Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தகப்பன்ர பெயரை எப்படி பதியிறது?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]அவன் ஒரு அகதி.அவன் தற்போது வசிக்கும் நாட்டில் அவனுக்கு [/size]

[size=4]எந்த உறவினரும் இல்லை.அவன் சமாதான காலத்தில் இந்த நாட்டுக்கு [/size]

[size=4]பலத்த சிரமப்பட்டு வந்திருந்தான். அவனின் சொந்த ஊர் யாழ்ப்பாணத்தில் [/size]

[size=4]உள்ள கிராமம்.அவனுக்கு ஒரு அண்ணன் இருந்தான்.அவன் ஜெயசுக்குறு [/size]

[size=4]எதிர்ச் சமரில் வீரச்சாவு அடைந்தான்.தந்தை சிறுவயதில் இறந்துவிட தாய்தான் [/size]

[size=4]இவனையும் அண்ணனனையும் சிரமப்பட்டு வளர்த்தாள். [/size]

[size=4]தொண்ணூற்றி ஐந்தாம் ஆண்டு வன்னிக்கு இடப்பெயர்ந்து [/size]

[size=4]மல்லாவியில் உள்ள உயிலங்குளத்தில் சிறு கொட்டில் போட்டு [/size]

[size=4]வசித்தார்கள்.அவனது அண்ணனின் வித்துடல் ஆலங்குள துயுலுமில்லத்தில்[/size]

[size=4]விதைக்கப்பட்டது.தாய் அந்த சிறிய காணியில் மரக்கறி தோட்டம் செய்தாள். [/size]

[size=4]அவன் ஒரு பத்திரிகையில் செய்தி வழங்குனராய் இருந்தான்.அவனுக்கு [/size]

[size=4]சிறு தொகை ஊதியம் கிடைத்தது.அது குடும்பத்தை இழுக்க போதுமாயும்[/size]

[size=4]இருந்தது.செய்தியாளராய் போர்ப்பிரதேசத்தில் கடமை செய்வது மிகக்கடினமானது.[/size]

[size=4]சைக்கிளில்தான் சென்று செய்தி சேகரிப்பான். குறிப்பிட்ட இடம் [/size]

[size=4]சென்று வோக்கியில் காரியாலயத்திற்கு செய்தி அறிவிக்கப்படும்.கூட்டம் என்றால் புதுக்குடியிருப்புக்கு [/size]

[size=4]போகவேணும் மல்லாவி வந்து மாங்குளம் போய் ஒட்டிசுட்டான் போய் அங்க இருந்து [/size]

[size=4]புதுக்குடியிருப்பு போவான் சைக்கிளில்தான்.சிலநேரம் மாற்று வழிகளும் பாவித்திருக்கிறான்.[/size]

[size=4]ஜெயசுக்குறு நேரம் கடினகாலம்.பட்டினி ஆரம்பிக்கைக்கேயே [/size]

[size=4]சிறுவர் பட்டினிச்சாவு தவிர்ப்புத்திட்டம் ஆரம்பித்திட்டினம்.அதனால [/size]

[size=4]பட்டினியும் போசாக்கு குறைபாடும் வராமல் தவிர்க்கப்பட்டுவிட்டது.[/size]

[size=4]எல்லா செய்திகளையும் அவன் உடனுக்குடன் வழங்கிவந்தான்.[/size]

[size=4]சமாதானம் வந்தவுடன் கொஞ்சம் வசதிகள் கூடிட்டுது.மோட்டார் [/size]

[size=4]சைக்கிள் பாவனை வந்தது.அவன் தாயின் நகைகளை விற்று [/size]

[size=4]வெளிநாடுவந்தான்.மூன்று தடவையும் அவனது அகதி [/size]

[size=4]அந்தஸ்து கோரும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுவிட்டது.[/size]

[size=4]இப்ப ஆறு வருசமாய் அவன் ஒளித்து வாழ்கிறான். தாயிற்கு [/size]

[size=4]இவனது உண்மை நிலை தெரியாது.[/size]

