Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரனைத் தனியாகச் சென்று சந்தித்தேன்! - சென்னையில் ப.சிதம்பரம் தகவல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
chidambaram-942013-150.jpg

இலங்கைப் பிரச்னையில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை யாரும் தனிமைப்படுத்திவிட முடியாது என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறினார். ப.சிதம்பரத்தின் ஆதரவாளரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான கு.செல்வப்பெருந்தகையின் ஏற்பாட்டின் பேரில் சிந்தாதிரிப்பேட்டையில் நடைபெற்ற கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசியது:

  

இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி காலத்திலிருந்து இலங்கைத் தமிழர்கள் பக்கம் காங்கிரஸ் உறுதியாக நின்றுள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. 1983ல் இருந்து இலங்கைத் தமிழர்களுக்குத் துணையாக நின்றுள்ளோம். ராஜீவ் காந்தியை இழந்துள்ளோம். அந்த இழப்பு ஏற்பட்டது தமிழ் மண்ணில்தான்.அந்த இழப்புக்கு யார் காரணம் என்பதை தமிழக மக்கள் மறந்திருக்க முடியாது.காங்கிரசை பொருத்தவரை இலங்கைத் தமிழர்களுக்கு, தமிழ் மொழிக்கு சம அந்தஸ்து, சம உரிமை, அந்நாட்டின் அரசியல் சாசனம் திருத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். இதில் இருந்து எந்த நேரத்திலும் காங்கிரஸ் பின்வாங்கியது இல்லை. அதைப்போல இலங்கையில் வடக்கு மாநிலம், கிழக்கு மாநிலம் என இரண்டு மாநிலமாகவோ,அல்லது ஒரே மாநிலமாக அமைக்கப்பட்டு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதை ஆரம்பக் காலம் தொட்டே வலியுறுத்தி வருகிறோம்.

 

புலம்பெயர்ந்த தமிழர்கள் அவர்கள் வாழ்ந்த பகுதியில் மறு குடியமர்த்த வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறோம். ராஜீவ் காந்தி காலத்திலும், அதற்குப் பின்னரும் நாங்கள் எடுத்த முயற்சி வெற்றிபெற்றிருந்தால் வடகிழக்கு மாநிலம் உருவாகியிருக்கும். இன்று தமிழர் ஒருவர் அங்கு முதல்வராக இருந்திருப்பார். இலங்கைத் தமிழர் பிரச்னையில் காங்கிரஸ் தன் நிலைப்பாட்டை ஒருநாளும் மாற்றிக் கொள்ளவில்லை.ஆனால், 2002ல் அதிமுக எடுத்திருந்த நிலைப்பாட்டில் இருந்து இப்போது மாறியுள்ளது. காலத்துக்கேற்ப அரசியல் கட்சி தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளலாம். தவறு இல்லை.

 

ஆனால் ஆரம்பத்தில் இருந்து எங்கள் நிலையை மாற்றிக் கொள்ளவில்லை. 1984ஆம் ஆண்டு கோடம்பாக்கத்தில் ஒரு வீட்டில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் இருந்தபோது நானே என் காரை தனியாக ஓட்டிச் சென்று அவரைச் சந்தித்தேன். அண்டன் பாலசிங்கம் போன்றோர் இருந்தனர். அப்போது இந்திய அரசோடு ஒத்துழையுங்கள். இலங்கையில் தமிழ் மாநிலம் அமையும். அதன் முதல்வராக நீங்கள் இருப்பீர்கள் என்று வலியுறுத்தினேன். ஆனால் அந்தத் திட்டம் நீர்க்குமிழியாக மறைந்துவிட்டது. 2009-ல் இலங்கையில் இறுதி யுத்தம் நடைபெற்றது. விடுதலைப் புலிகள் தோல்வியுற்றனர். ராஜபட்ச அரசால் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர். மனித உரிமை மீறல்கள் நடைபெற்றன என்பதை காங்கிரஸ் மறுக்கவில்லை. மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச நாடுகள் ஏற்றுக்கொள்ளும் வகையிலான விசாரணை நடைபெற வேண்டும் என்பதையும் காங்கிரஸ் மறுக்கவில்லை.இதோடு கடந்த முறை இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை காங்கிரஸ் ஆதரித்தது. தமிழகத்தில் உள்ள கட்சிகள் எவ்வாறு ஆதரித்தனவோ அவ்வாறுதான் காங்கிரசும் ஆதரித்தது.

