Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனில் புலிக்கொடியுடன் திரண்ட மக்கள் ; சிங்களவருக்கு அடி உதை [படங்கள்]

Featured Replies

லண்டனில் (அல்லது Cardiff க்கு கிட்ட) இருக்கும், "யாழ் " க்கு வரும் சக பதிவர்கள் எத்தனை பேர் இந்த போராட்டத்துக்கு போய் சிங்களவருக்கு ரெண்டு போட்டீங்கள் என்று சொன்னால் உங்களின் மீது இன்னும் மதிப்பும் மரியாதையும் (பயமும்) கூடும்.. :huh:

  • Replies 218
  • Views 17.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் (அல்லது Cardiff க்கு கிட்ட) இருக்கும், "யாழ் " க்கு வரும் சக பதிவர்கள் எத்தனை பேர் இந்த போராட்டத்துக்கு போய் சிங்களவருக்கு ரெண்டு போட்டீங்கள் என்று சொன்னால் உங்களின் மீது இன்னும் மதிப்பும் மரியாதையும் (பயமும்) கூடும்.. :huh:

உங்களை தேடினவயாம்
  • கருத்துக்கள உறவுகள்

இப்படியும் ஒரு கருத்து எழுதத் தமிழர்கள் இருப்பார்கள் என்பதை நம்பவே முடியவில்லை !

:unsure:

 

பின்ன எப்படி இருக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள் உங்கள மாதிரி சுயநலமாகவா?...யாழில் எழுதுகின்ற உங்கள மாதிரி இந்த போராட்டத்திற்கு சப்போட் பண்ணுகின்ற எத்தனை பேர் போராட்டத்திற்கு நேரில போய் தங்கட ஆதரவை தெரிவித்திருக்கினம்.தலைவரை எல்லோரும் மதிக்கவும்,விரும்பவும் என்ன காரணம்? அவர் சொல்ல முதல் தான் செய்து காட்டினார்.தன்ட குடும்பத்தையே அதற்காக அர்பணித்தார்.இங்கே எழுதுபவர்கள் போல மற்றவரை உசுப்பேத்திப் போட்டு தான் வீட்டில இருக்கேல
 
ஊரில சிங்களவன் அடிக்கிறான்,வெட்டுறான் என்டவுடன் புலியோடு சேர்ந்து அவர்களை எதிர்க்காமல் இங்கே ஓடி வந்து பாதுகாப்பாய் இருந்து கொண்டு அவ்வளவு சனம் சாகும் கொதிக்காத இரத்தம் இங்கே ஒரு பெட்டையை அடிச்சவுடன் கொதிச்சுட்டுதாக்கும்.
 
அந்தப் பெட்டையை சிங்களவன் உதைக்கிறத்திற்கு அந்த பெட்டை என்ன செய்தது என்று தெரியுமா?...கண பேர் அங்கு நின்று ஆர்ப்பாட்டம் செய்யும் போது குறிப்பிட்ட சிலரை மட்டும் ஏன் அந்த காடையன்கள் முதலில் தாக்க போனவர்கள்.
 
ஒரு நாள்,இரு நாள் கூத்தென்டால் கொஞ்ச‌ப் பேர் போவினம் இதே 1,2 மாதம் தொட‌ர்ந்து போராடச் சொன்னால் எப்படி ஆட்கள் வருவினம்? என்ன நட‌க்கும் என்பது எல்லாம் கண்ணாலே பார்த்தது தானே
  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் (அல்லது Cardiff க்கு கிட்ட) இருக்கும், "யாழ் " க்கு வரும் சக பதிவர்கள் எத்தனை பேர் இந்த போராட்டத்துக்கு போய் சிங்களவருக்கு ரெண்டு போட்டீங்கள் என்று சொன்னால் உங்களின் மீது இன்னும் மதிப்பும் மரியாதையும் (பயமும்) கூடும்.. :huh:

 

நாங்கள் நட்பு வட்டத்தோடு போய் வந்தம். நீங்கள் வந்திருப்பதைச் சொல்லி இருந்தால்.. ஒரு கவனிப்பைச் செய்திருக்கலாம். :D:lol:

இது விளம்பரம் அல்ல. நீங்கள் கேட்டதற்கான பதில்..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் அறிவாளிகள் தொல்லை அதிகமாகப் போய்விட்டது!

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் நட்பு வட்டத்தோடு போய் வந்தம். நீங்கள் வந்திருப்பதைச் சொல்லி இருந்தால்.. ஒரு கவனிப்பைச் செய்திருக்கலாம். :D:lol:

இது விளம்பரம் அல்ல. நீங்கள் கேட்டதற்கான பதில்..! :lol:

நன்றி நெடுக்கு

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் அறிவாளிகள் தொல்லை அதிகமாகப் போய்விட்டது!

 

இப்ப தானே ஆளுக்கு ஒரு ஊடகம் ஊருக்கு ஒரு நாட்டாண்மை...நாட்டாண்மை கூட்டத்தின் அறிவுரையை கேட்டால் கடைசியில் பாலாங் கிணறுக்கை விழுந்து தான் தற்கொலை செய்யனும்......பிந்தி கிடைத்த தகவலின் படி அறிவுறை சொல்லும் நாட்டாண்மை கூட்டம் இரவு பொழுதானால் மது அருந்துவினமாம்...அவைக்கு போதை தலைக்கு மேல ஏறும் போது அவர்களுக்கு தெரியாது தாங்கள் என்ன எழுதுறோம் என்று....நான் உந்த அறிவுரை சொல்லும் கூட்டத்தை கண்டு கொள்ளுறது இல்லை..... :D

  • கருத்துக்கள உறவுகள்

 

பின்ன எப்படி இருக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள் உங்கள மாதிரி சுயநலமாகவா?...யாழில் எழுதுகின்ற உங்கள மாதிரி இந்த போராட்டத்திற்கு சப்போட் பண்ணுகின்ற எத்தனை பேர் போராட்டத்திற்கு நேரில போய் தங்கட ஆதரவை தெரிவித்திருக்கினம்.தலைவரை எல்லோரும் மதிக்கவும்,விரும்பவும் என்ன காரணம்? அவர் சொல்ல முதல் தான் செய்து காட்டினார்.தன்ட குடும்பத்தையே அதற்காக அர்பணித்தார்.இங்கே எழுதுபவர்கள் போல மற்றவரை உசுப்பேத்திப் போட்டு தான் வீட்டில இருக்கேல
 
ஊரில சிங்களவன் அடிக்கிறான்,வெட்டுறான் என்டவுடன் புலியோடு சேர்ந்து அவர்களை எதிர்க்காமல் இங்கே ஓடி வந்து பாதுகாப்பாய் இருந்து கொண்டு அவ்வளவு சனம் சாகும் கொதிக்காத இரத்தம் இங்கே ஒரு பெட்டையை அடிச்சவுடன் கொதிச்சுட்டுதாக்கும்.
 
