Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஷ்யாவில் வானத்தில் இருந்து திடீரென விழுந்த பயங்கர விண் எரிகல்.400 பேர் காயம். கட்டிடங்கள் நொறுங்கின.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வயசுப்பொண்ணுகள் இருக்குமிடத்தில்..என்ன கேள்வி இது.. :D

எங்க ....எங்க ...எங்க .......

2046 இல் மீண்டும் ஒரு எரிகல் கிட்ட வருமாம்.

 

ஆனால் அது இதைப்போல கிட்ட வராதாம். இது சில செய்மதி கோள்களை விட அருகில் வந்ததாம் .

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமெரிக்காவின் இரட்டைகோபுர தாக்குதலைவிட இது எவ்வளவோ பயங்கரமானது....அல்லது இதுவோரு பூமிக்கான எச்சரிக்கை! 

karunanidhi_350_120512033848.jpg

திமுக ஆட்சியில் இப்படி நடந்ததில்லை..! அதிமுக ஆட்சியில் தான் இதுபோன்ற அக்கிரமங்கள் நடக்கின்றன --கலைஞர்!

 

jayalalitha.jpg

கடந்த திமுக ஆட்சியின் பொறுப்பற்ற திறன் தான் இப்பொழுது விண்கல் பூமி நோக்கி வர காரணம் -- ஜெயலலிதா

 

 

arjun-sarja.jpg

உது புலிகளின் சதிதான் எனக்கு கண்டிப்பா தெரியும் முந்தி சேர்த்த காசில இப்ப விளையாடுகினம் ..----------

 

 

 

arjun-sarja.jpg

உது புலிகளின் சதிதான் எனக்கு கண்டிப்பா தெரியும் முந்தி சேர்த்த காசில இப்ப விளையாடுகினம் ..----------

 

 

முடியல.. :lol:  இறுதிப்படம் நல்ல கற்பனை..

 

Edited by uthayam

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றைய உலகில் இயற்கையோடு சம்பந்தப்பட்ட முக்கியமான செய்தி ஒன்று யாழில் கருணாநிதியுடனும் ஜெயலலிதாவுடனும் காலம்கடத்துவது வருத்ததிற்குரியது.

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலா இருக்கட்டும்.. சமூக.. அநியாயமா இருக்கட்டும்.. அறிவியலா இருக்கட்டும்.. சினிமாவா இருக்கட்டும்.. எதையும் ஒரு நேர்மையோட எழுதிற பக்குவம் இந்திய ஊடகங்களுக்குக் கிடையாது..! ஒன்றில் வாசகரைக் கிளுகிளுப்பூட்டனும்.. இல்ல பிரமிக்க வைக்கனும்.. இது தான் அவற்றின் குறிக்கோள்..!

 

ரஷ்சிய எரிகல் விபத்திற்கும்.. விண்கல் கடந்து போன நிகழ்விற்கும் இடையில் தொடர்பு இல்லை. ஆனால்.. இந்திய ஊடகங்களைப் பொறுத்த வரை.. அது நயன்தாரா - ஆர்யா  திரிஷா - விஷால் கிசு கிசு மாதிரி ஆயிடிச்சு..!

 

இப்ப தெரியுது இவங்க ஏன் வெளிநாட்டு ஊடகங்களை ஒருவிதமான பெருமிதத்தோட.. அதைப் படிக்கிறதே.. தங்களுக்கான பெருமிதம் என்ற வகையில்.. பார்க்கிறாங்கன்னு..!

 

The asteroid's arrival was preceded by a damaging meteor event in Russia on Friday - but indications from the meteor's path suggest that the two events are entirely unrelated - just a "cosmic coincidence", as Alan Fitzsimmons of Queens University Belfast told BBC News.

 

_65863869_asteroid_route304-03.gif

 

http://www.bbc.co.uk/news/science-environment-21442863

Edited by nedukkalapoovan

ரஷ்யாவின் தென்பகுதியில் எரிநட்சத்திர விழுந்து வெடித்ததினால்
காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 1100 ஆக அதிகரித்துள்ளது என்று அந்நாட்டு
செய்திகள் தெரிவிக்கின்றன.



ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் இருந்து 1,500 கிலோ மீற்றர் தொலைவில் யுரால்
பகுதியில் உள்ள செல்யபின்ஸ்க் என்ற இடத்திலேயே இந்த எரிநட்சத்திரம்
வெடித்துச் சிதறியுள்ளது.



