Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    19638
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    88786
    Posts
  3. vasee

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    3632
    Posts
  4. செம்பாட்டான்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    1421
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/26/25 in all areas

  1. எட்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி ஆரம்பத்தில் விக்கெட்டுக்களை இழந்தாலும் இப்ராஹிம் ஸட்ரானின் அதிரடியான 177 ஓட்டங்களுடன் 7 விக்கெட்டுகளை இழந்து சவாலான 325 ஓட்டங்களை எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய இங்கிலாந்து அணி, வெற்றி இலக்கை நோக்கிப் பயணித்தபோதும், ஜோ ரூட்டின் 120 ஓட்டங்களைத் தவிர பிறர் நிலைத்து ஆடாததால் இலக்கை எட்டமுடியாமல் 49.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 317 ஓட்டங்களை மட்டுமே எடுக்கமுடிந்தது. அஸ்மத்துல்லா ஒமர்ஸாய் 58 ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளைச் சாய்த்திருந்தார். முடிவு: ஆப்கானிஸ்தான் அணி 8 ஓட்டங்களால் வெற்றியீட்டியது ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த 08 பேருக்கு தலா இரண்டு புள்ளிகள் கிடைக்கின்றன. மற்றைய 16 பேருக்கும் புள்ளிகள் இல்லை. இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  2. குடுத்து வச்ச மனிசன் ஜி நீங்கள் ஆப்கானிஸ்தான் 300 தாண்டியவிடனேயே இங்கிலாந்து கிட்டப்போய் தோற்கும் என நினைத்தேன். ஆனால் ஒவர்டன் நிண்டு ஆடியபோது மாற்றியும் யோசித்தேன். வாழ்த்துக்கள் முதல்வர்💐💐💐. இவ்வண், மாண்பு மிகு துணை-முதல்வர், இணை ஒருங்கிணைப்பாளர்🤣
  3. புத்தன், உங்கட வளவுக்குள்ள பத்து பிலா மரங்கள் காய்ச்சுத் தள்ளுது எண்டு வெளி ஆக்கள் வளவுக்குள்ள வந்து புடுங்கிறது சரியா? அவை சொந்தக்காரர் எண்டாலும்..களவு களவு தானே।
  4. 1972 /73 களில் பத்திரிகைகளில் ஒர் செய்தியை எழுத்து கூட்டி வாசித்த ஞாபகம் ...வருகிறது.. "பயங்கரவாதிகள்(இன்றைய ஜெ.வி.பியினர்) ஆட்சிக்கு வந்தால் 60 வயசுக்கு மேல் உள்ள வயோதிபர்களை சுட்டு கொலை செய்து விடுவார்கள்" ...என அந்த காலத்தில் இருந்த பொலிஸ் ஊடக் பேச்சாளர்,மற்றும் ஊடகங்கள் செய்தியை பிரசுரித்து கொண்டிருந்தார்கள் ..அதை நானும் நம்பவில்லை காரணம் எனது தந்தையும் அதை சொன்னார் அதிகார வர்க்கம் இப்படித்தான் சொல்லும் ஆனால் அவங்கள் அப்படி செய்ய மாட்டாங்கள் எண்டு... இன்றைய இளைய ஜெ.வி.பி யின் சில கருத்துக்களை பார்க்கும் பொழுது மிருகங்களில் தொடங்கி மனிதர்களுக்கு வருவினம் போல தெரிகின்றது ... அரிசிக்கு நாய் தேங்காய்க்கு ஈ மின்சார தடைக்கு குரங்கு ஊழலுக்கு முன்னைய அரசு கல்வி சீர்குழைவுக்கு பிரித்தானிய ஏகாதிபத்தியம் தேசிய பாதுகாப்புக்கு பாதாள உலகம் தாங்க முடியல்லடா
  5. பாவம் ரூட். தனித்துப் போனார். ஒருவரும் நின்று நிதானித்து ஆடவில்லை. நியுசிலாந்து வென்றால், யாழ் களம் அல்லோல கல்லோலப்படும்.நல்ல முசுப்பாத்தியாய் இருக்கும். கிருபன் பாடுதான் திண்டாட்டமாய் இருக்கும்.
  6. அண்ணை, திரு அப்துல் ஹமீட் அவர்களின் உரையில் 3 - 4 நிமிடங்களை அவதானித்துப் பாருங்கள்.
