Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    87988
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    33600
    Posts
  3. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    3049
    Posts
  4. வீரப் பையன்26

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    16477
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 05/12/25 in all areas

  1. ஒரு இடத்தில் மட்டும் மாற்றினால் போதும். மிச்சம் எல்லாம் தானாகவே மாறிவிடும்😀
  2. 👍............... 2020ம் ஆண்டு இந்தியா வல்லரசாகும் இந்திய அரசியல்வாதிகளும், அவர்களை நம்பிய இந்திய மக்களும் ஒரு காலத்தில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அந்தக் காலகட்டத்திலேயே என்னுடைய சில இந்திய நண்பர்கள் 3020ம் ஆண்டில் கூட தாங்கள் ஒரு வல்லரசாக வர முடியாது என்ற உண்மையை தெளிவாக காரணங்களுடன் சொல்லுவார்கள். சில மதிய இடைவேளைகளில் இரண்டாகப் பிரிந்து நின்று வாக்குவாதப்படுவார்கள். வட இந்தியா, தென் இந்தியா என்று உள்நாட்டில் இருக்கும் அபிவிருத்தி இடைவெளி ஒரு காரணம் என்றால், அபிவிருத்தி அடைந்ததாக சொல்லிக்கொள்ளும் தென் இந்திய மாநிலங்களில் இருக்கும் சமூகநீதியின் சீர்கேடான நிலைமை அவர்களை மேலே செல்ல விடாமல் தடுத்துக் கொண்டிருக்கின்றது. உதாரணமாக, தமிழ்நாட்டில் ஓரிரு மாதங்களின் முன் மோட்டார் சைக்கிள் ஓடினார் என்பதற்காக பட்டிலியன இளைஞர் ஒருவரின் கைகள் அதே ஊரைச் சேர்ந்த வேறு சிலரால் வெட்டப்பட்டன. தமிழ்நாட்டிலேயே தினமும் இப்படியான கொடுமைகள் நடந்து கொண்டிருக்கின்றது. மற்றைய மாநிலங்களின் நிலை இதைவிடக் கொடுமை. இந்தியாவில் ஒரு சமச்சீரான முன்னேற்றம் வரும் என்ற நம்பிக்கை முற்றுமுழுதாக அற்றுப் போய்விட்டது. நேபாளத்தையும், இலங்கையையும், மாலதீவையும், பூட்டானையும் சுற்றிவர வைத்துக் கொண்டு இந்தியா அதன் வலிமை இது என்று நினைக்கின்றது. ஒன்றுமேயில்லாதா பாகிஸ்தானுடன் கூட ஒரு திட்டவட்டமான நடவடிக்கையை இந்தியாவால் நடத்த முடியாது. இந்த யுத்தத்தாலும், உடனேயே வந்த யுத்த நிறுத்தத்தாலும் இந்தியாவிற்கு கிடைத்ததோ அல்லது இந்தியா சாதித்ததோ ஒன்றுமேயில்லை. மாறாக, இன்னும் சில காலத்தில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் மீண்டும் இந்தியாவிற்குள் புகுந்து இன்னொரு தாக்குதலை நடத்துவதைக் கூட இந்தச் சம்பவங்கள் எந்த வகையிலும் தடுக்கப் போவதுமில்லை.
  3. 😌............ இல்லை பையன் சார், பொதுவெளியில் உரையாடுவதற்கும், கருத்துகளை பகிர்வதற்கும் என்று சில வரையறைகள் உண்டு. எங்களின் தனிப்பட்ட அல்லது ஒரு குழுவின் விருப்பு வெறுப்புகளின் காரணமாக, நாடுகள், மதங்கள், கலாச்சாரங்கள், பண்பாடுகள் போன்றவற்றை அவமதித்தல் சரியல்ல என்றே எனக்குத் தெரிகின்றது.
  4. ஆம். தலைவர் இறந்து விட்டார் என்று செய்தி வந்த பத்திரிகையை... தலைவரே சிரித்துக் கொண்டு வாசித்த படங்களும் அப்போது வந்திருந்தது. @நன்னிச் சோழன் இடம் சிலவேளை அந்தப் படம் இருக்கலாம்.
