Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    15
    Points
    19634
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    88785
    Posts
  3. செம்பாட்டான்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    1417
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    33786
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/10/25 in all areas

  1. இல்லை என நினைக்கிறேன். அனைவரும் 12 புள்ளியில் நின்றாலும் கடைசியாக சேர்ந்த போட்டியாளர் என்பதால் நாந்தான் கீழே நிற்பேன்? அப்படி ஏதும் அசம்பாவிதம் நடந்தால்…. கோஷானின் நிலை👇🤣🤣🤣
  2. வந்தமா, சாமி கும்பிட்டமா, சுண்டல் சாப்பிட்டமான்னு போய்கிட்டே இருக்கணும் கந்தப்பு அண்ணை🤣. வீட்டில் தங்கிற ஐடியா எல்லாம் கூடாது🤣. பிகு யாழ்பாணத்தில் ஒரு வெற்று காணியை காப்பாத்துறத விட, யாழில் கடைசி இடத்தை காப்பாத்துறது கஸ்டம்போல கிடக்கு🤣
  3. ஐபிஎல் 2025 இன் 24வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஃபில் சால்ற்றினதும் இறுதியில் வந்த ரிம் டேவிட்டினதும் அதிரடி ஆட்டங்களைத் தவிர மற்றைய வீரர்கள் வேகமாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்தமையால் 7 விக்கெட் இழப்பிற்கு 163 ஓட்டங்களையே எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதல் மூன்று வீரர்களும் மிகவும் குறைந்த ஓட்டங்களுடன் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தமையால் தோல்விக்கான அபாயம் இருந்தது. எனினும் கேஎல் ராகுலின் ஆட்டமிழக்காது பெற்ற 93 ஓட்டங்களுடனும் ட் ரிஸ்ரன் ஸ்ரப்ஸின் வேகமான 38 ஓட்டங்களுடனும் 17.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 169 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை எட்டியது. முடிவு: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது டெல்லி கேப்பிட்டல்ஸ்அணி வெல்லும் எனக் கணித்த ஆறு பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனக் கணித்த 17 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: @கந்தப்பு கோரஸ் கூட்டத்தில் இருந்து சற்று மேலே முன்னேறியுள்ளார் 😁
  4. கோயிலில் சுண்டல் சாப்பிட்டது இந்தாளுக்கு எப்படி தெரிஞ்சது 🤫 Hazelwood க்கும் ஸ்ரார்க்கும்தான் போட்டி. ( கோஷான் சேக்கும் எனக்கும் போட்டி- யார் கடைசி இடத்தில் வராமல் இருப்பது) 😄
  5. பத்து அடுத்தநாள் காலை வழமைபோல வீட்டுக்கு வரும் போது மருதனார் மடத்துக்கும் சுண்ணாகத்துக்கும் இடையே உள்ள பூங்கன்றுகள் விற்கும் கடைக்குச் சென்று விதவிதமாக பூத்திருந்த செவ்வரத்தங் கன்றுகளில் 15 ஐ வாங்கி ஓட்டோவில் அனுப்பிவிட்டு நானும் வீட்டுக்குப் போகிறேன். கன்றுகளை இறக்கி வைத்தவர் நீங்களோ நடப்போகிறீர்கள்? என்கிறார். எனக்கு ஏலாது இவ்வளவும் நட. வீட்டில் ஒருத்தர் இருக்கிறார். அவரைக்கொண்டுதான் நடவேணும் என்கிறேன். உங்களுக்கு உப்பிடியான வேலைகளுக்கு ஆரும் தேவை என்றால் சொல்லுங்கோ. தெரிந்த பெடியன் இருக்கிறான். நான் அனுப்பிவைக்கிறன் என்கிறார். தேவையென்றால் உங்களுக்கு போன் செய்யிறன் என்றுவிட்டு காலை உணவை உண்டு முடிய பத்து மணிக்கு இரண்டு பெண்களும் வருகின்றனர். அவர்களோடு கதைத்துப் பயன் இல்லை என்று புரிய, அடுத்த பக்கத்துப் புற்களைப் பிடுங்கும்படி கூறிவிட்டு கதிரையில் இருந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன். பதினொரு மணிக்கு ரஜிதன் வருகிறார். “என்னக்கா நிறையப் பூக்கண்டுகள் வாங்கிவந்திருக்கிறியள்” “நல்ல வித்தியாசமான நிறங்கள். அதுதான் நடுவம் என்று வாங்கினனான்” “நேற்றே வாங்கியிருந்தால் வேலை செய்தவங்களைக் கொண்டே நட்டிருக்கலாம் அக்கா” “அதனால என்ன? நான் கொண்டுவந்து தாறன். நீங்கள் நடுங்கோ” “நான் உந்தச் சேத்துக்குள்ள இறங்கமாட்டன் அக்கா. எனக்குக் காலில புண். அது பெருத்திடும் அக்கா” “என்ன சின்னப் பிள்ளைக்குக் கதை சொல்லுற மாதிரிச் சொல்லுறீர்” “என்னால கிடங்கு வெட்ட ஏலாது அக்கா” “சரி நீர் போய் உம்மடை அலுவலைப் பாரும்” நான் வீட்டுக்குள் சென்று புத்துவெட்டியை எடுக்கும்போது பார்த்தால் இரண்டு மண்வெட்டியையும் காணவில்லை. “ரஜிதன், மண்வெட்டியளை எங்க வச்சனீங்கள்” “நான் எடுக்கேல்லை அக்கா. நேற்று வேலை செய்தவங்கள் கொண்டுபோட்டாங்களோ” “ அவர்கள் எனக்கு நல்ல நம்பிக்கையான வேலையாட்கள். அவை கொண்டுபோகாயினை” “எனக்குத் தெரியாது அக்கா. அவங்கள் உங்கை எங்காலும் மறைச்சு வச்சிட்டு எடுத்துக்கொண்டு போயிருப்பங்கள்” “வாயை மூடும். அவை கழுவித் தர நான் மூன்றையும் குசினி மூலையில வச்சிட்டுப் போனனான். அதுக்குப் பிறகு நீர் மட்டும்தான் உள்ளுக்குள்ள வந்தனீர்” “நான் என் மண்வெட்டியைத்தான் விடிய வேலைக்குப் போக்கேக்குள்ள கொண்டுபோனனான்” “உம்மைத் தவிர மண்வெட்டியை ஆரும் எடுத்திருக்க முடியாது. மரியாதையா என் மண்வெட்டிகளைக் கொண்டுவாரும்” என்று கோபமாகச் சொல்லிவிட்டு வர, “அக்கா, ரதி அன்ரி உங்களில சரியான கோபத்தில இருக்கிறா” “என்ன கோபம் அவவுக்கு? “தான் தானாம் என்னைக் கூட்டிவந்தது. என்னை இருத்திறது பற்றி நீங்கள் அவவோடை ஒண்டுமே கதைக்கேல்லையாம்” “நான் ஒவ்வொருநாளும் அவவிட்டைக் கதைக்கிறன் தானே, என்னட்டையே சொல்லியிருக்கலாமே? எதுக்கு உம்மட்டைத் தூதுவிடுறா? நான் பிறகு அவவோடை கதைக்கிறன்” “அவ இனிமேல் உங்களோடை கதைக்கமாட்டாவாம். தன்னை மதிக்கேல்லையாம்” “கிரைண்டர் கப் தனக்குத் தரேல்லை எண்ட கோபமோ” “நீங்கள் வந்த நாள் தொடக்கம் நான் அவைக்குப் போய் உதவி ஒண்டும் செய்யேல்லை” “எனக்கு விளங்கேல்லை. என்ன உதவி செய்யிறனீர்? “அவையின்ர வாழைக் குலைகள் சந்தைக்குக் கொண்டுபோய் குடுப்பன், கறக்கிற பால் பண்ணைக்குக் கொண்டுபோறது, மில்லு க்குப் போறது எண்டு ஒவ்வொரு நாளும் ஏதாவது வேலை இருக்கும். நீங்கள் வந்தபிறகு நான் அங்க போறேல்லை. இண்டைக்கு நான் வாற நேரம் பாத்து றோட்டில வந்து மறிச்சு சப்பல் பேச்சுப் பேசிப்போட்டு இனி எனக்கும் உனக்கும் ஒரு சம்மந்தமும் இல்லை எண்டு ஏசிப்போட்டுப் போட்டா” “நான் பிறகு போய் அவவோடை கதைக்கிறன். நீர் முதல்ல போய் என்ர மண்வெட்டிகளைக் கொண்டுவாரும்” நான் வீட்டை போட்டு வாறன் என்றபடி அவர் ஸ்கூட்டியக் கிளப்ப நான் ஓட்டோக்காரருக்கு போன் செய்து கன்றுகள் நட அந்தப் பையனை அனுப்பும்படி கூறுகிறேன். பதினைதே நிமிடங்களில் அந்தப் பையன் கேற்றைத் திறந்துகொண்டு சயிக்கிளில் வருகிறார். பார்த்தால் சிறிய வயது. நல்ல மொடேணாக ஆடை உடுத்தி, தலைவாரி பார்த்தால் பள்ளியில் படிக்கும் மாணவன் போல் தெரிய, பள்ளிக்கூடம் போறேல்லையோ என்கிறேன். இல்லை நான் பத்தாம் வகுப்போடை விட்டிட்டன் என்கிறார். உங்கடை வயதுக்குப் படிச்சா நல்ல வேலை செய்யலாமே என்றவுடன், என்ன அன்ரி நடவேணும் என்கிறார். நான் புத்துவெட்டியைக் கொடுத்து நல்ல ஆழமாக் கிண்டுங்கோ. நான் கன்றுகளை வைக்கிற இடத்தில கிடங்கு எடுத்து வையுங்கோ என்றபடி இடங்களைப் பார்த்துப் பார்த்துக் கொண்டுபோய் வைத்துவிட்டு திரும்பி வர நான்கு கன்றுகளை நட்டுமுடித்திருக்க, எனக்கோ இத்தனை விரைவாக வேலை செய்கிறாரே என்று ஆச்சரியம். பொலித்தீனை எங்கே போட்டீர்கள்? என்றபடி தேடினால் ஒன்றையும் காணவில்லை. நான் பொலித்தீனைக் கழட்டேல்லை. அப்பிடியே நட்டிட்டன் என்றவுடன் வந்த கோபத்தை அடிக்கியபடி நீங்கள் ஒருநாளும் கன்றுகள் நடேல்லையா என்று கேட்க இல்லை என்கிறார். பொலித்தீனுடன் நட்டால் வேரோட ஏலாமல் கன்று பெரிதாய் வளராது. திரும்பக் கன்றுகளை வெளியே எடுங்கோ என்று கூற திரும்ப வெளியே எடுக்கிறார். அவருடன் கூடவே நின்று அனைத்துக் கன்றுகளையும் நட்டு முடிய அவருக்குப் பணத்தைக் குடுத்து அனுப்பிவிட்டு பெண்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கப் போனால் நின்று கதைத்துச் சிரிக்க, வேலையைப் பாருங்கோ என்று கூறிவிட்டு நகர, தேத்தண்ணி இன்னும் தரேல்லை என்று கூற, அட மறந்திட்டன் என்றபடி தேநீர் ஊற்றிக் கொடுத்து பாகோடாவும் கொடுக்க அவர்கள் மாமர நிழலில் அமர்ந்துகொள்கின்றனர். தன் வீட்டுக்குப் போன ரஜிதன் ஒரு மண்வெட்டியுடன் வந்கிறங்குகிறார். எங்கே மற்ற மண்வெட்டி என்றதற்கு இது என் மண்வெட்டி அக்கா. நீங்கள் என்னில சந்தேகப்படுறியள் என்று வீட்டை போய் எடுத்து வாறன் என்கிறார். நான் மண்வெட்டியைப் பார்த்தால் அது