Jump to content

மேஜர் சோதியா 23ம் அண்டு நினைவு – விடியலின் சோதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
sothiyaa.jpg

 

 
 
 
 
 
சுகயீனமாக இருந்து வல்வெட்டித்துறை ஊறணி வைத்தியசாலையில் தங்கியிருந்த வேளை
1985இல் இந்தியாவில ஒரு பயிற்சிப் பாசறையில்… அம்மாவைப் பிரிந்து வந்த சில நாட்கள். கடல் பயணத்தால் உண்டான பதற்றம். 

பயிற்சி எடுப்பதற்காக நாம் அனுப்பப்பட்ட மலைப்பிரதேசம். இந்த மூன்றையுமே நான் இதற்கு முன்னர சந்தித்திருக்கவில்லை. இந்தத் தாக்கத்தின் விளைவாக எனக்கு காய்ச்சல் வந்துவிட்டது.

எமது பயிற்சிப் பாசறையில் அமைக்கப்பட்டடிருந்த கொட்டிலினுள் கம்பளிப் போர்வையால் போர்த்தபடி “அம்மா, அம்மா “ என முனகியவாறு படுத்திருந்தேன். மெவாக ஒரு கை என் போர்வையை விலக்கி, உடல் வெப்ப நிலையைப் பரிசோதிப்பதற்காக என் கழுத்தில் பதித்தது. கண்களை திறந்து பார்த்தேன். ஒர் அக்கா என் முன் நின்றார்.

“என்னம்மா செய்யுது என்ன, சாப்பிட்டீங்களம்மா காய்ச்சல் தானே. இப்ப மருந்து
தாறன். காய்ச்சல் உடனேபறந்து பொடும்” என்றார்.

அன்பான அம்மாவாகவும், கனிவான வைத்தியராகவும், நான் அன்று (மகளிர் படையணியின் முதலாவது தளபதியான)மேஜர் சோதியாக்காவைச் சந்தித்தேன்.

பயிற்சிப் பாசறையில இருந்தோரில், நான்உட்பட பெரும்பாலானோர் வயதில் சிறியவர்களாக இருந்தோம். அந்தச் சிறியவர்களுக்கு சோதியாக்கா அம்மாவாக விளங்கினார். நாம் எப்போதும் சோதியாக்காவைச் சுற்றி நின்று அவருக்கு கரைச்சல் கொடுத்துக் கொண்டு நிற்போம். அவரின் மடியில் கூட படுத்திருப்போம். ஒரு நாள்கூட சோதியாக்கா எங்கள் மேல் சினந்து வீழ்ந்தது கிடையாது.

பயிற்சிப் பாசறையில் எமக்கு நீண்ட நேரம பயிற்சிகள் நடக்கும். ஓடுவதில் இருந்து கயிறு ஏறுதல், மலை ஏறுதல் என்றெல்லாம் பயிற்சி நடக்கும். பயிற்சிகள் முடிந்ததும் எங்களது கொட்டில்கள் நோக்கி ஓடிவருவோம். கடுமையான பயிற்சி காரணமாக உடம்பெல்லாம் நோகும். வந்ததும்வராததுமாக கொட்டில்களுக்கு முன்னால் உள்ள ;மரங்களின் கீழ் வீழ்ந்து படுத்துவிடுவோம். சிலர் கிடைக்கின்ற கொஞ்ச நேரத்தில் நித்திரையாகி விடுவார்கள். இவ்வளவு பயிற்சிகளையும் எங்களுடன் சேர்ந்து எடுத்த சோதியாக்கா படுப்பாரா? இல்லை. அவருக்கு படுப்பதற்கோ, களைப்பாறுவதற்கோ நேரமே கிடையாது. எங்கள் பயிற்சியாளர்களில் காய்ச்சல், கால்நோ, கைநோ, வயிற்றுக்குத்து என்றும், கழுத்து, கால், கை உளுக்கி விட்டது என்றும் படுத்திருப்பவர்களுக்கு ஓடி ஓடி வைத்தியம் செய்வார். நோ உளுக்கு என்றவர்களுக்கு நோ எண்ணெய் போட்டுத் தேய்ப்பார். அதே நேரம் அவரின் நெற்றியால் வியர்வை சிந்தும். தனது கையால் அந்த வியர்வையை வீசி எறிந்துவிட்டு தனது கடமையைத் தொடருவார். அதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு கொட்டில் கொட்டிலாகச் சென்று, முதல் வருத்தமென்ற படுத்திருக்கின்ற தோழிகளுக்கு உணவு கொடுத்து, மருந்து கொடுத்து விட்டு விரைந்து வருவார். சோதியாக்காவின் நடை மிகவும் வேகமானது. ஆள் நல்ல உயரம் கால்களும் ;நீளமானவை. கால்களை எப்போதும் எட்டி எட்டி வைத்து வேகமாகத்தான் நடப்பார்.

நான் சோதியாக்காவின் வேகத்தையும் அவர் வியர்வை சிந்திச்சிந்தி தோளில் பயிற்சிக்குரிய மரத்துப்பாக்கியுடன் சக தோழிகளுக்கு செய்யும் சேவையையும் ;பார்த்துவிட்டு எனது தோழி கப்டன் ரஜனியிடம் கூறுவேன். “பாவமடி சோதியாக்கா…” அவளும் “ஓமடி” என்பார்.

