Jump to content

இளையராஜா கச்சேரி... கனடா தமிழ்ச் சங்கம் அறிக்கை!


Recommended Posts

டொரன்டோ: இசைஞானி இளையராஜா கனடாவில் நடத்தவிருக்கும் கச்சேரியைப் புறக்கணிக்குமாறு கனடா தமிழ்ச் சங்கம் அறிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக அந்த சங்கம் விடுத்துள்ள அறிக்கை:

எங்களின் தொப்புள் கொடி உறவான கலைஞர்களே!

தயவுகூர்ந்து ஈழத் தமிழர்களின் வெந்த புண்ணிலே வேலைப் பாச்சாதீர்கள். நாங்கள் இழந்தது ஒன்று இரண்டல்ல. 40,000-க்கும் மேற்பட்ட மாவீரர்களையும், பல இலட்சக்கணக்கான எங்களின் சொந்தங்களையும், மண்ணையும் இழந்து உலகப்பந்தெங்கும் ஏதிலிகளாக அலைகின்றோம்.

எமக்கு இன்னும் நீதியோ, அரசியல் உரிமையோ கிடைக்கவில்லை. நாங்கள் அழுது புரண்டு ஆற்றுவதற்காக எங்களின் தலைவன் பிரபாகரனால் குறிக்கப்பட்ட மாதந்தான் இந்த நவம்பர் மாதம்.

இந்த மாதத்திலாவது அழுவதற்குக்கூட சிங்களவன் விடுவதாயில்லை. ஈழத்திலே இருக்கும் அத்தனை மாவீரர் துயிலும் இல்லங்களையெல்லாம் இருக்கும் இடந்தெரியாமல் அழித்து விட்டான்.

ஈழத் தமிழனுக்கு இன்று இருக்கும் ஒரே ஒரு நம்பிக்கை நட்சத்திரங்களாக இருப்பவர்கள் புலம்பெயர் தமிழர்கள்தான். இவர்களின் பலத்தைச் சிதைப்பதற்காக பல மில்லியன் கணக்கில் பணத்தை இனத் துரோகிகளின் கையில் வாரி இறைத்து மாவீரர்களின் விழாவைக் குழப்புவதற்காக சென்ற ஆண்டிலிருந்து மிகவும் வேகமாகச் செயற்பட்டுக் கொண்டு வருகின்றான்.

எங்களுக்கு இசைஞானி இளையராசா மேல் எந்தவொரு வெறுப்புமில்லை. மாவீரர்களுக்குரிய நவம்பரில் மாத்திரம் எந்தவெரு ஆடம்பரமும் வேண்டாமென்பதுதான் கனடியத் தமிழர்களின் வேண்டுகோள். கனடாவிலுள்ள தமிழ் மக்களின் எதிர்ப்பினால் இவர்கள் எதிர்பார்த்த மாதிரி நுளைவுச் சீட்டுகள் விற்பனையாகாமையினால், ஆங்காங்கே சிறிய நிகழ்வுகளை வைத்து நுழைவுச் சீட்டுகளை இலவசமாக விநியோகிக்கின்றார்கள்.

இதிலிருந்து என்ன தெரிகின்றது. இவர்களுக்கு பணத்தைப் பற்றிக் கவலையில்லை. எல்லாவற்றிற்கும் பின்னால் சிங்கள அரசின் ஆதரவு இருக்கின்றது. எனவே, எங்களின் அன்பான கலைஞர்களே இழந்து போன எங்களின் மாவீரர் பேரிலும், இசைப் பிரியா போன்ற ஈழக் கலைஞர்களின் பேரிலும் உங்களிடம் மன்றாட்டமாகக் கேட்கின்றோம், நவம்பர் 3-ல் கனடாவில் நடைபெறும் இளையராசாவின் இசை விழாவைப் புறக்கணிக்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

Thatstamil

Link to comment
Share on other sites

  • Replies 248
  • Created
  • Last Reply

அப்பிடியே பூவரசம் பூவுக்கும் ஒரு அறிக்கை விடுறது

உங்க ஊர் காரங்க தானே நீங்க தான் கெடுத்து சாரி எடுத்து சொல்லனும்னே

Link to comment
Share on other sites

[size=4]கனடாவில் யாரும் அறிக்கைகள் விடலாம் - காரணம் பேச்சு சுதந்திரம்.[/size]

[size=4]மக்களுக்கும் முடிவை எடுக்கும் சுதந்திரம் உள்ளது, தடைகள் இல்லை.[/size]

Link to comment
Share on other sites

|||ஆங்காங்கே சிறிய நிகழ்வுகளை வைத்து நுழைவுச் சீட்டுகளை இலவசமாக விநியோகிக்கின்றார்கள்.|||

இது அநேகமாக பொய்யான தகவல்.

Link to comment
Share on other sites

என்னுடைய ஆதங்கம் எல்லாம் இது தான் மக்கள் எபிடியும் இந்த நிகழ்ச்சிக்கு போக தான் போகின்றார்கள்.....அப்போ புலிகளுக்கு ஆதரவு இல்லை என்ற ஒரு தோற்றப்பாடு வரபோகின்றது அல்லாவா? இந்தியர்கள் என்ன நினைக்க போகின்றார்கள் எம்மைப்பற்றி?

