம இறுக்கி பிடிச்ச என் மானே உருகும் நெய்ய போல உருகி தவிச்சேனே நானே நாளென்ன போழுதென்ன நான் பாடத்தான் வேறென்ன வேறென்ன நான் ஆடத்தான் ஏனோ என் மனம் தானா நினைச்சு வீனா துடிக்குது.........! --- எருக்கம் செடி ஓரம் இறுக்கி பிடிச்ச என் மாமா ---
  31. இதென்ன பிரமாதம், சந்திரனில் ஆம்ஸ்டிரோங் போய் இறங்கிய போது… அங்கு தமிழில் ஒரு பேச்சு சத்தம் கேட்டதாம்….🤣
  32. நீங்கள் உங்கள் தனிப்பட்ட விடயத்தை பகிர்ந்தீர்கள். அதனால் அந்த கேள்வி வந்தது. மீண்டும் கேட்கின்றேன் அங்கே ஆயிரம் ஆயிரமாய் ஈழத்தமிழர்கள் அவதிப்படும் போது எப்படி உங்கள் உறவினருக்கு மட்டும் கனடா பறக்கும் அதிஷ்டம் வந்தது. ரகசியத்தை சொல்லித்தொலையுங்கள். கஷ்ரப்படுபவர்கள் புதிய வாழ்க்கையை தேடட்டும்.
  33. எனக்கு ஒரு பெரிய குழி எங்கையாவது கிண்டி வைச்சிருப்பியள் எண்டு தெரியும்.😂 ஆனால் நம்மள் போக்கு இது மாதிரித்தான்...😎 துடைச்சிட்டு திருப்பியும்....🤪
  34. எனது பல தமிழ் புரட்டஸ்டாண்ட் கிறிஸ்தவ நண்பர்கள் பலரும் இன்றும் பொங்கல் கொண்டாடுவது இல்லை. அவர்கள் சொல்லும் காரணம் பொங்கல் பண்டிகையில் சூரியனுக்கு வணக்கம் செலுத்தப் படுகின்றது என்பதால் கடந்து சென்று விட வேண்டும்
  35. அதிகாரம் இல்லாத போது திரள்நிதியில் சாப்பிடுபவர்… அதிகாரம் வந்தால் மக்கள் நிதியில் சாப்பிடுவார். #சின்னக்கருணாநிதி இதைத்தானே ஆரம்பம் முதல் சொல்கிறேன்… அவர்களை போல ஒரு பக்கா பிராடுதான் செக்ஸ் சைக்கோ சீமானும். கட்சி நடத்துவதை யாரும் குறை சொல்லவில்லை. தானும் சாப்பிட்டு, கயல் அண்ணிக்கும் சாப்பாடு போட்டு, விஜி அண்ணிக்கும் கொடுப்பதுதான் கேள்வி. இப்படி ஒரு மானம் கெட்ட பிழைப்புக்கு பர்மா பாஜாரில் பிச்சை எடுக்கலாம். இவர் தான் ஆர் எஸ் எஸ் சின் தமிழக ஏஜெண்ட். சின்னச் சோ. ரஜனிகாந்தின் அரசியல் வாழ்வை பாடையில் ஏற்றியவர். இப்போ சீமானின் handler.
  36. உண்மை தான் அக்கா............. ரிக்ரொக்கில் தூச‌ன‌த்தில் இருந்து ஆபாச‌ ப‌ட‌ங்க‌ளில் இருந்து பெண்க‌ள் போடும் கூத்துக‌ள் நாறி போய் இருக்கு............ரிக்ரொக்கை ஜ‌ரொப்பிய‌ நாடுக‌ள் த‌டை செய்ய‌ போவ‌தாய் த‌க‌வ‌ல் வ‌ருது த‌டை செய்தால் ந‌ல்ல‌ம் பொது வெளியில் ப‌ட‌ம் போட‌வே ப‌ய‌மாய் இருக்கு அதை எடுத்து ரிக்ரொக்கில் போட்டு குடும்ப‌ங்க‌ளை பிரித்து போடுவின‌ம்............... நான் போராளிக‌ளின் நினைவு வ‌ந்தால் அதுக்கை நான் சிறு நேர‌ம் ஒதுக்குவேன் விரும்பின‌வ‌ர்க‌ளை தெரிவு செய்து வைத்து இருக்கிறேன் ம‌ற்ற‌ம் ப‌டி ரிக்ரொக் ஒரு விள‌ம்ப‌ர‌ ந‌லன் விரும்பிய‌லுக்கான‌து த‌ங்க‌ட‌ வீட்டில் ந‌ட‌ப்ப‌தை அடுத்த‌வ‌ர்க‌ளுக்கு வெளிச்ச‌ம் போட்டு காட்டாட்டி அதுக‌ளுக்கு தூக்க‌ம் வ‌ராது..................2009 ஓட‌ எல்லாம் ச‌ரி இதை தான் என்னால் சொல்ல‌ முடியும் நான் குமார‌சாமி தாத்தாவை ரிக்ரொக் வ‌ர‌ சொல்லி அழைத்தேன்........தாத்தா எங்க‌ட‌ போராட்ட‌ வ‌ர‌லாறுக‌ள் தொட்டு மாவீர‌ர்க‌ளின் வ‌ர‌லாறுக‌ள் காணொளியில் இருக்கென‌ அந்த‌ ம‌னுஷ‌ன் ஆளை விடு அப்ப‌ன் என்று அந்த‌ ப‌க்க‌மே வ‌ர‌ வில்லை ஹா ஹா க‌ள்ளு அடிச்சாலும் ம‌னுஷ‌ன் மான‌ஸ்த‌ன் தான் 😁........................... பெரிய‌ப்பு நீங்க‌ள் ரிக்ரொக்கில் இருக்கிறீங்க‌ளோ😁.......................
