Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள வீரர் சங்ககாராவை நிகழ்வில் கலந்து கொள்ளவிடாது தடுத்த மாணவர்கள். [படங்கள்]

Featured Replies

அதற்காக, உரிமைக்காக இறந்த[அரசால் கொல்லப்பட்ட] சிங்களவர்கள் முள்ளிவாய்க்காலில் இறந்த தமிழரை விட்டுப் பார்த்தால் அதிகம் என்றே நினைக்கிறேன்."

உரிமைக்காக நடந்த சிங்கள  போராடட்ங்கள் என்று இலங்கையில் எதுவும் நடக்கவில்லை. முள்ளிவாய்காலில் இறந்த தமிழரை கழித்து இறந்த தமிழரின்  தொகையையவிட  எந்த போராடத்திலும் இறந்த சிங்களவரின் தொகை  அதிமானது அல்ல.(ஆனால் எனக்கு ஏன் முள்ளிவாய்க்காலை தவிர்க்க வேண்டும் என்பது புரியவில்லை) ஒருவேளை போராட்டத்தின்போது இறந்த புலிகளைவிட போராட்டம், போராட்டமல்லாத நேரத்தில் இறந்த ஜெ.வி.பி யினரின் தொகை அதிகமாக இருக்கலாம்.

  • Replies 89
  • Views 6.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர் மன ஓட்டத்தை மாற்றுவதா? ஆயுதப் போருக்கு முன்பே அது சாத்தியப்பட்டிருக்க வேண்டும்.. ஆனால் அது நடக்கவில்லை.. இனி நடப்பதற்கு சாத்தியம் ஏறக்குறைய இல்லை என்றே சொல்லலாம்..

இனவாதமா தீவிரவாதமா என்பதைப்பற்றி உலகநாடுகள் சொல்வது ஒருபுறம் இருக்கட்டும். பாதிக்கப்பட்ட நாங்கள் என்ன நினைக்கிறோம் என்பது மிக முக்கியமானது.. அது தீவிரவாதப் பிரச்சினைதான் என்றால் 1958, 1977, 1983 இன அழிப்புகளுக்கு விடைகள் இருக்கப்போவதில்லை..

மற்றும்படி உங்களின் பல கருத்துக்களுடன் உடன்படுகிறேன்.. மனத்தளவில் சிங்கள மக்களிடம் இருக்கும் பய உணர்வு இனவாதத்திற்கான கருவாகிறது.. ஆனால் அந்தப் பயம் முகாந்திரம் அற்றது.. தமிழர்கள் ஆட்சியைக் கைப்பற்றி சிங்களவர்களை அழித்தார்கள் என்பது வரலாற்றிலேயே இல்லாதது.. ஆக நடக்கவே நடக்காத ஒன்றைக் காரணமாகக் காட்டி தமிழரை அழிக்க நினைக்கும் செயலை அறியாமை என்கிற வட்டத்துக்குள் அடக்க முடியாது.. ஆழ வேரூன்றிய பேரினவாதத்துக்குள்தான் அடக்கமுடியும்..

  • கருத்துக்கள உறவுகள்

 

சிங்களவர் எம் மீது செய்தது இனவாதப் போர் என்று நாம் தான் சொல்லிக் கொண்டு இருக்கிறோம். தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்கிறார்கள் அவர்கள்.உலக நாடுகளும் அதைத் தான் நம்புகின்றன.
 
பெளத்த பீடாதிபதிகள்,அரசியற் கட்சிகள் எல்லோரும் தமிழரை எதிர்க்க காரணம் அறிவால் சிறந்த தமிழர்களிடம் ஆட்சி,அதிகாரம் போனால் தங்களது நிலை மிகவும் கேவலமாகி விடும் என்பது அவர்களுக்குத் தெரியும்.அதை சாதரண மக்களுக்கு சொல்லி,சொல்லி வளர்த்ததால் அவர்களும் அதையே கடைப் பிடிக்கின்றனர்.நாடும்,ஆட்சி அதிகாரமும் தங்கட கையில் இருக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.இனவாதம் பேசாத ஒருவரிடம் இந்த நாடு போனால் அவர் தமிழருக்கு நாட்டைப் பிரித்துக் கொடுத்திடுவார் அதன் பின்னர் முழு நாடுமே தமிழர்க்கு சொந்தமாகி விடும் என அவர்கள் நினைக்கிறார்கள்.
 
ஆர‌ம்பத்தில் இருந்த ஜேவிபி அட‌க்கப்பட்ட,கஸ்ட‌ப்பட்ட,உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்காகவும்,தமிழருக்காகவும் தான் குர‌ல் கொடுத்தது[அப்போது இருந்த ஜேவிபியோடு சேர்ந்து புலிகள் போராடி இருக்கலாம்.] அதற்காக, உரிமைக்காக இறந்த[அரசால் கொல்லப்பட்ட] சிங்களவர்கள் முள்ளிவாய்க்காலில் இறந்த தமிழரை விட்டுப் பார்த்தால் அதிகம் என்றே நினைக்கிறேன்.
 
சாதர‌ண மக்களுக்கு வேறு தெரிவில்லை.இரு பெரிய கட்சிகள் செய்வது பிழை என்று தெரிந்தாலும் அவர்களுக்கே வாக்களிக்க வேண்டிய நிலை.அவர்கள் வாக்களித்தாலோ இல்லா விட்டாலோ மாறி,மாறி இரு கட்சிகளை சேர்ந்தவர்கள் தான் தேர்தலில் போட்டியிட‌ப் போகிறார்கள் ஆட்சியமைக்க போகிறார்கள்
 
நீங்கள் சொல்வது மாதிரி இனவாதம் இல்லாத ஒருவர் ஆட்சியமைக்க வேண்டும் என்டால் அப்படி யார் தற்போது இருக்கிறார்? வாசுதேவாவா?...இந்த நிலை மாற வேண்டுமானால் அடிப்படியில் சிங்களவர்களின் எண்ண ஓட்டத்தை மாற்ற வேண்டும்.நாங்கள் சிங்களவர்களுட‌ன் சேர்ந்து வாழ முடியாது என சொல்லிக் கொண்டு இருந்தால் இது நட‌க்குமா?...இப்பவும் அடிச்சுப் பிடிக்கோனும் என்டு தான் எங்கட‌ ஆட்கள் நினைக்கினமே தவிர‌ சிங்கள மக்களது எண்ண ஓட்டத்திற்கு என்ன கார‌ணம்? அதை எப்படி மாற்றலாம் என ஒருத்தரும் சிந்திக்கேல்ல

 

 

 

நீங்கள் சிங்களவருடன்  பழகியதில்லை என்று நினைக்கின்றேன்.

தமிழரின் உழைப்பு

கல்வியறிவு

வீரம் சார்ந்து அவர்களிடம் பொறாமையும் அதை ஏற்காத தன்மையும் உண்டு. இதற்கு அரசியல்வாதிகள் காரணமல்ல.  சாதாரணமாகவே நடைமுறை வாழ்வில் அவர்கள் அதை உணர்கின்றனர்.  அதை எதிர்த்து தாமும் தம்மை வளர்த்துக்கொள்ளுவதற்கு மாறாக பெரும்பான்மை எனும் ஐனநாயகம் கொண்டு வஞ்சம் தீர்த்துக்கொள்கின்றனர். அவர்களுடன் பழகும்போது அவர்கள் இலகுவாக பாவிக்கும் சொல் நாமே அரசு என்பதாகும்.  என்னவென்றாலும் செய்; முடிவு என் கையில் என்பதாகும். இதை அரசியல்வாதிகள் பாவித்துவருகிறார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். அதற்கக சிங்களவர் எதுவும் தெரியாத அப்பாவிகள் என்பது 60 வருட வரலாற்றை உதாசீனம் செய்வதாகும்.