எனது மண்வெட்டிதான். ஒரு மூலை கல்லில் பட்டுச் சிறிது நெளிந்திருந்தது. நான் அதைக் கூறி இது என்னுடையதுதான் என்றாலும் அவர் விடுவதாக இல்லை. இரண்டாவதும் உம்மட்டைத்தான் கிடக்கு. நாளை அதையும் கொண்டுவாரும் என்றுவிட்டு அதை உள்ளே எடுத்துக்கொண்டு சென்று வைத்துப் பூட்டுகிறேன். “அக்கா எனக்கு 10 வருசத்துக்கு அக்றிமென்ற் போட்டுத் தாங்கோவன். நான் உங்கடை வீட்டையும் வளவையும் வடிவாப் பார்க்கிறன்” “நாங்களே 10 வருஷம் உயிரோடை இங்க இருப்பமோ தெரியாது. அதுக்குள்ள உமக்குப் பத்து வருஷம் எழுதி பிறகு வீடு உமக்கே சொந்தமாகவோ? “நீங்கள் மாதம் 10 ஆயிரம் எனக்குத் தாறன் எண்டு ரதி அன்ரிக்குச் சொன்னனீங்களோ? “எனக்கு என்ன விசரா? “அவ உங்களோடு கதைத்ததாகச் சொன்னாவே அக்கா” “நான் அப்பிடி ஒண்டும் கதைக்கவில்லை. நான் போக்கேக்குள்ள அவவிட்டை என்ன சுத்துமாத்துக் கதை என்று கேட்கிறன், நீர் போய் இவைக்கும் உமக்கும் எனக்கும் சாப்பாட்டை வாங்கிக்கொண்டு வாரும்” என்று பணத்தைக் கொடுக்கிறேன். உணவு வந்தவுடன் நான் உணவுகளைக் கொண்டுபோய் இரு பெண்களுக்கும் கொடுத்துவிட்டு நீரும் சாப்பிடும் என்று கூற, தாங்கோ அக்கா நான் ஃபிரிஜ் இல் வைத்து இரவு சாப்பிடுகிறேன். இப்ப பசிக்கவில்லை என்கிறார். அவரின் பொதியைக் கொடுத்துவிட்டு உள்ளே இருந்த சிறிய மேசை ஒன்றில் என் உணவுப்பொதியை கொண்டுசென்று வைக்கும்போது எனது சாச் செய்யும் டோச் லைற் மேசையில் கிடக்கிறது. ஒருபக்கம் மகிழ்ச்சியும் மறுபுறம் வியப்புமாக அதை எடுத்துத் திருப்பித் திருப்பிப் பார்க்கிறேன். அது என்னுடையதுதான். உடனே ரஜிதன், இது எனது லைற் எல்லோ. எங்க இருந்தது? என்கிறேன். இது நேற்று என்ர மாடு அறுத்துக்கொண்டு போட்டுது. இருட்டினதால அன்ரிதான் இதைத் தந்து தேடு எண்டவ என்கிறார். எதுக்கும் என்னட்டையே இருக்கட்டும். நான் அவவோடை கதைக்கிறேன் என்றவுடன் என் கையில் இருந்த டோச் லைற்றை லபக் என்று பறிக்கிறார். அன்ரி என்னட்டைத் தந்தவ. நான் அவவிட்டைக் குடுக்கிறன். நீங்கள் அவவிட்டை வாங்கிக்கொள்ளுங்கோ என்றபடி தன் ஸ்கூட்டியினுள் கொண்டுபோய் வைக்க, நான் அதிர்ந்துபோகிறேன். கோபத்தை வெளியே காட்டவில்லை. ரஜிதன் வேலைக்குப் போட்டு வாறன் என்று கிளம்ப பெண்களின் வேலைமுடியும் வரை பொறுமையாக இருந்துவிட்டு கதவு கேற் எல்லாம் பூட்டிவிட்டுக் கிளம்புகிறேன். ரதி அக்காவின் வீட்டுக்குச் சென்று அக்கா என்று கூப்பிட, கதிரையில் இருந்த அக்கா விசுக்கென எழுந்து உள்ளே போகிறார். எனக்கு முதலில் விளங்கவில்லை. ஏதோ எடுக்கப் போகிறார் என நினைத்து ஒரு இரண்டு நிமிடம் நிற்கிறேன். அவர் வரவேயில்லை. நான் என் ஸ்கூட்டியைத் திருப்பிக்கொண்டு இணுவிலுக்குச் சென்று கணவர், மச்சாள், அன்ரி எல்லோரிடமும் நடந்தவற்றைக் கூற உவை இருவரும் சேர்ந்துதான் பொருட்களை எடுத்திருக்கினம். அவ முதல் சில பொருட்களை எடுக்க பெடிப்பிள்ளை மிச்சத்தை எடுத்திருக்கிறார் என்கின்றனர். அடுத்தநாள் என் இரு அன்ரிமாரையும் ஓட்டோவில் வரும்படி கூறிவிட்டு நான் முன்னே செல்கிறேன். பதினொரு மணிக்கு ரஜிதன் சிரித்தபடி வருகிறார். ஆரிவை என்றதும் நான் என் சித்திமார். நாங்கள் இன்று இங்குதான் தங்கப்போறம். அதுதான் இவையும் வந்தவை என்கிறேன். நான் மனிசனோடை நேற்று உங்களை இருத்துவது பற்றிக் கதைச்சனான். அவர் தனிய ஒருவர் வேண்டாம். ஒரு குடும்பம் என்றால் இருத்திவிட்டு வா எண்டவர்” என்று கூற அவரின் முகம் இருண்டுபோகிறது. “என்னக்கா உப்பிடிச் சொல்லுறியள். நான் எல்லாச் சாமான்களையும் உங்களை நம்பிக் கொண்டுவந்திட்டன்” “நானும் உங்களை நம்பித்தானே மண்வெட்டிகளை வைத்துவிட்டுப் போனனான். முதல்நாள் வைச்சிட்டுப் போனதையே இல்லை எண்டு சொல்லுற உங்களை நம்பி எப்பிடி நான் வீட்டில வச்சிருக்கிறது? “அப்ப எத்தினை நாளில கிளம்பவேணும்” “இப்பவே கிளம்புங்கோ “ “இப்பவேவா? உவ்வளவு பொருட்களையும் கொஞ்சம் கொஞ்சமாக கொண்டு போக வேணும். ஒரு மூண்டு நாள் எண்டாலும் வேணும்” “நீங்கள் ஒரு லாண்ட்மாஸ்டர் பிடிச்சு ஒரேயடியா எல்லாத்தையும் ஏற்றுங்கோ” “அதுக்கு 1500 ரூபா வேணும். என்னட்டை அது இல்லை” “அந்தக் காசை நான் தாறன்” “இரண்டு பேரும் சேர்ந்து என்னை நடுத்தெருவில விட்டிட்டியள்” “நீர் நடுத்தெருவில நிக்கிறதுக்குக் காரணம் நீர் தான். நான் நம்பி உம்மை வீட்டுக்குள்ள விட, என்ர வீட்டிலேயே களவெடுத்திட்டு என்னையே ஏமாத்தின உம்மடை எளிய புத்திதான் நீர் வெளிய போகக் காரணம்” முதல்ல போலீசுக்குப் போகத்தான் நினைச்சனான். பிறகும் அங்க இங்க எண்டு இழுபடப் பிடிக்காமல் தான் சும்மா விடுறன். அதன் பின்னர் அவர் எதுவும் பேசவில்லை. லாண்ட்மாஸ்டர் வந்தவுடன் பொருட்களை எல்லாம் ஏற்றிக்கொண்டு செல்ல என் மனம் நீண்ட பெருமூச்சுடன் நிம்மதி அடைகிறது. முடிந்தது
  6. சிறிமாவோ காலத்தில் பாணுக்குக் கூப்பன் காட்டை அடுக்கி வைத்து விட்டுக் காவல் இருந்த நாங்கள் தன்னிறைவு இன்மையும் இறக்குமதித் தடையும் தான் காரணம் தன்னிறைவு இல்லாவிட்டால் இறக்குமதி கட்டாயம் தேவை ட்ரம்பின் வரிக் கொள்கையால் அமெரிக்க துரைமார் குளித்துவிட்டு மாத்த ஜட்டி இல்லாமல் போட்டதையே காய போட்டுக் காவல் இருக்க வேண்டி வரப்போகின்றது 😂😇
  7. சென்னை நாட்டு மக்களின் ரசனை வயது கடந்தது............. பல துறைகளிலும்...................🤣.
  8. நல்ல உள்ளம் அவவுக்கு. வீட்ட விட்டு ஆள எழுப்பிறதுக்கும் தானே காசு குடுத்து லான்ட்மாஸ்டர் பிடிச்சு விடுறா. நீங்கள் வேற. நிதர்சனமான உண்மை வசி. படங்காட்டுறதில நம்ம ஆக்கள அடிச்சிக்க முடியாது. படங்காட்ட வெளிக்கிட்டு மற்றவையை மதிப்பதில்லை. ஆனால் அப்பிடியான ஆக்கள் அங்கே கனநாள் வாழமாட்டினம். அவையால முடியாது.
  9. டிஸ்கி அமித் ஷா தன் டகால்டி வேலையை காட்டி விட்டார். எப்படி பால் தாக்ரே குடும்பத்தை உடைச்சு சாப்பிட்டார்களோ அதேபோல் ராமதாஸ் குடும்பத்தையும் உடைக்கிறார்கள். இதை பார்த்து எடப்பாடி சுதாகரிக்க வேண்டும். தந்தை-மகன் உறவையே இப்படி உடைப்பவர்கள், அதிமுகவை எட்டாக உடைப்பார்கள். 2026 இல் என் டி ஏ கூட்டணி ஆட்சி என அமித் ஷா சொன்னது இதைத்தான். சசி, செங்கோட்டையன், ஓபிஎஸ், தினகரன் எவரையும் உள்ளே எடுக்காது, விஜையுடன் 65 : 35 க்கு போவதே கட்சியையும், பதவியையும் தக்க வைக்க எடப்பாடி முன் உள்ள ஒரே தெரிவு. விஜையும் ஓவர் கனவில் மிகக்காமல் இதற்கு உடன்பட வேண்டும்.
  10. தாத்தாவும் பேரனும் ஒரே கேள்வியை கேட்டதால் ஒன்றாக பதில் சொல்கிறேன். ஸ்டாலினும் கனிமொழியிம் திருடர்கள், நிம்மியை சந்திக்கிறார்கள். அதே போல் சீமானும் திருடன் என நீங்கள் ஒத்து கொண்டால்…. யாரும் பொங்கி எழ மாட்டார்கள்.
  11. உள் நோக்கத்தை கேள்வி கேட்கக் கூடாது... பகடைக் காய்களின் கதி இறுதியில் இது தான். இனத்தையும் விற்று தம்மையும் இழந்து......?
  12. இந்த போட்டியில் பங்களூர் அணி வென்றால் எனக்கும் கோஷான் சேக்கும் ஒரே புள்ளிகள் 😳. மிச்சல் சார்க், கே எல் ராகுல் - நீங்கள் தான் என்னைகாப்பாற்றவேண்டும். இன்று 100% வீதம் காயத்தில் இருந்து குணமடைந்தால் நடராஜனும் டெல்கிக்கு சிலவேளை விளையாடலாம் என நினைக்கிறேன்.
  13. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 23வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் சாய் சுதர்சனின் அதிரடியான 82 ஒட்டங்களுடனும், வேகமாக அடித்தாடிய ஜொஸ் பட்லர், ஷாரூக் கான், ராகுல் தெவதியா, ரஷீட் கான் ஆகியோரின் பங்களிப்புடனும் 6 விக்கெட் இழப்பிற்கு 217 ஓட்டங்களை எடுதது. பதிலுக்குத் துடுப்பாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர்களில் ஷிம்ரொன் ஹெட்மயரைத் தவிரப் பிறர் நிலைத்து ஆடமுடியாமல் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தமையால் 19.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 159 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: குஜராத் டைட்டன்ஸ் அணி 58 ஓட்டங்களால் வெற்றியீட்டியது குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 18 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த ஐவருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: @goshan_che இரட்டை இலக்கப் புள்ளிகளை எடுத்திருந்தாலும் முதல் எட்டு, கடைசி எட்டு நிலைகளில் மாற்றங்கள் இல்லை!
