Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கண்களால் களவாடுறாள்... ! (18+)

Featured Replies

tumblr_m31pcut5zK1qm0zvdo1_500.jpg

 

கயல் விழியாள்...  
பயல் மனசைப் பறிக்க,
வயல் வழியால் ஏதோ
புயல் வருதே!

காதலும் வேண்டாம்...
கூடலும் வேண்டாமென...
ஒதுங்கிப் போனவனின் மனம்,
பதுங்கிப் பாய்கிறதே!
செதுக்கிய சிற்பங்களின் பார்வையில்
வழுக்கிய இதயம் இடறி...
வாய்க்காலோரமாய் விழுகிறதே!
 
மனத்தடைகளைத் தகர்த்து...
உடலுடைகளை அவிழ்த்து...
தன் படைகளால் ஆக்கிரமிக்கும் பாதகி!
கண்ணகி காலத்தில் வாழ்ந்த மாதவி!!
கோவலனாகி கோணலாய்...
கேவலமாகி நாணலாய்...
மாறும்வரை மாற்றுகிறாள்!

முத்து முத்தாய் முத்தங்கள்...
ஒத்திக்கொள்ளும் சத்தங்கள்...
தூறும் மழைச் சாரலைப்போல்,
மெதுமெதுவாய் நனைக்கிறாள்!
நனைந்தவன் மேனியில்,
புனைந்தவள் தாகம் தீர்க்கிறாள்!

 

சிதைந்தவனின் சிந்தையில்...
புதைந்தவனின் விந்தையில்...
இணைந்தவள்,
மொந்தையில் கள்ளூற...
மெத்தையில் உள்ளூற...
வித்தையால் விளையாடுகிறாள்!

 

ஒரு கள்வனிடமே களவாடி முடிக்கிறாள்!
இரு கண்களினால் களமாடி வெடிக்கிறாள்!
கண்களால் களவாட
பெண்களால்தான் முடிகிறதே!!! ;)

 

 

 

 

 

Edited by கவிதை
பாலியல் வல்லுறவு போன்ற பதங்களை பாவிக்கவும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னாச்சு கவிதை !!!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

இதை வாசித்தால் வேலிபாய்ந்த கவிதை போலை இருக்கு.. :D

  • கருத்துக்கள உறவுகள்

ஹஹஹஹா கவிதை மறுபடியும் தடக்கி விழுந்திட்டார்..... டண்டனக்கா..... டனக்குனக்கா....:D

ம்..................


ஹஹஹஹா கவிதை மறுபடியும் தடக்கி விழுந்திட்டார்..... டண்டனக்கா..... டனக்குனக்கா.... :D

 

 

"சூடு கண்ட பூனை அடுப்பங்கரை நடாது" என்று தான் சொல்லுறவை.

  • கருத்துக்கள உறவுகள்

ம்..................

 

 

"சூடு கண்ட பூனை அடுப்பங்கரை நடாது" என்று தான் சொல்லுறவை.

அது வேற சூடு, அலை! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
சிதைந்தவனின் சிந்தையில்... புதைந்தவனின் விந்தையில்... இணைந்தவள், மொந்தையில் கள்ளூற... மெத்தையில் உள்ளூற... வித்தையால் விளையாடுகிறாள்!
ஐ ஐ யோ
  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு நன்றி  கவி

கொஞ்ச  நாளாக நித்திரை வருகுதில்லைப்போலும்

 

நாற்பதைத்தொட்டாலும் இந்த வியாதி  வரும்

(இசை  சொன்னது போலத்தான் நான் இதைப்பார்க்கின்றேன் :D )

 

 

ம்..................


 

 

"சூடு கண்ட பூனை அடுப்பங்கரை நடாது" என்று தான் சொல்லுறவை.

இதை  ஏன் சுண்டலிடம்  சொல்கிறீர்கள் அலை.........

(ஒரே  ஊரைச்சேர்ந்தவர்களே  இப்படி.....

எப்பொழுதும் காட்டிக்கொடுப்போர் எம்முக்குள் தான் இருப்பார்கள் என்பது உண்மைதான் :lol:  :D )

  • தொடங்கியவர்

என்னாச்சு கவிதை !!!!!!!!!!

