Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    17
    Points
    3115
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    17
    Points
    19641
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    88793
    Posts
  4. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    33292
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/30/25 in all areas

  1. 14.01.1986 தைப் பொங்கல் தினத்தன்று வெளியாகி இருந்த இந்தக் கவிதையை எனது பழய பொக்கிஷங்களிலிருந்து கண்டேன். அதை 14.01.2025 நடந்த பொங்கலோடு சேர்த்துக் கொள்ளுவோம். பஞ்சத்திற்கு சிறகு வைப்போம்! ************************************* ஏட்டைப் படித்த நாங்களனைவரும் சேட்டைக் கோட்டை வெறுத்திடுவோம் காட்டையழித்து மாட்டைப் பூட்டி நாட்டை ஏரால் உயர்த்திடுவோம் சூட்டையடித்து நெல்லைக் கொட்டி மூட்டையிலிட்டுச் சேர்த்துதிடுவோம் ஆட்டை மாட்டை பண்ணையில் வளர்த்து சோட்டையுணவை உண்டிடுவோம் வீட்டையாளும் பஞ்சப் பாட்டை ஓட்டை வழியால் துரத்திடுவோம். அன்புடன் -பசுவூர்க்கோபி.
  2. நீங்கள் சொல்வது சரியே, நாதமுனி. நீங்க சொல்வது போலவே, அயல் நாட்டுத் தமிழர் என்ற வகையில் நாங்கள் அவர்களின் சாதி அடுக்குக்குள், அதன் மேல் கட்டமைக்கப்பட்டிருக்கும் அவர்களின் சமூக, அரசியல் அமைப்புகளுக்குள் ஆழமாக போகத் தேவையேயில்லை. ஆனால், நான் ஆழமாக போகவேண்டி இருந்ததிற்கு இரண்டு காரணங்கள்: 1. நீங்கள் என்னிடம் கேட்டிருந்த ஒரு கேள்வியும், நீங்களே சொல்லியிருந்த விளக்கமும்: "நீங்கள் தமிழக அரசியலை, ஈழ அரசியல் ஊடாக பார்க்கிறீர்கள் என்று நிணைக்கிறேன், சரியா? எனக்கும் அதே குழப்பம் இருந்தது. தமிழக அரசியலை தனித்தே அதன் போக்கில் மட்டும் பார்தால் சில பரிமாணங்கள் புரியும்." 2. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நான் ஒரு அயல் நாட்டுத் தமிழனே இல்லை. எனக்கு இலங்கையின் வடக்கு கிழக்கை விட தமிழ்நாடு தான் அதிகப் பரிச்சயம். ஒப்பிடுகையில், அதிகமான ஆட்களை எனக்கு தமிழ்நாட்டில் தான் பழக்கம். நான் அவர்களின் தமிழைக் கூட சில வட்டாரவழக்குகளில் அப்படியே பேசுவேன். இதன் பின்னணி, எங்கள் பலரினதும் வாழ்வில் இருப்பது போன்ற, துன்பமும், அலைச்சலும் தான். இது ஒரு மகிழ்வோ அல்லது பெருமையோ கிடையாது. இவற்றை கதைகளாக எழுதினால் அனுதாபம் கிடைக்கும், ஆனால் அது என்னத்திற்கு................... அங்கிருக்கும் ஊர்கள் மட்டும் இல்லை, எம்மவர்களின் அகதி முகாம்களும் தெரியும். அங்கு தங்கியும் இருக்கின்றேன். எம்மவர்கள் ஏதாவது பிரச்சனைகள், சிக்கல்கள் வந்தால், அங்கே யாரிடம் போகின்றார்கள் என்றும் தெரியும். நிச்சயமாக நீங்கள் சொல்லும் ஆட்களிடம் இல்லை. அவர்களை நான் அங்கே பார்த்ததே இல்லை. தமிழ்நாட்டு அரசியல் பற்றிய என்னுடைய பார்வை தமிழ்நாட்டுக்காரர் ஒருவருடையதாகவே இருக்கின்றது. 'முல்லைப் பெரியாறு அணைக்காகப் போராடுங்கள், அது தான் முக்கியம்...............' என்று தான், என் தமிழ்நாட்டு நண்பர்கள் போலவே, நானும் நாதகவிற்கு சொல்கின்றேன்..............
  3. ஓணாண்டியாரின் மைன்ட் வாய்ஸ், அடேய்களா, கருத்து எழுதினாத்தானே நான் ஏறுக்குமாறா கதை சொல்லுவதை கண்டு பிடித்து எனக்கு மொக்காடு போடுவீங்க… இனி வெறும் வீடியோதான்…🤣 யாழ் சேவர் பிரண்டாலும் பரவாயில்லை. நீங்களாச்சு, நிராஜ் டேவிட் ஆச்சு🤣
  4. நாதம்ஸ் சும்மா “அடிச்சு” விடுகின்றீர்கள்😂🤣 தமிழ் தேசியம் வளர சீமானை ஒன்றும் தலைவர் கண்டடையவில்லை. புலிகளின் ஆவணப்படத்தை இயக்கக்கூடத் தெரிவு செய்யப்படவில்லை என்பதுதான் வரலாறு! தலைவர் தன் வழியில் தமிழ்த்தேசியத்தை முன்னெடுக்க ஒருவரும் இல்லை என்பதை உணர்ந்துதான் தனக்குப் பிறகு புலிகள் அமைப்பை மொத்தமாகவும், சில்லறையாகவும் பிரித்து எடுங்கள் என்று இறுதிக் கட்டங்களில் சொன்னார். அதை நேரில் கேட்ட யாழ் உறவையே புலிகளின் அமைப்பில் இல்லை என்று நிறுவும் போக்கும் இந்த யாழ் களத்தில் பார்ர்ததுதான்! இந்த ஆதரவு கொடுக்கும் போராளிகள் யார்? பையன், ஓணாண்டி, நாதம்ஸ்?😂🤣 விடுதலைப் புலிகளின் புலம்பெயர் அமைப்புக்களான அனைத்துலகச் செயலகமும், தலைமைச் செயலகமும் கூட சீமானைப் புறக்கணித்துவிட்டார்கள் அல்லது கண்டுகொள்வதில்லை. சேர்க்கை: 1993 இல் விடுதலைப் புலிகள் பத்திரிகை (புலிகளின் உத்தியோகபூர்வ பத்திரிகை) வைகோவை தமிழ்நாட்டில் தமிழ்த்தேசியத்தை முன்னெடுப்பவர் என்று கூறியது. ஆதாரம் இணைப்பில் உள்ளது: https://tamileelamarchive.com/article_pdf/article_0b5150d211e28e703c01866b7b0cc204.pdf
  5. இவ்வளவும் நடக்க சந்தர்ப்பம் உள்ளது அண்ணை. வருமானம் அதிகரிக்க வழி தெரியாமல் தவிக்கும் அரசிற்கு வழிகாட்டி என உங்கள் பெயர் வரவும் சந்தர்ப்பம் உள்ளது. கலியாண வீடு, சாமத்திய வீடுகளில் சத்தமாகப் போடும் பாடல்களில் இருந்து இதயத்தையும் கேட்கும் திறனையும் பாதுகாக்க கிட்டவே போவதில்லை!!
  6. அவுசின் வட மானிலப் பகுதிக்கு நிறைய இந்தோனேசிய படகுகள் நிறைய வந்து களவாக மீன் பிடிக்க வரும். சொல்லிப் பார்த்தார்கள். கேட்கவில்லை. மீனவர்களை வேறொரு படகில் பத்திரமாக ஏற்றி விட்டு, அவர்களது படகுகளை அப்படியே கடலில் வைத்தே கொழுத்தி விடுவார்கள். அவை எரிந்து அவ்விடத்திலேயே தாண்டு போகும். நோ மீடியா. நோ பப்பிளிசிற்றி…! பிரச்சனை தானே தீர்ந்து விட்டது. இப்போது அவர்கள் படகுகள் வருவதில்லை. சுறாவைப் பிடித்து, அதன் செட்டையை மட்டும் வெட்டி எடுத்துக் கொண்டு, சுறாவை உயிருடன் கடலில் போட்டு விடுவார்கள். இந்திய மீனவர்கள் போலத் தான், இவர்களும்…!