  14. யாழில். 35 ஆண்டுகளின் பின் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்ட வீதி! யாழ்.வசாவிளான் சந்தி முதல் பொன்னாலை – பருத்தித்துறை வீதி வரையிலான பலாலி வீதி நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் 35 ஆண்டுகளுக்கு பின்னர் மக்கள் போக்குவரத்துக்காக திறந்து விடப்பட்டுள்ளது. இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தின் ஊடாக செல்லும் சுமார் 2.5 கிலோ மீற்றர் நீளமான குறித்த வீதியானது கடந்த 1990ஆம் ஆண்டு முதல் மக்கள் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டிருந்தது. அதனால் யாழ்ப்பாணத்தில் இருந்து பலாலி வடக்கு பிரதேசத்திற்கு செல்லும் மக்கள் காங்கேசன்துறை சென்று அங்கிருந்தே பலாலி வடக்கிற்கு செல்லும் நிலைமை காணப்பட்டு வந்த நிலையில் குறித்த வீதியின் ஊடாக போக்குவரத்திற்கு அனுமதிக்குமாறு யுத்தம் நிறைவடைந்த காலம் முதல் சுமார் 15 வருட காலமாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் குறித்த வீதியானது இன்றைய தினம் வியாழக்கிழமை முதல் , பல்வேறு நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் மக்கள் போக்குவரத்திற்காக திறந்து விடப்பட்டப்பட்டுள்ளது. குறித்த வீதி ஊடாக காலை 06 மணி முதல் மாலை 05 மணி வரை மாத்திரமே மக்கள் பயணிக்க முடியும் என்றும் வீதியில் பயணிப்பவர்கள் வீதியின் இடையில் வாகனத்தினை நிறுத்துதல், வாகனங்களைத் திருப்புதல், பயண நேரத்தில் புகைப்படம், காணொளி எடுத்தல், ஆகிய நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் நடைபயணம் மற்றும் பேருந்து தவிர்ந்த பாரவூர்திகள் குறித்த வீதியூடாக செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மணித்தியாலத்துக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் மாத்திரமே பயணிக்க வேண்டும். சாரதிகளுக்கான அடையாள ஆவணங்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் இவ்வாறான கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனும் அறிவுறுத்தல் பதாகை வீதியில் தமிழ் மொழியில் எழுதி காட்சிப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1428116
  15. அப்பவே இந்த கூட்டம் சரியில்லை என்றேன். ஒருவரும் கவனிக்கவில்லை.
  16. அப்படியானால் சரி உறவே இவர் அண்ணாமலையை புகழ்ந்து பேசுவது மோடி தமிழை பரப்புகின்றார் என்று புகழ்வது என்பவற்றை பார்த்தால் நீங்கள் முன்பு சொன்ன பிஜேபி பி ரீம் என்பது போல் தான் இருக்கின்றது.
  17. GMT நேரப்படி நாளை வெள்ளி 11 ஏப்ரல் பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 25) வெள்ளி 11 ஏப்ரல் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் CSK எதிர் KKR 18 பேர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் 05 பேர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் வசீ ஈழப்பிரியன் அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி சுவி சுவைப்பிரியன் செம்பாட்டான் கந்தப்பு ஏராளன் ரசோதரன் தமிழ் சிறி குமாரசாமி எப்போதும் தமிழன் நந்தன் புலவர் கோஷான் சே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பிரபா வாதவூரான் நுணாவிலான் கிருபன் அகஸ்தியன் இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  18. எனக்கு அப்பவே தெரியும் உவர் என்னை போல் “down to earth” ஆன ஆள் இல்லை என்பது🤣.
  19. ஆனாலும் உந்த வயசில அந்தாள் விக்கட் காப்பளரா விளையாடுறார். மின்னல் வேக தகர்ப்புகள், அது இது என்டு போட்டு உழட்டுறாங்கள். இனிப் பாருங்க. அந்தாள் வலக்கையை உயர்த்தினா இப்பிடி, இடக்கையால சொறிஞ்சா இப்பிடி என்டு எத்தினை வரும் என்று.
  20. எங்கட பழைய மேற்கிந்தியதீவு அணியை உடைக்கேலாது போல. இன்றுடன் அவர்கள் எட்டா இடத்துக்குப் போய்விட்டார்கள். சுவி நந்தனுடன் இப்போது ரசோதரனும் இணைந்திருக்கிறார். பார்ப்போம் (புகைச்சல் மணக்குதோ)
  21. புத்தி உள்ள மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை பணமிருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை மனம் இருக்கும் மனிதரிடம் பணமிருப்பதில்லை
  22. தருவேன் பிரச்சனையில்லை படிப்பு முடிந்த பிற்பாடு மேலும் நான் இலங்கை ரூபாவில் தான் கொடுப்பது உண்டு 😀.
  23. அடிக்கடி தேர்தல் வந்தால் ஆட்டத்தில் ஒண்ணொண்ணா கழட்டி போடுவது போல அனுராவும் ஒண்ணொண்ணா விடுவிப்பாரோ?
  24. நீங்கள் ரணிலுடன் தேனிலவு கொண்டாடேக்கை விடுவித்திருந்தால் இப்பிடி புலம்பவேண்டி வந்திருக்காது. வலிவடக்கு பிரதேச சபை என் பிபிக்கு தான் போலை
  25. ஸ்ஸ்..... அங்கின என்ன சத்தம். என்ன வாறதோ......🤣
  26. ஜெயலலிதாவுக்கு எதிராகப் பேசியது ஏன்?- ரஜினி விளக்கம். மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பனின் முதலாம் ஆண்டு நினைவு நாளான இன்று, ‘ஆர்.எம்.வி. தி கிங் மேக்கர்’ என்ற ஆவணப் படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியிடப்பட்டுள்ளது. இந்த முன்னோட்டக் காட்சியில், நடிகர் ரஜினிகாந்த் ஆர்.எம்.வீரப்பன் குறித்த நினைவுகளைப் பகிர்ந்து பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுத்தது பற்றி நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், ஜெயலலிதாவுக்கு எதிராக நான் குரல் கொடுத்ததற்கு சில காரணங்கள் இருந்தால்கூட, இந்த காரணம் முக்கியமானது. இதுகுறித்து ஜெயலலிதாவிடம் நான் பேசுவதாக ஆர்.எம்.வி.யிடம் கூறினேன். ஆனால், ஜெயலலிதா ஒரு முடிவெடுத்தால் மாற்ற மாட்டார், அவரிடம் பேசி உங்கள் மரியாதையை நீங்கள் இழக்க வேண்டாம். அப்படி சொல்லி அங்கு சேர வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவித்துவிட்டார்” என்றார். https://athavannews.com/2025/1428070
  27. புலம்பெயர் தமிழர்கள் தமது பண மேலாதிக்கத்தில் அங்குள்ள மக்களை இரண்டாம் தர பிரஜைகளாக நடத்தும் மோசமான நிலை கானப்படுகிறது, இந்த நிலையில் புலம்பெயர் தமிழர்கள் அங்கு குடியேறினால் அங்கு இவர்களின் பணபலம் மூலம் மேலும் அங்குள்ள மக்கள் வறுமைக்கோட்டிற்கு தள்ளப்படுவர் அதனால் புலம்பெயர் தமிழர்கள் அங்குள்ள மக்களுக்கு செய்யும் உபகாரமாக அங்கு போய் குடியேறாமால் இங்கு வெளிநாட்டில் இருப்பது நல்லது.
  28. உந்தக் காணிக்குள்ள ஆட்களை இருத்தினதில் இருந்து அவ பல லட்சங்களை தன் கண்முன்னாலேயே இழந்து லட்சாதிபதியாகி இருக்கிறா ........ நீங்கள் இரண்டாவது பாகம் எழுதச்சொல்லி அவவை கோடீஸ்வரியாக்க நினைக்கிறீர்கள் . .......... ! 😁
  29. தமிழக வீரர்களால் குஜராத் அணி முதலிடம், சாய் சுதர்சன் அதிரடியில் வீழ்ந்த ராஜஸ்தான் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் தொடரின் 23வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 58 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது குஜராத் டைட்டன்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்ன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் சேர்த்தது. 218 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19.2 ஓவர்களில் 159 ரன்களுக்கு ஆட்டமிழந்து 58 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 5 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகள் பெற்று முதலிடத்துக்கு முன்னேறியது. அதோடு, 1.413 என வலுவான நிகர ரன்ரேட்டில் இருக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 போட்டிகளில் 2 வெற்றிகள் மற்றும் 3 தோல்விகளைப் பெற்று 4 புள்ளிகளுடன் 7வது இடத்துக்குச் சரிந்தது. குஜராத் அணியின் வெற்றிக்கு தமிழக வீரர்களான சாய் சுதர்சன், சாய் கிஷோர் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா மீண்டும் காரணமாகியுள்ளனர். அதிலும் தமிழக பேட்டர் சாய் சுதர்சன் கடந்த 5 போட்டிகளிலும் நிலையான பேட்டிங்கை வெளிப்படுத்தி, ஆரஞ்சு தொப்பியை நோக்கி முன்னேறியுள்ளார். சாய் சுதர்சன் 53 பந்துகளில் 82 ரன்கள் சேர்த்து குஜராத் அணியின் ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்து, ஆட்டநாயகன் விருதையும் வென்றார். பிரசித் கிருஷ்ணா 4 ஓவர்களில் 24 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் எனவும், சாய் கிஷோர் 2.2 ஓவர்களில் 20 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் எனவும் ராஜஸ்தான் அணியை நெருக்கடியில் தள்ளினர். சிஎஸ்கே பவுலர்களின் தூக்கம் கெடுத்த இந்த 'இடது கை சேவாக்' யார்?9 ஏப்ரல் 2025 மதுரை சிறுமி 7 வயதிலேயே டேக்வாண்டோ பயிற்சியாளராகி கின்னஸ் சாதனை9 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES ராஜஸ்தான் அணியின் சரியில்லாத பேட்டிங்தான் தோல்விக்கான முக்கியக் காரணம். 