உடனடியாக செய்யவேண்டிய முதலுதவிச சிகிச்சைகள் முடிந்ததும் சோதியாக்கா மருத்துவதுக்காக ஒதுக்கப்பட்ட கொட்டிலுக்குள் போவார். அங்கே மருந்து எடுப்பதற்கு வரிசையில் நிற்பார்கள். நாங்கள் எல்லோரும் போய்சாப்பிட்டுவிட்டு வருவோம். மருத்துவக் கொட்டிலுக்குள் போய் எட்டிப் பார்ப்போம். சோதியாக்கா மருந்து கொடுத்துக் கொண்டிருப்பார். “அக்கா வகுப்;பு தொடங்கப் போகுது. நீங்கள் சாப்பிடவில்லையா? போய் சாப்பிடுங்கோ அக்கா” என்போம். “இஞ்சை நிற்கிற இவ்வளவு பேருக்கும் மருந்து குடுத்து விட்டு போறேன்” என்பார். “அப்பா நாங்கள் சாப்பாடு எடுத்து வரவா அக்கா” என்றால் “அடி வாங்காமல் போங்கோ பார்ப்பம்” என்பார். எப்போதுமே சோதியாக்கா தனக்குரிய பணிகளை மற்றவர்களைக் கொண்டு ஒருபோதும் செய்விக்க மாட்டார். நாங்கள் சேதியாக்கா சொன்னதையம் மீறி சாப்பாடு எடுத்து வந்து கொடுப்போம். அந்தச் சாப்பாட்டை சாப்பிட நேரமில்லாது வைத்து மூடிவிட்டு வருவார். சில வேளை நின்றநிலையில் சாப்பிட்டுவிட்டு, வகுப்புக்கு வருவார். எப்போதும் சோதியாக்கா கடைசியாக வகுப்புக்கு வந்து ஆசிரியரிடம் மன்னிப்பு கேட்டு, வகுப்பறையில் இருப்பார். வகுப்பு நடந்து கொண்டிருக்கும்போது கூட ஆசிரியரிடம் சொல்லிவிட்டு கொட்டில்களில் வருத்தமாக படுத்திருப்பவர்களைச் சென்ற பார்த்துவிட்டு வருவார்.

சோதியாக்கா எங்களுடன் தான் பயிற்சி எடுத்தார். எங்கள் அனைவருக்கும் இருந்த அதேகளை, உடல் அலுப்பு அனைத்தும் அவருக்கும் இருந்ததுதான்.

அப்போதெல்லாம் நாங்கள் சோதியாக்காவைப் பார்த்து “பாவமடி சோதியாக்கா” என்று கதைப்போம். அவ்வளவு தான். அதற்கு மேல் யோசித்துப் பார்க்க எங்களுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. சிந்தித்துப் பார்க்கவும் முடியவில்லை. இப்போது அந்த சோதி வடிவமான சோதியாக்காவையும் ஓய்வு உறக்கமின்றி அவர் செய்த வேலைகளையும் சேவைகளையும் நினைக்கின்றபோது உண்மையிலே என் கண்கள் தானாகவே நீரைச் சொரிகின்றன. எப்படி சோதயாக்காவால் தன்னை வருத்தி இப்படியெல்லாம் செய்ய முடிந்தது. ஒரு உண்மையான விடுதலை வீரராங்கனை தன்னலமற்றவள் என்பதை எங்கள் சோதியாக்கா தன் வாழ்க்கை மூலம் மெய்ப்பித்துக்காட்டிவிட்டார்.

நாங்கள் தமிழீழத்திற்கு வந்த பின்னர் வன்னிப் பிராந்தியத்தில் ஒரு அடர்ந்த காட்டின் நடுவிலே தளம் அமைத்திருந்தோம். அங்கே எமக்கு ஒரு கிணறு தேவைப்பட்டது. நாங்களே கிணற்றை வெட்டினோம். அந்த நேரம் எமக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது. கஞ்சியையும், ரொட்டியையம் சாப்பிட்டுச் சாப்பிட்டுக் கிணறு வெட்டினோம். தண்ணீரோ வருவதாகத் தெரியவில்லை. இதனால் மிகவும் சோர்வடைந்து போன நாங்கள் அந்த கடினமான சூழலில் தொடர்ந்து நின்று பிடிக்கும் வலுவை இழக்கத் தொடங்கினோம். அதன் விளைவாக தெளிவில்லாத கதைகளை கதைத்தோம். இதை அவதானித்த சோதியக்கா, கதைத்த எங்கள்அனைவரையும் கூப்பிட்டு, எங்களின் மனம் தெளிகின்ற அளவுக்கு போராட்டத்தைப் பற்றிய விளக்கம் தந்தார். நாங்கள் Nசுhதியக்காவின் விளக்கத்தினால் புது வேகம் பெற்று புத்துணர்ச்சியோடு மீண்டும் சோதியக்காவோடு சேர்ந்து நின்று கிணற்றைத் தோண்டி தண்ணீரையும் கண்டோம். துள்ளி எழுந்து சோதியக்காவின் தோளில் தொங்கிக்கொண்டு நின்று கூக்குரலிட்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்து குதூகலித்தோம்.

காட்டில் இருக்கும் காலத்தில் எங்களுக்குரிய உணவுகளை நீண்ட தூரத்தில் இருந்து மூட்டைகளாக தலையிலும், தோளிலும் சுமந்து கொண்டு வந்து தளத்தில் சேர்த்தோம். மூட்டைகளை சுமந்து வர எல்லோருமே செல்வோம். சோதியக்காவும் எங்களுடன் வருவார். அரிசி, மா, சீனி என்றும் உப்பு, புளி, பருப்பு என்று மூட்டை மூட்டையாகச் சுமந்து வந்தோம். சோதியக்கா எல்லோருடைய தலைகளிலும் பாரங் குறைந்த மூடைகளைத் தூக்கி வைத்துவிடுவார். சோதியக்கா மிகவும் உயரம் என்றதால் எல்லோரும் பொதிகளைத் தூக்கி தலையில் வைக்கச் சோதியக்காவையே அழைப்போம். மிகவும் களைத்தால் வரும் வழியில் மூடைகளை கீழே போட்டுவிட்டு இளைப்பாறுவோம். சோதியக்கா வந்து மீண்டும் தூக்கி விடுவார். தளத்துக்கு வந்ததும் மூட்டைகளை போட்டுவிட்டு ‘கழுத்துக்கை பிடிக்குது, தோள் நோகுது” என்றபடி மரங்களின் கீழ் அமர்ந்து இரண்டு மூன்று பேராக கதைப்போம். சோதியக்கா ஒரு கூழா மரத்தின் கீழ் இருப்பார். சோதியக்காவுக்கு அந்த மரத்தின் அமைதி சரியான விருப்பம். அதனால் அந்த மரத்தின் கீழே தான் வழமையாக இருப்பார்.