ஆனால் தமிழனை விட திறம் :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் தமிழனை விட திறம் :icon_mrgreen:

எமது நிலங்களை அபகரித்து நிற்பதாலும்

நாம் சிறுபான்மை இனம் என்பதாலும்

மோதுவது பலமான எதிரி  என்பதாலும்

எமது சில நடவடிக்கைகள் தவறாக இருக்கலாம்

ஆனால் அவற்றை ஏற்படுத்தியவனுக்கு அது போய்ச்சேரும்

இன்றுவரை எந்த தீர்வையும் வைக்காத சிங்களம் அடுத்த

இதைவிட பயங்கரத்தை அனுபவிக்கவேண்டி வரலாம்

மாணவர் போராட்டத்தை பற்றியது இந்த திரி. இதில் மகிந்தா ஏன் வந்தார் என்பது ஆரம்பத்தில் குழப்பமாக இருக்கலாம். ஆனால் நியாயமானது.

 

ஒரு இனம் தவறானதாக இருக்கலாம். ஒருமனிதன் தவறானவானாக இருக்கலாம். ஒரு மனிதன் ஒரே ஒரு தவறு ஒன்றை மட்டும் செய்திருக்கலாம். ஏன் ஒரு தறவைக் கூட செய்யாமல் இருந்திருக்கலாம்.  ஆனல் பிரச்சாரம் என்று ஆரம்பித்துவிட்டால் இந்த பேதங்களை கடந்து போய்த்தான் யாரும் செய்வதுண்டு. எத்தனை ஆண்டுகள் காலில் வீழ்ந்து வேண்டியிருக்கலாம், எத்தனை ஒப்பந்தங்கள் எழுதிக்கிழிக்கப்படிருக்கலாம் ஆனால் கதைகட்ட என்ற பிரச்சாரமென்றால் கண்ணகி வாழ்வில் களங்கம் இருக்கிறது மாதிரி படவைக்க வேண்டும்.

 

இதில் ரதி அக்கா, அரிச்சுன் எடுத்திருந்த பாதை மிக தெளிவானது.

 

இங்கே, சங்ககாராவின் விளையாட்டுக்கு எதிராக போராடும் மாணவர் எழுப்பும் கேள்வி ஈழத்தமிழர் சிங்கள இனத்துடன் இனியும் இணைந்து வாழமுடியுமா என்பது.  இதற்கு யாரும், தன் மனச்சாட்சிக்கு ஏற்றபடி பதில் அளித்துக்கொள்ள முடியும். ஆனால் இல்லை என்று பதில் அளிப்போர் இந்த ஈழத்தமிழருக்காக தமது பாடம், படிப்புகளை வீணடித்து, தமது பொழுது போக்கான மட்டை பந்தாட்டத்தை பகிஸ்கரித்து, தமிழ் நாட்டு அரசியல் கட்சிக்கரார்கள் சங்கக்காராவை தமது கப்டனாக வைத்திருப்பதை எதிர்த்துப் போராடும் மாணவர்களை ஆதரிப்பதில் இருந்து விலகமுடியாது. சங்ககாராவை வைத்து பணம் பண்ணுவோர் தமது செயலை நியாயப்படுத்த தமிழரின் மனச்சாட்சிகளை கிளறுவது போன்ற பிரசாரங்களில் ஈடுபதுவது வெறும் பணம் பண்ணும் உத்தியே. இதுதான் சங்கக்காராவும், 1983 ன் கறுப்பு யூலை பதிவும். நாம், “மற்றைய எல்லா சிங்கள இளைஞர்களும் போல, ஓடிப்பிடித்து விளையாடும் போது சங்கக்காரா துவேசயம் பேசவே இல்லையா, பள்ளியில் சக தமிழ் மாணவன் அதிகப் புள்ளிகள் எடுத்துவிட்டால் சங்கக்காரா துவேசம் பேசியதே கிடையாத” என்ற கேள்வியை கேட்கப் போகவில்லை. சிங்கள அரசியல் கூட்டங்களின் மேடை பேச்சல்லாமல் கிறிக்கட் வாரியத்தில் சங்கக்காரா முற்கூட்டியே எழுதிவந்து வெளிவிட்ட அறிக்கையை அவரின் சொந்த மனதாக தான் ஏற்று கருத்து எழுதியிருந்தோம். 

 

இதில் எனது கருத்துடன் ஒத்து போவது போல இசைக்கலைஞன் கருத்திட்டிருந்தார். இதில் தொடந்து நான் எனது பதிலை முன்வைக்கும் போது இசைகலைஞனின் கருத்துக்கு எதிரான கருத்து ஒன்று எனது கருத்துக்கும் எதிரானது என்றும், எனது கருத்துக்கு எதிரான கருத்து ஒன்று வைக்கப்படும் போது நான் கருத்து எழுதுவது நடைமுறைக்கு ஒவ்வாதது என்றும் எத்தனை மனசாட்சியானவர்கள் எடுத்துக்கொள்வார்கள் என்தைப் பற்றி அதிகம் அக்கறை காட்டவேண்டியதில்லை.

“நீங்கள்தான் தொடர்ச்சியாக கொலைகாரக்கட்சிகளையும் ஆட்சியில் அமர்த்துபவர்கள்” என்ற வசனத்தை தொடர்ந்து“ எழுப்பியிருந்த கேள்வி மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கோ இசை மகிந்தா ஆட்சிக்கு வர முழுக்க,முழுக்க சிங்களவரா காரணம்?

அந்த கேள்வியில், முதலில், “மனசாட்சி” என்ற அடைமொழி பாவிக்கப்பட்டத்தின் கருத்து, தனது கருத்துடன் உடன்படாமல் மேலே கருத்து எழுதியிருந்தவர்கள், தனது அனுமானிப்பில், மனச்சாட்சியாக எழுதவில்லை என்ற அபிப்பிராயத்தை வெளிவிடுவதாக இருக்கிறது.

 

கேள்வி “தொடர்ந்த கொலைக்கார அரசுகளில்” மகிந்தா அரசு ஒன்றை மட்டும்தான் கருத்தில் எடுக்கிறது. இதன் பின்னணி புலிகளை அழித்த மகிந்த அரசுசை வைத்து, முன்னர் இருந்த அரசுகளையும், இசைகலைஞன் கொலைக்கார அரசுகளாக காண்கிறார் என்ற கருத்தை வலியுறுத்த முயல்கிறது இந்த கருத்து. இதில் கொடியதெல்லாவற்றிலும் கொடியதான மகிந்தா அரசு காப்பாற்றுப்பட்டால் மற்றவர்கள் காப்பாற்றுப்படுவார்கள் என்பது போன்றதொரு உணர்வு தோற்றுவிக்கிக்கப்படுகிறது. எனவே மற்ற கொலைக்கார அரசுகள் யாரால் பதவிக்கு கொண்டுவரப்பட்டார்கள் என்ற விவாத்தை ஒதுக்கித் தள்ளிவிட்டு மகிந்தா அரசை பதவிக்கு யார் கொண்டுவந்தார்கள் என்ற கேள்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. (2005 அல்லாத எல்லாத் தேர்தல்களிலும் தமிழர்களும் சிங்களவர்களும் வாக்களித்துத்தான் அரசுகளை கொண்டுவந்தார்கள். சிங்களவர்கள் ஒரு அரசை பதவிக்கு கொண்டுவரும் போது அது தமிழர்களை அழிக்கும் என்றுதான் நம்புகிறார்கள். தமிழர் அந்த அரசை ஏற்று வாக்களித்த போது அது தமிழரைக் காக்கும் என்று நம்பினார்கள். தொடர்ந்து வரும் அரசுகள் தமிழரின் நம்பிக்கையை தவிடு பொடியாக்கி சிங்களவர்களின் நம்பிக்கையைத்தான் நிறைவேற்றுகிறார்கள்)

மகிந்தா அரசின் மீது அல்ல பிழை, அதை பதவிக்கு கொண்டு வந்தவர்கள் மீதுதான் பிழை என்கிறது இந்த ஒரு வரி ஆய்வு.  அதாவது மகிந்தா அரசு பிழைவிடுகிறதோ, இல்லயோ அதைவிட பெரிய தவறு விட்டவர்களாக சிலரை சுட்டிக்காட்டி மகிந்தா அரசு செய்யும் பிழைகளை கணக்கில் எடுக்காமல் பெரிய பிழை விட்டவர்களை கவனியுங்கள் என்கிறது கருத்து.