சீ என்ன பழக்கம் இது கறுமம் கறுமம் தலையில அடிச்சிக்க வேண்டியது தான்

Link to comment
Share on other sites

இலவசமாக எப்படி விற்பது? :lol:

Link to comment
Share on other sites

|||ஆங்காங்கே சிறிய நிகழ்வுகளை வைத்து நுழைவுச் சீட்டுகளை இலவசமாக விநியோகிக்கின்றார்கள்.|||

இது அநேகமாக பொய்யான தகவல்.

40 டொலர் சீட்டு 20 ரூபாவுக்கு விற்பனையாகின்றது.இது உண்மையான தகவல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்க ஊர் காரங்க தானே நீங்க தான் கெடுத்து சாரி எடுத்து சொல்லனும்னே

கார்த்திகை நாலாம் திகதி

FRANCE - புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தால் வருடாவருடம் நிகழ்த்தப்படும் தென்னங்கீற்று நிகழ்வு நடைபெறஉள்ளது.

பிரதம அததியாக பொன் சுந்தரலிங்கம் அவர்கள் கனடாவிலிருந்து வந்து கலந்து கொள்கின்றார்.

குறிப்பு: கார்த்திகை மாதம் முழுவதும் நிகழ்ச்சிகளை நடாத்தக்கூடாது என்பது காலதாமதமாகி தெரிய வந்திருப்பதால் அடுத்த முறை இது கவனத்தில் கொள்ளப்படும்.

நன்றி.

Link to comment
Share on other sites

ஆம், சுண்டல் மக்கள் இந்த நிகழ்ச்சிக்கு போகத்தான் போகிறார்கள். ஆயினும் கவலையை விடுங்கள்.

தேசியத்தின் பெயரில் இளையராஜா நிகழ்வை சிலர் எதிர்க்கின்றார்கள். பதிலுக்கு என் போன்றவர்களும் தேசியத்தின் பெயரிலேயே இளையராஜாவை ஆதரித்துப் பேசுகிறோம்.

போனாலும் தேசியம்தான். போகாது விட்டாலும் தேசியம்தான்.

Link to comment
Share on other sites

விசுகு, கார்த்திகை மாதம் முழுவதும் இப்படியான விழாக்களை நடத்தக்கூடாது என்பது உங்களுக்கு எப்படித் தெரிய வந்தது?

Link to comment
Share on other sites

கார்த்திகை நாலாம் திகதி

FRANCE - புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தால் வருடாவருடம் நிகழ்த்தப்படும் தென்னங்கீற்று நிகழ்வு நடைபெறஉள்ளது.

பிரதம அததியாக பொன் சுந்தரலிங்கம் அவர்கள் கனடாவிலிருந்து வந்து கலந்து கொள்கின்றார்.

குறிப்பு: கார்த்திகை மாதம் முழுவதும் நிகழ்ச்சிகளை நடாத்தக்கூடாது என்பது காலதாமதமாகி தெரிய வந்திருப்பதால் அடுத்த முறை இது கவனத்தில் கொள்ளப்படும்.

நன்றி.

அதெல்லாம் கவனத்தில் எடுக்கவே தேவைல்ல அந்த ஏழு நாளும் நிகழ்வுகளை தவிர்த்தால் நன்று

மற்றும்படி அந்த மாதத்தில் நிகழ்ச்சி நடத்த தடை இல்லை

Link to comment
Share on other sites

அப்படி இல்லை சுண்டல், நாங்கள் தேசியத்தின் பெயரில் வருகின்ற அறிக்கைகளுக்கு எல்லாம் தலையாட்டியே பழகி விட்டோம். கேள்விகள் கேட்டு எங்களுக்கு பழக்கம் இல்லை.

முதலில் ஒரு நாள் என்று அறிவித்து, பின்பு ஏழு நாள் என்று அறிவித்து, அதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களால் முதல் நான்கு நாட்கள் சாதரணமாகவும் பின்பு மூன்று நாட்கள் பெரிய அளவிலும் நினைவுகூரச் சொன்ன தலைவரை விட இங்கே நிறைய அறிவாளிகள் இருக்கிறார்கள். அவர்கள் ஒரு மாதம் விரதம் இருக்கச் சொல்வார்களாம். அவர்கள் சொன்னவுடன் இவர்கள் செய்வார்களாம்.

இப்படியானவர்கள்தான் தமிழீழம் எடுத்துத் தரப் போகிறார்களாம்.

Link to comment
Share on other sites

மற்றது இப்பிடியான ஊர் நிகழ்வுகள் மூலம் நீங்கள் உங்கள் ஊரில் சில அபிவிருத்திகளை செய்ய போகின்றீர்கள் நாளைய தமிழ் ஈழத்தின் ஒரு ஊர் அபிவிருத்தி ஆகின்றது என்பதனை நினைத்து உறங்கிக்கொண்டு இருக்கும் மாவீரர்கள் நிச்சயம் சந்தோஷப்படுவார்கள்

Link to comment
Share on other sites

நல்ல நிகழ்வுகள் எந்த நாளில் என்றாலும் நடக்கட்டும்.