அந்தப் பெட்டையை சிங்களவன் உதைக்கிறத்திற்கு அந்த பெட்டை என்ன செய்தது என்று தெரியுமா?...கண பேர் அங்கு நின்று ஆர்ப்பாட்டம் செய்யும் போது குறிப்பிட்ட சிலரை மட்டும் ஏன் அந்த காடையன்கள் முதலில் தாக்க போனவர்கள்.
 
ஒரு நாள்,இரு நாள் கூத்தென்டால் கொஞ்ச‌ப் பேர் போவினம் இதே 1,2 மாதம் தொட‌ர்ந்து போராடச் சொன்னால் எப்படி ஆட்கள் வருவினம்? என்ன நட‌க்கும் என்பது எல்லாம் கண்ணாலே பார்த்தது தானே

 

 

அண்மையில் துனீசியாவில் மூன்று பெண்கள் மட்டும் போராடினார்கள்.. உலகில் இருந்த மற்றப் பெண்கள் எல்லாரும் என்ன செய்தார்கள் என்று கேட்கமுடியுமா? அவரவர் தமது காரண காரியத்துக்கேற்ப தமது செய்கைகளை மேற்கொள்கிறார்கள்..

 

ஆனால் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் குவிந்து மேற்கொண்ட ஆர்ப்பாட்டங்களைவிட அந்த மூன்று பெண்கள் பெரிய சலசலப்பை ஏற்படுத்திவிட்டார்கள்..

 

பல்லாயிரக்கணக்கில் மாண்ட மக்கள் அடையாளம் தெரியாது போனார்கள்.. பாலச்சந்திரனின் ஒரு புகைப்படம் பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தியது..

 

அதுபோல துணிந்து ஆடுகளத்துக்குள் இறங்கிய அந்த மூன்று இளையோர் இன்று அதிர்வுகளை ஏற்படுத்துகின்றனர்..

 

சிறுமியைக் காலால் உதைத்த சிங்களவனும் ஒரு அதிர்வை ஏற்படுத்தினான்..

 

ஆகவே, எல்லோரும் எல்லோருக்கும் எப்போதும் பிரியோசனமாக இருப்பதில்லை.. துணிந்து முன்னுக்கு நிற்பவனே / நிற்பவளே தாக்கங்களை விளைவிப்பவர்கள். :unsure:

 

  • கருத்துக்கள உறவுகள்

 

அதுதான் நீங்களே சொல்லீட்டீங்களே இது லண்டன்ல நடந்த பிரச்சனை. ஒரு தமிழ் பொண்ணுக்கு சிங்களவன் உதைத்தான் அதுக்கு புலிக்கொடி தூக்கிக்கொண்டுபோய் நீங்கள் உதைத்தீர்கள் என்று!

இதுக்கே உங்களுக்கு இப்டி ரத்தம் கொதிக்குதென்றால் நாற்பது அம்பதாயிரம் தமிழர்களை கொன்றதுக்கு எப்படி கொதிக்கவேணும்? ஆனால் அந்தக் கொதிப்பை இந்தக் கொதிப்பு விழுங்கீட்டுது என்பதே நான் சொல்ல முற்பட்டது.

சிலருக்கு சிந்திப்பது தலையா வாயா என்பதுதான் விளங்கவில்லை.

 

40,000 மக்கள் இறந்தார்கள் என்பது அப்பட்டமாக கூச்ச நாச்சமில்லாமல் அரசைக் காப்பற்றும் முயற்சி.

 

150,000 மக்கள் இறந்த போன பின்னர் இங்கே வந்து இணக்கம் பேசுவோர், இற்றை நாள் வரை தப்பி இருக்கும் மக்களை  அரசு விட்டுவிட்டு இராணுவதை விலக்க வேண்டும் என்று எழுதியிருகிறார்களா எனறால் அது இல்லை. இதை பிருத்தானியா பலமுறை கேட்டுவிட்டது. ஏன் அதை இவர்களுக்கு மட்டும் யாழில் எழுத முடியவில்லை? அந்த மக்களுக்கு எதிராக சட்டங்கள் போட்டிருப்பதால், இந்தியா, அமெரிக்க போன்றவைகளின் வலிமையான அரசுகள் தங்களால் அந்த பகுதிகளுக்கு உதவிகளை அனுப்ப முடியாமல் இருக்கிறது என்று வெளிப்படையாக அறிக்கை விடுகிறார்கள்.  அந்த சட்டங்களை பற்றி எதனை முறை இவர்கள் எழுதினார்கள்.

 

அது எல்லாம் வேறு, விளையாட்டில் வைத்து சிங்கள இளவரசக் காடை அம்பயரை தாகி விட்டு, தொடர்ந்த பழி வாங்களாக நான்கு அம்பெயர்கள் பதவி விலக நிபந்திக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது செய்தி. அதை பற்றித்தானும் எழுதியிருக்கிறார்களா. இப்படி நடக்கும் நாடு சர்வதேச விளையாட்டுக்களில் இருந்து விலக்கப்பட வேண்டும் என்று எழுத முடியவில்லையா?. அப்படி எழுதினால் அது அரசின்முகத்தை வெளிக்காட்டி அரசு சிங்களம் உண்மையில் அநீதியானதுதான் எனபதை விளங்கிக்கொள்ள மாட்டார்களா? தமது மக்களுக்கே அப்படி செய்யும் அரசு தமிழரை விளையாட்டுக்களில் எப்படி துன்புறுதும் என்பது வெளிச்சத்துக்கு வராதா?

 

புலிகொடி பிடிப்பதின் கருத்து சர்வதேச நாடுகளிடம் தமிழர் கேட்பது இன்னொரு 150,000 தமிழரை அரசு கொலை செய்யும் வரை இனியும் சேர்ந்திருக்காமல் அரசை சர்வதேச கூட்டில் நிறுத்துங்கள் என்பது.

 

முள்ளிவாய்காலில் நடந்தது 1958ல் இருந்து நடதவற்றுக்கு கொதித்து எழுந்து நீதி கேட்க முயன்ற போது என்பது சண்டமாருதனுக்கு விளங்க கஸ்டமாக இருந்தால் 40,000 மக்களுக்கும் கொத்திக்க வேண்டும் என்று எழுதமாட்டார். அது விளங்கியிருந்தால் அவர் நிச்சயமாக வீம்புக்காக அதை மிரட்ட மட்டும்தான் எழுதினார் என்பதும் மறுக்க முடியாத உண்மை. அதாவது முன்னைய அடக்கு முறைகளுக்கு கொத்தித்து எழுந்து மீள முடியாமல்,150,000 கொலை மூலம் முள்ளிவாய்க்களில் அடக்கபபட்டவர்கள் தான் நீங்கள்ணது உங்களுக்கு நினைவு இல்லையேல் இந்த பெண்ணை தெருவில் வைத்து அடித்ததற்கு கொத்தொதெழுந்தீர்களாயின் இன்னுமொரு 150,000 நை கொலை செய்வோம் என்றுதான் மிரட்ட பார்க்கிறார்.  

