Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருவாட்டுக் குழம்பு சமைக்கும் முறை தேவை

Featured Replies

கருவாட்டுக்குழம்பு எப்படிச் செய்வது? யாராவது சொல்வீர்களா?? மிக்க நன்றி :)

கருவாட்டுக்குழம்பு எப்படிச் செய்வது? யாராவது சொல்வீர்களா?? மிக்க நன்றி :)

 

                                                கருவாட்டுக் குழம்பு

 

தேவையான பொருட்கள்:

 

    புளி- ஒரு சிறு ஆரஞ்சு அளவு

    சிறிய கருவாட்டுத்துண்டுகள்- ஒரு கப்

    மஞ்சள் தூள்- அரை ஸ்பூன்

    சின்ன வெங்காயம்-ஒரு கைப்பிடி

    நல்லெண்ணெய்- கால் கப்

    சீரகம்- அரை ஸ்பூன்

    பெரிய வெங்காயம்-1

    சிறிய தக்காளி-3

    இஞ்சி- சிறு துண்டு

    சிறிய பூண்டிதழ்கள்- கால் கப்

    மிளகாய்த்தூள்- 2 ஸ்பூன்

    கொத்தமல்லித்தூள்- 2 ஸ்பூன்

    முருங்கைத்துண்டுகள்- 1 கப்

    தேங்காய்த்துருவல்- ஒரு கைப்பிடி

    தேவையான உப்பு

    கறிவேப்பிலை சிறிது

 

செய்முறை:

  

    புளியை போதுமான நீரில் ஊறவைத்து கரைத்துக் கொள்ளவும்.

    பெரிய வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு இவற்றை தேங்காயுடன் அரைத்துச் 

    சேர்க்கவும். தூள்களை உப்புடன் சேர்த்து குழம்பை நன்கு கலந்து கொள்ளவும்.

    வாணலியை சூடு செய்து நல்லெண்ணையை ஊற்றவும்.

     சீரகம் தாளித்து சின்ன வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.

     கூட்டி வைத்த குழம்பு, முருங்கைக்காய்த்துண்டுகள், கருவாடு சேர்த்து நன்கு

     கொதிக்க விடவும்.

     கருவாட்டில் எப்போதும் சற்று உப்பு அதிகம் இருக்குமென்பதால்  

     அதைப்பார்த்துக்   கொண்டு குழம்பில் உப்பை திட்டமாகச் சேர்க்கவும்.

 

நன்றி: http://arusuvai.com/tamil/node/10146 :)

  • கருத்துக்கள உறவுகள்

கருவாட்டு குழம்பு பிழைச்சா  வீட்டுக்கார அண்ணாட்ட நல்லா திட்டு வாங்கி கொள்ளுங்கோ அலை.... :lol:

 

கத்தரிக்காய் குழம்பை செய்துவிட்டு அதற்குள் கருவாட்டை போட்டுவிடுங்கள் .

  • தொடங்கியவர்

நன்றி தமிழினி, யாயினி, அர்ஜுன் அண்ணா :)



http://www.yarl.com/forum3/index.php?showtopic=76294 இதிலையும் இருக்கு இப்ப தான் பார்த்தேன்

கருவாடு  -         250 கிராம்

பழப்புளி    -         தேசிக்காய்  அளவு

அளவான கத்தரிக்காய்  - 1

மரவள்ளிக் கிழங்கு -     சில துண்டுகள்

பழத்தக்காளி -     2  (தக்காளிக் காய் இருந்தால் ஒன்று போடலாம்)

சின்ன வெங்காயம்    - 10

பச்சை மிளகாய் - தேவையான அளவு

உள்ளி -   1 (முழுப் பூடு)

தேங்காய்ப் பால்    - அரை கோப்பை

கறித் தூள்   - 3 பெரிய கரண்டி

சின்னச் சீரகம், பெரிய சீரகம் தேவையான அளவு

வெந்தயம்   - 1 தேக்கரண்டி

மஞ்சள்   -   அரை தேக்கரண்டி

 

கருவாட்டை ஒரு மணித்தியாலம் குளிர் நீரில் ஊறப்  போட்டு அளவான துண்டுகளாக வெட்டி வைக்கவும்.  புளியை அளவான கொதி  நீரில் ஊற வைத்து புளிகரைசலை தயார்படுத்தவும்.

