Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆயுதம் தாங்கிய கைகள். வவுனியா புனர்வாழ்வு முகாம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியா முன்னை நாள் பெண்போராளிகளிற்கான  புனர்வாழ்வு முகாம். இதில் பலரின் முகங்கள் உங்களிற்கும் நினைவிற்கு வரலாம்.

 

http://youtu.be/Gf60BWsrh3s

Edited by sathiri

அவர்கள்  பார்வையில்  சிங்கத்தின் கையில் பிடிபட்ட மானின் பார்வை.

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதம் தாங்கிய கைகள் நம்பிக்கை தளர்ந்து, கைகளில் நூல்கள்  கட்டியபடி, பார்க்க முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

Wow super voice

ரெண்டு பேருக்கும் நல்ல குரல்......

  • கருத்துக்கள உறவுகள்

அதில ஒரு அக்கா இப்பவும் வரிப்புலி ஆடை அணிந்திருக்கிறா..!

 

ஜே வி யின் தலைவர் ரோகண விஜயவீரவை பிரேமதாச கொன்றதோடு சரி.. அவரின் மனைவி பிள்ளைகள் தோழர்கள்.. புனர்வாழ்வின்றியே வாழ வைக்கப்பட்டனர். அப்படி வந்தவர்களில் ஒருவர்.. விமல் வீரவன்ச..!

 

ஆனால்.. தரகர் பணி செய்ய வந்து சூச்சிப் பணி செய்த.. நோர்வேயின் உள்ளக மத்தியஸ்தத்தில்.. ஐநாவின் உச்சரிப்பில் சரணடைந்த எம் போராளிகளுக்கு சிங்களம் தந்த பரிசு.. பாலியல் சித்திரவதை.. நிர்வாணமாக்கல்.. படுகொலைகள்.. மிஞ்சிப் போனவர்களில் சிறைகளில் ஒரு தொகுதியினர்.. அடிமைக் கூலிகளாக.. காட்டிக்கொடுப்புக்கு.. தலையாட்டலுக்கு.. இன்னொரு தொகுதியினர்.. இப்படியான புனர்வாழ்வு முகாம்கள் என்ற தனிமைச் சிறைகளில் மிகுதிப் பேர்.

 

வடகொரியாவில்.. சிறைகளில் என்ன நடக்குது என்று விசாரிக்க கங்கணம் கட்டி நிற்கும் பாங்கி மூனும் அமெரிக்காவும்.. இங்கு மட்டும்.. சிறீலங்காவே எல்லாத்தையும் விசாரிச்சுக் கொண்டு நல்லிணக்கத்தை கட்டி வளர்க்க பரிந்துரைக்கினம். இது எந்த வகையில் நியாயம்..????!

 

இந்தச் சோகங்களுக்கு காரணமானவர்கள் சிங்களவர்கள் மட்டுமல்ல.. ஆதிக்க வெறிபிடித்து அலையும் ஒரு தொகுதி மனிதர்களும் என்பதுவே உண்மை..!

 

இன்று எமக்குத் தேவை.. இந்த உறவுகளின் முகங்களில் மகிழ்ச்சியும்.. சுதந்திரமும் உணரப்படுதலே. அதற்கு என்ன செய்ய முடியும் என்று சொல்வதே இக்காணொளிகள் மேலும் மேலும் எம்மை நாடிவர முடியாத சூழலை தோற்றுவிக்க உதவும்.

 

ஆரம்பக்கட்டத்திற்குப் பின் பார்க்க முடியவில்லை. அத்தனை சோகம் மனதில் மட்டுமல்ல.. உடலே தளர்ந்து போகிறது..! :(:rolleyes:

Edited by nedukkalapoovan

எல்லோர் முகங்களிலும் அவர்கள் மனதுக்குள் புதைந்து கிடக்கும் சொல்ல முடியாத சோகம் புதைந்து கிடப்பது தெளிவாகத் தெரிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

ம் ...தமிழினி 

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே..  :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

தலை நிமிர்ந்து பார்க்க விருப்பமில்லாமல் இருக்கும் போராளிகளை பார்க்க இயலவில்லை. அனைவரிலும் ஒரு சோகம் தெரிகிறது.

பார்க்கும் போது கவலையாக உள்ளது. :(

 

இப்பொழுதும் அவர்கள் கைதிகள் போல் தான் உள்ளார்கள். கட்டாயப்படுத்தி பாடவைக்கப்படுகிறார்கள். தமது முகத்தை வீடியோவில் காண்பிக்க விருப்பமில்லாமல் குனிகிறார்கள். :(

  • கருத்துக்கள உறவுகள்

தலை நிமிர்ந்து பார்க்க விருப்பமில்லாமல் இருக்கும் போராளிகளை பார்க்க இயலவில்லை. அனைவரிலும் ஒரு சோகம் தெரிகிறது.