  7. அவள் லண்டன் வந்து இருபது ஆண்டுகள் ஆகிவிட்டதுதான். போர் முடிந்தும் பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் வதனி வந்ததுக்கு இன்னும் இலங்கை போகவில்லை. ஆறு வயதிலும் நான்கு வயதிலும் கொண்டுவந்த பிள்ளைகள் இருவருமே படித்து முடித்து வேலைக்குப் போக ஆரம்பித்துவிட்டனர். ஆனாலும் அவள் இலங்கைக்குப் போகும் ஆசையை தள்ளிப்போட்டுக்கொண்டே வருகிறாள். அதற்குக் காரணம் இல்லாமலும் இல்லை. கணவன் நோயில் இறந்தபின் கணவனின்றி எங்குமே அவள் செல்வதை நிறுத்திவிட்டிருந்தாள். வாரம் ஒருதடவை மகனை அழைத்துக்கொண்டு பக்கத்தில் இருக்கும் பல்பொருள் அங்காடிக்குச் சென்று பொருட்களை வாங்கி வந்தால் பிறகு அடுத்த வாரம்தான். பிள்ளைகளும் ஆண் பிள்ளைகள் என்பதால் அவர்களைக் கூட்டிக்கொண்டு செல்லவேண்டிய அவசியமும் ஏற்படவில்லை. ஆறு மாதங்களுக்கு முன்னர் தாய்க்குப் புற்றுநோய் என்று தம்பியார் அறிவித்ததில் இருந்து அவள் மாதாமாதம் பணத்தை அனுப்பிக்கொண்டுதான் இருக்கிறாள். “தெல்லிப்பளையில் மருத்துவம் எல்லாம் இலவசம் அக்கா. எதுக்கு அவைக்கு மாதாமாதம் காசு அனுப்புறியள்” என்று நண்பி மலர் கூறினாலும் “தம்பி பொய்யோ சொல்லப்போறான்” என்று இவள் மலரின் கதையை காதிலும் எடுக்கவில்லை. இவள் கணவன் செய்த ஸ்பொன்சரில் எப்பிடியோ லண்டனுக்கு பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு வந்துவிட்டாளாயினும் வந்து சேர்ந்ததை நினைக்க இப்ப நினைத்தாலும் பெரும் மலைப்பாகவே இருக்கும். இவளுக்கு ஆங்கிலமும் சுட்டுப் போட்டாலும் வரவில்லை. ஆனாலும் தட்டுத் தடுமாறி ஏதோ விளங்கிக் கொண்டாலும் கணவரும் இவளை வீட்டுக்குள்ளேயே வைத்திருந்ததில் மொழி தெரியாததும் ஒரு பிரச்சனையாகப் படவில்லைத்தான். கணவன் இறந்தபின் இரு மாதங்கள் திண்டாடித்தான் போனாள். அந்தநேரம் கணவனின் அண்ணன் தான் கைகொடுத்தது. வேலைக்கு லீவு சொல்லிவிட்டு இவர்களுடன் வந்து ஒருமாதம் நின்று எல்லா உதவிகளும் செய்து இவர்களின் அலுவல்கள் எல்லாம் பார்த்தது. கணவன் ஆயுட்காப்புறுதி செய்து வைத்திருந்ததில் வீட்டுக்குக் கட்டவேண்டிய பணம் முழுதும் கட்டப்பட்டுவிட, மூத்த மகனுக்கும் உடனேயே வேலை கிடைத்ததில் இவள் நிம்மதியாய் தொடர்ந்தும் இருக்க முடிந்தது. இரண்டு ஆண்டுகளாக மூத்தமகனின் சம்பளம் மொத்தமாக இவள் கைகளுக்கு வர, சீட்டுப் பிடிக்கிறேன் என்று பத்தாயிரத்தைத் தொலைத்தபின் மகனும் ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டும் இவளுக்குக் கொடுத்துவிட்டுத் தானே சேர்த்து வைக்க ஆரம்பிக்க, பிள்ளை தன் கைவிட்டுப் போய்விட்டாதே என்ற ஆதங்கம் எழுகிறது. “உன் அப்பா இருந்திருந்தால் என்னை இப்படி உங்களிட்டைக் கையேந்த வீட்டிருப்பாரே” என்று அழுது பார்த்தும் மகன் முழுச் சம்பளத்தையும் அதன்பின் கொடுக்கவே இல்லை. இப்ப இரண்டு வாரங்களாக தம்பியாரின் போன் “வந்து அம்மாவைப் பார் அக்கா. சரியான சீரியஸ் என்று சொல்லிப் போட்டினம்” என்று ஒரே தொல்லை. அம்மாவைப் போய்ப் பார்க்கவேணும் என்று இவளுக்கு அத்தனை பாசம் ஒன்றும் இல்லை. இவள் காதலித்து வண்ணனைக் கலியாணம் செய்யப் போகிறேன் என்றதும் தந்தையிலும் பார்க்க தாய்தான் குதியோ குதி என்று குதித்தது. இவள் வீட்டுக்குத் தெரியாமல் கலியாணம் கட்டிக்கொண்டு வந்தபிறகும் “நீ செத்திட்டாய் எண்டு நினைச்சுக்கொள்ளுறன். இனிமேல் இந்த வீட்டில உனக்கு இடமில்லை” என்று கதவை அடிச்சுச் சாத்தினபிறகு, பேரப் பிள்ளைகள் பிறந்தபிறகும் கூட தாய் வதனியையோ பேரப் பிள்ளைகளையோ பார்க்க வரவே இல்லை. வெளிநாடு போக முதல் ஒருக்காச் சொல்லிப்போட்டுப் போவம் என்று பிள்ளைகளுடன் போனவளை நிமிர்ந்துகூடத் தாய் பார்க்கவில்லை. அந்தத் தாயின் மகள்தானே இவளும். ஆனால் தம்பியில் உள்ள பாசம் இவளுக்குக் குறையவே இல்லை. தம்பியும் இவளின் கணவர் இருக்கும் வரை இவளோடு தொடர்பு கொள்ளவில்லைத்தான். கணவர் இறந்தபின் வாரம் ஒருதடவை போன் எடுத்துக் கதைப்பது வழமையாகியது. இவளுக்கும் வேறு என்ன வேலை. தம்பியின் பிள்ளைகளும் அத்தை அத்தை என்று ஒரே வாரப்பாடுதான். ஆனால் பெடியள் இருவரும் “உங்கடை சொந்தத்திலை நாங்கள் கலியாணம் செய்யவே மாட்டம்” என்று கறாராகச் சொல்லிவிட்டார்கள். அது இவளுக்குக் கொஞ்சம் ஏமாற்றம்தான் என்றாலும் பிள்ளைகளின் மனதை மாற்ற முடியாது என்பதால் இவளும் தான் ஆசையை அடக்கிக் கொண்டாள். நேற்றுப் போனில் கதைக்கும்போதும் “அக்கா ஒருக்கா வந்திட்டுப் போங்கோ, அம்மா