Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்னுயிர்க் காதலிக்கு இரண்டு வரிகள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாலை நிலமாகி வரண்டுபோன
என் வாழ்வில்
ஒற்றைப் பூவாய் வந்து

சோலையாகிப் போனவள் நீ


விடியாத அந்த இரவுகளில்
என் விசும்பல்களின்
வலிகேட்டு உயிர்ப் பூவெடுத்து

மலர்மாலை தொடுத்தவள் நீ

 

 

 

வாழ்த்துக்கள் காவாலி   உங்கள்  கவிதைக்கு :D

விடியாத அந்த இரவுகளில்

என் விசும்பல்களின்

வலிகேட்டு உயிர்ப் பூவெடுத்து

மலர்மாலை தொடுத்தவள் நீ


 

உம்........ கால் வாலி எப்ப புல் வாலியானீங்கள்  :D :D ????மனம் நிறைந்த பாராட்டுக்கள் .உங்களாலையும் முடியும் . தொடருங்கோ :) :) .

  • கருத்துக்கள உறவுகள்

பாலை நிலமாகி வரண்டுபோன

என் வாழ்வில்

ஒற்றைப் பூவாய் வந்து

சோலையாகிப் போனவள் நீ

விடியாத அந்த இரவுகளில்

என் விசும்பல்களின்

வலிகேட்டு உயிர்ப் பூவெடுத்து

மலர்மாலை தொடுத்தவள் நீ

 

பேரற்ற கொடியொன்றில்
நீரற்றுக் கிடந்த வாலிமலருக்கு
வேரில் நீர் தெளித்து
வாடிய இதழ் நனைத்து
கூடிய வாலியின்
பூங்கொடிக்கு நாமும்
வாழ்த்துசொல்கிறோம்..
வாழ்க உங்கள் காதலும்
அன்பும் பல்லாண்டு... :)
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் காவாலி உங்க அப்பா அம்மா உங்களுக்கு ஒருவேளை தனினும் மகிழ்ச்சியை காட்டேல்லையா..???! இது ரெம்ப ஓவர்.. பாலைவனமான வாழ்க்கை என்பது. பெத்து வளர்த்து ஆளாக்கினவங்கள... ஒரு நொடியில மறந்துவிட்டு... அவர்கள் தந்த வாழ்வை பாலைவனத்துக்கு உவமையாக்கிட்டு.ஒட்டி உரசி.. உடல் உழைப்பை உறிஞ்சி... வாழ வரும் அட்டை ஒன்றை... சோலையாகக் காட்டுதல்.. கொஞ்சம் ஓவரா இருக்குது..!

 

இதையே நாளை உங்கள் பிள்ளைகள் உங்கள் முன்னிலையில் சொன்னால்..?????????! :):lol: :lol:

 

மற்றும்படி.. கவிதை வரிகளாகப் படிக்க நல்லா இருக்குது..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் காவாலி உங்க அப்பா அம்மா உங்களுக்கு ஒருவேளை தனினும் மகிழ்ச்சியை காட்டேல்லையா..???! இது ரெம்ப ஓவர்.. பாலைவனமான வாழ்க்கை என்பது. பெத்து வளர்த்து ஆளாக்கினவங்கள... ஒரு நொடியில மறந்துவிட்டு... அவர்கள் தந்த வாழ்வை பாலைவனத்துக்கு உவமையாக்கிட்டு.ஒட்டி உரசி.. உடல் உழைப்பை உறிஞ்சி... வாழ வரும் அட்டை ஒன்றை... சோலையாகக் காட்டுதல்.. கொஞ்சம் ஓவரா இருக்குது..!

 

இதையே நாளை உங்கள் பிள்ளைகள் உங்கள் முன்னிலையில் சொன்னால்..?????????! :):lol: :lol:

 

நெடுக்ஸ் அண்ணை..பாவம்வாலி..அந்தாள் இப்பதான் மூண்டுவருசத்துக்கு பிறகு ரண்டு வரி எழுதி இருக்கு..அந்தளைப் பிடிச்சு இந்த வெருட்டு வெருட்டினா..மனுசன் அழப்போகுது.. :D

  • கருத்துக்கள உறவுகள்

பலை வனத்திலை மிக தவிக்கிறீங்கள் என்பது மட்டும் தெரியிது

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் அண்ணை..பாவம்வாலி..அந்தாள் இப்பதான் மூண்டுவருசத்துக்கு பிறகு ரண்டு வரி எழுதி இருக்கு..அந்தளைப் பிடிச்சு இந்த வெருட்டு வெருட்டினா..மனுசன் அழப்போகுது.. :D

 