விஞ்ஞானிகள் கணிப்பிட்டுள்ளதன் பிரகாரம் 10 தொன் நிறையில் இரண்டு மீற்றர் நீளமான எரிநட்சத்திரமே இவ்வாறு வெடித்து சிதறியுள்ளது.



மணித்தியாலயத்திற்கு 54 ஆயிரம் கிலோமீற்றர் வேகத்தில் வாயுகோளத்திற்குள்
புகுந்த எரிநட்சத்திரம் பூமியிலிருந்து சுமார் 30 க்கும் 50 க்கும்
இடைப்பட்ட தூரத்தில் வெடித்து சிதறியுள்ளது.



அதன் பின்னர் அது எரிமழையாக பொழிந்துள்ளது. இதனால் குறிப்பிட்ட பகுதியில்
வெப்பநிலையும் அதிகரித்துள்ளது என்றும் அந்த செய்திகளில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/59006--1100-.html?utm_source=twitterfeed&utm_medium=facebook&utm_campaign=Feed%3A+TamilmirrorBreakingNews+%28TamilMirror.lk+%3A%3A%3A+Breaking+News%29&utm_content=FaceBook

  • கருத்துக்கள உறவுகள்

விண் கல்லுடன், சக்தியுள்ள காந்தம் ஒட்டுமா? அதனைப் பற்றிய... தகவல்களை, நீங்கள் அறிந்தவற்றை எமக்கும்.... விரிவாகக் கூறலாமே..... :rolleyes:

அப்ப தானே... எமது அறிவும் விருத்தியடையும். :icon_idea:

 

தமிழ்ஸ்..

 

இங்கே உள்ள கற்களை விட விண்கற்களில் இரும்பின் அளவு அதிகம் இருக்கும். ஏன் அப்படி என்று தெரியவில்லை. பெரும்பாலானவை அப்படித்தான். ஆகவே இந்தக் கற்களைப் பொறுக்கச் செல்பவர்கள் காந்தத்தையும் எடுத்துச் செல்வார்கள்.

 

அதுபோல பூவுலகுக்குள் இந்தப் பாறைகள் நுழையும்போது பெரும்பாலானவை வழிமண்டல ஒராய்வினால் எரிந்து சாம்பலாகிவிடும். ஒருசில கற்கள்தான் முழுவதும் எரியாமல் நிலத்தில் விழுபவை.

 

இவை எரிந்துகொண்டு வருவதனால் அவற்றில் எரிவு அடையாளங்கள் அதாவது fusion crust காணப்படும்.

 

cameldonga462b_s.jpg

 

இந்த அடையாளத்தை வைத்தும் இக்கற்களைக் கண்டுபிடித்து எடுப்பார்கள்.

 

இக்கற்களை விஞ்ஞான ஆராய்ச்சிக்குப் பயன்படுத்துவார்கள். வெளிச் சந்தைகளுக்கும் விற்கலாம். இதை வாங்கிச் சேகரிப்பவர்கள் பலர் உள்ளார்கள்.

 

கனடாவில் இதைக் கண்டெடுத்தால் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டியதில்லை. ஆனால் அந்தக் கல்லை வெளிநாட்டில் விற்பதாக இருந்தாலும், கொண்டு செல்வதாக இருந்தாலும் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

நேற்றுப் போன விண்கல் மறுபடியும் வருகிறது
 
நேற்று சுமார் 27.000 கி.மீ தூரத்தில் பூமியைக் கடந்து போன 45 மீட்டர் நீளமும், 130.000 தொன் எடையும் கொண்ட விண்கல் அஸ்ரேடன் டீ.ஏ.14 மறுபடியும் பூமிக்கு வரும் என்று நாஸா அறிவித்துள்ளது.


எதிர்வரும் 2046ம் ஆண்டில் தனது பாதையில் சுற்றியபடியே புவிக்கு வரும் ஆனால் அப்போது அதனுடைய இடைவெளி நேற்றுப் போனதைப்போல அண்மித்திருக்காது, சுமார் 1.48 மில்லியன் கி.மீ தொலைவில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்கள்.

 

இந்த விண்கல் ஒளிபோல நகர்ந்து போவதை நேற்று பலர் பார்த்து இணையத்திலும் பதிந்துள்ளார்கள்.

 

இதுபோன்ற விண் கற்கள் வருடந்தோறும் ஒரு மில்லியன் அளவில் புவியை கடந்து போவதாக டேனிஸ் விண்வெளி ஆய்வு மையமான ருக்கபாக சென்டரில் இருந்து டேனிஸ் வானியலாளர் யூப் கிறா தெரிவித்தார்.
 