3 பேட்டர்கள் மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்றவர்கள் யாரும் ஜொலிக்கவில்லை. சிவப்பு மண் கொண்ட ஆடுகளம் பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியாக இருந்தது. ஆனால் பேட்டர்கள் யாரும் நிதானமாக ஆடவில்லை என்பதுதான் விக்கெட் சரிவுக்கு காரணம். அது மட்டுமின்றி ராஜஸ்தான் அணியில் ஹெட்மெயருக்கு அடுத்தார்போல் நடுப்பகுதியில் பெரிதாக பேட்டர்கள் யாருமில்லை. டாப்ஆர்டர் 3 பேர்தான் ஓரளவுக்கு சிறப்பாக ஆடக்கூடியவர்கள். நடுப்பகுதியும், கீழ்வரிசையும் ராஜஸ்தான் அணியில் பலவீனமாக இருக்கிறது. இதைச் சரிசெய்யாவிட்டால் ராஜஸ்தான் அணி முதல் சுற்றிலேயே வெளியேற்றப்பட்டுவிடும். நடுப்பகுதியில் பெரிய ஷாட்களை ஆடக்கூடிய வகையில் ஆங்கர் ரோல் எடுத்து விளையாடக் கூடிய பேட்டர்கள் யாருமில்லை. ஷுபம் துபே, ஜூரெல் இருவரும் கடந்த சில போட்டிகளாக மோசமாக ஆடி வருகிறார்கள். ஷிம்ரன் ஹெட்மயர்(52) மட்டுமே அரைசதம் அடித்தார். கேப்டன் சஞ்ஜூ சாம்ஸன்(41), ரியான் பராக்(26) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற வகையில் ஜெய்ஸ்வால்(6), நிதிஷ் ராணா(1), ஜூரெல்(5), ஷுபம் துபே(1) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு எப்போது? மௌனம் கலைத்தார் தோனி8 ஏப்ரல் 2025 ஏமாற்றம் தந்த தோனி: சிஎஸ்கே அணியின் 'ஹாட்ரிக்' தோல்வி உணர்த்துவது என்ன?6 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்ச்சரின் அதிரடி பந்துவீச்சு வெற்றிக்குப் பின் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் பேசுகையில், "நன்கு ஸ்கோர் செய்திருந்தோம். சேஸிங்கும் எளிதாக இருக்கவில்லை. முதல் 4 ஓவர்களில் நாங்கள் நெருக்கடி கொடுத்துவிட்டோம். சாய், பட்லர் பார்ட்னர்ஷிப் ஆட்டம் அற்புதமாக இருந்தது, அதனால்தான் 200 ரன்களை கடக்க முடிந்தது. எங்கள் வேகப்பந்துவீச்சாளர்களும் அற்புதமாகப் பந்துவீசினர்," என்று தெரிவித்தார். அதோடு, ஒவ்வொருவரும் தனது பங்கை உணர்ந்து ஆடியதாகக் குறிப்பிட்ட அவர், "நாம் நினைத்தது போல் பந்துவீச்சாளர்கள் செயல்படும்போது கேப்டன்சி எளிதாகிறது. நான் யாரை பிளேயிங் லெவனில் கொண்டு வந்தாலும் 100 சதவீத பங்களிப்பு செய்கிறார்கள். இஷாந்த் சர்மாவும் கடந்த ஆட்டத்தில் சிறப்பாகப் பந்து வீசினார்," எனத் தெரிவித்தார். ராஜஸ்தான் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு இந்த சீசன் சிறப்பாகத் தொடங்கவில்லை. முதல் இரு போட்டிகளில் 6.3 ஓவர்களில் 109 ரன்கள்வரை கொடுத்தார். ஆனால் அடுத்து வந்த போட்டிகளில் மீண்டு வந்த ஆர்ச்சர் 7 ஓவர்களில் 38 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி பந்துவீச்சில் அதிரடியைக் காட்டியுள்ளார். இந்த ஆட்டத்திலும் ஆர்ச்சரின் பந்துவீச்சில் அனல் பறந்தது. சாய் சுதர்சன் சந்தித்த முதல் ஓவரில் ஆர்ச்சர் 152 கி.மீ வேகத்தில் பந்துவீசித் திணறடித்தார். 147 கி.மீ வேகத்தில் இன்ஸ்விங் வீசி சுப்மன் கில்லை கிளீ்ன் போல்டாக்கி மகிழ்ச்சியில் ஆர்ச்சர் திளைத்தார். அடுத்து வந்த இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லருக்கு 2 ஸ்லிப் ஃபீல்டர்களை நிறுத்தி, ஷார்ட் லெக்கில் ஃபீல்டர் அமைத்து ஆர்ச்சர் அவுட் ஸ்விங் வீசியும், பவுன்ஸர் வீசியும் திணறவிட்டார். ஆனால், பட்லர் கடைசியில் பவுண்டரி அடித்து ஆர்ச்சருக்கு பதிலடி கொடுத்தார். ஒரே ஒரு வீடியோவால் தர்பூசணி விலை கிலோ ரூ.2-க்கு வீழ்ந்து விட்டதாக விவசாயிகள் வேதனை9 ஏப்ரல் 2025 கோழி இறைச்சியை ஆரோக்கியமான முறையில் கழுவுவதும், சமைப்பதும் எப்படி?7 ஏப்ரல் 2025 சாய் சுதர்சன் எனும் நங்கூரம் பட மூலாதாரம்,GETTY IMAGES குஜராத் டைட்ன்ஸ் அணியின் நம்பிக்கை நாயகன், நங்கூரம் என்று தமிழக வீரர் சாய் சுதர்சனை குறிப்பிடலாம். இதுவரை 5 போட்டிகளில் 3 அரைசதங்கள் உள்பட 40க்கும் அதிகமான ரன்களை 4 முறை அடித்துள்ளார். குஜராத் அணி ஒவ்வொரு முறையும் பெரிய ஸ்கோரை எட்டுவதற்கு தொடக்கப் புள்ளியாக சாய் சுதர்சன் ஆட்டம் அமைந்துள்ளது. தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக ஆடிய சுதர்சன் ஸ்கூப், டிரைவ், கட்ஷாட் என அடித்து ரன்களை சேர்த்தார். இதன்மூலம் 5.1 ஓவர்களில் குஜராத் 50 ரன்களை எட்டியது. பவர்ப்ளே முடிவில் குஜராத் 56 ரன்கள் சேர்த்தது. அதில் 39 ரன்கள் சாய்சுதர்சன் சேர்த்தது. ஜாஸ் பட்லர் ஒரு கட்டத்தில் திணறி 12 பந்துகளில் 13 ரன்கள் என இருந்தார். அதன் பின்னர், அடுத்த 6 பந்துகளில் 4 பவுண்டரிகளை விளாசி 19 பந்துகளில் 31 ரன்களுக்கு முன்னேறினார். பட்லரும், சாய் சுதர்சனும் 2 விக்கெட்டுக்கு 46 பந்துகளில் 86 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துப் பிரிந்தனர். தீக்சனா பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி பட்லர் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு குஜராத் ரன்ரேட் திடீரென சரிந்தநிலையில் மற்றொரு தமிழக வீரர் ஷாருக்கான் களமிறங்கி சிறிய கேமியோ ஆடி 20 பந்துகளில் 36 ரன்கள் சேர்த்து ரன்ரேட்டை உயர்த்திக் கொடுத்து ஆட்டமிழந்தார். ஆர்ச்சர் வீசிய 18வது ஓவரில் பவுண்டரி எல்லையில் கிடைத்த கேட்ச் வாய்ப்பை ஷுபம் துபே கைக்கு வந்ததைத் தவறவிட்டார். ஆனால், அதன் பிறகு ஒரு ரன் மட்டுமே சேர்த்த சுதர்சன் 82 ரன்னில் ஆட்டமிழந்தார். சாய் சுதர்சன் 32 பந்துகளில் அரைசதம் அடித்து, 46 பந்துகளில் 82 ரன்கள் சேர்த்து தேஷ்பாண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். முதல் ஓவரில் களமிறங்கிய சாய் சுதர்சன் 19வது ஓவர் வரை களத்தில் இருந்து ஆங்கர்ரோல் எடுத்தார். ராகுல் திவேட்டியா(24) மற்றும் ரஷித்கான்(12) குஜராத் அணி 200 ரன்களை கடக்க உதவினர். 20 ஓவர்களில் குஜராத் அணி 217 ரன்கள் சேர்த்தது. யாரையும் நெருங்க விடாத இந்தியாவின் சென்டினல் தீவு பழங்குடிகளை பார்க்க சென்ற அமெரிக்கர் என்ன ஆனார்?8 ஏப்ரல் 2025 'தயிர் சாதத்துடன் ஆரம்பம்' : சைவ உணவுகளையே விரும்பிய ஒளரங்கசீப் உள்ளிட்ட முகலாய பேரரசர்கள்8 ஏப்ரல் 2025 ராஜஸ்தான் திணறல் பட மூலாதாரம்,GETTY IMAGES ராஜஸ்தான் அணி 218 ரன்கள் எனும் பெரிய இலக்குடன் களமிறங்கியது. ஜெய்ஸ்வால் 3வது முறையாக ஏமாற்றினார். அர்ஷத் கான் வீசிய 2வது ஓவரில் ஆப்சைடு விலகிச் சென்ற பந்தை அடிக்க முயன்று டீப் தேர்டு திசையில் ரஷித் கானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ராணா ஒரு ரன்னில் சிராஜ் பந்துவீச்சில் டீப் தேர்டு திசையில் கெஜ்ரோலியாவிடம் கேட்ச் கொடுக்கு விக்கெட்டை இழந்தார். ரியான் பராக் வந்த வேகத்தில் சிராஜ் பந்துவீச்சில் சிக்ஸர் விளாசினார். சாம்சன், ரியான் பராக் ஓரளவுக்கு ஆடி 26 பந்துகளில் 48 ரன்கள் சேர்த்திருந்தபோது சர்ச்சைக்குரிய வகையில் பராக் ஆட்டமிழந்தார். பவர்ப்ளேவில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் சேர்த்தது. குல்வந்த் கெஜ்ரோலியா வீசிய 7வது ஓவரில் ரியான் பராக் பந்தை அடிக்க முற்பட்டு பட்லரிடம் கேட்சானது. பேட் தரையில் மோதியபோது சத்தம் கேட்டது, ஆனால், பந்து பேட்டில் பட்ட சத்தமா அல்லது பேட் தரையில் மோதியதால் சத்தம் வந்ததா என்ற குழப்பத்தில் 3வது நடுவர் ரியான் பராக்கிற்கு அவுட் வழங்கினார். இதுகுறித்து கள நடுவரிடம் தனது அதிருப்தியைத் தெரிவித்து பராக் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். ஃபார்முக்கு வந்த ரஷித் கான் கடந்த 4 போட்டிகளில் ஒரு விக்கெட்டை மட்டும் வீழ்த்தியிருந்த ரஷித் கான் இந்த ஆட்டத்தில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி மீண்டும் ஃபார்முக்கு திரும்பினார். தனது முதல் ஓவரிலேயே துருவ் ஜூரெல் விக்கெட்டை எடுத்தார் ரஷித் கான். அதன்பின் ஹெட்மெயர் வந்தவுடன் கால்காப்பில் வாங்கியது தெளிவாகத் தெரிந்தது. இருப்பினும் பந்து சிறிது லெக்ஸ்டெம்புக்கு தள்ளி பிட்ச் ஆனதால் அவுட் வழங்கவில்லை. ஆனால் ரஷித் கான் குறிவைத்துப் பந்து வீசியதில் ஹெட்மயர் 12 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்சர்கள் உள்பட 26 ரன்களை விளாசினார். ஷுபம் துபே ஒரு ரன்னில் ரஷித் கான் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார். பி.கே.ரோஸி: 100 ஆண்டுகளுக்கு முன் சாதி கொடுமையால் நாகர்கோவிலில் தஞ்சமடைந்த தலித் நடிகை1 ஏப்ரல் 2025 மம்மூட்டி மீதான அன்பால் மோகன்லால் செய்த செயல் சர்ச்சையாவது ஏன்?28 மார்ச் 2025 நெருக்கடியளித்த சாய் கிஷோர், பிரசித் கிருஷ்ணா பட மூலாதாரம்,GETTY IMAGES நடுப்பகுதியில் சாய் கிஷோர், பிரசித் கிருஷ்ணா இருவரும் கடைசி வரிசை விக்கெட்டுகளை கவனித்துக்கொண்டனர். சாம்சன், ஹெட்மெயர் இருவரும் அணியை மெல்ல வெற்றியை நோக்கி நகர்த்தினர். 12 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 115 ரன்களுடன் ராஜஸ்தான் அணி வலுவாக இருந்தது. பிரசித் கிருஷ்ணா வீசிய பவுன்சரை அடிக்க முற்பட்டு ஷார்ட் தேர்டு திசையில் கேட்ச் கொடுத்து சாம்சன் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். பிரசித் கிருஷ்ணா வீசிய 16வது ஓவரில் ஷார்ட் பந்தில் ஆர்ச்சர்(4), ஹெட்மெயர்(52) இருவரும் விக்கெட்டுகளை இழந்தனர். ராஜஸ்தான் அணி, 16 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் சேர்த்துத் தடுமாறியது. அதன் பிறகு அடுத்த 14 ரன்களுக்குள் மீதமிருந்த இரு விக்கெட்டுகளையும் சாய் கிஷோரிடம் இழந்து ராஜஸ்தான் அணி 159 ரன்களில் ஆட்டமிழந்தது. அடுத்த ஆட்டம் யாருக்கு? இன்றைய ஆட்டம்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs டெல்லி கேபிடல்ஸ் இடம்: பெங்களூரு நேரம்: இரவு 7.30 சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம்: சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட்ரைடர்ஸ் நாள் - ஏப்ரல் 11 இடம் - சென்னை சேப்பாக்கம் மும்பையின் அடுத்த ஆட்டம்: மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் நாள் - ஏப்ரல் 13 இடம் - டெல்லி ஆரஞ்சு தொப்பி யாருக்கு? நிகோலஸ் பூரன் (லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்) -288 ரன்கள் (5 போட்டிகள்) சாய் சுதர்சன் (குஜராத் டைட்டன்ஸ்) - 273 ரன்கள் (5 போட்டிகள்) மிட்ஷெல் மார்ஷ் (லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்) - 265 ரன்கள் (5 போட்டிகள்) பர்பிள் தொப்பி யாருக்கு? நூர் அகமது (சிஎஸ்கே) - 11 விக்கெட்டுகள் (5 போட்டிகள்) சாய் கிஷோர் (குஜராத் டைட்டன்ஸ்) - 10 விக்கெட்டுகள் (5 போட்டிகள்) முகமது சிராஜ் (குஜராத் டைட்டன்ஸ்) - 10 விக்கெட்டுகள் (5 போட்டிகள்) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cevddnllzgdo
