Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் குதிரைகள் வெளிக் கிளம்பும்..: கவிதை: நிழலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்று ஒரு காஸ்மீரக்கவிதை படித்தேன்..நிழலியின் கவிதை நினைவுக்கு வந்ததால் இங்கு பகிர்கிறேன்...

நாம் ஒரு பிரம்மாண்டமான சூறாவளியைக் கிழப்புவோம்....

எழு, நண்பனே, எழு.

நாம் ஒரு

பிரமாண்டமான

சூறாவளியைக் கிழப்புவோம்.

இன்றில்லாவிட்டால்,

என்று நீ எழப்போகிறாய்?

என்று நீ வாழப்போகிறாய்?

எனது விழிகள்

கனவின் சிலந்திவலைகலைப்

பின்னுகின்றன.

ஏராளமான ஆசைகளின்

தீபம்களை நீ ஏற்றி இருக்கிறாய்.

தாகம் கொண்டவனே,

நான் கோப்பைகளையும்,

குவளைகளையும் உருவாக்கினேன்.

பொறுமையின் வீணையில்

நீ ராகங்களை மீட்டினாய்.

வீரம்மிக்க நண்பணே,

கரிய இரவு முழுவதும்,

விடியலின் வெளிச்சத்தை

எதிர்நோக்கிக் காத்திருந்தாய்.

நான்...?

இரவும் பகலும்

கந்தலை உடுத்தியபடி இருக்கிறேன்.

எல்லாவற்றையும் நிரப்ப

வசந்தம் வரும் என்று நம்புகிறேன்.

ஒரு நாள் தேன் பாயும் என்ற நினைப்பில்,

கசப்பான கனிகளை

மகிழ்ச்சியுடன் தின்றபடி இருக்கிறேன்.

அன்பு ஒருநாள் இங்கே

ஆளும் என்ற எண்ணத்தில்,

வெறுப்பின் நெருப்பைத்

தாங்கிக்கொண்டேன்.

நமது பாதையில்

கங்கை வரும் என்ற நம்பிக்கையில்,

உனது சிற்றோடை,

களிப்பில் துள்ளி

நர்த்தனம் செய்யட்டும்.

எழு, நண்பணே, எழு,

நாம் ஒரு பிரம்மாண்டமான

சூறாவளியைக் கிழப்புவோம்....

என்னைக் கூட்டத்தில் இருந்து பிரிப்பவன்,

உனது

இலக்கை இன்னும் தூரமாக்குகிறான்...

விளையாடுவதற்கு

பொம்மைகளை உனக்கு அனுப்புவன்,

எனது சோற்றுத்தட்டில்

கல்லை எறிபவனாவான்.

எனது காட்டிலுள்ள

மரங்களை கீழே சாய்ப்பவன்,

சமையல் அடுப்பிலிருந்து

நெருப்பை அணைப்பவனே...

எழு,நண்பணே.

இதயத்தை பாடவைக்கும்

வார்த்தையை நீ பேசு.

நாளைய வேலையை

இன்றே துவக்குவோம்.

நாளைய சூரியன் பிரசவமாவதற்கு,

மருத்துவச்சியாக இருப்பது இன்றே...

எழு, நண்பணே, எழு,

நாம் ஒரு பிரம்மாண்டமான

சூறாவளியைக் கிழப்புவோம்.

காஷ்மீர மூலம் - அப்துல் ரக்மான்ராகி

தமிழாக்கம் - யக்ஞன்.

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

||கால அசைவியக்க காற்றில்

எப்பொழுதும் மரங்கள் காய்ந்து கிடப்பதில்லை

எப்போதும் வானம் இருண்டு கிடப்பதில்லை

எப்போது கனவுகள் பொய்த்தே போவதில்லை||

நல்ல வரிகள்.முன்னோக்கி சிந்திப்போம்.செயற்படுவோம்.

  • தொடங்கியவர்

கவிதைபோல் ஏதோ ஒன்று நடக்கவேணும் என்ற அவாவுடன் தான் நாம் வாழ்ந்தாகவேண்டும். போரின் முடிவுக்குப் பின்னர் பலருடன் உரையாடும்போது போரின் முடிவை ஏற்றுக்கொள்ளும் நிலையில் எவரும் இல்லை. அது ஜீரணிக்கமுடியாததாகவே மனதுள் உழண்டுகொண்டிருகின்றது. தென்னிலங்கையை சுனாமி நாசம் பண்ணவேண்டும் என விரும்புபவர்கள் பூகம்பம் வரவேண்டும் அணுகுண்டு வெடிக்கவேண்டும் இப்படி பல பேர் பலவிதாமாக ஆற்றாமையை வெளிப்படுத்துகின்றனர். யாரும் இந்தத் தோல்வியை மறந்துவிடவில்லை. திரும்பத் திரும்ப அவரவருக்கு மனதை உறுத்திக்கொண்டிருகின்றது. ஆனால் இவ்வாறான உறுத்தல்களில் காலத்தைக் கணக்கிட்டு சாத்தியப்படக்கூடிய விழைவு ஒன்று ஏற்படுமா என்பதுக்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும். சிலவேளை கனக்க யோசிக்கும் புத்திசாலிகளை விட சொட்டு யோசிக்கும் மொக்கன்களால் கூட பெரும் விழைவுகள் ஏற்படும். இரவு வந்தால் பகல் வருவதும் தவிரக்கமுடியாததுதான்.

