Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்சாரமும்... மின்சாரமும்...

Featured Replies

f0dcbd78ebd25414_128.preview.jpg

நேற்று மொட்டாய் நின்று...

இன்று பூத்த பூவது!

கட்டுக்குள் அடங்காத காளையை,

கட்டியிழுத்த தேரது!

இழுத்தலும் பூத்தலும்

பூவின் புன்னகைக்குள்,

தேனாய் இனித்தது!

தேன் குடிக்கப் போன வண்டு

தேருழுத்துக் களைத்தது!

காரிருளில் கதவடியில்,

கண்ணான கண்மணி

கண்ணருகே நின்று

நெஞ்சருகே வந்தாள்!

தொட்ட இடமெல்லாம்

சுட்டன மாமல்லபுரச் சிற்பங்கள்!

பதைபதைத்த நெஞ்சம்

தப்பி வந்த முயல் போல்

தாவி நின்று மூச்சுவிட,

மேவிவிட்ட உச்சந்தலையில்

ஈரப்படுத்தியது என்னிதழ்!

பூச்சூடிய குங்கும வாசம்

வாவென்றழைக்க,

கண்ணிமைக்கும் நேரத்தில்

பூவிதழோடு போராடி

வெற்றிகண்ட வண்டு,

கட்டிலறைத் தேன்கூட்டே

கவர்ந்து சென்று ஆறுதலாய்

ரசித்து ருசித்து...

முழித்தேனும் முழுத்தேனும் குடித்துவிட,

முழுமூச்சாய் முன்னேறி

பூவும் வண்டும்

சிறகடித்துப் பறக்க............

எங்கிருந்தோ போட்ட ஆளி

கூச்சத்தில் நின்ற எம்

கண்களையும் கூச வைக்க,

அதுவரை போர்த்திருந்த காரிருள்

காட்டிக்கொடுத்து மறைந்தது!

தடுமாறிய வெட்கத்தில்

மாயமாய் மறைந்துபோனோம்!

மின்சாரம் மறுபடியும்

வந்ததென்று சொன்னார்கள்

வீட்டில் எல்லாரும்!!

சம்சாரம் அருகில் நான்,

மின்சார சபையை திட்டியபடியே...

மீண்டுமொரு தடைதாண்டக் காத்திருந்தேன்!

:lol::wub::lol:

திருத்தத்திற்கான காரணம்: ஆழி என்பது ஆளி என்று திருத்தப்பட்டுள்ளது

Edited by கவிதை

நேற்று மொட்டாய் நின்று...

இன்று பூத்த பூவது!

கட்டுக்குள் அடங்காத காளையை,

கட்டியிழுத்த தேரது!

இழுத்தலும் பூத்தலும்

பூவின் புன்னகைக்குள்,

தேனாய் இனித்தது!

தேன் குடிக்கப் போன வண்டு

தேருழுத்துக் களைத்தது!

கவுத்திட்டிங்களே ராசா ........... உண்மையில் உங்கள் அளவிற்கு எனக்கு க (வி )தைக்கும் வித்தை வராது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமையான கவிதை. வாலிக்கும் உங்களுக்கும் ஒற்றுமை இருக்கப்பா

இரவு நேரத்துக்கு படுக்காமல் விட்டத்தை பார்த்துகொண்டிருந்தால் இப்பிடித்தான் கவிதை வருமோ :rolleyes: ?

இங்க பியூஸ்யையே புடுங்கிவிட்டிட்டாங்கள் இதுக்குள்ள இதைவேற வாசிச்சு உச்சுகொட்டவேண்டியதாக இருக்கு.

கவிதை வடித்த "கவிதை" அல்லவா? நன்றாக இருக்கிறது.

இவ்வளவு வெளிப்படையா எழுதிறீங்களே... அதால கருத்தெழுத முடியல (பயமாயிருக்கு) :lol::D .....

தொடர்க உங்கள் கவி பயணம்....

