Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனக்குப் பின்னர் ஸ்டாலின்: கருணாநிதி

Featured Replies

சமுதாய எழுச்சிக்காக எனக்குப் பின்னர் ஸ்டாலின் பாடுபடுவார் என்று திமுக தலைவர் கருணாநிதி இன்று அறிவித்துள்ளார்.

 

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா, இனி கூத்துப்பார்க்கலாம் :D

  • கருத்துக்கள உறவுகள்
ஸ்டாலின்தான்... சொல்லி விட்டார் கருணாநிதி, என்ன செய்யப் போகிறார் அழகிரி?

 

சென்னை: திமுகவின் அடுத்த தலைவர் மு.க.ஸ்டாலின் என்பதை மீண்டும் ஒருமுறை திமுக தலைவர் கருணாநிதி மறைமுகமாக சுட்டிக்காட்டியிருக்கிறார். திமுகவில் அடுத்த தலைவர் யார் என்ற பட்டிமன்றமெல்லாம் இனி நடத்தத் தேவையில்லை என்பதாகவே கருணாநிதியின் பேச்சு அமைந்திருக்கிறது.

திமுகவைப் பொறுத்தவரையில் அண்ணாவுக்குப் பிறகு கருணாநிதியே தீர்மானிக்கக் கூடிய சக்தியாக உருவெடுத்திருக்கிறார். அண்ணா மறைவைத் தொடர்ந்து திமுகவில் சக்திவாய்ந்த தலைவராக எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டார். எம்.ஜி.ஆர். காலத்துக்குப் பிறகு 1990களில் வைகோ சக்தி வாய்ந்த தலைவராக உருவானார்.

 

ஆனால் அவரும் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். வைகோவுக்குப் பிறகு திமுகவில் கருணாநிதிக்குப் பிறகு மு.க.ஸ்டாலின்தான் என்ற நிலைமை உருவானது.

 

ஆனால் மதுரையை மையமாகக் கொண்டு செல்வாக்கு செலுத்தி வந்த கருணாநிதியின் மற்றொரு மகனான

மு.க. அழகிரியோ, அண்ணன் நானிருக்க தம்பிக்க முடிசூட்டுவதா? என கொந்தளித்தார். இதனால் திமுக இப்போது மு.க.ஸ்டாலின், மு.க. அழகிரி அணியாக பிரிந்து கிடக்கிறது. மதுரை நகரில் மு.க.ஸ்டாலினின் எந்த ஒரு நிகழ்ச்சிக்குமே அழகிரி ஆதரவாளர்கள் போவதில்லை. இதற்கான கட்டப்பஞ்சாயத்து அவ்வப்போது அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றும் வருகிறது.

 

இந்த நிலையில் கருணாநிதி தமக்குப் பிறகு ஸ்டாலினே என்று மீண்டும அறிவித்திருக்கிறார்.

 

கருணாநிதியின் சமயோசிதம் தான் இங்கும் விளையாடுகின்றது. தான் உயிருடன் இருக்கும் வரைக்கும் இன்னொருவர் தலைவராக திமுக விற்கு வரக்கூடாது என்ற புத்திதான் இதில் தெரிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் தோல்வியில் உடைந்து கிடக்கும் இந்த நிலைமையில்  இதை அறிவிக்கும் இவரது சாணக்கியம் வெல்லுமா?????

ஆனால் தோல்வியில் உடைந்து கிடக்கும் இந்த நிலைமையில்  இதை அறிவிக்கும் இவரது சாணக்கியம் வெல்லுமா?????

 

திமுகவிற்கு என்று ஒரு குறிப்பிட்ட ஒரு வாக்கு வங்கி இருக்கு. அதில் பெரியளவுக்கு மாற்றம் வராது.  அந்த வாக்கு வங்கியினை தொடர்ந்து காப்பாற்றத் தான் இவ்வகை அறிவிப்புகள்.

 

நடக்கப் போகும் லோக்சபா (பாரளுமன்ற) தேர்தலில் திமுக. காங்கிரசுடனும் விஜயகாந்த் கட்சியுடனும் இணைந்து தேர்தலில் போட்டியிட்டால் கணிசமான அளவுக்கு வெல்லும். 

