Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலன்(ம்) பெயர்ந்தவனின் புலம்பல் -(பாகம் 1) - கண்டறியாத சுத்தத் தமிழும் எங்கடை பிள்ளைகளும்......

Featured Replies

கண்டறியாத தமிழும் எங்கடை பிள்ளைகளும்......

"நான் சேலாப்பழமும் குழிப்பேரிப் பழமும் வாங்கி வந்து உண்போம் என நினைத்து அங்காடிக்குச் சென்றேன். ஆனால் அதன் விலை மிக அதிகமாக இருந்ததனால் இந்தக் கோடை காலத்திற்கேற்ற குமட்டிப் பழம் வாங்க நினைத்தேன். அதன் தரம் மிகக் குறைவாக இருந்தததனால் குமளிப்பழம் வாங்கி வந்து உண்டேன்."

என்ன எனக்குப் பிடரியைப் பொத்தி வெளுக்க வேணும் போலை இருக்குதோ?

இது நான் எழுதினதில்லை பாருங்கோ. இங்கை இருக்கிற பழங்களின்ரை சுத்தத் தமிழ் பேர்களாம். தமிழ் பள்ளிக்கூடமொண்டிலை படிக்கிற அஞ்சாம் வகுப்புப் பிள்ளைக்கு ரீச்சர் சொல்லிக் குடுத்தது. இந்தச் சொல்லுகளை எல்லாம் பாடமாக்கிக் கொண்டு வரட்டாம். அடுத்த கிழமை சோதினை வைப்பாவாம் எண்டு சொல்லி அந்தச் சின்னன் சிணுங்கிச் சிணுங்கிப் பாடமாக்கிக் கொண்டிருந்தது

இங்கை புலம் பெயர்ந்த நாடுகளிலை தான் பறவையா விலங்கா எண்டு தெரியாமல் தடுமாறுற வௌவாலைப் போல தாங்கள் தமிழ் பிள்ளைகளா அல்லது கனேடியப் பிள்ளைகளா ( இங்கிலாந்து ஃ பிரான்ஸ்ஃ ஜெர்மனிஇ அவுஸ்திரேலியா எண்டு எது பொருத்தமோ அதைப் போட்டு வாசியுங்கோ) எண்டு தெரியாமல் முளிச்சுக் கொண்டிருக்கிற எங்கடை பிள்ளைகளுக்கு உந்தக் கண்டறியாத சுத்தத் தமிழைச் சொல்லிக் குடுத்தால் அதுகள் தமிழ்ப் பள்ளிக்கூடம் எண்டதும் பின்னங்கால் பிடரியிலை அடிபட ஓடத் தானே செய்யுங்கள்.

நாங்கள் என்ன தான் தலைகீழா நிண்டாலும் எங்கடை பிள்ளைகள் தமிழை இரண்டாம் மொழியாத் தான் படிக்கப் போகுதுகள்.

இந்த மாதிரியான ஒரு நிலமையிலை அதுகள் வீட்டிலையும் வெளியிடங்களிலையும் தமிழைக் கதைக்கப் பண்ணிறது தான் பெரிய தமிழ் பாடமா இருக்க முடியும். அதுக்கேற்ற மாதிரி சம்பாசணைகள் உரையாடல்கள் எண்டு வகுப்பை நடத்தாமல் சந்தை எண்டு சொல்லாதை அங்காடி எண்டு சொல்லு மவுஸ் எண்டு சொல்லாதை சுட்டி எண்டு சொல்லு சிடி எண்டு சொல்லாதை இறுவட்டு எண்டு சொல்லு எண்டு பெரியவைக்கே தெரியாத சொல்லுகளைச் சொல்லிக் குடுத்தால் என்ன செய்யிறது.

அது மட்டுமில்லாமல் வருசத்துக்கொருக்கால் தமிழ் தின விழா எடுக்கிறம் எண்டு போட்டு திருக்குறளைப் பாடமாக்கு திருவருட்பயனைப் பாடமாக்கு எண்டு இதுகளைப் போட்டு வதைக்க வீட்டுக்கு வந்தால் போட்டியிலை நீ தான் முதலாவதா வரவேணும் கெதியாப் போய் பாடமாக்கு எண்டு பெத்தவை வெருட்ட பிள்ளைகளுக்கு தமிழ் எண்டாலே ஒரு வெறுப்பு வரும் தானே?

