Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குருமூர்த்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Untitled.jpg

[size=4]நீண்ட காலங்கள் கடந்து போய்விட்டாலும், குருமூர்த்தியின், முகம் மட்டும் இன்னும் மனத்திரையை விட்டு அகன்ற பாடாயில்லை. இவ்வளவுக்கும் குருமூர்த்தி, ஒரு பிரபலமான மனிதனோ, அல்லது எம்மால் ஏற்றுக்கொள்ளப் பட்ட தேச வழமைகளின் படி, ஒரு சாதாரண மனிதனோ கூட அல்ல.[/size]

[size=4]சுத்தமான, கலப்படமில்லாத தமிழில் சொன்னால், ஒரு விசரன்.[/size]

[size=4]நடராசா அண்ணையின்ர, கன்ரீனுக்கு முன்னால, இருந்த மரத்துக்குக் கீழ, இருந்த படி, ஒரு இருபது பக்க, அப்பியாசக் கொப்பியில், ஏதாவது எழுதியபடி இருப்பான். ஆனால், வாய் திறந்து ஒரு வார்த்தை பேசியதை, நாங்கள் ஒருவரும் கேட்டது, கிடையாது. ஒரு வேளை, ஊமையாக இருக்கலாம் போலும் என நாங்கள் நினைத்து, அவனை, நாங்கள் கரைச்சல் படுத்துவதும் கிடையாது![/size]

[size=4]அன்றைக்குச் சனிக்கிழமை![/size]

[size=4]விடியக் காலமையே, கே.எஸ்.எஸ், அவர் தான் எங்கட போர்டிங் மாஸ்டர், நடந்து வந்தது, கொஞ்சம் அதிர்ச்சியாகத் தான் எங்களுக்கு இருந்தது![/size]

[size=4]ஏதாவது, பெரிய விசேசம் எண்டால் தான், அவர் அப்படி வருவதுண்டு. கையில். பிரம்பொண்டும், மறைந்தபடி இருந்தது![/size]

[size=4]எங்கடா, அந்த மூதேவி?[/size]

[size=4]ஆரு, சேர்?[/size]

[size=4]அவன் தான்ரா, அந்தக் கழுவாஞ்சிக் குடியான்![/size]

[size=4]விடுதியின் மேல் தட்டுக்கு, வேர்க்க, விறுவிறுக்க ஓடிப்போனால், ;கிங்க்ஸ்ரன்' என எம்மால், செல்லமாக விழிக்கப்படும், கழுவாஞ்சிக் குடியான், மூன்று தடித்த. காச்சட்டைகளைப் போட்டபடி, ஏற்கெனவே ஆயத்தமாக நின்றார்![/size]

[size=4]என்ன நடந்தது, கிங்க்ஸ்ரன்?[/size]

[size=4]மச்சான், ராத்திரி ரீகலுக்குப் படம் பார்க்கப் போகேக்கை, இருட்டுக்குள்ள போய், ஒரு கதிரையில இருந்திட்டன். பக்கத்தில, ஒரு கிழடொண்டு இருந்து படம் பாத்தது! படத்தில, வந்த பகிடிக்குச் சிரிக்காம இருந்துது, மச்சான்![/size]

[size=4]நான், ஒரு பகிடி வாற நேரம், அதுகின்ர துடையில தட்டி, [/size]

[size=4]அப்பு! இது பகிடி, எண்டு சொல்லிப் போட்டன்![/size]

[size=4]பிறகு, இன்டர்வலுக்கு வெளிச்சம் வரேக்க பாத்தா, அது நம்மட சுப்பரடா![/size]

[size=4]அதற்கு மேல், எமக்கு மேலதிக விளக்கம் வேண்டியிருக்கவில்லை![/size]

[size=4]ஒரு மாதிரித் 'தேவாரம்' பாடித் தேத்தண்ணியும், குடிச்சிட்டு, கன்ரீனடிக்குப் போனால், குருமூர்த்தி ஒரு காகிதத்தை நீட்டினான். அதில், இப்படியான, பகிரங்கத் தண்டனைகள், எதிர்மறையான விளைவுகளைத் தரும்' என எழுதியிருந்தது! அது தான், அவன் ஒரு விசரனல்ல, என என்னை நம்ப வைத்தது.[/size]

