Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொன்னான வாழ்வுக்கு பொன்னியின் ஆலோசனைகள்.

Featured Replies

பொன்னியிடம் ஒரு சில சின்னக் கேள்விகள் வீட்டில 1000 வேலையில,ஒரு வேலையை (உடுப்பு காயப்போடுகிறது) கணவன் செய்தால் அவருக்கு எப்படி நன்றி சொல்லுகிறது. மிச்சமாக உள்ள 999 வேலைக்கும் அவர் நன்றி சொல்லிக்கொண்டு இருக்கிறாரோ?திருத்த வேண்டிய விசயங்களை ஒருக்கா சொல்லாம், இரண்டு தாரம் சொல்லாம்.திரும்பச் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்க அவர்கள் ஒன்றும் குழந்தைகள் கிடையாது. ஒன்று, இரண்டு [size=6]தாரத்தோடு[/size] திருந்திறவன் தான் மனிசன்.கேள்விகள் தொடரும்......

ஐயோ ஐயோ :o :o :o

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ ஐயோ :o :o :o

:D

ஐயோ ஐயோ :o :o :o

தரத்தோடு என்றதை தாரத்தோடு என்று எழுதிப்போட்டன். ஒரு "a" கூட அடிச்சுப்போட்டன். அதுற்கு ஏன் இவ்வளவு சிரிப்பு......

தரத்தோடு என்றதை தாரத்தோடு என்று எழுதிப்போட்டன். ஒரு "a" கூட அடிச்சுப்போட்டன். அதுற்கு ஏன் இவ்வளவு சிரிப்பு......

அந்த ஒரு "a" உங்கள் குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் சகோதரி. அது தான் சிரிப்பு. :D :D

Edited by navenan

  • தொடங்கியவர்

யாழ் கவியின் கணவன் இரண்டாம் தாரத்தோடு திருந்துவார் என்று நம்புவேம். இனி ஆலோசனை 2 - இது ஆணுக்கும் பெண்ணுக்கும் சேர்த்து.

உந்த ஓப்பிட்டு பாக்கிற வேலை எல்லாம் வேண்டாம், நான் மைசூர் ராசா பரம்பரை, நீ ஆரிய குளம் பொன்ராசா பரம்பரை, இதேல்லாம் முதலே யோசிக்கணும், இந்த விவாத்தில் யாரும் வெண்டதாக சரித்திரம் இல்லை. விதாண்ட வாதம், விரிசலுக்கு வித்திடும். அவர் அவருக்கு அவர் குடும்பம் பெரிது. கட்டிட்டியோ கம் எண்டு இரு. சீன் போடுறது, முட்டைக் கண்ணீர் வடிக்கிறது, சூக்கேசை பக் பண்ணிறது எல்லாம் "பாரசக்தி" பட காலத்து கிளைமாக்ஸ். மாத்தி யோசிங்கோ.

  • தொடங்கியவர்

ஆலோசனை 3

உங்களுடைய கணவன் அல்லது மனைவி வேலையால வந்தவுடன், உங்கட புலம்பல்களை துவங்காதேங்கோ. அதுகள் என்ன தலையிடியோட வருகுதுகளோ தெரியாது. ஆற அமர்ந்து ஒரு தேத்தண்ணியை கொடுத்து போட்டு ஆரம்பிக்காலம். அடுத்தது, உங்களுடைய ருத்திர தாண்டவத்தை ஆரம்பிக்க முன், உங்களுடைய குறிக்கோள் என்ன என்று தெளிவாய் தெரிந்து கொண்டு துவங்கிறது நல்லது. சும்மா கத்த வேண்டும் என்று கத்தினால், கத்தலுக்கு மரியாதாய் கேட்டு போய் விடும். கட்டு படுத்த பட்ட கோவம் ஒரு சிறந்த ஆயுதம். அதை பாவிக்கி பழகி கொள்ளவும்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கருத்துக்கள் தொடருங்கள் பொன்னி