என்ரை சினேகிதன்ரை மகனொருத்தன் திருக்குறளை

kadka kasadara kadka kaddapin

nikka athukku thaha

எண்டு எழுதி வைச்சு போட்டிக்குப் பாடமாக்கிறான்.

உப்பிடி எழுதி வைச்சுப் பாடமாக்கி போட்டியிலை படிச்சால் தமிழ் தின விழா எப்படிக் களை கட்டும் எண்டு நான் சொல்லத் தேவையில்லைத் தானே?

நான் இதிலை பிள்ளைகளைப் பிழை சொல்ல இல்லை. பிள்ளைகளுக்கெண்டு பாடத்திட்டங்களைத் தயாரிக்கிற ஆக்கள் பிள்ளைகள் என்ன ச+ழலிலை வளருதுகள் அதுகளின்ரை தமிழறிவு எவ்வளவு எண்டதை மனசிலை வைச்சுக் கொண்டு பாடத்திட்டத்தைத் தயாரிச்சால் பெரிய புண்ணிமாப் போகும்.

எங்கடை பிள்ளைகள் தமிழிலை தடுமாறாமல் கதைக்க வேணும் அதுகளுக்கு தமிழ் கஎண்டால் ஒரு ஆசை வர வேணும். இது தானே இப்ப முக்கியம். அதுக்கேற்ற மாதிரி சின்னச் சின்ன நாடகங்களை சிள்ளச் சின்ன விளையாட்டுக்களைத் தமிழிலை தயாரிச்சு அதுகளைக் கொண்டு மேடையேத்தலாம் தானே!

புலத்திலை இன்னும் ஒண்டு ரெண்டு தலைமுறைக்காவது தமிழ் சத்தம் கேக்க வேணுமெண்டால் இதைத் தான் முதலிலை செய்ய வேணும்.

ஆனால் இதிலை இன்னொரு பிரச்சினையும் இருக்குது.

பெத்தவையும் பிள்ளைகள் தமிழ் படிச்சு தமிழிலை கதைக்க வேணும் எண்ட எண்ணத்தோடை பிள்ளைகளை தமிழ் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்ப வேணும்.

இப்பிடித்தான் எனக்குத் தெரிஞ்ச ஒராள் தான் இரவு வேலை செய்து போட்டு காலமை போய் அப்படியே பிள்ளைகளைத் தமிழ் பள்ளிக் கூடத்துக்கு ஏத்தி இறக்கிறனான் எண்டு சொன்னார்.

நானும் பெருமைப்பட்டுக் கொண்டே சொன்னன்

"அண்ணை என்ன இருந்தாலும் உங்களைப் பாராட்ட வேணும். நாடு விட்டு நாடு வந்தும் பிள்ளைகள் தமிழ் படிக்க வேணும் தமிழிலை கதைக்க வேணும் எண்ட ஆர்வத்திலை இப்படிக் கஸ்ரப்படுறியள்' எண்டு சொன்னன்.

அதுக்கு அவர் சொன்னார்.

அதுகள் தமிழ் கதைக்குதுகளோ இல்லையோ எனக்கு அது பிரச்சினை இல்லை. இப்ப தமிழையும் கிறடிட் கோசாச் சேத்திருக்கினம். அதாலை தான் தமிழ் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பிறன் எண்டார்.

எனக்குச் சப்பெண்டு போட்டுது.

இப்படிப் பிள்ளைகள் தமிழ் கதைக்க வேணும் எண்ட எண்ணம் இல்லாமல் தமிழையும் ஒரு பாடமாப் படிப்பிச்சால் பிள்ளைகளும் தமிழை ஒரு பாடமாத் தானே படிக்குங்கள்.

இல்லாட்டில் அதுகள் தமிழைப் பேயன் பிலாக்காயைப் பாத்த மாதிரித் தானே பாக்குங்கள்.

நீங்கள் என்ன சொல்லுறியள்?

Edited by Manivasahan

  • Replies 55
  • Views 5.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

முழுமையாக வாசிக்கவில்லை.

ஆனால் இப்படி ஒன்றை நானும் எழுதணும் என்ற சிந்தனை சில நாட்களாக என் மனதிலும் இருந்தது.