  7. @பாலபத்ர ஓணாண்டி, நிச்சயமாக உங்களுக்கும், வாலிக்கும் இடையான தர்கத்தில் தலையிடும் எண்ணம் இல்லை. ஆனால் சில விளக்கம் எனக்கு தரமுடியுமா? 1. இந்த ஓணாண்டி பெயரில் முதலில் உள்ளே வரும் போது, நான் இலண்டனில் சம்பளத்துக்கு வேலை பார்க்கிறேன், போராட்டம் பற்றிய அதிக தகவல்கள் தெரியாது, சைக்கிளில்தான் சுத்துகிறேன், அதிகம் தகமைகள் இல்லாதவன், பல கால யாழ் வாசகன், கோஷானை எனக்கு நல்லா பிடிக்கும், இப்போதுதான் எழுத ஆரம்பிக்கிறேன் என்பதே உங்கள் சுய அறிமுகமாக இருந்தது. காலப்போக்கில் நீங்கள் ஐடி துறையில் வல்லுனர் என்பதும், இலண்டனில் இருந்து மீண்டும் நாட்டுக்கு குழந்தை குட்டிகளோடு திரும்பும் அளவு வசதியானவர் என்பதையும் நீங்கள் சொல்லி தெரிந்து கொண்டோம். இது நீங்கள் இணையும் போது உங்களை பற்றி சொல்லியதற்கு (கட்டிய விம்பத்துக்கு?) மாறாக இருந்த போதும், மனதில் குறித்து கொண்டேன், கேட்கவில்லை. இப்போ நீங்களே முன்பு வேறு ஒரு ஐடியில் வந்து, மிகவும் வினைதிறனாகவும் செயல்பட்டவர் என்கிறீர்கள். தனிப்பட்டு உங்கள் மீது நான் வைத்திருந்த நம்பிக்கையை இது பலத்த கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. முடிந்தால் விளக்கம் தரவும். இல்லை கோஷான் எல்லாம் என்ன ஹைகோர்ட்டா - என கடந்து போனாலும், காரியமில்லை. 2. அமரதாஸ் பற்றி நீங்கள் சொல்லியது பாரிய குற்றசாட்டு. அதை நீங்கள் செய்த போது வேறு ஐடியில் இருந்தீர்கள் - இப்போ ஊரில் வசிக்கிறீர்கள். அந்த ஐடி வெளியில் வந்தால் ஆபத்து நேரலாம். இதை நான் முழுமையாக ஏற்கிறேன். ஆனால் நீங்களும் அந்த குற்றசாட்டை வீச முன்னர் இதை யோசித்து இருக்க வேண்டும். ஒருவரை குற்றம் சாட்டும் போது நம்மிடம் உள்ள ஆதாரத்தை நாம் வெளியிட தயாராக இருக்க வேண்டும். இல்லை எண்டால் குற்றசாட்ட கூடாது. இப்போதும் சொல்கிறேன்…உங்கள் பழைய ஐடி விபரம் எனக்கு தேவையில்லை. உங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தியேனும் அதை காணும் ஆவல் எனக்கு அறவே இல்லை. ஆனால் - நீங்கள் ஆதாரம் தரும் வரை அமரதாஸ் மீதான உங்கள் குற்றச்சாட்டை ஆதாரம் அற்ற பதிவு என்றே கருத முடியும். யாழ்களத்திலேயே எழுதாத அமரதாசை “வேணும் எண்டால் என்னுடன் கதைக்க சொல்லுங்கள்” என்பது “அண்ணை வந்ததும் காசை தாறோம்” டைப் லொஜிக்.
  8. எல்லோருக்கும் தலைவராக வர விருப்பம் இருக்கும். அரசியலில் தலைவராக வருவது இலகுவானதல்ல. ஜனவசியம் இருக்கவும் வேண்டும். முடிவுகளை உறுதியாககவும், சரியாகவும், வேகமாகவும் எடுக்கவும் வேண்டும். அதிகாரத்தைப் பாவித்து கட்சியைக் கட்டும்கோப்பாகவும் வைத்திருக்கவேண்டும். அப்படி ஒரு ஆளுமையுள்ள தலைவர் தமிழர்களின் தேசியக் கட்சிகளில் இல்லை!
  9. சா…இப்படி ஒரு திரி யாழில் ஓடி கனகாலம்…. டிவி டெக் எடுத்து பார்த்த அதே சிறுவன் கோஷானாக பாதி விளங்கியும், பாதி விளங்காமலும் பார்த்துகொண்டிருக்கிறேன்🤣
  10. நாங்களும் இதே மாதிரி ரிவியும் டெக்கும் வாடகைக்கு எடுத்து ஒரு வீட்டு முற்றத்தில் போடுவோம். இரண்டு மூன்று நாட்கள் முதலே அதற்கான ஒழுங்கும் செய்து ஊர் முழுவதும் செய்தியை பரப்பிவிடுவோம். கட்டணங்கள் எவ்வளவு வாங்கினோம் என்பதை மறந்து விட்டேன். குடும்பத்தில் ஒருவருக்கு மேல் இருந்தால் அவர்களுக்கு சிறிது தள்ளுபடி. பழைய நினைவுகளைக் கிளறிவிட்டீர்கள். விஞ்ஞானிகள் போல மட்டுமல்ல அந்தப் பகுதியில் மசிந்திக் கொண்டு நிற்பவர்களையும் உள்ளுக்கு போறதென்றால் போ இல்லாவிட்டால் மாறுமாறு என்று கலைத்து விடுவோம். தொடருங்கள்.
  11. கறுப்பு குறியிடப்பட்ட பகுதியை அழுத்துங்கள், பின்பு வருவது உங்களுக்கு நன்றாக புரியும் அண்ணை.
  12. வங்கத்தில் இந்தியா தலையிட ஒரே காரணம் - அது பாகிஸ்தானுக்கு ஆப்பு வைக்கும் தனது ஒரு எல்லையில் இருந்து பாகிஸ்தானை கிளப்பலாம் என்பதாலேயே. இலங்கை பாகிஸ்தான் இல்லை. ஆகவே யார் எப்படி தமிழ் நாட்டில் முக்கினாலும் இந்திய நலன் கருதியே முடிவு எடுக்கப்படும். 1987 இல் எம் ஜி ஆர், கருணாநிதி இருவரும் எதிர்த்த போதும் இலங்கைக்கு படைகளை அனுப்பினார் ரஜீவ். தான்னால் முடியவில்லை என புலிகளிடம் கைவிரித்தார் எம்ஜிஆர்.
  13. நீங்கள் பார்க்காததால் உங்களுக்கு ஒன்றுமே விளங்கவில்லை.
  14. பாடசாலை காலத்தில் எனது வகுப்பில் சிறப்பாக படிக்கும் ஒரு மாணவர் இருந்தார், அவர் ஆசிரியர்களிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக செய்கின்ற செயல்கள் கோமாளித்தனமாக எரிச்சல் ஊட்டுவதாகவும் இருக்கும், அவர் கவிதைகள் எழுதிகிறேன் என படம் காட்டுவார், ஒரு முறை என்னிடம் அவர் எழுதிய கவிதை என ஒரு கவிதையினை காட்டினார், அது ஏதோ காதல் கதை போல் இருந்தது பதில் சொல்லாமல் அவரை பார்த்துவிட்டு நகர்ந்துவிட்டேன். எமது வகுப்பிற்கு தொண்டராசியராக பாடசாலை படிப்பினை முடித்துவிட்டு ஒரு பெண்மணி பணியேற்றிருந்தார், வகுப்பு தொடங்கியது அவரிடம் அதே கவிதையினை அந்த மாணவர் கொடுத்தார், அதனை வாசித்துவிட்டு அவர் கேட்டார் விழியில் விழுந்து இதயம் நுழைந்து எனும் அலைகள் ஓய்வதில்லை பாடலை கொப்பியடித்திருக்கிறாயா என😁, அவர் சொன்ன பிறகே உணர்ந்தேன் உண்மையில் அந்த பாடலை சில சொற்களை மாற்றி அந்த கவிதையினை எழுதியிருக்கிறார் என.
  15. அர்ஜுனா தனக்கு அரசியல் பிடிக்காது என்றால், ஏன் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டவர். இவரின் செய்கைகளையும், உளறல்களையும் மக்கள் இனியும் ரசிக்கத் தயார் இல்லை என்றே நினைக்கின்றேன்.
  16. உயிருடன் இருக்கும்போது, "நான் செத்த பின்னர்" என்று ஒரு மனிதன் தானே யோசிப்பதோ, பேசுவதோ, எழுதுவதோ போற்றுதலுக்குரியது அல்லது ரசனைக்குரியதாக இருக்கலாம். உதாரணமாக மருத்துவக் கல்லூரிக்குத் தனது இறப்புக்குப் பின் உடலைத் தானம் செய்வதாக எழுதி வைப்பது போற்றுதலுக்குரியது. ஒரு மராட்டியத் திரைப்படத்தில் சற்று வயதான ஒரு பெண்மணி தமது இறப்புக்குப் பின் வீட்டில் மாட்டி வைக்க வேண்டிய தமது சிறந்த ஃபோட்டோவுக்காக மெனக்கிடுவது ரசிக்கும்படி இருக்கும். ஒரு நபர் தம் மரணம் பற்றி நகைச்சுவை கலந்து இடும் பின்வரும் பதிவும் ரசிக்கலாம் : ஆனால் "அவர் செத்த பின்னர்" என்று இன்னொருவர் பேசுவது சற்று வேடிக்கைதான். ஒரு வேளை மகிந்த ராஜபக்ச தம் உள்ளக் கிடக்கையை இன்னொருவர் மூலம் வெளிப்படுத்துகிறாரோ !