இண்டைக்கோ நாளைக்கோ என்று இருக்கிறா” என்றதில் பிள்ளைகள் இருவரிடமும் கதைத்ததில் “நினைவே இல்லாமல் கிடக்கிறவவைப் போய் பார்த்து என்ன பிரயோசனம் அம்மா” என்கிறான் மூத்தவன். புதிதாக வேலைக்குச் சேர்ந்து இரண்டாம் மாதச் சம்பளம் பெற்றுக்கொண்ட துணிவில் இரண்டாவது மகன் “அண்ணா நான் அம்மாவுக்கு டிக்கற் போட்டு அனுப்புறன். செலவுக்கு மட்டும் நீங்கள் காசு குடுங்கோ என்றதில் சரி போனால் போகட்டும் என்று ஆயிரம் பவுண்டஸ் தாறன் என்று மூத்தவன் சொல்ல, இப்ப விடுமுறை காலமாதலால் இரு மடங்கு விலையில் டிக்கட் புக் செய்து தாயை நேரடியாகப் போகும் விமானத்தில் ஏற்றிவிடுகிறார்கள். கொழும்பு வந்து அக்காவைக் கூட்டிவர வானுக்கு 70,000 ரூபாய் என்கிறான் வதனியின் தம்பி குகன். மூத்தவன் விசாரித்ததில் கொழும்பிலிருந்து போக 35 ஆயிரம்தான். ஆனால் அம்மா தனியப் போறபடியால் மாமாவே கொழும்புக்கு வந்து கூப்பிடட்டும். காசு போனால் போகிறது என்கிறான் இளைய மகன். விமான நிலையத்துக்கு வதனியின் தம்பியார் மட்டுமன்றி மனைவி பிள்ளைகள் என்று அனைவரும் அக்காவை அழைத்துப்போக வந்திருக்க வதனிக்கும் மகிழ்வாகவே இருக்கிறது. இருபது ஆண்டுகளின் பின்னர் வருவதில் எல்லாமே புதிதாய் இருக்கிறது. ஏன் அக்கா பிள்ளையளையும் கூட்டிக்கொண்டு வந்திருக்கலாமே என்கிறான் தம்பி. அவங்களுக்கு வேலையில லீவு குடாங்கள் இந்த நேரம். ரிக்கற்றும் விலைதானே என்று சமாளிக்கிறாள் வதனி. காலையில் வந்தபடியால் இடையில் ஒரு உணவகத்தில் நிறுத்தி உண்டபின் பயணம் தொடர்கிறது. வீதி எங்கும் கடைகள் மாடிக் கட்டடங்கள் எனப் பார்க்க மலைப்பாக இருக்கிறது வதனிக்கு. ஆறு மணிநேரப் பயணத்தின் பின் அவள் பிறந்து வளர்ந்த வீட்டுக்கு வர அழுகை வருகிறது. தாயை நினைத்துத்தான் அவள் அழுவதாக எல்லோரும் நினைத்துக்கொள்கின்றனர். கணவர் பிள்ளைகளுடன் வர முடியவில்லையே என்பதில் வந்த அழுகையே அது. அக்கம் பக்கத்தவர்கள் சிலர் வந்து விசாரித்துவிட்டுப் போக நேரம் மாலை ஐந்து மணியாகிவிட்டதில், தம்பி ஒழுங்கு செய்த காரில் தம்பி குடும்பமும் இவளும் போய்த் தாயைப் பார்க்கின்றனர். நினைவின்றிக் கிடக்கும் தாயைப் பார்க்க இவளை அறியாமலே கண்ணீர் வருகிறது. இரண்டு நாட்களின் பின் “எந்த நேரமும் எதுவும் நடக்கலாம். இங்கே வைத்திருந்து பிரயோசனமில்லை. நீங்கள் வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போகலாம்” என வைத்தியர் கூற அடுத்த நாள் தாயை வீட்டுக்குக் கூட்டிவருவதாக ஏற்பாடு. தாயை வீட்டில் வைத்துப் பராமரிக்க ஒருவரை ஒழுங்கு செய்யலாம் என்றால் ஒரு நாளைக்கு மூவாயிரம் என்கின்றனர். ஆனாலும் அக்கா இருக்கும் துணிவில் சரி என்கின்றனர். உயர்த்திப் பதிக்கும் பிரத்தியேக கட்டில் ஒன்றரை இலட்சம் ரூபாய்கள். எந்த நேரமும் சாகத் தயாராக இருக்கும் அம்மாவுக்கு இத்தனை செலவில் கட்டில் வாங்கத்தான் வேணுமா என்று யோசித்தவளின் கௌரவம் வெற்றிபெற, வாங்கு தம்பி என்று பணத்தைப் பவுண்ஸ்சாகவே தம்பியிடம் கொடுக்கிறாள். தாயை வீட்டுக்குக் கொண்டு வந்தபின் அயலட்டைச் சனம் தொடங்கி சொந்தக்காரர் எல்லாம் தாயாரின் சாட்டில் வதனியையும் பார்த்துப் புதினங்கள் கேட்டுவிட்டுப் போகின்றனர். வீடு எந்தநேரமும் கலகலப்பாக இருக்கிறது. ஆட்கள் அடிக்கடி வந்து போவதனால் அப்பப்ப கடையில் இருந்தும் உணவு எடுக்கின்றனர். வடை, முறுக்கு, ரோள்ஸ் என்று வதனியையும் தாயையும் பார்க்க வருபவர்களுக்கு உபசரிப்பும் நடக்கிறது. தாயில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை. மின் விசிறி இல்லாமல் முதல் நாள் இரவு வியர்வையில் குளித்ததில் காலை எழுதவுடனேயே “தம்பி பான் இல்லாமல் படுக்கேலாதடா என்றது மட்டுமன்றி உங்களுக்கும் சேர்த்துப் பான் வாங்குங்கோ என்றதில் எல்லாமாக நான்கு பான்கள் வந்திறங்க, வதனிக்கு நெஞ்சுக்குள் ஏதோ செய்கிறது. அம்மா படுத்திருக்கும் வராந்தாவுக்கு ஒன்று. உங்கள் அறைக்கு ஒன்று. பிள்ளைகள் படுக்கும் அறைக்கும் எங்கடை அறைக்குமாக நான்கு வாங்கினது. சரிதானே அக்கா என்று தம்பி கேட்க ஓம் என்று தலையாட்டுவதைத் தவிர வேறென்ன செய்யமுடியும் வதனியால். இவள் வந்து இருவாரங்களில் தாயில் எந்த வித மாற்றமும் இல்லாவிட்டாலும் ஆட்கள் வந்துபோவது குறைகிறது. நல்லூர் திருவிழாவும் ஆரம்பித்துவிட்டதில் “அம்மாவைப் பார்த்துக்கொள்ள ஆள் இருக்குத் தானே அக்கா, நல்லூருக்குப் போட்டு வருவம் என்று தொடங்கி ரிச்சா