  • கருத்துக்கள உறவுகள்

ஆளியை போட்டு ஆழியில் போடவிடமல் செய்தவனை காலி பண்ண துடித்திருக்குமே மனசு?? :lol: அதுசரி கவிதை என்ன வர வர ஒரு மார்க்கமாயிருக்கு. :wub:

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு தூக்கம் போச்சு சரி

எங்களுக்கும் அதே நிலையை உருவாக்கலாமோ?

அருமை

வாழ்த்துக்கள்

தொடருங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆளியை போட்டு ஆழியில் போடவிடமல் செய்தவனை காலி பண்ண துடித்திருக்குமே மனசு?? :lol: அதுசரி கவிதை என்ன வர வர ஒரு மார்க்கமாயிருக்கு. :wub:

Vishenka_11.gif

2gwb921.gif

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை அருமை. கரண்ட் வந்தால் உங்களுக்கென்ன, நீங்கள் கண்டின்யு பண்ண வேண்டியது தானே.... :lol:

அதுசரி கவிதை என்ன வர வர ஒரு மார்க்கமாயிருக்கு. :wub:

இப்ப கொஞ்ச நாளா ஆள் ஒரே "மூட்" போல இருக்கு.... :wub:

  • கருத்துக்கள உறவுகள்

சில பேர் சம்சாரத்தைப் பற்றி இப்படியும் எழுதி இருக்காங்களே.. எதுதான் உண்மையோ.. யார் அறிவார். ஆராய்ந்து பார்க்காதவரை எதையும் சும்மா நம்ப முடியாதுள்ளது..! :):lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நல்ல கவிதை, இது சம்சாரத்துக்கு சரி வரா, ஆனா காதலிக்கும் போது அல்லது சமாச்சாரங்களுக்கு சரி வரும்

  • தொடங்கியவர்

நேற்று மொட்டாய் நின்று...

இன்று பூத்த பூவது!

கட்டுக்குள் அடங்காத காளையை,

கட்டியிழுத்த தேரது!

இழுத்தலும் பூத்தலும்

பூவின் புன்னகைக்குள்,

தேனாய் இனித்தது!

தேன் குடிக்கப் போன வண்டு

தேருழுத்துக் களைத்தது!

கவுத்திட்டிங்களே ராசா ........... உண்மையில் உங்கள் அளவிற்கு எனக்கு க (வி )தைக்கும் வித்தை வராது .

கோ என்ன இப்படி சொல்லிப்போட்டியள்?! கதைக்க்கும் வித்தை தெரிந்தவர்க்குத்தான் கவி தைக்கும் வித்தையும் தெரிந்திருக்கும்!

எழுத்துக்களும் பேசும்தான்! ஆனால் நான் இன்னும் மாணவன் இங்கு! கற்கவேண்டிய சூட்சுமங்கள் நிறைய இருக்கு!

கற்று முடித்தால்தான் எல்லாத்துக்கும் தெளிவு பிறக்கும்!

நன்றி கோ கருத்துக்கு! :)

  • கருத்துக்கள உறவுகள்

:wub: :wub: :wub::D

:wub: :wub: :wub::D:icon_mrgreen:

  • தொடங்கியவர்

அருமையான கவிதை. வாலிக்கும் உங்களுக்கும் ஒற்றுமை இருக்கப்பா

இரவு நேரத்துக்கு படுக்காமல் விட்டத்தை பார்த்துகொண்டிருந்தால் இப்பிடித்தான் கவிதை வருமோ :rolleyes: ?

இங்க பியூஸ்யையே புடுங்கிவிட்டிட்டாங்கள் இதுக்குள்ள இதைவேற வாசிச்சு உச்சுகொட்டவேண்டியதாக இருக்கு.

சுப்பண்ணை! சும்மா இருங்கோ!

யாழில... தேசியக் கவிஞரின்ர மோதிரக் கையால குட்டுப்பட்ட ஆக்கள் எல்லாம் இருக்கினம். இதுக்குள்ள வாலி கீலி என்று நீங்கள் சொன்னால்.... என் வீட்டு பன்னாடை வேலியை பிரிச்சுக்கொண்டு வந்து சண்டை பிடிக்கப்போகினம்! ஏனப்பா இப்பிடி? :o:rolleyes:

நான் பாவம்தானே!? என்பாட்டுக்கு எதையாவது கிறுக்கிட்டுப் போறன்.