2009 மே வரை தேசியத்தின் பெயரால் இங்கே உள்ள வியாபாரிகளை சகித்துக் கொண்டோம். மீண்டும் இவர்களை தேசியத்தின் பெயரில் வியாபாரம் செய்ய அனுமதிக்க முடியாது.

சுயமான சிந்தனை உள்ளவர்கள் வர வேண்டும். அவர்கள் ஒன்று கூடிப் பேச வேண்டும். தமிழர்களின் விடிவுக்கு தேவையான முடிவுகளை எடுக்க வேண்டும்.

அதை விடுத்து யாரோ ஒருவன் தூண்டி விடுவான். நாலு சங்கங்களின் பெயரில் அறிக்கை வரும். அதைக் கேட்டு நாம் தலையாட்டுவோமாம். வெட்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு, கார்த்திகை மாதம் முழுவதும் இப்படியான விழாக்களை நடத்தக்கூடாது என்பது உங்களுக்கு எப்படித் தெரிய வந்தது?

தேசியம் சார்ந்தும்

மாவீரர் சார்ந்தும்

மாவீரர் நாள் அல்லது அதையும் தாண்டி மாவீரர் வாரம் என்பதையே நான் அறிந்துள்ளேன்.

ஆனால் முள்ளிவாய்க்கால் இழப்பின் பின் கார்த்திகை மாதம் முழுவதையும் ஒரு ஆட்மபரமற்ற மாதமாக்கவேண்டும் என்ற கருத்து சில மக்களிடையே இருந்துவருவது உண்மை. ஆனால் அது நடைமுறைக்கு ஒவ்வாதது என்பதுடன் அப்படியொரு முடிவு எடுக்கப்படவில்லை என்பதும் தெரியும்.

அத்துடன் நாங்கள் பிரான்சிலிருந்து இயங்குவதனால் இங்கு எல்லோருக்கும் பல மாதங்கள் முன்பே எமது திகதிகளை கொடுத்துவிடுவோம். எமக்கு அப்படி ஒரு பதிலும் இதுவரை வரவில்லை.

எனவே

இது தொடரும்

ஆனால் தமிழ் மக்களால் கார்த்திகை மாதம் முழுவதையும் ஆடம்பரமற்ற மாதமாக அறிவிக்கப்பட்டால் அதை எமது ஒன்றியம் நிச்சயம் கவனத்தில் எடுக்கும்.

தமிழரின் தாகம்

தமிழீழ தாகம்.

நன்றி.

Link to comment
Share on other sites

விசுகு, உங்கள் விளக்கத்திற்கு நன்றி.

நீங்கள் சொன்னது போன்று சுதந்திரமான மக்களிடம் இருந்து இந்த சிந்தனைகள் வர வேண்டும். அப்படி வருகின்ற பொழுது, அதற்கு என்னுடைய ஆதரவு கட்டாயம் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மற்றது இப்பிடியான ஊர் நிகழ்வுகள் மூலம் நீங்கள் உங்கள் ஊரில் சில அபிவிருத்திகளை செய்ய போகின்றீர்கள் நாளைய தமிழ் ஈழத்தின் ஒரு ஊர் அபிவிருத்தி ஆகின்றது என்பதனை நினைத்து உறங்கிக்கொண்டு இருக்கும் மாவீரர்கள் நிச்சயம் சந்தோஷப்படுவார்கள்

தொடர்ந்து இவ்வருடமும் (2012)

[size=5]12 முன்பள்ளிகளுக்குமான நிர்வாகச்செலவு, [/size]

[size=5]15ஆசிரியர்களுக்கான வேதனமும், மற்றும் [/size]

[size=5]222 சிறார்களுக்கான மதியஉணவுக்குமாக[/size]

இலங்கை நாணயத்தில் ரூபா 804000 சர்வோதயத்தினூடக வழ‌ங்கப்பட்டது.

http://pungudutivufr...com/திட்டங்கள்/

நன்றி சுண்டல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு, உங்கள் விளக்கத்திற்கு நன்றி.

நீங்கள் சொன்னது போன்று சுதந்திரமான மக்களிடம் இருந்து இந்த சிந்தனைகள் வர வேண்டும். அப்படி வருகின்ற பொழுது, அதற்கு என்னுடைய ஆதரவு கட்டாயம் இருக்கும்.

நன்றி சபேசன்

ஒரு மாதிரி சிந்திக்கின்றோம்

அடிக்கடி கடி படுகின்றோம் :lol::D :D

Link to comment
Share on other sites

இது போட்டி வியாபாரம். ஒரு நாள் ஒரு மாதமாக்கப்பட்டுள்ளது. இவை எல்லாம் யார் எப்படி உருவாக்குகின்றார்கள் என்பது மர்மம். இன்று கார்த்திகை நாளை மேமாதம் பின்னர் இது தியாகி திலீபன் இறந்த நாள் மாதம் என்று தொடராது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. வருடம் முழுவதும் மாவீரர்கள் நினைவு தினங்கள் இருக்கின்றது. இவற்றை எல்லாம் நெறிப்படுத்த ஒரு ஒழுங்கான மக்களாதரவுபெற்ற அமைப்பும் இல்லை. புலம்பெயர் தேசங்களில் பெருகிக்கிடக்கும் ஊர்ச்சங்கங்கள் ஒன்றியங்கள் இதன் பின்விழைவில் அடித்துக்கொள்வது அடுத்து நடக்கும். கும்பல்ல கோவிந்த போடுவதுபோல் இந்தக் குடுமிச் சண்டைகளுக்குள் தமிழ்த்தேசியக் கோசம் இருக்கும்.

