Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெடுந்தீவு முகிலன் அண்ணாவின் ஒரு கவிதை.

Featured Replies

போருக்கு பின்

எனது கிராமத்துக்கு

ஒரு முறை செல்ல முடிந்தது

உடைந்த சட்டி பானைகளும்.....

விளக்குமாறு தும்புத்தடிகளும்...

அகப்பை காம்புகளுமே - அம்மாவினது

அடையாளமாக மிஞ்சியிருந்தது.

அப்பாவின் இருப்பு

சரிந்து விழுந்து கிடந்த கோர்க்காலியிலும்...

பழைய முடிச்சு பொட்டாளியிலும்....

புலப்படுத்தப்பட்டது.

வீட்டின் பின்பகுதியில் - கிழிந்து

புதைந்து கிடக்கிறது

எனது பழைய காற்ச்சட்டை

ஓரிரு நாட்களேனும்

தம்பி அதை பயன்படுத்தியிருக்கலாம்.

உரலும் அம்மியும்

முற்றத்தில் சிதறிக்கிடந்தது.

ஊரார்கள் தூக்க முடியாமல்

விட்டு விட்டார்கள் போல......

தங்கச்சியினது - எந்த

அடையாளங்களும் அங்கே

காணப்படவில்லை...

எதிரிகளால் அவள்

கொலை செய்யப்பட்டிருக்கலாம்.

துரோகிகளால்

கைது செய்யப்பட்டிருக்கலாம்.

எதிர்த்து போராடி

யுத்தத்தின் களத்திலே - தேசத்துக்காய்

உயிரை விட்டிருக்கலாம்.

ஒரு வேளை எங்கேயாவது

உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கலாம்

இதுவரை அவள் பற்றியதாய்

எதுவுமே இல்லை.....

உறவுக்காரர்கள் என்னை

தூரத்தில் பார்த்ததுமே

ஓடோடி வந்து...

இது உனது

குழந்தையா...? மனைவியா..?...என்று

ஒவ்வொருவரையும் கட்டித்தழுவி

முத்தம் கொடுத்து

உள்ளே அழைத்தார்கள்.

அப்போது எம்மோடு

கூட வந்த ஆட்டோக்காரனுக்கும்

ஒரு முத்தம் வழங்கப்பட்டது.

- நெடுந்தீவு - முகிலன் -

Note: facebook இல் தலைப்பில்லாமல் இக்கவிதையை போட்டிருக்கிறார். நானாக தலைப்பு வைக்க முடியாது. அதனால் தான் "நெடுந்தீவு முகிலன் அண்ணாவின் ஒரு கவிதை" என்று போட்டிருக்கிறேன். :)

  • கருத்துக்கள உறவுகள்

கவிதையிலேயே காட்சிவிரிகின்றது.. பெருந்துன்பங்களுக்கு ஆளாகியிருந்தும் உறவினர்களின் அன்பு அப்படியே இருக்கின்றது.

  • தொடங்கியவர்

கவிதையிலேயே காட்சிவிரிகின்றது.. பெருந்துன்பங்களுக்கு ஆளாகியிருந்தும் உறவினர்களின் அன்பு அப்படியே இருக்கின்றது.

ஆம் அண்ணா, நன்றி உங்கள் வருகைக்கும் கருத்திற்கும். :)

Edited by காதல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதை உண்மையின் சான்று

இணைப்பிற்குநன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

ஊருக்கு போய் வந்துள்ளார்

நானும் ஊருக்குப்போனால் கவிதை வராவிட்டாலும் அழுகை வரும்.

நன்றி இணைப்புக்கு.