நன்றி

தொடருங்கள்

நேரம் கிடைக்கும்போது நிச்சயம் நான் எழுதவந்ததையும் சேர்த்துவிடுகின்றேன்.

  • தொடங்கியவர்

சுடச் சுடப் பதில் எழுதின விசுகு அண்ணாவிற்கு நன்றி!

கட்டாயம் பதில் எழுதுங்கோ!

இந்த விசயங்களிலை நீங்கள் என்ரை கருத்துக்கு முரண்படலாம். அதுகளையும் கட்டாயம் எழுதுங்கோ.

கலகம் பிறந்தால் தானே ஒரு தெளிவு பிறக்கும்....

  • கருத்துக்கள உறவுகள்

"நான் சேலாப்பழமும் குழிப்பேரிப் பழமும் வாங்கி வந்து உண்போம் என நினைத்து அங்காடிக்குச் சென்றேன். ஆனால் அதன் விலை மிக அதிகமாக இருந்ததனால் இந்தக் கோடை காலத்திற்கேற்ற குமட்டிப் பழம் வாங்க நினைத்தேன். அதன் தரம் மிகக் குறைவாக இருந்தததனால் குமளிப்பழம் வாங்கி வந்து உண்டேன்."

[size=4]தங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி . நானும் கவனித்து இருக்கிறேன்.[/size][size=1]

[size=4] மிகவும்கடினமான பாடத்திட்டம். உண்மையாக இவை என்ன பழங்கள் ...........கேள்விபட்டதில்லை ....[/size][/size]

  • தொடங்கியவர்

"நான் சேலாப்பழமும் குழிப்பேரிப் பழமும் வாங்கி வந்து உண்போம் என நினைத்து அங்காடிக்குச் சென்றேன். ஆனால் அதன் விலை மிக அதிகமாக இருந்ததனால் இந்தக் கோடை காலத்திற்கேற்ற குமட்டிப் பழம் வாங்க நினைத்தேன். அதன் தரம் மிகக் குறைவாக இருந்தததனால் குமளிப்பழம் வாங்கி வந்து உண்டேன்."

[size=4]தங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி . நானும் கவனித்து இருக்கிறேன்.[/size][size=1]

[size=4] மிகவும்கடினமான பாடத்திட்டம். உண்மையாக இவை என்ன பழங்கள் ...........கேள்விபட்டதில்லை ....[/size][/size]

கருத்துக்கு நன்றி அக்கா!சேலாப்பழம் - Cherryகுழிப்பேரிப் பழம் - Peachகுமட்டிப் பழம் - Watermelonகுமளிப்பழம் - Apple

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]மிக்க நன்றி .............மணிவாசகன். [/size]

[size=4]நாமும் பிள்ளைகளை தமிழ் பள்ளிக்கூடத்திற்கு கனடாவில் விடுகின்றோம். ஏன்?[/size]

[size=4]பலரும் பலவேறு காரணங்களுக்காக விடுகின்றனர். என்னை பொறுத்தவரையில்...[/size]

[size=4]முதலாவது: இந்த புலம்பெயர் சூழலில் பிள்ளைகள் சக தமிழ் உறவுகளை காணவும் பழகவும் சந்தர்ப்பத்தை உருவாக்குதல்.[/size]

[size=4]இரண்டாவது: எமது வரலாற்றை, கலாச்சாரத்தை, பண்பாட்டை, மொழியை அறிந்து கொள்ளல்.[/size]

[size=4]மூன்றாவது: தமிழ் பாடசாலை ஊடாக பிற திறமைகளை வளர்த்தல்: மேடைப்பேச்சு(தன்னம்பிக்கை), ஓவியம், ஆங்கில-பிரெஞ்சு-கணித.. பரீட்சைகள், நாட்டியம், சங்கீதம், கராட்டி, மிருதங்கம் ....[/size]

[size=4]நாலாவது: நாளடைவில் தனது நிறம், பெயர், மொழி மற்றும் கலாச்சாரத்தை இட்டு பெருமையும் ஏன் தங்களது மூதாதையர் அகதிகளாக இங்கே வந்தார்கள் எனவும் அறியு[/size][size=4]ம் வாய்ப்பை கொடுத்தல்.[/size]