  37. 😂 விசுகர், உங்களுக்கு ஒன்று இன்னும் புரியவில்லை: Candid ஆக சொல்ல முனைகிறேன் . நீங்கள் இங்கே ஷெரீப் அல்ல, எந்த அதிகாரமும் கொண்ட காவல்காரரும் அல்ல! இந்த "கவனம், ஜாக்கிரதை, எச்சரிக்கை" என்பவற்றை உங்கள் பிரெஞ்சுக் குக்கிராமத்தோடு வைத்துக் கொள்ள வேண்டும். உண்மையில் இப்படி மறைமுகமாக வன்முறை அச்சுறுத்தல் விடுவதே கள விதிமுறைகளுக்கு எதிரானது. ஒரு கருத்து சொன்னால் அதற்கு பதில் எழுத இருந்தால் எழுத வேண்டும். இல்லா விட்டால் சிவப்பைக் குத்தி விட்டு போய் ஒளிந்து கொள்ள வேண்டும். இந்த சிவாஜி கணேசன் போஸ் இங்கே வேண்டாம், உங்களுக்குப் பொருந்தவில்லை!
  38. பச்சை மட்டை தேவை என்பது தான் நான் சொல்வது. கொள்கை சறுக்கிகள் எவராக இருந்தாலும் அது பாவனைக்கு வரும் வரணும். இங்கே புலிகளை பற்றி கொட்டும் வசைகளை தாயகத்தில் கொட்டிப்பாருங்கள். பச்சை மட்டை பிய்யும்.
  39. இலங்கை குடிவரவுத்துறை தம்மால் வீசாவை வழங்க முடியாது என வெளி நிறுவனத்திற்கு வேலையை அனுப்பினார்கள். பின்னர் அது பெரும் பிரச்சனையாகியது. இலங்கை வளங்களை பயன்படுத்தி அடையாள அட்டையை சொந்தமாக உருவாக்க வசதி இல்லை என்றால் இலங்கையில் உள்ள இத்தனை இத்தனை பொறியியல் பீடங்கள், தொழில்நுட்ப கல்லூரிகள் எல்லாம் எதற்கு? அடையாள அட்டையை உருவாக்குவதற்கு இந்தியாவிடம் ஏன் கடன் வாங்க வேண்டும்? இதன் பின்னால் நின்று காசு அடிக்கும் கூட்டம் யாதோ?
  40. அஜித் அருமையாகச் சொல்லியிருக்கின்றார். ஆனாலும், கட் அவுட்டை கட்டி, அதன் உச்சியில் ஏறி நின்று அதன் மேல் பால் ஊற்றி, விழுந்து இறந்தும் போகும் இளைஞர்கள் வந்துகொண்டு தான் இருப்பார்கள்............😌. என்னுடைய சமவயது நண்பன் ஒருவனிடம் இருந்து பொங்கல் வாழ்த்து விஜய் ஒரு கையை மேலே சுற்றும் ஒரு படத்துடன் வந்திருக்கின்றது...............🫣. முன்பின் அறிமுகம் இல்லாத மனிதர்கள் மேல் முன்னரே ஏற்படும்/ஏற்படுத்தப்படும் மதிப்பீடுகள் தவிர்க்கப்பட வேண்டியவை. சில வேளைகளில் மனிதர்கள் வெறுப்பதற்கும், பகைப்பதற்கும் தான் மனிதர்களைத் தேடுகின்றார்களோ என்று தோன்றுகின்றது.................
  41. அந்த பாடலுக்கு கன்னட நடிகர் விஷ்ணுவர்த்தன், சந்திரகலா நடித்தனர். இப்பாடல் இலங்கை வானொலியால் மட்டுமே பிரபலமாந்து.