  17. அந்த முறை உலகம் முழுவதும் தடை விதிக்கப்பட்ட ஒன்று முடிந்தால் தமிழக கடற்கரையில் 1௦ மைலுக்குள் அதே இழுவை படகு களை ரோலிங் செய்து காட்ட சொல்லுங்க சிறு தொழில் செய்பவர்களுக்கும் ரோலிங் பன்னுவர்களுக்கும் பெரும் கலவரமே உருவாகிவிடும் . இப்படியான இலங்கையின் வடகிழக்கு ஆழம் குறைந்த சூரிய ஒளி இலகுவாக கடலின் அடி வரை செல்லும் இந்த இயற்க்கை சூழ்நிலை ஒரு வரம் மீன்கள் இலகுவாக இனப் பெருக்கம் அடையும் கருவறை இப்படியான கருவறையில் 1௦௦லிருந்து 15௦ தமிழக ரோலர்கள் சொல்லி வைத்தது போல் ரோலிங் பண்ணி கடலின் அடியை பாலைவனமாக்கும் செயலை யார் பொறுத்து கொள்வார் ? முதலில் ஆசியாவில் அரசியலில் ஈடுபடனும் என்றால் குறிப்பிட்ட படிப்பு தகுதி இருக்கணும் என்ற நிலையை கொண்டு வாருங்கள் .
  18. " ஒரே மகள் " எத்தனை பாஷை தெரிந்து என்னென்ன வசதி இருந்து என்ன பயன் ....பெற்றார் கவனிக்காமல் விட்டுவிடடார்கள் போலும்.
  19. பாடல் மூன்று - புத்தம் புது காலை பொன்னிற வேளை ----------------------------------------------------------------------------------- வீடியோ என்று சொல்லப்படும் சின்னத்திரையில் படங்களை ஓட விடும் காலம் அது. ஒரே இரவில் இரண்டு அல்லது மூன்று படங்களை அடுத்தடுத்து போடுவார்கள். அன்றைய நிலைக்கு பெரிய தொலைக்காட்சி என்பது 20 அங்குலங்களை விட சிறிது பெரிதாகவே இருந்ததாகவே ஞாபகம். ஒரு விசிஆர் கொண்டு வருவார்கள். அதை டெக் என்று சொல்வார்கள். அத்துடன் சில வீடியோ கேசட்டுகளும் வரும். இதைக் கொண்டு வருபவர்களும், இணைப்புகளைக் கொடுப்பவர்களும் விஞ்ஞானத்தின் உச்சியில் இருப்பவர்கள் போன்ற ஒரு பிரமை அன்று மனதில் இருந்தது. அதிலும் ஓடிக் கொண்டிருக்கும் படங்களில் வரும் குறுக்கு கோடுகளை இல்லாமல் செய்பவர் இன்றைய நாசாவின் தலைமை விஞ்ஞானி போன்று அன்று தெரிந்தார். ஊரில் ஒரு சின்னப் பாடசாலை அல்லது சுற்றிலும் அடைக்கப்பட்ட வெறும் காணிக்குள் இந்த வீடியோ படக்காட்சி நடக்கும். பெரியவர்களுக்கு ஒரு கட்டணம், சின்னவர்களுக்கு ஒரு சின்னக் கட்டணம் என்று அனுமதியின் விலை இருக்கும். பின்னர் தமிழ்நாட்டில் இருந்து கேள்விப்பட்ட 'தரை டிக்கெட்' தான் இது. தமிழ்நாட்டில் கிராமங்களில் உள்ள கொட்டைகைகள் எனப்படும் தியேட்டர்களில் மண்ணைக் சின்னதாக குவித்துப் போட்டு அதன் மேல் அமர்ந்து திரையில் ஓடும் படங்களை ஒரு காலத்தில் பார்த்திருக்கின்றார்கள். இங்கும் எங்கு இடம் கிடைக்கின்றதோ அங்கு அமர வேண்டியதுதான். பல வீடுகளில் படிக்கும் பிள்ளைகளை இந்த மாதிரியான வீடியோ படங்கள் ஓடும் இடங்களுக்கு போக அனுமதிக்கமாட்டார்கள். என் வீட்டில் அனுமதி இலவசம் தான், ஆனால் காசு கொடுக்கமாட்டார்கள். என்ன படம் என்றாலும் பார்த்தே தீர வேண்டும் என்ற அவா இருந்த நாட்கள் அவை. ஒரு சினிமாப் பைத்தியம் போல. அந்த வயதில் என்னவென்றே விளங்கியிருக்காத 'அக்ரஹாரத்தில் ஒரு கழுதை' என்ற படத்தை கூட முதலில் இருந்து முடிவு மட்டும் பார்த்திருக்கின்றேன். மனிதர்கள் அடிப்படையில் நல்லவர்கள் தான் என்ற நம்பிக்கையை ஆரம்பத்தில் கொடுத்த இடங்களில் ஒன்று இந்த வீடியோ காட்சிகள் நடைபெற்ற இடங்கள். அங்கே வாசலில் போய் அங்கேயே நிற்கவேண்டும். காசு கொடுத்துப் படம் பார்க்க வருபவர்களை எல்லாம் உள்ளே விடுவார்கள். பின்னர் அன்றைய முதலாவது படம் ஆரம்பிக்கும். படம் சிறிது ஓடிய பின், அங்கு இன்னமும் காத்துக்கொண்டு நிற்கும் என் போன்றோரை, இலவசமாக, உள்ளே விடுவார்கள். முதல் படத்தில் தான் ஒரு ஆரம்பப் பகுதியை பார்க்க முடியாது. ஆனால் மற்றைய படங்களை முழுவதும் பார்த்துவிடலாம். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக முன்னுக்குப் போய் வசதியான ஒரு இடத்தை கூட பிடித்தும் விடலாம். ஒரு படம் முடியும் முன்னமே நித்திரையாகிப் போகின்றவர்களும் பலர் உண்டு. 'இது என்ன கண்றாவி...............' என்று எழும்பிப் போகின்றவர்களும் உண்டு. கடைசி வணக்கம் காணாமல் கண் மூடாத கூட்டங்களாக சிலர் உடன் இருப்பார்கள். ஒரு நாள் நாங்கள் வேதப் பள்ளிக்கூடம் என்று சொல்லும் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் வீடியோ காட்சி போட்டார்கள். வழமையான அதே நடவடிக்கைகள் தான். முதல் படத்தின் இடையில் உள்ளே விட்டார்கள். 'அலைகள் ஓய்வதில்லை' என்று கார்த்திக்கும் ராதாவும் ஊரை விட்டு அந்தப் படத்தின் முடிவில் ஓடினார்கள். 'ஓடிப் போன பின் தானே இருக்கின்றது வாழ்க்கை..........' என்று பெரியவர்கள் சொல்லிச் சிரித்தனர். வாழ்க்கையில் கஷ்டங்கள் எல்லாம் சின்னவர்களுக்கே, பெரியவர்கள் அவர்களின் இஷ்டப்படி வாழலாம், இவர்களுக்கு என்ன கஷ்டம் வந்து விடும், இவர்கள் ஏன் இப்படிச் சொல்கின்றார்கள் என்று அப்போது பொதுவான ஒரு எண்ணம் மனதில் இருந்தது. அன்று இலங்கை வானொலியில் காலை 6:30 மணிக்கு செய்திகள் வாசிக்கப்படும். அதற்கு முன்னர் சில பாடல்களை ஒலிபரப்புவார்கள். இரண்டோ மூன்றோ பாடல்கள். இவை பெரும்பாலும் காலை நேரப் பொழுது பற்றிய பாடல்கள் அல்லது பக்திப் பாடல்களாக இருக்கும். 'அலைகள் ஓய்வதில்லை' என்னும் படத்திலிருந்து 'புத்தம் புது காலை பொன்னிற வேளை.......' என்று அந்தக் காலை நேரத்தில் கிறங்க வைக்கும் ஒரு பாடலை இடையிடையே ஒலிபரப்புவார்கள். ஆனால், நான் இந்தப் பாடலை அந்தப் படத்தில் பார்க்கவில்லை. நான் உள்ளே போகும் முன்னர் இந்தப் பாடல் முடிந்திருக்க வேண்டும் என்று தான் பல வருடங்கள் நினைத்து இருந்தேன். ஆனால் இளையராஜா இந்தப் பாடலை அந்தப் படத்திற்காக பதிவு செய்திருந்தார் என்றாலும், இந்தப் பாடல் அந்தப் படத்தில் இடம்பெறவே இல்லை என்ற தகவல் மிகவும் பிந்தியே எனக்கு தெரியவந்தது. காசு கொடுக்காமல் இலவசமாக ஒன்றை நுகர்ந்ததால் வந்த விளைவு இது என்றும் சொல்லலாம். கதை இத்துடன் முடியவில்லை. பின்னர் ஒரு புதுப்படம் ஒன்றில் ஒரு நடிகை, ராதா அல்ல வேறொரு நடிகை, ஒரு வீட்டுக்குள் இருந்து இந்தப் பாடலை பாடும் காட்சி இருந்தது. அதில் இரண்டு பிரச்சனைகள் இருக்கின்றன எனக்கு. ஒன்று, இந்தப் பாடல் எப்படி இந்தப் படத்தில் வந்தது என்று. இரண்டாவது, இந்தப் பாடலுக்கான என் மனதில் இருந்த காட்சியை இந்தப் புது இயக்குனர் சுக்குநூறாக உடைத்துப் போட்டாரே என்ற ஏக்கம். ஒரு பெண் 'புத்தம் புது காலை, பொன்னிற வேளை..........' என்று வீட்டுக்குள் இருந்து நடனமாடுவதை ஏற்றுக் கொள்வது இன்றுவரை சிரமமாகவே இருக்கின்றது. ஆகக் குறைந்தது, வீட்டுக்கு வெளியே நின்றாவது அந்த நடிகை இந்தப் பாடலுக்கு நடனமாடியிருக்கலாம் என்று தோன்றுகின்றது.