ஒருநாள் நானும் கப்டன் ரஜனியும் உப்பு மூடைகள் தூக்கி வந்தோம். இரண்டு பேருக்கும் கழுத்துக்குள் உளுக்கிவிட்டது. விக்கி விக்கி அழத்தொடங்கினோம். எங்களுக்கு எப்போதாவது ஏதாவது துன்பம் என்றால் சோதியக்காவுக்கு அருகில்தான் இருப்போம். அன்றும் அதே மாதிரித்தான் கப்டன் ரஜனி சொன்னார் ‘நாங்கள் துவக்கு எடுத்து ஆமியோடை சண்டை பிடிக்க மட்டும் தான் வந்தனாங்கள், இப்படி மூட்டை தூக்க வேணும், கிணறு வெட்டவேணும் எண்டு தெரிந்திருந்தா வந்திருக்கமாட்டோம்” என்றார். அதற்கு நானும் ‘ஓமடி நானும் அப்படி நினைச்சுத்தான் வந்தனான்” என்றேன். எங்களின் இந்த உரையாடலை மேலே தொடரவிடாமல் இடை நிறத்தினார் சோதியக்கா. ‘இஞ்ச, நீங்க இரண்டு பேரும் ஆகச் சின்னப் பிள்ளைகள் மாதிரிக் கதைக்காதையுங்கோ. போராட்டம் எண்டா கஸ்ரம்தான். முள்ளும், கல்லும் நிறைஞ்ச பாதையில போய்த்தான் நாங்க தமிழீழம் பிடிக்க வேணும்” என்றார். நான் உடனே சொன்னேன் “ஓமக்கா நீங்க சொல்லுறது சரிதான். நாங்க மூடை தூக்கப் போற ஒற்றையடிப் பாதையில காலில குத்துற முள்ளும் கல்லும் எங்களோடையே சேர்ந்து வருது. அதோட பெரிய முள்ளெல்லாம் எங்களை பாவம் பார்த்து போகவேண்டாமெண்டு பிடிச்சு பிடிச்சு இழுக்குதுகள்” என்றேன். உடனே சோதியக்காவுக்கு கோபத்தில் முகம் சிவந்தது. ‘நான் சீரியசாக கதைக்கிறன். நீ பகிடி விடுகிறாய் போ. எனக்கு முன்னால் நிற்காதே” என்றார். ‘இல்லையக்கா இனிமேல் நான் இப்படிப் பகிடிவிடமாட்டேன்” எனக் கெஞ்சிய போது தொடர்ந்து எங்களுக்கு போராட்டத்தைப்பற்றி விளக்கமளித்தார்.

‘உதாரணமாக நாங்கள் வீட்டில் இருக்கிற நேரம் பள்ளிக்கூடத்தில முதலாம் வகுப்பு படிச்சுப் போட்டு திடீரென்று பத்தாம் வகுப்புக்கு போறதில்லை. படிப்படியாக ஒவ்வொரு வகுப்பாப் படிச்சு முன்னேறிப் போவம். அதேமாதிரித்தான் எங்கட போராட்டமும். இப்ப நடந்து போய் தலையில மூடை தூக்கிறம். கொஞ்சக் காலத்தில டிராக்டரில கொண்டு வருவம். இப்படியே நாங்கள் வளர்ச்சி அடைஞ்சு எங்கடை தமிழீழத்தை அடைவம். அதற்கிடையில நீங்க குழப்பமான கதைகளை கதைச்சு உங்களை நீங்களே குழப்பாதேங்கோ என்று தொடங்கி ஒரு நீண்ட விளக்கத்தை எனக்கும் ரஜனிக்கும் சோதியக்கா கூறினார். சோதியக்காவின் விளக்கத்தால் நாங்கள் மிகவும் தெளிவடைந்தோம். பின் நானும் ரஜனியும் உணவு மூடைகளை சுமப்பதிலும் கிணறு வெட்டுவதிலும் முன்னுக்கு நின்றோம். இதற்கு முழுக் காரணமாக இருந்தவர் சோதியக்காதான்.

முகாமில் இருக்கும்போது, காடுகளில் பாசறை அமைத்து வாழ்ந்தபோது நாங்கள் எங்களுக்குள் ஒருவருடன் ஒருவர் நன்றாகச் சண்டை பிடிப்போம். சண்டை பிடித்தபின் மூன்று நான்கு நாட்களுக்கு கதைக்காமல் ஒருவரை ஒருவர் கண்டால் முகத்தைத் திருப்பிக்கொண்டு நிற்போம். இயக்கத்தில் இணைந்து அப்போது கொஞ்சக் காலந்தான். வீட்டுப் பழக்கங்கள் பெரும்பாலும் அப்படியேதான் இருந்தன. வீட்டில் தம்பி, தங்கையுடன் குத்துப்பட்டு, கூத்தாடி, சண்டை பிடித்துச் சண்டை பிடித்துப் பழகிப் போனது தானே. இயக்கத்தில் வந்தும் ஒரு கூட்டு வாழ்க்கையைச் சந்திப்போம். இந்த வாழ்க்கையை இதற்கு முன் எப்போதுமே சந்தித்திருக்கவில்லைதானே. வீட்டில் ஐந்து ஆறு பேருடன் இருக்கும்போதே குத்துப்பட்டு சண்டைபிடித்த நாங்கள், நூற்றுக்கணக்கானவர்களுடன் ஒன்றாக இருந்தால் எப்படி இருப்போம்?

சண்டை பிடிப்பவர்களையும், ஒருவரோடொருவர் கதைக்காமல் இருப்பவர்களையம் சோதியக்கா கூப்பிட்டு அறிவுரைகள் கூறிக் கண்டிப்பார். ‘இஞ்ச வாங்கோ இரண்டு பேரும். ஏன் ஒருத்தரோட ஒருத்தர் கதைக்காமல் இருக்கிறியள் இந்தப் பழக்கம் எல்லாத்தையும் வீட்டில விட்டுட்டு வந்திட்டம். ஒரு இலட்சியத்துக்காகத் தான் எல்லாரும் சேர்ந்திருக்கிறம். இஞ்ச அம்மா, அப்பா பந்த பாசங்கள் எல்லாமே ஒருத்தருக்கு ஒருத்தர் நாங்க தான். ஒருத்தரை ஒருத்தர் தெரியாத நாங்க ஏன் ஒண்டாயிருக்கிறம். எங்கட மண்ணில் இருந்து அன்னியனை துரத்தியடிச்சு எங்கட மண்ணை மீட்டெடுக்கத்தானே” இப்படி தெளிவான விளக்கம் மணிக்கணக்கில் சோதியக்கா தருவார்.