  42. “உனக்கு காம இச்சை வந்தால் உன் தாயிடமோ, சகோதரிிடமோ, மகளிடமோ தீர்த்துக்கொள் என்று சொன்ன பெரியார், பெண் விடுதலையைப் பேசியவரா?’’, ’’தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னவர் பெரியார்.’’ - இப்படியெல்லாம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியாரை கடுமையாக விமர்சித்து பேசி இருப்பது, தமிழ்நாட்டு அரசியல் சூழலில் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியிருக்கிறது. மாநிலம் முழுக்க போராட்டங்கள், காவல்நிலையங்களில் புகார்கள், உயர் நீதிமன்றத்தில் வழக்கு என பரபரப்புக் கிளம்பியுள்ளது. `பெரியார் சொல்லியதாக சீமான் சொல்வது வெறு அவதூறு மட்டுமே' என்று, திராவிடர் கழகம் மற்றும் பெரியாரிய கட்சியினர் கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கின்றனர். ``பெரியார் அப்படிச் சொல்லியிருந்தால், அதற்கான ஆதாரத்தை சீமான் கொடுக்க வேண்டும்’’ என்று அவர்கள் கேட்க, ``வெளியிட்ட புத்தகத்தையெல்லாம் முடக்கி வைத்துக்கொண்டு, என்னிடம் ஆதாரம் கேட்டால் எப்படி? பெரியாரின் எழுத்துகளை அரசுடைமையாக்கிவிட்டு, சான்று கேளுங்கள் தருகிறேன்” என்று பதில் கொடுத்துள்ளார் சீமான். பரப்பப்படும் செய்தி... உண்மையா, பொய்யா? பொதுவாகவே பெரியார் `அதைச் சொன்னார்... இதைச் சொன்னார்' என்று பல்லாண்டுகளாகவே பற்பல விஷயங்களும் சுழன்று கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், உண்மையிலேயே அவையெல்லாம் பெரியார் சொன்னவை அல்ல என்கிற மறுப்புகளும் சுழலத்தான் செய்கின்றன. அப்படி, காமம் குறித்து சொன்னதாகப் பரப்பப்படும் மேலே குறிப்பிட்டுள்ள செய்தி, 2017-ம் ஆண்டிலிருந்தே சில குழுக்களால் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. அதைக் குறிப்பிடும் ஒரு செய்தித் தாள் துண்டுச்சீட்டு, `விடுதலை ஏடு:11.5.1953’ என்று தேதியிட்டுள்ளது. இப்போது சீமானும் அதை மேற்கோள் காட்டி பேசியிருக்கும் நிலையில், குறிப்பிட்ட தேதியிட்ட விடுதலை நாளேட்டை நாம் ஆராய்ந்தோம். அன்றைய தினம் வெளியான, நான்கு பக்கங்களைக் கொண்ட விடுதலை நாளேட்டில், தென் சென்னை திராவிட கழக மாவட்ட மாநாடு பற்றிய செய்திதான் முதல் பக்க தலைப்புச் செய்தி. அதை தொடர்ந்து இன்னும் பல செய்திகள் இடம்பெற்றிருக்கும் அந்த நாளேட்டில், சுற்றலில் இருக்கும் செய்தி எதுவும் இடம்பெறவில்லை. ஆக, இந்தப் படம் உண்மை அல்ல. அது பெரியார் கருத்தல்ல... சனாதன கருத்து! இதுகுறித்து தந்தைப் பெரியார் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணியிடம் கேட்டபோது, ``பெரியார் கூறியதாகப் பரப்பப்படும் செய்தி, ஒரு புராணக்கதை. பிரம்மா, தன் மகள் சரஸ்வதி யையே மணந்தவர். இந்த விஷயத்தைப் பற்றிய புராணக் கதையில்தான் `தாயென்ன, மகளென்ன...' எனப் பேசப்பட்டிருக்கிறது. இதைத்தான் பெரியார் மேற்கோள் காட்டி னாரே தவிர, இது அவருடைய கருத்தல்ல. 11.5.53 தேதியிட்ட `விடுதலை' நாளிதழில் பெரியார் இப்படி கூறியுள்ளதாக, இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்தவர்கள் பல காலமாகக் கூறி வருகின்றனர். இதற்கு பதில் கொடுக்கும் விதமாக அந்தக் குறிப்பிட்ட தேதியில் வெளியான விடுதலை நாளிதழை வெளி யிட்டு, அத்தனையும் பொய் என்று நிரூபித்துவிட்டோம். இப்போது, தங்கள் சீடன் சீமானை வைத்து அதே வேலையை செய்கிறது இந்துத்துவா’’ என்றார் கொளத்தூர் மணி காட்டமாக. `தமிழ், காட்டுமிராண்டி மொழி...' - இதனால்தான் சொன்னார் பெரியார்! `தமிழ்மொழியைக் காட்டுமிராண்டி மொழி என்று குறிப்பிட்ட பெரியார் எப்படித் தமிழ் இனத்தின் தலைவராக முடியும்?’ என்று சீமான் கேட்டுள்ளது குறித்து, திராவிடர் விடுதலை கழகத்தின் பொதுச்செயலாளர், `விடுதலை’ ராஜேந்திரனிடம் கேட்டபோது, ``பெரியார் தமிழ் மொழியை அறிவியல் மொழியாக்க விரும்பினார். அதன் பொருட்டுதான் ‘தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி’ என்கிற கட்டுரையை எழுதினார். அக்கட்டுரையின் முடிவில் பின் குறிப்பு ஒன்றையும் எழுதியுள்ளார். `நான் இப்படியொரு கட்டுரை எழுதுவதற்கு தமிழறிஞர்கள் என் மீது கோபப்படுவார்கள். அதற்காகத்தான் இந்தக் கட்டுரையை எழுதுகிறேன். கோபப்படுகிறவர்கள் பகுத்தறிவு மற்றும் சமூக சிந்தனை கொண்ட இலக்கியங்களை எழுதுவார்கள் என்றால், அதை நானே அச்சுக்கோத்து பதிப்பிக்கத் தயாராக இருக்கிறேன்’ என்று கூறியுள்ளார். பகுத்தறிவு சிந்தனை கொண்ட எழுத்துகள் நம் மொழியில் பிறக்க வேண்டும் என்கிற நோக்கோடுதான் பெரியார் அப்படி எழுதினாரே தவிர, தமிழை சிறுமைப்படுத்தும் நோக்கோடு அவர் எழுதவில்லை. உலகப்பொதுமறையான திருக்குறளுக்கு மாநாடு நடத்தியவர் பெரியார்தான். திருக்குறளை அனைவரும் சட்டைப்பைக்குள் வைத்துக் கொள்ளும்படியாக சிறிய பதிப்பை வெளியிட்டவரும் பெரியார்தான். அவர் தமிழ் எழுத்துத் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தார். சம்ஸ்கிருதத்தை நிராகரித்து தமிழ் மொழியில் உறுதியேற்றுக் கொண்டு நிகழ்த்தப்படும் சுயமரியாதைத் திருமணத்தை நடைமுறைப்படுத்தினார். அப்படிப்பட்டவரை தமிழுக்கு எதிரானவர் எனச் சொல்வது ஏற்புடையதல்ல'' என்று சொன்ன ராஜேந்திரன், ``பெரியாரின் நூல்களை யார் வேண்டு மானாலும் பதிப்பிக்கலாம் என்று நீதிமன்றத்தின் மூலமாக உத்தரவு பெற்றுள்ளோம். அதைத் தொடர்ந்து பலரும் பதிப்பித்து வருகின்றனர். இணையதளங்களிலும் அவருடைய நூல்கள் இருக்கின்றன. அப்படியிருக்கும்போது, நாட்டுடமை ஆக்குங்கள்... ஆதாரம் தருகிறேன் என் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது” என்றும் விளக்கினார். பெரியார் முரண்களின் மூட்டை! `சீமான் சொன்னது தவறான செய்தி என்பது விடுதலை நாளிதழ் ஆவணங்களை பரிசீலித்தபோது தெரிகிறதே... பெரியாரின் நூல்களை யார் வேண்டுமானாலும் பதிப்பிக்கலாம் என்கிறபோது, நாட்டுடமை என்கிற கேள்விக்கே இடமில்லையே...' என்பது உள்ளிட்ட கேள்விகளை, சீமானின் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக்கிடம் கேட்டபோது, ``பெரியார் காமம் குறித்து அப்படித்தான் கூறினார் என்பதை ஆணித்தரமாகக் கூறுகிறோம். எங்கள் முன்னோர்கள் அதைப் படித்து விட்டு செவி வழியில் சொன்னதைக் கொண்டுதான் பேசுகிறோம். ஆதாரம் வேண்டுமென்றால் விடுதலை நாளிதழை அரசு உடைமையாக்கி பெரியார் வாழ்ந்த காலம் வரை வெளியான அனைத்து இதழ்களையும் வெளியிட வேண்டும். அப்படி செய்தால் எல்லா இதழ்களையும் அலசி ஆராயலாம். அப்படி ஆராய்ந்த பிறகு இல்லையென்றால், அதைப் பற்றிப் பேசலாம். தமிழ்ச் சமூகத்துக்குப் பங்காற்றியவர்களில் பெரியாரும் ஒருவர் என்பதில் எங்களுக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், `பெரியார் மட்டுமே எல்லாவற்றையும் செய்தார். இது பெரியார் மண்’ என்று சொல்லி மற்றவர்களது பங்களிப்பையும், போராட்டத்தையும், உழைப்பையும் மூடி மறைத்துவிட்டு பெரியாரை முழு முதல் முகமாக நிறுத்திய பிம்ப அரசியலைத்தான் எதிர்க்கிறோம். பெரியார் முரண்களின் மூட்டை. தனிப்பட்ட விருப்பு வெறுப்பு சார்ந்தே இயங்கியவர். சந்தர்ப்பத்துக்குத் தகுந்தாற் போல தனது கருத்தை மாற்றிக் கொண்டவர். அவரது இரட்டை நிலைப்பாடுகளுக்கு எடுத்துக்காட்டாக பல உதாரணங்களைச் சொல்ல முடியும். உலகப்பொதுமறை தந்த தமிழ் மொழிக்கு இரண்டாயிரம் ஆண்டு களுக்கு மேற்பட்ட வரலாறு இருக்கிறது. பெரியாரை தமிழின் தந்தையாக்கி அதைச் சுருக்குவதை நாங்கள் ஏற்க மாட்டோம்'' என்கிறார் இடும்பாவனம் கார்த்திக். விஜய் வருகையால் மாறும் சீமானின் அரசியல் கணக்குகள்! இந்த விஷயங்கள் குறித்துபேசும் தமிழக அரசியல் நோக்கர்கள் சிலர், ``பெரியார் மீதான எதிர்ப்பை பொதுவாக இந்துத்துவா அமைப்பினர்தான் முன்வைப்பார்கள். இப்போது, சாதிய இந்துக்களில் பலரும் அம்பேத்கரியர்களில் ஒரு சிலரும்கூட பெரியாரை மறுக்கின்றனர். இப்போது, தமிழ்நாட்டில் கருத்தியல் ரீதியிலான முரண்பாடுகள் பல வகைகளில் பெருகியிருக்கின்றன. பிறப்பின் அடிப்படையில் பெரியார் ஒரு தமிழரல்ல என்பதாலேயே அவர் முன்னிறுத்துகிற திராவிடம் என்கிற கருத்தின் மீது ஏற்பில்லாதவர்கள், தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தி அவரை எதிர்க்கின்றனர். தமிழக ஓட்டு அரசியல் சூழலில் இந்துத்துவ எதிர்ப்பு, சாதிய எதிர்ப்பு என எல்லாவற்றையும் திராவிடக் கட்சிகள் பேசி வருகின்றன. இதற்கு எதிர்க்கோட்டில் பா.