 

இனி நடக்கும் கொலைகளுக்கு சர்வதேசம் ஐ.நா படையை அனுப்ப வேண்டும் என்பதை வெளிப்படையாக போராட்டங்களில் நாம் கேட்காவிட்டால் எமக்கு வெளிநாடுகளில் இருக்கு உரிமையான கருத்து, ஒன்று கூடல் சுதந்திரங்களை நாம் வெளியே கட்ட முயன்றால் தாழ்ந்த தனமாக பெண்களை அடித்து நிறுத்திவைக்க தங்களுக்கு முடியும் என்று கூற வருகிறார்கள்.

இந்த கொதிப்பின் கருத்து 150,000 தமிழர்களை கொலைசெய்து தமிழரின் சுதந்திர உணர்வை அடக்கிவிட்டதாக களிப்பது வெறும் கனவே; தமிழரின் 1948 ஆண்டு ஆரம்பமான கொதிப்பு இடையில் எப்போதுமே நிற்கவில்லை; நிற்கவும் மாட்டாது எனப்துதான் அதைத்தான் இது சொல்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் துனீசியாவில் மூன்று பெண்கள் மட்டும் போராடினார்கள்.. உலகில் இருந்த மற்றப் பெண்கள் எல்லாரும் என்ன செய்தார்கள் என்று கேட்கமுடியுமா? அவரவர் தமது காரண காரியத்துக்கேற்ப தமது செய்கைகளை மேற்கொள்கிறார்கள்..

 

ஆனால் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் குவிந்து மேற்கொண்ட ஆர்ப்பாட்டங்களைவிட அந்த மூன்று பெண்கள் பெரிய சலசலப்பை ஏற்படுத்திவிட்டார்கள்..

 

பல்லாயிரக்கணக்கில் மாண்ட மக்கள் அடையாளம் தெரியாது போனார்கள்.. பாலச்சந்திரனின் ஒரு புகைப்படம் பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தியது..

 

அதுபோல துணிந்து ஆடுகளத்துக்குள் இறங்கிய அந்த மூன்று இளையோர் இன்று அதிர்வுகளை ஏற்படுத்துகின்றனர்..

 

சிறுமியைக் காலால் உதைத்த சிங்களவனும் ஒரு அதிர்வை ஏற்படுத்தினான்..

 

ஆகவே, எல்லோரும் எல்லோருக்கும் எப்போதும் பிரியோசனமாக இருப்பதில்லை.. துணிந்து முன்னுக்கு நிற்பவனே / நிற்பவளே தாக்கங்களை விளைவிப்பவர்கள். :unsure:

 

இசை போராட இரு வழி தான் இருக்குது.ஆயுதத்தால் போராடுதல் அல்லது அகிம்சையால் போராடுதல்.இந்த காலத்தில் ஆயுதப் போராட்டம் சரி வராது என்று தான் தலைவர் ஆயுதங்களை மெளனித்தவர்.
 
நான் மைதானத்திற்குள் புலி கொடியை கொண்டு ஓடினது பிழை என்று எங்கும் எழுதவில்லை.நான் மற்றத் திரியில் கிருபனுக்கு எழுதிய பதிலில் கூட புலியை பிரதிபலிக்கும் அடையாளம் இல்லா விட்டால் சாதரண கிரிக்கட் ரசிகர்கள் என்று தான் நினைப்பார்கள் என்று எழுதியுள்ளேன்.
 
நான் பிழை என்று சொன்னது அகிம்சை வழியில் போராட தொடங்கினால் அதன் வழியே தொடர வேண்டும்.அவுசுடனான மட்ச்சின் போது அவ்வளவு பேர்கள் நிற்கும் குறித்த இந்தப் பெண்ணை மட்டும் அவன் உதைக்க என்ன காரணம்? பக்கத்தில் காவல்துறை நின்றது.பார்த்துக் கொண்டு தான் நின்றது.பிறகு தான் வந்து தடுத்தது.அவர்களுக்குத் என்ன நட‌ந்தது தெரியாது என்று நினைக்கிறீர்களா?
 
அகிம்சை வழியில் போராட‌ தொட‌ங்கினால் அது நீண்ட‌ காலத்திற்கு எங்கள் போராட்டம் வெற்றி பெறும் வரை போராட‌ வேண்டும்.துனினீசியாவில் அந்தப் பெண்கள் போராட்டம் வெற்றி பெற்றதோ இல்லையோ எனக்குத் தெரியாது ஆனால் அவர்களது போராட்டமும்,எங்களது போராட்டமும் வித்தியாச‌மானது.ஒரு நாளில் முடிந்து போகும் கூத்தில்லை எங்கள் போராட்டம்
 
யாழில் இத்தனையோ உறுப்பினர்கள் இருந்தும் ஒரு சிலர் தான் ஆர்ப்பாட்டத்திற்கு போனவர்கள்.அவர்கள் போகாதற்கு பல கார‌ணங்கள் இருக்கலாம்.தாங்கள் வீட்டுக்குள்ள இருந்து கொண்டு அடுத்தவனை மட்டும் உசுப்பேத்திக் கொண்டு இருக்கினமே அவையத் தான் சொன்னேன்.
 
இங்கு யாழில் தூயவன்,குட்டிப்பையன் போன்ற பல புத்திசாலிகள் இருக்கினம் அவைக்கு யாழில் மற்ற நேர‌த்தில் வந்து எழுத நேர‌ம் இருக்காது அவ்வளவு பிசி ஆனால் யாராவது இப்படியான வேலைகள் யாராவது செய்தால் ஓடி வந்து யாழே கதி என்று இருப்பினம்.இப்படியான ஆட்களை சொல்வது சருகுப் புலிகள் என்று  :)
 
எனக்கு வேலைக்கு நேர‌மாகி விட்டது மிச்சத்தை வந்து இர‌வு எழுதுகிறேன்.நிர்வாகம் மற்றவர்கள் எழுதும் கருத்தை தயது செய்து நான் வரும் வரை வெட்ட வேண்டாம் என்று தாழ்மையாக கேட்கிறேன்
  • கருத்துக்கள உறவுகள்
kipo.jpg

புலி கொடி பிடித்தது பற்றி யார் கதைத்தது.அதை இப்போ எவருமே கண்டுகொள்வதில்லை ,

வெறும் உணர்ச்சி வசப்பட்டு கொடியுடன் ஓடி என்னத்தை சாதிக்க போகின்றீர்கள் .முப்படையும் ? வைத்திருந்தே ஒன்றும் ஆகல நீங்கள் லண்டனில் கொடியுடன் ஓடி என்ன ஆக போகின்றது .

