Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மோகன் அண்ணாவிடம் ஒரு விண்ணப்பம்….

Featured Replies

ஆங்கிலத்தில் கருத்து எழுதுவது மட்டும்தான் தடை செய்யப்பட்டுள்ளது. இப்படி ஒட்டுவதில் ஒரு பிரச்சனையும் இல்லை. நல்ல கருத்து. நன்றி நுணாவிலான்.

நானும் மோகன் அண்ணாவின் வருகையை எதிர்பார்க்கிறேன்.  எதுவாக இருந்தாலும் அதனை முகம் கொடுப்பதே சிறந்தது.  ஏதாவது முக்கிய காரணமாகக்கூட ஒதுங்கியிருக்கலாம்.  அவ்வாறான பட்சத்தில் அதனை ஏற்றுக் கொள்ளவும் வேண்டும்.  ஆனால், அவ்வாறில்லாத பட்சத்தில் மோகன் அண்ணா மீண்டும் வரவேண்டும் என்பதே எனது கோரிக்கையும்.  கவிதை மிகவும் நன்றாக உள்ளது மணி.

  • கருத்துக்கள உறவுகள்

மோகன் அண்ணா ஏன் வராமல் விட்டார் என்பது மறந்துவிட்டது. :rolleyes:  ஆனால் யாழைப் பூட்டப் போகின்றேன் என்று சொன்னது ஞாபகத்தில் உள்ளது. :blink: 

2009 இலும் அதற்கு முன்னரும் மோகன் அண்ணாவையும் சில யாழ்கள உறுப்பினர்களையும் சந்தித்திருந்தேன். அவர்களின் ஓரிருவரைத் தவிர மற்றையவர்கள்கூட யாழுக்கு வருவதில்லை. :( 
 

சிலருக்கு நான் எழுதிய கருத்து புரியவில்லை. நல்ல பெயர் எடுப்பவர்கள் உண்மையில் நல்லவர்கள் என்றோ, கெட்ட பெயர் எடுப்பவர்கள் உண்மையில் கெட்டவர்கள் என்று யாரும் சொல்லி விட முடியாது.

மோகன் கெட்ட பெயர் எடுப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றால், அதற்கு மோகன் கெட்டவர் என்று அர்த்தம் இல்லை. ஒரு நல்லவருக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தக் கூடிய கெட்டவர்களும் இங்கே இருக்கின்றார்கள் என்கின்ற அர்த்தமும் அதில் இருக்கலாம்.

ஆனால் நான் கூறியதன் பொருள் எதுவெனில், பல கோணங்களில் கருத்துக்களைக் கொண்டிருக்கும் பல்வேறு தரப்புக்கள் உலாவும் இடமாக யாழ் களம் இருப்பதனால், இதை நிர்வாகம் செய்வது என்பது மிகக் கடினம். இன்று ஒரு தரப்பிடமும், நாளை வேறு ஒரு தரப்பிடமும் கெட்ட பெயர் வாங்கிக் கொண்டுதான் களத்தை நடத்த வேண்டிய கட்டாயம் உருவாகியிருக்கிறது என்பதையே சுட்டிக் காட்டினேன்.

மோகன் அல்ல, வேறு யார் வந்தாலும் இதை தவிர்க்க முடியாது

சுத்தி சுத்தி இந்த விளக்கம் அதே இடத்திலேயே நிற்கிறது. இன்னமும் முதலாவதற்கு பதில் வரவில்லை.

 

இந்த விளக்கத்தைப் படித்த பிறகு, தனக்கு விளங்காதவற்றை மற்றவர்களுக்கு விளங்கவில்லை என்பதும் தனக்கு விளங்கிவிட்டால் உங்களுக்கு விளக்கமாக எழுத முடியவில்லை என்றும் திருப்பி விடுவதுதான் சபேசனால் செய்ய முடிகிறது போல்ப்படுகிறது. தான் எழுதியவற்றுக்கு வரும் கருத்துக்களுக்கு பதில் அளிப்பதில் இருந்து சறுக்குவதுதான் இந்த வகை விளக்கங்கள் போல ஒரு அபிப்பிராயத்தை தருகிறது..

 

முன்னர் மோகனை நல்லவரை ஆக்கிவைத்திருந்த யாழ்க்களத்து உறவுகளுக்கு என்ன நடந்து இப்போ அவரை கெட்டவர் ஆக்கிவிடத் துடிக்கிறார்கள் என்பதை விளங்க வைக்க முடியுமா என்பதுதான் மோகனை திரும்ப வரும்படி அழைத்த திரிக்கு மாற்றுக்கருத்து எழுதிய போது பதில் கருத்து எழுதியவர்களின் கருத்து.

 

2009 பின்னர்தான் இந்த கேடு வந்ததா? முன்னர் புலிகள் வெல்வார்கள் என நினத்து மோகனை நல்லவர் ஆக்கி வைத்தவர்கள் இப்போ அரசாங்கம் வென்றுவிட்டத்தால் பக்கம் மாறி  கெட்டவர் ஆக்கிவைத்துவிடுவார்களா?