  5. நினைக்க மறந்தவர்களுக்கு அன்னையர்தினம் வருடத்தில் ஒரு நாள். தினம் தினம் நினைப்பவர்க்கு தினமும் அன்னையர் தினமே.
  6. பேராசை பெரு நஷ்டம் ........... மீண்டும் கீழே போடு அது பிழைத்துப் போகட்டும் ......... !😂
  7. இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண் (Patrick Brown) தெரிவித்துள்ளார். கனடாவில் தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபி திறப்பு விழாவில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தமிழர்கள் மீதான தாக்குதல் நாங்கள் தமிழர்கள் இனவழிப்பின் அளவை மறக்ககூடாது. இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படவில்லை என தெரிவிப்பவர்களிற்கு பிரம்டனில் இடமில்லை. கனடாவில் இடமில்லை கொழும்பிற்கு திரும்பிச் செல்லுங்கள் என குறிப்பிட்டுள்ளார். ஆயிரக்கணக்கான தமிழர்கள் இலங்கை அரசாங்கத்தினால் படுகொலை செயப்பட்டார்கள். ஆனால், இலங்கை அரசாங்கம் தவறான தகவல்களை பரப்பி வருகின்றது என தெரிவித்த பிரம்டன் முதல்வர், உண்மைக்காகவும் நீதிக்காவும் குரல்கொடுத்த தமிழர்களை இழிவுபடுத்தவும் தாக்கவும் அவர்கள் முயன்றனர். இது ஒரு உடல்ரீதியான இனப்படுகொலை மாத்திரமல்ல உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள தமிழர்கள் மீதான தாக்குதல் என தெரிவித்துள்ளார். மேலும், தமிழர் படுகொலை நினைவுதூபி என நகரத்தில் உருவாகியுள்ளமை குறித்து நான் பெருமிதம் அடைகின்றேன் ஆனால் இன்னமும் செய்யவேண்டிய பணிகள் உள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். Tamilwinதமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்ட...இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண் (Pa...
  8. என்ன நடக்கும்…. எக்ஸ்ராவா மூணு ரபேலையும் சேர்த்தே கொடுப்போம்…ஆங்🤣 ஏற்கனவே இரெண்டு முறைக்கு அப்பால் ஒருவர் பிரதமராக கூடாது என ஆர் எஸ் எஸ் மோடிக்கு சொல்லி விட்டதாம். அமித்தை அடுத்த பிரதமர் என மோடி முன் தள்ள அதையும் ஆர் எஸ் எஸ் ரசிக்கவில்லையாம். தளபதி பட வில்லன் போல இருக்கும் யோகி ஆதிநாத்தை விரைவில் பட்டாபிஷேகத்துக்கு தயாராக்கிறரதாம் கான்பூர்.
  9. உங்கள் நினைவு சரியானது. மட்டக்களப்பு சிறையுடைப்பில் தப்பிப் போக மறுத்தவர். ஈபிஆர்எலெவ் அமெரிக்க அலன் தம்பதியரை கடத்திய பின்னர் வைத்த கோரிக்கைகளில் ஒன்று இவரை விடுதலை செய்யவேண்டும் என்பது. அந்நேரத்தில் சிறையில் இருந்தபடி, அலன் தம்பதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்யுமாறு கடத்தல்காரர்களுக்கு இவர் வேண்டுகோள் விடுத்தார். இவரது வேண்டுகோள் அடங்கிய குரல் பதிவை இலங்கை வானொலி பலமுறை ஒலிபரப்பியது. இவர் பின்னர் இயற்கை மரணமடைந்ததாக ஊடகங்களில் வாசித்தேன்.