புவி மேற்பரப்பில் மனிதன் வாழாத பகுதிகளாக கடல், காடு, பனிமலைகள் என்று சுமார் 70 வீதமான பகுதிகள் இருப்பதால் பல கற்கள் மனிதனுக்கு தெரியாமலே புவியில் விழுந்துவிடுகின்றன.

ஆனால் முன்னைய காலத்தைப் போல் அல்லாது இன்று இது போன்ற கற்றள் வரும் காலம், இடைத்தூரம் என்பவற்றை துல்லியமாகக் கணிக்குமளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

 

http://www.alaikal.com/news/?p=122527

ஏவுகணை தாக்குதல் நடத்தி எரிகல்லை அழித்த ரஷியா?- பேரழிவு அபாயம் தவிர்க்கப்பட்டது 
Written by delani   // February 16, 2013   // Comments Off 
 ரஷியாவில் யூரல் மலைப் பகுதியில் நேற்று காலை திடீரென சக்தி வாய்ந்த எரிகல் ஒன்று வந்து விழுந்தது. சிறு நட்சத்திர வகையைச் சேர்ந்த எரிகல் சுமார் 10 டன் எடை கொண்டது. நேற்று காலை 9.30 மணிக்கு அந்த எரி நட்சத்திரம் ஒளிப் பிழம்பை கக்கியபடி வந்து மோதியது.
எரி நட்சத்திரம் தரையில் மோதுவதற்கு முன்பு 3 துண்டுகளாக உடைந்தது. 54 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் வந்து அது மோதியது. இதனால் ரஷியாவின் மையப் பகுதியில் பூமி குலுங்குவது போல இடி சத்தம் கேட்டது.
எரி கல்லின் துகள்கள் அதாவது பெரிய, பெரிய எரிகற்கள் நாலாபுறமும் தெறித்து விழுந்தன. இதில் சுமார் 1000 பேர் காயம் அடைந்தனர். உடனடியாக பேரிடர் மீட்பு குழுவினர் அவர்களை மீட்டு மருத்துவமனைகளில் சேர்த்தனர்.
காயம் அடைந்தவர்களில் 112 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதற்கிடையே எரி கற்கள் விழுந்த இடங்களில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.
20 ஆயிரம் பேர் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எரி கல்லின் 3 பெரிய பாகங்கள் விழுந்த இடத்தில் 3 பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. அதுபோல வேறு எங்காவது பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்று ஆய்வு நடந்து வருகிறது.
எரிகல் விழுந்து தாக்கியதில் செலியாபிர்ஸ்க் என்ற இடத்தில் வீடுகள், தொழிற்சாலைகள் சேதம் அடைந்துள்ளன. அந்த இடங்களில் அணு கதிர் வீச்சு ஏதேனும் ஏற்பட்டுள்ளதா? என்று தேசிய பேரிடம் மேலாண்மைக் குழுவினர் ஆய்வு செய்து வருகிறார்கள்.
ரஷிய விண்வெளி ஆய்வு மையமான ரோஸ் கோமோஸ் எரிகல் விழுந்திருப்பதை வீடியோவில் பதிவு செய்துள்ளது. அதில் வெள்ளை நிறத்தில் புகையை கக்கியபடி மிகப்பிரகாசமாக எரிகல் வருவது தெளிவாக தெரிகிறது. அந்த காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இதற்கிடையே ரஷியாவில் விழுந்த எரிகல் மிக, மிக சக்தி வாய்ந்து வந்ததாகவும், இதை கண்டுபிடித்த ரஷியா ஏவுகணையை செலுத்தி, அந்த எரிகல்லை நடுவானில் தகர்த்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் ரஷிய ராணுவம் இதை மறுத்தது.
என்றாலும் ஏவுகணையை செலுத்தி எரிகல்லை ரஷியா அழித்ததாக தொடர்ந்து தகவல்கள் வெளியானது. ரஷியா செய்தி நிறுவன இணைத்தளத்தில், எரிகல்லை ஏவுகணை அழித்ததாக தகவல் வெளியானதால் பலரும் இதை உண்மை என்றே நம்பினார்கள்.
இதற்கிடையே ரஷியா டுடே பத்திரிகையில் பூமிக்கு மேல் 20 கிலோ மீட்டர் தொலைவில் எரிகல் வந்தபோது, அதை ரஷிய ஏவுகணை வழிமறித்து தாக்கி அழித்ததாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. நாக் எனும் உள்ளூர் பத்திரிகை ஒன்று ஏவு கணை மூலம் எரிகல் தாக்கி தகர்க்கப்பட்டதாக ராணுவ அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டிருந்தது. எனவே எரிகல் சிதறலில் தொடர்ந்து புரளிகளும், யூகங்களும் நிலவுகிறது.
எரிகல் நடுவானில் தகர்க்கப்பட்டதால்தான் ரஷியாவில் நிகழ இருந்த பேரழிவு அபாயம் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

