Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ்.இந்து ஆரம்பப்பாடசாலை மாவட்டத்தில் முதலிடம்

Featured Replies

[size=2]

[size=4]தரம் ஐந்து மாணவர்களுக்காக நாடாளாவிய ரீதியில் நடாத்தப்படும் புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ்.இந்து ஆரம்பப்பாடசாலை மாவட்டத்தில் முதலிடம் பெற்றிருக்கின்றது. புலமைப்பரிசில் முடிவுகள் இன்று அதிகாலை 12.20 மணிக்கு இணையத்தில் வெளியாகின. [/size][/size]

[size=2]

[size=4]இணைய முடிவுகளின் படி:[/size][/size]

[size=2]

[size=4]யாழ்.இந்து ஆரம்பப்பாடசாலை மாணவன் [/size][/size]

[size=2]

[size=4]பாலேந்திரன் அபிராம் 193 புள்ளிகளைப்பெற்று முதலாவது இடத்தையும், [/size][/size][size=2]

[size=4]கலைச்செல்வன் கீர்த்திகன் 191 புள்ளிகளைப்பெற்று இரண்டாம் இடத்தையும் பெற்றிருக்கிறார்கள். [/size][/size]

[size=2]

[size=4]யாழ்.மாவட்டத்துக்கான வெட்டுப்புள்ளியாக 148 புள்ளிகள் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.[/size][/size]

[size=2]

http://onlineuthayan.com/News_More.php?id=823661458325263211[/size]

  • கருத்துக்கள உறவுகள்

பாலை வனத்திலும், நீரெடுக்கும், இந்தக் குழந்தைகளுக்கும், யாழ் இந்து, ஆரம்பப் பாடசாலைக்கும், வாழ்த்துக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

சித்தியெதிய அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்,

திறமையிருந்தும் பல மாணவர்களால் பாடசாலைக்கு கூட போக முடியாத நிலை

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்!!!எந்தத் தடை வரினும் கல்வியில் சாதனை படைக்கும் தமிழ்க் குழந்தைகளுக்கு பாராட்டுக்கள்!!!!

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்

J01(66).jpg

[size=5]மாணவன் பாலேந்திரன் அபிராம் [/size]

மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]வாழ்த்துக்கள்![/size]

[size=4]எந்தத் தடை வரினும் கல்வியில் சாதனை படைக்கும் தமிழ்க் குழந்தைகளுக்கு பாராட்டுக்கள்!!![/size]

  • தொடங்கியவர்

603780_285194221584497_2115112823_n.jpg

[size=5]கிளிநொச்சியில் புலமைப்பரிசில் பரீட்சையில் மூவர் முதலிடம் [/size]

  • தொடங்கியவர்

527494_285194121584507_1171716085_n.jpg

222131_285193991584520_481013487_n.jpg

[size=4]இந்த வருடம் இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் கிளிநொச்சி மாவட்ட மாணவர்கள் பாடசாலைக்கும் பெற்றார்களுக்கும் பெருமை சேர்க்கும்படியாக பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.[/size]

[size=3]

[size=4]கிளி/மத்திய கல்லூரி ஆரம்ப பாடசாலை மாணவி சந்திரகுமார் லக்சிகா, கிளி/திருவையாறு ம.வி மாணவன் பரமானந்தன் சாரலன், கிளி/ம.வி தேவராசா சபில்சன் ஆகியோர் 177 புள்ளிகளை பெற்று மாவட்டத்தில் முதல்நிலை பெற்று பெருமை சேர்த்துள்ளனர். [/size][/size]

  • தொடங்கியவர்

[size=4]இம்மாணவர்கள் சாதனையாளர்களே ஏனெனில் இவர்களின் வகுப்புகளும் கொடும் போருக்குள்ளும் அகதி முகாம்களிலுமே கற்றலின்றி கழிந்தது. இத்தனையும் கடந்து கிடைத்ததுதான் இவர்களின் வெற்றி இந்த வெற்றிக்கு துணையான அதிபர்கள் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மத்திய ஆரம்ப பாடசாலை மாணவி லக்சிகா கிளிநொச்சி ஆனந்தபுரம் மேற்கை சேர்ந்தவர் தந்தை சந்திரகுமார் ஒரு மேசன் தொழிலாளி தாயார் கார்த்திகா வீட்டுப்பணிகளை கவனிக்கின்றார்.வீட்டில் அண்ணனும் அம்மாவும் பாடசாலையில் துஸ்யந்தி ஆசிரியையும் பிரத்தியேகமாக சசிரதன் ஆசிரியரும் கற்பித்து தன்னை இந்நிலைக்கு உயர்த்தியதாக மாணவி லக்சிகா சொல்கிறார்.

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தை சேர்ந்த சபில்சன் ஜெயந்திநகர் கிளிநொச்சியை சேர்ந்தவர் தந்தை தேவராசா கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்களின் பொது முகாமையாளராக கடமையாற்றுகின்றார். அம்மா உதய நிர்மலா கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் முகாமைத்துவ உதவியானராக பணி செய்கின்றார். வீட்டில் அப்பா தமிழ் கணிதம் போன்ற பாடங்களையும் அம்மா ஆங்கிலத்தையும் கற்றுதருவதாகவும் பாடசாலையில் ஆசிரியை திருமதி கமல்ராஜ் ரேகா மிகுந்த ஆழமாக கற்றுத்தருவதாகவும் பிரத்தியேகமாக ஆசிரியர் சசிரதனின் இடைவிடா முயற்சியே மாவட்டத்தில் முதல்நிலை பெற காரணம் என்கிறார் சபில்சன்.