இனி இந்த பிழையை விட்டவர்கள் புலிகள் என்பது கருத்து முன் விவாதம். அதாவது புலிகள் தமிழ் மக்களை தேர்தலில் பங்கு பற்ற வேண்டாம் என்றார்கள் என்பதுதான் அந்த செய்தி சொல்ல வருவது. இதில் அந்த கருத்து சொல்ல வரும் விடையம் மிகவும் சுவாரியமான விவகாரம். இது ஆயுதப்போராட்ட தோல்வியை வைத்து தமிழரை அடக்கிவிட அரசினால் ஸ்தாபிக்கப்படிருக்கும் பிரச்சாரிகளினால் ஏற்படுத்தபட்டிருக்கும் மனநிலை. இதை பலர் பற்றிகொண்டிருக்கிறார்கள்.

 

போராட்ட காலங்களில் புலிகள் பல முடிவுகளை எடுத்தார்கள். அதில் ஒன்று இந்த தேர்தல் முடிவும். அந்த முடிவுகளில் பல சரியும் பிழையும் உண்டு. முடிவுகள் எடுக்கப்படும் போது தங்கள் அன்றைய நிலை, அரசின் நிலை, அரசுடனான பழைய அனுபவங்கள் போன்றன கவனத்தில் எடுக்கப்படுவதுண்டு. தமிழரின் தனி நாடு ஒன்றுக்கு சரவதேச அங்கீகரம் இருக்க வேண்டுமாயின், இன்று நடப்பது போன்று, சிங்கள் மக்கள் தமது அரசைத் தெரிவு செய்து அது எப்படிப்பட்ட ஆட்சியை செய்கிறது என்பதை சர்வதேச நாடுகள் அறியத்தக்க வாய்ப்பு ஒன்று சர்வதேச நாடுகளுக்கு கொடுக்கப்பட வேண்டும்.  

 

முடிவு எடுத்தபின்னர் சர்வதேச ரீதியில், உள்நாட்டில் பல அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன.  முடிவை பற்றி பிரஸ்த்தாபிக்கும் பலர் இந்த மாற்றங்களை தாம் எதிர்வுகூறியதாக ஒரு மாயை நினைப்பில் தவழ்கிறார்கள். பலர்்நடந்து முடிந்த அரசியல் மாற்றங்களை தள்ளிவைத்துவிட்டு, முடிவை தாம் எதிர்வு கூறியதாக கொக்கரிக்கிறார்கள். இவர்கள் கூறுவது ஒரு அரசியல் ஆய்வின் வழிவந்த தர்க்க ரீதியான கருத்துகோளோ அல்லது அரசியல் தீர்க்க தரிசனமோ அல்ல. அது ஒன்றில் வெறுமனே புலி எதிர்ப்பு அல்லது அரசிடம் செய்யும் அடிமை சேவகத்திலிருந்து வெளிவரும் வசனங்கள். இவை உண்மையான அரசியல் ஆய்வு இல்லாமல் இருப்பத்தால் இவர்கள் தங்கள் ஜோதிடங்களை ஒரு வரியில் முடித்துகொள்வது யாழில் சம்பிரதாயம். இந்த ஒருவரிகளை, தேவை ஏற்படும் போது, அவற்றுக்கேற்றபடி விளங்கப்படுத்த முடியும்.  

தமிழர் போராட்டத்தில் நாம் இன்னும் விளங்கிக்கொள்ள பல இருக்கிறது, நாம் பலருக்கு (தமிழரல்லாதவர்களுக்கு) நேரம் எடுத்து பொறுமையுடன் பலவற்றை இங்கிதமாக விளங்கப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. ஆனால் சுதந்திரத்தின் பின்னர் மட்டும் 65 ஆண்டுகள் போராடி முடிய, நம்மில் சில தமிழருக்கு நாம் இன்னும் பொறுமையாக விளங்கப்படுத்த வேண்டிய தேவையும் இருக்கிறா?

தூங்குகிறவனை எழுப்ப முடியும் நடிக்கிறவனை எழுப்புவதாகவும் நம்புகிறோமா?

 

 

Edited by மல்லையூரான்

:( :(

வெட்கக்கேடுடுடுடு :(

83இல் தமிழருக்கு எதிரான கலவரங்கள் நடைபெற்றபோது சிங்களக் காடையர்களின் அச்சுறுத்தல்களுக்குப் பணியாமல் தமிழ் மக்களுக்கு அடைக்கலம் கொடுத்து ஆதரித்த ஒரு சிங்களவரின் மகன் தான் இந்த குமார் சங்கக்கார.

தமிழருக்கெதிரான அந்தத் தாக்குதல்களைக் கண்டித்தும் தனது தகப்பனின் அந்தச்செயலினை பெருமையுடன் நினைவு கூர்ந்தும் சர்வதேச மாநாடு ஒன்றில் துணிந்து பேசியவர்தான் இந்த குமார் சங்கக்கார.

அப்படிப்பட்ட ஒரு விளையாட்டு வீரருக்கு, தாம் அதிகாரத்தில் இருக்கும் ஒரு பெரும் மாநிலத்தில் தமிழர்கள் கொடுத்த வரவேற்பையும் பரிசையும் பாருங்கள்.

வெட்கக்கேடு!

தூரக்கில்லாத, அரசியல் அறிவற்ற, உணர்ச்சிவசப்பட்ட இம்மாதிரியான லூசுத்தனங்களை தமிழகத்தின் சில அரசியல் சக்திகள் தூண்டிவிட்டுக்கொண்டே இருக்குமானால் இலங்கைத்தமிழர் கடைசியாக இருக்கிற கோவணத்தையும் இழக்க வேண்டிய நிலைக்குத்தான் தள்ளப்படுவார்கள்.

குமார் சங்கக்காரவின் 2011 உரையின் பகுதி:

// I recollect now the race riots of 1983 now with horror, but for the simple imagination of a child not yet six it was a time of extended play and fun. I do not say this lightly as about 35 of our closest friends, all Tamils, took shelter in our home. They needed sanctuary from vicious politically-motivated goon squads and my father, like many other brave Sri Lankans from different ethnic backgrounds, opened his houses at great personal risk.

For me, though, it was a time where I had all my friends to play with all day long. The schools were closed and we’d play sport for hour after hour in the backyard – cricket, football, rounders…it was a child’s dream come true. I remember getting annoyed when agame would be rudely interrupted by my parents and we’d all be ushered inside, hidden upstairs with our friends and ordered to be silent as the goon squads started searching homes in our neighbourhood.