பாம் வரை ஒவ்வொருநாளும் ஒரு இடமாக தம்பி குடும்பம் வதனியை ஊர் சுற்றிக் காட்டியதில் வதனி பிள்ளைகளுக்குத் தெரியாமல் சேர்த்து வைத்துக் கொண்டுவந்த பணமும் மொத்தமாகக் கரைந்து போக, மூன்று வாரங்களில் இத்தனை செலவா என மலைத்துப்போகிறாள் வதனி. கிடந்த மிச்சப் பயணத்தில் லண்டன் நண்பிகள் சொல்லிவிட்ட பற்றிக் நைட்டி முதற்கொண்டு அவர்கள் பிள்ளைகளுக்கு உடைகள், கோப்பித்தூள், அரிசிமா, மிளகாய்த்தூள் என வாங்கி முடிய இவளுக்குத் தாயைப் பார்க்கத்தான் தான் வந்தது என்பதே மறந்து போகிறது. இவள் வெளிக்கிடும் நாள் நெருங்க தம்பி குடும்பமே அதிகம் கவலை கொள்கிறது. மீண்டும் எழுபதாயிரம் ரூபாய்களுக்கு வான் ஒழுங்கு செய்து அக்கம்பக்கம் சொல்லிக்கொண்டு தம்பி குடும்பத்துடன் விமானநிலையம் வந்து சேர ஒருவித நிம்மதி பிறக்கிறது வதனிக்கு. தம்பி குடும்பம் கொழும்பிலிருந்து கிளம்பி நான்கு மணி நேரம் ஆகியிருக்கும். தாய் இறந்துவிட்டதாக தாயைப் பார்ப்பவரிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்புச் சொல்ல, “ஐயோ அக்கா உனக்கு விதியில்லாமல் போச்சே” என அழும் தம்பியைப் பார்க்க முடியாத தூரத்தில் பறந்துகொண்டிருக்கிறது வதனியின் விமானம்.
  8. வடக்கு கிழக்கில் 92,000 பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் உள்ளன இவர்களுக்கு நிலையான வருமான வழிமுறைகள் இல்லை, இதனால் இக்குடும்பங்களில் உள்ள பிள்ளைகளது எதிர்காலம் கேள்விக் குறியாக உள்ளது. எனவே பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வருவாய் பெறக்கூடிய சுய தொழில்களை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். என தமிழரசுக்கட்சியின் திருகோணமலை மாவட்ட எம்.பி. கே.எஸ்.குகதாசன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில், சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களின் விரிவாக்கமானது, ஏற்றுமதியை அதிகரிப்பதற்கும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கும் நம்பிக்கைக்குரிய ஒரு படியாகும். பொருளாதார மாற்றச் சட்டத் திருத்தம், அரச-தனியார் கூட்டுச் சட்ட அறிமுகம் முதலியன வணிக நம்பிக்கை மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டுள்ளன. எனினும், இந்த ஒப்பந்தங்கள் எவ்வாறு கட்டமைக்கப்படும் அல்லது எந்தக் குறிப்பிட்ட தொழில்கள் பயனடையும் என்பது பற்றிய தெளிவான வரைபடத்தை அரசு வழங்கவில்லை என்றார். https://thinakkural.lk/article/315462
  9. உக்கிரேனின் கனிமவளத்தினையே ஆட்டைய போட்டுள்ளார்,பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தமாதிரி, இவரிடமிருந்து வேறு எதனை எதிர்பார்க்க முடியும்? வெள்ளிக்கிழமை பத்திரம் கையெழுத்திடுகிறாராம் உக்கிரேன் அதிபருடன். ஆனால் ஜெலென்ஸ்கிக்கு வேறு தெரிவு இல்லாததாலேயே இதனை செய்கிறார் என நினைக்கிறேன், அல்லது வேறு ஏதாவது திட்டம் வைத்திருப்பார், முன்பு ட்ரம்ப் ஆட்சியில் இருந்த போது ஒரு தென் கொரிய நண்பர் ட்ரம்பை பைத்தியக்காரன் என்றார், அதற்கு அவர் கூறிய காரணம் தென் கொரியாவின் பாதுகாப்பிற்கு வழங்கப்படும் கட்டணத்தினை இரட்டிப்பாக்கி விட்டார் என கூறினார் அவர் அப்பவே அப்படித்தான் போல.
  10. அப்புறம் என்ன. பாகிஸ்தானைத் தெரிவு செய்த இருவரையும் இங்கிலாந்தைத் தெரிவு செய்த ஒருவரையும் தூக்கியாச்சு. இன்னும் 20 பேர் இருக்கினம். மெதுவாச் செய்வம். 🤑
  11. ஐந்து மில்லியன் டொலர் இருக்கிறவன்… அமெரிக்காவில் ஏன், குடியேறப் போறான். 🤩 ட்றம்புக்கு…. விசர் முத்தீட்டுது. 😂 🤣
  12. இறந்த பயணி பருமனானவர் என்ற படியால், அவர் விழுந்த இடத்திற்கு அருகில் உள்ள இருக்கையில் அமர வைக்கப் பட்டு இருக்கின்றார். வேறு இருக்கைகள்… காலியாக இருந்தது என்று இந்தத் தம்பதிகளே சொல்கிறார்கள். அப்படி என்றால்… இவர்கள் அந்த இடத்தில் போய் அமர்ந்து இருக்கலாமே. அதைச் செய்யாமல்…. பிணத்துக்கு அருகில் இருந்து பயணம் செய்து விட்டு, பத்திரிகைக்கு பேட்டி கொடுக்கும் மர்மம் என்ன? தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் இடம் மாறி இருந்து, அனுசரித்து போவதுதானே முறையான செயல்.
  13. உக்கிரேனினதும் அதன் மக்களதும் துரோகிகள் இருவர்.. ஒருத்தன் செலன்ஸ்கி மற்றையவன் டிரெம்ப்.. ஒருத்தன் உக்கிரேன் மக்களை ஏமாற்றி உக்கிரேனை விற்றுவிட்டான் இன்னொருத்தன் உக்கிரேன் மக்களை முதுகில் குற்றி உக்கிரேனை வாங்கிவிட்டான்..