ஒரு ஒன்று கூடலை நிகழ்வை எப்படி தேசியத்தின் சார்பாக மாற்றுவது அல்லது அதனூடாக தேசியக் கருத்தியலை முன்னெடுப்பது என்று சிந்திப்பதே சாதகமானது. இது நிகழ்வை தடுத்து அடவடி எதிர்மறைத்தனமாக தேசியத்தை நிலைநாட்ட முற்படுவது தேசியத்துக்கு எதிரான செயற்பாடு. இங்கே தேசியம் என்ற பொதுத்தன்மையில் ஈடுபாடுகொண்டவர்கள் இரண்டாக பிழக்கப்படுகின்றார்கள். நிகழ்வுக்குப் போனவர் தேசியவாதியல்ல போகாதவர் தேசியவாதி. இது ஆரம்பம்தான் இனி இது தொடரும். இந்தக் குழப்பவாதிகளை விட டக்ளஸ் கருணா போன்றவர்கள் எவ்வளவோ மேல். தெளிவாக சிங்களவனின் பக்கம் நிற்கின்றார்கள். இரண்டும் கெட்டான் நிலையில் அவர்கள் இல்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "விடியல் உன் கையில்"     "இரவின் மடியில் விடியலுக்கு காத்திராதே விழிகள் திறந்தால் விடியல் உன் கையில்!"   நான் என் வீட்டின் மாடத்தில் தூணை பிடித்துக்கொண்டு நிற்கிறேன். என்னைச் சுற்றி என்ன நடக்குது என்று ஒன்றுமே புரியவில்லை. உள்ளத்தில் கொதிக்கும் வெப்பம் தாங்கமுடியாமல் இருக்கிறது. நான் இதுவரை சென்ற பாதை இப்ப குழப்பத்தை தருகிறது. நான் கீழே பார்க்கிறேன். வீதியின் ஓரத்தில் ஒரு சிவத்த மோட்டார் வாகனம் விடாமல் சத்தம் போட்டுக் கொண்டு இருக்கிறது. என் உள்ளமும் அதற்கு ஈடாக சிவந்து அலறிக் கொண்டு இருந்தது. இப்ப மாலை ஆறு மணி, இருட்ட ஆரம்பித்துக் கொண்டு இருந்தது. எனக்கு எரிச்சல் எரிச்சலாக இருந்தது. என் கண்கள் வீதியால் போகும் வாகனங்களை அங்கும் இங்குமாக நோட்டமிட்டபடி தொங்கிய தோள்களுமாக வாடிய முகமுமாக இருந்தது. என் இதயத்தில் ஒரு வெற்றிடம் விடிவு இன்றி தவிக்கிறது. அது என்ன ? என் தோல்வி தான் என்ன ? எது உண்மையில் என் வாழ்வில் பிழைத்தது? என் மனம் பல பல சிந்தனை வெள்ளத்தால் மூழ்கி, அவை ஒவ்வொன்றும் என்னைப் பார்த்து கத்திக்கொண்டு இருந்தன. அந்த வெறுமை என்னையே விழுங்கும் அளவிற்கு இருக்கிறது. அது தான் நான் உங்களுடன் என் கதையை இப்ப பகிர்கிறேன்.   நான் இலங்கையை விட்டு ஒரு அந்நியனாக லண்டன் வந்த நாளை இன்னும் மறக்கவில்லை. என் வாழ்வு ஒரு நோக்கம் கொண்டதாக, ஒரு பெரிய அந்தஸ்து நிலையில் என்னை அமைக்க ஆசைப் பட்டேன். அதை இந்த லண்டன் மாநகரம் எனக்கு தந்தது. நான் வந்து மூன்றாம் நாளே ஒரு பெரிய நிறுவனத்தில் உதவி முகாமையாளராக பதவி பெற்றேன். உண்மையில் என் நோக்கம் இதை விடப் பெரிது, என்றாலும் முதல் படியில் கால் வைத்தல் தானே ஏணியின் கடைசிப் படிக்குப் போகலாம் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அது மட்டும் அல்ல, நான் என் முழுக்கவனத்தையும் அந்த நிறுவனத்திலும் என் வேலையிலும் கட்டாயம் செலவழிக்க வேண்டும் என்பதும் தெரியும். ஆனால் என் முதல் தவறை, இப்ப என் உள்ளத்தை தாக்கும் வேதனை, சொல்லிக்கொண்டு இருக்கிறது!   நான் என் வாழ்வின் மற்ற விடயங்களில் பெரிதாக கவனம் செலுத்தாமல், வேலை, வேலை , என்றே இருந்துவிட்டேன். பதவி, பதவி இதுவே இதுவே என் முழு நோக்கமாக இருந்தது. இப்ப நினைத்தால் நான் முழு முட்டாள் என்று தோன்றுகிறது. வீடு வாங்கினேன், மோட்டார் வண்டி வாங்கினேன் , பதவி உயர்வு அடைந்தேன். என் செல்வாக்கு நல்ல அழகான பெண்ணை மனைவியாக்கியது. ஆனால் என்னை எதுவுமே திருப்தி செய்யவில்லை. நான் அந்த நிறுவனத்தின் தலைமை பதவியை அடையவேண்டும், என் செல்வாக்கு , அதிகாரம் அந்த நிறுவனத்தின் ஒவ்வொரு பங்கிலும் ஒலிக்க வேண்டும். அது வரை நான் ஓயப்போவதில்லை! அது தான் என் உள்ளத்தில் எதிர் ஒலித்துக்கொண்டு இருந்தது!   