பரப்புரை ? எமது நாட்டில் நடந்தது முழு உலகத்கிற்கும் வெட்ட வெளிச்சம் .உந்த மைதானத்திற்குள் கொடி பிடிப்பது ஓடுவது என்ற நிலைமைஎல்லாம் எமது போராட்டம் தாண்டி எவ்வளவோ காலமாகின்றது .இப்பவும் உந்த வட்டத்திற்குள் நிற்பதைதான் நான் சொன்னேன் .

உலகில் ஒரு நாட்டில அங்கீகாரம் எடுக்க முடியல ,ஒரு தூதரக மட்டத்தில அலுவலகம் போட முடியல  உங்களை ஒரு பிரதிநிதிகளாக எவனும் மதிக்கல என்ன போராட்டம் நடத்துகின்றீர்கள் .

77 ஆம் ஆண்டே கிருஷ்ணன் லோட்ஸ் மைதானத்திற்குள் ஓடிவிட்டான் நீங்கள் இப்ப அதை செய்துவிட்டு காட்டும் பில்டப்பை பார்க்கத்தான் சிரிப்பாக இருக்கு .

 

  • கருத்துக்கள உறவுகள்

புலி கொடி பிடித்தது பற்றி யார் கதைத்தது.அதை இப்போ எவருமே கண்டுகொள்வதில்லை ,

வெறும் உணர்ச்சி வசப்பட்டு கொடியுடன் ஓடி என்னத்தை சாதிக்க போகின்றீர்கள் .முப்படையும் ? வைத்திருந்தே ஒன்றும் ஆகல நீங்கள் லண்டனில் கொடியுடன் ஓடி என்ன ஆக போகின்றது .

பரப்புரை ? எமது நாட்டில் நடந்தது முழு உலகத்கிற்கும் வெட்ட வெளிச்சம் .உந்த மைதானத்திற்குள் கொடி பிடிப்பது ஓடுவது என்ற நிலைமைஎல்லாம் எமது போராட்டம் தாண்டி எவ்வளவோ காலமாகின்றது .இப்பவும் உந்த வட்டத்திற்குள் நிற்பதைதான் நான் சொன்னேன் .

உலகில் ஒரு நாட்டில அங்கீகாரம் எடுக்க முடியல ,ஒரு தூதரக மட்டத்தில அலுவலகம் போட முடியல  உங்களை ஒரு பிரதிநிதிகளாக எவனும் மதிக்கல என்ன போராட்டம் நடத்துகின்றீர்கள் .

77 ஆம் ஆண்டே கிருஷ்ணன் லோட்ஸ் மைதானத்திற்குள் ஓடிவிட்டான் நீங்கள் இப்ப அதை செய்துவிட்டு காட்டும் பில்டப்பை பார்க்கத்தான் சிரிப்பாக இருக்கு .

 

எங்கட ஏரியாவுக்குள்ள வந்து நீங்கள் தினமும் இப்படி எழுதுறதை நினைக்க சிரிப்பாக்க இருக்கு...

  • கருத்துக்கள உறவுகள்
smel.jpg புலம் பெயர்ந்த தமிழர்கள் சொகுசாக வாழ்கிறார்கள் அப்படி இருக்கிறார்கள் இப்படி இருக்கிறார்கள் என்று தமிழர்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் விதமாக எழுதிவந்த புல்லுருவிகளே இந்த படத்தை பாருங்கள் எங்கே எப்படி இருந்தாலும் எத்தனை வருடமானாலும் தமிழின உணர்வுள்ளவன் புலிகொடியேந்தி பொங்கிய்ழுந்து கொண்டே இருப்பான் என்பதை புரிந்து கொள்ளுங்கள். fc
  • கருத்துக்கள உறவுகள்

இங்கே  எழுதப்படும் கருத்துக்களை  வாசித்தபோது

இனி  நிம்மதியாக நான் ஒதுங்கலாம்

 

அதற்கு முன் ஒரு வரி

நேரே  வரும் எதிரியைவிட

முதுகுக்கு பின்னால் வரும்  துரோகிகளே ஆபத்தானவர்கள் - தேசியத்தலைவர் பிரபாகரன்.

  • கருத்துக்கள உறவுகள்

இசை போராட இரு வழி தான் இருக்குது.ஆயுதத்தால் போராடுதல் அல்லது அகிம்சையால் போராடுதல்.இந்த காலத்தில் ஆயுதப் போராட்டம் சரி வராது என்று தான் தலைவர் ஆயுதங்களை மெளனித்தவர்.

நான் மைதானத்திற்குள் புலி கொடியை கொண்டு ஓடினது பிழை என்று எங்கும் எழுதவில்லை.நான் மற்றத் திரியில் கிருபனுக்கு எழுதிய பதிலில் கூட புலியை பிரதிபலிக்கும் அடையாளம் இல்லா விட்டால் சாதரண கிரிக்கட் ரசிகர்கள் என்று தான் நினைப்பார்கள் என்று எழுதியுள்ளேன்.

நான் பிழை என்று சொன்னது அகிம்சை வழியில் போராட தொடங்கினால் அதன் வழியே தொடர வேண்டும்.அவுசுடனான மட்ச்சின் போது அவ்வளவு பேர்கள் நிற்கும் குறித்த இந்தப் பெண்ணை மட்டும் அவன் உதைக்க என்ன காரணம்? பக்கத்தில் காவல்துறை நின்றது.பார்த்துக் கொண்டு தான் நின்றது.பிறகு தான் வந்து தடுத்தது.அவர்களுக்குத் என்ன நட‌ந்தது தெரியாது என்று நினைக்கிறீர்களா?

அகிம்சை வழியில் போராட‌ தொட‌ங்கினால் அது நீண்ட‌ காலத்திற்கு எங்கள் போராட்டம் வெற்றி பெறும் வரை போராட‌ வேண்டும்.துனினீசியாவில் அந்தப் பெண்கள் போராட்டம் வெற்றி பெற்றதோ இல்லையோ எனக்குத் தெரியாது ஆனால் அவர்களது போராட்டமும்,எங்களது போராட்டமும் வித்தியாச‌மானது.ஒரு நாளில் முடிந்து போகும் கூத்தில்லை எங்கள் போராட்டம்

யாழில் இத்தனையோ உறுப்பினர்கள் இருந்தும் ஒரு சிலர் தான் ஆர்ப்பாட்டத்திற்கு போனவர்கள்.அவர்கள் போகாதற்கு பல கார‌ணங்கள் இருக்கலாம்.தாங்கள் வீட்டுக்குள்ள இருந்து கொண்டு அடுத்தவனை மட்டும் உசுப்பேத்திக் கொண்டு இருக்கினமே அவையத் தான் சொன்னேன்.