 

அப்படியிருக்கும்போது காங்கிரஸ் மீது மட்டும் பழிபோடுவது ஏன்? காங்கிரஸ் கட்சியை தனிமைப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் பழி போடப்படுகிறது. காங்கிரசைத் தனிமைப்படுத்த 123 ஆண்டுகளாக முயற்சித்து எல்லாக் கட்சிகளுமே தோற்றுப் போய் உள்ளன. 46 ஆண்டுகளாக ஆளும் திராவிடக் கட்சிகளை நாங்கள் மதிப்பதுபோல் காங்கிரஸ் கட்சியையும் அவர்கள் மதிக்க வேண்டும்.இலங்கைக்கு எதிராக இந்த முறையும் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. கருணாநிதி வலியுறுத்தி ஐ.நா.மனித உரிமைகள் கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் திருத்தங்கள் கொண்டு வர முயற்சித்தோம்.நாடாளுமன்றத்தில் தீர்மானத்தில் கொண்டு வர வேண்டும் என்று கருணாநிதி கூறினார். அது தொடர்பாக நானே வரைவு தீர்மானம் எழுதிக் கொண்டிருந்தேன். அதற்குள் அமைச்சரவையில் இருந்து வெளியேறியதுடன், திமுகவும் வெளியேறிவிட்டது.

 

நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு பாஜக, இடதுசாரிகள், அகாலிதளம், சிவசேனை, தெலுங்குதேசம் போன்ற கட்சிகள் ஆதரவு தெரிவிக்கவில்லை.நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேறுவதற்கு ஆதரித்த ஒரே கட்சி காங்கிரஸ் மட்டும்தான். திமுக, அதிமுகவும் ஆதரித்தன. இந்த இரண்டு கட்சிகளும் தமிழகத்தைச் சேர்ந்த கட்சிகள். நாடாளுமன்றத்தில் காங்கிரசை தவிர வேறு எந்தக் கட்சியும் ஆதரிக்கவில்லை. பாஜகவைச் சேர்ந்த சுஷ்மா ஸ்வராஜ் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை எதிர்த்தார். தில்லியில் காங்கிரஸ் ஆட்சி இருப்பதால்தான் இந்தத் தீர்மானம் கொண்டு வர முயற்சி செய்யவாவது முடிந்தது. பாஜக தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஆனால் பாஜக, தமிழர்களுக்கு ஆதரவான கட்சி இல்லை. பாஜகவின் வேஷம் கலைந்து வருகிறது.

 

இந்தியாவில் கூட்டணி ஆட்சி அமையட்டும். தனி கட்சி கூட்டணி பெரும்பான்மையோடு ஆட்சி அமைத்தால் அதனை வரவேற்கிறோம். கூட்டணி ஆட்சி என்றாலும் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் காங்கிரஸ் அல்லது பாஜக அல்லாமல் மத்தியில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. சிறுபிள்ளைகளுக்குக்கூட இந்தக் கணக்குத் தெரியும்.காங்கிரசிடம் ஆயிரம் குறைகள் இருக்கலாம். காங்கிரஸ் கட்சியா, பாஜகவா என்றால் உங்களின் பாதுகாவலன் யார் என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். மாணவர்கள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தக் கூடாது. வன்முறையைத் தவிர்த்துப் போராடுங்கள் என்றார் ப.சிதம்பரம்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=80056&category=IndianNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

சிதம்பரத்திற்கும் கலைஞர் போல ஈழத்தமிழர் அரசியல் பயம் தொட்டிட்டுது..!