  10. ஓம். இரண்டும் வெவ்வேறு சிங்கராயர்கள். ஆ.சிங்கராயர் பற்றிய பதிவுகள் கத்தோலிக்க திருச்சபையின் தளங்களில் தற்போது பெரிதாக இல்லை. "டேவிட்" அல்லது தாவீது அடிகளார் என்று அழைக்கப் பட்ட முன்னைய சிங்கராயரின் வரலாறு தான் இருக்கிறது. நான் நினைக்கிறேன் இருவரும் அமல மரித்தியாகிகள் (OMI) சபையைச் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். மேலும், உடைக்கப் பட்டது மட்டக் களப்புச் சிறை. வெலிக்கடைச் சிறை தமிழ் கைதிகள் கொலை நடந்த இடம் (நியூரல் கனெக்ஷன் எப்படி ஷோர்ட் சேர்க்கிற் ஆகிறது பாருங்கள்😂? இதற்குத் தான் "மக்கள் வரலாற்றை" எழுத்தில் வைத்திருக்க வேணுமென்பது!)
  11. காசா... பணமா... சும்மா அடித்து விடுவதுதானே, கண்டுக்க கூடாது. இந்த உருட்டு... அடுத்த தேர்தலில் வெல்ல போதுமானது. இந்தியர்கள்... கண்ணை மூடிக் கொண்டு, மோடிக்கு வாக்களிப்பார்கள்.
  12. ஆகா நல்ல ரேஸ்ற் கிடைத்திருக்கு. மதியநேரத்தை ஒரு மாதத்திற்கென்றாலும் ஒரு மணிநேரம் கூட்டித் தர விண்ணப்பிக்க வேண்டும். மாணவிகளையே பிய்த்து உதறித் தள்ளுகிறார்களே ஐயாவுக்கு தெரியாதோ? சிலவேளை நம்ம நாட்டான் எதுவும் செய்யலாம். அடுத்த நாட்டான் தொடக் கூடாது என்கிறாரோ?
  13. இந்த‌ நாட்டில் போர் விமான‌ம் ஓட்ட‌ ப‌ழ‌குவில் முத‌ல் ஆமி ப‌யிற்ச்சி முடித்து இருக்க‌னுன் அத‌ற்க்கு பிற‌க்கு போர் விமான‌ம் ஓட்ட‌ ப‌ழ‌குவில் 100 கேள்விக்கு 100 ச‌ரி எடுக்க‌னும் அதில் பாஸ் ஆன‌ பிற‌க்கு தான் அடுத்த‌ க‌ட்ட‌த்துக்கு விடுவின‌ம் நான் இருக்கும் இட‌த்தின் போர் விமான‌ ப‌யிற்ச்சி நிலைய‌ம் இருக்கு..................சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முத‌ல் உள்ளை போய் பார்க்கும் வ‌ச‌தி என‌க்கு கிடைச்ச‌து உட‌ல் நிலை ச‌ரி இல்லை அப்ப‌டியே வீட்டை நின்று விட்டேன்..................... இந்த‌ நூற்றாண்டில் புது கைபேசி போன்க‌ள் வ‌ருடா வ‌ருட‌ம் வெளி வ‌ருவ‌தை போல் புதுவ‌கை போர் விமான‌ங்க‌ள் புது வ‌கை ஆயுத‌ங்க‌ளை க‌ண்டு பிடிக்கின‌ம்........................ஒவ்வொன்றையும் தெரிந்து கொள்ளுற‌துக்கு முத‌ல் எங்க‌ட‌ ஆயுல் முடிந்து விடும்😁..................... எங்க‌ட‌ போராட்ட‌த்தில் ப‌ய‌ன் ப‌டுத்தின‌ விமான‌ம் சிங்க‌ள‌வ‌னின் ராட‌ரில் ப‌டாம‌ல் ப‌ல‌ முறை குண்டு போட்ட‌வை.....................அப்ப‌டியான‌ விமான‌ம் அதிக‌ உய‌ர‌த்தில் ப‌ற‌க்காது அத‌னால் ராட‌ரில் ப‌ட‌ வில்லை👍.......................
