Jump to content

அவித்த பனங்கிழங்கு துவையல்- சமையல் குறிப்பு - 13


Recommended Posts

இது காரமும் இனிப்பும் கலந்த சிற்றுண்டி. பனங்கிழங்கு கிடைக்கும் காலங்களில் வீட்டில் செய்வார்கள்.

 

 

 

தேவையான பொருட்கள்.

 

1. அவித்த பனங்கிழங்கு -- 4

2. செத்தல் மிளகாய் - 2 (நடுத்தரம்)

3. மிளகு - 8-10

4. தேங்காய் பூ - 1/2 கப் (125 மி. லி. அளவு கரண்டி)

5. உப்பு -   சுவைக்கு ஏற்ப 

6. சீனி/சர்க்கரை - 2 மேசை கரண்டி/ சுவைக்கு ஏற்ப.

7. உள்ளி - ஒரு பல்லு, (நடுத்தரம்)

 

 

 

dscn2741h.jpg

 

செய்முறை 

 

1. அவித்த பனங்கிழங்கை குந்து எடுத்து/ வார்ந்து , சிறிய துண்டுகளாக முறித்து/ வெட்டி கொள்ளவும்.

 

 

 

 சிறிய உரலில் இடிப்பதாயின் 

2. செத்தல் மிளகாய், உப்பு, மிளகு என்பவற்றை உரலில் போட்டு நன்கு பொடியாக்கவும்.

3. உள்ளியை சேர்த்து இடிக்கவும்.

4. முறித்து வைத்த கிழங்கை பகுதி பகுதியாக போட்டு இடிக்கவும்.

5. கிழங்கு துண்டுகள் ஓரளவு இடிபட்டு வந்ததும், தேங்காய் பூ , சீனி இரண்டையும் கலந்து நன்கு இடிக்கவும்.

6. இப்போ துவையல் பசைத்தன்மையாக குழைந்து வரும்.

7. உரலில் இருந்து இறக்கி, துவையலை பந்தாக உருட்டி பரிமாறவும்.

 

 

 

Food processor இல் அரைப்பதாயின்.

 

2. தேங்காய் பூ , செத்தல் மிளகாய், உள்ளி, உப்பு என்பவற்றை போட்டு முதலில் அரைக்கவும், மிளகை  பொடியாக்கி போடவும்.

3. கலவை அருவல் , நொருவலாக அரைபட்டதும், முறித்து வைத்த கிழங்கை போட்டு அரைக்கவும்.

4. இறுதியாக சீனியை போட்டு அரைத்து இறக்கி, உருண்டையாக உருட்டி கொள்ளவும்.

 

 

 

 

dscn2751x.jpg

 

 

இது இரண்டு பேருக்கான சிற்றுண்டிக்கு போதும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள், குளக்காட்டான்!

 

சும்மா இருந்த நாக்கில் நீரூற வைத்துவிட்டீர்கள்!

 

இதை அடிக்கடி நாங்கள் செய்வதுண்டு! செத்தல் மிளக்காயக்குப் பதிலாகத் தோட்டத்திலிருந்து, உடனே பிடுங்கிய பச்சை மிளகாய் தான் போடுவோம்!  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்விற்கு நன்றிகள் குளக்காட்டான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி குளம்ஸ்.நாங்களும் பச்சை மிழகாய் போட்டதாகதான் ஞாபகம்.இங்கு ஒரு நாளும் செய்ய வில்லை.இதைப்பாத்தவுடன் நாவூறுது.அது சரி சீனி போடுவதாக நான் கேள்விப்பட்டதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி குளம்ஸ்.நாங்களும் பச்சை மிழகாய் போட்டதாகதான் ஞாபகம்.இங்கு ஒரு நாளும் செய்ய வில்லை.இதைப்பாத்தவுடன் நாவூறுது.அது சரி சீனி போடுவதாக நான் கேள்விப்பட்டதில்லை.

உங்களைப் போல ஆக்களுக்குச் சீனி போடுவதில்லை! குழந்தைப் பிள்ளையளுக்குக் கொஞ்சம் வேறயா எடுத்துவைச்சுச் சீனி கலந்து குடுக்கிறவை! :D

Link to comment
Share on other sites

நன்றிகள், குளக்காட்டான்!