அடிப்படை உரிமைகளிற்கு கூட போராடுவதை தவிர வேறு வழிகளை விட்டு வைக்காமல் இலங்கை அரசும், இந்தியா வும், சர்வதேசமும் நடந்து கொள்ளும் போது எம் மக்களுக்கு வேறு வழிகள் இல்லை. தம் உடல் மீதும் தம் உறவுகளின் உடலங்கள் மீதும் பொசுபரசையும் கொத்தணிக் குண்டுகளையும் எறிந்து கோரப்படுத்திய அதே இராணுவம் பக்கத்தில் நிற்கும் போது தான் இன்று மக்கள் தன்னெழுச்சியாக தமது உரிமைகளுக்காக அஞ்சாது போராட முற்படுகின்றனர். நான்கு ஆண்டுகள் முடிவடைய முதலே மக்கள் தம் அச்சங்களுக்கும் மேலாக நின்று அடிப்படை உரிமைகளுக்காக குரல் எழுப்புகின்றனர். இவை எல்லாருக்கும் ஒன்றை தெளிவாகச் சொல்கின்றன அது "எம். மக்களை எந்த சக்திகளும் அடக்கி ஒடுக்கி விட முடியாது" என்பதை. எம் மண்ணும் மரங்களும் எப்படி உறுதியானவையோ அப்படியே எம் மக்களும் உறுதியானவர்கள் என நம்புகின்றேன். எனவே கண்டிப்பாக மாற்றம் நிகழும். எம் மக்கள் ஒரு நாள் நிச்சயம் தமக்கான உரிமைகளுடன் தம் மண்ணில் வாழ்வார்கள். இரவு வந்தால் பகல் கண்டிப்பாக வரும்.

இன்றைய யாழில் அதுவும் நிழலியிடம் இருந்து இப்படி ஒரு எண்ணப்பாடு வெளி வரும் என்றே நினைக்கவில்லை..! எங்கள் புரவிகள்.. எங்கள் தேர்கள்... எங்கள் தெருக்கள்.. என்ற எண்ண ஓட்டத்தில் எங்களுக்கிடையே வேறுபாடில்லை. ஆனால்.. அந்தப் புரவிகளை.. தேர்களை.. தெருக்களை சீர்செய்து.. வலம் வர வைப்பது எது என்பது தான் இன்று தொக்கு நிற்கும் வினா..??! கால இடைவெளியை வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றால்.. அது ஆகாது. அந்த வகையில் முயற்சி அவசியம். அதில் யாழையும் இணைக்க நிழலி உதவ வேண்டும். கவிதையில் மட்டும் ஏக்கத்தை இறைத்துவிட்டு நடைமுறையில் அதனை அதிகரிப்பது புரவிகள் கிளம்ப இடமளியாது. மாறாக கிடப்பில் கிடக்கவே இடமளிக்கும்..! :icon_idea::)

கருத்திட்டமைக்கு நன்றி.

'இன்றைய யாழ்', 'அதுவும் நிழலியிடம் இருந்து' என்பதெல்லாம் வெறும் ஆச்சரியக் குறிகளாகத் தான் எனக்குத் தெரிகின்றன. கண்டிப்பாக விடிவு கிடைக்க வேண்டும் என்பதிலும், அதற்கான ஒரு போராட்டம் அவசியம் என்பதிலும் எனக்கு எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அவற்றிற்காக எப்படியான வழிவகைகளை கைக்கொள்ள வேண்டும் என்பதில் தான் உங்களுக்கும் எனக்கும் இடையே பாரிய வேறுபாடுகள் இருக்கின்றன என நினைக்கின்றேன். மாற்றுக் கருத்துக்கள், நீண்ட உரையாடல்கள் மூலம் வரும் தெளிவு, சனநாயக பண்புகளை விரிவான முறையில் கடைப்பிடித்தல், முரண்பாடுகளில் உடன்பாடு போன்றவற்றில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கு. சில வேளைகளில் இவை உங்களுக்கு வேறு வகையான தோற்றப்பாடுகளை ஏற்படுத்தலாம் என் நினைக்கின்றேன். :)

இருண்ட கானகங்களில்

மழையின் பின் மரங்கள்

பொந்துகளுக்குள் பொத்தி வைத்த

நீரை வாரி இறைக்க

நுதல் வழி வழியும்

நீர் படர்ந்து

காய்ந்த மண்ணின் துகள்கள்

ஒவ்வொன்றும்

உயிர்த்து எழும்.

