Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனியாவது சொல்லிவிடு

Featured Replies

மலர்ந்துகொண்டே இருந்தவள் நீ 

வண்ணமும் வாசமும் தான் 
நாளுக்குநாள் மாறிக்கொண்டன.
நினைத்துக்கொண்டே இருந்தவன் நான் 
மலர்தலை தடுக்கவா முடியும். 
 
உன் விழிகள்  
ஏணியாகவும் இருந்தது _எனை 
தாலாட்டும் ஏணையாகவும் இருந்தது.
 
சிரித்தேன்.
கடந்தும் திரும்பி பார்த்தாய்.
விரும்பித்தானே பார்த்தாய்?
 
முடக்கில் போட்ட பனங்குத்தி  
மக்கி மடங்கும்வரை அரியாசனம்.
அப்புறமென்ன தரையே ஆசனம்.
கடந்து போனது நீ மட்டுமா,
காலமும் தான்.
 
பகிர்ந்த சில வார்த்தைகளில்
பொதிந்திருக்குமோ  என்றெண்ணி, 
பகுத்தறிந்து அதுவா இதுவா 
என்றங்கலாய்த்தல்லவா_என் 
அனேக அந்திகள் கலைந்தது. 
 
மாரடிக்கும் பெண்(டு)கள் கூட 
ஓய்ந்ததுண்டு_உனை 
தேடிதிரிந்த நான்?
 
எரிகல் விழுகையிலும் 
கல் எறிகையிலும் 
உன்னைத்தான் நினைக்கிறேன்._மறுநாள் 
என்ன நினைத்திருப்பாய்.
 
எப்பவாது உன்வீட்டு நாய் _உனை 
கொஞ்சி இருக்குமே!
கலைத்த போதும் அது கூட 
கடிக்கவில்லையே !!
 
சாத்துப்படி இல்லாத 
விக்கிரகம் நீ 
சரிந்தும் படுக்கவிடாத 
சாமக்கோழியும் நீ.
 
தவறியொருமுறை 
கண்ட கழுத்துகீழ் மச்சம்_இன்னும் 
கண்டத்து சனியாய் வதைக்குது.
எனை மீறி சிலநேரம் 
விழி தேடிப்போகுது.
 
தாடியை தடவியபடியே _உனை 
நினைப்பது சுகம்,
தனியே கிடந்தது 
சிரிப்பது அதிலும் சுகம்.
 
நீ எரிகிறாய் 
நான் புகைகிறேன் 
நெருப்பும் புகையும் 
ஒரே  இடத்தில் இருக்கவேண்டும்.
 
அறுகருசியோ 
வாய்க்கருசியோ_அருகில் 
நீ இருந்தால் காணும்.
 
இந்த எழுதுகோலில் நிரம்பி இருப்பது
யுன் இதழ் வடித்த நீரா?
என் கண்ணிதல் வடித்த துளியா?
 
உணர்ந்திருந்தோம். 
உணர்ந்திருப்பாய் எனநினைந்து, 
உரைக்கவில்லை 
நீயும் தான்.
 
இனியாவது சொல்லிவிடு!!!!!
 
 
 
 
 
 
 
 
 
 

 

கவிதையில் வார்த்தைகள் இயல்பாய் இதமாய் வருகின்றது. இந்தக் கவிதையை படித்தார் என்றால் சொல்லிவிடுவார்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை, அனுப்பிவிடுங்கள் சொல்லிடுவா

  • கருத்துக்கள உறவுகள்

காதலில் துணிவு வேண்டும் நேற்கெழுதாசன். அதைத்தான் பெண்கள் விரும்புவார்கள். துணிவுடன் கண்பார்த்துச் சொல்லிவிடுங்கள. காரியம் கைகூடிவிடும்.

முடக்கில் போட்ட பனங்குத்தி  
மக்கி மடங்கும்வரை அரியாசனம்.
அப்புறமென்ன தரையே ஆசனம்.
கடந்து போனது நீ மட்டுமா,
காலமும் தான்.
 
இங்கை...........  இங்கைதான் கொழுவியிருக்கிறியள் விரையமான காலத்தைப்பற்றி . காதலிலை துணிவு மட்டும் போதாது , இடம் பொருள் ஏவலும் வேணும் . படைப்புக்கு வாழ்த்துக்கள் நேற்கொழுதாசன் :) :) .
  • கருத்துக்கள உறவுகள்

கவிதை..இது கவிதை நேற்கொழு...