 

சும்மா இருந்த நாக்கில் நீரூற வைத்துவிட்டீர்கள்!

 

இதை அடிக்கடி நாங்கள் செய்வதுண்டு! செத்தல் மிளக்காயக்குப் பதிலாகத் தோட்டத்திலிருந்து, உடனே பிடுங்கிய பச்சை மிளகாய் தான் போடுவோம்!  :D

 

நன்றி. மிளகாய் காரத்துக்கு தானே. பச்சை மிளகாயின் சுவை சிறிது வித்தியாசப்படும். எங்கள் வீட்டில் செத்தல் மிளகாய் தான் போடுவது.

பகிர்விற்கு நன்றிகள் குளக்காட்டான்.

நன்றி 

 

பகிர்வுக்கு நன்றி குளம்ஸ்.நாங்களும் பச்சை மிழகாய் போட்டதாகதான் ஞாபகம்.இங்கு ஒரு நாளும் செய்ய வில்லை.இதைப்பாத்தவுடன் நாவூறுது.அது சரி சீனி போடுவதாக நான் கேள்விப்பட்டதில்லை.

நன்றி. சீனி அவரவர் விருப்பத்துக்கு ஏற்ற மாதிரி தான். கட்டாயம் என்று இல்லை. எங்கள் வீட்டில் சீனி போட்டும் செய்வதுண்டு, போடாமலும் செய்வதுண்டு. அதனால் தான் சுவைக்கேற்ப என போட்டேன்.

Link to comment
Share on other sites

dscn2751x.jpg

 

உருண்டை ஏன் அதிகம் மஞ்சள் நிறமாய் உள்ளது? தேங்காய்பூ கலவையினாலா? அல்லது கமெராவின் பாதிப்பா? நாம் செய்து உண்ணும் உருண்டையில் தேங்காய் பூ, இனிப்பு கலப்பது இல்லை. அதன் நிறம் மென் பச்சையாக தோன்றும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில இருக்கேக்க இதச் சாப்பிட்டுப் போட்டு மனுசர் படுறபாடு சொல்லிமாளாது .கண்ணால அருவி கொட்டும்  அவ்வளவு உறைப்பு 

அதுக்குப் பிறகு பல்லுக்க கொழுவின  தும்பை எடுக்க ஒராள் வேணும்  :)

Link to comment
Share on other sites

 

உருண்டை ஏன் அதிகம் மஞ்சள் நிறமாய் உள்ளது? தேங்காய்பூ கலவையினாலா? அல்லது கமெராவின் பாதிப்பா? நாம் செய்து உண்ணும் உருண்டையில் தேங்காய் பூ, இனிப்பு கலப்பது இல்லை. அதன் நிறம் மென் பச்சையாக தோன்றும்.

 

பனங்கிழங்கின், நிறம் மெல்லிய  பழுப்பு மஞ்சள். அதற்கும் செத்தல் மிளகாயும் சேர்க்கும் பொது இந்த நிறத்தில் வந்தது.

 

பச்சை மிளகாய் சேர்த்து இடித்தால் பச்சை நிறமாக தோறும் தானே. :) 

ஊரில இருக்கேக்க இதச் சாப்பிட்டுப் போட்டு மனுசர் படுறபாடு சொல்லிமாளாது .கண்ணால அருவி கொட்டும்  அவ்வளவு உறைப்பு 

அதுக்குப் பிறகு பல்லுக்க கொழுவின  தும்பை எடுக்க ஒராள் வேணும்  :)

 

அது உண்மை தான். தும்பு பெரிய பிரச்சனை. :D 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில இருக்கேக்க இதச் சாப்பிட்டுப் போட்டு மனுசர் படுறபாடு சொல்லிமாளாது .கண்ணால அருவி கொட்டும்  அவ்வளவு உறைப்பு 

அதுக்குப் பிறகு பல்லுக்க கொழுவின  தும்பை எடுக்க ஒராள் வேணும்  :)

நந்து, இதுக்கொரு வழியிருக்கு! :D

 

அவித்த பனங்கிழங்கை, இரண்டாகப் பிழந்தபின்னர், அவற்றை ஒவ்வொன்றாக ஒரு சுளகின் மேல், மல்லாத்தி வைத்துக், ஒரு கரண்டியால், நீங்கள் தனியாகக் கிழங்கை மட்டும் வழித்தெடுக்கலாம்! தும்பு தனியாக வந்துவிடும்! மரம் சீவும் போது வரும் சீவல்கள் மாதிரி வரும்!  பின்னர் துவையலைச்க் செய்யலாம்! நீங்கள் நினைப்பது போல், அதிக நேரம் எடுக்காது!