  • தொடங்கியவர்

லியோ அண்ணா, விசுகு அண்ணாவின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி... :)

  • கருத்துக்கள உறவுகள்

போருக்குப்பின்னான பொழுதொன்றில் கனத்த துயர் படிந்த நிகழ்வை எழுதிச்செல்கிறது கவிதை... யாருமே ஆறுதல் சொல்ல முடியாத பொழுதொன்றில் நீண்ட பிரிவுகளால் இழப்பின் வகைகளை அளவீடு செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது கவி எழுதிய மனம். கூடுவிட்டு மரம் விட்டு தூரப்பறந்த குருவியின் வரவில் மகிழ்ச்சி கொண்ட மரத்தின் நெகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் ஆட்டோக்காரனுக்குக் கிடைத்த முத்தம் பறைசாற்றுகிறது. கவிதைகளைப்பலரும் எழுதலாம் சிறந்த கவிஞனை சில கவிதைகள்தான் எழுதும். அந்தவகையான ஒரு படைப்பு. இது உணர்விலக்கியம் பாராட்டு என்று பதிந்தாலும் கொச்சைப்படுத்திவிடுமோ என்று பயமாக இருக்கிறது..

இணைப்பிற்கு நன்றி காதல்

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கையும் இயல்பான வாழ்க்கையும் இல்லாதபோது

மனம் வெறுமையாகிப்போகின்றது.

பதினெட்டு வருடங்களின் பின்னர் முதன்முதலாக

நான் ஊருக்க்ச் சென்றபோது சமாதானம் இருந்தது மக்களிடம்???.

ஆனால் அவர்களின் மனதில் அமைதியும் சாந்தியும்

என்றால் என்ன விலை என்ற கேள்வியும் இருந்தது.

இணைப்பிற்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைகளை ஆத்மார்த்தமாக எழுதாவிட்டால் அவை வெறும் வார்த்தைக்குவியல்களாக இருக்கும்....நெடுந்தீவு முகிலன் அதிகமாக கவிதைகளை எழுதுபவர்..அவற்றில் கவனிப்பை,ஈர்ப்பை ஏற்படுத்துபவை இப்படியான உணர்வு ரீதியாக எழுதப்பட்டவைதான்...எந்தவிதமான கருவாகவும் இருக்கலாம் அவற்றை உணர்வுரீதியாக தொடாவிட்டால் அவை வெறும் அலட்டல்களாகப் போய்விடும்...நல்ல ஒரு கவிதை...இணைப்பிற்க்கு நன்றி காதல்...

  • தொடங்கியவர்

சகாறா அக்கா, வாத்தியார் அண்ணா, சுபேஸ் அண்ணாவின் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றிகள்... :)

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதோர் கவிதையை இணைத்தமைக்கு நன்றிகள்!

நெடுந்தீவு முகிலன், பல கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார்!

இழப்பின் வலியை மிகவும் அழகாகக் கவிதையில் வடித்திருக்கின்றார்!

உரலும் அம்மியும்

முற்றத்தில் சிதறிக்கிடந்தது.

ஊரார்கள் தூக்க முடியாமல்

விட்டு விட்டார்கள் போல......

  • தொடங்கியவர்

நன்றி புங்கையூரன் அண்ணா, உங்கள் வருகைக்கும் கருத்திற்கும். :)

உடைந்த சட்டி பானைகளும்.....

விளக்குமாறு தும்புத்தடிகளும்...

அகப்பை காம்புகளுமே - அம்மாவினது

அடையாளமாக மிஞ்சியிருந்தது.

அப்பாவின் இருப்பு

சரிந்து விழுந்து கிடந்த கோர்க்காலியிலும்...

பழைய முடிச்சு பொட்டாளியிலும்....

புலப்படுத்தப்பட்டது.

மனசுக்குள் இதன் காட்சிகள் விரியும் போது சொல்ல முடியாத வேதனையும் கனமும் மனசுக்குள் ஏறுகின்றது.

இணைப்புக்கு நன்றி

  • தொடங்கியவர்

மனசுக்குள் இதன் காட்சிகள் விரியும் போது சொல்ல முடியாத வேதனையும் கனமும் மனசுக்குள் ஏறுகின்றது.

ஆம். :( நன்றி நிழலி அண்ணா உங்கள் வருகைக்கும் கருத்திற்கும். :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • தொடங்கியவர்

லியோ அண்ணாவின் வருகைக்கும் பாடலுக்கும் நன்றி..

