Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளின் தலைவர் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் - பிக்குகள் முன்னணி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
prabakaran-010213-seithy-150.jpg

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் இன்று இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என மக்கள் எண்ணும் அளவிற்கு மூலை முடுக்கெல்லாம் இராணுவத்தினரின் ஆட்சியே ஆட்டிப்படைக்கின்றது என்று ஐக்கிய பிக்குகள் முன்னணி தெரிவித்துள்ளது. ஐக்கிய பிக்குகள் முன்னணியின் பொதுச்செயலாளர் தீனியாவள பாலித ஹெமி கூறுகையில், குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கோரி வெலிவேரிய ரத்துபஸ்வெல பிரதேச மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் மீது இராணுவம் மேற்கொண்ட தாக்குதல் சம்பவமாகவே இராணுவ ஆட்சியின் உச்ச நிலையை வெளிப்படுத்துகின்றது.

  

அரசு தனது பிழையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக நடத்திய இக் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் சம்பவத்தில் அப்பாவி மக்கள் இருவரின் உயிர் சூறையாடப்பட்டுள்ளன. ஜனநாயக ஆட்சி மிளிர வேண்டிய நாட்டில் பதிலாக மிலேச்சத்தனமான கொடூர ஆட்சியே இன்று நடைபெற்று வருகின்றது.

 

மக்களுக்கு தூய நீரைக்கூட பெற்றுக்கொடுக்க வழி தெரியாமல் நிற்கும் அரசை எதிர்த்து கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்திய அப்பாவி மக்களை பயங்கரவாதிகள் போல் சுட்டுக் கொல்லப்படுவது இந்நாட்டில் வரலாறு காணாத ஆட்சியை வெளிப்படுத்தி நிற்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் இன்று இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என மக்கள் எண்ணும் அளவிற்கு மூலை முடுக்கெல்லாம் இராணுவத்தினரின் ஆட்சியே ஆட்டிப்படைக்கின்றது.

 

உள்நாட்டில் மக்களுக்கு தூய நீரை வழங்க முடியாது அப்பாவி மக்களைக்கொன்று பிழைக்கும் இந்த அரசு வெளிநாட்டிற்கு நீர் வழங்க உறுதியளித்திருப்பது வேடிக்கைக்குரிய விடயமாகும். தனது தாய் நாட்டு மக்களுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க துணியாது இவ்வாறு மிலேச்சத்தனமானதும் வேடிக்கையானதுமான செயலை நடத்தி வந்தால் நாளை இலங்கை என்றொரு நாடு இருந்ததற்கான சான்றுகள் எதுவும் இல்லாமல் போய் விடும்.

 

தமது உரிமைகளையும் தேவைகளையும் எதிர்த்து கேட்கும் மக்களை காட்டு மிராண்டித்தனமாக தாக்கவும் சுடவும் இராணுவத்துக்கு உத்தரவிட்டது யார் என்பதை அரசாங்கங்கள் உடனடியாக வெளிப்படுத்த வேண்டும். இனியும் இந்த அரசின் கொடுங்கோலாட்சியை வேடிக்கை பார்த்துக்கொண்டிராமல் அனைவரும் ஒன்றிணைந்து அரசிற்கு நல்லதோர் பாடம் புகட்ட வேண்டும் என்றார்.

 

ஐக்கிய தேசிய கட்சி அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=89341&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

நான்கு வருடங்களிலேயே போர் வெற்றி சலித்துவிட்டது..!

  • கருத்துக்கள உறவுகள்

பிக்குகளையும் சிலர் மொக்குக்கூட்டம் என சொல்லக்கூடும். :icon_mrgreen:

பிக்குவின் ஆசை விரைவில் நிறைவேற எல்லாம் வல்ல புத்தரை வேண்டுகிறேன்  :D 

இவர்களை நாட்டைவிட்டு துரத்தும் போது இன்னும் கூட ஞானம் பிறக்கும்!

பிக்குகளையும் சிலர் மொக்குக்கூட்டம் என சொல்லக்கூடும். :icon_mrgreen:

அப்பிடி போடுங்க அரிவாளை. ஒருநாள் இதே வசனங்களை அருச்சுனும் சொல்வார்.  :D

  • கருத்துக்கள உறவுகள்

பிக்குகளையும் சிலர் மொக்குக்கூட்டம் என சொல்லக்கூடும். :icon_mrgreen:

 

 

தூங்குபவனுக்கும்

தூங்குவது போல்   நடிப்பவனுக்கும்   உள்ள  வித்தியாசத்தை  தம்பி  இன்னும்  உணரலையோ............ :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் தமிழர்களுக்கு மட்டும் கிடைத்த பொக்கிசம்  மட்டும் அல்ல, ஒட்டுமொத்த சிறிலங்காவுக்கும் கிடைத்த மாபெரும் பொக்கிசம் அவரிடம் சிறிலங்காவையே அழும்படி விட்டிருந்தால் சிறிலங்கா இன்று ஆசிய நாடுகளிலையே மிகவும் முனேற்றம் கொண்ட நாடாக இருந்திருக்கும்.     