என்னை பொறுத்தவரையில் அது தவறல்ல.சிறுவயதில் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை கற்பது அவர்களுடைய மூளை விருத்திக்கு நிச்சயம் உதவும். அப்போ cherry என்பதை தமிழிலும் செர்ரி என்று கற்பதில் எந்தவகை உபயோகமும் இல்லை. அது குழந்தைக்கு இயலும், நமக்கு இப்போது முடியாது.நீங்கள் முகம் சுழித்தபடி கற்பிக்கும்போது குழந்தையும் வேண்டாவெறுப்பாக பார்க்கும்.

http://www.nytimes.com/2012/03/18/opinion/sunday/the-benefits-of-bilingualism.html?_r=1

18GRAY-articleLarge-v2.jpg

இதில் apple -la manzana இரண்டையும் கவனியுங்கள். எந்தவிததொடர்பும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாப் பாடங்களிலும் கஷ்டமான பகுதியும் இருக்கும். அதற்காக அவற்றை நீக்கி விட்டுப் படித்தால் வளர்ச்சி இருக்காது. என்னைப் பொறுத்தவரை ஒரு மொழியை சுத்தமாகக் கற்பதில் ஒரு தவறும் இல்லை. கிஸ்ஸன் சொன்னது போல குழந்தைகளுக்கு அது இயலும். பெரியவர்கள் இரட்டிப்பு முயற்சி செய்தால் அவர்களுக்கும் இயலும். இலகுவாக்கலாம் என்பதற்காக ஆங்கிலம் கலந்து கற்பித்தால் நீர்கொழும்புத் தமிழர் தமிழ் பேசுவது போலவொ, அல்லது கரீபியன் தீவினர் ஆங்கிலமும் இல்லாமல் பிரெஞ்சும் இல்லாமல் ஒரு கலப்பு மொழி பேசுவது போலவோ ஆகி விடக் கூடும்!

  • கருத்துக்கள உறவுகள்

கிஸான்,ஜஸ்டினின் கருத்துத் தான் என்னோடதும்...செரிப் பழத்தை "செரி" என தமிழில் சொல்லிக் கொடுப்பதை விட தமிழில் "சேலாப்பழம்" என சொல்லிக் கொடுப்பதில் தப்பில்லை...சின்ன வயதில் சொல்லிக் கொடுத்தால் தான் அவர்களது மண்டைக்குள் புகும்

பி;கு;இந்தப் பழங்களுக்கு எல்லாம் இப்படியொரு தமிழ் பெயர் இருக்குது என இன்று தான் தெரியும்...வெட்கக்கேடு :lol::D:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

மணி வாசகன் தமிழ் சொல்லி குடுக்கிற வாத்தியாரிட்டை போய் '' பழக்க வழக்கம் தெரியாத வெகுளிப் பெடியன் அழுகிய நொழுகிய வாழைப்பழத்தை வாயில் போட்டு விழுங்கினான் எண்டடை தொடந்து இடைவிடாமல் பத்துத்தரமாவது சொல்ல சொல்லுங்கள் அதுக்கு பிறகு தமிழ் படிப்பிக்க மாட்டார் எண்டு நினைக்கிறன் :lol:

  • தொடங்கியவர்

கருத்துக்களுக்கு நன்றி உறவுகளே!

ஆடிற மாட்டை ஆடிக் கறக்கவேணும் பாடிற மாட்டை பாடிக் கறக்கவேணும் . இதுதான் சின்னனுகளுக்கு பாலபாடம் . அதுகளிட்டைப் போய் வித்துவங்களைக் காட்டிறவையை என்னசொல்ல ? பிள்ளையழுக்கு நாவாலியூர் சோமசுந்தப்புலவற்ரை சிறுவர் பாடல்களோ , கவிமணி தேசியவினாயகம்பிள்ளையின் இலகு தமிழ் பாப்பா பாடல்களோ தெரியவில்லை . சிலதை எழுதினால் என்னைக் குளப்பங்காசி எண்டு சொல்லுவினம் .குருடன் பெண்டிலைப் பாத்த கதையா தமிழைப் பாத்து , தாங்களும் குழம்பி சின்னனுகளையும் குழப்பீனம் இங்கத்தயான் வித்துவானுகள் .