இங்கு யாழில் தூயவன்,குட்டிப்பையன் போன்ற பல புத்திசாலிகள் இருக்கினம் அவைக்கு யாழில் மற்ற நேர‌த்தில் வந்து எழுத நேர‌ம் இருக்காது அவ்வளவு பிசி ஆனால் யாராவது இப்படியான வேலைகள் யாராவது செய்தால் ஓடி வந்து யாழே கதி என்று இருப்பினம்.இப்படியான ஆட்களை சொல்வது சருகுப் புலிகள் என்று :)

எனக்கு வேலைக்கு நேர‌மாகி விட்டது மிச்சத்தை வந்து இர‌வு எழுதுகிறேன்.நிர்வாகம் மற்றவர்கள் எழுதும் கருத்தை தயது செய்து நான் வரும் வரை வெட்ட வேண்டாம் என்று தாழ்மையாக கேட்கிறேன்

அந்தப் பெண் உதை வாங்கக் காரணம் என்ன என்று கேட்டு அந்தப் பெண்ணின் மீதும் சந்தேகத்தை விதைக்க முற்படுகிறீர்கள்.. இது எப்படி இருக்கெண்டால் டில்லியில் மாணவி வல்லுறவுக்கு உட்பட்டாள்.. ஆனால் அது நிகழும்படி அவள் பேருந்து ஓட்டுநரைத் தூண்டினாளா என்று எதிர்த்தரப்பு வழக்கறிஞர் சந்தேகத்தை விதைக்க முற்படுவது போன்று உள்ளது.. :rolleyes:

கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி அந்தப் போராட்டப் பெண் யாரையும் தாக்கவில்லை.. திட்டியிருக்கலாம்.. அதுவெல்லாம் இங்கே ஒரு பொருட்டல்ல.. ஒருத்தி என்னை ஏசிப்போட்டாள் என்று காவல்துறையிடம் முறையிட்டால் Grow up man.. என்று சொல்லி அனுப்பிவிடுவார்கள்.. :D

ஆகவே எம் இன உடன்பிறப்பு ஒன்றை உதைத்துவிட்டு முகநூலில் வீரம் பேசுகின்ற காடையனை நீங்கள் கண்டிக்க வேண்டும்.. மாறாக அந்தப் பெண்ணை மேலும் காயப்படுத்தக்கூடாது..

புலிக்கொடியினை தவிர்த்துவிட்டு போராட்டத்தினை முன்னெடுத்தால்தான் அந்த முயற்சி வெற்றி அடையும்.

 

மாறாக, தொடர்ந்தும் புலிக்கொடியினை (நீங்கள் தேசிக்கொடி என்று இங்கே வாதிடலாம்) ஏந்திச் சென்று கவனயீர்ப்புச் செய்தீர்களானால் போராட்டத்தினை முன்னெடுத்துச் செல்பவர்கள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள்தான் என்று அனைத்துலக சமூகம் ஒதுங்கியே நிற்கும்.

 

இறுதிப் போர்க்கால கட்டத்தில் புலம்பெயர் நாடுகளில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் புலிக்கொடியினை பெருமளவிலானோர் ஏந்தியபடி போராட்டத்தினை முன்னெடுத்த போது அவுஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகளில் அரசியல் தலைவர்கள் கொடிகளை ஏந்தி இருக்கக்கூடிய சமயத்தில் நாம் உங்களுக்கு ஆதரவாக உரையாற்ற முடியாது என்று மறுத்து பலர் வர மறுத்தும் உள்ளனர்.

 

புலிக்கொடியினை உள்ளே மடித்து வைக்கும் வரைக்கும் எந்தவொரு போராட்டத்தினை முன்னெடுத்துச் சென்றாலும் அது அனைத்துலக சமூகத்தின் முன்பாக எடுபடாமலேயே போகும்.

 

இவ்வாறு எவ்வளோ கவனயீர்ப்பு நிகழ்வுகளை இளைஞர்கள் செய்தார்கள். எந்தளவிலான பலனை நாம் பெற்றோம்?

 

தமிழ் ஊடகங்கள் பெருமைப்பட்டுச் செய்திகளை வெளியிட்டு மகிழ்கின்றன. இங்கே சிலர் அதனை நினைத்து புளகாங்கிதம் அடைந்து கருத்துக்களை வெளியிடுகின்றனர்.

 

இவர்களோடு இணைந்து தமிழ்நாட்டு ஊடகங்களும் உசுப்பேற்றுகின்ற வேலையைச் செய்கின்றன.

 

போர் முடிந்து நான்கு வருடங்களுக்கு மேலாகிவிட்டன. வன்னி மற்றும் கிழக்கில் இறுதிப் போர்க்கால கட்டத்தில் முகம் கொடுத்த மக்கள் இன்று வரை தமது வாழ்க்கைக்கு கையேந்திக்கொண்டு இருக்கின்றனர்.

 

அவர்களைப் பற்றி யாருக்காவது சிந்தனை இருக்கின்றதா? சிலர் தனிப்பட்ட ரீதியாக உதவி செய்து வருகின்றனர். ஆனால், பெரும் அமைப்புக்களாக இன்று புலத்தில் இருக்கக்கூடியவர்கள் செய்கின்ற பணிகள்தான் என்ன?

 

சரி, பிழைகளுக்கு அப்பாற்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலமான சக்தியாக வடக்கு - கிழக்கில் வளர்த்தெடுக்க வேண்டிய கடமைப்பாடு புலம்பெயர் தமிழர்களுக்கு உண்டு. அவர்களின் நிலைப்பாடு தொடர்பான விவாதத்தினை பின்னர் பார்த்துக்கொள்ளலாம்.

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பலமான சக்தியாக கட்டமைத்து எழுப்பினால்தான் சிங்கள அரசோடு எமது பேரம் பேசும் சக்தியை அதிகரிக்கலாம்.

 

புலம்பெயர் தமிழர்களுக்கு அச்சப்படுவதனை விட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத்தான் சிங்கள அரசு அச்சப்படுகின்றது. அதுதான் வட மாகாண சபைத் தேர்தலைப் பிற்போட வேண்டும் அல்லது 13 ஆவது திருத்தச் சட்டத்தினை நீக்கிவிட்டு நடத்த வேண்டும் என்று சிங்களம் முனைப்போடு செயற்படுகின்றது.