Link to comment
Share on other sites

நந்து, இதுக்கொரு வழியிருக்கு! :D

 

அவித்த பனங்கிழங்கை, இரண்டாகப் பிழந்தபின்னர், அவற்றை ஒவ்வொன்றாக ஒரு சுளகின் மேல், மல்லாத்தி வைத்துக், ஒரு கரண்டியால், நீங்கள் தனியாகக் கிழங்கை மட்டும் வழித்தெடுக்கலாம்! தும்பு தனியாக வந்துவிடும்! மரம் சீவும் போது வரும் சீவல்கள் மாதிரி வரும்!  பின்னர் துவையலைச்க் செய்யலாம்! நீங்கள் நினைப்பது போல், அதிக நேரம் எடுக்காது!

 

பொதுவாக தும்பு எடுத்து தான் இடிக்கிறது. நீங்கள் சொல்லும் முறை வித்தியமாக இருக்கிறது.

 

மேலே போட்ட படத்தில் வெளிபகுதியில் தும்பு பெருமளவில் எடுக்கப்பட்டு விட்டது. ஆனால் கிழங்கின் உள்  இருக்கும் துப்பை எடுப்பது முடியாத காரியம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பார்க்க வாயூறுது. கடவுளே இதெல்லாத்தையும் எண்ட கண்ணில ஏன் காட்டுறாய்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

பார்க்க வாயூறுது. கடவுளே இதெல்லாத்தையும் எண்ட கண்ணில ஏன் காட்டுறாய்

 

 

 

 

உங்கள நீண்ட நாள்களூக்கு பிறகு காண்பதில் மிக்க மகிழ்ச்சி சுப்பர் அண்ணை ஆப் கேசாகே :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழின் பழைய ஆக்களெல்லாரையும் மீண்டும் ஒரே நேரத்தில் காண்பதில் மிக்க மகிழ்ச்சி.

 

குளக்காட்டானின் பனங்கிழங்கு துவையல்.. அந்தளவுக்கு மகிமை பொருந்தியது போல் உள்ளது. பகிர்விற்கு நன்றி குளம்ஸ்.

 

இதில் எங்கட அம்மம்மா.. பச்சை மிளகாய்.. தேங்காய் சொட்டு.. இதர ஸ்பைஸ்..எல்லாம் போட்டு உரலில இட்டு..உலக்கையால்..துவைச்சு.. உருட்டித் தருவா.. சூப்பரா இருக்கும்.

 

சிலவேளைகளில் உறைப்புக்குப் பதிலா.. சீனியும் சேர்க்கிறவா..!

 

உரலில் இடித்தது தான் சுவை. இதற்கு பிளண்டரோ.. கிரைண்டரோ பாவிப்பதில்லை..! நான் நினைக்கிறேன்.. தும்பு மற்றும் சரியான பதத்தில் எடுக்க முடியாது என்பதற்காகவாக இருக்கலாம். :)

Link to comment
Share on other sites

பார்க்க வாயூறுது. கடவுளே இதெல்லாத்தையும் எண்ட கண்ணில ஏன் காட்டுறாய்

 

நன்றி.

 

 

யாழின் பழைய ஆக்களெல்லாரையும் மீண்டும் ஒரே நேரத்தில் காண்பதில் மிக்க மகிழ்ச்சி.

 

குளக்காட்டானின் பனங்கிழங்கு துவையல்.. அந்தளவுக்கு மகிமை பொருந்தியது போல் உள்ளது. பகிர்விற்கு நன்றி குளம்ஸ்.

 

இதில் எங்கட அம்மம்மா.. பச்சை மிளகாய்.. தேங்காய் சொட்டு.. இதர ஸ்பைஸ்..எல்லாம் போட்டு உரலில இட்டு..உலக்கையால்..துவைச்சு.. உருட்டித் தருவா.. சூப்பரா இருக்கும்.