  20. இந்த திரியை வாசிக்கும் போதே, இந்த பழைய புத்தக வாசத்தை நீங்கள் மோப்பம் பிடித்து வர எவ்வளவு நேரம் எடுக்கும் என யோசித்தேன்🤣. இதோ வந்துட்டியள்🤣 எனக்கு தெரிய (நான் வாசித்த மட்டில்) இருவர் இதற்குள் அடங்குவார்கள் என நினைக்கிறேன். 1. தோப்பில் முகம்மது மீரான் 2. செங்கை ஆழியன்
  21. 🤣..................... காதல் கவிதைகள் என்றாலே அது வாசிப்பவருக்கான ஆக்கம் என்ற அறிதல், எல்லாம் கடந்து போன இந்த வயதில் இன்று தான் எனக்கு வந்திருக்கின்றது.......................😜. நான் படித்த பாடசாலையில் உயரத்தின் படியே முன்னிருந்து இருக்கவிடுவார்கள். இது ஒவ்வொரு வருடமும் பாடசாலை முதல் நாளில் நடக்கும். வரிசையில் எனக்கு பின்னல் பெரிய தள்ளுமுள்ளே நடக்கும். யார் உயரம் என்று................நான் எதுவுமே பேசாமல், வரிசையில் அமைதியாக முதல் ஆளாக நிற்பேன்...............🤣. ஆமாம், வில்லவன், அவர் இந்த இரு வகைக்குள்ளும் இல்லை. பெரிய இடைவெளி விட்டிருக்கின்றார் என்று தான் அவரின் விபரங்களில் இருக்கின்றது. அடுத்த சில நாட்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக அவரை வாசிப்பதாக உள்ளேன்.................
  22. 👍..... நன்றி வில்லவன். விமலாதித்த மாமல்லனை நான் மறந்தே போயிருந்தேன். நீங்கள் இப்பொழுது குறிப்பிட்ட பின், மிக விரைவாக அவருடைய விபரங்களை தேடிப் பார்த்தேன். அவருடைய சில சிறுகதைகளை வாசித்திருக்கின்றேன். ஆனால் விமர்சனக் கட்டுரைகளை வாசித்ததில்லை என்றே நினைக்கின்றேன். முன்பு 'வினவு' ஒரே குழுமமாக இருந்த போது, அதில் வாரா வாரம் இந்தப் பக்கம் இருப்பவர்களை கும்மி வைத்திருப்பார்கள். தீவிர இடதுசாரிகளின் எழுத்துநடை மிகப் பிரபலமானது தானே..............🤣. யாழ் களம் எல்லாம் ஒன்றுமேயில்லை அவர்களுடைய 'எழுத்து அடிகள்' முன்னால்.............. தேவநேயப் பாவாணரின் வழிவந்த தனித்தமிழ் குழுமத்தில் ஒரு நண்பன் இருக்கின்றான். ஊரில் என்னுடன் ஒன்றாகப் படித்தவன் தான். அப்பொழுதெல்லாம் அவனுக்கு தமிழில் எந்த ஆர்வமும் சுத்தமாக இருக்கவில்லை. பின்னர் வாழ்க்கையில் ஏதேதோ நடந்து, இப்பொழுது தனித்தமிழ் என்று வாழ்கின்றான். இந்தக் குழுமமும் எழுத்தில் எதிராளிகளைத் தாக்குவது என்று முடிவெடுத்தால், மரண அடி தான் அடிக்கின்றார்கள். நான் இந்தப் பின்நவீனத்துவவாதிகளின் ரசிகன் என்று சொல்லி, எனக்கும் இடைக்கிடை அடிப்பான் என் நண்பன். நம்மளையும் மதித்துதானே மிதிக்கின்றான் என்று நட்பை விடாமல் தொடர்ந்து கொண்டிருக்கின்றேன்...................🤣. விமலாதித்த மாமல்லனின் விமர்சனக் கட்டுரைகளை தேடி வாசிக்கின்றேன்.............👍.
  23. விமலாதித்த மாமல்லன் அண்ணை. இவர் நீங்கள் குறிப்பிட்ட பின்னவீனப் புரட்சியாளரையும் பிரித்து மேய்ந்துள்ளார், பல முறை 😁.
  24. 😂 கொஞ்சம் மூச்செடுத்து விடுங்கள், இப்போது வாசியுங்கள். முதலில் கோசானையும், ஜஸ்ரினையும் கோத்து விட்டுக் கூத்துப் பார்க்கிற உங்கள் குதர்க்கப் பார்வையை நிராகரிக்கிறேன். எங்களிடையே அடிப்படை ஒற்றுமை ஒரு விடயத்தில் உண்டு: "எருமை மாடு பறக்கிறது" என்ற ரீதியிலான கருத்துகளைக் கண்டால் நேராகக் கேள்வி கேட்கும் பழக்கம் ஒன்றே அந்த ஒற்றுமை. (ஜஸ்ரினைப் பிடிக்காமல் போனதால், விஞ்ஞான அறிவையே தூக்கிக் கடாசி விட்டு நாசாவைக் குழுவாகப் போட்டுத் தாக்கும் அளவுக்கு குழுவாதம் இருக்கும் யாழ் உறவுகளை விட கோசான் ஜஸ்ரின் ஒற்றுமையொன்றும் ஆரோக்கியமற்ற குழுவாதம் அல்ல!) உங்கள் பிரச்சினை நானோ, குழுவாதமோ, இணைய இம்சையோ அல்ல. ஆதாரமேயில்லாத அண்டப் புழுகுகளையெல்லாம் சொலிட்டான கருத்தாக இங்கே பதிந்து விடுவீர்கள். கேள்வி கேட்டால் cyber bullying என்று புதிதாக நீங்கள் கண்டு பிடித்திருக்கும் சொற்களின் பின்னால் ஒளிந்து கொள்வீர்கள். இவையெல்லாம் ஆதாரமற்றவை என்று உணரும் பொதுப்புத்தி உங்களிடம் நிறையவே இருக்கிறது, ஆனாலும் ஒரு சராசரி தமிழ் நாட்டு அரசியல்வாதியின் தொடர் பொய்களை தூக்கி நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் இவற்றை பல வருடங்களாக யாழில் தொடர்ந்து பரப்பி வருகிறீர்கள். இதை முகநூல், இன்ஸ்ரா, ரிக் ரொக்கில் செய்யலாம், யார் கேட்கப் போகிறார்கள்? யாழில் செய்தால் கேள்வி வருவது தவிர்க்க இயலாதது. பிரச்சினை இருந்தால் அப்படியே நிர்வாகத்திடம் முறைப்பாடு செய்து விடுங்கள்!
  25. புலம் பெயர் ஈழத்தமிழரை ஏமாற்றி மக்களின் பணத்தை திருடிய திருட்டு கூட்டங்களே இன்று சீமானுக்கும் வக்காலத்து வாங்குகின்றன. தாம் திருடிய பணத்தில் ஒரு சிறு பகுதியை தமிழ் நாட்டில் இருக்கும் சீமானுக்கு அள்ளி வீசி அந்த பணத்தை பெற்ற புளுகத்தில் சீமான் அங்கு குறளிவித்தை காட்ட பணத்தை தம்மிடம் பறி கொடுத்த மக்களுகளுக்கு சீமானை வைத்து என்ரெரெயின் கொடுத்தால் முடியுமான அளவுக்கு இன்னும் மக்களுடம் திருடலாம் என்ற காரணமே சீமானுக்கு முட்டுக்கொடுக்கும் திருடர்களின் நோக்கமாக இருக்கலாம். சீமானும் வாங்கிய பணத்திற்கு நல்லா தான் வித்தை காட்டுது.
  26. வி.மா., மேற்குறிப்பிட்டவருடைய கவிதா, காலேட்சபங்களை போட்டு மிதித்திருப்பார். வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு 🤣.
  27. கொப்பி அடிப்பதை புகழ் பெற்ற கவிஞர்களே செய்கிறார்கள். தொழிலாளி திரைப்படத்தில், கவிஞர் ஆலங்குடி சோமு, “ஆண்டவன் உலகத்தின் முதலாளி அவனுக்கு நான் ஒரு தொழிலாளி..” என்றொரு பாடல் எழுதியிருந்தார். ரஜினி படத்தில், “ ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி..” என வைரமுத்து எழுதியிருப்பார்
  28. பாடப் புத்தகங்களில் இருக்கும் புலவர்களுடையதை போன்ற ஒரு நடை, கோபி.................👍.