ஆனால் நான் மிகத் தவறு செய்தது இப்ப தான் புரிகிறது. நான் எனக்கு ஒரு மனைவி இருக்கிறாள், அவளுக்கும் ஆசைகள் இருக்கும் என்பதை மறந்தே விட்டேன்.   அந்தஸ்துக்கு ஒரு அழகிய மனைவி, கொலு பொம்மைமாதிரி இருப்பது வாழ்வு அல்ல என்பதை நான் கனவிலும் நினைக்கவில்லை. நான் குடும்பத்தில் இருந்து மனத்தளவில் மிகத் தூரவே இருந்துவிட்டேன். ஆமாம், முதல் இரவு நாம் சந்திக்கும் பொழுது அவள் எத்தனை எதிர்பார்ப்புடன் இருந்தாள் என்பதை, இப்ப தான் அவளின் நாட்குறிப்பில் இருந்து அறிகிறேன்.   'என் கணவர் வந்ததும் ஆரத்தழுவி அன்பு செலுத்துவார் என்று எத்தனையோ கனவு கண்டேன். நாம் முதல் முதல் தனிய ஒரு அறையில் சந்திக்கிறோம். பகல் முழுவதும் திருமண கொண்டாட்டம், நண்பர்கள் உறவினர்கள் வாழ்த்துக்கள் என கழிந்தது. இரவு ஆனதும் ஆனந்தமாய் மகிழ்திருக்கலாம் என்று ஏங்கி நின்றேன். ஆனால் அவரோ, தன் நிறுவனம் பற்றியும், அதில் தான் சம்பள உயர்வுடன் அடுத்த மாதம் புது பதவிக்கு போவதாகவும், நான் வந்த ராசி வேலை செய்வதாகவும் புகழ்ந்தாரே தவிர, இது எம் இருவரின் முதல் இரவு என்பதை எனோ மறந்து விட்டார். என்ன செய்வது கணவன் கதை கதைத்தான். கண் வெட்டாமல் அவனை நான் ரசித்து கொண்டு இருந்தேன். அவரின் பேச்சின் வலி கூட எனக்கு வலிக்வில்லை. அவரை கட்டிப் பிடிக்கும் தைரியம் எனக்கில்லை. மெல்ல வாய்திறந்து, நீங்கள் அழகாக இருக்கின்றீர்கள் என்று சொன்னேன். அவரோ எல்லாம் தன் பதவி தந்த அழகு என்றார்'. என்று குறிப்பிட்டு இருந்தார்!   எனக்கு அவளை மாதிரியே அழகிய பெண்குழந்தை மூன்று ஆண்டுகள் கழித்து பிறந்தது. அவளுக்கு அது ஒரு ஆறுதல், ஆனால் நானோ இன்னும் என் வேலையில் கடுமையாகவும், பதவி, அதிகார மோகம் அபின் மாதிரியும் என்னை அதில் அடிமையாக்கி விட்டதை நான் உணரவே இல்லை. அவள் பலதடவை தனக்கு மகன் வேண்டும் என்று கூறியதையே பொருட்படுத்தாமல், எல்லாம் என் முழு நோக்கம் அடையட்டும் என்று தள்ளி கடத்திவிட்டேன் . அது அவளை எவ்வளவு பாதிக்கும் என்று யோசிக்கவே இல்லை. நாளடைவில் நான் எனக்கே அந்நியனாகி விட்டேன்!   எட்டு ஆண்டுகளுக்கு பின் அவள் மனநிலை பாதித்து தன்னையே இழக்க தொடங்கிவிட்டாள். அவள் உடல்நிலை உருக்குலைய தொடங்கியது. என் மனைவி என்று நான் பெருமை பட்ட அழகு இப்ப அவளிடம் இல்லை. ஆனால் நான் இப்ப அந்த நிறுவனத்தின் தலைமை பதவியில் மிகப்பெரிய வசதிகளுடன், அதிகாரத்துடன் இருக்கிறேன். வைத்தியர் என்னிடம் வந்து அவள் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. அவளுக்கு நல்ல கணவனாக, அவளின் விருப்பு வெறுப்பு அறிந்து நெருக்கமாக அன்பு காட்டினால், அவள் விரைவில் குணமடைவார் என்றார்.   இப்ப என் பதவி, பொறுப்பு அதிகாரம் எல்லாம் மிக உச்சியில். எனக்கு நேரம் கிடைப்பதே குறைந்து விட்டது, ஏன், என்னையே இப்ப கவனிக்க முடியாத நிலையாகி விட்டது. அது தான் நான் இப்ப மாடியில் நின்று வெளியே பார்த்துக் கொண்டு இருக்கிறேன். கொஞ்சம் மாடியில் இருந்த கதிரையில் சாய்ந்து அயர்ந்துவிட்டேன். என் கன்னத்தை யாரோ தடவுவது போல ஒரு உணர்வு ஏற்பட்டு கண்விழித்தேன். என் ஐந்து வயது மகள் தான். நான் விழித்ததும் ஒரு முத்தம் தந்தார், மகளின் கண்ணில் கண்ணீர் ஒழுகிக்கொண்டு இருந்தது. அந்த கண்ணீர் பல கேள்விகளை என் மேல் கேட்டுக் கொண்டு இருந்தது. நான் என்றுமே நல்ல தந்தையாக மகளுக்கு இருந்தது இல்லை . ஆக இந்த ஐந்து ஆண்டும் தேவைக்கு அதிகமான விலை உயர்ந்த உடைகள், தேவைக்கு அதிகமான விலை உயர்ந்த விளையாட்டு சாமான்கள் இப்படி அளவற்று கொடுத்தேனே தவிர, ஒரு சொட்டு அன்பாக பேசியோ, விளையாடவோ, அணைக்கவோ இல்லை. எல்லாம் என் மனக்கண்ணில் ஓடிக்கொண்டு இருந்தது.   