Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    15
    Points
    19122
    Posts
  2. செம்பாட்டான்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    1223
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    87988
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/10/25 in all areas

  1. இல்லை என நினைக்கிறேன். அனைவரும் 12 புள்ளியில் நின்றாலும் கடைசியாக சேர்ந்த போட்டியாளர் என்பதால் நாந்தான் கீழே நிற்பேன்? அப்படி ஏதும் அசம்பாவிதம் நடந்தால்…. கோஷானின் நிலை👇🤣🤣🤣
  2. வந்தமா, சாமி கும்பிட்டமா, சுண்டல் சாப்பிட்டமான்னு போய்கிட்டே இருக்கணும் கந்தப்பு அண்ணை🤣. வீட்டில் தங்கிற ஐடியா எல்லாம் கூடாது🤣. பிகு யாழ்பாணத்தில் ஒரு வெற்று காணியை காப்பாத்துறத விட, யாழில் கடைசி இடத்தை காப்பாத்துறது கஸ்டம்போல கிடக்கு🤣
  3. ஐபிஎல் 2025 இன் 24வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஃபில் சால்ற்றினதும் இறுதியில் வந்த ரிம் டேவிட்டினதும் அதிரடி ஆட்டங்களைத் தவிர மற்றைய வீரர்கள் வேகமாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்தமையால் 7 விக்கெட் இழப்பிற்கு 163 ஓட்டங்களையே எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதல் மூன்று வீரர்களும் மிகவும் குறைந்த ஓட்டங்களுடன் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தமையால் தோல்விக்கான அபாயம் இருந்தது. எனினும் கேஎல் ராகுலின் ஆட்டமிழக்காது பெற்ற 93 ஓட்டங்களுடனும் ட் ரிஸ்ரன் ஸ்ரப்ஸின் வேகமான 38 ஓட்டங்களுடனும் 17.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 169 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை எட்டியது. முடிவு: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது டெல்லி கேப்பிட்டல்ஸ்அணி வெல்லும் எனக் கணித்த ஆறு பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனக் கணித்த 17 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: @கந்தப்பு கோரஸ் கூட்டத்தில் இருந்து சற்று மேலே முன்னேறியுள்ளார் 😁
  4. கோயிலில் சுண்டல் சாப்பிட்டது இந்தாளுக்கு எப்படி தெரிஞ்சது 🤫 Hazelwood க்கும் ஸ்ரார்க்கும்தான் போட்டி. ( கோஷான் சேக்கும் எனக்கும் போட்டி- யார் கடைசி இடத்தில் வராமல் இருப்பது) 😄
  5. பத்து அடுத்தநாள் காலை வழமைபோல வீட்டுக்கு வரும் போது மருதனார் மடத்துக்கும் சுண்ணாகத்துக்கும் இடையே உள்ள பூங்கன்றுகள் விற்கும் கடைக்குச் சென்று விதவிதமாக பூத்திருந்த செவ்வரத்தங் கன்றுகளில் 15 ஐ வாங்கி ஓட்டோவில் அனுப்பிவிட்டு நானும் வீட்டுக்குப் போகிறேன். கன்றுகளை இறக்கி வைத்தவர் நீங்களோ நடப்போகிறீர்கள்? என்கிறார். எனக்கு ஏலாது இவ்வளவும் நட. வீட்டில் ஒருத்தர் இருக்கிறார். அவரைக்கொண்டுதான் நடவேணும் என்கிறேன். உங்களுக்கு உப்பிடியான வேலைகளுக்கு ஆரும் தேவை என்றால் சொல்லுங்கோ. தெரிந்த பெடியன் இருக்கிறான். நான் அனுப்பிவைக்கிறன் என்கிறார். தேவையென்றால் உங்களுக்கு போன் செய்யிறன் என்றுவிட்டு காலை உணவை உண்டு முடிய பத்து மணிக்கு இரண்டு பெண்களும் வருகின்றனர். அவர்களோடு கதைத்துப் பயன் இல்லை என்று புரிய, அடுத்த பக்கத்துப் புற்களைப் பிடுங்கும்படி கூறிவிட்டு கதிரையில் இருந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன். பதினொரு மணிக்கு ரஜிதன் வருகிறார். “என்னக்கா நிறையப் பூக்கண்டுகள் வாங்கிவந்திருக்கிறியள்” “நல்ல வித்தியாசமான நிறங்கள். அதுதான் நடுவம் என்று வாங்கினனான்” “நேற்றே வாங்கியிருந்தால் வேலை செய்தவங்களைக் கொண்டே நட்டிருக்கலாம் அக்கா” “அதனால என்ன? நான் கொண்டுவந்து தாறன். நீங்கள் நடுங்கோ” “நான் உந்தச் சேத்துக்குள்ள இறங்கமாட்டன் அக்கா. எனக்குக் காலில புண். அது பெருத்திடும் அக்கா” “என்ன சின்னப் பிள்ளைக்குக் கதை சொல்லுற மாதிரிச் சொல்லுறீர்” “என்னால கிடங்கு வெட்ட ஏலாது அக்கா” “சரி நீர் போய் உம்மடை அலுவலைப் பாரும்” நான் வீட்டுக்குள் சென்று புத்துவெட்டியை எடுக்கும்போது பார்த்தால் இரண்டு மண்வெட்டியையும் காணவில்லை. “ரஜிதன், மண்வெட்டியளை எங்க வச்சனீங்கள்” “நான் எடுக்கேல்லை அக்கா. நேற்று வேலை செய்தவங்கள் கொண்டுபோட்டாங்களோ” “ அவர்கள் எனக்கு நல்ல நம்பிக்கையான வேலையாட்கள். அவை கொண்டுபோகாயினை” “எனக்குத் தெரியாது அக்கா. அவங்கள் உங்கை எங்காலும் மறைச்சு வச்சிட்டு எடுத்துக்கொண்டு போயிருப்பங்கள்” “வாயை மூடும். அவை கழுவித் தர நான் மூன்றையும் குசினி மூலையில வச்சிட்டுப் போனனான். அதுக்குப் பிறகு நீர் மட்டும்தான் உள்ளுக்குள்ள வந்தனீர்” “நான் என் மண்வெட்டியைத்தான் விடிய வேலைக்குப் போக்கேக்குள்ள கொண்டுபோனனான்” “உம்மைத் தவிர மண்வெட்டியை ஆரும் எடுத்திருக்க முடியாது. மரியாதையா என் மண்வெட்டிகளைக் கொண்டுவாரும்” என்று கோபமாகச் சொல்லிவிட்டு வர, “அக்கா, ரதி அன்ரி உங்களில சரியான கோபத்தில இருக்கிறா” “என்ன கோபம் அவவுக்கு? “தான் தானாம் என்னைக் கூட்டிவந்தது. என்னை இருத்திறது பற்றி நீங்கள் அவவோடை ஒண்டுமே கதைக்கேல்லையாம்” “நான் ஒவ்வொருநாளும் அவவிட்டைக் கதைக்கிறன் தானே, என்னட்டையே சொல்லியிருக்கலாமே? எதுக்கு உம்மட்டைத் தூதுவிடுறா? நான் பிறகு அவவோடை கதைக்கிறன்” “அவ இனிமேல் உங்களோடை கதைக்கமாட்டாவாம். தன்னை மதிக்கேல்லையாம்” “கிரைண்டர் கப் தனக்குத் தரேல்லை எண்ட கோபமோ” “நீங்கள் வந்த நாள் தொடக்கம் நான் அவைக்குப் போய் உதவி ஒண்டும் செய்யேல்லை” “எனக்கு