 

மீண்டும் தெளிவாக இங்கே பதிவு செய்கின்றேன். விடுதலைப் புலிகளின் ஆசிர்வாதத்தோடு வளர்க்கப்பட்ட தமிழ்த் தேசியக் கட்டமைப்பினை பண பல ரீதியாகவும் பிற வழிகளிலும் வளர்த்தெடுக்காது விட்டால் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தற்போது வைத்திருக்கக்கூடிய ஆசனங்களில் மேலும் பல ஆசனங்களை அது இழக்கின்ற நிலையே தோன்றும். அதேபோன்று வட மாகாண சபைத் தேர்தலிலும் பெரும் வெற்றியினைப் பெறாது சாதாரண வெற்றியினையே பெறும் நிலை தோன்றும்.

 

புலம்பெயர் தமிழர்களின் ஒரு கட்டமைப்பு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சார்ந்த கட்சியினை ஊக்குவித்து பிரிவினையை உருவாக்குகின்றனர். இது இருக்கின்ற நிலமையினை மோசமாக்குகின்ற செயலாகவே முடியும்.

 

உணர்ச்சி வசப்பட்டு முடிவு எடுக்கின்ற நிலையினை விடுத்து யதார்த்த ரீதியாக சிந்தித்து சிங்களத்தினை தோற்கடித்து அனைத்துலக சமூகத்திடம் எம்மை நிலைநாட்டுவதனை விடுத்து தொடர்ந்து புலிகள் சார்ந்தே போராட்டங்களை முன்னெடுப்போமாக இருந்தால் இப்படியே கத்திக்கொண்டும் ஊடகங்களில் பார்த்துக்கொண்டும் இருப்பதனைத் தவிர வேறு எந்த முன்னேற்றமும் வராது.

 

 

உங்கள் கருத்தோடு  100% உடன்படுகின்றேன்.!

புலி கொடி பிடித்தது பற்றி யார் கதைத்தது.அதை இப்போ எவருமே கண்டுகொள்வதில்லை ,

வெறும் உணர்ச்சி வசப்பட்டு கொடியுடன் ஓடி என்னத்தை சாதிக்க போகின்றீர்கள் .முப்படையும் ? வைத்திருந்தே ஒன்றும் ஆகல நீங்கள் லண்டனில் கொடியுடன் ஓடி என்ன ஆக போகின்றது .

பரப்புரை ? எமது நாட்டில் நடந்தது முழு உலகத்கிற்கும் வெட்ட வெளிச்சம் .உந்த மைதானத்திற்குள் கொடி பிடிப்பது ஓடுவது என்ற நிலைமைஎல்லாம் எமது போராட்டம் தாண்டி எவ்வளவோ காலமாகின்றது .இப்பவும் உந்த வட்டத்திற்குள் நிற்பதைதான் நான் சொன்னேன் .

உலகில் ஒரு நாட்டில அங்கீகாரம் எடுக்க முடியல ,ஒரு தூதரக மட்டத்தில அலுவலகம் போட முடியல  உங்களை ஒரு பிரதிநிதிகளாக எவனும் மதிக்கல என்ன போராட்டம் நடத்துகின்றீர்கள் .

77 ஆம் ஆண்டே கிருஷ்ணன் லோட்ஸ் மைதானத்திற்குள் ஓடிவிட்டான் நீங்கள் இப்ப அதை செய்துவிட்டு காட்டும் பில்டப்பை பார்க்கத்தான் சிரிப்பாக இருக்கு .

 

அண்ணே எங்க புடிச்சா... ஈழம் வாங்கலாம் என்று சொல்ல சொல்லுங்க .. அங்க போயி புடிக்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப உங்களுக்கு தெரிஞ்சிருக்கும் கட்டாயம்.

ஏன் உங்கட ஜெனோசைட் சக்கரவர்த்தி கனடா வர பம்முகிறார்?

தமிழருக்கு தான் அலுவலகங்கள் இல்லையே?

நான்கு வருடமாகிவிட்டது. ஆனால் வர பயம். உங்கட பில்டப் சிஎன் கோபுரத்திலும் பெரிது.

ஈழப்போர் நான்கில் இறந்த அறுபதாயிரம் சிறி லங்கா கூலிகளை கணக்கில் எடுக்கவில்லை. பாவம் ராஜபக்சே குடும்பத்திற்கு ரோட்டு பிடிக்க செத்த கூலிகளுக்கு உடல் தகனம் செய்யகூட காசு கொடுக்கவில்லை.

அது சரி, நீங்கள் எப்ப அரை சிங்கபூருக்கு கிழம்ப போறியள்? வெல்பயர் தடைபட்டிடும் என்று கவலையா?

 

மனிதனாய் பிறந்தால் சூடு சுரணை வெக்கம் மானம் ரோசம் இருக்கனும் ஒன்றுமே இல்லாதவன் மனிதனாய் இருக்கிறது வேஸ்ட் :D

புலிகள் மூளையைப் பயன்படுத்தியிருந்தால்......அல்லது பயன்படுத்த துணைக்கு அழைத்து இருந்தால்? நிலையே வேறு!
  • கருத்துக்கள உறவுகள்

புலிக்கொடியைப்பிடிப்பதற்கும் ஒரு தகுதி வேண்டும்.  வீரம் வேண்டும். எல்லோரும் பிடிக்கவும் முடியாது. விமர்சிக்கவும் முடியாது

 

தனது கொடியை தனது அடையாளத்தை ஒருத்தன் பிடித்ததுக்கு எதற்கு சிலர் குத்தி முறியிறியள்.???

Edited by விசுகு

சிங்களக் கொடியை மிதிப்பதுக்கும் புலிக்கொடியை தூக்குவதற்கும் அப்பாற்பட்டு நிற்கின்றது போரால் பாதிக்கப்பட்ட மக்களின் அவலம்.

 

அவலம் நடத்து நாங்கு வருமாகிவிட்டது. அரசு அவலப்பட்டமக்களை மூடிய சிறைசாலையில் உள்ளேயும், திறந்த சிறை சாலைகளில் வெளியேயும் வைத்து ஒவ்வொருநாளும் வதைக்கிறது.  அதை பட்டியல்லிட்டு காட்ட வேண்டிய பொறுப்பை சிலர் தவிர்க்கிறார்கள். எப்படி அரசு மக்களைத் துன் புறுத்துகிறது, ஏன் நான்கு ஆண்டுகள் கடந்தும் TV பார்க்க செய்மதி அனுப்பும் அரசு, இராணுவம் பறக்க, விமானப்பதளம் போடும் அரசு, இராணுவம் பயணிக்க்நெடுஞ்சாலை போடும் அரசு இந்த மக்களின் சாப்படை பற்றி கவலைப்படவில்லை என்பதை அரசை தட்டிக்கேட்டு எழுதிகிறார்கள் இல்லை.