நான் என் மகளை தூக்கினேன். அவரின் கண்ணீரை துடைத்தேன். மகள் என்னை யாரோ ஒருவன் போல பார்த்தார். பின் ' அப்பா , அம்மா வருவாரா ?' என்று கேட்டார். நான் அவரை கட்டிப்பிடித்து ' கட்டாயம் வருவார், விடியல் பிறக்கும்' என்றேன். விடியல் என் கையில் தான் என்பதை, காலம் கடந்தாலும், மகளின் பார்வை, கண்ணீர் உணர்த்தியது. மகள் அதற்குப் பின் என் கையில் உறங்கிவிட்டார்.   இப்ப இருளாகிவிட்டது. அந்த இருண்ட வானில் அழகிய நிலவை பார்த்தேன். அது என் மனைவியின் முகம் மாதிரி எனக்கு தோன்றியது. இத்தனை நாளாக புறக்கணித்த என் வெறுமையை நிரப்பும் காலம் வந்துவிட்டது என்று நினைத்தேன். ஒரு தாள் எடுத்து, நான் இதுவரை முயன்று பெற்ற அந்த தலைமை பதவிக்கு விடை கொடுக்க, அதில் இருந்து விலகும் ராஜினாமா கடிதம் எழுதினேன், அதில் பிற்குறிப்பாக நான் அங்கேயே ஒரு சாதாரண ஊழியராக வேலை செய்ய விருப்பம் என்றும் குறிப்பிட்டேன், எனக்கு இப்ப மன நிம்மதி, மகளை கட்டிலில் கிடத்திவிட்டு, படுத்து இருந்த மனைவியின் பக்கத்தில் போனேன். குனிந்து அவளுக்கு ஒரு முத்தம் கொடுத்து, அவளின் தலையை என் மடியில் கிடத்தினேன், அவளின் கண்ணில் இருந்து அந்தக் கண்ணீர் என் மடியை நனைத்தது. அவளின் கையை வருடியபடி நான் என்றும் உனக்கு மட்டுமே கணவன், என் பதவியை, அந்த அதிகார மோகத்தை விவாகரத்து செய்துவிட்டேன் என்று கத்தியே விட்டேன்!     "விடியல் பிறக்கிறது, காற்றில் அதன் குரல் கேட்கிறது என் உலகம் விழிக்கிறது, மண்டியிட்டு உன்னைச் சந்திக்கிறேன் உன் மடியில் என் ஆத்மா இனி உறங்கட்டும் எம் வாழ்வு உன் கையில் இனிமையாகட்டும்!     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • நான் சொன்னது சத வீதத்தை அல்ல. நோட்டாவுக்கு கூட தனியாக சதவீதம் போட்ட தற்ஸ்தமிழ் அண்ணன் கட்சியை ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை என்பதை. வியஜ பிரபாகரன், செளமியா முன்னே வருவது போல் ஆசை காட்டி என்னை மோசம் செய்துவிட்டார்கள்🤣. போன சட்ட மன்றத்தேர்தலில் தமிழ் நாட்டில் 3 வது பெரிய கட்சி…. இப்போ 8 தொகுதியில் 3வது பெரிய கட்சி🤣.
    • "தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 15     எமது முன்னோர்கள் நல்ல மருந்து ஒன்றைக் கண்டு பிடித்து அதை உடல் நலியும் நேரத்தில் உண்மையாகக் கடைப்பிடித்து ஒழுங்காக நடை முறைப்படுத்தி நலத்துடன் வாழ்ந்து சென்றனர். அந்த அற்புத மருந்துக்கு பெயர் தான் உண்ணாவிரதம் ஆகும். மிருகங்கள் பொதுவாக தமது உடம்பு நோய்வாய் படும் பொழுது சாப்பிடுவதை நிறுத்தி விடுகிற உணர்வைப் பெற்று சும்மா இருந்து அதன் மூலம் அது குணமடைவதாக ஒரு குறிப்பு உண்டு.   