[size=4]பின்பு, கணிதத்தில் வரும், இரு படிச்சமன்பாடுகள், சினை காணுதல், போன்றவற்றில் வரும் கடுமையான, கணக்குகளைக் கொடுத்தால், செய்து தருவான். அவனுக்குள், மறைந்திருந்த நகைச் சுவை, உணர்வும் சில எதிர் பாராத நேரங்களில், வெளிப்படுவதுண்டு. [/size]

[size=4]ஒரு முறை, குருமூர்த்தி, சில சமன்பாடுகளைத் தந்து, 'பரவளைவு' கீறும்படி சொன்னான். நாங்களும், கீறிக் கொண்டு போய்க் காட்ட, ஒருவன் கீறிய 'பரவளைவைப்' பார்த்துக் குருமூர்த்தி, விழுந்து, விழுந்து சிரித்தான்! குருமூர்த்தியைச் சிரிக்கப் பண்ணியதைக் கண்டு, எங்களுக்கு மிகவும் சந்தோசம், எண்டாலும் கொஞ்சம் பயமும் பிடித்துக் கொண்டது![/size]

[size=4]பின்பு ஒரு பேப்பரில, 'கிழவியளின்ர மாதிரிக் கிடக்கு' என்று எழுதிக்காட்ட நாங்களும், சிரித்து வைத்தோம், ஆனால், அப்போது, அந்தப் பகிடி வடிவாக விளங்கியிருக்கவில்லை! [/size]

[size=4]நாட்கள் போக, குருமூர்த்தியும், எங்களுக்கு வேண்டப் பட்டவனாகி விட்டான்![/size]

[size=4]அட்சர கணிதத்திலிருந்து , ஆவர்த்தனப் பாகுபடு வரை, அவன் அறிந்திருந்தான்![/size]

[size=4]நாங்களும், நாளடைவில், நடராசா அண்ணையின்ர 'லைற் ரீ' வாங்கிக் குடுத்தால், வாங்கிக் கொள்வான்! அதுக்கு மேல, எங்கட அந்த நேரப் பொருளாதாரமும், இடம் கொடுக்காது! [/size]

[size=4]சில வேளைகளில், மிஞ்சிய சாப்பாட்டை, 'பண்டா' கொண்டு வந்து கொடுத்தால் மட்டும், குருமூர்த்தி சாப்பிடுவான்.[/size]

[size=4]'பண்டா' ஒரு சகல கலா வல்லவன். விடுதிச் சமையல், தொடக்கம், 'வாட்டர் பம்ப்' வேலை செய்யாவிட்டால், பைப்புக்குள் தண்ணீர் விட்டு, ஸ்டார்ட்' பண்ணுவது, மற்றும் காவல் வேலை, வரை செய்வான்! அவனுக்கும், குருமூர்த்திக்குமிடையே , ஒரு விதமான பிணைப்பு, எப்போதும் இருந்தது![/size]

[size=4]எங்களுக்கும், பண்டாவுக்கும் இடையில், ஒரு 'ரகசியமும்; இருந்தது![/size]

[size=4]விடுதியில், சாப்பாடு சரியில்லா விட்டால், ஒளிச்சு 'மொக்கங்கடை' போனால். பண்டா, ஒருவருக்கும் தெரியாமல், கேற்றைப் பூட்டாமல் விட்டிருப்பான். நாங்கள் திரும்பி வந்ததை, உறுதிப் படுத்தியபின், எனக்கு நித்திரை வாறான்' என்று கூறியபடி படுக்கப் போவான். [/size]

[size=4]ஒருநாள், பண்டாவின் நெருங்கிய உறவினர் ஆரோ, செத்துப் போய் விட்டதாகத் தகவல் வந்து, பண்டா போகவேண்டி வந்து விட்டது.[/size]

[size=4]அவனிடம், பணம் இருக்கவில்லை. 'பண்டா' ஒரு நாளும், சேமித்து வைத்ததில்லை. எங்களிடமும், காசு அதிகமாக இருப்பதில்லை.[/size]

[size=4]போர்டிங் மாஸ்டராலும், ஒரு 'ரிற்றேன் ரிக்கற் ' மட்டும் தான் குடுக்க முடிஞ்சுது.[/size]