 

சிலவேளைகளில் உறைப்புக்குப் பதிலா.. சீனியும் சேர்க்கிறவா..!

 

உரலில் இடித்தது தான் சுவை. இதற்கு பிளண்டரோ.. கிரைண்டரோ பாவிப்பதில்லை..! நான் நினைக்கிறேன்.. தும்பு மற்றும் சரியான பதத்தில் எடுக்க முடியாது என்பதற்காகவாக இருக்கலாம். :)

 

பலருக்கு பிடித்திருக்கிறது. நன்றி :) . உரலில தான் பொதுவாக இடிக்கிறது. கிர்ரைண்டர் செய்முறை, புலம் பெயர் நாட்டில் உரல் இல்லாதவர்களுக்காக.

 

நான் ஒரு சிறிய கல்லுரல் வாங்கி வைத்துள்ளேன்.. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனி, உப்பு, செத்தல்மிளகாய் எல்லாம் போட்டு... அருமந்த பனங்கிழங்கு பழுதாய்ப் போய் விடுமோ... என்று பயமாயிருக்கு, குளக்காட்டான்.

Link to comment
Share on other sites

சீனி, உப்பு, செத்தல்மிளகாய் எல்லாம் போட்டு... அருமந்த பனங்கிழங்கு பழுதாய்ப் போய் விடுமோ... என்று பயமாயிருக்கு, குளக்காட்டான்.

 

உங்களுக்கு பனங்கிழங்கின் சுவை வேறு எந்த சேர்மானமும் இல்லாமல் பிடித்திருந்தால் அப்படியே சாப்பிடலாம். மேலே எழுதின பலரது கருத்தையும் பார்த்தால், உந்த சேர்மானம் பலருக்கு பிடித்துள்ளது போல் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கல்லு உரலிலை இடிச்சால் இன்னும் நல்லாய் இருக்கும் . பனங்கிழங்கு உடம்புக்கு நல்லது . உங்கடை றெசிப்பி நல்லாய் இருக்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பனங்கிழங்கு,இராசவள்ளி,மரவள்ளி கிழங்கு போன்றன அதிகம் சாப்பிட்டால் உடம்பு வைக்குமா?

 

Link to comment
Share on other sites

பனங்கிழங்கு,இராசவள்ளி,மரவள்ளி கிழங்கு போன்றன அதிகம் சாப்பிட்டால் உடம்பு வைக்குமா?

 

அளவோடு சாப்பிட்டு மிகுதியை மற்றவர்களுக்கு கொடுத்தால் உடம்பு வைக்காது

Link to comment
Share on other sites

பனங்கிழங்கு,இராசவள்ளி,மரவள்ளி கிழங்கு போன்றன அதிகம் சாப்பிட்டால் உடம்பு வைக்குமா?

 

வந்திய தேவன் சொன்ன பதில் சரியானது.

எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பதில் தங்கி இருக்கிறது.

 

மேலும்

 

இதற்கு நீங்கள் ஆம் / இல்லை என்று ஒற்றை பதிலை எதிர்பார்த்தீர்கள் என்றால் கஷ்டம் தான்.

 

பொதுவாக கிழங்கு வகைகளில் மாச்சத்து அதிகம் என்றாலும், அவற்றில் இருக்கும் மாச்சத்து எவ்வளவு விரைவில் சமிபாடடைந்து குருதியில் குழுக்கொசின் அளவை அதிகரிக்கிறது என்பதிலும், கிழங்கு  வகைகளில் எவ்வளவு நார் சத்து இருக்கிறது என்பதை கொண்டே உடல் நிறை அதிகரிக்க செய்யுமா இல்லையா என தீர்மானிக்க முடியும்.

 

 

குருதியில் விரைவில் குளுகோசின் அளவை அதிகரிக்க செய்யும் உணவுகள் சலரோக நோய் உள்ளவர்களுக்கு நல்லதல்ல. அதே நேரம் உடலில் விரைவாக குளுகொசின் அளவை அதிகரிக்க செய்யும் உணவுகளை அளவு கணக்கிலாமல் சாப்பிட்டால் உடல் நிறை அதிகரிக்கவும் செய்யும்.