 

மோகனை பற்றி தனிப்பட அறிந்தவர்கள் எழுதும் போது அவரை நல்லவராக மட்டும்தான் இது வரையில் எழுத்தியிருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல இங்கே முக்கியம். மோகன் தனக்கு ஒரு அரசியல், சமூக ஆர்வம் இருப்பதை இப்படி ஒரு செயலில் இறங்கி இருப்பதின் மூலம் வெளிக்காட்டியிருக்கிறார். அது நிச்சயம் பல இடங்களில் நல்லவர், பொல்லாதவர் அப்பிராயங்களை ஏற்படுத்தித்தான் போகும். இதை தெரியாமல், முட்டைக்கு வெளியில் வந்த கோழிக்குஞ்சாக மட்டும் அவர் இருந்திருந்தால்  அவரால் யாழை இந்த நிலைக்கு கொண்டுவந்திருக்க முடியுமா?  

 

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

மோகன் அண்ணா ஏன் வராமல் விட்டார் என்பது மறந்துவிட்டது. :rolleyes:  ஆனால் யாழைப் பூட்டப் போகின்றேன் என்று சொன்னது ஞாபகத்தில் உள்ளது. :blink: 

2009 இலும் அதற்கு முன்னரும் மோகன் அண்ணாவையும் சில யாழ்கள உறுப்பினர்களையும் சந்தித்திருந்தேன். அவர்களின் ஓரிருவரைத் தவிர மற்றையவர்கள்கூட யாழுக்கு வருவதில்லை. :( 

 

 

உண்மை தான் கிருபன்..பழைய உறுப்பினர்கள் பலரும் ஒதுங்கி இருப்பது கவலை தருகிறது.

நானும் மோகன் அண்ணாவின் வருகையை எதிர்பார்க்கிறேன்.  எதுவாக இருந்தாலும் அதனை முகம் கொடுப்பதே சிறந்தது.  ஏதாவது முக்கிய காரணமாகக்கூட ஒதுங்கியிருக்கலாம்.  அவ்வாறான பட்சத்தில் அதனை ஏற்றுக் கொள்ளவும் வேண்டும்.  ஆனால், அவ்வாறில்லாத பட்சத்தில் மோகன் அண்ணா மீண்டும் வரவேண்டும் என்பதே எனது கோரிக்கையும்.  கவிதை மிகவும் நன்றாக உள்ளது மணி.

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தமிழச்சி..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மோகனுக்கு கவிதை எழுதிபிரயோசனமில்லை.வழமையாய் வந்து போன ஆக்கள் ஏன் இப்ப வாறேல்லை எண்டு கவிதை எழுதினால் இன்னும் நல்லாயிருக்கும்......மோகன்ரை டச் இல்லாமல் யாழ்களம் இருக்காது எண்டு நான் நினைக்கிறன்..

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கிலத்தில் கருத்து எழுதுவது மட்டும்தான் தடை செய்யப்பட்டுள்ளது. இப்படி ஒட்டுவதில் ஒரு பிரச்சனையும் இல்லை. நல்ல கருத்து. நன்றி நுணாவிலான்.

 

 

செய்தி உங்களை எட்டியதை இட்டு மகிழ்ச்சி.

மோகன் அண்ணாவைப் பற்றி உங்கள் கருத்துக்கள் மூலமாக அறிந்தேன். யாழ் களத்தை நிறுவி நடாத்தியவர் என்பதை முன்பே அறிந்திருந்தேன்!

அப்படியான ஒருவர், அனைவராலும் விரும்பப்படும் ஒருவர் விலகியிருப்பது அல்லது பின்னணியில் மட்டும் இருப்பது பெரும் இழப்பு.

யாழ்களத்தின் எதிர்காலம் அதை முன்னணியில் நிர்வகிப்பவர்களின் கைகளில் உள்ளது. பணத்துக்காக அலைபவர்கள், சபலபுத்திக்காரர்கள், போதையில் நிதானம் இழப்பவர்கள், சந்தர்ப்பவாதிகள் கைகளில் நிர்வாகம் இருந்தால் எதிர்காலம் மங்கும். நேர்மையானவர்கள், நிதானமானவர்கள் கைகளில் நிர்வாகம் இருந்தால் எதிர்காலம் பிரகாசமானதாக இருக்கும்.  

 

மோகன் அண்ணாவைப் பற்றி உங்கள் கருத்துக்கள் மூலமாக அறிந்தேன். யாழ் களத்தை நிறுவி நடாத்தியவர் என்பதை முன்பே அறிந்திருந்தேன்!

அப்படியான ஒருவர், அனைவராலும் விரும்பப்படும் ஒருவர் விலகியிருப்பது அல்லது பின்னணியில் மட்டும் இருப்பது பெரும் இழப்பு.