அவசரப்பட்டுக் கேட்டு அவதிப்படப் போறியள்... :o அனுபவத்தில சொல்லுறன். :(

கவனமப்பு....!!!

எனக்கு கசக்கிறது உங்களுக்கு இனிக்கலாம். :wub:  ஏதோ உங்கள் இஷ்டம்!
 

கவிதை அருமை. இதப் பார்த்திட்டு ஓகே சொல்லுவா. :D

ஆனா அதுக்குப் பிறகு உங்கள நினைச்சுத்தான் கவலையாக் கிடக்கு. :lol:

  • தொடங்கியவர்

கவிதையில் வார்த்தைகள் இயல்பாய் இதமாய் வருகின்றது. இந்தக் கவிதையை படித்தார் என்றால் சொல்லிவிடுவார்.

 

அப்ப இந்த கவிதை  எனக்கு பயன்படாது.யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கிறேன்.அண்ணே சண்ட மாருதன் நீங்கள் இன்னொருக்க முயட்சித்துப்பார்க்கலாமே????

நல்ல கவிதை, அனுப்பிவிடுங்கள் சொல்லிடுவா

 

அஹா அஹா உடையார் யாருக்கு அனுப்பவது?.....................அப்படி அனுப்ப ஒருவர் கிடைத்தாலும் ..........உதையெல்லாம் வாசிக்கணுமே ...................

காதலில் துணிவு வேண்டும் நேற்கெழுதாசன். அதைத்தான் பெண்கள் விரும்புவார்கள். துணிவுடன் கண்பார்த்துச் சொல்லிவிடுங்கள. காரியம் கைகூடிவிடும்.

 

ஊர்காதலை எல்லாம் சேர்க்கவும் பிரிக்கவும் திரிந்த எம்மை போன்றவர்களுக்கு சொந்த காதல் வருமா என்ன?அதில கண் பார்த்து வேற ம்ம்மம்மம்ம்ம்ம் சரி சரி இனியாச்சும் ஆராச்சும் அம்பிடாமலா போக போகினம் பாப்பம் பாப்பம் 

முடக்கில் போட்ட பனங்குத்தி  
மக்கி மடங்கும்வரை அரியாசனம்.
அப்புறமென்ன தரையே ஆசனம்.
கடந்து போனது நீ மட்டுமா,
காலமும் தான்.
 
இங்கை...........  இங்கைதான் கொழுவியிருக்கிறியள் விரையமான காலத்தைப்பற்றி . காதலிலை துணிவு மட்டும் போதாது , இடம் பொருள் ஏவலும் வேணும் . படைப்புக்கு வாழ்த்துக்கள் நேற்கொழுதாசன் :) :) .

 

எல்லா காதலர்களும் இப்படித்தானே காத்திருப்பதும்,காலம் கடப்பதும், ம்ம்ம்

இருந்தாலும் இந்த காதல் பற்றி பேசுவது எவ்வளவு இனிமையான விடயமாக இருக்கு என்ன.

கவிதை..இது கவிதை நேற்கொழு...

 

நன்றி சுபேஸ் அண்ணா.மனதுக்குள் எங்கோயோ ஒளிந்திருக்கும் ஒரு புள்ளியில் எனது வரிகளும் முட்டியிருக்கு போல .........

  • தொடங்கியவர்

அவசரப்பட்டுக் கேட்டு அவதிப்படப் போறியள்... :o அனுபவத்தில சொல்லுறன். :(

கவனமப்பு....!!!

எனக்கு கசக்கிறது உங்களுக்கு இனிக்கலாம். :wub:  ஏதோ உங்கள் இஷ்டம்!

 

கவிதை அருமை. இதப் பார்த்திட்டு ஓகே சொல்லுவா. :D

ஆனா அதுக்குப் பிறகு உங்கள நினைச்சுத்தான் கவலையாக் கிடக்கு. :lol:

 

அவசரப்பட்டும் பலனில்லை இனி   :mellow:

நினைவுகளில் இனிக்கிறது  :icon_idea:

இத பார்த்திட்டு சனியன் இன்னுமா திருந்தல்ல என்று திட்டுவாங்க  :icon_mrgreen:

கவிதையே பாராட்டிய பின் எனக்கும் கொஞ்சம் சந்தோசம்.நானும் எதோ எழுதுகிறேன் என்று. நன்றி கவிதை 

கவிதைஅழகு, நேற்கொழுதாசன்!