 

 

 

 

உதரணத்துக்கு உருளை கிழங்கை தோல் நீக்கி சமைத்தால் அதில்  இருந்து கிடைக்கும் ஊட்டசத்துகளின் அளவு மிக குறைவு, மாச்சத்து அதிகம், குருதியில் விரைவில் குழுக்கொசின் அளவை அதிகரிக்க செய்யும்.

 

பனங்கிழங்கின், இராச வள்ளி கிழங்கின் மாச்சத்து எவ்வளவு விரைவில் சமிபாடு அடைந்து குருதியில் குழுக்கொசின் அளவை அதிகரிக்க செய்யும் என தெரியாது, 

 

 

 

உங்களுக்கு உண்மையில் எந்த உணவு பொருட்கள் குருதியில் குழுக்கொசின் அளவை சடுதியாக அதிகரிக்கிறது/ சிறிது சிறிதாக அதிகரிக்கிறது, எந்த உணவுகள் உடல் எடை அதிகரிப்பை தவிர்க்க உதவும் என அறிய விருப்பம் என்றால் 

 

அளவு எவ்வளவு வேகமாக அதிகரிக்கிறது என்பதை பொறுத்து உணவுகளை பிரிக்கலாம்.  இவ்வாறு பிரிக்க பயன்படும்

சுட்டியை "Glycaemic Index"  என அழைப்பர்.  இந்த சுட்டி கூடிய உணவுகளை உண்பதை  சலரோகம் உள்ளவர்கள், அதிகரித்த உடல் நிறை, இரத்த அழுத்தம்

உள்ளவர்கள் தவிப்பது நல்லது.

 

இந்த சுட்டி அதிகம் உள்ள உணவுகளுக்கு உதாரணம்.

 

மசித்த உருளை கிழங்கு - 70

வெள்ளை பாண் - 70

வெள்ளை அரிசி சோறு- 98

Cheerios - 74

Baguette ( பாண்)- 95

Cornflakes - 84

 

இந்த சுட்டி மத்திய அளவில் உள்ள உணவுகள்.

 

குஸ்  குஸ் - 65

Muesli, non toasted - 56

முழு கோதுமை பாண் (whole wheat bread)- 69

பசுமதி அரிசி சோறு - 58

 

 

மிக குறைந்த சுட்டி உள்ள உணவுகள்.

 

கச்சான்/ நிலகடலை - 14

பால் - 27

அவித்த சிந்தாமணி கடலை - 42

 

முழுமையான பட்டியலை பார்க்க 

http://www.weightlos...ndex_tables.htm

 

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=120268

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 பனங்கிழங்கு போகம் வந்திட்டால் எங்கடை வீட்டிலை  துவையல் அந்தமாதிரி களைகட்டும்....சொல்லி வேலையில்லை.......சீனி சக்கரையேல்லாம் போடமாட்டம்.......மிளகும் உள்ளியும் செத்தலும் அந்தமாதிரி தூக்கும்.அதுவும் மர உரலிலை போட்டு இடிச்சு துவைச்சால் இன்னும் விசேசம் கண்டியளோ...... :wub:
குழைக்காட்டான்ரை செய்முறையை நாங்கள் புளுக்கொடியல் மா உருண்டைக்குத்தான் பாவிக்கிறனாங்கள். ம்....அதுவும் அந்தமாதிரித்தான் இருக்கும் :) .....இஞ்சை பிறந்துவளர்ந்ததுகளுக்கு உந்த அருமையெல்லாம் எங்கை தெரியப்போகுது?
நன்றி குழைக்காட்டான்.
Link to comment
Share on other sites

 

 பனங்கிழங்கு போகம் வந்திட்டால் எங்கடை வீட்டிலை  துவையல் அந்தமாதிரி களைகட்டும்....சொல்லி வேலையில்லை.......சீனி சக்கரையேல்லாம் போடமாட்டம்.......மிளகும் உள்ளியும் செத்தலும் அந்தமாதிரி தூக்கும்.அதுவும் மர உரலிலை போட்டு இடிச்சு துவைச்சால் இன்னும் விசேசம் கண்டியளோ...... :wub:
குழைக்காட்டான்ரை செய்முறையை நாங்கள் புளுக்கொடியல் மா உருண்டைக்குத்தான் பாவிக்கிறனாங்கள். ம்....அதுவும் அந்தமாதிரித்தான் இருக்கும் :) .....இஞ்சை பிறந்துவளர்ந்ததுகளுக்கு உந்த அருமையெல்லாம் எங்கை தெரியப்போகுது?
நன்றி குழைக்காட்டான்.