யாழ்களத்தின் எதிர்காலம் அதை முன்னணியில் நிர்வகிப்பவர்களின் கைகளில் உள்ளது. பணத்துக்காக அலைபவர்கள், சபலபுத்திக்காரர்கள், போதையில் நிதானம் இழப்பவர்கள், சந்தர்ப்பவாதிகள் கைகளில் நிர்வாகம் இருந்தால் எதிர்காலம் மங்கும். நேர்மையானவர்கள், நிதானமானவர்கள் கைகளில் நிர்வாகம் இருந்தால் எதிர்காலம் பிரகாசமானதாக இருக்கும்.  

 

அப்போ இப்ப இருப்பவர்கள் நேர்மையானவர்கள் இல்லையென்கின்றீர்களா?

 

நிர்வகாம் திறமையாக தன் கடமையை செய்கின்றது செய்வார்கள். கவலைப்படாதீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான் கிருபன்..பழைய உறுப்பினர்கள் பலரும் ஒதுங்கி இருப்பது கவலை தருகிறது.

பழைய உறவுகள் யார் யார் ஒதுங்கியிருக்கிறார்கள் என கூறினால் நல்லம்..ஏன் ஒதுங்கினார்கள் என்ற காரணம் தெரிந்தால் அதையும் கூறினால் நன்றாக இருக்கும் மோகனுக்காக எழுதிய வரவேற்புக்கவிதைக்கு நன்றிகள் மணி

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்
இப்பவே எல்லாரும் மோகன் அண்ணா இருந்திருந்தால் யாழ் அப்படி இருந்திருக்காது,இப்படி இருந்திருக்காது என்று கதைக்கினம்.அவர் நேரடியாக மோகன் என்ட பெயரில் யாழில் இருந்தால் எல்லோரும் அவரிட்ட போய் அவன் இப்படி செய்து போட்டான்,இவள் இப்படி செய்து போட்டாள் என ஒப்பாரி வைப்பினம்.அதற்கு அவர் எதாவது ஒரு முடிவு சொன்னாலும் ஒரு பக்க சார்பாக நடக்கிறார் என்று சொல்லுவினம்.
 
தங்களுக்கு ஏதாவது காரியம் ஆக வேண்டும் என்டால் போய்க் கெஞ்சிப் பார்ப்பினம்.ஆகப் பழைய ஆட்களாய் இருந்தால் நீ இப்ப உதை செய்யப் போறீயா இல்லையா என மிரட்டிப் பார்ப்பினம்.இப்படியான கண பிரச்சனைகளை பார்த்த படியால் தான் அந்தாள் ஒதுங்கி நிற்கிறார்.
 
மட்டுக்களோட‌ எதாவது பிர‌ச்ச‌னை என்டாலும் அவரிட்ட தான் போவினம் கோள் மூட்ட.இப்ப ஒரு மட்டுவை பற்றி இன்னொரு மட்டுவிட‌ம் கோள் மூட்டேலாத படியால் பேசாமல் இருக்கினம்.சர்ச்சைக்குரிய திரிகள்/கருத்துக்கள் என்று நீக்கினால் சண்டைக்குப் போவினம்.இப்ப அப்படியானதுகளை நியாணி நீக்குவதால் யாரென்டு தெரியாமல் பேசாமல் இருக்கினம்
 
இதை நான் இப்ப எழுத கார‌ணம் இன்றும் ஒரு திரியில் ஒரு உறவு மோகன் அண்ணாவைப் பற்றி எழுதின படியாலாகும் :)
  • கருத்துக்கள உறவுகள்

இங்கே ஒரு சிலர் நான் தான் மோகன் 

இல்லை நான்  தான் மோகன் என உரிமை கோருகின்றபடியால்

மோகன் அண்ணா ஒருமுறை வந்து  என் போன்ற அப்பாவிகளுக்கு விளக்கம் தந்து தெளிவடைய வைக்கவேண்டும் :D  :lol:  :icon_mrgreen:   

 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே ஒரு சிலர் நான் தான் மோகன் 

இல்லை நான்  தான் மோகன் என உரிமை கோருகின்றபடியால்

மோகன் அண்ணா ஒருமுறை வந்து  என் போன்ற அப்பாவிகளுக்கு விளக்கம் தந்து தெளிவடைய வைக்கவேண்டும் :D  :lol:  :icon_mrgreen:   

 

 

அவர் வ்ந்து நான் தான் மோகன் என்று சொன்னால் என்ன செய்வீங்கள் :D
  • கருத்துக்கள உறவுகள்

 

அவர் வ்ந்து நான் தான் மோகன் என்று சொன்னால் என்ன செய்வீங்கள் :D

 

 

அவர் வந்து ரதி எனும் பெயரில் எனக்கு எந்தக் கணக்கும் யாழில் இல்லை என்றாலே

 

எனக்குப் பெரிய சந்தோசம் . அதையும் நான் ஒருமுறை அனுபவிக்க வேண்டும்  :icon_mrgreen:  :lol:  :D  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.