Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வலசுகளுக்கு ஒரு டே.. வலன்டைன்ஸ் டே..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

222629_10151256141887944_145479455_n.jpg

 

நீ..

எனக்கு ஒரு ஏஞ்சல்

நான்..

உனக்கு ஒரு 

வலன்ரைன் கிவ்ட் சுத்திய கஞ்சல்.

ஓசில வந்ததென்று

கிவ்டை

கவ்விக்கிட்ட நீ

கஞ்சலை..
தூசென.. தூக்கி வீச முன்

கண் திறந்து பார்..

அங்கு.. கசங்கிக் கிடப்பது
நானும்

என் அன்பும்..! :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பதிவு போட்ட நேரமோ என்னமோ.. நமக்கும் ஒரு வலண்ரைன் கிவ்ட் ஓசில கிடைச்சிச்சு. (இது  வாடிக்கையாளர்களுக்கு கடைக்காரங்க தந்தது..!)

 

சொந்து என்னவோ.. கடைக்காரங்க சொத்து என்றாலும்.. தந்தது ஒரு சுப்பர் பிகரு..!  :):lol:

 

IMG_20130209_184140.jpg

 

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

வலசுகளுக்கு, ஒரு வலன்ரைன்ஸ் டே... என்று கவிதை எழுதிப் போட்டு,valentines_day_candy-2041.gif
கடையில்... சூப்பர் ஃபிகர் தந்த அன்பளிப்பை, பல்லைக் காட்டிக் கொண்டு, கை நீட்டி வாங்க உங்களுக்கு வெக்கமாயில்லை. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வலசுகளுக்கு, ஒரு வலன்ரைன்ஸ் டே... என்று கவிதை எழுதிப் போட்டு,valentines_day_candy-2041.gif

கடையில்... சூப்பர் ஃபிகர் தந்த அன்பளிப்பை, பல்லைக் காட்டிக் கொண்டு, கை நீட்டி வாங்க உங்களுக்கு வெக்கமாயில்லை. :D

 

அங்க தான் நாங்க நிற்கிறம்.. இப்படி திட்டினால் தானே பசங்களுக்கும் ஏதாவது கிவ்ட் வரும்..! ஒரே பசங்க கொடுக்கிறதா இருக்கப்படாதில்ல. :lol:

 

நாங்க வாங்கல்ல.. எங்க முன்னாடி.. மேசையில அவங்க வைச்சாங்க..! நாங்க மேசையில இருந்து எடுத்துக்கிட்டம். :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்படி சமாளிச்சாலும் அண்ணை, இதுவரை உங்களுக்கு யாரும் 'பரிசுகள் தரேல்லை எண்ட கடுப்பு.....எழுத்தில தெரியுது!...

 

அது சரி....என்ன பெடியள் மட்டும்தான் பரிசுகள் கொடுக்கிறவையோ?!!!...க்கும்....'காதலிச்சுப்பாருங்க...இருபக்கமும் சமம்!...என்று புரிய வரும்:)

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பரிசுக்காக தலையைக் கொண்டு போய் எலிப்பொறிக்க குடுக்கலாமா தங்கச்சி..??! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்துக்காதலர்களிற்கும் காதலர் தின வாழ்த்துக்கள்..

 

6716_3836447489517_1381181747_n.jpg

 

இப்படிக்கு நெடுக்ஸ்..

 

:lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அனைத்துக் காதலர்களிற்கும் காதலர் தின வாழ்த்துக்கள்..

 

6716_3836447489517_1381181747_n.jpg

 

இப்படிக்கு நெடுக்ஸ்..

 

:lol:

 

அருமையான நிலை விளக்கப்படம் சுபேஸ். சரியான நேரத்திற்கு கொண்டு வந்தீர்கள். நன்றி நண்பனே..! :lol::)

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்க சொந்த வாழ்த்து அட்டை...

 

66981_10151268802842944_1334936644_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்
வாலைகளுக்கும், விலங்குகளுக்கும் இன்று தான் வாலன்டைன் டே போலும்.. :icon_idea:
அதைப்பற்றிய சுவாரசியமான செய்தி இதோ... :lol:
 
 
 
சென்னை: காதலர் தினத்தை கண்டித்து இந்து முன்னணியினர் நாய்கள், கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்தனர்.