ஜ.க போன்ற இந்துத்துவக் கட்சிகள், மத அரசியலை தீவிரமாக முன்னெடுக்கின்றன. இப்படியான அரசியல் சூழலில் தனக்கான தனியொரு பாதையை கட்டமைக்க வேண்டுமென்றால், தமிழ்த் தேசியம் மட்டும்தான் தேவை என்பதை சீமான் அரசியலுக்கு வரும்போதே உணர்ந்து விட்டார். திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக சீமான் தன்னை முன்னிறுத்திக் கொண்டிருந்த வேளையில் நடிகர் விஜய்யின் அரசியல் வருகை, சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே இளம்தலைமுறையினரை ஈர்த்துக் கொண்டிருந்த நிலையில், விஜய்யின் வருகை சீமான் தரப்பை சேதத்துக்குள்ளாக்குமோ என்கிற பேச்சுகள் எழுந்துள்ளன. இச்சூழலில்தான், பெரியார் எதிர்ப்பை சீமான் இன்னும் அழுத்தமாக முன் வைக்க வேண்டிய தேவை உண்டாகியுள்ளது. விஜய் கட்சியும், கொள்கை வழிகாட்டியாக பெரியாரை அறிவித்திருக்க, பெரியார் எதிர்ப்பை அக்கட்சியின் மீதும் திருப்புவது சீமானின் நோக்கமாக உள்ளது'' என்கின்றனர். ``பெரியார், விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா?'' என்று கேட்டால், ``நிச்சயமாக இல்லை. அது கருத்தியல் ரீதியிலான முரணாக இல்லாமல், பெரிதளவு தனிப்பட்ட சீண்டலாகவே இருப்பதுதான் பிரச்னை. நியாயமான விமர்சனம் வையுங்கள், அதுகுறித்து உரையாடலாம். ஆனால், கீழ்த்தரமான அவதூறுகளைப் பரப்பக் கூடாது’' என்கின்றனர் திராவிட கழகத்தினர். இறந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகும் தன்னைப் பற்றி பேச வைத்துக் கொண்டிருக்கிறார் பெரியார். தத்துவங்களுக்கு ஏது மரணம்?! Vikatan Plus - 19 January 2025 - ``பெண்களுக்கும் தமிழுக்கும் எதிரி பெரியார்!'' - சீமான் பரப்புவது பொய்ச் செய்தியா... - Vikatan
  43. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், மருத்துவர் தேஷம் பி.ஆர். பதவி, பிபிசிக்காக ரங்கா ராவுக்கு பத்து வருடங்களாக நீரிழிவு நோய் உள்ளது. அவர் முறையான உணவுப்பழக்கம், தினசரி உடற்பயிற்சி, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவரிடம் சென்று மருத்துவப் பரிசோதனை செய்துகொள்வார். பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை அவர் சரியான நேரத்தில் எடுத்துக்கொள்கிறார். ஆனால், கடந்த மாதம் சீதாப்பழத்தைப் பார்த்ததும் ரங்கா ராவுக்கு அதனை சாப்பிட வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. உடனே ஒரு கூடை நிறைய சீதாப்பழங்களை வாங்கி வந்து, ஒரு நாளைக்கு ஒன்று என சாப்பிட்டார். கடைசியாக நீரிழிவு சோதனை செய்து 8 மாதங்கள் ஆகிவிட்டன என்பதை உணர்ந்தவுடன், அவர் உடனடியாக மருத்துவரை சந்திக்க முடிவு செய்தார். ஆனால், இவ்வளவு சீதாப்பழங்களை சாப்பிட்டதற்கு மருத்துவர் தன்னைக் கடிந்துகொள்வார் என்று அவர் அஞ்சினார். எனவே, அவர் 2-3 நாட்கள் எதுவும் சாப்பிடாமல் பட்டினியாக இருக்க முடிவு செய்தார். மருத்துவரிடம் செல்வதற்கு முந்தைய மதியம் மற்றும் இரவு வேளையில் ஒரு சிறுதானிய ரொட்டியும் ஒரு முட்டையும் மட்டுமே அவர் சாப்பிட்டார். அவர் மருத்துவமனைக்குச் சென்றபோது, வழக்கமாக அவரை பரிசோதனை செய்யும் மருத்துவருக்குப் பதிலாக புதிதாக ஒரு மருத்துவர் இருப்பதை அவர் கண்டார். அவரது மருத்துவர் பத்து நாள் விடுப்பில் சென்றிருப்பதால், வேறு ஒரு புதிய மருத்துவர் அங்கு இருந்தார். இதனால் ரங்கா ராவுக்கு மிகவும் நிம்மதியாக இருந்தது. ரங்கா ராவுக்கு வழக்கமான ஃபாஸ்டிங் சுகர் டெஸ்ட் (உணவுக்கு முன்பு வெறும் வயிற்றில் எடுக்கப்படும் பரிசோதனை) மற்றும் உணவு உண்ட பிறகு எடுக்கும் பரிசோதனைக்குப் பதிலாக, புதிய ஒரு பரிசோதனை மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்டது. ரங்கா ராவுக்கு இந்த பரிசோதனை செய்துகொள்வதில் விருப்பமில்லை. இருப்பினும், மருத்துவர் பரிந்துரைத்ததால் அவர் அதைச் செய்தார். ரங்கா ராவின் பரிசோதனை முடிவுகள் வந்தன. உணவுக்கு