எனவே மிருகத்தில் இருந்து பரிணமித்த மனிதனுக்கு அது தெரிந்து இருக்க அதிக வாய்ப்புண்டு. உதாரணமாக உண்ணாவிரதம் மூலம் தேகத்தில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியானது அதிக வலிமையடைதலும், அதனால் நீண்ட நாட்கள் நலமுடன் வாழுதல் ஆகும். அது மட்டும் அல்ல, இந்த உண்ணாவிரதம் குழப்பமில்லாத, பத்தியம் என்று கடுமையான விதி முறைகள் இல்லாத, மிகவும் பத்திரமான மருந்து எனலாம். மேலும் உண்ணா விரதத்தால், உடல் இலேசாக மாறுகிறது. தூய்மையடைகிறது. மூளை வளம் அதிகரிக்கிறது.   இன்று உண்ணாவிரதம் இருப்பது கணிசமான இதய ஆரோக்கியத்துக்கு வழி வகுத்து இருப்பதாக ஆய்வு மூலமாகவும் தகவல் வெளியிடப் பட்டுள்ளது.   "நோயிலே படுப்பதென்ன பெருமானே நீ நோன்பிலே உயிர்ப்பதென்ன பெருமானே"   என்று பாரதியும் பாடுகிறான். அதாவது ”நோய் வந்த போது நீ சோர்ந்து படுத்துக் கொள்கிறாய். ஆனால் நோன்பிருக்கும் போது உண்ணாதிருந்தும் மிகத்தெம்புடன் உற்சாகமாய் காணப்படுவதன் காரணம் என்ன” என்று வியக்கிறான் பாரதி.   உண்மையில் உண்ணா நோன்பு இருக்கும் போது உயிராற்றல் உடலில் உள்ள கழிவுப் பொருள்களை எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு வெளியேற்றி விடுகிறது. இதனால் உடலின் உறுப்புகள் தூய்மையடைகின்றன. மனமும் தூய்மை யடைகிறது. உண்மையாக உயிர்த்தெழ முடிகிறது என்று பாரதி சுட்டிக் காட்டுகிறான். நோன்பு அல்லது பசித்திரு என்றால் பட்டினி கிடப்பது அல்ல. வயிற்றைக் காயப்போடுதல் ஆகும். இதை சித்த ஆயுர் வேத மருத்துவர்கள் மிகச்சிறந்த மருந்து என்பார்கள். இல்லாமையால் பட்டினி கிடப்பதற்கும், எல்லாம் இருந்தும் உண்ணாமல் நோன்பு இருப்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. இது உடலுடன் நேரடியாக சம்பந்தப் பட்டது அல்ல, மனித உணர்வுடனும் அவனது ஆளுமையின் ஆற்றலுடனும் தொடர்புடையது. அவனுக்கு எல்லா வசதியும் இருந்தும், அவன் தன் புலன் அடக்க, உணர்ச்சி அடக்கி அதன் மூலம் அவனது உணர்வு விழிக்க, உயிர் ஒங்க, அவன் கடை பிடிக்கும் ஒரு ஒழுக்கம் அல்லது ஒரு செயல் முறை தான் இந்த விரதம் என்பது ஆகும்.   சுருக்கமாக விரதம் என்பது மனதை ஒரு முகப் படுத்தல் அல்லது புலன்களை அடக்குதல் என நாம் கூறலாம். மனிதரை நெறிப்படுத்துவதற்கும் முறைப்படுத்துவதற்கும் தோன்றிய நெறிகளில் ஒன்று இந்த விரதம் என்றும் கூறலாம். மேலும் இந்த நோன்பிற்கு சிறந்த அடையாளம் என்ன என்பதை பார்த்தால் அது கட்டாயம் அவனின் ஒழுக்கமாகத்தான் இருக்கும்.   பழமையான கலாச்சாரங்களில் [In primitive cultures], ஒரு போருக்கு போகும் முன்பு ஒரு ஒழுக்கத்தை பேண, மனதை ஒரு முகப் படுத்த, நோன்பு இருக்கும் படி பெரும்பாலும் கோரப்பட்டனர். அதே போல பூப்படைதல் சடங்கில் ஒரு பகுதியாகவும் நோன்பு இருந்ததும் குறிப்பிடத் தக்கது. ஒழுக்கத்தாலே எல்லாரும் மேம்பாட்டை அடைவராவர் அதனின்று தவறுதலால், அடையக் கூடாத பொருந்தாப் பழியை அடைவர் என்று திருவள்ளுவர் தனது குறள் 137 இல்   "ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி"   என்று கூறியது போல உயர்ந்தோர் என்பவர் ஒழுக்கத்திற்கு சிறந்தோர் என்பதையும் அதுவே தமிழர் பண்பு என்பதையும் நாம் மேலும் அறிகிறோம். இன்று நம்மில் பலர் விரதம் இருந்து வருவதாக கூறிவதை நாம் அன்றாட வாழ்க்கையில் கேட்க்கிறோம். ஆனால் எல்லோரும் தமது மனதை ஒரு முகப் படுத்துகிறார்களா அல்லது புலன்களை அடக்கு கிறார்களா விரத்தின் உயரிய அடையாளமான ஒழுக்கம் – நேர்மை அங்கு எல்லோரிடமும் இருக்கிறதா என்பது ஒரு கேள்விக்குறியே?   