ஆண்டுதோறும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் காதலர்கள் தங்கள் மனம் கவர்ந்தவர்களுக்கு வாழ்த்து அட்டை, பரிசுப் பொருட்கள், சாக்லேட்கள் வழங்குவார்கள். இந்நிலையில் காதலர் தினத்தன்று காதல் ஜோடிகள் அத்துமீறி நடப்பதை கண்டித்து இந்து முன்னணி சார்பில் நாய்களுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.

புளியந்தோப்பு குட்டி தம்பிரான் தெருவில் உள்ள காந்தி சிலை அருகே இந்து முன்னணி மாநகர பொதுச் செயலாளர் எஸ்.எஸ். முருகேசன் தலைமையில் இந்து முன்னணி தொண்டர்கள் கூடினர். அவர்கள் ஒரு ஆண், ஒரு பெண் நாய்க்கு அலங்காரம் செய்து மாலை போட்டு மணமக்கள் கோலத்தில் அந்த இடத்திற்கு கொண்டு வந்தனர். அலங்கரிப்பட்ட நாய்களுக்கு பொதுமக்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது. பெண் நாய்க்கு மஞ்சள் கயிறு தாலி கட்டப்பட்டது. அதன் பிறகு மணமக்கள் ஊர்வலமாக
அழைத்துச் செல்லப்பட்டனர்.

அப்போது அவர்கள் காதலர்களுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இந்த நூதன திருமணத்தில் 100 பேர் கலந்து கொண்டனர்.

இகு குறித்து இந்து முன்னணி மாநகர பொதுச் செயலாளர் முருகேசன் கூறுகையில், நாங்கள் ஒன்றும் காதலுக்கு எதிரி அல்ல. காதல் என்ற பெயரில் தவறாக நடந்துகொள்கிறார்கள். இதனால் காதலின் புனிதம் கெட்டுவிட்டது. கடற்கரை, பூங்கா ஆகிய இடங்களில் காதலர்கள் தெரு நாய்கள் போல நடந்துகொள்கிறார்கள். அவர்களின் செயல் மற்றவர்களை முகம் சுளிக்க வைக்கிறது. காதலர்களின் இந்த செயல்களால் தான் பாலியல் வன்முறை பெருகிக் கொண்டிருக்கிறது.

பெண்கள் காம கண்ணோடத்தில் பார்க்கப்படுகிறார்கள். காதலர் தினமான இன்று காதலர்களுக்கு திருமணம் செய்து வைக்க வலியுறுத்தி தான் நாய்களுக்கு திருமணம் செய்து வைத்தோம் என்றார்.

இதே போன்று கொருக்குப்பேட்டையில் காதலர் தினத்தை கண்டித்து இந்து முன்னணியினர் அதன் மாநகர தலைவர் டி.மனோகர் தலைமையில் கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்தனர்.
 
 
 
"காதுஅலற் தினம்" என்றவுடன் இந்த காணொளிதான் நினைவிற்கு வருகிறது. :D
 
 
.

Edited by ராஜவன்னியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கட செய்திக்கு பக்க பலமா எங்கட சின்ன உதவி... :lol:

 

dog--1.jpg

 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=92153

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட செய்திக்கு பக்க பலமா எங்கட சின்ன உதவி... :lol:

 

dog--1.jpg

 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=92153

 

 

smiley5290.gif

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

" வலசுகளுக்கு ஒரு டே.. வலன்டைன்ஸ் டே..! " இது உங்கடை கவிதையின்ரை தலைப்பு . காதலர்தினம் எண்டால் ரெண்டுபேரும் சம்பந்தப்பட்டது . தலைப்பின்படி ரெண்டுபேரும் வலசுகளோ ?? நாங்கள் வல்லாசுகள் ( பேயள் )  எண்டும் சொல்லுவம் ?? ஏன் உங்களுக்கு காதலரை பிடிக்காதோ ?? கவிதைக்கு வாழ்த்திறன் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

" வலசுகளுக்கு ஒரு டே.. வலன்டைன்ஸ் டே..! " இது உங்கடை கவிதையின்ரை தலைப்பு . காதலர்தினம் எண்டால் ரெண்டுபேரும் சம்பந்தப்பட்டது . தலைப்பின்படி ரெண்டுபேரும் வலசுகளோ ?? நாங்கள் வல்லாசுகள் ( பேயள் )  எண்டும் சொல்லுவம் ?? ஏன் உங்களுக்கு காதலரை பிடிக்காதோ ?? கவிதைக்கு வாழ்த்திறன் .