கிளிநொச்சி திருவையாறு மகா வித்தியாலயத்தை சேர்ந்த பரமானந்தம் சாரலன் திருவையாறு மூன்றாம் பகுதியை சேர்ந்தவர்.இவரின் தந்தை பரமானந்தம் ஒரு ஆசிரியர் தாயார் கிரிஜா வீட்டுப்பணிகளுடன் மகனின் கல்வியில் அக்கறையாக இருந்துள்ளார்.

பாடசாலையில் செல்வி.அ.அருள்நந்தினி திருமதி ச.சிவானந்தம் ஆகியோரும் பிரத்தியேகமாக திருமதி.கரோலின் திருமதி.சிவபாக்கியம் ஆகியோரும் எடுத்த முயற்சியே மாவட்டத்தில் தங்கள் மகன் முதல்நிலை பெற காரணம் என்கின்றனர்.

சாரலனின் தந்தை கருத்து சொல்கையில், தங்கள் வீட்டுக்கு மின்சாரம் தரப்படவில்லை. எம் மகன் பாடசாலையில் நடந்த போட்டியொன்றில் முதலிடம் பெற்றததற்காக Child Fund நிறுவனம் பரிசாக தந்த சூரிய மின்கலத் தொகுதிக்கு மிகுந்த நன்றியை தெரிவிப்பதாக சொல்கிறார். அதனால் தான் தன் மகன் அதிகமாக படித்தார் எனவும் தெரிவித்திருந்தார்.[/size]

இந்த குழந்தை செல்வங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

பார்க்க ஆசை ஆசையாக இருக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

அக்குழந்தைகளுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் மாவட்ட‌ புலமைப் பரிசில் பரீட்சையில் முதலிடம் பெற்ற‌ யாழ்.இந்து ஆரம்பப்பாடசாலை மாணவர்கள்.... பாலேந்திரன் அபிராம், கலைச்செல்வன் கீர்த்திகனுக்கும்,

கிளிநொச்சி மாவட்ட புலமைப் பரிசில் முதல் மூன்று இடங்களைப் பெற்றுக் கொண்ட கிளி/மத்திய கல்லூரி ஆரம்ப பாடசாலை மாணவி சந்திரகுமார் லக்சிகா, கிளி/திருவையாறு ம.வி மாணவன் பரமானந்தன் சாரலன், கிளி/ம.வி தேவராசா சபில்சன் ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். நீங்கள் மேன் மேலும்... சாதனைகள் படைத்து பாடசாலைக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும், தமிழினத்துக்கும் பெருமை சேர்க்க வேண்டும்.

  • தொடங்கியவர்

[size=4]விசுவமடு ம.வி. மாணவி சுரபி முல்லை மாவட்டத்தில் முதலிடம்

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : [size=1]2012-09-27 10:12:27| யாழ்ப்பாணம்][/size][/size]

[size=1][size=4]முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடு மகா வித்தியாலய மாணவி செல்வி சுரபி ரஞ்சித், புலமைப்பரிசில் பரீட்சையில் 183 புள்ளிகளைப் பெற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். முதலிடத்தைப் பெற்ற மாணவி சுரபி ரஞ்சித் தனது பெறுபேறு தொடர்பில் கூறுகையில், சென்ற வருடம் எமது பாடசாலையில் 7 மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்திருந்தனர். பாடசாலைச் சமூகம் அவர்களை கெளரவித்த வேளை, அடுத்த வருடம் நானும் பரீட்சையில் சித்திய டையவேண்டும் என்ற ஆசை மனதில் குடிகொண்டது. இன்று அது நிறைவேறியது.[/size][/size]

Suravi2.jpg

[size=1][size=4]அதுமட்டுமன்றி முல்லைத்தீவு மாவட்டத்திலேயே 183 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண் டமை மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியுள்ளது.என்னுடைய வெற்றிக்கு எனது பாடசாலையின் ஆசிரியர் ப.சுதர்சன் முக்கிய காரணமாக இருந்தார்.அவர் பாடசாலையில் காலை மாலை பாராது விடுமுறை தினம் என்று பாராது முழுநேரமும் எம்மோடு இருந்து தனது நேரத்தை எமக்காகச் செலவளித்து எம்மை வழிப்படுத்தியிருந்தார். சிறப்பான வழிகாட்டலி னாலேயே என் சார்ந்த ஏனைய மாணவர்களும் வெற்றிபெற முடிந்தது. தொடர்ச்சியான பயிற்சிகளும் பரீட்சைகளும் எனது வெற்றிக்கு ஊன்றுகோலாக அமைந்தது.எதிர்காலத்தில் ஒரு வைத்தியராக வரவேண் டும் என்பதே என்னுடைய அவா.அதற்கு முயற்சியும் பயிற்சியும் தொடர்ந்து துணைநிற்கும் என நம்புகிறேன் என்றார்.

போரினால் பாதிப்படைந்திருந்த போதிலும் விசுவமடு மகா வித்தியாலயத்தில் 17 மாண வர்கள் தரம் 5 புலமைப்பரி சில் பரீட்சையில் சித்தி யடைந்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.[/size][/size]

http://www.valampurii.com/online/viewnews.php?ID=31137

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.