விளங்கேல்லை. என்ன உதவி செய்யிறனீர்? “அவையின்ர வாழைக் குலைகள் சந்தைக்குக் கொண்டுபோய் குடுப்பன், கறக்கிற பால் பண்ணைக்குக் கொண்டுபோறது, மில்லு க்குப் போறது எண்டு ஒவ்வொரு நாளும் ஏதாவது வேலை இருக்கும். நீங்கள் வந்தபிறகு நான் அங்க போறேல்லை. இண்டைக்கு நான் வாற நேரம் பாத்து றோட்டில வந்து மறிச்சு சப்பல் பேச்சுப் பேசிப்போட்டு இனி எனக்கும் உனக்கும் ஒரு சம்மந்தமும் இல்லை எண்டு ஏசிப்போட்டுப் போட்டா” “நான் பிறகு போய் அவவோடை கதைக்கிறன். நீர் முதல்ல போய் என்ர மண்வெட்டிகளைக் கொண்டுவாரும்” நான் வீட்டை போட்டு வாறன் என்றபடி அவர் ஸ்கூட்டியக் கிளப்ப நான் ஓட்டோக்காரருக்கு போன் செய்து கன்றுகள் நட அந்தப் பையனை அனுப்பும்படி கூறுகிறேன். பதினைதே நிமிடங்களில் அந்தப் பையன் கேற்றைத் திறந்துகொண்டு சயிக்கிளில் வருகிறார். பார்த்தால் சிறிய வயது. நல்ல மொடேணாக ஆடை உடுத்தி, தலைவாரி பார்த்தால் பள்ளியில் படிக்கும் மாணவன் போல் தெரிய, பள்ளிக்கூடம் போறேல்லையோ என்கிறேன். இல்லை நான் பத்தாம் வகுப்போடை விட்டிட்டன் என்கிறார். உங்கடை வயதுக்குப் படிச்சா நல்ல வேலை செய்யலாமே என்றவுடன், என்ன அன்ரி நடவேணும் என்கிறார். நான் புத்துவெட்டியைக் கொடுத்து நல்ல ஆழமாக் கிண்டுங்கோ. நான் கன்றுகளை வைக்கிற இடத்தில கிடங்கு எடுத்து வையுங்கோ என்றபடி இடங்களைப் பார்த்துப் பார்த்துக் கொண்டுபோய் வைத்துவிட்டு திரும்பி வர நான்கு கன்றுகளை நட்டுமுடித்திருக்க, எனக்கோ இத்தனை விரைவாக வேலை செய்கிறாரே என்று ஆச்சரியம். பொலித்தீனை எங்கே போட்டீர்கள்? என்றபடி தேடினால் ஒன்றையும் காணவில்லை. நான் பொலித்தீனைக் கழட்டேல்லை. அப்பிடியே நட்டிட்டன் என்றவுடன் வந்த கோபத்தை அடிக்கியபடி நீங்கள் ஒருநாளும் கன்றுகள் நடேல்லையா என்று கேட்க இல்லை என்கிறார். பொலித்தீனுடன் நட்டால் வேரோட ஏலாமல் கன்று பெரிதாய் வளராது. திரும்பக் கன்றுகளை வெளியே எடுங்கோ என்று கூற திரும்ப வெளியே எடுக்கிறார். அவருடன் கூடவே நின்று அனைத்துக் கன்றுகளையும் நட்டு முடிய அவருக்குப் பணத்தைக் குடுத்து அனுப்பிவிட்டு பெண்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கப் போனால் நின்று கதைத்துச் சிரிக்க, வேலையைப் பாருங்கோ என்று கூறிவிட்டு நகர, தேத்தண்ணி இன்னும் தரேல்லை என்று கூற, அட மறந்திட்டன் என்றபடி தேநீர் ஊற்றிக் கொடுத்து பாகோடாவும் கொடுக்க அவர்கள் மாமர நிழலில் அமர்ந்துகொள்கின்றனர். தன் வீட்டுக்குப் போன ரஜிதன் ஒரு மண்வெட்டியுடன் வந்கிறங்குகிறார். எங்கே மற்ற மண்வெட்டி என்றதற்கு இது என் மண்வெட்டி அக்கா. நீங்கள் என்னில சந்தேகப்படுறியள் என்று வீட்டை போய் எடுத்து வாறன் என்கிறார். நான் மண்வெட்டியைப் பார்த்தால் அது எனது மண்வெட்டிதான். ஒரு மூலை கல்லில் பட்டுச் சிறிது நெளிந்திருந்தது. நான் அதைக் கூறி இது என்னுடையதுதான் என்றாலும் அவர் விடுவதாக இல்லை. இரண்டாவதும் உம்மட்டைத்தான் கிடக்கு. நாளை அதையும் கொண்டுவாரும் என்றுவிட்டு அதை உள்ளே எடுத்துக்கொண்டு சென்று வைத்துப் பூட்டுகிறேன். “அக்கா எனக்கு 10 வருசத்துக்கு அக்றிமென்ற் போட்டுத் தாங்கோவன். நான் உங்கடை வீட்டையும் வளவையும் வடிவாப் பார்க்கிறன்” “நாங்களே 10 வருஷம் உயிரோடை இங்க இருப்பமோ தெரியாது. அதுக்குள்ள உமக்குப் பத்து வருஷம் எழுதி பிறகு வீடு உமக்கே சொந்தமாகவோ? “நீங்கள் மாதம் 10 ஆயிரம் எனக்குத் தாறன் எண்டு ரதி அன்ரிக்குச் சொன்னனீங்களோ? “எனக்கு என்ன விசரா? “அவ உங்களோடு கதைத்ததாகச் சொன்னாவே அக்கா” “நான் அப்பிடி ஒண்டும் கதைக்கவில்லை. நான் போக்கேக்குள்ள அவவிட்டை என்ன சுத்துமாத்துக் கதை என்று கேட்கிறன், நீர் போய் இவைக்கும் உமக்கும் எனக்கும் சாப்பாட்டை வாங்கிக்கொண்டு வாரும்” என்று பணத்தைக் கொடுக்கிறேன். உணவு வந்தவுடன் நான் உணவுகளைக் கொண்டுபோய் இரு பெண்களுக்கும் கொடுத்துவிட்டு நீரும் சாப்பிடும் என்று கூற, தாங்கோ அக்கா நான் ஃபிரிஜ் இல் வைத்து இரவு சாப்பிடுகிறேன். இப்ப பசிக்கவில்லை என்கிறார். அவரின் பொதியைக் கொடுத்துவிட்டு உள்ளே இருந்த சிறிய மேசை ஒன்றில் என் உணவுப்பொதியை கொண்டுசென்று வைக்கும்போது எனது சாச் செய்யும் டோச் லைற் மேசையில் கிடக்கிறது. ஒருபக்கம் மகிழ்ச்சியும் மறுபுறம் வியப்புமாக அதை எடுத்துத் திருப்பித் திருப்பிப் பார்க்கிறேன். அது என்னுடையதுதான். உடனே ரஜிதன், இது எனது லைற் எல்லோ. எங்க இருந்தது? என்கிறேன். இது நேற்று என்ர மாடு அறுத்துக்கொண்டு போட்டுது. இருட்டினதால அன்ரிதான் இதைத் தந்து தேடு எண்டவ என்கிறார். எதுக்கும் என்னட்டையே இருக்கட்டும். நான் அவவோடை கதைக்கிறேன் என்றவுடன் என் கையில் இருந்த டோச் லைற்றை லபக் என்று பறிக்கிறார். அன்ரி என்னட்டைத் தந்தவ. நான் அவவிட்டைக் குடுக்கிறன். நீங்கள் அவவிட்டை வாங்கிக்கொள்ளுங்கோ என்றபடி தன் ஸ்கூட்டியினுள் கொண்டுபோய் வைக்க, நான் அதிர்ந்துபோகிறேன். கோபத்தை வெளியே காட்டவில்லை. ரஜிதன் வேலைக்குப் போட்டு வாறன் என்று கிளம்ப பெண்களின் வேலைமுடியும் வரை பொறுமையாக இருந்துவிட்டு கதவு கேற் எல்லாம் பூட்டிவிட்டுக் கிளம்புகிறேன். ரதி அக்காவின் வீட்டுக்குச் சென்று அக்கா என்று கூப்பிட, கதிரையில் இருந்த அக்கா விசுக்கென எழுந்து உள்ளே போகிறார். எனக்கு முதலில் விளங்கவில்லை. ஏதோ எடுக்கப் போகிறார் என நினைத்து ஒரு இரண்டு நிமிடம் நிற்கிறேன். அவர் வரவேயில்லை. நான் என் ஸ்கூட்டியைத் திருப்பிக்கொண்டு இணுவிலுக்குச் சென்று கணவர், மச்சாள், அன்ரி எல்லோரிடமும் நடந்தவற்றைக் கூற