எம் கடற்கரைகளில்

எங்கள் கூழைக்கிடாக்கள்

சேர்த்து வைத்திருந்த

மீன் குஞ்சுகளின்

ஆரவாரங்களில்

கடலின் மெளன வெளிகளில்

தாண்டு போயிருந்த எம்

படகுகள் மீண்டும் எம் கடல்களில்

வலம் வரும்

கால அசைவியக்க காற்றில்

எப்பொழுதும் மரங்கள் காய்ந்து கிடப்பதில்லை

எப்போதும் வானம் இருண்டு கிடப்பதில்லை

எப்போது கனவுகள் பொய்த்தே போவதில்லை

வரலாற்றில் புதையுண்டு போன

நிலங்களில் இருந்து

மீண்டும் எங்கள் புரவிகள்

வெளிக் கிளம்பும்..

ஆயிரம் சக்கரங்கள் பூட்டி

எங்கள் மண்ணில்

எங்கள் தெருக்களில்

எங்கள் தேர்கள்

மீண்டும் வலம் வரும் !!

நல்ல கவிதை..பகிர்வுக்கு மிக்க நன்றி

கருத்திட்டமைக்கு நன்றி....

வாசிப்பு திறன் ஒன்று, அடுத்தது சிந்திக்கும் திறன். இன்னுமொருவனின் லேசர் ஊடுறுவல் பார்வை நீண்டகால அனுபவ முதிர்ச்சியில் அவருக்கு கிடைத்துள்ளது என்று நினைக்கின்றேன்.

கூழைக்கடா என்பது என்னவென்று எனக்கு ஆரம்பத்தில் விளங்கவில்லை.

கலைக்களஞ்சியத்தில் பார்த்தபோது:

சாம்பல் கூழைக்கடா ( Spot-billed Pelican or Grey Pelican - Pelecanus philippensis ) என்பது (பெலிக்கனிடே) கூழைக்கடாக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை. இப்பறவையை வேடந்தாங்கல் பகுதியில் மத்தாளி அல்லது மத்தாளிக் கொக்கு என்றும் அழைக்கின்றனர். கூழைக்கடாக்கள் பறக்கும் பறவைகளில் மிகப் பெரிய நீர்ப் பறவை. 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பறவை. இதன் தசை கெட்டியாக இல்லாமல், மென்மையாக கூழ் போன்று இருப்பதாலும், கிடா போன்று பெரிதாக இருப்பதாலும் இதை கூழைக்கடா என அழைக்கிறார்கள். இதன் எடை 4.5 முதல் 11 கிலோ வரை இருக்கும். சிறகுகளின் நீளம் 2.7 மீ. மொத்த உயரம் 127 முதல் 182 செ.மீ. அலகு நீளம் 22 செ.மீ. கூழக்கடாக்கள் நெடுந்தூரம் வலசை செல்லும் இயல்புடையவை.இவ்வினத்தின் எண்ணிக்கை மிதமான-துரித வீதத்தில் குறைந்து வருவதால் இதனை அச்சுறுத்துநிலையை எட்டியவை என்ற பிரிவில் ஐயுசிஎன் - சிவப்புப் பட்டியலில் வகுத்துள்ளது.

பாசையூரில் இருந்து ஒரு தோணியில் இரண்டரை மணித்தியாலம் பயணம் செய்தால் மண்ணித்தலை என்ற ஒரு தீவு வரும். (இந்த தீவின் பெயர் மண்ணித்தலையா என்பதில் அன்றில் இருந்து இன்று வரை எனக்கு குழப்பம் இருக்கு). அந்த தீவில் பெரும் மண் குன்றுகள் (sand bands) இருக்கு. ஒரு கிறிஸ்தவ தேவாலயம் இருக்கு. தீவின் அடுத்த கரையில் பெரும் கடல் பெரிய அலைகளுடன் இருக்கு. நகுலேஸ்வரன் மாஸ்ரரின் ரீயுசனில் படிக்கும் போது 25 பேருக்கு கிட்ட ஒன்றாக இந்த தீவுக்கு ஒரு முறை போனோம். போய் விட்டுத் திரும்பும் போதுதான் முதன் முதலாக இந்த பறவையக் கண்டேன். பெரிதாகக் கத்திக் கொண்டு பறந்து பறந்து கடலுக்குள் இறங்குவதும் எழுவதுமாக இருந்தது. ஏதோ ஒரு கணத்தில் அதன் கத்தல் என் மனதுள் உறைந்து போக அன்றில் இருந்து இந்தப் பறவை எப்பவுமே என் கனவுகளிலும் பறக்கத் தொடங்கி விட்டது. இந்தக் கணத்திலும் என் அருகே அதன் கத்தலை கேட்கக் கூடியதாக இருக்கு.