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் சொல்லுவான் எங்கடை கோ வின் கருத்துத்தான் என்னதும் என்று...நாலு பேருக்கு நல்ல தமிழ் படிப்பிக்க வெளிக்கிட்டு 40 பேரை வகுப்பை விட்டு துரத்துகிற வேலையாய் முடியும். அன்ன நடை நடக்க போய் தன்ரை நடையும் கேட்டதாய் போகும்" சேரிக்கு சேரி என்றுதான் சொல்லவேண்டுமே தவிர, பானை வெதுப்பி அக்கின கோமாளிகூது ஆடக்கூடாது. எங்களை விட எத்தனையோ வருடம் பிந்தி வந்த கேரளா மொழி எல்லா ஒலிகைளையும் கொண்டு வளமாக இருக்க நாங்கள்- இப்பவும் பல உச்சரிப்புகளில் தவறி விடுகிறோம்.. மொழி வளர வேண்டும் என்றால் புதிய சொற்கள் வரவேண்டும் -

[size=5]நாங்கள் தமிழீழத்தில் இருந்து இப்படித் தூய சொற்களைப் பாவித்தா எழுத, பேச, வாசிக்கப் பழகினோம்? எமக்கே உந்தச் தமிழ்ச் சொற்கள் தெரியவில்லை. அதுவும் இரண்டாம், மூன்றாம் மொழியாகத் தமிழைப் படிக்கும் பிள்ளைகளுக்குப் படிப்பிதால்?[/size] [size=5]"வைத்தால் கொண்டை தட்டினால் மொட்டை" என்ற மாதிரித் தான் உவையளின் படிபிப்பு[/size][size=5]! தமிழ் படிப்பிக்கப் போய் தமிழை அழிக்கிறது தான்[/size],,,,,,,,,,,,,,,,,,,,

எங்கை பு பெ பு 2 .............. ?

  • கருத்துக்கள உறவுகள்

பூனா பேன பூனா என்று தலைப்பை மாத்தியிருக்கின்றீர்கள்.

வாசிப்பவர்கள் தவறாக விளங்கிக் கொள்ளலாம்.

தலைப்பை விளக்கமாகப் போட்டால் நன்றாக இருக்கும்

மணிவாசகன்.

மற்றும் படி இங்கே பலர் வித்துவான் பட்டத்திற்காகப் படிப்பிக்கின்றார்கள்.

பிள்ளைகள் பாவங்கள். தமிழே ஒழுங்காக வாயில் வராது.

முதலில் தமிழப் பேசக் கற்றுக்கொள்ள வேண்டும்.

அதற்குப் பின்னர் பிள்ளைகள் தாங்களாகவே

அடுத்த படிப்பிற்குத் தயாராவார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் பிள்ளைகள் தமிழைப்பேசவும் எழுதவும் தெரியக் கூடிய மாதிரி பாடங்களை அமைக்க வேண்டும்.ஆசிரியர்களே பல சொற்களுக்கு விளக்கம் தெரியாத நிலையில்தான் பாடம் படிப்பிக்க வேண்டிய நிலையில் உள்ளார்கள்.அதற்காக ஆங்கிலத்தைக் கலந்து பாடங்களை அமைக்க வேண்டும் என்று சொல்லவில்லை புழக்கத்தில் இருக்கும் சொற்களை வைத்து பாடங்களை அமைக்க வேண்டும்.தமிழ்க் கல்விக் கழகத்தினால் வெளியிடப்படும் பாடநூல்கள் தரமானவையாக இருந்தாலும் அதிலுள்ள கடினமான புலம்பெயர் பிள்ளைகளுக்கு தேவையற்ற பாடங்களைக் கட்டாயமாக நீக்க வேண்டும்.இதுபற்றி சம்பந்தப் பட்டவர்களிடம் பலமுறை தெரியப்படுத்தியும் மாற்றாமல் பிடிவாதமாக இருக்கிறார்கள்.இதனால் பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு சான்றிதழ் கிடைத்தால் போதுமென்று OCR,CAMBRIDGE போன்ற தரமற்ற பரீட்சைகளுக்கு தோற்றுகிறார்கள்.இத்தகைய பரீட்சைகளை நடத்துபவர்களிடம் ஒழுங்கான பாடத்திட்டமும் கிடையாது.காசு கறப்பதே அவர்களின் நோக்கம்.தமிழ்க் கல்விக்கழகத்தின் வழி படிப்பவர்கள் மிக எளிதாகச் இத்தகைய பரீட்சைகளில் சித்தியடையலாம்.ஆனால் தமிழ் கல்விக் கழகத்தின் பாடப் புத்தகங்களின் சில அலகுகள் பிள்ளைகள் தமிழை வெறுக்கத்தக்க விதத்திலேயே அமைக்கப்பட்டிருக்கின்றன.புலம்பெயர் சூழுலில் வளரும் பிள்ளைகளுக்கு தாயகத்திலுள்ள உள்ள பிள்ளைகள் படிக்கும் தமிழை விட கடினமான தமிழை படிக்க வேண்டிய நிலையில் இருந்தால் தமிழ் வளராது.இதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.இன்னும் நிறைய எழுத வேண்டும் தற்போது நேரபம் இல்லை பிறிதொரு சந்தர்பத்தில் எழுதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