உடுக்க உடுப்பின்றி

சாப்பாடின்றி

மருந்தின்றி

அவயங்களை  இழந்து

அரை   உயிராக நின்ற  எம்மக்களை  உயிருடன் புதைக்க உதவியவர் மீதெல்லாம் எரிமலை விழும்

அதை  நான் பார்ப்பேன்

 

  • கருத்துக்கள உறவுகள்

உடுக்க உடுப்பின்றி

சாப்பாடின்றி

மருந்தின்றி

அவயங்களை  இழந்து

அரை   உயிராக நின்ற  எம்மக்களை  உயிருடன் புதைக்க உதவியவர் மீதெல்லாம் எரிமலை விழும்

அதை  நான் பார்ப்பேன்

 

அரசியல் வாதியல் செய்த தப்புக்கு தவறுக்கு.. அப்பாவி மக்கள் மேல் ஏன் இப்படி ஒரு கோவம் வெறுப்பு

அரசியல் வாதியல் செய்த தப்புக்கு தவறுக்கு..அப்பாவி மக்கள் மேல் ஏன் இப்படி ஒரு கோவம் வெறுப்பு

நீங்கள் லயன் பியர் அடித்து விட்டு சிங்கள கிரிக்கெட் பார்க்கும் ஆக்கள் போல..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த கல்லுகள் விழுகிறதை தடுக்க, ஏதேனும் கல்லு வைத்த மோதிரம் போடலாமோ?

 

இது விழுவதற்கு 2-3 மணித்தியாலம் முந்தி வேலை இடத்தில் கவனியாமல் ஓரு கதிரையில் இருந்து இன்னுமொரு கதிரைக்கு மாறியபோது மேலே இருந்த கப்போர்ட் இடித்து-தலை கிர் என்று போயிற்று, சிறிய காயமும் வந்தது.  
 

எனது தலையில் விழ வேண்டிய கல்லுத்தான் இப்படி ஒரு வேறு வழியில் வந்ததோ என்று தெரியவில்லை? இன்னுமொரு இடத்தில் விழமுன்பு/ அல்லது எனது தலையில் விழ முன்பு ஏதாவது செய்ய வேண்டும். :icon_idea: 
 

 

  • கருத்துக்கள உறவுகள்
ரஷியாவில் யூரல் மலைப்பகுதியில் மோதிய எரிகல்

 

rusia.jpgரஷியாவில் யூரல் மலைப்பகுதியில் மோதிய எரிகல் வெளிப்படுத்திய சக்தி இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட ஒட்டு மொத்த ஆயுதங்களின் சக்தியைவிட அதிகம் என நாசா மதிப்பிட்டுள்ளது.இது குறித்து நாசா எரிகல் சூழலியல் தலைவர் பில் குக்கி கூறியதாவது: இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட அனைத்து ஆயுதங்களின் சக்தியை விட அந்த எரிகல் பூமியில் மோதியபோது வெளிப்பட்ட சக்தி அதிகம். அந்த நெருப்புக்கோளம் சூரியனை விட பிரகாசமாக எரிந்தது. அதில் இருந்து 50 ஆயிரம் கிலோ அளவுள்ள எரிசக்தி வெளிப்பட்டது. இது, 1945ஆம் ஆண்டு ஹிரோஷிமா மீது வீசப்பட்ட அணுகுண்டின் சக்தியை விட 30 மடங்கு அதிகம்.

மணிக்கு 6 லட்சத்து 43 ஆயிரத்து 734 கி.மீட்டர் வேகத்தில் மோதிய அந்த எரிகல் வெடித்த 32.5 விநாடிகளுக்கு வளிமண்டலத்தில் 24 கி.மீ. தொலைவு வரை அதன் ஒளிப்பிழம்பு தெரிந்தது என கணக்கிடப்பட்டுள்ளது என்றார்.

1908ஆம் ஆண்டுக்குப் பின் விழுந்த எரிகற்களிலேயே இதுதான் மிகப்பெரியது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.