முன்பு எடுக்கப்பட்ட ரத்தப் பரிசோதனையில் அவரது உடலில் உள்ள குளுக்கோஸ் அளவு 150 mg/dl என இருந்தது. ஆனால், சாப்பிட்ட பிறகு எடுக்கும் சுகர் டெஸ்டில் குளுக்கோஸ் அளவு 270 mg/dl என இருந்தது. மருத்துவர் செய்த புதிய பரிசோதனையில் குளுக்கோஸ் அளவு 9 சதவிகிதம் என்று இருந்தது. ஒரு குறிப்பிட்ட உணவை சாப்பிட்டே தீர வேண்டும் என்ற எண்ணத்தை கட்டுப்படுத்துவது எப்படி? தமிழ்நாட்டை அச்சுறுத்தும் ஸ்க்ரப் டைபஸ் தொற்று - எந்த 7 மாவட்டங்களில் அதிகம் பரவுகிறது? தடுப்பது எப்படி? தமிழ்நாட்டில் இரண்டு மடங்கு அதிகரித்த ரேபிஸ் நோய் மரணங்கள் - என்ன காரணம்? சிங்கப்பூர் மக்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழும் ரகசியம் இதற்கு முன்பு இருந்த மருத்துவர், பரிசோதனை முடிந்த பிறகு சாதாரணமாகப் பேசி ஆலோசனை வழங்கி மருந்துகளை பரிந்துரைப்பார். ஆனால், இந்த புதிய மருத்துவர் சற்று கண்டிப்பானவராக இருந்தார். "உங்கள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு ஏன் இவ்வளவு அதிகரித்தது?" என்று புதிய மருத்துவர் கேட்டார். ரங்கா ராவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. "சர்க்கரையின் அளவு மிகவும் அதிகமாகவில்லை தானே டாக்டர்?" என்று ரங்காராவ் தயக்கத்துடன் பதிலளித்தார். அதற்கு அந்த புதிய மருத்துவர், "நான் டாக்டரா அல்லது நீங்கள் டாக்டரா?" என்று கேட்டார். ரங்காராவ் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தார். புதிய மருத்துவர் ஒரு காகிதத்தையும் பேனாவையும் எடுத்து அதில் சில எண்களை எழுதத் தொடங்கினார். "வழக்கமான சர்க்கரைப் பரிசோதனையில், சோதனை செய்வதற்கு முந்தைய நாள் நீங்கள் உண்ணும் உணவைப் பொறுத்து உங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கணக்கிடப்படும். ஆனால் இந்த புதிய சோதனையில், கடந்த 3 மாதங்களாக ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் சராசரி அளவு கணக்கிடப்படும். இது ஹெச்பிஏ1சி (HbA1c) பரிசோதனை என்று அழைக்கப்படுகிறது," என்றார் புதிய மருத்துவர். "இந்த பரிசோதனையில் உங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு இயல்பை விட அதிகமாக இருப்பதைக் காட்டுகிறது", என்று அவர் ரங்கா ராவிடம் கூறினார். "உங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இல்லை என்பதை இது குறிக்கிறது. ஒருவர் அதிக இனிப்புகளை உட்கொள்வதால் இது நடக்கிறது", என்று அவர் ரங்கா ராவிடம் விளக்கினார். HbA1C பரிசோதனை என்றால் என்ன? HbA1C பரிசோதனை, A1C பரிசோதனை அல்லது 'கிளைகேட்டட் ஹீமோகுளோபின்' பரிசோதனை அல்லது ஹீமோகுளோபின் ஏ1சி பரிசோதனை என்று அழைக்கப்படுகிறது. ரத்தத்தில் உள்ள புரதத்துடன் இணைக்கப்பட்ட குளுக்கோஸின் அளவைக் கண்டறிய இந்த பரிசோதனை உதவுகிறது. கடந்த 3 மாதங்களில் (8 முதல் 12 வாரங்கள்) ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை இந்த HbA1C அளவிடுகிறது. இந்த பரிசோதனையின் முடிவுகள் பரிசோதனைக்கு ஒரு நாள் முன்பு சாப்பிட்ட உணவை அடிப்படையாகக் கொண்டிருக்காது. மாறாக, மூன்று மாதங்களாக நாம் உண்ட உணவை அடிப்படையாகக் கொண்டு ரத்தத்தில் எவ்வளவு சர்க்கரை உள்ளது என்பதை இந்த பரிசோதனை காட்டுகிறது. இந்த பரிசோதனை நீரிழிவு நோயாளியின் சர்க்கரை அளவைக் கண்டறியவும், நீரிழிவு நோய்க்கு முந்தையை நிலையை கண்டறியவும் (pre diabetic) தீவிர நீரிழிவு நோயைக் கண்டறியவும் உதவுகிறது. இந்த பரிசோதனைக்காக உணவு உண்ணாமல் இருப்பது போன்றவை தேவையில்லை. நீங்கள் என்ன உணவை எப்போது உட்கொண்டீர்கள் என்பதைப் பொருட்படுத்தாமல் ஒரு நாளின் எந்த நேரத்திலும் இந்த பரிசோதனையை செய்துகொள்ள முடியும். இறந்துவிட்டதாக ஆம்புலன்சில் எடுத்து வரப்பட்டவருக்கு மீண்டும் 'உயிர்' கொடுத்த வேகத்தடை6 ஜனவரி 2025 விண்வெளியில் ரோபோ மூலம் தட்டைப்பயறு விதையை இஸ்ரோ முளைக்கச் செய்தது எப்படி?5 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நீரிழிவு நோயாளியின் சர்க்கரை அளவைக் கண்டறியவும், நீரிழிவுக்கு முந்தைய நிலை மற்றும் தீவிர நீரிழிவு