 

ஆண் - பெண் படைப்பியல் இயற்கையானது. அங்கு இனப்பெருக்கம் என்பது இயல்பானது. அதற்காக.. ஆணைப் பெண் ஈர்ப்பதும்.. பெண்ணை ஆண் ஈர்ப்பதும் உயிரினத் தொகுதிகள் எங்கும் நடக்கின்ற சாதாரணா நிகழ்வு தானே. அதையெல்லாம் போய் பெரிசா கொண்டாடிக்கிட்டு இருப்பது...????! ஒரு வகை வலசுத் தனம் தானே.

 

இப்போ தும்மல் வருகுதென்று.. தும்மல் டே வைச்சா.. அதை ரசிப்பீங்களா..???! தும்பல் எவ்வளவோ நல்லதைச் செய்யுது.. கெட்டதையும் செய்யுது..! அதுபோலத் தான் காதலும்.. காதல் உணர்வும்.. உயிரினங்களில்.. இயற்கையானது..! அதையெல்லாம் ஒரு நாளில் தான் உணரனும் மதிக்கனும் என்றது முட்டாள் தனம்.. தானே. இதில் இயற்கையான மனித உணர்வை வியாபாரப் பொருளாக்கும் ஒரு வர்த்தகத்தனம் தானே மனிதர்களை வலசுகளாக்கி மிஞ்சி இருக்குது..!

 

இது உண்மையில் வலன்ரைன் தாத்தாவின் சிரார்த்த தினம். அவர் ஏழை எளியவர்களுக்கு அவர்கள் வாழ்வில் காதல் என்பதன் மூலம் இனக்கலப்பிற்கான வாய்ப்பை உண்டு பண்ணிக் கொடுத்தார். இப்ப.. அப்படி ஏதாவது நடக்கா.. ம்ம்ம்... இல்லவே இல்லை. நடப்பதை எல்லாம்.. நீங்களே காண்கிறீங்களில்ல..!

 

மற்றும்படி நாங்க காதலுக்கு எதிரானவர்கள் அல்ல. காதலை ஒரு விசித்திரமாக.. வலசுத்தனமாகக் காட்டும் வியாபாரத்தனம் நிறைந்த செயற்கைத் தம்மையையே வெறுக்கிறோம். :icon_idea:

 

நன்றி தங்கள் கருத்துக்கு மைதிரேயி..! :)

485255_496033383790068_1215336670_n.jpg

 

இவங்களுக்கும் காதலர் தினமிருக்குது.. நாய்க்கும் இருக்குது.. அத்தோட பத்தோட பதினைஞ்சா மனிசருக்கும் இருக்குது. :lol::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்


நெடுக்ஸ் நீங்கள் திரும்ப கொடுக்கவில்லையா பரிசு. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் நீங்கள் திரும்ப கொடுக்கவில்லையா பரிசு. :D

 

அது எங்கட பிளட்டு (Blood) க்கே கிடையாது. :lol:

 

ஏன்னா நாங்க ஏபி (AB) குரூப். வாங்குவம் கொடுக்கமாட்டம்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பதிவு போட்ட நேரமோ என்னமோ.. நமக்கும் ஒரு வலண்ரைன் கிவ்ட் ஓசில கிடைச்சிச்சு. (இது  வாடிக்கையாளர்களுக்கு கடைக்காரங்க தந்தது..!)

 

சொந்து என்னவோ.. கடைக்காரங்க சொத்து என்றாலும்.. தந்தது ஒரு சுப்பர் பிகரு..!  :):lol:

 

IMG_20130209_184140.jpg

இந்த சூப்பர் என்பதை என்ன அளவு கொண்டு அளந்தீர்கள் நெடுக்குத்தம்பி.....

கொஞ்ச நாளாக உங்கட போக்கில பெரும் மாற்றங்களை  அவதானிக்கின்றோம்.