 

கருவாடு, கறித் தூள், தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள், வெந்தயம் ஆகியவற்றை சட்டியில் இட்டு,   சிறிது   தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்கவும். கூட்டு கொதிக்கத் தொடங்கியதும் (சுமார் 5-10 நிமிடங்கள்) மரவள்ளிக் கிழங்கையும் கத்தரிக்காயையும் போடவும். அதன் பின்  புளிக் கரைசலை போடவும். மரவள்ளிக் கிழங்கு அரைவாசி அவிந்ததும் கருவாட்டுத் துண்டுகளைப் போடவும். பிறகு சின்னச் சீரகத்தையும் பெரிய சீரகத்தையும் சேர்க்கவும்.

கருவாடு அவிந்ததும் (10 நிமிடங்கள்) தேங்காய்ப் பாலை ஊற்றி ஒரு கொதி  வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி சிறிது கறிவேப்பிலையை தூவவும்.

 

 

கருவாட்டில் உப்பு இருப்பதால், உப்பு தேவையில்லை. அடுப்பில் இருந்து இறக்கியவுடன் கருவாட்டில் உள்ள உப்பு குழம்பில் ஊறத் தொடங்கும்.  அப்பொழுது தேவையானால் உப்புப் போடலாம்.

கருவாட்டை சிலர் கொதி  நீரில் ஊற விடுவார்கள். கருவாட்டின் ருசியைக் குறைக்கும்.

 

நான் Cod மீன் கருவாட்டில்தான் குழம்பு வைப்பேன்.  அதனை ஒரு இரவு குளிர் நீரில் ஊறவைக்க வேண்டும். அடிக்கடி தண்ணீரை மாற்ற வேண்டும். நல்ல சுவையாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

"கருவாட்டை ஒரு மணித்தியாலம் குளிர் நீரில் ஊறப்  போட்டு அளவான துண்டுகளாக வெட்டி வைக்கவும் ".இது முக்கியம்

  • கருத்துக்கள உறவுகள்
கருவாடு  -         250 கிராம்

பழப்புளி    -         தேசிக்காய்  அளவு

அளவான கத்தரிக்காய்  - 1

மரவள்ளிக் கிழங்கு -     சில துண்டுகள்

பழத்தக்காளி -     2  (தக்காளிக் காய் இருந்தால் ஒன்று போடலாம்)

சின்ன வெங்காயம்    - 10

பச்சை மிளகாய் - தேவையான அளவு

உள்ளி -   1 (முழுப் பூடு)

தேங்காய்ப் பால்    - அரை கோப்பை

கறித் தூள்   - 3 பெரிய கரண்டி

சின்னச் சீரகம், பெரிய சீரகம் தேவையான அளவு

வெந்தயம்   - 1 தேக்கரண்டி

மஞ்சள்   -   அரை தேக்கரண்டி

 

கருவாட்டை ஒரு மணித்தியாலம் குளிர் நீரில் ஊறப்  போட்டு அளவான துண்டுகளாக வெட்டி வைக்கவும்.  புளியை அளவான கொதி  நீரில் ஊற வைத்து புளிகரைசலை தயார்படுத்தவும்.

 

கருவாடு, கறித் தூள், தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள், வெந்தயம் ஆகியவற்றை சட்டியில் இட்டு,   சிறிது   தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்கவும். கூட்டு கொதிக்கத் தொடங்கியதும் (சுமார் 5-10 நிமிடங்கள்) மரவள்ளிக் கிழங்கையும் கத்தரிக்காயையும் போடவும். அதன் பின்  புளிக் கரைசலை போடவும். மரவள்ளிக் கிழங்கு அரைவாசி அவிந்ததும் கருவாட்டுத் துண்டுகளைப் போடவும். பிறகு சின்னச் சீரகத்தையும் பெரிய சீரகத்தையும் சேர்க்கவும்.