 

நீங்கள் சொல்வது சரியே பனை மற்றும் பனை சம்பந்தப்பட்ட பொருட்கள் எமது வாழ்வோடு ஒன்றியவை, மிகவும் கவலைக்குரிய விடயம் போர்க்காலத்தின் போது கணிசமான பனைமரங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. மீள்நடுகை என்பது அவசியமாகின்றது.

Link to comment
Share on other sites

 

 பனங்கிழங்கு போகம் வந்திட்டால் எங்கடை வீட்டிலை  துவையல் அந்தமாதிரி களைகட்டும்....சொல்லி வேலையில்லை.......சீனி சக்கரையேல்லாம் போடமாட்டம்.......மிளகும் உள்ளியும் செத்தலும் அந்தமாதிரி தூக்கும்.அதுவும் மர உரலிலை போட்டு இடிச்சு துவைச்சால் இன்னும் விசேசம் கண்டியளோ...... :wub:
குழைக்காட்டான்ரை செய்முறையை நாங்கள் புளுக்கொடியல் மா உருண்டைக்குத்தான் பாவிக்கிறனாங்கள். ம்....அதுவும் அந்தமாதிரித்தான் இருக்கும் :) .....இஞ்சை பிறந்துவளர்ந்ததுகளுக்கு உந்த அருமையெல்லாம் எங்கை தெரியப்போகுது?
நன்றி குழைக்காட்டான்.

 

 

நன்றி.  புழுக்கொடியல் மாவுக்கு தேங்காய் பூ போட்டு குழைத்து சாப்பிடுவோம். நீங்கள் சொல்லும் முறையில் செய்ததில்லை. ஒரு நாளைக்கு செய்து பார்த்தால் போச்சு.

 

நீங்கள் சொல்வது சரியே பனை மற்றும் பனை சம்பந்தப்பட்ட பொருட்கள் எமது வாழ்வோடு ஒன்றியவை, மிகவும் கவலைக்குரிய விடயம் போர்க்காலத்தின் போது கணிசமான பனைமரங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. மீள்நடுகை என்பது அவசியமாகின்றது.