  29. இலங்கையில் மதுபானத்தக்கான வரி, வீட்டில் வெளிநாட்டு வகை நாய், மீன் வளர்ப்போருக்கான வரி, போக்குவரத்து விதிகளை மீறுவோர்க்கான தண்டப்பணம், கள்ள இந்திய மீன் பிடிக்காரர்களிடம் அறவிடும் பணம், ஆகியவை அதிகரிக்கப் பட வேண்டும். இது தவிர சுற்றுலாப் பயணிகளுக்கான மருத்துவச் செலவுக்கான பணம்,வீட்டில் சத்தமாக பாட்டுப் போடுவோருக்கு ஒலி மாசடைவதால் அதற்கு ஒரு வரி, சந்தியில் நின்று கூ அடிப்பவர்களுக்கு தனியே ஒரு தண்டப் பணம், you tube இல் கதைத்தே உழைக்கும் ஆட்களுக்கு வரி, social media பாவிப்பவர்களுக்கு வரி, காணி இருந்தும் தோட்டம் செய்யாதவர்களுக்கு வரி, வேலை செய்ய சகல தகுதிகளும் இருந்தும் வெளிநாட்டுக் காசில் வாழும் ஆட்களுக்குத் தண்டப் பணம் ( சமூகத்தில் சோம்பேறித்தனதுக்கு காரணமாவதால் ), இலவசமாய் படித்து விட்டு வேலையும் அரசாங்கம் கொடுக்க வேண்டும் என்று கேட்கும் பட்டதாரிகள் போராடினால் அதற்கு ஒரு வரி, make up போட்டு சாம்பாதிக்கும்,icing cake செய்து சாம்பாதிக்கும் ஆட்களுக்கு என்று தனி வரி,என்று நாட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் முக்கியமாக ஊரில் சமூக சீரழிவுகளுக்கு காரணமான சீமான் ஆதரவாளர்களுக்கும் அஜித் ரசிகர்களுக்கும் என்று என்று தனி வரி போட்டால் இன்னும் நல்லம்
  30. இது வரை சிறி லங்கா 16 பிரதமர்களையும் , 10 ஜனாதிபதிகளையும் கண்டிருக்கிறது. யார் உருமறைப்புச் செய்த "தமிழர்கள்"?
  31. இது வரவேற்க வேண்டிய. விசயம்,.. விடயம் மண்டையைப் போடும் வரை அரசியலில் இருப்பவர்கள் தன்னுடைய பிள்ளைகள் மருமக்கள். பேரப்பிள்ளைகள். பூட்டப்பிள்ளைகள். என்று அனைவரையும் அரசியலுக்கு இழுந்து வருபவர்கள் பிழைப்பு வாதிகள்,......அரசியல்வாதிகள் பாடசாலை மாணவர்கள் மாதிரி இருக்க முடியாது உண்மைக்காக. உரிமைக்காக அடிபட. வேண்டும் இதிலென்ன நாகரிகம் பண்பாடு பார்ப்பது??? அப்படி பார்த்தால் உரிமையும் உண்மையையும். பெற்றுவிட முடியாது 🙏
  32. கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 250 பட்டதாரிகளுக்கு பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று (30) திருகோணமலை -உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. 2024 போட்டிப்பரீட்சை நடாத்தப்பட்டு அதிலிருந்து 1000 பேர் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இதன்போது நேர்முகப் பரீட்சையிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 250 பேருக்கே ஆசிரியர் நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இதில் அம்பாறை மாவட்டத்திலிருந்து சிங்கள மொழிமூலம் 34 பேரும் தமிழ் மொழிமூலம் 61பேரும் , மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மொழிமூலம் 94 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் சிங்கள மொழிமூலம் 19 பேரும் தமிழ் மொழிமூலம் 42 பேருக்குமாக மொத்தம் 250 பேருக்கான ஆசிரியர் நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன. ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்ன சேகர, வெளிவிகார வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர் எம் பி எஸ் ரத்நாயக்க ,கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 250 பட்டதாரிகளுக்கு பட்டதாரி ஆசிரியர் நியமனம் | Virakesari.lk
  33. சிங்களவர் பார்வை நான் அறிந்த வரையில் சிங்களத்தில், தமிழர் = திரவிட. ஆங்கிலத்தில் interchangeable என்பார்கள். தமிழில் ஒத்த சொல் எனலாம். இன்றும் அதேதான் நிலமை. தெமள, தெமிலோ என்பன சற்றே மரியாதை குறைந்த விளிப்புக்களாயும், திரவிட என்பது அதே மக்களை மரியாதையா விழிப்பதாகவுமே அமைக்கிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பை - திரவிட சங்விதானய அல்லது திரவிட ஜாதிக சங்விதானய என்றே இன்றும் அழைப்பர். ஆனால் உண்மை இப்படி இல்லை என நாம் அறிவோம். தமிழகத்திலோ, ஈழத்திலோ நம்மை யாரும் நீங்கள் யார்? என கேட்டால் நாம் திராவிடர் என நாம் சொல்வதில்லை. தமிழர் என்றே சொல்வோம். முன்பும் கூட குமாரசாமியை சிங்களவர் திராவிட என அடையாளப்பசுத்தினாலும் நாம் தமிழர் என்றே அடையாளப்படுத்தி உள்ளோம். இதை குடிசன மதிப்பீடுகளில் காணலாம். இது வழமையானதே. உதாரணமாக - ஆங்கிலேயர்கள் அநேகர் - ஆங்கிலோ-சக்சன் (ஜேர்மன்) + நோர்மன் (பிரெஞ்) வழி வந்தவர்கள். ஆனால் அவர்கள் இனம் என்ன என கேட்டால் - ஆங்கிலேயர் என்பதே பதிலாக வரும். அதே போல ஐரிஷ், ஸ்கொட்டிஷ், வேல்ஸ் காரர் செல்டிக், அல்லது கெல்டிக். ஆனால் கேட்பின், மூன்று தனி இனப்பெயர்களான ஸ்கொடிஷ், ஐரிஷ், வெல்ஷ். இதே போல ஒரு பகுப்பே திராவிடம் என்பது. ஒரே வித்தியாசம். கெல்டிக் அடையாளத்தை அவர்கள் ஏற்பது போல் அன்றி, நாம் திராவிடம் என்பதே தொல் தமிழ்தான் என்கிறோம். இது உண்மையும் கூட. துளு, கன்னடம், தெலுங்கு, மலையாளம் அனைத்துமே தமிழின் குழந்தைகள்தான். ஆகவே திராவிடம் என்பதன் பொருள் தொல்தமிழ் என்பதே என் நிலைப்பாடு. ————— அரசியல் மொழிவழி மாநில பிரிவுக்கு முன்னர் அகண்ட மெட்டிராஸ் பிரசெடென்சியில் “தமிழ் தேசியத்தை” அரசியலாக முன்னெடுத்தால் அது மக்களின் 1/3 காண அரசியலாக சுருங்கி இருக்கும். எனவேதான் திராவிட அரசியல் முன்னெடுக்கப்பட்டது. அத்தோடு திக ஒரு அரசியல்கட்சியும் அல்ல. பெரியார் வாக்கு அரசியல் செய்யவும் இல்லை. ஆனால் அவர் முன்னெடுத்த கொள்கைகள் திராவிட கொள்கைகள் என ஆகிவிட்டன. ஆகவே கட்சிகளில் இருக்கும் “திராவிடம்” கொள்கையை குறிப்பதே. கம்யூனிசம், சோசலிசம், ….இப்படி.