[size=4]2008 ஆம் ஆண்டு நடமாடும் மருத்துவசேவையில தாயின் உடலில [/size]

[size=4]ஒரு புற்று நோய்க்கட்டி வளர்வதை அவர்கள் கண்டுபிடித்து [/size]

[size=4]உடனடியாய் ஒபரேசன் செய்யோணும் என்றிருக்கினம்.தாய் [/size]

[size=4]தொடுவிலும் மாட்டன் என்றிட்டா.மகன்ரை தொடர்பில்லை [/size]

[size=4]அவனிட்ட கேட்காமல் செய்ய மாட்டன் என்றிட்டா.ஆனால் [/size]

[size=4]அவையும் விடயில்லை.நாங்களும் உங்கட பிள்ளைகள் தானம்மா.[/size]

[size=4]அன்றைக்கே அவை போகேக்க தாயையும் கூட்டிப்போய் [/size]

[size=4]கிளிநொச்சி பொன்னம்பலத்தில ஒபரேசன் செய்து மாற்றி [/size]

[size=4]அனுப்பிட்டினம்.தாய் பிறகு புது மாத்தளன் மட்டும்போய் [/size]

[size=4]வவுனியா முகாமுக்கு வந்திருந்தா.[/size]

[size=4]தாய் வரயிக்க ஒரு படமும் கொண்டுவரயில்லை.[/size]

[size=4]அண்ணனின்ர ஒருபடமும் இப்பயில்லை. அதோட [/size]

[size=4]அந்த காலத்தில ஒரு (ZONIKA )கமரா பத்தாயிரம் ரூபாயிட்கு வாங்கி [/size]

[size=4]வவுனியாவிற்கு போய் தொழில் செய்யிற ஒரு ஐயாவைக்கொண்டு [/size]

[size=4]கழுவி வைச்சிருந்த சுமார் நூறு அந்த நேரப்படங்கள் இல்லை.[/size]

[size=4]சுமார் இரண்டு வருசமாய் ஒரு பெண்ணை விரும்பி [/size]

[size=4]கணவன் மனைவியாய் வாழுறான்.தாய் நினைச்சுக்கொண்டிருக்கிறா [/size]

[size=4]கல்யாணம் கட்டிட்டான் என்று.அவனும் நிறைய படங்கள் அனுப்பிட்டான்.[/size]

[size=4]நேற்றும் தாய் கதைக்கைக்க அவனிட்டையும் அவன்ர மனிசியிட்டையும் [/size]

[size=4]சொன்னா எங்கட குடும்பத்திற்கு வாரிசுவேணும் என்று.எப்படி அவர்கள் [/size]

[size=4]பிள்ளை பெறுவது?தகப்பன்ர பெயரை எப்படி பதியிறது? [/size]

[size=4]போதாதிட்கு அவன்ர சித்தி ஒராள் போன கிழமை தாயிற்கு வந்த மாதிரியே [/size]

[size=4]புற்று நோய்க்கட்டிவந்து உரிய நேரம் கண்டுபிடிக்காமல் பெருத்து இறந்து [/size]

[size=4]போனா.அவவிற்கு காசு அனுப்பட்டாம்.தாயிற்கு தெரியுமோ?எவ்வளவு [/size]

[size=4]கஷ்டப்பட்டு வேலை செய்தாலும் அரைவாசிக்காசுதான் கிடைக்குது என்று. [/size]

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட எழுத்து நடை வித்தியாசமாய் இருக்குது...நினைக்கிறதை அப்படியே எழுதிறீங்கள் போல இருக்குது...தொடர்ந்தும் எழுதுங்கோ

சம்பவங்களைக் கோர்த்து எழுதினால் சொல்லவருகின்ற செய்தி வாசகர் மனதில் ஆழமாகப் பதியும் . இல்லாவிடில் செய்தி பத்துடன் பதினொன்றாகி விடும் . இது உடனடியாக ஒருவருக்கு வராது தொடர்ந்து எழுத எழுத பழக்கத்தில் வரும் . வாழ்த்துகள் லியோ தொடருங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் லியோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]ரதி,கோமகன்,நந்தன் [/size][size=1]

[size=4]தங்கள் ஆலோசனைகளுக்கும் வருகைக்கும் [/size]

[size=4]மிக்க மிக்க நன்றிகள்.[/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் அந்த மனிதன்..