கருவாடு அவிந்ததும் (10 நிமிடங்கள்) தேங்காய்ப் பாலை ஊற்றி ஒரு கொதி  வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி சிறிது கறிவேப்பிலையை தூவவும்.

 

 

கருவாட்டில் உப்பு இருப்பதால், உப்பு தேவையில்லை. அடுப்பில் இருந்து இறக்கியவுடன் கருவாட்டில் உள்ள உப்பு குழம்பில் ஊறத் தொடங்கும்.  அப்பொழுது தேவையானால் உப்புப் போடலாம்.

கருவாட்டை சிலர் கொதி  நீரில் ஊற விடுவார்கள். கருவாட்டின் ருசியைக் குறைக்கும்.

 

நான் Cod மீன் கருவாட்டில்தான் குழம்பு வைப்பேன்.  அதனை ஒரு இரவு குளிர் நீரில் ஊறவைக்க வேண்டும். அடிக்கடி தண்ணீரை மாற்ற வேண்டும். நல்ல சுவையாக இருக்கும்.

 

கொடுத்து வைச்ச  பொண்ணு........... :wub:

நான் Cod மீன் கருவாட்டில்தான் குழம்பு வைப்பேன்.  அதனை ஒரு இரவு குளிர் நீரில் ஊறவைக்க வேண்டும். அடிக்கடி தண்ணீரை மாற்ற வேண்டும். நல்ல சுவையாக இருக்கும்.

 

நாங்கள் கட்டாப் பாரைக் கருவாட்டில்தான் குழம்பு வைப்பது. எப்படி சமைப்பது என்று எனக்குத் தெரியாதுதானால் மனிசி வைச்சுத் தரும் போது எப்படி சாப்பிடுவது என்று தெரியும். அரிசிமாப் புட்டும் கருவாட்டுக் குழம்பும். பழஞ்சோறும் முதல் நாள் வைத்த கருவாட்டுக் குழம்பும் சுவையான கூட்டணிகள்.

கொடுத்து வைச்ச  பொண்ணு........... :wub:

 

அப்படியெல்லாம் இல்ல. வார விடுமுறையில் மாத்திரம் சமைப்பேன். :D

  • கருத்துக்கள உறவுகள்
அப்படியெல்லாம் இல்ல. வார விடுமுறையில் மாத்திரம் சமைப்பேன். :D

 

எப்படி இருந்தாலும் இவ்வளவையும்  தெரிந்து வைத்துக்கொண்டு அதை  முழுமையாக செய்வதென்பது ஒரு கலை.   பெருமையாக இருக்கு அதை நினைக்க. அதைத்தான் குறிப்பிட்டேன். 

நாங்கள் கட்டாப் பாரைக் கருவாட்டில்தான் குழம்பு வைப்பது. எப்படி சமைப்பது என்று எனக்குத் தெரியாதுதானால் மனிசி வைச்சுத் தரும் போது எப்படி சாப்பிடுவது என்று தெரியும். அரிசிமாப் புட்டும் கருவாட்டுக் குழம்பும். பழஞ்சோறும் முதல் நாள் வைத்த கருவாட்டுக் குழம்பும் சுவையான கூட்டணிகள்.

 

கருவாட்டுக் கறி அடுத்த நாள் சாப்பிட நன்றாக இருக்கும்.  ஊரில மாரி  காலத்தில மோசமான காலநிலை இருந்தா மீனவர்கள் கடலுக்குப் போக மாட்டார்கள். அப்ப  இறால் கருவாடு, பாரைக் கருவாடு, சுங்கான் கருவாடு,  பனையான்  கருவாடு, கட்டாப் பாரை கருவாடு..... தான் சமைப்பார்கள். ஒவ்வொன்றிற்கும் வேறு விதமான மரக்கறி சிறிய அளவில் சேர்ப்பார்கள். அது தனிச் சுவை.  