  • தொடங்கியவர்

அருமையான கவிதை

அதற்கு நான் எழுத வருமுன்னே

நான் எழுத வேண்டியதை நீங்களே எழுதி விட்டீர்கள் நிழலி.

ஒன்று மட்டும் தெரிகிறது

எனக்கு உங்களுக்கு ஏன் ஒவ்வொரு தமிழனுக்கும் ஏக்கம் ஒன்றுதான்.

அதன் வலி ஒன்றுதான்.

அதை அடைய ஒரு கல்லையாவது போடுவோம்.

நன்றி அண்ணா....

நன்றி கலைஞன்.

உங்கள் பதில் சார்ந்து :

'ஒரு மண் சிறைப்படும்போது, வெறும் மனிதம் மட்டுமே குறுகிப்போகாமல் அந்த நிலம் சார்ந்த அனைத்துமே அடிமைப்பட்டு நெருக்குதல்களிற்குள்ளாகி விடுதலையை நாடுகின்றன என நம்புகிறேன்' என்ற உங்கள் வரி அழகாக இருக்கிறது. நாங்கள் கவிதை என்ற ஜோனரா சார்ந்துதான் பேசிக்கொண்டிருக்கின்றோம் என்பதையும் நான் மறுக்கவில்லை. எனினும், இங்கு சிறைப்பிடிப்பது வேறொரு மனிதன் தானே? மனிதன் என்பவனே, அதுவும் நிலங்களைச் சிறைப்பிடிக்கும் ஆழுமை பொருந்திய அதிகார மனிதன், பொதுவாக இயற்கைக்கு முரணான பல ஆசைகளை வழர்த்துக்கொண்டவனாகத் தானே வலம் வருகிறான். அந்நிலையில், சிறைப்பிடிப்பு என்பது ஒரு மனிதக்கூட்டத்தால் மற்றுமொரு மனிதக்கூட்டம் சார்ந்தாய் மட்டும் தானே உணரப்படக்கூடியது. இயற்கையின் மற்றைய அங்கங்களிற்கு, அந்த மாற்றம் மனதில் தோன்றுவதற்கான ஏதுநிலை கூட அங்கு இருக்கப்போதில்லையே. ஒருவேளை இயற்கையின் இதர அங்கங்களிற்கு விடுதலை வேட்கை வரின் அது அந்த நிலத்தைப் பறிகொடுத்த மனிதக்கூட்டத்தின் விடுதலை உணர்வினை ஒத்ததாக இருக்கப்போவதில்லையே. அதனால் தான் உங்கள் கவிதையில் எங்கும் மனிதர்கள் இல்லை என்றபோதும் (மீண்ட படகுகளையும் பாதச்சுவடுகளையும் தவிhத்து) இதை மனிதனைச் சார்ந்து மட்டுமே வாசிக்க முடிகிறது.

உங்கள் பதில் பின்னூட்டத்தில் இன்னமும் சில கருத்துக்கள் விவாதிக்கப்படலாம். ஆனால் தெட்டத்தெளிவாக என்ன உணர்வில் கவிதை எழுதினேன் என்பதை நீங்கள் கூறியிருக்கிறீர்கள். அதன் பின் அவ்வாறு விவாதிப்பது முட்டையில் எதையோ பிடுங்குவதுபோலாகிவிடும் என்பதால் இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்.

நன்றி.

என்னால் ஒரு நிலம் என்பதில் உள்ள எதனையும் அஃறிணையாக பார்க்க முடிவதில்லை. போராளி ஒருவர் சாய்ந்து நின்ற ஒரு பூவரசம் மரம் ஆமிக்காரர் சாய்ந்து நிற்கும் போதும் ஒரே மாதிரித்தான் உணரும் என்று நம்பமுடியவில்லை. மண்ணில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த ஒரு மனிதனின் காலடியை தாங்கும் மண் ஒரு ஆக்கிரமிப்பு இராணுவத்தினனின் காலையும் அதே பாசத்துடன் தான் தாங்கிக் கொள்ளும் என்று நினைக்க முடிவதில்லை. போர் என்பது வெறும் மனிதர்களுக்கு இடையில் மட்டுமே ஆனதெனில் நிலம் என்பது பிரக்ஞை அற்ற வெறும் சடம் என்றுதான் ஆகிவிடும். பின், எந்தையும் தாயும் மகிழ்ந்து கொண்டாடிய என் நிலம் என்பதே அர்த்தம் அற்ற ஒன்றாகி விடும்.