 

சிங்கள கொடியை தூக்கிப் பிடித்த தனிபட்ட செயலைச் சொல்லி, மக்களின் அவலத்தை பொதுவாக சொல்வதிலிருந்து தெரிய வருகிறது இங்கே சிங்களக்கொடி மிதி பட்டத்துதான் கவலை என்பது. ஒரு பள்ளிப்பிள்ளை ஒருநான் 2nd Show பார்த்துவிட்டு வரும் போது "பள்ளியில் என்னடா பண்ணுகிறாய், இப்போ படம் பார்த்துவிட்டு வருகிறாயா" என்று தந்தை கேட்டால் தடுமாற்றமாக தந்தை பிள்ளையின் பள்ளிப்படிப்பில் ஆர்வமாக இருக்கிறார் என்பதல்லப் பொருள். ஆர்வமான குடும்பத்தில் பிள்ளை அன்று அன்று பள்ளியால் வந்தவுடன் அந்த விசாரணை நடந்து முடிந்துவிடும். பள்ளிப்படிப்பு   2nd Show படத்தைப்பற்றி கதைப்பது போல ஒருநாள் விவகாரமல்ல. அது பிள்ளையின் இளமைக்கால விவகாரம்.  அப்படி ஒருநாள் பொதுப்பட "பள்ளியில் என்னடா செய்கிறாய் என்று", பள்ளியில் நடப்பது தெரியாமல் கேட்கமாட்டர். அவர் கவலைப்படுவது பெடியன் 2nd Show பார்த்துவிட்டு வந்தை பற்றியே. உண்மையாக மக்களின் அவலம் பற்றி சண்டமாருதன் அக்கறை காட்டுவாராக இருந்தால் ஒவ்வொருநாளும் வன்னி அலம் பற்றி ஒரு கட்டுரை யாழில் பிரசுரித்து, இலங்கை ஆமியை வடக்கால் வெளியேற வைத்து, இந்திய அமெரிக்க உதவிகள் ஆமியால் தடுக்கப்படாமல் மக்களுக்கு போய் சேர்ந்திருக்க செய்திருப்பார். திடுதிடுப்பென இங்கே ஓடிவந்து இப்படி தடுமாற மாட்டர்.

புலிகள் இறுதிக்காலத்தில் புலம்பெயர் தமிழர்களின் எழுச்சி ஏதோ ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்பட்டது ஆனால் தற்போது இவ்வாறான திடீர் பரபரப்புகள் குறித்து தாயக மக்கள் எதுவித நம்பிக்கையையும் கொண்டிருக்கவில்லை.

 

மக்களின் நம்பிக்கையில் பாரிய குத்துப் போட முயல்கிறார். நம்பிக்கை ஊட்டி வளர்க்க, ஜனநாயக முறையாக மக்களை இணைக்க, ஒரு தலைமையை உருவாக்க, ஆக்க பூரவமாக  எதிலுமோ அக்கறை இல்லாதாக, குற்றம் கண்டு பிடித்து கெடுக்கும் முயற்சி இது. தாயக மக்களின் கருத்துப் பற்றி சண்டமாருதன் கதைக்கத் தொடங்க முதல் கதை வேண்டியது இன்று இலங்கையில் பரபரபாக அடிபடும் புதிய ஊட அடக்குமுறை கட்டுப்பாடுக்கோவை. அதன் பின்னர் 6ம் திருத்தம். அந்த இரண்டையும் பற்றி சண்டமாருதனுக்கு எதுவுமே தெரியாத்தால் அவர் இவற்றை பாரி ஒரு சொல்லுமே எந்த ஊடகத்திலும் எழுதி இல்லை. இதனால் அவரிடம் இருப்பது தாயகமக்களை பற்றி சரியான அபிப்பிராயம் அல்ல என்பதில் ஒரு சந்தேகமும் இல்லை.

விழையாட்டுப்போட்டிகளின் பின்னணியில் பெரும் பணப்புழக்கமும் வர்த்தகமும் இருக்கி்ன்றது. அந்தவகையில் தொடர்ந்து இவ்வாறான இடையூறுகள் செய்வது சாத்தியமி்ல்லை.

 

செய்திகளை படிக்காமையால் வருவதுதான் இப்படியான கருத்துக்கள். 

 

கேலி ஜனநாயகம் நடக்கும் இடம் இந்தியா. பயங்கர வன்முறைச் சர்வாதிகாரம் நடக்கும் இடம் இலங்கை. இரண்டும் ஒன்றல்லவாயினும் ஒற்றுமைகள். இருக்கு. இலங்கையில் வெறி கொண்டாடும் அரச குடும்பம் நடப்பது போல அல்ல ஆயினும் இந்தியாவில் CBIயை வைத்து காங்கிரசும் விளையாட்டை அரசியலாகத்தான் மாற்றியிருக்கிறது.  இது ஆசிய விளையாட்டுப்போட்யின் போது அகிலம் பார்த்து சிரித்த சங்கதி. ஆனால் அதில் ஒரு சின்னப் பங்கான  துடுப்பாட்ட சூது பிடிபட்டவுடனேயே இந்திய கிரிகெட் வீரரகள் பலத்த வித்தியாசம் விளையாட்டில் காட்டியிருக்கிறார்கள். இலங்கையில் இது இனி ஒரு போதும் திருத்தப்படபோவதிலை. இ்ங்கையின் சர்வதேச, உள்ளூர் விளையாட்டு என்பது ஓவர்.  ஆனல் இந்தியாவில் எப்போதும் தொடராலாம் என்பது உண்மையில்லை.  எனவே உண்மையாக சர்வதேச விளையாட்டு எங்கே போகிறது என்பது தெரியாமல் இப்படிப் பொதுப்பட எழுதுவது தனிப்பட்ட பிரச்சாரம் ஒன்றுக்காக மட்டுமே.

 

இதில் பெரும்பாலும் ஒரு ஆத்திர வெளிப்பாடே அன்றி போரால் அவலப்பட்ட மக்களுக்கான நீதிகேட்கும் செயற்பாடு அல்ல. சிங்களவர்களுக்கும் புலி ஆதரவாளர்களுக்கும் இடையே லண்டனில் மோதல் இதுதான் பிரதான செய்தி. சம்மந்தப்பட்ட தமிழர்களை பொறுத்தவரை புலிக்கொடியை தாறுமாறாக தூக்கிப்பிடித்த திருப்தி. இந்தச் சம்பவங்களுக்கும் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை சர்வதேசத்திடம் வலியுறுத்துவதற்கும் இடையில் இடைவெளி அதிகம்.