நோயைக் கண்டறியவும் உதவுகிறது HbA1C முடிவுகளை வைத்து பிரச்னைகளை அறிந்துகொள்வது எப்படி? நீரிழிவு நோய் பாதிக்கப்படாதவர்களுக்கு HBA1C அளவு பொதுவாக 4% முதல் 5.6% வரை இருக்கும். HbA1c அளவு 5.7% முதல் 6.4% வரை இருந்தால், அந்த நபர் நீரிழிவுக்கு முந்தைய நிலையில் இருப்பதாகக் கருதப்படுகிறார். அதாவது, அந்த நபருக்கு எதிர்காலத்தில் நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இந்த அளவு 6.5% மற்றும் அதற்கு மேல் இருந்தால், அந்நபருக்கு நீரிழிவு நோய் இருப்பதைக் குறிக்கிறது. அவர்கள் உடலில் உள்ள ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த மருந்துகளை உட்கொள்ள வேண்டும். இந்த அளவு 9% க்கு மேல் இருந்தால், அவர்களின் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லை என்று பொருள். இதனால் உடலில் உள்ள சில உறுப்புகள் பாதிக்கப்படுவதற்கான அபாயம் ஏற்படலாம். இந்த பரிசோதனையை எப்போது செய்ய வேண்டும்? 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் வருடத்திற்கு ஒருமுறை இந்தப் பரிசோதனையை செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். பெற்றோர்கள், உடன்பிறந்தவர்கள் அல்லது நண்பர்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், வயது வித்தியாசமின்றி ஆண்டுதோறும் HbA1C பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறது. 30-45 வயதுக்குட்பட்டவர்கள், உடல் எடை அதிகமாக இருப்பவர்கள், ரத்த அழுத்தம் அல்லது இதய நோய் உள்ளவர்கள் ஆகியோர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தப் பரிசோதனையை செய்துகொள்ள வேண்டும். சர்க்கரை நோயின் அறிகுறிகள் ஏதேனும் இருப்பதாக நீங்கள் சந்தேகித்தாலும் இந்த பரிசோதனையை செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறது. பிளாஸ்டிக்கை சாப்பிடும் புழுக்கள் – நெகிழி மாசுபாட்டை தடுக்க உதவுமா?5 ஜனவரி 2025 சீனாவில் கொரோனா போன்ற அறிகுறிகளுடன் வேகமாக பரவும் புதிய வைரஸ் - இந்தியா என்ன செய்கிறது?6 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,45 வயதுக்கு மேற்பட்டவர்கள் வருடத்திற்கு ஒருமுறை இந்தப் பரிசோதனையை செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள் ப்ரீ-டயாபடீஸ் என்றால் என்ன? ப்ரீ-டயாபடீஸ் என்றால், உடலால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்ற நிலையை குறிக்கிறது. இந்த நிலை ஏற்பட்டால் சில வருடங்களில் உறுப்புகள் சரியாகச் செயல்படாமல் போகலாம் மற்றும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்கடங்காமல் போகலாம். உங்கள் அன்றாட உணவுப் பழக்கம் மற்றும் வாழ்வியல் முறைகளில் மாற்றங்களைச் செய்வதன் மூலம், நீரிழிவு நோயிலிருந்து விலகி இருக்க முடியும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் மூலம், உடலில் உள்ள ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் திறனை மீண்டும் பெறலாம். HbA1c பரிசோதனையில் உங்களுக்கு ப்ரீ-டயாபடீஸ் இருப்பது கண்டறியப்பட்டால், நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இந்த பரிசோதனை எவ்வாறு செய்யப்படுகிறது? HbA1c பரிசோதனை என்பது மற்ற ரத்தப் பரிசோதனைகளைப் போலவேதான் இருக்கும். அங்கீகாரம் பெற்ற எந்த ஆய்வகத்திலும் இதை செய்துகொள்ளலாம். 5 நிமிடங்களுக்குள் உடலில் இருந்து ரத்த மாதிரி எடுக்கப்பட்டு, ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டு முடிவுகள் அன்றே வழங்கப்படும். இந்த பரிசோதனையின் மூலம் கடந்த 3 மாதங்களில் உடலில் உள்ள சர்க்கரையின் சராசரி அளவை அறிந்துகொள்ள முடியும். எனவே, சோதனைக்கு முன் நீங்கள் என்ன உண்ணும் உணவோ அல்லது நீராகாரங்கள் அருந்தினாலோ இந்த பரிசோதனையின் முடிவுகளை மாற்றாது. இருப்பினும், HbA1C பரிசோதனையின் அடிப்படையில் மட்டுமே மருத்துவர்களால் மருந்து பரிந்துரைக்க முடியாது. உணவுக்கு முன்பும் அதன் பிறகும் எடுக்கும் பரிசோதனையின் முடிவுகளின் அடிப்படையில் மட்டுமே சர்க்கரையை கட்டுப்படுத்த சரியான மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைக்க முடியும். HbA1C அளவுகளை எவ்வாறு குறைக்கலாம்? HbA1C என்பது மூன்று மாத காலத்திற்கான சராசரியான ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை தெரிந்துகொள்ளும் ஒரு பரிசோதனையாக இருப்பதால், உணவுப் பழக்கங்களில் மாற்றங்களைச் செய்வதன் மூலமோ, உடற்பயிற்சி செய்வதன் மூலமாகவோ அல்லது மருந்துகளை உட்கொள்வதன் மூலமோ இரண்டு அல்லது மூன்று நாட்களில் சர்க்கரை அளவை குறைக்க முடியாது. குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு தினமும் உடற்பயிற்சி செய்வது, உணவுப் பழக்கம் மற்றும் வாழ்வியல் முறையை மாற்றிக்கொள்வது போன்றவற்றினால் மட்டுமே HbA1C அளவைக் கட்டுப்படுத்த முடியும். நீரிழிவு நோய்க்கான மருந்துகளை உட்கொள்பவர்கள், தினமும் தவறாமல் மருந்துகளை உட்கொண்டால் மட்டுமே, HbA1C-ஐ கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். மேலும், சர்க்கரை நோய் உள்ளவர்கள் 6 மாதங்களுக்கு ஒருமுறை இந்தப் பரிசோதனையை செய்துகொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக அமல்படுத்தப்படாத ஆட்டோ மீட்டர் கட்டணம் - காரணம் என்ன?5 ஜனவரி 2025 மத்ஸயா 6000: பெருங்கடலில் 6000 மீட்டர் ஆழத்திற்கு செல்லப் போகும் இந்திய விஞ்ஞானிகள்5 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சர்க்கரை நோய் உள்ளவர்கள் 6 மாதங்களுக்கு ஒருமுறை இந்த HbA1C பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும் HbA1C என்றால் என்ன? நாம் உண்ணும் உணவைப் பொறுத்து, செரிமான மண்டலத்திலிருந்து ரத்தத்தில் குளுக்கோஸ் வெளியிடப்படுகிறது. இந்த குளுக்கோஸ் ரத்தத்தின் மூலம் உடல் முழுவதும் நகரும். ரத்தத்தில் பல்வேறு புரதங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று ஹீமோகுளோபின் ஆகும், இது ரத்த சிவப்பணுக்களில் காணப்படுகின்றது மற்றும் உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் ஆக்ஸிஜனை வழங்குகிறது. இந்த ஹீமோகுளோபின் புரதம் உடல் முழுவதும் சுற்றும் குளுக்கோஸ் மூலக்கூறுடன் இணைக்கப்படும். இந்த செயல்முறை கிளைகேஷன் என்று அழைக்கப்படுகிறது. ஹீமோகுளோபின் புரதம் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட குளுக்கோஸ் 'கிளைகேட்டட் ஹீமோகுளோபின்' என்று அழைக்கப்படுகிறது. ரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம் இரண்டு முதல் மூன்று மாதங்கள் என்பதால், கடந்த மூன்று மாதங்களில் அவற்றில் எவ்வளவு குளுக்கோஸ் (சர்க்கரை) சேர்ந்துள்ளது என்பதை இந்த பரிசோதனை மூலம் கண்டறியலாம். ரத்தத்தில் அதிக அளவில் சர்க்கரை இருந்தால், அது அதிகமான ஹீமோகுளோபினுடன் இணைக்கப்படும் என்பதையே இந்த பரிசோதனை காட்டுகிறது. இந்த பரிசோதனை அனைவருக்கும் அவசியமா? குளுக்கோஸ் ஹீமோகுளோபின் புரதத்துடன் மட்டும் சேர்வதில்லை. கூடுதலாக அல்புமின், ஃபெரிடின் மற்றும் ஃபைப்ரினோஜென் போன்ற புரதங்களுடனும் சேர்க்கிறது. ஆனால், அனைவருக்கும் இந்த பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய தேவையில்லை. கடுமையான ரத்த சோகை (ரத்தத்தில் மிகக் குறைவான அளவில் ஹீமோகுளோபின் இருப்பது), சிறுநீரகப் பிரச்னைகள் இருப்பவர்கள், உடலில் போதுமான ரத்தத்தை உற்பத்தி செய்ய முடியாதவர்கள் மற்றும் கல்லீரல் தொடர்பான பிரச்னைகள் உள்ளவர்கள் இந்த HbA1c பரிசோதனையால் அதிகம் பயனடைய மாட்டார்கள். அத்தகையவர்களுக்கு மட்டுமே ஹீமோகுளோபினைத் தவிர மற்ற புரதங்களுடன் இணைக்கப்பட்ட குளுக்கோஸை தீர்மானிக்கும் பரிசோதனைகள் தேவைப்படுகின்றன. (குறிப்பு: கட்டுரையை எழுதியவர் ஒரு மருத்துவர். இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் ஒரு விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ரீதியாக எந்தவொரு முடிவையும் எடுக்கும் முன்னர் மருத்துவரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cn9gr52pvj1o
  44. அவங்களுக்கு இல்லாமல் போயிடப்போதே ........ என்ன ஒரு அழகான பதில் . ......! 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.