  14. இவை தென்சீன கடல், தாய்வானில் தாக்கத்தை ஏற்படுத்தும். முன்பு சொன்னது போல சீனாவின் அணுகுமுறை 2 வழிகளில் - ஒன்று மேற்கிட்ம் இருக்கும் தொழில்நுட்பத்துக்கு ஒத்தது, மற்றது எதிரானது , 2 ஐயும் விருத்தி செய்கிறது. அத்துடன் , அது எண்ணிக்கை / தரம் என்ற சமன்பாட்டையும் முழு துறைகளுக்கும் பிரயோகிக்கறது. (இதை பல அமெரிக்கா தளபதிகளே உத்தியோக பற்றற்ற முறையில் ஏற்றுக்கொள்கிறார்கள்) அனால், எல்லாவற்றையும் விட, மேற்கு முன்பு தொழில்நுட்பத்தை எதிராக பாவித்த தரப்புகள் சமச்சீர் இல்லை - ஒன்று தொழில் நுட்பத்தில் குன்றியவை, அதை அடைவதில் விருப்பம் இருந்தாலும், பண, வள வசதி இல்லாதவை. இப்பொது தான் மேற்கு அரசுக்கள் - அவற்றை தொழில்நுட்பத்தில் விஞ்ச வேண்டும் என்ற அவாவும் , அதுக்கு வேண்டிய மதி, மன, பணம், மற்றும் வளங்கள் கொண்ட அல்லது பெறக்கூடிய பெரிய மக்கள் கூட்டத்தை கொண்ட அரசை வரலாற்றில் காண்கிறது. அதன் இயற்கையான ஆரம்ப தாக்கங்களே இவை. (முன் சொல்லிய தென்சனா கடலில் நடந்தது - அமெரிக்கா அணி முடக்கப்பட்டது , Nancy Pelosi தைவான் வந்ததை சீனா தடுக்க முடியாமல் போனதன் விளைவாக, சீன தொழில்நுட்பம சார்ந்த தடுக்கும் முறைகளை ஆராய்ந்ததில் வந்த ஒரு வவிளைவு) .
  15. சனிக்கிழமை மீண்டும் போட்டிகள் ஆரம்பிக்கின்றன. ஜூன் 03 இறுதிப் போட்டி!
  16. அடுத்த‌ முறை இப்ப‌டிய‌ செய‌லை த‌விர்க்கிறேன் குரு👍.................. இது 2014ம் ஆண்டு என‌து முக‌ நூலில் நான் இட்ட‌ ப‌திவு...................இந்திய‌ர்க‌ள் போன‌ கிழ‌மை பாக்கிஸ்தான் கொடிய‌ கீழ‌ போட்டு அத‌ன் மேல் ந‌ட‌ந்து அந்த‌ நாட்டு கொடிய‌ அவ‌ம‌திச்ச‌வை.............................. அப்ப‌டியே ஈழ‌ ம‌ண்ணில் ராஜிவ் ப‌டை எத்த‌னை ஆயிர‌ம் பெண்க‌ளை வித‌வை ஆக்கினார்க‌ள் என்று மீண்டும் இந்த‌ உல‌கிற்க்கு சொல்லி காட்ட‌ க‌ட‌மை ப‌ட்டு உள்ளோம்............................
  17. https://www.facebook.com/share/r/1ArnxUpe5n/?mibextid=wwXIfr இந்தியா பாகிஸ்தான் போர்.
  18. மோடியால் ப‌க்கிஸ்தானை உடைக்க‌ முடியாது...................அப்ப‌டி ஒரு நில‌மை வ‌ந்தால் இந்தியாவையும் பாதிக்கும் ப‌ஞ்சாப் மானில‌த்தில் த‌னி நாடு கேட்டு போராட்ட‌ குழு செய‌ல் ப‌டுது..................பாக்கிஸ்தான் ஒரு க‌தைக்கு உடைஞ்சால் பாக்கிஸ்தான் வைச்சு இருக்கும் அணு குண்டு யார் கைக்கு போகும்..................இந்தியா தான் த‌ங்க‌ட‌ ஒற்றுமையை சீர்குலைத்தார்கள் என்று பாக்கிஸ்தானை நூற்றுக்கு நூறு வித‌ம் நேசித்த‌வ‌ர்க‌ள் கோவ‌ப் ப‌ட‌ மாட்டார்க‌ளா.......................... பாக்கிஸ்தானை உடைக்க‌ வெளிக்கிட்டு க‌ட‌சியில் இந்தியா த‌ன் த‌லையில் தானே ம‌ண் அள்ளி போட்ட‌ க‌தையா போய் முடிய‌க் கூடும்...................... இந்திய‌ ஊட‌க‌ங்க‌ள் தான் பாக்கிஸ்தான் உடைய‌ போகுது என்று அதிக‌ம் கொக்க‌ரிக்கின‌ம் பெரும்பாலான‌ பாக்கிஸ்தானிய‌ர்க‌ள் ஒற்றுமையாக‌ தான் இருக்கின‌ம் ம‌த‌ ரீதியாய் ம‌ற்றும் விளையாட்டுக்க‌ளில்.............................