I did not realise the terrible consequences of my friends being discovered and my father reminded me the other day of how one day during that period I turned to him and in all innocence said: “Is this going to happen every year as it is so much fun having all my friends live with us.” //

:Kumar Sangakkara's 2011 MCC Spirit of Cricket Cowdrey Lecture

Fb

 

இதே சங்ககாரா தான் உலக கிண்ண வெற்றியை நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த படையினருக்கு சமர்ப்பிக்கிறேன் என்று கூறினார் என்று தயா அண்ணாவும் ரகுநாதன் அண்ணாவும் இந்த திரியில் கூறியுள்ளார்கள்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=120297&p=883207

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=120297&p=883455

 

அதே சமயம் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் நல்லவர்களா கெட்டவர்களா என்பதை விட இலங்கை அரசாங்கம் விளையாட்டையும் அரசியலாக பயன்படுத்துகிறது என்பதை விளங்கிக்கொண்டால் இலங்கை வீரர்களை புறக்கணிப்பது சரியான செயல் என புரிந்து கொள்ளலாம்.

Edited by துளசி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னும் மேல நிக்குது !!!!!

கிட்டத்தட்ட 4 வருசத்துக்கு பிறகு  ... சிங்களவன் வெண்டது  தெரிய வந்துதான் பிரச்சனை ..... :lol:

கால கிரமத்தில  யார் இனவாதி  எண்டதும் தெரிய வந்திடும் .... :lol: :lol:
 

 

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர் போராட்டத்தை பற்றியது இந்த திரி. இதில் மகிந்தா ஏன் வந்தார் என்பது ஆரம்பத்தில் குழப்பமாக இருக்கலாம். ஆனால் நியாயமானது.

 

ஒரு இனம் தவறானதாக இருக்கலாம். ஒருமனிதன் தவறானவானாக இருக்கலாம். ஒரு மனிதன் ஒரே ஒரு தவறு ஒன்றை மட்டும் செய்திருக்கலாம். ஏன் ஒரு தறவைக் கூட செய்யாமல் இருந்திருக்கலாம்.  ஆனல் பிரச்சாரம் என்று ஆரம்பித்துவிட்டால் இந்த பேதங்களை கடந்து போய்த்தான் யாரும் செய்வதுண்டு. எத்தனை ஆண்டுகள் காலில் வீழ்ந்து வேண்டியிருக்கலாம், எத்தனை ஒப்பந்தங்கள் எழுதிக்கிழிக்கப்படிருக்கலாம் ஆனால் கதைகட்ட என்ற பிரச்சாரமென்றால் கண்ணகி வாழ்வில் களங்கம் இருக்கிறது மாதிரி படவைக்க வேண்டும்.

 

இதில் ரதி அக்கா, அரிச்சுன் எடுத்திருந்த பாதை மிக தெளிவானது.

 

இங்கே, சங்ககாராவின் விளையாட்டுக்கு எதிராக போராடும் மாணவர் எழுப்பும் கேள்வி ஈழத்தமிழர் சிங்கள இனத்துடன் இனியும் இணைந்து வாழமுடியுமா என்பது.  இதற்கு யாரும், தன் மனச்சாட்சிக்கு ஏற்றபடி பதில் அளித்துக்கொள்ள முடியும். ஆனால் இல்லை என்று பதில் அளிப்போர் இந்த ஈழத்தமிழருக்காக தமது பாடம், படிப்புகளை வீணடித்து, தமது பொழுது போக்கான மட்டை பந்தாட்டத்தை பகிஸ்கரித்து, தமிழ் நாட்டு அரசியல் கட்சிக்கரார்கள் சங்கக்காராவை தமது கப்டனாக வைத்திருப்பதை எதிர்த்துப் போராடும் மாணவர்களை ஆதரிப்பதில் இருந்து விலகமுடியாது. சங்ககாராவை வைத்து பணம் பண்ணுவோர் தமது செயலை நியாயப்படுத்த தமிழரின் மனச்சாட்சிகளை கிளறுவது போன்ற பிரசாரங்களில் ஈடுபதுவது வெறும் பணம் பண்ணும் உத்தியே. இதுதான் சங்கக்காராவும், 1983 ன் கறுப்பு யூலை பதிவும். நாம், “மற்றைய எல்லா சிங்கள இளைஞர்களும் போல, ஓடிப்பிடித்து விளையாடும் போது சங்கக்காரா துவேசயம் பேசவே இல்லையா, பள்ளியில் சக தமிழ் மாணவன் அதிகப் புள்ளிகள் எடுத்துவிட்டால் சங்கக்காரா துவேசம் பேசியதே கிடையாத” என்ற கேள்வியை கேட்கப் போகவில்லை. சிங்கள அரசியல் கூட்டங்களின் மேடை பேச்சல்லாமல் கிறிக்கட் வாரியத்தில் சங்கக்காரா முற்கூட்டியே எழுதிவந்து வெளிவிட்ட அறிக்கையை அவரின் சொந்த மனதாக தான் ஏற்று கருத்து எழுதியிருந்தோம். 

 

இதில் எனது கருத்துடன் ஒத்து போவது போல இசைக்கலைஞன் கருத்திட்டிருந்தார். இதில் தொடந்து நான் எனது பதிலை முன்வைக்கும் போது இசைகலைஞனின் கருத்துக்கு எதிரான கருத்து ஒன்று எனது கருத்துக்கும் எதிரானது என்றும், எனது கருத்துக்கு எதிரான கருத்து ஒன்று வைக்கப்படும் போது நான் கருத்து எழுதுவது நடைமுறைக்கு ஒவ்வாதது என்றும் எத்தனை மனசாட்சியானவர்கள் எடுத்துக்கொள்வார்கள் என்தைப் பற்றி அதிகம் அக்கறை காட்டவேண்டியதில்லை.

“நீங்கள்தான் தொடர்ச்சியாக கொலைகாரக்கட்சிகளையும் ஆட்சியில் அமர்த்துபவர்கள்” என்ற வசனத்தை தொடர்ந்து“ எழுப்பியிருந்த கேள்வி மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கோ இசை மகிந்தா ஆட்சிக்கு வர முழுக்க,முழுக்க சிங்களவரா காரணம்?

அந்த கேள்வியில், முதலில், “மனசாட்சி” என்ற அடைமொழி பாவிக்கப்பட்டத்தின் கருத்து, தனது கருத்துடன் உடன்படாமல் மேலே கருத்து எழுதியிருந்தவர்கள், தனது அனுமானிப்பில், மனச்சாட்சியாக எழுதவில்லை என்ற அபிப்பிராயத்தை வெளிவிடுவதாக இருக்கிறது.

 

கேள்வி “தொடர்ந்த கொலைக்கார அரசுகளில்” மகிந்தா அரசு ஒன்றை மட்டும்தான் கருத்தில் எடுக்கிறது. இதன் பின்னணி புலிகளை அழித்த மகிந்த அரசுசை வைத்து, முன்னர் இருந்த அரசுகளையும், இசைகலைஞன் கொலைக்கார அரசுகளாக காண்கிறார் என்ற கருத்தை வலியுறுத்த முயல்கிறது இந்த கருத்து. இதில் கொடியதெல்லாவற்றிலும் கொடியதான மகிந்தா அரசு காப்பாற்றுப்பட்டால் மற்றவர்கள் காப்பாற்றுப்படுவார்கள் என்பது போன்றதொரு உணர்வு தோற்றுவிக்கிக்கப்படுகிறது. எனவே மற்ற கொலைக்கார அரசுகள் யாரால் பதவிக்கு கொண்டுவரப்பட்டார்கள் என்ற விவாத்தை ஒதுக்கித் தள்ளிவிட்டு மகிந்தா அரசை பதவிக்கு யார் கொண்டுவந்தார்கள் என்ற கேள்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. (2005 அல்லாத எல்லாத் தேர்தல்களிலும் தமிழர்களும் சிங்களவர்களும் வாக்களித்துத்தான் அரசுகளை கொண்டுவந்தார்கள். சிங்களவர்கள் ஒரு அரசை பதவிக்கு கொண்டுவரும் போது அது தமிழர்களை அழிக்கும் என்றுதான் நம்புகிறார்கள். தமிழர் அந்த அரசை ஏற்று வாக்களித்த போது அது தமிழரைக் காக்கும் என்று நம்பினார்கள். தொடர்ந்து வரும் அரசுகள் தமிழரின் நம்பிக்கையை தவிடு பொடியாக்கி சிங்களவர்களின் நம்பிக்கையைத்தான் நிறைவேற்றுகிறார்கள்)

மகிந்தா அரசின் மீது அல்ல பிழை, அதை பதவிக்கு கொண்டு வந்தவர்கள் மீதுதான் பிழை என்கிறது இந்த ஒரு வரி ஆய்வு.  அதாவது மகிந்தா அரசு பிழைவிடுகிறதோ, இல்லயோ அதைவிட பெரிய தவறு விட்டவர்களாக சிலரை சுட்டிக்காட்டி மகிந்தா அரசு செய்யும் பிழைகளை கணக்கில் எடுக்காமல் பெரிய பிழை விட்டவர்களை கவனியுங்கள் என்கிறது கருத்து.