  • தொடங்கியவர்

கருணாநிதிக்கு பின்னர்... கட்சியை அழிக்க வெளி சக்திகளை விட உள் சக்திகளே அதிகம் !

  • கருத்துக்கள உறவுகள்
திமுகவிற்கு என்று ஒரு குறிப்பிட்ட ஒரு வாக்கு வங்கி இருக்கு. அதில் பெரியளவுக்கு மாற்றம் வராது.  அந்த வாக்கு வங்கியினை தொடர்ந்து காப்பாற்றத் தான் இவ்வகை அறிவிப்புகள்.

 

நடக்கப் போகும் லோக்சபா (பாரளுமன்ற) தேர்தலில் திமுக. காங்கிரசுடனும் விஜயகாந்த் கட்சியுடனும் இணைந்து தேர்தலில் போட்டியிட்டால் கணிசமான அளவுக்கு வெல்லும். 

 

நான்  வைக்கோவுக்கும் சீமானுக்கும் பல வரவுகளை  எதிர்பார்க்கின்றேன்.

நான்  வைக்கோவுக்கும் சீமானுக்கும் பல வரவுகளை  எதிர்பார்க்கின்றேன்.

 

வைகோ வுக்கு இம்முறை திமுக / அதிமுக கட்சிகளில் கூட்டணி வைக்க சந்தர்ப்பம் கிடைப்பது அரிது. சீமானின் நிலை இதை விட மோசம். இருவராலும் பா.ஜ.க வுடன் சேர்ந்து கூட்டணி வைப்பதும் முடியாத விடயம்.

 

தமிழக மக்கள் பாரளுமன்றத் தேர்தலின் போது தேசிய கட்சிகளுக்குத் தான் அதிகளவு முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளனர். காங்கிரசா அல்லது பா.ஜ.க என்று பார்த்தால் தமிழக மக்களிடம் அதிக செல்வாக்கு கொண்டது காங்கிரஸ் தான். பா.ஜ.க ஒரு இடத்திலும் இதுவரைக்கும் வெல்லவில்லை.

 

கருணாநிதிக்கு பின்னர், திமுக சரியக் கூடிய சந்தர்ப்பம் அல்லது 2 / 3 ஆக உடையும் நிலை ஏற்பட்டால் வைகோவுக்கான ஆதரவு பெருமளவு அதிகரிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  நிழலி

(எனது எதிர்பார்ப்பில் வழமைபோல்  சுயநலம் அதிகமிருக்கும் :icon_idea: )

அ தி மு க,தி மு க இந்த இரண்டு கட்சியை விட வேறு கட்சிகள் தமிழ் நாட்டில் ஆட்சி அமைக்கும் சாத்தியம் இப்போதைக்கு இல்லை .தி மு க  இரண்டு மூன்றாக உடைந்தாலும் வை கோ தலைமையில் அவர்கள் போக போவதில்லை (ஒரு சிறு குழு போகலாம் ).வைகோ வின் அரசியல் நாலு, ஐந்தாம் இடம் தான் இனி தமிழ் நாட்டில் .

சீமான் விலை போகாமல் நடந்தால் ஒரு காலத்தில் முதல்வராகலாம் .

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் அர்ஜுன் அண்ணா உங்கள் கருத்து தான் என்பதும் வைக்கோ விற்கு சான்ஸ் இல்லவே இல்லை

  • கருத்துக்கள உறவுகள்
அ தி மு க,தி மு க இந்த இரண்டு கட்சியை விட வேறு கட்சிகள் தமிழ் நாட்டில் ஆட்சி அமைக்கும் சாத்தியம் இப்போதைக்கு இல்லை .தி மு க  இரண்டு மூன்றாக உடைந்தாலும் வை கோ தலைமையில் அவர்கள் போக போவதில்லை (ஒரு சிறு குழு போகலாம் ).வைகோ வின் அரசியல் நாலு, ஐந்தாம் இடம் தான் இனி தமிழ் நாட்டில் .

சீமான் விலை போகாமல் நடந்தால் ஒரு காலத்தில் முதல்வராகலாம் .

 

நன்றி

சீமானை  பலவிதமாக விமர்சித்தவர் தாங்கள்.

தங்கள் பார்வை  மாறியிருக்கின்றது என எடுத்துக்கொள்ளலாமா????