விடுங்கப்பா! :mellow:

மிச்சம் இருக்கிற பியூஸையும் புடுங்க வைப்பியள் போல கிடக்கே! :lol: :lol: :lol:

சுப்பண்ணை... ! விளங்கிச்சுதோ? :)

Edited by கவிதை

சுப்பண்ணை! சும்மா இருங்கோ!

யாழில... தேசியக் கவிஞரின்ர மோதிரக் கையால குட்டுப்பட்ட ஆக்கள் எல்லாம் இருக்கினம். இதுக்குள்ள வாலி கீலி என்று நீங்கள் சொன்னான் என் வீட்டு பன்னாடை வேலியை பிரிச்சுக்கொண்டு வந்து சண்டை பிடிக்கப்போகினம்! ஏனப்பா இப்பிடி? :o:rolleyes:

நான் பாவம்தானே!? என்பாட்டுக்கு எதையாவது கிறுக்கிட்டுப் போறன்.

விடுங்கப்பா! :mellow:

மிச்சம் இருக்கிற பியூஸையும் புடுங்க வைப்பியள் போல கிடக்கே! :lol: :lol: :lol:

சுப்பண்ணை... ! விளங்கிச்சுதோ? :)

:lol::D:icon_idea:

மின்சாரம் மறுபடியும்

வந்ததென்று சொன்னார்கள்

வீட்டில் எல்லாரும்!!

சம்சாரம் அருகில் நான்,

மின்சார சபையை திட்டியபடியே...

மீண்டுமொரு தடைதாண்டக் காத்திருந்தேன்!

:lol::wub::lol:

உங்க கவிதை ரெம்ப நன்னாயிருக்குங்க கவிதை அண்ணா . நம்ம டைரக்டர் விசு சார் ஒரு சினிமா இதேபேரில வெளியிட்டாருங்க . நீங்க தப்பா எடுக்கலைன்னா ஒன்னு சொல்றேங்க . இப்புடி கவிதைங்க எழுதிறப்போ உங்க ஐடி படம் தடைபண்ணுதுங்க . ஒரு பேபி இப்புடி எழுதுமான்னு ஒரு பீலிங்குங்க .

  • தொடங்கியவர்

கவிதை வடித்த "கவிதை" அல்லவா? நன்றாக இருக்கிறது.

மிக்க நன்றி UK.கரிகாலன்! :)

கவி அருமையான கவிதை, வாழ்த்துக்கள்!!

  • தொடங்கியவர்

இவ்வளவு வெளிப்படையா எழுதிறீங்களே... அதால கருத்தெழுத முடியல (பயமாயிருக்கு) :lol::D .....

தொடர்க உங்கள் கவி பயணம்....

வெளிப்படையாவா எழுதியிருக்க்க்க்க்க்கிறன்??? :rolleyes::D

இதையே வெளிப்படை என்று சொன்னால் வெளிப்படையை எப்பிடி சொல்லுறது காதல்? :rolleyes::lol:

கவியெழுத வெளிக்கிட்டால் எல்லாத்தையும் தொட்டு எழுத வேணும் எண்டு நினைக்கிறன்.

இன்னும் பல விடயங்களை தொட்டு எழுத வேணும்! முக்கியமாக சமுதாயப் பிரச்சினைகள். பார்க்கலாம்..... எதையாவது எழுதப்போய் பகை வராமல் இருந்தால் சரி! :rolleyes:

நன்றி காதல்! :)

  • தொடங்கியவர்

ஆளியை போட்டு ஆழியில் போடவிடமல் செய்தவனை காலி பண்ண துடித்திருக்குமே மனசு?? :lol: அதுசரி கவிதை என்ன வர வர ஒரு மார்க்கமாயிருக்கு. :wub:

பின்ன... கடுப்பாகாமல் என்ன பண்ணும்???? :blink:

கொஞ்ச நேரம் கொஞ்ச நினைச்சாலும் விடமாட்டியள் போல கிடக்கே!!! :unsure:

கற்பனையில மிதந்தாலும் உங்களுக்கு பொறுக்குதில்லையே.... சாமி! :o:lol:

கற்பனையிலயாவது தேன்குடிக்க விடுங்கப்பா...!!!! :wub::lol:

  • தொடங்கியவர்

உங்களுக்கு தூக்கம் போச்சு சரி

எங்களுக்கும் அதே நிலையை உருவாக்கலாமோ?