உவை இருவரும் சேர்ந்துதான் பொருட்களை எடுத்திருக்கினம். அவ முதல் சில பொருட்களை எடுக்க பெடிப்பிள்ளை மிச்சத்தை எடுத்திருக்கிறார் என்கின்றனர். அடுத்தநாள் என் இரு அன்ரிமாரையும் ஓட்டோவில் வரும்படி கூறிவிட்டு நான் முன்னே செல்கிறேன். பதினொரு மணிக்கு ரஜிதன் சிரித்தபடி வருகிறார். ஆரிவை என்றதும் நான் என் சித்திமார். நாங்கள் இன்று இங்குதான் தங்கப்போறம். அதுதான் இவையும் வந்தவை என்கிறேன். நான் மனிசனோடை நேற்று உங்களை இருத்துவது பற்றிக் கதைச்சனான். அவர் தனிய ஒருவர் வேண்டாம். ஒரு குடும்பம் என்றால் இருத்திவிட்டு வா எண்டவர்” என்று கூற அவரின் முகம் இருண்டுபோகிறது. “என்னக்கா உப்பிடிச் சொல்லுறியள். நான் எல்லாச் சாமான்களையும் உங்களை நம்பிக் கொண்டுவந்திட்டன்” “நானும் உங்களை நம்பித்தானே மண்வெட்டிகளை வைத்துவிட்டுப் போனனான். முதல்நாள் வைச்சிட்டுப் போனதையே இல்லை எண்டு சொல்லுற உங்களை நம்பி எப்பிடி நான் வீட்டில வச்சிருக்கிறது? “அப்ப எத்தினை நாளில கிளம்பவேணும்” “இப்பவே கிளம்புங்கோ “ “இப்பவேவா? உவ்வளவு பொருட்களையும் கொஞ்சம் கொஞ்சமாக கொண்டு போக வேணும். ஒரு மூண்டு நாள் எண்டாலும் வேணும்” “நீங்கள் ஒரு லாண்ட்மாஸ்டர் பிடிச்சு ஒரேயடியா எல்லாத்தையும் ஏற்றுங்கோ” “அதுக்கு 1500 ரூபா வேணும். என்னட்டை அது இல்லை” “அந்தக் காசை நான் தாறன்” “இரண்டு பேரும் சேர்ந்து என்னை நடுத்தெருவில விட்டிட்டியள்” “நீர் நடுத்தெருவில நிக்கிறதுக்குக் காரணம் நீர் தான். நான் நம்பி உம்மை வீட்டுக்குள்ள விட, என்ர வீட்டிலேயே களவெடுத்திட்டு என்னையே ஏமாத்தின உம்மடை எளிய புத்திதான் நீர் வெளிய போகக் காரணம்” முதல்ல போலீசுக்குப் போகத்தான் நினைச்சனான். பிறகும் அங்க இங்க எண்டு இழுபடப் பிடிக்காமல் தான் சும்மா விடுறன். அதன் பின்னர் அவர் எதுவும் பேசவில்லை. லாண்ட்மாஸ்டர் வந்தவுடன் பொருட்களை எல்லாம் ஏற்றிக்கொண்டு செல்ல என் மனம் நீண்ட பெருமூச்சுடன் நிம்மதி அடைகிறது. முடிந்தது
  6. சிறிமாவோ காலத்தில் பாணுக்குக் கூப்பன் காட்டை அடுக்கி வைத்து விட்டுக் காவல் இருந்த நாங்கள் தன்னிறைவு இன்மையும் இறக்குமதித் தடையும் தான் காரணம் தன்னிறைவு இல்லாவிட்டால் இறக்குமதி கட்டாயம் தேவை ட்ரம்பின் வரிக் கொள்கையால் அமெரிக்க துரைமார் குளித்துவிட்டு மாத்த ஜட்டி இல்லாமல் போட்டதையே காய போட்டுக் காவல் இருக்க வேண்டி வரப்போகின்றது 😂😇
  7. சென்னை நாட்டு மக்களின் ரசனை வயது கடந்தது............. பல துறைகளிலும்...................🤣.
  8. நல்ல உள்ளம் அவவுக்கு. வீட்ட விட்டு ஆள எழுப்பிறதுக்கும் தானே காசு குடுத்து லான்ட்மாஸ்டர் பிடிச்சு விடுறா. நீங்கள் வேற. நிதர்சனமான உண்மை வசி. படங்காட்டுறதில நம்ம ஆக்கள அடிச்சிக்க முடியாது. படங்காட்ட வெளிக்கிட்டு மற்றவையை மதிப்பதில்லை. ஆனால் அப்பிடியான ஆக்கள் அங்கே கனநாள் வாழமாட்டினம். அவையால முடியாது.
  9. டிஸ்கி அமித் ஷா தன் டகால்டி வேலையை காட்டி விட்டார். எப்படி பால் தாக்ரே குடும்பத்தை உடைச்சு சாப்பிட்டார்களோ அதேபோல் ராமதாஸ் குடும்பத்தையும் உடைக்கிறார்கள். இதை பார்த்து எடப்பாடி சுதாகரிக்க வேண்டும். தந்தை-மகன் உறவையே இப்படி உடைப்பவர்கள், அதிமுகவை எட்டாக உடைப்பார்கள். 2026 இல் என் டி ஏ கூட்டணி ஆட்சி என அமித் ஷா சொன்னது இதைத்தான். சசி, செங்கோட்டையன், ஓபிஎஸ், தினகரன் எவரையும் உள்ளே எடுக்காது, விஜையுடன் 65 : 35 க்கு போவதே கட்சியையும், பதவியையும் தக்க வைக்க எடப்பாடி முன் உள்ள ஒரே தெரிவு. விஜையும் ஓவர் கனவில் மிகக்காமல் இதற்கு உடன்பட வேண்டும்.
  10. தாத்தாவும் பேரனும் ஒரே கேள்வியை கேட்டதால் ஒன்றாக பதில் சொல்கிறேன். ஸ்டாலினும் கனிமொழியிம் திருடர்கள், நிம்மியை சந்திக்கிறார்கள். அதே போல் சீமானும் திருடன் என நீங்கள் ஒத்து கொண்டால்…. யாரும் பொங்கி எழ மாட்டார்கள்.
  11. உள் நோக்கத்தை கேள்வி கேட்கக் கூடாது... பகடைக் காய்களின் கதி இறுதியில் இது தான். இனத்தையும் விற்று தம்மையும் இழந்து......?
  12. இந்த போட்டியில் பங்களூர் அணி வென்றால் எனக்கும் கோஷான் சேக்கும் ஒரே புள்ளிகள் 😳. மிச்சல் சார்க், கே எல் ராகுல் - நீங்கள் தான் என்னைகாப்பாற்றவேண்டும். இன்று 100% வீதம் காயத்தில் இருந்து குணமடைந்தால் நடராஜனும் டெல்கிக்கு சிலவேளை விளையாடலாம் என நினைக்கிறேன்.
  13. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 23வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் சாய் சுதர்சனின் அதிரடியான 82 ஒட்டங்களுடனும், வேகமாக அடித்தாடிய ஜொஸ் பட்லர், ஷாரூக் கான், ராகுல் தெவதியா, ரஷீட் கான் ஆகியோரின் பங்களிப்புடனும் 6 விக்கெட் இழப்பிற்கு 217 ஓட்டங்களை எடுதது. பதிலுக்குத் துடுப்பாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர்களில் ஷிம்ரொன் ஹெட்மயரைத் தவிரப் பிறர் நிலைத்து ஆடமுடியாமல் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தமையால் 19.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 159 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: குஜராத் டைட்டன்ஸ் அணி 58 ஓட்டங்களால் வெற்றியீட்டியது குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 18 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த ஐவருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: @goshan_che இரட்டை இலக்கப் புள்ளிகளை எடுத்திருந்தாலும் முதல் எட்டு, கடைசி எட்டு நிலைகளில் மாற்றங்கள் இல்லை!