  30. ஹா ஹா...நாமதான் சுவி நந்தன் அணிலேயே இல்லையே. எதிர் அணி. வேணுமென்டா அவுஸ்ரேலிய வீரர் தொம்ஸன் என்டு சொல்லலாம். வேஏஏஏகமா பந்தப் போட்டு அவையைத் தூக்குவம். இம்முறை வேறு அணி. Hazelwood போனமுறை 2024ல் விளையாடவில்லை. மற்றைய பந்தாளர்களும் பெரிதாக சோபிக்கவில்லை. சிராஜ்ஜப் பாருங்கள். போனமுறையை விட இவ்வருடம் வெறிகொண்டு வீசுகிறார். ஆனால் அணி வேறு. Hazelwoodதான் இம்முறை துருப்புச் சீட்டு
  31. படலந்த மற்றும் மாத்தளை தவிர வேறு சித்திரவதைக் கூடங்கள் இருந்தவனா? April 10, 2025 11:21 am ஜே.வி.பி.யின் இரண்டாவது கிளர்ச்சியின் போது காணாமல் போனவர்களை விசாரிக்க ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவால் நியமிக்கப்பட்ட மத்திய வலைய ஆணைக்குழுவின் செயலாளர், சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம் (ITJP), இலங்கையில் ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள் (JDS) மற்றும் இலங்கை பிரச்சாரம் (SLC) ஆகியவற்றால் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளிகள் மூலம் இந்த தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார். ஐந்து வருடங்களுக்கு முன்னர், இலங்கையில் 200ற்கும் மேற்பட்ட சித்திரவதைக் கூடங்களைக் காட்டும் முதல் வரைபடத்தை தொகுக்கப்பட்ட ITJP மற்றும் JDS வெளியிட்ட மாத்தளை சித்திரவதைக் கூடங்கள் மற்றும் காணாமல் போன சம்பவங்களில் கோட்டாபய ராஜபக்சவின் பங்கு குறித்து 2022 மற்றும் அதற்குப் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கைகள் குறித்து விசாரணை செய்ய எந்த அரசாங்கமும் ஆர்வம் காட்டவில்லை. http://www.jdslanka.org/images/documents/18_06_2020_itjp_jds_press_release.pdf தேர்தல் காலத்தில் படலந்த சித்திரவதைக் கூடம் குறித்து நாடாளுமன்ற விவாதத்தை நடத்த தற்போதைய அரசாங்கம் அவசரமாக ஆர்வம் காட்டுவதற்கு, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் அது குறித்து கேள்வி எழுப்பிய பின்னர் அல் ஜசீரா சர்வதேச ஊடக வலையமைப்பு ஏற்படுத்திய தாக்கமே காரணமாக அமைந்துள்ளது. கடந்த தசாப்தத்தில் மாத்தளை, மன்னார், கொக்குத்தொடுவாய் மற்றும் கொழும்பு துறைமுகம் ஆகிய இடங்களில் பாரிய புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், இந்த விடயத்தில் நாடாளுமன்ற விவாதங்களை நடத்துவதற்கு எந்த அரசாங்கமும் முன்மொழியவில்லை. 1980களின் பிற்பகுதியில் நடந்த மனித உரிமை மீறல் குற்றங்களை விசாரணை செய்ய ஜனாதிபதி சந்திரிக்காவால் நிறுவப்பட்ட காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழுவின் மத்திய வலைய செயலாளர் எம்.சி.எம்.இக்பால் அண்மையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த படலந்த வெறும் ஒரு சித்திரவதை கூடம் என்பதை வெளிப்படுத்துகிறார். “ஆனால் படலந்த எனப்படுவது பாதுகாப்புப் படையினரால் நடத்தப்பட்ட பல தடுப்பு மையங்களில் ஒன்று அவ்வளவுதான். உதாரணமாக, கண்டியில் உள்ள புனித சில்வெஸ்டர் கல்லூரியிலும் ஒரு சித்திரவதைக் கூடம் இருந்தது.” அந்த இடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தனது மற்ற தோழர்களைப் போல மரணத்தைப் பார்ப்பதற்குப் பதிலாக, தற்செயலாக தனது உயிரைக் காப்பாற்றப்பட்டதற்காக ‘சான்ஸ் காரயா’ என்ற புனைப்பெயரைப் பெற்ற ஒரு இளைஞன், காணாமல் போனோர் தொடர்பிலான மத்திய வலைய ஆணைக்குழுவிற்கு வழங்கிய சாட்சியத்திலிருந்து தான் இதைப் பற்றி அறிந்துகொண்டதாக இக்பால் குறிப்பிடுகின்றார். இக்பால் சொன்னதை கேட்க – https://x.com/JDSLanka/status/1909262030101422349 இது மீண்டுவர அனுமதிக்கப்படாத பல்லாயிரக்கணக்கானவர்களில் ஒருவரின் கதை மாத்திரமே. இது பதுளையில் உள்ள ஹாலிஎல மோட்டர்ஸ் சித்திரவதை கூடம் பற்றிய கதை – https://x.com/SLcampaign/status/1909656056642306527?t=KG-1pG4p8rahfzRmlOWdAA&s=09 மத்திய வலைய ஆணைக்குழுவால் ஆவணப்படுத்தப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் முழு பட்டியலையும் இந்த இணைப்பில் அறிந்துகொள்ள முடியும். – http://tinyurl.com/2zyhxeek https://oruvan.com/were-there-other-torture-chambers-besides-patalanda-and-matale/
  32. இவதான்... உங்களுக்கு சிங்களம் கற்றுத்தரப் போகின்ற ரீச்சர். உங்கள் வீட்டிற்கே வந்து, வடிவாக சொல்லித் தருவார். சம்பளம் பெரிய பிரச்சினை இல்லை. இலவச கல்விதான். 😂 உங்களுக்கு ஓகேயா... அப்பிடி என்றால், நாளைக்கே ஆரம்பிப்பம். 🤣
  33. இலங்கை வானொலி K.S. ராஜா வழங்கிய இசைச் செல்வம் நிகழ்ச்சியில் தொடர்ந்து முதலிடம் பிடித்த பாடல் மிக்க நன்றிகள் தோழர் ..
  34. அவையள் மாறிவிட்டினம் ,நீங்கள் மாறவில்லை போல....இப்ப மாசாலா தோசையும் ,வடையும் நல்ல ருசியா ?very tasty yaa இருக்கோ? காலம்டா .....
  35. உண்மை தான் ...இது என்ன கட்சி ஐக்கிய தேசிய கட்சி அல்லது சிறிலாங்கா சுதந்திர கட்சியா என்று யோசிக்க வேண்டி உள்ளது
  36. இது பழைய மேற்கிந்தியதீவுகள் அணி மாதிரி. சுவி நந்தன் ஆரம்பத் துடுப்பாட்டம் டெஸ்மன் கெயின்ஸ் கோர்டன் கிறீனிட்ச் மாதிரி. பின்னால ரசோதரன் விவியன் ரிச்சட்ஸ் மாதிரி. ஒருத்தரும் உடைக்கேலாது. ஏலுமென்டா பந்து போட்டுப் பாருங்க 😁
  37. சுவி ஐயா தலைமையில் இது நல்ல கூட்டு அண்ணா.............. ஆறும் அசல் தங்கங்கள் அண்ணா (நாளை இந்தப் போட்டி முடியும் வரை).............😜. மூன்று கூட்டாளிகள் அநேகமாக சேர்ந்து தான் வருவினம், போவினம்.......... நாங்கள் ஒன்று இரண்டு பேர்கள் அப்பப்ப அவர்களுடன் சேர்ந்து கொள்கின்றோம்..............🤣.
  38. முதல்வர் @suvy க்கு வாழ்த்துக்கள். இந்தக் கூட்டு சரியில்லையே?
  39. மத்தேயு 6 : 3 - சோம.அழகு “கயலு… உனக்கு சுண்டல் அவிச்சு வச்சிருக்கேன். அந்தச் சின்ன சம்படத்துல வடையும் வாங்கி வச்சிருக்கேன். பசிச்சா சாப்பிடு தங்கம். விளையாண்டு முடிச்சுட்டு எழில் அக்கா வீட்டுல இரு. நான் வந்து கூப்பிட்டுக்குறேன். சரியா?” – அவ்வளவு நேரம் தொடுத்த பூச்சரங்களையும் மாலைகளையும் கூடையினுள் எடுத்து வைத்து வழமையான மாலை வியாபரத்திற்குக் கிளம்பியவாறே தன் மகளிடம் வாஞ்சையாகக் கூறினாள் மலர். என்ன ஒரு பெயர் பொருத்தம்! “யம்மா… நானும் கூட வாரனே!” – கிட்டத்தட்டக் கெஞ்சினாள் கயல். இது வாராவாரம் நடக்கும் கதைதான். வார நாட்களில் கயலின் வீட்டுப் பாடத்தைக் காரணம் காட்டி உடன் அழைத்துச் செல்ல மறுத்துவிடுவாள் மலர். வார இறுதியில் சில சமயம் பிள்ளையின் ஆசைக்கு வளைந்து கொடுக்க வேண்டி வரும். “வேணாங்கண்ணு… படிக்குறதுனா படி; இல்லனா பக்கத்து வீட்டுக்குப் போய் விளையாடக் கூட செய். எதுக்குப் போட்டு அந்தக் கூட்டத்துல வந்து….?” “ம்மா… ப்ளீஸ் மா…” - மறுதலிக்கவே முடியாத ஒரு முகத்தை எங்கிருந்துதான் கொண்டு வருவாளோ? வேறு வழியில்லாமல் அந்த வெகு சில நாட்களில் இன்றும் ஒன்றாகிப் போனது. மிகவும் பொறுப்பாக ஒரு சிறிய கூடையைத் தானாக எடுத்து வந்து, “ம்ம்.. எனக்கும்” என்று மலரிடம் நீட்டினாள். “சொன்னா கேட்க மாட்டா… இந்தா.... ஆனா கொஞ்சந்தான் தருவேன்” என்றபடி வெறும் நான்கைந்து பூச்சரங்களை மட்டுமே அக்குட்டிக் கூடையினுள் இட்டாள். அம்மாவைப் போலவே கூடையை இடுப்புப் பக்கத்தில் வைத்துப் பிடித்தவள் தன் வயதிற்கே உரிய களிப்புடன் ஒவ்வொரு காலாக மாற்றி மாற்றி துள்ளிக் குதித்தவாறே தன் குதிரைவால் இடமும் வலமும் ஆட குதூகலமாகச் சென்றாள். தன் மகளைப் பார்த்துப் பார்த்துப் பூரிப்படைந்தவாறே மென்புன்னகையுடன் உடன் நடந்து வந்தாள் மலர். அந்தத் தெருமுனையில் வறுத்த கடலைப் பொட்டலங்களுடன் நின்று கொண்டிருந்த எழிலும் அவர்களுடன் சேர்ந்துகொண்டாள். மூவரும் கோவில் தெருவை நோக்கி நடந்தார்கள். கோயிலுக்கு வருபவர்கள், அதைச் சுற்றி இருக்கும் ஏராளமான கடைகளுக்கு வருபவர்கள் என மாலை நேரத்தில் மக்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். மிக அகலமானதும் நீண்டதுமான ரத வீதி அது. எனவே ஆளுக்கு ஒரு புறமாக விற்பனை செய்து கொண்டிருப்பார்கள். “படிக்குற புள்ளைகள்லாம் என்னத்துக்கு என் கூட வாரீக?” என்று செல்லமாக அதட்டினாள் மலர். “சும்மா வா அக்கா” என்று சிரித்த எழில் இளங்கலை ஆங்கிலம் மூன்றாம் ஆண்டு படிப்பவள். “அம்மா! இப்பிடி ஏதாவது வெளிய வந்தாதான் உண்டு. நாங்க பாட்டுக்கு எங்க சோலிய பாக்கப் போறோம். உனக்கு என்ன எடைஞ்சலாம்?” – தனது அணியில் எழில் வந்துவிட்ட தைரியத்தில் கயலின் குரல் கொஞ்சம் ஓங்கி ஒலித்தது. ஆளுக்கு ஒரு கடலைப் பொட்டலத்தைக் கையில் திணித்துத் தானும் ஒன்றைப் பிரித்துச் சாப்பிட்டவாறே நடந்தாள் எழில். கடைவீதியை வேடிக்கை பார்ப்பது பிடித்தமான பொழுதுபோக்கு கயலுக்கு. எல்லாவற்றையும் கண்கள் விரிய