  • கருத்துக்கள உறவுகள்

முதல்ல கருவாட்டை தமிழ் கடையில போய் வாங்க வேணும் :D

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கீரி மீனும்,கீரி மீன் கருவாடும் மிகவும் பிடிக்கும் :)

  • கருத்துக்கள உறவுகள்

கீரி மீன் என்றால் என்ன? நிலத்தில் வாழ்வதா?  :unsure: 

  • கருத்துக்கள உறவுகள்
கீரி மீன் என்றால் என்ன? நிலத்தில் வாழ்வதா?  :unsure: 

 

கீரி மீன் என மட்டக்களப்பில் சொல்வார்கள்...யாழ்ப்பாணத்தில் இந்த மீனுக்கு என்ன பெயரோ தெரியாது :unsure: ...சூடை மினிலும் பெரிதாக இருக்கும்...சரியான கிரந்தி மீன்

 

தப்பிலி உடனே வரவும்

கீரி மீன் என மட்டக்களப்பில் சொல்வார்கள்...யாழ்ப்பாணத்தில் இந்த மீனுக்கு என்ன பெயரோ தெரியாது :unsure: ...சூடை மினிலும் பெரிதாக இருக்கும்...சரியான கிரந்தி மீன்

 

தப்பிலி உடனே வரவும்

 

யாழ்ப்பாணத்திலும் எனக்குத் தெரிந்தவரை கீரி மீன் என்று தான் சொல்வார். சூடை மீனின் ஒன்று விட்ட அண்ணர் தான் கீரி மீன். முள்ளு பெரிதாக இருக்கும். குழம்பு வைப்பதை விட பொரிப்பதுதான் சுவை. இங்கு கனடாவில் தமிழ் கடைகளில் அடிக்கடி பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
யாழ்ப்பாணத்திலும் எனக்குத் தெரிந்தவரை கீரி மீன் என்று தான் சொல்வார். சூடை மீனின் ஒன்று விட்ட அண்ணர் தான் கீரி மீன். முள்ளு பெரிதாக இருக்கும். குழம்பு வைப்பதை விட பொரிப்பதுதான் சுவை. இங்கு கனடாவில் தமிழ் கடைகளில் அடிக்கடி பார்க்கலாம்.

 

சாப்பாட்டு அயிற்றம் எண்டால் நிழலி அண்ணாவை அடிக்கேலா..மனிசன் அக்குவேறாய் ஆணிவேறாய் அறிஞ்சுவச்சிருக்கு...

சாப்பாட்டு அயிற்றம் எண்டால் நிழலி அண்ணாவை அடிக்கேலா..மனிசன் அக்குவேறாய் ஆணிவேறாய் அறிஞ்சுவச்சிருக்கு...

 

சாப்பாட்டு அயிற்றத்தில் மட்டுமல்ல...எதெது சுவையானதோ அதில் எல்லாம் ஒரு கரை காண வேண்டும் என்று முடிவோடுதான் இருக்கின்றன். வாழும் நாள் கொஞ்சமப்பு...போனால் மீண்டும் வராது.

  • கருத்துக்கள உறவுகள்
கீரி மீன் இதுவா ரதி?

 

http://i00.i.aliimg.com/photo/v1/454612348/fish_whole_round_scad_.jpg

 

எனக்கு சரியாக தெரியவில்லை தமிழினி :unsure: ...ஆனால் இந்த மீன் இல்லை :D

  • தொடங்கியவர்

மிக்க நன்றி தப்பிலி!!

 

கருத்தெழுதிய எல்லோருக்கும் நன்றிகள்!