  14. கிறிஸ் கெய்ல் நெவர் பெய்ல்.....! உச்சிக் குடுமி உள்ள பஞ்சாப் அணியில் அழகுக் கூந்தலுடன் குடிபுகுந்தான் கரிய நிறமும் பெரிய உருவமும் உனது பார்த்ததும் பருகிடும் பாவையர் மனது....! வர்ண வர்ணக் கையுறைகள் கலகலக்க மட்டையிலோ அச்சடித்த "த பாஸ்" மினுமினுக்க சிங்காரச் சிரிப்பழகும் சிதறிவர சிங்கத்தின் நடையழகுடன் நீ நடந்து வர .....! இரண்டு ஓவர்கள் நின்று ஆடினாலே பெஸ்ட்டு மூன்று தாண்டினால் சதமடித்து வரும் "பாட்" டு பந்துகள் எகிறிடும் பல மீட்டர் கடந்து பவுலர்க்கெல்லாம் ஏறிடும் ஹார்ட் பீட்டு......! அங்கும் இங்கும் ஆலாய் பறந்து பந்து பிடிப்பவர்கள் பலர் --- ஆனால் பத்தடி நடந்து நீ பந்தெடுத்தால் --- உன்மேல் அத்தனை கமராவும் காட்டும் பவர்......! உன் கைகளில் விழுந்த பந்து மீள்வதில்லை மட்டையில் விழுந்த பந்து மண்ணில் வீழ்வதில்லை வெண்மேகங்களுக்கு வெண்பந்துகளை தூது விட்டு வித்தைகள் பல காட்டி மீசைக்குள் சிரித்திடுவாய் ....! பஞ்சாப்புக்காக ஆடி பந்துகளை பஞ்சாப் பறக்க விட்டவனே சிங்குகளுக்கு நடுவில் நின்று சிங்கமாய் கர்ச்சிக்கின்றாய் .....! நிலத்தையே பார்த்து நிலைத்திருக்கும் கண்கள் நீ ஆடினால் விண்ணில் இருந்து மீள்வதில்லை --- உனக்கு ஓடி விழுந்து எழுந்து ரன் எடுப்பது தொல்லை ஓடாமல் நின்று வெளுத்து வாங்க ஏது எல்லை.....! ஆக்கம் சுவி ......! 🙏
  15. யாழில். 35 ஆண்டுகளின் பின் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்ட வீதி! யாழ்.வசாவிளான் சந்தி முதல் பொன்னாலை – பருத்தித்துறை வீதி வரையிலான பலாலி வீதி நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் 35 ஆண்டுகளுக்கு பின்னர் மக்கள் போக்குவரத்துக்காக திறந்து விடப்பட்டுள்ளது. இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தின் ஊடாக செல்லும் சுமார் 2.5 கிலோ மீற்றர் நீளமான குறித்த வீதியானது கடந்த 1990ஆம் ஆண்டு முதல் மக்கள் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டிருந்தது. அதனால் யாழ்ப்பாணத்தில் இருந்து பலாலி வடக்கு பிரதேசத்திற்கு செல்லும் மக்கள் காங்கேசன்துறை சென்று அங்கிருந்தே பலாலி வடக்கிற்கு செல்லும் நிலைமை காணப்பட்டு வந்த நிலையில் குறித்த வீதியின் ஊடாக போக்குவரத்திற்கு அனுமதிக்குமாறு யுத்தம் நிறைவடைந்த காலம் முதல் சுமார் 15 வருட காலமாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் குறித்த வீதியானது இன்றைய தினம் வியாழக்கிழமை முதல் , பல்வேறு நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் மக்கள் போக்குவரத்திற்காக திறந்து விடப்பட்டப்பட்டுள்ளது. குறித்த வீதி ஊடாக காலை 06 மணி முதல் மாலை 05 மணி வரை மாத்திரமே மக்கள் பயணிக்க முடியும் என்றும் வீதியில் பயணிப்பவர்கள் வீதியின் இடையில் வாகனத்தினை நிறுத்துதல், வாகனங்களைத் திருப்புதல், பயண நேரத்தில் புகைப்படம், காணொளி எடுத்தல், ஆகிய நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் நடைபயணம் மற்றும் பேருந்து தவிர்ந்த பாரவூர்திகள் குறித்த வீதியூடாக செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மணித்தியாலத்துக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் மாத்திரமே பயணிக்க வேண்டும். சாரதிகளுக்கான அடையாள ஆவணங்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் இவ்வாறான கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனும் அறிவுறுத்தல் பதாகை வீதியில் தமிழ் மொழியில் எழுதி காட்சிப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1428116
  16. அப்படியானால் சரி உறவே இவர் அண்ணாமலையை புகழ்ந்து பேசுவது மோடி தமிழை பரப்புகின்றார் என்று புகழ்வது என்பவற்றை பார்த்தால் நீங்கள் முன்பு சொன்ன பிஜேபி பி ரீம் என்பது போல் தான் இருக்கின்றது.
  17. நாளைக்கு பாண்டவர்களுக்கே வெற்றி 😂 நான் இருக்கும் அணி கடந்த ஒன்பது விளையாட்டுக்களிலும் தோல்வியைத் தழுவியுள்ளது🤣😂
  18. RCBயின் பந்து வீச்சுதான் எப்போதுமே அவர்களின் பிரச்சனை. Hazlewood அதனை நிவர்த்தி செய்கிறார் என்று பார்த்தால், இன்று எல்லாமே தலைகீழ். அவர்கள் கோப்பையை வெல்லாததற்கு காரணம் இதுவே. அவருக்குத் தெரியும். எப்போ புள்ளிவைக்க வேணும் என்று. புள்ளி கூடக் கூட அவரின் தலை இங்கே அடிக்கடி தென்படுகிறது.
  19. எனக்கு அப்பவே தெரியும் உவர் என்னை போல் “down to earth” ஆன ஆள் இல்லை என்பது🤣.
  20. இது 2022- 24 ஒக்டோபரில நடந்த கதை. பத்தாம் பாகம் புத்தம்புதிது. 😃 இப்ப ஒரு குடும்பம் இருக்குது. செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் நானும் கணவரும் வருவோம். ஆனால் உங்களுக்கு எப்பிடிக்க சொல்லுறது. ஊரிலையா இருக்கிறீர்கள்? தொலைபேசி இலக்கத்தைப் போடுங்கள். கட்டாயம் சந்திக்கலாம். உண்மைதான். நாம் 2026 இல் செல்வதாக இருக்கிறோம்
  21. புத்தி உள்ள மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை பணமிருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை மனம் இருக்கும் மனிதரிடம் பணமிருப்பதில்லை
  22. பொறுங்க. பொறுங்க. ராகுலோட என்னமோ பூசை போட்டிருக்காம். பெங்களூரிடம், குல்தீப் மாதிரி ஒரு சுழளலர் இல்லாதது தெரியுது.
  23. அடிக்கடி தேர்தல் வந்தால் ஆட்டத்தில் ஒண்ணொண்ணா கழட்டி போடுவது போல அனுராவும் ஒண்ணொண்ணா விடுவிப்பாரோ?
  24. நீங்கள் ரணிலுடன் தேனிலவு கொண்டாடேக்கை விடுவித்திருந்தால் இப்பிடி புலம்பவேண்டி வந்திருக்காது. வலிவடக்கு பிரதேச சபை என் பிபிக்கு தான் போலை
  25. ஒரு ஓவரில் மட்டும் 30 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்று பங்களூரை யாரோ தவறாக திசை திருப்பி இருக்கின்றார்கள்..................🤣.
  26. புலம்பெயர் தமிழர்கள் தமது பண மேலாதிக்கத்தில் அங்குள்ள மக்களை இரண்டாம் தர பிரஜைகளாக நடத்தும் மோசமான நிலை கானப்படுகிறது, இந்த நிலையில் புலம்பெயர் தமிழர்கள் அங்கு குடியேறினால் அங்கு இவர்களின் பணபலம் மூலம் மேலும் அங்குள்ள மக்கள் வறுமைக்கோட்டிற்கு தள்ளப்படுவர் அதனால் புலம்பெயர் தமிழர்கள் அங்குள்ள மக்களுக்கு செய்யும் உபகாரமாக அங்கு போய் குடியேறாமால் இங்கு வெளிநாட்டில் இருப்பது நல்லது.