[size=4]அண்டைக்கு இரவு, பண்டா வழக்கம் போல, குருமூர்த்தியிடம், இரவுச் சாப்பாடு, கொண்டு போனான். [/size]

[size=4]'பண்டா, ஊருக்குப் போய் வாறது' எண்டு தனது தமிழில் குருமூர்த்தியிடம் சொன்னான்.[/size]

[size=4]குருமூர்த்தியும், பண்டாவிடம், ஒரு என்வலப்பைக் கொடுத்து விட்டுச் சிரித்தான்.[/size]

[size=4]அதனுள்ளே, முன்னூறு ரூபாய்' நோட்டுக்களாக இருந்தது.[/size]

[size=4]அன்று தான், பண்டா, வாய்விட்டு அழுததை, முதன் முதலாகக் கண்டேன்![/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுக்கு என்ன பின்னூட்டம் எழுத என்று தான் தெரியவில்லை அண்ணா.

உங்கள் எழுத்து கதை சொன்ன விதம் நன்று சொல்லி நழுவத்தான் முடிகிறது. :rolleyes:

கருத்து எழுத அது அரசியலாகி.. கிறுக்குப்பட்ட சீடி போல..

அரைச்சதையே அரைக்க வேண்டி வரும். :(

நன்றி அண்ணா அருமையான கதை. :)

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா இருக்கு புங்க்ஸ் அண்ணா

இதுக்கு என்ன பின்னூட்டம் எழுத என்று தான் தெரியவில்லை அண்ணா.

நல்ல கதை புன்கையூரான் அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் ஒரு நினைவுப் பதிவு நன்றாக நகர்த்தியிருக்கிறீர்கள் பாராட்டுக்கள். தொடர வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா எங்கள் வாத்தியாரும் உங்கள் காலத்தில்தான் படித்திருக்கவேண்டும்... ஏனென்றால் அந்தநேரம் இப்படி ஒருவர் தங்களுக்கும் உதவியதாக எங்கள் ஆசிரியர் சொன்ன ஞாபகம்..அவருக்கும் உங்கள் வயதிருக்கும் அண்ணா..பாராட்டுக்கள் அண்ணா..தொடர்ந்து பகிருங்கள்..இனிய நினைவுகள் உங்கள் மொழிநடையில் எங்கள் நினைவுகளையும் தீண்டுகின்றன..

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=1]

[size=4]அருமை,[/size][/size][size=1]

[size=4]பகிர்விற்கு மிக்க நன்றிகள் [/size][/size]

[size=4]http://leo-malar.blogspot.no/[/size]

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் அண்ணா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு என்ன பின்னூட்டம் எழுத என்று தான் தெரியவில்லை அண்ணா.

உங்கள் எழுத்து கதை சொன்ன விதம் நன்று சொல்லி நழுவத்தான் முடிகிறது. :rolleyes:

கருத்து எழுத அது அரசியலாகி.. கிறுக்குப்பட்ட சீடி போல..

அரைச்சதையே அரைக்க வேண்டி வரும். :(

நன்றி அண்ணா அருமையான கதை. :)

கருத்துக்கு நன்றிகள், ஜீவா!

என்ன கருத்தென்றாலும், தயங்காது எழுதுங்கள்!

ஏனெனில், இது கருத்துக்களம்!

அத்துடன் எங்களை, காலத்திற்கேற்ற மாதிரி மாற்றிக் கொள்ளவும் இளைய தலைமுறையின் கருத்துகள் பயன்படும்! :D

வரவுக்கு நன்றிகள், சுண்டல், அபராஜிதன்! :rolleyes:

மீண்டும் ஒரு நினைவுப் பதிவு நன்றாக நகர்த்தியிருக்கிறீர்கள் பாராட்டுக்கள். தொடர வாழ்த்துக்கள்

நன்றிகள், சாத்திரியார்!

நேரம் கிடைக்கும்போது, தொடர்கின்றேன்! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]------[/size]

[size=4]குருமூர்த்தியும், பண்டாவிடம், ஒரு என்வலப்பைக் கொடுத்து விட்டுச் சிரித்தான்.[/size]

[size=4]அதனுள்ளே, முன்னூறு ரூபாய்' நோட்டுக்களாக இருந்தது.[/size]

[size=4]அன்று தான், பண்டா, வாய்விட்டு அழுததை, முதன் முதலாகக் கண்டேன்![/size]

கதையின் முடிவு, எதிர்பார்த்திராத ஒன்று.