 

இதற்கு நாம் தமிழர் போன்ற அமைப்புக்களும் தமிழக மாணவர்களும்.. மற்றும் மே 17 இயக்கம்.. கூடங்குளம் அணு மின்னிலைய எதிர்ப்பு இயக்கம்.. போன்ற தன்னின உரிமை அமைப்புக்களின் ஆதவும் தமிழக மக்களின் இன உணர்வுமே முக்கிய காரணம்.

 

மீண்டும் ராஜீவை பூச்சாண்டியாக்கி இவர் பிழைக்க முனைகிறார். இவருக்கும் சுப்பிரமணியம் சுவாமிக்கும் என்ன வித்தியாசம். ராஜீவ் பூச்சாண்டிக்கு தமிழக மக்கள் அசறும் நிலை எனி இல்லை..! காங்கிரஸ் தமிழகத்தில் எனி நிமிர நிறையச் செய்ய வேண்டி இருக்கும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

சிதம்பரத்தை நாங்களா குற்றம் சாட்டினோம்? அது சொலெயும் தான் சொல்கிறவர் சிதம்பரத்தின் கட்சி தான் கேட்டவை ஒன்றுக்கும் ஒத்து வரமாட்டோம் என்றும், யுத்தம் எந்த வழியிலும் நிறுத்தப்படாதென்றும் மறுத்துவிட்டு  தமிழர் முற்றாக அழியும் வரைக்கும் சண்டையை நீடித்தவர்கள் என்றும்.

 

சிதம்பரம் செய்ய வேண்டிய வேலை சொலெயுமுக்கு ஒரு கோல் போட்டு ," சொலேயும் தமிழரை அழிப்பத்தில் நானும் நீயும் ஒரு நேரம் நண்பர்கள். நீ பதவி இழந்து விட்டாய் என்பதற்காக இப்போ என்னையும் காட்டிக்கொடுக்காதே" என்று சொல்ல வேண்டும். <_<

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் ' பார்ப்பன ஆதிக்க' சிந்தனையில் இருந்து, என்னை மாற்றிக்கொள்ள நான் முயற்சிக்கும், ஒவ்வொரு தடவையும், சிதம்பரம் போன்றவர்களின் கருத்துக்கள், மீண்டும் என்னை, முருங்கமரத்திலேயே ஏற வைக்கின்றன! :o

  • கருத்துக்கள உறவுகள்

இப்பதை நிலைமையிலை...சிதம்பரம் ..எங்கள் தலைவரை..ஆந்திரா காட்டுக்கை சந்திச்சன் என்று சொன்னாலும் கூட ஆச்சரியம் இல்லை..ஏனெனில் குலைப்பன் காச்சல் அடிக்க தொடங்கிவிட்டது...

  • கருத்துக்கள உறவுகள்

காங்கிரஸ், தி.மு.க போன்றவற்றுக்கு பயம் தொடங்கியுள்ளது என்பதை இப்படியான அறிக்கைகள் காட்டி நிற்கின்றன.

 

தமிழரில் கொஞ்சமாவது அக்கறை உள்ளது என்பதை நிரூபிக்க மானம்கெட்ட பிழைப்பு நடாத்தும் ****** சிதம்பரம் தமிழினப் படுகொலையாளிகளில் முக்கியமான காங்கிரஸ் கும்பலிலிருந்து விலகுவதுடன், ******** ராஜீவின்  கொலையை செய்த இந்தியக் கும்பலை அம்பலப்படுத்த வேண்டும் 

தமிழின ஒழிப்புக்கு துணை போனதற்கு பிராயச்சித்தமாக ஊழல் செய்து சேர்த்து சுவிஸ் வங்கிகளில் பதுக்கியிருக்கும் 32000 கோடி ரூபாவை ஈழத்தமிழரிடம் வழங்க வேண்டும்.

