Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாய்..நாய்..மைக்கைத் தூக்கிட்டு வந்துறீங்க.. அடிச்சுருவேன் பத்திரிகையாளர்களை கேவலமாக திட்டிய விஜயகாந்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை:

தேமுதிக எம்.எல்.ஏக்கள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தது பற்றி கேள்வி எழுப்பியதற்கு பத்திரிகையாளர்களை சகட்டு மேனிக்கு திட்டித் தீர்த்துவிட்டார் அக்கட்சி தலைவர் விஜயகாந்த். விஜயகாந்த் உடன் வந்த தேமுதிக எம்.எல்.ஏ. தாக்கியதில் மூத்த பத்திரிகையாளர் பாலு காயமடைந்தார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேற்று தேமுதிக எம்.எல்.ஏக்கள் சுந்தரராஜனும் தமிழ் அழகனும் சந்தித்துப் பேசினர். இதனைத் தொடர்ந்து தேமுதிகவில் பிளவு வெளிப்படையாக வெடித்தது.

இந்நிலையில் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் மதுரை செல்வதற்காக வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திடம் மூத்த பத்திரிகையாளர் பாலு கேள்வி எழுப்ப சட்டென கோபமடைந்து ‘போய்யா..போய்.ய்யா' என்று கடுப்பாக மிரட்டினார்.

ஜெயலலிதாவிடம் கேளுங்க...

பின்னர் மைக்குகளை நீட்டிக் கொண்டிருந்த பத்திரிகையாளர்களிடம் வந்த அவர், நாட்டுல எவ்ளோ பிரச்சனை.. மின்வெட்டை பத்தி பேசலாம்.. டெங்குவை பத்தி பேசலாம்.அதைவிட்டுவிட்டு.." என்று கூறிக் கொண்டிருந்தவரிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டனர் பத்திரிகையாளர்கள். இதில் ஆவேசமடைந்த விஜயகாந்த், போய் ஜெயலலிதாவை கேளுய்யா.. போய் அங்கெல்லாம் கேளுய்யா" என்று ஆக்ரோஷமாக கூறியதுடன் "அடிச்சிருவேன்" என்றும் கையை ஓங்கியபடி நிலையத்துக்குள் நுழைய முயன்றார்.

நாய்...நாய்..

அப்போது முதலில் விஜயகாந்த் கோபமாக பேசிய பத்திரிகையாளர் பாலு மீண்டும் கேள்வி எழுப்ப., நாய்.. நாய்களா... வந்துட்டாங்க..உங்க கம்பெனியா சம்பளம் கொடுக்குது.. பேட்டி கொடுக்க... என்று ஆவேசமாகக் கூறியபடியே சென்றார். அப்போது செங்கல்பட்டு தொகுதி தேமுதிக எம்.எல்.ஏ. முருகேசன் அந்த பத்திரிகையாளரைத் தடுக்க அவர் கீழே விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசில் புகார்

பத்திரிகையாளர் பாலு சென்னை விமான நிலைய காவல்நிலையத்தில் தம்மை தாக்கிய தேமுதிக எம்.எல்.ஏ. முருகேசன் மீது நடவடிக்காகை எடுக்கக் கோரி புகார் கொடுத்திருக்கிறார்.

http://tamil.oneindi...dia-163741.html

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

வளரணும்

  • கருத்துக்கள உறவுகள்

இவனெல்லாம் முதல்வராகி ......................

ஒரு வேளை அவர் சினிமா சூட்டிங் என்று நினச்சிட்டாரோ, பாவம் அந்தாளும் ரென்சன் தான்

[size=3]விஜயகாந்த் வீடியோவில் அவரைத்தவிர அந்த சபாரி போட்ட பத்திரிக்கையாளர் பேசியது எதுவுமே வரல....[/size]

[size=3]நீங்க பேசுனதுத மட்டும் தெளிவா கட் பண்ணீட்டீங்க பத்திரிக்கையாளர்களே.[/size]

[size=3]உன் பத்திரிக்கை நாயிடா, நாயி ..[/size]

# [size=3]வாழ்க்கையிலயே முதல்முறையா பொய் கலப்பில்லாத உண்மை பேசி இருக்கீங்க கேப்டன், வாழ்த்துக்கள் :) [/size]

Edited by VENDAN

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பத்திரிகையாளரிடம், எப்படி நடப்பது என்ற அடிப்படை அறிவு கூட... இவரிடம் இல்லை.

கடைசியாக நடந்த தேர்தல் பிரச்சாரத்தில்... தனது வேட்பாளரையே... பொதுமக்கள் முன்னிலையில் வைத்து அடித்தவர்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா பத்திகைகள் எல்லாம் இவரை நாய் கேப்டன் என்று அழைக்கத் தொடக்கி உள்ளன

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது காலம் மாறிவிட்டது. மீன் பிடி, பண்டி பிடி, முதலை பிடி நிகழ்சிகள் தான் முன்னுக்கு. கரப்பான் பூச்சி பிடி நிகழ்ச்சி கூட வந்துவிட்டது.

இப்படியான நிகழ்ச்சிகளை கண்டு களிப்பது எனது வழக்கம் ஐயா..!