பொதுவாக விரதம் என்பது ‘மனவலிமை கொள்ளுதல் ‘ அல்லது ‘துன்பத்தினைத் தாங்குதல் ‘ என்றும் பொருள் கொள்ளலாம். தாமே துன்பத்தினை தாங்கிக் கொண்டு, தங்களை நெறிப்படுத்திக் கொள்ளும் நெறி இதுவாகும். இது ஒரு குறிக்கோளைக் கொண்டும் உள்ளடக்கியது.   உதாரணமாக அன்று சேர மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறைக்கும், சோழ அரசன் கரிகாலனுக்கும் சண்டை வந்தது. அந்தச் சண்டையில் பெருஞ்சேரலுக்கு முதுகில் அம்பு தைத்து காயம் ஏற்பட்டது. அதனால் அவர் நோன்பு இருந்து [வடக்கிருந்து] உயிர் துறந்தார். அன்று பெண்கள் தாம் விரும்பும் ஆடவனைக் கணவனாகப் பெறுவதற்காகத் தை நோன்பு நோற்று நீராடுவார்கள். அதன் வழியில் திருமாலை கணவனாக அடைய வேண்டி ஆண்டாளும் பாவை நோன்பு இருந்தாள்.   மேலும் உடலுக்கு நலம் விளைவிப்பதற்காக உண்ணாவிரதம் பொதுவாக இருந்தாலும், உலகின் பார்வையை தம்பக்கம் கவர்ந்திழுக்க, எதிரிகளைத் தங்கள் பக்கம் வசப்படுத்த, பல நிபந்தனைகளை பிறர் மேல் அல்லது நிறுவனங்கள் மேல் அல்லது அரசின் மேல் விதித்து வெற்றி பெற, உண்ணா விரத்ததைக் கடைபிடிப்பவர்களும் பலர் உண்டு. உதாரணமாக, இன்று மகாத்மாக காந்தி, ரொபேர்ட் ஜெரார்ட் சான்ட்ஸ் (Robert Gerard Sands, அல்லது பொதுவாக பொபி சாண்ட்ஸ் (Bobby Sands], திலீபன் என சிலர் தமது நாட்டின், இனத்தின் விடுதலைக்காக நோன்பு இருந்தனர், அதில் பொபி சாண்ட்ஸ், திலீபன் சாகும் வரை உண்ணா விரதம் இருந்து, தாம் கடைபிடித்த ஒழுக்கம்,நோக்கம் ஆகியவற்றில் இருந்து எள்ளளவும் விலகாமல் தம் விலை மதிப்பற்ற உயிரை அங்கு தியாகம் செய்தவர்கள் ஆவார்கள்.   ஒரு வேளை, ஒரு நாள் உண்ணாவிரதம் என்கிற போது, உடல் உறுப்புக்கள் ஓய்வு பெறுகின்றன. உல்லாசம் அடைகின்றன. பல நாட்கள் பட்டினி என்றால் உடல் என்ன செய்யும்? எவ்வாறு அந்த வறட்சியை சந்திக்கும்? அத்தகைய நிலைமைக்கு ஆளானவர்கள் இவர்கள் ஆவார்கள். ஆகவே நோன்பில் ஒரு ஒழுக்கம் ஒரு நோக்கம் காண்கிறோம்.   பொதுவாக இன்று மத நம்பிக்கை கலந்த ஒரு பண்பாடாக, மரபாக பல இனங்களால் பின்பற்றப் படும் ஒன்றாக நோன்பு அல்லது விரதம் காணப்படுகிறது. உதாரணமாக இஸ்லாமிய மக்கள் ‘ரம்ஜான்’ என்று ஒரு மாதம் நோன்பிருப்பதும், கிறித்தவர்களும் ‘லென்ட்’ (Lent is a time of repentance, fasting and preparation for the coming of Easter) என்று நோன்பு இருப்பதும், இந்துக்கள்,சைவர்கள் சிவராத்திரி, நவராத்திரி, கந்த சஷ்டி, தைப்பூசம் என பலதரப் பட்ட விரதம் இருப்பதும் ஆகும். நம் அலைபேசியோ அல்லது கணினியோ சற்று மெதுவாக வேலை செய்தால், நாம் அதை முற்றிலுமாக அணைத்து விட்டு, மீண்டும் மறுபடி அதை துவக்குவம் அல்லவா, அது போலத்தான் நம் உடலில் ஜீரண கோளாறு, இப்படி பல உபாதைகளுக்கு, நாம் முதலில் செய்ய வேண்டியது, உணவைத் தவிர்த்து அல்லது குறைத்து ஒரு ஒழுங்கை கடைபிடிப்பது ஆகும். இப்படி செய்வதால், உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகளை விரட்டி, ஆரோக்கியமான உடலை எளிதில் பெறலாம் என்பதும் குறிப்பிடத் தக்கது.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   பகுதி: 16 தொடரும்         
    • அப்ப  இனி அடிக்கடி ரெய்டு எனும் பெயரில் மோடி  கொள்ளை நடக்கும் .
    • தமிழகம் பாண்டிச்சேரியில் திமுக கூட்டணி 40/40 தொகுதிகளையும் கைப்பற்றி  க்ளீன் ஸ்வீப் செய்தது!
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.