 

அய்யய்யோ.... அக்கா! :o  நீங்கள் நினைக்கிறமாதிரி அப்பிடி ஒண்ணும் இல்ல. :rolleyes:

சும்மா ஒரு ஜாலிக்கு எழுதினதுதான்... :wub::lol:

  • தொடங்கியவர்

இதை வாசித்தால் வேலிபாய்ந்த கவிதை போலை இருக்கு.. :D

 

முன்பொருமுறை எழுதிய காமத்துப்பால்  என்ற கவிதையின் கீழ் குமாரசாமியார் எழுதிய "வேலிதாண்டிப் பாய்ந்த...   தாண்டினேன் தாண்டினேன்" கவிதையைச் சொல்கின்றீர்களா இசை? :rolleyes:

ஆமாம்.... அதுவும் ரொம்ப 'ஜாலி'யான :wub:  கவிதைதான் :lol:

  • தொடங்கியவர்

ஹஹஹஹா கவிதை மறுபடியும் தடக்கி விழுந்திட்டார்..... டண்டனக்கா..... டனக்குனக்கா.... :D

 

சுண்டல்......  அலையக்கா சொன்னமாதிரி நான் சூடுகண்ட பூனை. :rolleyes:  இப்பெல்லாம் ரொம்ப அலேர்ட். :)   நீங்க நினைக்கிறது லேசில நடக்காதப்பு.... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் மகிழ்வான மனநிலைக்கு வந்ததே நல்ல விடயம். கதையைத்தான் எழுதி முடியுங்கோ. :D

  • தொடங்கியவர்

ம்..................

 

 

"சூடு கண்ட பூனை அடுப்பங்கரை நடாது" என்று தான் சொல்லுறவை.

 

நீங்க சொல்லுறது சரிதான் அக்கா.... இப்பெல்லாம் ரொம்ப அவதானம். :rolleyes:  எதுக்கும் அவசரமில்லை. இப்போதைக்கு எந்த ஐடியாவும் இல்லை.:)

  • தொடங்கியவர்

அது வேற சூடு, அலை! :icon_idea:

 

:lol:

 

 

"ருசி கண்ட பூனை " என்றும் ஒரு விசயமும் இருக்குத்தான் புங்கை!  :rolleyes::lol:

  • தொடங்கியவர்

ஐ ஐ யோ

 

ஏன் இந்த அலறல்.....  புத்தா!? :rolleyes: அனுபவமோ...? :unsure:

அது ஐ ஐ யோவா.... :o  அல்லது ஐ ஐ ஜாலியா? :wub:

இந்த மயக்கமும் கடந்து போகும்  :D 

ஐ ஐ யோ

ஆ .............ஐயையோ ......... :D 

  • தொடங்கியவர்

கவிதைக்கு நன்றி  கவி

கொஞ்ச  நாளாக நித்திரை வருகுதில்லைப்போலும்

 

நாற்பதைத்தொட்டாலும் இந்த வியாதி  வரும்

(இசை  சொன்னது போலத்தான் நான் இதைப்பார்க்கின்றேன் :D )

 

 

விசுகண்ணை.... இப்பவெல்லாம் நல்ல நித்திரை வருகுது.

ஒரு பெரும் நிம்மதி கிடைச்சமாதிரி ஒரு உணர்வு. :)

 

அய்யய்யோ விசுகண்ணை.... இன்னும் வாழவே தொடங்கேல.... :(

அதுக்குள்ள நாற்பது ஐம்பது என்கிறீர்களே.... இது நியாயமா? :)

  • 2 weeks later...

tumblr_m31pcut5zK1qm0zvdo1_500.jpg

 

கயல் விழியாள்...  

பயல் மனசைப் பறிக்க,

வயல் வழியால் ஏதோ

புயல் வருதே!

காதலும் வேண்டாம்...

கூடலும் வேண்டாமென...

ஒதுங்கிப் போனவனின் மனம்,

பதுங்கிப் பாய்கிறதே!

செதுக்கிய சிற்பங்களின் பார்வையில்

வழுக்கிய இதயம் இடறி...

வாய்க்காலோரமாய் விழுகிறதே!

 

மனத்தடைகளைத் தகர்த்து...

உடலுடைகளை அவிழ்த்து...

தன் படைகளால் ஆக்கிரமிக்கும் பாதகி!

கண்ணகி காலத்தில் வாழ்ந்த மாதவி!!

கோவலனாகி கோணலாய்...

கேவலமாகி நாணலாய்...

மாறும்வரை மாற்றுகிறாள்!

முத்து முத்தாய் முத்தங்கள்...