ஆமல்ல. நிறைய கனவுகளோடு.. மாலையிட்டு விட்டு.. காத்திருக்கிறார் போல..! ஏன் அதை நாங்க கலைப்பான். கனவே கலையாதே..! நினைவே உன் நிலையை கொஞ்சம் தளர்த்திக் கொள்..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஆமல்ல. நிறைய கனவுகளோடு.. மாலையிட்டு விட்டு.. காத்திருக்கிறார் போல..! ஏன் அதை நாங்க கலைப்பான். கனவே கலையாதே..! நினைவே உன் நிலையை கொஞ்சம் தளர்த்திக் கொள்..! :lol:

hahaha... :lol:  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

காவாலி கவிதையை பார்த்தால் கவிதை எழுதுவதில் கைதேர்ந்த அனுபவம் உள்ளது போல் இருக்கு :) ...தொடர்ந்து எழுதுங்கோ...சீக்கிரமே மனைவியோடு சேர வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

உன் அழகு முகம்பார்த்து,

விடிகின்ற காலைகளில்,

சுவற்றுப் பல்லிகள் கூட,

மன்மதகீதம் இசைக்கின்றன!

 

காவாலி.... பிறகு....... :D

 

தொடருங்கள், காவாலி......

  • கருத்துக்கள உறவுகள்

உன் அழகு முகம்பார்த்து,

விடிகின்ற காலைகளில்,

சுவற்றுப் பல்லிகள் கூட,

மன்மதகீதம் இசைக்கின்றன!

 

 

அரற்றித் தூங்காமல்
அழகி உன்ஞாபகத்தில்
பிதற்றிக் கிடக்கின்ற
பித்தன் வாலியின் 
செவிகளில்
கிணற்று தவளைகள் 
கத்துவது கூட
கிறுங்க வைக்கும் 
கீதங்களாகின்றன...
 
ம்ம்..யாரவது தொடருங்கள் வாலிக்காக... :D

Edited by சுபேஸ்

பாலைவனத்தையே.... சோலையாக்கிய  அந்த  பூ சரியான வடிவான பூ போல தான் கிடக்கு  :icon_mrgreen:.

வலிகேட்டு உயிர்ப் பூவெடுத்து

மலர்மாலை தொடுத்தவள் நீ

அழகான வரிகள்  காவாலி அண்ணே 

  • கருத்துக்கள உறவுகள்

அரற்றித் தூங்காமல்
அழகி உன்ஞாபகத்தில்
பிதற்றிக் கிடக்கின்ற
பித்தன் வாலியின் 
செவிகளில்
கிணற்று தவளைகள் 
கத்துவது கூட
கிறுங்க வைக்கும் 
கீதங்களாகின்றன...
 
ம்ம்..யாரவது தொடருங்கள் வாலிக்காக... :D

 

காதலெனும்,, 

கரைகள் தொலைத்த,

முகில்க் கூட்டங்களுக்குள்,

புதைந்து கிடைக்கிறது,

காவாலி மனசு!

 

கசிந்தோடும் கண்ணீரும்,

புருவத்து அசைவுகளும், 

பரமானந்த நிலையொன்றில்,

பூரித்துப் போயிருக்கும்,

நிர்வாண நிலையாகி,

உடலும் மனமும்,

அத்துவிதக் கலப்பாகி,

ஒன்றாகி நிற்கும்! :D

 

,

 

 

,

  • கருத்துக்கள உறவுகள்

கன்னிக்கவிதை அதுவும் காதலர்  தினத்தில். தொடர்ந்து எழுதுங்கள், வாலி.

  • கருத்துக்கள உறவுகள்

விசும்பல்களின்

வலிகேட்டு உயிர்ப் பூவெடுத்து

மலர்மாலை தொடுத்த 

உங்கள் கவிதை அழகு.

  • கருத்துக்கள உறவுகள்

காதலெனும்,, 

கரைகள் தொலைத்த,

முகில்க் கூட்டங்களுக்குள்,

புதைந்து கிடைக்கிறது,

காவாலி மனசு!

 

கசிந்தோடும் கண்ணீரும்,

புருவத்து அசைவுகளும், 

பரமானந்த நிலையொன்றில்,

பூரித்துப் போயிருக்கும்,

நிர்வாண நிலையாகி,

உடலும் மனமும்,

அத்துவிதக் கலப்பாகி,

ஒன்றாகி நிற்கும்! :D

 

,

 

 

,

 

 

 

பின்னுருகும் மனதின் மோன நிலையில்
காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி
வேத நான்கிலும் மெய்ப்பொருளான அன்பை
நாதன் காவாலியின் நாவினால் நவிலக்கேட்டு
ஒழுகும் நாயகியின் விசும்பலில்
நனைந்து சிலிர்க்குமே 
நாயகன் காவாலியின் மோனத்தவம்.... :D
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் இரண்டு வரிகள் என்று நிற்பாட்டிப்போட்டீங்கள்?!! காதல் சொல்லச் சொல்ல அழகுதானே...இன்னும் சொல்லலாமே!