  14. உக்கிரேன் போர் முடிவுக்கு வந்து விட்டது என கருதுகிறேன், போரினால் பாதிக்கப்பட்ட உக்கிரேனை கட்டி எழுப்ப உக்கிரேனை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைக்க முன்வரவேண்டும், இதுவரை போரிற்கு உதவியளித்த நாடுகள் உக்கிரேனின் பொருளாதார வளர்ச்சியினை கட்டி எழுப்புவதற்கும் முன்வரவேண்டும்.
  15. ஜோ ரூட் உங்களுக்காகத்தான் தனி ஒருவனாக இன்று விளையாடினார். தனி ஒருவன்! அது அடைக்கோழியாக்கும். முட்டை போடாது. 🥚
  16. தெரியவில்லை நீங்களே கூறுங்களேன்?
  17. பிரித்தானிய நேரப்படி நாளை வியாழன் (27 பெப்) 09:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 9) குழு A :வியாழன் 27 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் பங்களாதேஷ், ராவல்பிண்டி PAK எதிர் BAN அனைவரும் பாகிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்! இப்போட்டியில் பாகிஸ்தான் தனது பெருமையை கொஞ்சம் காத்து எல்லோருக்கும் தலா இரண்டு புள்ளிகள் வழங்குமா அல்லது முட்டைகளை உடைத்து எறியுமா?
  18. ஆப்கானிஸ்தான் வெல்வதனை விட அவுஸ்ரேலியா வெல்வதுதான் நல்லது ஏனென்றால் இந்தியணிக்கு ஆப்கானிஸ்தான் அணியினை விட அரையிறுதியில் அளுத்தம் குடுக்க கூடிய அணி அவுஸ்ரேலியாதான் (எனது விருப்பம் இந்தியா அரையிறுதியுடன் வீடு திரும்ப வேண்டும்).
  19. பையன் சார், அன்றைக்கும் இந்த ஆச்சருக்கு எதிராகத்தானே ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் என்று சொன்னீர்கள்.................... ஆச்சர் காட்சை விட்டிடுவார், ஆனால் எங்களை விடமாட்டார் போல............🤣. எப்போதும் தமிழனா அடுத்த முக்கிய அமைச்சர்.........👍.
  20. தனி ஒருவன்: ஜோ ரூட் அவன் காணும் முடிச்சு வைக்க தனி ஒருவன்
  21. இந்த வருடத்துக்கான முதற்பரிசு பெற்ற ஜோக்.😄
  22. உந்த‌ மைதான‌த்தில் அவுஸ்ரேலியா 351 ர‌ன்ஸ்ச‌ அடிச்சு ஆடி வென்ற‌வை , அதே போல் இங்லாந்துக்கும் வாய்ப்பு இருக்கு............................ இங்லாந் வெல்லும் ந‌ண்பா.....................
  23. எனக்கு மட்டினில் சுழல் பந்து வீசி அனுபவம் இல்லை. ஆனால் 13 கீழ் போட்டியில் ஒரு மணிக்கட்டால் சுழற்றுபவர் மட்டினில் நல்லா போட்டார்.
  24. ஒரு ஆட்டுக்காரனின் பிரலாபம் என் ஆடுகளை வேலியால் எட்டிப்பார்த்த என்னருமைத் தோழனே…. எட்டிப்பார்க்கும் அவசரத்தில் நீ பலதை உன்னிப்பாக கவனிக்கவில்லை. கவனித்தாயா? அந்த ஆடுகளுக்கு குறி சுடப்படவில்லை. இந்த பட்டியில் இதற்கு முன் நின்ற அத்தனை ஆடுகளும் பல குறிகளை தாங்கித்தான் நின்றன - அந்த தாடிக்கார மேய்பனின் புத்தகத்தை படித்த பின் தான், குறிகள் ஏதும் என் ஆடுகளுக்கு இடப்படவே இல்லை. பார்த்தாயா? ஈசான மூலையில் கறுப்பும் பழுப்புமாய் நின்ற குட்டி ஆடு உன் காமாலை கண்ணுக்கு தெரியவில்லையா? அதன் அம்மா அப்பாவை நாந்தான் சேர்த்துவைத்தேன். எங்கள் ஆட்டு மந்தையில் அது ஒரு வரலாறு. பல சம்பவங்களின் பின் நடந்தேறியது. அங்கேயும் பட்டியின் பழைய கதவுகளை நெட்டித்திறக்க எனக்கு உதவியது அந்த கெட்டிக்கார கிழவனின், வளைந்த கைத்தடிதான். ஒ..தோழனே… அந்த மூலையில் ஒரு மறிக்குட்டி, கிடாய்கள் பலதை மேச்சல் தரை நோக்கி கூட்டி போனதை ஏன் நீ கண்ணுறவில்லை? உனக்குத்தெரியுமா தோழா? என் மறிக்குட்டிகள், உன்னை போல் ஓராயிரம் கிடாய்களே ஒரு நேர்கோட்டில், ஒத்தை ரோட்டில் கூட்டிச்செல்லவல்லன. இந்த ரோட்டும், நான் ஆரம்பித்ததில்லை நண்பா - ஈரோட்டில் ஆரம்பித்தது. என் காணியின் மூலையில் இருக்கும் வேலாயுத மேடை உன் கண்ணை உறுத்தியது என நினைக்கிறேன். புரிந்துகொள் நண்பா… யார் என்ன சொன்னாலும், நானே சொன்னாலும்… உன் புத்திக்கு சரி எனப்படுவதை மட்டுமே ஏற்று கொள் என்பதுதான் எங்கள் அரிவரிப்பாடம். நாங்கள் தனிமனிதனை தொழுபவர்கள் அல்ல தோழா, எவர் சொல்லுக்கும் நாம் கட்டுப்பட்டவர்களும் அல்ல. எம் புத்திக்கு புலப்படுவதையே செய்கிறோம்… நான் மட்டும் அல்ல, என் ஆடுகளும். பட்டியில் இருந்தாலும்….பட்டி நீங்கி பயணம் போனாலும். -கோஷான் சே-
  25. நானும் கேள்விப்பட்டதில்லைப் பிரியரே! ஆனால் ஆட்டையே சுட்டுத்தர “கொன்றால் பாவம் தின்றால் போகும்” என்ற பழமொழிக்கிணங்க, நானும் தின்றதுண்டு.😛
  26. அரிசிக் கொள்ளையர்கள்.... லாரியில், அரிசி கடத்தும் போது எடுத்த படம். 😂
  27. ஓம்…இதை மாற்ற கொஞ்சம் நேரம் எடுத்தது. வேகபந்தில் பல விடயங்கள் ரூட்டின் குழம்பினால் குழம்பிவிடும். கிட்டதட்ட மசள் மெமரி போல. அல்லது எனக்குத்தானோ தெரியாது. இரெண்டும் என நினைக்கிறேன்.