இனி இந்த பிழையை விட்டவர்கள் புலிகள் என்பது கருத்து முன் விவாதம். அதாவது புலிகள் தமிழ் மக்களை தேர்தலில் பங்கு பற்ற வேண்டாம் என்றார்கள் என்பதுதான் அந்த செய்தி சொல்ல வருவது. இதில் அந்த கருத்து சொல்ல வரும் விடையம் மிகவும் சுவாரியமான விவகாரம். இது ஆயுதப்போராட்ட தோல்வியை வைத்து தமிழரை அடக்கிவிட அரசினால் ஸ்தாபிக்கப்படிருக்கும் பிரச்சாரிகளினால் ஏற்படுத்தபட்டிருக்கும் மனநிலை. இதை பலர் பற்றிகொண்டிருக்கிறார்கள்.

 

போராட்ட காலங்களில் புலிகள் பல முடிவுகளை எடுத்தார்கள். அதில் ஒன்று இந்த தேர்தல் முடிவும். அந்த முடிவுகளில் பல சரியும் பிழையும் உண்டு. முடிவுகள் எடுக்கப்படும் போது தங்கள் அன்றைய நிலை, அரசின் நிலை, அரசுடனான பழைய அனுபவங்கள் போன்றன கவனத்தில் எடுக்கப்படுவதுண்டு. தமிழரின் தனி நாடு ஒன்றுக்கு சரவதேச அங்கீகரம் இருக்க வேண்டுமாயின், இன்று நடப்பது போன்று, சிங்கள் மக்கள் தமது அரசைத் தெரிவு செய்து அது எப்படிப்பட்ட ஆட்சியை செய்கிறது என்பதை சர்வதேச நாடுகள் அறியத்தக்க வாய்ப்பு ஒன்று சர்வதேச நாடுகளுக்கு கொடுக்கப்பட வேண்டும்.  

 

முடிவு எடுத்தபின்னர் சர்வதேச ரீதியில், உள்நாட்டில் பல அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன.  முடிவை பற்றி பிரஸ்த்தாபிக்கும் பலர் இந்த மாற்றங்களை தாம் எதிர்வுகூறியதாக ஒரு மாயை நினைப்பில் தவழ்கிறார்கள். பலர்்நடந்து முடிந்த அரசியல் மாற்றங்களை தள்ளிவைத்துவிட்டு, முடிவை தாம் எதிர்வு கூறியதாக கொக்கரிக்கிறார்கள். இவர்கள் கூறுவது ஒரு அரசியல் ஆய்வின் வழிவந்த தர்க்க ரீதியான கருத்துகோளோ அல்லது அரசியல் தீர்க்க தரிசனமோ அல்ல. அது ஒன்றில் வெறுமனே புலி எதிர்ப்பு அல்லது அரசிடம் செய்யும் அடிமை சேவகத்திலிருந்து வெளிவரும் வசனங்கள். இவை உண்மையான அரசியல் ஆய்வு இல்லாமல் இருப்பத்தால் இவர்கள் தங்கள் ஜோதிடங்களை ஒரு வரியில் முடித்துகொள்வது யாழில் சம்பிரதாயம். இந்த ஒருவரிகளை, தேவை ஏற்படும் போது, அவற்றுக்கேற்றபடி விளங்கப்படுத்த முடியும்.  

தமிழர் போராட்டத்தில் நாம் இன்னும் விளங்கிக்கொள்ள பல இருக்கிறது, நாம் பலருக்கு (தமிழரல்லாதவர்களுக்கு) நேரம் எடுத்து பொறுமையுடன் பலவற்றை இங்கிதமாக விளங்கப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. ஆனால் சுதந்திரத்தின் பின்னர் மட்டும் 65 ஆண்டுகள் போராடி முடிய, நம்மில் சில தமிழருக்கு நாம் இன்னும் பொறுமையாக விளங்கப்படுத்த வேண்டிய தேவையும் இருக்கிறா?

தூங்குகிறவனை எழுப்ப முடியும் நடிக்கிறவனை எழுப்புவதாகவும் நம்புகிறோமா?

 

 

மல்லையூரான் தயவு செய்து கோவிக்க வேண்டாம் நீங்கள் இதில் என்ன எழுதி இருக்கிறீர்கள் என சுருக்கமாக சொல்ல முடியுமா?
 
ஜேவிபி புரட்சியின் போது எத்தனை அப்பாவி சிங்களவர்கள் கொல்லப்பட்டார்கள்,புதைக்கப்பட்டார்கள் என்பதையும்,ரோகண விஜயவீரவின் மரணத்தின் பின்னர் அவர்கள் எப்படி அடக்கப்பட்டார்கள் என்பதையும் தேடிப் பிடித்து படியுங்கள்.நீங்கள் எல்லாவற்றிக்கும் ஆதாரம் வைத்து கொண்டா எழுதுகிறீர்கள்?...முள்ளி வாய்க்கால் 2009யில் நடந்ததாலும்,புலம் பெயர் மக்களாகிய நாம் இங்கு இருப்பதாலும் தான் அந்த மக்களது அவலங்கள் கொஞ்சமாவது வெளியில் தெரிய வந்தது இல்லா விட்டால் எல்லாத்தையும் முடி மறைத்திட்டு பேசாமல் இருந்திருப்பினம் ஒன்றுமே நடக்காத மாதிரி
  • கருத்துக்கள உறவுகள்

 

மல்லையூரான் தயவு செய்து கோவிக்க வேண்டாம் நீங்கள் இதில் என்ன எழுதி இருக்கிறீர்கள் என சுருக்கமாக சொல்ல முடியுமா?
 
ஜேவிபி புரட்சியின் போது எத்தனை அப்பாவி சிங்களவர்கள் கொல்லப்பட்டார்கள்,புதைக்கப்பட்டார்கள் என்பதையும்,ரோகண விஜயவீரவின் மரணத்தின் பின்னர் அவர்கள் எப்படி அடக்கப்பட்டார்கள் என்பதையும் தேடிப் பிடித்து படியுங்கள்.நீங்கள் எல்லாவற்றிக்கும் ஆதாரம் வைத்து கொண்டா எழுதுகிறீர்கள்?...முள்ளி வாய்க்கால் 2009யில் நடந்ததாலும்,புலம் பெயர் மக்களாகிய நாம் இங்கு இருப்பதாலும் தான் அந்த மக்களது அவலங்கள் கொஞ்சமாவது வெளியில் தெரிய வந்தது இல்லா விட்டால் எல்லாத்தையும் முடி மறைத்திட்டு பேசாமல் இருந்திருப்பினம் ஒன்றுமே நடக்காத மாதிரி

 

 

ஒரெயொரு... தமிழிச்சி, சிங்களன் செத்ததுக்கு... கவலைப் படுகுது.