பார்ப்பளே தவிர ஒரு நாளும் அம்மாவிடம் எதையும் வாங்கித் தரச் சொல்லிக் கேட்கவே மாட்டாள். “நாங்கதான் படிக்கல. உங்களுக்கு இருக்குற ஒரே வேலை – படிக்குறது. அத மட்டும் பாக்குறதுதானே? அதுக்குத்தான கெடந்து இப்பிடி கஸ்டப்படுதோம் நாங்க” என்றள் மலர். வீட்டில் சில சமயம் பூ தொடுத்துக் கொண்டிருக்கும் போது கயல் படிப்பதை ஆசையாய்ப் பார்க்கையில் மலரின் கண்களே பூக்களாய் மாறிப் போகும். பத்தொன்பது வயதில் மணமாகி இருபது வயதிலேயே கயலுக்குத் தாயாகிவிட்டாள். நன்கு படிக்கும் ஆற்றல் பெற்றிருந்தாலும் கல்லூரியின் முதலாமாண்டோடு படிப்பைத் தூக்கிப் போட வேண்டிய குடும்பச் சூழல். இப்போது அவளது உலகம், உயிர், மூச்சுக்காற்று என எல்லாமே கயல்தான். ஆனாலும் உலகம் முன்னேறிக் கொண்டிருக்கும் வேகத்திற்கு முற்றிலும் ஈடு கொடுக்கும் வகையில் அனைத்து உலக நடப்புகளையும் அறிந்து கொள்ள முயல்வாள். கற்றுக் கொள்ளும் ஆர்வம் மட்டும் மலரை விட்டுப் போகவே இல்லை. கோயிலில் அம்மன் சன்னதிக்கென்று தனி நுழைவுவாயில் உண்டு. கயல் உடன் வரும் நாட்களில் மட்டும் உள்ளே செல்வாள். ஐயருக்காகக் காத்திருக்கவும் மாட்டாள். அர்ச்சனையும் செய்ய மாட்டாள். வேண்டிக்கொள்ளுதல் என்பதும் அவளுக்குத் தெரியாது. சாமி கும்பிடுதல் என்பது அவளைப் பொறுத்த வரை சில நொடிகள் அக்கற்சிலையைக் கூர்ந்து நோக்கியவாறு மனதினுள் கயல் படித்துப் பெரிய ஆளாக வருவாள் என தனக்குள் வைராக்கியமாக சொல்லிக் கொள்வது. சொல்லிக் கொள்வது என்பதையும் தாண்டி அம்மனிடம் கயலைப் பெரிய கெட்டிக்காரியாகக் கொண்டு வரப்போவதாகச் சூளுரைப்பது போல இருக்கும். அதன் வீரியம் எப்படி இருக்குமென்றால் அவளது மனதிற்குக் காலமே செவி சாய்த்து அதை நிகழ்த்தித் தரும் முயற்சியில் அர்ப்பணிப்போடு ஈடுபடத் துவங்கும் அளவிற்கு இருக்கும். பின்னர் அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த அந்த இசைத்தூணில் கொட்டப்பட்டிருக்கும் குங்குமத்தை மோதிர விரலால் எடுத்து கயலின் நெற்றியில் இருக்கும் சிறிய கருப்புப் பொட்டிற்கு மேல் மெலிதான கோடாக இடுவாள். சட்டென்று யாரும் நெட்டி முறிக்கும் அழகைப் பெற்றுவிடும் அம்முகம். உடனே கண்களை இறுக மூடி புருவங்களையும் மூக்கையும் சுருக்கிச் சுளித்தும் விரித்தும் இரண்டு மூன்று முறை வேண்டுமென்றே விளையாடுவாள் கயல். குங்குமம் லேசாக கண்களுக்குக் கீழேயும் மூக்கின் மேலேயும் மகரந்தத்தைப் போல் சிதறிப் படியும். அதைத் துடைத்து விட்டவாறே மலரிடம் இருந்து பரிசாகக் கிடைக்கும் ஒரு முத்தத்திற்குத்தான் இந்தக் குறும்பெல்லாம். “ரொம்ப தூரம் போய்டாதீங்க… நான் பாக்குற தூரத்துலயே இருங்க ரெண்டு பேரும்” – ரத வீதியை அடைந்ததும் இரண்டு பேரையும் பார்த்துச் சொன்னாள் மலர். சரியென்றவாறே கூட்டத்தினுள் பிரிந்து சென்றனர். கோயில் ஒலிப்பெருக்கியில் உரத்துப் பாடிக் கொண்டிருந்த எஸ்.பி.பி, ஒவ்வொரு கடை வாசலிலும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த மக்கள், வாகன இரைச்சல்கள் ஆகியவற்றுடன் “பூவு… பூவு… மல்லிப் பூவு… அக்கா பூ வாங்கிக்கோங்க”, “கடல… கடல… வறுத்த கடல… அண்ணா ஒரு பொட்டலம் அஞ்சு ரூபாதான்… வாங்கிக்கோங்கண்ணா” ஆகியவையும் போட்டி போட்டன. அவ்வளவு கூட்டத்திலும் வேக வேகமாகத் தன் கண்களால் துழாவி அவ்வப்போது இருவரின் இருப்பையும் உறுதி செய்தவாறே பூ விற்றுக் கொண்டிருந்தாள் மலர். கயலை உடன் அழைத்து வரும் போதெல்லாம் ஒரு வித பதற்றத்திலேயேதான் பொழுது கழியும் மலருக்கு. “சீக்கிரம் பூக்கள் விற்றுத்தீர்ந்து விடாதா?” என்றிருக்கும். கண்ணை விட்டு கயல் ஒரு நொடி மறைந்து விட்டாலும் மீதமிருக்கும் மொத்தப் பூக்களையும் சட்டை செய்யாமல் கயலைத் தேடிக் கண்டடைந்து வீட்டிற்குக் கூட்டி வந்துவிடுவாள். கூடையில் இருக்கும் பூக்களையும் அவர்கள் வரும் நேரத்தையும் பார்த்து அக்கம்பக்கத்தினர், “ஏங் கயலு? அம்மைய விட்டுத் தள்ளிப் போனியோ?” என்று விளையாட்டாகக் கேட்டுச் சிரிக்கும் அளவிற்கு அத்தனை பேருக்கும் கயலின் மீதான மலரது பேரன்பு பரிச்சயம். “ஏஞ் சிரிக்க மாட்டீங்க? வச்சுருக்குறது ஒத்த புள்ள… அதைக் காணாம ஒரு நிமிசம் உசுரே போயிருது. இன்னைக்கு யாவாரத்துல கொட்டுனது போதும். இந்தப் பூவையெல்லாம் ஆளுக்கு ஒண்ணா எடுத்து வச்சுக்கிடுங்க” என்பாள். அன்று சனிக்கிழமை ஆதலால் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாகவே இருந்தது. விற்பனையும் நன்றாக நடந்தது மூவருக்கும். கிட்டத்தட்ட எல்லாமே விற்றுத் தீரப் போகும் சமயம். கயலைக் காணவில்லை. லேசான பதற்றம் தொற்றிக் கொண்ட போதிலும் ‘வழக்கம் போல் எங்கேனும் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பாள்’ என மனம் ஆசுவாசப்படுத்த முயன்றது. கூட்ட நெரிசலையும் பொருட்படுத்தாமல் அவ்வீதியை இரண்டு முறை கால்களால் அளந்து அலசி விட்டாள். கண்கள் இருப்பு கொள்ளவில்லை. சுற்றிச் சுற்றிச் சுழன்று கொண்டே இருந்ததில் இப்போது நிஜமாகவே பீதியடையத் தொடங்கினாள். “மலரக்கா… என்னாச்சு? ஏன் இப்பிடி அங்கயும் இங்கயுமா ஓடிகிட்டு இருக்க? உன்ன தேடிக் கண்டுபிடிக்குறதே பெரும்பாடா போச்சு. கயல எங்க?” – எழில் “அவளதான் காணும்னு தேடிட்டு இருக்கேன்” “பயப்படாத… இங்கதான் எங்கயாவது வாய் பார்த்துட்டு நிப்பா. அடுத்த தெருவுல போய் பாப்போமா?” “இல்ல… கண்டிப்பா இந்த ரத வீதிய விட்டு எங்கயும் போகக்கூடாதுன்னு அவளுக்குத் தெரியும்” – பரபரத்தாள் மலர். “சரி. வா… தேடுவோம்” என்று எழிலும் மீண்டும் ஒரு முறை அத்தெரு முழுக்க சல்லடை இட்டுத் தேடினாள். யாரிடமேனும் விசாரிக்கத் துவங்கும் அளவிற்குச் சூழல் கையை மீறிச் சென்றுவிட்டதாக நம்பும் திராணி அற்றவளாக மாறிப் போயிருந்தாள் மலர். ஒவ்வொரு நொடியும் கொடூரமாகக் கழிந்தது. “வர வேண்டாம்னு சொன்னா எங்க கேக்குறா… கழுத” என்று கோபம் கோபமாக வந்தது மலருக்கு. நேரம் ஆக ஆக அழுகை வரும் போல் இருந்தது. இருவருக்கும் என்னென்னவெல்லாமோ தோன்றியது. ஆனால் வாய்விட்டுச் சொல்ல விரும்பாமல் எந்த அசம்பாவிதமும் நடந்திருக்கக் கூடாது என மனதினுள் வேண்டிக்கொண்டிருந்தார்கள். “கோயில் வாசல்ல ட்ராஃபிக் போலீஸ் நிப்பாரு. அவர்கிட்ட சொல்லிப் பார்ப்போமா?” என்று கேட்டாள் எழில். நிலைமை மோசமடைந்து கொண்டிருப்பதை அவளது வார்த்தைகள் சட்டென வெளிச்சம் போட்டுக் காட்டியதைத் தாங்கிக் கொள்ளவே இயலவில்லை. அதற்குப் பதில் கூறுவதற்குக் கூட பயந்து போனவளாக மருண்டு நின்றிருந்தாள் மலர். செய்வதறியாமல் இருவரும் தவித்துக் கொண்டிருந்தனர். கால்கள் நிலைகுத்தி நின்றன எனினும் கண்கள் ஓய்வொழிச்சல் இல்லாமல் கூட்டத்தினுள் ஊடுருவி அலைந்தபடியே இருந்தன. கிட்டத்தட்ட அரைமணி நேரம் கழிந்து விட்டது. திடீரென ஒரு இரு சக்கர வாகனத்திற்கும் சாலையைக் கடந்து சென்று கொண்டிருந்தவருக்கும் நடுவில் தென்பட்ட இடைவெளியில் பத்து வயதுப் பெண் குழந்தை ஒன்று அவ்வீதியில் இருந்த பெரிய ஓட்டல் ஒன்றின் உள்ளிருந்து வெளியே வந்து கொண்டிருந்தது தெரிந்தது. மஞ்சள் பூ போட்ட சிகப்புச் சட்டை… கயலேதான்! “யக்கா… அங்க பாரு… கயலு!” கூட்டத்தைப் பிளந்து கயலை நோக்கிப் பாய்ந்து சென்றாள் மலர். கையில் ஒரு ஜிகிர்தண்டா கோப்பையுடன் சிரித்தவாறே அம்மாவைப் பார்த்ததும் ஓடி வந்தாள் கயல். “என்ன கயலு? எத்தன தடவ சொல்லிருக்கேன்? நீ பாட்டுக்கு எங்கயாவது போகாதன்னு” – பதற்றம் தணியாத குரலில் படபடத்தாள். “இங்கதாம்மா இருந்தேன். இந்த அண்ணாதான் வாங்கித் தந்தாங்க. சூப்பரா இருக்குமா. இந்தா நீ ஒரு வாய் சாப்பிட்டுப் பாரேன்” – கோப்பையைத் தூக்கிக் காண்பித்தாள். மகள் கிடைத்துவிட்ட ஆறுதலில் அந்த இளைஞனைப் பார்த்துப் புன்னகை புரிந்தவாறே நன்றி கூற வாய் எடுத்தாள். ஆனால் அவன் கைகளில் முளைத்திருந்த கண்கள் அவளைக் கொஞ்சம் உறுத்தின. “என்ன தம்பி பண்றீங்க?” “ஒண்ணும் இல்லையே” என்றவாறே தோள்களைக் குலுக்கினான். மலரது பார்வையில் கோபம் மெல்லமாக ஏறத் துவங்கியிருந்ததை அவளது நெரிந்த புருவங்கள் காட்டிக் கொடுத்தன. உடனே அவளைச் சமாதானப் படுத்தும் பொருட்டு, “அட! நெஜமாவே ஒண்ணும் இல்லீங்க. குழந்தை பூ வித்துட்டு இருந்தா. சும்மா பேசிட்டு இருந்தேன். ‘என்ன படிக்குற?’, ‘என்ன பாடம் பிடிக்கும்?’, ‘என்னவாகப் போற?’, ‘அம்மா என்ன பண்றாங்க?’