சோதியக்காவின் விளக்கத்தால் தெளிவடையும் நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்து அர்த்தமான சிhப்பொன்றை சிரித்துவிட்டு ‘இனிச் சண்டை பிடிக்கமாட்டோம்” எனச் சோதியக்காவிடம் சொல்லிவிட்டு தெளிந்த மனத்துடன் எழுந்து செல்வோம். அந்த மூன்று வருட காலத்தில் நான் சோதியக்காவிடம் நிறையப் படித்துக் கொண்டேன். எங்களுக்கு நிறைய அறிவுரைகள் கூறுவார். ஷகுழப்படிகள்| என்று கொஞ்சப்பேர் இருந்தோம். இவர்களில் கப்டன் ரஜனி, கப்டன் தமயந்தி, கப்டன் ஆசா, மேஜர் தாரணி, 2ம் லெப் மாலதி என்று பலர் அடங்குவர். இந்தக் குழப்படிகளைத் தனது அன்பான கண்டிப்புக்களாலும் அறிவரைகளாலும் மேஜராக, கப்டனாக, லெப்டினன்டாக வளர்த்து விட்டவரும் வளர்வதற்குக் காரணமாக இருந்தவரும் மேஜர் சோதியக்காதான்.

எங்களின் தாயாக, தாதியாக, ஆசிரியையாக இவ்வளவுக்கும் அப்போது சோதியக்கா சாதாரண ஒரு போராளியாகத்தான் இருந்தார். வழமையாக எங்களுக்கென பொறுப்பாக விடப்படும் போராளிதான் எல்லாவற்றிலும் பொறுப்பாகச் செயல்படுவார். ஆனால்….. எங்களின் சோதியக்கா வித்தியாசமானவர்….

- ரதி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைக்கு தம்மை அர்ப்பணித்த இந்த மாவீரர்களுக்கு நினைவு நாள் வணக்கங்கள் !!!

Edited by தமிழரசு
Link to comment
Share on other sites

தாயக மீட்புக்காக தம் உயிரை ஈகம் செய்த இந்த வீர மறவர்களுக்கு வீரவணக்கம் .
 

Link to comment
Share on other sites

வீரவணக்கம்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள்


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் வீரவணக்கங்கள் உரித்தாகட்டும்.

Link to comment
Share on other sites

394897_370922656336637_146711791_n.jpg

Link to comment
Share on other sites

வீர வணக்கங்கள்!

Link to comment
Share on other sites

  • 6 years later...