எனது மகளுக்குச் சமயம் படிப்பிக்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை ஒன்று!

இங்குள்ள ஒரு பாடசாலைக்கு, ஒரு சமய ஆசிரியை வந்து சேர்ந்தா!

மிகவும் மகிழ்ச்சியடைந்து, அவவிடம் சமயம் படிக்க விட்டேன்!

எனது மகளுக்கு அப்போது எட்டு வயதிருக்கும்!

முதலாவது பாடம்!

சிவபுராணம், ஆங்கிலத்தில் எழுதப் பட்டு, ஒரு வாரத்தினுள் பாடமாக்கி, ஆசிரியையிடம் ஒப்பிக்க வேண்டுமாம்!

இரண்டு நாளைக்கு, 'நமச்சிவாய வாழ்க' சொல்லிக் கொண்டு திரிந்தாள்!

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன்.... வரும்போது என்னிடம் கருத்துக் கேட்டாள்!

திரும்ப ஆசிரியையிடம் ஒப்புவிக்கும் போது, இடையில் தடுமாறியதில், ஆசிரியை மகளை, எல்லார் முன்னிலையிலும் பேசிப் போட்டா போல!

அன்றுடன் அவளின், சமய பாடமும் முடிவுக்கு வந்தது!

ஆனாலும், அந்த ஆசிரியை, பிட்டுக்கு மண் சுமந்த கதை, போல ஆரம்பித்திருந்தால், மகளுக்கும் சமயத்தில் ஒரு ஆர்வம் வந்திருக்கும் என எண்ணுகின்றேன்!

watermelon இக்கு தமிழ் உள்ளதே. எம் ஊரில் வத்தகைப்பழம் என்றும் தமிழ்நாட்டில் தர்ப்பூசனிப்பழம் என்றும் சொல்வார்கள்.

பிறகு ஏன் இந்த குமட்டிப்பழம் என்ற பெயர்? இதை சூட்டியது யார்?

[size=5]நாங்கள் தமிழீழத்தில் இருந்து இப்படித் தூய சொற்களைப் பாவித்தா எழுத, பேச, வாசிக்கப் பழகினோம்? எமக்கே உந்தச் தமிழ்ச் சொற்கள் தெரியவில்லை. அதுவும் இரண்டாம், மூன்றாம் மொழியாகத் தமிழைப் படிக்கும் பிள்ளைகளுக்குப் படிப்பிதால்?[/size] [size=5]"வைத்தால் கொண்டை தட்டினால் மொட்டை" என்ற மாதிரித் தான் உவையளின் படிபிப்பு[/size][size=5]! தமிழ் படிப்பிக்கப் போய் தமிழை அழிக்கிறது தான்[/size],,,,,,,,,,,,,,,,,,,,

[size=6]எவ அவ[/size]

போகிற போக்கில் எம் இளைய சமுதாயம் பேசுவது எமக்குப் புரியாமல் போகப்போகிறது!

நேற்று வானொலியில் பூச்சியத்தை சுழியம் என்று செய்தி வாசிப்பவர் கூறினார். ஏன் இந்த மாற்றம்?

அதுபோல், சடலம் என்ற சொல்லையும் பாவிக்கக் காணோம். உடலம் என்று சொல்கிறார்கள்.