… வழக்கமா கேக்குறதுதான். ஏதாவது வாங்கிக் கொடுக்கணும்னு தோணுச்சு… அதான்” “அதுக்கு எதுக்கு ஃபோன்ல படம் புடிக்கிறீங்க?” “என்னோட வலைதளத்துல போடுறதுக்கு” – இப்படிச் சொல்லும் போது அலைபேசியை அணைத்துச் சட்டைப் பையினுள் வைத்து விட்டிருந்தான். “அதான் எதுக்குன்னு கேக்கேன்” அவனிடம் சரியான பதில் இல்லை. அல்லது பளிச்சென உண்மையைப் போட்டு உடைக்க தைரியம் இல்லை. “அது… வந்து… நெறைய பேரு பாப்பாங்க” “பாத்து? ஆமா… நீங்க போடுற இந்த வீடியோவ எப்படி உண்மைன்னு நம்புவாங்க?” “அதுலாம் நம்புற மாதிரி பண்ணிடலாம்” – விளையாட்டாகச் சிரித்தான். “எப்படி? பிண்ணனியில ஒரு சோக பாட்டு இல்லேனா உத்வேகத்த கெளப்புற மாதிரியான பாட்ட சேர்த்தா?” – அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த எழில் கொஞ்சம் காட்டமாகக் கேட்டாள். “ஏதோ இந்தக் குழந்தைக்கு வாங்கிக் குடுக்கணும் போல இருந்துச்சு. அதுக்குப் போய் இவ்வளவு….” என்று பம்மினான். இதற்குள் அந்தச் சிறு சலசலப்புக்கு ஏற்ற சிறு கூட்டம் ஒன்று கூடிவிட்டது. அதில் ஒருவன் அந்த இளைஞனைப் பார்த்து, “டூட்! நீங்க… சமூக வலைதளத்துல… அந்த genz_idiots பக்கத்தோட…” என அடையாளம் கண்டு கொள்ள முனைய அவனுக்கு அது இன்னும் ஏந்தலாய் இருந்தது. அவனைப் பின் தொடரும் 2 மில்லியன் தலைகளும் அவனுக்காக அங்கு ஆஜர் ஆனதாகவே உணர்ந்தவன் தன் தொனியைச் சற்றே மாற்றினான். “நல்ல மனசோட உதவி பண்ண நெனச்சேன் பாருங்க. என்னைச் சொல்லணும். தெரியாம பண்ணிட்டேன். போதுமா? ஆள வுடுங்க. நல்லதுக்கே காலம் இல்ல” என்று எரிச்சலடைந்தான். “தம்பி! நீங்க யாருன்னே எனக்குத் தெரியாது. நான் உங்கிட்ட வந்து உதவியும் கேட்கல. நீங்க உதவி பண்ணனும்னு நெனச்சதயும் நான் தப்புன்னு சொல்லல. அத படம் புடிச்சு ஒளிபரப்பணும்ங்கிற ஈன புத்தியைத்தான் தப்புன்னு சொல்றேன்” – மலர் நிதானமாக சொல்ல முயன்றாலும் அந்த ஒரு வார்த்தையில் கோபம் கொப்பளிக்கத்தான் செய்தது. “ஈன புத்தியா? என்ன வாய்க்கு வந்தபடி பேசுற? Ungrateful bi**h” “ஏய்! இந்த புடுங்கித்தனத்தலாம் வேற யார்கிட்டயாவது காட்டு…. எங்களுக்கும் பேசத் தெரியும்… You imbecile ba****d” – எழிலும் பதிலுக்கு எகிறினாள். சண்டை முற்றத் துவங்க, யாரோ ஒருவர் அதைத் தன் கைபேசியில் படம் பிடித்துக் கொண்டிருந்தார். அதைக் கவனித்துவிட்ட அந்த இளைஞன் இணைய உலகில் தன் பிம்பம் கலைந்து விடுமோ என்று அஞ்சி, “ஹலோ! ஃபோன ஆஃப் பண்ணுங்க. யார கேட்டு ரெக்கார்டு பண்றீங்க? டெலீட் பண்ணுங்க. It’s an invasion of privacy” என்று குதித்தான். “ஹய்ய்ய்! உனக்கு வந்தா இரத்தம். எங்களுக்கு வந்தா மட்டும் தக்காளிச் சட்னியா? இல்லாதப்பட்டவங்கன்னா கேக்காம கொள்ளாம உன் இஷ்டத்துக்கு என்ன வேணா பண்ணுவியா? எங்க கூட பேசுறதயே ஏதோ தாராள மனசுக்காரன் மாதிரி எடுத்துப் போட்டுட்டு இருக்க?” என்று கடுகடுத்தாள் எழில். “நான் நல்லது பண்ணததான் வீடியோ எடுத்தேன். ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கு” “நல்லது பண்ணனும்னு நெனைக்குறவன் சத்தங்காட்டாம செஞ்சுட்டுப் போவான். இப்பிடி பெரும பீத்தீட்டு இருக்க மாட்டான். ஒரு 20 ரூபாய்க்கு ஜிகிர்தண்டா வாங்கி குடுத்தது நீ கட்டை விரல் பிச்சை எடுக்கத்தானே? நீ நோகாம சம்பாதிக்குறதுக்கு நாங்கதான் கெடைச்சோமா?” – தான் நினைப்பதை எவ்வாறு வார்த்தைகளில் வடிப்பது எனத் தெரியாமல் தவித்து நின்ற மலருக்கும் சேர்த்து எழிலே பேசினாள். “What nonsense? இதைப் பாத்து இன்னும் நெறைய பேருக்கு உதவணும்னு தோணும் இல்லையா?” “உதவி பண்ணனும்னு நினைக்குறதும் நீ பண்றதும் ஒன்னா? மனுசனா பொறந்த ஒவ்வொருத்தனும் தன்னால முடியும்னா கண்ணு முன்னால பசிச்சுக் கெடக்குறவனுக்குச் சாப்பாடு வாங்கிக் குடுக்கத்தான் செய்வான். நீதான் ஏதோ பெரிய சமூக சேவை செஞ்ச மாதிரி அனத்தீட்டு திரியுற” – அவ்வளவு பெரிய விஷயத்தை அலட்டிக் கொள்ளாமல் சொன்னாள் எழில். வசமாக மாட்டிக் கொண்டதாக உணர்ந்தவனிடம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. “வா எழிலு… போலாம்” என்று அவ்விடத்தை விட்டுக் கிளம்ப முயன்ற மலரின் கைப்பிடியிலிருந்து மெல்ல தன்னை விடுவித்துக் கொண்ட எழில், “இருக்கா… அதான் பேச்சு இவ்ளோ தூரம் வந்துட்டுல்ல… இரு, கொறையையும் பேசீட்டு வந்துருதேன்” என்றவாறு அவனை நோக்கித் திரும்பினாள். “நீ மலரு அக்காட்ட பேசிட்டு இருக்கும்போதுதான் உன் வீடியோல சிலத பாத்தேன். போன வாரம் ஒரு வீடியோ போட்டுருக்கியே? அவரு பிச்சைக்காரரா? சொல்லு?” என்று அவனைப் பார்த்துக் கத்தியவள், கூட்டத்தைப் பார்த்துச் சொன்னாள் – “நாலாவது தெருவுல இருக்க எங்க சித்தப்பா போன வாரம் மில்லு வேலை முடிஞ்சு களைப்பா இருக்குன்னு காட்சி மண்டபத்துல உட்கார்ந்து இருந்திருக்காங்க. இவன் ‘உங்கள ஆளையே மாத்துறோம்’னு சொல்லி சித்தப்பாவுக்கு முகச்சவரம் செய்து முடிவெட்டி குளிப்பாட்டி புதுத்துணி சாப்பாடுன்னு வாங்கி குடுத்து அனுப்பியிருக்கான். அவரும் ஏதோ ஷூட்டிங்னு நெனச்சுட்டு சிரிச்சுட்டே வந்துருக்கார். இப்போ பாத்தாதான் புரியுது”. மீண்டும் அவன் பக்கம் திரும்பி, “நேத்து கூட அந்த நாய்க்குட்டியையும் நீதான் வேணும்னு சாக்கடைக்குள்ள வீசிட்டு காப்பாத்துறாப்புல வீடியோ போட்டுருப்ப. இந்த லட்சணத்துல உன்ன நம்ப வேற செய்யணுமா?” என்றவள் ஒரு சிறிய இடைவெளி விட்டு தொடர்ந்தாள். “நீ பண்றது பேரு என்ன தெரியுமா? Pandering. Emotional Prostitution. You are just feeding your bloody ego” என்று முகத்திற் அறைந்தாற் போல் வார்த்தைகளை வீசினாள் எழில். அவற்றின் வெப்பம் பொறுக்க முடியாமல், சுற்றி நிற்பவர்களின் அருவருப்பான பார்வை தன் மீது நெளிவதைச் சகிக்க முடியாமல் நழுவப் பார்த்தான். இதற்குள் கூட்டத்தில் இருந்த ஒருவர் “சரி, விடும்மா! புள்ளைக்கு அவன் வாங்கிக் குடுத்ததுக்கு நன்றி சொல்லிட்டு அத அத்தோட விட்டுட்டுக் கலைஞ்சு போங்க” என பெரியதனமாகக் கூறவும், கோபம் பொத்துக் கொண்டு வந்தது எழிலுக்கு. “போன வருசம் அஞ்சு பேருக்கு அன்னதானம் பண்ணிட்டு அத அம்பது தெருவுக்கு போஸ்டர் அடிச்சு ஒட்டுன மகாபிரபுதானே நீங்க? நியாயம் சொல்ல வர்ற மூஞ்சியெல்லாம் பாரேன்” அதன் பிறகு ஒருவரும் வாயைத் திறக்கத் துணியவில்லை. “வீடியோவ டெலீட் பண்ணு” என்று மட்டும் சொன்னாள் மலர். அந்த இடத்தை விட்டுக் கிளம்பினால் போதும் என்ற மனநிலையில் அவசர அவசரமாக அலைபேசியைத் தட்டிக் கொண்டிருந்தான். சட்டென அவனிடம் இருந்து பிடுங்கி அந்தக் காணொளியை அழித்தாள் எழில். பின்னர் Recently deletedக்கும் சென்று அழித்துவிட்டுச் சொன்னாள், “இவ்வளவுக்கு அப்புறமும் இப்போ எடுத்தத மீட்டெடுத்து ஒளிபரப்புனேனா நீ மனுசனே இல்ல!” அலைபேசியைத் திரும்பப் பெற்றவன் தனது இருசக்கர வாகனத்தில் சிட்டாகப் பறந்தே விட்டான். மூவரும் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். கடைத்தெருவின் அவ்வளவு சத்தமும் அவர்களது அமைதியில் அமிழ்ந்து போனது. ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை அவர்கள். என்ன பேசுவது என்று தெரியவில்லை. கயலுக்கு என்ன நடந்தது என்று சுத்தமாகப் புரியவில்லை. அவர்களின் கோபத்திற்குத் தான்தான் காரணமோ என்று அவள் வயதிற்கே உரிய யோசனையில் கொஞ்சம் பயந்து கூட போயிருந்தாள். அவர்களின் மௌனத்தில் கல் எறியும் பொருட்டு அருகில் வேகமாக வந்து நின்றது அவர்கள் தெருவில் வசிக்கும் இஸ்மாயிலின் சைக்கிள். சைக்கிளில் இருந்து இறங்கி அவர்களுக்கு நடைத்துணையாக சைக்கிளை உருட்டிக் கொண்டே வந்தவர் அந்த இறுக்கமான சூழலைத் தளர்த்த எண்ணி மெல்ல பேச்சை ஆரம்பித்தார். “எழிலு… ஏன்டா அவ்வளவு கோவம் உனக்கு?” “சும்மா இருங்க பெரியப்பா… அங்க என்ன நடந்துச்சுன்னு முழுசா தெரிஞ்சா இப்படிப் பேச மாட்டீங்க” என்று மலர் பதிலுரைத்தாள். “லாரில இருந்து மூட்டை எறக்கிட்டு அங்கனதான்டா இருந்தேன். முதலாளி இருந்தனால வர முடில. அதான் கேக்கேன்… அவன் ஏதோ இந்தக் காலத்து வழக்கத்துக்கு ஏத்தாப்புல… எல்லாரும் எங்கன பாத்தாலும் ஃபோனும் கையுமாத்தான் திரியுதாங்க. இப்போல்லாம் இது சகஜம்தான?” “என்ன பெரீப்பா நீங்களும்? அவன் செஞ்சது தப்பில்லையா? புள்ள ஏதோ பிச்சைக்கு நின்ன மாரியும் இவன் கொடை உள்ளத்தோட உதவுற மாரியும்… பெரிய வள்ளல்னு நெனப்பு. உணர்வுப்பூர்வமா உதவி பண்றவன், அவசர உதவி பண்றவன்… எல்லாவனுக்கும் அத ஆவணப்படுத்தியே ஆகணுமோ? அதெப்படி உதவி பண்ற இக்கட்டான நேரத்துலயும் வறட்டுத்தனமா பொறுமையா படம் பிடிக்க முடியுது? இது பேரு உதவிலாம் இல்ல. தன்னை எல்லோரிடமும் இரக்க குணமுள்ள நல்லவனாகக் காட்டிக் கொள்ள முனையும் அசட்டுத்தனம்” – எழில் “என்னமோ உலகத்துல ஒருத்தர் விடாம இதத்தான் பாத்துட்டு இருக்கப் போற மாதிரி… விட்டுத் தள்ளு கழுதைய!” என்று அவர்களை அதை உதாசீனப்படுத்த வைக்கும் எண்ணத்தில் கூறினார் இஸ்மாயில். “உலகத்துல ஏதோ ஒரு மூலையில கூட அவளைப் ‘பாவம்’ன்னு யாரும் பரிதாபப் பார்வை பார்த்துடக் கூடாதுன்னுதானே இப்பிடி ஓடி ஓடி ஓடா தேயுறேன்?” வழக்கமற்ற குரலில் கூறினாள் மலர். இதைச் சொல்கையில் அவள் குரல் தழுதழுத்திருந்ததா உடையத் துவங்கியிருந்ததா எனத் திருத்தமாகக் கூற இயலவில்லை. “இதுல இவ்ளோ உணர்ச்சிவசப்பட என்ன இருக்கு?” - இஸ்மாயில் “உணர்ச்சி வசப்படல பெரியப்பா. சரி - தப்பு பத்திதான் இங்க பேச்சே. இப்பவும் பெத்தவங்கள ‘அம்மா’, ‘அப்பா’ன்னுதானே கூப்பிடுறோம்? இரத்தல் இன்றைக்கும் பழிக்கக்கூடிய நாணக்கூடிய தொழிலாகத்தானே இருக்கு? சில விஷயங்கள் மாறாது; மாறவும் கூடாது. நாம ஒருத்தருக்கு உதவி பண்ணும் போது உதவி பெறுபவர் இரத்தல் தொழிலே செய்பவராயினும் அவர் கண்ணியத்தையும் தன்மானத்தையும் காக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கு. நல்ல பெயர் எடுக்கணும்ங்கிறதுக்காக உலகின் கண்களில் ஒரு தனிமனிதரின் இயலாமையைச் சாதமாகப் பயன்படுத்தி அவரைக் கூனிக் குறுக வைக்கக் கூடாது. இதையெல்லாம் செய்யாமல் நல்ல பெயர் எடுத்து என்னத்துக்கு?” – தீர்க்கமாகப் பேசி முடித்தாள். எழில் பேசுவதையே இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டு வந்தார் இஸ்மாயில். அவரது நரைத்துப் போன தாடிக்குள் இருந்து ஒரு புன்னகை, “யம்மாடி! எவ்ளோ வெவரமா பேசுதா?” என்ற ஆச்சரியத்துடன் வெளிப்பட்டது. வழியில் இருந்த தேவாலயத்தை அவர்கள் கடந்து செல்கையில் மிகச் சரியாக மத்தேயு 6 : 3 வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. நன்றி 'திண்ணை' இணைய வார இதழ்.