  34. பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி 11 நல்லநாள்: மனிதனுக்கு தான் செய்யும் செயல்கள் அனைத்திலும் வெற்றி பெறவேண்டும் என்ற ஆசை இயல்பாகவே இருக்கிறது. தான் தொட்டது அனைத்தும் துலங்கவேண்டும் என்ற விருப்பம் இருப்பதில் தவறில்லை. ஆனால் செய்யும் செயல்கள் தோல்வியாய் / பிழையாய் போய்விடுமோ என்ற ஐயம் அவனை பல விடயங்களில் அலைக்கழித்து வருகிறது. கால நேரம் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது என்ற எண்ணம் அவனிடத்தில் ஆழமாகப் பதிந்திருக்கிறது. அதுவே இப்படியான நாள் நாள் / நல்ல நேரம் நம்பிக்கைகளை ; வலுபடுத்துகிறது என நினைக்கிறேன். எனவே கால நேரமும் அவனை வெகுவாக ஆட்டிப்படைக்கிறது. காலமும் நேரமும் தன்னைக் காப்பாற்றும் என அவன் நினைப்பது விசித்திரமாக இருக்கிறது! அகநானூறு 86 "கனைஇருள் அகன்ற கவின்பெறு காலைக், கோள்கால் நீங்கிய கொடுவெண் திங்கள் கேடில் விழுப்புகழ் நாள்தலை வந்தென, உச்சிக் குடத்தர், புத்தகன் மண்டையர்" திங்களினை ஒத்த உரோகிணி கூடிய நன்னாளில் அதிகாலையில் திருமணம் நிகழ்ந்துள்ளதனை அறிய முடிகிறது.. அகநானூறு 136 "புள்ளுப் புணர்ந்து இனிய ஆகத் தெள்ஒளி அம்கண் இருவிசும்பு விளங்கத், திங்கட் சகடம் மண்டிய துகள்தீர் கூட்டத்துக், கடிநகர் புனைந்து, கடவுட் பேணிப்," இப்பாடலடிகளிலும் திருமண உறவுக்கு நல்ல நாள் குறிப்பிடப்பட்டுள்ளமையை அறிய முடிகின்றது. நல்ல நாளிலும், அதிகாலைப்பொழுதிலும் மணம் நடைபெற்றுள்ளது. போர் செய்யப்போகும் மன்னன் நல்ல நாளில் குடையையும் வாளையும் செல்ல வேண்டிய திசையில் எடுத்து வைப்பான். வாள்நாள் கோள், குடநாள் கோள் என்று தொல்காப்பியரும் இதைக் குறிப்பிடுகிறார். நெடுநல்வாடை ,பாண்டிய மன்னனின் அரண்மனையைப் பற்றிக் கூறும்போது நாழிகை வட்டிலிலுள்ள [பழங்காலத்தில் நாடாண்ட மன்னர்கள் நேரத்தைத் தெரிந்து கொள்ள பயன்படுத்திய காலத்தைத் தெரிந்து கொள்ள பயன்படுத்திய ஒரு சாதனமே 'நாழிகை வட்டில்' என்றழைக்கப்பட்டது.] இரு கோல்களின் நிழல்களும் ஒரே நேர் கோட்டில் விழும் நாளில் [இரு கோலினை நட்டு அதன் நிழல் மாறுபடாது நிற்கின்ற நண்பகல் பொழுதில் / கதிரவன் நேர்மேலே இருக்கும் நாளில் தான் இது நிகழும்] அந்த அரண்மனைக்குக் கால்கோள் [foundation /தொடக்கம்] நடத்தினர் என்று கூறுகிறது. ”விரிகதிர் பரப்பிய வியல்வாய் மண்டிலம் இருகோல் குறிநிலை வழுக்காது குடக்குஏர்பு ஒருதிறம் சாரா அரைநாள் அமயத்து நூல்அறி புலவர் நுண்ணிதின் கயிறுஇட்டு தேஎம் கொண்டு, தெய்வம் நோக்கி‘ பெரும்பெயர் மன்னர்க்கு ஒப்ப மனைவகுத்து (72 – 78)” அதாவது,"சூரியன் மேற்கு நோக்கி உயர்ந்து எழுந்து ஒரு பக்கம் நிழல் சாராத வேளையில், இரு கோலினை நட்டு அதன் நிழல் மாறுபடாது நிற்கின்ற நண்பகல் பொழுதில், கட்டடக்கலை பற்றிய நூல்களைக் கற்றுத் தேர்ந்தோர், நுட்பமாக நூல் பிடித்துப் பார்த்து, திசைகளைத் தெரிந்து, அத்திசைகளுக்குரிய தெய்வங்களையும் கருத்தில் கொண்டு, பெரிய புகழினையுடைய மன்னர் வாழ்வதற்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்ட அரண்மனை" என்கிறது நெடுநல்வாடை. தலைவியை இரவுக்குறியிலோ பகற்குறியிலோ சந்திக்கச் செல்லும் தலைவன் ‘இன்றைக்கு என்ன நாள்? இப்பொழுது என்ன ஓரை?’ என்று நாள், கிழமை, சகுனம் பார்த்துப் போவதைத் தொல்காப்பியர் அழகாகச்சொல்வார். "மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும் துறந்த ஒழுக்கம் கிழவற்கு இல்லை" (133 களவியல்) "ஓரை"யை இக்காலத்தில் "முகூர்த்தம்" என்கிறோம். எனது வயது போன அயலவர் ஒருவர் எமது வீட்டிற்கு ஒரு வெள்ளி கிழமை அன்று வரும் போது, நான் இரண்டு நீண்ட தடிகளை இணைத்த கொக்கத்தடி ஒன்றினால், சிலந்தி வலைகளையும் தூசுகளையும் சிலிங் அற்ற கூரையில் இருந்து அகற்றி கொண்டு இருந்தேன். இன்று வெள்ளி. துப்பரவு செய்ய கூடாது. இது துடக்கு என்று என்னை நிறுத்த சொன்னார். அது மட்டும் அல்ல பெரும்பான்மையான மக்கள் பணம் கொடுப்பனவோ அல்லது சொத்துகள் விற்பனைவோ அல்லது வீட்டை காலியோ செய்ய மாட்டார்கள். அது போல வியாழக்கிழமை முதற் தரம் வரும் விருந்தாளிக்கு பொருத்தம் அற்றது என்பார்கள். அது போல செவ்வாய் கிழமையும் ஆகும். பண்டைய காலத்தில் ஒரு ஆசிரமம் (ashram) இருந்தது, அதில் ஒரு குருவும், சில சீடர்களும் இருந்தார்கள், தினமும் அவர்களுக்கு குரு பாடம் எடுப்பது வழக்கம், ஒரு நாள் பாடம் எடுக்கையில் ஒரு பூனை குருவுக்கு குறுக்கும் நெடுக்குமாக போய் தொந்தரவு கொடுத்தது, குரு சீடர்களிடம் அந்த பூனையை பிடித்து ஒரு தூணில் கட்டச்சொன்னார், பாடம் முடிந்ததும் பூனை அவிழ்த்து விடப்பட்டது, மறுநாள் பாடம் ஆரம்பிக்கையில் மீண்டும் அதே பூனை தொந்தரவிற்கு வந்தது, இம்முறை குருவின் பார்வையே போதுமானதாக இருந்தது பூனை மீண்டும் தூணுக்கு போக, அதற்கு மறுநாள் பாடம் ஆரம்பிக்கும் முன்னரே பூனை தூணில் கட்டபட்டது, சரி பூனை தொந்தரவு செய்தது தூணில் கட்டினார்கள், இதிலென்ன மூடநம்பிக்கை என்கிறீர்களா? அங்கே தான் இருக்கு ஒரு கதையே, ஒருநாள் அந்த பூனை செத்து விட்டது, விடுவார்களா சீடர்கள், வேறு ஒரு பூனையை தேடி பிடித்து வந்து தூணில் கட்டினார்கள் என்றால் பாருங்களேன்! ஏன் செய்கிறோம், எதுக்கு செய்கிறோம் என்ற ஒரு உணர்வும் இல்லாமால், காலம் காலமாக செய்கிறோம் அதனால் தொடர்கிறோம் என்பது தான் மூடநம்பிக்கை என்று அழைக்கபடுகிறது, உலகின் எல்லா பகுதி மக்களிடமும் எதாவது ஒரு வகையில் மூடநம்பிக்கை இருந்து கொண்டு தான் இருக்கிறது, கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரித்து அறிவதே மெய்யென வாழ்தலே ஆறறிவுக்கு நாம் செய்யும் மரியாதையாக அமையும் என்று கருதுகிறேன். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி 12: "கனவுகள்" தொடரும்
  35. மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவைச் சேர்ந்த 24 வயதான பாடிபில்டர் சுரஜ் கெய்வால் வாழ்க்கையில் ஒரு துயரம் நடந்தது. ஆனால், அது வாழ்க்கையையே மாற்றும் என இவர் எதிர்பார்த்திருக்கமாட்டார். எலக்ட்ரிக் ஷாக் அடித்ததில் இவருக்கு வலது கை மற்றும் இரண்டு கால்கள் பறிபோயின. ஆனால், அது எதுவும் இவரை தடுத்து நிறுத்தவில்லை. இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு காணொளி
  36. இது நல்ல வேலை. மீடியா இருந்தால் தானே ஊதி பெருப்பித்து எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றுவார்கள் 😂
  37. புரிதல், பட்டறிவு இல்லாமல், செவ்வியன் கருத்து வைப்பதாக தோன்றுகிறது! பங்களாதேச விடுதலைக்கு காரணம், அதே வங்க மொழி பேசிய இந்திய மேற்கு வங்க மாநில முதல்வர், சங்கரரே. மத்திய அரசின் மீது பெரும் அழுத்தம் கொடுத்தார். இறுதிப் போரின் போது, சோனீயா குடும்பத்திடம் நல்ல பெயர் வாங்க, தமிழரை அழிய விட்டார், திராவிடர் கலைஞர். இந்த முடிவு தான் வரும் என்று தான், தமிழ் தேசியம் அங்கே வளர வேண்டும் என, தலைவர் விரும்பினார். தேடலில் ஒருவரை கண்டார். இன்று, அங்காங்கே இருக்கும் போராளிகள் அந்த, தலைவரின் தெரிவுக்கு ஆதரவுக் கருத்து திருப்தியுடன் தரும் போது, இங்கே எதிர்பவர்கள் கருத்துகள், அவர்களது தனிப்பட்ட கருத்துகளாக எடுக்க வேண்டிய நிலைக்குள்ளாகிறது.