  27. ஹா ஹா...நாமதான் சுவி நந்தன் அணிலேயே இல்லையே. எதிர் அணி. வேணுமென்டா அவுஸ்ரேலிய வீரர் தொம்ஸன் என்டு சொல்லலாம். வேஏஏஏகமா பந்தப் போட்டு அவையைத் தூக்குவம். இம்முறை வேறு அணி. Hazelwood போனமுறை 2024ல் விளையாடவில்லை. மற்றைய பந்தாளர்களும் பெரிதாக சோபிக்கவில்லை. சிராஜ்ஜப் பாருங்கள். போனமுறையை விட இவ்வருடம் வெறிகொண்டு வீசுகிறார். ஆனால் அணி வேறு. Hazelwoodதான் இம்முறை துருப்புச் சீட்டு
  28. படலந்த மற்றும் மாத்தளை தவிர வேறு சித்திரவதைக் கூடங்கள் இருந்தவனா? April 10, 2025 11:21 am ஜே.வி.பி.யின் இரண்டாவது கிளர்ச்சியின் போது காணாமல் போனவர்களை விசாரிக்க ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவால் நியமிக்கப்பட்ட மத்திய வலைய ஆணைக்குழுவின் செயலாளர், சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம் (ITJP), இலங்கையில் ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள் (JDS) மற்றும் இலங்கை பிரச்சாரம் (SLC) ஆகியவற்றால் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளிகள் மூலம் இந்த தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார். ஐந்து வருடங்களுக்கு முன்னர், இலங்கையில் 200ற்கும் மேற்பட்ட சித்திரவதைக் கூடங்களைக் காட்டும் முதல் வரைபடத்தை தொகுக்கப்பட்ட ITJP மற்றும் JDS வெளியிட்ட மாத்தளை சித்திரவதைக் கூடங்கள் மற்றும் காணாமல் போன சம்பவங்களில் கோட்டாபய ராஜபக்சவின் பங்கு குறித்து 2022 மற்றும் அதற்குப் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கைகள் குறித்து விசாரணை செய்ய எந்த அரசாங்கமும் ஆர்வம் காட்டவில்லை. http://www.jdslanka.org/images/documents/18_06_2020_itjp_jds_press_release.pdf தேர்தல் காலத்தில் படலந்த சித்திரவதைக் கூடம் குறித்து நாடாளுமன்ற விவாதத்தை நடத்த தற்போதைய அரசாங்கம் அவசரமாக ஆர்வம் காட்டுவதற்கு, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் அது குறித்து கேள்வி எழுப்பிய பின்னர் அல் ஜசீரா சர்வதேச ஊடக வலையமைப்பு ஏற்படுத்திய தாக்கமே காரணமாக அமைந்துள்ளது. கடந்த தசாப்தத்தில் மாத்தளை, மன்னார், கொக்குத்தொடுவாய் மற்றும் கொழும்பு துறைமுகம் ஆகிய இடங்களில் பாரிய புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், இந்த விடயத்தில் நாடாளுமன்ற விவாதங்களை நடத்துவதற்கு எந்த அரசாங்கமும் முன்மொழியவில்லை. 1980களின் பிற்பகுதியில் நடந்த மனித உரிமை மீறல் குற்றங்களை விசாரணை செய்ய ஜனாதிபதி சந்திரிக்காவால் நிறுவப்பட்ட காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழுவின் மத்திய வலைய செயலாளர் எம்.சி.எம்.இக்பால் அண்மையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த படலந்த வெறும் ஒரு சித்திரவதை கூடம் என்பதை வெளிப்படுத்துகிறார். “ஆனால் படலந்த எனப்படுவது பாதுகாப்புப் படையினரால் நடத்தப்பட்ட பல தடுப்பு மையங்களில் ஒன்று அவ்வளவுதான். உதாரணமாக, கண்டியில் உள்ள புனித சில்வெஸ்டர் கல்லூரியிலும் ஒரு சித்திரவதைக் கூடம் இருந்தது.” அந்த இடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தனது மற்ற தோழர்களைப் போல மரணத்தைப் பார்ப்பதற்குப் பதிலாக, தற்செயலாக தனது உயிரைக் காப்பாற்றப்பட்டதற்காக ‘சான்ஸ் காரயா’ என்ற புனைப்பெயரைப் பெற்ற ஒரு இளைஞன், காணாமல் போனோர் தொடர்பிலான மத்திய வலைய ஆணைக்குழுவிற்கு வழங்கிய சாட்சியத்திலிருந்து தான் இதைப் பற்றி அறிந்துகொண்டதாக இக்பால் குறிப்பிடுகின்றார். இக்பால் சொன்னதை கேட்க – https://x.com/JDSLanka/status/1909262030101422349 இது மீண்டுவர அனுமதிக்கப்படாத பல்லாயிரக்கணக்கானவர்களில் ஒருவரின் கதை மாத்திரமே. இது பதுளையில் உள்ள ஹாலிஎல மோட்டர்ஸ் சித்திரவதை கூடம் பற்றிய கதை – https://x.com/SLcampaign/status/1909656056642306527?t=KG-1pG4p8rahfzRmlOWdAA&s=09 மத்திய வலைய ஆணைக்குழுவால் ஆவணப்படுத்தப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் முழு பட்டியலையும் இந்த இணைப்பில் அறிந்துகொள்ள முடியும். – http://tinyurl.com/2zyhxeek https://oruvan.com/were-there-other-torture-chambers-besides-patalanda-and-matale/
  29. அவையள் மாறிவிட்டினம் ,நீங்கள் மாறவில்லை போல....இப்ப மாசாலா தோசையும் ,வடையும் நல்ல ருசியா ?very tasty yaa இருக்கோ? காலம்டா .....
  30. சீனாவைத் தவிர மற்ற நாடுகளுக்கு 90 நாள் வரிகளை நிறுத்தி வைக்க டிரம்ப் உத்தரவிட்டார். சீனாவைத் தவிர, அனைத்து "பரஸ்பர" வரிகளிலும் 90 நாள் இடைநிறுத்தத்தை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்தார், இதன் மூலம் வரிகள் 125% ஆக அதிகரிக்கும். பெய்ஜிங் ஒரு உடன்பாட்டை எட்டும் என்று எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி கூறினார். "சீனா ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புகிறது. அதை எப்படிச் செய்வது என்று அவர்களுக்குத் தெரியவில்லை," என்று அவர் கூறினார். https://www.cnn.com/politics/live-news/trump-tariffs-cnn-town-hall-04-09-25/index.html
  31. சுவி ஐயா தலைமையில் இது நல்ல கூட்டு அண்ணா.............. ஆறும் அசல் தங்கங்கள் அண்ணா (நாளை இந்தப் போட்டி முடியும் வரை).............😜. மூன்று கூட்டாளிகள் அநேகமாக சேர்ந்து தான் வருவினம், போவினம்.......... நாங்கள் ஒன்று இரண்டு பேர்கள் அப்பப்ப அவர்களுடன் சேர்ந்து கொள்கின்றோம்..............🤣.
  32. முதல்வர் @suvy க்கு வாழ்த்துக்கள். இந்தக் கூட்டு சரியில்லையே?
  33. இன்றைய காலத்தின் அவலங்களை அப்படியே கதையில் வடித்திருக்கிறீர்கள் . ........ ! 👍
  34. க‌ந்த‌ப்பு அண்ணா என‌து ஆர‌ம்ப‌ அழைப்பில் உங்க‌ளை சுவி ஜ‌யாவை ப‌ற்றி நான் எழுதின‌தை திரும்ப‌வும் காட்ட‌ விரும்புகிறேன் சுவி ஜ‌யா ப‌ற்றி நான் என்ன‌ எழுதி இருக்கிறேன் என்று வாசித்து விட்ட‌ பிற‌க்கு தெரியும் யாழில் என‌க்கு புள்ளி ஒரு பொருட்ட‌ல்ல‌ என‌...................இப்போது சுவி ஜ‌யா புள்ளி ப‌ட்டிய‌லில் முத‌ல் இட‌த்தில் இருக்கிறார் ம‌கிழ்ச்சி....................ஜ‌பிஎல் போட்டி தொட‌ங்க‌ முத‌ல் நான் சொன்ன‌ மாதிரி இந்த‌ முறையும் சுவி ஜ‌யா 5பவுன்ஸ் ப‌ரிசை மீண்டும் வென்றால் ம‌கிழ்ச்சி அடைவேன்🙏🥰......................... என‌க்கு விளையாட்டுத் திரியில் அடுத்த‌வ‌ர்க‌ளை சிரிக்க‌ வைச்சு தான் ப‌ழ‌க்க‌ம் ,புள்ளி எல்லாம் ஒரு பொருட்டே கிடையாது க‌ந்த‌ப்பு அண்ணா.................... விளையாட்டுத் திரியில் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவை அவ‌ரின் பெய‌ர் சொல்லி நான் அழைப்ப‌து கிடையாது , அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை என்று தான் ப‌ம்ப‌லுக்கு அழைப்போம் ஏதோ ஒரு ஜ‌பிஎல் திரியில் என்னையும் குமார‌சாமி தாத்தாவை கீழ‌ போட்டு மிதிப்ப‌து தான் த‌ன‌து ல‌ச்சிய‌ம் என்று அவ‌ரும் அடிச்சு விடுவார் ப‌ம்ப‌லுக்கு , அப்போக்க‌ புள்ளி ப‌ட்டிய‌லில் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா எங்க‌ளை விட‌ மேல‌ நிண்ட‌வ‌ர் , இப்ப‌டியான‌ ப‌ம்ப‌ல் ச‌ம்ப‌வ‌ங்க‌ள் என் வாழ்க்கையில் நான் ஒரு போதும் ம‌ற‌க்க‌ மாட்டேன் , ஒரு வ‌ரியில் சொல்ல‌னும் என்றால் அது ஒரு கால‌ம் அழ‌கிய‌ கால‌ம்🙏🥰...................................... @suvy @ஈழப்பிரியன் @குமாரசாமி
  35. நாம் தமிழர் ஐடி விங் பொய் செய்தியை அப்பாவி போல் நீங்கள் பரப்புவது இதுதான் முதல் முறை அல்ல. அதை நான் வெளிகொணர்வதும் இதுதான் முதல் முறை அல்ல 🤣. பிகு இதை fact check பண்ணாமலே எழுதுகிறேன் - உங்கள் நம்பகதன்மை மீது அப்படி ஒரு நம்பிக்கை🤣.