 

நன்றி புங்கையூரான். காதல் எந்தகாலத்திலும் இனிக்கும் போல ........

இன்னுமொரு நல்லதொரு உணர்ச்சி மயமான கவிதை! வெவ்வேறு பட்ட வார்த்தைகள் / வரிகள் எல்லாம் ஒன்றுடன் ஒன்று கலந்து புதிய உணர்வுகளைத் தருகின்றன.

 

 

முடக்கில் போட்ட பனங்குத்தி  
மக்கி மடங்கும்வரை அரியாசனம்.
அப்புறமென்ன தரையே ஆசனம்.
கடந்து போனது நீ மட்டுமா,
காலமும் தான்.
 

 

முதல் 3 வரிகளும் பின் வந்த இரண்டு வரிகளும் அழகாக பிணைகின்றன. அனுபவித்து எழுதுகின்றவர்களுக்கு மட்டும்தான் இது முடியும்.

 

 

சாத்துப்படி இல்லாத 
விக்கிரகம் நீ 
சரிந்தும் படுக்கவிடாத 
சாமக்கோழியும் நீ.

 

அழகான உவமானங்கள்....

 

தவறியொருமுறை 
கண்ட கழுத்துகீழ் மச்சம்_இன்னும் 
கண்டத்து சனியாய் வதைக்குது.
எனை மீறி சிலநேரம் 
விழி தேடிப்போகுது.

 

அழகியல் !

 

  • கருத்துக்கள உறவுகள்

நேற்கொழு உங்கள் கவிதைகளைப் படிக்கின்றபோதெல்லாம் கண்மூடித் தாயகத்தின் இயல்பான அந்த இனிய கனவுகளுடன் ஒன்றித்துப்போய்விடுகின்றேன். கண்விழித்துப் பார்க்கின்றபோது என்னையறியாமல் ஒரு வெறுமை, சோகம் கவ்விக்கொண்டு மீண்டும் மீண்டும் அந்தக் கனவுகளுக்காக உள்ளம் ஏங்குகின்றதாக உணர்கின்றேன். அதுதான் உங்கள் படைப்புக்களின் வெற்றியாகக் கருதுகின்றேன். வாழ்த்துக்கள்!

  • தொடங்கியவர்

இன்னுமொரு நல்லதொரு உணர்ச்சி மயமான கவிதை! வெவ்வேறு பட்ட வார்த்தைகள் / வரிகள் எல்லாம் ஒன்றுடன் ஒன்று கலந்து புதிய உணர்வுகளைத் தருகின்றன.

 

 

 

முதல் 3 வரிகளும் பின் வந்த இரண்டு வரிகளும் அழகாக பிணைகின்றன. அனுபவித்து எழுதுகின்றவர்களுக்கு மட்டும்தான் இது முடியும்.

 

 

 

அழகான உவமானங்கள்....

 

 

அழகியல் !

 

மிகவும் நன்றி நிழலி. எழுதுதல் என்பதைவிட,அதனை வாசித்து அனுபவித்தல் என்பது மிக மிக உயர்வானது.இயந்திரத்தனமாக எழுதிவிட முடியும். அந்தவகையில் உங்களின் கருத்திடல் ஆழ்ந்த வாசிப்பின் அனுபவத்தினை வெளிவிடுகிறது.மிகவும் சந்தோசமாக இருக்கிறது.

நேற்கொழு உங்கள் கவிதைகளைப் படிக்கின்றபோதெல்லாம் கண்மூடித் தாயகத்தின் இயல்பான அந்த இனிய கனவுகளுடன் ஒன்றித்துப்போய்விடுகின்றேன். கண்விழித்துப் பார்க்கின்றபோது என்னையறியாமல் ஒரு வெறுமை, சோகம் கவ்விக்கொண்டு மீண்டும் மீண்டும் அந்தக் கனவுகளுக்காக உள்ளம் ஏங்குகின்றதாக உணர்கின்றேன். அதுதான் உங்கள் படைப்புக்களின் வெற்றியாகக் கருதுகின்றேன். வாழ்த்துக்கள்!

 

நன்றி காவாலி. உங்களின் மனதிணை தொடும் வகையில் என் எழுத்துக்களும் இருப்பதையிட்டு மகிழ்கிறேன். தாய் நிலத்தின்  நினைவுகளில் இறங்குகையில் நானும் என்னை மறந்து விடுகிறேன் சகோ.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.