  38. ஏன் தலையிடுவதில்லை என யோசித்தால் நாம் செல்லும் பாதை சரியா என்பது விளங்கும். தமிழ்நாடு இந்தியாவின் ஒரு மாநிலமாக இருக்கும்போது அங்கே தமிழ்தேசியம் எப்படி சாத்தியமாகும். அங்கு யாரும் தமிழ் தேசியம் அமைக்க தனிநாடு கேட்டுப் போராடவில்லை, இந்திய தேசியத்திற்கு உட்பட்டு கட்டுப்பட்டு மாநில அதிகாரத்திற்கே தேர்தலில் போட்டி போடுகிறார்கள். அப்புறம் எப்படி அவர்கள் இங்கே ஒரு மாற்றத்தை கொண்டு வரமுடியும்? அதற்கான அதிகாரம் அவர்களுக்கு இருக்கிறதா? அவர்களின் மாநில தேவைகளுக்கான உரிமையை நிறைவேற்றி கொள்ள அதிகாரமில்லாதவர்களால் ஈழத்தில் என்ன சாதித்துவிட முடியும்? அரசியல் அதிகாரங்களை தாண்டி குறைந்தபட்சம் ஈழத்தின் நடக்கும் அன்றாட அவலங்களையும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் வலிகளை பற்றியும் தமிழக மக்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த நாம் தமிழர் நடத்திய கருத்தரங்குகளோ, கூட்டங்களோ எதுவும் உண்டா? தமிழ்நாட்டின் நடக்கும் நிகழ்வுகளை கண்டா வடகிழக்கில் தமிழ்தேசியத்திற்கான ஆதரவு குறைந்தது? இங்குள்ள மக்களின் தேவைகளை பேசாவிட்டால், இன்றை இளைஞர்களுக்கு நம்பிக்கை ஊட்டாவிட்டால் வரும் காலங்கில் ஆதரவு தளம் மிகவும் குறையும். கடந்த கால போராட்டங்களை மறந்து வருங்காலத்தினர் 'நாங்களா உங்களை போராடச் சொன்னோம்' என எளிதாக கேட்டுவிட்டு எளிதாக கடந்து சென்றுவிடுவர். இதை இப்போதே பார்க்க முடிகிறது.
  39. இதைப் பற்றி ஒபாமாவே தனது சுய சரிதையில் எழுதியுள்ளார். தனக்கு ஏன் நோபல் பரிசு தந்தார்கள் என்று விளங்கவில்லை என்று கூறியுள்ளார். மனைவியிடமும் காரணம் உனக்காவது தெரியுமா என்றும் கேட்கிறார்.
  40. சாத்திரி ஒரு நாவலாசிரியர். சுமே அன்ரியும் எழுதுவா. இன்னும் ஓரிருவர் உளர் என நினைக்கிறேன்.
  41. மாவிட்டபுரத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா அவர்களின் புகழுடலுக்கு சிறீதரன் எம்பி அஞ்சலி செலுத்தினார்!
  42. எம்மவர்கள் எழுதும் புலம் பெயர்ந்த இலக்கியங்களை புலம்பல் அல்லது கோஷம் என்று மிக இலேசாக ஒதுக்கித் தள்ளும் ஒரு போக்கு தமிழ்நாட்டு இலக்கியவாதிகளிடையே இருப்பதை அவதானித்து இருக்கின்றேன். இதை அவர்கள் இதே வார்த்தைகளை பயன்படுத்தியே எழுதி, சொல்லியிருப்பார்கள். தாய்மண்ணையும், சொந்தங்களையும் பிரிந்த ஒரு புலம்பல் அல்லாவிட்டால் வெறும் இலட்சிய கோஷங்கள் என்று வகைப்படுத்து விட்டு, இவை இலக்கியங்கள் இல்லை என்று விமர்சித்து இருக்கின்றார்கள். முக்கியமாக நாங்கள் எழுதும் கவிதைகளை, கவிஞர்களை பூச்சி மருந்து அடித்து அழிக்க வேண்டும் என்று ஒருவர் இலேசாகச் சொல்ல, அது பெரிய விவாதம் ஆனது. எங்களின் கதைகள், நாவல்களும் இந்த மதிப்பீட்டில் இருந்து தப்பவில்லை. நாங்களும், எங்களின் பங்கிற்கு, புலம் பெயர்ந்த இடங்களில் இருந்து எழுதுபவைகளில் மிகப் பெரும்பானமை இந்த வகையே. அதிலும் கவிதைகள், இந்த இரு வகைகளையும் தவிர வேறு வகையானதை தேடி எடுப்பதே சிரமம்தான். சமீபத்தில், தமிழ் இலக்கிய உலகில் பிரபலமான இரண்டு எழுத்தாளர்களுக்கு இடையே பிரச்சனையாகிவிட்டது. இருவரும் பின்நவீனத்துவவாதிகள், ஒருவர் ஈழத்தவர், மற்றவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இருவருக்கும் வாசகர்கள் உள்ளனர். இருவரும் விருதுகளும் பெற்றவர்கள். தமிழ்நாட்டு இலக்கியவாதி ஈழத்து இலக்கியவாதியை ஒரு ஜூனியர் விகடன் நிருபர் என்றே பார்க்கலாம் என்றார். நடந்த சம்பவங்களை அப்படியே எழுதும் ஒரு சாதாரண நிருபர் இவர், இவர் எழுதுவது இலக்கியமே கிடையாது என்கின்றார். ஈழத்து இலக்கியவாதி தமிழ்நாட்டு இலக்கியவாதியை வெறும் பாலியல் எழுத்தாளார், போர்னோ ரைட்டர், என்று சொல்கின்றார். இவர் எழுதுவது பாலியல் வறட்சி உள்ளவர் ஒருவர் எழுதும் சாதாரண பாலியல் கதைகள், இவை இலக்கியமே கிடையாது என்கின்றார். இருவரின் ஆக்கங்களையும் நான் வாசித்திருக்கின்றேன்.
  43. இல்லை ஏதும் கிடைக்குமா எண்டு நாக்க தொங்க போடுற ஆக்களும் முக்காடு போட்டிருக்கிறவை..அதான் சொன்னன்..🤣
  44. கடந்த அரசுகளால் வழங்கப்பட்ட தீர்வுகளை நடைமுறைப்படுத்த விடாமல் தடுத்ததில் பெரும் பங்கு வகித்தது ஜேவிபி தானே? அரசுகள் ஒருபக்கம் தீர்வை எழுதும்.மறுபக்கம் சண்டியர்களான பிக்குகளையும் ஜேவிபியையும் தூண்டிவிடும். கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி நீங்களும் சன்னதமாடுவீர்கள்.
  45. பிரபாகரன் சீமானை எவ்வளவு நேரம் சந்திக்கபோகிறேன் என்று படப்பில் பிஸியாக இருந்த அமரதாசுக்கு வோக்கியில் அறிவித்துவிட்டுத்தான் கூப்பிட்டவர் சீமானை.. அமரதாசுக்கு என்ன நல்லா நாபகம் இருக்கும்.. அமரதாஸ் தன்னிடம் இருக்கும் படங்களை 2009 இறுதி யுத்தமுடிந்து வந்தபின் தன்னிடம் இருந்த இறுதிக்கட்ட படங்களில் ஒரு தொகுதியை அனுப்பி தன்னிடம் இப்படி நிறைய படங்கள் இருப்பதாக சொல்லி அவற்றை ஜநாவின் போர்க்குற்ற விசாரணைக்கு அனுப்பலாம் என்னை வெளிநாட்டுக்கு எடுத்துவிடுங்கோ அல்லது பணம் அனுப்புங்கோ என்று உரையாடி இருந்தார்.. காசுகுடுத்து வாங்கிய அந்த படங்களை முதன்முதலில் இணையவெளியில் யாழில் நான் தான் எனது பழைய ஜடியில் பதிவேற்றி இருந்தேன்.. இப்படி பின்னர் பலரிடம் அந்த படங்களை காட்டி பணம்பெற்றதாக அறிந்தேன்..இப்படி இறுதிக்கட்டத்தில் மக்களினதும் போராளிகளினதும் இறப்பையும் அளிவையும் வலியையும் படம்பிடித்து அதை காசாக்கதெரிந்த அமரதாசுக்கு இது ஒன்றும் புதிதல்ல.. வெளிநாட்டுக்கு வந்தபின்னாவது மிச்ச படங்களையும் ஜநாவுக்கு குடுத்தாரா இல்லை புத்தகம் அடித்ததுடன் நிறுத்திவிட்டார தெரியவில்லை.. குடுத்திருந்தால் நன்றி..