 

முள்ளில் இருப்பது போல் இருப்பு

மனங்களில்  சோகம்

விருப்பப்படாத ஒரு விடயத்துக்கு வற்புறுத்தி நடாத்துவது போல் பாவம்

சுத்திவர மீண்டும் அவர்கள் வந்ததும்  முகத்தில் தோன்றும் வலிந்த சிரிப்பு.....

 

இதைப்பார்த்தாவது புரியுமா சர்வதேசத்துக்கு தமிழனின் நிலை????

 

மாணவர் போராட்டத்துக்கு இதுவும் உத்வேகம் தரலாம்

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் கவலைதரும் விடயம்..!

 

ஆனால் Nov 11, 2012 அன்று வெளியிடப்பட்ட காணொளி இன்று ஏன் வலம்வருகிறது என்பதையும் சிந்தித்துப் பார்க்கவேண்டும்..! :rolleyes:

 

சொல்லப்படாத செய்தி: இவர்கள் எல்லோரும் இன்னும் எமது கைகளுக்குள்தான் இருக்கிறார்கள்..! ரொம்பத் துள்ள வேண்டாம்..! :huh:  :rolleyes:

உண்மைதான். மாஸ்ரர் விட்டு வைக்கமாட்டார். இயக்கத்தில் கோடு போட்டு
வாழ்ந்த சிலரில், மாஸ்ரரும் ஒருவர். இயக்கத்திலிருக்கும் எல்லோருமே
அப்படித்தானிருக்க வேண்டும் என்பது அவரது நிலைப்பாடு. நீண்டகாலமாகவே படையணி
புலனாய்வு பொறுப்பாளராக இருந்து தளபதியானவர். படையணி புலனாய்வில்
அப்படியொன்றும், சிக்கலான வேலைகளிருக்கவில்லை. ஓடியவர்களை பிடிப்பது,
முகாமிலிருந்து வெளியில் செல்லும் சமயங்களில் வீடுகளிற்கு சென்று
வருபவர்களை வீடுகளில் வைத்தே கையும்மெய்யுமாக பிடிப்பது, துண்டு
கொடுப்பவர்களை அடைப்பது, மேற்படி காரணங்களிற்காக உடையார்கட்டில் ஒரு ஜெயிலை
நடத்தியது போன்றனவே அவரது புலனாய்வு நடவடிக்கையில் முக்கியமானவையாக
இருந்தன. இத்தகைய அனுபவசாலி ,தளபதியானால் படையணியிலிருந்து
தப்பியோடுபவர்கள் ஒன்றுக்கு நூறுமுறையாக சிந்திக்க வேண்டித்தானே இருக்கும்.

 

எந்த சந்தர்ப்பத்திலும், எந்த பதிலீட்டினாலும், எந்த இலட்சியத்தின்
பேரிலும் நியாயம் செய்துவிட முடியாத ஒரு மாபெரும் அநீதி பற்றி, ‘தமிழ்
சமூகம்’ எனப்படும் நூற்றுச் சொச்சம் பேர் புழங்கும் ஏரியாவில் நடமாடும்
எவரும் பகிரங்கமாக கதைப்பதில்லை. தங்கள் பிள்ளைகளின் காதல் , மற்றும் பிற
பாலியல் தொடர்புகளை அடுத்த வீடும் அறியாத இரகசியமாக தங்களிற்குள்
போட்டுமூடிக் கொள்ளும் தமிழ் மனநிலை புரிந்து கொள்ளக்கூடியதே என்ற போதும்,
சொந்த விருப்பு வெறுப்புக்களிற்காக சொந்த இனத்தின் உயிர்களையும் ஈடுவைக்க
துணிவது அசிங்கமானது.

 

இவர்களுக்கு நேற்றும் இதுதான். இன்றும் இதுதான் .நாளை ?

அதுதான் முழு மூளைசாலிகளும் நாட்டை விட்டு ஓடினார்களோ என்னவோ ?

  • கருத்துக்கள உறவுகள்

ம் அப்புறம்?

என்னத்த சொல்ல நீங்க எல்லாம் அட்வைஸ் பண்ணி நாங்க கேட்டுக்கிற காலமா போய்டிச்சு....

ம் அப்புறம்?

என்னத்த சொல்ல நீங்க எல்லாம் அட்வைஸ் பண்ணி நாங்க கேட்டுக்கிற காலமா போய்டிச்சு....

 

இன்னும் ஒரு வருஷம் தாங்கிக்குங்க ..

 

அதுக்கு அப்புறம்....

 

அதுவே பழகிப்போயிடும் சுண்டல்... :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.