Edited by தமிழ் சிறி

 

மல்லையூரான் தயவு செய்து கோவிக்க வேண்டாம் நீங்கள் இதில் என்ன எழுதி இருக்கிறீர்கள் என சுருக்கமாக சொல்ல முடியுமா?
 
ஜேவிபி புரட்சியின் போது எத்தனை அப்பாவி சிங்களவர்கள் கொல்லப்பட்டார்கள்,புதைக்கப்பட்டார்கள் என்பதையும்,ரோகண விஜயவீரவின் மரணத்தின் பின்னர் அவர்கள் எப்படி அடக்கப்பட்டார்கள் என்பதையும் தேடிப் பிடித்து படியுங்கள்.நீங்கள் எல்லாவற்றிக்கும் ஆதாரம் வைத்து கொண்டா எழுதுகிறீர்கள்?...முள்ளி வாய்க்கால் 2009யில் நடந்ததாலும்,புலம் பெயர் மக்களாகிய நாம் இங்கு இருப்பதாலும் தான் அந்த மக்களது அவலங்கள் கொஞ்சமாவது வெளியில் தெரிய வந்தது இல்லா விட்டால் எல்லாத்தையும் முடி மறைத்திட்டு பேசாமல் இருந்திருப்பினம் ஒன்றுமே நடக்காத மாதிரி

 நீங்கள் வழமையாக ஆதாரம் இல்லாதவற்றையல்ல வந்து கொப்பை கொட்டுகிறீர்கள், பொய்ப் பிரச்சாரங்களை  செய்வோர் போல் எதிர் மறாக எழுதுகிறீர்கள் என்பதுதான் நான் மேலே எழுதியிருப்பதன் சாரம். எதோ விளங்கவில்லை என்று நடித்துக்கொண்டு,அதே பந்தியில் கேட்ட ஆதரத்துக்கு நான் எழுதும் போது ஆதாரம் இல்லாமல் எழுதுறேன் என்று நிரூபிக்க பார்க்கிறீர்கள்.அதுதான் தூங்குபவர் போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது என்று முடித்திருக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் சொன்னார்கள் என்று சொல்வீர்கள்.. ஆனால் வாக்குச்சீட்டு யார் கையில் இருந்தது..?

இன்னொரு விடயம்.. இலங்கைத்தீவை இதுவரை ஆட்சி செய்த இரு கட்சிகளுமே இன அழிப்பை மேற்கொண்ட கட்சிகளே.. இதில் ரணில் வந்திருந்தால் எல்லாம் நல்லபடியாக இருந்திருக்கும் என்பது ஒரு கருத்தியல் மட்டுமே.. மற்றும்படி அது உண்மை ஆகிவிடாது..

ஆக இத்தகைய பெரும்பான்மை இனக் கட்சிகள் இரண்டையுமே தாங்கிப் பிடிப்பவர்கள் சிங்களவர்களே என்பதை மறுக்க முடியுமா?

 

நல்ல கருத்து. :)

  • கருத்துக்கள உறவுகள்

ஒரெயொரு... தமிழிச்சி, சிங்களன் செத்ததுக்கு... கவலைப் படுகுது.

 

 

நான் ஒன்றும் சிங்களவன் செத்ததிற்கு கண்ணீர் வடிக்கவோ,கவலைப்படவோ இல்லை.நான் என்ன சொல்ல வருகிறேன் என்ட அடிப்படையே நீங்கள் புரிந்து கொள்ளவில்லை :(

 நீங்கள் வழமையாக ஆதாரம் இல்லாதவற்றையல்ல வந்து கொப்பை கொட்டுகிறீர்கள், பொய்ப் பிரச்சாரங்களை  செய்வோர் போல் எதிர் மறாக எழுதுகிறீர்கள் என்பதுதான் நான் மேலே எழுதியிருப்பதன் சாரம். எதோ விளங்கவில்லை என்று நடித்துக்கொண்டு,அதே பந்தியில் கேட்ட ஆதரத்துக்கு நான் எழுதும் போது ஆதாரம் இல்லாமல் எழுதுறேன் என்று நிரூபிக்க பார்க்கிறீர்கள்.அதுதான் தூங்குபவர் போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது என்று முடித்திருக்கிறேன். 

 

 

வழக்கமாக எல்லாத் திரிகளிலும் சலாப்பிற மாதிரி இந்த திரியிலும் சலாப்பி இருக்கிறீங்கள்.உணர்ச்சி அரசியல் கதைப்பதை விட வேறு என்ன செய்ய முடியும்?
 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுத்தி விட்ட பம்பரம் ....

நிக்கேக்க பாத்துக்கொள்ள வேண்டியது தான் .... :lol:

 

 

வழக்கமாக எல்லாத் திரிகளிலும் சலாப்பிற மாதிரி இந்த திரியிலும் சலாப்பி இருக்கிறீங்கள்.உணர்ச்சி அரசியல் கதைப்பதை விட வேறு என்ன செய்ய முடியும்?

 

சளாப்பல் என்று உங்களுக்கும் மட்டும் விளங்கத்தக்கதாக எழுதினான். விளங்கவில்லை என்று மற்றவர்கள் விட்ட பகிடியை கொப்பியடிச்சு போடப் பார்த்தீர்கள்கள் அதுதான் உணர்சிவசமாக இருந்தது. அடுத்த முறை எழுத வராட்டில் விட்டிடுங்கோ. கொப்பியடிக்க போகாதேங்கோ.

 

நான் ஒன்றும் சிங்களவன் செத்ததிற்கு கண்ணீர் வடிக்கவோ,கவலைப்படவோ இல்லை.நான் என்ன சொல்ல வருகிறேன் என்ட அடிப்படையே நீங்கள் புரிந்து கொள்ளவில்லை :(

 

சளாப்பாமல் விளங்கத்தக்கதாக மற்றமுறை எழுதுங்கோ.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மாணவர்களின் உணர்வுக்கு தலை வணங்குகிறேன்.

:( :(

வெட்கக்கேடுடுடுடு :(

83இல் தமிழருக்கு எதிரான கலவரங்கள் நடைபெற்றபோது சிங்களக் காடையர்களின் அச்சுறுத்தல்களுக்குப் பணியாமல் தமிழ் மக்களுக்கு அடைக்கலம் கொடுத்து ஆதரித்த ஒரு சிங்களவரின் மகன் தான் இந்த குமார் சங்கக்கார.

தமிழருக்கெதிரான அந்தத் தாக்குதல்களைக் கண்டித்தும் தனது தகப்பனின் அந்தச்செயலினை பெருமையுடன் நினைவு கூர்ந்தும் சர்வதேச மாநாடு ஒன்றில் துணிந்து பேசியவர்தான் இந்த குமார் சங்கக்கார.

அப்படிப்பட்ட ஒரு விளையாட்டு வீரருக்கு, தாம் அதிகாரத்தில் இருக்கும் ஒரு பெரும் மாநிலத்தில் தமிழர்கள் கொடுத்த வரவேற்பையும் பரிசையும் பாருங்கள்.

வெட்கக்கேடு!

தூரக்கில்லாத, அரசியல் அறிவற்ற, உணர்ச்சிவசப்பட்ட இம்மாதிரியான லூசுத்தனங்களை தமிழகத்தின் சில அரசியல் சக்திகள் தூண்டிவிட்டுக்கொண்டே இருக்குமானால் இலங்கைத்தமிழர் கடைசியாக இருக்கிற கோவணத்தையும் இழக்க வேண்டிய நிலைக்குத்தான் தள்ளப்படுவார்கள்.