நீங்கள் சொல்வது முக்கியமான விடயம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலக்கிய மாதத்தையொட்டி 25 ஆவது தடவையாக கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்தப்படும் "கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சியை" ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பார்வையிட்டுள்ளார். இதன்போது இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் சமந்த இந்தீவர,சிறுவர் புத்தகங்கள் தொடர்பிலான தேசிய கொள்கைப் பத்திரத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் வழங்கி வைத்தார்.  பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (28) நடைபெறும் கண்காட்சிக்கு வருகை தந்திருந்த மக்கள் ஜனாதிபதிக்கு விசேட வரவேற்பளித்தனர். 400 புத்தக கூடங்கள் இங்கு 400 புத்தக கூடங்கள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றைப் பார்வையிட வந்திருந்த மக்களோடு ஜனாதிபதி சிநேகபூர்வமாக கலந்துரையாடினார். இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படுகின்ற "கொழும்பு சர்வதேச புத்தக் கண்காட்சி" செப்டம்பர் 27 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 06 ஆம் திகதி இரவு 9.00 மணி வரையில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் நடத்தப்படுகிறது. மேலும், பேராதனை பல்கலைக் கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் லியனகே அமரகீர்த்தி, கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளர் உதார திக்கும்புர,பணிப்பாளர் சமந்தி ஜயசூரிய, மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் இணை நிர்மாணப் பிரிவின் தலைவர் ருவன்திகா சேனநாயக்க உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.  https://tamilwin.com/article/president-visited-the-international-book-fair-1727509202#google_vignette
    • இலங்கையில் முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை குறிப்பிட்டளவில் சீரமைக்க, அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, தனது தேர்தல் பிரசாரத்தின் போது, முன்னாள் ஜனாதிபதிகளின் ஓய்வூதிய சலுகைகள் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்திருந்தார். சட்டத்தின்படி,ஒவ்வொரு முன்னாள் ஜனாதிபதியும் அவரின் வாழ்நாளில் வாடகையின்றி பொருத்தமான குடியிருப்பைப் பயன்படுத்த உரிமை உண்டு. மாதாந்த கொடுப்பனவு பொருத்தமான குடியிருப்பு வழங்கப்படாவிட்டால், மாதாந்த ஓய்வூதியத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கு இணையான மாதாந்த கொடுப்பனவு அவருக்கு வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு முன்னாள் ஜனாதிபதிக்கும், ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் பதவியை வகிக்கும் ஒருவருக்கும் மாதாந்த சம்பளத்திற்கு இணையான மாதாந்த செயலாளர் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும். முன்னாள் ஜனாதிபதியின் விதவைகளுக்கு, அமைச்சரவை அமைச்சரின் பிரத்தியேக செயலாளராக பதவி வகிக்கும் நபருக்கு வழங்கப்படும் மாதாந்த சம்பளத்திற்கு இணையான மாதாந்த செயலாளர் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும். அமைச்சரவைக் கூட்டம் அவர்கள் உத்தியோகபூர்வ போக்குவரத்திற்கும் தகுதியுடையவர்கள் மற்றும் ஒரு அமைச்சரவை அமைச்சருக்கு வழங்கப்படும் அனைத்து வசதிகளும் அவர்களுக்கு உள்ளன. எனினும் இந்த சலுகைகள் அனைத்தையும் அரசாங்கம் மீளாய்வு செய்து தேர்தல் வாக்குறுதிக்கு அமைவாக அவற்றைக் குறைப்பதற்கான அளவுகோலை வகுக்கும் என ஜனாதிபதிக்கு நெருக்கமான உயர்மட்ட தரப்பு தெரிவித்துள்ளது. இதற்கிடையில் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விடயம் விவாதிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  https://tamilwin.com/article/information-about-benefits-of-former-presidents-1727513505
    • 28 SEP, 2024 | 11:52 AM (எம்.நியூட்டன்)   வட மாகாண விவசாயத் திணைக்களத்தின் ஒழுங்கமைப்பில், “சூழல் நேய நிலைபேறான விவசாய யுகம் நோக்கி,”  எனும் தொனிப்பொருளிலான விவசாயக் கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது என வடக்கு மாகாண விவசாய பிரதிப்பணிப்பாளர் அஞ்சனா ஸ்ரீ ரங்கன் தெரிவித்தார்.   திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இரண்டாம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகி, நான்காம் திகதி வெள்ளிக்கிழமை வரையிலான, மூன்று தினங்கள் கண்காட்சி நிகழ்வு இடம் பெறவுள்ளது.   முப்பதிற்கும் மேற்பட்ட விடயத் தலைப்புக்களை உள்ளடக்கியதாக இக் கண்காட்சி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/194970
    • அப்படியா...... அரவணைத்து விட்டாரா? நான் அறியவில்லை.  இவர் சிங்களவரேதான். அதிலென்ன சந்தேகம்? தன்னை வித்தியாசமானவராக காட்ட முனைகிறார். தமிழர் அழிக்கப்படும்போது இவர் இரக்கம் காட்டவில்லை, முண்டு கொடுக்காவிட்டாலும் மௌனமாக இருந்து ரசித்தவர். அதைவிட தமிழர் தாயகத்தை இரண்டு படுத்தியவர். இனிமேல் இவரே நினைத்தாலும் பிரித்ததை இணைக்கமுடியாது. தமிழரின் முயற்சி, முன்னேற்றம் அவர்களை உறுத்திக்கொண்டே இருக்கும்.    அனுரா எங்கேயும் தான் தமிழருக்கு ஆதரவு என்று சொல்லவில்லை சொல்லவும் மாட்டார் ஆனால் அவர் அரசியலில் காலூன்றுவதற்கு தமிழரின் ஆதரவை எதிர்பார்ப்பார்.  "நம்ப நட, நம்பி நடவாதே." என்பதுதான் நமக்கு பொருந்தும். காலூன்றியபின்னே தன் சுய ரூபத்தை காட்டுவார்.   
    • கொழும்பு துறைமுக மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் ஆரம்பம் கொழும்பில் கண்டறியப்பட்ட பாரிய மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொழும்பு துறைமுகத்தில் இந்த மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அதன் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. https://thinakkural.lk/article/310019
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 2 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.