Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்கள் அவசியம் படிக்க வேண்டியது !

Featured Replies

குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்கள் அவசியம் படிக்க வேண்டியது !

சமீபத்தில், என் நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தேன். அவருடைய மூன்று வயது

குழந்தை, பிரிஜ்ஜிலிருந்து இரண்டு லிட்டர் கோக் பாட்டிலை எடுக்க முயன்ற

போது, கை தவறி, கீழே விழுந்து, அதிலிருந்த கோக் முழுவதும் கொட்டி விட்டது.

நண்பரின் மனைவி, தன் குழந்தையை கண்டித்து அடிக்கப் போகிறார் என்று

நினைத்து, நான் பயந்து கொண்டிருந்தேன்; ஆனால், நடந்ததோ வேறு...

"பளுவை தூக்கறதுக்கு அப்படி தான் முயற்சி பண்ணணும். கொட்டினது பரவாயில்லை.

அதில கொஞ்ச நேரம் உன் இஷ்டத்துக்கு விளையாடிக்கோ...' என்றார். குழந்தையும்

அதில் கைகளை அலசி விளையாட ஆரம்பித்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு, "இதை

கொட்டினது யாரோ, அவங்க தான் துடைக்கணும். இந்த சின்ன டவலால கவனமா

துடைச்சுடு...' என்று, குழந்தையிடம் டவலை கொடுத்தாள். தன்னிடம் முழுப்

பொறுப்பும் ஒப்படைக்கப்பட்ட பெருமை முகத்தில் ததும்ப, அந்த குழந்தை தரையை

சுத்தமாக துடைத்து, பெருமிதத்துடன் அம்மாவைப் பார்த்தது. அதோடு, "இதே

பாட்டில்ல குழாயிலிருந்து முழுதும் தண்ணி பிடிச்சு, கொட்டாம பிரிஜ்ஜில

கொண்டு வைக்க இப்ப பழகிக்கோ...' என்று சொல்லி, குழந்தையை குழாயின் அருகில் அழைத்துப் போனார்.

அந்த தாயை நான் ஆச்சரியத்துடன் பார்த்தேன். "குழந்தைகளை வளர்க்கும்

முறைகளை விளக்கும் ஒரு புத்தகத்தில் படித்ததை, நான் நடைமுறையில்

பயன்படுத்துகிறேன். இந்த முறைகளை பின்பற்றுவதால், குழந்தை, தான் செய்த தவறை

உணர்கிறது. தவறு செய்தால், துடைப்பது போன்ற தண்டனையை தான் அனுபவிக்க

வேண்டும் என்று மென்மையாக குழந்தையை உணர வைக்க முடிகிறது. மீண்டும், அதே

தவறை செய்யாமலிருக்க, பெற்றோராகிய நாம் தான் குழந்தையை பழக்க வேண்டும்.

அதற்கு தான் குழாயில் தண்ணீர் பிடித்து பழகச் சொன்னேன்...' என்று, அவர்

விளக்கிய போது, ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகள் வளர்ப்பில் இம்மாதிரி

மென்மையான முறைகளை பின்பற்றலாமே என்று தோன்றியது. புத்தகங்களை படித்தால்

மட்டும் போதாது... படிக்கும் நல்ல விஷயங்களை, தக்க தருணத்தில்

நடைமுறைப்படுத்தவும் தெரிந்திருக்க வேண்டும் என்ற உண்மை புரிந்தது.

fb 

  • கருத்துக்கள உறவுகள்

:D பகிர்வுக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

வைத்தியசாலை ஒன்றில் தமிழ் குடும்பம் ஒன்று இரு பிள்ளைகளுடனும் வெள்ளை இன குடும்பம் இரு பிள்ளைகளுடனும் வரவேற்பறையில் இருக்கிறார்கள்.பிள்ளைகள் அங்கும் இங்கும் ஓடி ஆடி விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள்.இறுதியில் பகிர்வதில் ஏதோ புடுங்குப்பாடு வந்து விட்டது.வெளி இடத்தில் நிச்சயமாக பெரிய சத்தமாக இருந்தது.வெள்ளை இன தாய் ஹனி என்று தொடங்கி பகிர்ந்து விளையாட பழக வேண்டும் என மென்மையாக சொன்னார்.தமிழ் அம்மாவும் குறைந்தவரா என்ன தொடங்கிய வார்த்தையே அசத்தி விட்டது."குறுக்கால போக" :lol:  :lol:

நல்லதொரு விடையம். 
"பளுவை தூக்கறதுக்கு அப்படி தான் முயற்சி பண்ணணும். கொட்டினது பரவாயில்லை.