  28. காலை சாப்பாடு... ரெடி. 😂
  29. நீங்கள் சொன்னமாதிரியே இருக்கு...அதிர்ஸ்டத்தை காணவில்லை...ஆனால் யாழ் களத்தில் மட்டும் ...இப்ப விளையாட்டுப் போட்டியில் ஏறுமுகமாகக் கிடக்கு சும்மா சொன்னால் நாங்க நம்பமாட்டம் தெரியும் தானே. ஆதாரம் இணைக்கணும் தம்பீ. இதுக்குத் தான் @goshan_che அடிக்கடி எதுவென்றாலும் ஆதாரத்துடன் இணையுங்கள் என்கிறார்.
  30. செலன்ஸ்கி என்ன செய்ய வேண்டும் ?? செல்லுங்கள் பார்ப்போம் அவனுக்கு வேறு வழி இல்லை ஒரு வல்லரசு எதிர்த்து போராடினார் இரண்டையுமே எப்படி எதிர்க்க முடியும் ?? மேலும் யார் ஆயுதம் கொடுப்பார்கள் ?? அமெரிக்கா கேட்கிறது தந்த பணத்தை திரும்ப தரும்படி ...பணம் கொடுக்கலாம். இறந்து போன்ற உக்கிரேனியர்களை அமெரிக்காவல். கொடுக்க முடியுமா??? இது உரிமை போர் இல்லை வளங்களை கொள்ளை அடிக்கும் போர்.
  31. வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, மக்களின் மனதில் நிற்பவர் யார்? மாபெரும் வீரர் (தலைவர்), மானம் காத்தோர் (பெரியார்) சரித்திரம் தனிலே நிற்கின்றார்❤️. நன்றி நன்றி. சூழமைவு இல்லாமலும் பார்க்கலாம் என்பதில் உடன்பாடே.
  32. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரசோதரன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அல்வாயான் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி செம்பாட்டான் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பூங்கை. ஆனால் நீங்கள் இன்னும் திருந்தேல்லை 😃 வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா. நெருங்கியஉறவுக்குள் திருமணம் செய்த பலருக்கு குறைபாட்டுடன் குழந்தை பிறந்திருக்குக்தானே அண்ணா . கால மாற்றத்தையும் நாம் ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும்.
  33. நீங்கள் சொன்னமாதிரியே இருக்கு...அதிர்ஸ்டத்தை காணவில்லை...ஆனால் யாழ் களத்தில் மட்டும் ...இப்ப விளையாட்டுப் போட்டியில் ஏறுமுகமாகக் கிடக்கு😅
  34. புத்தர் உண்மையை சொல்கிறார் சூடு தாங்க முடியவில்லை. “குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்”.😂 இங்கு தேங்காய் ஒன்றின் விலை இலங்கைக் காசில் கணக்குப் பார்த்தால் 1000 ரூபாவிற்கும் விற்கப்படுகிறது. அத்துடன் வாங்கி வீட்டில் உடைத்த பின்புதான் தெரியும் அது அழுகலா, கொப்பறாவா, ஓடு கழன்றதா என்று. வாங்கினால் வாங்கியதுதான் திரும்ப கொடுத்து வேறொன்று வாங்கவும் முடியாது, குப்பையில்தான் போடவேண்டும். எ‌ந்த நிறுவனத்திலும் முறையிடவும் முடியாது, பணம் போனது போனதுதான்.😩😭
  35. ஆங்கிலத்தில், ஒருவரது உடலைமைப்பியல், உயிரியல் இயல்புகளின் அடிப்படையில் உருவாகும் குழுக்களை race என்பார்கள். உதாரணமாக கறுப்பினத்தவர் என்பது race. பாரம்பரிய வாழ்விடம், மொழி, பண்பாடுகள், கடவுள் நம்பிக்கை, இவற்றின் அடிப்படையில் உருவாகும் வகைப்படுத்தலை ethnicity என்பார்கள். யூதர்கள் இதற்கு உதாரணம். ஹீப்று மொழியைத் தாய் மொழியாகப் பேசாத கறுப்பின யூதர்கள் இருக்கிறார்கள். Race என்பது உயிரியல் - biological features அடிப்படையில் எழுவது. Ethnicity என்பது ஒரு cultural, political construct. தமிழில் நாம் இரண்டு வகைப்படுத்தலையும் "இனம்" என்று அழைப்பதால் இந்தக் குழப்பம் விளைகிறதென நினைக்கிறேன். அமெரிக்காவில் வளரப் போகும் என் பிள்ளை, தமிழ்ப் பாரம்பரியத்தைப் பின்பற்றாமல் வளர்ந்தால் அவரைத் "தமிழ் இனம்" என்று சொல்ல முடியாது. அதே போல, அல்லாவை நிராகரிக்கும் இலங்கை முஸ்லிம் ஒருவரை "முஸ்லிம் இனத்தவர்" என்று சொல்ல முடியாது. இப்படி இன அடையாளம் - ethnic identity இல்லாமல் இருப்பதில் தவறொன்றும் இல்லை.