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]வாழ்த்துகள் லியோ தொடருங்கள் .[/size][size=4] [/size]

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் லியோ.

இன்றுதான். .......பார்த்தேன் தொடர்ந்து எழுதுங்கள் லியோ .......வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

கதைக்கு நன்றிகள், லியோ!!!

தொடர்ந்து எழுதுங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]"சுமார் இரண்டு வருசமாய் ஒரு பெண்ணை விரும்பி [/size]

[size=4]கணவன் மனைவியாய் வாழுறான்.தாய் நினைச்சுக்கொண்டிருக்கிறா [/size]

[size=4]கல்யாணம் கட்டிட்டான் என்று.அவனும் நிறைய படங்கள் அனுப்பிட்டான்.[/size]

[size=4]நேற்றும் தாய் கதைக்கைக்க அவனிட்டையும் அவன்ர மனிசியிட்டையும் [/size]

[size=4]சொன்னா எங்கட குடும்பத்திற்கு வாரிசுவேணும் என்று.எப்படி அவர்கள் [/size]

[size=4]பிள்ளை பெறுவது?தகப்பன்ர பெயரை எப்படி பதியிறது? "[/size]

பதிவிற்கு நன்றி லியோ

எதோ ஒருவகையில் உங்களுக்கு நல்லது நடக்கும்.

குழந்தையைக் காட்டிக் கூட வாழ்வுரிமையைக் கேட்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் நாடுகளின் பல தமிழர்களின் நிலை இது. என்ன செய்வது. தகப்பனின் பெயரைப் பதிவதுதான் குழந்தை குழந்தை பெற்றுக்கொள்ளத் தடை எனில் தாயின் பெயரில் பதிவதுதானே. பின் மாற்றிக்கொள்ளலாம். குழந்தை இருந்தால் சிலவேளை விசா கிடக்கலாம்.

இஞ்ச வெளிநாட்டில தாயின்ர பேரிலையும் பிள்ளையள பதியலாம் ...லியோ..

உங்கட கலத்தில தாய் வழிச் ச்மூகம் தான இருந்தது.... தெரியாத அந்த வெங்களாந்திக்கு தகவல் சொல்லி விடுங்கோ... :D

[size=4]-தகவல் சொல்லும் ஆசையுடன் எல்லாள மஹாராஜா[/size]

Edited by எல்லாள மகாராஜா

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கதைக்கு லியோ

இது உங்கள் கற்பனைக்கதையாகஇருக்க ஆண்டவரை வேண்டுகின்றேன்.

சொந்தக்கதையாக இருப்பின்

புலம் பெயர் நாடுகளில் இருந்தால்

அந்த தாயின ஆசையை நிறைவேற்றலாம்

தகப்பன் யாரென்றும் பதியலாம். அதற்கு வதிவிட அனுமதி தேவையில்லை.

நானும் பிரான்சில் 3 வருடங்களுக்கு மேலாக எதுவுமே இல்லாது இருந்திருக்கின்றேன். அதன் வலி மற்றும் சில உபாயங்கள் தெரியும். நேரத்தை மீதப்படுத்தி உழையுங்கள். ப ணத்தை சேமியுங்கள் அதுவே தங்களின் இன்றைய நோக்காக இருக்கட்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றிகள்[/size]

உணர்வுகளையும் ஏக்கங்களையும் அனுபவித்த மாதிரியே எழுதி இருக்கிறீர்கள். தொடருங்கள்.

இங்கு அவுஸ்திரேலியாவில் எல்லாம் குடும்பப் பெயர் என்று அப்பாவின் பெயருக்கு பதிலாக அப்பப்பாவின் பெயரை எல்லாம் கொடுக்கிறாங்கள் Surnameஆக. மனைவின் அப்பாவின் பெயரை கொடுக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.