ஒருவர் இல்லாத போது தான் அதன் அருமை புரியும் .இப்ப யோசித்து என்ன பிரயோசனம்?

நல்ல அறிவாளிகள் கூட்டம் (பின்னூட்டம் எழுதியவர்கள் :icon_mrgreen: ).

அவர் பேசியதன் உள்ளடக்கம் -பிரபாகரனை விட இவர்கள் பயங்கரவாதிகள் என்றுதான் பொருள்படும் .

நல்ல அறிவாளிகள் கூட்டம் (பின்னூட்டம் எழுதியவர்கள் :icon_mrgreen: ).

அவர் பேசியதன் உள்ளடக்கம் -பிரபாகரனை விட இவர்கள் பயங்கரவாதிகள் என்றுதான் பொருள்படும் .

 

இவர்கள் என்றால்?

(இவர்கள் யார் என்று எழுத வலிக்குதோ?) :icon_mrgreen:

 

நல்ல அறிவாளிகள் கூட்டம் (பின்னூட்டம் எழுதியவர்கள் :icon_mrgreen: ).

அவர் பேசியதன் உள்ளடக்கம் -பிரபாகரனை விட இவர்கள் பயங்கரவாதிகள் என்றுதான் பொருள்படும் .

அதுவல்ல பொருள். பிரபாகரனால் மட்டும்தான் இவர்களின் அக்கிறமங்களை  தடுக்க முடியும் எனபதுதான் பொருள். 

சில தத்துவங்களை அடிப்படையில் வைத்து விளங்க வேண்டும். இல்லையேல் கீதை பயங்கரவாதத்தை போதிக்கும் நூல் என்ற கருத்துகாரரை மறுக்க முடியாது.  

பிக்கு சொல்லியிருக்கும் இந்த அரசாங்கம் பிரபாகரனை விட பயங்கரமானவர்கள் என்று..

ஆனால் எங்களது ஊடகம் இப்படி சொல்லி சந்தோசப்படுகிறது..

முருகனுக்கே நிகர் பிரபாகரன்...அந்த பிரபாகரனையே 4 வருசமா மௌனிக்க செய்த மகிந்தா Brothers :)

மக்களுக்கு தூய நீரைக்கூட பெற்றுக்கொடுக்க வழி தெரியாமல் நிற்கும் அரசை எதிர்த்து கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்திய அப்பாவி மக்களை பயங்கரவாதிகள் போல் சுட்டுக் கொல்லப்படுவது இந்நாட்டில் வரலாறு காணாத ஆட்சியை வெளிப்படுத்தி நிற்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் இன்று இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என மக்கள் எண்ணும் அளவிற்கு மூலை முடுக்கெல்லாம் இராணுவத்தினரின் ஆட்சியே ஆட்டிப்படைக்கின்றது.

 

வசனத்தொடர் தெளிவாக  பிரபாகரன் இருந்திருந்த்தால் உதவியாக இருக்கும் என்று மக்கள் நினக்கிறார்கள் என்பதைதான் பிக்கு சொல்கிறார் என்பதை காட்டுகிறது.

 

 தனது தாய் நாட்டு மக்களுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க துணியாது இவ்வாறு மிலேச்சத்தனமானதும் வேடிக்கையானதுமான செயலை நடத்தி வந்தால் நாளை இலங்கை என்றொரு நாடு இருந்ததற்கான சான்றுகள் எதுவும் இல்லாமல் போய் விடும்.

 

பிக்குவின் மனத்தில் ஓடிய சிந்தனைகளுக்கு இது சாட்சி. அவர் இதே பொருளை "பிரச்சனை ஒன்று எழும் போது தீர்த்து வைப்பது அரசின் கடமை" என்று பொதுப்பாணியில் சொல்லவில்லை. தமிழரின் பிரச்சனைகளோடும், தமிழரின் தீர்வோடும் இணைத்துத்தான் பொது பிரச்சனை ஆக்குகிறார். இதை தமிழ் ஊடகங்கள் திரித்து சந்தோசப்பட வழி இல்லை.

நல்ல அறிவாளிகள் கூட்டம் (பின்னூட்டம் எழுதியவர்கள் :icon_mrgreen: ).

அவர் பேசியதன் உள்ளடக்கம் -பிரபாகரனை விட இவர்கள் பயங்கரவாதிகள் என்றுதான் பொருள்படும் .

 

பயங்கரவாதிக்கு வரைவிலக்கணம் என்ன எண்டு தெரியுமோ...???   

 

உலக வரலாறுகளில் நடக்காத எதை பிரபாகரன் செய்தார்...??   நீங்கள் கிட்டடியில் கண்டு பிடிச்ச ஒரு வசனத்தை வைச்சு எவ்வளவுகாலம் ஓட்டுவியள்...  ?? 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல அறிவாளிகள் கூட்டம் (பின்னூட்டம் எழுதியவர்கள் :icon_mrgreen: ).

அவர் பேசியதன் உள்ளடக்கம் -பிரபாகரனை விட இவர்கள் பயங்கரவாதிகள் என்றுதான் பொருள்படும் .