  • கருத்துக்கள உறவுகள்

பெரும்பாலான மாவட்ட செயலாளர்களும் ஸ்டான்லின் பக்கம் தான் தொண்டர் பலமும் இருக்கு சோ தி மு க விற்கு பொருத்தமான தலைவர் அவராக தான் இருக்க முடியும்

சீமான் கொஞ்சம் அடக்கி வாசிக்கப் பழகிவிட்டார்.  அதனாலதான் இந்த மாற்றம்.

  • கருத்துக்கள உறவுகள்

அழகிரி வெறும் வெத்து வெட்டு சும்மா தென்மாவட்டங்களில் கொஞ்ச பேரை வைத்துகொண்டு சௌண்டு விட்டிட்டு திரிற தொண்டர் பலம் அவளவு இல்லாத ஒருவர் மீடியா க்கள் தான் இன்னும் இன்னும் என்னை ஊற்றி விடுகின்றன எனினும் அதிகாரம் ஸ்டான்லின் கையில் வரும்போது அழகிரி ஆதரவாளர்களை எல்லாம் வளைத்து போடுவது வெகு சுலபம்

   நான் கட்சி தொடங்கினால் யாருக்கு பெரிய சவாலாக இருப்பேன்?

 

திமுக?

அதிமுக?

வைகோ?

  • தொடங்கியவர்

ஸ்டாலினுக்கு இப்போதைக்கு "தலைவர்' பதவி இல்லை: கருணாநிதி முடிவு

 

விரைவில், நடக்கவுள்ள உட்கட்சித் தேர்தலில், தி.மு.க., தலைவர் பதவிக்கு, ஸ்டாலின் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்புக்கு, நேற்று கருணாநிதி முற்றுப்புள்ளி வைத்தார்.ஸ்டாலினுக்கு இப்போதைக்கு தலைவர் பதவி இல்லை என்றும், வாழ்நாள் முழுவதும், தமிழ் சமுதாய மேன்மைக்காக, நான் பாடுபடுவேன்; எனக்கு பின், ஸ்டாலின் பாடுபடுவார் என, தி.மு.க., தலைவர் கருணாநிதி நேற்று திட்டவட்டமாக அறிவித்தார்.

 

 

தி.மு.க.,வில் உட்கட்சித் தேர்தல் விரைவில் துவங்கவுள்ளது. புதுப்பிக்கப்பட்ட மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை அட்டை, மாவட்டம் வாரியாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, ஜூன் மாதம், 3ம் தேதி, கருணாநிதிக்கு, 90வது வயது பிறக்கிறது. பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, கட்சியின் பொதுக்குழுக் கூட்டம், சென்னையில் நடக்கிறது.


அக்கூட்டம் கூடுவதற்கு முன், உட்கட்சித் தேர்தலை நடத்தி முடிக்க, தேர்தல் பணிக் குழு முடிவு செய்துள்ளது. பொதுக் குழுவில், தலைவர் மற்றும் பொதுச் செயலர், பொருளாளர், துணைப் பொதுச் செயலர்கள், மூன்று பேர் கொண்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.கட்சித் தலைவராக, மீண்டும் கருணாநிதி போட்டியிடுவாரா அல்லது பொருளாளர் ஸ்டாலினை தலைவராக்கி விட்டு, கட்சியின் வழிகாட்டுதல் குழுத் தலைவர் பொறுப்பை கருணாநிதி ஏற்பாரா என்ற கேள்வி, தொண்டர்கள் மத்தியில் நீண்ட நாட்களாக நிலவுகிறது.

 

அவ்வாறு, ஸ்டாலினுக்கு வழி விடுவதை, மத்திய அமைச்சர் அழகிரி, எம்.பி., கனிமொழி ஆகி‌யோர்ஒப்புக்கொள்வரா என்ற பரபரப்பும் தி.மு.க., வட்டாரத்தில் தொடர்ந்து வருகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில், சில மாதங்களுக்கு

முன், மத்திய அமைச்சர் அழகிரி, தலைவர் பதவிக்கு, நான் போட்டியிடத் தயார் எனக் கூறி, பரபரப்பை அதிகரித்தார்.