  • கருத்துக்கள உறவுகள்

உடைந்த சட்டி பானைகளும்.....

விளக்குமாறு தும்புத்தடிகளும்...

அகப்பை காம்புகளுமே - அம்மாவினது

அடையாளமாக மிஞ்சியிருந்தது.

அப்பாவின் இருப்பு

சரிந்து விழுந்து கிடந்த கோர்க்காலியிலும்...

பழைய முடிச்சு பொட்டாளியிலும்....

நெடுந்தீவு முகிலனின் கவிதைத் தொகுதி ஒன்றுகு முன்னுரை எழுதியபோது அவர் தன்னுடைய கவிதையின் உருவத்தை மொழியை மேலும் தேடிக் கண்டுபிடிக்கவேணும் என்பதை முன்னுரையிலோ அல்லது அவருடனான இணைய அளவளாவலிலோ குறிப்பிட்டேன். ஆனால் இங்கு காதல் வெளியிட்டிருக்கும் நெடுந்தீவு முகிலனின் கவிதையை வாசிக்கும்போது அவர் தனது கவிதையின் உருவம் மொழி வெளிப்படுத்தும் பாணி என்பவற்றைக் கண்டுபிடித்துவிட்டார் என்பது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது.

முகிலனின் சித்திரங்களாக பெருகும் மொழி அவர் இனி முன்னணிக் கவிஞராகப் பங்களிப்புச் செய்வார் என்பதை உணர்த்துகிறது.

இந்த கவிதைக்காக முகிலனுக்கும் தந்தமைக்காக காதலுக்கும் நன்றி

எழுக கவிஞன்

- வ.ஐ.ச.ஜெயபாலன்

Edited by poet

  • தொடங்கியவர்

நன்றி ஜெயபாலன் அண்ணா (ஐயா) உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்.... :)

ஒரு பெரும் கவிஞரே வந்து அவர் கவிதையை பாராட்டியிருப்பது அவருக்கு கிடைத்த வெற்றி... :)

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

மனதை தொட்ட கவிதை. வார்த்தைகளை... தெரிவு செய்து பதிந்துள்ளார்.

இணைப்புக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி காதல்,

உங்கள் உயர் இரசனையையும் தமிழ் ஆர்வத்தையும் அக்கறையையும்தான் பாராட்டவேண்டும். அதனால்தான் ஒரு நல்ல கவிதை வாசிக்கவும் கருத்தெழுதவும் வாய்த்தது.காதலுக்கு என் முதல் நன்றி

முகிலன் கஸ்டத்தின்மத்தியில் கலைப் பணி செய்கிற கவிஞன்.

400க்கும் அதிகமானவர்கள் கவிதையை வாசிதிருக்கிறோம். நல்ல கவிதை சிறுகதையைய வாசிக்கும்போது ஒரு நூறுபேராவது தாம் அனுபவித்த எழுத்தாளரின் உழைப்பை மதிக்க முன்வரவேணும். நாம் அவர்கள் உழைப்புக்கு கடனாளியாகமல் ஒரு டாலர் பணமாவது அனுப்ப ஜோசிக்கவேண்டும். இது நம் தமிழுக்கும் தமிழர் கலாச்சார வாழ்வுக்கும் வளம் சேர்க்கும்

Edited by poet

  • 6 months later...

  • சம் ரைம் மம்மி பிடிக்கும்.

    சம் ரைம் டாடி பிடிக்கும்.

    சம் ரைம் சிஸ்ரா் பிடிக்கும் .

    சம் ரைம் ப்றதா் பிடிக்கும்.

    எனிற் ரைம் உன்னை பிடிக்கும் .

அதே முகிலன் தான் இந்தக் கவிதையையும் எழுதியுள்ளார்.

http://www.facebook.com/photo.php?fbid=446557035409123&set=a.104416362956527.6526.100001644914484&type=1&theater

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.