வரிகளுக்கிடையே வாசித்து பதில் எழுதுவது இனி எழுதப் போகும் வரிகளை இன்னும் பலமானதாகத் தான் ஆக்கும். எனவே தொடர்ந்து எழுதுங்கள்.. நீண்ட உரையாடல்கள் தேவைப்படும் ஒரு சமூகத்தில் மெளனம் சுயநலம் என்றே ஆகும்.

மனதில் தேக்கி வைத்திருந்த மிகுந்த நம்பிக்கையான வார்த்தைகள் கவிதை வரிகளில் சிந்தியுள்ளது.இலக்குகளை நோக்கி நகரும்போது நம்பிக்கை தளராமல் இருந்தால் இலக்குகளும் மாறாமல் இருக்கும். பொந்துகளில் பொத்தி வைக்கப்பட்ட நீரும், கூழைக்கிடாக்கள் சேர்த்த மீன் குஞ்சுகளும் வீணாகக் கூடாது..

நன்றி கிருபன். நம்பிக்கைகள் மக்களிடம் இருந்தே பெறுகின்றேன். அண்மைய காலங்களில் தன்னெழுச்சியாக நடக்கும் மக்கள் போராட்டங்கள் பலவற்றை எனக்கு கற்றுத் தருகின்றன.

வழக்கம் போல் நிழலியின் தனித்துவமான கவிதை .மிக அழகான சொற்பதங்களை கவிதையில் இழைத்திருக்கின்றார் .

இதுவும் ஒரு தோற்றவர்களுக்கான நம்பிக்கை தரும் கவிதைதான் ,வரலாறு எப்போதும் முன்னோக்கித்தான் செல்லும் திரும்ப வராது .

விடிவு என்பதும் நாங்களாக தேடினால் தான் உண்டு அதுவும் தானாக வராது .

கூழைக்கடா சரியோ தெரியாது.கூழக்கடா என்று தான் நான் கேள்விப்பட்டது .வெகு துரத்தில் இருந்து ஒரு சீசனுக்கு மட்டும் வந்து (மன்னார்,நெடுந்தீவு ) மீனை பிடித்துக்கொண்டு போய்விடும் .

செங்கைஆழியானின் வாடைக்காற்று கதையின் கருவே இந்த பறவையின் தன்மை பற்றியதுதான் .

நன்றி அர்ஜுன். செங்கை ஆழியானின் அனைத்து நாவல்களையும் வாசிக்க வேண்டும் என இருக்கின்றேன். உங்களிடம் சில நாவல்கள் இருந்தால் தந்து உதவுங்கள்.

இன்று ஒரு காஸ்மீரக்கவிதை படித்தேன்..நிழலியின் கவிதை நினைவுக்கு வந்ததால் இங்கு பகிர்கிறேன்...

நாம் ஒரு பிரம்மாண்டமான சூறாவளியைக் கிழப்புவோம்....

எழு, நண்பனே, எழு.

நாம் ஒரு

பிரமாண்டமான

சூறாவளியைக் கிழப்புவோம்.

இன்றில்லாவிட்டால்,

என்று நீ எழப்போகிறாய்?

என்று நீ வாழப்போகிறாய்?

எனது விழிகள்

கனவின் சிலந்திவலைகலைப்

பின்னுகின்றன.

ஏராளமான ஆசைகளின்

தீபம்களை நீ ஏற்றி இருக்கிறாய்.

தாகம் கொண்டவனே,

நான் கோப்பைகளையும்,

குவளைகளையும் உருவாக்கினேன்.

பொறுமையின் வீணையில்

நீ ராகங்களை மீட்டினாய்.

வீரம்மிக்க நண்பணே,

கரிய இரவு முழுவதும்,

விடியலின் வெளிச்சத்தை

எதிர்நோக்கிக் காத்திருந்தாய்.

நான்...?

இரவும் பகலும்

கந்தலை உடுத்தியபடி இருக்கிறேன்.

எல்லாவற்றையும் நிரப்ப

வசந்தம் வரும் என்று நம்புகிறேன்.

ஒரு நாள் தேன் பாயும் என்ற நினைப்பில்,

கசப்பான கனிகளை

மகிழ்ச்சியுடன் தின்றபடி இருக்கிறேன்.

அன்பு ஒருநாள் இங்கே

ஆளும் என்ற எண்ணத்தில்,

வெறுப்பின் நெருப்பைத்

தாங்கிக்கொண்டேன்.

நமது பாதையில்

கங்கை வரும் என்ற நம்பிக்கையில்,

உனது சிற்றோடை,

களிப்பில் துள்ளி

நர்த்தனம் செய்யட்டும்.