  19. வணக்கம் வாத்தியார் . ............ ! பெண் : { உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே } (2) உலகமே சுழளுதே உன்ன பாா்த்ததாலே ஆண் : தங்கம் உருகுதா அங்கம் கறையுதா வெட்கம் உடையுதா முத்தம் தொடருதா பெண் : சொக்கி தானே போகிறேனே மாமா கொஞ்சம் நாளா ஆண் : ஹே அம்புலியில் நனைந்து சந்திக்கிற பொழுது அன்புக்கதை பேசி பேசி விடியுது இரவு ஹோய் பெண் : ஏழு கடல் தாண்டி தான் ஏழு மலை தாண்டி தான் என் கருத்தமச்சான் கிட்ட ஓடி வரும் மனசு ஆண் : நாம சோ்ந்து வாழும் காட்சி ஓட்டி பாக்குறேன் பெண் : ஆஆ காட்சியாவும் நெசமா மாற கூட்டி போகிறேன் ஆண் : ஓ சாமி பாா்த்து கும்பிடும் போதும் நீதானே நெஞ்சில் இருக்க ஓ ஓ ஏ ஏ யே ஆண் : ஊரைவிட்டு எங்கயோ வேர் அருந்து நிக்கிறேன் கூடு தந்த கிளிப்பெண்ணே உன்னாலதான் வாழுறேன் பெண் : கூரப்பட்டு சேலைதான் வாங்க சொல்லி கேக்குறேன் கூடு விட்டு கூடு பாயும் காதலால சுத்துறேன் ஆண் : கடவுள்கிட்ட கருவறை கேட்டு உன்ன சுமக்கவா பெண் : உதிரம் முழுக்க உனக்கே தான்னு எழுதி குடுக்கவா ஆண் : ஓ மையிட்ட கண்ணே உன்னை மறந்தால் இறந்தே போவேன் ஓஓ ......... ! --- உருகுதே மருகுதே ---
  20. கண்களின் வார்த்தைகள் புரியாதோ ............. ! 😍
  21. கனடாவில் போன வருடம் இலங்கையர் துள்ளிக்குதித்து போது, கனேடிய அமைச்சர் ஒருவர் கூறியது, எங்களுடைய நாட்டின் சட்டத்தில் தலையிட முடியாது, வேண்டுமென்றால் கொழும்பில் போய் செய்யுங்கள் என்று கூறியவுடன் அவர்களின் எதிப்புக்குரல் அடங்கிவிட்டது. வழமையாக கனேடிய அமைச்சரை வரவழைத்து தமது கண்டனங்களை தெரிவிப்பவர்கள் அதையும் செய்ய மறந்து விட்டனர். தமது நாட்டு சட்ட திட்டங்களை எதிர்ப்போரை அவர்கள் நாடுகடத்தலாம், அந்த உரிமை, எங்கள் நாட்டின் இறையாண்மையில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்று கூறும் இலங்கைக்கு கிடையாது.
  22. என்ன செய்ய உங்களை முந்துவம். என்று தான் 🤣
  23. தமிழ்நாடு முன்னேறி விட்டதாகத்தான் பலர் கூறுகின்றார்கள். நீங்களோ தமிழ்நாட்டை அவதூறாக எழுதுகின்றீர்கள்.