வழக்கம் போல்... அருமையான கதை புங்கையூரான்.

நடராஜா கன்ரீனில் வாங்கிய வடையும், பால் தேத்தண்ணியும்... டக்கெண்டு ஞாபகம் வந்துவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவிதமாக கதை நகர்த்தியுள்ளீர்கள், வாழ்த்துகள் புங்கையூரன், தொடருங்கள்

மனிதநேயம்ன்னு வர்றப்போ ஜாதிங்கள கடந்து வரணும் . காலேஜ் லைஃப் ரெம்ப ஜாலிங்க . அதுல நல்ல மெசேஜ் சொல்லியிருங்கீங்க அண்ணன் . உங்க கதைல ரெம்பவே இம்பெரெஸ் ஆயிட்டேங்க :) :) .

  • கருத்துக்கள உறவுகள்

இம்ப்ரெஸ் ஆகி இன்னத்த பண்ண போறிங்க?

நீங்களும் உங்க காலேஜ் lifea கதையா எழுதிறது... சுண்டல் வாசிக்கிறது...

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை புங்கையூரான் ...மேலும் உங்கள் படைப்புக்கள் யாழை அலங்கரிக்கட்டும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா எங்கள் வாத்தியாரும் உங்கள் காலத்தில்தான் படித்திருக்கவேண்டும்... ஏனென்றால் அந்தநேரம் இப்படி ஒருவர் தங்களுக்கும் உதவியதாக எங்கள் ஆசிரியர் சொன்ன ஞாபகம்..அவருக்கும் உங்கள் வயதிருக்கும் அண்ணா..பாராட்டுக்கள் அண்ணா..தொடர்ந்து பகிருங்கள்..இனிய நினைவுகள் உங்கள் மொழிநடையில் எங்கள் நினைவுகளையும் தீண்டுகின்றன..

நம்ம சாதகமே, தம்பியிட்டக் கிடக்குப் போல கிடக்கு!

நன்றிகள், சுபேஸ்! :D

[size=1][size=4]அருமை,[/size][/size]

[size=1][size=4]பகிர்விற்கு மிக்க நன்றிகள் [/size][/size]

[size=4]http://leo-malar.blogspot.no/[/size]

நன்றிகள், லியோ!

வாழ்த்துக்கள் அண்ணா

நன்றிகள், நந்தன்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதையின் முடிவு, எதிர்பார்த்திராத ஒன்று.

வழக்கம் போல்... அருமையான கதை புங்கையூரான்.

நடராஜா கன்ரீனில் வாங்கிய வடையும், பால் தேத்தண்ணியும்... டக்கெண்டு ஞாபகம் வந்துவிட்டது.

நன்றிகள், தமிழ் சிறி!

எனக்கேண்டா நடராசா அண்ணன்ர கிளாஸ் தான், இன்னும் நினைவில நிக்குது!

LibbeyGlassware_15253.jpg+ சாயக் கோடுகள்!!!

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள், தமிழ் சிறி!

எனக்கேண்டா நடராசா அண்ணன்ர கிளாஸ் தான், இன்னும் நினைவில நிக்குது!

LibbeyGlassware_15253.jpg+ சாயக் கோடுகள்!!!

இந்த் கிளாசை, எங்கு தேடி எடுத்தீர்கள் புங்கையூரான்.

இது,ஒரிஜினல் சிலோன் கிளாஸ். :D

அருமையாய் உள்ளது வாசிக்கும்போது உண்மையில் சுவாரஸ்யமாக இருந்தது .....இணைப்பிற்கு நன்றி புங்கை அண்ணா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உடையார், சொப்னா, தம்பி சுண்டல், சூரியன் ஆகியோரின் கருத்துக்களுக்கு, நன்றிகள்!

புத்தனின் நல்லாசிகளுக்கும் நன்றிகள்!

விருப்புத் தெரிவித்த உறவுகளுக்கும்,நன்றிகள்!

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம சாதகமே, தம்பியிட்டக் கிடக்குப் போல கிடக்கு!

நன்றிகள், சுபேஸ்! :D

:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.