எழு, நண்பணே, எழு,

நாம் ஒரு பிரம்மாண்டமான

சூறாவளியைக் கிழப்புவோம்....

என்னைக் கூட்டத்தில் இருந்து பிரிப்பவன்,

உனது

இலக்கை இன்னும் தூரமாக்குகிறான்...

விளையாடுவதற்கு

பொம்மைகளை உனக்கு அனுப்புவன்,

எனது சோற்றுத்தட்டில்

கல்லை எறிபவனாவான்.

எனது காட்டிலுள்ள

மரங்களை கீழே சாய்ப்பவன்,

சமையல் அடுப்பிலிருந்து

நெருப்பை அணைப்பவனே...

எழு,நண்பணே.

இதயத்தை பாடவைக்கும்

வார்த்தையை நீ பேசு.

நாளைய வேலையை

இன்றே துவக்குவோம்.

நாளைய சூரியன் பிரசவமாவதற்கு,

மருத்துவச்சியாக இருப்பது இன்றே...

எழு, நண்பணே, எழு,

நாம் ஒரு பிரம்மாண்டமான

சூறாவளியைக் கிழப்புவோம்.

காஷ்மீர மூலம் - அப்துல் ரக்மான்ராகி

தமிழாக்கம் - யக்ஞன்.

அருமையான பகிர்வு நண்பா.

||கால அசைவியக்க காற்றில்

எப்பொழுதும் மரங்கள் காய்ந்து கிடப்பதில்லை

எப்போதும் வானம் இருண்டு கிடப்பதில்லை

எப்போது கனவுகள் பொய்த்தே போவதில்லை||

நல்ல வரிகள்.முன்னோக்கி சிந்திப்போம்.செயற்படுவோம்.

நன்றி நண்பா...

இன்று கனவுகள் சூனியமாகிப் போனாலும், ஏதோ ஒரு முட்டுச் சந்தியில் ஒளி கிடைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

கருத்திட்டமைக்கு நன்றி.

'இன்றைய யாழ்', 'அதுவும் நிழலியிடம் இருந்து' என்பதெல்லாம் வெறும் ஆச்சரியக் குறிகளாகத் தான் எனக்குத் தெரிகின்றன. கண்டிப்பாக விடிவு கிடைக்க வேண்டும் என்பதிலும், அதற்கான ஒரு போராட்டம் அவசியம் என்பதிலும் எனக்கு எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அவற்றிற்காக எப்படியான வழிவகைகளை கைக்கொள்ள வேண்டும் என்பதில் தான் உங்களுக்கும் எனக்கும் இடையே பாரிய வேறுபாடுகள் இருக்கின்றன என நினைக்கின்றேன். மாற்றுக் கருத்துக்கள், நீண்ட உரையாடல்கள் மூலம் வரும் தெளிவு, சனநாயக பண்புகளை விரிவான முறையில் கடைப்பிடித்தல், முரண்பாடுகளில் உடன்பாடு போன்றவற்றில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கு. சில வேளைகளில் இவை உங்களுக்கு வேறு வகையான தோற்றப்பாடுகளை ஏற்படுத்தலாம் என் நினைக்கின்றேன். :)

மாற்றுக் கருத்துக்கள்.. சனநாயகப் பண்புகளை விரிவான முறையில் கடைப்பிடித்தல்.. முரண்பாடுகளில் உடன்பாடு போன்றவற்றில் எனக்கும் அசைய முடியாத நம்பிக்கை இருக்கென்று சொல்லலாம்.

ஆனால் இவற்றைக் கடந்த காலங்களில்.. கடைப்பிடித்தும்.. நாம் எதனையும் பெறவில்லையே என்ற அடிப்படையையும் நாம் பார்க்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.

சிறீலங்காவின் சுதந்திரத்தின் பின்னான எல்லா வகையான போராட்ட காலம் முழுவதும் மாற்றுக் கருத்துப் பயணிக்கிறது.. பலன்..???! எதிர்ப்புக் காட்டுதல் மட்டுமே. உருப்படியான உடன்பாட்டையோ உருப்படியான மாற்றீட்டையோ அது பிரசவிக்கவில்லை.

முரண்பாடு பயணிக்கிறது.. காட்டிக் கொடுப்பதற்கு மட்டுமே..!

சனநாயகம் பயணிக்கிறது மக்களின் வாக்கைப் பறிக்கவும் மக்களை ஏமாற்றவும் மட்டுமே..!!

இப்படியான சூழ்நிலையைக் கடந்து வந்திருக்கின்ற நாம்.. இப்பதங்களுக்குள் வெறும் நம்பிக்கையை மட்டும் கட்டி வளர்த்துக் கொண்டிருப்பதில் பயனில்லை..!