சடம் என்ற சொல்லை பாவிக்காவிட்டால், பௌதீகவியலை எப்படி கற்பது?

மகிழூர்ந்தில் சந்தோஷமான விஷயம் தவிர செல்லக்கூடாதா? சாவு வீட்டுக்கு மகிழூர்ந்தில் எப்படி செல்வது?

வை திஸ் கொல வெறிடி என்று தான் கேட்கத் தோன்றுகிறது!

புலத்தில் உள்ள பெயர்கள், ஊர்கள், மற்றும் மரங்கள், பூக்கள், பழங்களுக்கு புதிய தமிழ் பெயர் சூட்டுவது வேண்டாத வேலை.

சாத்திரியின் மகள் கேட்ட கேள்விக்கு யாரவது பதில் கண்டுபிடித்தீர்களா?

(அவர் கேட்டது - sauce இக்கு தமிழ் என்ன?)

நாம் கண்டுபிடிக்காதவற்றுக்கு தமிழ் பெயர் சூட்ட முனைதல் வேண்டியதில்லை. வெள்ளைக்காரன் கறியை கறி என்றே கூறுகிறான். அது போல், பண்டிட் போன்ற சொற்களும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

பாஸ்டா, நூடில்ஸ் எல்லாவற்றுக்கும் தமிழ் சொற்கள் தேடினால் கஷ்டம் தான்!

கண்ணதாசன் கூட "லில்லி மலருக்கு கொண்டாட்டம், செர்ரி பழத்துக்கு கொண்டாட்டம்" என்று தான் எழுதினர்.

போகிற போக்கில் எம் இளைய சமுதாயம் பேசுவது எமக்குப் புரியாமல் போகப்போகிறது!

நேற்று வானொலியில் பூச்சியத்தை சுழியம் என்று செய்தி வாசிப்பவர் கூறினார். ஏன் இந்த மாற்றம்?

அதுபோல், சடலம் என்ற சொல்லையும் பாவிக்கக் காணோம். உடலம் என்று சொல்கிறார்கள்.

சடம் என்ற சொல்லை பாவிக்காவிட்டால், பௌதீகவியலை எப்படி கற்பது?

மகிழூர்ந்தில் சந்தோஷமான விஷயம் தவிர செல்லக்கூடாதா? சாவு வீட்டுக்கு மகிழூர்ந்தில் எப்படி செல்வது?

வை திஸ் கொல வெறிடி என்று தான் கேட்கத் தோன்றுகிறது!

புலத்தில் உள்ள பெயர்கள், ஊர்கள், மற்றும் மரங்கள், பூக்கள், பழங்களுக்கு புதிய தமிழ் பெயர் சூட்டுவது வேண்டாத வேலை.

சாத்திரியின் மகள் கேட்ட கேள்விக்கு யாரவது பதில் கண்டுபிடித்தீர்களா?

(அவர் கேட்டது - sauce இக்கு தமிழ் என்ன?)

நாம் கண்டுபிடிக்காதவற்றுக்கு தமிழ் பெயர் சூட்ட முனைதல் வேண்டியதில்லை. வெள்ளைக்காரன் கறியை கறி என்றே கூறுகிறான். அது போல், பண்டிட் போன்ற சொற்களும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

பாஸ்டா, நூடில்ஸ் எல்லாவற்றுக்கும் தமிழ் சொற்கள் தேடினால் கஷ்டம் தான்!

கண்ணதாசன் கூட "லில்லி மலருக்கு கொண்டாட்டம், செர்ரி பழத்துக்கு கொண்டாட்டம்" என்று தான் எழுதினர்.

TOMATO SAUCE = தக்காளிக் குழம்பி

  • தொடங்கியவர்

TOMATO SAUCE = தக்காளிக் குழம்பி

எது தமிழ் எண்டு தெரியாமல் குழம்பிப் போய் இருக்கிற எங்களுக்கு குழம்பி எண்டு சொல்லி எங்களை இன்னும் குழம்பப் பண்ணின் உங்களின்ரை தலையிலை குழம்பை ஊத்த வேணும் எண்டு குழம்பாமல் தீர்ப்பளிக்கிறேன்.

[size=6]எவ அவ[/size]

[size=6]??...........[/size]

Edited by அலைமகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.