  36. மன்னாரில் காட்டில் "யார் விறகு " (யார் விறகு என்றால் மரத்தில் ஏறி இருந்து அளவான சைஸ் கிளைகளை வெட்டி விழுத்தி விட்டு அவற்றை ஒரு மீற்றர் அளவில் கொத்தி ஒருவர் உயரம் + நீளம் +அகலமாய் அடுக்கிவைக்க வேண்டும் ......அவை பக்டரி போறணைக்கு அனுப்பப் படும் ) ........ எங்கள் கணக்கர் விடுமுறையில் செல்வதால் அவர் வரும்வரை நான் அங்கு போயிருந்தேன் . ....... ஒரு கிழமையாய் அங்கு நடக்கும் வேலையை கணக்கர் எனக்கு காட்டித் தந்தார் ........ அங்கு 8 பேர் வேலையாட்கள் இருந்தனர் . .......ஒரு நாளைக்கு ஒராள் 2 மீற்றர் விறகு வெட்டி அடுக்க வேண்டும் ......... மாலையில் நாங்கள் போய் அளந்து கணக்கில் வைத்துக் கொள்வோம் . ......... நான் கவனித்தபோது ஒராள் ஒன்றரை மீற்றர் வரைதான் வெட்டி இருப்பார்கள் . ........ என்ன கணக்கர் விறகு குறைவாய் இருக்கு என்று சொன்னால் , அது தம்பி அந்த வேலை கடினம் எங்களுக்கு ஒன்றரை வந்தாலே காணும் ஆனால் இரண்டு என்று சொன்னால்தான் ஒன்றரையாவது வரும் என்றார் . ......... அடுத்தநாள் அவர் விடுமுறை சென்றதும் நான் அவர்களை ட்ரக்ட்டரில் கொண்டுபோய் காட்டில் இறக்கி விட்டுட்டு, நானும் இளந்தாரிப் பொடியன்தானே அவர்களிடம் , நீங்கள் எல்லோருமாய் சேர்ந்து பதினாறு மீற்றர் விறகு தறித்து அடுக்கி வைத்து விட்டு எந்த நேரமெண்டாலும் "வாடி"க்கு வாங்கோ என்று சொல்லி விட்டு வந்திட்டேன் ....... சுமார் மூன்று மூன்றரை மணியளவில் எல்லோரும் வாடிக்கு வந்து விட்டார்கள் . ......... பின்னேரம் நான் ஓராளுடன் சென்று அளக்க பதினாறு மீற்றர் விறகு சரியாக இருக்கு . ........ ! நீங்களும் புல்லு வெட்டுபவர்களிடம் இடத்தைக் காட்டிவிட்டு இவ்வளவும் செய்ய இவ்வளவு கூலி ........நீங்கள் இன்றைக்கு செய்து முடித்தாலும் சரி நாளைக்கு வந்து செய்து முடித்தாலும் சரி என்று சொல்லி இருக்க வேண்டும் ......... வேலை மின்னல் வேகத்தில் நடந்திருக்கும் . .......!
  37. ஆஸ்திரேலியாவின் மிதக்கும் காடு: ஒரு தனித்துவமான இயற்கை அதிசயம் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள ஹோம்புஷ் விரிகுடாவில், உலகின் மிகவும் பிரமிக்க வைக்கும் மற்றும் ஒளிச்சேர்க்கை நிலப்பரப்புகளில் ஒன்று அமைந்துள்ளது: இயற்கையால் "மிதக்கும் காடாக" மாற்றப்பட்ட ஒரு பழைய நீராவி கப்பல் SS Ayrfield. 1911 இல் ஐக்கிய இராச்சியத்தில் கட்டப்பட்ட இந்தக் கப்பல், 1912 இல் ஆஸ்திரேலியாவிற்கு வந்தது. பல தசாப்தங்களாக, இது ஒரு சரக்குக் கப்பலாகவும், இரண்டாம் உலகப் போரின் போது (1939-1945) பசிபிக் பகுதியில் உள்ள நேச நாட்டுப் படைகளுக்கு பொருட்களை கொண்டு செல்லவும் பயன்படுத்தப்பட்டது.
  38. இன்று நடக்கும் சட்டப்பேரவையில் கூட கலந்து கொள்ளாமல் அவசரமாக மாமியை எதற்கு சந்திக்க வேண்டும். Anbu Raj @goshan_che 😂
  39. ஒன்பது உடனே ரதி அக்காவுக்கு போன் செய்து, “கிறைண்டரின் ஒரு கப் எமது படுக்கை அறையில் உள்ள அலுமாரியுள் கிடந்தது அக்கா” என்றுவிட்டு எடுத்துக்கொண்டு போனவர்கள் பற்றி அவருக்குத் திட்டுகிறேன். நீங்கள் டென்ஷன் ஆகாதேங்கோ நிவேதா. பிச்சைக்காரக் கூட்டத்தைக் கொண்டுவந்து இருத்தியிருக்கிறியள் என்கிறா. எப்பிடிக் கதவைத் திறந்ததுகள். நீங்கள் பூட்டாமல் போட்டியளோ என்கிறா. முதல் வந்து இருந்த சனங்கள் எந்தப் பொருளையுமே எடுத்துக்கொண்டு போகேல்லை என்றுவிட்டு தொலைபேசியை வைத்துவிட்டு மீண்டும் அந்த அறைக்குள் சென்று எப்படித் திறந்து எடுத்திருப்பார்கள் என்று ஆராய எனக்குப் புரிய ஆரம்பிக்க, கதவுகளை கொண்டியை எல்லாம் பூட்டிவிட்டு வெளியே வந்து கதிரை ஒன்றை எடுத்துக்கொண்டு போய் கதவுக்கு அருகில் வைக்கிறேன். கதவுக்கு அண்மையில் ஒரு காற்றோட்டமாக இருப்பதற்காக ஒரு சிறிய யன்னல் உயரத்தில் உண்டு. இரண்டு பக்கமும் திறக்கும்படியான ஒரு அமைப்பு உள்ள யன்னல். கதிரையில் ஏறி நின்று அதைத் திறக்கப் பார்க்கிறேன் எனக்கு எட்டவில்லை. அந்தநேரம் பார்த்துக் கணவர் போன் செய்கிறார். ஆரும் இல்லாதபோது ஏன் தேவையில்லாத வேலை பார்க்கிறாய். விழுந்தாலும் தூக்க ஆட்கள் இல்லை என்று திட்டுகிறார். நான் என் கண்டுபிடிப்பைச் சொல்ல கணவருக்கு விளங்குகிறது. கடந்த தடவை கணவருடன் சென்றபோது மூன்று அறைகளுக்கு மாபிள் பதித்திருந்தோம். இந்த அறைக்கு மேலே திறாங்கு இருந்ததுதான். கீழே புதிதாக ஓட்டை போடவேண்டும். அதைப் போடக் கணவர் மறந்துவிட்டார். அவர்கள் எனியை வைத்து மேலே உள்ள சிறிய யன்னலை எப்படியோ திறந்து கம்பியை விட்டுத் திறாங்கையும் மேலே இழுத்துவிட்டு கதவைத் தள்ள கதவு திறந்திருக்கும். பொருட்களை எடுத்துவிட்டு மீண்டும் பூட்டைப் பொருத்தி வைத்து இழுக்கக் கதவு பூட்டியிருக்கும் என்று கணவர் சொல்ல நானும் அப்படியே செய்து பார்க்க, பூட்டிய கதவு திறந்து மீண்டும் பூட்டு அதேபோல் நன்றாகப் பூட்டுகிறது. சரி இப்படித்தான் எடுத்திருப்பார்கள் என்று