  24. அசர்பைஜான் இனப்படுகொலைகள் நூறு வருடங்களின் பின்னர் தான் உலக நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  25. ம்.... வெளிநாடுகளில் கவன ஈர்ப்பு போராட்டம் தமிழரால் நடத்தப்படும்போதெல்லாம், சில இலங்கையர்கள் அவர்களை அச்சுறுத்துவதும் குழப்புவதும் அவர்களுக்கெதிராக கூப்பாடு போடுவதும் வழமை. கடந்த தடவை வழமைபோன்று அவர்கள் பிரச்சனை செய்தபோது, இலங்கையின் பாணியிலேயே பதில் வழங்கப்பட்டது. இந்த பேச்சை கேட்டதும் தாம் இலங்கையர் என்பதை மறைத்து, ஒதுங்கியிருக்க வேண்டும். அல்லது தாங்களும் சேர்ந்து போராட்டம் நடத்தவேண்டும். இது சிங்கள, பவுத்த நாடு தமிழரெல்லாம் வந்தேறு குடிகள் என்று சண்டித்தனம் காட்டுபவர்கள், குடியேறிய நாடுகளிலும் தங்கடை சண்டித்தனத்தை விடவில்லை. கனடாவைப்பின் பற்றி எல்லா நாடுகளும் இந்த நிலைப்பாட்டுக்கு வரவேண்டும். காசை கொடுத்து தமிழரின் போராட்டங்களை தடுக்க களமிறக்கப்பட்ட கூலிப்படைகள் கைதும் செய்யப்படலாம் குழப்பம் விளைவித்தால்.
  26. தமிழ் மக்களுக்கு எந்த நன்மையையும், அங்கீகாரமும் கிடைக்ககூடாதென்பதுதான் நானாக்களின் டிசைன்!
  27. BREAKING 🚨🚨 Another Video, Ano...22 тыс. просмотров · 684 реакции | BREAKING 🚨🚨 Another...BREAKING 🚨🚨 Another Video, Another Blow to India! 🚨 A new video has surfaced clearly showing a fighter jet shot down by PAF 🇵🇰. Upon closer inspection,... பாகிஸ்தானின் 8 பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி 100 பயங்கரவாதிகள் ( முக்கிய தளபதிகள் உட்பட) கொல்லப்பட்டுள்ளார்கள் என மேற்கு ஊடகங்கள் சொல்கின்றன. (இந்தியா கூறியதாக)
  28. கோலிட்ட‌ ம‌ட்டும் க‌ப்ட‌ன் பொருப்பை கொடுக்க‌ கூடாது கோலி க‌ப்ட‌னாய் இருந்து 19வ‌ய‌துக்கு உள் ப‌ட்ட‌ உல‌க‌ கோப்பையை ம‌ட்டும் தான் 2008 வென்று கொடுத்த‌வ‌ர்................... இந்திய‌ அனிய‌ சில‌ வ‌ருட‌ங்க‌ள் தான் வ‌ழி ந‌ட‌த்தின‌வ‌ர் கோலிக்கும் க‌ப்ட‌ன் பொருப்புக்கும் ராசி இல்லை....................வேறு இள‌ம் வீர‌ரிட‌ம் கொடுக்க‌லாம் க‌ப்ட‌ன் ப‌த‌வியை புவ‌னேஷ் குமார்ரிட‌ம் கொடுத்து பார்க்க‌லாம் இந்தியா அணிக்காக‌ ப‌ல‌ ஆண்டுக‌ள் ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ளில் விளையாடின‌வ‌ர்..................................
  29. ரபேல் விழுந்தது பிரான்சுக்கு பெரிய அதிர்ச்சியில் ஒரு குழுவே விசாரணைக்காக போயுள்ளார்களாம். வியாபார வீழ்ச்சி வந்துவிடக் கூடாதென்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.