 

தமிழரின் பிரச்சனை என்ன என்றுதெரியாயாதவர்களால் அதை மூடியும் மறைக்கவும் முடியாது.  அதுதான் இங்கே வெளிக்காட்டப்படுகிறது. மக்களின் அவலம், அவலத்துக்கு நீதி கேட்பது, அவலம் இனி வராமல் எல்லை போடுவது, அவலப்பட்டவர்களை ஆற்றுவது, உதவுவது, அவலதை வெளிகொண்டுவந்து பிரத்த்சிதப் படுத்தி வெளி உதவிகள் உள்ளே வரச் செய்வது, போன்றவை அவலத்துடன் தொடர்புடைய செயல்பாடுகள். தமிழருக்கு அவலம் வந்த காரணத்தை ஆராய்வது இன்னொன்று. அதற்கான அரசியல் தீர்வுகள் தேடிக்கொள்ள முன்னெடுப்புகள் முயல்வது வேறு. அந்த பகுதி இதில் சேராது. இதில் தமிழ் மக்களின் இறமையை மீளப்பெறுவது, நாடு ஒன்று அமைத்துக்கொள்ளவது, பொருளாதார வளம் தேடுவது, கல்வி பண்ப்படுகளை வளர்த்து தமது நாகரீத்தை தக்க வைப்பது எல்லாம் வேறு. இவைகள் தமிழரின் பிரச்சனைகளில் அவசர தீர்வை வேண்டி நிற்கும் பிரச்சனைகள்.ஆனல் அதற்காக முள்ளிவாய்க்காலில் நடந்த அவலம் ஒன்றுதான் தமிழருக்கு நடந்த தீமை என்று நடித்தும் உண்மை வெளியே வராது .

 

தமிழர் சிங்கக் கொடியை மிதித்துவிட்டர்கள் என்ற ஆத்திர வெளிப்பாடாக சொல்லவருவதெல்லாம் தமிழரின் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக முடியுமா? இதில் இன்றைய நான்கு வருட அவலம் 1958ல் சொத்துப் பத்து எரிந்து உயிர்கள் பறிப்பட்டத்திலிருந்து எந்த வைகையிலும் வேறானதால். ஆனால் இன்று தமிழர் இதை வெளிநாடுகளுக்கு இப்படியான் சரவதேச நிகழ்வுகளில் வைத்து சொல்லத்தாக நிலைமையில் இருப்பத்தால் அரசு ஏவிவிட்ட பயங்கரவாத நிகழ்வை வைத்து அதிலிருந்து கவனமாக திட்டமிட்டு, பொதுக்களின் சாதரண கோபத்தை, வெறியாக மாறி சென்ற வருடம் லண்டனில் நடந்த இனக்கலவரம் போன்ற தொன்றாக மாறவிடாமல் நகரீகமான பிரச்சரமாக் மாற்றிவிட்டார்கள்.

 

இதை "சிங்கள்வர்களுக்கும் புலி ஆதரவாளர்களுக்கும் இடையே லண்டனில் மோதல்" என்று விவரிப்பது இந்த பிரச்சாரவிளையாடில் அரசு காட்டும் ஆத்தாச்சூப்பி விளையாட்டு என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏன் எனில் எந்த பிரதான ஊடகமும் இந்த வசனத்தில் அப்படி ஒரு செய்திம் பிரசுரித்தது நான் இன்னமும் பார்க்கவில்லை. சண்ட மாருதநுக்கு தமிழர் மீது உண்மையான அக்கறை இருக்காயின் இது நல்ல சந்தர்ப்பம். அப்படி செய்தியை சர்வதேச உடகங்கள் வெளிவிட்டிருக்கயின் அதை இப்படி கூறிவிட்டு போகக்கக்கூடாது. அதை இங்கே பதியவேண்டும். சண்டமாருதன் உறவுகளை அந்த ஊடகத்துக்கு அந்த செய்தியை திருத்தும்படி கேட்ட்த் தாபல் எழுதும் படி கோரிக்கை விடவேண்டும். அதுதான் மனிச முறை. இப்படி கேலி கட்ட முயல்வது கீழ்த்தனம்.  இதில் தன்னும் சண்டமாருதன் நேர்மையாக நடந்து தன் உண்மை முகத்தை வெளிகாட்டட்டும்.

 

இறுதியில், இது சிங்களப் பேரினவாதத்திற்கு சாதகமான விடயம் ஏனெனில் புலிக்கொடியே படுகொலை செய்யப்பட்ட தமிழர்களையும் தமிழர்களின் அவலங்களையும் மறைத்துவிடும்.

 

இதில் தமிழ் மக்களின் அவலங்கள் மறைக்கப்படவில்லை. நடந்தவை சர்வதேசத்தால் ஆவணப்படுத்தபட்டிருக்கு. 20 நாடுகள் அந்த அவலத்தை நடத்த இலங்கைக்கு உதவின. அவற்றிடம் எல்லாம் பக்குவமாக இருக்கு. அதன் காரணம் அவர்கள் இலங்கையிடமிருந்து தமக்கு நன்மைகளை எதிர்பார்த்தார்கள். இ்ல்ங்கை தான் தனது சுத்தல் ராஜதந்திரத்தைகாட்டி அவர்களை சுத்தியிருக்கிறது. அதற்கான பலனை விரைவில் காணப்போகிறது.  சிங்க கொடி மிதிபட்டவுடன் கோத்தா ஆதிரத்தால் துடிக்கிறார் என்பது இங்கே சிலருக்கு கையும் காலும் ஓடாமல் இப்படி நேரங்களில் என்ன எழுத வேண்டும் என்றுதெரியாமல் தவிப்பதிலிருந்து தெரிகிறது.

 

 

Cardiff Cricket Violence: Nine Arrested – South Wales Police

 

here were a number of arrests at yesterday’s cricket semi-final India v Sri Lanka at the Swalec Stadium, Cardiff, attended by 15,000 people. Officers facilitated a mostly peaceful protest outside the venue, South Wales Police told Colombo Telegraph.

Six men have been charged with aggravated trespass on the pitch and three men have been charged with criminal damage to a car, a public order offence, and assault outside the venue. They are all on police bail to appear at Cardiff Magistrates’ Court on July 7.

One man has been given a fixed penalty notice for being drunk and disorderly and another arrested on suspicion of disorder remains in police custody, said South Wales Police.

Protesters trespassed, carrying a placard reading ’40,000 Commonwealth Citizens massacred by Rajapaksa’ with a Tamil Eelam flag draped around his shoulders.

 

 

 

http://www.colombotelegraph.com/index.php/cardiff-cricket-violence-nine-arrested-south-wales-police/

  • கருத்துக்கள உறவுகள்
5vhm.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.