கீரி மீன் என மட்டக்களப்பில் சொல்வார்கள்...யாழ்ப்பாணத்தில் இந்த மீனுக்கு என்ன பெயரோ தெரியாது :unsure: ...சூடை மினிலும் பெரிதாக இருக்கும்...சரியான கிரந்தி மீன்

 

தப்பிலி உடனே வரவும்

 

'கீரி' மீன்,  சூடை மீனைச் சேர்ந்த சகல இனம். நன்றாகப் பெருத்து கொழுத்திருக்கும். அதிலும் 'மாப்பிள்ளைக் கீரி' பொரித்துக் குழம்பு வைக்க நன்றாக இருக்கும். எல்லாம் கிரந்தி மீன். தமிழினியின் இணைப்பில் உள்ளது சிறிய பாரை  மீன்.  

 

 

 

 

முதல்ல கருவாட்டை தமிழ் கடையில போய் வாங்க வேணும் :D

 

 

 

கதையோட கதையா அதுக்குள்ளே  'அட்வேர்ட்' :D

 

கருவாடு என்று கேட்காதீர்கள் சஜீவன் கடைக் கருவாடு என்று கேட்டு வாங்குங்கள்.         

 

சுவிசில் தரமான கடல் உணவுகளுக்கு 'சஜீவன் அங்காடீஈஈஈஈஈ..............   :lol:

Edited by தப்பிலி

  • கருத்துக்கள உறவுகள்

'கீரி' மீன்,  சூடை மீனைச் சேர்ந்த சகல இனம். நன்றாகப் பெருத்து கொழுத்திருக்கும். அதிலும் 'மாப்பிள்ளைக் கீரி' பொரித்துக் குழம்பு வைக்க நன்றாக இருக்கும். எல்லாம் கிரந்தி மீன். தமிழினியின் இணைப்பில் உள்ளது சிறிய பாரை  மீன்.  

 

மீனிலும் மப்பிள்ளையாப்போன மீனுக்கு நின்மதி இல்லைப்போல.. :( 

கதையோட கதையா அதுக்குள்ளே  'அட்வேர்ட்' :D

 

கருவாடு என்று கேட்காதீர்கள் சஜீவன் கடைக் கருவாடு என்று கேட்டு வாங்குங்கள்.         

 

சுவிசில் தரமான கடல் உணவுகளுக்கு 'சஜீவன் அங்காடீஈஈஈஈஈ..............   :lol:

 

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்..அதனால் வாங்கிய மீன்கள் நாறிப்போயிருந்தால் அதற்கு யாழ்களம் பொறுப்பேற்காது.. :D 

'கீரி' மீன்,  சூடை மீனைச் சேர்ந்த சகல இனம். நன்றாகப் பெருத்து கொழுத்திருக்கும். அதிலும் 'மாப்பிள்ளைக் கீரி' பொரித்துக் குழம்பு வைக்க நன்றாக இருக்கும். எல்லாம் கிரந்தி மீன். தமிழினியின் இணைப்பில் உள்ளது சிறிய பாரை  மீன்.  

 

 

 

 

 

 

 

கதையோட கதையா அதுக்குள்ளே  'அட்வேர்ட்' :D

 

கருவாடு என்று கேட்காதீர்கள் சஜீவன் கடைக் கருவாடு என்று கேட்டு வாங்குங்கள்.         

 

சுவிசில் தரமான கடல் உணவுகளுக்கு 'சஜீவன் அங்காடீஈஈஈஈஈ..............   :lol:

 

  :lol: நானும் சுஜீவனின் கடையில்தான் ஆடர் பண்ணியுள்ளேன், வந்தவுடன் தப்பிலியின் முறையில் செய்து பார்க்கனும். கீரி மீன் நல்ல சுவையானது, முள்ளு பெரிதாக இல்லை, சொதி வைத்தால் அந்த மாதிரி சுவை. தலையை கையில் பிடித்துக்கொண்டு சூப்பி சூப்பி ..எடுத்தால்... ஆகா என்ன சுவை என்ன சுவை..

 

நிழலி நீங்கள் சொல்வது நுணலை  / கொய் மீன்

Edited by வந்தியதேவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.