  • கருத்துக்கள உறவுகள்

தொட‌ருங்கோ பொன்னி...ஆண்களுக்கு உறைக்க கூடிய மாதிரி ஆலோச‌னைகளை எடுத்து விடுகிறது :D

  • கருத்துக்கள உறவுகள்

தொட‌ருங்கோ பொன்னி...ஆண்களுக்கு உறைக்க கூடிய மாதிரி ஆலோச‌னைகளை எடுத்து விடுகிறது :D

குடும்பத்தில்... பல குழப்பங்கள் ஏற்படுவது பெண்களால்... தான், என்று ஒரு ஆய்வறிக்கை சொல்கின்றது.

ஆண்கள் தங்கள் பாட்டில்... அப்பனே, சிவனே... என்று, இருக்கையில்... ஆண்களைப் பற்றி என்ன குறையை... பொன்னியால், கண்டு பிடிக்க முடியும்? ரதி :D

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா இருக்கு பொன்னி.. தொடருங்கோ.. :D

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா இருக்கு பொன்னி.. தொடருங்கோ.. :D

அப்படியே மனிசிமாரையும் வாசிக்கச் சொல்லுங்கோ :lol:

Edited by நந்தன்26

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எல்லாம் அவஸ்தைப்பட்டு ஒரு வாழ்க்கை அவசியம் தானா. சும்மா சிமூத்தா போய்க்கிட்டு இருக்கிற லைவில.. எதுக்கு ஒரு பாறாய்ங்கல்லை.. கலியாணம் என்ற பெயரில தலை மேல.. தூக்கி வீசிறாய்ங்களோ..! :lol::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொட‌ருங்கோ பொன்னி...ஆண்களுக்கு உறைக்க கூடிய மாதிரி ஆலோச‌னைகளை எடுத்து விடுகிறது :D

அவங்கள்ளை என்ன குறை இருக்கு??? குணத்திலை,வீரத்திலை,செயல்லை எண்டு எல்லாத்திலையும் தங்கப்பவுண்கள்!!!!! சரி அப்பிடித்தான் இரண்டொரு குறையள் இருந்தாலும்........அதை பொன்னி சொல்ல அந்த ஆண்சிங்கங்களுக்கு உறைச்சிட்டாலும்..... :icon_mrgreen:

  • தொடங்கியவர்

அடுத்தாய், இந்த சின்ன சிறுசுகளுக்கு...ஆலோசனை 4

பிள்ளையளே, "பருவத்தே பயிர் செய்ங்கோ"!..20 து, 21 வயதில கொஞ்சம் குளிர்மையாய் இருக்கேக்க, கிருத்திக்ரொஷன், கன்சிக்கா வேண்டும் என்று அலையிறது.தங்கட மூஞ்சை வண்ணங்களை கண்ணாடியில பாக்கிறேல்லே. பிறகு ஒரு 24/25 வரேக்க அப்பா அம்மாட்டை பார்க்க சொல்லிறது. அதுகள் ஓடி ஆடி பார்த்து கொண்டு வந்தால், கெமிஸ்ரி இல்லை, பைலோஜி இல்லை என்று நடப்பு, பிறகு 29/30 வயதில " நான் ஒரு ராசி இல்லா ராசா" எண்டு சிட்டுவேசன் சோங் வேற. தேவையா? என்னை பொறுத்த வரையில இது ஒரு உற்பத்தி, தேவை சம்பந்தமான பிரச்சனை. உங்கட ராகேற் மாக்கேற்றில் 20 வயதில 100 பேர் இருந்தால், ஒவ்வோரு வருசமும் அந்த எண்ணிக்கை 10/15% குறையும். ஏனென்றால், உசாரனா பாட்டியள் கரை செர்ந்து விடுவினம். ஓடு மீன் ஓடி உறு மீன் வரும் வரை வாடியிருக்கும் கொக்குகள், வாடி வதங்கி கருவாடு ஆக வேண்டியது தான். கட்டிற எண்டு யோசிட்டியளோ வேளைக்கே கட்டுங்கோ. இல்லை நான் பிரம்ம சாரி தான் எண்டால் அது வேற விசயம்.