 

 

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நன்று மிகுதியையும் தொடருங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் காவாலி   உங்கள்  கவிதைக்கு :D

 

நன்றி தமிழ்31 உங்கள் வாழ்த்துக்களுக்கு :)

 

 

விடியாத அந்த இரவுகளில்

என் விசும்பல்களின்

வலிகேட்டு உயிர்ப் பூவெடுத்து

மலர்மாலை தொடுத்தவள் நீ

 

உம்........ கால் வாலி எப்ப புல் வாலியானீங்கள்  :D :D ????மனம் நிறைந்த பாராட்டுக்கள் .உங்களாலையும் முடியும் . தொடருங்கோ :) :) .

 

அவளை ஏற்றுக்கொண்டபோதே முழுமை அடைந்ததாக உணர்கின்றேன். உங்கள் வாழ்த்துக்களுக்கும் உற்சாகமூட்டலுக்கும் நன்றி கோமகன் அண்ணா :)

 

 

பேரற்ற கொடியொன்றில்
நீரற்றுக் கிடந்த வாலிமலருக்கு
வேரில் நீர் தெளித்து
வாடிய இதழ் நனைத்து
கூடிய வாலியின்
பூங்கொடிக்கு நாமும்
வாழ்த்துசொல்கிறோம்..
வாழ்க உங்கள் காதலும்
அன்பும் பல்லாண்டு... :)

 

எங்கள் காதலை கவிகொண்டு வாழ்திய சுபேசுக்கு நன்றி :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் காவாலி உங்க அப்பா அம்மா உங்களுக்கு ஒருவேளை தனினும் மகிழ்ச்சியை காட்டேல்லையா..???! இது ரெம்ப ஓவர்.. பாலைவனமான வாழ்க்கை என்பது. பெத்து வளர்த்து ஆளாக்கினவங்கள... ஒரு நொடியில மறந்துவிட்டு... அவர்கள் தந்த வாழ்வை பாலைவனத்துக்கு உவமையாக்கிட்டு.ஒட்டி உரசி.. உடல் உழைப்பை உறிஞ்சி... வாழ வரும் அட்டை ஒன்றை... சோலையாகக் காட்டுதல்.. கொஞ்சம் ஓவரா இருக்குது..!

 

இதையே நாளை உங்கள் பிள்ளைகள் உங்கள் முன்னிலையில் சொன்னால்..?????????! :):lol: :lol:

 

மற்றும்படி.. கவிதை வரிகளாகப் படிக்க நல்லா இருக்குது..! :icon_idea:

 

இல்லை என்பதுதான் பதில். என்னுடைய ஆறாவது வயதில் தாயை இழந்துவிட்டேன். அதன் பிறகு இரண்டு மாதங்கள் கழித்து கொழும்புக்கு போன தந்தையாரை இன்றுவரை கண்டதில்லை. வாழவேண்டும் என நினைத்ததெல்லாம் தங்கைகளுக்காகத்தான்.

பெண்கள் உறவே வேண்டாம் என இருந்த என்னைத் தேடிவந்தவள் அவள். ஒட்டி உரசி.. உடல் உழைப்பை உறிஞ்சி... வாழ வரும் அட்டை என்று அவளைச் சொல்வதை எல்லாம் உடன்பாடு இல்லை. எனக்கு பொருளாதார சிக்கல் வந்தபோதல்லாம் என்னைத் தாங்கி இருக்கிறாள். அவளது உழைப்பு அதிகளவு எனக்காகத்தான் செலவுசெய்யப்பட்டு இருக்கின்றது. என்னுடைய இன்பதுன்பத்தில் பங்கெடுக்கும் உன்னதமான உயிர் அவள்.

 

எங்கள் பிள்ளைகளுக்கு இப்படி ஒரு சூழ்நிலை வர கட்டாயம் விடமாட்டோம். :)

 

நன்றி நெடுக்ஸ்.

 

பலை வனத்திலை மிக தவிக்கிறீங்கள் என்பது மட்டும் தெரியிது

 

ஓம் சாத்திரி அண்ணா, தற்போது ஒரு தற்காலிகப் பிரிவு. சீக்கிரம் பாலைவனம் சோலைவனமாகி விடும். ரெண்டு மூண்டு புதியவகை பூக்களை உருவாக்கவும் உத்தேசமுண்டு. :D

 

காவாலி கவிதையை பார்த்தால் கவிதை எழுதுவதில் கைதேர்ந்த அனுபவம் உள்ளது போல் இருக்கு :) ...தொடர்ந்து எழுதுங்கோ...சீக்கிரமே மனைவியோடு சேர வாழ்த்துக்கள்

 

வாழ்த்துக்களுக்கு நன்றி ரதி.

 

முன்னர் பாடசாலை மட்டத்தில் கிறுக்கிய அனுபவம் உண்டு. நானெல்லாம் கவிஞனாக முடியாது. பெரிய பெரிய கவிஞர்கள் இருக்கும் யாழ் களத்தில் நாமெல்லாம் தூசி. :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.