[size=3]தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தால் தாக்கப்பட்டதாக கூறும் பாலு, செய்தியாளரே அல்ல. அவர் எந்த ஒரு தொலைக்காட்சிக்கோ அல்லது பத்திரிகைக்கோ பணியாளரும் அல்ல. விமான நிலையத்திற்கு வரும் அ.தி.மு.க, தி.மு.க உள்ளிட்ட கட்சி பிரமுகர்களின், உயர்மட்ட தலைவர்களின் சூட்கேஸ்களை எடுத்து கொண்டு வந்து கொடுத்து டிப்ஸ் வாங்கிச் செல்லும் ஒரு சுமைதாங்கி. அவ்வப்போது சில தொலைக்காட்சிகளுக்கும், பத்திரிகைகளுக்கும் தகவல்களை பறிமாறி அதனால் ஆதாயம் அடையும் ஒரு மிடில்மேன்.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

178670526vijaykantn.jpg

ஜெயலலிதாவின் நாடகத்திற்கு முடிவு கட்டுவேன் - விஜயகாந்த் சவால்

October 28, 2012 12:34 pm

lg-share-en.gif

தேமுதிக எம்.எல்.ஏக்களை தம்மை சந்திக்க வைத்து முதல்வர் ஜெயலலிதா நடத்தி வரும் நாடகத்துக்கு தாம் முடிவு கட்டுவேன் என்று அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் சவால் விட்டிருக்கிறார்.

சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை ஒருமையில் திட்டி, நாயே என்றெல்லாம் வசைபாடிவிட்டு அதே ஜோரில் மதுரை கோரிப்பாளையத்தில் நடைபெற்ற பக்ரீத் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜயகாந்த் பேசியதாவது:

சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களுடன் நடந்த பிரச்சினையை சில தொலைக்காட்சிகள் மீண்டும், மீண்டும் ஒளிபரப்புகின்றன. எனக்கு சினிமாவிற்கு வந்த காலம் முதல் பத்திரிகையாளர்களையும், தொலைக்காட்சி நிருபர்களையும் நன்கு தெரியும். ஒருவர் தன்னை நிருபர் என்று கூறிக்கொண்டு எம்.எல்.ஏ.க்கள் ஜெயலலிதாவை சந்தித்தது குறித்து கேள்வி எழுப்பினார். நாட்டிற்கு அதுவா பெரிய பிரச்சினை. டெங்கு, மின்தடை என்று எத்தனையோ பிரச்சினைகள் பொதுமக்களுக்கு உள்ளன. அதுகுறித்து கேளுங்கள் பதில் சொல்கிறேன் என்று கூறினேன். இது ஒரு தவறா?

என் கட்சிக்காரர்கள் ஓடியது பற்றி நான் கவலைப்படவில்லை. 28 பேரும் ஓடினாலும் பரவாயில்லை. நான் தனி ஆளாக நின்று சமாளிப்பேன்.

நான் கடந்த திமுக ஆட்சியில் ஒத்த ஆளாக நின்று சமாளித்தவன். இன்று 29 எம்.எல்.ஏக்களை கையில் வைத்திருக்கிறேன். பண பலத்தால் என் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குகிறார்கள். என் தொண்டர்களை விலைக்கு வாங்குகிறார்கள். என் கட்சி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கும் அளவுக்கு என் கட்சி வளர்ந்திருக்கிறது. ஆளுங்கட்சிக்கு திறமையில்லை. திரும்பவும் சொல்கிறேன். நான் மக்களையும், கடவுளையும்தான் நம்புகிறேன்.

போயஸ் வீட்டிற்கு முதலில் என் கட்சி எம்.எல்.ஏக்களை வரவழைத்து, பின்னர், தொகுதி சம்பந்தமாக சந்திப்பது போல் செய்துவிடலாம் என்று கோட்டைக்கு சந்திப்பை மாற்றியுள்ளனர். இந்த நாடகத்தை விரைவில் நானே முடித்துவைப்பேன்´´

ஜெயலலிதாவை என் கட்சி எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து இருப்பது ஒரு நாடகம். அதை ஜெயலலிதா தொடங்கி வைத்துள்ளார். ஆனால் எப்படி முடிக்க வேண்டும் என்பது எனக்கு தெரியும். இதனை பார்க்கும்போது தே.மு.தி.க. வளர்ந்துள்ளது என்று தெரிகிறது. நம்மைப் பார்த்து அவர்களுக்கு பயம் வந்துள்ளது. அது சந்தோஷம் அளிக்கிறது.

மின்சாரமே இல்லாத மாநிலத்தில் மின்விசிறி, மிக்சி, கிரைண்டர், லேப்-டாப் என்று இலவசமாக வழங்குகிறார்கள். அத்துடன் ஆடு, மாடுகளும். இதையா உங்களிடம் மக்கள் கேட்டார்கள்.யாரும் தவறு செய்தால் எனக்கு கோபம் வரும். ஆனால் கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும். மடியில் கனம் இருந்தால்தான் வழியில் பயம். எனக்கு எந்த பயமும் இல்லை. தமிழகத்தில் மக்கள் நினைத்தால் வெளிச்சம் வரும். அடுத்த தேர்தலின்போதாவது அ.தி.மு.க., தி.மு.க.வை தேர்வு செய்யாமல் இருங்கள். நல்லது நடக்கும் என்றார் அவர்.

http://www.adaderana.lk/tamil/news.php?nid=30581

  • கருத்துக்கள உறவுகள்

பத்திரிகைக்காரங்களுக்கு கேள்வி கேட்கிற இங்கிதம் தெரியல்ல.. அரசியல்வாதிக்கும் பதில் சொல்ல திராணியில்ல. நல்லாத்தான் நடக்குது சன நாய் அகம்..! :lol::D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.