அருமை

வாழ்த்துக்கள்

தொடருங்கள்

உங்களுக்கு தூக்கம் போச்சு சரி

எங்களுக்கும் அதே நிலையை உருவாக்கலாமோ?

இப்பிடி சொல்லிப்போட்டு...........................

அருமை

வாழ்த்துக்கள்

தொடருங்கள்

என்றால், என்ன அண்ணை நான் பண்ணுறது....???? :D:rolleyes:

சரி சரி... உங்களுக்காக குளுகுளு என்று இன்னொரு கவிதையை சூடாத் தாறன்.

இப்ப சந்தோசந்தானே???? :D

நன்றி விசுகண்ணை! :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பண்ணை! சும்மா இருங்கோ!

யாழில... தேசியக் கவிஞரின்ர மோதிரக் கையால குட்டுப்பட்ட ஆக்கள் எல்லாம் இருக்கினம். இதுக்குள்ள வாலி கீலி என்று நீங்கள் சொன்னால்.... என் வீட்டு பன்னாடை வேலியை பிரிச்சுக்கொண்டு வந்து சண்டை பிடிக்கப்போகினம்! ஏனப்பா இப்பிடி? :o:rolleyes:

நான் பாவம்தானே!? என்பாட்டுக்கு எதையாவது கிறுக்கிட்டுப் போறன்.

விடுங்கப்பா! :mellow:

மிச்சம் இருக்கிற பியூஸையும் புடுங்க வைப்பியள் போல கிடக்கே! :lol: :lol: :lol:

சுப்பண்ணை... ! விளங்கிச்சுதோ? :)

எனக்கு தலைசுத்துது :( , இனிமேல யாழுக்கு வரேக்கையும் பனடோல் பெட்டியோடதான் வரோணும் போல இருக்கு

  • தொடங்கியவர்

Vishenka_11.gif

2gwb921.gif

உங்களுக்கு சிரிப்பு சிரிப்பாய் வருது!???? :blink::(

எல்லாத்தையும் செய்து களிச்சுப்போட்டு.... எங்களுக்கு வெறும் ஸ்மைலிகளை மட்டுமே போட்டு கடுப்பேத்தலாமோ சுப்பண்ணை???? :rolleyes::blink::lol:

ஏணண்ணை ???? :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கன்னத்தில் தேன் குடிதடதால் கற்ப்பனை கோடி வருமாம்.கன்னத்துக்கே கோடி என்றால் பைங்கனி இத யப்பா கற்பனை லயமே ஓடும். :lol: :lol:

  • தொடங்கியவர்

கவிதை அருமை. கரண்ட் வந்தால் உங்களுக்கென்ன, நீங்கள் கண்டின்யு பண்ண வேண்டியது தானே.... :lol:

இப்ப கொஞ்ச நாளா ஆள் ஒரே "மூட்" போல இருக்கு.... :wub:

தும்ஸ்.... கறண்ற் வந்தாலும் கன்ட்ரினியூ பண்ணிணத்தான் ஆசைதான். ஆனால் என்ன பண்ணுறது சேர்கியூட் டமேஜ் ஆகாத அளவுக்கு நடக்கணுமே! :rolleyes::lol:

சொக்கடிக்காமல் இருந்த அளவில் சேஃப்டிதான்! :lol:

எல்லாத்துக்கும் ஒரு மூட் வரணும். எனக்கு கற்பனை பண்ணுறதுக்கும் இவ்வளவு மூட் வரவேண்டியிருக்கு. :wub:

ஏன் தும்ஸ்... என்ர நிலைமை அறியாமல்.... பாவம்பா நான்! :unsure::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.