 

எந்தவித தடையும் தங்களுக்கு நாம் விதிக்காதபோதும்  ஏனின்னும் ஒழித்து கள்ளருந்தும் நிலை.. :wub:

  • கருத்துக்கள உறவுகள்

கிண்டலாக எழுதினாலும் மனதில் உள்ள எதோ ஒரு வலியுடன்

எழுதிய மாதிரி இருக்கின்றது நெடுக்ஸ்

  • கருத்துக்கள உறவுகள்

இவங்களுக்கும் காதலர் தினமிருக்குது.. அத்தோட பத்தோட பதினைஞ்சா மனிசருக்கும் இருக்குது. :lol::D.நெடுக் அண்ணா மாதிரித் தான் நாமளும் சொல்ல வேண்டி இருக்கு. :(

 

 

539350_326221804146362_2110803373_n.jpg

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த சூப்பர் என்பதை என்ன அளவு கொண்டு அளந்தீர்கள் நெடுக்குத்தம்பி.....

கொஞ்ச நாளாக உங்கட போக்கில பெரும் மாற்றங்களை  அவதானிக்கின்றோம்.

 

எந்தவித தடையும் தங்களுக்கு நாம் விதிக்காதபோதும்  ஏனின்னும் ஒழித்து கள்ளருந்தும் நிலை.. :wub:

 

நிச்சயமா விசுகு அண்ணா கள்ளுக்குடிக்கிறது என்றாலும் ஒளிச்சுக் குடிக்கமாட்டன். குடிச்சாலும் பிடிபட்டிடுவன்.. ஏன்னா ஒளிக்கக் கற்றுக்கொள்ளேல்ல..! ஒளிச்சாலும் மனசில செயலில.. இருக்காது. எப்படியோ வெளிப்பட்டிரும்..! :)

 

பசுமையா இருக்கு என்பதை தூர இருந்து கண்ணால் ரசிப்பதைக் கொண்டு சொல்வது போல.. கண்ணுக்கு அழகா இருப்பதால் சூப்பர் என்கிறோம். இதற்காக கிட்டப் போய் பேசிப் பறைச்சு பழகிப் பார்த்தாண்ணா சொல்ல முடியும். அப்படிப் பழகினால் சூப்பர் பிகரு.. சப்ப பிகராகிடும்..! :lol:

கிண்டலாக எழுதினாலும் மனதில் உள்ள எதோ ஒரு வலியுடன்

எழுதிய மாதிரி இருக்கின்றது நெடுக்ஸ்

 

 கிண்டல் இல்ல.. பசங்க பலரின் வலியின் உணர்வு..! பொண்ணுங்க சிலருக்குத் தான்.. அது இருக்கும்..! :)

 

இவங்களுக்கும் காதலர் தினமிருக்குது.. அத்தோட பத்தோட பதினைஞ்சா மனிசருக்கும் இருக்குது. :lol::D.நெடுக் அண்ணா மாதிரித் தான் நாமளும் சொல்ல வேண்டி இருக்கு. :(

 

 

539350_326221804146362_2110803373_n.jpg

 

தெரியும்.. கடைசில எல்லாரும் ஆடி அடங்கி.. நம்ம ரூட்டுக்குத்தான் வருவாங்கன்னு..! நீங்க மட்டுமல்ல.. பல குடும்பவான்களுக்கும் குடும்பவதிகளுக்கும் கூட.. பட்ட பின் தான் தெளிவு வருகுது. நமக்கு அது கொஞ்சம் முன்னாடி வந்திடுது. அவ்வளவும் தான். :):lol:

 

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்வது நெடுக் அண்ண.... நம்மையும் ஆண்டவன் இதயம் என்ற ஒன்றோடு தானே படைத்திருக்கிறான்...வேண்டாத நாட்கள் வந்து மனதை ரணப்படுத்தி விட்டு தான் போகிறது.. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்வது நெடுக் அண்ண.... நம்மையும் ஆண்டவன் இதயம் என்ற ஒன்றோடு தானே படைத்திருக்கிறான்...வேண்டாத நாட்கள் வந்து மனதை ரணப்படுத்தி விட்டு தான் போகிறது.. :)

 

கையில் ஒரு காயம் வந்தால்.. அதை ஆற்றிவிடும் இயல்பை உடல் கற்றுக் கொள்கிறது. அதேபோல் மனதில் ஒரு காயம் வந்தால்.. அதனை அனுபவமாக கற்றுத் தேக்கிக் கொண்டு முன்னேறிச் செல்வதே நல்லது. மீண்டும் மீண்டும் அதே காயங்களுக்கு வழி விடாமல்..! :)

 

நாங்களா தப்புச் செய்வது தான் தவறு. மற்றவர்களால் நாங்கள் எங்களை உணராமல்.. தப்புச் செய்யும்.. தப்பிச் செல்லும்..  சூழலுக்குள் போவது எமது தப்பல்ல. அது அவர்களின் தவறு தங்கச்சி. அதற்காக நாம் வருந்தி என்ன பயன்..! :icon_idea::)

ஆளாளுக்குப் போட்டுத் தாக்குகிறார்கள்.
 