குமார் சங்கக்காரவின் 2011 உரையின் பகுதி:

// I recollect now the race riots of 1983 now with horror, but for the simple imagination of a child not yet six it was a time of extended play and fun. I do not say this lightly as about 35 of our closest friends, all Tamils, took shelter in our home. They needed sanctuary from vicious politically-motivated goon squads and my father, like many other brave Sri Lankans from different ethnic backgrounds, opened his houses at great personal risk.

For me, though, it was a time where I had all my friends to play with all day long. The schools were closed and we’d play sport for hour after hour in the backyard – cricket, football, rounders…it was a child’s dream come true. I remember getting annoyed when agame would be rudely interrupted by my parents and we’d all be ushered inside, hidden upstairs with our friends and ordered to be silent as the goon squads started searching homes in our neighbourhood.

I did not realise the terrible consequences of my friends being discovered and my father reminded me the other day of how one day during that period I turned to him and in all innocence said: “Is this going to happen every year as it is so much fun having all my friends live with us.” //

:Kumar Sangakkara's 2011 MCC Spirit of Cricket Cowdrey Lecture

Fb

 

வெட்கக் கேடு ஈழத்தமிழராக இருந்து சிங்கள துடுப்பாட்ட அணி வீரருக்கு ஆதரவாகக் கருத்து தெரிவிக்கும் சுண்டலை நினைத்து வெட்கக்கேடு.

இங்கு எதிர்க்கப்படுவது தனிப்பட்ட சங்கக்கார இல்லை! சிங்கள அரச பயங்கரவாதம்!

சங்கக்கார நேர்மையானவர் என்றால் அரச பயங்கரவாதத்தை எதிர்த்திருக்க வேண்டும்!

இலண்டனில் அவர் பேசிய சிங்கள அரச பயங்கரவாதம் சார்பான இனவாதக் கருத்துக்களை சிலர் மறந்து போய்விட்டனர் 

 



ஆனால் தமிழனை விட திறம் :icon_mrgreen:

 

உங்களை மட்டுமே உலகிலுள்ள ஒரே ஒரு தமிழனாக நினைத்து எழுதியுள்ளீர்கள்!

 

 

 

நாம் நேற்று வெளியிட்ட செய்திக்கு மறுப்புதெரிவித்து தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பு என்ற பெயரில் இயங்கும் நிர்வாகிகள் எமக்கு அனுப்பிய செய்தி .

மன்னிக்கவும் உறவுகளே , குமார் சங்ககாரா பற்றிய பதிவினை இந்த பக்கத்தை நடத்தும் நாங்கள் பதிவிடவில்லை, எங்கேயோ தவறு நடந்துள்ளது . மேலும் நாங்கள் தேசிய தலைவரின் பாதையில் உங்களுடன் பயணிப்பவர்கள் "கரும்புலி ஆவோமே தவிர கருணா ஆக மாட்டோம்"..மேலும் எங்கள் பக்கத்தில் நான்கு மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் நிர்வாகியாக இருந்தனர் . தற்போது பக்கம் மீண்டும் எங்களால் மீட்கப்பட்டது .. யார் இதற்கு காரணம் என தேடுகின்றோம் .

இப்படிக்கு

தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள்

:( :(

வெட்கக்கேடுடுடுடு :(

83இல் தமிழருக்கு எதிரான கலவரங்கள் நடைபெற்றபோது சிங்களக் காடையர்களின் அச்சுறுத்தல்களுக்குப் பணியாமல் தமிழ் மக்களுக்கு அடைக்கலம் கொடுத்து ஆதரித்த ஒரு சிங்களவரின் மகன் தான் இந்த குமார் சங்கக்கார.

தமிழருக்கெதிரான அந்தத் தாக்குதல்களைக் கண்டித்தும் தனது தகப்பனின் அந்தச்செயலினை பெருமையுடன் நினைவு கூர்ந்தும் சர்வதேச மாநாடு ஒன்றில் துணிந்து பேசியவர்தான் இந்த குமார் சங்கக்கார.

அப்படிப்பட்ட ஒரு விளையாட்டு வீரருக்கு, தாம் அதிகாரத்தில் இருக்கும் ஒரு பெரும் மாநிலத்தில் தமிழர்கள் கொடுத்த வரவேற்பையும் பரிசையும் பாருங்கள்.

வெட்கக்கேடு!

தூரக்கில்லாத, அரசியல் அறிவற்ற, உணர்ச்சிவசப்பட்ட இம்மாதிரியான லூசுத்தனங்களை தமிழகத்தின் சில அரசியல் சக்திகள் தூண்டிவிட்டுக்கொண்டே இருக்குமானால் இலங்கைத்தமிழர் கடைசியாக இருக்கிற கோவணத்தையும் இழக்க வேண்டிய நிலைக்குத்தான் தள்ளப்படுவார்கள்.

குமார் சங்கக்காரவின் 2011 உரையின் பகுதி:

// I recollect now the race riots of 1983 now with horror, but for the simple imagination of a child not yet six it was a time of extended play and fun. I do not say this lightly as about 35 of our closest friends, all Tamils, took shelter in our home. They needed sanctuary from vicious politically-motivated goon squads and my father, like many other brave Sri Lankans from different ethnic backgrounds, opened his houses at great personal risk.

For me, though, it was a time where I had all my friends to play with all day long. The schools were closed and we’d play sport for hour after hour in the backyard – cricket, football, rounders…it was a child’s dream come true. I remember getting annoyed when agame would be rudely interrupted by my parents and we’d all be ushered inside, hidden upstairs with our friends and ordered to be silent as the goon squads started searching homes in our neighbourhood.

I did not realise the terrible consequences of my friends being discovered and my father reminded me the other day of how one day during that period I turned to him and in all innocence said: “Is this going to happen every year as it is so much fun having all my friends live with us.” //

:Kumar Sangakkara's 2011 MCC Spirit of Cricket Cowdrey Lecture

Fb

 

Anbu Anbu 

டொரோண்டோ கனடாவில் இரு ஆண்டுகளுக்கு முன்னர் கனடா - ஸ்ரீலங்கா அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியொன்றின்போது அங்கு தமிழர்கள் திரண்டு சென்று ஸ்ரீலங்கா அணிக்கு தமது எதிர்ப்பினைத் தெரிவித்தனர். போட்டி முடிந்தபின் விளையாட்டு வீரர்கள் மகிழுந்துகளில் வெளியேறினர். அப்போதும் அவ்விடத்தை விட்டு அகலாத தமிழ் மக்கள் வெளியேறிக்கொண்டிருந்த ஸ்ரீலங்கா அணியினரை நோக்கி எதிர்ப்புக்குரல் தெரிவித்தனர்.

 

அதன்போது அங்கிருந்த, ஞானி சங்கரன் சொல்லும் 'தமிழின ரட்சகர் சங்ககாரா' தமிழ் மக்களை நோக்கித் திரும்பி, தனது நடுவிரலை மேல் உயர்த்திக் காட்டி f**k you பறத் தமிழா" என்று சொன்னது அங்கு திரண்டிருந்த பலரதும் கைப்பேசிகளில் பதிவாகியுள்ளது. சிங்கள பௌத்த பேரினவாத அரசின் இனவாதக் கொள்கைக்கு தூபம் போடும் சங்ககாராக்களின் பங்கு தெளிவானது. கவிதா அண்ணா சொன்னது போன்று "முகமூடி போட்டாலும் சங்கரன்கள் அவங்க காரியத்தில தெளிவாத்தான் இருக்காங்க."