  • கருத்துக்கள உறவுகள்
:lol: :lol: :lol:
  • 2 weeks later...
  • தொடங்கியவர்

அடுத்து பிள்ளை வளர்ப்பு பற்றி எனது கருத்து - ஆலோசனை அல்ல, ஏனென்றால், இந்த பொன்னான பொன்னியே தடுமாறுகிற விசயம் இது.

முதலாவதாக, பிரச்சனைகளை பகுத்து ஆள பழகிக்கொள்ளுங்கள். ஆட்டுக்கை மாட்டை போட்டு குழப்பதேங்கோ. வேலை பிர்ச்சனை, பக்கத்து வீட்டு பரமசிவம் பிரச்சனை எல்லாத்தையும் பிள்ளையளில சாய்க்கதேங்கோ. பிள்ளைகளோடு உரையாடுங்கோ. அதாவது அரட்டை அடியுங்கோ. படிசிட்டியோ, வீட்டு பாடம் செய்திட்டியோ எல்லாம் ஒரு உரையாடல் இல்லை. கொப்பரிட்ட போய் சொல்லு, கொம்மாட்ட போய்ச் சொல்லு என்று தூது அனுப்ப பிள்ளையள் ஒண்டும் நாரதர் இல்லை. அதுகளை ஒரு மனிசாராய் மதியுங்கோ.படி படி எண்டு ஓப்பாரி வையதேங்கோ, ஏதாவது ஓரு விளையாட்டை பழக விடுங்கோ.கணணி விளையாட்குகளுக்கு ஒரு நேரம் ஓதுக்குங்கோ. ஏதாவது ஓண்டில் அசைக்க முடியாத நம்பிக்கையை வளருங்கோ, உதாரணத்துக்கு சமயம். சொன்னால் செய்யுங்கோ.

  • 4 weeks later...

அடுத்து பிள்ளை வளர்ப்பு பற்றி எனது கருத்து - ஆலோசனை அல்ல, ஏனென்றால், இந்த பொன்னான பொன்னியே தடுமாறுகிற விசயம் இது.

முதலாவதாக, பிரச்சனைகளை பகுத்து ஆள பழகிக்கொள்ளுங்கள். ஆட்டுக்கை மாட்டை போட்டு குழப்பதேங்கோ. வேலை பிர்ச்சனை, பக்கத்து வீட்டு பரமசிவம் பிரச்சனை எல்லாத்தையும் பிள்ளையளில சாய்க்கதேங்கோ. பிள்ளைகளோடு உரையாடுங்கோ. அதாவது அரட்டை அடியுங்கோ. படிசிட்டியோ, வீட்டு பாடம் செய்திட்டியோ எல்லாம் ஒரு உரையாடல் இல்லை. கொப்பரிட்ட போய் சொல்லு, கொம்மாட்ட போய்ச் சொல்லு என்று தூது அனுப்ப பிள்ளையள் ஒண்டும் நாரதர் இல்லை. அதுகளை ஒரு மனிசாராய் மதியுங்கோ.படி படி எண்டு ஓப்பாரி வையதேங்கோ, ஏதாவது ஓரு விளையாட்டை பழக விடுங்கோ.கணணி விளையாட்குகளுக்கு ஒரு நேரம் ஓதுக்குங்கோ. ஏதாவது ஓண்டில் அசைக்க முடியாத நம்பிக்கையை வளருங்கோ, உதாரணத்துக்கு சமயம். சொன்னால் செய்யுங்கோ.

நல்லதொரு கருத்து பொன்னி!

அதோட பெற்றோராகிய நீங்கள் படிக்க ஆசைப்பட்டு படிக்காமல் விட்டதுகளேல்லாதையும் உங்கள் பிள்ளைகளைப் படிக்கச் சொல்லித் திணிக்காதேயுங்கோ..

