Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை போர்குற்ற நாடு தான் என்று வாக்களிக்கும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்து புதுக்கோட்டையில் உண்ணாவிரதம் இருந்து போராடிய , சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.முத்துக்குமரன் சாலைவிபத்தில் மரணம்

Featured Replies

இலங்கை போர்குற்ற நாடு தான் என்று வாக்களிக்கும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்து புதுக்கோட்டையில் உண்ணாவிரதம் இருந்து போராடிய , சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.முத்துக்குமரன் சாலைவிபத்தில் மரணம்

புதுக்கோட்டை, ஏப்ரல் 1: புதுக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முத்துக்குமரன் (வயது 43) அன்னவாசல் அருகே நிகழ்ந்த சாலைவிபத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.இவர் புதுக்கோட்டை தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்.இவர் இன்று கட்சி உறுப்பினர் ஒருவரின் வீட்டு நிகழ்ச்சிக்காக , தனது பொலீரோ ஜீப்பில் புதுக்கோட்டையில் இருந்து வி‌ராலிமலை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அன்னவாசல் அருகே சொக்கநாதன்பட்டி என்னும் இடத்தில் ஜீப்பின் டயர் வெடித்துள்ளது. இதில் நிலை தடுமாறிய ஜீப், சாலையில் இருந்து பள்ளத்தில் உருண்டுவிபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே எம்.எல்.ஏ. முத்துக்குமரன் பலியானார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

http://www.dinamani....tory.aspx?Title

****************************************************************************************

தொடர்பு பட்ட செய்தி

இலங்கை போர்குற்ற நாடு தான் என்று வாக்களிக்கும் வரை போராட்டம்: புதுக்கோட்டை எம்.எல்.ஏ

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள அணவயல் புளிச்சங்காடு கைகாட்டியில் அப்பகுதி தமிழின உணர்வாளர்கள் சார்பில் ஐ.நா அவையில் அமெரிக்கா கொண்டு வரும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்திய அரசு ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் நடந்தது.

உண்ணாவிரதத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.முத்துக்குமரன் தொடங்கி வைத்து பேசினார்.

முத்துக்குமரன் எம்.எல்.ஏ பேசியதாவது. தொடர்ந்து இந்திய அரசு தமிழர்களை வஞ்சித்தே வருகிறது. இப்போது போராடும் தமிழர்களுக்கு பதில் சொல்ல பக்கத்தில் உள்ள பாண்டிச்சேரியைச் சேர்ந்த நாராயணசாமி என்ற மத்திய அமைச்சரை மத்திய அரசு நியமித்துள்ளது. அவரது பதில்களும் பயனள்ளதாக இல்லை.

ஈழத்தமிழர் பிரச்சணையில் இந்திய அரசு தொடர்ந்து மந்தமாகவே இருந்து வருகிறது. முள்ளிவாய்க்காலில் பொதுமக்களை சிங்கள் அரசுடன் கூட்டு படைகள் குண்டுகளை கொட்டி அழிக்கிறது அதை தடுத்து நிறுத்துங்கள் என்று கிராமம் கிராமமாக பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் மத்திய அரசு அதை கண்டு கொள்ளாமல் விட்டது. அதனால் தான் இத்தனை மக்களும் கொள்ளப்பட்டனர்.

அது போல இப்போது அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்கிறோம் என்று பிரதமர் சொல்லி இருந்தாலும் அதை நாங்கள் நம்ப மாட்டோம். முன்பு நடந்து கொண்டது போல வாக்கெடுப்பு முடியும் வரை சொல்லிவிட்டு பிறகு எதிராக வாக்களித்துவிடுவீர்கள். அதனால் இலங்கை போர்குற்ற நாடு தான் என்று வாக்களிக்கும் வரை இது போல தமிழின உணர்வாளர்களின் போராட்டம் தொடர்ந்து நடக்கும் என்று பேசினார்.

இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சி மாவட்ட தலைவர் கரு. காளிமுத்து பேசும் போது.. இலங்கை போர் குற்ற நாடு என்ற தீர்மானத்தை ஆதரித்து வாக்களிப்பதுடன் அதே ஐ.நா மன்றத்தில் தனி தமிழீழ நாடு அமைக்க அனைத்து நாடுகளும் ஆதரிக்க வேண்டும் என்ற புதிய தீர்மானத்தை இந்திய அரசு கொண்டு வர வேண்டும். அதற்காகவும் நாம் போராட வேண்டும் என்று பேசினார். உண்ணாவரதத்தில் ஏராளமான தமிழின உணர்வாளர்கள் கலந்து கொண்டனர்.

http://www.nakkheera...ws.aspx?N=72635

Edited by அபராஜிதன்

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கு ஆதரவாக இருந்த சட்டமன்ற உறுப்பினரையும், காலன் பறித்துவிட்டான்.

எஸ்.பி. முத்துக்குமரனின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும், கட்சி உறுப்பினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எஸ்.பி. முத்துக்குமரனின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும், கட்சி உறுப்பினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

.

குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். :( :(

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..! இருக்கைப் பட்டியை அணிந்துகொண்டு செல்லவேண்டியது கட்டாயம்..!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தன் இனத்துக்கு ஏற்பட்ட கொடுமையை கண்டு கொதித்தெழுந்து போராடிய ............. எஸ்.பி. முத்துக்குமரனின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும், கட்சி உறுப்பினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

அனுதாபங்கள். இவரின் கொள்கையை முன்னெடுங்கள், அதுவே இவருக்கான மரியாதை.

  • கருத்துக்கள உறவுகள்

01-muthukumaran-300.jpg

எஸ்.பி. முத்துக்குமரன்

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் உணர்வாளர்கள் இறப்பது தமிழர்களுக்கு பெரிய இழப்பு. கண்ணீர் அஞ்சலிகள். இந்தியக்கம்னியூஸ்ட் கட்சி 2008ல் இருந்து தொடர்ந்து ஈழத்தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கும் கட்சி. இவரின் இழப்பினால் அத்தொகுதியில் தேர்தல் சில மாதங்களில் வரவுள்ளது. ஆனால் அத்தொகுதியில் மீண்டும் இந்தியக் கம்னியூஸ்ட் கட்சி வெற்றி பெறுவது மிக மிகக் கடினம். ஆளும் கட்சி போட்டியிட்டால் ஆளும் கட்சிதான் வெல்லும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரது குடும்பத்திற்கு, எனது ஆழ்ந்த அனுதாபங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கு ஆதரவாக இருந்த சட்டமன்ற உறுப்பினரையும், காலன் பறித்துவிட்டான்.

எஸ்.பி. முத்துக்குமரனின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும், கட்சி உறுப்பினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.