  40. இன்றைய காலத்தின் அவலங்களை அப்படியே கதையில் வடித்திருக்கிறீர்கள் . ........ ! 👍
  41. மன்னாரில் காட்டில் "யார் விறகு " (யார் விறகு என்றால் மரத்தில் ஏறி இருந்து அளவான சைஸ் கிளைகளை வெட்டி விழுத்தி விட்டு அவற்றை ஒரு மீற்றர் அளவில் கொத்தி ஒருவர் உயரம் + நீளம் +அகலமாய் அடுக்கிவைக்க வேண்டும் ......அவை பக்டரி போறணைக்கு அனுப்பப் படும் ) ........ எங்கள் கணக்கர் விடுமுறையில் செல்வதால் அவர் வரும்வரை நான் அங்கு போயிருந்தேன் . ....... ஒரு கிழமையாய் அங்கு நடக்கும் வேலையை கணக்கர் எனக்கு காட்டித் தந்தார் ........ அங்கு 8 பேர் வேலையாட்கள் இருந்தனர் . .......ஒரு நாளைக்கு ஒராள் 2 மீற்றர் விறகு வெட்டி அடுக்க வேண்டும் ......... மாலையில் நாங்கள் போய் அளந்து கணக்கில் வைத்துக் கொள்வோம் . ......... நான் கவனித்தபோது ஒராள் ஒன்றரை மீற்றர் வரைதான் வெட்டி இருப்பார்கள் . ........ என்ன கணக்கர் விறகு குறைவாய் இருக்கு என்று சொன்னால் , அது தம்பி அந்த வேலை கடினம் எங்களுக்கு ஒன்றரை வந்தாலே காணும் ஆனால் இரண்டு என்று சொன்னால்தான் ஒன்றரையாவது வரும் என்றார் . ......... அடுத்தநாள் அவர் விடுமுறை சென்றதும் நான் அவர்களை ட்ரக்ட்டரில் கொண்டுபோய் காட்டில் இறக்கி விட்டுட்டு, நானும் இளந்தாரிப் பொடியன்தானே அவர்களிடம் , நீங்கள் எல்லோருமாய் சேர்ந்து பதினாறு மீற்றர் விறகு தறித்து அடுக்கி வைத்து விட்டு எந்த நேரமெண்டாலும் "வாடி"க்கு வாங்கோ என்று சொல்லி விட்டு வந்திட்டேன் ....... சுமார் மூன்று மூன்றரை மணியளவில் எல்லோரும் வாடிக்கு வந்து விட்டார்கள் . ......... பின்னேரம் நான் ஓராளுடன் சென்று அளக்க பதினாறு மீற்றர் விறகு சரியாக இருக்கு . ........ ! நீங்களும் புல்லு வெட்டுபவர்களிடம் இடத்தைக் காட்டிவிட்டு இவ்வளவும் செய்ய இவ்வளவு கூலி ........நீங்கள் இன்றைக்கு செய்து முடித்தாலும் சரி நாளைக்கு வந்து செய்து முடித்தாலும் சரி என்று சொல்லி இருக்க வேண்டும் ......... வேலை மின்னல் வேகத்தில் நடந்திருக்கும் . .......!
  42. ஆஸ்திரேலியாவின் மிதக்கும் காடு: ஒரு தனித்துவமான இயற்கை அதிசயம் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள ஹோம்புஷ் விரிகுடாவில், உலகின் மிகவும் பிரமிக்க வைக்கும் மற்றும் ஒளிச்சேர்க்கை நிலப்பரப்புகளில் ஒன்று அமைந்துள்ளது: இயற்கையால் "மிதக்கும் காடாக" மாற்றப்பட்ட ஒரு பழைய நீராவி கப்பல் SS Ayrfield. 1911 இல் ஐக்கிய இராச்சியத்தில் கட்டப்பட்ட இந்தக் கப்பல், 1912 இல் ஆஸ்திரேலியாவிற்கு வந்தது. பல தசாப்தங்களாக, இது ஒரு சரக்குக் கப்பலாகவும், இரண்டாம் உலகப் போரின் போது (1939-1945) பசிபிக் பகுதியில் உள்ள நேச நாட்டுப் படைகளுக்கு பொருட்களை கொண்டு செல்லவும் பயன்படுத்தப்பட்டது.
  43. இன்று நடக்கும் சட்டப்பேரவையில் கூட கலந்து கொள்ளாமல் அவசரமாக மாமியை எதற்கு சந்திக்க வேண்டும். Anbu Raj @goshan_che 😂
  44. இனமொன்றின் குரல்8h · பிள்ளையான் கைது செய்து தண்டிக்கப்பட வேண்டிய மிக மோசமான கிரிமினல் குற்றவாளி என்பதில் யாருக்கும் மாற்று கருத்திருக்க முடியாது ஆனால் பிள்ளையான் தென்னிலங்கை பயன்படுத்திய வெறும் கருவி மட்டுமே என்பதை நாங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும் பிள்ளையானை குற்றசெயல்களில் ஈடுபடுத்திய கோட்டாபய ராஜபக்சேவின் "Triploli Platoon" என்கிற புலனாய்வு வலையமைப்பிற்கு பொறுப்பாகவிருந்த மேஜர் பிரபாத் புலத்வத்தே இன்றுவரை பாதுகாக்கப்படுகின்றார் விசேடமாக பிள்ளையானுக்கு அடைக்கலம் வழங்கி ராஜபக்சே குடும்பத்தின் நலன்களுக்காக இயக்கிய மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண முதல் பிரிகேடியர் அமல் கருணாசேன வரையான பிரதானிகள் பாதுகாக்கப்படுகின்றார்கள் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியாக அடையாளம் காணப்படும் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே சுதந்திரமாக நடமாடுகின்றார் ஈஸ்டர் குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என கத்தோலிக்க திருச்சபை அடையாளம் காட்டியுள்ள பிரிகேடியர் சூலா கொடிதுவாக்கு, கேணல் அன்சார், கேணல் கெலும் மத்துமகே உட்பட்ட பிரதானிகள் என யாரும் இதுவரை விசாரணை வலயத்திற்குள் கொண்டுவரப்படவில்லை தேசபந்து தென்னகோனின் உத்தரவின் பேரில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயில் ஒன்றில் ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய லொறியொன்றை தடுக்காது விடுவித்தது தொடர்பாக அவரிடம் விசாரிக்கப்படவில்லை இந்த லொறியானது கோட்டாபய ராஜபக்சவிற்கு மிக நெருக்கமான அவன்ட் கார்ட் பாதுகாப்பு சேவைக்கு சொந்தமானதாக இருந்ததாக அடையாளம் காணப்பட்டு இருந்தது தொடர்பாக நிஸ்ஸங்க சேனாதிபதியிடம் விசாரிக்கவில்லை இதற்கிடையில் பாதுகாப்பு அமைச்சின் துணைப்படையாக மாதம்தோறும் 35 லட்சம் பிள்ளையானுக்கு அரச பொது நிதியிலிருந்து கொடுக்கப்பட்டிருக்கின்றது கிழக்கின் இராணுவ முகாம்களான கபரண இராணுவ முகாம் , இருதயபுரம் இராணுவ முகாம் , வெலிங்கந்த இராணுவ முகாம் உட்பட பல முகாம்களிலிருந்து செயற்பட பிள்ளையானுக்கு அனுமதி வழங்கப்பட்டிருகின்றது தமிழ் வர்த்தகர்கள் உட்பட பொதுமக்களை கடத்தி பணம் வசூலிக்க கோட்டாபய ராஜபக்சே அவர்கள் பிள்ளையான் உட்பட்டவர்களுக்கு அனுமதி வழங்கியமையை அமெரிக்கா தூதுவராலயம் அம்பலப்படுத்திருக்கின்றது அதே போல கபரண உட்பட்ட இராணுவ முகாம்களில் இந்த பணம் இராணுவ அதிகாரிகளுக்கு மத்தியில் பகிரப்பட்டத்திற்கும் ஆதாரம் இருக்கின்றது விசேடமாக 'கன்சைட்-Gun Site’ வதை முகாம் பொறுப்பதிகாரியாக இருந்த சுமித் ரணசிங்க அவர்களுக்கு தமிழ் பெண்களை கடத்தி பிள்ளையான் வைத்த விருந்து வரை பொதுவெளியில் தரவுகள் உண்டு இது தவிர வெளிநாடுகளிருந்து இராணுவ புலனாய்வாளர்களுக்கு பணியாற்றும் புளொட் அமைப்பை சேர்ந்த ஸ்டாலின் ஞானம் உட்பட்ட இந்தியன் இராணுவ காலத்தின் ஒட்டு குழுக்களும் பிள்ளையானை பயன்படுத்திருக்கின்றன அதாவது இராணுவம் செய்ய முடியாத வேலைகளை செய்து முடிப்பதற்கு கோட்டாபய ராஜபக்சவின் ஒழுங்கமைப்பில் இராணுவ புலனாய்வு கட்டமைப்பு பிள்ளையானை பயன்படுத்திருக்கின்றது ஆனால் எந்த கிரிமினல் குற்ற செயல்கள் தொடர்பாகவும் கோட்டாபய ராஜபக்சே முதல் இராணுவ புலனாய்வு கட்டமைப்புயை சேர்ந்த யாரிடமும் வாக்கு மூலம் கூட பதிவு செய்யப்படவில்லை ஆனால் தேர்தலை முன்னிட்டு மிக தெளிவாக பிள்ளையான் பேரில் சகல கணக்குகளையும் எழுதி முடிக்க தென்னிலங்கை தயாராகி விட்டது சொந்த இலாபங்களுக்காக வேறு தரப்புகளிடம் தங்கள் சொந்த இனத்தை விலை பேசியவர்கள் அந்த தரப்புகளின் தேவைகள் முடிவடைய அவர்களாலேயே பலியிடப்படுவார்கள் என்பதற்கு பிள்ளையான் நவீன சான்றாகி இருக்கின்றார்
  45. மாம்பூவே சிறு மைனாவே ...........! 😍
  46. தனது காணியில் விளைந்த முருங்கைக் காய்களை, சந்தைக்கு கொண்டு செல்லும் பெண்.
  47. உங்கள் பின்னூட்டத்தை முழுவதுமாகப் படியெடுத்து சோம.அழகுவிற்கு அனுப்பி விட்டேன். நன்றி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.