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 26 APR, 2024 | 09:33 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) மாற்றுத்திறனாளிகளுக்கு  வழங்கப்படும் உதவித்தொகை கொடுப்பனவு  5000 ரூபாவிலிருந்து  7500 ரூபா  வரை அதிகரிக்கப்பட்டாலும் அவை குறித்த திகதிகளில் கிடைப்பதாக இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் சமூகத்தை இவ்வாறான சிரமங்களுக்கு உள்ளாக்காமல் இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (26) பிரதமரிடம் இந்தக் கோரிக்கையை விடுத்த அவர் மேலும் பேசுகையில், பொது நிர்வாக சுற்றறிக்கை 1988/27இன் பிரகாரம், அரச நிறுவனங்களில் வேலைவாய்ப்பை வழங்கும்போது மாற்றுத் திறனாளிக்கு 3 வீத  வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என இருந்தாலும், அது இன்று வரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் குறித்து புதிய சட்டமூலம் கொண்டுவரப்படும் என்று கூறப்பட்டாலும் இதுவரை அது கொண்டுவரப்படவில்லை. குறித்த புதிய சட்டமூலம் சமர்ப்பிக்கப்படாமைக்கான காரணங்கள் என்ன? சனத்தொகை கணக்கெடுப்பின் பிரகாரம், இந்நாட்டில் 17 இலட்சம் மாற்றுத்திறனாளிகள் இருக்கின்றனர்.  இவர்களது உரிமைகள் தொடர்பில் பல முறை கேள்வியெழுப்பியுள்ளேன். சைகை மொழி சட்டத்தைப் பாராளுமன்றத்தில் கொண்டு வந்து அதை நாட்டின் சட்டமாக மாற்றுங்கள். பொது இடங்களில் மாற்றுத்திறனாளிகள் பிரவேச  அணுகல் விடயத்தில் பிரச்சினைகளைச் சந்தித்து வருகின்றனர். மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கு வற்  வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டாலும், சந்தையில் தட்டுப்பாடு நிலவுகிறது. அவற்றுக்கான தீர்வுகளை வழங்குங்கள். அதுமட்டுமல்லாமல் இவர்களின் காப்புறுதி குறித்து அவதானம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார். https://www.virakesari.lk/article/182038
    • KKR vs PBKS: பேர்ஸ்டோ விஸ்வரூபம், வெலவெலத்துப் போன கொல்கத்தா - பஞ்சாபின் வரலாற்று சேஸிங் பட மூலாதாரம்,SPORTZPICS கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 2024 ஐபிஎல் சீசனில் ஒரு அணி 250 ரன்களுக்கு மேல் அடித்தாலும் அது பாதுகாப்பில்லாத ஸ்கோர் என்பது நேற்றைய பஞ்சாப் - கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் தெரிந்துவிட்டது. 'என்ன அடி... என்ன மாதிரியான ஷாட்கள்...' என்று ரசிகர்களைப் பிரமிக்க வைத்த ஆட்டம் நேற்று நடந்தது. களத்தில் நீயா-நானா பார்த்துவிடலாம் என்ற ரீதியில் கொல்கத்தா அணி வீரர்களும், பஞ்சாப் வீரர்களும் மோதினர். இரு அணி பேட்டர்களின் பேட்டில் இருந்து சிக்ஸர்களும், பவுண்டரிகளும் பறந்தவாறு இருந்தன. கொல்கத்தாவில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தில் மட்டும் 37 பவுண்டரிகள், 42 சிக்ஸர்கள், 523 ரன்கள் சேர்க்கப்பட்டன. ஏறக்குறைய 10 ஓவர்களை ரசிகர்கள் வானத்தைப் பார்த்தவாறு அமர்ந்திருந்திருக்கும் அளவுக்கு பந்துகள் சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் பறந்தவாறு இருந்தன. இதுவரை ஐபிஎல் டி20 தொடரில், டி20 போட்டிகளில் சேஸிங் செய்ய முடியாத ஸ்கோரை அடைந்து, பஞ்சாப் கிங்ஸ் அணி புதிய வரலாறு படைத்துள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 42வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது பஞ்சாப் கிங்ஸ். முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் சேர்த்தது. 262 ரன்கள் என்னும் கடின இலக்கைத் துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணி 2 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் சேர்த்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் 8 பந்துகள் மீதமிருக்கையில் வென்றது.   வரலாற்று சேஸிங் பட மூலாதாரம்,SPORTZPICS ஐபிஎல் டி20 போட்டியில், உலக டி20 வரலாற்றில் இதுவரை எந்த அணியும் 261 ரன்களை சேஸிங் செய்தது இல்லை. ஆனால், அதையும் 8 பந்துகள் மீதமிருக்கும்போது சேஸிங் செய்து பஞ்சாப் கிங்ஸ் டி20 கிரிக்கெட்டிலும், ஐபிஎல் டி20 லீக்கிலும் புதிய வரலாற்றையும், சாதனையையும் படைத்துள்ளது. கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகளை இழந்து சேர்த்த ஸ்கோரை பஞ்சாப் அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து சேஸிங் செய்து சவால்விட்டது. பஞ்சாப் கிங்ஸ் பேட்டர்கள் பேர்ஸ்டோ, சஷாங் இருவரும் நேற்று இருந்த ஃபார்முக்கு 285 ரன்களைக்கூட சேஸிங் செய்திருப்பார்கள். இருவரும் மதம்பிடித்த யானை போல் பேட்டால் கொல்கத்தா பந்துவீச்சாளர்களை வதம் செய்தனர். சவாலாக மாறும் பஞ்சாப் இந்த வெற்றியால் பஞ்சாப் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் பெரிதாக முன்னேற்றம் ஏதும் அடையவில்லை என்றாலும், பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றி, மற்ற அணிகளுக்கு அச்சத்தைத் தரும். அடுத்து வரும் போட்டிகளில் பஞ்சாப் அணி தொடர் வெற்றி பெற்றால், ப்ளே ஆஃப் சுற்று இன்னும் கடும் போட்டி நிறைந்ததாக