காதலர் தினத்தில் இனிமையாய் ஒரு  பாட்டுக் கேட்போம்.

 

http://www.youtube.com/watch?v=kVfPjas_yDI

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சூப்பர் என்பதை என்ன அளவு கொண்டு அளந்தீர்கள் நெடுக்குத்தம்பி.....

கொஞ்ச நாளாக உங்கட போக்கில பெரும் மாற்றங்களை  அவதானிக்கின்றோம்.

 

எந்தவித தடையும் தங்களுக்கு நாம் விதிக்காதபோதும்  ஏனின்னும் ஒழித்து கள்ளருந்தும் நிலை.. :wub:

 

இந்தக் கேள்விக்கு நெடுக்கர் வந்து பதில் சொல்ல மட்டும் நான் பார்த்துக் கொண்டு நின்டனான் நான் பதில் சொல்ல...என்ட பதில் என்னன்டால் நீங்கள் எல்லோரும் சேர்ந்து அவருக்கென்று விம்பத்தை உருவாக்கி விட்டூட்டீங்கள் ...அவருக்கு பெண்கள் என்டால் பிடிக்காது,அவ்ர் கல்யாணமே கட்டமாட்டார்,கல்யாணம் கட்டாதவர்கள் சாதிக்கவில்லையா போன்ற பலவற்றை சொல்லி இங்கிருப்பவர்கள் அவரை உசுப்பேத்தி வைத்திருக்கிறார்கள் :D ...அதிலிருந்து இறங்க முடியாமலும்,வெளிப்படையாய் சொல்ல முடியாமலும் தம்பி தவியாய்த் தவிக்கிறார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கேள்விக்கு நெடுக்கர் வந்து பதில் சொல்ல மட்டும் நான் பார்த்துக் கொண்டு நின்டனான் நான் பதில் சொல்ல...என்ட பதில் என்னன்டால் நீங்கள் எல்லோரும் சேர்ந்து அவருக்கென்று விம்பத்தை உருவாக்கி விட்டூட்டீங்கள் ...அவருக்கு பெண்கள் என்டால் பிடிக்காது,அவ்ர் கல்யாணமே கட்டமாட்டார்,கல்யாணம் கட்டாதவர்கள் சாதிக்கவில்லையா போன்ற பலவற்றை சொல்லி இங்கிருப்பவர்கள் அவரை உசுப்பேத்தி வைத்திருக்கிறார்கள் :D ...அதிலிருந்து இறங்க முடியாமலும்,வெளிப்படையாய் சொல்ல முடியாமலும் தம்பி தவியாய்த் தவிக்கிறார்

 

இங்குள்ளவர்கள் என்னை உசுப்போத்துறாங்க என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவற்றை நான் பகிடியாகவே எடுத்துக் கொள்கிறேன்.

 

என்னை முழுமையாக அறிந்தவர்கள் என்று யாரும் இல்லை..! நான் பகிடி.. லேசா எடுப்பார்கள்.. என்று..  நினைச்சுக்கொண்டு.. ஆக்களோடு விளையாட்டுக் காட்டுவதே அதிகம். அது அவர்களை வேதனைப்படுத்தியதும் உண்டு..!

 

இயல்பில்.. நான் பள்ளிக்காலத்திலேயே கொம்பாஸில்.. ஒரு பிள்ளையார்... ஒரு ஜேசு படம்.. விவேகானந்தர் போட்டோ என்று தான் கொண்டு திரிவன். ஆசிரியர்கள் கூட பிள்ளையார் மாதிரி ஆகிடப் போறாய் என்று கிண்டல் செய்திருக்கிறார்கள்.