ஒத்திக்கொள்ளும் சத்தங்கள்...

தூறும் மழைச் சாரலைப்போல்,

மெதுமெதுவாய் நனைக்கிறாள்!

நனைந்தவன் மேனியில்,

புனைந்தவள் தாகம் தீர்க்கிறாள்!

 

சிதைந்தவனின் சிந்தையில்...

புதைந்தவனின் விந்தையில்...

இணைந்தவள்,

மொந்தையில் கள்ளூற...

மெத்தையில் உள்ளூற...

வித்தையால் விளையாடுகிறாள்!

 

ஒரு கள்வனிடமே களவாடி முடிக்கிறாள்!

இரு கண்களினால் களமாடி வெடிக்கிறாள்!

கண்களால் களவாட

பெண்களால்தான் முடிகிறதே!!! ;)

 

சந்ததில சிந்து பாடியிருக்கிறியள் கவிதை . கவிதையும் அதனைத் தைத்த விதமும் அழகு . அனால் எனக்கு ஒரு சந்தேகம் ,  நீங்கள் கவிதையில் இறுதிப் பகுதியில் சுயதணிக்கை செய்து

Edited by கவிதை, 17 July 2013 - 04:10 PM.

பாலியல் வல்லுறவு போன்ற பதங்களை பாவிக்கவும்.

என்று போட்டிருக்கிறியள் :o :o . எனக்கு ஒரு அறுப்பும் விளங்கேலை ஒருக்கால் விளங்கப் படுத்துவியளோ கவிதை  :wub:  :wub:  ??

  • தொடங்கியவர்

சந்ததில சிந்து பாடியிருக்கிறியள் கவிதை . கவிதையும் அதனைத் தைத்த விதமும் அழகு . அனால் எனக்கு ஒரு சந்தேகம் ,  நீங்கள் கவிதையில் இறுதிப் பகுதியில் சுயதணிக்கை செய்து

Edited by கவிதை, 17 July 2013 - 04:10 PM.

பாலியல் வல்லுறவு போன்ற பதங்களை பாவிக்கவும்.

என்று போட்டிருக்கிறியள் :o :o . எனக்கு ஒரு அறுப்பும் விளங்கேலை ஒருக்கால் விளங்கப் படுத்துவியளோ கவிதை  :wub:  :wub:  ??

 

கோ... இந்தக் கவிதையின் தலைப்பு முதலில் "கண்களால் கற்பழிக்கிறாள்....!" என்றுதான் இருந்தது. ஆனால் கவிதையைப் போட்ட 2நிமிடங்களிலேயே தலைப்பில பாதியைக் காணேல...  ! :huh:  என்னடா நடந்தது எண்டு பார்த்தால் நம்ம மட்டுஸ் நிழலி அவர்களால் "கற்பழிக்கிறாள்" என்ற வார்த்தை பாரதூரமானதாகக் கருதப்பட்டு,

அது நீக்கப்பட்டு......

Edited by நிழலி, 17 July 2013 - 04:~~ PM.

பாலியல் வல்லுறவு போன்ற பதங்களை பாவிக்கவும்.

...............................................................................எனக் கீழே குறிப்பிடப்பட்டு....

நிழலியால் கவிதைக்கு 'சுன்னத்' செய்யப்பட்டிருந்தது. :lol:

 

கற்பழிக்கிறாள் என்பது ஏதோ... பொல்லாத சொல்லுப்போல, நாமதான் தெரியாமப் போட்டிட்டம் போல எண்டு பதறியடிச்சு.... :o   தலைப்பை "கண்களால் களவாடுகிறாள்...!" என மாற்றியதோடு கவிதையின் இறுதிப்பந்தியிலிருந்த

'கண்களால் கற்பழிக்க பெண்களால் மட்டும் முடிகிறதே!' :wub: என்பதையும் "கண்களால் களவாட பெண்களால்தான் முடிகிறதே!" என்று மாற்றியமைத்திருந்தேன்.

 

எல்லாம் மாற்றி முடிஞ்சபிறகும்...... மட்டுறுத்துனர் நிழலி அவர்களின் வேண்டுகோள் அப்படியே  தொக்கிக்கொண்டு நிற்கிறதே... நான் என்ன பண்ணுறது...????? :rolleyes:

 

நிழலி.... அதை அகற்றிவிடுவார் என நம்புகின்றேன்.... பார்க்கலாம்!!! :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.