-----------------------------என்றார்.--------------சிறிது நேரத்திற்குப் பிறகு, "இதை

கொட்டினது யாரோ, அவங்க தான் துடைக்கணும். இந்த சின்ன டவலால கவனமா

துடைச்சுடு...' என்று, குழந்தையிடம் டவலை கொடுத்தாள். :)

 
 
குழந்தையை கத்துவது, அடிப்பது, கூடாது .  அன்பால் திருத்துவது ஆரோக்கியமானது. :) 
 
ஆனால்,
 கொட்டினது பரவாயில்லை. அதில கொஞ்ச நேரம் உன் இஷ்டத்துக்கு விளையாடிக்கோ...' என்றார். குழந்தையும் அதில் கைகளை அலசி விளையாட ஆரம்பித்தது. 
இது சில குழந்தைகளிடம் எதிர் மறையான  விளைவுகளையும் தரும். :icon_idea: என் மூன்று வயது மகளுக்கு தண்ணீ ர் , விளையாட, அதை தானே clean பண்ண கொள்ளை ஆசை. அவவுக்கு இப்படிச் சொன்னால், பிறகு  ஒவொரு நாளும்  கோக் போத்த ல் விழும். :lol: 
  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கட்டுரை...இணைப்பிற்கு நன்றி அபராஜிதன்...நான் கண்ட பெரும்பாலான எங்கட பெற்றோர் பிள்ளைகள் பொது இடத்தில் குளப்படி செய்தால் பொது இடமென்றும் பாராமல் கத்தோ கத்தென்று கத்துவார்கள் இல்லாட்டில் தங்களுக்கென்ன என்ட மாதிரி பேசாமல் இருப்பார்கள்  :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

குழப்படி செய்யும்போது பொறுமையாகவும் அன்பாகவும் பேசாமல் "அடியாத மாடு படியாது" என்று எங்களைக் கத்தி அடித்தபடியால்தான் படிந்துபோய் இருக்கின்றோம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 
 கொட்டினது பரவாயில்லை. அதில கொஞ்ச நேரம் உன் இஷ்டத்துக்கு விளையாடிக்கோ...' என்றார். குழந்தையும் அதில் கைகளை அலசி விளையாட ஆரம்பித்தது. 
இது சில குழந்தைகளிடம் எதிர் மறையான  விளைவுகளையும் தரும். :icon_idea: என் மூன்று வயது மகளுக்கு தண்ணீ ர் , விளையாட, அதை தானே clean பண்ண கொள்ளை ஆசை. அவவுக்கு இப்படிச் சொன்னால், பிறகு  ஒவொரு நாளும்  கோக் போத்த ல் விழும். :lol: 

ஆமாம், கொட்டின  தண்ணீ ரில்  விளையாட விட்டல் , எங்க வீட எல்லா தண்ணீரும்  கொட்டுப் படும். இது பிள்ளை  வளப்பிக்கு  நல்ல முறை இல்லை    

FB நபருக்கு: நீங்க இருப்பதால் படம் காட்டியிருப்பாவோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கடையளுக்கு பிடரியிலை இரண்டு போடாட்டி ஒரு வழிக்கு கொண்டுவரேலாது....வெள்ளைக்காரனை பாத்து வாழோணுமிண்டால் அது சீரழிஞ்ச வாழ்க்கைக்கு சமன். அன்பு,பாசம் இல்லாத சடவாழ்க்கை........தண்ணி...டிஸ்கோ...தம்...செக்ஸ்.....குளிசை....இது இப்பத்தையான் வாழ்க்கைத்தத்துவம்.