மாறிவிடும். பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றியால் 9 போட்டிகளில் 3 வெற்றி, 6 தோல்வி என 6 புள்ளிகளுடன் 8வது இடத்தில் இருக்கிறது. நிகர ரன்ரேட் மைனஸ் 0.187 என்ற ரீதியில் இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பஞ்சாப் அணி பெறும் வெற்றி, புள்ளிப் பட்டியலில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரக்கூடும். கொல்கத்தா அணி இந்தத் தோல்வியால் 2வது இடத்திலிருந்து சரியவில்லை. ஆனால் அந்த அணியின் நிகர ரன்ரேட் சரிந்துவிட்டது. இதற்கு முன் ஒரு புள்ளிக்கு மேல் நிகர ரன்ரேட் வைத்திருந்த கொல்கத்தா இந்தத் தோல்வியால் 0.972 ஆகக் குறைந்துவிட்டது. கொல்கத்தா அணி 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்வி என 10 புள்ளிகளுடன் 2வது இடத்தில் நீடிக்கிறது.   பேர்ஸ்டோ விஸ்வரூபம் பட மூலாதாரம்,SPORTZPICS பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை சந்தித்த 9 போட்டிகளிலும் பேர்ஸ்டோ ஒரு போட்டியில்கூட அரைசதம் அடிக்காமல் இருந்ததால், இந்த சீசன் அவருக்கு மோசமாக அமைந்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், நேற்று நிதானமாகத் தொடங்கிய பேர்ஸ்டோ, அதன்பின் கோடை இடி முழக்கம்போல் அடிக்கத் தொடங்கினார். பேர்ஸ்டோ பேட்டிலிருந்து தெறித்த பந்துகள் பெரும்பாலும் சிக்ஸர்களாகவும், பவுண்டரிகளாகவும் பறந்தன. மிரட்டலாக பேட் செய்த பேர்ஸ்டோ 45 பந்துகளில் சதம் அடித்து, 108 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்து ஆட்டநாயகன் விருது வென்றார். பேர்ஸ்டோ கணக்கில் மட்டும் 9 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் அடங்கும். ஐபிஎல் டி20 தொடரில் பேர்ஸ்டோ அடித்த 2வது சதம் இது. மூன்று பார்ட்னர்ஷிப்பில் முடிந்த ஆட்டம் அதேபோல பேர்ஸ்டோவுக்கு நெம்புகோலாக இருந்தது தொடக்க பேட்டர் பிரப்சிம்ரன் சிங். இவரின் அதிரடி ஆட்டத்தால் உற்சாகம் பெற்ற பேர்ஸ்டோ வெளுத்து வாங்கத் தொடங்கினார். பிரப்சிம்ரன் சிங் 20 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும். அதேபோல சஷாங் சிங் 28 பந்துகளில் 68 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் கணக்கில் 8 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடங்கும். ஐபிஎல் ஏலத்தில் தவறிப்போய் வேறு சஷாங் சிங்கை எடுத்துவிட்டோமே என்று கவலைப்பட்ட பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு, தற்போது சஷாங் சிங் பெரிய சொத்தாக, முத்தாக மாறிவிட்டார். இந்த 3 பேட்டர்களும் சேர்ந்துதான் கொல்கத்தா அணி சேர்த்த இமாலய ஸ்கோரை எளிதாக சேஸிங் செய்து வெற்றி பெற்றனர். பிரப்சிம்ரன் சிங்-பேர்ஸ்டோ ஜோடி முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் பார்ட்னர்ஷிப், ரூஸோ-பேர்ஸ்டோ 2வது விக்கெட்டுக்கு 85 ரன்கள் பார்ட்னர்ஷிப், சஷாங் சிங்-பேர்ஸ்டோ 3வது விக்கெட்டுக்கு 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் என மொத்தமே 3 பார்ட்னர்ஷிப்பில் ஆட்டத்தை முடித்துவிட்டனர்.   நேற்றைய ஆட்டத்தில் படைக்கப்பட்ட சாதனைகள் பட மூலாதாரம்,SPORTZPICS கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராக 262 ரன்களை பஞ்சாப் கிங்ஸ் சேஸிங் செய்தது டி20 வரலாற்றிலும், ஐபிஎல் டி20 வரலாற்றில் மிக அதிகபட்சம். இதற்கு முன் டி20 கிரிக்கெட்டில் 259 ரன்களை தென் ஆப்பிரிக்கா சேஸிங் செய்ததே அதிகபட்சமாக இருந்தது. ஐபிஎல் தொடரில் 224 ரன்களை ராஜஸ்தான் ராயல்ஸ் சேஸிங் செய்ததுதான் அதிகபட்சமாக இருந்தது, அந்த ரன்களைவிட 38 ரன்கள் கூடுதலாக சேஸிங் செய்துள்ளது. இந்த ஆட்டத்தில் மட்டும் 42 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. டி20 போட்டிகளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர்கள் இதுவாகும். இதற்கு முன் கடந்த மாதம் மும்பை-சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயும், கடந்த வாரம் ஆர்சிபி, சன்ரைசர்ஸ் இடையே 38 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டதுதான் அதிகபட்சமாக இருந்தது. அது நேற்றைய ஆட்டத்தில் முறியடிக்கப்பட்டது. சேஸிங்கில் பஞ்சாப் கிங்ஸ் அணி 24 சிக்ஸர்களை நேற்று விளாசியது. இது டி20 கிரிக்கெட்டில் ஒரு அணி அடித்த 2வது அதிகபட்ச சிக்ஸர்களாகும். ஐபிஎல் வரலாற்றில் சேஸிங் செய்யும் அணி அடித்த அதிகபட்ச சிக்ஸர்கள் என்ற பெருமையை பஞ்சாப் பெற்றது. இதற்கு முன் ஆர்சிபி, டெல்லி கேபிடல்ஸுக்கு எதிராக சன்ரைசர்ஸ் 22 சிக்ஸர்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. இந்த ஆட்டத்தில் மட்டும் 523 ரன்கள் சேர்க்கப்பட்டன. இதன் மூலம் டி20 போட்டிகளில் இரு அணிகள் சேர்ந்து சேர்க்கப்பட்ட 2வது அதிகபட்ச ஸ்கோர் இது. கடந்த வாரம் ஆர்சிபி, சன்ரைசர்ஸ் அணிகள் சேர்ந்து 549 ரன்கள் சேர்த்தன. கொல்கத்தா, பஞ்சாப் அணிகளில் 4 தொடக்க ஆட்டக்காரர்கள் பில்சால்ட்(75), சுனில் நரேன்(71), பிரப்சிம்ரன் சிங்(54), ஜானி பேர்ஸ்டோ(108) ஆகியோர் அரைசதம் அடித்தனர். ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளின் தொடக்க ஆட்டக்காரர்கள் 50 ரன்களுக்கு மேல் குவித்தது இதுதான் முதல்முறை. டி20 போட்டியில் இது 11வது முறை. 4 தொடக்க ஆட்டக்காரர்களும் சேர்ந்து 308 ரன்கள் சேர்க்கப்பட்டது ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை. இந்த ஆட்டத்தில் 5 பேட்டர்கள் 200 ஸ்ட்ரைக் ரேட்டுக்கு மேல் வைத்து அரைசதம் அடித்ததும் ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை. சால்ட்(25பந்துகள்), நரைன்(23பந்துகள்), பிரப்சிம்ரன்(18), பேர்ஸ்டோ(23), சஷாங் சிங்(23) ஆகியோர் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்து ஸ்ட்ரைக் ரேட்டை 200க்கு மேல் வைத்திருந்தனர். டி20 போட்டிகளில் 200க்கும் மேற்பட்ட ரன்களை பஞ்சாப் கிங்ஸ் அணி 7வது முறையாக வெற்றிகரமாக சேஸிங் செய்துள்ளது. இதுதான் டி20 போட்டிகளில் ஒரு அணியின் அதிகபட்ச சேஸிங். மும்பை இந்தியன்ஸ், இந்தியா, ஆஸ்திரலேியா, குவெட்டா கிளாடியேட்டர்ஸ் ஆகிய அணிகள் 5 முறை மட்டுமே 200 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்துள்ளன.   பந்துவீச்சாளர்கள் பாவம் பட மூலாதாரம்,SPORTZPICS கொல்கத்தா ஈடன் கார்டன் போன்ற பேட்டர்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட, சொர்க்கபுரி ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் நிலைமை படுமோசமாகும். இந்த ஆட்டத்தில் இரு அணிகளைச் சேர்ந்த பந்துவீச்சாளர்களும் துவைத்து எடுக்கப்பட்டனர். இரு அணிகளிலும் சுனில் நரைன், ராகுல் சாஹர் இருவர்தான் ஒற்றை இலக்கத்தில் ரன்ரேட்டை வைத்திருந்தனர். மற்ற வகையில் இரு அணிகளின் அனைத்து பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு சராசரியாக 15 ரன்களை வாரி வழங்கினர். இதுபோன்ற பேட்டர்களுக்கு மட்டும் சாதகமான ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் நிராயுதபாணியாக மாற்றப்படுகிறார்கள். குறிப்பாக ரஸல், ரபாடா, அங்குல் ராய், சாம்கரன், ஹர்சல் படேல், வருண், ஹர்சித் ராணா, சமீரா ஆகியோர் வீசிய ஒவ்வொரு ஓவரிலும் சராசரியாக 17 ரன்கள் விளாசப்பட்டன. டி20 போட்டி "ரசிகர்களின் ரசிப்புத்தன்மையை அதிகப்படுத்துவதற்காக சிக்ஸர்கள், பவுண்டரிகள் அதிகம் கிடைக்க வேண்டும் என்பதற்காக பேட்டர்களுக்கு மட்டும் உதவும் விக்கெட்டாக மாற்றுவது ஆட்டத்தை ஒருதரப்பாகவே கொண்டு செல்லும். இதில் பந்துவீச்சாளர்களின் பணி, அவர்களுக்கான அறம், மரியாதை அறவே இல்லாமல் போகும்," என்ற விமர்சனம் ஒருபுறம் இதனால் முன்வைக்கப்படுகிறது. பேட்டர்களுக்கும், பந்துவீச்சாளர்களுக்கும் சமவாய்ப்பு வழங்கும் விதத்தில் ஆடுகளம் அமைக்கப்பட்டால்தான் ஆட்டம் சுவாரஸ்யமாகச் செல்லும். பேட்டர்களுக்கான விக்கெட்டாக மாற்றப்படும்போது, பந்துவீச்சாளர்கள் நம்பிக்கை உடைக்கப்படும், பந்துவீச்சாளர்கள் நம்பிக்கை இழந்து அடுத்தடுத்த போட்டிகளில் அவர்களின் திறமை பாதிக்கப்படும். எதிர்காலத்தில் இளம் தலைமுறைகள்கூட பேட்டர்களாக மாற விரும்புவார்களே தவிர பந்துவீச்சாளர்கள் மீது வெறுப்பு உண்டாகிவிடும். இதுபோன்ற பேட்டர்களுக்கான விக்கெட் என்பது வீடியோ கேம் பார்த்த உணர்வுதான் ரசிகர்களுக்கு ஏற்படும்.   கொல்கத்தா என்ன செய்யப் போகிறது? பட மூலாதாரம்,SPORTZPICS கொல்கத்தா அணியில் தொடக்க ஆட்டக்காரர்ள் பில்சால்ட்(75), சுனில் நரேன்(71) இருவரும் அருமையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்து 138 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அடுத்து வந்த பேட்டர்கள் வெங்கடேஷ் (39), ரஸல்(24), ஸ்ரேயாஸ்(28) என கேமியோ ஆடி உயிரைக் கொடுத்து 261 ரன்கள் சேர்த்தனர். பெரும்பாலும், 120 பந்துகளைக் கொண்ட டி20 போட்டியில் 262 ரன்களை சேஸிங் செய்வது என்பது மிகக்கடினமானது என்று பார்க்கப்பட்டது. 261 ரன்களை அடித்துவிட்டோம் வெற்றி உறுதி என்ற மனநிலையுடன் இருந்த கொல்கத்தா அணிக்கு நேற்றைய சேஸிங் சம்மட்டி அடியாக இறங்கியுள்ளது. 261 ரன்கள் என்பதே மிகப்பெரிய ஸ்கோர் இதையே சேஸிங் செய்துவிட்டதால், எந்த ஸ்கோர் பாதுகாப்பானது என ஆய்வு செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் 160 ரன்கள் அடித்து ஐபிஎல் தொடரில் டிபெண்ட் செய்யும் அணிகள் இருக்கும் நிலையில் 261 ரன்கள் சேர்த்தும் கொல்கத்தா அணியால் டிபெண்ட் செய்ய முடியவில்லை என்பது அந்த அணியின் பந்துவீச்சு மீதும், திறன் மீது பெரிய கேள்வியை எழுப்புகிறது. பஞ்சாப் அணியை 261 ரன்களை சேஸிங் செய்ய அனுமதித்த பந்துவீச்சாளர்கள் மீது குறை சொல்வதா, அல்லது பேட்டர்களுக்கான விக்கெட்டாக மாற்றியதைக் குறை சொல்வதா என ஆய்வு செய்ய வேண்டிய நிலையில் கொல்கத்தா நிர்வாகம் இருக்கிறது. ஆனால், 261 ரன்களைக்கூட டிபெண்ட் செய்ய முடியாவிட்டால், நிச்சயமாக பந்துவீச்சில் பெரிய சிக்கல் ஏதோ இருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் பேட்டர்களை சிந்திக்க வைக்கும் அளவுக்கு, நெருக்கடி தரும் அளவுக்கு கொல்கத்தா பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். இரு ஓவர்களில் நெருக்கடியாக பந்துவீசியிருந்தால் ஆட்டம் மாறியிருக்கும். இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் ஒருவர்கூட யார்க்கர் வீசவில்லை, ஸ்லோபால் பவுன்ஸர், ஷார்ட்பால் அதிகம் வீசவில்லை. பந்துவீச்சில் வேரியேஷன் என்பதே பெரிதாக இல்லாமல் பேட்டர்களின் பேட்டை நோக்கியே பந்து வீசப்பட்டது பேட்டர்களின் பணியை இன்னும் எளிதாக்கியது. ஆதலால், கொல்கத்தா அணி நிர்வாகம் பந்துவீச்சு குறித்து ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.   ‘அறியப்படாத ஹீரோ’ சஷாங் சிங் பட மூலாதாரம்,SPORTZPICS சஷாங் சிங், அஷுடோஷ் சர்மா இருவரும் இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்குக் கிடைத்த இரு சொத்துகள் என்று கூறலாம். பஞ்சாப் அணி கடந்த சில போட்டிகளில் வெற்றிவரை வந்து தோல்வி அடைந்த ஆட்டங்களில் ஆட்டத்தை ஒற்றை பேட்டராக இழுத்து வந்தவர் சஷாங் சிங். ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தாவை சேர்ந்த சஷாங் சிங்கை வாங்குவதற்குப் பதிலாக இந்த சஷாங் சிங்கை ரூ.20 லட்சத்துக்கு வாங்கிவிட்டோமே என்ற கவலையில் இருந்தது. ஆனால், சஷாங் சிங் ஆட்டம் என்பது அவரின் விலையான ரூ.20 லட்சத்துக்கும் அதிகமானது என்பதை பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகம் புரிந்து கொண்டுள்ளது. பிகாரை சேர்ந்த சஷாங் சிங், சத்தீஸ்கர், மும்பை, புதுச்சேரி அணிகளுக்குக்கூட ரஞ்சி கோப்பையில் விளையாடியுள்ளார். தனது திறமையை அங்கீகரிக்க ஒரு ஆட்டம் கிடைக்காதா என்று ஏங்கியவர் சஷாங் சிங். மும்பை, சத்தீஸ்கர் கிரிக்கெட் வட்டாரங்கள் அறிந்திருந்த சஷாங் சிங்கை இந்தியா முழுவதும் யாரும் இதற்கு முன் அறியவில்லை. ஆனால் கடந்த சில போட்டிகளாக சஷாங் சிங் அடிக்கும் அடி, ஆட்டத்தின் திறமை, உலக கிரிக்கெட்டை திரும்பப் பார்க்க வைத்துள்ளது. டி20 உலகக் கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகளுக்காக விளையாட முடியுமா என்று கேட்கும் அளவுக்கு சஷாங் சிங் ஆட்டம் பேசப்பட்டு வருகிறது. பட மூலாதாரம்,SPORTZPICS பஞ்சாப் அணியில் வழக்கமாக 6வது வரிசையில் களமிறங்கும் சஷாங் சிங், நேற்று முதல்முறையாக 4வது வீரராகக் களமிறங்கினார். களமிறங்கி 3 பந்துகளைச் சந்தித்த நிலையில் வருண் பந்தவீச்சில் சஷாங் சிக்ஸர் பறக்கவிட்டார். ஒரு கட்டத்தில் பஞ்சாப் அணி வெற்றி என்பது சவாலாக இருந்த நிலையில் சஷாங் சிங் களமிறங்கிய பின் அது இலகுவானது. சமீரா ஓவரில் ஸ்வாட், ஸ்கூப், புல் ஷாட் என 3 விதங்களில் சஷாங் சிங் சிக்ஸர் விளாசி, வெற்றியை எளிதாக்கினார். அது மட்டுமல்லாமல் ஹர்சித் ராணா, ராமன்தீப் ஓவரிலும் சிக்ஸர்களை வெளுத்து வாங்கினார் சஷாங் சிங். 23 பந்துகளில் அரைசதத்தை சஷாங் அடைந்து 68 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் கணக்கில் மட்டும் 8 சிக்ஸர்கள் அடங்கும். பேஸ்பால் ஆட்டமா? பஞ்சாப் சிங்ஸ் கேப்டன் சாம் கரன் வெற்றிக்குப் பின் கூறுகையில், “இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது, முக்கியமானவெற்றி. கிரிக்கெட் பேஸ்பாலாக மாறிவிட்டதா என எனக்குத் தோன்றியது. கடந்த சில போட்டிகளில் வெற்றிவரை வந்து தவறவிட்டது கடினமாக இருந்தது. நாங்கள் ஸ்கோரை பார்க்கவில்லை, வெற்றியை மட்டும்தான் பார்த்தோம். பேர்ஸ்டோ மீண்டும் ஃபார்முக்கு வந்திருப்பது அருமை. இந்த சீசனில் நாங்கள் கண்டறிந்த சிறந்த வீரர் சஷாங் சிங். அவருக்கான பணியை இன்றும் சிறப்பாகச் செய்தார். கொல்கத்தாவில் கிடைத்த பெரிய வெற்றியை நாங்கள் ரசிக்கிறோம்,” என்று தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/ckdq2ygdqpdo
    • இலங்கை சனாதிபதி தேர்தலுக்கும், இந்தியா தேர்தலுக்கும் வித்தியாசமிருக்கிறது. இந்தியா தேர்தலில் ஒருவருக்கே வாக்களிக்க முடியும். இலங்கை சனாதிபதி தேர்தலில் ஒருவருக்கு மட்டும் அல்லது 1,2,3 விருப்ப வாக்குகள் வாக்களிக்கலாம். 50% வித வாக்குக்கு மேல் ஒருவருக்கும் வாக்குகள் கிடைக்காத பட்சத்தில்  இறுதியாக வந்தவரை நீக்கிவிட்டு அவருக்கு வாக்களித்தவர்களின் 2 வது வாக்குகள்  சேர்க்கப்படும். 50% இன்னும் வராவிட்டால் இரூப்பவர்களில் கடைசியாக இருப்பரை நீக்கிவிட்டு அவருக்கு வாக்களித்தவர்களின் 2 வது வாக்குகளை சேர்த்து பார்ப்பார்கள். இப்படியே கடைசியாக மிஞ்சும் இருவரில் 50% க்கு மேல் வருபவர் தெரிவு செய்யப்படுவார். ஆனால் இதுவரை நடந்த தேர்தல்களில் முதலாவது வாக்குகலிலேயே வேட்பாளர் ஒருவர் 50%க்கு வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். இலங்கையில்  பலர் இம்முறையை கண்டு கொள்வதில்லை. சிவாஜிலிங்கத்துக்கு முதல் வாக்குகளையும் இரண்டாவது மூன்றாவது வாக்குகளில் பொன்சேகாவுக்கும் வாக்களித்திருக்கலாம். அவுஸ்திரேலியா தேர்தல்களிலும் 1,2,3,4 என்று வாக்களிக்கலாம். ஆனால் இங்கு பல தமிழர்கள் தொழில்கட்சிஅல்லது லிபரல் கட்சிக்கே முதலாவது வாக்காகவாக்களிக்கிறார்கள்.  ஆனால் நான் 2009 இல் எமக்காக அதிகளவு குரல் குடுத்த பசுமைக்கட்சிக்கே முதலாவது வாக்கை வழங்கி 2 வதாக பெரிய கட்சியான லிபரல் அல்லது தொழில்கட்சிக்கு வாக்களிப்பதுண்டு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.