தெரிந்துவிட்டது. ஆனால் ஆர் எடுத்திருப்பினம் என்று நானும் கணவரும் கதைத்துக் களைத்து, வீட்டுக்குள்ள சரி வெளியில hose பைப் மூன்று வைத்துவிட்டுச் சென்றது. அதைவிட 25 ஆயிரம் பெறுமதியான முள்ளுக் கம்பி ரோள். அதுகள் இருக்கோ பார் என்கிறார். சென்று பார்த்தபோது ஒரு 12 மீற்றர் நீளமான பைப்பும் முள்ளுக்கம்பிகளும் இல்லை. கணவரிடம் சொல்ல “எல்லாம் எங்கடை பிழை. கிட்டத்தட்ட ஒரு இலட்சம் பெறுமதியான பொருட்கள் எடுத்திருக்கினம். போலீசில சொன்னாலும் அவங்கள் வெளிநாடு எண்டதும் எங்களிட்டைக் காசு கறக்கப் பார்ப்பார்கள். இனி என்ன செய்யிறது. பேசாமல் விடு. உடன அந்த தச்சப் பெடியைக் கூப்பிட்டு ஓட்டை போட்டுத் திறாங்கைப் போடு” என்றவுடன் அவருக்கு போன் செய்கிறேன். அடுத்தநாள் புல்லுப் பிடுங்க இருவர் வருகின்றனர். அதைவிட இன்னும் சில மரங்களும் நடுவோம் என்று முன்னர் எனக்கு அடிக்கடி வேலை செய்பவர்கள் இருவரையும் வரும்படி சொல்கிறேன். ஊரெழுவில் இருக்கும் லங்கா பார்மில் கொஞ்ச மரக் கன்றுகளையும் வாங்கி அவர்கள் அழைத்த ஓட்டோவில் கன்றுகளை கொண்டுவந்து வீட்டில் இறக்கிவிட்டு இணுவிலுக்குச் செல்கிறேன். அடுத்தநாள் காலை எழுந்து எனக்கும் அன்ரிக்கும் இடியப்பம், சொதி, சம்பல், பருப்பு சமைத்துவிட்டு சாப்பாட்டுப் பெட்டியில் கொண்டு செல்கிறேன். போகும் போது கடலை வடைகளும் றோள்ஸ்களும் எல்லாருக்கும் வாங்கிச் செல்கிறேன். ஒன்பதரை ஆகியும் யாருமே வேலைக்கு வந்து சேரவில்லை. ரஜிதனுக்கு போன் செய்ய அவை பத்து மணிக்குத்தான் வருவினம் அக்கா என்கிறார். தோட்ட வேலைக்கும் 10 மணிக்குத்தான் போறவையோ என்கிறேன். அவை வந்திடுவினம் அக்கா. நான் 11 இக்கு வந்திடுவன் என்கிறார். நான் போனை வைக்கவும் நான் வேலைக்கு அழைத்தவர்கள் வந்துவிட கன்றுகளைக் கொண்டுசென்று அந்த அந்த இடங்களில் வைத்துவிட்டு எப்படி நடுவது என்று மீண்டும் அவர்களுக்கு அறிவுறுத்த “ என்னம்மா எங்களுக்குச் சொல்லுறியள். எங்கள் வேலையே இதுதானே என்கின்றனர். அவர்கள் கேட்ட மண்வெட்டிகள் இரண்டைக் கொண்டுவந்து கொடுத்தபடி “உங்கள் வேலை உதுதான். ஆனால் கடந்த ஆண்டு நீங்கள் பின்பக்கக் கரையில் ஊன்றிய எந்தக் கிளுவையும் முளைக்கவில்லை. பார்த்தபோது எல்லாக் கிளுவையும் பட்டுப்போய் இருந்தது. ஒன்றை இழுத்துப் பார்க்க சும்மா கையோடை வருது. ஏனெண்டால் நீங்கள் ஆழமாய் கிடங்கு எடுத்து நடவில்லை. அதுதான் திருப்பவும் சொல்லுறன். எந்த நேரமும் பக்கத்தில நிண்டு சொல்ல ஏலாது. ஒழுங்காக நடுங்கோ” என்று கண்டிப்புடன் சொல்லிவிட்டு பக்கத்திலேயே நிற்க, அவர்கள் நான்கு கன்றுகளை நட்டு முடிக்க இரண்டு பெண்டுகள் வருகிறார்கள். எத்தினை மணிக்கு வரச் சொன்னது. ஆடிப்பாடி வருகிறீர்கள் என்றுவிட்டு அவர்களுக்குப் புற்களைப் பிடுங்கவேண்டிய இடங்களைக் காட்டுகிறேன். 11.15 இக்கு ரஜிதன் வருகிறார். அக்கா இவைக்குச் சமைக்க வேண்டாமே என்கிறார். எல்லாருக்கும் கடையில வாங்கிக் கொடுப்பதாகத்தானே கதைத்தது. பிறகென்ன என்று கொஞ்சம் காரமாகச் சொல்லிவிட்டு, பெரிய hose பைப்பைக் காணவில்லை. எங்கே என்கிறேன். எனக்குத் தெரியாது அக்கா என்கிறார். நான் லண்டனில் நின்றபோது நீங்கள் கேற் வரை கொண்டுபோய் தண்ணீர் விட்டீர்களே? இல்லை அக்கா அது சின்னனாலதான் விட்டனான் என்கிறார். அவர் பொய் சொல்கிறார் என்று எனக்குத் தெளிவாகத் தெரிந்தாலும் மேற்கொண்டு எதுவும் கதைக்காது அவர் சொன்னதை நம்பியதுபோல் அப்பால் சென்று மரங்கள் நடுபவர்களைப் பார்க்கிறேன். கன்றுகளை நட்டுவிட்டு வந்த ரங்கன் அம்மா ஒரு தேத்தண்ணி தாறியளே என்று கேட்க குசினிக்குச் சென்று எல்லாருக்கும் தேநீர் ஊற்றிவந்து ரோலஸ்சும் கொடுக்கிறேன். அம்மா பின்னால வேலை செய்யிறவையிலையும் ஒரு கண் வச்சிருங்கோ. ஒராள் பிடுங்க மற்றவ நிழலுக்குள்ள போய் நிக்கிறா என்று எனக்கு மட்டும் கேட்பதுபோல் சொல்கிறார். அதன்பின் அவர்கள் ஒரு பதினைந்து நிமிடத்தில் மீண்டும் வேலையை ஆரம்பிக்க இரண்டு பெண்டுகளும் எழும்பாது மரக் குற்றிமேல் இருக்க "என்ன வேலை செய்யிற நோக்கம் இல்லையா? எழும்புங்கோ" என்கிறேன். ஆடி அசைந்து அவர்கள் எழுந்து செல்ல சிறிதுநேரம் அவர்கள் வேலை செய்வதை நின்று பார்க்கிறேன். ரதியக்காவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வர அவவுடன் கதைத்தபடி முன்பக்கம் வர ரஜிதன் பின்பக்கமாகச் செல்கிறார். வேலை செய்ய வந்தவர்கள் பற்றிக் கூற வடிவா பாக்கவேணும் நிவேதா. சும்மா நேரத்தைக் கடத்துவினம் என்கிறா. எல்லாம் கதைத்து முடிய “ நிவேதா உங்களிட்டைக் கிடக்கிற கிறைண்டர் கப்பை எனக்குத் தாங்கோ. நான் ஒரு விலை போட்டு எடுக்கிறன்” என்கிறா. எனக்கு யோசனை ஓட அது எல்லாத்துக்கும் பொருந்தாதே அக்கா என்கிறேன். என்னட்டை இரண்டு பழைய கிறைண்டர் இருக்கு. ஏதாவது ஒன்றுக்குப் பொருந்தும் தானே என்கிறார். பார்ப்போம் அக்கா என்றபடி போனை வைக்க “அக்கா