  46. அண்ணா, கணக்கில் நீங்கள் ஒரு புலி என்று நானும், சிலரும் இங்கு உங்களை சொல்லிக் கொண்டு இருந்ததற்கு நீங்கள் எங்களைப் பழிவாங்குகின்றீர்கள் போலத் தெரியுது.......................🤣.
  47. பாடல் இரண்டு - செந்தூர பூவே செந்தூர பூவே --------------------------------------------------------------------------- ஊரில் பல பாடசாலைகள் இருந்தன. வீட்டுக்கு அருகிலேயே ஒரு பாடசாலை இருந்தது. கொஞ்ச தூரத்திலும் ஒரு பாடசாலை இருந்தது. ஆனால் என்னை வீட்டிலிருந்து அதிக தூரத்தில் இருக்கும் பாடசாலையிலேயே சேர்த்தார்கள். என்னை மட்டும் இல்லை, எங்கள் வீட்டில் எல்லோரும் அந்தப் பாடசாலைக்கு தான் போய் வந்து கொண்டிருந்தார்கள். அது தான் எங்களின் பரம்பரைப் பாடசாலை என்று காரணம் கூறப்பட்டது. சார்பட்டா பரம்பரைக் கதைகள் போல பரம்பரைப் பெருமைகள் எதுவும் வெளி வந்திருக்காத அந்த நாளில், இது என்ன பெரிய பரம்பரை, இதற்காக நான் ஏன் நேர்த்திகடன் போல தினமும் நடக்க வேண்டும் என்று அலுப்பாக இருந்தது. அந்தப் பாடசாலையில் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே இருந்தது. சில நாட்களில் நான் போகும் பொழுது பாடசாலையின் கதவுகள் திறந்திருக்காது. அவ்வளவு முன்னரே அங்கு போயிருக்கின்றேன். படிப்பில் எக்கச்சக்கமான ஆர்வம் என்றோ, பாடசாலையில் விருப்பமோ என்றில்லை. இது ஒரு பிறவிப் பழக்கம். இன்றும் இது தொடர்கின்றது. பாடசாலைக்கு அருகிலேயே ஒரு ஆசிரியரின் வீடு இருந்தது. அவர் வீட்டில் போய்க் கேட்டால், வந்து கதவைத் திறந்துவிடுவார்கள். ஆசிரியர் அலுத்திருக்கமாட்டார், ஆனால் அவர் வீட்டில் இருந்தவர்களுக்கு இது அலுப்பாக இருந்திருக்கக்கூடும். பாடசாலை முடிந்தால் வீட்டை எப்போதும் போய்க் கொள்ளலாம். தேடவே மாட்டார்கள். ஒரு நாள் பூரா போகாமல் இருந்தால் கூட, அப்படி ஒரு நாளும் நடக்கவில்லை, அடுத்த நாள் வந்து விடுவான் என்று இருந்திருப்பார்களோ தெரியாது. எப்போதும் பாடசாலைக்கு வருவது ஒரே வழியில் தான் என்றாலும், திரும்பிப் போவதற்கு மூன்று வழிகள் இருந்தன. வந்த வழியிலேயே, தெருக்களினூடாக, திரும்பிப் போவது முதலாவது வழி. இரண்டாவது வழி கடற்கரையின் வழியே நடந்து போய், பின்னர் ஒரு ஒழுங்கையினூடாக பிரதான வீதியைக் கடந்து வீட்டுக்கு போகும் வழி. மூன்றாவது வழி கடலினூடாக நடந்து போவது. முழங்கால் ஆழம் வரை இருக்கும் கடலுக்குள் போய், பின்னர் அப்படியே நடப்பது. இது ஒரு பெரிய உடற்பயிற்சியாக இன்று உலகெங்கும் செய்யப்படுகின்றது. நாங்கள் அன்று முழங்கால் அளவு ஆழக் கடலில் பறந்திருக்கின்றோம். பவளப்பாறைகள் காலைக் கிழித்து இரத்தம் சொட்டச் சொட்ட எதுவுமே நடக்காத மாதிரி இருந்திருக்கின்றோம். கடல் பொங்குவதும், கடல் வற்றி நீர் உட் போவதும் ஒரு சுழற்சியில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வு. சில நாட்களிலேயே இந்த அறிவு அனுபவத்தில் வந்துவிட்டது. எந்த நேரம் கடல் பொங்கும், எப்போது நீர் வற்றும் என்று தெரிய ஆரம்பித்திருந்தது. பாடசாலை விடும் நேரத்தில் கடல் பொங்கும் என்று தெரிந்தால், அன்று அந்தப் பாதையை தவிர்த்து, வந்த வழியிலேயே தெருக்களினூடாக வீட்டுக்கு போக வேண்டும். அப்படியே உடனேயே நேரே போய் வீட்டை என்ன தான் செய்வது. போகும் வழியில் மூன்று வாசிகசாலைகள் இருந்தன. சந்தியில் இருந்த வாசிகசாலை பெரியது. ஆங்கில, தமிழ் செய்தித்தாள்கள், ஆனந்த விகடன், குமுதம் போன்ற இந்திய வார வெளியீடுகள், டொமினிக் ஜீவாவின் மல்லிகை என்று எல்லா வகையானவைகளும் அங்கே போடப்பட்டுக்கொண்டிருந்தன. அந்த வயதில் எப்போதும் என்னை ஈர்த்தது சினிமாச் சஞ்சிகைகளான பொம்மையும், ஜெமினி சினிமாவும் தான். ஒரு பத்து வயது அளவில் இருக்கும் பையனுக்கு இவை தான் அன்றைய டிக்டாக். ஜெமினி சினிமாவில் நடுப்பக்கத்தில், இரண்டு பக்கத்தையும் சேர்த்து, ஒரு நடிகையின் படம் இருக்கும். ஆனால் அதை யாரோ புதிதாக ஜெமினி சினிமாவை போட்ட அன்றே கிழித்துக் கொண்டு போய்க் கொண்டிருந்தார்கள். இதை ஒரு பிரச்சனையாக பெரியவர்கள் கதைத்தார்கள். எல்லோரும் அந்தப் படத்தை பார்த்த பின், அந்தப் படத்தை கிழித்துக் கொண்டு போனால் பரவாயில்லை என்று நினைத்தார்களோ என்னவோ. அதனால் ஜெமினி சினிமாவிற்கு கிட்டே போய் வருபவர்களை எல்லோரும் கொஞ்சம் கவனமாகவே பார்க்காத மாதிரி பார்த்துக் கொண்டிருந்தார்கள். பொம்மைக்கு அவ்வளவு காவலும், கண்காணிப்பும் இருக்கவில்லை. அன்று பொம்மையில் வரும் கேள்வி - பதில் பகுதி மிகவும் பிடிக்கும். அன்று ஆகப்பெரிய அறிவாளிகள் என்று நான் நினைத்திருந்தது எம்ஜிஆரையும், சிவாஜியையும் தான். ஒரு பொம்மையில் கேள்விகளுக்கு சிவாஜி பதிலளித்து இருந்தார். இந்த வருடத்தின் சிறந்த பாடல் எது என்று அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டிருந்தது. 'செந்தூர பூவே செந்தூர பூவே...........' என்று அவர் பதில் சொல்லியிருந்தார். நான் இந்த பாடலை அதுவரை கேட்டிருக்கவில்லை. இந்தப் பாட்டை எப்படியாவது கேட்டு விடவேண்டும் என்று மனதில் குறித்து வைத்துக்கொண்டேன். அடுத்த நாள், வழமை போலவே, நான் பாடசாலை போன பொழுது, பாடசாலைக் கதவு பூட்டியிருந்தது. மெதுவாக ஆசிரியரின் வீட்டுக்குள் போனேன். 'சரி வா.................' என்று ஆசிரியர் திறப்புக் கொத்துடன் வந்தார். அந்த நேரம் அவர்களின் வானொலியில் 'செந்தூர பூவே செந்தூர பூவே..........' என்று ஆரம்பித்தது. நான் அசையவேயில்லை. ஆயிரம் தடவைகள் அல்லது அதற்கு மேலும் இந்தப் பாட்டைக் கேட்டுவிட்டேன். இந்தப் பாடல் அசைய விடுவதேயில்லை. காணொளியாகப் பார்த்தாலும் அப்படியே. ஶ்ரீதேவியை அவரின் வீட்டில் இருந்து கூட்டி வந்து, இந்தப் பாடலில் அப்படியே நடிக்க வைத்திருப்பார்கள். அவர் இந்தப் பாடலில் கொஞ்சம் கறுப்பாக இருப்பது போல இருக்கும். ஒரு ஊரில் இருக்கும் மிக அழகான பெண் போன்று தான் இருப்பார். ஒரு நடிகை போன்று இந்தப் பாடலில் அவர் இருக்கவில்லை. இப்போது எப்போது இந்தப் பாடலைக் கேட்டாலும் அப்படியே அவரின் கடைசி நாட்களும் ஞாபகத்திற்கு வரும். அது வேற ஶ்ரீதேவி, செந்தூரப் பூ ஶ்ரீதேவி வேற என்றும் மனதில் தோன்றிக் கொண்டிருக்கின்றது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.