இதனால், தி.மு.க., தலைவர் கருணாநிதி, தன் பதவியை விட்டுக் கொடுத்தால், அந்த பதவிக்கு, அழகிரி, ஸ்டாலின் மத்தியில் போட்டி உருவாகுமா என்ற கேள்வியும் கட்சியினர் மத்தியில் எழுந்தது. சென்னையில் உள்ள தி.மு.க., தலைமை அலுவலகத்தில், வேலூர் மேற்கு மாவட்ட, பா.ம.க., செயலர் சாமுவேல் செல்லபாண்டியன் தலைமையில், 2,000 பேர், அக்கட்சியிலிருந்து விலகி, தி.மு.க.,வில் நேற்று இணைந்தனர். இந்த விழாவில் ‌பேசிய கருணாநிதி, அடுத்த தலைவர் யார் என்பதை வெளிப்படையாக அறிவித்தார்.

 

அழகிரி - கனிமொழி ஆதரவாளர்கள் அதிர்ச்சி :
விழாவில், கருணாநிதி பேசும் போது, இந்த சமுதாய மேன்மைக்காக, எழுச்சிக்காக, என் ஆயுள் இருக்கிற வரை பாடுபடுவேன். அப்படியானால், அதற்கு பின் என்ற கேள்விக்குப் பதில், இங்கே அமர்ந்திருக்கிற ஸ்டாலின் என்பதை, நீங்கள்மறந்து விடக் கூடாது, என தெளிவுபடுத்தினார்.கருணாநிதியின் இந்த அறிவிப்பால், அழகிரி மற்றும் கனிமொழி ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில், பொதுக் குழு கூட்ட முடிவில், ஸ்டாலினுக்கு தலைவர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த அவரது ஆதரவாளர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

http://tamil.yahoo.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B2-%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-204800193.html

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பின் மு.க.ஸ்டாலின் இருக்கிறார்#

 

 

முன்னாடி குஷ்பு இருக்காங்க! 
பக்கத்துல ப.சிதம்பரம் இருக்காரு
கடைசியில க.அன்பழகன் இருக்காரு.வீட்டுக்கு பக்கத்துல வீரமணி இருக்காரு.ஜன்னலோரம் ஜெகவீர பாண்டியன் இருக்காரு.அடிப்படியில அழகிரி இருக்காரு,கிணத்தடியில கனிமொழி இருக்காங்க!அடுத்த வீட்டுல ஆர்க்காடு வீராசாமி இருக்காரு,ப்ப்ப்ப்ப்ப்ப்பா பேய் மாதிரி இருக்கானு சொல்ல பக்கத்து தெருவுல கலாக்கா இருக்காங்க.நடு வூட்ல நமீதா இருக்காங்க!கண்ண மூடுனா கனவுல பெரியார் வராரு!
இப்படி அடிச்சி உடுங்க தலிவரே!
சாவர வரைக்கும் பதிவியிலில் உட்கார்ந்துகிட்டு பெத்த பிள்ளைக்குகூட விட்டுக்கொடுக்க மனசு இல்லை.
நீங்களாம் பெரிய மனுசன்!!!!

 

(FB)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

எனக்குப் பின்னர் ஸ்டாலின்: கருணாநிதி

C5EE6FFFD69C45993E8D03285A0DB.jpg

 

 

ஏன்...ஏன்? என்ரை செல்லம் கனிமொழிக்கு என்ன குறைச்சல்????

  • தொடங்கியவர்
ஏன்...ஏன்? என்ரை செல்லம் கனிமொழிக்கு என்ன குறைச்சல்????

2ஜி அலைவரிசை ஊழல்  :D

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோற்கலாம். ஆனால் சட்டசபைத்தேர்தலில் மீண்டும் திமுக முதலாம் அல்லது 2ம் இடத்தினைப் பிடிக்கும். திமுக ஸ்டாலின் அணி, திமுக அழகிரி அணி என்று பிரிந்து போட்டியிட்டால் அதிமுக மீண்டும் ஆட்சியைப்பிடிக்கும். இதில் அதிக இடங்களைப் பிடிக்கும் திமுக அணி(ஸ்டாலின் அணி)யில் அழகிரி அணியினர் தேர்தலுக்குப் பின்பு இணைவார்கள்.

  • தொடங்கியவர்

திமுக ஒன்றும் மடமில்லை : அழகிரி

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.