இதை எப்படி நீங்களோ.. நாங்களோ மாற்றப் போறம்.. என்றதில் ஒரு தெளிவில்லாமல் வெறும் நம்பிக்கையைக் கட்டி வளர்த்து என்ன செய்யுறது.

பிரச்சனை எப்படியான மாற்றுக் கருத்து எவரிடம் இருந்து வருகிறது.. எங்கு முரண்படுகிறோம்.. அது எப்படி உடன்பாட்டுக்கான .. சாத்தியத்தை அல்லது சந்தர்ப்பத்தை எப்போது தரப்போகிறது..??! எது சனநாயகப் பண்பு.. எந்தளவுக்கு அது.. எவரிடத்தில் அது.. எங்கே அது.. என்பவற்றிற்கு ஒரு வரையறை இல்லாமல்.. வெறும் நம்பிக்கை வளர்த்து பயனில்லை என்பதில் எனக்கு அதிக நம்பிக்கையுள்ளது..!

உங்களின் நம்பிக்கையில் இருந்தும் எனது நம்பிக்கை.. இங்கு தான் வேறுபடுகிறது என்று நினைக்கிறேன். :icon_idea::)

கருத்துப் பகிர்விற்கு நன்றி. :icon_idea:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

சிறீலங்காவின் சுதந்திரத்தின் பின்னான எல்லா வகையான போராட்ட காலம் முழுவதும் மாற்றுக் கருத்துப் பயணிக்கிறது.. பலன்..???! எதிர்ப்புக் காட்டுதல் மட்டுமே. உருப்படியான உடன்பாட்டையோ உருப்படியான மாற்றீட்டையோ அது பிரசவிக்கவில்லை.

முரண்பாடு பயணிக்கிறது.. காட்டிக் கொடுப்பதற்கு மட்டுமே..!

நெடுக்கு,

காட்டிக் கொடுப்போரின் கருத்துகள் மாற்றுக் கருத்து என்று நினைக்கின்றீர்கள் என நினைக்கின்றேன். மக்களையும் போராளிகளையும் காட்டிக் கொடுத்தவர்கள் என்றுமே என்றுமே மாற்றுக் கருத்தாளர்கள் இல்லை, துரொகிகள் தான் என்பதில் எனக்கு எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. எம் போராட்ட தோல்வியின் போது இராணுவம் தப்பியதை விட இவர்கள் அநியாயமாக மிச்சம் வைக்கப்பட்டு விட்டார்களே என்றுதான் அதிகமாக கவலைப்பட்டு இருக்கின்றேன். அந்தக் கவலை இந்த நிமிடம் வரை தொடர்கின்றது.

இதை பற்றி மேலும் எழுதினால், இந்த திரியே மாறிவிடும்

வாழ்த்துகள் நிழலி அண்ணா... இன்று தான் இந்த கவிதை வாசித்தேன்... மிகவும் அருமையான கவிதை... :)

இன்றைய நிலை நீடிக்குமானால் மக்களுக்கு எந்த ஒரு அரசியல் தீர்வும் கிடைக்கவில்லையானால் நிச்சயம் மீண்டும் போராட்டம் தலை தூக்கும். ஆனால் சரியான தலைமை ஒன்று கிடைத்தால் தான் காட்டிக்கொடுப்புகளின் மத்தியில் தாக்குப்பிடிக்கும்....

  • கருத்துக்கள உறவுகள்

பாசையூரில் இருந்து ஒரு தோணியில் இரண்டரை மணித்தியாலம் பயணம் செய்தால் மண்ணித்தலை என்ற ஒரு தீவு வரும். (இந்த தீவின் பெயர் மண்ணித்தலையா என்பதில் அன்றில் இருந்து இன்று வரை எனக்கு குழப்பம் இருக்கு). அந்த தீவில் பெரும் மண் குன்றுகள் (sand bands) இருக்கு. ஒரு கிறிஸ்தவ தேவாலயம் இருக்கு. தீவின் அடுத்த கரையில் பெரும் கடல் பெரிய அலைகளுடன் இருக்கு. நகுலேஸ்வரன் மாஸ்ரரின் ரீயுசனில் படிக்கும் போது 25 பேருக்கு கிட்ட ஒன்றாக இந்த தீவுக்கு ஒரு முறை போனோம். போய் விட்டுத் திரும்பும் போதுதான் முதன் முதலாக இந்த பறவையக் கண்டேன். பெரிதாகக் கத்திக் கொண்டு பறந்து பறந்து கடலுக்குள் இறங்குவதும் எழுவதுமாக இருந்தது. ஏதோ ஒரு கணத்தில் அதன் கத்தல் என் மனதுள் உறைந்து போக அன்றில் இருந்து இந்தப் பறவை எப்பவுமே என் கனவுகளிலும் பறக்கத் தொடங்கி விட்டது. இந்தக் கணத்திலும் என் அருகே அதன் கத்தலை கேட்கக் கூடியதாக இருக்கு.