அதன் பின்னர் மேடைகளில் ஈழத்தமிழர் மீதான அக்கறையை பேசட்டும் பார்க்கலாம்

 

 

நியானி: கடுமையான பதங்கள் தணிக்கை

Edited by நியானி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிதம்பரத்திற்கும் கலைஞர் போல ஈழத்தமிழர் அரசியல் பயம் தொட்டிட்டுது..!

 

இதற்கு நாம் தமிழர் போன்ற அமைப்புக்களும் தமிழக மாணவர்களும்.. மற்றும் மே 17 இயக்கம்.. கூடங்குளம் அணு மின்னிலைய எதிர்ப்பு இயக்கம்.. போன்ற தன்னின உரிமை அமைப்புக்களின் ஆதவும் தமிழக மக்களின் இன உணர்வுமே முக்கிய காரணம்.

 

மீண்டும் ராஜீவை பூச்சாண்டியாக்கி இவர் பிழைக்க முனைகிறார். இவருக்கும் சுப்பிரமணியம் சுவாமிக்கும் என்ன வித்தியாசம். ராஜீவ் பூச்சாண்டிக்கு தமிழக மக்கள் அசறும் நிலை எனி இல்லை..! காங்கிரஸ் தமிழகத்தில் எனி நிமிர நிறையச் செய்ய வேண்டி இருக்கும்..! :icon_idea:

 

சரியாகச் சொன்னீர்கள். ஆனால் ம.தி.மு.க. வை விட்டு விட்டீர்கள்.

காங்கிரஸ், தி.மு.க போன்றவற்றுக்கு பயம் தொடங்கியுள்ளது என்பதை இப்படியான அறிக்கைகள் காட்டி நிற்கின்றன.

 

இதுதான் எனது கருத்தும்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சரியாகச் சொன்னீர்கள். ஆனால் ம.தி.மு.க. வை விட்டு விட்டீர்கள்.

2 posts

 

 யாருப்பா 2 கியரிலேயே 110மைல்பாயுறது?

Edited by purmaal

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யார் யாரெல்லாம் தேசியத்தலைவரைப்பற்றி பேச கொஞ்சம்கூட விருப்பம் இல்லாமல் இருந்தார்களோ அவர்கள் எல்லாம் இப்போது முந்தியடித்து கொண்டு தலைவரைப்பற்றி பேசித்தான் அரசியல் நடத்தவேண்டிய நிலைமை தமிழ்நாட்டில் இப்போது வந்து விட்டது இந்த நிலை வெகுவிரைவில் முழு இந்தியாவிலும் வரலாம். 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

. 1984ஆம் ஆண்டு கோடம்பாக்கத்தில் ஒரு வீட்டில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் இருந்தபோது நானே என் காரை தனியாக ஓட்டிச் சென்று அவரைச் சந்தித்தேன். அண்டன் பாலசிங்கம் போன்றோர் இருந்தனர். அப்போது இந்திய அரசோடு ஒத்துழையுங்கள். இலங்கையில் தமிழ் மாநிலம் அமையும். அதன் முதல்வராக நீங்கள் இருப்பீர்கள் என்று வலியுறுத்தினேன். 

 

 

தூற்றுவதாக நினைத்து பிரபாகரனுக்கு மேலும் சிறப்புச்சேர்க்கின்றார்.

காலத்தின் தேவை இது.

 

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை ரகசியமாக சந்தித்தேன் - ப‌.சிதம்பரம்!

 

 

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வாயால் தம்பி  பிரபாகரன் என்று தேசியத்தலைவரை அழைக்க வைத்த  மாணவர்களுக்கு கோடி வந்தனங்கள்

இந்த வாயால் தம்பி  பிரபாகரன் என்று தேசியத்தலைவரை அழைக்க வைத்த  மாணவர்களுக்கு கோடி வந்தனங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரசியலில இதெல்லாம் சகஜமப்பா!

தலைவர் வருவாரெண்டு பாத்துக்கொண்டிருக்கிறம் தானே,

அதை விட சிதம்பர அரசியல் எவ்வளவோ மேல்.