  • கருத்துக்கள உறவுகள்

Anbu Anbu 

டொரோண்டோ கனடாவில் இரு ஆண்டுகளுக்கு முன்னர் கனடா - ஸ்ரீலங்கா அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியொன்றின்போது அங்கு தமிழர்கள் திரண்டு சென்று ஸ்ரீலங்கா அணிக்கு தமது எதிர்ப்பினைத் தெரிவித்தனர். போட்டி முடிந்தபின் விளையாட்டு வீரர்கள் மகிழுந்துகளில் வெளியேறினர். அப்போதும் அவ்விடத்தை விட்டு அகலாத தமிழ் மக்கள் வெளியேறிக்கொண்டிருந்த ஸ்ரீலங்கா அணியினரை நோக்கி எதிர்ப்புக்குரல் தெரிவித்தனர்.

 

அதன்போது அங்கிருந்த, ஞானி சங்கரன் சொல்லும் 'தமிழின ரட்சகர் சங்ககாரா' தமிழ் மக்களை நோக்கித் திரும்பி, தனது நடுவிரலை மேல் உயர்த்திக் காட்டி f**k you பறத் தமிழா" என்று சொன்னது அங்கு திரண்டிருந்த பலரதும் கைப்பேசிகளில் பதிவாகியுள்ளது. சிங்கள பௌத்த பேரினவாத அரசின் இனவாதக் கொள்கைக்கு தூபம் போடும் சங்ககாராக்களின் பங்கு தெளிவானது. கவிதா அண்ணா சொன்னது போன்று "முகமூடி போட்டாலும் சங்கரன்கள் அவங்க காரியத்தில தெளிவாத்தான் இருக்காங்க."

 

சனத் பற்றித்தான் நடுவிரல் சர்ச்சை எழுந்தது. சங்ககாரா பற்றிய ஆதாரத்தை வேந்தன் இணைக்க முடியுமா? ஆதாரமற்ற செய்திகள் மட்டுறுத்தப் படும் என்பது உங்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை

  • கருத்துக்கள உறவுகள்

Anbu Anbu 

டொரோண்டோ கனடாவில் இரு ஆண்டுகளுக்கு முன்னர் கனடா - ஸ்ரீலங்கா அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியொன்றின்போது அங்கு தமிழர்கள் திரண்டு சென்று ஸ்ரீலங்கா அணிக்கு தமது எதிர்ப்பினைத் தெரிவித்தனர். போட்டி முடிந்தபின் விளையாட்டு வீரர்கள் மகிழுந்துகளில் வெளியேறினர். அப்போதும் அவ்விடத்தை விட்டு அகலாத தமிழ் மக்கள் வெளியேறிக்கொண்டிருந்த ஸ்ரீலங்கா அணியினரை நோக்கி எதிர்ப்புக்குரல் தெரிவித்தனர்.

 

அதன்போது அங்கிருந்த, ஞானி சங்கரன் சொல்லும் 'தமிழின ரட்சகர் சங்ககாரா' தமிழ் மக்களை நோக்கித் திரும்பி, தனது நடுவிரலை மேல் உயர்த்திக் காட்டி f**k you பறத் தமிழா" என்று சொன்னது அங்கு திரண்டிருந்த பலரதும் கைப்பேசிகளில் பதிவாகியுள்ளது. சிங்கள பௌத்த பேரினவாத அரசின் இனவாதக் கொள்கைக்கு தூபம் போடும் சங்ககாராக்களின் பங்கு தெளிவானது. கவிதா அண்ணா சொன்னது போன்று "முகமூடி போட்டாலும் சங்கரன்கள் அவங்க காரியத்தில தெளிவாத்தான் இருக்காங்க."

 

 

அந்த நேரம் ஏன் இப்படி ஒரு செய்தியை வெளியிடாமல் மறைத்தீங்கள்? சரி இப்பவும் ஒன்றும் கெட்டுப் போகேல்ல கெதியா வீடியோ கொண்டு வந்து போட்டு உங்கள் நம்பத் தன்மையை நிரூபியுங்கோ.அத்தோடு எங்கட மக்கள் சங்கரகாரவின் உண்மையான குணத்தையும் தெரிந்து கொள்ளட்டும்
  • கருத்துக்கள உறவுகள்
 

575766_10151346297752944_604486757_n.jpg

 

 

 

சங்கக்காராவின் தந்தை முன்பொரு காலத்தில் நல்லவராக இருந்ததால் கலவரத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அடைக்கலம் தந்ததாக சன் டிவி தனது பி.ஆர்.ஓ. திறமைகள் மூலம் திரையுலக பிரபலங்களை மிரட்டி அவர்களது முகநூல் பக்கங்களில் செய்தி வெளியிடச் செய்து வருகிறது.

சங்கக்காராவின் அப்பா நல்லவரென்று யார் சொன்னது என்று கேட்டால் சங்கக்காராவே சொல்லிட்டாராம். அதனால் தமிழகத் தமிழர்களும் இலங்கைத் தமிழர்களும் அவரைப் போற்றிப் புகழ்ந்து பாராட்டாமல் சென்னைக்கு வந்தவரை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தலாமா? என சில அறிவு சீவிகள் வழக்கம்போல மொக்கை விவாதங்கள் செய்துவருகின்றனர்.

சரி.. சங்கக்காராவின் அப்பாதானே நல்லவர் அதற்கு சங்கக்காராவை ஏன் புகழ வேண்டும் எனக் கேள்விகள் எழுப்பிக்கொண்டிருக்கையிலேயே.. சங்கக்காராவின் பூழைக்கேடுகள் வெளிவந்துவிட்டன..

இனப்படுகொலை செய்த இலங்கை ராணுவத்திற்கு புகழாரம் சூட்டியது மட்டுமல்லாமல் நிதி நாடுமுழுக்க சுற்றி நிதியும் திரட்டித் தந்தவன்தானாம் இந்த சங்கக்காரா...சண் கும்பல் மற்றும் சிங்கள உளவுத்துறையின் பொய் பிரசாரத்தை முறியடிப்போம்.

via - பொதிகை செல்வன்
 
21133_595299103821677_1351446435_n.jpg
 
Thanks FB

 

இது 2011 இல் வந்த செய்தி. முகநூலிலும் பலர் இதை சங்கக்காராவின் நடவடிக்கைகள் தொடர்பாக ஒரு ஆதாரமாக இணைத்துள்ளார்கள். திண்ணையிலும் உதயம் அண்ணா இணைத்திருந்தார்.

 

Sanga praises armed forces

 

25 July 2011

 

Former Sri Lanka cricket captain Kumar Sangakkara today said Sri Lankans were indebted to the armed forces for the sacrifices made in bringing about a bright future for the country and that on every possible occasion they would remember these sacrifices.

Making the comment to the Air Force media before departing to Jaffna on the 25th day of the 'Trail'  - a fund raising walk to build a children's cancer ward in Jaffna, Sangakkara also hailed the project vowing to give his fullest support.

Sangakkara flew to Jaffna from Katunayake on a Helitours Antanov 32 flight of the Air Force.

Commenting on the fund raising walk, Sangakkara said this was a much needed worthy cause deserving maximum support, the Air Force website said.
Sangakkara also hailed the service provided by SLAF's Helitours saying it had the potential to reach international level.

 

kuma.jpg

 

 

http://www.dailymirror.lk/index.php?option=com_content&task=view&id=12614&Itemid=425

 

Edited by துளசி

 

 

உங்களை மட்டுமே உலகிலுள்ள ஒரே ஒரு தமிழனாக நினைத்து எழுதியுள்ளீர்கள்!

இதை விட சிறந்த பதில் இல்லவே இல்லை... :lol:  :lol:  :D  பாராட்டுக்கள் ஆசான்

முன்னர் வந்த இந்த வீடியோவையும் பாருங்கள்.

 

 

Edited by துளசி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.