  36. சீனாக்காரன் இந்த திட்டத்தை தான் நினைத்தபடி கட்டியிருந்தால் ஊரில இருக்கிற இந்த தலைவர் சத்தம்போடாமல் வாயில கையை வைச்சு பார்த்து கொண்டிருந்திருப்பார்... ஊரில் மேசன்மார் வீடுகள் கட்டும் பொழுது அவரது மேல் அதிகாரி வந்து ஏதாவது சொன்னா அவர் போன பிறகு "உவனுக்கு என்ன தெரியும் நான் 20 வருசமா வீடு கட்டுகிரேன்" எனக்கு பாடம் எடுக்க வந்திட்டான் என புலம்புவார்.ஆனால் அவருக்கு ஒரு வீட்டு வரைபடம் பார்த்து வீடு கட்ட தெரியாது அதை ஒர் சுப்பவைசர் தான் சொல்ல வேணும் என்ற புரிந்துணர்வு கூட இல்லை..
  37. ஓம். யாழில் ஒரு திரியாக இந்த செய்தியை பகிர்ந்தேன்.
  38. அவ்வப்போது யாழில் சில விடையங்களை சுருக்கமாக எழுதி விட்டுக் கூட ஏன் எழுதினேன் என்று யோசிப்பேன்...சுய தொழில் உதவி கேட்பவர்களின் மனோ நிலையைப் பார்த்தீர்களா..உதவி செய்பவர்களிடம் கேட்டுப் பெற வேண்டிய எல்லாத்தையும் பெற்றுக் கொள்ள வேணும் என்ற நோக்கம் தான்..கொஞ்சம் தயங்கினோம் என்றால் உடனும் ஏன் உதவி செய்ய வெளிக்கிட்டனீங்கள் என்று கேட்பார்கள்..உண்மையாக தேவை இல்லாதவிடத்து என்னால் இவ்வளவு தான் முடியும் என்று சொல்லி விட்டு விலகிக் கொள்ளுங்கள்.
  39. இல்லை அவர்கள் இலங்கை என்ற தேசிய நாடு(1948) உருவான பொழுது தங்களது இனத்தை அடையாளப்படுத்தும் வகையில் இலங்கை தேசிய கொடியில் தங்களது இனத்தை அடையாளப்படுத்தி விட்டார்கள் ...அவர்கள் ஒர் தனி தேசிய இன்ம் என்பதை ஏற்று கொள்ள தான் வேண்டும்...
  40. பசங்க படிக்கிற ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர் என்றால் சும்மாவா? 3 மாணவர்கள் சரியாக படிக்காத காரணத்தால் பரீட்சைக்கு வராமல் கட் அடித்து விட்டு படத்துக்கு சென்றனர். படம் முடிந்ததும், ஆடையில் சேற்றை பூசி கொண்டு தலைமையாசிரியரிடம் சென்றனர். அவரிடம் "சார் காலையில் ஒரு கல்யாணத்துக்கு போயிட்டு பரீட்சைக்கு வந்திரலாம்னு நெனைச்சோம்... வர்ற வழில பைக் பஞ்சராகி மூணு பேரும் சேத்துல விழுந்துட்டோம் சார்... எங்களுக்கு இன்னொரு சான்ஸ் கொடுங்க சார்" என்றனர். ஆசிரியரும் புரிந்து கொண்டு மூன்று நாள் அவகாசம் கொடுத்தார். மூன்று நாள் கழிச்சு மூன்று பேரும் நல்லா படிச்சிட்டு வந்தாங்க. மூணு பேரையும் தனித்தனி ரூம்ல உட்கார வச்சார். கேள்வித் தாளில் நாலே நாலு கேள்வி தான் இருந்திச்சு... 1.யாருக்கு கல்யாணம்? (25 மார்க்) 2.கல்யாணம் எங்கே நடந்துச்சு? (25 மார்க்) 3.மாப்பிள்ளை என்ன கலர் டிரஸ் போட்டிருந்தார்? (25 மார்க்) 4.எந்த பைக்ல போனீங்க? (25 மார்க்). கண்டிசன்: பதிலெல்லாம் ஓரே மாதிரி இருக்கணும்.... (😎: நீங்க படிக்கிற ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்டா...
  41. அப்படித்தான் தெரிகிறது. அதுவும் ஒரு மகன் பிறந்து அவரும் கிரிகெட் மட்டையோடு அலையும் போது… கிரிகெட் சரிவராவிட்டால் 25 வயசுக்கு மேல் இவன் என்ன செய்யபோகிறான் என்ற யோசனை எமக்கு தொற்றும் போதுதான் அதிகம் உறைக்கிறது 😂. ஆனாலும் எனக்கு பேச்சுவார்த்தைகள் முடிவில் “முடிவெடுக்கும் சுதந்திரம்” பெயரளவிலாவது இருந்தது என்பதும் உண்மையே. நான் விரும்பி இருந்தால் 12ம் ஆண்டில் திரும்ப விளையாட போய் இருக்கலாம். போகவில்லை. அந்தளவுக்கு “மண்டையை கழுவி”விட்டார்கள். ஆனால் இதற்கு முன்பே அவருக்கு நான் இப்படி மண்டையை கழுவிய சம்பவம் ஒன்று உள்ளது. பின்னொருநாளில் எழுதலாம்.
  42. மகிழ்ச்சி. அவர்கள் எப்போதுமே உள்ளூரில் விளையாடுவதை விட்டதே இல்லை. ரஸல் ஆரன்லட் டெனிஸ் பந்துல விளையாட வந்திடுவார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். உங்களுக்கும் அந்தச் சந்தர்ப்பம் கிடைத்ததில் மகிழ்ச்சி. மறக்க முடியாத தருணங்கள்.
  43. முஸ்லிம்கள் தாங்கள் ஒரு தனிப்பட்ட இனம் என கூறிக்கொள்வது 50 வருடத்துக்குள் தான் இருக்கும். அதெப்படி இச்சிறிய காலத்தில் தனிப்பட்ட இனமானார்கள்?