என்னவாம்” என்றபடி ரஜிதன் வருகிறார். கிறைண்டர் கப்பை அக்கா தனக்குத் தரட்டாம் என்றவுடன் “அப்ப அக்கா வீட்டினர் தான் எல்லாத்தையும் எடுத்தவையோ” என்கிறார். எனக்குத் தெரியேல்லை என்றுவிட்டு அப்பால் நகர்க்கிறேன். மதிய உணவு நேரம் வர முன்னரே ரங்கனிடம் உணவு வாங்கிவருமாறு கூற தான் சென்று வாங்குவதாக ரஜிதன் கூற அவரிடம் பணத்தைக் கொடுக்கிறேன். அவர் தன் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு செல்ல பக்கத்தில் வந்த ரங்கன் “அம்மா குறை நினையாதேங்கோ, உவரைப் பார்த்ததால் சரியில்லைப் போலத் தெரியிது. உவரை இருத்திறதெண்டால் ஒண்டுக்கு இரண்டுதரம் யோசியுங்கோ என்கிறார். நானும் அதைத்தான் யோசித்துக்கொண்டிருக்கிறன் என்றுவிட்டு பெண்களைப் பார்க்கிறேன். அவர்கள் ஆடிப்பாடிப் புற்களைப் பிடுங்க, நான் எதுவும் கூறாது பார்த்துவிட்டு சாப்பாடு வாங்கப் போயிருக்கிறார். வந்ததும் கூப்பிடுறன் என்றுவிட்டு உள்ளே செல்கிறேன். உணவுப் பொதிகள் வந்ததும் எல்லோரும் உண்ண ஆரம்பிக்க, அவர்களுக்கு தண்ணீர் கொண்டுசென்று கொடுத்துவிட்டு நான் உள்ளே சென்று உண்ண ஆரம்பிக்கிறேன். ரஜிதனை உண்ணச் சொல்ல தனக்கு ரோள்ஸ் சாப்பிட்டது பசிக்கவில்லை என்கிறார். உங்கள் உணவு பழுதாகப் போகிறதே என்கிறேன். "அக்கா நீங்கள் ஃபிரிஜ் வாங்கேல்லையோ" என்கிறார். "எனக்கு எதற்கு இப்ப ஃபிரிஜ். நான் வந்து இருக்கும் போது பார்த்துக்கொள்ளலாம்" என்கிறேன். “அக்கா என்னட்டை வீட்டில ஒரு ஃபிரிஜ் இருக்கு. அதைக் கொண்டுவரட்டோ? “அதுக்கென்ன கொண்டுவாரும், ஆனால் எனக்குத் தேவை இல்லை” “லாண்ட் மாஸ்டருக்கு 1500 வேணுமக்கா” “சரி அதை நான் தாறன்” உடனேயே வீட்டுக்குச் சென்று ஃபிரிஜ்சைக் கொண்டுவந்து குசினியில் வைக்கிறார். “அக்கா விரும்பினதெல்லாம் நீங்கள் வைக்கலாம்” “எனக்கு அதற்குள் வைக்க ஒன்றும் இல்லை” “உங்களுக்காகத்தான் கொண்டுவந்தனான்” “நான் முதலே சொன்னானதானே எனக்கு வேண்டாம் என்று, பிறகென்ன புதுக் கதை. உம்மடை வீட்டில இருந்தால் ஆரும் களவெடுத்துக்கொண்டு போயிடுவினம் என்றுதானே இங்கு கொண்டுவந்தனீர், பிறகென்ன எனக்காக கொண்டு வந்தது என்ற கதை. உப்பிடியான கதையள் எனக்குப் பிடிக்காது என்றுவிட்டு எழுந்து வெளியே சென்றால் இன்னும் வேலையை ஆரம்பிக்காமல் திண்ணையில கதைத்துக்கொண்டு இருக்கினம் பெண்டுகள். வந்ததே பிந்தி. நான் சொல்லாட்டில் வேலை செய்ய மாட்டியளோ? சாப்பிட்டு முடிச்சு ஒரு மணித்தியாலமாப் போச்சு என்றவுடன் எழுந்து செல்கின்றனர். ரஜிதன், நான் தென்னைக்கு பொச்சுத் தாக்கிறவையை பார்த்திட்டு வாறன். உவையை ஒழுங்கா வேலை செய்யச் சொல்லுங்கோ என்றுவிட்டு சென்று அவர்களைக் கவனித்துவிட்டு வர பின்பக்கத்திலிருந்து வந்த ரஜிதன், அக்கா நீங்கள் இருக்க நிக்க விடாமல் வேலை வாங்கிறியளாம் என்றவுடன் “வாறது பத்து மணிக்கு. ரோஸ் சாப்பிட்டு தேத்தண்ணி குடிக்க அறை மணித்தியாலம், மத்தியானச் சாப்பாட்டுக்கு ஒரு மணித்தியாலம். உப்பிடித்தான் மற்ற இடங்களிலையும் வேலை செய்யிறவையாமோ? சம்பளத்தைக் குறைச்சுத் தரட்டோ என்று அவையைக் கேளுங்கோ என்று கோபமாகச் சொல்ல, சரி அக்கா விடுங்கோ என்றுவிட்டு நான் வேலைக்குப் போட்டுவாறன் அக்கா என்றுவிட்டுக் கிளம்ப நான் பின்னால் சென்று புல்லுப் பிடுங்குவதைக் கண்காணிக்கிறேன். இன்னும் கொஞ்ச இடத்துக்குப் புல் பிடுங்க இருக்கு. நான்கு மணியானதும் வீட்டுக்குச் செல்லக் கிளம்ப இன்னும் ஒரு மணிநேரத்தில இவ்வளவையும் பிடுங்கிவிட்டுப் போங்கோ என்று கண்டிப்புடன் சொல்ல வேண்டா வெறுப்பாக செய்கின்றனர். அவர்களுக்குத் தேனீரும் கடலைவடையும் கொடுக்க உண்டு விட்டு புல்லைப் பிடுங்க எழுகின்றனர். ஐந்து மணியானதும் கைகால்களைக் கழுவிக்கொண்டு வர நான் அவர்கள் சம்பளத்தைக் கொடுக்க நாளைக்கும் வாறதோ என்கின்றனர். நாளை வாறதெண்டால் ஒன்பது மணிக்கு நிக்கவேணும். இல்லை என்றால் வரவேண்டாம் என்கிறேன். மற்றவர்களின் வேலையும் முடிய இரண்டு மண்வெட்டிகளையும் புத்துவெட்டியையும் கழுவிக் கொண்டு வந்து தர, நான் உள்ளே எடுத்து குசினி மூலையில் வைத்துவிட்டு அவர்களுடனே கதவுகளைப் பூட்டிவிட்டு வெளியே வர, நான் ஸ்கூட்டியை எடுத்து வந்து கேற்றைப் பூட்டும் வரை என்னுடன் நின்று, நான் பிரதான பாதைக்கு வரும்வரை எனக்கு முன்னால் மெதுவாக ஸ்கூட்டியை ஒட்டிக்கொண்டுவந்து கவனமாப் போங்கோ என்று சொல்லிவிட்டு வேகமெடுக்கின்றனர்.
  40. மாம்பூவே சிறு மைனாவே ...........! 😍
  41. பையா அவசரப்பட வேண்டாம்.அவருக்கு என்ன பிரச்சனையோ ஆனாலும் அவரும் நகைச்சுவை பேர்வழி தானே.உதுகளை எல்லாம் பெரிசு படுத்தமல் தொடரந்து வாங்கோ.இல்லாட்டால் பசிக்கும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்.அந்தப் பழி உங்களுக்கு தேவையா.
  42. தனது காணியில் விளைந்த முருங்கைக் காய்களை, சந்தைக்கு கொண்டு செல்லும் பெண்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.