  • கருத்துக்கள உறவுகள்

549414_558254924186983_1047808331_n.jpg
 

எங்கடையளுக்கு பிடரியிலை இரண்டு போடாட்டி ஒரு வழிக்கு கொண்டுவரேலாது....வெள்ளைக்காரனை பாத்து வாழோணுமிண்டால் அது சீரழிஞ்ச வாழ்க்கைக்கு சமன். அன்பு,பாசம் இல்லாத சடவாழ்க்கை........தண்ணி...டிஸ்கோ...தம்...செக்ஸ்.....குளிசை....இது இப்பத்தையான் வாழ்க்கைத்தத்துவம்.

 

 

முதலில் பொறுமையுடன் கூடிய அன்பு நல்ல குழந்தைகளை உருவாக்கும்!

அன்பு வேலை செய்யாத பொழுது ஒருசில வேளைகளில் மட்டும் அடிப்பது (பிடரியிலை இரண்டு போடுவது) தவறில்லை!

 

ஆனால் அடிப்பது வருடத்துக்கு 3 அல்லது 4 தரத்துக்கு மேல் இருப்பது நல்லதல்ல!!!

 

நல்லதொரு இணைப்பு அபராஜிதன்!

Edited by Aasaan

549414_558254924186983_1047808331_n.jpg

 

 

 

பறவைகளை, விலங்குகளை அவதானித்தால் பழைய காகம் போன்றவற்றை இன்றும் காணலாம்! ஆனால் படத்திலுள்ள நவீன காகம் வெறும் கற்பனை மட்டுமே!

 

FB நபருக்கு: நீங்க இருப்பதால் படம் காட்டியிருப்பாவோ?

அதேதான் ,

ஆக்கள் வந்தால் எல்லாரும் கொஞ்சம் அடக்கித்தான் வாசிக்கிறது. இவ இரண்டு  step கூடப் போட்டு, கோக்கில விளையாடி பிசுபிசுத்த  பிள்ளை, பிள்ளை கிளீன் பண்ணின நிலம் என்று பிறகு ஆல்லோலகல்லோலப் பட்டிருப்பா.
மொத்தத்தில் ஓவர் ஸ்டேப் உடம்புக்காகாது  என்று அம்மாதான் பாடம் படித்திருப்பா  :D

மூன்று வயதுக் குழந்தை, இரண்டு லீற்றா கொக்கோகோலாவினை நினைத்த நேரம் எடுத்துக் குடிக்கும் வகையான குழந்தை வளப்பு?

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று வயதுக் குழந்தை, இரண்டு லீற்றா கொக்கோகோலாவினை நினைத்த நேரம் எடுத்துக் குடிக்கும் வகையான குழந்தை வளப்பு?

பிள்ளைகள் பார்ட்டிக்கு போன Fanta மட்டுமே கேட்பார்கள், மற்றும் வேலை பழங்கள் & யூஸ் மட்டுமே.

 

சின்ன பிள்ளைகளின் எலும்புகளுக்கு கூடாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மூன்று வயதுக் குழந்தை, இரண்டு லீற்றா கொக்கோகோலாவினை நினைத்த நேரம் எடுத்துக் குடிக்கும் வகையான குழந்தை வளப்பு?

உப்பிடியான தாய்தகப்பன்மார் இப்ப எக்கச்சக்கம்.நாங்கள் அவையளோடை ஏதாவது நல்லது,கெட்டது, சீர்திருத்தம் பற்றிகதைக்க வெளிக்கிட்டால்........ பள்ளிக்கூடம் போகாததுகள்,பட்டிக்காடுகள் எண்டு எங்களுக்கு பட்டம் கட்டுவினம். அவையின்ரை பால்குடியள் கொம்பியூட்டருக்கு முன்னாலை இருந்து கொண்டு மவுசை அங்காலை இஞ்சாலை அரக்கி வித்தை காட்டினாலே எங்கடை பெற்றோர் சங்கங்கள்  தங்கடை பிள்ளையளை கொம்பியூட்டர் எஞ்சினியர் ரேஞ்சுக்கு வாயாலை வெளுத்து வாங்குவினம்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.