  44. இங்கே எனது கேள்வி இவர்கள் அண்ணன் திருடன் என்று கன்டுபிடித்து வெளியேறும்போது தமிழ் தேசிய பரப்பில் புகழ்பெற்ற ஆளுமைகளாக மாறியபின்னர் தான் வெளியேறுகிறார்கள். இன்னுமொரு வகையில் அதாவது ஆளுமைகளாக புகழ் வெளிச்சம் தங்கள் மீது பட்டபின்னர்தான் அண்ணனை திருடன் என்றே கண்டுபிடிக்கிறார்கள். இவர்கள் வெளியேறும்போது இவர்களது தமிழ்த்தேசிய பரப்பிலான அறிமுகம் என்பது அண்ணன் நாதகவை ஆரம்பித்தபோது அவருக்கு இருந்த அறிமுகத்தை விட அபரிமிதமானது. நிற்க, இவர்கள் ஜனநாயக பொதுவெளியில் ஒருகட்சியை ஆரம்பிப்பது என்பது டெலோ புளொட்டில் சேர்ந்த இளையவர்கள் புதிய இராணுவ இயக்கம் கட்டுவதை விட மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம். நான் விளங்கிக்கொண்ட வரையில் நதகவில் சேர்வது கழகத்தில் உள்ள கடைக்கோடி, நடுக்கோடி ,முதற்கோடி தொண்டர்களை ஓவர்டேக் செய்து இலகுவாக முன்வரிசை ஆசனத்தை பிடிக்கும் ஒரு Smart & short route. இந்த ஆளுமைகள் எல்லோருமே கழகத்தில் இருந்து தங்களது கன்னிப்பயணத்தை ஆரம்பித்திருந்தால் இன்றும் பசைவாளி போஸ்டருடன் வாழ்க ஒழிக கோஷம் போடும் ஒரு கடைநிலை, நடுத்தர உபிக்களாக இருந்திருக்கவே வாய்ப்புகள் அதிகம். இந்த ஆளுமைகளின் இறுதிச்சரணாலயம் அவர்களது நோக்கங்களை தெளிவாக காண்பிக்கிறது. தமிழ்த்தேசியத்தை பயன்படுத்தி வயிறு வளர்க்கும் சீமானை எதிர்த்து வானுக்கும் பூமிக்கும் குதிக்கும் நாம் அதே தமிழ்தேசியத்தையும் சீமானையும் பயன்படுத்தி வயிறுவளர்க்கும் இவர்களது தவறுகளை சீமான்மீதே சுமத்தி நகர்கிறோம்.
  45. ஹி, ஹி. அதொன்றுமில்லை, சுமந்திரன் தமிழர்களால் ஒதுக்கப்பட்டு அதல பாதாளத்திற்கு போய் விட்டார். அதை தூக்கி நிறுத்த எடுக்கப்படும் முயற்சி. அப்படி தமிழருக்கு என்ன நன்மை செய்துவிட்டார் சுமந்திரன் மக்கள் அவரை தங்கள் பிரதிநிதியாக தெரிவதற்கு? அதற்கான கூலியை கொடுத்து அவரை வீட்டுக்கு அனுப்பி விட்டனர். அவரோ போக மாட்டேனென அடம்பிடித்து இனத்தை இரண்டு படுத்துகிறார். அவர் இனத்துக்கு எதிராக என்ன துரோகம் செய்கிறாரென அவருக்கும், நன்மை பெறுவோருக்கும் தெரியும். அதனால் அவர்கள் தாம் செய்வதை மற்றவர்மேல் பழிபோட்டு நிஞாயப்படுத்துகின்றனர். அவர் முறையிடவில்லையாம், பாதுகாப்பு கொடுத்தார்களாம். அவுஸ்ரேலியாவில் உள்ள ஒருவர் இதில் சம்பந்தப்பட்டுள்ளாராம், ஆனால் சுமந்து அங்கே எந்த பாதுகாப்புமில்லாமல் போய் வந்திருக்கிறார். அப்போ இந்த புலனாய்வு அவரை போகவேண்டாமென்று தடுக்கவில்லை. நாட்டிலே இனத்துக்கெதிரான கருத்துக்களை பகிரங்கமாக தெரிவிக்கிறார், கூட்டங்களில் கலந்துகொள்கிறார், தடுக்கவில்லை. ஏன் முஸ்லீம் படுகொலையாளிகள் சுட்டுக்கொன்ற போலீசாரை, புலிகள் சுட்டுக்கொன்றதாக அப்பாவி இளைஞரை கைது செய்தது புலனாய்வு. உயிர்த்த ஞாயிறு குண்டுச்சம்பவம் நடைபெறப்போகிறது என பல எச்சரிப்புகள் வந்தபோதும் தடுக்க முடியாத வகையறா புலனாய்வு, சுமந்திரனை பாதுகாக்கிறதாம். ஸீரோவான சுமந்திரனை கீரோவாக்க முயற்சிக்கிறார் பாவம் ஒருவர். சிங்களத்துக்கு கழுவ வேண்டும், அதற்கு தமிழர் வாக்களிக்க வேண்டும். அவர் வந்த வேலை, கொடுக்கப்பட்ட வேலை முடிந்து விட்டது, இனி ஓய்வு பெற வேண்டியவர் அவர். தமிழரசு, தமிழ்த்தேசியம் என்றால்: சிங்களவருக்கு பயம், வெறுப்பு வருகிறதாம் என்று சொல்லும் இவர், தமிழரசை தனது கைக்குள் கொண்டுவர ஏன் முண்டியடிக்கிறார்?
  46. யாழ்கள சுமந்திரன் லவ்வர்சுக்கு, கணேமுல்ல சஞ்சீவவையே தூக்கிட்டார் நம்ம குடத்தனே சுமந்திரன்….😂. பின்னாடி பத்திரம்😁
  47. தென்னை மரத்தை விட பனை மரம் வலிமையானதும் வலைந்து கொடுக்க கூடியதாந்தும் என சொல்கின்றனர்..
  48. அதற்காக செக்ஸ் தந்தை பெரியாரின் சிலையையா கொடுப்பார்கள்? திமுகவில் இருந்தது யாரும் வெளியேறியதே இல்லையா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.