உங்கள் பிள்ளைகளுக்கு என்ன படிக்க விருப்பம் என்பதை அறிந்து அதற்கேற்ப அவர்களை ஊக்கப்படுத்துங்கோ..

  • 6 months later...
  • தொடங்கியவர்

உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது...? *குறைகூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்க கற்றுக்கொள்கிறது... *அடக்கி வளர்க்கபடும் குழந்தை சண்டையிடக் கற்றுக்கொள்கிறது... *கேலி செய்யபடும் குழந்தை வெட்கத்தோடு வளர்கிறது... *அவமானப்படுத்தபடும் குழந்தை குற்றவாளி ஆகிறது... *ஊக்குவிக்கப்படும் குழந்தை மனதிடம் பெறுகிறது. சின்ன விசயத்துக்கும் கைகொடுத்து பாராட்டுங்க... *புகழப்படும் குழந்தை பிறரை மதிக்க கற்றுக் கொள்கிறது... *நேர்மையை கண்டு வளரும் குழந்தைநியாயத்தை கற்றுக்கொள்கிறது... *பாதுகாக்கபடும் குழந்தை நம்பிக்கை பெறுகிறது... *நட்போடு வளரும் குழந்தை உல்கத்தை நேசிக்க கற்றுக்கொள்கிறது... 4,5 வயதுகளில் குழந்தைக்கு நன்மை,தீமையை பற்றி சொல்லி தரவேண்டும். தினமும் அரைமணி நேரம் தந்தை ,நண்பனை போல உரையாடுங்கள்...!

  • 8 months later...
  • தொடங்கியவர்

இந்த ஐந்து வீதிகள Follow பண்ணா கல்யாணம் ஒரு அருமையான விஷயம் முதல் வீதி .... First rule ... அதிகாரத்தில் கை வைக்க கூடாது "No power of the house" வரவு செலவு எல்லாத்தையும் அவங்களயே பாக்க விட்ரனும் நாம பாத்தா நமக்கு தான் தேவை இல்லாத Tension Second Rule ... அடிப்பெனு மிரட்ட கூடாது "No unwanted scaring" ஏன்னா காலம் காலமா பொண்ணுங்க Kovai Sarala படம் பார்த்து தெளிவா இருக்காங்க , அவங்கள தேவை இல்லாம அடிப்பெனு சொல்லி அடி வாங்கிக்க கூடாது Third rule ... அவங்களால என்ன சமைக்க முடியுமோ அத சமைக்க சொல்லி சாப்புடனும் நாம அதுக்கு மேல கேட்டா அவங்க சமையல் குறிப்புக்கு Internet போவாங்க , அப்புறம் அதை நாம தான் சாப்புடனும் And 4'வது Rule .... எக்காரணம் கொண்டும் ஆயுதம் எந்தக் கூடாது ..No weapons ... ஏன்னா பெண்கள் கிட்ட தான் கரண்டி பூரி கட்டை போன்ற பயங்கர ஆயுதங்கள் இருக்குனு Statistics சொல்லுது 5th ...இது தான் ரொம்ப முக்கியாமனது ... ஒரு வேல சண்டை வந்தா தப்பு அவங்க மேலே இருந்தாலும் கூச்சமே படாம Sorry கேட்ரனும் ... மானம் ரோசம் அறவே கூடாது .

  • கருத்துக்கள உறவுகள்

ரூல் ஐந்தைக் கடைப்பிடித்தால் போதும் மற்றவற்றுக்கு அவசியமிருக்காது இல்லயா பொன்னி...! :D

  • 6 months later...
  • தொடங்கியவர்

உங்கள் எல்லொருக்கும் காதலித்தவர்களை கை பிடிக்க வாய்ப்பு கிடைத்தோ எனக்கு தெரியாது. ஆனால் கை பிடித்தவர்களை காதலியுங்கோ, வாழ்க்கை குதுகலிக்கும்.

  • 3 months later...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.