 

என் ரூமில் கூட.. அம்மா அப்பா படம் இல்லை.. (அவை அல்பத்தில தான் இருக்கினம்) விவேகானந்தர் படமே உள்ளது. விவேகானந்த மிசனில் சிறுவனாக உள்ள போதே சேர்ந்து இயக்கத் தொடங்கிட்டன். நானாக விரும்பித்தான் போனேன். என்னை யாரும் கொண்டு போய் விடல்ல. நான் கேட்டு பெற்றோர் இணைத்து விட்டார்கள்.

 

அதற்காக எனக்கு நண்பிகள் இல்லை என்றில்லை. நான் சாதாரணமாக எல்லோரோடும் பழகுவேன். ஆனால் நெருக்கம் காட்டுவதில்லை.

 

இவற்றை எல்லாம் நானாக என் பாட்டிற்கு விரும்பித் தான் தெரிவு செய்திருந்தேன். பொழுது போக்கிற்கு மற்றவர்கள் கதைப் புத்தகங்கள் படிக்கும் போது மகசீன்கள் படிக்கும் போது.. நான் படித்த புத்தகங்கள் பெரியவர்களை பற்றியதாகவே அதிகம்.. இருந்திருக்கிறது. பள்ளியில் ஞானபூமி.. சோவியத் நாடு (சோவியத் காலத்தில் பள்ளிக்கு வந்த சஞ்சிகை).. கலைக்கதிர்.. சுஜாதாவின் அறிவியல் மற்றும் நியூ சயன்ரிஸ்ட்.. நேச்சர்.. ஏடுகள்.. தவறாமல்.. படிப்பேன். எனது நண்பர்களே.. உனக்கு என்று தான் உதுகளை லைபரில போட்டிருக்காங்க என்று கிண்டல் செய்திருக்கிறார்கள்.

 

ஆபாசத்தை கல்வியில் கற்றுக் கொண்டதால் அதனைத் தேடி அதிகம் போக வேண்டி இருக்கவில்லை. அதற்காக ரெம்ப நல்ல பையன் கிடையாது. சந்தர்ப்பம் கிடைத்தால்.. ஆபாசம் என்ன.. எல்லாம் பார்ப்பம். ஆனால் ஆபாச வார்த்தைகளை  ஆக்களோடு.. கதைப்பதில்லை.

 

அதுமட்டுமன்றி ஆண்கள் வழி.. பாடசாலைக் கல்வி.. பெண்களிடம் இருந்து நிறையவே எங்களை தூர விலக்கி வைத்துவிட்டது. யுனிலும் நான் என் வழியில் என் சொந்த முயற்சியில் தான் அதிகம் படிப்பேன். நான் பொதுவாக மற்றவர்களோடு சேர்ந்து படிக்கமாட்டன். ஆனால் மற்றவர்களுக்கு  கற்றுக் கொடுப்பேன்.

 

நான் ஒருபோதும் பெண்களை விசித்திரப் பிறவிகளாகப் பார்ப்பதில்லை. அவர்களை என்னில் ஒருவராக சாதாரணமாகவே கருதுகிறேன். பொதுவாக யாருடனும்.. (ஆண் நண்பர்களோ.. நண்பிகளோ) அதிகம் நெருக்கம் காட்டுவதில்லை. பெற்றோரை உறவுகளைத் தவிர.

 

என்னைப் பொறுத்த வரை.. எனக்கு என் எண்ணத்திற்கு.. எல்லா வகையிலும்.. முழுமையாகப் பிடித்த ஒருவரை நான் இன்னும்.. சந்திக்கவில்லை என்றே நினைக்கிறேன். அப்படி சந்திக்காத வரை நான் யாரையும் முழுமையாக விரும்பப் போறதும் இல்லை..! நெருங்கப் போறதும் இல்லை. அடிப்படையில்.. எனக்கு என் கொள்கையில் பிடிப்பு அதிகம்.  :):icon_idea:

 

இதை ஏன் எழுதுறேன்னா.. எங்களைப் பற்றிய மிகையான.. சிறுமையான..நேர்.. நேர்மாறு.. உண்மை.. மாய விம்பங்களை உருவாக்கி வைச்சிருந்தா.. அதை உங்களின் பார்வை வில்லைக்கு அமைய மாற்றி அமையுங்கோ உறவுகளே..! :lol::D

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.