 

இரண்டு பொதுமக்கள் மேல் துப்பாக்கியை நீட்டும்போது ..........

பிரபாகரன் மேல் என்றால்??
பிரபாகரன் ஒருவர்மீது கூட நீட்டவில்லை என்று பிக்கு  சொல்கிறார்....
 
சுத்தி சுத்தி உங்களின் கூரைக்குள்தான் உங்களால் கத்தமுடியும்.
தெருவுக்கு பொய் உண்மையை மறைக்க முடியாது!
கண்களை மூடி கொண்டு இப்படி கத்தலாம்.
 
உங்களுடைய புலி வாந்திக்குள்ளேயே பிரபாகரன் மிளிருகிறான்!
உண்மையின் பக்கத்தை கொஞ்சம் எண்ணி பார்க்கலாம் .................... 
  • கருத்துக்கள உறவுகள்

prabakaran-010213-seithy-150.jpg

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் இன்று இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என மக்கள் எண்ணும் அளவிற்கு மூலை முடுக்கெல்லாம் இராணுவத்தினரின் ஆட்சியே ஆட்டிப்படைக்கின்றது என்று ஐக்கிய பிக்குகள் முன்னணி தெரிவித்துள்ளது. ஐக்கிய பிக்குகள் முன்னணியின் பொதுச்செயலாளர் தீனியாவள பாலித ஹெமி கூறுகையில், குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கோரி வெலிவேரிய ரத்துபஸ்வெல பிரதேச மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் மீது இராணுவம் மேற்கொண்ட தாக்குதல் சம்பவமாகவே இராணுவ ஆட்சியின் உச்ச நிலையை வெளிப்படுத்துகின்றது.

  

அரசு தனது பிழையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக நடத்திய இக் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் சம்பவத்தில் அப்பாவி மக்கள் இருவரின் உயிர் சூறையாடப்பட்டுள்ளன. ஜனநாயக ஆட்சி மிளிர வேண்டிய நாட்டில் பதிலாக மிலேச்சத்தனமான கொடூர ஆட்சியே இன்று நடைபெற்று வருகின்றது.

 

மக்களுக்கு தூய நீரைக்கூட பெற்றுக்கொடுக்க வழி தெரியாமல் நிற்கும் அரசை எதிர்த்து கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்திய அப்பாவி மக்களை பயங்கரவாதிகள் போல் சுட்டுக் கொல்லப்படுவது இந்நாட்டில் வரலாறு காணாத ஆட்சியை வெளிப்படுத்தி நிற்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் இன்று இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என மக்கள் எண்ணும் அளவிற்கு மூலை முடுக்கெல்லாம் இராணுவத்தினரின் ஆட்சியே ஆட்டிப்படைக்கின்றது.

 

உள்நாட்டில் மக்களுக்கு தூய நீரை வழங்க முடியாது அப்பாவி மக்களைக்கொன்று பிழைக்கும் இந்த அரசு வெளிநாட்டிற்கு நீர் வழங்க உறுதியளித்திருப்பது வேடிக்கைக்குரிய விடயமாகும். தனது தாய் நாட்டு மக்களுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க துணியாது இவ்வாறு மிலேச்சத்தனமானதும் வேடிக்கையானதுமான செயலை நடத்தி வந்தால் நாளை இலங்கை என்றொரு நாடு இருந்ததற்கான சான்றுகள் எதுவும் இல்லாமல் போய் விடும்.

 

தமது உரிமைகளையும் தேவைகளையும் எதிர்த்து கேட்கும் மக்களை காட்டு மிராண்டித்தனமாக தாக்கவும் சுடவும் இராணுவத்துக்கு உத்தரவிட்டது யார் என்பதை அரசாங்கங்கள் உடனடியாக வெளிப்படுத்த வேண்டும். இனியும் இந்த அரசின் கொடுங்கோலாட்சியை வேடிக்கை பார்த்துக்கொண்டிராமல் அனைவரும் ஒன்றிணைந்து அரசிற்கு நல்லதோர் பாடம் புகட்ட வேண்டும் என்றார்.

 

ஐக்கிய தேசிய கட்சி அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=89341&category=TamilNews&language=tamil

 

சிங்கள காடை இராணுவத்தை முகாமுக்குள் வைத்திருக்க பிரபாகரன் ஒருவனால்தான் முடியும்.

 
காடையை  வீதியில் விட்டல் எது நடக்குமோ அதுதான் இப்போது நடந்திருக்கிறது அதிசயமாக ஏதும் நடக்கவில்லை.
பிரபாகரன் இருந்திருந்தால் இவர்கள் வீதியில் ரிஉந்திருக்க மாட்டார்கள் என்பதுதான் இப்போது சிங்கள் மக்களின் ஏக்கமும் என்பதுதான்
செய்தியில் இருக்கிறது.
 
தங்களை  திருப்தி படுத்த ............ பாலை புளிக்க வைத்து கடைய வேண்டும் என்பது சிலரது ஆசை. வாந்தி தொழிலுக்கு புளித்த பாலே சிறப்பானது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.