  30. நீங்கள் கொஞ்சம் “கடந்த காலத்தின் சிறையில்” இருந்து மீண்டு வர வேண்டும் என்பது என் நயமான வேண்டுகோள். இன்றைக்கு பொதுவெளியில் தீவிர தமிழ் தேசியம் பேசுவோர் எண்ணிக்கை, குறிப்பாக புலம்பெயர் சமூகத்தில், அரிது என்றே நினைக்கிறேன். தமது உள்ளக அரசியலுக்காக உதாரணமாக சுமந்திரனை தாக்க, அல்லது சிறிதரனை பாதுகாக்க, அல்லது சம்பந்தமே இல்லாமல் தமிழ்நாட்டு அரசியலில் தலையை போடும் ஒரு காவாலிக்கூட்டமே நீங்கள் சொல்லும் ஆட்கள். ஒட்டுமொத்த புலம்பெயர் தமிழர்களில் இந்த காவாலிகள் மிக, மிக சொற்பமானவர்கள். இவர்களிடம் எந்த புலம்பெயர் அமைப்பும் இல்லை. இவர்கள் புலம்பெயர் நாடுகலில் உயர் நிலைகள் நோக்கி போவோரும் இல்லை. கரி ஆனந்தசங்கரிகளுக்கும், உமா குமரனுகளுக்கும் மட்டும் அல்ல, பல அறியப்பட்ட தமிழ் அமைப்புகள், செயல்பாட்டாளர்களுக்கும் கூட இந்த காவாலிகளிடம் எந்த தொடர்பும் இல்லை. இந்த காவாலிகளிடம் சிறிய தொடர்பை வைத்திருப்பது யார் எனில், தாம்தான் இப்போ புலிகள் என சொல்லி, பல்வேறு பெயர்களில் கொள்ளை அடிக்கும் முன்னாள் புலிவால்கள், இந்நாள் மாபியாக்கள். ஆனால் இவர்களுக்கும் புலம்பெயர் மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லை. மாவீரர்தின மக்கள் கூட்டம், போக இடம் இன்றி, வேறுவழியில்லாமல் போகும் கூட்டம். அது மாவீரர்களுக்கானது, அவர்களுக்காக போவது. புலம்பெயர் தேசத்திலாவது கொஞ்சம் இந்த காவாலிகள், மாபியாக்களுக்கு செல்வாக்கு இருக்கிறது. இலங்கையில் அறவே இல்லை. அங்கே இவர்கள் போனால் தமிழ் மக்களே செருப்பை சாணியில் முக்கி அடிப்பார்கள். ஆகவேதான் சொல்கிறேன். இந்தியாவுக்கு ஈழத்தமிழ் அரசியல்வாதிகள், புலம்பெயர் அமைப்புகள், எவரும் தேவையில்லை. நான் சொன்ன வகையில் ஒரு தீர்வை இலங்கையை நெருக்கி இந்தியாவே கொண்டு வர செய்யலாம். இதற்கு ஓம் படுங்கள் என சொன்னால் - இலங்கை தமிழ் எம்பிகள் பலர் ஓம் என்றே சொல்வாகள். சில நேரம் தன் ஒரு எம்பி சீட் பதவி கருதி பொன்னம்பலம் எதிர்க்கலாம். ஆனால் உண்மையில் தீர்வு காத்திரமானது எனில் - நாட்டில் வாழும் மக்கள், புலம்பெயர் மக்கள் - அதற்கு அமோக ஆதரவு கொடுப்பர். காவாலிகள்+மாபியாக்கள்+ கஜன் எதிர்ப்பு எடுபடாது.
  31. பாகிஸ்தான் வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராக எந்த பெரிய இராணுவ தாக்குதலையும் செய்யவில்லை...பல பயங்கரவாத தாக்குதல்களை செய்திருக்கின்றது ..ஒர் இறையாண்மையுள்ள நாட்டின் இராணுவம் செய்வது போன்ற செயல்களை செய்யவில்லை... ஈரானில் இராணுவம் இருக்கின்றது ஆனால் அதை நடத்துவது மத தலைவர்கள்...ஆட்சியும் மததலைவர்களினது...இஸ்ரேலுக்கு எதிராக பயங்கரவாத குழுக்களை உருவாக்கி பயிற்சியளித்து பயங்கரவாதிகள் ஊடாக‌ பெரும் இராணுவ நடவடிக்கைகளை இஸ்ரேலுக்கு எதிராக நடத்துவது.. பாகிஸ்தானில் இராணுவம் ஆட்சி நடத்துகின்றது ,அரசியல்வாதிகள் அவர்களின் அடிமைகள்.மதவாதிகளை பயங்கரவாதிகளாக உருவாக்கி இந்தியாவுக்கு எதிராக தாக்குதலை செய்கின்றது .. இஸ்லாமிய உலகின் இரண்டு கண்கள் ...