நிழலி, பாலைதீவைச் சொல்லிறீங்களா?

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி, பாலைதீவைச் சொல்லிறீங்களா?

இல்லை, அது பாலைத்தீவு கிடையாது. மன்னித்தலைதான் சரியான பெயர். பாஷையூர் கடற்கரையிலிருந்து பார்த்தால் மேட்டான அந்தத் தீவுப்பகுதி தெரியும். அங்குள்ள சிறிய கத்தோலிக்க ஆலயம் பேர்போனது.

நிழலி,

உங்களது உணர்வும் அதை எழுத்தில் வடிக்கும் அழகும் பிரமிக்க வைக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள். கவிஞனாக நிழலியை இன்றுதான் பார்க்கிறேன். நன்றிகள் !

வரலாற்றில் புதையுண்டு போன

நிலங்களில் இருந்து

மீண்டும் எங்கள் புரவிகள்

வெளிக் கிளம்பும்..

ஆயிரம் சக்கரங்கள் பூட்டி

எங்கள் மண்ணில்

எங்கள் தெருக்களில்

எங்கள் தேர்கள்

மீண்டும் வலம் வரும் !!

  • கருத்துக்கள உறவுகள்

நிறம் கண்ணுக்கை குத்துது..எழுத்துக்கள் விளங்குவதும் குறைவாக இருக்கிறதே.

  • கருத்துக்கள உறவுகள்

மண்னித்தலை பற்றிய சிறு விபரத்தை பெற..

<a href="http://kumarinadu.net/index.php?option=com_content&view=article&id=2113:2012-01-28-14-40-44&catid=1:2009-09-08-19-02-01&Itemid=71" class='bbc_url' title='External link' rel='nofollow external'>http://kumarinadu.ne...02-01&Itemid=

Edited by யாயினி

வரலாற்றில் புதையுண்டு போன

நிலங்களில் இருந்து

மீண்டும் குதிரைகள்

வெளிக் கிளம்பும்..

நூற்றாண்டுகளாக சாம்பல்

மூடிய வீதிகளில்

அந்நிய பாதச் சுவடுகளை

மேவி தம் கால்கள்

பதிக்கும்.

இருண்ட கானகங்களில்

மழையின் பின் மரங்கள்

பொந்துகளுக்குள் பொத்தி வைத்த

நீரை வாரி இறைக்க

நுதல் வழி வழியும்

நீர் படர்ந்து

காய்ந்த மண்ணின் துகள்கள்

ஒவ்வொன்றும்

உயிர்த்து எழும்.

எம் கடற்கரைகளில்

எங்கள் கூழைக்கிடாக்கள்

சேர்த்து வைத்திருந்த

மீன் குஞ்சுகளின்

ஆரவாரங்களில்

கடலின் மெளன வெளிகளில்

தாண்டு போயிருந்த எம்

படகுகள் மீண்டும் எம் கடல்களில்

வலம் வரும்

கால அசைவியக்க காற்றில்

எப்பொழுதும் மரங்கள் காய்ந்து கிடப்பதில்லை

எப்போதும் வானம் இருண்டு கிடப்பதில்லை

எப்போது கனவுகள் பொய்த்தே போவதில்லை

வரலாற்றில் புதையுண்டு போன

நிலங்களில் இருந்து

மீண்டும் எங்கள் புரவிகள்

வெளிக் கிளம்பும்..

ஆயிரம் சக்கரங்கள் பூட்டி

எங்கள் மண்ணில்

எங்கள் தெருக்களில்

எங்கள் தேர்கள்

மீண்டும் வலம் வரும் !!

19-Oct-2012: 4:15 PM

உங்கள் கவிதைக்கு மனந்திறந்த பாராட்டுக்கள் . மேலும் கவிதையின் தொடக்கம் கடைசி சுற்றுப் பூச்சுக்களை பூசிவிட்டு மையப்பகுதியான நம்பிக்கையூட்டல் செய்தியில் , கால ஓட்டத்தில் மரங்களும் வானங்களும் மாற்றங்களுக்கு உள்ளாகி தங்களை புதுப்பிக்கின்றன சரி ... கனவு என்பது பொதுவாக நடமுறையில் சாத்தியமற்ற மனநிலையில் தோன்றும் எண்ணங்கள் தானே ? இதற்கும் நம்பிக்கைக்கும் என்ன தொடர்பு இருக்கின்றது ? அதாவது நம்பிக்கைக்கு நிலையற்ற வானத்தையும் மரத்தையும் உவமித்த நீங்கள் கனவை ஏன் நம்பிக்கைக்கு உவமித்தீர்கள் ??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.