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலில இதெல்லாம் சகஜமப்பா!

தலைவர் வருவாரெண்டு பாத்துக்கொண்டிருக்கிறம் தானே,

அதை விட சிதம்பர அரசியல் எவ்வளவோ மேல்.

 

தலைவர் போனால் தானே வாறதிற்கு. அவர் அப்போதும் இப்போதும் மக்களோடு தான்.

 

நீங்கள் யாரைப் பற்றி கதைக்கிறீங்க.. கட்டையில போற.. கடைசி நேரத்தில சுடலை ஞானம் பிறந்து.. பிரபாகரன் பாதை தான் சரி என்று நின்ற சிவசிதம்பிரம் பற்றியோ.. அல்லது இந்தச் சிதம்பரம் பற்றியோ..???! :):lol:

  • கருத்துக்கள உறவுகள்

இதே சிதம்பரம்தான் குமார் பொன்னம்பலத்தையும், ஈரோஸ் பாலகுமாரனையும் விடுதலைப்புலிகள் தான் கொன்றார்கள் என்று 2009ல் பொய் செய்தியினை சொன்னவர்.

  • கருத்துக்கள உறவுகள்

இதே சிதம்பரம்தான் குமார் பொன்னம்பலத்தையும், ஈரோஸ் பாலகுமாரனையும் விடுதலைப்புலிகள் தான் கொன்றார்கள் என்று 2009ல் பொய் செய்தியினை சொன்னவர்.

இவர்களின் செயல்களைப் புரிந்து கொள்வது, மிகவும் கடினமானது, கந்தப்பு!

 

உதாரணத்துக்குப் பரதநாட்டியத்தில் உங்களுக்கு விருப்பமில்லை என்றால், நீங்கள் வெளியேயிருந்து, சத்தம் போடுவீர்கள்! அல்லது பரதநாட்டியம், எங்களுக்கு ஏன் ஒத்துவராது என விளக்கிக் கட்டுரை எழுதுவீர்கள்!

 

இவர்கள் அப்படிச் செல்வதில்லை!

 

தாங்களும், பரதநாட்டியம் ஆட வரப்போகின்றோம் என்று, எங்களுடன் சேர்ந்து ஆடிப் பரதத்தையே மாற்றிவிடுவார்கள்!

 

இப்படிப் பரதத்தை அழிக்க, இவ்வளவு இலகுவான வழி இருக்கின்றதா, என்று உங்களுக்கம் தெரியாது. எனக்கும் தெரியாது!

 

இவர்களது அணுகுமுறைகள், எப்போதும் இப்படிதான் இருக்கும்! அதிலொன்று தான் இதுவும்! :D

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களின் செயல்களைப் புரிந்து கொள்வது, மிகவும் கடினமானது, கந்தப்பு!

 

உதாரணத்துக்குப் பரதநாட்டியத்தில் உங்களுக்கு விருப்பமில்லை என்றால், நீங்கள் வெளியேயிருந்து, சத்தம் போடுவீர்கள்! அல்லது பரதநாட்டியம், எங்களுக்கு ஏன் ஒத்துவராது என விளக்கிக் கட்டுரை எழுதுவீர்கள்!

 

இவர்கள் அப்படிச் செல்வதில்லை!

 

தாங்களும், பரதநாட்டியம் ஆட வரப்போகின்றோம் என்று, எங்களுடன் சேர்ந்து ஆடிப் பரதத்தையே மாற்றிவிடுவார்கள்!

 

இப்படிப் பரதத்தை அழிக்க, இவ்வளவு இலகுவான வழி இருக்கின்றதா, என்று உங்களுக்கம் தெரியாது. எனக்கும் தெரியாது!

 

இவர்களது அணுகுமுறைகள், எப்போதும் இப்படிதான் இருக்கும்! அதிலொன்று தான் இதுவும்! :D

 

நல்லதொரு உதாரணம். :D  :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.