  32. இந்திய மாநிலங்களுக்கு இணையான இணைந்த வடக்கு-கிழக்கு என்ற அலகொன்றை இந்தியா பெற்றுத்தருமாயின் இந்திய எதிர்ப்பைக் கைவிட்டு கண்மூடித்தனமாக ஆதரிக்க நானும் ரெடி!
  33. https://www.facebook.com/share/v/16RsZva6Ax/?mibextid=wwXIfr வேலியால எட்டிப் பார்க்கிறதுக்குள்ள சண்டை முடிஞ்சிட்டுதே! சீனாவின் ஜெட் உற்பத்தியாளரின் பங்குகள் கிடிகுடு என உயர்ந்ததும் இந்த போர்நிறுத்தத்துக்கு காரணம். அடுத்து யாழப்பாணத்தில் இருந்து சீனதூதுவர் இந்தியா எவ்வளவு தூரம் என்று கேட்டது சாபகத்தில் வந்து தொலைக்குது. https://www.facebook.com/share/v/1AH8qmsTmC/?mibextid=wwXIfr
  34. தினவு எடுத்த.... கோவில் திருவிழாக் காரர்களால்.... மக்களுக்கு எவ்வளவு துன்பம். சென்ற கிழமை தாவடி கோவிலில் வெடி கொழுத்தும் போது.... தென்பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட யானை மிரண்டு... பொதுமக்களை தாக்கியதில் சிலர் காயமடைந்து, ஒரு பெண்ணிற்கு கால் அகற்ற வேண்டிய நிலை. இப்போ.... கோவில் திருவிழாவிற்கு... வான வேடிக்கை காட்டியதில் சமூக செயற்பாட்டு மையமாக விளங்கி வந்த பண்பாட்டு மலர்ச்சிக் கூடம் எரிந்து நாசமாகி உள்ளது. எமது சமூகம் முட்டாள் வேலைகள் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டிய தருணம் இது. இந்தக் காசுகளை வைத்து... சமூகத்திற்கு ஏதாவது நன்மை செய்யப் பாருங்கள். கல்வி கொடுக்கலாம், நோயாளர்களை, முதியோர்களை பார்மரிக்கலாம் என்று எத்தனையோ வேலைகள் உள்ளது. அதை விட்டுட்டு... லூசு வேலைகள் செய்து கொண்டு இருக்காதீர்கள்.
  35. ஈழப்பிரியன்.... உங்களது படத்தையும், புதிய பாப்பரசரின் படத்தையும் நான் ஒப்பிட்டுப் பார்த்தபோது... உங்கள் முகத்தில் இளமையும், உற்சாகமும் தெரிகின்றது. ஆனபடியால்... பாப்பாரசருக்குப் பிறகுதான் நீங்கள். 😂
  36. அது உங்கள் கோளாறு. எண்பதற்கு மேல் வாக்கு வங்கியை வைத்திருந்த ஒரு பெரும் கட்சியை ஒரு வாக்கில் தொடங்கி வளரும் இன்னொரு கட்சியுடன் சீண்டு முடியவேண்டிய நிலையில் கருத்து வறுமை வெறுமை அல்லது வஞ்சனை....
  37. இந்த செய்தியை வாசிதததும் பதறிப் போன கனடாவுக்கான இலங்கைத் தூதுவர் அவசரம் அவசரமாக தூதகரத்தை இழுத்துப் பூட்டிவிட்டு தூதரக அதிகாரிகளையும் அழைத்துக்கொண்டு தலையில் துண்டை போட்டபடி அங்கிருந்து வெளியேறி இலங்கைக்கு பறந்துகொண்டிருப்பதாக இறுதியாக கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.